अष्टमे नाडीद्वारेण धारणायोगः सगुणः उक्तः । तस्य च फलम् अग्न्यर्चिरादिक्रमेण कालान्तरे ब्रह्मप्राप्तिलक्षणमेव अनावृत्तिरूपं निर्दिष्टम् ।
எட்டாவது அத்யாயத்தில் ஸுஷும்னா நாடி மூலமாக தாரணா யோகமானது முறைப்படி விளக்கப்பட்டது. அக்னி அர்ச்சிராதி கிரம மாக காலாந்தரத்தில் அநாவிர்த்தி ரூபமான பிரஹ்ம பிராப்தி அதனு டைய பலமாக குறிப்பிட்டு காட்டப்பட்டது.
तत्र ‘अनेनैव प्रकारेण मोक्षप्राप्तिफलम् अधिगम्यते, न अन्यथा’ इति तदाशङ्काव्याविवर्तयिषया —
அங்கு இவ்வாறுதான் மோக்ஷபலத்தை அடையமுடியும், வேறு பிரகாரத்தால் அல்ல என்றால் அந்த சங்கையை நிவிர்த்தி செய்வதில் இச்சை உடையவராகி
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १ ॥
இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே ।
ஞானம் விக்ஞானஸஹிதம் யக்ஞ்ஞாத்வா மோக்ஷ்யஸேஅசுபாத் ॥ 1 ॥
इदं ब्रह्मज्ञानं वक्ष्यमाणम् उक्तं च पूर्वेषु अध्यायेषु तत् बुद्धौ संनिधीकृत्य इदम् इत्याह । तु शब्दो विशेषनिर्धारणार्थः ।
இனிக் கூறப்போவதும் இதற்கு முந்தின அத்தியாயங்களில் கூறப்பட்டதுமான இந்த பிரஹ்ம ஞானத்தை புத்தியில் முன் நிறுத்தி (இதம்-இந்த)என்று கூறினார். து, (இனி) என்ற விசேஷண சப்தமானது மற்றஞானங்களிலிருந்து வேறுபட்டது என்னும் பொருளில் வந்தது.
இந்த யதார்த்த ஞானமே மோக்ஷத்திற்கு சாதனமாகும் என்பது (வாசுதேவ: சர்வமிதி) (ஆத்மைவேதம் ஸர்வம்) முதலிய ச்ருதி ஸ்ம்ருதிகளால் (அறியத்தக்கது) வேறு சாதனமல்ல.
அதயே அந்யத்ததோ விதுரன்யராஜானஸ்தே க்ஷய்யலோகா பவந்தி) என்பது முதலிய சுருதிகளாலும்
ते तुभ्यं गुह्यतमं गोप्यतमं प्रवक्ष्यामि कथयिष्यामि अनसूयवे असूयारहिताय ।
அசூயை அற்றஉனக்கு மிகவும் ரஹஸ்யமான விஷயத்தைக் கூறுகிறேன்
किं तत् ,ज्ञानम् ,किंविशिष्टम् विज्ञानसहितम् अनुभवयुक्तम् ।
அது என்ன? ஞானம். அது எப்படிப்பட்டது? (அது எதனுடன் கூடியது) விக்ஞானத்துடன் கூடியது என்றால் அனுபவத்துடன் கூடியது.
यत् ज्ञात्वा प्राप्य मोक्ष्यसे अशुभात् संसारबन्धनात् ॥ १ ॥
எந்த ஞானத்தை அறிந்து (அடைந்து) அசுபமாகிய சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாயோ?
तच्च —
அந்த ஞானம்
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥ २ ॥
ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் ।
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம் ॥ 2 ॥
राजविद्या विद्यानां राजा दीप्त्यतिशयवत्त्वात् । दीप्यते हि इयम् अतिशयेन ब्रह्मविद्या सर्वविद्यानाम् ।
மிகுந்த பிரகாசத்தை உடையதால் எல்லா வித்தைகளுக்கும் ராஜா. இந்த பிரஹ்ம வித்யா எல்லா வித்யைகளைக் காட்டிலும் மிகுந்த பிரகாசம் உடையதாய் இருக்கிறது.
तथा राजगुह्यं गुह्यानां राजा । पवित्रं पावनं इदम् उत्तमं सर्वेषां पावनानां शुद्धिकारणं ब्रह्मज्ञानम् उत्कृष्टतमम् । अनेकजन्मसहस्रसञ्चितमपि धर्माधर्मादि समूलं कर्म क्षणमात्रादेव भस्मीकरोति इत्यतः किं तस्य पावनत्वं वक्तव्यम् ।
அவ்வாறேரஹஸ்யமானவைகளுக்கெல்லாம் ராஜா. மேலும் இது பவித்திரமானது, எல்லாவற்றிலும் உத்தமமானது, எல்லா சுத்தி செய்ப வைகளுள் இந்த பிரஹ்ம வித்யா மிகவும் மேலானது. ஆயிரக்கணக் கான அநேக ஜன்மங்களில் சேர்த்த புண்ய பாப முதலிய கர்மங்களை மூலத்துடன் (காரணத்துடன்) க்ஷணமாத்திரத்தில் சாம்பலாக்குகிறது என்றால் அதன் பவித்திரத்தன்மையை பற்றி என்ன கூறுவது?
किञ्च प्रत्यक्षावगमं प्रत्यक्षेण सुखादेरिव अवगमो यस्य तत् प्रत्यक्षावगमम् ।
மேலும் பிரத்யக்ஷமாய் அனுபவிக்கப்படுகிறது. சுகாதிகளைப் பிரத்யக்ஷமாய் அறிவது போல் பிரஹ்ம்ம வித்யையும் (பிரஹ்ம ஞானமும்) பிரத்யக்ஷமாய் அறியப்படுகிறது.
अनेकगुणवतोऽपि धर्मविरुद्धत्वं दृष्टम् न तथा आत्मज्ञानं धर्मविरोधि किन्तु धर्म्यं धर्मादनपेतम् ।
அநேக குணங்களுடன் கூடிய வஸ்துவிற்கு தர்மத்தில் விரோதம் காணப்படுகிறது. ஆனால் ஆத்மக்ஞானம் அவ்வாறு தர்மத்திற்கு விரோதி அல்ல. ஆனால் தர்மமாகவே இருக்கிறது.
एवमपि स्याद्दुःखसम्पाद्यमित्यत आह सुसुखं कर्तुम् यथा रत्नविवेकविज्ञानम् ।
இவ்வாறு இருந்தாலும் அதை அடைவது மிகக்கடினம். ஆகை யால் கூறுகிறார், எவ்வாறு ரத்தினங்களை பிரித்து அறிகிறோமோ அவ்வாறு விவேக ஞானத்தால் எளிதாய் அறியமுடியும்.
तत्र अल्पायासानामन्येषां कर्मणां सुखसम्पाद्यानाम् अल्पफलत्वं दुष्कराणां च महाफलत्वं दृष्टमिति इदं तु सुखसम्पाद्यत्वात् फलक्षयात् व्येति इति प्राप्ते आह —
அங்கு குறைந்த பிரயாசை உள்ள சுகத்தைத் தரக்கூடிய கர்மங்களுக்கு சிறிதுபலனும், மிக்கப் பிரயாசை உடையவர்களுக்கு மிகுந்த பலமும் காணப்படுகிறது என்பதால் இதுவும் (ஆத்மக்ஞான மும்) சுகத்தைத் தரக்கூடியதால் பலத்திற்கு அழிவு ஏற்படும் என்று ஆகிவிடும் ஆகையால் கூறுகிறார்-
अव्ययम् न अस्य फलतः कर्मवत् व्ययः अस्तीति अव्ययम् अतः श्रद्धेयम् आत्मज्ञानम् ॥ २ ॥
இந்த ஆத்மஞானத்தின் பலனானது அவ்யயம். கர்மபலன் போல் வியயம் (நாசம்) அடையாததினால் அவ்வியயம். ஆகையால் ஆத்மக்ஞானத்தை சிரத்தையுடன் நாடவேண்டும்.
ये पुनः —
மேலும் எவர்கள்
अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥ ३ ॥
அச்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப ।
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மனி ॥ 3 ॥
अश्रद्दधानाः श्रद्धाविरहिताः आत्मज्ञानस्य धर्मस्य अस्य स्वरूपे तत्फले च नास्तिकाः पापकारिणः, असुराणाम् उपनिषदं देहमात्रात्मदर्शनमेव प्रतिपन्नाः असुतृपः पापाः पुरुषाः अश्रद्दधानाः, परन्तप, अप्राप्य मां परमेश्वरम् , मत्प्राप्तौ नैव आशङ्का इति मत्प्राप्तिमार्गभेदभक्तिमात्रमपि अप्राप्य इत्यर्थः । निवर्तन्ते निश्चयेन वर्तन्ते ।
ஆத்மஞானத்தில் சிரத்தை அற்றவர்கள். ஸ்வஸ்வரூபத்திலும், பலத்திலும் ஆஸ்திக புத்தி (இருக்கிறது என்றபுத்தி) அற்றவர்கள், பாபகர்மங்கள் செய்தவர்கள். அந்த நாஸ்திக புருஷர்கள் அசுரர் களின் உபநிஷத்தை (சித்தாந்தத்தை) கடைபிடித்து தேஹத்தை மாத்திரமே ஆத்மாவாக அறிகிறார்கள். அவர்கள் இந்திரியங்களை திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஹே பார்த்த! அந்த புருஷர்கள் பரமேஸ்வரனாகிய என்னை அடையவே மாட்டார் கள். என்னை அடைவதில் அவர்களுக்கு ஆசங்கை கூட கிடையாது. என்றால் என்னை அடைவதற்கான மார்க்க சாதன பேத பக்தியைக் கூட அடையமாட்டார்கள் என்பது பொருள். அவர்கள் நிச்சயமாக பவசக்கரத்தில் (பிறப்பு, இறப்பு என்றசக்கரத்தில்) உழல்வார்கள்.
क्व मृत्युसंसारवर्त्मनि मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः तस्य वर्त्म नरकतिर्यगादिप्राप्तिमार्गः तस्मिन्नेव वर्तन्ते इत्यर्थः ॥ ३ ॥
எங்கே என்றால்? மரணதர்மத்துடன் கூடிய சம்சார மார்க்கத்தில் சுழல்கிறார்கள். அந்த மார்க்கமானது நரகம், பசு, பக்ஷி முதலிய யோனிகளை அடைவிக்கும் மார்க்கம். அதிலேயே மறுபடியும் மறுபடி யும் பிறந்து பிறந்து இறக்கிறார்கள்.
स्तुत्या अर्जुनमभिमुखीकृत्य आह —
இவ்வாறு ஞானத்தைப் புகழ்வதின் மூலமாக அர்ச்சுனனை ஒரு முகப்படுத்தி கூறலானார்.
मया ततमिदं सर्वं जगतदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥ ४ ॥
மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்த்தினா ।
மத்ஸ்தானி ஸர்வபூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித: ॥ 4 ॥
मया मम यः परो भावः तेन ततं व्याप्तं सर्वम् इदं जगत् अव्यक्तमूर्तिना न व्यक्ता मूर्तिः स्वरूपं यस्य मम सोऽहमव्यक्तमूर्तिः तेन मया अव्यक्तमूर्तिना करणागोचरस्वरूपेण इत्यर्थः ।
என்னுடைய மேலான பாவமாகிய இந்திரியங்களுக்குப் புலப்ப டாத அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் (வியக்த மூர்த்தியினால் அல் ல) இந்த ஜகத் முழுவதும் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
तस्मिन् मयि अव्यक्तमूर्तौ स्थितानि मत्स्थानि सर्वभूतानि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि ।
அந்த அவ்யக்த ரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன.
न हि निरात्मकं किञ्चित् भूतं व्यवहाराय अवकल्पते । अतः मत्स्थानि मया आत्मना आत्मवत्त्वेन स्थितानि अतः मयि स्थितानि इति उच्यन्ते ।
ஆத்மாவன்றி எந்த ஒரு பிராணிக்கும் வியவகாரம் இருப்பதாக கல்பிக்கமுடியாது. ஆகையால் எல்லாம் என்னிலேயே நிலைபெற்றி ருக்கின்றன. ஆகையால் (மத்ஸ்தானி) எனப்பட்டது. பரமாத்மாவாகிய என்னால் எல்லாப்பிராணிகளும் ஆத்மத்துவத்துடன் இருக்கின்றன. ஆகையால் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன கூறப்படுகிறது.
तेषां भूतानाम् अहमेव आत्मा इत्यतः तेषु स्थितः इति मूढबुद्धीनां अवभासते । अतः ब्रवीमि न च अहं तेषु भूतेषु अवस्थितः मूर्तवत् संश्लेषाभावेन आकाशस्यापि अन्तरतमो हि अहम् । न हि असंसर्गि वस्तु क्वचित् आधेयभावेन अवस्थितं भवति ॥ ४ ॥
அந்த பிராணிகளுக்கு நானே ஆத்மாவாக இருப்பதால் மூடபுத்தி உள்ளவர்களுக்கு நான் அவைகளில் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆகையால் நான் கூறுகிறேன் அந்த பிராணிக ளிடத்தில் நான் உருவம் உள்ளவை போல் சேர்க்கை பாவத்தில் நிலைபெறவில்லை. ஏனெனில் நான் ஆகாசத்தை விட மிகவும் சூட்சுமமாக இருப்பவன். சேர்க்கை அற்றஎந்த வஸ்துவும் ஆதேய பாவத்தில் (ஒன்றை ஆதாரமுடையதாக) இருக்காது.
अत एव असंसर्गित्वात् मम —
ஆகையால் தான் எனக்கு ஒன்றுடனும் சேர்க்கை இல்லை-
न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥ ५ ॥
ந ச மத்ஸ்தானி பூதானி பச்ய மே யோகமைச்வரம் ।
பூதப்ருன்ன ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவன: ॥ 5 ॥
न च मत्स्थानि भूतानि ब्रह्मादीनि पश्य मे योगं युक्तिं घटनं मे मम ऐश्वरम् ईश्वरस्य इमम् ऐश्वरम् योगम् आत्मनो याथात्म्यमित्यर्थः ।
(உண்மையில்) பிரஹ்ம்மா முதல் எல்லாப் பிராணிகளும் என்னி டத்தில் சேர்க்கை அற்று இருக்கிறது. ஈஸ்வரனாகிய என்னுடைய (ஆத்மாவினுடைய) ஈஸ்வரத்தன்மை பொருந்திய திவ்யமான யதார்த்த தன்மையைப் பார் என்பது பொருள்.
அவ்வாறே சுருதியும் சேர்க்கை தன்மை அற்ற ஆத்மா அசங்கம் என்று காண்பிக்கிறது. (அஸங்கோ ந ஹி ஸஜ்ஜதே) என்று.
इदं च आश्चर्यम् अन्यत् पश्य भूतभृत् असङ्गोऽपि सन् भूतानि बिभर्ति न च भूतस्थः यथोक्तेन न्यायेन दर्शितत्वात् भूतस्थत्वानुपपत्तेः ।
இன்னும் ஒரு ஆச்சரியத்தைப் பார். (பரமாத்மா) அஸங்கனாய் இருந்தாலும் எல்லாப் பிராணிகளையும் ரக்ஷி க்கிறார். ஆனால் பிரா ணிகளில் இருந்துகொண்டு அல்ல. ஏனெனில் பரமாத்மாவிற்கு பிரா ணிகளிடத்தில் நிலைபெறுதல் என்பது சம்பவிக்காது. இந்த விஷயம் முன்பு கூறப்பட்ட நியாயத்தால் காண்பிக்கப்பட்டுள்ளது.
कथं पुनरुच्यते ‘असौ मम आत्मा’ इति ,
இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு இது என்னுடைய ஆத்மா என்று கூறப்படுகிறது.
विभज्य देहादिसङ्घातं तस्मिन् अहङ्कारम् अध्यारोप्य लोकबुद्धिम् अनुसरन् व्यपदिशति ‘मम आत्मा’ इति, न पुनः आत्मनः आत्मा अन्यः इति लोकवत् अजानन् ।
லௌகிக புத்தியை அனுசரித்து தேஹாதி சங்காதம் ஆத்மாவை விட வேறு என்று பிரித்து அதில் அகங்காரத்தை ஆரோபம் செய்து என்னுடைய ஆத்மா என்று கூறுகின்றான். ஆனால் உலகத்தார் போல் தன்னைக் காட்டிலும் ஆத்மாவேறு என்று அறியாமல் கூறவில்லை.
तथा भूतभावनः भूतानि भावयति उत्पादयति वर्धयतीति वा भूतभावनः ॥ ५ ॥
அவ்வாறே பிராணிகளை உண்டாக்குகிறான், வளர்க்கிறான், ஆகையால் (பூதபாவன:)
यथोक्तेन श्लोकद्वयेन उक्तम् अर्थं दृष्टान्तेन उपपादयन् आह —
இரண்டு ஸ்லோகங்களால் கூறப்பட்ட அர்த்தத்தை திருஷ்ட்டாந் தத்துடன் விளக்குவதற்காக கூறுகிறார்.
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥ ६ ॥
யதாகாசஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹான் ।
ததா ஸர்வாணி பூதானி மத்ஸ்தானீத்யுபதாரய ॥ 6 ॥
यथा लोके आकाशस्थितः आकाशे स्थितः नित्यं सदा वायुः सर्वत्र गच्छतीति सर्वत्रगः महान् परिमाणतः, तथा आकाशवत् सर्वगते मयि असंश्लेषेणैव स्थितानि इत्येवम् उपधारय विजानीहि ॥ ६ ॥
எவ்வாறு உலகில் ஆகாசத்தில் இருக்கும் மிகப் பெரிய வாயுவா னது எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறதோ அவ்வாறு ஆகாசம் போல் எங்கும் நிறைந்திருக்கும் என்னிடத்தில் எல்லா பூதங்களும் ஒட் டாமல் நிலைபெற்றிருக்கின்றன என்று அறி.
एवं वायुः आकाशे इव मयि स्थितानि सर्वभूतानि स्थितिकाले तानि —
இவ்வாறு, ஆகாசத்தில் வாயு ஒட்டாமல் இருப்பது போல் என்னி டத்தில் எல்லாப்பிராணிகளும் ஸ்திதி காலத்தில் நிலைபெற்றிருக்கும்.
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥ ७ ॥
ஸர்வபூதானி கெளந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் ।
கல்பக்ஷயே புநஸ்தானி கல்பாதெள விஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं त्रिगुणात्मिकाम् अपरां निकृष्टां यान्ति मामिकां मदीयां कल्पक्षये प्रलयकाले । पुनः भूयः तानि भूतानि उत्पत्तिकाले कल्पादौ विसृजामि उत्पादयामि अहं पूर्ववत् ॥ ७ ॥
ஹே கௌந்தேய! எல்லாப் பிராணிகளும் பிரளயகாலத்தில் என்னுடைய முக்குணங்களுடன் கூடிய அபரமான பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் எல்லாப் பிராணிகளையும் உண்டாக்குகிறேன். (முன் கல்பத்தைப் போலவே)
एवम् अविद्यालक्षणाम् —
இவ்வாறு அவித்யையாநது
प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥ ८ ॥
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புன: புன: ।
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்னமவசம் ப்ரக்ருதேர்வசாத் ॥ 8 ॥
प्रकृतिं स्वां स्वीयाम् अवष्टभ्य वशीकृत्य विसृजामि पुनः पुनः प्रकृतितो जातं भूतग्रामं भूतसमुदायम् इमं वर्तमानं कृत्स्नं समग्रम् अवशम् अस्वतन्त्रम् , अविद्यादिदोषैः परवशीकृतम् , प्रकृतेः वशात् स्वभाववशात् ॥ ८ ॥
பிரகிருதியின் சுவபாவ வசத்தால் சுவதந்திரமற்று அவித்யாதோ ஷத்தால் பரவசப்பட்டுள்ள பிரகிருதியிலிருந்து உண்டான ஸ்வபாவ வசத்தால் பிராணி சமுதாயத்தை என்னால் வசம் செய்யப்பட்ட மாயையால் மறுபடியும், மறுபடியும் சிருஷ்ட்டி செய்கிறேன்.
तर्हि तस्य ते परमेश्वरस्य भूतग्रामम् इमं विषमं विदधतः तन्निमित्ताभ्यां धर्माधर्माभ्यां सम्बन्धः स्यादिति इदम् आह भगवान् —
அவ்வாறானால் பிராணி வர்க்கங்களை ஏற்றதாழ்வு உள்ளவர்க ளாக சிருஷ்ட்டித்த அந்த பரமேச்வரனாகிய தங்களுக்கு அதனால் புண்ய பாபங்களின் சம்பந்தம் உண்டாகலாமே (என்று அர்ஜுன னுக்கு சங்கை உண்டாகுமேயானால்) அதற்கு இவ்வாறு பகவான் கூறுகிறார்-
न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥ ९ ॥
ந ச மாம் தானி கர்மாணி நிபத்நந்தி தனஞ்ஜய ।
உதாஸீனவ-தாஸீன-மஸக்தம் தேஷு கர்மஸு ॥ 9 ॥
न च माम् ईश्वरं तानि भूतग्रामस्य विषमसर्गनिमित्तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
அந்த பிராணி வர்க்கத்தின் ஏற்றதாழ்வுள்ளவர்களாக சிருஷ்ட்டிப்பதற்கு காரணமாக உள்ள கர்மங்கள் ஈச்வரனாகிய என் னைக் கட்டுப்படுத்துவது இல்லை. ஹே! தனஞ்ஜய!
तत्र कर्मणां असम्बन्धित्वे कारणमाह —
அங்கு கர்மாக்களின் சம்பந்தமற்றிருப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
उदासीनवत् आसीनं यथा उदासीनः उपेक्षकः कश्चित् तद्वत् आसीनम् आत्मनः अविक्रियत्वात् , असक्तं फलासङ्गरहितम् अभिमानवर्जितम् ‘अहं करोमि’ इति तेषु कर्मसु ।
எவ்வாறு உதாசீனனான (ஒன்றிலும் சம்பந்தம் இல்லாமல்) ஒருவன் இருப்பவனாக இருப்பானோ அவ்வாறு உதாசீனனாய் இருக்கிறேன். ஏனெனில் ஆத்மா கிரியை அற்றதினால் பலத்தில் சங்கமற்றவனாயும், அந்தக் கர்மங்களில் நான் செய்கிறேன் என்ற அபிமானம் அற்றவனாயும் இருக்கிறேன்.
अतः अन्यस्यापि कर्तृत्वाभिमानाभावः फलासङ्गाभावश्च असम्बन्धकारणम् अन्यथा कर्मभिः बध्यते मूढः कोशकारवत् इत्यभिप्रायः ॥ ९ ॥
ஆகையால் மற்ற அதிகாரி கூட கர்த்ருத்வ அபிமானம் அற்ற வராயும், பலத்தில் பற்று அற்றவராயும் இருப்பதால் அவருக்கு பந்தத்தின் காரணம் ஏற்படாது. (அற்று விடும்) இவர்களை விட விபரீதமான மற்றமூடர்கள் கோசாரப்புழுக்கள் போல் கர்மங்களின் பிணைக்கப்படுகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
அங்கு உதாசீனன் போல் இருந்து கொண்டு இந்த பிராணி வர்க்கத்தை சிருஷ்ட்டிக்கிறேன் என்று பொருத்தமற்றது கூறப்பட்டதே எனில் அதனை (அந்த சங்கையை) நீக்குவதின் பொருட்டு கூறுகிறார்-
मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥ १० ॥
மயாத்யக்ஷேணப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் ।
ஹேதுநானேன கௌந்தேய ஜகத் விபரி வர்ததே ॥ 10 ॥
मया अध्यक्षेण सर्वतो दृशिमात्रस्वरूपेण अविक्रियात्मना अध्यक्षेण मया, मम माया त्रिगुणात्मिका अविद्यालक्षणा प्रकृतिः सूयते उत्पादयति सचराचरं जगत् ।
எங்கும் சாட்சி மாத்திரமாயும் (திருக் ஸ்வரூபமாகவும்) கிரியை அற்றவனாயும் உள்ள என்னால் பிரேரணை செய்யப்பட்டு அவித்யா ரூபமான என்னுடைய முக்குண வடிவமான மாயையானது சராசரங்க ளுடன் இந்த ஜகத்தை உண்டாக்குகிறது. (அவ்வாறே ச்வேதாச்வதர உபநிஷத் மந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.)
(ஏகோதேவ: சர்வபூதேஷு கூட: சர்வவ்யாபீ சர்வபூதாந்தராத்மா, கர்மாத்யக்ஷ: சர்வபூதாதி வாஸ: சாக்ஷ, சேதா கேவலோ நிர்குணச்ச) ஒரே தேவன், எல்லா பூதங்களிலும் மறைந்துள்ளது. எங்கும் வியாபித் திருக்கிறது, எல்லா பூதங்களுள்ளும் அந்தராத்மாவாய் இருக்கிறது, கர்மங்களுக்கெல்லாம் தலைவன், எல்லா பூதங்களுக்கும் ஆதாரம், சா, சேதனன், முக்கியமானவன், நிர்குணன் என்று.
हेतुना निमित्तेन अनेन अध्यक्षत्वेन कौन्तेय जगत् सचराचरं व्यक्ताव्यक्तात्मकं विपरिवर्तते सर्वावस्थासु ।
ஹே கௌந்தேய! அவருடைய தலைமையின் (பிரேரணையின்) காரணத்தினால் வியக்த்தா வியக்தமாயுள்ள (வெளிப்பட்டும், வெளிப் படாமலும் உள்ள) சராசரமாகிய ஜகத் எல்லா அவஸ்தைகளிலும் மாறி மாறி வருகின்றன.
दृशिकर्मत्वापत्तिनिमित्ता हि जगतः सर्वा प्रवृत्तिः — अहम् इदं भोक्ष्ये, पश्यामि इदम् , शृणोमि इदम् , सुखमनुभवामि, दुःखमनुभवामि, तदर्थमिदं करिष्ये, इदं ज्ञास्यामि, इत्याद्या अवगतिनिष्ठा अवगत्यवसानैव ।
சாக்ஷி யானது எல்லா கர்மங்களுக்கும் நிமித்தமாக இருப்பதி னால் ஜகத்தினுடைய எல்லா பிரவர்த்திகளும் (செயல்களும்) நிகழ் கின்றன. எவ்வாறெனில் நான் இதைச் சாப்பிடுகிறேன், பார்க்கிறேன், இதைக் கேட்கிறேன், இந்த சுகத்தை அனுபவிக்கிறேன், இந்த துக்கத்தை அனுபவிக்கிறேன். அதன் பொருட்டு இதை செய்விப்பேன் இதன் பொருட்டு இதைச் செய்வேன், இதை அறியச்செய்வேன் இவை முதலியவைகள் எல்லாம் ஞானத்தில் அடங்குகின்றன. (ஞானத்தில் முடிவடைகிறது)
‘यो अस्याध्यक्षः परमे व्योमन्’ (ऋ. १० । १२९ । ७), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादयश्च मन्त्राः एतमर्थं दर्शयन्ति ।
(யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்) எது (இந்த ஜகத்திற்கு) சாக்ஷி யாய் மேலான ஆகாயமாய் இருக்கிறதோ) என்று தைத்திரீய மந்திரத்தினால் அறியப்படுகிறது.
ततश्च एकस्य देवस्य सर्वाध्यक्षभूतचैतन्यमात्रस्य परमार्थतः सर्वभोगानभिसम्बन्धिनः अन्यस्य चेतनान्तरस्य अभावे भोक्तुः अन्यस्य अभावात् । किंनिमित्ता इयं सृष्टिः इत्यत्र प्रश्नप्रतिवचने अनुपपन्ने ।
ஆகையால் ஒரே தேவனாயும், எல்லாவற்றிற்கும் அத்யக்ஷ பூதமாயும், சைதன்ய மாத்திரமாயும் உண்மையில் எல்லா போகங்களிலும் சம்பந்தமற்றவனாயும் இருப்பவருக்கு அவனைத் தவிர வேறு ஒரு சேதனமும் இல்லாததால் வேறு ஒரு போக்தா இல்லாததினால் எதன் பொருட்டு இந்த சிருஷ்ட்டி? என்று இங்கு தோன்றும் வினாவும் அதற்கு பதிலும் பொருந்தாது. (ஏனெனில் அந்த விஷயம் அநிர்வசநீயம்)
‘को अद्धा वेद क इह प्रवोचत् कुत आजाता कुत इयं विसृष्टिः’ (ऋ. १० । १२९ । ६), (तै. ब्रा. २ । ८ । ९) इत्यादिमन्त्रवर्णेभ्यः ।
(கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத: இயம் விசிருஷ்டி:)
எவன் நேரே அறிகிறான்? எவனால் சொல்லமுடியும்? இந்த ஜகத் எங்கிருந்து வந்தது? எதனால் இந்த சிருஷ்டி? என்று மந்திரங்களினால் (கூறப்பட்டுள்ளது)
பகவானால் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளது. (அக்ஞா னேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:) அக்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளதால் எல்லாப் பிராணிகளும் மோஹிக்கப் பட்டுள்ளார்கள்.
एवं मां नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वज्ञं सर्वजन्तूनाम् आत्मानमपि सन्तम् —
நித்திய சுத்த புத்த முக்த ஸ்வபாவமாயும் அவ்வாறேஎல்லாப்பிரா ணிகளும் ஆத்மாவாய் இருந்தாலும் என்னை-
अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥ ११ ॥
அவஜனாந்தி மாம் மூடா மானுஷீம் தனு-மாச்ரிதம் ।
பரம் பாவ-மஜானந்தோ மம பூதமஹேச்வரம் ॥ 11 ॥
अवजानन्ति अवज्ञां परिभवं कुर्वन्ति मां मूढाः अविवेकिनः मानुषीं मनुष्यसम्बन्धिनीं तनुं देहम् आश्रितम् , मनुष्यदेहेन व्यवहरन्तमित्येतत् , परं प्रकृष्टं भावं परमात्मतत्त्वम् आकाशकल्पम् आकाशादपि अन्तरतमम् अजानन्तो मम भूतमहेश्वरं सर्वभूतानां महान्तम् ईश्वरं स्वात्मानम् ।
விவேகமற்றவர்கள் என்னுடைய மேலான பரமாத்மாவாயும் ஆகாசத்தைக் காட்டிலும் சூக்ஷ்மமாயும் எல்லாப் பிராணிகளுக்கும் பெரிய ஈஸ்வரன் பிராணிகளுக்கு அவர்களுடைய ஆத்மாவாக இருக்கும் என்னுடைய யதார்த்தத்தை அறியாமல் என்னை மனித தேஹத்தை தரித்து (எடுத்து) வியவஹாரம் செய்கிறேன் என்று என்னை ஏளனம் செய்கிறார்கள்.
ततश्च तस्य मम अवज्ञानभावनेन आहताः ते वराकाः ॥ ११ ॥
ஆகையால் என்னை அலட்சியப்படுத்துவதினால் அந்த அவி வேகிகள் அழிந்து போகிறார்கள்.
कथम् ? —
எவ்வாறு
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥ १२ ॥
மோகாசா மோககர்மாணோ மோகஜ்ஞானா விசேதஸ: ।
ராக்ஷஸீ-மாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹினீம் ச்ரிதா: ॥ 12 ॥
मोघाशाः वृथा आशाः आशिषः येषां ते मोघाशाः, तथा मोघकर्माणः यानि च अग्निहोत्रादीनि तैः अनुष्ठीयमानानि कर्माणि तानि च, तेषां भगवत्परिभवात् , स्वात्मभूतस्य अवज्ञानात् , मोघान्येव निष्फलानि कर्माणि भवन्तीति मोघकर्माणः ।
வீணான ஆசை உடையவர்கள் வீணான கர்மங்களைச் செய்கி றார்கள். ஏனெனில் தங்களுடைய அந்தராத்மாவாக இருக்கும் பகவானை அலட்சியம் செய்து செய்யும் அக்கினி ஹோத்திராதி கர்மங்கள் பலன் அற்றவைகளாகின்றன. ஆகையால் அவைகள் மோக கர்மா எனப்படுகிறது.
तथा मोघज्ञानाः मोघं निष्फलं ज्ञानं येषां ते मोघज्ञानाः, ज्ञानमपि तेषां निष्फलमेव स्यात् । विचेतसः विगतविवेकाश्च ते भवन्ति इत्यभिप्रायः ।
ஆகையால் அவர்களுடைய அறிவும் பலனற்றதாகவே ஆகும். அவர்கள் விவேகமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது அபிப்பிராயம்.
किञ्च ते भवन्ति राक्षसीं रक्षसां प्रकृतिं स्वभावम् आसुरीम् असुराणां च प्रकृतिं मोहिनीं मोहकरीं देहात्मवादिनीं श्रिताः आश्रिताः, छिन्द्धि, भिन्द्धि, पिब, खाद, परस्वमपहर, इत्येवं वदनशीलाः क्रूरकर्माणो भवन्ति इत्यर्थः ।
‘असुर्या नाम ते लोकाः’ (ई. उ. ३) इति श्रुतेः ॥ १२ ॥
மேலும் அவர்கள் மோஹத்தைச் செய்வதாகிய அசுர சுபாவத்தை அடைந்து தேஹமே ஆத்மாவென்று அதை ஆசிரயித்த அசுரர்கள் வெட்டு, பிள, குடி, சாப்பிடு, பிறருடைய பொருளை அப ஹரி என்று இவ்வாறு கூறுவதில் வல்லவர்களாயும் கொடூரமான செயல்களை உடையவர்களாயும் ஆகிறார்கள் என்பது பொருள். (அ சுர்யா நாம தே லோகா அசுரியா என்றஅந்த லோகங்களை அடைகி றார்கள் என்று சுருதியில் கூறப்பட்டுள்ளது.
ये पुनः श्रद्दधानाः भगवद्भक्तिलक्षणे मोक्षमार्गे प्रवृत्ताः —
மேலும் எவர்கள் சிரத்தையுடன் பகவத்பக்தியுடன் மோக்ஷமார்க் கத்தில் பிரவேசிக்கின்றார்களோ அவர்கள்-
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥ १३ ॥
மஹாத்மானஸ்து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதி-மாச்ரிதா: ।
பஜந்த்- யனன்யமனஸோ ஜ்ஞாத்வா பூதாதி-மவ்யயம் ॥ 13 ॥
महात्मानस्तु अक्षुद्रचित्ताः माम् ईश्वरं पार्थ दैवीं देवानां प्रकृतिं शमदमदयाश्रद्धादिलक्षणाम् आश्रिताः सन्तः भजन्ति सेवंते अनन्यमनसः अनन्यचित्ताः ज्ञात्वा भूतादिं भूतानां वियदादीनां प्राणिनां च आदिं कारणम् अव्ययम् ॥ १३ ॥
ஹே பார்த்த! தேவர்களுடைய ஸ்வபாவங்களான சமதமாதி களை ஆச்ரயித்தவர்களாயும் சித்த சுத்தி உள்ளவர்களாயும் உள்ள மஹாத்மாக்கள் மற்றவைகளில் மனதை செலுத்தாமல் (அநன்ய சித்தத்துடன்) ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்கள் மற்றும் பிராணிகளின் காரணமாயும் அவ்யயமாயும் உள்ள ஈஸ்வரனாகிய என்னைத் தொழுகிறார்கள்.
कथम् ? —
எவ்வாறு
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥ १४ ॥
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தச்ச த்ருடவ்ரதா: ।
நமஸ்யந்தச்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே ॥ 14 ॥
सततं सर्वदा भगवन्तं ब्रह्मस्वरूपं मां कीर्तयन्तः, यतन्तश्च इन्द्रियोपसंहारशमदमदयाहिंसादिलक्षणैः धर्मैः प्रयतन्तश्च, दृढव्रताः दृढं स्थिरम् अचाल्यं व्रतं येषां ते दृढव्रताः नमस्यन्तश्च मां हृदयेशयम् आत्मानं भक्त्या नित्ययुक्ताः सन्तः उपासते सेवंते ॥ १४ ॥
எப்பொழுதும் பிரஹ்மஸ்வரூபமான பகவானான என்னை ஸ்துதி செய்பவர்களாயும் இந்திரியங்களை அடக்கி சமதமாதி அஹிம்சை முதலிய தர்மங்களுடன் தீவிரமாக முயற்சி செய்பவர்கள். திடவிரதர் கள். அவர்கள் ஹிருதயத்தில் இருக்கும் ஆத்மாவாகிய என்னை எப்பொழுதும் பக்தியுடன் உபாசிக்கின்றார்கள்.
ते केन केन प्रकारेण उपासते इत्युच्यते —
அவர்கள் எந்த எந்த பிரகாரமாக உபாசிக்கின்றார்கள் என்று கூறுகிறார்-
ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥ १५ ॥
ஜ்ஞானயக்ஞேன சாப்யன்யே யஜந்தோ மாமுபாஸதே ।
ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹுதா விச்வதோமுகம் ॥ 15 ॥
ज्ञानयज्ञेन ज्ञानमेव भगवद्विषयं यज्ञः तेन ज्ञानयज्ञेन, यजन्तः पूजयन्तः माम् ईश्वरं च अपि अन्ये अन्याम् उपासनां परित्यज्य उपासते । तच्च ज्ञानम् एकत्वेन ‘एकमेव परं ब्रह्म’ इति परमार्थदर्शनेन यजन्तः उपासते ।
மற்ற உபாசனைகளை ட்டு விட்டு பகவத்விஷயமாந ஞானரூப யக்ஞத்தினால் ஈஸ்வரனாகிய என்னை பூஜிக்கிறார்கள். பரமாத்மா ஒருவனே என்றஏகத்துவரூப பரமார்த்த ஞானத்தினால் பூஜை செய்பவர்கள் என்னையே உபாசிக்கிறார்கள்.
केचिच्च पृथक्त्वेन ‘आदित्यचन्द्रादिभेदेन स एव भगवान् विष्णुः अवस्थितः’ इति उपासते ।
சிலர் சூரியன் வேறு சந்திரன் வேறு என்றபேதரூபமாக அந்த பகவான் விஷ்ணுவே அந்த சூரியன் முதலிய ரூபமாக இருக்கிறார் என்று உபாசிக்கின்றனர்.
केचित् ‘बहुधा अवस्थितः स एव भगवान् सर्वतोमुखः विश्वरूपः’ इति तं विश्वरूपं सर्वतोमुखं बहुधा बहुप्रकारेण उपासते ॥ १५ ॥
சிலர் அநேக விதமாக இருக்கின்றஅவரே பகவான் (சர்வதோ முக) எங்கும் முகம் உள்ளவர் விஸ்வரூபர் என்று அந்த சர்வதோமுக மாயுள்ள விஸ்வரூபரை அநேக பிரகாரமாக உபாசிக்கிறார்கள்.
यदि बहुभिः प्रकारैः उपासते, कथं त्वामेव उपासते इति अत आह —
அநேக விதமாக உபாசிப்பவர்கள் உம்மையே உபாசிக்கின்றார் கள் என்பது எவ்வாறு? அதை கூறுகின்றார்.
अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥ १६ ॥
அஹம் க்ரதுரஹம் யக்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம் ।
மந்த்ரோஅஹமஹமேவாஜ்யமஹமக்னிரஹம் ஹுதம் ॥ 16 ॥
अहं क्रतुः श्रौतकर्मभेदः अहमेव अहं यज्ञः स्मार्तः । किञ्च स्वधा अन्नम् अहम् पितृभ्यो यत् दीयते । अहम् औषधं सर्वप्राणिभिः यत् अद्यते तत् औषधशब्दशब्दितं व्रीहियवादिसाधारणम् ।
ஸ்ருதியில் உள்ள கர்மபேதமாகிய க்ருது நானே. அவ்வாறேஸ்மி ருதியில் கூறப்பட்ட யக்ஞமும் நானே. மேலும் பித்ருக்களுக்கு ஸ்வதா என்று சொல்லி கொடுக்கப்படும் அன்னம் நான். எல்லாப்பிராணிக ளாலும் எது சாப்பிடப்படுகிறதோ அது ஔஷதம், அந்த ஔஷதமும் நானே.
अथवा स्वधा इति सर्वप्राणिसाधारणम् अन्नम् , औषधम् इति व्याध्युपशमनार्थं भेषजम् ।
அல்லது ஸ்வதா என்பது எல்லா பிராணிகளுக்கும் உள்ள சாதா ரண அன்னம். வியாதிகளைப் போக்குவதான மருந்து ஔஷதம் எனப்படுகிறது.
मन्त्रः अहम् , येन पितृभ्यो देवताभ्यश्च हविः दीयते । अहमेव आज्यं हविश्च । अहम् अग्निः, यस्मिन् हूयते हविः सः अग्निः अहम् । अहं हुतं हवनकर्म च ॥ १६ ॥
எந்த மந்திரங்களால் பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும் ஹவி ஸானது அளிக்கப்படுகிறதோ அந்த மந்திரம் நானே. நானே ஆஜ்யம் (நெய்) நானே ஹோமம் செய்யப்படும் அந்த அக்னியும் நானே. ஹவன ரூப (ஹோமரூப) கர்மமும் நானே.
किञ्च —
மேலும்
पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोङ्कार ऋक्साम यजुरेव च ॥ १७ ॥
பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: ।
வேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாமயஜுரேவ ச ॥ 17 ॥
पिता जनयिता अहम् अस्य जगतः, माता जनयित्री, धाता कर्मफलस्य प्राणिभ्यो विधाता, पितामहः पितुः पिता, वेद्यं वेदितव्यम् , पवित्रं पावनम् ओङ्कारः, ऋक् साम यजुः एव च ॥ १७ ॥
இந்த ஜகத்தின் தந்தையும் நானே. தாயும் நானே. பிராணிக ளுக்கு (அவர்களின் கர்மங்களுக்கு ஏற்றவாறு) கர்மபலன்களைப் பிரித்துக் கொடுப்பவனும் நானே. தந்தையின் தந்தையும் அறியப்பட வேண்டியதும் புனிதமானதும், ஓம்காரமும், ரிக்,யஜுர், சாம வேதங்களும் நானே.
किञ्च—
மேலும்
गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥ १८ ॥
கதிர்பர்தா ப்ரபு: ஸா நிவாஸ: சரணம் ஸுஹ்ருத் ।
ப்ரபவ: ப்ரலய: ஸ்தானம் நிதானம் பீஜ-மவ்யயம் ॥ 18 ॥
गतिः कर्मफलम् , भर्ता पोष्टा, प्रभुः स्वामी, साक्षी प्राणिनां कृताकृतस्य, निवासः यस्मिन् प्राणिनो निवसन्ति, शरणम् आर्तानाम् , प्रपन्नानामार्तिहरः । सुहृत् प्रत्युपकारानपेक्षः सन् उपकारी, प्रभवः उत्पत्तिः जगतः, प्रलयः प्रलीयते अस्मिन् इति ।
கர்மபலன், எல்லோரையும் போஷிக்கிறவனும், எல்லோருக்கும் தலைவனும்,பிராணிகள்கர்மம் செய்தல் செய்யாமலிருத்தலுக்கு சா எதில் பிராணிகள் வசிக்கின்றனவோ, சரணமடைந்த துக்கமடைந்த வர்களின் துக்கத்தைப் போக்குகிறவனும், பிரதி உபகாரத்தை எதிர் பாராமல் உதவி செய்பவனும், ஜகத்தின் உற்பத்திக்குக் காரணமான வனும், எதில் எல்லாம் லயம் அடைகிறதோ அந்த பிரளயமும் நானே.
तथा स्थानं तिष्ठति अस्मिन् इति, निधानं निक्षेपः कालान्तरोपभोग्यं प्राणिनाम् , बीजं प्ररोहकारणं प्ररोहधर्मिणाम् , अव्ययं ।
அவ்வாறேஎல்லாம் அதில் நிலைபெற்றுள்ளது. பிராணிகளுக்கு காலாந்திரத்தில் அனுபவிக்கப்படும் பொருள்கள் வைக்கப்பட்ட இடமாய் இருக்கிறேன் முளைப்பதற்குள்ள சக்தி உள்ளவைகளுக்கு முளைக்கும் காரணமாய் (விதையாய்) இருக்கிறேன். அவைகளுக் கெல்லாம் அழிவில்லாத காரணமாய் இருக்கிறேன்.
यावत्संसारभावित्वात् अव्ययम् , न हि अबीजं किञ्चित् प्ररोहति ; नित्यं च प्ररोहदर्शनात् बीजसन्ततिः न व्येति इति गम्यते ॥ १८ ॥
எதுவரையில் சம்சாரம் உள்ளதோ அதுவரையில் உள்ளதால் அந்த வித்யையானது அழியாதது. விதை (காரணம்) இல்லாதது ஒரு போதும் முளைக்காது. எப்பொழுதும் முளைத்துக் கொண்டிருப்பதால் விதையின் தொடர்ச்சி ஏற்படுகிறது. ஒருபொழுதும் நாசம் அடையாது என்பது அறியப்படுகிறது.
किञ्च —
மேலும்
तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥ १९ ॥
தபாம்யஹ-மஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்-யுத்ஸ்ருஜாமி ச ।
அம்ருதம் சைவ ம்ருத்யுச்ச ஸதஸச்சாஹு-மர்ஜுன ॥ 19 ॥
तपामि अहम् आदित्यो भूत्वा कैश्चित् रश्मिभिः उल्बणैः । अहं वर्षं कैश्चित् रश्मिभिः उत्सृजामि । उत्सृज्य पुनः निगृह्णामि कैश्चित् रश्मिभिः अष्टभिः मासैः पुनः उत्सृजामि प्रावृषि ।
நான் சூரியனாக இருந்துகொண்டு சில கடுமையான கிரணங்க ளால் வெப்பத்தை உண்டாக்குகிறேன். நான் சில கிரணங்களால் மழை பொழியச் செய்கிறேன். மறுபடியும் எட்டு மாதங்கள் நிறுத்தி பின் மழை காலத்தில் மழையை பொழிவிக்கிறேன்.
अमृतं चैव देवानाम् , मृत्युश्च मर्त्यानाम् । सत् यस्य यत् सम्बन्धितया विद्यमानं तत् , तद्विपरीतम् असच्च एव अहम् अर्जुन ।
ஹே அர்ஜுன! தேவர்களது மரணமற்றதன்மையாகவும் மனிதர்க ளின் மரணத்தன்மையாகவும் நான் இருக்கிறேன். எதனது சம்பந்தத்தி னால் இருக்கிறதோ (வெளிப்படுகிறதோ) அது சத். அதற்கு விபரீதமா னது (நேர் எதிர்மறையானது) அசத். அந்த சத்தாகவும், அசத்தாகவும் இருக்கிறேன்.
न पुनः अत्यन्तमेव असत् भगवान् , स्वयं कार्यकारणे वा सदसती ।
மேலும் பகவான் முற்றிலும் அசத்தாக ஆகமாட்டார். காரியம்- சத் என்றும், காரணம் அசத் என்றும் காரணமாகிய பரம்பொருள் அறி யவேண்டும். (சத் என்றால் நாமரூபம் வெளிப்பட்டது-வ்யக்தம்) அசத் என்றால் வெளிப்படாதது-அவ்யக்தம்)
ये पूर्वोक्तैः निवृत्तिप्रकारैः एकत्वपृथक्त्वादिविज्ञानैः यज्ञैः मां पूजयन्तः उपासते ज्ञानविदः, ते यथाविज्ञानं मामेव प्राप्नुवन्ति ॥ १९ ॥
எவர்கள் முன்பு கூறிய கிரமத்தை அனுசரித்து ஏகத்துவம் (ஒன்று என்னும் தன்மை) பிருதக்துவம் (வேறு என்றதன்மை) முதலிய ஞானத் துடன் கூடிய யக்ஞத்தினால் பூஜை செய்கிறார்களோ அவர்கள் என்னை உபாசனை செய்கிறார்கள். ஞானத்தை அறிந்தவர்கள், அவர்களின் விக்ஞானம் எவ்வாறு உள்ளதோ அதற்கேற்ப என் னையே அடைகிறார்கள்.
ये पुनः अज्ञाः कामकामाः —
மேலும் எந்த அக்ஞானிகள் காம விஷயங்களில் ஆசை உள்ள வர்களாய் இருக்கிறார்களோ-
त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोकमश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥ २० ॥
த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா யக்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே ।
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோகமச்னந்தி திவ்யாந்திவி தேவபோகான் ॥ 20 ॥
त्रैविद्याः ऋग्यजुःसामविदः मां वस्वादिदेवरूपिणं सोमपाः सोमं पिबन्तीति सोमपाः, तेनैव सोमपानेन पूतपापाः शुद्धकिल्बिषाः, यज्ञैः अग्निष्टोमादिभिः इष्ट्वा पूजयित्वा स्वर्गतिं स्वर्गगमनं स्वरेव गतिः स्वर्गतिः ताम् , प्रार्थयन्ते । ते च पुण्यं पुण्यफलम् आसाद्य सम्प्राप्य सुरेन्द्रलोकं शतक्रतोः स्थानम् अश्नन्ति भुञ्जते दिव्यान् दिवि भवान् अप्राकृतान् देवभोगान् देवानां भोगान् ॥ २० ॥
ரிக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் அறிந்த வர்களாயும் சோமபானத்தைப் பருகியவர்களாயும் சோமபானத்தைப் பருகியதால் பாபமற்றவர்களாயும் உள்ள சகாமபுருஷர்கள் வசு முத லிய தேவர்களுடைய ரூபத்தில் இருக்கும் பரமாத்மாவாகிய என்னை அக்னிஷ்டோமாதி யக்ஞங்கள் மூலமாக பூஜை செய்து சுவர்கத்தை அடைவதற்கு பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் நூறுயாகமுடைய இந் திரனது உலகை புண்யத்தின் பயனாக அடைந்து அங்குள்ள திவ்ய மான தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள்.
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥ २१ ॥
தே தம் புக்த்வா ஸ்வர்க லோகம் விசாலம் க்ஷணே புண்யே மர்த்யலோகம் விசந்தி ।
ஏவம் த்ரயீதர்மமனுப்ரபன்ன கதாகதம் காமகாமா லபந்தே ॥ 21 ॥
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं विस्तीर्णं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति आविशन्ति ।
அவர்கள் விசாலமான ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து விட்டு புண்யபலம் தீர்ந்தவுடன் மனுஷ்யலோகத்தில் புகுகிறார்கள். (அடைகிறார்கள்)
एवं यथोक्तेन प्रकारेण त्रयीधर्मं केवलं वैदिकं कर्म अनुप्रपन्नाः गतागतं गतं च आगतं च गतागतं गमनागमनं कामकामाः कामान् कामयन्ते इति कामकामाः लभन्ते गतागतमेव, न तु स्वातन्त्र्यं क्वचित् लभन्ते इत्यर्थः ॥ २१ ॥
கூறப்பட்ட பிரகாரம் மூன்று வேதங்களில் விதிக்கப்பட்ட வைதிக கர்மங்களை மாத்திரம் ஆச்ரயிப்பவர்களாய் விஷயங்களை (காம னைகளை) விரும்புபவர்களாய் போக்குவரத்தை அடைகிறார்கள். ஆனால் ஓரிடத்தும் சுதந்திரத்தை அடைவதில்லை என்பது பொருள்.
ये पुनः निष्कामाः सम्यग्दर्शिनः —
மேலும், எவர்கள் ஆசை நீங்கினவராய் யதார்த்த தர்சன முடையவர்களோ
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ २२ ॥
அனன்யாச்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே ।
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ॥ 22 ॥
अनन्याः अपृथग्भूताः परं देवं नारायणम् आत्मत्वेन गताः सन्तः चिन्तयन्तः मां ये जनाः संन्यासिनः पर्युपासते, तेषां परमार्थदर्शिनां नित्याभियुक्तानां सतताभियोगिनां योगक्षेमं योगः अप्राप्तस्य प्रापणं क्षेमः तद्रक्षणं तदुभयं वहामि प्रापयामि अहम् ।
எந்த சந்நியாசி அனன்ய பாவத்துடன் பரமதேவ ஸ்வரூபமாகிய நாராயணனாகிய என்னை ஆத்மஸ்வரூபமாக அறிந்து என்னையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் என்னுடைய மேலான நிஷ்காம உபாசனையை செய்கிறாரோ எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் அந்த பரமார்த்த ஞானயோகியினு டைய யோகக்ஷேமத்தை நான் வஹிக்கிறேன். (கவனித்துக் கொள்கிறேன்)
ஞானியோ ஆத்மாதான் என்பது என் கொள்கை. (ஸ ச மமப்ரிய:) அவன் எனக்குப் பிரியமானவன். எதனாலோ அதனால் அவர்கள் என்னுடைய ஆத்மாவாகவும் பிரியர்களாயும் இருக்கிறார்கள் என்று.
ननु अन्येषामपि भक्तानां योगक्षेमं वहत्येव भगवान् ।
அதனால் மற்றபக்தர்களுடைய யோகக்ஷேமங்களையும் பகவான் தானே வஹிக்கிறார்?
सत्यं वहत्येव ; किन्तु अयं विशेषः — अन्ये ये भक्ताः ते आत्मार्थं स्वयमपि योगक्षेमम् ईहन्ते ; अनन्यदर्शिनस्तु न आत्मार्थं योगक्षेमम् ईहन्ते ; न हि ते जीविते मरणे वा आत्मनः गृद्धिं कुर्वन्ति ; केवलमेव भगवच्छरणाः ते ; अतः भगवानेव तेषां योगक्षेमं वहतीति ॥ २२ ॥
உண்மையே அவ்வாறு வஹிக்கவே செய்கிறார். ஆனால் இந்த வித்தியாசம் இருக்கிறது. அந்நிய (மற்ற) பக்தர்கள் எவர்களோ அவர்கள் தங்களுக்காக தாங்களும் யோகக்ஷேமத்திற்காக முயல்கிறார்கள். (முயற்சிசெய்கிறார்கள்) ஆனால் அனன்ய தர்சிகள் (என்னை மட்டும் தரிசிப்பவர்கள்) தங்களுக்காக யோகக்ஷேமத்திற்கான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஜீவிக்கும்பொழுதா வது மரணத்தின் போதாவது தங்களுக்கான ஆசை அற்று கேவலம் பகவானிடத்திலேயே அடைக்கலம் அடைந்தவர்கள். ஆகையால் பகவான் அவர்களுடைய யோகக்ஷேமத்தை வஹிக்கிறார்.
ननु अन्या अपि देवताः त्वमेव चेत् , तद्भक्ताश्च त्वामेव यजन्ते । सत्यमेवम् —
மேலும் மற்றதேவதைகளும் தாங்களே எனில் அந்த பக்தர்கள் உங்களையல்லவா பஜிக்கின்றார்கள் என்றால் உண்மையே இவ்வாறு
येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥ २३ ॥
யே அப்யன்யதேவதா-பக்தா யஜந்தே ச்ரத்தயாந்விதா: ।
தே அபி மாமேவ கௌந்தேய யஜந்த்-யவிதி-பூர்வகம் ॥ 23 ॥
येऽपि अन्यदेवताभक्ताः अन्यासु देवतासु भक्ताः अन्यदेवताभक्ताः सन्तः यजन्ते पूजयन्ति श्रद्धया आस्तिक्यबुद्ध्या अन्विताः अनुगताः, तेऽपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम् अविधिः अज्ञानं तत्पूर्वकं यजन्ते इत्यर्थः ॥ २३ ॥
எந்த மற்ற தேவதைகளிடத்தில் பக்தியுள்ளவர்கள் மற்றதேவதை களிடத்தில் பக்தி உடையவர்களாய் இருந்துகொண்டு சிரத்தையுடன் கூடி என்னை பூஜை செய்கிறார்களோ ஹே கௌந்தேய! அவர்கள் என்னையே விதி இல்லாமல் பூஜிக்கிறார்கள். அக்ஞானத்தோடு என்னையே பூஜிக்கிறார்கள் என்பது பொருள்.
कस्मात् ते अविधिपूर्वकं यजन्ते इत्युच्यते ; यस्मात् —
எதனால் அவர்கள் அக்ஞானத்தோடு பூஜை செய்கிறார்கள்? என்று கூறுகிறார். ஆகையால்-
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥ २४ ॥
அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச ।
ந து மாமபிஜானந்தி தத்த்வேநாதஸ்- ச்யவந்தி தே ॥ 24 ॥
अहं हि सर्वयज्ञानां श्रौतानां स्मार्तानां च सर्वेषां यज्ञानां देवतात्मत्वेन भोक्ता च प्रभुः एव च । मत्स्वामिको हि यज्ञः,
‘अधियज्ञोऽहमेवात्र’ (भ. गी. ८ । ४) इति हि उक्तम् । तथा न तु माम् अभिजानन्ति तत्त्वेन यथावत् । अतश्च अविधिपूर्वकम् इष्ट्वा यागफलात् च्यवन्ति प्रच्यवन्ते ते ॥ २४ ॥
ஸ்ரௌத, ஸ்மார்த்த என்ற(சுருதியிலும், ஸ்ம்ருதியிலும் விதிக்கப்பட்ட) எல்லா யக்ஞங்களுக்கும் தேவதா ரூபமாக இருந்து கொண்டு போக்தாவாகவும், சுவாமியாகவும் இருக்கின்றேன். நானே எல்லா யக்ஞங்களுக்கும் ஸ்வாமியாக இருப்பது अधियज्ञोऽहमेवात्र (அதியக்ஞோ அஹமேவாத்ர) என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அக்ஞானிகள் என்னுடைய யதார்த்த ஸ்வரூபத்தை அறிவதில்லை. ஆகையால் அவித்யா பூர்வமாக (விதிக்கு மாறாக) பூஜை, யாகம் செய்து யாகத்தின் பலனை நழுவ விடுகிறார்கள்.
येऽपि अन्यदेवताभक्तिमत्त्वेन अविधिपूर्वकं यजन्ते, तेषामपि यागफलं अवश्यंभावि । कथम् ? —
எவர்கள் மற்றதேவதைகளிடம் பக்தியுடன் அவித்யா பூர்வகமாக (பூஜை) யக்ஞம் செய்கின்றார்களோ அவர்களுக்கும் யாகபலன் அவசியம் உண்டாகும். எவ்வாறு?
यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥ २५ ॥
யாந்தி தேவவ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ருவ்ரதா: ।
பூதானி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோ அபி மாம் ॥ 25 ॥
यान्ति गच्छन्ति देवव्रताः देवेषु व्रतं नियमो भक्तिश्च येषां ते देवव्रताः देवान् यान्ति । पितॄन् अग्निष्वात्तादीन् यान्ति पितृव्रताः श्राद्धादिक्रियापराः पितृभक्ताः । भूतानि विनायकमातृगणचतुर्भगिन्यादीनि यान्ति भूतेज्याः भूतानां पूजकाः । यान्ति मद्याजिनः मद्यजनशीलाः वैष्णवाः मामेव यान्ति । समाने अपि आयासे मामेव न भजन्ते अज्ञानात् , तेन ते अल्पफलभाजः भवन्ति इत्यर्थः ॥ २५ ॥
எவர்களுக்கு நியமமும், பக்தியும் தேவர்களிடத்திலிருக்கிறதோ அப்படிப்பட்ட தேவவிரதர்கள் தேவர்களை அடைகிறார்கள். (தேவ லோகத்தை அடைகிறார்கள்) சிரார்த்தம் முதலிய கிரியைகளில் சிரத்தை உடைய பித்ரு பக்தர்கள் அக்னிஷ்வாத்தர் முதலிய பித்ருக் களை அடைகிறார்கள். (பித்ரு லோகத்தை அடைவார்கள்) பூதங் களை பூஜிப்பவர்கள் விநாயகர், மாத்ருக்களின் கூட்டம், நான்கு பகினிகள் முதலான பூதங்களை (அவர்களுடைய உலகங்களை) அடைகிறார்கள். என்னையே பூஜிக்கும் வைஷ்ணவ பக்தர்கள் என் னையே அடைவார்கள். அக்ஞானிகள் சிரமம் ஒன்றாகவே இருந்தா லும் என்னையே பூஜிப்பதில்லை. ஆதலால் அவர்கள் அல்ப பிரயோ னமுடையவர்கள் என்பது பொருள். (அல்ப பிரயோஜனம் என்றால் திரும்பி வருதலை உடைய பிரயோஜனம்)
न केवलं मद्भक्तानाम् अनावृत्तिलक्षणम् अनन्तफलम् , सुखाराधनश्च अहम् । कथम् ? —
என்னுடைய பக்தர்களுக்கு திரும்பவருதல் இல்லாத முடிவில் லாத பலன் மாத்திரமன்று. என்னை பூஜிப்பது மிகவும் எளிது- அது எப்படி எனில்?
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥ २६ ॥
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி ।
ததஹம் பக்த்யுபஹ்ருத-மச்னாமி ப்ரயதாத்மன: ॥ 26 ॥
पत्रं पुष्पं फलं तोयम् उदकं यः मे मह्यं भक्त्या प्रयच्छति, तत् अहं पत्रादि भक्त्या उपहृतं भक्तिपूर्वकं प्रापितं भक्त्युपहृतम् अश्नामि गृह्णामि प्रयतात्मनः शुद्धबुद्धेः ॥ २६ ॥
எவன் இலை, பூ, பழம், நீர் இவைகளை எனக்கு பக்தியுடன் சமர்ப்பணம் செய்கிறானோ அந்த சுத்தாந்தக்கரணமுடையவன் பக்தியுடன் சமர்ப்பிப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். (சாப்பிடுகிறேன்)
यतः एवम् , अतः —
இவ்வாறு இருப்பதனால்
यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥ २७ ॥
யத் கரோஷி யதச்னாஸி யஜ்ஜு ஹோஷி ததாஸி யத் ।
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம் ॥ 27 ॥
यत् करोषि स्वतः प्राप्तम् , यत् अश्नासि, यच्च जुहोषि हवनं निर्वर्तयसि श्रौतं स्मार्तं वा, यत् ददासि प्रयच्छसि ब्राह्मणादिभ्यः हिरण्यान्नाज्यादि, यत् तपस्यसि तपः चरसि कौन्तेय, तत् कुरुष्व मदर्पणं मत्समर्पणम् ॥ २७ ॥
ஹே கௌந்தேய! தானாகவே அமைந்து எதைச்செய்கிறாயோ, எதைச் சாப்பிடுகிறாயோ, ஸ்ருதியிலாவது, ஸ்ம்ருதியிலாவது விதிக் கப்பட்ட எந்த ஹோமத்தைச் செய்து முடிக்கிறாயோ எந்த தங்கம், அன்னம், நெய் முதலிய வஸ்துக்களை பிராமணர் முதலிய நல்ல பாத் திரம் அறிந்து தானம் செய்கிறாயோ, மேலும் எந்த தபசைச் செய்கி றாயோ அவைகளை எல்லாம் என்னிடத்தில் சமர்ப்பணம் செய்.
एवं कुर्वतः तव यत् भवति, तत् शृणु —
அவ்வாறு செய்வதினால் உனக்கு என்ன லாபம் ஏற்படும் என்ப தைக் கேள்-
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥ २८ ॥
சுபாசுப்பலை-ரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை: ।
ஸந்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி ॥ 28 ॥
शुभाशुभफलैः शुभाशुभे इष्टानिष्टे फले येषां तानि शुभाशुभफलानि कर्माणि तैः शुभाशुभफलैः कर्मबन्धनैः कर्माण्येव बन्धनानि कर्मबन्धनानि तैः कर्मबन्धनैः एवं मदर्पणं कुर्वन् मोक्ष्यसे । सोऽयं संन्यासयोगो नाम, संन्यासश्च असौ मत्समर्पणतया कर्मत्वात् योगश्च असौ इति, तेन संन्यासयोगेन युक्तः आत्मा अन्तःकरणं यस्य तव सः त्वं संन्यासयोगयुक्तात्मा सन् विमुक्तः कर्मबन्धनैः जीवन्नेव पतिते चास्मिन् शरीरे माम् उपैष्यसि आगमिष्यसि ॥ २८ ॥
இவ்வாறு கர்மங்களை என்னிடத்தில் அர்ப்பணித்து சுபம், அசுபம் (புண்யம், பாபம்) ஆகிய பலன்களுடன் கூடிய கர்மபந்தத்திலி ருந்து விடுபடுவாய். இவ்வாறு சந்நியாச யோகத்தை அடைந்து என் றால் என்னிடத்தில் கர்மங்களை அர்ப்பணம் செய்தல் சந்நியாசமா கும். அர்பணித்தல் கர்மமாய் இருப்பதால் யோகம். அதுவே சந்நியாச யோகம். அந்த சந்நியாச யோகத்துடன் கூடிய மனதினாய் இந்த சரீரத் தில் ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதும், கர்மபந்தத்திலிருந்து விடுபட்டு, சரீரம் விழுந்தவுடன் என்னையே அடைவாய்.
रागद्वेषवान् तर्हि भगवान् , यतो भक्तान् अनुगृह्णाति, न इतरान् इति । तत् न —
எதனால் பகவான் பக்தர்களை அனுக்ரஹிக்கிறார். மற்றவர் களை அனுகிரஹிப்பதில்லை. ஆகையால் அவர் ராகத்வேஷத்துடன் கூடியவர் என்றால், அவ்வாறு அல்ல-
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ २९ ॥
ஸமோஅஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய: ।
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ॥ 29 ॥
समः तुल्यः अहं सर्वभूतेषु । न मे द्वेष्यः अस्ति न प्रियः । अग्निवत् अहम् — दूरस्थानां यथा अग्निः शीतं न अपनयति, समीपम् उपसर्पतां अपनयति ; तथा अहं भक्तान् अनुगृह्णामि, न इतरान् ।
நான் எல்லாபிராணிகளிடத்தும் சமமாய் இருக்கிறேன். எனக்கு வெறுப்போ, பிரியமோ அக்னியைப் போல் கிடையாது. எவ்வாறு அக்னியானது தூரத்தில் இருப்பவர்களுடைய குளிரைப் போக்குவ தில்லையோ, அருகில் இருப்பவர்களின் குளிரைப் போக்குகிறதோ அவ்வாறே நான் பக்தர்களை அனுக்ரஹம் செய்கிறேன். மற்றவர்களை அல்ல.
ये भजन्ति तु माम् ईश्वरं भक्त्या मयि ते — स्वभावत एव, न मम रागनिमित्तम् — वर्तन्ते । तेषु च अपि अहं स्वभावत एव वर्ते, न इतरेषु । न एतावता तेषु द्वेषो मम ॥ २९ ॥
எவர்கள் என்னை பக்தியுடன் தொழுகிறார்களோ அவர்கள் என் னிடத்தில் ஸ்வபாவமாகவே (இயற்கையாகவே) இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடத்திலுள்ள ராகத்தினால் (பற்றினால்) அல்ல. நானும் அவர்களிடத்தில் ஸ்வபாவமாகவே இருக்கிறேன். மற்றவர்க ளிடத்தில் அல்ல. இவ்வாறு இருப்பதால் எனக்கு அவர்களிடத்தில் வெறுப்பு இல்லை.
शृणु मद्भक्तेर्माहात्म्यम् —
என் பக்தனுடைய மேன்மையைக் கேள்-
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥ ३० ॥
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநன்யபாக் ।
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: ॥ 30 ॥
अपि चेत् यद्यपि सुदुराचारः सुष्ठु दुराचारः अतीव कुत्सिताचारोऽपि भजते माम् अनन्यभाक् अनन्यभक्तिः सन् , साधुरेव सम्यग्वृत्त एव सः मन्तव्यः ज्ञातव्यः ; सम्यक् यथावत् व्यवसितो हि सः, यस्मात् साधुनिश्चयः सः ॥ ३० ॥
எவனொருவன் மிகுந்த கீழான ஆசாரமுடையவனாய் இருந்தாலும் என்னிடத்தில் அனன்ய பக்தி உடையவனாய் (வேறு ஒன்றில் பக்தியில்லாமல் என்னிடத்திலேயே பக்தி உடையவனாய்) என்னையே தொழுகின்றானோ அப்படிப்பட்ட சாதுவே நல்ல ஆசாரம் உடையவன் என்று அறியவேண்டும். ஏனெனில் அவன் யதார்த்தத்தில் திட நிச்சயமுள்ளவன்.
उत्सृज्य च बाह्यां दुराचारतां अन्तः सम्यग्व्यवसायसामर्थ्यात् —
அந்தக்கரணத்தில் நன்றாக பண்படுத்தப்பட்ட யதார்த்த நிச்சயத் தின் பலத்தினால் வெளியில் உள்ள கீழான ஆசாரத்தை விட்டு-
क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति ॥ ३१ ॥
க்ஷி ப்ரம் பவதி தர்மாத்மா சஸ்வச்-சாந்திம் நிகச்சதி ।
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணச்யதி ॥ 31 ॥
क्षिप्रं शीघ्रं भवति धर्मात्मा धर्मचित्तः एव । शश्वत् नित्यं शान्तिं च उपशमं निगच्छति प्राप्नोति ।
அந்த தர்மாத்மா சீக்கிரமே நித்தியமான சாந்தியை அடைகிறான்.
शृणु परमार्थम् , कौन्तेय प्रतिजानीहि निश्चितां प्रतिज्ञां कुरु, न मे मम भक्तः मयि समर्पितान्तरात्मा मद्भक्तः न प्रणश्यति इति ॥ ३१ ॥
ஹே கௌந்தேய! பரமார்த்த தத்துவத்தைக் கேள். திட நிச்சயத்து டன் அந்தக்கரணத்தை பரமாத்மாவாகிய என்னிடத்தில் சமர்ப்பித்து- என்னுடைய பக்தன் ஒரு நாளும் நாசத்தை அடையமாட்டான்.
किञ्च —
மேலும்
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥ ३२ ॥
மாம் ஹி பார்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு: பாபயோனய: ।
ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தேஅபி யாந்தி பராம்கதிம் ॥ 32 ॥
मां हि यस्मात् पार्थ व्यपाश्रित्य माम् आश्रयत्वेन गृहीत्वा येऽपि स्युः भवेयुः पापयोनयः पापा योनिः येषां ते पापयोनयः पापजन्मानः । के ते इति, आह — स्त्रियः वैश्याः तथा शूद्राः तेऽपि यान्ति गच्छन्ति परां प्रकृष्टां गतिम् ॥ ३२ ॥
ஹே பார்த்த! தாழ்ந்த பிறவிகள் எடுத்த ஸ்த்ரீ, வைச்யன் அவ் வாறேசூத்திரர்கள் எல்லோரும் என்னையே சரணடைந்து உத்தம மான கதியை அடைகின்றார்கள்.
किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥ ३३ ॥
கிம் புனர்-ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்-ததா ।
அநித்ய-மஸுகம் லோக-மிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ॥ 33 ॥
किं पुनः ब्राह्मणाः पुण्याः पुण्ययोनयः भक्ताः राजर्षयः तथा । राजानश्च ते ऋषयश्च राजर्षयः ।
மேலான புண்ய பிறவிகள் எடுத்த பிராமணர்களும், ராஜரிஷிக ளுமாகிய பக்தர்களைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?
यतः एवम् , अतः अनित्यं क्षणभङ्गुरम् असुखं च सुखवर्जितम् इमं लोकं मनुष्यलोकं प्राप्य पुरुषार्थसाधनं दुर्लभं मनुष्यत्वं लब्ध्वा भजस्व सेवस्व माम् ॥ ३३ ॥
(ஆகையால்) இவ்வாறு உள்ளதால் சுகமற்றஇந்த மனிதலோ கத்தை அடைந்து புருஷார்த்தத்திற்கு காரணமான அரிதான மனிதஜன்மத்தை அடைந்து என்னைத் தொழவேண்டும்.
कथम् —
எவ்வாறு-
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥ ३४ ॥
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ-மாத்மானம் மத்பராயண: ॥ 34 ॥
मयि वासुदेवे मनः यस्य तव स त्वं मन्मनाः भव । तथा मद्भक्तः भव मद्याजी मद्यजनशीलः भव । माम् एव च नमस्कुरु । माम् एव ईश्वरम् एष्यसि आगमिष्यसि युक्त्वा समाधाय चित्तम् । एवम् आत्मानम् , अहं हि सर्वेषां भूतानाम् आत्मा, परा च गतिः, परम् अयनम् , तं माम् एवंभूतम् , एष्यसि इति अतीतेन सम्बन्धः, मत्परायणः सन् इत्यर्थः ॥ ३४ ॥
என்னிடத்திலேயே மனமுடையவனாகவும், என்னிடத்தில் பக்தி உள்ளவனாகவும், என்னையே பூஜை செய்பவனாகவும், இரு. என்னையே வணங்கு, சித்தத்தைச் சமாதானம் செய்து என்னையே மேலான ஸ்தானமாக நினைத்து ஈஸ்வரனாகிய என்னையே அடைவாய். இவ்வாறு நானே எல்லாப் பிராணிகளுக்கும் ஆத்மா, நானே மேலான அடையும் இடம். இவ்வாறு என்னையே அடைவாய். இவ்வாறு என்னை என்றசப்தம் ஆத்மானம் என்றசப்தத்துடன் சம்பந்தமிருக்கிறது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये नवमोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூஉபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோத்யாய: