कर्मण्यकर्म यः पश्येत् (கர்மண்யகர்ம ய: பச்யேத்) என்று ஆரம்பித்து स युक्तः कृत्स्नकर्मकृत्, (ச: யுக்த: க்ருத்ஸ்னகா்மக்ருத்) ज्ञानाग्निदग्धकर्माणम् (ஞானாக்னிதக்தகர்மாணம்) शारीरं केवलं कर्म कुर्वन् (சாரீரம் கேவலம் கர்ம குர்வன்) यदृच्छालाभसंतुष्टः (யத்ருச்சாலாபஸந்துஷ்ட:) ब्रह्मार्पणं ब्रह्महविः (ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்மஹவி:) कर्मजान्विद्धि तान्सर्वान्, (கர்ம ஜான்வித்தி தான்ஸர்வான்) सर्वं कर्माखिलं पार्थ, (ஸர்வம் கர்மாகிலம் பார்த்த) ज्ञानाग्निः सर्वकर्माणि (ஞானாக்னி: ஸர்வகர்மாணி), योगसन्यस्तकर्माणम् (யோகஸந்யஸ்தகர்மாணம்) என்பது வரையில் உள்ள வசனங்களால் பகவான் சர்வ கர்ம ஸந்நியாஸத்தைப் பற்றி கூறி அருளினார்.
छित्त्वैनं संशयं योगमातिष्ठ (சித்த்வைனம் ஸம்சயம் யோகமாதிஷ்ட்ட) என்ற இந்த வசனத்தால் கர்மயோகத்தைச் செய் என்று கூறினார்.
तयोरुभयोश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः स्थितिगतिवत् परस्परविरोधात् एकेन सह कर्तुमशक्यत्वात् , कालभेदेन च अनुष्ठानविधानाभावात् , अर्थात् एतयोः अन्यतरकर्तव्यताप्राप्तौ सत्यां यत् प्रशस्यतरम् एतयोः कर्मानुष्ठानकर्मसंन्यासयोः तत् कर्तव्यं न इतरत् इत्येवं मन्यमानः प्रशस्यतरबुभुत्सया अर्जुन उवाच —
‘संन्यासं कर्मणां कृष्ण’ (भ. गी. ५ । १) इत्यादिना ॥
கர்மயோகம், கர்மஸந்நியாஸம் ஆகிய இவ்விரண்டும் நிற்றல், நடத்தல் போல் பரஸ்பரம் விரோதமாய் இருப்பதால் இரண்டும் சேர்ந்து ஒருவனால் அனுஷ்ட்டிக்கமுடியாததாலும் வெவ்வேறு காலத்தில் அனுஷ்ட்டித்தல் விதிக்கப்படாததாலும், ஸ்வபாவமாகவே இவ்விரண்டினுள் ஏதாவது ஒன்றை (அனுஷ்ட்டிக்க) செய்யவேண் டும் என்று ஏற்படுகிறது. ஆகையால் தான் கர்மயோகம் அல்லது கர்ம சந்நியாசயோகம் இவ்விரண்டில் எது மேலானதோ அதை அனுஷ்ட் டிக்கவேண்டும். மற்றது அல்ல என்று கருதிய அர்ஜுனன் இரண்டில் எது மேலானது என்று கேட்க விரும்பியவனாய் संन्यासं कर्मणां कृष्ण, (சந்நியாசம் கர்மணாம் க்ருஷ்ண) முதலிய வசனங்களால் கேட்டார்.
ननु च आत्मविदः ज्ञानयोगेन निष्ठां प्रतिपिपादयिषन् पूर्वोदाहृतैः वचनैः भगवान् सर्वकर्मसंन्यासम् अवोचत् , न तु अनात्मज्ञस्य । अतश्च कर्मानुष्ठानकर्मसंन्यासयोः भिन्नपुरुषविषयत्वात् अन्यतरस्य प्रशस्यतरत्वबुभुत्सया अयं प्रश्नः अनुपपन्नः ।
ஆனால் முன்பு கூறிய வசனங்களினால் பகவான் ஞானயோகத் தினால் ஆத்ம ஞானியினுடைய நிஷ்ட்டையை பிரதிபாதனம் செய்ய (கூற) இச்சித்தவராய் கேவல ஆத்மஞானிக்காகவே எல்லாக் கர்மங்களின் ஸந்நியாஸத்தைக் கூறினார். ஆத்மத்தத்துவத்தை அறியாதவனுக்கு அல்ல. ஆகையால் கர்மானுஷ்ட் டானம், கர்ம ஸந் நியாஸம் இவ்விரண்டும் வெவ்வேறு அதிகாரி களின் சம்பந்தப்பட்ட விஷயமாய் இருப்பதால், எவ்வாறெனில் கர்மத்தை அனுஷ்ட்டித்த லும், துறத்தலும் காரணமாய் இருப்பதால் இரண்டு சாதனங்களில் ஒன்றின் மேன்மையை அறிந்து கொள்ளும் வேட்கையினால் இந்த கேள்வி என்பது பொருந்தாது.
सत्यमेव त्वदभिप्रायेण प्रश्नो न उपपद्यते ; प्रष्टुः स्वाभिप्रायेण पुनः प्रश्नः युज्यत एवेति वदामः ।
சரியே, உன் அபிப்பிராயப்படி என்றால் இந்த கேள்வியே பொருந் தாது. ஆனால் கேட்பவனுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி இந்த கேள்வி பொருந்தவே செய்கிறது என்று கூறுவோம்.
कथम् ?
எவ்வாறு
पूर्वोदाहृतैः वचनैः भगवता कर्मसंन्यासस्य कर्तव्यतया विवक्षितत्वात् , प्राधान्यमन्तरेण च कर्तारं तस्य कर्तव्यत्वासम्भवात् अनात्मविदपि कर्ता पक्षे प्राप्तः अनूद्यत एव ; न पुनः आत्मवित्कर्तृकत्वमेव संन्यासस्य विवक्षितम् इति ।
பகவான் முன்பு கூறப்பட்ட வசனங்களால் கர்ம ஸந்நியாஸத்தை அவசியம் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து அதன் முக்கியத்துவம் தெரிகிறது. ஆனால் கர்த்தா இல்லாமல் கர்மஸந்நியாஸம் செய்தல் என்றகர்த்தவ்யதா ஏற்படாது. (ஆகையால் அக்ஞானியானாலும் தீவிர வைராக்கியம் இருந்தால் அதிகாரியாவான்) ஆனால் கேவல ஆத்மக்ஞானி சந்நியாசத்திற்கு கர்த்தா ஆகிறான் என்பது பொருந்தாது. (ஆத்மவித்திற்கு சந்நியாசத்தில் கர்த்திருத்துவம் கூறவில்லை)
एवं मन्वानस्य अर्जुनस्य कर्मानुष्ठानकर्मसंन्यासयोः अविद्वत्पुरुषकर्तृकत्वमपि अस्तीति पूर्वोक्तेन प्रकारेण तयोः परस्परविरोधात् अन्यतरस्य कर्तव्यत्वे प्राप्ते प्रशस्यतरं च कर्तव्यम् न इतरत् इति प्रशस्यतरविविदिषया प्रश्नः न अनुपपन्नः ॥
இவ்வாறு கருதிய அர்ஜுனனால் கர்மானுஷ்ட்டான, கர்ம ஸந்நியாஸம் இவ்விரண்டிற்கும் அக்ஞான புருஷனே அதிகாரி என்று முன்பு கூறிய பிரகாரம் அவை இரண்டிற்கும் பரஸ்பரவிரோதமாய் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றைசெய்யவேண் டும் என்று ஏற்படும்பொழுது அவற்றில் மேலானதைச் செய்யவேண் டும், மற்றதை அல்ல என்று மேலானதை தெரிந்து கொள்வதற்காக கேட்ட வினா பொருத்தமற்றது என்பது இல்லை. (கேட்ட வினா பொருந்தும்)
प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि प्रष्टुः अभिप्रायः एवमेवेति गम्यते ।
பகவானுடைய மறுமொழி வாக்கியத்தின் பொருளை ஆராய்ந்து நிருபணம் செய்வதனாலும் கேட்பவனுடைய அபிப்பிராயம் இதுதான் என்று தெரிகிறது.
कथम् -
எவ்வாறு?
சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டும் மேலானதே. ஆனால் இவ்விரண்டினுள் கர்மயோகம் மேலானது என்பது பகவானுடைய பதில்.
एतत् निरूप्यम् — किं अनेन आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वं प्रयोजनम् उक्त्वा तयोरेव कुतश्चित् विशेषात् कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ? आहोस्वित् अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।
இதில் விசாரிக்கப்பட்டது என்ன? இந்த ஆத்மவித்தை கர்த்தா வாக உடைய சந்நியாசமும், கர்மயோகமும் நன்மையைத் தரக்கூடிய பலனைக் கூறி அவை இரண்டினுள் எந்த விசேஷத்தை கருதி சந்நி யாசியைக் காட்டிலும் கர்மயோகியின் மேன்மை கூறப்பட்டுள் ளதாகிறது? அல்லது அக்ஞானியை கர்த்தாவாக உடைய சந்நியாசம், கர்மயோகம் இவ்விரண்டும் ஏதோ ஒரு விசேஷத்தால் மேலானது என்று கூறப்படுகிறதா?
किञ्चातः — यदि आत्मवित्कर्तृकयोः कर्मसंन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्वम् , तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वम् उच्यते ; यदि वा अनात्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः तदुभयम् उच्यते इति ।
ஆத்மவேத்தா செய்யும் கர்மசந்நியாசமும், கர்மயோகமும் மேலான நன்மையைச் செய்பவை. ஆனால் அவைகளுள் கர்மசந்நி யாசத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டதா?அல்லது அக்ஞானியினால் செய்யப்பட்ட சந்நியாசம் கர்மயோகம் இவ்விரண்டிற்குமே விசேஷத்துவம் கூறப்பட்டதா?
अत्र उच्यते — आत्मवित्कर्तृकयोः संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्ववचनं तदीयाच्च कर्मसंन्यासात् कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् अनुपपन्नम् ।
ஆத்மவித்தை கர்த்தாவாக உடைய ஸந்நியாஸமும், கர்மயோக மும் ஏற்படாது. ஆகையால் இவ்விரண்டும் நன்மை அளிக்கும் என்பதும், அவ்வாறேகர்ம ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்பதுமாகிய இவ்விரண்டும் பொருந்தாது.
यदि अनात्मविदः कर्मसंन्यासः तत्प्रतिकूलश्च कर्मानुष्ठानलक्षणः कर्मयोगः सम्भवेताम् , तदा तयोः निःश्रेयसकरत्वोक्तिः कर्मयोगस्य च कर्मसंन्यासात् विशिष्टत्वाभिधानम् इत्येतत् उभयम् उपपद्येत ।
அநாத்மாவித்திற்கு கர்மஸந்நியாஸமும் அதற்கு பிரதிகூலமான கர்மானுஷ்ட்டானத்துடன் கூடிய கர்மயோகமும் ஏற்படலாம். அப்பொழுது அவை இரண்டிற்கும் நன்மை செய்தல் என்பதும், கர்மஸந்நியாஸியைக் காட்டிலும் கர்மயோகத்திற்கு மேன்மையை கூறுதலும் பொருந்தும்.
आत्मविदस्तु संन्यासकर्मयोगयोः असम्भवात् तयोः निःश्रेयसकरत्वाभिधानं कर्मसंन्यासाच्च कर्मयोगः विशिष्यते इति च अनुपपन्नम् ॥
ஆனால் ஆத்ம வித்திற்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்படுவது இல்லை. ஆகையால் அவைகளுக்கு நன்மை செய்தலும் அவ்வாறே கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்கின்ற இரண்டும் பொருந்தாது.
अत्र आह — किम् आत्मविदः संन्यासकर्मयोगयोः उभयोरपि असम्भवः ? आहोस्वित् अन्यतरस्य असम्भवः ? यदा च अन्यतरस्य असम्भवः, तदा किं कर्मसंन्यासस्य, उत कर्मयोगस्य इति असम्भवे कारणं च वक्तव्यम् इति ।
ஆத்மஞானிக்கு கர்மஸந்நியாஸமும், கர்மயோகமும் ஏற்ப டாதா? அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாதா? இரண்டில் ஏதாவது ஒன்று ஏற்படாது எனில் கர்மஸந்நியாஸமா? அல்லது கர்மயோகமா? எதன் பொருட்டு இரண்டும் அல்லது என்றும் நிகழாதெனில் அதன் காரணம் என்ன என்று சொல்லவேண்டும்.
अत्र उच्यते — आत्मविदः निवृत्तमिथ्याज्ञानत्वात् विपर्ययज्ञानमूलस्य कर्मयोगस्य असम्भवः स्यात् ।
இங்கு கூறப்படுகிறது. ஆத்மஞானிக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகம் சம்பவிக்காது. (ஏற்படாது)
जन्मादिसर्वविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन यो वेत्ति तस्य आत्मविदः सम्यग्दर्शनेन अपास्तमिथ्याज्ञानस्य निष्क्रियात्मस्वरूपावस्थानलक्षणं सर्वकर्मसंन्यासम् उक्त्वा तद्विपरीतस्य मिथ्याज्ञानमूलकर्तृत्वाभिमानपुरःसरस्य सक्रियात्मस्वरूपावस्थानरूपस्य कर्मयोगस्य इह गीताशास्त्रे तत्र तत्र आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरधात् अभावः प्रतिपाद्यते यस्मात् , तस्मात् आत्मविदः निवृत्तमिथ्याज्ञानस्य विपर्ययज्ञानमूलः कर्मयोगो न सम्भवतीति युक्तम् उक्तं स्यात् ॥
ஜன்மாதி சர்வ விகாரங்களும் அற்றநிஷ்க்ரியமாகிய ஆத்மாவை தன்னுடைய ஸ்வரூபமாகவே எவன் அறிகிறானோ அந்த ஆத்மவித்திற்கு ஸம்யக்தர்சனத்தினாலே மித்யாஞானம் விலகி கிரியை அற்றஆத்மஸ்வரூப அவஸ்தாரூப லக்ஷணமாகிய சர்வகர்ம ஸந்நியாஸத்தைப் பற்றியும், அதற்கு விபரீதமான ஸ்வபாவ முடைய மித்யா ஞானத்தை மூலமாக உடைய கர்த்திருத்துவ அபிமானத்துடன் கூடிய கிரியையுடன் கூடிய ஆத்ம ஸ்வரூப அவஸ்தான ரூபமான கர்மயோகத்தையும் இந்த சாஸ்த்திரத்தில் அங்கு, அங்கு ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் ஸம்யக் ஞானமானது மித்யா ஞானத்திற்கும் அதன் காரியத்திற்கும் விரோதி யாய் இருப்பதால் கர்மயோகத்திற்கு அபாவம் கூறப்பட்டுள்ளது. அத னால் ஆத்மவித்துக்களுக்கு மித்தியா ஞானம் நீங்கியதால் விபரியய ஞானத்தை மூலமாக உடைய கர்மயோகமானது சம்பவிப்பதில்லை என்று கூறிய யுக்தி பொருத்தமுடையதே.
केषु केषु पुनः आत्मस्वरूपनिरूपणप्रदेशेषु आत्मविदः कर्माभावः प्रतिपाद्यते इति ।
மேலும் ஆத்மஸ்வரூபத்தை நிரூபிக்கின்றஎந்த எந்த இடத்தில் ஆத்மவித்திற்கு கர்ம அபாவம் கூறப்படுகிறது.
அவிநாசி து தத்வித்தி என்று ஆரம்பித்து ய ஏனம் வேத்தி ஹந் தாரம், வேதாவினாசினம் நித்யம் முதலியவை அங்கு அங்கு ஆத்ம வித்திற்கு ஆத்ம அபாவமானது கூறப்பட்டுள்ளது.
இவ்வாறேகர்மயோகமும், ஆத்மஸ்வரூபத்தை நிர்ணயம் செய்யும் இடங்களிலும் அங்கங்கு तस्माद्युध्यस्व भारत (தஸ்மாத்யுத் யஸ்வ பாரத) स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய) कर्मण्येवाधिकारस्ते (கர்மண்யேவாதிகாரஸ்தே) முதலிய வசனங்களால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆகையால் எவ்வாறு ஆத்மவித்திற்கு கர்மயோகமானது இல்லாமல் இருக்கும்.
अत्र उच्यते — सम्यग्ज्ञानमिथ्याज्ञानतत्कार्यविरोधात् ।
ஏனெனில் ஸம்யக்ஞானமானது மித்யாஞானத்திற்கும் அதன் கார்யத்திற்கும் விரோதியாய் உள்ளது.
ஆத்மதத்துவத்துத்தை அறிந்த சாங்கிய யோகிகள் கிரியை அற்ற ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலாகிய ஞானயோக நிஷ்ட்டையை ज्ञानयोगेन साङ्ख्यानाम्, (ஞானயோகேன ஸாங்கியானாம்) என்றவசனத்தினால் அக்ஞானிகளாகிய கர்மயோக நிஷ்ட்டர்களை வேறுபடுத்தி காட்டியுள்ளதால்.
कृतकृत्यत्वेन आत्मविदः प्रयोजनान्तराभावात् ।
ஆத்மாவை அறிந்தவர்கள் கிருதகிருத்தியர்களானதினால் அவர்களுக்கு வேறு பிரயோஜனம் அற்றுப் போகிறது.
तस्य कार्यं न विद्यते (தஸ்ய காரியம் ந வித்யதே) என்ற வசனத் தினால் செய்யவேண்டிய கார்யம் வேறு ஒன்றும் இல்லை.
(ந கர்மணாமரம்பாத். ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துக்கமாப்தும யோகத:,) முதலியவைகளால் ஆத்மஞானத்திற்கு கர்மயோகமானது அங்கத்துவமாக கூறப்பட்டுள்ளதால்
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते (யோகாரூடச்ய தஸ்யைவ சம: காரணமுச்யதே), இந்த வசனத்தால் ஸம்யக் தர்சனம் உடையவனுக்கு கர்ம அபாவம் தெரிய வருகிறது.
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् (சாரீரம் கேவலம் கர்ம குர்வன்னாப்நோதி கில்பிஷம்) என்றவசனம் சரீர ஸ்திதியின் பொருட்டு செய்யவேண்டிய கர்மத்தைத் தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् (நைவ கிஞ்சித்கரேரமிஇதி யுக்தோ மன்யேத தத்வவித்) என்றதினால், இதனால் சரீரஸ்திதிக்கு வேண்டிய கர்மமாகிய பார்த்தல், கேட்டல் முதலிய கர்மங்களிலும் ஆத்மாவை யதார்த்தமாக அறிந்தவர்கள் செய்கிறேன் என்ற எண்ணத்தை ஏகாக்ர சித்தத்துடன் எப்பொழுதும் இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனில் ஞானிக்கு அகர்த்ருத்துவம் இருப்பதால்.
आत्मतत्त्वविदः सम्यग्दर्शनविरुद्धो मिथ्याज्ञानहेतुकः कर्मयोगः स्वप्नेऽपि न सम्भावयितुं शक्यते यस्मात् ।
ஏனெனில் ஆத்மதத்துவத்தை அறிந்தவர்களும் ஸம்யக்ஞானத் திற்கு விருத்தமான மித்யா ஞானத்தை காரணமாக உடைய கர்மயோ கத்தை கனவிலும் நினைக்கமுடியாது.
तस्मात् अनात्मवित्कर्तृकयोरेव संन्यासकर्मयोगयोः निःश्रेयसकरत्ववचनम् , तदीयाच्च कर्मसंन्यासात् पूर्वोक्तात्मवित्कर्तृकसर्वकर्मसंन्यासविलक्षणात् सत्येव कर्तृत्वविज्ञाने कर्मैकदेशविषयात् यमनियमादिसहितत्वेन च दुरनुष्ठेयात् सुकरत्वेन च कर्मयोगस्य विशिष्टत्वाभिधानम् इति ।
ஆகையால் அக்ஞானிக்கே ஸந்நியாஸமும், கர்மயோகமும் மேலான நன்மையைத் தரக்கூடியது என்று கூறப்பட்டது. மேலும் அந்த அக்ஞானிக்கே ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டது. இதன் பொருள் என்னவெனில் முன்பு கூறப்பட்ட ஆத்மக்ஞானியினுடைய ஸந்நியாஸத்தைக் காட்டிலும் வேறானதாக இருக்கும்பொழுது கர்த்தா தன்மை ஞானத்தினால் சில கர்மங்களைப் பற்றியதும் (சிரவண, மனன, நிதித்யாஸனம்) யமநியமாதிகளோடு கூடி அனுஷ்ட்டிக்கப்படவேண்டியதால் மிகக் கடினமான அவனுடைய கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோ கமானது சுலபமானது என்று அதற்கு மேன்மையைக் கூறினார்.
एवं प्रतिवचनवाक्यार्थनिरूपणेनापि पूर्वोक्तः प्रष्टुरभिप्रायः निश्चीयते इति स्थितम् ॥
இவ்வாறு பகவானுடைய மறுமொழியின் வாக்யார்த்த நிருபணம் செய்யப்பட்டாலும் முன்பு கூறப்பட்ட கேட்ப்பவனின் (அர்ஜுனனின்) அபிப்பிராயம் நிச்சயம் செய்யப்பட்டது, என்றாகிறது.
ज्यायसी चेत्कर्मणस्ते (ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே) என்றஸ்லோகத்தில் ஞானகர்மம் இரண்டும் ஒரே சமயத்தில் ஏற்பட முடியாததால் அவை இரண்டில் எது மேலானது அதை எனக்குக் கூறுங்கள் என்று கேட்ட அர்ஜுனனுக்கு பகவான் ஸாங்கியயோகிகளுக்கு என்றால் ஸந்நியாஸிகளுக்கு ஞானயோக நிஷ்ட்டையும் யோகிகளுக்கு கர்மயோக நிஷ்ட்டையும் சிறந்தது என்று நிர்ணயித்து கூறுகிறார்.
ஸந்நியாஸத்தினால் மாத்திரம் ஸித்தியை அடையமுடியாது என்றவசனத்தினால் ஞானத்துடன் கூடிய ஸந்நியாஸமே ஸித்தி ஏற்படுவதற்கு சாதனமாகும், மற்றும் கர்மயோகமும் விதிக்கப் பட்டுள்ளது. ஆகையால் ஞானமற்றஸந்நியாஸம் மேலானதா அல்லது கர்மயோகம் மேலானதா என்று இவ்விரண்டின் விசேஷத்தை அறிய விருப்பமுள்ளவனாக அர்ஜுனன் கூறலானார்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறியது.
संन्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च शंससि ।
यच्छ्रेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् ॥ १ ॥
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புனர்யோகம்ச சம்ஸஸி ।
யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்சிதம் ॥ 1 ॥
संन्यासं परित्यागं कर्मणां शास्त्रीयाणाम् अनुष्ठेयविशेषाणां शंससि प्रशंससि कथयसि इत्येतत् । पुनः योगं च तेषामेव अनुष्ठानम् अवश्यकर्तव्यं शंससि ।
தாங்கள் முதலில் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அநேக பிரகாரமாக அனுஷ்ட்டிக்கவேண்டிய கர்மங்களை தியாகம் செய்வதை மேல் என்று புகழ்கிறீர்கள். மேலும் அவைகளை அவசியம் அனுஷ்ட்டிக்கவேண்டும் என்பதையும் கூறி புகழ்கிறீர்கள்.
अतो मे कतरत् श्रेयः इति संशयः — किं कर्मानुष्ठानं श्रेयः, किं वा तद्धानम् इति ।
ஆகையால் எனக்கு இவைகளில் எது மேலானது என்று ஸம்சயம் உண்டாகிறது. கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்வது மேலா? அல்லது அதை தியாகம் செய்வது மேலா?
प्रशस्यतरं च अनुष्ठेयम् । अतश्च यत् श्रेयः प्रशस्यतरम् एतयोः कर्मसंन्यासकर्मयोगयोः यदनुष्ठानात् श्रेयोवाप्तिः मम स्यादिति मन्यसे, तत् एकम् अन्यतरम् सह एकपुरुषानुष्ठेयत्वासम्भवात् मे ब्रूहि सुनिश्चितम् अभिप्रेतं तवेति ॥ १ ॥
மேலானதை அனுஷ்ட்டிக்கவேண்டும், ஆகையால் எது மேலானது கர்மஸந்நியாஸம், கர்மானுஷ்ட்டானம் (கர்மயோகம்) இவைகளில் எதை அனுஷ்ட்டானம் செய்வதால் மேலான நன்மை எனக்கு உண்டாகும் என்று நினைக்கிறீர்களோ அந்த நிச்சயமானதை எனக்குக் கூறுவீர்களாக. ஏனெனில் ஒரே புருஷனால் ஒரே சமயத்தில் இரண்டும் சேர்த்து அனுஷ்ட்டிப்பது என்பது முடியாத காரியம்.
स्वाभिप्रायम् आचक्षाणो निर्णयाय —
அர்ஜுனனுடைய கேள்விக்கான பதிலை நன்றாக நிர்ணயம் செய்யும் பொருட்டு பகவான் தன்னுடைய அபிப்பிராயத்தை கூறலானார்-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
संन्यासः कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ ।
तयोस्तु कर्मसंन्यासात्कर्मयोगो विशिष्यते ॥ २ ॥
ஸந்ந்யாஸ: கர்மயோகஸ்ச நிஸ்ரேயஸகராவுபௌ ।
தயோஸ்து கர்மஸந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே ॥ 2 ॥
संन्यासः कर्मणां परित्यागः कर्मयोगश्च तेषामनुष्ठानं तौ उभौ अपि निःश्रेयसकरौ मोक्षं कुर्वाते ।
ஸந்நியாஸம் என்றால் கர்மங்களை பரித்தியாகம் செய்தல். கர்மயோகம் என்றால் அவைகளை அனுஷ்ட்டானம் செய்தல். இவை இரண்டும் மோக்ஷத்தை தரக்கூடியதே.
ज्ञानोत्पत्तिहेतुत्वेन उभौ यद्यपि निःश्रेयसकरौ, तथापि तयोस्तु निःश्रेयसहेत्वोः कर्मसंन्यासात् केवलात् कर्मयोगो विशिष्यते इति कर्मयोगं स्तौति ॥ २ ॥
ஞானம் ஏற்படுவதற்கு இரண்டுமே காரணமாயிருந்தாலும் அவைகளில் கேவல (விவேகமற்ற) கர்மஸந்நியாஸத்தைக் காட்டிலுமம் கர்மயோகமே மேலானது என்று கர்மயோகத்தைப் புகழ்கிறார்.
कस्मात् इति आह —
எதனால் இதைப் பற்றிக் கூறுகிறார்-
ज्ञेयः स नित्यसंन्यासी यो न द्वेष्टि न काङ्क्षति ।
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते ॥ ३ ॥
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி ।
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே ॥ 3 ॥
ज्ञेयः ज्ञातव्यः स कर्मयोगी नित्यसंन्यासी इति यो न द्वेष्टि किञ्चित् न काङ्क्षति दुःखसुखे तत्साधने च । एवंविधो यः, कर्मणि वर्तमानोऽपि स नित्यसंन्यासी इति ज्ञातव्यः इत्यर्थः ।
கர்மயோகீ நித்ய ஸந்நியாஸீ என்று அறியவேண்டும். சுகதுக்கத்திலும், அதன் சாதனத்திலும் எவன் த்வேஷமோ, ஆசையோ கொள்வதில்லையோ அப்படிப்பட்டவன் கர்மத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவன் நித்திய ஸந்நியாஸீ என்றே அறியவேண்டும் என்பது கருத்து.
निर्द्वन्द्वः द्वन्द्ववर्जितः हि यस्मात् महाबाहो सुखं बन्धात् अनायासेन प्रमुच्यते ॥ ३ ॥
ஏன் எனில் ஹே! மஹாபாஹோ! ராகத்வேஷாதி துவந்து வங்களி லிருந்து விடுபட்டவன் சுலபமாக பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
संन्यासकर्मयोगयोः भिन्नपुरुषानुष्ठेययोः विरुद्धयोः फलेऽपि विरोधो युक्तः, न तु उभयोः निःश्रेयसकरत्वमेव इति प्राप्ते इदम् उच्यते —
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் செய்வதற்கு யோக்கியமான ஒன்றிற்கொன்று விருத்தமான கர்மஸந்நியாஸம், கர்ம யோகம் அவற்றின் பலத்திலும் விருத்தம் ஏற்படும். அவ்வாறு இருக்கை யில் அவை இரண்டிற்கும் மேலான நன்மைத் தரக்கூடிய (நிச்ச்ரேயஸ்) ஒரே பலம் என்று கூறுதல் பொருந்தாது எனில், இந்த சங்கை ஏற்படும்பொழுது இவ்வாறு கூறுகிறார்.
साङ्ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः ।
एकमप्यास्थितः सम्यगुभयोर्विन्दते फलम् ॥ ४ ॥
ஸாங்க்யயோகௌ ப்ருதக் பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா: ।
ஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர் விந்ததே பலம் ॥ 4 ॥
साङ्ख्ययोगौ पृथक् विरुद्धभिन्नफलौ बालाः प्रवदन्ति न पण्डिताः ।
சிற்றறிவு உடையவர்கள் ஸாங்கியம் (ஸந்நியாஸ) யோகம், கர்ம யோகம் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பலன் கொடுப்பவை என்று கூறுவார்கள். ஆனால் பண்டிதர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள்.
पण्डितास्तु ज्ञानिन एकं फलम् अविरुद्धम् इच्छन्ति ।
பண்டிதர்களாகிய ஞானிகள் அவ்விரண்டிற்கும் மாறுபாடு அற்ற ஒரே பலத்தைக் கொள்கிறார்கள்.
कथम् एकमपि साङ्ख्ययोगयोः सम्यक् आस्थितः सम्यगनुष्ठितवान् इत्यर्थः, उभयोः विन्दते फलम् ।
எவ்வாறு எனில் ஸாங்கியயோகம், கர்மயோகம் இவ் விரண்டில் ஏதாவது ஒன்றைநன்றாக அனுஷ்ட்டிப்பவனாகில் இரண்டினுடைய பயனையும் அடைகிறான்.
उभयोः तदेव हि निःश्रेयसं फलम् ; अतः न फले विरोधः अस्ति ॥
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் இரண்டிற்கும் நிச்ரேயஸ் (ஸாங்கிய) பலம் அதாவது மோக்ஷ பலம். ஆகையால் பலத்தில் விரோதம் கிடையாது.
ननु संन्यासकर्मयोगशब्देन प्रस्तुत्य साङ्ख्ययोगयोः फलैकत्वं कथम् इह अप्रकृतं ब्रवीति ।
ஸந்நியாஸ யோகம், கர்மயோகம் என்று இரண்டு வித சப்தங்க ளால் இந்தப் பிரகரணங்களில் எடுத்துக்கூறி பின் ஸாங்கியத்திற்கும், கர்மயோகத்திற்கும் இந்த இடத்தில் பொருத்தமில் லாமல் ஒரே பலத்தை எவ்வாறு கூறுகிறீர்கள்.
नैष दोषः — यद्यपि अर्जुनेन संन्यासं कर्मयोगं च केवलम् अभिप्रेत्य प्रश्नः कृतः, भगवांस्तु तदपरित्यागेनैव स्वाभिप्रेतं च विशेषं संयोज्य शब्दान्तरवाच्यतया प्रतिवचनं ददौ ‘साङ्ख्ययोगौ’ इति ।
இது தோஷமல்ல. அர்ஜுனன் கேவலம் சந்நியாச யோகம், கேவலம் கர்ம யோகத்தைப் பற்றி கேள்வி கேட்டான் என்றாலும், சாங்கியம், யோகம் இரண்டும் வேறு சொற்களால் கூறப்படுவதால் பகவான் அவற்றைவிடாமலே தன்னுடைய அபிப்பிராயமாகிய விசேஷத்தை யும் சேர்த்து மறுமொழி தந்தருளினார் சாங்கியம், யோகம் என்று
तौ एव संन्यासकर्मयोगौ ज्ञानतदुपायसमबुद्धित्वादिसंयुक्तौ साङ्ख्ययोगशब्दवाच्यौ इति भगवतो मतम् । अतः न अप्रकृतप्रक्रियेति ॥ ४ ॥
ஏனெனில் சந்நியாச யோகம், கர்மயோகம் இவ்விரண்டிற்கும் ஞானமும் அதற்கு உபாய ரூப சமபுத்தி முதலிய பாவங்களுடன் கூடி உள்ளதை அறிந்து, சாங்கிய யோகம், கர்மயோகம் என்றபெயர்களால் கூறப்பட்டது. இது பகவானுடைய கருத்து. ஆகையால் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது, பிரகரணத்தின் விருத்தமாகாது.
एकस्यापि सम्यगनुष्ठानात् कथम् उभयोः फलं विन्दते इति उच्यते —
ஒன்றையேனும் நன்றாக அனுஷ்ட்டித்தலினால் எவ்வாறு இரண்டில் பலத்தை அடைவான்? இதைக் குறித்து கூறுகிறார்.
यत्साङ्ख्यैः प्राप्यते स्थानं तद्योगैरपि गम्यते ।
एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति ॥ ५ ॥
யத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தானம் தத்-யோகைரபி கம்யதே ।
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி ॥ 5 ॥
यत् साङ्ख्यैः ज्ञाननिष्ठैः संन्यासिभिः प्राप्यते स्थानं मोक्षाख्यम् , तत् योगैरपि ।
ஸாங்கியர்களாகிய ஞானநிஷ்ட்டையுடன் கூடிய ஸந்நியாஸி கள் மோக்ஷம் எனப்படும் எந்த ஸ்தானத்தை அடைகிறார்களோ அந்த ஸ்தானத்தை யோகிகளும் அடைகிறார்கள்.
ज्ञानप्राप्त्युपायत्वेन ईश्वरे समर्प्य कर्माणि आत्मनः फलम् अनभिसन्धाय अनुतिष्ठन्ति ये ते योगाः योगिनः तैरपि परमार्थज्ञानसंन्यासप्राप्तिद्वारेण गम्यते इत्यभिप्रायः ।
எந்த யோகிகள் தனக்காக கர்மபலத்தை விரும்பாமல் எல்லாக் கர்மங்களையும் ஈஸ்வரார்ப்பணமாக செய்து அவ்வாறேகர்மயோ கத்தை ஞானப்பிராப்திக்கு உபாயமாகக் கருதி கர்மங்களை நன்றாக அனுஷ்ட்டிக்கிறார்களோ அவர்களுக்கும் பரமார்த்த ஞான ஸந்நி யாஸப் பிராப்தி வாயிலாக அதே மோக்ஷத்தை அடைகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
अतः एकं साङ्ख्यं च योगं च यः पश्यति फलैकत्वात् स पश्यति सम्यक् पश्यतीत्यर्थः — ॥ ५ ॥
ஆகையால் ஸாங்கிய யோகம், கர்ம யோகம் இரண்டிற்கும் பயன் ஒன்றாகவே இருப்பதால் இரண்டும் ஒன்றேஎன்று பார்க்கிறானோ அவன் நன்றாக அறிந்தவனாகிறான் என்பது கருத்து.
இவ்வாறு கர்மயோகத்தைக் காட்டிலும் ஞானயோகமே மேலானதாய் இருப்பதால் எதனால் இவ்வாறு குறிப்பிட்டார். तयोस्तु कर्मसंन्यासात् कर्मयोगो विशिष्यते (தயோஸ்து கர்ம ஸந்நியாஸாத் கர்ம யோகா விசிஷ்யதே) ஞான யோகத்தைக் காட்டிலும் கர்மயோகமே மேல் என்று.
शृणु तत्र कारणम् — त्वया पृष्टं केवलं कर्मसंन्यासं कर्मयोगं च अभिप्रेत्य तयोः अन्यतरः कः श्रेयान् इति । तदनुरूपं प्रतिवचनं मया उक्तं कर्मसंन्यासात् कर्मयोगः विशिष्यते इति ज्ञानम् अनपेक्ष्य ।
அதில் காரணத்தைக் கேள். கேவலம் கர்ம ஸந்நியாஸம் கேவலம் கர்மயோகத்தை அபிப்பிராயமாகக் கொண்டு அவை இரண்டினுள் எது மேலானது என்று உன்னால் கேட்கப்பட்டது. அதை வைத்து அதற்கு தகுந்தவாறு ஞானமற்றகர்ம ஸந்நியாஸத்தைக் காட்டிலும் கர்மயோகம் மேல் என்று அதற்குப் பதில் கூறப்பட்டது.
ज्ञानापेक्षस्तु संन्यासः साङ्ख्यमिति मया अभिप्रेतः । परमार्थयोगश्च स एव ।
ஏனெனில் ஞானத்துடன் கூடிய ஸந்நியாஸமே ஸாங்கியம் என் பது எனது அபிப்பிராயம். அதுதான் உண்மையான யோகம், அது பரமார்த்த யோகம் எனப்படும்.
यस्तु कर्मयोगः वैदिकः स च तादर्थ्यात् योगः संन्यास इति च उपचर्यते । कथं तादर्थ्यम् इति उच्यते
எந்த வைதிக (நிஷ்காம) கர்மயோகமோ அது ஞானயோகத்திற்கு ஸாதனமாய் இருப்பதால் உபசாரமாக யோகம் என்றும் ஸந்நியாஸம் என்றும் கூறப்படுகிறது எவ்வாறு அதற்கு ஸாதனமாகும் என்பதைக் கூறுகிறார்.
संन्यासस्तु महाबाहो दुःखमाप्तुमयोगतः ।
योगयुक्तो मुनिर्ब्रह्म नचिरेणाधिगच्छति ॥ ६ ॥
ஸந்ந்யாஸஸ்து மஹா பாஹோ துக்கமாப்துமயோகத: ।
யோகயுக்தோ முனிர் ப்ரஹ்ம நசிரேணாதி கச்சதி ॥ 6 ॥
संन्यासस्तु पारमार्थिकः हे महाबाहो दुःखम् आप्तुं प्राप्तुम् अयोगतः योगेन विना ।
கர்மயோகம் இல்லாமல் பாரமார்த்திக சந்நியாசத்தை அடைவது மிகக்கடினமானது.
योगयुक्तः वैदिकेन कर्मयोगेन ईश्वरसमर्पितरूपेण फलनिरपेक्षेण युक्तः, मुनिः मननात् ईश्वरस्वरूपस्य मुनिः, ब्रह्म — परमात्मज्ञाननिष्ठालक्षणत्वात् प्रकृतः संन्यासः ब्रह्म उच्यते,
‘न्यास इति ब्रह्मा ब्रह्मा हि परः’ (तै. ना. ७८) इति श्रुतेः — ब्रह्म परमार्थसंन्यासं परमार्थज्ञाननिष्ठालक्षणं नचिरेण क्षिप्रमेव अधिगच्छति प्राप्नोति । अतः मया उक्तम्
‘कर्मयोगो विशिष्यते’ (भ. गी. ५ । २) इति ॥ ६ ॥
பலத்தில் இச்சையற்று ஈஸ்வரார்ப்பணரூபமாக வைதிக கர்மயோ கத்தை உடைய மனனத்தினால் ஈஸ்வர ரூபமான முனி பிரஹ்மம் எனப் படுவர். ஏன் எனில் பரமாத்ம ஞான லக்ஷணத்தோடு கூடிய ஸந்நியா ஸம் பிரஹ்மம் என்று கூறப்படுகிறது. न्यास इति ब्रह्मा ब्रह्मा हि परः (நியாஸ இதி பிரஹ்ம, பிரஹ்ம்ம ஹி பர: என்று சுருதியில் கூறப்பட்டுள்ளதால், பிரஹ்மம் என்று வர்ணிக்கப்பட்ட பரமாத்ம் ஞானநிஷ்ட்டா லக்ஷணத்தோடு கூடிய பரமார்த்த ஸந்நியாஸத்தை அதி விரைவாக அடைகிறான், ஆகையால் कर्मयोगो विशिष्यते (கர்மயோகோ விசிஷ்யதே) என்று கர்மயோகம் மேலானது என்று கூறப்பட்டது.
यदा पुनः अयं सम्यग्ज्ञानप्राप्त्युपायत्वेन —
மறுபடியும் எப்பொழுது இவன் ஸம்யக்தரிசனம் பெறுவதற்கு உபாயமாக-
योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः ।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते ॥ ७ ॥
யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்திரிய: ।
ஸர்வபூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே ॥ 7 ॥
योगेन युक्तः योगयुक्तः, विशुद्धात्मा विशुद्धसत्त्वः, विजितात्मा विजितदेहः, जितेन्द्रियश्च, सर्वभूतात्मभूतात्मा सर्वेषां ब्रह्मादीनां स्तम्बपर्यन्तानां भूतानाम् आत्मभूतः आत्मा प्रत्यक्चेतनो यस्य सः सर्वभूतात्मभूतात्मा सम्यग्दर्शीत्यर्थः
கர்மயோகத்துடன் கூடியவன், சுத்த அந்தக்கரணமுடையவன், சரீரத்தை ஜெயித்தவன், இந்திரியங்களை ஜெயித்தவன், சர்வ பூதாத் மாவாயும் என்றால் பிரஹ்ம்மா முதல் ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லாப் பிராணிகளுக்கும் பிரத்யக்சேதன ஆத்மாவாக எவனுக்குள்ளதோ அவன் ஸம்யக்தர்சீ எனப்படுவான். (யதார்த்த ஞானியாவான்)
स तत्रैवं वर्तमानः लोकसङ्ग्रहाय कर्म कुर्वन्नपि न लिप्यते न कर्मभिः बध्यते इत्यर्थः ॥ ७ ॥
இந்த ஸ்திதியில் (நிலையில்) இருக்கின்றஅந்த புருஷன் லோக ஸங்கிரஹார்த்தம் கர்மம் செய்தாலும் அவனை ஒட்டுவதில்லை. அவன் கர்மங்களால் கட்டுப்படுத்தப்படமாட்டான் என்பது பொருள்.
न च असौ परमार्थतः करोतीत्यतः —
அவன் உண்மையில் ஒன்றும் செய்யவில்லை. அதனால்-
नैव किञ्चित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्शृण्वन्स्पृशञ्जिघ्रन्नश्नन्गच्छन्स्वपञ्श्वसन् ॥ ८ ॥
நைவகிஞ்சித் கரோமீதி யுக்தோமன்யேத தத்த்வவித் ।
பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்ரந்அச்னன் கச்சன் ஸ்வபன் சவஸன் ॥ 8 ॥
प्रलपन् विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥ ९ ॥
ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹணன் உன்மிஷன் நிமிஷன்னபி ।
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயன் ॥ 9 ॥
नैव किञ्चित् करोमीति युक्तः समाहितः सन् मन्येत चिन्तयेत् , तत्त्ववित् आत्मनो याथात्म्यं तत्त्वं वेत्तीति तत्त्ववित् परमार्थदर्शीत्यर्थः ॥
ஆத்மாவின் யதார்த்த தத்துவத்தை அறிந்த தத்வவித் மனதை ஒருநிலைப்படுத்திக்கொண்டு நான் ஒன்றும் செய்வதில்லை என்று நினைக்கிறான், தத்வவித் என்றால் பரம்பொருளைப் பார்ப்பவர் (பரமார்த்ததர்சீ) என்று பொருள்.
कदा कथं वा तत्त्वमवधारयन् मन्येत इति, उच्यते — पश्यन्निति । मन्येत इति पूर्वेण सम्बन्धः ।
தத்துவத்தை நன்றாக அறிந்தவன் என்று எப்பொழுது எவ்வாறு கொள்ளவேண்டும்? என்று கூறுவோம்.
यस्य एवं तत्त्वविदः सर्वकार्यकरणचेष्टासु कर्मसु अकर्मैव, पश्यतः सम्यग्दर्शिनः तस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारः, कर्मणः अभावदर्शनात् ।
இவ்வாறு தத்துவவித் எல்லா காரியகரண சேஷ்ட்டைகளான கர் மங்களில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அந்த ஸம்யக்தர்சியே ஸர்வ கர்ம ஸந்நியாஸத்திற்கு அதிகாரி. ஏனெனில் கர்மத்தில் அபாவதர்ச னம் காண்பதால்.
न हि मृगतृष्णिकायाम् उदकबुद्ध्या पानाय प्रवृत्तः उदकाभावज्ञानेऽपि तत्रैव पानप्रयोजनाय प्रवर्तते ॥ ९ ॥
ஏன் எனில், கானல் நீரைப் பார்த்து ஜலம் என்று நினைத்து அதைக் குடிப்பதற்கு முயல்பவன் அது அங்கு உண்மையில் ஜலம் இல்லை என்று அறிந்ததும் அங்கு தண்ணீர் அருந்துவதற்காக பிர விர்த்திப்பது இல்லை.
यस्तु पुनः अतत्त्ववित् प्रवृत्तश्च कर्मयोगे —
மேலும் அவன் தத்துவஞானியல்ல. அவன் கர்மயோகத்தை மேற் கொள்ளுகிறான்.
ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः ।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवाम्भसा ॥ १० ॥
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய: ।
லிப்யதே ந ஸ பாபேன பத்மபத்ரமிவாம்பஸா ॥ 10 ॥
ब्रह्मणि ईश्वरे आधाय निक्षिप्य ‘तदर्थं कर्म करोमि’ इति भृत्य इव स्वाम्यर्थं सर्वाणि कर्माणि मोक्षेऽपि फले सङ्गं त्यक्त्वा करोति यः सर्वकर्माणि, लिप्यते न स पापेन न सम्बध्यते पद्मपत्रमिव अम्भसा उदकेन ॥ १० ॥
வேலைக்காரன் தன்னுடைய முதலாளிக்குச் செய்வது போல ஈஸ்வரனுக்காக கர்மங்கள் செய்கிறேன் என்று எல்லாக் கர்மங்களையும் ஈஸ்வரனிடம் அர்ப்பணித்து, மோக்ஷ பலமானாலும் அதில் பற்றற்று எவன் ஒருவன் எல்லாக் கர்மங்களையும் செய்கிறானோ அவனைப் பாபமானது தாமரை இலை தண்ணீரைப் போல பற்றாது.
केवलं सत्त्वशुद्धिमात्रमेव फलं तस्य कर्मणः स्यात्- यस्मात् —
அந்த கர்மத்திற்கு சித்த சுத்தி மாத்திரமே பலமாக இருக்கலாம் - ஏனெனில்
कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि ।
योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये ॥ ११ ॥
காயேன மனஸா புத்த்யா கேவலை ரிந்த்ரியை ரபி ।
யோகின: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம சுத்தயே ॥ 11 ॥
कायेन देहेन मनसा बुद्ध्या च केवलैः ममत्ववर्जितैः ‘ईश्वरायैव कर्म करोमि, न मम फलाय’ इति ममत्वबुद्धिशून्यैः इन्द्रियैरपि — केवलशब्दः कायादिभिरपि प्रत्येकं सम्बध्यते — सर्वव्यापारेषु ममतावर्जनाय । योगिनः कर्मिणः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वा फलविषयम् आत्मशुद्धये सत्त्वशुद्धये इत्यर्थः ।
கேவலம் என்றால் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனுக்காகவே எனக்கு அல்ல என்பது. யோகிகள் கேவலம் என்று குறிப்பிடப்படும் எல்லாக் கர்மங்களும் ஈஸ்வரனின் பொருட்டே அன்று எனக்கு அல்ல என்ற பாவனையுடன் மமத்துவ புத்தி அற்றவர்களாய், அவ்வாறேசரீரம், மனது, புத்தி மற்றும் இந்திரியங்கள் மூலமாக ஏற்படும் பலத்தில் உள்ள பற்றுதல்களை விட்டு அந்தக் கரண சுத்திக்காக கர் மம் செய்கிறார்கள். எல்லாக் கிரியைகளிலும் மமதை நிஷேதிக்கப்படு வதால் கேவல, சப்தமானது சரீரம் முதலிய எல்லாவற்றுடனும் சம்மந்திக்கிறது.
तस्मात् तत्रैव तव अधिकारः इति कुरु कर्मैव ॥ ११ ॥
ஆதலால் உனக்கு கர்மத்திலேயே அதிகாரம் என்பதால் கர்மத்தையே செய்யவேண்டும்.
यस्माच्च —
- ஏனெனில்
युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् ।
अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते ॥ १२ ॥
யுக்த: கர்மபலம் த்யக்த்வா சாந்திமாப்னோதி நைஷ்டிகீம் ।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே ॥ 12 ॥
युक्तः ‘ईश्वराय कर्माणि करोमि न मम फलाय’ इत्येवं समाहितः सन् कर्मफलं त्यक्त्वा परित्यज्य शान्तिं मोक्षाख्याम् आप्नोति नैष्ठिकीं निष्ठायां भवां ।
எல்லாக்கர்மங்களும் ஈஸ்வரனுக்கே. என்னுடைய பலத்தின் பொருட்டு அன்று என்று மனதை நிலைநிறுத்திக்கொண்டு கர்மபலத்தை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையால் மோக்ஷம் எனப்படும் சாந்தியை அடைகிறான்.
सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासज्ञाननिष्ठाक्रमेणेति वाक्यशेषः ।
இங்கு முதலில் அந்தக்கரண சுத்தி, பின் ஞானப்ராப்தி அதன்பின் கர்ம சந்நியாச ரூப ஞானநிஷ்ட்டையின் பிராப்த்தி இந்த பிரகாரம் க்ரமமாக சாந்தியை அடைகிறான் என்பது வாக்கியத்தில் தொக்கி நிற்கிறது.
यस्तु पुनः अयुक्तः असमाहितः कामकारेण करणं कारः कामस्य कारः कामकारः तेन कामकारेण, कामप्रेरिततयेत्यर्थः, ‘मम फलाय इदं करोमि कर्म’ इत्येवं फले सक्तः निबध्यते । अतः त्वं युक्तो भव इत्यर्थः ॥ १२ ॥
மேலும் எவனது மனம் ஒருநிலைப்படவில்லையோ அவன் காமத்தினால் பிரேரிக்கப்பட்டு என்னுடைய பலத்தின் பொருட்டு இந்த கர்மத்தைச் செய்கிறேன் என்று இவ்வாறு பலத்தில் ஆசை உள் ளவனாகி பந்தப்படுகிறான். ஆகையால் நீ கர்மயோகத்தில் ஒரு நிலைப்பட்ட மனத்தினை உடையவனாகி இரு என்பது பொருள்.
यस्तु परमार्थदर्शी सः —
எவன் பரமார்த்த தர்சியோ (யதார்த்த ஞானியோ) அவன் -
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी ।
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् ॥ १३ ॥
ஸர்வகர்மாணி மனஸா ஸன்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ ।
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந் ந காரயன் ॥ 13 ॥
सर्वाणि कर्माणि सर्वकर्माणि संन्यस्य परित्यज्य नित्यं नैमित्तिकं काम्यं प्रतिषिद्धं च तानि सर्वाणि कर्माणि मनसा विवेकबुद्ध्या, कर्मादौ अकर्मसन्दर्शनेन सन्त्यज्येत्यर्थः, आस्ते तिष्ठति सुखम् ।
எல்லாக் கர்மங்களும் என்றால் நித்ய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்தம் முதலிய கர்மாக்கள். அந்த எல்லாக் கர்மங்களையும் விவேக புத்தியால் கர்மங்களில் அகர்மத்தைப் பார்ப்பதின் வாயிலாக திடமாக தியாகம் செய்து சுகமாக (ஆனந்தமாக) இருக்கிறான்.
त्यक्तवाङ्मनःकायचेष्टः निरायासः प्रसन्नचित्तः आत्मनः अन्यत्र निवृत्तसर्वबाह्यप्रयोजनः इति ‘सुखम् आस्ते’ इत्युच्यते ।
மனம், வாக்கு, காயங்களின் செயல்களைத் துறந்தவன் ஆயாசம் அற்றவன் தெளிந்த மனதுடையவன் மற்றவெளியில் தோன்றும் பிரயோஜனங்களில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்கிறான் என்று கூறப்பட்டது.
वशी जितेन्द्रिय इत्यर्थः । क्व कथम् आस्ते इति, आह —
வசி என்றால் இந்திரியங்களை ஜெயித்தவன் என்று பொருள். எங்கு எப்படி இருப்பானென்று கூறுகிறார்.
नवद्वारे पुरे । सप्त शीर्षण्यानि आत्मन उपलब्धिद्वाराणि, अवाक् द्वे मूत्रपुरीषविसर्गार्थे, तैः द्वारैः नवद्वारं पुरम् उच्यते शरीरम् , पुरमिव पुरम् , आत्मैकस्वामिकम् , तदर्थप्रयोजनैश्च इन्द्रियमनोबुद्धिविषयैः अनेकफलविज्ञानस्य उत्पादकैः पौरैरिव अधिष्ठितम् । तस्मिन् नवद्वारे पुरे देही सर्वं कर्म संन्यस्य आस्ते ।
ஒன்பது வாயில்கள் உள்ள நகரத்தில் வசிக்கிறான். இதன் அபிப் பிராயம் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்குத்துவாரங்கள் இரண்டு, ஒருவாய் ஆகிய இந்த ஏழுவாயில்னகளும் ஆத்மா சப்தாதி விஷயங்களை உணர்வதற்கான வாயில்களாய் இருப்பதால் சிரஸில் இருக்கிறது. மல, மூத்திராதிகளை விடுவதற்கான வழிகள் சரீரத்தின் கீழ்பாகத்தில் உள்ளன. இவ்வாறு ஒன்பது துவாரங்களை உடையதாக இருப்பதால் சரீரம் புரம் என்று கூறப்படுகிறது. சரீரமும் ஒரு புரம் போல் காணப்படுகிறது. அதனுடைய எஜமானன் ஆத்மா. இந்த ஆத்மாவிற் குத்தான் எல்லா பலன்களும் அவ்வாறேஅநேக பலன்களையும், விக்ஞானத்தையும் உற்பத்தி செய்கிறதாய் இருக்கிறது. இந்த இந்திரிய, மன, புத்தி மேலும் விஷய ரூப புரவாசிகளுடன் கூடி இருக்கிறது. அந்த ஒன்பது வாயில்களுடைய புரமாகிய தேஹத்தில் தேஹியானவன் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்து தங்கி இருக்கிறான்.
किं विशेषणेन ? सर्वो हि देही संन्यासी असंन्यासी वा देहे एव आस्ते ; तत्र अनर्थकं विशेषणमिति ।
இந்த விசேஷணத்தால் ஆவதென்ன? எல்லா தேஹியும் ஸந்நி யாஸியானாலும், ஸந்நியாஸி அற்றவனானாலும் தேஹத்தில் தான் தங்கி இருக்கிறார்கள். இந்த இடத்தில் விசேஷணம் பிரயோஜனம் அற்றதாகும். (வியர்த்தமாகும்)
उच्यते — यस्तु अज्ञः देही देहेन्द्रियसङ्घातमात्रात्मदर्शी स सर्वोऽपि ‘गेहे भूमौ आसने वा आसे’ इति मन्यते । न हि देहमात्रात्मदर्शिनः गेहे इव देहे आसे इति प्रत्ययः सम्भवति ।
இவ்வாறு கூறப்படுகிறது. ஜீவன், தேஹம் இந்திரியம் இவைக ளையுடைய சேர்க்கையை மாத்திரமே ஆத்மாவாக அறியும் அக்ஞானி அவை எல்லாம் சேர்ந்து வீட்டில், பூமியில் அல்லது இருக் கையில் தங்கி இருக்கிறேன் என்று நினைக்கின்றான், ஏனெனில் தேஹ மாத்திரத்தில் ஆத்மபுத்தியுடைய அக்ஞானி களுக்கு வீட்டில் இருப்பதுபோல் சரீரத்தில் இருக்கின்றேன் என்ற ஞானம் ஏற்படாது.
देहादिसङ्घातव्यतिरिक्तात्मदर्शिनस्तु ‘देहे आसे’ इति प्रत्ययः उपपद्यते ।
ஆனால் தேஹாதி சங்காதத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்தவனுக்கு நான் சரீரத்தில் இருக்கிறேன் என்ற ஞானம் ஏற்படும்.
परकर्मणां च परस्मिन् आत्मनि अविद्यया अध्यारोपितानां विद्यया विवेकज्ञानेन मनसा संन्यास उपपद्यते ।
அவ்வாறே அசங்க ஆத்மாவிடத்தில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட மற்றொன்றின் (தேஹேந்திரியங்களின்) கர்மாக் களுக்கு விவேக ஞானத்தினால் மனதளவில் சந்நியாசம் கூடும்.
उत्पन्नविवेकज्ञानस्य सर्वकर्मसंन्यासिनोऽपि गेहे इव देहे एव नवद्वारे पुरे आसनम् प्रारब्धफलकर्मसंस्कारशेषानुवृत्त्या देह एव विशेषविज्ञानोत्पत्तेः ।
விவேக ஞானம் பெற்றசர்வகர்ம சந்நியாசி ஆயினும் வீட்டில் போல் இந்த நவத்துவாரத்துடன் கூடிய புரமாகிய சரீரத்தில் இருக்கி றேன் என்ற எண்ணம் பிராரப்த கர்ம சம்ஸ்காரத்தின் மிச்சத்தின் தொடர்ச்சியால் ஏற்படுகிறது. ஏனெனில் தேஹத்தில் அல்லவா விசேஷ விக்ஞானம் ஏற்படுகிறது.
देहे एव आस्ते इति अस्त्येव विशेषणफलम् , विद्वदविद्वत्प्रत्ययभेदापेक्षत्वात् ॥
ஆகையால் ஞானி, அக்ஞானி இவர்களுடைய எண்ணங்களின் பேதத்தை அபேக்ஷித்து தேஹத்திலேயே தங்கி இருக்கிறான் என்ற விசேஷணத்திற்கு அவசியம் பலன் இருக்கிறது.
यद्यपि कार्यकरणकर्माणि अविद्यया आत्मनि अध्यारोपितानि ‘संन्यस्यास्ते’ इत्युक्तम् , तथापि आत्मसमवायि तु कर्तृत्वं कारयितृत्वं च स्यात् इति आशङ्क्य आह —
காரிய அவித்யையினால் ஆத்மாவினிடத்தில் ஏற்றப்பட்ட காரிய, கரணங்களின் கர்மங்களை (செயல்களை) தியாகம் செய்தவனாய் இருந்தாலும், ஆத்மாவுடன் நித்ய சம்பந்தமுடைய நான் செயல்படு பவன், செயல்படுத்துபவன் என்றதன்மை இருக்கலாமே என்று சங்கித் துக் கூறுகிறார்.
नैव कुर्वन् स्वयम् , न च कार्यकरणानि कारयन् क्रियासु प्रवर्तयन् ।
நான் கிரியைகளில் பிரவிர்த்தித்துக் கொண்டு செயல்படு பவனும் இல்லை. காரிய காரணங்களை (சரீர இந்திரியங்களை) செயல்படுத்துபவனும் இல்லை.
किं यत् तत् कर्तृत्वं कारयितृत्वं च देहिनः स्वात्मसमवायि सत् संन्यासात् न सम्भवति, यथा गच्छतो गतिः गमनव्यापारपरित्यागे न स्यात् तद्वत् ? किं वा स्वत एव आत्मनः न अस्ति इति ।
நடப்பவனுடைய நடத்தல் செயலானது நடத்தல் என்ற வியாபா ரத்தை (செயலை) விட்டதினால் இல்லாமல் போகிறது. அவ்வாறே தேஹியானவன் செய்பவன், செய்விப்பவன் என்ற சமவாயித்தன்மை (நித்யசம்பந்தத் தன்மை)யின் ஸந்நியாஸத்தினால் ஆத்மாவிடத்தில் ஒன்றியிருத்தல் ஏற்படவில்லையா அல்லது சுயமாகவே ஆத்மா விற்கு (அந்த சம்பந்தம்) இல்லையா? என்பது
இங்கு கூறப்படுகிறஆத்மாவிற்கு சுயமாகவே செய்பவன், செய் விப்பவன் என்றதன்மை கிடையாது. சுருதியிலும் ஸ்மிருதியிலும் கூறப்பட்டுள்ளது. अविकार्योऽयमुच्यते (அவிகார்யோ அயமுச்யதே) शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते (சரீரஸ்தோபி கெள்ந்தேய ந கரோதி ந லிப்யதே) ध्यायतीव लेलायतीव (த்யாயதீவ லேலாயதீவ) என்று.
किञ्च—
மேலும்
न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः ।
न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते ॥ १४ ॥
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு: ।
ந கர்ம பல ஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே ॥ 14 ॥
न कर्तृत्वं स्वतः कुरु इति नापि कर्माणि रथघटप्रासादादीनि ईप्सिततमानि लोकस्य सृजति उत्पादयति प्रभुः आत्मा । नापि रथादि कृतवतः तत्फलेन संयोगं न कर्मफलसंयोगम् ।
ஆத்மாவானது கர்த்தா தன்மையை அடை (செய்பவனுடைய தன்மையை அடை) என்று கூறவில்லை. அவ்வாறே கர்மம்செய் என்றும் விதிக்கவில்லை. ஒருவன் விரும்பும் வண்டிகள், பானைகள், வீடுகள் முதலியவற்றையும் உலகத்தோருக்காக உண்டு பண்ணுவ தில்லை. அவ்வாறேவண்டி முதலியவைகளை செய்பவனை அதன் பலன்களோடு இணைப்பதும் இல்லை.
यदि किञ्चिदपि स्वतः न करोति न कारयति च देही, कः तर्हि कुर्वन् कारयंश्च प्रवर्तते इति, उच्यते ।
தேஹியானவன் தானாக கொஞ்சமும் செய்யவில்லை, செய்விப் பதும் இல்லையெனில் எவர்தான் செய்துகொண்டும், செய்வித்துக் கொண்டும் பிரவிர்த்திக்கிறார் என்பதைக் கூறுகிறார்.
சுவபாவ: என்றால் இயற்கை. தன்னுடைய பாவம் அதனுடைய ஸ்வரூபம் அவித்யா. அவித்யா லக்ஷணம் மாயா, ப்ரக்ருதி. இதுவே பிரவிருத்திக்கிறது. தைவீ ஹி, முதலிய ஸ்லோகங்களால் மேலே கூறப்போகிறார்.
परमार्थतस्तु —
உண்மையில்
नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः ।
अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ॥ १५ ॥
நாதத்தே கஸ்ய சித்பாபம் நசைவ ஸுக்ருதம் விபு: ।
அஜ்ஞானேநாவ்ருதம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ: ॥ 15 ॥
न आदत्ते न च गृह्णाति भक्तस्यापि कस्यचित् पापम् । न चैव आदत्ते सुकृतं भक्तैः प्रयुक्तं विभुः ।
விபுவானவர் (சர்வவ்யாபி) எந்த ஒரு பக்தனுடைய பாபத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவ்வாறேபக்தர்களால் அர்ப்பணிக்கப் பட்ட புண்ணியத்தையும் ஏற்பதில்லை.
किमर्थं तर्हि भक्तैः पूजादिलक्षणं यागदानहोमादिकं च सुकृतं प्रयुज्यते इत्याह —
அவ்வாறாகில் எதன் பொருட்டு பூஜை முதலிய நற்கர்மங்களை யும் யாகம், தானம், ஹோமம் முதலிய புண்ய கர்மாக்களையும் ஏன் அர்ப்பணிக்கிறார்கள் (செய்கிறார்கள்) இதைக் குறித்துக் கூறுகிறார்.
अज्ञानेन आवृतं ज्ञानं विवेकविज्ञानम् , तेन मुह्यन्ति ‘करोमि कारयामि भोक्ष्ये भोजयामि’ इत्येवं मोहं गच्छन्ति अविवेकिनः संसारिणो जन्तवः ॥ १५ ॥
அக்ஞானத்தினால் மறைக்கப்பட்ட விவேக ஞானத்தினால் நான் செய்கிறேன், செய்விக்கிறேன் என்றும் அனுபவக்கிறேன், அனுபவிக்கச் செய்கிறேன் என்று இவ்வாறாக அவிவேகிகளான சம்சாரி ஜீவர்கள் மோஹமடைகிறார்கள்.
ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः ।
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् ॥ १६ ॥
ஜ்ஞானேந்து ததஜ்ஞானம் யேஷாம் நாசித மாத்மன: ।
தேஷாமாதித்யவ ஜ்ஞானம் ப்ரகாசயதி தத்பரம் ॥ 16 ॥
ज्ञानेन तु येन अज्ञानेन आवृताः मुह्यन्ति जन्तवः तत् अज्ञानं येषां जन्तूनां विवेकज्ञानेन आत्मविषयेण नाशितम् आत्मनः भवति, तेषां जन्तूनाम् आदित्यवत् यथा आदित्यः समस्तं रूपजातम् अवभासयति तद्वत् ज्ञानं ज्ञेयं वस्तु सर्वं प्रकाशयति तत् परं परमार्थतत्त्वम् ॥ १६ ॥
எந்த அக்ஞானத்தால் மறைக்கப்பட்டு பிராணிகள் மோஹம் டைந்துள்ளார்களோ, அந்த அக்ஞானமானது ஆத்மவிஷயமான விவேக விக்ஞானத்தினால் நசிக்கப்பட்ட பொழுது எவ்வாறு சூரியன் உலகில் உள்ள எல்லா பொருள்களையும் விளங்கச் செய்கிறதோ அவ்வாறு அந்த ஞானமானது ஞேய வஸ்துவாகிய (ஆத்ம ஸ்வரூபத்தை) பரமார்த்த தத்துவத்தை முழுவதையும் விளங்கச் செய்கிறது.
यत् परं ज्ञानं प्रकाशितम् —
மேலான ஞானத்தால் பிரகாசிக்கப்பட்டது எதுவோ
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः ।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः ॥ १७ ॥
தத்புத்தயஸ்ததாத்மானஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா: ।
கச்சந்த்ய புனராவ்ருத்திம் ஜ்ஞான நிர்தூத கல்மஷா: ॥ 17 ॥
तस्मिन् ब्रह्मणि गता बुद्धिः येषां ते तद्बुद्धयः, तदात्मानः तदेव परं ब्रह्म आत्मा येषां ते तदात्मानः, तन्निष्ठाः निष्ठा अभिनिवेशः तात्पर्यं सर्वाणि कर्माणि संन्यस्य तस्मिन् ब्रह्मण्येव अवस्थानं येषां ते तन्निष्ठाः ।
அதிலேயே புத்தியை செலுத்தியவர்கள் எவர்களோ அவர்கள் அந்த புத்தி உடையவர்கள். அவர்களே தத்புத்தய: அதுவே அந்த பரப்ரஹ்மமே ஆத்மா எவர்களுக்கோ அவர்கள் ததாத்மான: அந்த பரப்பிரஹ்மமே எவர்களுக்கு திடமான நிஷ்ட்டையோ அவர்கள் தந்நிஷ்டா: இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லாக் கர்மங்க ளையும் தியாகம் செய்துவிட்டு பிரஹ்ம்மத்திலேயே நிலைத்திருத்தல் எவர்களோ அவர்கள் தந்நிஷ்ட்டா:
तत्परायणाश्च तदेव परम् अयनं परा गतिः येषां भवति ते तत्परायणाः केवलात्मरतय इत्यर्थः । येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते गच्छन्ति एवंविधाः अपुनरावृत्तिम् अपुनर्देहसम्बन्धं ज्ञाननिर्धूतकल्मषाः यथोक्तेन ज्ञानेन निर्धूतः नाशितः कल्मषः पापादिसंसारकारणदोषः येषां ते ज्ञाननिर्धूतकल्मषाः यतयः इत्यर्थः ॥ १७ ॥
எவர்களுக்கு அதுவே மேலான கதியாம் (புகலிடமாய்) இருக்கி றதோ அவர்கள் தத்பராயணா: ஆத்மா ஒன்றிலேயே ரமிப்பவர்கள். எவர்களுக்கு அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் ஞானத்தால் நாசம் செய்யப்பட்டதோ அதனால் அவர்களுடைய சம்சாரமும், அதனுடைய காரண ரூபமான பாபம் முதலிய தோஷங்களும் ஞானத்தினால் நஷ்ட்டமானதால் அவர்கள் ஞானநிர்தூத கல்மஷா:, அவர்கள் சந்நியாசிகள். அவர்கள் புனராவிர்த்தி அற்றவர்கள். புனராவ்ருத்தி என்றால் மறுஜென்மம் எடுத்தல். மறு ஜன்மம் எடுத்தற்குரிய காரணம் (அக்ஞானம்) அற்றதால் அபுனாராவ்ருத்தி உடையவர்கள். (திருப்புதல் இல்லாதவர்கள்)
येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते पण्डिताः कथं तत्त्वं पश्यन्ति इत्युच्यते —
எவர்களுக்கு ஞானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் நாசம் ஆகிவிட்டதோ அவர்கள் பண்டிதர்கள். அவர்கள் எவ்வாறு தத்துவத்தைக் காண்கிறார்கள் என்று கூறுகிறார்-
विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥
வித்யா வினய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி ।
சுனி சைவ ச்வபாகேச பண்டிதா: ஸமதர்சின: ॥ 18 ॥
विद्याविनयसम्पन्ने विद्या च विनयश्च विद्याविनयौ, विनयः उपशमः, ताभ्यां विद्याविनयाभ्यां सम्पन्नः विद्याविनयसम्पन्नः विद्वान् विनीतश्च यो ब्राह्मणः तस्मिन् ब्राह्मणे गवि हस्तिनि शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ।
வித்தையும், வினயமும் எவனுக்குள்ளதோ அவன் வித்யாவின யசம்பன்னன். வித்யா என்றால் ஆத்ம அறிவு. வினயம் என்றால் உபரமம் (சாந்தி). வித்யா, வினயம் இவைகளுடன் கூடிய வித்வானா கிய சாந்த புருஷனாகிய பிராஹ்மணன், வைதிக பிராஹ்மணன், பசு, யானை, நாய் மற்றும் சண்டாளன் முதலிய எல்லோரிடத்திலும் பண்டிதர்கள் சமபாவனை உடையவர்களாய் இருப்பார்கள்.
विद्याविनयसम्पन्ने उत्तमसंस्कारवति ब्राह्मणे सात्त्विके, मध्यमायां च राजस्यां गवि, संस्कारहीनायां अत्यन्तमेव केवलतामसे हस्त्यादौ च, सत्त्वादिगुणैः तज्जैश्च संस्कारैः तथा राजसैः तथा तामसैश्च संस्कारैः अत्यन्तमेव अस्पृष्टं समम् एकम् अविक्रियं तत् ब्रह्म द्रष्टुं शीलं येषां ते पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥
உத்தம ஸம்ஸ்காரத்துடன் கூடிய வித்யாவினய சம்பன்னன், சாத்வீக குணமுடைய உத்தமமான வைதிக பிராஹ்மணன், ரஜோ குணமுடைய வைதிக சம்ஸ்காரமற்றமத்யமமான ஆவினிடத்தும் (பசுவினிடத்தும்), அதமமாயுள்ள தாமஸ குணமுடைய யானை முதலியவற்றினிடத்தும் சத்துவாதி குணங்களும் அவற்றால் உண்டாகும் சம்ஸ்காரங்களும் அவ்வாறேராஜசம், தாமஸம் குணங்க ளினால் உண்டாகும் ஸம்ஸ்காரங்கள் இவைகளினால் சிறிதும் ஒட்டாமல் எல்லாவற்றையும் சமமாகவும் ஏகமாயும் நிர்விகார மாயுள்ள பிரஹ்மமாக காண்பது எவர்களுக்கு சுபாவமாக உள்ளதோ அவர்கள் பண்டிதர்களாகிய ஸமதர்சிகள்.
ननु अभोज्यान्नाः ते दोषवन्तः, ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २० ; १७ । १८) इति स्मृतेः ।
அப்படியானால் (சாத்வீக, ராஜஸ, தாமஸ ஸம்ஸ்காரமுடையவர் களிடத்து ஸமதர்சீயாக உள்ளவர்கள்) புஜிக்கக்கூடாத அன்னத்தைப் புஜிப்பதால் தோஷமுடையவர்கள் ஆவார்கள். இதற்கு ஸ்மிருதியில் பிரமாணம் உள்ளது. என்னவெனில் சமானமானவனுக்கு சமமில்லாமலும், சமம் இல்லாதவனுக்கு சமமாயும் மரியாதை செய்ததினால் தோஷம் ஏற்படும். (தோஷம் ஏற்பட்ட அன்னத்தைப் புஜிக்கக்கூடாது)
न ते दोषवन्तः । कथम् ? —
(சமதர்சிகளாகிய பண்டிதர்களுக்கு) அவர்களுக்கு தோஷ மில்லை. எவ்வாறு.
इहैव तैर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः ।
निर्दोषं हि समं ब्रह्म तस्माद्ब्रह्मणि ते स्थिताः ॥ १९ ॥
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மன: ।
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மாணி தே ஸ்திதா: ॥ 19 ॥
इह एव जीवद्भिरेव तैः समदर्शिभिः पण्डितैः जितः वशीकृतः सर्गः जन्म, येषां साम्ये सर्वभूतेषु ब्रह्मणि समभावे स्थितं निश्चलीभूतं मनः अन्तःकरणम् ।
எவர்களுடைய மனமானது சலனமற்று எல்லா பூதங்களிடத்தும் பிரஹ்ம ரூபமாக சமபாவனையுடன் நிலைத்ததோ அந்த சமதர்சியாகிய பண்டிதன் ஜீவித்திருக்கும் பொழுதே ஜென்மாவை ஜெயிக்கிறான். (அப்படியென்றால் மறு ஜென்மம் கிடையாது என்பது பொருள்)
निर्दोषं यद्यपि दोषवत्सु श्वपाकादिषु मूढैः तद्दोषैः दोषवत् इव विभाव्यते, तथापि तद्दोषैः अस्पृष्टम् इति निर्दोषं दोषवर्जितं हि यस्मात् ।
(பிரஹ்மம்) தோஷமற்றதாய் இருந்தாலும், மூடர்கள் தோஷத்துடன் கூடியதாக நாய் முதலியவைகளில் தோஷம் இருப்பதுபோல் பாவிக்கி றார்கள். (நினைக்கிறார்கள்) அப்படி இருந்தாலும் தோஷம் அவர்களை அண்டுவது இல்லை. ஏனெனில் தோஷமற்றதாய் இருப்பதால்.
नापि स्वगुणभेदभिन्नम् , निर्गुणत्वात् चैतन्यस्य । वक्ष्यति च भगवान् इच्छादीनां क्षेत्रधर्मत्वम् ,
‘अनादित्वान्निर्गुणत्वात्’ (भ. गी. १३ । ३१) इति च । नापि अन्त्या विशेषाः आत्मनो भेदकाः सन्ति, प्रतिशरीरं तेषां सत्त्वे प्रमाणानुपपत्तेः ।
சைதன்யத்திற்கு குணத்தினால் ஏற்படும் பேதத்தால் அது வெவ்வேறாக இல்லை. இச்சை முதலியவைகள் க்ஷேத்திரத்தின் (சரீரங்களின்) தர்மம் என்று பகவான் கூறப்போகிறார். (அநாதித்வாத், நிர்குணத்வாத்) என்று வைசேஷிகர் கூற்றுப்படி ஆத்மாவை வெவ்வே றாக பிரிக்கும் (அந்திய விசேஷம் = கடைசியான விசேஷம்) அந்தியவிசேஷமும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு சரீரத்திலும் அந்த அந்நிய விஷேசங்கள் இருப்பதற்கான பிரமாணம் ஒன்றுமில்லை.
अतः समं ब्रह्म एकं च । तस्मात् ब्रह्मणि एव ते स्थिताः । तस्मात् न दोषगन्धमात्रमपि तान् स्पृशति, देहादिसङ्घातात्मदर्शनाभिमानाभावात् ।
சமமாயும், ஏகமாயும் பிரஹ்ம்மம் இருப்பதால் பிரஹ்மத்திலேயே அவர்கள் நிலைத்திருப்பதால் அவர்களை தோஷமானது கந்தமாத்திரமும் (வாசனைக்குக் கூட) பற்றாது. ஏனெனில் தேஹாதி சங்கா தத்தை ஆத்மாவாக அறிவதில் அவர்களுக்கு அபிமானம் கிடையாது.
देहादिसङ्घातात्मदर्शनाभिमानवद्विषयं तु तत् सूत्रम् ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २०) इति, पूजाविषयत्वेन विशेषणात् ।
(ஸமாஸமாப்யாம் விஷமஸமேபூஜாத:) என்ற சூத்திரத்தின்படி தேஹாதி சங்காதத்தில் ஆத்ம தர்சன அபிமானம் உடையவனைப் பற்றியது பூஜாதி விஷய விசேஷணங்கள். (பூஜை = மரியாதை)
दृश्यते हि ब्रह्मवित् षडङ्गवित् चतुर्वेदवित् इति पूजादानादौ गुणविशेषसम्बन्धः कारणम् ।
மரியாதை, தானம் முதலியவைகளில் பிரஹ்ம்ம வித், ஷடங்கவித், சதுர்வேத வித் என்று குணவிசேஷங்களுடைய சம்பந்தம் காரணமாகிறது என்று காணப்படுகிறது.
ब्रह्म तु सर्वगुणदोषसम्बन्धवर्जितमित्यतः ‘ब्रह्मणि ते स्थिताः’ इति युक्तम् ।
பிரஹ்மமானது எல்லா குணங்களின் தோஷ சம்பந்தமற்றது. ஆகையால் பிரஹ்ம்மத்தில் அவர்கள் நிலைபெற்றிருக்கிறார்கள் என்பது பொருத்தமுடையதே.
கர்மிகளுடைய விஷயம் (ஸமா ஸமாப்யாம்) என்பது முதலியவை. ஸர்வ கர்ம ஸந்நியாஸத்தை விஷயமாக உடையது. (ஸர்வகர்மாணி மனசா) என்று ஆரம்பித்து இந்த அத்தியாயம் முடியும் வரை கூறப்பட்டுள்ளது.
यस्मात् निर्दोषं समं ब्रह्म आत्मा, तस्मात् —
ஏனெனில் நிர்தோஷமாயும், சமமாயும் உள்ள பிரஹ்மமே ஆத்மா ஆகையால்-
न प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम् ।
स्थिरबुद्धिरसंमूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः ॥ २० ॥
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் ।
ஸ்திரபுத்தி ரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித: ॥ 20 ॥
न प्रहृष्येत् प्रहर्षं न कुर्यात् प्रियम् इष्टं प्राप्य लब्ध्वा । न उद्विजेत् प्राप्य च अप्रियम् अनिष्टं लब्ध्वा ।
பிரியமான பொருள் கிடைத்தால் சந்தோஷமோ பிரியமில்லாத பொருள் கிடைத்தால் துக்கமோ படக்கூடாது.
देहमात्रात्मदर्शिनां हि प्रियाप्रियप्राप्ती हर्षविषादौ कुर्वाते, न केवलात्मदर्शिनः, तस्य प्रियाप्रियप्राप्त्यसम्भवात् ।
தேஹமே ஆத்மா என்று காண்பவர்களுக்கே பிரியமானது கிடைப்பதிலும் பிரியமில்லாதது கிடைப்பதிலும் சந்தோஷமும், வருத்தமும் ஏற்படுகிறது. ஆனால் கேவல ஆத்மாவையே தர்சிப்பவர் களுக்கு பிரியாபிரியம் என்பது ஏற்படாததினால் சந்தோஷம், வருத்தம் இரண்டும் ஏற்படாது.
किञ्च — ‘सर्वभूतेषु एकः समः निर्दोषः आत्मा’ इति स्थिरा निर्विचिकित्सा बुद्धिः यस्य सः स्थिरबुद्धिः असंमूढः संमोहवर्जितश्च स्यात् यथोक्तब्रह्मवित् ब्रह्मणि स्थितः, अकर्मकृत् सर्वकर्मसंन्यासी इत्यर्थः ॥ २० ॥
எல்லா பூதங்களிடத்தும் (பிராணிகளிடத்தும்) ஆத்மா ஏகமாய், சமமாய், தோஷமற்றதாய் இருக்கிறது என்று சந்தேஹமற்றபுத்தி எவர்களுக்கு உள்ளதோ அவர்கள் ஸ்திர புத்தி உடையவர்களாயும் மோஹமற்றிருப்பதால் மூடமற்றவராகவும் முன்பு இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்ம்ம வித் பிரஹ்ம்மத்திலேயே நிலைபெற்றிருக்கிறார். அவரே அகர்மக்ருத் (கர்மமற்றவர்) சர்வ கர்ம ஸந்நியாஸி ஆவார் என்பது பொருள்.
किञ्च, ब्रह्मणि स्थितः —
மேலும் பிரஹ்ம்மத்திலேயே நிலைத்தவன்-
बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् ।
स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ २१ ॥
பாஹ்யஸ்பர்சேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மனி யத்ஸுகம் ।
ஸ ப்ரஹ்மயோக யுக்தாத்மா ஸுகமக்ஷய மச்னுதே ॥ 21 ॥
बाह्यस्पर्शेषु बाह्याश्च ते स्पर्शाश्च बाह्यस्पर्शाः स्पृश्यन्ते इति स्पर्शाः शब्दादयो विषयाः तेषु बाह्यस्पर्शेषु, असक्तः आत्मा अन्तःकरणं यस्य सः अयम् असक्तात्मा विषयेषु प्रीतिवर्जितः सन् विन्दति लभते आत्मनि यत् सुखं तत् विन्दति इत्येतत् ।
இந்திரியங்களின் வழியாக ஸ்பர்சம் (ஞானம்) ஏற்படுகிறதோ அது ஸ்பர்சம் எனப்படும் வியுத்பத்தியினால் சப்தாதி வெளி விஷயங்கள் ஸ்பர்சம் எனப்படும். அந்த வெளி விஷயங்களில் பற்றில்லாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அவன் அசக்தாத்மா (பற்றற்ற ஆத்மா) அந்த அசக்தாத்மா விஷயங்களில் ஆசை அற்று ஆத்மாவாகிய தன்னிடத்தில் சுகத்தை அடைகிறான்.
स ब्रह्मयोगयुक्तात्मा ब्रह्मणि योगः समाधिः ब्रह्मयोगः तेन ब्रह्मयोगेन युक्तः समाहितः तस्मिन् व्यापृतः आत्मा अन्तःकरणं यस्य सः ब्रह्मयोगयुक्तात्मा, सुखम् अक्षयम् अश्नुते व्याप्नोति ।
பிரஹ்ம்மத்தில் எவனுக்கு சமாதியோ அவன் பிரஹ்மயோகீ. அந்த பிரஹ்மயோகத்துடன் கூடி அந்தக்கரணமானது அதிலேயே நன்றாக சமாதானம் அடைந்த அந்த பிரஹ்மயோக யுக்தாத்மா அழிவற்ற சுகத்தை அடைகிறான்.
तस्मात् बाह्यविषयप्रीतेः क्षणिकायाः इन्द्रियाणि निवर्तयेत् आत्मनि अक्षयसुखार्थी इत्यर्थः ॥ २१ ॥
ஆகையால் அக்ஷயசுகத்தில் ப்ரீதி உடையவர்கள் க்ஷணிக விஷயங்களிலிருந்து இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பொருள்.
इतश्च निवर्तयेत् —
ஆகையால் (இந்திரிய விஷயங்களிலிருந்து) நிவிர்த்தி ஆகவேண்டும் (விடுபட வேண்டும்)
ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते ।
आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः ॥ २२ ॥
யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா: துக்கயோனய ஏவ தே ।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத: ॥ 22 ॥
ये हि यस्मात् संस्पर्शजाः विषयेन्द्रियसंस्पर्शेभ्यो जाताः भोगा भुक्तयः दुःखयोनय एव ते, अविद्याकृतत्वात् । दृश्यन्ते हि आध्यात्मिकादीनि दुःखानि तन्निमित्तान्येव ।
ஏனெனில் விஷய இந்திரிய சம்பந்தத்தினால் உண்டான போகங் கள் எல்லாம் அவித்தையினால் ஏற்ப்பட்டதால் அவை துக்கத்திற்கு காரணமாகிறது. ஆத்யாத்மிகம் முதலிய துக்கங்கள் அதன் நிமித்தமே என்று காணப்படுகிறது.
यथा इहलोके तथा परलोकेऽपि इति गम्यते एवशब्दात् ।
எவ்வாறு இவ்வுலகிலோ அவ்வாறே அவ்வுலகிலும் என்று ஏவ கார சப்தத்தினால் அறியமுடிகிறது.
न संसारे सुखस्य गन्धमात्रमपि अस्ति इति बुद्ध्वा विषयमृगतृष्णिकाया इन्द्रियाणि निवर्तयेत् ।
சம்சாரத்தில் வாசனைக்குக் கூட சுகம் இல்லை என்று அறிந்து கானல் நீருக்கு ஒப்பான விஷயங்களிலிருந்து இந்திரியங்களை அடக்கவேண்டும்.
न केवलं दुःखयोनय एव, आद्यन्तवन्तश्च, आदिः विषयेन्द्रियसंयोगो भोगानाम् अन्तश्च तद्वियोग एव ।
விஷய போகங்கள் துக்கத்திற்கு மட்டும் காரணமல்ல. விஷய இந்திரியங்கள் சம்பந்தமே போகங்களுக்கு ஆதியும், அவைகளின் பிரிவே முடிவுமாகும்.
अतः आद्यन्तवन्तः अनित्याः, मध्यक्षणभावित्वात् इत्यर्थः ।
ஆகையால் ஆதியும், முடிவும் உடையதாலும் நடுவில் க்ஷண மாத்திரமாய் இருப்பதாலும் (போகங்கள்) அநித்தியமே.
कौन्तेय, न तेषु भोगेषु रमते बुधः विवेकी अवगतपरमार्थतत्त्वः ; अत्यन्तमूढानामेव हि विषयेषु रतिः दृश्यते, यथा पशुप्रभृतीनाम् ॥ २२ ॥
ஹே! கௌந்தேய! பரமார்த்த தத்துவத்தை அறிந்த விவேகிகள் போகங்களில் ரமிக்கமாட்டார்கள். எவ்வாறு பசு முதலியவைகளோ அவ்வாறு அத்தியந்த மூடர்கள் விஷயங்களில் ரமிப்பது காணப்படுகிறது.
अयं च श्रेयोमार्गप्रतिपक्षी कष्टतमो दोषः सर्वानर्थप्राप्तिहेतुः दुर्निवारश्च इति तत्परिहारे यत्नाधिक्यं कर्तव्यम् इत्याह भगवान् —
இந்த ச்ரேயோ மார்க்கத்தின் தடையானது (காம, க்ரோத முதலியவை) மிக்க தோஷமுடையது. துக்கத்தைக் கொடுக்கக் கூடியது. எல்லா அனர்த்தங்களுக்கும் காரணமாகிறது. அதை நிவிர்த்தி செய்வதும் மிக்க கடினம். ஆகையால் அதை நீக்குவதற்கு அதிகப் பிரயத்னம் செய்யவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
शक्नोतीहैव यः सोढुं प्राक्छरीरविमोक्षणात् ।
कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः ॥ २३ ॥
சக்னோதீஹைவ ய: ஸோடும் ப்ராக் சரீர விமோக்ஷணாத் ।
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸு ஸுகீ நர: ॥ 23 ॥
शक्नोति उत्सहते इहैव जीवन्नेव यः सोढुं प्रसहितुं प्राक् पूर्वं शरीरविमोक्षणात् आ मरणात् इत्यर्थः ।
எந்த மனிதன் இந்த ஜன்மத்திலேயே சரீரம் விடுவதற்கு முன் அதாவது மரணத்திற்கு முன்பு வரையிலும் அதாவது ஜீவித்துக் கொண்டு இருக்கும்பொழுதே (காமக்ரோதாதிகளை) சஹித்துக் கொள்கிறான்.
मरणसीमाकरणं जीवतोऽवश्यम्भावि हि कामक्रोधोद्भवो वेगः, अनन्तनिमित्तवान् हि सः इति यावत् मरणं तावत् न विस्रम्भणीय इत्यर्थः ।
மரணத்தை எல்லையாகக் கூறியது ஏனெனில் ஜீவித்துக் கொண்டிருப்பவனுக்கு அவசியம் ஏற்படக்கூடிய காமக்ரோதம் அதனால் ஏற்படும் வேகம். ஆகையால் மரணம் வரையிலும் அதில் நம்பிக்கை வைத்தல் கூடாது என்பது பொருள்.
कामः इन्द्रियगोचरप्राप्ते इष्टे विषये श्रूयमाणे स्मर्यमाणे वा अनुभूते सुखहेतौ या गर्धिः तृष्णा स कामः ।
இந்திரியங்களுக்கு கோச்சரமாகிய (விஷயமாகிய) இஷ்ட்ட விஷயத்தைக் கேட்பதோ, நினைப்பதோ அல்லது அனுபவித்தலோ சுகத்திற்கு காரணம் என்று அதில் ஆசை வைப்பதே காமம்.
क्रोधश्च आत्मनः प्रतिकूलेषु दुःखहेतुषु दृश्यमानेषु श्रूयमाणेषु स्मर्यमाणेषु वा यो द्वेषः सः क्रोधः ।
தனக்கு பிரதிகூலமாக துக்கத்திற்கு காரணமானவைகளை பார்த்தாலோ, கேட்டாலோ, நினைத்தாலோ அதனால் ஏற்படும்த்வேஷம் க்ரோதம் எனப்படும்.
तौ कामक्रोधौ उद्भवो यस्य वेगस्य सः कामक्रोधोद्भवः वेगः । रोमाञ्चनप्रहृष्टनेत्रवदनादिलिङ्गः अन्तःकरणप्रक्षोभरूपः कामोद्भवो वेगः ।
காமத்தினாலும், க்ரோதத்தினாலும் வேகம் உண்டாகிறது. மயிர்சிலிர்த்தல், மலர்ந்த கண்கள், மலர்ந்த முகம் முதலானதை அறிகுறி யாக வைத்து அந்தக்கரணத்தின் கலக்க ரூபமாகிய காமக்ரோதத்தி னால் உண்டான வேகம்.
गात्रप्रकम्पप्रस्वेदसन्दष्टोष्ठपुटरक्तनेत्रादिलिङ्गः क्रोधोद्भवो वेगः ।
உடம்பு படபடப்பு அடைதல், வேர்த்தல், உதட்டைக் கடித்தல், சிவந்த கண்கள் முதலிய லிங்கங்கள் குரோதத்தினால் உண்டான வேகம்.
तं कामक्रोधोद्भवं वेगं यः उत्सहते प्रसहते सोढुं प्रसहितुम् , सः युक्तः योगी सुखी च इह लोके नरः ॥ २३ ॥
எந்த மனிதன் காமக்ரோதங்களினால் உண்டான வேகத்தை சஹித்துக் கொள்கிறானோ அவனே யோகீ. அவன் இவ்வுலகத்தில் சுகியும் ஆவான்.
कथम्भूतश्च ब्रह्मणि स्थितः ब्रह्म प्राप्नोति इति आह भगवान् —
எப்படிப்பட்டவன் பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः ।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ॥ २४ ॥
யோந்த: ஸுகோஅந்தரா ராம ஸ்ததாந்தர் ஜ்யோதி ரேவ ய: ।
ஸயோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோஅதிகச்சதி ॥ 24 ॥
यः अन्तःसुखः अन्तः आत्मनि सुखं यस्य सः अन्तःसुखः, तथा अन्तरेव आत्मनि आरामः आरमणं क्रीडा यस्य सः अन्तरारामः, तथा एव अन्तः एव आत्मन्येव ज्योतिः प्रकाशो यस्य सः अन्तर्ज्योतिरेव ।
எவருக்கு அந்தராத்மாவில் சுகமோ அவர் அந்த: சுகர் (உள்ளே சுகமுடையவர்) அவ்வாறே எவர் அந்தராத்மாவில் ரமிக்கிறாரோ அவர் அந்தராராமர், அவ்வாறேஅந்தராத்மாவே ஜ்யோதியோ (பிரகாசமோ) அவர் அந்தர்ஜ்யோதி.
यः ईदृशः सः योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मणि निर्वृतिं मोक्षम् इह जीवन्नेव ब्रह्मभूतः सन् अधिगच्छति प्राप्नोति ॥ २४ ॥
இப்படிப்பட்ட யோகீ ஜீவித்துக் கொண்டிருக்கும்பொழுதே மோக்ஷம் என்று சொல்லக்கூடிய பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மமே ஆகின்றான்.
किञ्च —
மேலும்
लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः ।
छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः ॥ २५ ॥
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ருஷய: க்ஷண கல்மஷா: ।
சின்னத்வைதா யதாத்மான: ஸர்வபூத ஹிதே ரதா: ॥ 25 ॥
लभन्ते ब्रह्मनिर्वाणं मोक्षम् ऋषयः सम्यग्दर्शिनः संन्यासिनः क्षीणकल्मषाः क्षीणपापाः निर्दोषाः छिन्नद्वैधाः छिन्नसंशयाः यतात्मानः संयतेन्द्रियाः सर्वभूतहिते रताः सर्वेषां भूतानां हिते आनुकूल्ये रताः अहिंसका इत्यर्थः ॥ २५ ॥
பாபம் முதலிய தோஷங்கள் அற்றவராயும், சந்தேகங்கள் அற்றவராயும், இந்திரியங்களை வசப்படுத்தியவரும், எல்லா பிராணிகளிடத்தும் அஹிம்சையினால் அவர்களுக்கு அனுகூலமாய் இருத்தலில் பிரியமுடையவராயும் உள்ள சம்யக் தர்சிகளாகிய சந்நியாசிகள் பிரஹ்ம நிர்வாணம் என்ற மோக்ஷத்தை அடைகி றார்கள் என்பது பொருள்.
किञ्च —
மேலும்
कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् ।
अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम् ॥ २६ ॥
காமக்ரோதவியுக்தானாம் யதீனாம் யதசேதஸாம் ।
அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மனாம் ॥ 26 ॥
कामक्रोधवियुक्तानां कामश्च क्रोधश्च कामक्रोधौ ताभ्यां वियुक्तानां यतीनां संन्यासिनां यतचेतसां संयतान्तःकरणानाम् अभितः उभयतः जीवतां मृतानां च ब्रह्मनिर्वाणं मोक्षो वर्तते विदितात्मनां विदितः ज्ञातः आत्मा येषां ते विदितात्मानः तेषां विदितात्मनां सम्यग्दर्शिनामित्यर्थः ॥ २६ ॥
காமக்ரோதம் இரண்டும் நீங்கினவராயும், வசம் செய்யப்பட்ட அந்தக்கரணம் உடையவராகவும், உள்ள எவர்களுக்கு ஆத்மஞானம் ஏற்ப்பட்டதோ அந்த சம்யக் தர்சியாகிய ஸந்நியாஸிக்கு இரண்டு விதமாகவும் என்றால் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதும், மரணத்திற்கு பின்னும் இரண்டு அவஸ்தைகளிலும் பிரஹ்ம்ம நிர்வாணம் என்ற மோக்ஷமானது உண்டு.
सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां सद्यः मुक्तिः उक्ता । कर्मयोगश्च ईश्वरार्पितसर्वभावेन ईश्वरे ब्रह्मणि आधाय क्रियमाणः सत्त्वशुद्धिज्ञानप्राप्तिसर्वकर्मसंन्यासक्रमेण मोक्षाय इति भगवान् पदे पदे अब्रवीत् वक्ष्यति च ।
சம்யக் தர்சன நிஷ்ட்டர்களாகிய சந்நியாசிகளுக்கு சத்யோ முக்தி: (சத்யோ முக்தி என்றால் உடனே மோக்ஷம்) கூறப்பட்டது. ஈஸ்வரார்ப்பண பாவத்தினால் பூர்ண பிரஹ்ம்மாகிய பரமாத்மா வினிடத்தில் எல்லாக் கர்மங்களையும் தியாகம் செய்த கர்மயோகியும் அந்தக் கரண சுத்தி வாயிலாக ஞானத்தை அடைந்து கர்ம ஸந்நியாஸ மூலமாக கிரமமாக மோக்ஷத்தை அடைகிறான் என்று அங்கங்கு பகவான் கூறியுள்ளார், மேலும் கூறப்போகிறார்.
अथ इदानीं ध्यानयोगं सम्यग्दर्शनस्य अन्तरङ्गं विस्तरेण वक्ष्यामि इति तस्य सूत्रस्थानीयान् श्लोकान् उपदिशति स्म —
அதன் பிறகு இப்பொழுது சம்யக் தர்சனத்திற்கு அந்தரங்க சாதனமாகிய தியானயோகத்தை விஸ்தாரமாக கூறுகிறேன் என்றுகூறி அதைச் சுருக்கமாக வரும் ஸ்லோகங்களில் உபதேசிக்கிறார்.
स्पर्शान्कृत्वा बहिर्बाह्यांश्चक्षुश्चैवान्तरे भ्रुवोः ।
प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ ॥ २७ ॥
ஸ்பர்சான் க்ருத்வா பஹிர்பாஹ்யாம்ச் சக்ஷச்சை வாந்தரே ப்ருவோ: ।
ப்ராணாபானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தர சாரிணௌ ॥ 27 ॥
यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः ।
विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः ॥ २८ ॥
யதேந்த்ரியமநோபுத்திர்முனிர்மோக்ஷபராயண: ।
விகதேச்சா-பய-க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: ॥ 28 ॥
स्पर्शान् शब्दादीन् कृत्वा बहिः बाह्यान् — श्रोत्रादिद्वारेण अन्तः बुद्धौ प्रवेशिताः शब्दादयः विषयाः तान् अचिन्तयतः शब्दादयो बाह्या बहिरेव कृताः भवन्ति — तान् एवं बहिः कृत्वा चक्षुश्चैव अन्तरे भ्रुवोः ‘कृत्वा’ इति अनुषज्यते । तथा प्राणापानौ नासाभ्यन्तरचारिणौ समौ कृत्वा ॥ २७ ॥
சப்தாதி வெளிவிஷயங்களை வெளியேற்றி என்றால் சப்தம் முதலிய வெளி விஷயங்கள் இந்திரியங்களின் வழியாக உள்ளே அந்தக்கரணத்தில் பிரவேசித்துள்ளது. அதை சிந்திக்காமல் இருப்பதே அவைகளை வெளியேற்றுவதாகும். இவ்வாறு அவற்றை வெளியேற்றி இரண்டு கண்களின் பார்வையே புருவத்தின் மத்தியில் நிறுத்தி அவ்வாறே மூக்கின் உள்ளேயும் வெளியேயும் செல்லுகின்ற பிராண அபானனை சமானமாகச் செய்து.
यतेन्द्रियमनोबुद्धिः यतानि संयतानि इन्द्रियाणि मनः बुद्धिश्च यस्य सः यतेन्द्रियमनोबुद्धिः, मननात् मुनिः संन्यासी, मोक्षपरायणः एवं देहसंस्थानात् मोक्षपरायणः मोक्ष एव परम् अयनं परा गतिः यस्य सः अयं मोक्षपरायणो मुनिः भवेत् । विगतेच्छाभयक्रोधः इच्छा च भयं च क्रोधश्च इच्छाभयक्रोधाः ते विगताः यस्मात् सः विगतेच्छाभयक्रोधः, यः एवं वर्तते सदा संन्यासी, मुक्त एव सः न तस्य मोक्षायान्यः कर्तव्योऽस्ति ॥ २८ ॥
எவருடைய இந்திரியம், மனம் புத்தி வசம் செய்யப்பட்டதோ, ஈஸ்வரனையே மனனம் செய்கின்றமுனி எனப்படும் சந்நியாசி சரீரத்தில் இருந்தாலும் மோக்ஷமே மேலான கதியென்று இருப்பதால் முனி. அவ்வாறே அவருக்கு இச்சை, பயம், க்ரோதம் என்பவை நீங்கிவிட்டது. இவ்வாறு உள்ள சந்நியாசி எப்பொழுதும் முக்தரே. அவருக்கு வேறு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.
एवं समाहितचित्तेन किं विज्ञेयम् इति, उच्यते —
இவ்வாறு சமாஹித (ஒருநிலைப்பட்ட மனதினால்) சித்தத்தினால் என்ன அறியவேண்டும் என்று கூறுவோம்.
भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम् ।
सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति ॥ २९ ॥
போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்வரம் ।
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ॥ 29 ॥
भोक्तारं यज्ञतपसां यज्ञानां तपसां च कर्तृरूपेण देवतारूपेण च, सर्वलोकमहेश्वरं सर्वेषां लोकानां महान्तम् ईश्वरं सुहृदं सर्वभूतानां सर्वप्राणिनां प्रत्युपकारनिरपेक्षतया उपकारिणं सर्वभूतानां हृदयेशयं सर्वकर्मफलाध्यक्षं सर्वप्रत्ययसाक्षिणं मां नारायणं ज्ञात्वा शान्तिं सर्वसंसारोपरतिम् ऋच्छति प्राप्नोति ॥ २९ ॥
(மனிதன்) நாராயணனான என்னைக் கர்த்தா ரூபமாகவும் தேவதா ரூபமாகவும் இருந்து எல்லா யக்ஞம், தபசுகளுக்கும் போக்தா வாகவும், எல்லா லோகங்களுக்கும் மேலான ஈஸ்வரனாகவும், எல்லாப் பிராணிகளுக்கும் அவர்கள் கேட்காமலே நன்மை (உபகாரம்) செய்பவராகவும், எல்லாப் பிராணிகளுடைய இருதயத்தில் இருப்ப வராயும், மேலும் எல்லா சங்கல்பங்களுக்கும் சாக்ஷி யாய் இருப்பதாக அறிந்து சாந்தியை அடைகிறான் என்றால் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான் என்பது பொருள்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूजयपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये पञ्चमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே கர்மஸந் யாஸயோகோ நாம பஞ்சமோத்யாய: