सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச-
तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम् ।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः ॥ १ ॥
தம் ததா க்ருபயாவிஷ்டமச்ருபூர்ணாகுலேக்ஷணம் ।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதன: ॥ 1 ॥
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २ ॥
குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம் ।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந ॥ 2 ॥
क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ॥ ३ ॥
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே ।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப ॥ 3 ॥
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச
कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन ।
इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन ॥ ४ ॥
கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே த்ரோணம் ச மதுஸூதந ।
இஷுபி: ப்ரதி யோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதன ॥ 4 ॥
गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके ।
हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ॥ ५ ॥
குரூநஹத்வா ஹி மஹாநுபாவாஞ்ச்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே ।
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகான்ருதிரப்ரதிக்தான் ॥ 5 ॥
न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः ।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः ॥ ६ ॥
ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: ।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேஅவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா: ॥ 6 ॥
कार्पण्यदोषोपहतस्वभावः पृच्छामि त्वां धर्मसंमूढचेताः ।
यच्छ्रेयः स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ॥ ७ ॥
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: ।
யச்ச்ரேய: ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஅஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் ॥ 7 ॥
न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूमावसपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम् ॥ ८ ॥
ந ஹி ப்ரபச்யாமி மமாபனுத்யாத்யச்சோகமுச்சோஷண மிந்த்ரியாணாம் ।
அவாப்ய பூமாவஸபத்னம்ருத்தம் ராஜ்யம் ஸுராணமபி சாதிபத்யம் ॥ 8 ॥
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச
एवमुक्त्वा हृषीकेशं गुडाकेशः परन्तपः ।
न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ह ॥ ९ ॥
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச: பரந்தப ।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ ॥ 9 ॥
तमुवाच हृषीकेशः प्रहसन्निव भारत ।
सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः ॥ १० ॥
தமுவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸந்நிவ பாரத: ।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச: ॥ 10 ॥
இங்கு மேலும் - ‘दृष्ट्वा तु पाण्डवानीकम्’ (த்ருஷ்ட்வாது பாண்டவானீகம்) என்று ஆரம்பித்து ‘न योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभुव ह’ (நயோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபுவ ஹ) என்பது முடிய ஜீவர்களுக்கு ஸம்ஸாரம் உண்டாவதற்க்கான காரணம் சோகம், மோஹம் முதலியவைகள். அவைகள் எந்த காரணத்தினால் உண்டா கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது.
तथाहि — अर्जुनेन राज्यगुरुपुत्रमित्रसुहृत्स्वजनसम्बन्धिबान्धवेषु ‘अहमेतेषाम्’ ‘ममैते’ इत्येवंप्रत्ययनिमित्तस्नेहविच्छेदादिनिमित्तौ आत्मनः शोकमोहौ प्रदर्शितौ
‘कथं भीष्ममहं सङ्ख्ये’ (भ. गी. २ । ४) इत्यादिना ।
அவ்வாறே அல்லவா, அர்ஜுனனால் ராஜ்யம் குரு புத்திரன், மித்திரன் சுஹ்ருத் முதலிய தனக்கு சொந்தமான பந்துக்களிடத்தில் ‘अहम् एषां मम एते’ (அஹம் ஏ ஷாம் மம ஏதே நான் அவர்களுடையவன் அவர்கள் என்னுடையவர்கள்.) என்று இவ்வாறு (பிராந்தி) தவறான ஞானத்தினால் ஸ்நேகத்தின் நாசம் முதலியவைகளின் நிமித்தமாக தன்னுடைய சோகமோகமானது ‘कथं भीष्ममहं संख्य’ (கதம் பீஷ்மமஹம் ஸங்க்யே நான் எவ்வாறு பீஷ்மரை யுத்தத்தில்) என்பன முதலியவைக ளால் காட்டப்பட்டது.
शोकमोहाभ्यां ह्यभिभूतविवेकविज्ञानः स्वत एव क्षत्रधर्मे युद्धे प्रवृत्तोऽपि तस्माद्युद्धादुपरराम ; परधर्मं च भिक्षाजीवनादिकं कर्तुं प्रववृते ।
தானாகவே க்ஷத்திரிய தர்ம யுத்தத்தில் ஈடுபட்டாலும்கூட சோகமோகத்தால் நலிவுற்றவிவேக விக்ஞானத்தால் அந்த யுத்தத்தை தவிர்த்தான். பரதர்மமான பிக்ஷை எடுத்தல் முதலான ஜீவனத்தை செய்வதில் பிரவர்த்தித்தான் (ஈடுபட்டான்)
तथा च सर्वप्राणिनां शोकमोहादिदोषाविष्टचेतसां स्वभावत एव स्वधर्मपरित्यागः प्रतिषिद्धसेवा च स्यात् ।
அவ்வாறே எல்லா ஜீவர்களும் சோகமோகம் முதலிய தோஷத் தினால் கலங்கமடைந்த மனம் உடையவர்களாகி ஸ்வபாவமாகவே ஸ்வதர்மத்தை விட்டு நிஷித்த தர்மத்தை (தள்ளப்பட்ட தர்மத்தை) கடைபிடிக்கிறார்கள்.
स्वधर्मे प्रवृत्तानामपि तेषां वाङ्मनःकायादीनां प्रवृत्तिः फलाभिसन्धिपूर्विकैव साहङ्कारा च भवति ।
ஸ்வதர்மத்தில் ப்ரவ்ருத்தித்தாலும் (ஈடுபட்டாலும்) அவருடைய மனோ வாக்கு காயங்களுடைய ப்ரவ்ருத்தியானது பலத்தில் இச்சையு டன் கூடியதாயும் அஹங்காரத்துடன் கூடியதாயும் இருக்கிறது.
तत्रैवं सति धर्माधर्मोपचयात् इष्टानिष्टजन्मसुखदुःख़ादिप्राप्तिलक्षणः संसारः अनुपरतो भवति । इत्यतः संसारबीजभूतौ शोकमोहौ ।
அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது தர்மாதர்மங்களுடைய (புண்யபாவங்களுடைய) ஆதிக்யத்தினால் இஷ்டாநிஷ்ட ஜன்ம, ஸுக துக்கம் இவைகள் நிச்சயமாக அடைவிப் பதான ஸம்ஸா ரமானது விடாமல் தொடர்கிறது. ஆகையால், சோகமோகமானது ஸம்ஸாரத்திற்கு பீஜம் (காரணம்) ஆகிறது.
तयोश्च सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञानात् नान्यतो निवृत्तिरिति तदुपदिदिक्षुः सर्वलोकानुग्रहार्थम् अर्जुनं निमित्तीकृत्य आह भगवान्वासुदेवः —
‘अशोच्यान्’ (भ. गी. २ । ११) इत्यादि ॥
அவைகளுக்கு (சோகமோகங்களுக்கு) ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வமான ஆத்மக்ஞானத்தினால் நிவிர்த்தி ஏற்படுமேயன்றி மற்ற வைகளால் அல்ல என்று உபதேசிக்கும் இச்சை உடையவராகி எல்லா லோகங்களையும் அனுக்ரஹம் செய்யும் பொருட்டு அர்ஜுனனை வ்யாஜமாகக் கொண்டு பகவான் வாஸுதேவரானவர் கூறினார். ‘अशोच्यान्’ அசோச்யான் - என்பது முதலியவைகளால்
अत्र केचिदाहुः — सर्वकर्मसंन्यासपूर्वकादात्मज्ञाननिष्ठामात्रादेव केवलात् कैवल्यं न प्राप्यत एव । किं तर्हि ? अग्निहोत्रादिश्रौतस्मार्तकर्मसहितात् ज्ञानात् कैवल्यप्राप्तिरिति सर्वासु गीतासु निश्चितोऽर्थ इति ।
அங்கு ஸர்வகர்ம ஸந்யாஸ பூர்வகமாக ஆத்மஞான நிஷ்டையி னால் மாத்திரம் முக்தி அடையவே முடியாது, வேறு எவ்வாறு எனில் அக்னிஹோத்ராதி ச்ரௌத்த ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞானத்தினால் தான் முக்தி என்பது கீதைகளின் முழுவதிலும் தீர்மானிக் கப்பட்ட அர்த்தம் என்று சிலர் இவ்வாறு கூறுகின்றனர்.
இந்த அர்த்தத்திற்கு அவர்கள் अथ चेत्त्वमिमं धर्म्यं सङग्रामं न करिष्यसि (அத சேத்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் நகரிஷ்யஸி - இனி இந்த ந்யாயமான யுத்தத்தை செய்யாவிடில்) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே - உனக்கு கர்மத்தில் தான் அதிகாரம்.) कुरु कर्मैव तस्मात्त्वम् (குரு கர்மைவ தஸ்மாத்வம் - ஆகையால் நீ கர்மத்தையே செய்யவேண்டும்) என்பன முதலிய ப்ரமாணங்களை ப்ரமாணமாகக் கூறுகின்றனர்.
हिंसादियुक्तत्वात् वैदिकं कर्म अधर्माय इतीयमप्याशङ्का न कार्या । कथम् ? क्षात्रं कर्म युद्धलक्षणं गुरुभ्रातृपुत्रादिहिंसालक्षणमत्यन्तं क्रूरमपि स्वधर्म इति कृत्वा न अधर्माय ; तदकरणे च
‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (भ. गी. २ । ३३) इति ब्रुवता यावज्जीवादिश्रुतिचोदितानां पश्वादिहिंसालक्षणानां च कर्मणां प्रागेव नाधर्मत्वमिति सुनिश्चितमुक्तं भवति — इति ॥
ஹிம்சாதிகளுடன் கூடி இருப்பதினால் வைதிக கர்மமானது அதர்மத்தின் பொருட்டு என்று ஸந்தேஹம் செய்தல் கூடாது, ஏனெனில் க்ஷத்திரிய தர்மமான குரு சகோதார புத்திரன் முதலனாவர் களின் ஹிம்சையுடன் கூடிய யுத்த லக்ஷணமானது மிக குரூரமாய் இருந்தாலும் ஸ்வதர்மமாக இருப்பதால் அது அதர்மம் அல்ல, மேலும் அதை செய்யாவிடில் ‘ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि’ (ததஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் இழந்து பாபத்தை அடைவாய்) என்று கூறியது, (எவ்வளவு காலம் ஜீவித்திருக்கின்றாயோ அதுவரை கர்மம் செய்ய வேண்டும் என்பன போன்ற ஸ்ருதிகளால் பசுவாதி ஹிம்ஸா லக்ஷணங்களோடு கூடிய வைதிக கர்மங்களுக்கு அதர்மத்வம் கிடையாது என்று நிச்சயமாகக் கூறப்பட்டதாகும்
तदसत् ; ज्ञानकर्मनिष्ठयोर्विभागवचनाद्बुद्धिद्वयाश्रययोः ।
அது உண்மையல்ல, இருவித புத்திகளை ஆச்ரயித்துள்ள ஞான, கர்மநிஷ்டைகளை பிரித்துகூறிய பகவத் வாக்கியங்களினால்.
अशोच्यान् (அசோச்யான்) என்ற சுலோகம் முதல் स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மபி சாவேஷ்ய) ஸ்லோகம் முடிய பகவானால் எந்த பரமார்த்த ஆத்மதத்துவம் நிரூபணம் செய்யப்பட்டதோ அது சாங்கி யம். அந்த சாங்கிய விஷயமான புத்தி (ஜன்மாதி ஷட்பாவ விகாரம் அற்றதினால் ஆத்மா அகர்த்தா என்று பிரகரணார்த்த நிரூபணத்தினால் எந்த புத்தி) உண்டாகிறதோ அது சாங்கிய புத்தி. அந்த புத்தியானது எந்த ஞானிகளுக்கு உரித்தாயுள்ளதோ அவர்கள் சாங்கியர்கள்.
एतस्या बुद्धेः जन्मनः प्राक् आत्मनो देहादिव्यतिरिक्तत्वकर्तृत्वभोक्तृत्वाद्यपेक्षो धर्माधर्मविवेकपूर्वको मोक्षसाधनानुष्ठानलक्षणो योगः । तद्विषया बुद्धिः योगबुद्धिः । सा येषां कर्मिणामुचिता भवति ते योगिनः ।
இந்த (சாங்க்கிய) புத்தி உண்டாவதற்கு முன் ஆத்மாவிற்கு தேஹத்தைக்காட்டிலும் வேறான தன்மை, கர்த்திருத்வ, போக்த்தி ருத்வ முதலியவைகளை அபேக்ஷித்து தர்மாதர்ம விவேகத்துடன் கூடி மோக்ஷ ஸாதன அனுஷ்டான நிரூபணமானது யோகமாகும். அதை அறியும் புத்தி யோகபுத்தியாகும். அந்த யோகபுத்தியானது எந்த கர்மநிஷ்ட்டர்களுக்கு உரித்தாகிறதோ அவர்கள் யோகிகள்.
இவ்வாறு பகவானால் இருவித புத்தியானாது பிரித்துக்காண்பிக் கப்பட்டது. ‘एषा तेऽभिहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु’ (ஏஷா தேஅபி ஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ச்ருணு சாங்கிய விஷயத் திலே உனக்கு இந்த புத்தியானது சொல்லப்பட்டது. இனி நீ யோக விஷயத்தில் இந்த புத்தியைக் கேள்.)
அவ்விரு புத்திகளுள் சாங்க்ய புத்தியை ஆச்ரயித்த சாங்கியர்க ளுக்கு ஞான யோகத்தினாலே உண்டாகும் நிஷ்டையானது ‘पुरा वेदात्मना मया प्रोक्ता’ (புராவேதாத்மனா மயாப்ரோக்தா வேதாத்மாவான என்னால் முன்பு கூறப்பட்டது) என்பனமுதலிய வசனங்களினாலே பிரித்துக் கூறப்போகிறார்.
तथा च योगबुद्ध्याश्रयां कर्मयोगेन निष्ठां विभक्तां वक्ष्यति — ‘कर्मयोगेन योगिनाम्’ इति ।
அவ்வாறே யோக புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு கர்மயோகத் தினால் உண்டாகும் நிஷ்டையை பிரித்துக்கூறப்போகிறார். ‘कर्मयोगेन योगिनाम्’ (கர்மயோகேன யோகினாம் என்ற வசனங்களினால்)
एवं साङ्ख्यबुद्धिं योगबुद्धिं च आश्रित्य द्वे निष्ठे विभक्ते भगवतैव उक्ते ज्ञानकर्मणोः कर्तृत्वाकर्तृत्वैकत्वानेकत्वबुद्ध्याश्रययोः युगपदेकपुरुषाश्रयत्वासम्भवं पश्यता ।
இவ்வாறு சாங்க்ய புத்தியையும், யோக புத்தியையும் ஆச்ரயித்து இரண்டு நிஷ்டைகள் பகவானாலேயே வேறு வேறாக பிரித்துக்கூறப் பட்டது. கர்த்ருத்வ அகர்த்ருத்வ, ஏகத்துவ, அநேகத்வ முதலியவைகளை ஆச்ரயித்த புத்திகளை உடைய ஞானகர்ம நிஷ்டைகளுக்கு ஒரே புருஷனால் அனுஷ்டிக்க முடியாத தன்மையை உணர்ந்தவரால்
எவ்வாறு இந்த விபாக வசனம் உள்ளதோ அவ்வாறே சாத பதீய ப்ராஹ்மணத்திலும் இந்த இரு நிஷ்டைகளும் அவ்வாறே தனித்தனி யாக பிரித்துக்கூறப்பட்டுள்ளது ‘एतमेव प्रव्राजिनः लोकमिच्छन्तो ब्राह्मणाः प्रव्रजन्ति’ (बृ ४/४/२२) (ஏதமேவ ப்ரவ்ராஜினோ லோகமிச்சந்தோ ப்ராஹ்மணா ப்ரவ்ரஜந்தி - இந்த ஆத்மலோகத்தை இச்சிப்பவர்கள் வைராக்யமடைந்து சந்நியாசத்தை கைகொள்கிறார்கள்) என்று ஸர்வகர் மஸந்நியாசத்தை கூறி மீதமுள்ள வாக்கியத்தினால் ‘किं प्रजया करिष्यामः येषां नोऽयंमात्मायं लोकः’ (बृ ४/४/२२) (கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோஅயமாத்மா அயம் லோக - இந்த ஆத்மாவே உலகமாக உள்ள எங்களுக்கு மக்களால் ஆவது என்ன) என்று காட்டப்பட்டுள்ளது.
तत्र च प्राक् दारपरिग्रहात् पुरुषः आत्मा प्राकृतो धर्मजिज्ञासोत्तरकालं लोकत्रयसाधनम् — पुत्रम् , द्विप्रकारं च वित्तं मानुषं दैवं च ; तत्र मानुषं कर्मरूपं पितृलोकप्राप्तिसाधनं विद्यां च दैवं वित्तं देवलोकप्राप्तिसाधनम् —
‘सोऽकामयत’ (बृ. उ. १ । ४ । १७) ।
ப்ராக்ருத ஆத்மா என்றால் அக்ஞானியான மனிதன். அந்த அக்ஞானி விவாஹம் செய்வதற்கு முன் தர்ம ஜிக்ஞாஸையின் பின் மூவுலகங்களையும் அடைவதற்கு ஸாதனமான புத்திரனையும் ஏன் அவ்வாறே மானுஷ வித்தம், தைவவித்தம் என்னும் இருவகை தனத் தை யும் விரும்புகின்றான். இவைகளில் மானுஷ வித்தமானது கர்மரூ பமானது (மேலும் பித்ருலோகத்திற்கு சாதனமாகிறது. அவ் வாறேதைவவித்தமானது உபாசனை (வித்யா) ரூபமானது, அது தேவ லோக ஸாதனமாகிறது என்று ப்ருஹதாரணியத்தில் கூறப்பட்டுள்ளது.
इति अविद्याकामवत एव सर्वाणि कर्माणि श्रौतादीनि दर्शितानि ।
அவித்யையும், காமமும் உடையவனுக்கே ச்ரௌத முதலிய எல்லா கர்மங்களும் என்று காண்பிக்கப்பட்டது.
तेभ्यः ‘व्युत्थाय, प्रव्रजन्ति’ इति व्युत्थानमात्मानमेव लोकमिच्छतोऽकामस्य विहितम् ।
எல்லாவற்றிலிருந்தும் (எல்லா கர்மங்களிலிருந்தும்) நிவர்த்தி அடைந்து ஸந்நியாசத்தைக் கைகொள்கிறார்கள் என்று கூறுவதி னால் காமனையற்றகேவலம் ஆத்மலோகத்தை இச்சிப்பவர்களுக்கே (ஸந்நியாசம்) விதிக்கப்பட்டுள்ளது.
तदेतद्विभागवचनमनुपपन्नं स्याद्यदि श्रौतकर्मज्ञानयोः समुच्चयोऽभिप्रेतः स्याद्भगवतः ॥
ச்ரௌத கர்மஞான ஸமுச்சயமே பகவானுடைய அபிப்பிராய மாக இருந்தால் மேற்கூறிய இந்த விபாக (ஞானகர்மத்தை பிரித்துக் கூற) பகவத் வசனம் பொருத்தமில்லாததாக ஆகும்.
மேலும் அர்ச்சுனனுடைய வினாவானது பொருத்தமில்லாததா கும் ‘ज्यायसी चेत्कर्मणस्ते’ (ஜ்யாயசீ சேத் கர்மணஸ் சே ஞானமானது கர் மத்தைக்காட்டிலும் மேலானதால்) என்பது அர்ச்சுனனது வினா
ஞானத்தையும், கர்மத்தையும் ஒரே புருஷனால் அனுஷ் டானம் செய்ய முடியாது என்பதும் கர்மத்தை அபேக்ஷித்து ஞானம் தான் மேலானது என்பதும் பகவானால் முன்பே கூறப்படவில்லை எனில் இவ்வாறு அர்ச்சுனன் கேட்கப்படாத விஷயத்தை பொய்யாக எவ்வாறு பகவானிடத்தில் ஆரோபம் செய்வான் ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः (ஜ்யாயசீ சேத்கர்மணஸ்தே) கர்மத்தைக்காட்டிலும் ஞானம் மேலானது என்று உமது எண்ணமானால் என்று
மேலும் ஞான கர்ம ஸமுச்சயத்தை எல்லோருக்கும் கூறியிருந் தால் அர்ச்சுனன் பொருட்டும் கூறியதாகும். (இவ்வாறு இருக்கும் பொழுது) இரண்டையும் உபதேசம் செய்திருந்தால் எவ்வாறு ஒன்றின் விஷயமாக यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् (யச்ச்ரேய ஏதயோ ரேகம் தன்மே புரூஹி சுநிச்சிதம்) கர்மம், ஞானம் இவ்விரண்டிலும் எது மேலானதோ அந்த ஒன்றைநிச்சயமாக கூறுவீர் என்று எவ்வாறு வினா எழும்.
न हि पित्तप्रशमनार्थिनः वैद्येन मधुरं शीतलं च भोक्तव्यम् इत्युपदिष्टे तयोरन्यतरत्पित्तप्रशमनकारणं ब्रूहि इति प्रश्नः सम्भवति ॥
பித்தத்தை தணிக்க இச்சை உள்ளவனுக்கு வைத்தியரால் இனிப் பாயும், குளிர்ச்சியாயும் உள்ள பதார்த்தத்தையே புசிக்க வேண்டும் என்று கூறி இருந்தால் அவ்விரண்டினுள் எந்த ஒன்று பித்தத்தைத் தணிப்பதற்கான காரணமான ஒன்றைக் கூறும் என்றகேள்வியே எழாது.
अथ अर्जुनस्य भगवदुक्तवचनार्थविवेकानवधारणनिमित्तः प्रश्नः कल्प्येत, तथापि भगवता प्रश्नानुरूपं प्रतिवचनं देयम् — मया बुद्धिकर्मणोः समुच्चय उक्तः, किमर्थमित्थं त्वं भ्रान्तोऽसि — इति ।
மேலும் அர்ஜுனனுக்கு பகவானால் கூறப்பட்ட வசனத்தின் அர்த்தவிவேகத்தை புரிந்து கொள்ளாததின் காரணமாக இந்த வினா வானது (கர்மம்,ஞானம் இரண்டில் எது மேலானது) கல்பிக்கப்பட்டிருக் கலாம். அவ்வாறு இருந்தாலும் பகவானால் வினாவிற்குத் தகுந்த பதில் அளித்திருக்க வேண்டும். என்னால் ஞானகர்ம சமுச்சயம் கூறப்பட்டது எதற்காக நீ இவ்வாறு பிராந்தி அடைகிறாய் என்று.
மேலும் வினாவிற்குப் பொருந்தாத பதிலையே द्वे निष्ठे मया पुरा प्रोक्ते (த்வே நிஷ்ட்டே மயா புரா ப்ரோக்தே) இரண்டு விதமான நிஷ்ட்டைகள் என்னால் முன்னால் கூறப்பட்டது என்று கூறியது பொருந்தாததாகும்.
नापि स्मार्तेनैव कर्मणा बुद्धेः समुच्चये अभिप्रेते विभागवचनादि सर्वमुपपन्नम् ।
மேலும் ஸ்மார்த்த கர்மத்துடன் தான் ஞான ஸமுச்சயம் என்ற அபிப்பிராயத்திலும் விபாக வசனங்கள் எல்லாம் பொருந்தாதாகும்.
மேலும் க்ஷத்திரியனுக்கு யுத்தரூபமான ஸ்மார்த்த கர்மாதான் ஸ்வதர்மம் என்நு तत्किं कर्मणि घोरे मां नियोजयसि (தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயசி) என்னை இந்த கோரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்துகிறாய்) என்ற நிந்தையானது பொருந்தாது.
तस्माद्गीताशास्त्रे ईषन्मात्रेणापि श्रौतेन स्मार्तेन वा कर्मणा आत्मज्ञानस्य समुच्चयो न केनचिद्दर्शयितुं शक्यः ।
ஆகையினால் கீதாசாஸ்த்திரத்தில் சிறிது மாத்திரமும் ஸ்ரௌத, ஸ்மார்த்த கர்மாக்களுக்கு ஆத்ம ஞானத்துடன் சமுச்சயம் என்பது எவராலும் எடுத்துக்காட்ட முடியாது.
यस्य तु अज्ञानात् रागादिदोषतो वा कर्मणि प्रवृत्तस्य यज्ञेन दानेन तपसा वा विशुद्धसत्त्वस्य ज्ञानमुत्पन्नम्परमार्थतत्त्वविषयम् ‘एकमेवेदं सर्वं ब्रह्म अकर्तृ च’ इति ।
எவனுக்கு ராகத்வேஷத்துடன் கூடின அக்ஞானத்தினால் கர்மத்தில் பிரவிருத்தி ஏற்படுகிறதோ அவனுக்கு யக்ஞம், தானம், தபஸ் இவைகளை செய்வதினால் சித்தசுத்தி ஏற்பட்டு இவை எல்லாம் ஒன்றே பிரஹ்மம் அகர்த்தா என்றபரமார்த்த தத்துவ விஷய ஞானம் உண்டாகிறதோ.
तस्य कर्मणि कर्मप्रयोजने च निवृत्तेऽपि लोकसङ्ग्रहार्थं यत्नपूर्वं यथा प्रवृत्तिः, तथैव प्रवृत्तस्य यत्प्रवृत्तिरूपं दृश्यते न तत्कर्म येन बुद्धेः समुच्चयः स्यात् ।
அவனுக்கு கர்மத்தில் கர்மபல இச்சை இல்லாமல் இருந்தாலும், லோக சங்கிரஹத்தின் பொருட்டு முயற்சியுடன் பிரவிர்த்தித்தாலும் அவ்வாறு கர்மத்தில் பிரவிர்த்தித்தவனுக்கு காணப்படும் பிரவிர்த்தி யானது கர்மம் அல்ல, கர்மாவானால்தானே சமுச்சயம் வரும்.
यथा भगवतो वासुदेवस्य क्षत्रधर्मचेष्टितं न ज्ञानेन समुच्चीयते पुरुषार्थसिद्धये, तद्वत् तत्फलाभिसन्ध्यहङ्काराभावस्य तुल्यत्वाद्विदुषः ।
எவ்வாறு பகவான் வாஸுதேவன் க்ஷத்திரிய தர்மமான கர்மத்தை அனுஷ்ட்டித்தல் புருஷார்த்தத்தின் பொருட்டு ஞானத்துடன் சேர்க்கப்படுவது இல்லை. அவ்வாறே பயனில் இச்சை அற்றதாலும் அகங்காரம் அற்றதாலும் சமானத்தன்மை உள்ள ஞானிக்கு (ஞானத்துடன் கர்ம சமுச்சயம் செய்யப்பட முடியாது)
तत्त्वविन्नाहं करोमीति मन्यते, न च तत्फलमभिसन्धत्ते ।
தத்துவத்தை அறிந்தவன் நான் கர்மம் செய்கின்றேன் என்று எண்ணுவதில்லை, கர்ம பலத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
यथा च स्वर्गादिकामार्थिनः अग्निहोत्रादिकर्मलक्षणधर्मानुष्ठानाय आहिताग्नेः काम्ये एव अग्निहोत्रादौ प्रवृत्तस्य सामि कृते विनष्टेऽपि कामे तदेव अग्निहोत्राद्यनुतिष्ठतोऽपि न तत्काम्यमग्निहोत्रादि भवति ।
எவ்வாறு ஸ்வர்காதிகளில் காமனை உள்ளவன் அக்னிஹோத்தி ராதிகளை மேற்கொண்டு அக்னிஹோத்திராதிகளில் பிரவிர்த்தித்த வன் பாதியில் நஷ்டமாகி மறுபடியும் அதே காமனை அக்கினிஹோத் திராதிகளை அனுஷ்ட்டித்தாலும் அந்த அக்னி ஹோத்திராதிகள் காமிய கர்மமாகாது (அது போல் ஞானியினுடைய கர்மமும் காமியகர் மமாகாது)
அவ்வாறேபகவானும் कुर्वन्नपि (குர்வன்னபி) (கர்மம்) செய்து (கொண்டிருந்தாலும்) न करोति न लिप्यते (ந கரோதி, ந லிப்யதே) செய்வதில்லை, ஒட்டுவதில்லை) என்று ஆங்காங்கு காண்பிக்கிறார்.
இதைத்தவிர पूर्वे: पूर्वतरं कृतम् कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय: (பூர்வைஹி பூர்வதரம்க்ருதம், கர்மணைவ ஹி சம்சித்திமாஸ்திதா ஜன காதய) முன்னோர்களால் (கர்மங்கள்) அதற்கு முன் காலத்தில் செய் யப்பட்டது போல் செய்யப்பட்டது என்றும், ஜனகாதிகள் கர்மங்களி னாலேயே ச்ரேயஸை அடைந்தார்கள்) என்றும் கூறப்பட்டதை பகுத்து அறிந்து கொள்ள வேண்டும்.
तत्कथम् ? यदि तावत् पूर्वे जनकादयः तत्त्वविदोऽपि प्रवृत्तकर्माणः स्युः, ते लोकसङ्ग्रहार्थम्
‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इति ज्ञानेनैव संसिद्धिमास्थिताः, कर्मसंन्यासे प्राप्तेऽपि कर्मणा सहैव संसिद्धिमास्थिताः, न कर्मसंन्यासं कृतवन्त इत्यर्थः ।
அது எவ்வாறு (புரிந்துகொள்வது) முன்பு ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் லோக ஸங்க்ரஹார்த்தம் கர்மத்தில் பிரவ்ருத்தித்து இரந்தாலும் ‘गुणा गुणेषु वर्तन्ते’ குணா குணேசு வர்த்தந்தே இந்திரியங்கள் விஷயங்களில் ஈடுபடுகின்றன (நானல்ல) என்றஞானத்தினாலே சம்சித்தி அடைந்தவர்களாகிறார் கள். கர்ம சந்நியாசம் அடைந்திருந்தாலும் கர்மத்துடனேயே சம் சித்தி அடைந்தார்களே தவிர கர்மசந்நியாசம் செய்தவர்கள் அல்ல என்பது இதன் பொருள்.
अथ न ते तत्त्वविदः ; ईश्वरसमर्पितेन कर्मणा साधनभूतेन संसिद्धिं सत्त्वशुद्धिम् , ज्ञानोत्पत्तिलक्षणां वा संसिद्धिम् , आस्थिता जनकादय इति व्याख्येयम् ।
ஜனகாதிகள் தத்துவம் அறிந்தவர்களாக இல்லாவிடின் ஈச்வரார்ப்பணமாக செய்யப்பட்ட கர்மஸாதனத்தினால் சித்த சுத்தி அடைந்து அல்லது ஞான உத்பத்தி ஆகிய ஸித்தியை அடைந்தார்கள் என்று வியாக்கியானம் செய்யப்பட வேண்டும்.
இதே அர்த்தத்தையே பகவான் ‘सत्त्वशुद्धये कर्म कुर्वन्ति’ ஸத்ய சுத்தயே கர்மம் குர்வந்தி சித்த சுத்தியின் பொருட்டு கர்மம் செய்கின் றார்கள் என்று மேலே கூறப்போகிறார்.
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानव (ஸ்வகர்மணா தமப்யர்ச்சய ஸித்திம் விந்தந்தி மானவ:) மனிதன் ஸ்வகர்மத்தினால் அவனை (ஈஸ்வரன்) பூஜித்து ஸித்தியை அடைகிறான் என்று கூறி ஸித் தியை அடைந்தவனுக்கு மறுபடியும் ஞானநிஷ்டையைக் கூறப்போகி றார். (सिद्धिं प्राप्तो यथा ब्रह्म ஸித்திம் ப்ராப்தோயதா பிரஹ்ம) ஸித்தி பெற் றவன் எவ்வாறு பிரஹ்மத்தை (அடைகிறான் என்பதை என்னிடம் தெரிந்துகொள்) என்பன முதலிய வசனங்களால்
तस्माद्गीताशास्त्रे केवलादेव तत्त्वज्ञानान्मोक्षप्राप्तिः न कर्मसमुच्चितात् , इति निश्चितोऽर्थः ।
ஆகையால் கீதையில் தத்வ ஞானத்தினால் மாத்திரமே மோக்ஷ ப்ராப்தி, கர்ம சமுச்சயித்தானால் அல்ல என்பது நிச்சயமான கருத்தாகும்.
यथा चायमर्थः, तथा प्रकरणशो विभज्य तत्र तत्र दर्शयिष्यामः ॥
எவ்வாறு இந்தக் கருத்தோ அவ்வாறு பிரகரணத்தை அனுஸரித்து பிரித்து அங்கங்கே காண்பிக்கப்போகிறோம்.
तत्रैवं धर्मसंमूढचेतसो मिथ्याज्ञानवतो महति शोकसागरे निमग्नस्य अर्जुनस्य अन्यत्रात्मज्ञानादुद्धरणमपश्यन् भगवान्वासुदेवः ततः कृपया अर्जुनमुद्दिधारयिषुः आत्मज्ञानायावतारयन्नाह —
இந்த தர்மவிஷயத்தில் இவ்வாறு மோகமடைந்து அதிகமான சோக கடலில் மூழ்கினவனான அர்ச்சுனன் உத்தாரணம் செய்வதற்கு ஞானத்தைத் தவிர மற்றதை (மார்க்கத்தைக் காணாமல்) பகவான் வாஸுதேவனானவர் அதிலிருந்து உத்தாரணம் செய்வதில் (காப்பாற் றுவதில்) இச்சை உடையவராய் ஆத்மஞானத்தைப் போதிப்பதின் பொருட்டு கூறுகிறார்.
श्रीभगवानुवाच —
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे ।
गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिताः ॥ ११ ॥
அசோச்யானன்வசோசஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ச்ச பாஷஸே ।
கதாஸூநகதாம்ஸூம்ச்ச நானுசோசந்தி பண்டிதா: ॥ 11 ॥
अशोच्यान् इत्यादि । न शोच्या अशोच्याः भीष्मद्रोणादयः, सद्वृत्तत्वात् परमार्थस्वरूपेण च नित्यत्वात् , तान् अशोच्यान् अन्वशोचः अनुशोचितवानसि ‘ते म्रियन्ते मन्निमित्तम् , अहं तैर्विनाभूतः किं करिष्यामि राज्यसुखादिना’ इति ।
எதைக் குறித்து சோகப்படத்தகுதி அற்றதோ அது அசோச்சியம் எனப்படும் பீஷ்மத்ரோணாதிகள் ஸதாச்ஸாரத்தை உடையவர் களாயும் பரமார்த்தரூபமாக நித்தியமாயும் உள்ளவர்கள் ஆனதினால் அவர்கள் சோகிக்கத்தகுந்தவர்கள் அல்லர். சோகிக்கத்தகாதவர் களை குறித்து அவர்கள் என்பொருட்டு இறந்து விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நான் ராஜ்ய ஸுகாதிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று சோகத்தை அடைகிறாய்.
त्वं प्रज्ञावादान् प्रज्ञावतां बुद्धिमतां वादांश्च वचनानि च भाषसे | तदेतत् मौढ्यं पाण्डित्यं च विरुद्धम् आत्मनि दर्शयसि उन्मत्त इव इत्यभिप्रायः ।
நீ மிகுந்த புத்திசாலிகளின் (ஞானிகளின்) வசனங்களை பேசுகிறாய். உன்மத்தன் போல் விருத்தமான மூடத்தன்மையையும், பாண்டித்யத்தையும் உன்னிடத்தில் (அர்ஜுனனிடத்தில்) காட்டுகிறாய் என்பது கருத்து.
यस्मात् गतासून् गतप्राणान् मृतान् , अगतासून् अगतप्राणान् जीवतश्च न अनुशोचन्ति पण्डिताः आत्मज्ञाः ।
ஏனெனில் பண்டிதர்கள் (ஆத்மாவை அறிந்தவர்கள்) பிராணணை விட்டவர்களைக்குறித்தும் உயிருடன் ஜீவித்துக்கொண்டி ருப்பவர்களைக் குறித்தும் சோகத்தை அடைய மாட்டார்கள்.
(பண்டா) என்றால் ஆத்ம விஷயமான புத்தி. அது எவர்களி டத்தில் இருக்கிறதோ அவர்கள் பண்டிதர்கள். (पाण्डित्यं निविद्य பாண்டித்தியம் நிர்வித்ய) என்ற சுருதி வாக்கியத்தால் அறியப்படுகிறது.
परमार्थतस्तु तान् नित्यान् अशोच्यान् अनुशोचसि, अतो मूढोऽसि इत्यभिप्रायः ॥ ११ ॥
உண்மையில் நித்யமாயும், சோகிக்ககூடாதவர்களாயும் இருப்ப வர்களைக் குறித்து நீ சோகிக்கிறாய். அதனால் நீ மூடன் என்பது அபிப்பிராயம்.
कुतः ते अशोच्याः, यतो नित्याः ।
எதனால் அவர்கள் சோகிக்கத்தகாதவர்கள் ஏனெனில் அவர் கள் நித்தியர்களாய் இருப்பதால்
कथम् ? —
எவ்வாறெனில்
न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः ।
न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् ॥ १२ ॥
ந த்வேவாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமே ஜநாதிபா: ।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ॥ 12 ॥
न तु एव जातु कदाचित् अहं नासम् , किं तु आसमेव । अतीतेषु देहोत्पत्तिविनाशेषु घटादिषु वियदिव नित्य एव अहमासमित्यभिप्रायः ।
நான் ஒரு பொழுதும் நிச்சயமாக இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இருந்தவனாகவே இருந்தேன். கடந்த தேஹோத்பத்தி விநாசங்களில் நான் நித்தியமாகவே இருந்தேன் என்பது அபிப்பிராயம்.
तथा न त्वं न आसीः, किं तु आसीरेव । तथा न इमे जनाधिपाः न आसन् , किं तु आसन्नेव ।
அவ்வாறே நீயும் இல்லாமல் இருந்ததில்லை. இருந்தவனாகவே இருந்தாய். அவ்வாறே இந்த ராஜாக்களும் இல்லாமல் இருந்ததில் லை, இருந்தவர்களாகவே இருந்தார்கள்.
तथा न च एव न भविष्यामः, किं तु भविष्याम एव, सर्वे वयम् अतः अस्मात् देहविनाशात् परम् उत्तरकाले अपि । त्रिष्वपि कालेषु नित्या आत्मस्वरूपेण इत्यर्थः ।
அவ்வாறேநாம், எல்லோரும் இனிமேல் இல்லாமல் போவதும் இல்லை. ஆனால் எப்பொழுதுமே இருப்போம். ஆகையால் இந்த தேஹவிநாசத்தின் பின்னும், மூன்று காலத்திலும் ஆத்மஸ்வ ரூபத்தால் நித்தியர்கள் என்று பொருள்
देहभेदानुवृत्त्या बहुवचनम् , नात्मभेदाभिप्रायेण ॥ १२ ॥
பஹுவசனமானது (பன்மை) தேஹபேதத்தைக் கொண்டு கூறப்பட்டதேயன்றி ஆத்மபேத அபிப்பிராயத்தினால் அன்று.
तत्र कथमिव नित्य आत्मेति दृष्टान्तमाह —
இனி ஆத்மாவானது எவ்வாறு நித்தியம் என்பதற்கு திருஷ்டாந்தம் கூறுகிறார்.
देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा ।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति ॥ १३ ॥
தேஹினோஅஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா ।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி ॥ 13 ॥
देहः अस्य अस्तीति देही, तस्य देहिनो देहवतः आत्मनः अस्मिन् वर्तमाने देहे यथा येन प्रकारेण कौमारं कुमारभावो बाल्यावस्था, यौवनं यूनो भावो मध्यमावस्था, जरा वयोहानिः जीर्णावस्था, इत्येताः तिस्रः अवस्थाः अन्योन्यविलक्षणाः ।
தேகமானது எவனுக்கு இருக்கிறதோ அவன் தேஹி. அந்த தேஹியினுடைய என்றால் தேஹத்தை உடைய ஆத்மாவிற்கு இந்த சரீரத்தில் எவ்வாறு பால்யாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை, ஜீர்ணா வஸ்த்தையான மூப்பு என்ற அன்யோன்ய விலக்ஷண ஸ்வபாவ முடைய மூன்று அவஸ்தைகள் உடையதாகின்றன.
तासां प्रथमावस्थानाशे न नाशः, द्वितीयावस्थोपजने न उपजन आत्मनः । किं तर्हि ? अविक्रियस्यैव द्वितीयतृतीयावस्थाप्राप्तिः आत्मनो दृष्टा ।
அந்த அவஸ்த்தைகளுள் முதல் அவஸ்தை நாசம் ஆகும் பொழுது (ஆத்மா) நாசமாவதில்லை. இரண்டாவது அவஸ்தை உண்டாகும் பொழுது ஆத்மா உண்டாவதில்லை. ஆனால், கிரியை அற்ற ஆத்மாவிற்கே இரண்டாவது மூன்றாவது அவஸ்தைகளின் ப்ராப்த்தியானது காணப்படுகிறது.
तथा तद्वदेव देहात् अन्यो देहो देहान्तरम् , तस्य प्राप्तिः देहान्तरप्राप्तिः अविक्रियस्यैव आत्मनः इत्यर्थः ।
அவ்வாறே (இந்த) தேஹத்தைக்காட்டிலும் வேறு தேஹத்தின் அடைவு என்பது கிரியை அற்றஆத்மாவிற்கே என்பது பொருள்.
धीरो धीमान् , तत्र एवं सति न मुह्यति न मोहमापद्यते ॥ १३ ॥
தீரன் என்றால் புத்திமான் (ஞானி) ஞானி ஒருபொழுதும் மோஹத்தை அடைய மாட்டான்.
यद्यपि आत्मविनाशनिमित्तो मोहो न सम्भवति नित्य आत्मा इति विजानतः, तथापि शीतोष्णसुखदुःखप्राप्तिनिमित्तो मोहो लौकिको दृश्यते, सुखवियोगनिमित्तो मोहः दुःखसंयोगनिमित्तश्च शोकः । इत्येतदर्जुनस्य वचनमाशङ्क्य भगवानाह —
ஆத்மா நித்தியம் என்று ஞானிக்கு ஆத்மா விநாசம் உண்டு என்றவிஷயத்தில் மோஹம் ஏற்படாவிட்டாலும் சீதோஷ்ண, ஸுக துக்கத்தினால் ஏற்படுவதன் காரணமாக ஏற்படும் லௌகிக மோஹ மும், அவ்வாறேஸுகமானது நஷ்டமாகும் போதும் துக்கமானது ஏற்ப டும் போது உண்டாகும் சோகமும் காணப்படுகிறதே என்று அர்ச்சுன னுடைய வசனமாக சங்கை செய்து பகவான் மேலே கூறுகிறார்.
मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः ।
आगमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ॥ १४ ॥
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ணஸுகது:கதா: ।
ஆகமாபாயினோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத ॥ 14 ॥
मात्राः आभिः मीयन्ते शब्दादय इति श्रोत्रादीनि इन्द्रियाणि । मात्राणां स्पर्शाः शब्दादिभिः संयोगाः । ते शीतोष्णसुखदुःखदाः शीतम् उष्णं सुखं दुःखं च प्रयच्छन्तीति ।
(மாத்திரா) என்றால் சப்தாதி விஷயங்களை அறிகின்ற காது முத லிய இந்திரியங்கள். (மாத்ராணாம் ஸ்பர்சா) என்றால் சப்தாதி விஷயங்களுடன் அந்த இந்திரியங்களின் சம்பந்தமே குளிர்ச்சி, உஷ்ணம், சுகம், மேலும் துக்கம் இவைகளை தருகின்றன என்பது (பொருள்)
अथवा स्पृश्यन्त इति स्पर्शाः विषयाः शब्दादयः । मात्राश्च स्पर्शाश्च शीतोष्णसुखदुःखदाः ।
அல்லது ஸ்பர்சங்களை என்றால் (இந்திரியங்களால்) ஸ்பரிசிக் கப்படுகின்றசப்தாதி விஷயங்கள். இந்திரியங்களும், விஷயங்களும் சீதோஷ்ண ஸுகதுக்கங்களை தருகின்றன. (கொடுக்கின்றன)
शीतं कदाचित् सुखं कदाचित् दुःखम् । तथा उष्णमपि अनियतस्वरूपम् । सुखदुःखे पुनः नियतरूपे यतो न व्यभिचरतः । अतः ताभ्यां पृथक् शीतोष्णयोः ग्रहणम् ।
குளிர்ச்சியானது சில ஸமயம் சுகமாயும், சில ஸமயம் துக்கமாக வும் இருக்கும். அவ்வாறேஉஷ்ணமும். ஆகையால் அவை இரண்டும் அநித்தியமானவை. மேலும் சுகமும், துக்கமும் எப்பொழுதும் மாறாதது எனவே ஒரே ஸாதனமானவை. ஆகையால் அவ் விரண்டினும் சீதோஷ்ணங்கள் தனியாக கூறியுள்ளது.
यस्मात् ते मात्रास्पर्शादयः आगमापायिनः आगमापायशीलाः तस्मात् अनित्याः । अतः तान् शीतोष्णादीन् तितिक्षस्व प्रसहस्व । तेषु हर्षं विषादं वा मा कार्षीः इत्यर्थः ॥ १४ ॥
எதனால் அந்த இந்திரிய விஷயங்கள் முதலியவை வந்து போகக்கூடியவைகளோ அதனால் அநித்தியங்கள். ஆகையால் அந்த சீதோஷ்ணாதிகளைப் பொறுத்துக்கொள். அவைகளில் ஸந்தோஷமோ, வருத்தமோ கொள்ளாதே என்பது பொருள்.
शीतोष्णादीन् सहतः किं स्यादिति शृणु —
சீதோஷ்ணாதிகளை சகித்திருப்பவனுக்கு என்ன உண்டாகு மெனின் கேள்-
यं हि न व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ ।
समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ॥ १५ ॥
யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப ।
ஸமதுக்கஸுகம் தீரம் ஸோஅம்ருதத்வாய கல்பதே ॥ 15 ॥
यं हि पुरुषं समे दुःखसुखे यस्य तं समदुःखसुखं सुखदुःखप्राप्तौ हर्षविषादरहितं धीरं धीमन्तं न व्यथयन्ति न चालयन्ति नित्यात्मदर्शनात् एते यथोक्ताः शीतोष्णादयः ।
ஸுக துக்கங்களை சமமாக பார்ப்பதினால் சுகம் துக்கம் அடை யும் பொழுது மகிழ்ச்சியோ, துயரமோ அடையாத ஞானியை நித்திய ஆத்ம தர்சனத்தினாலே சீதோஷ்ணம் முதலியவைகள் சிறிதும் அசைக்கச்செய்கிறதில்லை.
सः नित्यात्मस्वरूपदर्शननिष्ठो द्वन्द्वसहिष्णुः अमृतत्वाय अमृतभावाय मोक्षायेत्यर्थः, कल्पते समर्थो भवति ॥ १५ ॥
அந்த நித்யாத்மதர்சன நிஷ்ட்டை உடையர்களும், த்வந்துவங்களை சகிப்பவர்களும் மரணமற்றமோக்ஷத்திற்கு சமர்த்தர்களாகிறார்கள்.
इतश्च शोकमोहौ अकृत्वा शीतोष्णादिसहनं युक्तम् , यस्मात् —
இந்த காரணத்தினாலும் சோகம், மோகம் கொள்ளாமல் சீதோஷ்ணாதிகளை பொறுத்தல் எதனால் எனின்-
नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः ।
उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः ॥ १६ ॥
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத: ।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வனயோஸ்தத்த்வதர்சிபி: ॥ 16 ॥
न असतः अविद्यमानस्य शीतोष्णादेः सकारणस्य न विद्यते नास्ति भावो भवनम् अस्तिता ॥ न हि शीतोष्णादि सकारणं प्रमाणैर्निरूप्यमाणं वस्तुसद्भवति ।
இல்லாத சீதோஷ்ணதிகளுக்கும், அவைகளின் காரணத்திற்கும் இருப்பு என்பதும் தோன்றுதல் என்பதும் கிடையாது. சீதோஷ்ணாதிக ளும், அதன் காரணமும் பிரமாணங்களினால் நிருபிக்கப்படும் போது வஸ்துவாக இல்லை.
विकारो हि सः, विकारश्च व्यभिचरति । यथा घटादिसंस्थानं चक्षुषा निरूप्यमाणं मृद्व्यतिरेकेणानुपलब्धेरसत् , तथा सर्वो विकारः कारणव्यतिरेकेणानुपलब्धेरसन् ।
அந்த சீதோஷ்ணாதிகள் விகாரமாகும், விகாரமானது எப்பொழு தும் மாறிக்கொண்டிருக்கும். எவ்வாறு கடாதிரூபங்கள் கண்களால் நிரூபிக்கும்பொழுது (ஆராயும்) மண்ணை காட்டிலும் வேறாக காணப் படாமையால் அஸத்தோ அவ்வாறேஎல்லா விகாரங்களும் காரணத் திற்கு அன்னியில் வேறாகக் காணப்படாமையால் அஸத் ஆகும்.
जन्मप्रध्वंसाभ्यां प्रागूर्ध्वं च अनुपलब्धेः ।
ஏனெனில் உற்பத்திக்கு முன்னும், நாசத்திற்கு பின்னும் காணப்ப டாமையால் (பொய்யாகும்).
कार्यस्य घटादेः मृदादिकारणस्य च तत्कारणव्यतिरेकेणानुपलब्धेरसत्त्वम् । तदसत्त्वे सर्वाभावप्रसङ्ग इति चेत् ।
மேலும் மண் முதலான காரணங்களும், அதற்குக்காரணமான வை களைக் (நிலம்) காட்டிலும் வேறாகத் தோன்றா ததினால் அதற்கு பொய்மையானது ஏற்படுகிறது. அதுவும் பொய்யாய் இருந்துவிட்டால் எல்லாமே இருப்பு அற்றதன்மை உடையதாகி விடுமே எனில்.
न ; सर्वत्र बुद्धिद्वयोपलब्धेः, सद्बुद्धिरसद्बुद्धिरिति ।
அவ்வாறு அல்ல. எல்லா வியவகார இடங்களில் ஸத்புத்தி, அஸத் புத்தி (உண்டு, இல்லை) என்ற இருவகை புத்தி காணப்படுவதால்
यद्विषया बुद्धिर्न व्यभिचरति, तत् सत् ; यद्विषया व्यभिचरति, तदसत् ; इति सदसद्विभागे बुद्धितन्त्रे स्थिते ।
எந்த விஷயம் பற்றிய புத்தியானது மாறுபாடு அற்றதோ அது ஸத் எனப்படும். எந்த புத்தியானது மாறுபாடு உடையதோ அது அஸத் புத்தியாகும் என்று இந்த பிரகாரமாக ஸத் என்றும் அஸத் என்னும் பிரிவு புத்தியினுடைய அதீனமாகும்.
सर्वत्र द्वे बुद्धी सर्वैरुपलभ्येते समानाधिकरणे ।
எங்கும் எல்லோராலும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு புத் திகள் உணரப்படுகின்றன.
सन् घटः, सन् पटः, सन् हस्ती इति । एवं सर्वत्र न नीलोत्पलवत् ।
நீலமான உத்பலம் என்பது போல் சமானமன்று. ஆனால் கடம் இருக்கிறது, வஸ்திரம் இருக்கிறது, யானை இருக்கிறது என்று ஒரே விதமாக ஸத் புத்தியானது எங்கும் காணப்படுகிறது.
तयोर्बुद्ध्योः घटादिबुद्धिः व्यभिचरति । तथा च दर्शितम् । न तु सद्बुद्धिः ।
அவ்விரு புத்திகளில் கடம் முதலிய (அஸத்) புத்தியானது மாறுப டுகிறது. (இருக்கிறது, இருக்கிறது என்ற) ஸத்புத்தியானது மாறுபாடு அற்றது என்று காண்பிக்கப்பட்டது.
तस्मात् घटादिबुद्धिविषयः असन् , व्यभिचारात् ; न तु सद्बुद्धिविषयः, अव्यभिचारात् ॥
ஆகையால் கடாதி புத்தி விஷயமானது மாறுபடுவதினால் அஸத், ஸத்புத்தி விஷயமானது அஸத் அல்ல. ஏன் எனில் மாறுபாடு அற்றதால்.
घटे विनष्टे घटबुद्दौ व्यभिचरन्त्यां सद्बुद्धिरपि व्यभिचरतीति चेत् ।
கடமானது நஷ்டமாகும் பொழுது கடபுத்தியானது மாறுபடும் பொழுது ஸத்புத்தியும் மாறுதல் அடைகிறதே என்று கூறினால்
न ; पटादावपि सद्बुद्धिदर्शनात् । विशेषणविषयैव सा सद्बुद्धिः ॥
அவ்வாறு அல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளிலும் ஸத்புத்தியானது தோன்றுகிறது. அந்த ஸத்புத்தியானது கேவலம் விசேஷணத்தைத்தான் குறிப்பதாக உள்ளது.
सद्बुद्धिवत् घटबुद्धिरपि घटान्तरे दृश्यत इति चेत् ।
ஸத்புத்தியைப் போல் கடபுத்தியும் வேறு கடத்தில் காணப்படுகி றதே எனில்
न ; पटादौ अदर्शनात् ॥
சரியல்ல, ஏன் எனில் வஸ்திரம் முதலியவைகளில் காணப் படாததினால்,
सद्बुद्धिरपि नष्टे घटे न दृश्यत इति चेत् ।
ஸத்புத்தியும் நஷ்டமான கடத்தில் காணப்படவில்லையே எனில்
न ; विशेष्याभावात् सद्बुद्धिः विशेषणविषया सती विशेष्याभावे विशेषणानुपपत्तौ किंविषया स्यात् ? न तु पुनः सद्बुद्धेः विषयाभावात् ॥
அப்படி இல்லை. ஸத்புத்தி விசே ஷணமாக இருப்பதால். தனது விசேஷ்யமானது (கடம் போன்றது) இல்லாதபோது எதைப் பற்றிக் கொண்டு இந்த ஸத் புத்தி அமையும்? ஸத் புத்திக்கு விஷயம் (பொ ருள்) இல்லை என்பது கிடையாது. (ஸத்புத்திக்கு மாறுபாடு இல்லா மை) கிடையவே கிடையாது.
एकाधिकरणत्वं घटादिविशेष्याभावे न युक्तमिति चेत् ।
கடம் போன்றவிசேஷ்யங்கௗ் இல்லாவிடில் (सन् घट: இடம் உள் ளது) என்றவாறு ஒரே விபக்தியில் ப்ரயோகிக்கும் ஸமாநாதிகரண்யம் எப்படி பொருந்தும் என்றால்
न ; ‘इदमुदकम्’ इति मरीच्यादौ अन्यतराभावेऽपि सामानाधिकरण्यदर्शनात् ॥
இது ஸரியல்ல. ஏனெனில் கானல் நீர் முதலியவைகளில் அதிஷ்ட்டானத்தைக்காட்டிலும் அன்யவஸ்து (ஜலமுதலியவை) காணப்படாவிட்டாலும் கூட இது ஜலம் என்றபுத்தியானது உண்டா வதினால் ஸாமானாதி கரண்யமானது காணப்படுகிறது
तस्माद्देहादेः द्वन्द्वस्य च सकारणस्य असतो न विद्यते भाव इति ।
ஆகையால் (அஸத்தான) தேஹாதிகளுக்கும், சீதோஷ்ண முத லிய துவந்துவங்களுக்கும், அதன் காரணத்திற்கும் ஒரு விதத்தாலும் இருப்புத்தன்மையானது (பாவம்) கிடையவே கிடையாது.
तथा सतश्च आत्मनः अभावः अविद्यमानता न विद्यते, सर्वत्र अव्यभिचारात् इति अवोचाम ॥
இவ்வாறு ஸத்தானது ஆத்மதத்துவம், அதற்கு அபாவம் அதா வது இல்லாமை என்பது கிடையாது. ஏனெனில் அது எங்கும் மாறுப டாமல் (பிறழ்ச்சி அடையாமல்) இருப்பதால் முன்பே கூறியுள்ளோம்.
एवम् आत्मानात्मनोः सदसतोः उभयोरपि दृष्टः उपलब्धः अन्तो निर्णयः सत् सदेव असत् असदेवेति, तु अनयोः यथोक्तयोः तत्त्वदर्शिभिः ।
இந்த பிரகாரம் ஸத்ஆத்மா, அஸத்து அநாத்மா என்று இவ்வி ரண்டின் நிர்ணயமும், தத்வதரிசிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ் வாறெனில் ஸத், ஸத்தே, அஸத், அஸத்தே (என்று பிரத்தியக்ஷமாக அறிந்துள்ளார்கள்) தத்வதரிசிகள்.
तदिति सर्वनाम, सर्वं च ब्रह्म, तस्य नाम तदिति, तद्भावः तत्त्वम् , ब्रह्मणो याथात्म्यम् । तत् द्रष्टुं शीलं येषां ते तत्त्वदर्शिनः, तैः तत्त्वदर्शिभिः ।
தத் என்பது சர்வநாம சப்தம், பிரஹ்மம் எல்லாமாக இருப்பதால் அதற்கு பெயர் தத் என்பது தத்பாவம், தத்வம் என்றால் பிரஹ்மத்தினு டைய உண்மை நிலை. அதை காண்பதற்கு எவர்களுக்கு சாமர்த் தியம் இருக்கிறதோ அவர்கள் தத்வதர்சிகள், அந்த தத்வதர்சிகளால் (மேலே கூறப்பட்டது நிர்ணயம் செய்யப்பட்டது)
त्वमपि तत्त्वदर्शिनां दृष्टिमाश्रित्य शोकं मोहं च हित्वा शीतोष्णादीनि नियतानियतरूपाणि द्वन्द्वानि ‘विकारोऽयमसन्नेव मरीचिजलवन्मिथ्यावभासते’ इति मनसि निश्चित्य तितिक्षस्व इत्यभिप्रायः ॥ १६ ॥
நீயும் தத்வதர்சிகளுடைய நிலையை ஆச்ரயித்து சோகம், மோஹத்தை நீக்கி நியத அநியதமான சீதோஷ்ணாதிகளான துவந்து வங்கள் விகாரமே. அவை அஸத் கானல் நீர் போல் மித்யையாக தோன்றுகிறது என்று மனதில் நிச்சயம் செய்து பொறுத்துக்கொள் என்பது அபிப்பிராயம்.
किं पुनस्तत् , यत् सदेव सर्वदा इति ; उच्यते —
மேலும், எந்த ஸத்தோ எப்பொழுதுமே இருக்கிறதோ அது என்ன? என்று கூறப்போகிறார்.
अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।
विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ॥ १७ ॥
அவிநாசி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம் ।
விநாசமவ்யயஸ்யாஸ்ய ந கச்சித்கர்துமர்ஹதி ॥ 17 ॥
अविनाशि न विनष्टुं शीलं यस्येति । तुशब्दः असतो विशेषणार्थः ।
அவிநாசி என்றால் நஷ்ட்டம் அடைவதற்கு யோக்கியதை அற்றது என்று பொருள் து என்றசப்தமானது அசத்தைக்காட்டிலும் சத்திற்கு விசேஷணத்தைக்காட்டும் பொருட்டாகும்.
तत् विद्धि विजानीहि । किम् ? येन सर्वम् इदं जगत् ततं व्याप्तं सदाख्येन ब्रह्मणा साकाशम् , आकाशेनेव घटादयः ।
அதை அறி எதை எனில் ஆகாசத்தால் இந்த கடாதிகள் வியா பிக்கப்பட்டது போல் அந்த ஸத் எனப்படும் ப்ரஹ்மத்தினால் ஆகாசமும் இந்த எல்லா ஜகத்தும் வியாபிக்கப்பட்டது.
विनाशम् अदर्शनम् अभावम् । अव्ययस्य न व्येति उपचयापचयौ न याति इति अव्ययं तस्य अव्ययस्य ।
அவ்யயம் என்றால் வ்யயம் (மாறுபாடு) அடையாது (என்று பொருள்) அதற்கு வளர்தலோ குறைதலோ அடையாது அதனால் அவ்யயம். அந்த அவ்யயத்திற்கு விநாசமோ அல்லது அபாவமோ ஏற்படாது.
नैतत् सदाख्यं ब्रह्म स्वेन रूपेण व्येति व्यभिचरति, निरवयवत्वात् , देहादिवत् ।
இந்த ஸத் எனப்படும் பிரஹ்மமானது நிரவயவமாய் இருப்பதால் தன்னுடைய நிலையிலிருந்து தேஹாதிகளைப் போல் நழுவாது.
नाप्यात्मीयेन , आत्मीयाभावात् । यथा देवदत्तो धनहान्या व्येति, न तु एवं ब्रह्म व्येति ।
தன்னைச் சேர்ந்ததின் மறைவாலும் ஏனெனில் தன்னுடையது என்று ஒன்று இல்லாததால், எவ்வாறெனில் தேவதத்தனானவன் பணநஷ்டத்தினால் அவன் நஷ்டம் அடைவது போல பிரஹ்ம் மமானது மாறுபடுவதில்லை (நஷ்டமடைவதில்லை)
अतः अव्ययस्य अस्य ब्रह्मणः विनाशं न कश्चित् कर्तुमर्हति, न कश्चित् आत्मानं विनाशयितुं शक्नोति ईश्वरोऽपि ।
ஆகையால் அவ்யயமான பிரஹ்ம்மத்தை விநாசம் செய்வதற்கு ஒருவராலும் முடியாது. கடவுளாக இருந்தாலும்
आत्मा हि ब्रह्म, स्वात्मनि च क्रियाविरोधात् ॥ १७ ॥
ஆத்மாதானல்லவா ப்ரஹ்மம் தன்னிடம் தனக்கு கிரியை ஏற்படாது.
किं पुनस्तदसत् , यत्स्वात्मसत्तां व्यभिचरतीति, उच्यते —
எது தன் இருத்தலை விட்டு மாறுமோ அது என்ன என்றால் கூறப்படுகிறது -
अन्तवन्त इमे देहा नित्यस्योक्ताः शरीरिणः ।
अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ॥ १८ ॥
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: சரீரிண: ।
அநாசிநோஅப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத ॥ 18 ॥
अन्तः विनाशः विद्यते येषां ते अन्तवन्तः । यथा मृगतृष्णिकादौ सद्बुद्धिः अनुवृत्ता प्रमाणनिरूपणान्ते विच्छिद्यते, स तस्य अन्तः ; तथा इमे देहाः स्वप्नमायादेहादिवच्च अन्तवन्तः ।
(அந்த வந்த) என்றால் எவைகளுக்கு நாசமானது (முடிவானது) இருக்கிறதோ அவை. எவ்வாறு கானல் நீர் முதலியவைகளில் உள்ள (ஜலவிஷயமான) ஸத்புத்தியானது தொடர்ந்து இருந்தாலும் பிரமா ணங்களினால் நிரூபணம் செய்யும் பொழுது நீங்கி விடுகிறது. அது அதன் முடிவு. அவ்வாறேஇந்த தேகங்கள் ஸ்வப்னமாயாதேகாதிகள் போல் முடிவுடன் கூடியவைகள் ஆகும்.
नित्यस्य शरीरिणः शरीरवतः अनाशिनः अप्रमेयस्य आत्मनः अन्तवन्त इति उक्ताः विवेकिभिरित्यर्थः ।
நித்தியமாயும், சரீரியாயும் நாசமற்றதாயும் அப்ரமேயமுமான ஆத்மாவினுடைய (சரீரங்கள்) நாசத்துடன் (முடிவுடன்) கூடியது என்று விவேகி புருஷர்களால் கூறப்பட்டது என்பது பொருள்.
‘नित्यस्य’ ‘अनाशिनः’ इति न पुनरुक्तम् ; नित्यत्वस्य द्विविधत्वात् लोके, नाशस्य च ।
உலகத்தில் நித்யத்திற்கும் நாசத்திற்கும் இருவித பேதங்கள் இருப்பதால், நித்யம், அநாசி (நாசமற்றது) என்று கூறுதல் புனருக்தி தோஷமாகாது.
यथा देहो भस्मीभूतः अदर्शनं गतो नष्ट उच्यते । विद्यमानोऽपि यथा अन्यथा परिणतो व्याध्यादियुक्तो जातो नष्ट उच्यते ।
எவ்வாறு தேஹமானது சாம்பலாகி பார்க்க முடியாத போது நஷ்டமாகி விட்டது என்று கூறப்படுகிறது. அவ்வாறேசரீரம் இருக்கும் பொழுதே வியாதியினால் உடல் மாறுதல் அடையும் பொழுதும் நஷ்ட மாகி விட்டது என்று கூறப்படுகிறது.
तत्र ‘अनाशिनः’ ‘नित्यस्य’ इति द्विविधेनापि नाशेन असम्बन्धः अस्येत्यर्थः ।
(நாசமற்றது, நித்தியம்) என்றஇந்த இரண்டு விசேஷணத்தினு டைய அபிப்பிராயமானது இந்த ஆத்மாவிற்கு இவ்விரு வித நாசத்து டன் ஸம்பந்தம் கிடையாது என்பது பொருள்.
अन्यथा पृथिव्यादिवदपि नित्यत्वं स्यात् आत्मनः ; तत् मा भूदिति ‘नित्यस्य’ ‘अनाशिनः’ इत्याह ।
இவ்வாறு (நித்தியமாய், அவிநாசி) என்று கூறாவிட்டால் ஆத்மா விற்கு பிருதிவீ முதலியவைகள் போல் நித்தியத்தும் ஸம்பவிக்கும் அவ்வாறு ஸம்பவிக்கக்கூடாது என்பதால் நித்யம் என்றும் நாசமற்றது என்றும் கூறினார்.
अप्रमेयस्य न प्रमेयस्य प्रत्यक्षादिप्रमाणैः अपरिच्छेद्यस्येत्यर्थः ॥
பிரத்யக்ஷாதி பிரமாணங்களினால் எதனுடைய ஸ்வரூபத்தை நிச்சயிக்க முடியாதோ அது அப்ரமேயம் என்பது பொருள்.
ननु आगमेन आत्मा परिच्छिद्यते, प्रत्यक्षादिना च पूर्वम् ।
ஆத்மா சாஸ்த்திரத்தினாலும் (அதற்கு முன்) பிரத்யக்ஷாதி பிர மாணங்களினாலும் சித்தமாகி இருக்கிறதன்றோ (இவ்வாறு இருக் கும் பொழுது அது) எவ்வாறு அப்ரமேயமாகும்
न ; आत्मनः स्वतः सिद्धत्वात् । सिद्धे हि आत्मनि प्रमातरि प्रमित्सोः प्रमाणान्वेषणा भवति ।
அவ்வாறு அல்ல. ஆத்மா ஸ்வதஸித்தமாயிருப்பதால், ப்ரமாதா ரூபமான ஆத்மாவானது நிச்சயிக்ககப்பட்டபின் அல்லவா ஜிக்ஞாசு வானவன் (ஆத்மாவை அதை அறிய பிரமாணங்களைத் தேட முற்ப டுவான்)
न हि पूर्वम् ‘इत्थमहम्’ इति आत्मानमप्रमाय पश्चात् प्रमेयपरिच्छेदाय प्रवर्तते । न हि आत्मा नाम कस्यचित् अप्रसिद्धो भवति ।
முதலில் தன்னை (ஆத்மாவை) இருக்கிறேன் என்று அறியாமல் மற்றபதார்த்தங்களை அறிவதற்கு முற்படுவதில்லை. மேலும் ஆத்மா ன்றால் ஏதோ ஒரு அப்பிரஸித்தமான பொருளல்ல. (எல்லோரும் ஸாமானியமாக அறிந்ததே)
शास्त्रं तु अन्त्यं प्रमाणम् अतद्धर्माध्यारोपणमात्रनिवर्तकत्वेन प्रमाणत्वम् आत्मनः प्रतिपद्यते, न तु अज्ञातार्थज्ञापकत्वेन ।
சாஸ்திரமானது முடிவான பிரமாணமாகும். அந்த சாஸ்த்திரபிர மாணமானது தன்தர்மமற்றஅநாத்ம பதார்த்தங்களை நிவிர்த்தி செய் வதில் மாத்திரம் ஆத்மாவிடத்தில் பிரமாணத்துவம் பெறுகிறது, முற்றி லும் அறியாதபொருளை அறிவித்தலில் காரணமாக (ப்ரமாணத்வம் இல்லை)
இவ்வாறு ச்ருதியும் கூறுகிறது. எது சாக்ஷாத் அபரோக்ஷமோ அது ப்ரஹ்மம். எந்த ஆத்மா எல்லோருடைய இருதயத்திலும் வியாபித்திருக்கிறதோ என்பன முதலியவைகளால்.
यस्मादेवं नित्यः अविक्रियश्च आत्मा तस्मात् युध्यस्व, युद्धात् उपरमं मा कार्षीः इत्यर्थः ॥
எதனால் இந்த ஆத்மாவானது நித்யமாயும், நிர்விகாரியாயும் இருக்கிறதோ அதனால் யுத்தம் செய். யுத்தத்திலிருந்து உபரமத்தை (நிவிர்த்தியை) செய்யாதே என்பது பொருள்
न हि अत्र युद्धकर्तव्यता विधीयते, युद्धे प्रवृत्त एव हि असौ शोकमोहप्रतिबद्धः तूष्णीमास्ते । अतः तस्य प्रतिबन्धापनयनमात्रं भगवता क्रियते । तस्मात् ‘युध्यस्व’ इति अनुवादमात्रम्, न विधिः ॥ १८ ॥
இங்கு யுத்தத்தை அவசியம் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படவில்லை. ஆனால் யுத்தத்தில் பிரவிர்த்தித்து விட்டு சோக மோஹ பிரதிபந்தத்தால் சும்மா (ஒன்றும் செய்யாமல்) இருப்பவனுக்கு அவனுடைய பிரதிபந்தத்தை நீக்குதல் மாத்திரமே பகவானால் செய்யப்பட்டது. ஆகையால் யுத்தம் செய் என்றது அனுவாத மாத்திரமே அன்றி விதியல்ல.
शोकमोहादिसंसारकारणनिवृत्त्यर्थः गीताशास्त्रम् , न प्रवर्तकम् इत्येतस्यार्थस्य साक्षिभूते ऋचौ आनीनाय भगवान् ।
கீதா சாஸ்த்திரமானது சோக மோஹாதி ஸம்ஸாரகாரணத்தை நிவிர்த்தி செய்வதற்கே அன்றி விதிக்கவில்லை என்றஇந்த அர்த்தத் திற்கு ஸாக்ஷி பூதமாக இரண்டு (கடோபநிஷத்) ரிக்குகளை பகவான் எடுத்துக்காட்டுகிறார்.
यत्तु मन्यसे ‘युद्धे भीष्मादयो मया हन्यन्ते’ ‘अहमेव तेषां हन्ता’ इति, एषा बुद्धिः मृषैव ते । कथम् ? —
(அவ) யுத்தத்தில் பீஷ்மர் முதலியோர் என்னால் கொல்லப்படு கின் றனர். நானே அவர்களைக் கொல்கிறவன் என்று நீ நினைத்தால் அந்த புத்தி பொய்யே எவ்வாறு எனில்
य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् ।
उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते ॥ १९ ॥
ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யச்சைநம் மன்யதே ஹதம் ।
உபௌ தௌந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ॥ 19 ॥
य एनं प्रकृतं देहिनं वेत्ति विजानाति हन्तारं हननक्रियायाः कर्तारं यश्च एनम् अन्यो मन्यते हतं देहहननेन ‘हतः अहम्’ इति हननक्रियायाः कर्मभूतम् ।
எவன் இப்பொழுது வர்ணணம் செய்யப்பட்ட தேகியை கொலை செய்தவனாக அறிகிறானோ, அவ்வாறேமற்றவன் தேஹத்தை அழிப் பதால் நான் கொல்லப்பட்டவனாக ஆகிறேன் என்று நினைக்கி றானோ ஹனனகிரியைக்கு (கொல்லப்படும் செயல்) கர்மாவாகிறது.
तौ उभौ न विजानीतः न ज्ञातवन्तौ अविवेकेन आत्मानम् ।
அஹம் பிரத்யய விஷயமான ஆத்மாவை அவிவேகத்தினால் அவ்விருவரும் அறிந்தவர்கள் அல்லர்.
‘हन्ता अहम्’ ‘हतः अस्मि अहम्’ इति देहहननेन आत्मानमहं प्रत्ययविषयं यौ विजानीतः तौ आत्मस्वरूपानभिज्ञौ इत्यर्थः ।
நான் கொல்கிறவன், நான் கொல்லப்பட்டவன் என்று தேஹத்தை கொல்லுதலினால் (உண்டாவதை) ஆத்மாவினுடை யதாக எவர்கள் அறிகிறார்களோ அவர்கள் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்களா கின்றனர்.
यस्मात् न अयम् आत्मा हन्ति न हननक्रियायाः कर्ता भवति, न च हन्यते न च कर्म भवतीत्यर्थः, अविक्रियत्वात् ॥ १९ ॥
ஏனெனில் இந்த ஆத்மாவானது கொல்லுவதும் இல்லை. கொல்லும் செயலுக்கு கர்தாவாக ஆகாது. அவ்வாறே கொல்லப் படுவதும் இல்லை. ஆகையால் கர்மாவும் ஆகாது. ஏன்எனில் கிரியை அற்றவராக இருப்பதால்.
कथमविक्रय आत्मेति द्वितीयो मन्त्रः —
(அ.கை) எவ்வாறு ஆத்மா கிரியை அற்றதாய் இருக்கிறது என்பதை இரண்டாவது மந்திரம் (காண்பிக்கிறது)
न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वाभविता वा न भूयः ।
अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ॥ २० ॥
ந ஜாயதே மரியதே வா கதாசித் நாயம் பூத்வா பவிதா வா ந பூய: ।
அஜோ நித்ய: சாச்வதோஅயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமானே சரீரே ॥ 20 ॥
न जायते न उत्पद्यते, जनिलक्षणा वस्तुविक्रिया न आत्मनो विद्यते इत्यर्थः । न म्रियते वा । वाशब्दः चार्थे ।
இந்த ஆத்மாவிற்கு உற்பத்தி கிடையாது என்பது என்னவென் றால் உற்பத்திரூப (ஜன்மரூப) வஸ்து விகாரமானது ஆத்மாவிற்கு கிடையாது. மேலும் மரணமும் கிடையாது. வா என்ற சப்தமானது இங்கு உம் என்றஅர்த்தத்தில் வருகிறது.
न म्रियते च इति अन्त्या विनाशलक्षणा विक्रिया प्रतिषिध्यते ।
மரணம் கிடையாது என்பதால் கடைசியான விநாச லக்ஷண மான விகாரமும் நிராகரிக்கப்படுகிறது.
कदाचिच्छब्दः सर्वविक्रियाप्रतिषेधैः सम्बध्यते — न कदाचित् जायते, न कदाचित् म्रियते, इत्येवम् ।
கதாசித் ஒருபொழும் என்றசப்தமானது எல்லா விகாரங்களையும் நிஷேதம் செய்வதில் சம்பந்திக்கிறது. எவ்வாறு எனில் ஒருபோதும் பிறப்பதில்லை, ஒருபோதும் மரணமடைவதில்லை என்று இவ்வாறு
यस्मात् अयम् आत्मा भूत्वा भवनक्रियामनुभूय पश्चात् अभविता अभावं गन्ता न भूयः पुनः, तस्मात् न म्रियते । योहि भूत्वा न भविता स म्रियत इत्युच्यते लोके ।
எதனால் இந்த ஆத்மாவானது உண்டாகி என்றால் உற்பத்தி ரூப விகாரத்தை அனுபவித்து அதன்பின் இல்லாமல் போவதாக இல்லையோ அதனால் அதற்கு மரணமானது கிடையாது. ஏனெனில் உண்டாகி இல்லாமல் போவதைத்தான் மரணம் என்று உலகத்தில் கூறப்படுகிறது.
वाशब्दात् नशब्दाच्च अयमात्मा अभूत्वा वा भविता देहवत् न भूयः । तस्मात् न जायते । यो हि अभूत्वा भविता स जायत इत्युच्यते । नैवमात्मा । अतो न जायते ।
வா என்றசப்தத்தினாலும் ந என்றசப்தத்தினாலும் இந்த ஆத்மா தேஹத்தைப் போல் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருத் தலை அடையவில்லை. ஆகையால் அதற்கு ஜன்மமானது இல்லை. உலகில் எது இல்லாமல் இருந்து உண்டாகிறதோ அதைப் பிறப்பு என்று சொல்லுவர். அவ்வாறு ஆத்மா இல்லா ததினால் அதற்கு பிறப்பு கிடையாது.
यस्मादेवं तस्मात् अजः, यस्मात् न म्रियते तस्मात् नित्यश्च ।
எதனால் இவ்வாறு (பிறப்பற்றதாய்) இருக்கிறதோ அதனால் அஜ:, எதனால் மரணம் இல்லையோ அதனால் நித்தியம்
यद्यपि आद्यन्तयोर्विक्रिययोः प्रतिषेधे सर्वा विक्रियाः प्रतिषिद्धा भवन्ति, तथापि मध्यभाविनीनां विक्रियाणां स्वशब्दैरेव प्रतिषेधः कर्तव्यः अनुक्तानामपि यौवनादिसमस्तविक्रियाणां प्रतिषेधो यथा स्यात् इत्याह — शाश्वत इत्यादिना ।
ஆதியிலும் முடிவிலும் உள்ள விகாரங்களை (ஜன்ம, மரணங்களை) நீக்கிவிட்டால் நடுவில் உள்ள மற்றவிகாரங்களும் (கௌமார முதலியவை) நீக்கிவிட்டதாக ஆகும். ஆனாலும் கூறப்படாத அந்த நடுவில் உள்ள விகாரங்களைப் போக்குவதற்கு அதனுடைய சப்தத்தினாலும், அதன் அர்த்ததினாலும் யௌவன முதலிய எல்லா விகாரங்களையும் எவ்வாறு பிரதிஷேதம் (நீக்கம்) செய்ய முடியுமோ அவ்வாறே(அசைதல் முதலிய) மற்றவிகாரங் களையும் (சாஸ்வத) முதலிய சப்தங்களால் கூறுகிறார்.
शाश्वत इति अपक्षयलक्षणा विक्रिया प्रतिषिध्यते । शश्वद्भवः शाश्वतः । न अपक्षीयते स्वरूपेण, निरवयवत्वात् । निर्गुणत्वात् च नापि गुणक्षयेण अपक्षयः ।
எப்பொழுதும் (ஒரே படித்தாய்) இருப்பதை சாச்வதம் என்கி றோம். (சாச்வத) என்றசப்தத்தினால் க்ஷயமாகக்கூடிய விகாரமானது மறுக்கப்படுகிறது. ஏன் எனில் ஆத்மாவானது அவயவம் அற்றதின் காரணத்தினாலே அதனுடைய ஸ்வரூபத்திற்கு நாசமானது (க்ஷயமா னது) ஏற்படாது. மேலும் நிர்குணமாய் இருப்பதினால் குணத்தினாலும் அதற்கு க்ஷயமானது (குறைவானது) ஏற்படாது.
अपक्षयविपरीतापि वृद्धिलक्षणा विक्रिया प्रतिषिध्यते — पुराण इति । यो हि अवयवागमेन उपचीयते स वर्धते अभिनव इति च उच्यते । अयं तु आत्मा निरवयवत्वात् पुरापि नव एवेति पुराणः ; न वर्धते इत्यर्थः ।
தேய்தலுக்கு விபரீதமான விருத்தி (வளர்தல்) என்ற லக்ஷணத்தை உடைய விகாரத்தை (புராண) என்ற சப்தமானது விளக்குகிறது. எந்தபதார்த்தத்தினது அவயவமானது உத்பத்தியாகி, பெரிதாகி வளர்கிறதோ அதை (அபிநவ) என்று கூறப்படுகிறது. இந்த ஆத்மாவானது நிரவயமாய் இருப்பதால் முன்னாலும் புதிதாகவே இருந்தது என்பதால் அது (புராண) எனப்படுகிறது. ஆகையால் அதற்கு வளர்ச்சி என்பதில்லை.
तथा न हन्यते । हन्यमाने विपरिणम्यमानेऽपि शरीरे ।
சரீரம் நாசமும் (விகாரமும்) மாறுபாடும் அடைந்தாலும் ஆத்மா நாசமும், விகாரமும் அடையாது.
हन्ति ; अत्र विपरिणामार्थे द्रष्टव्यः अपुनरुक्ततायै । न विपरिणम्यते इत्यर्थः ।
இங்கு (ஹன்தி) கொல்லுதல் என்றகிரியையைக் கூறும் சொல்லா னது புனருக்தி (சொல்லுதலை சொல்லுதல்) தோஷம் உண்டாகவண் ணம் பரிணாமத்தை குறிக்கிறது என்று அறிய வேண்டும். ஆத்மா ஒருபோதும் தன்நிலையிலிருந்து மாறுபடுவதில்லை என்று பொருள்.
अस्मिन् मन्त्रे षड् भावविकारा लौकिकवस्तुविक्रिया आत्मनि प्रतिषिध्यन्ते । सर्वप्रकारविक्रियारहित आत्मा इति वाक्यार्थः ।
இந்த மந்திரத்தில் லௌகிக விஷயங்களில் தோன்றும் ஷட்பாவ விகாரங்களும் ஆத்மாவிடத்தில் மறுக்கப்பட்டுள்ளன. எல்லா விதமாகவும் இந்த ஆத்மா விகாரங்கள் அற்றது என்பது இம் மந்திரத்தின் வாக்கியார்த்தமாகும்.
यस्मादेवं तस्मात् ‘उभौ तौ न विजानीतः’ इति पूर्वेण मन्त्रेण अस्य सम्बन्धः ॥ २० ॥
எதனால் இவ்வாறோ அதனால் அந்த இருவரும் (ஆத்ம ஸ்வரூபத்தை) சரியாக அறிந்தவர் ஆகார் என்று இதற்கு முந்திய மந்திரத்துடன் இந்த மந்திரத்தை ஸம்பந்தம் செய்ய வேண்டும்.
(அ.கை) (ய ஏனம் வேத்தி ஹந்தாரம்) என்ற மந்திரத்தினால் கொல்லுதல் என்றசெயலுக்கு கர்த்தாவும், கர்மமும் (கர்த்தாவும், செயப்படுபொருளும்) ஆகா என்றபிரதிக்ஞை செய்து ந ஜாயதே என்ற ச்லோகத்தினால் (ஆத்மாவிற்கு) நிர்விகார தன்மையின் காரணத்தைக் கூறியும் பிரிதிக்ஞை செய்த விஷயத்தைக் கூறியும் முடிவு செய்கிறார்.
वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययम् ।
कथं स पुरुषः पार्थ कं घातयति हन्ति कम् ॥ २१ ॥
வேதாவிநாசினம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் ।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம் ॥ 21 ॥
वेद विजानाति अविनाशिनम् अन्त्यभावविकाररहितं नित्यं विपरिणामरहितं यो वेद इति सम्बन्धः । एनं पूर्वेण मन्त्रेणोक्तलक्षणम् अजं जन्मरहितम् अव्ययम् अपक्षयरहितं ।
முன் மந்திரத்தில் கூறிய லக்ஷணங்களோடு கூடிய ஆத்மா விற்கு அவிநாசி என்றதால் அந்திம பாவ விகாரமான மரணமற்றதும் நித்தியம் என்றதால் (நோய் முதலிய வைகளால் உண்டாகும் பலஹீனம் மற்றும்) உடல் மெலிதல் முதலிய மாறுபாடு (விகாரம்) அற்றது. அஜம் ஜன்மமற்றது என்றும் அவ்யயம் குறைதல் ஆன விகாரம் அற்றது என்று அறிய வேண்டும்.
कथं केन प्रकारेण सः विद्वान् पुरुषः अधिकृतः हन्ति हननक्रियां करोति, कथं वा घातयति हन्तारं प्रयोजयति ।
ஆத்ம தத்துவத்தை அறிந்த அதிகாரி புருஷன் எவ்வாறு கொல் லுதல் என்ற செயலை செய்வான். மற்றும் எவ்வாறு ஒருவனை கொல்லத் தூண்டுவான்
न कथञ्चित् कञ्चित् हन्ति, न कथञ्चित् कञ्चित् घातयति इति उभयत्र आक्षेप एवार्थः, प्रश्नार्थासम्भवात् ।
எந்த முறையிலாவது, எவனொருவனையாவது கொல்லுவதில் லை. அவ்வாறேஎவ்விதமாகவாவது, எவனொருவனை யாவது கொல் லச்செய்வதுமில்லை (எவ்விதம், எவனை) (கதம் சித், கம்சித்) இந்த இரண்டு சப்தங்களும் அல்ல என்ற அர்த்தத்தில் வந்துள்ளதே அன்றி கேள்வி அர்த்தத்தில் அல்ல ஆக்ஷேபார்த்தமாகும்.
हेत्वर्थस्य च अविक्रियत्वस्य तुल्यत्वात् विदुषः सर्वकर्मप्रतिषेध एव प्रकरणार्थः अभिप्रेतो भगवता ।
(கொல்லுதல் என்ற செயலை மறுத்தற்குரிய) காரணமானது (ஆத்மா நிர்விகாரி என்பதால்) மற்றஎல்லா செயல்களையும் (கிரியை களையும்) மறுப்பதற்கு ஒப்பாகும். ஏனெனில் கர்மங்கள் நிஷேதிக்கப்ப டுதலே பகவானுக்கு இந்தப்பிரகரணத்தின் அபிப்பிராயமாகும்.
हन्तेस्तु आक्षेपः उदाहरणार्थत्वेन कथितः ॥
ஹனன கிரியையின் (கொல்லுதல் என்னும் செயலின்) நிஷேதமானது மற்றகிரியைகளின் உதாரணமாக கூறப்பட்டது.
विदुषः कं कर्मासम्भवहेतुविशेषं पश्यन् कर्माण्याक्षिपति भगवान् ‘कथं स पुरुषः’ इति ।
ஞானிக்கு கர்மா என்பது ஸம்பவிக்காமல் இருப்பதற்கு பகவான் எந்தக்காரணத்தைக் கொண்டு (கதம் சபுருஷ) எப்படிக்கொல்வான் என்று கர்மங்களை மறுக்கிறார்.
ननु उक्त एवात्मनः अविक्रियत्वं सर्वकर्मासम्भवकारणविशेषः ।
ஆத்மா நிர்விகாரியாய் இருத்தலே எல்லாகர்மங்களும் நீக்கப்பட் டதற்கு முக்கிய காரணம் என்று முன்பே கூறப்பட்டுள்ளதே.
सत्यमुक्तः । न तु सः कारणविशेषः, अन्यत्वात् विदुषः अविक्रियादात्मनः । न हि अविक्रियं स्थाणुं विदितवतः कर्म न सम्भवति इति चेत् ।
கூறப்பட்டது உண்மைதான். ஆனால் அது விசேஷமான கார ணமாகாது. நிர்விகார ஆத்மாவைகக் காட்டிலும் ஞானி வேறானவன் என்பதால். ஏன் எனில் ஒரு தூணை அசைதல் முதலிய விகாரமற்ற தாய் அறிந்தவன் கர்மங்களில் இருந்து விடுபடுவதில்லையே!.
न ; विदुषः आत्मत्वात् । न देहादिसङ्घातस्य विद्वत्ता । अतः पारिशेष्यात् असंहतः आत्मा विद्वान् अविक्रियः इति तस्य विदुषः कर्मासम्भवात् आक्षेपो युक्तः ‘कथं स पुरुषः’ इति ।
அவ்வாறு அல்ல. ஞானி (விகாரமற்ற) ஆத்மாவாய் இருப்பதால், ஞானியாய் இருத்தல் தேஹம் முதலியவைகளின் சேர்க்கை அன்று. ஆகையால் பாரிசேஷ நியாயத்தால் ஞானியானவன் சேர்க்கை அற்றநிர்விகாரியான ஆத்மா என்றதால் அந்த ஞானிக்கு கர்மங்கள் துளியும் அற்றதால் (कथं स पुरुषः கதம் ச புருஷ:) அவன் எப்படிக் கொல்வான் என்ற ஆக்ஷேபணையானது பொருந்துகிறது.
यथा बुद्ध्याद्याहृतस्य शब्दाद्यर्थस्य अविक्रिय एव सन् बुद्धिवृत्त्यविवेकविज्ञानेन अविद्यया उपलब्धा आत्मा कल्प्यते ।
எவ்வாறு ஆத்மா, நிர்விகாராயிருந்ததும் புத்திவிருத்தியை பிரித்து அறியாத அக்ஞானத்தினால் அவித்தையை அடைந்து புத்தி விருத்தியினால் கொண்டு வரப்பட்ட சப்தமுதலிய விஷயங்களை அறிகிறான் என்று கல்பிக்கப்படுகிறது.
एवमेव आत्मानात्मविवेकज्ञानेन बुद्धिवृत्त्या विद्यया असत्यरूपयैव परमार्थतः अविक्रिय एव आत्मा विद्वानुच्यते ।
அவ்வாறே, ஆத்மா, அநாத்மாவைப் பிரித்து அறியும் ஞானரூபமானது புத்திவிருத்தியாகிய வித்யையினால் அது அப்படிப் பொய்யாக இருந்தாலும் அந்த வித்தையினால் (அந்த ஞானத்தி னால்) உண்மையில் ஆத்மா நிர்விகாரியாதலால் வித்வான் என்று கூறப்படுகிறார்.
विदुषः कर्मासम्भववचनात् यानि कर्माणि शास्त्रेण विधीयन्ते तानि अविदुषो विहितानि इति भगवतो निश्चयोऽवगम्यते ॥
ஞானிக்கு கர்மங்கள் நிஷேதிக்கப்பட்டதால் சாஸ்திரத்தில் எந்த கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ அவைகள் அக்ஞானிக்கு விதிக் கபட்டவைகள் எதுவானது நிர்ணயம் என்று அறியப்படுகிறது.
ननु विद्यापि अविदुष एव विधीयते, विदितविद्यस्य पिष्टपेषणवत् विद्याविधानानर्थक्यात् । तत्र अविदुषः कर्माणि विधीयन्ते न विदुषः इति विशेषो नोपपद्यते इति चेत् ।
அப்படியானால், வித்யை (ஞானமானது) யானது அக்ஞானிக ளுக்கே விதிக்கப்பட்டுள்ளது. அறிந்த ஞானிகளுக்கு பிசைந்த மாவை பிசைவது போல் வித்யை அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் இங்கு அக்ஞானிக்குத்தான் கர்மமானது விதிக்கப் பட்டது. ஞானிக்கு அல்ல என்பது பொருத்தமுடையது அன்று.
न ; अनुष्ठेयस्य भावाभावविशेषोपपत्तेः । अग्निहोत्रादिविध्यर्थज्ञानोत्तरकालम् अग्निहोत्रादिकर्म अनेकसाधनोपसंहारपूर्वकमनुष्ठेयम् ‘कर्ता अहम् , मम कर्तव्यम्’ इत्येवंप्रकारविज्ञानवतः अविदुषः यथा अनुष्ठेयं भवति, न तु तथा ‘न जायते’ इत्याद्यात्मस्वरूपविध्यर्थज्ञानोत्तरकालभावि किञ्चिदनुष्ठेयं भवति।
அவ்வாறு கூறுவது சரியல்ல, ஏன் எனில் (செய்யவேண்டியதற்கு) செய்யவேண்டும், செய்யவேண்டியதில்லை என்பதில் வேறுபாடு இருக்கிறது. நான் கர்த்தா, என்னால் செய்யப்பட வேண்டும் என்று இவ்வாறு அறிந்தவனான அக்ஞானி அக்னி ஹோத்திராதி விதி வாக் கியத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டபின் அநேக ஸாதனங் களை சேகரித்து அக்னி ஹோத்திராதி கர்மங்களை அனுஷ்டிக்கி றானோ அவ்வாறு ஞானி அனுஷ்டிக்க வேண்டியதில்லை. ஏனெ னில், (ந ஜாயதே = பிறப்பதில்லை) முதலிய ஆத்மஸ்வரூப வாக்கியத் தின் அர்த்த ஞானத்திற்குப் பின் அனுஷ்டிக்கவேண்டியது ஒன்றும் இல்லை (என்று தெளிவுபடுத்துகிறது.)
किं तु ‘नाहं कर्ता, नाहं भोक्ता’ इत्याद्यात्मैकत्वाकर्तृत्वादिविषयज्ञानात् नान्यदुत्पद्यते इति एष विशेष उपपद्यते ।
ஏனெனில் நான் கர்த்தா அல்ல, போக்தா அல்ல, என்பன முதலியவைகளால் ஆத்மா ஏகத்துவ அகர்த்திருத்துவ முதலிய ஞானத்தைத் தவிர மற்றவேறுவிதமான எதுவும் ஏற்படாது. இந்தப்பிர காரமாக (ஞானி, அக்ஞானிகளுடைய) விபாகமானது (பிரிவானது) ஏற்படுகிறது.
यः पुनः ‘कर्ता अहम्’ इति वेत्ति आत्मानम् , तस्य ‘मम इदं कर्तव्यम्’ इति अवश्यंभाविनी बुद्धिः स्यात् ; तदपेक्षया सः अधिक्रियते इति तं प्रति कर्माणि सम्भवन्ति । स च अविद्वान् ,
‘उभौ तौ न विजानीतः’ (भ. गी. २ । १९) इति वचनात् ।
மேலும் எவனொருவன், (கர்த்தா அஹம் = நான் கர்த்தா) என்று தன்னை அறிகிறானோ அவனுக்கு (மம இதம் கர்த்தவ்யம் = என்னால் இது செய்யப்படவேண்டும்) என்றபுத்தியானது அவசியம் ஏற்படும். அந்த புத்தியை அபேக்ஷித்து அவன் கர்மத்திற்கு அதிகாரியாகிறான். (உபௌ தௌந விஜானீத: அவ் இருவரும் சரியாக அறிபவராகார்) என்றவசனத்தினால் அவன்தான் அக்ஞானி (அவித்வான்).
विशेषितस्य च विदुषः कर्माक्षेपवचनाच्च ‘कथं स पुरुषः’ इति ।
(கதம் ஸ புருஷ: அவன் எப்படி செய்கிறான்) என்று பார்த்து கூறப்பட்ட ஞானிக்கு கர்மமானது ஆக்ஷேபிக்கப்படுகிறது.
तस्मात् विशेषितस्य अविक्रियात्मदर्शिनः विदुषः मुमुक्षोश्च सर्वकर्मसंन्यासे एव अधिकारः ।
ஆகையால் ஆத்மாவைக் காண்கின்றஞானிக்கும், மோக்ஷத் தை அடைய விரும்புவோனுக்கும் ஸர்வகர்ம ஸந்நியாஸத்தில்தான் அதிகாரம்.
ஆகையால்தான் பகவான் நாராயணன் ஞானிகளுக்கு (சாங்கி யர்களுக்கு) சாங்கிய யோகம் என்றும், அக்ஞானிகளுக்கு (கர்மயோ கி) கர்ம யோகம் என்றும் இருவகை நிஷ்ட்டைகளை பிரித்து கிரஹிக் கும் படி செய்தார் என்று ज्ञानोयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनाम् इति (ஞான யோகேன சாங்கியானாம் கர்மயோகேன யோகினாம்) ஞான யோகத்தால் ஸாங்க்யர்களுக்கும் கர்மயோகத்தால் யோகிகளுக்கும் என்று
तथा च पुत्राय आह भगवान् व्यासः — ‘द्वाविमावथ पन्थानौ’ (शां. २४१ । ६) इत्यादि । तथा च क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।
அவ்வாறேவ்யாஸபகவான் தன்னுடைய புத்திரரின் பொருட்டு இவ்வாறு ௯றினாா் ( द्वाविमावथ पन्थानौ த்வாவிமாவத பந்தானெள = இரு வித மார்க்கங்கள்) என்ற முதலியவைகளால் மேலும்,
क्रियापथश्चैव पुरस्तात् पश्चात्संन्यासश्चेति ।
க்ரியாபதச்சைவ புரஸ்தாத் பச்சாத் சந்நியாசச்ச) முதலில் கர்ம மார்க்கமும் பின் ஸந்நியாச மார்க்கம் என்று.
இவ்வாறு பகவான் விபாகத்தை மறுபடியும் மறுபடியும் காண்பிக் கப்போகிறார். அதத்வ வித்து அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே, தத்துவவித்து ந அஹம் கரோமி இதி) அதத்வவித்து நான் அஹங்காரத்தினால் மோஹமடைந்து மூடனாய் இருப்பவன் நான் கர்த்தா என்று எண்ணுகிறான். தத்துவவித்தான வன் நான் ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறான். அவ் வாறே(ஸர்வகர்மாணி மனஸா ஸந்நியஸ்யாஸ்தே = எல்லா கர்மங்க ளையும் மனதினால் தியாகம் செய்து இருக்கிறான்) என்பன முதலிய வைகளால்.
तत्र केचित्पण्डितंमन्या वदन्ति — ‘जन्मादिषड्भावविक्रियारहितः अविक्रियः अकर्ता एकः अहमात्मा’ इति न कस्यचित् ज्ञानम् उत्पद्यते, यस्मिन् सति सर्वकर्मसंन्यासः उपदिश्यते इति ।
இனி தங்களை பண்டிதர்கள் என்று நினைக்கின்ற சிலர் ஜன் மாதி ஷட்பாவ விகாரமற்றதாய், கிரியை அற்றதாய், அகர்த் தாவாய், ஒன்றேயாய் உள்ள ஆத்மா நான் என்றஞானம் ஒருவருக்கும் உண் டாவதில்லை. இவ்வாறு இருக்கும்பொழுது யாருக்காக ஸர்வகர்ம ஸந்நியாசமானது உபதேசிக்கப்படுகிறது.
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ந ஜாயதே=பிறக்கவில்லை) என் பது முதலிய சாஸ்திர உபதேசமானது அர்த்தமற்றதாகிவிடும்.
यथा च शास्त्रोपदेशसामर्थ्यात् धर्माधर्मास्तित्वविज्ञानं कर्तुश्च देहान्तरसम्बन्धविज्ञानमुत्पद्यते, तथा शास्त्रात् तस्यैव आत्मनः अविक्रियत्वाकर्तृत्वैकत्वादिविज्ञानं कस्मात् नोत्पद्यते इति प्रष्टव्याः ते ।
மேலும் எவ்வாறு சாஸ்திர உபதேச சாமர்த்தியத்தால் தர்மம் என் பதும், அதர்மம் என்பதும் உண்டு என்றஞானமும், கர்த்தாவிற்கு (கர்மானுசாரமாக) வேறு தேஹ சம்மந்த ஞானமும் உண்டாகின்றதோ அவ்வாறேசாஸ்திரத்தினால் அந்த புருஷனுக்கு ஆத்மாவினுடைய நிர்விகாரித்துவம், அகர்த்திருத்துவம், ஏகத்துவம் முதலிய ஞானம் ஏன் உண்டாகாது என்று (அவர்கள்) கேட்கப்படவேண்டும்.
करणागोचरत्वात् इति चेत् ।
(மன, புத்தியாதி) கரணங்களுக்கு ஆத்மா அகோசரமாய் (புலப்ப டாதவராக) இருப்பதால் ( ஆத்மஞானம் ஏற்படாது எனில்)
(மனசை வானுத்ரஷ்ட்டவ்யம் = மனதினால் அறியப்படவேண் டும்) என்றசுருதி இருப்பதினால் சாஸ்திர, குரு உபதேசத்தாலும், சமத மாதிகளாலும் நன்றாக பண்படுத்தப்பட்ட மனமே ஆத்மதரிசனத்திற் குக் காரணம்.
तथा च तदधिगमाय अनुमाने आगमे च सति ज्ञानं नोत्पद्यत इति साहसमात्रमेतत् ।
இவ்வாறு அந்த ஞானத்தை அடைவதற்கு அனுமானம், ஆகமப்ரமாணம் இருந்தும் ஞானம் உண்டாவதில்லை என்பது துணிச்சலான பேச்சு.
ज्ञानं च उत्पद्यमानं तद्विपरीतमज्ञानम् अवश्यं बाधते इत्यभ्युपगन्तव्यम् ।
ஞானம் உண்டான உடன் அதற்கு விபரீதமான அக்ஞானத்தை அவசியம் பாதிக்கும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
तच्च अज्ञानं दर्शितम् ‘हन्ता अहम् , हतः अस्मि’ इति ‘उभौ तौ न विजानीतः’ इति । अत्र च आत्मनः हननक्रियायाः कर्तृत्वं कर्मत्वं हेतुकर्तृत्वं च अज्ञानकृतं दर्शितम् ।
நான் கொல்லுகிறேன், நான் கொல்லப்பட்டேன் என்று அந்த அக்ஞானமானது காட்டப்பட்டது. (उभौ तौ न विजानित: உலொ தெள ந விஜாநீத:) என்று இங்கு ஆத்மாவினுடைய ஹனனகிரியையினுடைய கர்த்திருத்துவம், கர்மத்துவமும், ஹேது கர்த்திருத்துவமும் (ஏவுதல் என்ற கர்த்திருத்துவமும்) அக்ஞானத்தினால் என்று காண்பிக்கப்பட்டது.
तच्च सर्वक्रियास्वपि समानं कर्तृत्वादेः अविद्याकृतत्वम् , अविक्रियत्वात् आत्मनः । विक्रियावान् हि कर्ता आत्मनः कर्मभूतमन्यं प्रयोजयति ‘कुरु’ इति ।
ஆத்மா நிர்விகாரி ஆதலால் கர்த்திருத்துவாதிகளுக்கு அவித்யையால் ஏற்பட்டது என்பது எல்லா கிரியைகளுக்கும் ஸமமாம். ஏனெனில் விகாரியானவன் தன்னை கர்த்தாவாக்கி தன்னுடைய கர்மரூபமான மற்றவனை கர்மத்தைச் செய் என்று கூறி ஈடுபடுத்துகிறான்
तदेतत् अविशेषेण विदुषः सर्वक्रियासु कर्तृत्वं हेतुकर्तृत्वं च प्रतिषेधति भगवान्वासुदेवः विदुषः कर्माधिकाराभावप्रदर्शनार्थम् ‘वेदाविनाशिनं कथं स पुरुषः’ इत्यादिना ।
ஆகையால் ஞானிக்கு ஒருபோதும் கர்மத்தில் அதிகாரம் இல்லை என்பதைக் காண்பிப்பதன் பொருட்டு (वेदाविनाशिनम् வேதா விநாசினம்) (कथं स पुरुष: கதம் ஸ புருஷ:) முதலிய வாக்கியங்க ளினால் எல்லாக் கிரியைகளையும் சம பாவனையினால் ஞானிக்கு கர்த்தாதன்மையையும், மற்றொருவரைத் தூண்டும் கர்த்தா தன்மை யையும் பகவான் நிஷேதம் செய்கிறார்.
ஞானிக்கு எதில் அதிகாரம்? எனில் முன்பெ (ज्ञानयोगेन सांख्यानाम् ஞான யோகேன ஸாங்க்யானாம்) என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறேஸர்வகாம் ஸந்நியாசத்தைக் கூறப்போகிறார். (सर्वकर्माणि मनसा சர்வ கர்மாணி மனஸா) என்பன முதலிய வைகளால்.
ननु मनसा इति वचनात् न वाचिकानां कायिकानां च संन्यासः इति चेत् ।
மனதினால் என்றதால் மானசிக கர்மங்களுக்கே ஸந்நியாசம். வாக்கு, காயத்தினால் செய்யப்பட்ட கர்மாக்களுக்கு ஸந்நியாசம் கிடையாது என்றால்
न ; सर्वकर्माणि इति विशेषितत्वात् ।
அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏனெனில் எல்லாகர்மங்களையும் விட்டு என்றதால் எல்லாக் கர்மங்களையும் கொள்ளவேண்டும்.
मानसानामेव सर्वकर्मणामिति चेत् ।
எல்லா கர்மங்களையும் என்றதால் மானஸீகமான எல்லா கர்மங் களையே குறிக்கிறது என்றால்
न ; मनोव्यापारपूर्वकत्वाद्वाक्कायव्यापाराणां मनोव्यापाराभावे तदनुपपत्तेः ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் மனோவியாபாரத்தைக் கொண்டு தான் வாக்கு, காயங்களுக்கு செயல் ஏற்படுகிறது. மனோவியாபாரம் இல்லையெனில் வாக்கு, காய செயல் ஸம்பவிக்காது.
शास्त्रीयाणां वाक्कायकर्मणां कारणानि मानसानि कर्माणि वर्जयित्वा अन्यानि सर्वकर्माणि मनसा संन्यस्येदिति चेत् ।
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட வாக், காய கர்மங்களின் காரண மான மானஸ வியாபாரங்களைத் தவிர மற்றஎல்லா கர்மங்களையும் மனதால் ஸந்நியாசம் செய் என்றால்
அது பொருந்தாது. ஏனெனில் (எதையும்) செய்வதில்லை, செய் விப்பதும் இல்லை என்று கூறியிருப்பதால்.
सर्वकर्मसंन्यासः अयं भगवता उक्तः मरिष्यतः न जीवतः इति चेत् ।
பகவான் கூறியதான இந்த ஸர்வகர்ம ஸந்நியாசமானது மரணம டையப்போகும் தருணத்தில் உள்ளவர்களுக்குத்தான் ஜீவித்துக் கொண்டிருப்பவர்களுக்கல்ல என்றால்
அவ்வாறு கூறுவது சரியல்ல, நவத்துவாரம் உள்ள சரீரத்தில் இருக்கும் பொழுது என்றவிசேஷணத்தால் முன் கூறியது பொருந்தாது.
न हि सर्वकर्मसंन्यासेन मृतस्य तद्देहे आसनं सम्भवति । अकुर्वतः अकारयतश्च ।
இறந்தவன் ஸன்யாஸத்தைப் பெற்று ஸர்வகர்மங்களையும் துறந்து சரீரத்தில் தங்கி இருத்தல் ஸம்பவிக்காது. அவ்வாறேசெய்த லும், செய்வித்தலும் இறந்த சரீரத்தில் பொருந்தாது.
देहे संन्यस्य इति सम्बन्धः न देहे आस्ते इति चेत् ।
(ஸர்வகர்மங்களையும்) தேஹத்தில் ஸந்நியசித்து ஸம்பந்தம் செய்யவேண்டுமேயன்றி தேஹத்திலே தங்கி இருக்கிறான் என்று ஸம்பந்தம் செய்யக்கூடாது எனில்
न ; सर्वत्र आत्मनः अविक्रियत्वावधारणात् , आसनक्रियायाश्च अधिकरणापेक्षत्वात् , तदनपेक्षत्वाच्च संन्यासस्य । सम्पूर्वस्तु न्यासशब्दः अत्र त्यागार्थः, न निक्षेपार्थः ।
அவ்வாறு அல்ல. எங்கும் (சாஸ்திரங்களில்) ஆத்மா நிர்விகாரி என்று அவதாரணம் செய்யப்பட்டுள்ளது. தங்கி இருத்தல் என்றகிரி யைக்கு அதிகரணம் எங்கு தங்கி என்று இருப்பிடம் அபேக்ஷி க்கப்ப டுகிறது. (தேவைப்படுவதால்) ஆனால் ஸந்நியாசமானது அதிகரண அபேக்ஷையற்றது. ஸம்மை (सं) முன்னுடைய நியாஸ சப்தத்திற்கு இங்கு தியாக அர்த்தமே தவிர வைத்தல் என்ற அர்த்தம் அல்ல.
तस्मात् गीताशास्त्रे आत्मज्ञानवतः संन्यासे एव अधिकारः, न कर्मणि इति तत्र तत्र उपरिष्टात् आत्मज्ञानप्रकरणे दर्शयिष्यामः ॥ २१ ॥
ஆகையால் கீதா சாஸ்திரத்தில் ஆத்மஞானமுடையவனுக்கு ஸந்நியாசத்தில்தான் அதிகாரம், கர்மத்தில் அல்ல என்று மேலே ஆத் மக்ஞான பிரகரணத்தில் அங்கங்கே எடுத்துக் காட்டுவோம்.
प्रकृतं तु वक्ष्यामः । तत्र आत्मनः अविनाशित्वं प्रतिज्ञातम् । तत् किमिवेति , उच्यते —
இப்பொழுது எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றி கூறுவோம். இப்படியிருக்க ஆத்மாவிற்கு அவிநாசித்துவமானது பிரதிக்ஞை செய்யப்பட்டது. அது எதைப்போல எனில் கூறுகிறோம்.
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही ॥ २२ ॥
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோஅபராணி ।
ததா சரீராணி விஹாய ஜீர்ணா ந்யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ॥ 22 ॥
वासांसि वस्त्राणि जीर्णानि दुर्बलतां गतानि यथा लोके विहाय परित्यज्य नवानि अभिनवानि गृह्णाति उपादत्ते नरः पुरुषः अपराणि अन्यानि, तथा तद्वदेव शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति सङ्गच्छति नवानि देही आत्मा पुरुषवत् अविक्रिय एवेत्यर्थः ॥ २२ ॥
எவ்வாறு உலகில் மனிதன் நைந்த பழைய வஸ்திரங்களை நீக்கி விட்டு புதியவைகளை ஸ்வீகரிக்கின்றானோ அவ்வாறே பழைய சரீ ரங்களை விட்டுவிட்டு புதிய சரீரங்களை எடுக்கிறான். இதன் அபிப்பி ராயம் என்னவெனில் (பழைய வஸ்திரங்களை விட்டு புதியதை தரித்த) மனிதன் போல் (தேஹி)யான ஆத்மா எப்பொழுதும் நிர்விகார மாய் இருக்கிறான்.
कस्मात् अविक्रिय एवेति, आह —
எதனால் நிர்விகாரியாய் ஆத்மா இருக்கிறது என்பதற்கு (பகவான்) கூறுகிறார்.
नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः ।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः ॥ २३ ॥
நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக: ।
ந சைனம் க்லேதயந்த்யாபோ ந சோஷயதி மாருத: ॥ 23 ॥
एनं प्रकृतं देहिनं न च्छिन्दन्ति शस्त्राणि, निरवयवत्वात् न अवयवविभागं कुर्वन्ति । शस्त्राणि अस्यादीनि ।
இவ்வாறு முன்பு கூறப்பட்ட ஆத்மாவை நிரவயவமாய் இருப்ப தால் சஸ்திரங்களினால் (கத்தி முதலியவைகளால்) வெட்ட முடியாது. கத்தி முதலிய சஸ்திரங்கள் (ஆத்மா நிரவயவமாய் இருப்பதால்) அங் கங்களை தனித்தனியாக பிரிக்கமுடியாது.
तथा न एनं दहति पावकः, अग्निरपि न भस्मीकरोति ।
அவ்வாறே அக்னியானது இதை (ஆத்மாவை) எரிக்காது. சாம்ப லாக்காது.
तथा न एनं क्लेदयन्ति आपः । अपां हि सावयवस्य वस्तुनः आर्द्रीभावकरणेन अवयवविश्लेषापादने सामर्थ्यम् । तत् न निरवयवे आत्मनि सम्भवति ।
அவ்வாறேநீரானது இதை அழுகவைக்காது. நீரானது அவய வமுடையவைகளையே திரவமாக்கி அவயவயங்களைப் பிரிப்பதில் சாமர்த்தியமுடையது. எனவே நிரவயவமான ஆத்மாவில் இது முடியாது.
तथा स्नेहवत् द्रव्यं स्नेहशोषणेन नाशयति वायुः । एनं तु आत्मानं न शोषयति मारुतोऽपि ॥ २३ ॥
அவ்வாறே ஈரமுடைய பொருளை காற்றானது உலர்த்தும். இந்த ஸ்வஸ்வரூபத்தை காற்றானது உலர்த்த முடியாது.
यतः एवं तस्मात् —
இவ்வாறு இருப்பதினால்
अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव च ।
नित्यः सर्वगतः स्थाणुरचलोऽयं सनातनः ॥ २४ ॥
அச்சேத்யோ அயமதாஹ்யோஅயமக்லேத்யோ அசோஷ்ய ஏவ ச ।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோஅயம் ஸநாதன: ॥ 24 ॥
यस्मात् अन्योन्यनाशहेतुभूतानि एनमात्मानं नाशयितुं नोत्सहन्ते अस्यादीनि तस्मात् नित्यः ।
எதனால் ஒன்றைஒன்று அழிக்கக்கூடிய இந்த பூதங்கள் (வாள் முதலியவைகள் ) இந்த ஆத்மாவை நாசம் செய்யமுடியாதோ, ஆகை யால் இந்த ஆத்மா நித்தியம்.
नित्यत्वात् सर्वगतः । सर्वगतत्वात् स्थाणुः इव, स्थिर इत्येतत् । स्थिरत्वात् अचलः अयम् आत्मा । अतः सनातनः चिरन्तनः, न कारणात्कुतश्चित् निष्पन्नः, अभिनव इत्यर्थः ॥
நித்தியமாய் இருப்பதால் ஸர்வகதமாய் இருக்கிறது. ஸர்வகதமாய் இருப்பதால் ஸ்தாணு: ஸ்தாணு(தூண்) போல் ஸ்திரமாய் (ஆத்மாவா னது) இருக்கிறது. ஸ்திரமாய் இருப்பதால் அசல: (சலனமற்றது) இந்த ஆத்மா. ஆகையால் ஸனாதன: ( எப்பொழுதும் உள்ளது). காரணத்தி லிருந்து புதிதாக உண்டானதில்லை. ஆகையால் பழமையானது.
नैतेषां श्लोकानां पौनरुक्त्यं चोदनीयम् , यतः एकेनैव श्लोकेन आत्मनः नित्यत्वमविक्रियत्वं चोक्तम्
‘न जायते म्रियते वा’ (भ. गी. २ । २०) इत्यादिना । तत्र यदेव आत्मविषयं किञ्चिदुच्यते, तत् एतस्मात् श्लोकार्थात् न अतिरिच्यते ; किञ्चिच्छब्दतः पुनरुक्तम् , किञ्चिदर्थतः इति ।
இந்த ஸ்லோகங்களில் புனருக்தி தோஷத்தை (கூறியது கூறல் என்றதோஷத்தை) ஆரோபம் செய்தல் கூடாது. ஏனெனில் (ந ஜா யதே ம்ரியதே வா) என்று ஒரு சுலோகத்தினால் ஆத்மாவின் நித்திய தன்மையும், நிர்விகாரத்தன்மையும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஸ்லோக அர்த்தத்தைக் காட்டிலும் விசேஷ அர்த்தமானது கிடையாது. சிறிது சப்தத்தினாலும், சிறிது அர்த்தத்தினாலும் புனருக்தி உள்ளது (எனில்)
दुर्बोधत्वात् आत्मवस्तुनः पुनः पुनः प्रसङ्गमापाद्य शब्दान्तरेण तदेव वस्तु निरूपयति भगवान् वासुदेवः कथं नु नाम संसारिणामसंसारित्वबुद्धिगोचरतामापन्नं सत् अव्यक्तं तत्त्वं संसारनिवृत्तये स्यात् इति ॥ २४ ॥
ஆத்ம தத்துவமானது அறிவதற்கு மிகவும் கடினமானதால் மறுபடியும் மறுபடியும் ஸந்தர்ப்பத்தை வருவித்துக் கொண்டு அனேக வேறு சொற்களால் அந்த வஸ்துவையே பகவான் வாஸுதேவர் நிரூபணம் செய்கிறார். எவ்விதத்திலாவது ஸம்சாரிகளுக்கு அவ்யக்த தத்துவத்வம் (பண்படுத்தப்பட்ட) புத்திக்கு விஷயமாகி ஸம்சாரம் நிவிர்த்தி ஆகவேண்டுமே, என்றகாரணத்தினால் (மறுபடியும் மறுபடியும் விளக்குகிறார்)
किं च —
மேலும்
अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते ।
तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि ॥ २५ ॥
அவ்யக்தோஅயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே ।
தஸ்மாதேவம் விதித்வைனம் நானுசோசிதுமர்ஹஸி ॥ 25 ॥
अव्यक्तः सर्वकरणाविषयत्वात् न व्यज्यत इति अव्यक्तः अयम् आत्मा ।
இந்த ஆத்மாவானது புத்தி முதலிய எல்லா கரணங்களுக்கும் விஷயம் ஆகாததினால் அது வ்யக்தம் அல்ல. அவ்யக்தமே.
अत एव अचिन्त्यः अयम् । यद्धि इन्द्रियगोचरः तत् चिन्ताविषयत्वमापद्यते । अयं त्वात्मा अनिन्द्रियगोचरत्वात् अचिन्त्यः ।
ஆகையினாலேயே சிந்திக்கமுடியாதது. எது இந்திரியங்களுக்கு கோசரமாகிறதோ (விஷயமாகிறதோ) அந்த வஸ்துவே சிந்திக்கக்கூ டிய வஸ்துவாகிறது. ஆத்மா இந்திரியங்களுக்கு விஷயமாகாததால் சிந்திக்கமுடியாதது.
अविकार्यः अयम् ।
இந்த ஆத்மாவானது (மாறுபாடு அற்றது)
यथा क्षीरं दध्यातञ्चनादिना विकारि न तथा अयमात्मा ।
எவ்வாறு தோய்ப்பதினால் (மோர் சேர்ப்பதால்) பாலானது தயிராக மாறுகிறதோ அவ்வாறு இந்த ஆத்மாவானது மாறுதல் அடையாது.
निरवयवत्वाच्च अविक्रियः । न हि निरवयवं किञ्चित् विक्रियात्मकं दृष्टम् । अविक्रियत्वात् अविकार्यः अयम् आत्मा उच्यते ।
நிரவயவமாய் இருப்பதால் விகாரம் அற்றது. (மாறுபாடு அற்றது) ஒருகாலும் நிரவயவத்திற்கு விகாரமானது ஏற்படுவது காணப்படவில்லை. விகாரம் அற்றதினால் இந்த ஆத்மா அவிகாரி எனப்படுகிறது.
तस्मात् एवं यथोक्तप्रकारेण एनम् आत्मानं विदित्वा त्वं न अनुशोचितुमर्हसि हन्ताहमेषाम् , मयैते हन्यन्त इति ॥ २५ ॥
ஆகையால் இந்தப் பிரகாரமாக இந்த ஆத்மாவை அறிந்த உனக்கு, நான் அவர்களைக் கொல்கிறேன். அவர்கள் என்னால் கொல்லப்படுவார்கள் என்று வருத்தப்படுவதற்கு தகுதி கிடையாது.
आत्मनः अनित्यत्वमभ्युपगम्य इदमुच्यते —
ஆத்மாவிற்கு அநித்தியத்துவத்தை ஏற்றுக்கொண்டு (ஒப்புக் கொண்டு) இவ்வாறு கூறுகிறார்.
अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ॥ २६ ॥
அத சைனம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் ।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் சோசிதுமர்ஹஸி ॥ 26 ॥
अथ च इति अभ्युपगमार्थः ।
(அத) (ச) என்ற இரண்டு அவ்வியயங்களும், ஒப்புக்கொண்டு உணர்த்தும் பொருட்டாகும்.
एनं प्रकृतमात्मानं नित्यजातं लोकप्रसिद्ध्या प्रत्यनेकशरीरोत्पत्ति जातो जात इति मन्यसे । तथा प्रतितत्तद्विनाशं नित्यं वा मन्यसे मृतं मृतो मृत इति ।
இவ்வாறு கூறப்படுகின்ற ஆத்மாவானது எப்பொழுதும் ஜன் மத்தை உடையது உலகப்பிரஸித்தியை அனுஸரித்து அநேக சரீரங்க ளுடைய (ஜீவ ஆத்மாவிற்கு) தோற்றம் ஏற்படும்போதும் பிறக்கிறான் என்றும் நிச்சலமாக மரித்தான் என்றும் நினைப் பாயானால்
तथापि तथाभावेऽपि आत्मनि त्वं महाबाहो, न एवं शोचितुमर्हसि, जन्मवतो जन्म नाशवतो नाशश्चेत्येताववश्यम्भाविनाविति ॥ २६ ॥
அவ்வாறு (ஜனன மரணங்கள் நிச்சயமாய் உண்டு என்று வைத் துக்கொண்டாலும்) இருப்பதால் ஹே! மஹா பாஹோ! இவ்வாறு சோகித்தல் கூடாது. ஏனெனில் ஜன்மம் எடுத்தால் மரணமும், மரணம டைந்தால் ஜன்மமும் நிச்சயமாக உண்டாகும் அல்லவா!
तथा च सति —
இவ்வாறு இருக்கும்பொழூது
जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च ।
तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २७ ॥
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுத்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச ।
தஸ்மாதபரிஹார்யேஅர்தே ந த்வம் சோசிதுமர்ஹஸி ॥ 27 ॥
जातस्य हि लब्धजन्मनः ध्रुवः अव्यभिचारी मृत्युः मरणं ध्रुवं जन्म मृतस्य च । तस्मादपरिहार्योऽयं जन्ममरणलक्षणोऽर्थः । तस्मिन्नपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि ॥ २७ ॥
எவன் ஜன்மம் எடுக்கிறானோ அவனுக்கு மரணம் நிச்சயம். மேலும் மரணமடைந்தவனுக்கு ஜன்மம் நிச்சயம். ஆகையால் நீக்க முடியாத இந்த, ஜன்ம, மரண விஷயத்தைக் குறித்து நீ சோகிப்பது சரியல்ல.
कार्यकरणसङ्घातात्मकान्यपि भूतान्युद्दिश्य शोको न युक्तः कर्तुम् , यतः —
காரிய கரண ஸங்காதங்களுடன் கூடிய பிராணிகளைக் குறித்தும் சோகத்தை அடையக்கூடாது. ஏனெனில்.
अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥ २८ ॥
அவ்யக்தாதீனி பூதானி வ்யக்தமத்யானி பாரத ।
அவ்யக்தநிதநான்யேவ தத்ர கா பரிதேவனா ॥ 28 ॥
अव्यक्तादीनि अव्यक्तम् अदर्शनम् अनुपलब्धिः आदिः येषां भूतानां पुत्रमित्रादिकार्यकरणसङ्घातात्मकानां तानि अव्यक्तादीनि भूतानि प्रागुत्पत्तेः ।
அவ்யக்தம் என்றாலும் காணப்படாமை என்றாலும், அபாவம் என்றாலும் ஒன்றே. கார்யகரண ஸங்காதமான புத்திரமித் திராதியான பூதங்கள் தோன்றுவதற்கு முன் இல்லை. ஏனெனில் உத்பத்திக்கு முன் எல்லாம் (அதிருஷ்டமாகவே) இருந்தது.
उत्पन्नानि च प्राङ्मरणात् व्यक्तमध्यानि । अव्यक्तनिधनान्येव पुनः अव्यक्तम् अदर्शनं निधनं मरणं येषां तानि अव्यक्तनिधनानि । मरणादूर्ध्वमप्यव्यक्ततामेव प्रतिपद्यन्ते इत्यर्थः ।
உத்பத்தி ஆகிய பின்பும் மரணத்திற்கு முன்பும் இவை களின் மத் தியில் வியக்தமாக அதாவது த்ருச்யமாக இருந்தது. மேலும் அவ்யக் தம் என்றால் அதர்சனம், நிதனம் என்றால் மரணம், இவைகள் இரண் டும் எவைகளுக்கு இருக்கிறதோ அவைகள் அவ்யக்தநிதனானி. மரணத்திற்குப் பின்னும் (வ்யக்த மான பூதாதிகள்) காணப்படாத தன் மையை அடைகிறது.
तथा चोक्तम् — ‘अदर्शनादापतितः पुनश्चादर्शनं गतः । नासौ तव न तस्य त्वं वृथा का परिदेवना’ (मो. ध. १७४ । १७) इति ।
எந்த பூத ஸங்காதமானது காணாமலிருந்து (அதர்சனத்திலிருந் து) வந்ததோ, மறுபடியும் காணாத்தன்மையையே (அவ்யக்தத்தையே) அடைகிறது. அது உன்னுடையது அல்ல. மேலும் நீ அதனுடையதும் அல்ல. எதைக் குறித்து வருந்துகிறாய். அது வியர்த்தம் அல்லவா, என்று மேலும் கூறப்படுகிறது.
तत्र का परिदेवना को वा प्रलापः अदृष्टदृष्टप्रनष्टभ्रान्तिभूतेषु भूतेष्वित्यर्थः ॥ २८ ॥
முதலில் காணாமலிருந்து பின்பு தோன்றி மறுபடியும் காணப் படாமல் போகின்றபொய்யான பூதங்களைக் குறித்து எதற்காகப் புலம்புகிறாய்? என்பது பொருள்.
दुर्विज्ञेयोऽयं प्रकृत आत्मा ; किं त्वामेवैकमुपालभे साधारणे भ्रान्तिनिमित्ते । कथं दुर्विज्ञेयोऽयमात्मा इत्यत आह —
எதைப் பற்றி இந்தப் பிரகரணத்தில் கூறப்படுகிறதோ அந்த ஆத்மா அறிவதற்கு மிக்க கடினமானது. (அறிவதற்கு கடினமாயிருப்ப தற்கு) காரணமான தவறான அறிவு (எல்லோருக்கும்) ஸமமாய் இருக்க நான் உன்னையே ஏன் பழிக்கவேண்டும்? இந்த ஆத்மா அறிவதற்கு கடினமானது எப்படி? என்பதைக் கூறுகிறார்.
आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः ।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ॥ २९ ॥
ஆச்சர்யவத்பச்யதி கச்சிதேநமாச்சர்யவத்வததி ததைவ சாந்ய: ।
ஆச்சர்யவச்சைநமந்ய: ச்ருணோதி ச்ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித் ॥ 29 ॥
आश्चर्यवत् आश्चर्यम् अदृष्टपूर्वम् अद्भुतम् अकस्माद्दृश्यमानं तेन तुल्यं आश्चर्यवत् आश्चर्यमिति एनम् आत्मानं पश्यति कश्चित् ।
முன்பே பார்க்காததும், அத்புதமானதும், எதேச்சையாக பார்க்கப் பட்டதும் ஆச்சரியம் எனப்படும். அவ்வாறு இந்த ஆத்மாவை ஆச்ச ரியம் போல ஒருவன் பார்க்கிறான்.
आश्चर्यवत् एनं वदति तथैव च अन्यः । आश्चर्यवच्च एनमन्यः शृणोति । श्रुत्वा दृष्ट्वा उक्त्वापि एनमात्मानं वेद न चैव कश्चित् ।
மற்றொருவன் அதை ஆச்சரியம் போல கூறுகிறான். மற்றொரு வன் அதை ஆச்சரியம் போல கேட்கிறான். பார்த்தாலும், கேட்டாலும், அதைப்பற்றி கூறினாலும் ஒருவரும் அறிவதில்லை.
अथवा योऽयमात्मानं पश्यति स आश्चर्यतुल्यः, यो वदति यश्च शृणोति सः अनेकसहस्रेषु कश्चिदेव भवति । अतो दुर्बोध आत्मा इत्यभिप्रायः ॥ २९ ॥
அல்லது எவன் ஒருவன் ஆத்மாவைப் பார்க்கிறானோ அவன் அரிது போல் இருக்கிறான், பேசுபவனும் கேட்பவனும் ஆச்சர்யம் போலாகிறார். ஏனெனில் அப்படிப்பட்டவர் ஆயிரத்தில் ஒருவராவர். ஆதலால் ஆத்மாவை அறிதல் மிக்ககடினமே என்பது அபிப்பிராயம்.
अथेदानीं प्रकरणार्थमुपसंहरन्ब्रूते —
இனி இந்த பிரகரணார்த்தத்தை பூர்த்தி செய்து கூறுகிறார்.
देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥
தேஹி நித்யமவத்யோஅயம் தேஹே ஸர்வஸ்ய பாரத ।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதுமர்ஹஸி ॥ 30 ॥
देही शरीरी नित्यं सर्वदा सर्वावस्थासु अवध्यः निरवयवत्वान्नित्यत्वाच्च तत्र अवध्योऽयं देहे शरीरे सर्वस्य सर्वगतत्वात्स्थावरादिषु स्थितोऽपि ।
இந்த சரீரத்தை உடைய ஆத்மா எப்போதும் எந்நிலையிலும் நிர வயவனாய் கொல்லமுடியாதவனாய் இருக்கிறார். ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா சரீரங்களிலும் இருந்தும்.
सर्वस्य प्राणिजातस्य देहे वध्यमानेऽपि अयं देही न वध्यः यस्मात् , तस्मात् भीष्मादीनि सर्वाणि भूतानि उद्दिश्य न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥
எல்லாப் பிராணிகளுடைய தேஹமானது கொல்லப்பட்டபோதி லும் இந்த தேஹியானவன் கொல்லமுடியாதவன் எதனாலோ அத னால் பீஷ்மர் முதலிய எல்லா ஜீவராசிகளைக் குறித்தும் நீ வருத்தப்ப டுவதற்கு தகுதியற்றவன். (என்று)
इह परमार्थतत्त्वापेक्षायां शोको मोहो वा न सम्भवतीत्युक्तम् । न केवलं परमार्थतत्त्वापेक्षायामेव । किं तु —
இங்கு பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து (யோசிக்கும்போது) சோக, மோஹமானது, ஏற்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டது. பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து மட்டும் அல்லாமல்
स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि ।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्त्रियस्य न विद्यते ॥ ३१ ॥
ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி ।
தர்ம்யாத்தியுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே ॥ 31 ॥
स्वधर्ममपि स्वो धर्मः क्षत्रियस्य युद्धं तमपि अवेक्ष्य त्वं न विकम्पितुं प्रचलितुम् नार्हसि क्षत्रियस्य स्वाभाविकाद्धर्मात् आत्मस्वाभाव्यादित्यभिप्रायः ।
க்ஷத்திரியர்களுக்கு யுத்தமானது ஸ்வதர்மமாகும். இதை அறிந் தும் நீ சலனப்படுவது(கலங்குவது) உசிதம் அல்ல. இதன் அபிப்ராயம் என்னவெனில் (க்ஷத்திரியர்களுடைய) உன்னுடைய ஸ்வபாவமான தர்மத்திலிருந்து நழுவுதல் உனக்கு உசிதமல்ல என்பது.
तच्च युद्धं पृथिवीजयद्वारेण धर्मार्थं प्रजारक्षणार्थं चेति धर्मादनपेतं परं धर्म्यम् । तस्मात् धर्म्यात् युद्धात् श्रेयः अन्यत् क्षत्रियस्य न विद्यते हि यस्मात् ॥ ३१ ॥
இந்த யுத்தத்தினால் பூமியை ஜெயிப்பதின் வாயிலாக தர்மமும், பிரஜைகளும் ரக்ஷிக்கப்படுவார்கள். ஆகையால் இது நியாயத்துடன் கூடிய மேலான தர்மமாகும். அதனால் இந்த தர்மமயமான யுத்தத் தைக் காட்டிலும் வேறு ஒன்றும் க்ஷத்திரியனுக்கு ச்ரேயஸ்ஸை(நன் மையை) கொடுக்கமாட்டாது.
कुतश्च तत् युद्धं कर्तव्यमिति, उच्यते —
மேலும் ஏன் இந்த யுத்தத்தை செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् ।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् ॥ ३२ ॥
யத்ருச்சயா சோபபன்னம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம் ।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருசம் ॥ 32 ॥
यदृच्छया च अप्रार्थिततया उपपन्नम् आगतं स्वर्गद्वारम् अपावृतम् उद्धाटितं ये एतत् ईदृशं युद्धं लभन्ते क्षत्रियाः हे पार्थ, किं न सुखिनः ते ? ॥ ३२ ॥
ஹே பார்த்த! தற்செயலாய் கிடைத்த திறந்துள்ள ஸ்வர்க்க வாயி லாக உள்ள இந்த யுத்தத்தை எந்த க்ஷத்திரியர்கள் மேற்கொள்ளுகி றார்களோ அவர்கள் சுகிகள்(இன்பமுடையவர்கள்) அல்லவா?
एवं कर्तव्यताप्राप्तमपि —
இவ்வாறு (யுத்தமானது உன்னுடைய) கடமையாயிருந்தாலும்
अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि ।
ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि ॥ ३३ ॥
அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி ।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ॥ 33 ॥
अथ चेत् त्वम् इमं धर्म्यं धर्मादनपेतं विहितं सङ्ग्रामं युद्धं न करिष्यसि चेत् , ततः तदकरणात् स्वधर्मं कीर्तिं च महादेवादिसमागमनिमित्तां हित्वा केवलं पापम् अवाप्स्यसि ॥ ३३ ॥
இந்த தர்மத்துடன் கூடிய உன் ஸ்வதர்மமாகிய தர்மயுத்தத்தை செய்யாவிடில், யுத்தம் செய்யாததினால் உன்னுடைய ஸ்வதர்மத்தை யும் விட்டு, நீ மஹாதேவன் முதலியவர்களுடன் யுத்தம் செய்து அடைந்த கீர்த்தியையும் விட்டு கேவலம் பாபத்தையே அடைவாய்.
न केवलं स्वधर्मकीर्तिपरित्यागः —
கேவலம் ஸ்வதர்மம், கீர்த்தியை விடுவது மட்டுமல்ல-
अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् ।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ॥ ३४ ॥
அகீர்திஞ் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேஅவ்யயாம் ।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே ॥ 34 ॥
अकीर्तिं चापि युद्धे भूतानि कथयिष्यन्ति ते तव अव्ययां दीर्घकालाम् । धर्मात्मा शूर इत्येवमादिभिः गुणैः सम्भावितस्य च अकीर्तिः मरणात् अतिरिच्यते, सम्भावितस्य च अकीर्तेः वरं मरणमित्यर्थः ॥ ३४ ॥
உலகத்தில் உள்ள எல்லோரும் உன்னுடைய அபகீர்த்தியை (பழியை ) வெகுகாலம் கூறுவார்கள். தர்மாத்மா, சூரன் முதலிய நற்கு ணங்களைப் பெற்றவனுக்கு அபகீர்த்தியானது மரணத்தைக் காட்டி லும் அதிகமானதாகும், எனவே அபகீர்த்தியைக் காட்டிலும் மரணமா னது மேல் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥ ३५ ॥
பயாத்ராணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா: ।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம் ॥ 35 ॥
भयात् कर्णादिभ्यः रणात् युद्धात् उपरतं निवृत्तं मंस्यन्ते चिन्तयिष्यन्ति न कृपयेति त्वां महारथाः दुर्योधनप्रभृतयः । येषां च त्वं दुर्योधनादीनां बहुमतो बहुभिः गुणैः युक्तः इत्येवं मतः बहुमतः भूत्वा पुनः यास्यसि लाघवं लघुभावम् ॥ ३५ ॥
மஹாரதர்களான துரியோதனன் முதலியவர்கள் நீ கர்ணன் முதலியவர்களிடத்திலுள்ள பயத்தினால் தான் யுத்தத் திலிருந்து வில குகிறாய், கருணையினால் அல்ல என்று நினைப்பார்கள். எந்த துர் யோதனன் முதலியவர்களால் நீ அநேக நற்குணங்கள் பெற்றவன் என்று போற்றப்பெற்றாயோ அவர்களே உன்னை சிறுமை அடைந்தவன் என்று கூறுவார்கள்.
किञ्च—
மேலும்
अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम् ॥ ३६ ॥
அவாச்யவாதாம்ச்ச பஹூன்வதிஷ்யந்தி தவாஹிதா: ।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துக்கதரம் நு கிம் ॥ 36 ॥
अवाच्यवादान् अवक्तव्यवादांश्च बहून् अनेकप्रकारान् वदिष्यन्ति तव अहिताः शत्रवः निन्दन्तः कुत्सयन्तः तव त्वदीयं सामर्थ्यं निवातकवचादियुद्धनिमित्तम् ।
உன்னிடம் ஹிதம் அற்றஎதிரிகள் சொல்லக்கூடாத வார்த்தை களை அனேகவிதமாக கூறுவார்கள்.மேலும் உன்னுடைய சத்ருக்கள் நிவாத கவசங்களுடன் செய்த உன்னுடைய யுத்த ஸாமர்த்தியத்தையும் கீழாக மதித்து இகழ்வார்கள்.
ततः तस्मात् निन्दाप्राप्तेर्दुःखात् दुःखतरं नु किम् , ततः कष्टतरं दुःखं नास्तीत्यर्थः ॥ ३६ ॥
ஆகையால் இகழ்ச்சியினால் ஏற்படும் துக்கத்தைக் காட்டிலும் மேலான துக்கம் எது. மிகக் கடினமான துக்கமானது இல்லை என்பது பொருள்.
युद्धे पुनः क्रियमाणे कर्णादिभिः —
இனி கர்ணன் முதலானவர்களுடன் யுத்தம் செய்தால்-
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् ।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ॥ ३७ ॥
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் ।
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிச்சய: ॥ 37 ॥
हतो वा प्राप्स्यसि स्वर्गम् , हतः सन् स्वर्गं प्राप्स्यसि । जित्वा वा कर्णादीन् शूरान् भोक्ष्यसे महीम् । उभयथापि तव लाभ एवेत्यभिप्रायः ।
(நீ யுத்தத்தில்) கொல்லப்பட்டால் சுவர்க்கத்தை அடைவாய் அல்லது கர்ணன் முதலியோர்களை ஜெயித்து ராஜ்ஜியத்தை அனுபவிப்பாய். இவ்வாறு இருவிதமாகவும் உனக்கு லாபமே என்பது அபிப்பிராயம்.
यत एवं तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ‘जेष्यामि शत्रून् , मरिष्यामि वा’ इति निश्चयं कृत्वेत्यर्थः ॥ ३७ ॥
ஹே கௌந்தேய இவ்வாறு இருத்தலின் நீ யுத்தம் செய்ய உறுதி கொண்டு யுத்தத்தில் சத்ருக்களை வெற்றி கொள்வேன் அல்லது செத்துமடி வேன் என்று உறுதியுடன் போர்புரிய எழுந்திரு என்பது பொருள்.
तत्र युद्धं स्वधर्मं इत्येवं युध्यमानस्योपदेशमिमं शृणु —
யுத்தமானது ஸ்வதர்மம் என்று கருதி யுத்தம் செய்கின்ற உன் பொருட்டு (நான்) செய்யும் இந்த உபதேசத்தைக் கேள்.
सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ॥ ३८ ॥
ஸுகதுக்கே ஸுமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ ।
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்யஸி ॥ 38 ॥
सुखदुःखे समे तुल्ये कृत्वा, रागद्वेषावप्यकृत्वेत्येतत् । तथा लाभालाभौ जयाजयौ च समौ कृत्वा ततो युद्धाय युज्यस्व घटस्व । न एवं युद्धं कुर्वन् पापम् अवाप्स्यसि । इत्येष उपदेशः प्रासङ्गिकः ॥ ३८ ॥
சுகத்தையும், துக்கத்தையும் ஸமமாகப் பாவித்து என்றால் ராக, துவேஷம் இன்றி இருப்பதாம். அவ்வாறேலாப நஷ்ட்டங்களையும், வெற்றி தோல்விகளையும் ஸமமாக பாவித்து யுத்தத்தை தொடங்குவா யாக. இவ்வாறு ஸமத்தன்மையுடன் யுத்தம் செய்தால் உன்னைப் பாவ மானது பற்றாது, இந்த உபதேசம் எனது இந்த சந்தர்பத்தில் பொருந்தக் கூடியது.
स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய), என்பன முதலிய ச்லோகங்களால் சோக மோஹத்தை நீக்குவதற்காக லௌகிக ந்யா யத்தால் கூறப்பட்டதேயன்றி பாரமார்த்திக திருஷ்டியால் அல்ல.
परमार्थदर्शनमिह प्रकृतम् । तच्चोक्तमुपसंह्रियते —
இந்த பிரகரணத்தில் ஆரம்பமுதல் (30வது சுலோகம் வரையி லும்) பரமார்த்த தர்சனத்தை பூர்த்தி செய்கிறார்.
இப்பொழுது சாஸ்த்திர விஷயத்தின் பிரிவுகளை (விபாகங்களை) காண்பிப்பதன் பொருட்டு ( ஏஷா தேஅபிஹிதா), என்றஇந்த சுலோகத்தின் வாயிலாக அதை (பரமார்த்த தரிசனத்தை) உபஸம்ஹாரம் (முடிவு) செய்கின்றார்.
ஏனெனில் இங்கு சாஸ்திரத்தில் காண்பிக்கப்பட்ட விபாகத்தை அறிவதினால், பிறகு 3ம் அத்யாயத்தில் (ஞானயோகேன ஸாங்க்யா னாம் கர்மயோகேன யோகினாம்,) என்று அந்த இரண்டு நிஷ்ட்டைக ளும் காண்பிக்கப்பட்டதாக சொல்வதை சுலபமாக கிரஹிக்கும் பொருட்டும், ச்ரோத்தாக்களும் விபாகத்துடன் கூடிய விஷயத்தை அநாயாசமாக கிரஹிக்கும் பொருட்டும் இவ்வாறு கூறுகிறார்.
एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु ।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ॥ ३९ ॥
ஏ ஷா தேஅபிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம்ச்ருணு ।
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி ॥ 39 ॥
एषा ते तुभ्यम् अभिहिता उक्ता साङ्ख्ये परमार्थवस्तुविवेकविषये बुद्धिः ज्ञानं साक्षात् शोकमोहादिसंसारहेतुदोषनिवृत्तिकारणम् ।
நான் உன் பொருட்டு கூறிய சாங்கிய யோகமானது அதாவது பரமார்த்த வஸ்துவின் விவேகபுத்தியான ஞானமானது ஸாக்ஷாத் (நேரே) சோக, மோஹாதி ஸம்சார காரணத்தை நிவிர்த்தி செய்வதற்கு காரணமாகிறது.
योगे तु तत्प्राप्त्युपाये निःसङ्गतया द्वन्द्वप्रहाणपूर्वकम् ईश्वराराधनार्थे कर्मयोगे कर्मानुष्ठाने समाधियोगे च इमाम् अनन्तरमेवोच्यमानां बुद्धिं शृणु ।
இதை (ஞானத்தை) அடைவதற்கு உபாய ரூபமான யோக விஷயத்தில் என்றால் ஆஸக்தி (காமம்) அற்று ஸுக, துக்க முதலிய துவந்துவங்களை தியாகம் செய்து, ஈஸ்வர ஆராதனத்தின் பொருட்டு செய்யும் கர்ம அனுஷ்டான கர்மயோகத்தைப் பற்றியும், ஸமாதி யோகத்தைப் பற்றியதுமான விஷயத்தில் உள்ள புத்தியைப் பற்றி மேலே கூறப்போவதைக் கேள்.
तां च बुद्धिं स्तौति प्ररोचनार्थम् —
அந்த (கர்ம) புத்தியை உற்காசம் அடைந்து ஏற்றுக்கொள்வதற்காக அதை ஸ்துதி செய்கிறார்.
बुद्ध्या यया योगविषयया युक्तः हे पार्थ, कर्मबन्धं कर्मैव धर्माधर्माख्यो बन्धः कर्मबन्धः तं प्रहास्यसि ईश्वरप्रसादनिमित्तज्ञानप्राप्त्यैव इत्यभिप्रायः ॥ ३९ ॥
ஹே! பார்த்த! இந்த யோகவிஷய புத்தியுடன் கூடிய தர்மாதர்ம மெனப்படும் கர்ம பந்தத்தை, ஈஸ்வர கிருபையினால் ஏற்படும் ஞானப் பிராப்தியின் வாயிலாக நாசம் செய் என்பது அபிப்பிராயம்.
किञ्च अन्यत् —
மேலும் மற்றதைக் கேள்
नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते ।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ॥ ४० ॥
நேஹாபிக்ரமநாசோஅஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் ॥ 40 ॥
न इह मोक्षमार्गे कर्मयोगे अभिक्रमनाशः अभिक्रमणमभिक्रमः प्रारम्भः तस्य नाशः नास्ति यथा कृष्यादेः । योगविषये प्रारम्भस्य न अनैकान्तिकफलत्वमित्यर्थः ।
மோக்ஷமார்க்கமான நிஷ்காம கர்மமார்க்கத்தில் உழவுத்தொழில் முதலியவைகள் போல் (முயற்சி) ஆரம்பத்தின் நாசமானது ஏற்படாது. இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் நிஷ்காமயோக விஷயத்தின் ஆரம்ப பலன் நிச்சயமற்றது அல்ல. (நிச்சயமாக அடையப்படும்)
किञ्च — नापि चिकित्सावत् प्रत्यवायः विद्यते ।
மேலும் வைத்தியம் செய்வதினால் (செய்ய ஆரம்பித்து விட்டதால்) உண்டாகும் விபரீத பலமும் கிடையாது.
किं तु भवति स्वल्पमपि अस्य धर्मस्य योगधर्मस्य अनुष्ठितं त्रायते रक्षति महतः भयात् संसारभयात् जन्ममरणादिलक्षणात् ॥ ४० ॥
மேலும் என்ன ஆகிறது என்றால், இந்த யோகத்தை சிறிது அனுஷ்டித்தாலும் அவனை ஜன்ம மரண முதலியதான ஸம்சாரத்தி லிருந்து காப்பாற்றுகிறது.
येयं साङ्ख्ये बुद्धिरुक्ता योगे च, वक्ष्यमाणलक्षणा सा —
எந்த இந்த புத்தியானது சாங்கிய விஷயத்தில் கூறப்பட்டதோ இப்பொழுது கர்மயோக விஷயத்தில் கூறப்படபோகிறதோ அந்த புத்தியானது-
व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन ।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ॥ ४१ ॥
வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தன ।
பஹுசாகா ஹ்யநந்தாச்ச புத்தயோஅவ்யவஸாயினாம் ॥ 41 ॥
व्यवसायात्मिका निश्चयस्वभावा एका एव बुद्धिः इतरविपरीतबुद्धिशाखाभेदस्य बाधिका, सम्यक्प्रमाणजनितत्वात् , इह श्रेयोमार्गे हे कुरुनन्दन ।
ஹே! குரு நந்தன! இந்த ச்ரேயோமார்க்கமான வ்யவஸாத்மிகா, என்றால் நிச்சய ஸ்வபாவமுடைய புத்தி அது ஒன்றே. எந்த இந்த புத்தியானது பிரமாணத்தினால் உண்டானதால் மற்றவிபரீத புத்தியில் உள்ள சாகா பேதங்களை (பல கிளைகளாக பிரிந்து நிற்கும் சம்சா ரத்தில் உள்ள பேதங்களை) பாதிக்கிறது. (நீக்குகிறது)
याः पुनः इतरा विपरीतबुद्धयः, यासां शाखाभेदप्रचारवशात् अनन्तः अपारः अनुपरतः संसारो नित्यप्रततो विस्तीर्णो भवति, प्रमाणजनितविवेकबुद्धिनिमित्तवशाच्च उपरतास्वनन्तभेदबुद्धिषु संसारोऽप्युपरमते
மேலும் எந்த மற்றபுத்திகளுண்டோ அதனுடைய சாகா (கிளை) பேதங்களின் பிரச்சாரத்தினால் ஸம்ஸாரமானது அநந்தமாயும் கடக்க முடியாததாயும், அனுபரதமாயும் (தள்ளத்தகாததாயும்) நிரந்தரமாக மிகவும் விரிந்ததாயும் இருக்கின்றன. இந்த அனந்த புத்தி பேதங் கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தியினால் முடிவு அடை யும் பொழுது ஸம்ஸாரமும் முடிவடைகிறது.
ता बुद्धयः बहुशाखाः बह्वयः शाखाः यासां ताः बहुशाखाः, बहुभेदा इत्येतत् । प्रतिशाखाभेदेन हि अनन्ताश्च बुद्धयः । केषाम् ? अव्यवसायिनां प्रमाणजनितविवेकबुद्धिरहितानामित्यर्थः ॥ ४१ ॥
ஆனால் எவர்கள் அவ்வியவசாயிகளாய் (நிச்சயபுத்தி அற்றவர் களாய் இருக்கிறார்களோ அவர்கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தி அற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய புத்தியில் பேதங்கள் (சாகா) உள்ளன. ஒவ்வொரு சாகையிலும் முடிவற்ற பேதங்கள் உள்ளன.
येषां व्यवसायात्मिका बुद्धिर्नास्ति ते —
எவர்களுக்கு வியவசாயாத்மிகா (தீர்மானம் ஏற்படுத்தப்பட்ட) புத்தி இல்லையோ அவர்கள்-
यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः ।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः ॥ ४२ ॥
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபச்சித: ।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதின: ॥ 42 ॥
याम् इमां वक्ष्यमाणां पुष्पितां पुष्पित इव वृक्षः शोभमानां श्रूयमाणरमणीयां वाचं वाक्यलक्षणां प्रवदन्ति ।
இந்த பூத்துக் குலுங்குகின்றமரங்களைப் போல அழகிய கேட்பதற்கு ரமணீயமாய் இருப்பதுபோல் உள்ள வாக்கியங்களை கூறுகிறார்கள்.
के ? अविपश्चितः अमेधसः अविवेकिन इत्यर्थः । वेदवादरताः बह्वर्थवादफलसाधनप्रकाशकेषु वेदवाक्येषु रताः ।
எவர்கள் (எனில்) (अविपश्चितः அவிபச்சத:) என்றால் அல்பமேதை உடையவன். அவிவேகி என்பது பொருள். (वेदवादरता வேதவாதரதா:) என்றால் அநேக அர்த்த வாதங்களையும், பல ஸாதனங்களையும் பிரகாசப்படுத்தும் வேத வாக்கியங்களில் ரமிக்கின்றவர்கள்.
हे पार्थ, न अन्यत् स्वर्गपश्वादिफलसाधनेभ्यः कर्मभ्यः अस्ति इति एवं वादिनः वदनशीलाः ॥ ४२ ॥
ஹே! பார்த்த! சுவர்க்க பிராப்தி முதலிய பலன்களைக் கொடுக் கும் பலசாதன ரூபமான கர்மத்தைக் காட்டிலும் வேறு ஒன்று கிடை யாது என்று கூறும் இயல்புடையவர்கள் வாதிகள்.
ते च —
மேலும் அவர்கள்
कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् ।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ॥ ४३ ॥
காமாத்மான: ஸ்வர்கபரா ஜன்மகர்மபலப்ரதாம் ।
க்ரியாவிசேஷபஹுலாம் போகைச்வர்யகதிம் ப்ரதி ॥ 43 ॥
कामात्मानः कामस्वभावाः, कामपरा इत्यर्थः । स्वर्गपराः स्वर्गः परः पुरुषार्थः येषां ते स्वर्गपराः स्वर्गप्रधानाः । जन्मकर्मफलप्रदां कर्मणः फलं कर्मफलं जन्मैव कर्मफलं जन्मकर्मफलं तत् प्रददातीति जन्मकर्मफलप्रदा, तां वाचम् । प्रवदन्ति इत्यनुषज्यते ।
காமாத்மன: என்றால் காமஸ்வபாவமுள்ளவர்கள், காமபரர்கள் (स्वर्गपरा: ஸ்வர்கபரர்கள்) என்றால் ஸ்வர்க்கமே மேலான புருஷார்த்தம் என்றும் சுவர்க்கத்தையே பிரதானமாக நினைப் பார்கள். (जन्मकर्मफलप्रदां ஜன்ம கர்ம பலப்ரதாம்) என்றால் கர்மத்தி னுடைய பலம் கர்மபலம் எனப்படும். கர்மபலமானது ஜன்மம். கர்மபல மான ஜன்மத்தைத் தருவதால் ஜன்மகர்மபலப்ரதம் எனப்படுகிறது. அவ்வியவஸாயிகள் இந்த வார்த்தைகளைக் கூகிறார்கள் என்றவார்த்தை முன்பகுதியிலிருந்து தொடர்கிறது.
क्रियाविशेषबहुलां क्रियाणां विशेषाः क्रियाविशेषाः ते बहुला यस्यां वाचि तां स्वर्गपशुपुत्राद्यर्थाः यया वाचा बाहुल्येन प्रकाश्यन्ते । भोगैश्वर्यगतिं प्रति भोगश्च ऐश्वर्यं च भोगैश्वर्ये, तयोर्गतिः प्राप्तिः भोगैश्वर्यगतिः, तां प्रति साधनभूताः ये क्रियाविशेषाः तद्बहुलां तां वाचं प्रवदन्तः मूढाः संसारे परिवर्तन्ते इत्यभिप्रायः ॥ ४३ ॥
(क्रियाविशेषबहुलां கிரியாவிசே ஷபஹுலாம்) என்றால் அநேக கர்ம விசேஷங்கள் சுவர்க்கம், பசு, புத்திரன் முதலிய அர்த்தங்கள் (பொருள்கள்) அந்த வாக்கினால் அதிகமாக பிரகாசிக்கப்படுகின்றன. (அவர்கள் அதைப் பற்றியே கூறுகிறார்கள்) (भोगैश्वर्यगतिं प्रति போகைச்வர்ய கதிம் பிரிதி) என்றால் போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதல், போக ஐஸ்வர் யத்தை அடைவதற்கு ஸாதனங்களுடன் கூடிய அநேக கர்மவிசேஷங்களை அநேக வார்த் தைகளால் கூறுகின்றமூடர்கள் ஸம்சார சக்கரத்தில் உழண்டு கொண் டிருப்பார்கள் என்பது அபிப்பிராயம்.
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् ।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते ॥ ४४ ॥
போகைச்வர்யப்ரசக்தானம் தயாபஹ்ருதசேதஸாம் ।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே ॥ 44 ॥
तेषां च —भोगैश्वर्यप्रसक्तानां भोगः कर्तव्यः ऐश्वर्यं च इति भोगैश्वर्ययोरेव प्रणयवतां तदात्मभूतानाम् । तया क्रियाविशेषबहुलया वाचा अपहृतचेतसाम् आच्छादितविवेकप्रज्ञानां व्यवसायात्मिका साङ्ख्ये योगे वा बुद्धिः समाधौ समाधीयते अस्मिन् पुरुषोपभोगाय सर्वमिति समाधिः अन्तःकरणं बुद्धिः तस्मिन् समाधौ, न विधीयते न भवति इत्यर्थः ॥ ४४ ॥
போக, ஐஸ்வர்யத்திலேயே மிகுந்த ஆசக்தி உள்ளவர்கள் போகமும், ஐஸ்வர்யமும் தான் மேலான புருஷார்த்தம் என்று நினைத்து அதிலேயே பிரேமை உடையவர்களாகி அந்த மயமாகவே ஆகிவிடுகிறார்கள். அநேக கர்மவிசேஷங்களுடன் கூடிய வார்த்தை களினால் மறைக்கப்பட்ட விவேகபுத்தி உடையவர்களுக்கு ஸாங்கிய விஷயத்திலாவது, யோக விஷயத்லாவது நிச்சயபுத்தி உண்டாக மாட்டாது. புருஷனின் போகத்தின் பொருட்டு ஸகல யோக விஷயங்க ளும் எங்கு நன்றாக படிந்திருக்கிறதோ அந்த மனம் சமாதி எனப்படும். இவ்வாறு சமாதிக்கு அர்த்தம் செய்யும்போது சமாதி என்றால் அந்தக் கரணம் எனப்படும். இவ்வாறுள்ள அந்தக்கரணத்தில் சாங்கியத்திலும் யோகத்திலும் நிச்சயதன்மை ஏற்படுத்தும் புத்தியானது உண்டாக மாட்டாது.
ये एवं विवेकबुद्धिरहिताः तेषां कामात्मनां यत् फलं तदाह —
எவர்கள் இவ்வாறு விவேக புத்தி அற்று இருக்கின்ற அந்த காம புருஷர்களுக்கு
त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन ।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् ॥ ४५ ॥
த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன ।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவான் ॥ 45 ॥
त्रैगुण्यविषयाः त्रैगुण्यं संसारो विषयः प्रकाशयितव्यः येषां ते वेदाः त्रैगुण्यविषयाः । त्वं तु निस्त्रैगुण्यो भव अर्जुन, निष्कामो भव इत्यर्थः ।
வேதமானது த்ரைகுண்யவிஷயமாய் இருக்கிறது, ஏனென்றால் முக்குணங்களின் காரிய ரூபமான ஸம்ஸாரத்தைப் பிரகாசம் செய்வதாய் இருப்பதால், (கர்மகாண்டம்) ஹே ! அர்ஜுனா! (நீ நிஸ்த் ரைகுண்யோ அஸம்சாரி) ஆவாய். மேலும் காமமற்றவனாய் ஆவாய்.
निर्द्वन्द्वः सुखदुःखहेतू सप्रतिपक्षौ पदार्थौ द्वन्द्वशब्दवाच्यौ, ततः निर्गतः निर्द्वन्द्वो भव । नित्यसत्त्वस्थः सदा सत्त्वगुणाश्रितो भव ।
(நிர்துவந்த:) என்றால் சுக துக்கங்களுக்கு காரணமாயும், பரஸ்பர விரோதியான இரட்டைப் பதார்த்தங்களை த்வந்த்வம் என்கிறோம். துவந்துவம் அற்றது (நிர்துவந்தக: ) நீ துவந்துவம் அற்றவனாயும், எப்பொழுதும் ஸத்வகுணத்தை ஆச்ரியத்தவனாயும் இரு.
तथा निर्योगक्षेमः अनुपात्तस्य उपादानं योगः, उपात्तस्य रक्षणं क्षेमः, योगक्षेमप्रधानस्य श्रेयसि प्रवृत्तिर्दुष्करा इत्यतः निर्योगक्षेमो भव ।
அவ்வாறேயோகக்ஷேமம் அற்றவனாயிரு. அடையப்படாத வஸ்துவை அடைவதே யோகம். அடைந்த வஸ்துவைக் காப்பாற்று தல் க்ஷேமம். யோகக்ஷேமத்தை பிரதானமாய் நினைப்பவர்களுக்கு ச்ரேயஸ் மார்க்கத்தில் பிரவிர்த்தித்தல் மிகக்கடினமாகும். ஆகையால் யோகக்ஷேமம் அற்றவனாய் இரு.
आत्मवान् अप्रमत्तश्च भव । एष तव उपदेशः स्वधर्ममनुतिष्ठतः ॥ ४५ ॥
(ஆத்மாவான் பவ) எனில் ஏமாற்றம் அற்றவனாய் இரு. நீ ஸ்வதர் மத்தை அனுஷ்டிக்கும்பொழுது (உன்னுடைய நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்ற) உபதேசம் இதுவாகும்.
सर्वेषु वेदोक्तेषु कर्मसु यान्युक्तान्यनन्तानि फलानि तानि नापेक्ष्यन्ते चेत् , किमर्थं तानि ईश्वरायेत्यनुष्ठीयन्ते इत्युच्यते ; शृणु —
சம்பூர்ண (எல்லா) வேதங்களிலும் கூறிய கர்மங்களுடைய அளவற்ற பலன்களை விரும்பாதவனால் எதற்காக அந்த கர்மங்கள் ஈஸ்வரரின் பொருட்டு அனுஷ்டிக்கப்படவேண்டும் எனில்- கூறுகிறேன் கேள்.
यावानर्थ उदपाने सर्वतःसम्प्लुतोदके ।
तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः ॥ ४६ ॥
யாவாநர்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே ।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத: ॥ 46 ॥
यथा लोके कूपतडागाद्यनेकस्मिन् उदपाने परिच्छिन्नोदके यावान् यावत्परिमाणः स्नानपानादिः अर्थः फलं प्रयोजनं स सर्वः अर्थः सर्वतः सम्प्लुतोदकेऽपि यः अर्थः तावानेव सम्पद्यते, तत्र अन्तर्भवतीत्यर्थः ।
எவ்வாறு உலகில் கிணறு, குளம் முதலிய அநேக சிறிய, சிறிய தண்ணீர் உள்ள நிலைகளில் எவ்வளவு குளிப்பதற்கு, குடிப்பதற்கு பிரயோஜனம் ஏற்படுகிறதோ, அந்த எல்லா பிரயோஜனங்களும் பெரும் ஊற்றெடுக்கும் நீர் நிறைந்த பெரிய ஏரிகளில் சுலபமாக கிடைக்கிறது. அங்கு எல்லா பிரயோஜனங்களும் அடங்கி இருக்கின்றன என்பது இதன் பொருள்.
एवं तावान् तावत्परिमाण एव सम्पद्यते सर्वेषु वेदेषु वेदोक्तेषु कर्मसु यः अर्थः यत्कर्मफलं सः अर्थः ब्राह्मणस्य संन्यासिनः परमार्थतत्त्वं विजानतः यः अर्थः यत् विज्ञानफलं सर्वतःसम्प्लुतोदकस्थानीयं तस्मिन् तावानेव सम्पद्यते तत्रैवान्तर्भवतीत्यर्थः ।
இவ்வாறு ஸம்பூர்ண வேதத்தில் கூறப்பட்ட கர்மங்களின் யாது பிரயோஜனம் உள்ளதோ அதாவது கர்மபலன் உண்டாகிறதோ அந்த கர்மபலன்கள் எல்லாம் பரமார்த்த தத்துவத்தை அறிந்த ஸந்நியாசிக ளுக்கு மஹா ஊற்றுப் பெருக்குள்ள ஏரிக்கு ஒப்பான விக்ஞான ஆனந்த ரூப பலத்தில் அநாயாசமாக கிடைக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் எல்லாப் பலன்களும் ஞானரூப ஆனந்த பலத்தில் அடங்குகிறது.
ஜனங்கள் செய்த நல்ல கார்யங்களால் அந்த (ரைக்கவர்) அறிந்ததை ( அந்த பரப்ரஹ்மத்தை ) எவர்கள் அறிகிறார்களோ அவர்களுக்கு அந்த எல்லா பலன்களும் போய் சேரும். மேலும் கீதை யிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (ஸர்வம் கர்மாகிலம்) ஸம்பூர்ண கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று.
तस्मात् प्राक् ज्ञाननिष्ठाधिकारप्राप्तेः कर्मण्यधिकृतेन कूपतडागाद्यर्थस्थानीयमपि कर्म कर्तव्यम् ॥ ४६ ॥
ஆகையால் ஞான நிஷ்ட்டைக்கு தகுதி அடைவதற்கு முன் கர் மாதிகாரியானவன் கிணறு, தடாகம் முதலியது போல அல்ப பலனே இருந்தாலும் அவசியம் கர்மம் செய்யவேண்டும்.
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ ४७ ॥
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன ।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி ॥ 47 ॥
कर्मण्येव अधिकारः न ज्ञाननिष्ठायां ते तव । तत्र च कर्म कुर्वतः मा फलेषु अधिकारः अस्तु, कर्मफलतृष्णा मा भूत् कदाचन कस्याञ्चिदप्यवस्थायामित्यर्थः ।
(अन्वयः) உனக்கு கர்மத்தில் தான் அதிகாரமே தவிர ஞானநிஷ்ட் டையில் அல்ல. இங்கு (கர்மயோகத்தில்) கர்மம் செய்கின்றஉனக்கு பலத்தில் ஸ்வாதந்த்ர்யம் (स्वातन्त्र) கிடையாது. உனக்கு ஒரு அவஸ் தையிலும் கர்மபலத்தில் இச்சையே ஏற்படக்கூடாது என்பது பொருள்.
यदा कर्मफले तृष्णा ते स्यात् तदा कर्मफलप्राप्तेः हेतुः स्याः, एवं मा कर्मफलहेतुः भूः ।
ஜன்மத்திற்கு காரணமான நீ கர்மபலத்தில் ஆசை வைத்து கர்மத்தில் ஈடுபட்டால் அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு காரணமாகிவிடும். ஆகையால் கர்மபல ஹேதுவினிடத்தில் ஆசை வைக்காதே.
यदा हि कर्मफलतृष्णाप्रयुक्तः कर्मणि प्रवर्तते तदा कर्मफलस्यैव जन्मनो हेतुर्भवेत् ।
எப்பொழுது நீ கர்மபலத்தில் ஆசக்தி உடையவனாய் கர்மத்தில் பிர விர்த்திக்கிறாயோ அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு ஹேதுவாகும்.
यदि कर्मफलं नेष्यते, किं कर्मणा दुःखरूपेण ? इति मा ते तव सङ्गः अस्तु अकर्मणि अकरणे प्रीतिर्मा भूत् ॥ ४७ ॥
கர்மபலத்தில் இச்சையற்று கடினமான (துக்கரூபமான) கர்மத்தி னால் என்ன பிரயோஜனம் என்று கருதி அதில் ஈடுபடாமல் கர்மம் செய்யாமல் இருந்துவிடாதே.
यदि कर्मफलप्रयुक्तेन न कर्तव्यं कर्म, कथं तर्हि कर्तव्यमिति ; उच्यते —
கர்மபலத்தில் உள்ள இச்சையினால் ஏவப்பட்டு கர்மம் செய்யக் கூடாது எனில், பின் எவ்வாறு கர்மம் செய்யவேண்டுமெனில்? இதைப் பற்றி கூறுகிறேன்.
योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते ॥ ४८ ॥
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தனஞ்ஜய ।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோபூத்வா ஸமத்வம் யோக உச்யதே ॥ 48 ॥
योगस्थः सन् कुरु कर्माणि केवलमीश्वरार्थम् ; तत्रापि ‘ईश्वरो मे तुष्यतु’ इति सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
யோகத்திலேயே நிலைபெற்று (என்றால் சுக, துக்கங்களில் சமநிஷ்ட்டையுடன்) ஈஸ்வரனின் பொருட்டே கர்மம் செய். அதிலும் எனக்கு ஈஸ்வரன் பிரசன்னமாகி என்னை சந்தோஷப் படுதட்டும் என்ற பற்றையும் விட்டுவிட்டு செய்.
फलतृष्णाशून्येन क्रियमाणे कर्मणि सत्त्वशुद्धिजा ज्ञानप्राप्तिलक्षणा सिद्धिः, तद्विपर्ययजा असिद्धिः, तयोः सिद्ध्यसिद्ध्योः अपि समः तुल्यः भूत्वा कुरु कर्माणि ।
பலத்தில் இச்சையை விட்டு செய்யும் கர்மத்தினால் சித்த சுத்தி அடைந்து அதனால் (ஞானம்) பெறுதல் ஏற்பட்டாலும், அதற்கு மாறாக ஞானம் ஏற்படாவிட்டாலும் அவைகளிடத்தில் சித்தி, அசித்தி இரண்டிலும் ஸமபுத்தி வைத்து உன் கர்மத்தை செய்.
कोऽसौ योगः यत्रस्थः कुरु इति उक्तम् ? इदमेव तत् — सिद्ध्यसिद्ध्योः समत्वं योगः उच्यते ॥ ४८ ॥
எதில் நிலை பெற்று கர்மம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டதோ அந்த யோகம் யாது? எனில், இதுதான் அது. அது பலன் ஏற்படுவதிலும் ஏற்படாததிலும் உள்ள ஸமத்துவ பாவனை யோகம் எனப்படும்.
यत्पुनः समत्वबुद्धियुक्तमीश्वराराधनार्थं कर्मोक्तम् , एतस्मात्कर्मणः —
மேலும் எந்த ஸமத்துவ புத்தியுடன் ஈஸ்வரனுடைய ஆராதனத் தின் பொருட்டு செய்யப்படும்(நிஷ்காம) கர்மத்தைக் காட்டிலும்-
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥ ४९ ॥
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தனஞ்ஜய ।
புத்தௌ சரணமன்விச்ச க்ருபணா: பலஹேதவ: ॥ 49 ॥
दूरेण अतिविप्रकर्षेण अत्यन्तमेव हि अवरम् अधमं निकृष्टं कर्म फलार्थिना क्रियमाणं बुद्धियोगात् समत्वबुद्धियुक्तात् कर्मणः, जन्ममरणादिहेतुत्वात् हे धनञ्जय ।
ஹே! தனஞ்ஜய புத்தியோகத்தின் அபேக்ஷை என்றஸமத்துவ புத்தியுடன் கூடிய கர்மத்தைக் காட்டிலும் பல இச்சையுடன் காமியால் செய்யப்படும் கர்மமானது ஜன்மமரணங்களுக்குக் காரணமாய் இருப்பதால் மிகத்தாழ்ந்தது.
यत एवं ततः योगविषयायां बुद्धौ तत्परिपाकजायां वा साङ्ख्यबुद्धौ शरणम् आश्रयमभयप्राप्तिकारणम् अन्विच्छ प्रार्थयस्व, परमार्थज्ञानशरणो भवेत्यर्थः ।
ஆகையால் இவ்வாறு யோகபுத்தியிலும், அதன் பரிபாகத்தினா லும் உண்டாகும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்து அபயப்பிராப்தியின் (பயமற்றதன்மையின்) காரணத்தை அடைவதற்கு இச்சை கொள். பரமார்த்த ஞானத்தை சரணடை என்பதே இதன் அபிப்பிராயம் என்பது பொருள்.
ஏனெனில் பலத்தில் உள்ள இச்சையினால் தூண்டப்பட்டு தாழ்ந்த சகாமகர்மம் செய்பவன் க்ருபணன், தீனன் எனப்படுகிறான். ஹே! கார்கீ! எவனொருவன் அக்ஷர பிரஹ்மத்தை அறியாமல் இந்த லோகத்தை விட்டு செல்கிறானோ அவன் க்ருபணன், என்று சுருதியில் கூறப்படுகிறது.
समत्वबुद्धियुक्तः सन् स्वधर्ममनुतिष्ठन् यत्फलं प्राप्नोति तच्छृणु —
சமத்துவ புத்தியுடன் கூடி சுவதர்மத்தை அனுஷ்ட்டிப்பவன் எந்த பலத்தை அடைகிறான் என்பதைக் கேள்.
बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते ।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् ॥ ५० ॥
புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே ।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌசலம் ॥ 50 ॥
बुद्धियुक्तः कर्मसमत्वविषयया बुद्ध्या युक्तः बुद्धियुक्तः सः जहाति परित्यजति इह अस्मिन् लोके उभे सुकृतदुष्कृते पुण्यपापे सत्त्वशुद्धिज्ञानप्राप्तिद्वारेण यतः, तस्मात् समत्वबुद्धियोगाय युज्यस्व घटस्व ।
(बुद्धियुक्त: புத்தியுக்த:) என்றால் ஸமத்துவபுத்தியுடன் கூடியிருப்பவன் ஸமத்துவ புத்தியுடன் இருப்பவன் இந்த உலகில் புண்ய, பாபம் இரண்டையும் சித்த சுத்தியினால் ஏற்படும் ஞானப்பிராப்தி யினால் விடுகிறான். ஆகையால் சித்த சுத்தி அடைவதன் பொருட்டு (ஸமத்துவ புத்தியுடன்) யுத்தம் செய்.
योगो हि कर्मसु कौशलम् , स्वधर्माख्येषु कर्मसु वर्तमानस्य या सिद्ध्यासिद्ध्योः समत्वबुद्धिः ईश्वरार्पितचेतस्तया तत् कौशलं कुशलभावः ।
யோக: என்றால் கர்மம் செய்வதில் ஸாமர்த்தியமாகும் (குசலத் தன்மையாகும்) அந்த குசலத்தன்மை என்றால் ஸ்வதர்மரூப கர்மத்தை செய்யும் புருஷனுக்கு ஈஸ்வரார்ப்பண புத்தியினால் ஏற்படும் சித்த அசித்தி ரூப விஷயத்தில் (அடைவது அடையப் படாததில்) ஸமத்துவ பாவனையாகும்.
तद्धि कौशलं यत् बन्धनस्वभावान्यपि कर्माणि समत्वबुद्ध्या स्वभावात् निवर्तन्ते । तस्मात्समत्वबुद्धियुक्तो भव त्वम् ॥ ५० ॥
அதல்லவா ஸாமர்த்தியம், எதனால் ஸ்வாபாவமாகவே பந்தப் படுத்தும் கர்மமாய் இருந்தாலும், ஸமத்துவபுத்தியின் பிரபாவத்தால் னது ஸ்வபாவத்தை விடுகிறது. ஆகையால் நீ ஸமத்துவ புத்தியுடன் கூடியவனாய் இரு.
यस्मात् —
ஏனெனில்
कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः ।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम् ॥ ५१ ॥
கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மனீஷிண: ।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம் ॥ 51 ॥
कर्मजं फलं त्यक्त्वा इति व्यवहितेन सम्बन्धः ।
கர்மஜம் பலம் த்யக்த்வா) என்று இடையில் உள்ள (புத்தியுக்தா) என்ற பதத்தை தள்ளி தொடர்பு கொள்ள வேண்டும்.
इष्टानिष्टदेहप्राप्तिः कर्मजं फलं कर्मभ्यो जातं बुद्धियुक्ताः समत्वबुद्धियुक्ताः सन्तः हि यस्मात् फलं त्यक्त्वा परित्यज्य मनीषिणः ज्ञानिनो भूत्वा, जन्मबन्धविनिर्मुक्ताः जन्मैव बन्धः जन्मबन्धः तेन विनिर्मुक्ताः जीवन्त एव जन्मबन्धात् विनिर्मुक्ताः सन्तः, पदं परमं विष्णोः मोक्षाख्यं गच्छन्ति अनामयं सर्वोपद्रवरहितमित्यर्थः ।
கர்மத்தினால் விரும்பிய, விரும்பாத தேஹத்தின் அடைவு ஆகிய பலன் உண்டாகும், ஸமத்துவ புத்தியினால் பலனை விட்டு ஜன்மபந்தங்களிலிருந்து விடுபட்டவராய் மேலான மோக்ஷம் எனப்ப டும் அநாமயமாகிய விஷ்ணுபதத்தை ஜீவித்திருக்கும்பொழுதே ஞானிகள் அடைகின்றனர். அநாமயம் என்றால் எல்லா உபத்திர வங்களும் அற்றது என்பது பொருள்.
अथवा
‘बुद्धियोगाद्धनञ्जय’ (भ. गी. २ । ४९) इत्यारभ्य परमार्थदर्शनलक्षणैव सर्वतःसम्प्लुतोदकस्थानीया कर्मयोगजसत्त्वशुद्धिजनिता बुद्धिर्दर्शिता, साक्षात्सुकृतदुष्कृतप्रहाणादिहेतुत्वश्रवणात् ॥ ५१ ॥
அல்லது (बुद्धियोगाद्धनञ्जय புத்தியோகாத் தனஞ்ஜய) என்று ஆரம்பித்து எல்லா பக்கங்களிலும் நிறைந்த நீர்பெருக்கை உடைய ஏரியை ஒத்ததாகிய பரமார்த்த தர்சனமாகிய ஞானமானது (எது) கர்ம யோகத்தினால் சித்த சுத்தி அடைந்த புத்தியினால் உண்டாவதோ அது காண்பிக்கப்பட்டது. இந்த புத்தியானது புண்ணிய, பாபநாசத் திற்கு ஸாக்ஷாத்(நேரே) காரணமாக இருப்பது வர்ணிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறது.
योगानुष्ठानजनितसत्त्वशुद्धिजा बुद्धिः कदा प्राप्स्यते इत्युच्यते —
யோகானுஷ்டானத்தினால் உண்டான சித்தசுத்தியால் அடையப்படும் புத்தி எப்போது என்று கூறப்படுகிறது.
यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति ।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ॥ ५२ ॥
யதா தே மோஹகலிலம் புத்திவ்யர்திதரிஷ்யதி ।
ததா கந்தாஸி நிர்வேதம் ச்ரோதவ்யஸ்ய ச்ருதஸ்ய ச ॥ 52 ॥
यदा यस्मिन्काले ते तव मोहकलिलं मोहात्मकमविवेकरूपं कालुष्यं येन आत्मानात्मविवेकबोधं कलुषीकृत्य विषयं प्रत्यन्तःकरणं प्रवर्तते, तत् तव बुद्धिः व्यतितरिष्यति व्यतिक्रमिष्यति, अतिशुद्धभावमापत्स्यते इत्यर्थः ।
எப்பொழுது உன்னுடைய மோஹாத்மரூபமான அவிவேகத்தால் ஆத்மாஅநாத்மா விவேக ஞானமானது கலங்கப்பட்ட பொழுது அந்தக் கரணமானது விவேக ஞானத்தால் விஷயங்களைக் குறித்து பிரவிர்த் தியைத் தடை செய்யுமோ அப்பொழுது (கடந்தபின்) உன்னுடைய புத்தியானது மிகுந்த சுத்த பாவத்தை அடைகிறது என்று அர்த்தம்.
तदा तस्मिन् काले गन्तासि प्राप्स्यसि निर्वेदं वैराग्यं श्रोतव्यस्य श्रुतस्य च, तदा श्रोतव्यं श्रुतं च ते निष्फलं प्रतिभातीत्यभिप्रायः ॥ ५२ ॥
அப்பொழுது நீ கேட்கவேண்டியதிலும், கேட்டதிலும் வைராக் கியத்தை அடைவாய். மேலும் வேதாந்த சாஸ்திரத்தைத் தவிர மற்ற வைகளில் கேட்கவேண்டியது, கேட்டதும் பிரயோஜனமற்றதாகும் என்பது அபிப்பிராயம்.
मोहकलिलात्ययद्वारेण लब्धात्मविवेकजप्रज्ञः कदा कर्मयोगजं फलं परमार्थयोगमवाप्स्यामीति चेत् , तत् शृणु —
மோஹாத்ரூபமான அவித்தியா மலினமற்றதாகி ஆத்ம விவேகத்தினால் உண்டான விவேகத்தை அடைந்தவன் கர்ம யோகத்தின் பலரூபமான பரமார்த்த யோகத்தை (ஞான யோகத்தை) எப்பொழுது அடைவேன்? என்றால் அதைக்கேள்.
श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला ।
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ॥ ५३ ॥
ச்ருதிவிப்ரதிபன்னா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா ।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி ॥ 53 ॥
श्रुतिविप्रतिपन्ना अनेकसाध्यसाधनसम्बन्धप्रकाशनश्रुतिभिः श्रवणैः प्रवृत्तिनिवृत्तिलक्षणैः विप्रतिपन्ना नानाप्रतिपन्ना विक्षिप्ता सती ते तव बुद्धिः यदि यस्मिन् काले स्थास्यति स्थिरीभूता भविष्यति निश्चला विक्षेपचलनवर्जिता सती समाधौ, समाधीयते चित्तमस्मिन्निति समाधिः आत्मा, तस्मिन् आत्मनि इत्येतत् । अचला तत्रापि विकल्पवर्जिता इत्येतत् । बुद्धिः अन्तःकरणम् ।
அநேக சாத்திய, சாதன மேலும் அவற்றின் சம்பந்தம் இவை களைப் பிரகாசப்படுத்துகின்ற (தெரியப்படுத்துகின்ற) சுருதிகளின் சிரவணங்களினால், பலவகையாய் விக்ஷி ப்தமடைந்த (கலங்கிய) உன் புத்தியானது எப்பொழுது ஸ்திரமாய் நிச்சலமாய் (விக்ஷேபமற்று) சித்தத்தை எதில் நிலைநிறுத்துகிறோமோ அது சமாதி. அதுவே ஆத்மா. (நிச்சலா) அந்த ஆத்மாவில் நிலைபெறுமோ அப்போது என்று அறியவேண்டும். (அசலா) என்றால் இந்த ஸ்திரநிலையி லிருந்து விகல்பம் அற்றது என்று பொருள்.
तदा तस्मिन्काले योगम् अवाप्स्यसि विवेकप्रज्ञां समाधिं प्राप्स्यसि ॥ ५३ ॥
அப்பொழுது யோகத்தை அடைவாய் என்றால் விவேகத்தினால் உண்டான சமாதி நிஷ்ட்டையை அடைவாய் என்று பொருள்.
प्रश्नबीजं प्रतिलभ्य अर्जुन उवाच लब्धसमाधिप्रज्ञस्य लक्षणबुभुत्सया —
பிரஸ்னத்தின் காரணத்தை அறிந்த அர்ச்சுனன் ஸமாதிபி ரக்ஞை அடைந்தவனுடைய லக்ஷணத்தை அறிவதற்கு இச்சை உடையவனாய் கேட்கிறான்.
अर्जुन उवाच —
அர்ஜூன் உவாச
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव ।
स्थितधीः किं पृभाषेत किमासीत व्रजेत किम् ॥ ५४ ॥
ஸ்திதப்ரக்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ ।
ஸ்திததீ:கிம்ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜே கிம் ॥ 54 ॥
स्थिता प्रतिष्ठिता ‘अहमस्मि परं ब्रह्म’ इति प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः तस्य स्थितप्रज्ञस्य का भाषा किं भाषणं वचनं कथमसौ परैर्भाष्यते समाधिस्थस्य समाधौ स्थितस्य हे केशव ।
எவருடைய புத்தியானது நான் பரப்ரஹ்மமாகிய பரமாத்மா வாகவே இருக்கிறேன் என்று (சமாதியில்) ஸ்திரமாக நிலைபெற்றி ருக்கிறதோ அவன் ஸ்திதபிரக்ஞன். கேசவா. இவ்வாறு சமாதியில் நிலைத்துள்ள ஸ்திதப்ரக்ஞன் எவ்வாறு பேசப்படுகிறான்? எவ்வாறு இவன் பிறரால் பேசப்படுகிறான்.?
स्थितधीः स्थितप्रज्ञः स्वयं वा किं प्रभाषेत । किम् आसीत व्रजेत किम् आसनं व्रजनं वा तस्य कथमित्यर्थः ।
ஸ்திததீ:) என்றால் ஸ்திதப்ரக்ஞன். அவன் தானாக எவ்வாறு பேசுகி றான். எவ்வாறு உட்காருவான்? எவ்வாறு செல்வான்? என்றால் அவனு டைய உட்காருதல், செல்லுதல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பொருள்.
स्थितप्रज्ञस्य लक्षणमनेन श्लोकेन पृच्छ्यते ॥ ५४ ॥
இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஸ்திதப்பிரக்ஞனுடைய லக்ஷணத்தைக் கேட்கிறான்.
यो ह्यादित एव संन्यस्य कर्माणि ज्ञानयोगनिष्ठायां प्रवृत्तः, यश्च कर्मयोगेन, तयोः ‘प्रजहाति’ इत्यारभ्य आ अध्यायपरिसमाप्तेः स्थितप्रज्ञलक्षणं साधनं चोपदिश्यते ।
எவனொருவன் ஆரம்பத்திலேயே கர்மங்களை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையில் பிரவிருத்திருக்கின்றானோ, கர்மத்தினால் ஞான நிஷ்டையை அடைய விரும்புகிறா எவன் இந்த இருவிதமாயுள்ளவர்க ளுக்கும் முறையே ஸ்திதப்ரக்ஞனுடைய லக்ஷணத்தையும், ஸாதனத்தை யும் (பிரஜாஹாதி) என்பது முதலிய சுலோகத்தில் ஆரம்பித்து இந்த அத்தி யாயம் முடியும் வரை உபதேசம் செய்யப்படுகிறது. (இங்கு கூறப்போகும் விஷயங்கள் ஞானிக்கு லக்ஷணம் ஞானியாக விரும்பும் ஸாதகனுக்கு இவை ப்ரயத்னத்தினால் பெறவேண்டிய லக்ஷக்ஷ்யங்கள் என்பது கருத்து.)
सर्वत्रैव हि अध्यात्मशास्त्रे कृतार्थलक्षणानि यानि तान्येव साधनानि उपदिश्यन्ते, यत्नसाध्यत्वात् । यानि यत्नसाध्यानि साधनानि लक्षणानि च भवन्ति तानि ।
அத்யாத்ம சாஸ்திரத்தில் எங்கும் கிருதார்த்தனுக்கு (ஸ்திதப்ரக் ஞனுக்கு) எந்த லக்ஷணங்கள் கூறப்பட்டதோ அவை அது முயற்சியி னால் சாத்தியமாவதால் (மற்றவர்களுக்கு) ஸாதகர்களுக்கு ஸாதனரூ பமாக உபதேசிக்கப்படுகின்றன. எவைகள் முயற்சியினால் சாதிக்கக் கூடிய சாதனங்கள் ஆகிறதோ அவைகள் (சித்தபுருஷர்களுக்கு ஸ்வாபாவிக) லக்ஷணங்களாகின்றன.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥ ५५ ॥
ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான்பார்த மனோகதான் ।
ஆத்மன்யேவாத்மனா துஷ்ட: ஸ்திதப்ரக்ஞஸ்ததோச்யதே ॥ 55 ॥
प्रजहाति प्रकर्षेण जहाति परित्यजति यदा यस्मिन्काले सर्वान् समस्तान् कामान् इच्छाभेदान् हे पार्थ, मनोगतान् मनसि प्रविष्टान् हृदि प्रविष्टान् ।
ஹே! பார்த்த எப்பொழுது மனிதன் மனதில் இருக்கின்ற, இருதயத்தில் புகுந்துள்ள எல்லா காமனைகளான இச்சாபேதங் களையும் பூர்ணமாக விட்டொழிக்கின்றானோ
सर्वकामपरित्यागे तुष्टिकारणाभावात् शरीरधारणनिमित्तशेषे च सति उन्मत्तप्रमत्तस्येव प्रवृत्तिः प्राप्ता, इत्यत उच्यते —
எல்லாக்காமனைகளையும் தியாகம் செய்வதால் ஸந்தோஷத் திற்கு காரணம் இல்லாமல் இருப்பதாலும் சரீரதாரணத்திற்கு ஹேதுவான பிராப்தத்தின் அபாவமானது ஏற்படாததாலும் உன்மத்த பிரமத்தனுடைய (புத்தி ஸ்வாதீனமற்றவனுடைய) (நடவடிக்கைகள்) செயல்கள் போல் ஏற்படுமே எனில் இவ்வாறு கூறப்படுகிறது.
आत्मन्येव प्रत्यगात्मस्वरूपे एव आत्मना स्वेनैव बाह्यलाभनिरपेक्षः तुष्टः परमार्थदर्शनामृतरसलाभेन अन्यस्मादलंप्रत्ययवान् स्थितप्रज्ञः स्थिता प्रतिष्ठिता आत्मानात्मविवेकजा प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः विद्वान् तदा उच्यते ।
ப்ரத்யக் ஆத்மஸ்வரூபத்திலேயே மற்றபாஹ்ய லாபங் களை இச்சிக்காமல் தனக்குத்தானே ஸந்துஷ்டனாய் பரமார்த்த தர்சன அம்ருதரஸ லாபத்தினாலே மற்றஅநாத்ம விஷயங்களில் போதும் என்றபாவனை உடையவன் ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான். ஆத்மாநாத்மா விவேகதத்தினால் உண்டான புத்தியானது ஸ்திரமாக எவனுக்கு இருக்கிறதோ அவன் ஸ்திதப்ரக்ஞன். அந்த ஸ்திதப்ரக் ஞன் ஞானி எனப்படுகிறான்.
त्यक्तपुत्रवित्तलोकैषणः संन्यासी आत्माराम आत्मक्रीडः स्थितप्रज्ञ इत्यर्थः ॥ ५५ ॥
புத்திரன், தனம், லோகம் என்றஈஷணத்திரயங்களை (பற்றுதல்கள் மூன்றையும்) விட்ட ஸந்நியாசி ஆத்மாராமன், ஆத்மக்ரீடன், ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான்.
किञ्च —
மேலும்
दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः ।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते ॥ ५६ ॥
து:கேஷ்வனுத்விக்னமனா: ஸுகேஷூ விகதஸ்ப்ருஹ: ।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே ॥ 56 ॥
दुःखेषु आध्यात्मिकादिषु प्राप्तेषु न उद्विग्नं न प्रक्षुभितं दुःखप्राप्तौ मनो यस्य सोऽयम् अनुद्विग्नमनाः ।
ஆத்யாத்மிக முதலான மூன்று விதமான துக்கம் அடையப்பட்ட பொழுது எவனது மனமானது கலங்காமல் இருக்கிறதோ அவன் (அனுத்விக்னமனா:) எனப்படுகிறான்.
तथा सुखेषु प्राप्तेषु विगता स्पृहा तृष्णा यस्य, न अग्निरिव इन्धनाद्याधाने सुखान्यनु विवर्धते स विगतस्पृहः ।
அவ்வாறேவிறகு முதலியவைகள் சேர்க்கும்பொழுது அக்கினியா னது மேலும், மேலும் வளர்வது போல சுகங்கள் அடைந்தபொழுது ஆசை யானது மேலும் மேலும் வளரச் செய்யாமல் இருப்பவனே விகதஸ்ப்ருஹ:
वीतरागभयक्रोधः रागश्च भयं च क्रोधश्च वीता विगता यस्मात् स वीतरागभयक्रोधः । स्थितधीः स्थितप्रज्ञो मुनिः संन्यासी तदा उच्यते ॥ ५६ ॥
ராகம் (ஆசை), பயம், க்ரோதம் இவைகளின் நீக்கம் எவனுக்கு இருக்கிறதோ அவன் (வீதராகபயக்ரோத:) ராகம், பயம், க்ரோதம் அற்றஸ்திரமான புத்தியுடையவன் ஸ்திதப்ரக்ஞன். அப்பொழுது அவன் (முனி:)என்றும் (ஸந்நியாஸி) என்றும் கூறப்படுகிறான்.
किञ्च —
மேலும்
यः सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम् ।
नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ५७ ॥
ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய சுபாசுபம் ।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 57 ॥
यः मुनिः सर्वत्र देहजीवितादिष्वपि अनभिस्नेहः अभिस्नेहवर्जितः तत्तत् प्राप्य शुभाशुभं तत्तत् शुभं अशुभं वा लब्ध्वा न अभिनन्दति न द्वेष्टि शुभं प्राप्य न तुष्यति न हृष्यति, अशुभं च प्राप्य न द्वेष्टि इत्यर्थः ।
முனிவனானவன் எங்கும் தேஹ, ஜீவிதங்களிலும் பற்றற்று சுபாசுபங்கள் அடைந்தபொழுது சந்தோஷமோ, துவேஷமோ கொள்ளுவதில்லை. சுபத்தை அடைந்ததால் ஸந்தோஷப் படுவதில்லை. மேலும் அசுபத்தை அடைந்தால் துவேஷம் கொள்வதில்லை என்பது பொருள்.
तस्य एवं हर्षविषादवर्जितस्य विवेकजा प्रज्ञा प्रतिष्ठिता भवति ॥ ५७ ॥
அவனுக்கு (ஸ்திதப்பிரக்ஞனுக்கு) இவ்வாறு சந்தோஷம், துவேஷம் அற்ற விவேகத்தினால் உண்டான பிரக்ஞையானது ஸ்திரமாகிறது.
किञ्च—
மேலும்
यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ५८ ॥
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோஅங்காநீவ ஸர்வச: ।
இந்த்ரியாணீந்திரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 58 ॥
यदा संहरते सम्यगुपसंहरते च अयं ज्ञाननिष्ठायां प्रवृत्तो यतिः कूर्मः अङ्गानि इव यथा कूर्मः भयात् स्वान्यङ्गानि उपसंहरति सर्वशः सर्वतः, एवं ज्ञाननिष्ठः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः सर्वविषयेभ्यः उपसंहरते । तस्य प्रज्ञा प्रतिष्ठिता इत्युक्तार्थं वाक्यम् ॥ ५८ ॥
ஆமையானது எவ்வாறு பயத்தினால் எல்லாப்பக்கங்களிலும் தன் அங்கங்களை எல்லாம் உள் இழுத்துக்கொள்கிறதோ, அவ்வாறு ஞானநிஷ்ட்டையில் ஈடுபட்ட ஸந்நியாசியான ஞானநிஷ்ட்டன் இந்திரியங்களை எல்லா விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாக இருக்கிறது.
तत्र विषयाननाहरतः आतुरस्यापि इन्द्रियाणि कूर्माङ्गानीव संह्रियन्ते न तु तद्विषयो रागः स कथं संह्रियते इति उच्यते —
விஷயங்களில் ஈடுபாடு அற்றநோயாளிக்கும் இந்திரியங்கள் ஆமையின் அங்கங்கள்போல் ஒடுங்குகின்றன. ஆனாலும் ராகமானது நீங்கவில்லை. அந்த ஆசை எவ்வாறு ஒடுங்கும் என்று கூறப் படுகிறது
विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः ।
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ॥ ५९ ॥
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹின: ।
ரஸவர்ஜம் ரஸோஅப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே ॥ 59 ॥
यद्यपि विषयाः विषयोपलक्षितानि विषयशब्दवाच्यानि इन्द्रियाणि निराहारस्य अनाह्रियमाणविषयस्य कष्टे तपसि स्थितस्य मूर्खस्यापि विनिवर्तन्ते देहिनो देहवतः रसवर्जं रसो रागो विषयेषु यः तं वर्जयित्वा ।
விஷயங்களைக் கவராமல் மிகக்கடினமான தபஸில் இருக்கும் தேஹாபிமானியான அக்ஞானிக்கு விஷயம் என்ற சப்தவாச்யமான இந்திரியங்கள் அல்லது சப்தாதி விஷயங்கள் நிவர்த்தி ஆகின்றன. ஆனால் விஷயங்களில் உள்ள ஆசக்தியைத் தவிர (ஆனால் அந்த விஷயங்களில் உள்ள ரசம் அதாவது ஆசக்தியானது நிவர்த்தி ஆவதில்லை)
रसशब्दो रागे प्रसिद्धः, स्वरसेन प्रवृत्तः रसिकः रसज्ञः, इत्यादिदर्शनात् ।
ரச சப்தமானது ராகம் ஆஸக்தி என்றஅர்த்தத்தில் பிரஸித்தமா (கும். ஏனெனில்) स्वरसेन प्रवृत्तो रसिको रसज्ञ: (ஸ்வரகேன ப்ரவிர்த்தோ ரசிகோ ரசக்ஞ:) ஸ்வரசமாக பிரவிர்த்தித்தவன் ரசிகன், ரசக்ஞன் என்று கூறப்படும் ப்ரயோக வாக்கியங்களின் (காணப்படுவதால்)
सोऽपि रसो रञ्जनारूपः सूक्ष्मः अस्य यतेः परं परमार्थतत्त्वं ब्रह्म दृष्ट्वा उपलभ्य ‘अहमेव तत्’ इति वर्तमानस्य निवर्तते निर्बीजं विषयविज्ञानं सम्पद्यते इत्यर्थः ।
அந்த ராகாத்மகமான சூக்ஷ்ம ஆஸக்தியும் அந்த யதிக்கு பரமார்த்த தத்துவரூபமான பிரஹ்மமானது பிரத்யக்ஷம் ஆகும் பொழுது நிவர்த்தியாகிறது. நானே அதுவாக இருக்கிறேன் என்ற திடக் ஞானம் (திடபாவம்) ஏற்படும்பொழுது விஷய விக்ஞானமானது நிர்பீஜ மா கிறது. (காரணமற்றுப்போகிறது)
न असति सम्यग्दर्शने रसस्य उच्छेदः । तस्मात् सम्यग्दर्शनात्मिकायाः प्रज्ञायाः स्थैर्यं कर्तव्यमित्यभिप्रायः ॥ ५९ ॥
ஸம்யக் தர்சனம் இல்லாதவனுக்கு ராகத்துவேஷத்தினுடைய மூல மானது நாசம் அடைவது இல்லை. ஆகையால் ஸம்யக்தர் சனமாகிய பிரக்ஞையை (யதார்த்த புத்தியை) ஸ்திரப்படுத்தவேண்டும் என்பது அபிப்பிராயம்.
सम्यग्दर्शनलक्षणप्रज्ञास्थैर्यं चिकीर्षता आदौ इन्द्रियाणि स्ववशे स्थापयितव्यानि, यस्मात्तदनवस्थापने दोषमाह —
யதார்த்த ஞானரூப புத்தியை ஸ்திரப்படுத்துவதில் இச்சை உள்ள வன் முதலில் இந்திரியங்களைத் தன்வசப்படுத்த வேண்டும். ஏனெனில் அதை வசப்படுத்தாவிட்டால் ஏற்படும் தோஷத்தைக் கூறுகிறார்.
यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः ॥ ६० ॥
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித: ।
இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி ப்ரஸபம் மன: ॥ 60 ॥
यततः प्रयत्नं कुर्वतः हि यस्मात् कौन्तेय पुरुषस्य विपश्चितः मेधाविनः अपि इति व्यवहितेन सम्बन्धः । इन्द्रियाणि प्रमाथीनि प्रमथनशीलानि विषयाभिमुखं हि पुरुषं विक्षोभयन्ति आकुलीकुर्वन्ति, आकुलीकृत्य च हरन्ति प्रसभं प्रसह्य प्रकाशमेव पश्यतो विवेकविज्ञानयुक्तं मनः ॥ ६० ॥
ஹே கௌந்தேய! முயற்சியுடன் கூடிய விசாரசீலர்களான, புத்திமான்களான மேதாவிகளையும் மயங்கச்செய்யும் தன்மையுடைய இந்திரியங்கள் அந்த விஷயத்தில் ஈடுபடும் புருஷர்களை குழம்பச் செய்கின்றன. மேலும் வ்யாகுலம் செய்த பின்னும் (விஷயங்களின் கெடுதிகளைப்) பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே வித்வான்களின் விவேக ஞானமுடைய மனதை கவர்ந்து இழுத்து விடுகிறது.
यतः तस्मात् —
இவ்வாறு இருப்பதால்
तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः ।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥
தானி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர: ।
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 61 ॥
तानि सर्वाणि संयम्य संयमनं वशीकरणं कृत्वा युक्तः समाहितः सन् आसीत मत्परः अहं वासुदेवः सर्वप्रत्यगात्मा परो यस्य सः मत्परः, ‘न अन्योऽहं तस्मात्’ इति आसीत इत्यर्थः ।
அந்த எல்லா இந்திரியங்களையும் வசப்படுத்தி மனதை (ஸமநி லையில் வைத்து என்னிலேயே) ஈடுபட்டு இருக்கவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாகிய வாசுதேவனாகிய நான் நான் அந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறல்ல. இந்த பிரகார மாக நான் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் அபின்னமானவன் என்பது பொருள்.
एवमासीनस्य यतेः वशे हि यस्य इन्द्रियाणि वर्तन्ते अभ्यासबलात् तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥
இவ்வாறு இருக்கும் யதிக்கு(சந்நியாசிக்கு) அப்பியாச பலத்தால் இந்திரியங்கள் வசப்பட்டிருப்பதால் அவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாய் இருக்கும்.
अथेदानीं पराभविष्यतः सर्वानर्थमूलमिदमुच्यते —
பிறகு இப்பொழுது (இந்திரியங்களை வசப்படுத்தமுடியாத) அழிவை அடைகின்றவனுடைய எல்லா அனர்த்தங்களின் காரணத்தைக் கூறுகிறார்.
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते ।
सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते ॥ ६२ ॥
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே ।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோஅபிஜாயதே ॥ 62 ॥
ध्यायतः चिन्तयतः विषयान् शब्दादीन् विषयविशेषान् आलोचयतः पुंसः पुरुषस्य सङ्गः आसक्तिः प्रीतिः तेषु विषयेषु उपजायते उत्पद्यते । सङ्गात् प्रीतेः सञ्जायते समुत्पद्यते कामः तृष्णा । कामात् कुतश्चित् प्रतिहतात् क्रोधः अभिजायते ॥ ६२ ॥
எப்பொழுதும் சப்தாதி விஷயங்களிலேயே சிந்தனை செலுத்துபவ னுக்கு அந்த விஷயங்களில் ஆஸக்தி அதாவது பிரீதி உண்டாகிறது. அந்த பிரீதியினால் காமமானது உண்டாகிறது. அந்த காமத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தால் தடை ஏற்பட்டால் அதிலிருந்து கோபமானது ஏற்படுகிறது.
क्रोधाद्भवति संमोहः संमोहात्स्मृतिविभ्रमः ।
स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ॥ ६३ ॥
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம: ।
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணச்யதி ॥ 63 ॥
क्रोधात् भवति संमोहः अविवेकः कार्याकार्यविषयः । क्रुद्धो हि संमूढः सन् गुरुमप्याक्रोशति ।
க்ரோதத்திலிருந்து ஸம்மோஹமானது உண்டாகிறது. ஸம்மோ ஹம் என்றால் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்பதில் அவிவேகம். க்ரோதத்தினால் மூடன் குருவையும் பழிக்கின்றான்.
संमोहात् स्मृतिविभ्रमः शास्त्राचार्योपदेशाहितसंस्कारजनितायाः स्मृतेः स्यात् विभ्रमो भ्रंशः स्मृत्युत्पत्तिनिमित्तप्राप्तौ अनुत्पत्तिः ।
ஸ்மமோஹத்திலிருந்து (மயக்கத்திலிருந்து) (स्मृतिविभ्रमः ஸ்மிருதி விப்ரம:) ஏற்படுகிறது. ஸ்மிருதி விப்ரம: என்றால் சாஸ்திர குரு உபதே சத்தினால் ஏற்படும் ஸம்ஸ்காரத்தினால் தர்மங்களின் நினைவுக்கு ஏற்படும் மயக்கம் உண்டாகிறது. ஸ்மிருதியின் உத்பத்திக்கு காரணம் இருந்தாலும் அது (நினைவு) உண்டாகாத நிலை.
ततः स्मृतिभ्रंशात् बुद्धिनाशः बुद्धेर्नाशः । कार्याकार्यविषयविवेकायोग्यता अन्तःकरणस्य बुद्धेर्नाश उच्यते ।
அந்த நினைவு தவறுவதால் புத்தியின் நாசம் ஏற்படுகிறது. அந் தக்கரணத்தில் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ற விஷயத் தில் விவேக யோக்யதை இன்மையே புத்திநாசம் எனப்படுகிறது.
बुद्धिनाशात् प्रणश्यति । तावदेव हि पुरुषः यावदन्तःकरणं तदीयं कार्याकार्यविषयविवेकयोग्यम् । तदयोग्यत्वे नष्ट एव पुरुषो भवति ।
புத்திநாசத்தினால் அழிந்து விடுகிறான். அந்தக்கரணத்திற்கு எவ்வளவு காலம் மனிதனுடைய அந்தக்கரணம் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்றவிஷயத்தில் பிரித்து அறியக்கூடிய சாமர்த்தி யம் உள்ளதோ அவ்வளவு காலம் மட்டுமே மனிதன். இந்த விவேக புத்தியானது இல்லாவிடில் அவன் அழிந்தவனாகின்றான்.
अतः तस्यान्तःकरणस्य बुद्धेर्नाशात् प्रणश्यति पुरुषार्थायोग्यो भवतीत्यर्थः ॥ ६३ ॥
ஆகையால் அவனுடைய அந்தக்கரண புத்திநாசத்தினால் புருஷார்த்தத்தில் யோக்கியதை அற்றுப் போகிறான்.
सर्वानर्थस्य मूलमुक्तं विषयाभिध्यानम् । अथ इदानीं मोक्षकारणमिदमुच्यते —
எல்லா அனர்த்தத்திற்கும் காரணம் விஷய சிந்தனையே. பின் இப்பொழுது மோக்ஷத்தின் காரணத்தை கூறுகிறார்.
रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् ।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ॥ ६४ ॥
ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயானிந்த்ரியைச்சரன் ।
ஆத்மவச்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி ॥ 64 ॥
रागद्वेषवियुक्तैः रागश्च द्वेषश्च रागद्वेषौ, तत्पुरःसरा हि इन्द्रियाणां प्रवृत्तिः स्वाभाविकी, तत्र यो मुमुक्षुः भवति सः ताभ्यां वियुक्तैः श्रोत्रादिभिः इन्द्रियैः विषयान् अवर्जनीयान् चरन् उपलभमानः आत्मवश्यैः आत्मनः वश्यानि वशीभूतानि इन्द्रियाणि तैः आत्मवश्यैः विधेयात्मा इच्छातः विधेयः आत्मा अन्तःकरणं यस्य सः अयं प्रसादम् अधिगच्छति । प्रसादः प्रसन्नता स्वास्थ्यम् ॥ ६४ ॥
ராகத்தையும், துவேஷத்தையும் ராகதுவேஷம் என்கிறோம். ராகதுவேஷத்தை முன்னிட்டுத்தான் ஸ்வபாவமாக இந்திரியங்களின் பிரவிர்த்தி ஏற்படுகிறது. ஆனால் முமூக்ஷுவானவன் அந்தக் கரணத்தை ஸ்வாதீனப்படுத்தி அந்தகரணத்தின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு வசப்படுத்துகிறானோ அவனுக்கு ராகதுவேஷம் அற்று தன்னுடைய வசப்பட்ட சுரோத்திரம் முதலிய இந்திரியங்களால் தானாகவே வரும் விஷயங்களை கிரஹித்து அதைப் பிரஸாதமாக அடைகிறான். பிரசன்ன தன்மையும், (தெளிவு பெற்றதன்மையும்) தன்னிலையிலேயே நிலைபெற்றதன்மையும் பிரசாதமாகும்.
प्रसादे सति किं स्यात् इत्युच्यते —
பிரசாதத்தன்மை அடைந்ததால் என்ன உண்டாகும்? என்று கூறப்படுகிறது.
प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते ।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते ॥ ६५ ॥
ப்ரஸாதே ஸர்வது:கானாம் ஹானிரஸ்யோபஜாயதே ।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாசு புத்தி: பர்யவதிஷ்டதே ॥ 65 ॥
प्रसादे सर्वदुःखानाम् आध्यात्मिकादीनां हानिः विनाशः अस्य यतेः उपजायते ।
யதிக்கு பிரசாதத்தினால் ஆத்யாத்மிக முதலிய துக்கங்கள் நாசம் அடைகின்றன.
किञ्च — प्रसन्नचेतसः स्वस्थान्तःकरणस्य हि यस्मात् आशु शीघ्रं बुद्धिः पर्यवतिष्ठते आकाशमिव परि समन्तात् अवतिष्ठते, आत्मस्वरूपेणैव निश्चलीभवतीत्यर्थः ॥
பிரசன்ன சேதச:) என்றால் தெளிவடைந்த அந்தக்கரணமுடைய புருஷனுடைய புத்தியானது சீக்கிரமாகவே ஆகாயம்போல் எங்கும் நிலைபெற்றிருக்கின்றது. கேவலம் ஆத்மஸ்வரூபமாகவே நிச்சலமாக (சலனமற்று) இருக்கிறது என்று பொருள்.
एवं प्रसन्नचेतसः अवस्थितबुद्धेः कृतकृत्यता यतः, तस्मात् रागद्वेषवियुक्तैः इन्द्रियैः शास्त्राविरुद्धेषु अवर्जनीयेषु युक्तः समाचरेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥
இவ்வாறு தெளிவும், ஸ்திர புத்தியும் உள்ளவனுக்கு கிருதகிருத் தியத் தன்மை உண்டாகிறது. ஆகையால் ஸாதகன் ராகதுவேஷம் அற்று இந்திரியங்களால் சாஸ்திரத்திற்கு விருத்தமாகாத தவிர்க்க முடியாத விஷயங்களை (கைக்கொள்ளவேண்டும்) அனுஸரிக்கவேண்டும்.
सेयं प्रसन्नता स्तूयते —
இப்பேற்பட்ட பிரஸன்ன தன்மை அதாவது மனத்தெளிவு போற்றப்படுகிறது.
नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना ।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम् ॥ ६६ ॥
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவனா ।
ந சாபாவயத: சாந்திரசாந்தஸ்ய குத: ஸுகம் ॥ 66 ॥
नास्ति न विद्यते न भवतीत्यर्थः, बुद्धिः आत्मस्वरूपविषया अयुक्तस्य असमाहितान्तःकरणस्य । न च अस्ति अयुक्तस्य भावना आत्मज्ञानाभिनिवेशः ।
(அயுக்தஸ்ய) என்றால் எவனுக்கு அந்தக்கரணமானது அமைதி அடையவில்லையோ அப்படிப்பட்ட அயுக்தபுருஷனுக்கு அதாவது ஆத்மாவை அறியவேண்டும் என்ற அபினிவேசமும் (अयुक्तस्य ஆவேசமும்) உண்டாகாது.
तथा — न च अस्ति अभावयतः आत्मज्ञानाभिनिवेशमकुर्वतः शान्तिः उपशमः ।
அவ்வாறு பாவனை செய்யாதவன் என்றால் ஆத்மஞானத்திற்கான ஸாதனையில் பிரீதியுடன் கூடிய முயற்சியானது இல்லாவிடில் சாந்தி ஏற் படுவதில்லை. அதாவது உபரமமும் (ஒழிவும்) உண்டாவதில்லை.
अशान्तस्य कुतः सुखम् ? इन्द्रियाणां हि विषयसेवातृष्णातः निवृत्तिर्या तत्सुखम् , न विषयविषया तृष्णा । दुःखमेव हि सा ।
சாந்தி அற்றவனுக்கு ஸுகம் ஏது? ஏனெனில் விஷயத்திலேயே ஈடுபடுவதில் மிகுந்த ஆசையிலிருந்து இந்திரியங்களுக்கு நிவிர்த்தி ஏற்படுவதே ஸுகம். விஷயத்துடன் கூடிய ஆசையானது ஒருபொழுதும் ஸுகத்தை தராது, அது எப்பொழுதும் துக்கமே.
न तृष्णायां सत्यां सुखस्य गन्धमात्रमप्युपपद्यते इत्यर्थः ॥ ६६ ॥
பேராசை இருக்கும்பொழுது வாசனைக்கு கூட(சிறிதளவு கூட) ஸுகமானது உண்டாகாது என்பது பொருள்.
अयुक्तस्य कस्माद्बुद्धिर्नास्ति इत्युच्यते —
அமைதியும் அடக்கமும் இல்லாதவனுக்கு ஏன் ஞானம் உண்டா வதில்லை எனில் கூறப்படுகிறது.
इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ॥ ६७ ॥
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யன்மனோஅனு விதீயதே ।
ததஸ்ய ஹரதி ப்ரக்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி ॥ 67 ॥
इन्द्रियाणां हि यस्मात् चरतां स्वस्वविषयेषु प्रवर्तमानानां यत् मनः अनुविधीयते अनुप्रवर्तते तत् इन्द्रियविषयविकल्पनेन प्रवृत्तं मनः अस्य यतेः हरति प्रज्ञाम् आत्मानात्मविवेकजां नाशयति ।
ஏனெனில் தன்தன் விஷயங்களில் பிரவிர்த்திக்கின்ற இந்திரி யங்களை மனமானது பின்தொடர்ந்து செல்லுகின்றது. அந்த விஷயங்களை விபாகபூர்வகமாக கிரஹிக்கின்றமனமானது அந்த யதியினுடைய ஆத்மானாத்ம விவேகத்தால் உண்டான ஞானத்தை (பிரக்ஞையை) நாசம் செய்கிறது.
कथम् ? वायुः नावमिव अम्भसि उदके जिगमिषतां मार्गादुद्धृत्य उन्मार्गे यथा वायुः नावं प्रवर्तयति, एवमात्मविषयां प्रज्ञां हृत्वा मनो विषयविषयां करोति ॥ ६७ ॥
எவ்வாறெனில், காற்றானது தண்ணீரில் செல்லும் படகை சென்று அடையவேண்டிய மார்க்கத்திலிருந்து எதிர்மார்க்கத்தில் செலுத்துகிறதோ அவ்வாறு ஆத்மவிஷயத்தில் உள்ள பிரக்ஞையை நாசம் செய்து மனமானது விஷயங்களைக் கவரும்படி செய்கிறது.
60வது ச்லோகம் யததோஹ்யபி ஆரம்பித்து சொல்லிய (இந்திரியங்களின் வலிமை) விஷயத்தில் அநேகவிதமான பொருத்தத்தைக் கூறி விளக்கி, அதனை நிரூபித்து இப்பொழுது முடிவு செய்கிறார்.
तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥
தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதானி ஸர்வச: ।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா ॥ 68 ॥
इन्द्रियाणां प्रवृत्तौ दोष उपपादितो यस्मात् , तस्मात् यस्य यतेः हे महाबाहो, निगृहीतानि सर्वशः सर्वप्रकारैः मानसादिभेदैः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः शब्दादिभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥
இந்திரியங்களின் பிரவிர்த்தியினால் தோஷமானது உணர்த்தப் பட்டதோ, அதனால் ஹே! மஹாபாஹோ! எந்த யதியினுடைய (சாதகனுடைய) இந்திரியங்கள் தம், தம் சப்தாதி விஷயங்களிலிருந்து எல்லாவிதமாயும் மானஸம், வாசிகம், காயிகம் ஆகிய மூன்றையும் அடக்கினவனுக்கு (நிக்ரஹம்) வசம் செய்தவனுக்கு புத்தி நன்றாக ஸ்திரப்படுகிறது.
योऽयं लौकिको वैदिकश्च व्यवहारः स उत्पन्नविवेकज्ञानस्य स्थितप्रज्ञस्य अविद्याकार्यत्वात् अविद्यानिवृत्तौ निवर्तते, अविद्यायाश्च विद्याविरोधात् निवृत्तिः, इत्येतमर्थं स्फुटीकुर्वन् आह —
எந்த இந்த லௌகிக வைதிக வியவகாரங்கள் உண்டோ அவை அவித்யையால் ஏற்பட்டவையானதால் விவேகஞானம் உண்டான ஸ்திதபிரக்ஞனுக்கு அவித்யா நிவிர்த்தி (நீக்கம்) ஏற்படும் பொழுது (வியவகாரங்களும்) நிவர்த்தி ஆகின்றன. (நீங்கி விடுகிறது) அக்ஞானம் ஞானத்தின் விரோதத்தினால் நீங்குகிறது என்ற இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாக (பகவான்) அருளிச் செய்கிறார்.
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी ।
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः ॥ ६९ ॥
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமி ।
யஸ்யாம்ஜாக்ரதி பூதானி ஸா நிசாபச்யதோ முனே: ॥ 69 ॥
या निशा रात्रिः सर्वपदार्थानामविवेककरी तमःस्वभावत्वात् सर्वभूतानां सर्वेषां भूतानाम् ।
தாமச ஸ்வபாவத்தினால் எல்லா பதார்த்தங்களையும் விவேக மற்றவைகளாய் செய்யும் ராத்திரி (இரவு) எனப்படும் நிஷா எல்லா பூதங்களுக்கும் (நிஷா என்ற) இரவாகும்.
किं तत् परमार्थतत्त्वं स्थितप्रज्ञस्य विषयः । यथा नक्तञ्चराणाम् अहरेव सदन्येषां निशा भवति, तद्वत् नक्तञ्चरस्थानीयानामज्ञानां सर्वभूतानां निशेव निशा परमार्थतत्त्वम् , अगोचरत्वादतद्बुद्धीनाम् ।
அது எது எனில் ஸ்திதப்ரக்ஞனுடைய விஷயமான பரமார்த்த தத்துவமாகும். எவ்வாறு இரவில் ஸஞ்சரிக்கும் (ஆந்தை முதலிய வைகளுக்கு) பகலே இரவாகுமோ அவ்வாறே இரவில் சஞ்சரிப்பவைக ளுக்கு ஒப்பானவர்கள் எல்லா அக்ஞான புருஷர்களும். அவர்க ளுக்கு பரமார்த்த தத்துவ விஷயத்தை புத்தியானது அறியா ததினாலே எல்லா பிராணிகளும் அக்ஞானம் ஏற்படுவதினால் அந்த பரமார்த்த தத்துவமானது அவர்களுக்கு இரவு போல் இருக்கிறது.
तस्यां परमार्थतत्त्वलक्षणायामज्ञाननिद्रायाः प्रबुद्धो जागर्ति संयमी संयमवान् , जितेन्द्रियो योगीत्यर्थः ।
அந்த பரமார்த்த தத்துவரூபமான இரவாகிய அக்ஞான நித்தி ரையிலிருந்து விழிப்படைந்தவன் (ஸம்யமி) அதாவது ஜிதேந்திரியன் (இந்திரியங்களை ஜெயித்தவன்) யோகி எனப்படுவான் என்பது பொருள்.
यस्यां ग्राह्यग्राहकभेदलक्षणायामविद्यानिशायां प्रसुप्तान्येव भूतानि जाग्रति इति उच्यन्ते, यस्यां निशायां प्रसुप्ता इव स्वप्नदृशः, सा निशा अविद्यारूपत्वात् परमार्थतत्त्वं पश्यतो मुनेः ॥
எந்த ग्राह्यग्राहकभेदलक्षणायाम् (க்ராஹ்ய கிராஹகபேத லக்ஷணா யாம்) உணர்வதும், உணரப்படுவதுமான பேதமாகிய அவித்தியா என்றஇரவில் உறங்குகின்றபிராணிகள் விழித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எந்த இரவில் தூங்கினவைபோல் ஸொப்னம் காண்கின்றனவோ அவை அக்ஞானமாதலால், பரமார்த்த தத்து வத்தை அறிந்த ஞானிக்கு அது இரவாகும்.
अतः कर्माणि अविद्यावस्थायामेव चोद्यन्ते, न विद्यावस्थायाम् । विद्यायां हि सत्याम् उदिते सवितरि शार्वरमिव तमः प्रणाशमुपगच्छति अविद्या ।
ஆகையால் கர்மங்கள் அவித்தியா அவஸ்தையில்தான் விதிக்கப்படுகின்றன. வித்தியா அவஸ்தையில் (ஞான காலத்தில்) அல்ல. சூரியன் உதித்தபொழுது இரவின் இருளானது எவ்வாறு நீங்கு கிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அக்ஞானம் முழுவதும் நாசமாகிறது.
प्राक् विद्योत्पत्तेः अविद्या प्रमाणबुद्ध्या गृह्यमाणा क्रियाकारकफलभेदरूपा सती सर्वकर्महेतुत्वं प्रतिपद्यते । न अप्रमाणबुद्ध्या गृह्यमाणायाः कर्महेतुत्वोपपत्तिः ।
ஞான உற்பத்திக்கு முன் பிரமாண புத்தியினால் கிரஹிக்கப்பட்ட அக்ஞானமானது செய்கை, செய்பவன், பலம் முதலிய பேதரூபத்தை அடைந்து எல்லாக் கர்மங்களுக்கும் காரணத் தன்மையை அடைகின்றது. ப்ரமாணமல்ல என்ற புத்தியினால் கிரஹிக்கப்பட்ட (அறிவிற்கு) கர்மாவின் காரணமாகும் தன்மை கிடையாது.
‘प्रमाणभूतेन वेदेन मम चोदितं कर्तव्यं कर्म’ इति हि कर्मणि कर्ता प्रवर्तते, न ‘अविद्यामात्रमिदं सर्वं निशेव’ इति ।
பிரமாணமாக உள்ள வேதத்தில் எனக்கு விதிக்கப்பட்டது கர்மமா னது என்னால் செய்யப்படவேண்டும் என்று எண்ணியல்லவோ கர்த்தாவானவன் கர்மத்தில் பிரவிர்த்திக்கின்றான். ஆனால் இவை எல்லாம் அவித்யைதான். இரவைப் போல என்று நினைத்தவனுக்கு கர்மா எப்படி வரும்?
यस्य पुनः ‘निशेव अविद्यामात्रमिदं सर्वं भेदजातम्’ इति ज्ञानं तस्य आत्मज्ञस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारो न प्रवृत्तौ ।
எனவே எவனுக்கு இந்த எல்லா பேத கூட்டங்களும் இரவு போல் (அக்ஞானமே) அவித்யா மாத்திரமாய் தோன்றுகிறஞானம் உண்டாகிறதோ (அவனுக்கு) அந்த ஆத்ம ஞானிக்கு எல்லா கர்மங்க ளையும் தியாகம் (ஸந்நியாசம்) செய்வதிலேயே அதிகாரமே அன்றி பிரவிர்த்தியிலில்லை.
तथा च दर्शयिष्यति —
அவ்வாறேகாண்பிக்கப் போகிறார் -
அதிலே (பிரஹ்மத்திலே) புத்தியை உடையவராய் என்ற முதலிய சுலோகங்களால் அவனுக்கு ஞான நிஷ்ட்டையில் தான் அதிகாரம் என்பதைக் காட்டுகிறார்.
तत्रापि प्रवर्तकप्रमाणाभावे प्रवृत्त्यनुपपत्तिः इति चेत् ।
அந்த ஞான நிஷ்ட்டையில் (தத்துவ வேத்தாவிற்கு) பிரவிர்த்தி இல்லாதபோது அந்த ஞான நிஷ்ட்டையிலும் பிரவிர்த்தி மேற்கொள்ள முடியாது என்றால்
न ; स्वात्मविषयत्वादात्मविज्ञानस्य । न हि आत्मनः स्वात्मनि प्रवर्तकप्रमाणापेक्षता, आत्मत्वादेव । तदन्तत्वाच्च सर्वप्रमाणानां प्रमाणत्वस्य । न हि आत्मस्वरूपाधिगमे सति पुनः प्रमाणप्रमेयव्यवहारः सम्भवति ।
அவ்வாறு அல்ல, ஏனெனில் ஆத்மஞானமானது தன் விஷயமாக ஸ்வாத்ம (சொந்த) விஷயமாய் இருப்பதால். தன்னுடைய ஸ்வஸ்வரூப விஷயத்தில் பிரவிர்த்தி செய்வதற்கு பிரமாணத்தின் அபேக்ஷை வேண்டியதில்லை அல்லவா. (விதிக்கப்படுவதில்லை). அந்த ஆத்மஞானம் தானே ஆத்மாவாக இருப்பதால் ஸ்வதஸ்ஸித் தமாய் இருக்கிறது. மேலும் அதில் எல்லா பிரமாணங்களுடைய பிரமாணத்துத்வத்திற்கு முடிவானது ஏற்படுகிறது. ஆத்மஞானம் ஏற் படும்வரை பிரமாணங்களுக்கு பிரமாணத்துவம் இருக்கிறது. ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தபொழுது மீண்டும் பிரமாண, பிரமேய வியவஹாரமானது ஏற்படவே முடியாது.
प्रमातृत्वं हि आत्मनः निवर्तयति अन्त्यं प्रमाणम् ; निवर्तयदेव च अप्रमाणीभवति, स्वप्नकालप्रमाणमिव प्रबोधे ।
(ஆத்மஞானரூப) அந்திமப் பிரமாணமான ஞானம் ஆத்மா விற்கு பிரமாதாவாக இருக்கும் தன்மையையே நீக்குகிறது. (ஆத்ம ஞான ரூப அந்திமப் பிரமாணமானது) (பிரமாதா தன்மையை) நீக்கி ஞானம் (பிரபோதம்) ஏற்பட்டவுடன் ஸ்வப்னகால ப்ரமாணம் போல அப்ரமாணமாகிறது.
लोके च वस्त्वधिगमे प्रवृत्तिहेतुत्त्वादर्शनात् प्रमाणस्य ।
ப்ரமாணமானது எங்கேயுமே உலகில் ப்ரவிருத்தியைத் தூண்டுவதில்லை.
तस्मात् न आत्मविदः कर्मण्यधिकार इति सिद्धम् ॥ ६९ ॥
ஆகையால் ஆத்மாவை அறிந்தவர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை என்று தீர்மானமாகிறது.
विदुषः त्यक्तैषणस्य स्थितप्रज्ञस्य यतेरेव मोक्षप्राप्तिः, न तु असंन्यासिनः कामकामिनः इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपादयिष्यन् आह —
ஏ ஷணாத்ரயங்களை தியாகம் செய்த ஸ்திதப்பிரக் ஞனாயும், வித்வானாயும் உள்ள ஸந்நியாசிதான் மோக்ஷத்தை அடைவான். காமத்தை விரும்புகிறஸந்நியாசமற்றவன் அடையமாட்டான் என்றபொருளை திருஷ்டாந்த மூலமாக எடுத்துக் காட்டி கூறுகிறார்.-
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् ।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी ॥ ७० ॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப: ப்ரவிசந்தி யத்வத் ।
தத்வத்காமா யம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ ॥ 70 ॥
आपूर्यमाणम् अद्भिः अचलप्रतिष्ठम् अचलतया प्रतिष्ठा अवस्थितिः यस्य तम् अचलप्रतिष्ठं समुद्रम् आपः सर्वतो गताः प्रविशन्ति स्वात्मस्थमविक्रियमेव सन्तं यद्वत्
எவ்வாறு ஜலமானது பூரணமாக நிறைந்து சலனமற்று ஸ்திரமாக நிலைபெற்றிருக்கிறசமுத்திரத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் வருகின்ற ஜலமானது அடைகின்ற போதிலும் சமுத்திரமானது தன் நிலையிலிருந்து ஒருவிதத்தாலும் விகாரம் அடையாமல் எல்லையை (கரையை) தாண்டாமல் இருக்கிறதோ?
तद्वत् कामाः विषयसंनिधावपि सर्वतः इच्छाविशेषाः यं पुरुषम् — समुद्रमिव आपः — अविकुर्वन्तः प्रविशन्ति सर्वे आत्मन्येव प्रलीयन्ते न स्वात्मवशं कुर्वन्ति ।
அவ்வாறு விஷய ஸம்பந்தமுள்ள காமனைகளும் உண்டானா லும் எந்த புருஷன் அந்த எல்லா இச்சா விஷேசங்களை எவ்வாறு சமுத்திரத்தை ஜலமடைகிறதோ அவ்வாறு ஆத்மாவினிடத்தில் லீனம் செய்கின்றான். அவைகள் இவனை தன் வசப்படுத்தமுடியாது.
सः शान्तिं मोक्षम् आप्नोति, न इतरः कामकामी, काम्यन्त इति कामाः विषयाः तान् कामयितुं शीलं यस्य सः कामकामी, नैव प्राप्नोति इत्यर्थः ॥ ७० ॥
அவன் மோக்ஷத்தை அடைகிறான். விஷயங்களை விரும்புவ தில் ஸாமர்த்தியமுடைய காமகாமி மோக்ஷத்தை அடையமாட்டான்.
यस्मादेवं तस्मात्—
ஏனெனின் இவ்வாறு இருப்பதால்
विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः ।
निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति ॥ ७१ ॥
விஹாய காமான்ய: ஸர்வான்புமாம்ச்சரதி நி:ஸ்ப்ருஹ: ।
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திமதிகச்சதி ॥ 71 ॥
विहाय परित्यज्य कामान् यः संन्यासी पुमान् सर्वान् अशेषतः कार्त्स्न्येन चरति, जीवनमात्रचेष्टाशेषः पर्यटतीत्यर्थः ।
எல்லாக் காமனைகளையும் மிச்சமில்லாமல் எல்லா போகங்க ளையும் தியாகம் செய்து ஜீவிப்பதற்கு மட்டும் வேண்டிய செயல் களை மிச்சம் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறான் என்பது பொருள்.
निःस्पृहः शरीरजीवनमात्रेऽपि निर्गता स्पृहा यस्य सः निःस्पृहः सन् ।
அவ்வாறேஎவன் பற்றற்றவன் எனப்படுகிறானோ அவன் சரீர ஜீவனத்தின் பொருட்டும் பற்று இல்லாது இருப்பான்.
निर्ममः शरीरजीवनमात्राक्षिप्तपरिग्रहेऽपि ममेदम् इत्यपभिनिवेशवर्जितः ।
நிர்மம என்றால் சரீர ஜீவனத்திற்கு மிக அவசியமான பதார்த்தங்களில் என்னுடையது இது என்றும் அபிநிவேசம் அற்று இருப்பவன்
निरहङ्कारः विद्यावत्त्वादिनिमित्तात्मसम्भावनारहितः इत्येतत् ।
நிரஹங்காரம் என்றால் வித்யா(கல்வியுடமை)வத் ஸம்பந்தத்தினால் ஏற்படும் ஆத்மாபிமானம் அற்றிருப்பவன்.
सः एवंभूतः स्थितप्रज्ञः ब्रह्मवित् शान्तिं सर्वसंसारदुःखोपरमलक्षणां निर्वाणाख्याम् अधिगच्छति प्राप्नोति ब्रह्मभूतो भवति इत्यर्थः ॥ ७१ ॥
இவ்வாறு இருக்கின்றஸ்திதப்ரக்ஞனுடைய பிரஹ்ம வித்தான ஞானி ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா துக்க நிவிர்த்தி ரூபமான மோக்ஷம் எனப்படும் பரம சாந்தியை அடைகின்றான் என்றால் பிரஹ்மமாகவே ஆகின்றான் என்பது பொருள்.
सैषा ज्ञाननिष्ठा स्तूयते —
அந்த இந்த ஞான நிஷ்ட்டையானது போற்றப்படுகிறது (துதிக்கப்படுகிறது).
एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति ।
स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥ ७२ ॥
ஏ ஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த்தநைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேஅபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி ॥ 72 ॥
एषा यथोक्ता ब्राह्मी ब्रह्मणि भवा इयं स्थितिः सर्वं कर्म संन्यस्य ब्रह्मरूपेणैव अवस्थानम् इत्येतत् ।
அந்த முன் கூறப்பட்ட பிராஹ்மீ என்றஇந்த பிரஹ்ம பாவ ஸ்திதி யானது எல்லா கர்மங்களையும் துறந்து பிரஹ்மரூபமாக நிலைபெறு தல் தான்.
हे पार्थ, न एनां स्थितिं प्राप्य लब्ध्वा न विमुह्यति न मोहं प्राप्नोति ।
ஹே பார்த்த! இந்த ஸ்திதியை அடைந்தவன் மோஹத்தை அடையமாட்டான்.
स्थित्वा अस्यां स्थितौ ब्राह्म्यां यथोक्तायां अन्तकालेऽपि अन्त्ये वयस्यपि ब्रह्मनिर्वाणं ब्रह्मनिर्वृतिं मोक्षम् ऋच्छति गच्छति । किमु वक्तव्यं ब्रह्मचर्यादेव संन्यस्य यावज्जीवं यो ब्रह्मण्येव अवतिष्ठते स ब्रह्मनिर्वाणमृच्छति इति ॥ ७२ ॥
கடைசி காலத்தில் கடைசி வயதில் மேலே கூறப்பட்ட ப்ராஹ்மீ ஸ்திதியில் நிலைபெற்றமனிதன் கூட பிரஹ்மத்தில் லீனமாதலாகிய மோக்ஷத்தை அடைகிறான். என்றால் எவன் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத் திலிருந்தே ஸந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டு ஜீவனம் முழுவ தும் பிரஹ்மத்திலேயே நிலைபெற்றிருக்கின்றானோ அவன் அந்த பிரஹ்ம்ம நிர்வாணத்தை அடைகின்றான். என்று கூறுவதற்கு என்ன உள்ளது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमत्भगवद्गीताभाष्ये द्वितीयोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோஅத்யாய: