द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

श्रीमद्भगवद्गीताभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

ஶ்ரீமத்பகவத்கீதாபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

अतीतानन्तराध्यायान्ते ध्यानयोगस्य सम्यग्दर्शनं प्रति अन्तरङ्गस्य सूत्रभूताः श्लोकाः ‘स्पर्शान् कृत्वा बहिः’ (भ. गी. ५ । २७) इत्यादयः उपदिष्टाः । तेषां वृत्तिस्थानीयः अयं षष्ठोऽध्यायः आरभ्यते ।
இதற்கு முந்திய அத்தியாயத்தில் சம்யக் தர்சனத்திற்கு (யதார்த்த ஞானத்திற்கு) தியான யோகம் அந்தரங்க சாதனம் என்பதை (ஸ்பர்ஷான் கிருத்வா) என்றல் முதலிய ஸ்லோகங்களால் சுருக்கமாக உபதேசித்ததை விஸ்தாரமாக விளக்க இந்த ஆறாவது அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
तत्र ध्यानयोगस्य बहिरङ्गं कर्म इति, यावत् ध्यानयोगारोहणसमर्थः तावत् गृहस्थेन अधिकृतेन कर्तव्यं कर्म इत्यतः तत् स्तौति — अनाश्रित इति ॥
அங்கு த்யான யோகத்திற்கு பஹிரங்க சாதனம் கர்மமாகும். ஆகையால் த்யான யோகத்தை அடைய சாமர்த்தியம் இல்லாத க்ரு ஹஸ்த்தனாகிய அதிகாரி அவசியம் கர்மம் செய்யவேண்டும். ஆகை யால் கர்மத்தைப் புகழ்கிறார்.
ननु किमर्थं ध्यानयोगारोहणसीमाकरणम् , यावता अनुष्ठेयमेव विहितं कर्म यावज्जीवम् ।
விஹித கர்மாவை நாம் ஜீவித்துக் கொண்டு இருக்கும் வகையில் அவசியம் செய்யவேண்டும் என்று இருக்கையில் எதனால் த்யான யோகத்தை அடையும் வரையில் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
न, ‘आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते’ (भ. गी. ६ । ३) इति विशेषणात् , आरूढस्य च शमेनैव सम्बन्धकरणात् ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் (ஆருருக்ஷோ: முனேர்யோகம் கர்ம காரணமுச்யதே) என்ற விசேஷணத்தால் த்யான யோகத்தை அடைந்த ஆருடனுக்கு உபசமத்தில் சம்பந்தம் இருப்பதால். (எல்லா பாஹிய விஷயங்களிலிருந்து விடுபட்டிருப்பது)
आरुरुक्षोः आरूढस्य च शमः कर्म च उभयं कर्तव्यत्वेन अभिप्रेतं चेत्स्यात् , तदा
த்யான யோகத்தை அடைய இச்சை உள்ளவன் ஆருருக்ஷோ: ஆருருக்ஷோவான முனிக்கு கர்மம் காரணம் என்று கூறப்படுகிறது.
‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति शमकर्मविषयभेदेन विशेषणं विभागकरणं च अनर्थकं स्यात् ॥
த்யான யோகத்தை அடைந்தவன் ஆரூடன்.ஆருருக்ஷோவிற்கும் ஆரூடனக்கும் சமம், கர்ம இரண்டும் இருவரும் அவசியம் செய்ய வேண்டும் என்றால் ஆருருக்ஷோக்கு காமமும்,ஆரூடனுக்கு சமமும் என்று விசேஷணத்தை பிரித்துக்கூறியது வியர்த்தமாகும்.
तत्र आश्रमिणां कश्चित् योगमारुरुक्षुः भवति, आरूढश्च कश्चित् , अन्ये न आरुरुक्षवः न च आरूढाः ; तानपेक्ष्य ‘आरुरुक्षोः’ ‘आरूढस्य च’ इति विशेषणं विभागकरणं च उपपद्यत एवेति चेत् ।
கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவர்களில் சிலர் யோகத்தை அடைய இச்சை உள்ளவர்களாயும், யோகத்தை அடைந்தவர்களாயும் இருக்கிறார்கள். மற்றவர்களில் சிலர் யோகத்தில் இச்சை அற்றவர் களாயும், யோகத்தை அடையாதவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து இந்த விசேஷணத்தில் (கர்ம, சமம்) விபாகம் (பிரிவு) ஏற்படலாமே என்றால்
न ; ‘तस्यैव’ इति वचनात् , पुनः योगग्रहणाच्च ‘योगारूढस्य’ इति ; य आसीत् पूर्वं योगमारुरुक्षुः, तस्यैव आरूढस्य शम एव कर्तव्यः कारणं योगफलं प्रति उच्यते इति । अतो न यावज्जीवं कर्तव्यत्वप्राप्तिः कस्यचिदपि कर्मणः ।
அவ்வாறு அல்ல. ஏனெனில் तस्यैव (அவனுக்கே) என்ற வசனம் இருப்பதால், மேலும் योगारूढस्य (யோகாரூடஸ்ய - யோகத்தை அடைந்தவனுக்கு) என்றஇடத்தில் யோகம் என்ற விசேஷணமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவன் முன்பு (ஆருருக்ஷ) - யோகத்தை அடைய விரும்பினானோ எவன் யோகத்தை அடைந்தானோ (யோகாரூடனோ) அந்த யோகா ரூடனுக்கே யோகபலத்தை அடைவ தற்கு சமம், காரணமாய் இருப்பதால் அவனுக்கு (யோகாரூடனுக்கு) அது அவசியம் செய்யவேண்டியதாக, கூறப்பட்டதாக உள்ளது. ஆகையால் (யோகா ரூடன்) ஜீவிக்கும்காலம் முழுவதும் கர்மம் செய்யவேண்டும் என்பது இல்லை.
योगविभ्रष्टवचनाच्च — गृहस्थस्य चेत् कर्मिणो योगो विहितः षष्ठे अध्याये, सः योगविभ्रष्टोऽपि कर्मगतिं कर्मफलं प्राप्नोति इति तस्य नाशाशङ्का अनुपपन्ना स्यात् ।
யோகத்தினின்றும் தவறியவனைப் பற்றிய பகவானது வசனத்தி னாலும் இது பொருந்தவில்லை. ஆறாவது அத்தியாயத்தில் கூறப் பட்ட கர்மம் செய்கின்றகிரஹஸ்தனின் பொருட்டு யோகம் விதிக்கப் பட்டிருந்தாலும், அவன் யோகத்தினின்று நழுவினாலும் கர்மம் செய் வதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலத்தை அடைகிறான். ஆகையால் இதில் நாசம் அடைவான் என்று சங்கை செய்வது பொருந்தாது.
अवश्यं हि कृतं कर्म काम्यं नित्यं वा — मोक्षस्य नित्यत्वात् अनारभ्यत्वे — स्वं फलं आरभत एव ।
ஏனெனில் மோக்ஷமானது நித்தியமாய் இருப்பதால் கர்மத்தி னால் அடையக்கூடியது அல்ல. ஆகையால் செய்யப்பட்ட நித்திய காமிய கர்மங்கள் அவசியம் பலன்களைக் கொடுக்கவே செய்யும்.
नित्यस्य च कर्मणः वेदप्रमाणावबुद्धत्वात् फलेन भवितव्यम् इति अवोचाम, अन्यथा वेदस्य आनर्थक्यप्रसङ्गात् इति । न च कर्मणि सति उभयविभ्रष्टवचनम् , अर्थवत् कर्मणो विभ्रंशकारणानुपपत्तेः ॥
நித்தியகர்மாவானது வேதப் பிரமாணத்தினால் அறியப்பட்டதாய் இருப்பதால் அவசியம் பலம் ஏற்ப்பட்டே ஆகவேண்டும் என்று முன்பே கூறப்பட்டது. அவ்வாறு இல்லையெனில் வேதத்திற்கு அனர்த்தப் பிராப்தி ஏற்படும். மேலும் கர்மம் உள்ளவனிடத்து இரண்டினின்றும் தவறியவனைப் பற்றிக் கூறுதல் கர்மத்தினின்றும் நழுவுதலில் காரணம் பொருந்தாமையால். கர்மத்தின் பயன் அவசியம் ஏற்படும், ஆகையால் கிருஹஸ்த்தன் யோகத்தினின்று விடுபட்டவன் என்று கூறுதல் பொருந்தாது. (யோகத்தினின்று விடுபடல் என்றால் யோகப்பிரஷ்ட்டன்)
कर्म कृतम् ईश्वरे संन्यस्य इत्यतः कर्तुः कर्म फलं नारभत इति चेत् ।
இவ்வாறு எடுத்துக்கொண்டால் ஈஸ்வரார்ப்பணமாக செய்யப் பட்ட கர்மத்திற்கு பலன் ஏற்படாதே எனில்.
न ; ईश्वरे संन्यासस्य अधिकतरफलहेतुत्वोपपत्तेः ॥
இந்தக் கூற்று சரியல்ல. ஏனெனில் ஈஸ்வரனிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட கர்மத்திற்கு அதிக பலம் ஏற்படுவது என்பது யுக்திக்குப் பொருத்தமானதாகும்.
मोक्षायैव इति चेत् , स्वकर्मणां कृतानां ईश्वरे संन्यासो मोक्षायैव, न फलान्तराय योगसहितः ; योगाच्च विभ्रष्टः ; इत्यतः तं प्रति नाशाशङ्का युक्तैव इति चेत् ,
ஆனால் மோக்ஷத்தின் பொருட்டே எனில் தியாகத்தோடு கூடி ஈஸ்வரார்ப்பணமாகச் செய்யப்பட்ட கர்மங்கள் மோக்ஷத்திற்கே அன்றி வேறு பலனுக்காக அன்று என்று இவ்வாறு இருக்கும் பொழுது யோகப்ருஷ்ட்டன் (யோகத்திலிருந்து நழுவியவன்) விஷயத்தில் நாசம் ஏற்படுவதில் சங்கை செய்யவேண்டியது இல்லை.
இவ்வாறு கூறியது சரியல்ல. एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः (ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ:) ब्रह्मचारिव्रते स्थितः (பிரஹ்ம்மச்‌ சாரிவ்ரதே ஸ்தித:) என்று கர்ம சந்நியாசம்‌ விதிக்கப்பட்டுள்ளதால்
न च अत्र ध्यानकाले स्त्रीसहायत्वाशङ्का, येन एकाकित्वं विधीयते । न च गृहस्थस्य ‘निराशीरपरिग्रहः’ इत्यादिवचनम् अनुकूलम् । उभयविभ्रष्टप्रश्नानुपपत्तेश्च ॥
மேலும் தியான காலத்தில் ஸ்திரீயின் சஹாயம் தேவையில் சங்கை செய்தலும் பொருந்தாது. ஏனெனில் இந்த கிரஹஸ்தனுக்கு (ஏகாகீ) தனிமையாக இருத்தலே விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் निराशीरपरिग्रह-: (நிராசீர பரிக்ரஹ) முதலிய வசனங்களும்‌ கிருஹஸ்த னுக்கு பொருத்தமாய் இல்லை. ஆகையால் ஞானம் கர்மம் இரண்டையும் தவறவிட்டவனை குறித்து சங்கை செய்தல் பொருந்தாது.
अनाश्रित इत्यनेन कर्मिण एव संन्यासित्वं योगित्वं च उक्तम् , प्रतिषिद्धं च निरग्नेः अक्रियस्य च संन्यासित्वं योगित्वं चेति चेत् ।
अनाश्रितः (அநாச்ரித) என்பதன்‌ மூலம்‌ கர்மம்‌ செய்பவனுக்கே சந்நியாசித்துவமும், யோகித்துவமும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அக்னி அற்றவனுக்கும், கிரியை அற்றவனுக்கும் சந்நியாசித் துவமும், யோகித் துவமும் அவர்களுக்கு நிஷேதம் செய்யப் பட்டுள்ளதே எனில்.
न ; ध्यानयोगं प्रति बहिरङ्गस्य यतः कर्मणः फलाकाङ्क्षासंन्यासस्तुतिपरत्वात् ।
இவ்வாறு கூறுவதும் சரியல்ல. ஏனெனில் தியான யோகத்திற்கு பஹிரங்க சாதனமாகிய கர்மத்தின் பலனில் உள்ள விருப்பத்தை விட்டுவிடுதலை ஸ்துதி செய்வதற்கான நிமித்தமே.
न केवलं निरग्निः अक्रियः एव संन्यासी योगी च । किं तर्हि ? कर्म्यपि, कर्मफलासङ्गं संन्यस्य कर्मयोगम् अनुतिष्ठन् सत्त्वशुद्ध्यर्थम् , ‘स संन्यासी च योगी च भवति’ इति स्तूयते ।
அக்னி அற்ற, கிரியை அற்றவனே சந்நியாசி, யோகீ என்பதல்ல. கர்மம் செய்பவனும் கர்மபலம் மற்றும் அதில் பற்று இவைகளை துறந்து சித்தசுத்தியின் பொருட்டு எவன் கர்மயோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சந்நியாசி. அவனே யோகீ என்று ஸ்துதிக்கப்படுகிறது.
न च एकेन वाक्येन कर्मफलासङ्गसंन्यासस्तुतिः चतुर्थाश्रमप्रतिषेधश्च उपपद्यते ।
ஒரே வாக்கியத்தினால் கர்மபலத்தில் உள்ள விருப்பத்தையும், பற்றையும் துறந்த சந்நியாசியையும், நான்காவது ஆச்ரமமான ஸந்நியாஸத்தை நிஷேதித்தலும் முடியாது. (இயலாது)
न च प्रसिद्धं निरग्नेः अक्रियस्य परमार्थसंन्यासिनः श्रुतिस्मृतिपुराणेतिहासयोगशास्त्रेषु विहितं संन्यासित्वं योगित्वं च प्रतिषेधति भगवान् । स्ववचनविरोधाच्च ।
அக்னி அற்றஅவ்வாறேகிரியை அற்றவாஸ்தவ சந்நியாசிக்கு விதிக்கப்பட்ட சந்நியாசித்துவமும், யோகித்துவமும் ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண, இதிகாசம் மற்றும் யோகசாஸ்திரம் அவ்வாறே எங்கும் பிரசித்தமாய் உள்ளதை பகவான் மறுக்கவில்லை. அவ்வாறு மறுத்தால் தன்னுடைய வசனத்தில் மாறுபாடு ஏற்படும்.
‘सर्वकर्माणि मनसा संन्सस्य (சர்வகர்மாணி மனசா சந்நியஸ்ய) नैव कुर्वन्न कारयन् आस्ते (நைவ குர்வன்ன காரயன்‌ ஆஸ்தே) मौनी सन्तुष्टो येन केनचित् மெளனி சம்துஷ்ட்டோ யேன கேனசித்‌) अनिकेतः स्थिरमतिः (அநிகேத: ஸ்திரமதி) विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः (விஹாய காமான்ய: சர்வான்‌ புமாம்ச்சரதி நிஸ்ஸ்புருஹ:) सर्वारम्भपरित्यागी (ஸர்வாரம்ப பரித்வாகி) என்று பகவான்‌ அங்கு அங்கு தன்னுடைய கருத்துக்களை உபதேசித்துள்ளார்‌. அந்த உபதேசங்களுக்கு, நான்காவது ஆச்ரமமாகிய சந்நியாசத்தை மறுத்தால்‌ பொருந்தாமல்‌ போகும்‌. (பொருந்தாது)
तस्मात् मुनेः योगम् आरुरुक्षोः प्रतिपन्नगार्हस्थ्यस्य अग्निहोत्रादिकर्म फलनिरपेक्षम् अनुष्ठीयमानं ध्यानयोगारोहणसाधनत्वं सत्त्वशुद्धिद्वारेण प्रतिपद्यते ।
ஆகையால் க்ருஹ்ஸ்த்தாஸ்ரமத்தில் உள்ள புருஷன் யோகாரூடன் ஆவதில் இச்சை உடையவனாகவும், மனன சீலனாகவும் இருந்து பலத்தில் இச்சை அற்று செய்யும் அக்னி ஹோத்ராதி கர்மங்கள் அந்தக்கரண சுத்தி வாயிலாக தியான யோகத்தில் ஆரூடன் ஆவதற்கு சாதனமாகிறது.
इति ‘स संन्यासी च योगी च’ इति स्तूयते ॥
இவ்வாறு அவனை சந்நியாசி, யோகீ என்று புகழ்கிறார்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।
स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥ १ ॥
அநாச்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய: ।
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ன சாக்ரிய: ॥ 1 ॥
अनाश्रितः न आश्रितः अनाश्रितः । किम् ? कर्मफलं कर्मणां फलं कर्मफलं यत् तदनाश्रितः, कर्मफलतृष्णारहित इत्यर्थः ।
ஆச்ரயிக்காதவன்‌ - (அநாச்ரித:) - எதனை? - கர்மத்தின்‌ பயனை- கர்மங்களின்‌ பயன்‌ எதுவோ, அதனை ஆச்ரயிக்காதவன்‌ அதாவது - கர்மபலத்தில்‌ ஆசையற்றிருந்தல்‌ என்பது பொருள்‌.
यो हि कर्मफले तृष्णावान् सः कर्मफलमाश्रितो भवति, अयं तु तद्विपरीतः, अतः अनाश्रितः कर्मफलम् ।
எவன் கர்மபலத்தில் இச்சைகள் உள்ளவனோ அவன் கர்மபலத்தை ஆசிரயித்தவன். பலத்தில் இச்சை அற்றவன் அநாச்ரித கர்மபலத்தை உடையவன் (பலனை ஆச்ரயிக்காதவன்)
एवंभूतः सन् कार्यं कर्तव्यं नित्यं काम्यविपरीतम् अग्निहोत्रादिकं कर्म करोति निर्वर्तयति यः कश्चित् ईदृशः कर्मी स कर्म्यन्तरेभ्यो विशिष्यते इत्येवमर्थमाह — ‘स संन्यासी च योगी च’ इति ।
இவ்வாறு உள்ளவன் அக்னிஹோத்திராதி நித்திய கர்மாக்களை காமனை இல்லாமல் செய்கின்றஇப்படிப்பட்ட கர்மி மற்றகாம்ய கர்மிகளைக் காட்டிலும் விசேஷமானவன் (மேலானவன்) என்று காண்பிப்பதற்காக அவனை சந்நியாசி, யோகீ என்று கூறினார்.
संन्यासः परित्यागः स यस्यास्ति स संन्यासी च, योगी च योगः चित्तसमाधानं स यस्यास्ति स योगी च इति एवंगुणसम्पन्नः अयं मन्तव्यः।
பரித்தியாகம் எவனுக்கு இருக்கிறதோ அவன் சந்நியாசி. யோகம் என்றால் சித்தசமாதானம். அந்த சித்த சமாதானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் யோகீ. இவ்வாறு இந்த குணங்களை உடை யவன் என்று அறிந்துகொள்ளவேண்டும்.
न केवलं निरग्निः अक्रिय एव संन्यासी योगी च इति मन्तव्यः ।
அக்னி அற்றவன், கிரியை அற்றவன் என்பதினாலேயே அவனை சந்நியாசி என்றும், யோகீ என்றும் கருதக்கூடாது.
निर्गताः अग्नयः कर्माङ्गभूताः यस्मात् स निरग्निः, अक्रियश्च अनग्निसाधना अपि अविद्यमानाः क्रियाः तपोदानादिकाः यस्य असौ अक्रियः ॥ १ ॥
கர்மங்களுக்கு அங்கபூதமாக உள்ள அக்னி எவனுக்கு இல்லையோ அவன், அக்னி அற்றவனாகிறான். அவனுக்கு அக்னி முதலியவைகள் இல்லாத தபஸ், தானாதிகிரியைகளும் இல்லாத தினால் (அக்கிரிய:) கிரியை அற்றவன் எனப்படுகிறான்.
ननु च निरग्नेः अक्रियस्यैव श्रुतिस्मृतियोगशास्त्रेषु संन्यासित्वं योगित्वं च प्रसिद्धम् । कथम् इह साग्नेः सक्रियस्य च संन्यासित्वं योगित्वं च अप्रसिद्धमुच्यते इति ।
அவ்வாறானால் அக்கினி அற்றவனும், கிரியை அற்றவனும் ஸந்நியாஸியாகவும், யோகியாகவும் இருக்கிறான் என்பது ஸ்ருதி, ஸ்ம்ருதி, யோகசாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்பொழுது அக்னி உடையவனும், கிரியை உடை யவனும் சந்நியாசியாகவும் யோகியாகவும் இருக்கிறான் என்று அப்ர சித்தமானதை பகவான் எக்காரணத்தின் பொருட்டு உபதேசிக்கிறார் என்பது எப்படி?
नैष दोषः, कयाचित् गुणवृत्त्या उभयस्य सम्पिपादयिषितत्वात् ।
இந்த தோஷம் ஏற்படாது. ஏனெனில் இந்த கௌணவிருத்தியி னால் ஸந்நியாஸித்துவம் யோகத்துவம் ஆகிய இவ்விருபாவங்கள் கிருஹஸ்தனால் சம்மதிக்கவேண்டும் (ஏற்றுக்கொள்ள வேண்டும்)
तत् कथम् ?
அது எவ்வாறு?
कर्मफलसङ्कल्पसंन्यासात् संन्यासित्वम् , योगाङ्गत्वेन च कर्मानुष्ठानात् कर्मफलसङ्कल्पस्य च चित्तविक्षेपहेतोः परित्यागात् योगित्वं च इति गौणमुभयम् ।
கர்மபலத்தில் சங்கல்பத்தை த்யாகம் செய்தல் ஸந்நியா ஸித்துவமும் யோகத்தின் அங்கரூபமான கர்மத்தை அனுஷ்ட்டானம் செய்யும்பொழுது சித்த விக்ஷேபத்திற்கு காரணமான கர்மபலத்தின் சங்கல்பத்தை பரித்யாகம் செய்வதால் யோகித்துவமும் ஏற்படுகிறது. இவ்வாறு இவ்விரண்டு பாவங்களும் கௌண ரூபமாக எடுக்கப் பட்டுள்ளது.
न पुनः मुख्यं संन्यासित्वं योगित्वं च अभिप्रेतमित्येतमर्थं दर्शयितुमाह —
ஆகையால் முக்கிய ஸந்நியாஸித்துவமும், யோகித்துவமும் அவருக்கு விருப்பமானது அல்ல. ஆகையால் இந்த கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு கூறுகிறார்.
यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।
न ह्यसंन्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन ॥ २ ॥
யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர் யோகம் தம் வித்தி பாண்டவ ।
ந ஹ்யஸந்ந்யஸ்த-ஸங்கல்போ யோகீ பவதி கச்சன ॥ 2 ॥
यं सर्वकर्मतत्फलपरित्यागलक्षणं परमार्थसंन्यासं संन्यासम् इति प्राहुः श्रुतिस्मृतिविदः, योगं कर्मानुष्ठानलक्षणं तं परमार्थसंन्यासं विद्धि जानीहि हे पाण्डव ।
ஹே! பாண்டவ! ஸ்ருதி ஸ்மிருதிகளை அறிந்த வித்வான்கள் கர்மங்களையும், அதன் பலன்களையும் தியாகம் செய்தல் ஆகிய லக்ஷணங்கள் உடையவனே வாஸ்தவ ஸந்நியாஸ என்று கூறுகிறார்கள், அந்த உண்மையான ஸந்நியாஸத்தை நிஷ்காம கர்மங்களை அனுஷ்ட்டித்தல் யோகம் என்று அறிந்து கொள்
कर्मयोगस्य प्रवृत्तिलक्षणस्य तद्विपरीतेन निवृत्तिलक्षणेन परमार्थसंन्यासेन कीदृशं सामान्यमङ्गीकृत्य तद्भाव उच्यते इत्यपेक्षायाम् इदमुच्यते —
கர்மயோகத்தோடு கூடிய பிரவிர்த்தி லக்ஷணத்திற்கும் அதற்கு விபரீதமான நிவிர்த்தி லக்ஷணத்திற்கும் ஒரே மாதிரியான (சமானமான) பரமார்த்த ஸந்நியாஸத்தை அங்கீகரித்தல் எவ்வாறு என்று சங்கை எழும்பொழுது கூறுகிறார்.
अस्ति हि परमार्थसंन्यासेन सादृश्यं कर्तृद्वारकं कर्मयोगस्य । यो हि परमार्थसंन्यासी स त्यक्तसर्वकर्मसाधनतया सर्वकर्मतत्फलविषयं सङ्कल्पं प्रवृत्तिहेतुकामकारणं संन्यस्यति । अयमपि कर्मयोगी कर्म कुर्वाण एव फलविषयं सङ्कल्पं संन्यस्यति इत्येतमर्थं दर्शयिष्यन् आह —
பரமார்த்த ஸந்நியாஸத்திற்கு ஒப்பாக கர்மயோகத்திற்கும் கர்த்துரு விஷயத்தில் சமானத்தன்மை உள்ளது. எந்த பரமார்த்த ஸந்நியாஸி இருக்கிறானோ அவன் ஸர்வகர்ம சாதனங்கள், ஸர்வகர்மங்கள் அதன் பலன்கள் விஷயமான பிரவிருத்திக்கு காரணமாகிய காமம், அதன் சங்கல்பங்களையும் ஸந்நியாஸம் செய்கின்றான். அதே போல் கர்மயோகியும் கர்மங்களை செய்து கொண்டே பல விஷயமான சங்கல்பத்தை ஸந்நியஸிக்கிறான் என்று இந்த கருத்தைக் காண்பித்துக் கூறுகிறார்.
न हि यस्मात् असंन्यस्तसङ्कल्पः असंन्यस्तः अपरित्यक्तः फलविषयः सङ्कल्पः अभिसन्धिः येन सः असंन्यस्तसङ्कल्पः कश्चन कश्चिदपि कर्मी योगी समाधानवान् भवति न सम्भवतीत्यर्थः, फलसङ्कल्पस्य चित्तविक्षेपहेतुत्वात् ।
எப்படியெனில் பலவிஷயமான சங்கல்பத்தை விட்டொழிக்காத கர்மி ஒரு பொழுதும் சித்தத்தில் சமாதானத்தை அடையமாட்டான், ஏனெனில் பல சங்கல்பமானது சித்த விக்ஷேபத்தினால் உண்டாவ தால் யோகியாக நிலைபெறுவது சம்பவிக்காது என்பது கருத்து.
तस्मात् यः कश्चन कर्मी संन्यस्तफलसङ्कल्पो भवेत् स योगी समाधानवान् अविक्षिप्तचित्तो भवेत् , चित्तविक्षेपहेतोः फलसङ्कल्पस्य संन्यस्तत्वादित्यभिप्रायः ॥ २ ॥
ஆகையால் எந்த ஒரு கர்மியானவன் பல சங்கல்பத்தை சந்நியாசம் செய்தானோ (விட்டானோ)அவனே யோகி. அவனே சித்த சமாதானம் அடைந்தவன். அவனே விக்ஷிப்த சித்தம் அற்றவன் ஆவான். ஏனெனில் சித்த விக்ஷேபத்திற்கு காரணமான பல சங்கல்பத்தை ஸந்நியாஸம் செய்தால் என்பது அபிப்பிராயம்.
एवं परमार्थसंन्यासकर्मयोगयोः कर्तृद्वारकं संन्याससामान्यमपेक्ष्य ‘यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव’ इति कर्मयोगस्य स्तुत्यर्थं संन्यासत्वम् उक्तम् ।
இவ்வாறு பரமார்த்த ஸந்நியாஸ, கர்மங்களுக்கு கர்த்திரு பாவரூப சம்பந்தத்தினால் இருவருக்கும் ஸந்நியாஸத்தில் சமத்து வத்தை அனுசரித்து यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव - (யம் ஸந்நி யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ) என்று கர்மயோ கத்தை புகழ்வதின் பொருட்டு ஸந்நியாஸத்துவமானது கூறப்பட்டது.
ध्यानयोगस्य फलनिरपेक्षः कर्मयोगो बहिरङ्गं साधनमिति तं संन्यासत्वेन स्तुत्वा अधुना कर्मयोगस्य ध्यानयोगसाधनत्वं दर्शयति —
த்யானயோகத்திற்கு பலத்தில் இச்சையற்றகர்மயோகம் பஹிரங்க சாதனம் என்பதால் ஸந்நியாஸ யோகமென்று ஸ்துதி செய்து இப்பொழுது கர்மயோகம் தியான யோகத்திற்கு எவ்வாறு சாதனம் ஆகிறது என்பதைக் காண்பிக்கிறார்.
आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते ।
योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते ॥ ३ ॥
ஆருருக்ஷோர்முனேர்யோகம் கர்ம காரணமுச்யதே ।
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணமுச்யதே ॥ 3 ॥
आरुरुक्षोः आरोढुमिच्छतः, अनारूढस्य, ध्यानयोगे अवस्थातुमशक्तस्यैवेत्यर्थः । कस्य तस्य आरुरुक्षोः ? मुनेः, कर्मफलसंन्यासिन इत्यर्थः । किमारुरुक्षोः ? योगम् । कर्म कारणं साधनम् उच्यते ।
தியானயோகத்தில் நிலைத்திருப்பதற்கு இச்சித்தவனாய் த்யான யோகத்தில் நிலைபெறமுடியாதவன். அப்படிப்பட்டவன் ஆருருக்ஷோ: முனி கர்மபல ஸந்நியாஸி என்பது கருத்து. அப்படிப் பட்ட முனிக்கு (ஆருருக்ஷோவிற்கு) தியானத்தில் நிலைப்பதற்கு கர்மயோக சாதனம் என்ன என்பது சொல்லப்படுகிறது.
योगारूढस्य पुनः तस्यैव शमः उपशमः सर्वकर्मभ्यो निवृत्तिः कारणं योगारूढस्य साधनम् उच्यते इत्यर्थः ।
தியானயோகத்தில் நிலைத்திருப்பவனுக்கே உபசமம். உபசமம் என்றால் ஸர்வகர்மங்களிலிருந்து நிவர்த்தி. அதுவே யோகாரூட னுக்கு சாதனம் என்று கூறப்படுகிறது.
यावद्यावत् कर्मभ्यः उपरमते, तावत्तावत् निरायासस्य जितेन्द्रियस्य चित्तं समाधीयते । तथा सति स झटिति योगारूढो भवति ।
எவ்வளவிற்கு எவ்வளவு கர்மங்களிலிருந்து உபரமம் ஆகிறதோ அவ்வளவிற்கு அவ்வளவு ஆசைகளற்றஇந்திரியங்களை ஜெயித்த வனுடைய மனமானது ஒருநிலைப்படுகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது அவனுக்கு விரைவிலேயே யோகாரூடம் ஏற்படுகிறது. (யோகாரூடம் என்றால் யோகத்தில் நன்றாக நிலைத்திருத்தல்.)
तथा चोक्तं व्यासेन —
அவ்வாறேவியாச பகவானால் கூறப்பட்டுள்ளது.
‘नैतादृशं ब्राह्मणस्यास्ति वित्तं यथैकता समता सत्यता च । शीलं स्थितिर्दण्डनिधानमार्जवं ततस्ततश्चोपरमः क्रियाभ्यः’ (मो. ध. १७५ । ३७) इति ॥ ३ ॥
பிரஹ்ம பதத்தை அறிந்த பிராஹ்மணனுக்கு இதைத் தவிர வேறு செல்வமேது. தனம் எவை எனில் ஒன்றாகவே இருத்தல், சமமாய் இருத்தல், சத்தியமாய் இருத்தல் நன்நடத்தையுடன் இருத்தல், நல்வழியில் உறுதி, அஹிம்சை, நேர்மை, மேலும் அந்த அந்த கிரியைகளிலிருந்து விடுபடுதல்.
अथेदानीं कदा योगारूढो भवति इत्युच्यते —
பிறகு இப்பொழுது அந்த சாதகன் எப்பொழுது யோகாரூடன் ஆவான் என்று கூறப்போகிறார்.
यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते ।
सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥ ४ ॥
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே ।
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்-ததோச்யதே ॥ 4 ॥
यदा समाधीयमानचित्तो योगी हि इन्द्रियार्थेषु इन्द्रियाणामर्थाः शब्दादयः तेषु इन्द्रियार्थेषु कर्मसु च नित्यनैमित्तिककाम्यप्रतिषिद्धेषु प्रयोजनाभावबुद्ध्या न अनुषज्जते अनुषङ्गं कर्तव्यताबुद्धिं न करोतीत्यर्थः ।
எப்பொழுது சித்தமானது சமாதானம் அடைந்த யோகி இந்திரிய விஷயங்களின் விஷயங்களாகிய சப்தம் முதலிய விஷயங்களோடு கூடிய நித்திய, நைமித்திக, காம்ய, பிரதிஷித்த கர்மங்களில் பிரயோஜ னம் இல்லை என்று அறிந்து அதில் புத்தியை செலுத்துவதில்லை. செய்கிறேன் என்ற(கர்த்தவ்யதா) புத்தி அவர்களுக்கு இல்லை என்பது பொருள்.
सर्वसङ्कल्पसंन्यासी सर्वान् सङ्कल्पान् इहामुत्रार्थकामहेतून् संन्यसितुं शीलम् अस्य इति सर्वसङ्कल्पसंन्यासी, योगारूढः प्राप्तयोग इत्येतत् , तदा तस्मिन् काले उच्यते ।
இஹலோக பரலோக கர்மங்களுக்கு காரணமான எல்லா சங்கல் பங்களையும் துறப்பது எவனுடைய ஸ்வபாவமாகிறதோ அப்பொழுது அவன் ஸர்வ ஸங்கல்ப ஸிந்நியாஸி. அவனே யோகாரூடன். யோகத்தை அடைந்தவன் என்று கூறப்படுகிறது.
‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वांश्च कामान् सर्वाणि च कर्माणि संन्यस्येदित्यर्थः ।
ஸர்வசங்கல்ப ஸந்நியாஸி என்று கூறப்பட்டதால், எல்லாக் காமங்க ளையும் மற்றும் எல்லாக் கர்மங்களையும் துறந்து விடு என்பது கருத்து.
सङ्कल्पमूला हि सर्वे कामाः —
ஏனெனில் எல்லாக்காமனைகளுக்கும் சங்கல்பமே காரணம். இவை ஸ்மிருதிகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘सङ्कल्पमूलः कामो वै यज्ञाः सङ्कल्पसम्भवाः । ’ (मनु. २ । ३) ‘काम जानामि ते मूलं सङ्कल्पात्किल जायसे । न त्वां सङ्कल्पयिष्यामि तेन मे न भविष्यसि’ (मो. ध. १७७ । २५) इत्यादिस्मृतेः ।
காமத்திற்கு மூலகாரணம் சங்கல்பமே, எல்லா யக்ஞங்களும் சங்கல்பத்திலிருந்து உண்டாகின்றன. ஹே! காம! நான் உன்னுடைய மூல காரணத்தை அறிவேன். நீ சந்தேஹமில்லாமல் சங்கல்பத்திலிருந்து தான் தோன்றினாய். ஆகையால் உன்னை சங்கல்பிக்கமாட்டேன். ஆகையால்தான் உன்னை அடைய மாட்டேன் என்று.
सर्वकामपरित्यागे च सर्वकर्मसंन्यासः सिद्धो भवति, ‘स यथाकामो भवति तत्क्रतुर्भवति यत्क्रतुर्भवति तत्कर्म कुरुते’ (बृ. उ. ४ । ४ । ५) इत्यादिश्रुतिभ्यः ; ‘यद्यद्धि कुरुते जन्तुः तत्तत् कामस्य चेष्टितम्’ (मनु. २ । ४) इत्यादिस्मृतिभ्यश्च ।
அவன் எப்பொழுது காமனை உடையவனாகிறானோ அப்பொழுது அதனை செய்யவேண்டியவனாகிறான். எதனை செய்ய வேண்டுபவனாகிறானோ அப்பொழுது கர்மங்களை செய்கின்றான் என்பது முதலிய சுருதியினாலும், ஜீவன் (பிராணி) எந்த எந்த கர்மங்களை செய்கிறானோ அவை எல்லாம் காமனையின் செய்கை என்றல் முதலிய ஸ்மிருதியினாலும் ஸர்வ காமபரித்தியாகத்தினால் சர்வகர்ம சந்நியாசம் சித்திக்கிறது என்று அறிகிறோம்.
न्यायाच्च — न हि सर्वसङ्कल्पसंन्यासे कश्चित् स्पन्दितुमपि शक्तः ।
யுக்தியினாலும் அறிகிறோம். ஏனெனில் எல்லா சங்கல்பங்களை யும் துறந்துவிட்டால் ஒருவரும் அசையக்கூட சக்தி அற்றவர் ஆவர் என்பதால்
तस्मात् ‘सर्वसङ्कल्पसंन्यासी’ इति वचनात् सर्वान् कामान् सर्वाणि कर्माणि च त्याजयति भगवान् ॥ ४ ॥
ஆகையால் எல்லா சங்கல்பங்களையும் துறந்து விடு என்ற பகவானது திருவாக்கினால் எல்லாக் காமனைகளையும் எல்லாக் கர்மங்களையும் துறந்துவிடும் படி உபதேசிக்கிறார் என்பது.
यदा एवं योगारूढः, तदा तेन आत्मा उद्धृतो भवति संसारादनर्थजातात् । अतः —
எப்பொழுது யோகாரூடனாகிறானோ அப்பொழுது அதனால் சகல அனர்த்தங்களுக்கும் காரணமாகிய சம்சாரத்தினின்றும் தான் தன்னாலே (சுத்த அந்தக்கரணத்தினாலே) கடந்தவனாகிறான் ஆகையால்-
उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥ ५ ॥
உத்தரேதாத்மநாத்மானம் நாத்மானமவஸாதயேத் ।
ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ॥ 5 ॥
उद्धरेत् संसारसागरे निमग्नम् आत्मना आत्मानं ततः उत् ऊर्ध्वं हरेत् उद्धरेत् , योगारूढतामापादयेदित्यर्थः ।
சம்சாரக்கடலில் மூழ்கின தன்னைத்தானாகவே மேலே தூக்கி யோகாரூட அவஸ்தானத்தை அடையவேண்டும் என்பது பொருள்.
न आत्मानम् अवसादयेत् न अधः नयेत् , न अधः गमयेत् ।
தன்னைக் கீழே மூழ்கிப் போகும்படி செய்யக்கூடாது.
आत्मैव हि यस्मात् आत्मनः बन्धुः । न हि अन्यः कश्चित् बन्धुः, यः संसारमुक्तये भवति । बन्धुरपि तावत् मोक्षं प्रति प्रतिकूल एव, स्नेहादिबन्धनायतनत्वात् । तस्मात् युक्तमवधारणम् ‘आत्मैव ह्यात्मनो बन्धुः’ इति ।
ஏனெனில் ஆத்மா தனக்குத்தானே பந்து. சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு தன்னைத்தவிர வேறு பந்து இல்லை. தன்னைத் தவிர மற்றவர்கள் பந்துக்களாய் இருந்தால் ப்ரேமை முதலியவை பந்தத் திற்கு காரணமாவதால் மோக்ஷத்திற்கு பிரதிகூலமாகும். ஆகையால் தனக்குத்தானே பந்து என்று நிச்சயித்துக் கூறப் பட்டது பொருத்தமே.
आत्मैव रिपुः शत्रुः । यः अन्यः अपकारी बाह्यः शत्रुः सोऽपि आत्मप्रयुक्त एवेति युक्तमेव अवधारणम् ‘आत्मैव रिपुरात्मनः’ इति ॥ ५ ॥
அவ்வாறே தனக்குத்தானே விரோதி.தீமைகளைச் செய்பவனால் தன்னைக்காட்டிலும் வெளியில் உள்ள விரோதி எவனோ அவனையும் தனக்குத்தானே பகைவனாய் செய்துகொள்கிறான் என்பதால் தனக்குத்தானே விரோதியாவான் என்று நிச்சயித்துக் கூறப்பட்டதும் பொருத்தமே.
आत्मैव बन्धुः आत्मैव रिपुः आत्मनः इत्युक्तम् । तत्र किंलक्षण आत्मा आत्मनो बन्धुः, किंलक्षणो वा आत्मा आत्मनो रिपुः इत्युच्यते —
தனக்குத்தானே பந்து அவ்வாறே தனக்குத்தானேவிரோதி என்று கூறப்பட்டது. அங்கு தனக்குத்தானே பந்து என்பதின் லக்ஷணம் என்ன? தனக்குத்தானே விரோதி என்பதன் லக்ஷணம் என்ன? என்பதைப் பற்றி கூறுகிறார்.
बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः ।
अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् ॥ ६ ॥
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜித: ।
அநாத்மநஸ்து சத்ருத்வே வர்தேதாத்மைவ சத்ருவத் ॥ 6 ॥
बन्धुः आत्मा आत्मनः तस्य, तस्य आत्मनः स आत्मा बन्धुः येन आत्मना आत्मैव जितः, आत्मा कार्यकरणसङ्घातो येन वशीकृतः, जितेन्द्रिय इत्यर्थः । अनात्मनस्तु अजितात्मनस्तु शत्रुत्वे शत्रुभावे वर्तेत आत्मैव शत्रुवत् , यथा अनात्मा शत्रुः आत्मनः अपकारी, तथा आत्मा आत्मन अपकारे वर्तेत इत्यर्थः ॥ ६ ॥
அந்த ஜீவாத்மா தனக்குத்தானே பந்து. எதனால் எனில் காரியகாரண சங்காதம் (தேஹம், இந்திரியங்களின் சேர்க்கை) என்பனவற்றை ஜெயித்து ஜிதேந்திரியனாய் இருப்பதால் (இந்திரி யங்களை வசம் செய்தவன்) ஆகையால் தனக்குத் தானே பந்து. எவன் ஒருவன் (காரிய, கரண சங்காத) சரீர ரூப ஆத்மாவை வசப்படுத்தவில் லையோ அவனுக்கு தானே (சத்துரு) விரோதி ஆகிறான். ஏன் எனில் பிறர் செய்த தீமைகளை கண்டு விரோத பாவம் இருப்பதால். ஆகையால் தனக்குத்தானே தீமையை செய்து கொள்கிறான்.
जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः ।
शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ॥ ७ ॥
ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: ।
சீதோஷ்ண-ஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ: ॥ 7 ॥
जितात्मनः कार्यकरणसङ्घात आत्मा जितो येन सः जितात्मा तस्य जितात्मनः, प्रशान्तस्य प्रसन्नान्तःकरणस्य सतः संन्यासिनः परमात्मा समाहितः साक्षादात्मभावेन वर्तते इत्यर्थः ।
காரியகரணாதி சங்காத ரூப ஆத்மாவை ஜெயித்தவனாயும் அவன் ஜிதாத்மாவாயும், மனதை வென்றவனாயும், தெளிந்த மனது உடையவனாயும் உள்ள சந்நியாசிக்கு பரமாத்ம ஸ்வரூபமானது நிலைத்து நிற்கிறது. அவன் சாக்ஷாத் ஆத்மா பாவத்துடன் இருக்கிறான் என்பது கருத்து.
किञ्च शीतोष्णसुखदुःखेषु तथा माने अपमाने च मानापमानयोः पूजापरिभवयोः समः स्यात् ॥ ७ ॥
அவ்வாறே அவன் சீத, உஷ்ணங்களையும் சுக, துக்கங்களையும் அவ்வாறே மான, அவமானங்களையும் (புகழ்ச்சி இகழ்ச்சிகளையும்) சமமாகப் பார்ப்பான். ( ஆத்மஸ்வரூபமாகவே பார்ப்பான்)
ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः ।
युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥
ஜ்ஞானவிஞ்ஞானத்ருப்த்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய: ।
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாச்மகாஞ்சன: ॥ 8 ॥
ज्ञानविज्ञानतृप्तात्मा ज्ञानं शास्त्रोक्तपदार्थानां परिज्ञानम् , विज्ञानं तु शास्त्रतो ज्ञातानां तथैव स्वानुभवकरणम् , ताभ्यां ज्ञानविज्ञानाभ्यां तृप्तः सञ्जातालंप्रत्ययः आत्मा अन्तःकरणं यस्य सः ज्ञानविज्ञानतृप्तात्मा, कूटस्थः अप्रकम्प्यः, भवति इत्यर्थः ; विजितेन्द्रियश्च । य ईदृशः, युक्तः समाहितः इति स उच्यते कथ्यते ।
சாஸ்திரத்தில் கூறப்பட்ட பதத்தின் அர்த்தங்களை அறிந்து கொள்ளுதல் ஞானம் எனப்படும். மேலும் சாஸ்திரத்தில் அறிந்ததை தன்னுடைய அந்தக்கரணத்தில் பிரத்யக்ஷமாக அனுபவித்தல் விக்ஞானம் எனப்படும். இவ்வாறு ஞான, விக்ஞானங்களினால் எவனுடைய அந்தக்கரணம் திருப்தி அடைகிறதோ என்றால் சாஸ்திர அறிவினாலும் அனுபவ அறிவினாலும் திருப்தி பெற்று அந்த ஞான விக்ஞானங்கள் போதும் என்றஎண்ணம் வந்ததோ அந்த மனத்தினன் கூடஸ்த்தன் (சலனம்-அசைவு அற்றவன்) ஆகிறான் என்பது கருத்து.
स योगी समलोष्टाश्मकाञ्चनः लोष्टाश्मकाञ्चनानि समानि यस्य सः समलोष्टाश्मकाञ्चनः ॥ ८ ॥
அவனே மனதை ஜயித்தவன். எவன் இவ்வாறு இருக்கிறானோ அவன் சமாஹிதன் (சமாதியில் இருப்பவன்) என்று கூறப்படுகிறான்.
किञ्च —
மேலும்
सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु ।
साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते ॥ ९ ॥
ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீனமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு ।
ஸாதுஸ்வபி ச பாபேஷு ஸமபுத்திர் விசிஷ்யதே ॥ 9 ॥
‘सुहृत्’ इत्यादिश्लोकार्धम् एकं पदम् ।
सुहृद् (சுஹ்ருத்) முதலிய சப்த பதங்கள் பாதி சுலோகத்தின் ஒரு பதமாகும்.
सुहृत् इति प्रत्युपकारमनपेक्ष्य उपकर्ता, मित्रं स्नेहवान् , अरिः शत्रुः, उदासीनः न कस्यचित् पक्षं भजते, मध्यस्थः यो विरुद्धयोः उभयोः हितैषी, द्वेष्यः आत्मनः अप्रियः, बन्धुः सम्बन्धी इत्येतेषु साधुषु शास्त्रानुवर्तिषु अपि च पापेषु प्रतिषिद्धकारिषु सर्वेषु एतेषु समबुद्धिः ‘कः किङ्कर्मा’ इत्यव्यापृतबुद्धिरित्यर्थः । विशिष्यते, ‘विमुच्यते’ इति वा पाठान्तरम् । योगारूढानां सर्वेषाम् अयम् उत्तम इत्यर्थः ॥ ९ ॥
ஸுஹ்ருத் என்றால் பிரதி உபகாரம் எதிர்பாராமல் உதவி செய்பவன். மித்திரன் என்றால் நண்பன். அரி என்றால் விரோதி. உதாசீனன் என்றால் எந்தப்பக்கமும் சேராதவன். மத்யஸ்தன் என்றால் பரஸ்பரம் விரோதிகளாய் இருப்பவர்களின், இருவரிடத் திலும் ஹிதத்தை (நன்மையை) செய்ய விரும்புபவர். த்வேஷ்ய: என்றால் தனக்கு விருப்பம் இல்லாதவன். பந்து என்றால் தன்னுடைய குடும்பத்தினன் என்ற இவர்களும்,சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதை பின்பற்றுவரர்களிடத்தும், அவ்வாறே சாஸ்திரத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களிடத்தும் சமபுத்தி உடையவன். இவர் யார்? என்ன செய்கிறார்கள்? என்ற விசார புத்தி. இவனுக்கு ஏற்படுவது இல்லை. ஆகையால் அவனே ஸ்ரேஷ்ட்டமானவன் என்பது பொருள். அவன் மோக்ஷமடைகிறான் என்பது மறுபொருள். யோகாரூடர்கள் யாவருள்ளும் இவனே ச்ரேஷ்ட்டன்.
अत एवमुत्तमफलप्राप्तये —
இதன்பின் உத்தமபல பிராப்தியின் பொருட்டு என்ன செய்ய வேண்டும்-
योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः ।
एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः ॥ १० ॥
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மானம் ரஹஸி ஸ்தித: ।
ஏகாகீ யதசித்தாத்மா நிராசீரபரிக்ரஹ: ॥ 10 ॥
योगी ध्यायी युञ्जीत समादध्यात् सततं सर्वदा आत्मानम् अन्तःकरणं रहसि एकान्ते गिरिगुहादौ स्थितः सन् एकाकी असहायः ।
தியானம் செய்பவன் ஒருவருடைய துணையும் இல்லாமல் தனிமையாய் மலையின் குகை முதலியவைகளில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு எப்பொழுதும் தன்னுடைய அந்தக் கரணத்தை தியானத்தில் ஈடுபடுத்தவேண்டும்.
‘रहसि स्थितः एकाकी च’ इति विशेषणात् संन्यासं कृत्वा इत्यर्थः ।
ஏகாந்தத்தில் தனிமையாக இருந்துகொண்டு என்ற விசேஷணங் களால் ஸந்நியாஸம் செய்து (யோகத்தை செய்) என்பது கருத்து.
यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा देहश्च संयतौ यस्य सः यतचित्तात्मा, निराशीः वीततृष्णः अपरिग्रहः परिग्रहरहितश्चेत्यर्थः । संन्यासित्वेऽपि त्यक्तसर्वपरिग्रहः सन् युञ्जीत इत्यर्थः ॥ १० ॥
சித்தம் என்றால் அந்தக்கரணம் ஆத்மா என்றால் சரீரம், இவ்வி ரண்டையும் வசம் செய்தவன் யதசித்தாத்மா, ஆசையற்றவன். நிராசீ ஒன்றையும் தனக்கென்று ஏற்றுக்கொள்ளாதவன். அபரிக்ரஹ: என்றால் சந்நியாசியாய் இருந்தாலும் உடமைகள் எல்லாவற்றையும் துறந்து யோகத்தை அப்பியாசம் செய்ய வேண்டும் என்பது பொருள்.
अथेदानीं योगं युञ्जतः आसनाहारविहारादीनां योगसाधनत्वेन नियमो वक्तव्यः, प्राप्तयोगस्य लक्षणं तत्फलादि च, इत्यत आरभ्यते । तत्र आसनमेव तावत् प्रथममुच्यते —
பிறகு, இப்பொழுது யோகாப்பியாசம் செய்வதற்கு வேண்டிய யோகத்தின் சாதனங்களான ஆசனம், ஆகாரம், அவர்களுடைய நடவடிக்கை முதலியவற்றின் நியமத்தைக் கூறுதல் வேண்டும். அவ்வாறே யோகத்தை அடைந்த யோகத்தின் லக்ஷணம் அதன் பலன் முதலியவற்றை கூறமுற்படுகையில் முதன்மையான ஆசனத்தை முதலில் கூறுகிறார்.
शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः ।
नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् ॥ ११ ॥
சுசௌ தேசே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸனமாத்மன: ।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜினகுசோத்தரம் ॥ 11 ॥
शुचौ शुद्धे विविक्ते स्वभावतः संस्कारतो वा, देशे स्थाने प्रतिष्ठाप्य स्थिरम् अचलम् आत्मनः आसनं नात्युच्छ्रितं नातीव उच्छ्रितं न अपि अतिनीचम् , तच्च चैलाजिनकुशोत्तरं चैलम् अजिनं कुशाश्च उत्तरे यस्मिन् आसने तत् आसनं चैलाजिनकुशोत्तरम् । पाठक्रमाद्विपरीतः अत्र क्रमः चैलादीनाम् ॥ ११ ॥
இயற்கையாகவே ஆனாலும், ஸம்ஸ்காரம் முதலியவற்றாலேனும் சுத்தப்படுத்தப்பட்டு, பவித்திரமான ஜனங்களில்லாத ஏகாந்தமான இடத்தில் தன்னுடைய ஆசனத்தை மிகவும் உயரமில்லாமலும் மிகவும் தாழ்வாகவும் இல்லாமல் அதன்மேல் கிரமமாக வஸ்திரம், மான்தோல் மற்றும் தர்ப்பை இவைகளைப் பரப்பி அசைக்க முடியாதபடி அமைக்கவேண்டும். இங்குள்ள பாடக்ரமத்தின்படி மாற்றி அமைக்கவேண்டும். எவ்வாறெனில் முதலில் தர்பை, அதன் மேல் மான்தோல், அதன்மேல் வஸ்திரத்தைப் பரப்பவேண்டும்.
प्रतिष्ठाप्य, किम् ? —
ஆசனத்தை ஸ்திரமாக அமைத்துக்கொண்டு பின்
तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥ १२ ॥
தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரிய: ।
உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்மவிசுத்தயே ॥ 12 ॥
तत्र तस्मिन् आसने उपविश्य योगं युञ्ज्यात् ।
அங்கு அந்த ஆசனத்தில் அமர்ந்து யோகாப்பியாசம் செய்யவேண்டும்.
कथम् ? सर्वविषयेभ्यः उपसंहृत्य एकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः चित्तं च इन्द्रियाणि च चित्तेन्द्रियाणि तेषां क्रियाः संयता यस्य सः यतचित्तेन्द्रियक्रियः ।
எவ்வாறு எனில் மனதை எல்லா விஷயங்களிலிருந்தும் இழுத்து ஒருமைப்படுத்தி அவ்வாறேசித்தம் மற்றும் இந்திரியங்களின் கிரியைகளை வென்று யோகாப்பியாசம் (யோகசாதனம்) செய்யவேண் டும். எவருடைய மனம், இந்திரியங்களின் கிரியைகள் அடங்கி விட்டதோ அவன் யதசித்தேந்திரியன் என்று கூறப்படுகிறான்.
स किमर्थं योगं युञ्ज्यात् इत्याह —
அவன் எதன் பொருட்டு யோகாப்பியாசம் செய்கிறான் என்று கூறுகிறார்.
आत्मविशुद्धये अन्तःकरणस्य विशुद्ध्यर्थमित्येतत् ॥ १२ ॥
அந்தக்கரணத்தின் சுத்தியின் பொருட்டு செய்கிறான்.
बाह्यमासनमुक्तम् ; अधुना शरीरधारणं कथम् इत्युच्यते —
வெளியில் ஆசனத்தைப் பற்றி கூறப்பட்டது. இப்பொழுது சரீரத்தை எவ்வாறு வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறப் போகிறார்.
समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः ।
सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् ॥ १३ ॥
ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர: ।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச்சானவலோகயன் ॥ 13 ॥
समं कायशिरोग्रीवं कायश्च शिरश्च ग्रीवा च कायशिरोग्रीवं तत् समं धारयन् अचलं च । समं धारयतः चलनं सम्भवति ; अतः विशिनष्टि — अचलमिति । स्थिरः स्थिरो भूत्वा इत्यर्थः ।
உடம்பு தலை கழுத்து இவைகளை நேராக வைத்துக்கொண்டு அசையாமல் ஸ்திரமாக இருக்கவேண்டும் என்பது பொருள். நேராக இருந்தால் அசைவு ஏற்படும் என்பதால் அசையாமல் என்று விசேஷணம் கூறப்பட்டுள்ளது.
स्वं नासिकाग्रं सम्प्रेक्ष्य सम्यक् प्रेक्षणं दर्शनं कृत्वेव ।
அவ்வாறே தன் மூக்கின் நுனியை அவன் நன்றாகப் பார்ப்பது போல் செய்து
इति इवशब्दो लुप्तो द्रष्टव्यः । न हि स्वनासिकाग्रसम्प्रेक्षणमिह विधित्सितम् ।
இங்கு இவ என்ற சப்தமானது இருந்தும் இல்லாததாக கண்டு கொள்ளவேண்டும். ஏனெனில் தன்னுடைய மூக்கின் நுனி பாகத்தைப் பார்த்தல் என்பது இங்கு அபிப்பிராயம் அல்ல.
किं तर्हि ? चक्षुषो दृष्टिसंनिपातः ।
அப்பொழுது என்னவென்றால் கண்களால் பார்க்கப்படு கின்ற வெளிவிஷயங்களிலிருந்து திருப்புதல்.
स च अन्तःकरणसमाधानापेक्षो विवक्षितः । स्वनासिकाग्रसम्प्रेक्षणमेव चेत् विवक्षितम् , मनः तत्रैव समाधीयेत, नात्मनि ।
அது அந்தக்கரணத்தினுடைய அமைதியைச் சார்ந்து உபதேசிக்கப்பட்டது. தன்னுடைய மூக்கின் நுனியையே பார்க்க வேண்டும் என்று உபதேசித்திருந்ததால் மனதானது அதிலேயே நிலைத்திருக்கும் ஆத்மாவில் அல்ல.
आत्मनि हि मनसः समाधानं वक्ष्यति ‘आत्मसंस्थं मनः कृत्वा’ (भ. गी. ६ । २५) इति । तस्मात् इवशब्दलोपेन अक्ष्णोः दृष्टिसंनिपात एव ‘सम्प्रेक्ष्य’ इत्युच्यते ।
ஆத்மாவினிடத்தில் மனதை நிலைநிறுத்தவேண்டும் என்று கூறப்போகிறார் (ஆத்ம ஸம்ஸ்தம் மன: க்ருத்வா) என்று காண்பிக்கப் போகிறார். ஆகையால் இவ, சப்தமானது இல்லாது இருந்தால் மூக்கின் நுனியைப் பார்த்தல் என்று ஏற்பட்டுவிடும்.
दिशश्च अनवलोकयन् दिशां च अवलोकनमन्तराकुर्वन् इत्येतत् ॥ १३ ॥
இவ்வாறு திருஷ்ட்டியை (பார்த்தல்) மூக்கின் நுனியில் வைத்து அவ்வாறேமற்றதிசைகளில் பார்வையைத் திருப்பாமல் இருக்க வேண்டும் என்று
किञ्च —
மேலும்
प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः ।
मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः ॥ १४ ॥
ப்ரசாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித: ।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ॥ 14 ॥
प्रशान्तात्मा प्रकर्षेण शान्तः आत्मा अन्तःकरणं यस्य सोऽयं प्रशान्तात्मा, विगतभीः विगतभयः, ब्रह्मचारिव्रते स्थितः ब्रह्मचारिणो व्रतं ब्रह्मचर्यं गुरुशुश्रूषाभिक्षान्नभुक्त्यादि तस्मिन् स्थितः, तदनुष्ठाता भवेदित्यर्थः । किञ्च, मनः संयम्य मनसः वृत्तीः उपसंहृत्य इत्येतत् , मच्चित्तः मयि परमेश्वरे चित्तं यस्य सोऽयं मच्चित्तः, युक्तः समाहितः सन् आसीत उपविशेत् । मत्परः अहं परो यस्य सोऽयं मत्परो ।
நன்றாக சாந்தமடைந்த அந்தக்கரணம் உடையவன் எவனோ அவன் பிரசாந்தாத்மா. பயம் அற்றவன் விகதபீ: பிரஹ்ம்மச்சரிய விரதம் என்றால் குருவிற்கு பணிவிடை, பிக்ஷான்னம் புஜித்தல் முதலியவை. அதிலேயே நிலைத்து அனுஷ்ட்டானம் செய்பவன் (கடைப்பிடிப்பவன்) பிரஹ்ம்மச்சாரி விரதன் என்பது பொருள். மேலும் மனதினுடைய விருத்திகளை அடக்கி பரமேஸ்வரனாகிய என்னிடத் தினே சித்தத்தை வைத்து உள்ளவன் மத்சித்த: அப்படிப்பட்டவன் சமாஹித சித்தத்தை அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அவன் அவனையே மேலாகக் கருதாமல் என்னையே மேலாக (ஸ்ரேஷ்ட்டமாக) கருதுகிறான். எவன் என்னை தனக்கு மேலாக கருதுகிறானோ அவன் மத்பர:
भवति कश्चित् रागी स्त्रीचित्तः, न तु स्त्रियमेव परत्वेन गृह्णाति ; किं तर्हि ? राजानं महादेवं वा । अयं तु मच्चित्तो मत्परश्च ॥ १४ ॥
காமவிகாரமுடையவன் ஸ்திரீயினிடத்திலேயே சித்தத்தை செலுத்தி இருந்தாலும் அவளை எல்லோரிலும் மேலானவளாக கருதுவதில்லை. ஆனால் அரசனையாவது அல்லது மஹாதேவனை யாவது மேலானவனாகக் கொள்கிறான். ஆனால் இவனோ என்னிடத்திலேயே மனதைச் செலுத்தி என்னையே மேலானவனாகக் கொள்கிறான்.
अथेदानीं योगफलमुच्यते —
பிறகு இப்பொழுது யோகத்தின் பலன் கூறப்படுகிறது.
युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः ।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ॥ १५ ॥
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மானம் யோகீ நியதமானஸ: ।
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி ॥ 15 ॥
युञ्जन् समाधानं कुर्वन् एवं यतोक्तेन विधानेन सदा आत्मानं सर्वदा योगी नियतमानसः नियतं संयतं मानसं मनो यस्य सोऽयं नियतमानसः, शान्तिम् उपरतिं निर्वाणपरमां निर्वाणं मोक्षः तत् परमा निष्ठा यस्याः शान्तेः सा निर्वाणपरमा तां निर्वाणपरमाम् , मत्संस्थां मदधीनाम् अधिगच्छति प्राप्नोति ॥ १५ ॥
மனதை இவ்வாறு ஒருநிலைப்படுத்தி இதுவரை கூறப்பட்டபடி எப்பொழுதும் மனதை அடக்கி ஆத்மாவினிடத்தில் ஸ்திரமாக வைத்து மோக்ஷமாகிய என் ஸ்தானத்தை அடைந்து சாந்தியை பெறுகிறான்.
इदानीं योगिनः आहारादिनियम उच्यते —
இப்பொழுது யோகிகளின் ஆகாராதி நியமங்கள் கூறப்போகிறார்.
नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः ।
न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ॥ १६ ॥
நாத்யச்நதஸ்து யோகோஅஸ்தி ந சைகாந்தமநச்நத: ।
ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன ॥ 16 ॥
न अत्यश्नतः आत्मसंमितमन्नपरिमाणमतीत्याश्नतः अत्यश्नतः न योगः अस्ति । न च एकान्तम् अनश्नतः योगः अस्ति । ‘यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यद्भूयो हिनस्ति तद्यत् कनीयोऽन्नं न तदवति’ (श. ब्रा. ? ) इति श्रुतेः ।
ஆகாரத்தை தனக்குத் தேவையான அளவைத் தவிர அதிகமாக உண்பவன் அத்யச்னன், அவ்வாறு தேவையான உணவை உண்ணாமல் அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணுபவனுக்கு யோகம் கூடுவதில்லை. மேலும்
यदु ह वा आत्मसंमितमन्नं तदवति तन्न हिनस्ति यत्भूयो हिनस्ति तद्यत्कनीयो न तदवति (शतपथ)
(யது ஹ வா ஆத்மஸம்மிதமன்னம் ததவதி தன்ன ஹினஸ்தி தத்யத்கநீயோ ந ததவதி) என்ற சுருதியினால் அறிகிறோம். இதன் பொருள் எவன் அவனுடைய சரீரத்திற்கு ஏற்ற அன்னத்தை உண்கிறானோ அவனை அந்த அன்னம் அவனைக் காப்பாற்றுகிறது. அவனைக் கஷ்ட்டப்படுத்துவதில்லை, எவன் அதிகம் புசிக்கிறானோ அவனையும், குறைவாக புசிப்பவனையும் கஷ்ட்டம் செய்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
तस्मात् योगी न आत्मसंमितात् अन्नात् अधिकं न्यूनं वा अश्नीयात् ।
ஆகையால் யோகி தனக்கு தேவையான அளவு அன்னத்தைத் தவிர அதிகமாகவோ, குறைவாகவோ அன்னத்தை உண்ணக்கூடாது.
अथवा, योगिनः योगशास्त्रे परिपठीतात् अन्नपरिमाणात् अतिमात्रमश्नतः योगो नास्ति ।
அல்லாது யோகியானவன் யோக சாஸ்த்திரத்தில் எவ்வளவு அன்னம் புசிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ அதைக் காட்டிலும் அதிகமாக உண்பவனுக்கு யோகம் சித்திப்பதில்லை.
उक्तं हि — ‘अर्धं सव्यञ्जनान्नस्य तृतीयमुदकस्य च । वायोः सञ्चरणार्थं तु चतुर्थमवशेषयेत्’ ( ? ) इत्यादिपरिमाणम् ।
அளவு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அன்னம், காய்கறி முதலா னவை வயிற்றில் பாதிபாகமும், தண்ணீர் கால்பாகமும், மீதமுள்ள கால் பாகத்தை காற்று சஞ்சரிப்பதற்காக காலியாக வைத்திருக்கவேண்டும்.
तथा — न च अतिस्वप्नशीलस्य योगो भवति नैव च अतिमात्रं जाग्रतो भवति च अर्जुन ॥ १६ ॥
ஹே அர்ஜுனா! எவன் அதிகம் தூங்குகின்றானோ அவனுக்கும், எவன் குறைவாக தூங்குகின்றானோ அவனுக்கும் யோகம் சித்திக்காது.
कथं पुनः योगो भवति इत्युच्यते —
மேலும் எவ்வாறு யோகம் சித்திக்கிறது என்பதைக் கூறுகிறார்
युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु ।
युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा ॥ १७ ॥
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு ।
யுக்த ஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி து:க்கஹா ॥ 17 ॥
युक्ताहारविहारस्य आह्रियते इति आहारः अन्नम् , विहरणं विहारः पादक्रमः, तौ युक्तौ नियतपरिमाणौ यस्य सः युक्ताहारविहारः तस्य, तथा युक्तचेष्टस्य युक्ता नियता चेष्टा यस्य कर्मसु तस्य, तथा युक्तस्वप्नावबोधस्य युक्तौ स्वप्नश्च अवबोधश्च तौ नियतकालौ यस्य तस्य, युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगिनो योगो भवति दुःखहा ।
யோகசாஸ்திரத்தில் கூறப்பட்டபடி அளவான ஆஹாரம், உலாவுதல் இவைகளுடன் கூடினவனாகவும், கர்மங்களையும் (செயல் களையும்) விதிக்கப்பட்ட காலத்தில் நியமமாக செய்பவனும் அவ்வாறே விதிக்கப்பட்ட காலம் வரை தூங்குவதும், விழித்திருப்பதும் கூடியவனோ அப்படிப்பட்ட யோகிக்கு துக்கத்தைப் போக்கக்கூடிய யோகம் சித்திக்கிறது.
दुःखानि सर्वाणि हन्तीति दुःखहा, सर्वसंसारदुःखक्षयकृत् योगः भवतीत्यर्थः ॥ १७ ॥
துக்கங்கள் எல்லாவற்றையும் அழிப்பதால் दुःखहा (துக்கஹா) எல்லா துக்கங்களும் நசிப்பதால் யோகம் ஆகிறது என்பது பொருள்.
अथ अधुना कदा युक्तो भवति इत्युच्यते —
இனி, இப்பொழுது (அவன்) எப்பொழுது யோகத்தை கூடின வனாவான் என்பதை கூறப்போகிறார்.
यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते ।
निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा ॥ १८ ॥
யதா விநியதம் சித்தமாத்மன்யேவாவதிஷ்டதே ।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா ॥ 18 ॥
यदा विनियतं विशेषेण नियतं संयतम् एकाग्रतामापन्नं चित्तं हित्वा बाह्यार्थचिन्ताम् आत्मन्येव केवले अवतिष्ठते, स्वात्मनि स्थितिं लभते इत्यर्थः ।
எப்பொழுது சித்தமானது நன்றாக வசப்படுத்தப்பட்டு ஏகாக்ரம் ஆகிற தோ அப்பொழுது பாஹ்ய (வெளி) எண்ணங்களை தொலைத்து தன் ஆத்மாவினிடத்திலேயே சித்தம் நிலைத்திருத்தல் சித்திக்கிறது. தன்னுடைய ஸ்வரூபத்தில் நிலைத்திருத்தலை அடைகிறான்.
निःस्पृहः सर्वकामेभ्यः निर्गता दृष्टादृष्टविषयेभ्यः स्पृहा तृष्णा यस्य योगिनः सः युक्तः समाहितः इत्युच्यते तदा तस्मिन्काले ॥ १८ ॥
எல்லா திருஷ்ட்ட அதிருஷ்ட்ட விஷயங்களில் உள்ள காமனைகளில் ஆசை அற்றயோகிக்கு சமாதி ஏற்படுகிறது (பரமாத் மாவிடத்தில் நிலைத்து இருத்தல் ஏற்படுகிறது)
तस्य योगिनः समाहितं यत् चित्तं तस्योपमा उच्यते —
எந்த யோகிக்கு சமாதியில் நிலைத்த சித்தம் உள்ளதோ அதற்கு உவமை கூறப்படுகிறது.
यदा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥ १९ ॥
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா ।
யோகினோ யத-சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந: ॥ 19 ॥
यथा दीपः प्रदीपः निवातस्थः निवाते वातवर्जिते देशे स्थितः न इङ्गते न चलति, सा उपमा उपमीयते अनया इत्युपमा योगज्ञैः चित्तप्रचारदर्शिभिः स्मृता चिन्तिता योगिनो यतचित्तस्य संयतान्तःकरणस्य युञ्जतो योगम् अनुतिष्ठतः आत्मनः समाधिमनुतिष्ठत इत्यर्थः ॥ १९ ॥
எவ்வாறு காற்று இல்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபமானது அசைவற்று இருக்கிறதோ என்றஉவமை அந்தக்கரணத்தை வசப்படுத்தி சமாதியை அடைந்த யோகி, யோகத்தை அறிபவராய் சித்தத்தின் போக்குகளை பிரத்யக்ஷமாய் காணும் தன்மையுள்ள யோகியின் சித்தத்தைக் குறித்து கூறப்பட்டது.
एवं योगाभ्यासबलादेकाग्रीभूतं निवातप्रदीपकल्पं सत् —
இவ்வாறு யோகாப்பியாச பலத்தால் காற்று அற்ற இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் ஏகாக்ரம் (ஒருமைப்படுத்தப்பட்ட) செய்யப் பட்டதாய்-
यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया ।
यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति ॥ २० ॥
யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா ।
யத்ர சைவாத்ம னாத்மானம் பச்யன்னாத்மனி துஷ்யதி ॥ 20 ॥
यत्र यस्मिन् काले उपरमते चित्तम् उपरतिं गच्छति निरुद्धं सर्वतो निवारितप्रचारं योगसेवया योगानुष्ठानेन, यत्र चैव यस्मिंश्च काले आत्मना समाधिपरिशुद्धेन अन्तःकरणेन आत्मानं परं चैतन्यं ज्योतिःस्वरूपं पश्यन् उपलभमानः स्वे एव आत्मनि तुष्यति तुष्टिं भजते ॥ २० ॥
யோகாப்பியாசத்தால் வசம் செய்யப்பட்டு ஒரு பக்கமும் அசையாத (சஞ்சலமற்ற) சித்தம் எப்பொழுது உபரமம் அடைகிறதோ, எந்த சமயத்தில் சமாதியினால் அந்தக்கரணம் நிர்மலமாகிறதோ அப்பொழுது அந்த அந்தக்கரணத்தினால் பரம சைதன்ய ஜ்யோதி ஸ்வரூபமான ஆத்மாவை சாக்ஷாத்காரம் செய்து தனக்குத்தானே ஆனந்தத்தை அடைகிறான்.
किञ्च —
மேலும்
सुखमात्यन्तिकं यत्तद्बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।
वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ २१ ॥
ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் ।
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்வத: ॥ 21 ॥
सुखम् आत्यन्तिकं अत्यन्तमेव भवति इत्यात्यन्तिकम् अनन्तमित्यर्थः, यत् तत् बुद्धिग्राह्यं बुद्ध्यैव इन्द्रियनिरपेक्षया गृह्यते इति बुद्धिग्राह्यम् अतीन्द्रियम् इन्द्रियगोचरातीतम् अविषयजनितमित्यर्थः, वेत्ति तत् ईदृशं सुखमनुभवति यत्र यस्मिन् काले, न च एव अयं विद्वान् आत्मस्वरूपे स्थितः तस्मात् नैव चलति तत्त्वतः तत्त्वस्वरूपात् न प्रच्यवते इत्यर्थः ॥ २१ ॥
எந்த சுகத்திற்கு அழிவில்லையோ அது அநந்தசுகம், எந்த சுகமா னது இந்திரியங்களுக்குக் கோச்சரமாகாமல் புத்தியினால் கிரஹிக்கப் பட்ட ஞானத்திற்கு யோக்கியமானதோ, எது இந்திரியங்களுக்கு எப்பொழுது தன் ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கிறானோ அந்த ஞானி பரமார்த்த தத்துவ ஸ்வரூபத்திலிருந்து நழுவமாட்டான்.
किञ्च —
மேலும்
यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ।
यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते ॥ २२ ॥
யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத: ।
யஸ்மின் ஸ்திதோ ந து:கேன குருணாபி விசால்யதே ॥ 22 ॥
यं लब्ध्वा यम् आत्मलाभं लब्ध्वा प्राप्य च अपरम् अन्यत् लाभं लाभान्तरं ततः अधिकम् अस्तीति न मन्यते न चिन्तयति । किञ्च, यस्मिन् आत्मतत्त्वे स्थितः दुःखेन शस्त्रनिपातादिलक्षणेन गुरुणा महता अपि न विचाल्यते ॥ २२ ॥
எந்த ஆத்மலாபத்தை அடைந்தபின் அதைத்தவிர மேலான லாபம் இல்லை என்று அறிந்து வேறு லாபத்தை சிந்திப்பது இல்லையோ, அவ்வாறேஆத்ம தத்துவத்திலேயே நிலைத்த அந்த யோகியை சஸ்திர நிபாதாதி லக்ஷணங்களோடு கூடிய மிகப்பெரிய துக்கங்களானாலும் அசைக்கமுடியாது.
‘यत्रोपरमते’ (भ. गी. ६ । २०) इत्याद्यारभ्य यावद्भिः विशेषणैः विशिष्ट आत्मावस्थाविशेषः योगः उक्तः —
யத்ரோபரமதே, என்று ஆரம்பித்து இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா விசேஷணங்களுடன் கூடிய ஆத்மாவின் அவஸ்தா விசேஷ ரூப யோகமானது கூறப்பட்டது-
तं विद्याद्दुःखसंयोगवियोगं योगसंज्ञितम् ।
स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ॥ २३ ॥
தம் வித்யாத் து:க ஸம்யோகவியோகம் யோகஸம்க்ஞிதம் ।
ஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோsநிர்விண்ண சேதஸா ॥ 23 ॥
तं विद्यात् विजानीयात् दुःखसंयोगवियोगं दुःखैः संयोगः दुःखसंयोगः, तेन वियोगः दुःखसंयोगवियोगः, तं दुःखसंयोगवियोगं योग इत्येव संज्ञितं विपरीतलक्षणेन विद्यात् विजानीयादित्यर्थः ।
துக்கத்தை அடைவது துக்க சம்யோகம். அந்த துக்க சம்யோகத் திலிருந்து விடுபடுதல் வியோகம். அந்த துக்க சம்யோகத்தில் வியோகத்தை யோகம் என்று மூடனை புத்திசாலி என்று கூறுவது போல் விபரீத லக்ஷணையினால் அறியவேண்டும் என்பது பொருள்.
योगफलमुपसंहृत्य पुनरन्वारम्भेण योगस्य कर्तव्यता उच्यते निश्चयानिर्वेदयोः योगसाधनत्वविधानार्थम् ।
இதுவரை கூறிய யோகபலத்தை முடித்துவிட்டு இப்பொழுது திடமா கவும் நிச்சயமாகவும் யோகவிஷயத்தில் ருசி உண்டாவதற்காக யோக சாதனத்தைப் பற்றி கூறுவதற்காக மேலும் வேறு ஒரு பிரகாரமாக யோகத்தை அவசியம் அப்பியாசம் செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
स यथोक्तफलो योगः निश्चयेन अध्यवसायेन योक्तव्यः अनिर्विण्णचेतसा ।
அந்த முன்பு கூறப்பட்ட பலனுடைய யோகி கலங்கிய துக்கம் அற்றமனதினால் உறுதியாக யோகத்தை அனுஷ்ட்டிக்கவேண்டும்.
न निर्विण्णम् अनिर्विण्णम् किं तत् ? चेतः तेन निर्वेदरहितेन चेतसा चित्तेनेत्यर्थः ॥ २३ ॥
எந்த சித்தமானது (மனமானது) கலங்காமல் இருக்கிறதோ அது அநிர்விண்ணசேதஸ், அப்படிப்பட்ட கலங்காத மனத்தினால் திடமாக யோகாப்பியாசம் செய்யவேண்டும் என்பது அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः ।
मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥ २४ ॥
ஸங்கல்ப ப்ரபாவாந் காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வானசேஷத: ।
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத: ॥ 24 ॥
सङ्कल्पप्रभवान् सङ्कल्पः प्रभवः येषां कामानां ते सङ्कल्पप्रभवाः कामाः तान् त्यक्त्वा परित्यज्य सर्वान् अशेषतः निर्लेपेन । किञ्च, मनसैव विवेकयुक्तेन इन्द्रियग्रामम् इन्द्रियसमुदायं विनियम्य नियमनं कृत्वा समन्ततः समन्तात् ॥ २४ ॥
சங்கல்பத்தினால் உண்டான எல்லா காமனைகளையும் மீதம் இல்லாமல் துறந்து, அதில் சிறிதும் பற்றாமல், மேலும் விவேகத்துடன் கூடிய மனதால் இந்திரியக் கூட்டங்களை எல்லா வகையிலும் அடக்கி.
शनैः शनैरुपरमेद्बुद्ध्या धृतिगृहीतया ।
आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २५ ॥
சனை: சனைருபரமேத் புத்த்யா த்ருதிக்ருஹீதயா ।
ஆத்மஸம்ஸ்தம் மன: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் ॥ 25 ॥
शनैः शनैः न सहसा उपरमेत् उपरतिं कुर्यात् ।
மெல்ல மெல்ல கிரமமாக உபரதி (அடக்குதல்) செய்யவேண்டும். உடனே அல்ல.
कया, बुद्ध्या । किंविशिष्टया ? धृतिगृहीतया धृत्या धैर्येण गृहीतया धृतिगृहीतया धैर्येण युक्तया इत्यर्थः ।
எதனால்? புத்தியால் எப்படிப்பட்ட புத்தியால்? தைரியத்துடன் கூடிய புத்தியால் என்பது பொருள்.
आत्मसंस्थम् आत्मनि संस्थितम् ‘आत्मैव सर्वं न ततोऽन्यत् किञ्चिदस्ति’ इत्येवमात्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् । एष योगस्य परमो विधिः ॥ २५ ॥
அவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைபெறச்செய்து என்றால் எல்லாம் ஆத்மாவே, அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இவ்வாறு ஆத்மாவில் மனதை அசையாமல் செய்து வேறு ஒரு பொருளையும் நினைக்காதே. இதுவே யோகத்தின் மேலான (பரம) விதியாகும்.
तत्र एवमात्मसंस्थं मनः कर्तुं प्रवृत्तो योगी —
இவ்வாறு மனதை ஆத்மாவில் நிலைக்கச் செய்ய பிரவிர்த்திக்கும் யோகி-
यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ।
ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ २६ ॥
யதோ யதோ நிச்சரதி மநச்சஞ்சல மஸ்திரம் ।
ததஸ் ததோ நியம்யைததாத்மந்யேவ வசம் நயேத் ॥ 26 ॥
यतो यतः यस्माद्यस्मात् निमित्तात् शब्दादेः निश्चरति निर्गच्छति स्वभावदोषात् मनः चञ्चलम् अत्यर्थं चलम् , अत एव अस्थिरम् , ततस्ततः तस्मात्तस्मात् शब्दादेः निमित्तात् नियम्य तत्तन्निमित्तं याथात्म्यनिरूपणेन आभासीकृत्य वैराग्यभावनया च एतत् मनः आत्मन्येव वशं नयेत् आत्मवश्यतामापादयेत् । एवं योगाभ्यासबलात् योगिनः आत्मन्येव प्रशाम्यति मनः ॥ २६ ॥
எந்த எந்த சப்தாதிகளின் சுவபாவதோஷம் என்றநிமித்தத்தால் மனமானது சஞ்சலிக்கிறது (அலைகிறது). அதனால் ஸ்திரமற்று இருக்கிறது. ஆகையால் அந்த அந்த சப்தாதி கரணங்களின் உண்மையான தத்துவத்தை அறிந்து அதை வைராக்கியத்துடன் அதை ஆபாசமாக (மித்யையாக) பார்த்து அந்த மனதை ஆத்மாவி டத்தில் வசம் ஆக்கவேண்டும். இவ்வாறு யோகாப்யாச பலத்தால் யோகிகள் ஆத்மாவிடத்திலேயே சாந்தி அடைகிறார்கள்.
प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।
उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥ २७ ॥
ப்ரசாந்த-மநஸம் ஹ்யேனம் யோகினம் ஸுகமுத்தமம் ।
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்மபூத-மகல்மஷம் ॥ 27 ॥
प्रशान्तमनसं प्रकर्षेण शान्तं मनः यस्य सः प्रशान्तमनाः तं प्रशान्तमनसं हि एनं योगिनं सुखम् उत्तमं निरतिशयम् उपैति उपगच्छति शान्तरजसं प्रक्षीणमोहादिक्लेशरजसमित्यर्थः, ब्रह्मभूतं जीवन्मुक्तम् , ‘ब्रह्मैव सर्वम्’ इत्येवं निश्चयवन्तं ब्रह्मभूतम् अकल्मषं धर्माधर्मादिवर्जितम् ॥ २७ ॥
இவ்வாறு பிரசாந்தமடைந்த மனதுடைய யோகியை நிரதிசய உத்தமமான சுகம் பிராப்தமாகிறது. அவர்களுக்கு மோஹாதி க்லேசங்க ளுக்கு காரணமாகிய ரஜோகுணம் க்ஷணமாகிறது (நீங்குகிறது) பிரஹ்ம்ம பூதம் என்றால் ஜீவன்முக்தன். பிரஹ்மமே எல்லாம் என்று நிச்சயம் செய்தவன் பிரஹ்ம்ம பூதம். கல்மஷங்கள் (அதர்மம்) அற்றவன்.
युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः ।
सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ॥ २८ ॥
யுஞ்ஜந்நைவம் ஸதாத்மானம் யோகீ விகதகல்மஷ: ।
ஸுகேன ப்ரஹ்மஸம்ஸ்பர்சமத்யந்தம் ஸுகமச்னுதே ॥ 28 ॥
युञ्जन् एवं यथोक्तेन क्रमेण योगी योगान्तरायवर्जितः सदा सर्वदा आत्मानं विगतकल्मषः विगतपापः, सुखेन अनायासेन ब्रह्मसंस्पर्शं ब्रह्मणा परेण संस्पर्शो यस्य तत् ब्रह्मसंस्पर्शं सुखम् अत्यन्तम् अन्तमतीत्य वर्तत इत्यत्यन्तम् उत्कृष्टं निरतिशयम् अश्नुते व्याप्नोति ॥ २८ ॥
யோகவிஷயத்தில் உள்ள தடைகளற்ற, பாபங்களற்றயோகி முன்பு கூறப்பட்ட கிரமப்படி எப்பொழுதும் சித்தத்தை நிலைநிறுத்தி எளிதாக பிரஹ்ம்ம பிராப்தி ரூப நிரதிசய எல்லாவற்றிலும் மேலான சுகத்தை அனுபவிக்கிறான். பிரஹ்ம்ம பிராப்தியால் எல்லாவற்றிலும் மேலான, முடிவில்லாத (ஆனந்த) சுகத்தை அடைகிறான்.
इदानीं योगस्य यत् फलं ब्रह्मैकत्वदर्शनं सर्वसंसारविच्छेदकारणं तत् प्रदर्श्यते —
இப்பொழுது யோகத்தின் பலனாகிய சம்சாரம் அனைத்தும் நசித்துப் போவதற்கு காரணமாகிய பிரஹ்மாத்ம தர்சனத்தை உபதேசம் செய்கிறார்.
सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।
ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः ॥ २९ ॥
ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி ।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சன: ॥ 29 ॥
सर्वभूतस्थं सर्वेषु भूतेषु स्थितं स्वम् आत्मानं सर्वभूतानि च आत्मनि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि च सर्वभूतानि आत्मनि एकतां गतानि ईक्षते पश्यति योगयुक्तात्मा समाहितान्तःकरणः सर्वत्र समदर्शनः सर्वेषु ब्रह्मादिस्थावरान्तेषु विषमेषु सर्वभूतेषु समं निर्विशेषं ब्रह्मात्मैकत्वविषयं दर्शनं ज्ञानं यस्य स सर्वत्र समदर्शनः ॥ २९ ॥
தன் ஆத்மாவை எல்லா பூதங்களிலும் இருப்பதாக காண்கிறான். பிரஹ்ம்மா முதல் ஸ்தம்ப வரையில் உள்ள எல்லாவற்றையும் ஆத்மா வினிடத்தில் ஒன்றாகவே சமாஹித அந்தக்கரணம் உடைய யோகி பார்க்கிறான். அவ்வாறேபிரஹ்ம்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் வெவ்வேறாக உள்ள எல்லா பூதங்களிடத்தும் வேற்றுமை அற்று சமமான பிரஹ்ம்மாத்மைக்ய விஷயத்தை அறியும் ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவன் எங்கும் சமதர்சனமுடையவன்.
एतस्य आत्मैकत्वदर्शनस्य फलम् उच्यते —
இந்த ஆத்ம ஏகத்துவ தர்சனத்தின் பலனைக் கூறுகிறார்-
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति ।
तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ॥ ३० ॥
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி ।
தஸ்யாஹம் ந ப்ரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி ॥ 30 ॥
यो मां पश्यति वासुदेवं सर्वस्य आत्मानं सर्वत्र सर्वेषु भूतेषु सर्वं च ब्रह्मादिभूतजातं मयि सर्वात्मनि पश्यति, तस्य एवं आत्मैकत्वदर्शिनः अहम् ईश्वरो न प्रणश्यामि न परोक्षतां गमिष्यामि । स च मे न प्रणश्यति स च विद्वान् मम वासुदेवस्य न प्रणश्यति न परोक्षो भवति, तस्य च मम च एकात्मकत्वात् ।
எல்லாவற்றிற்கும் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை எங்கும் எல்லா பூதங்களிலும் பார்க்கிறானோ, அவ்வாறேசர்வாத்மா வாகிய என்னிடத்தில் பிரஹ்ம்மா முதலிய பூத வர்க்கங்களை காண்கி றானோ அப்படிப்பட்ட ஆத்ம ஏகத்துவ தர்சனமுடையவனை ஈஸ்வர னாகிய நான் நாசம் செய்யமாட்டேன் என்றால் நான் ப்ரத்யக்ஷம் ஆகாமல் இருக்கமாட்டேன். அவ்வாறே அந்த ஆத்மதர்சீ எனக்கு பரோக்ஷமாக இருக்கமாட்டான். அப்படிப்பட்ட ஆத்மதர்சியினுடைய ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றாக இருப்பதால்
स्वात्मा हि नाम आत्मनः प्रिय एव भवति, यस्माच्च अहमेव सर्वात्मैकत्वदर्शी ॥ ३० ॥
தன்னுடைய ஆத்மாவே தனக்கு பிரியமாகிறது. ஏனெனில் சர்வாத்ம பாவத்தினால் எவன் நன்றாக பார்க்கிறானோ அவனும் நானாகவே ஆகிறேன்.
सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः ।
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते ॥ ३१ ॥
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: ।
ஸர்வதா வர்தமானோஅபி ஸ யோகீ மயி வர்ததே ॥ 31 ॥
इत्येतत् पूर्वश्लोकार्थं सम्यग्दर्शनमनूद्य तत्फलं मोक्षः अभिधीयते । सर्वथा सर्वप्रकारैः वर्तमानोऽपि सम्यग्दर्शी योगी मयि वैष्णवे परमे पदे वर्तते, नित्यमुक्त एव सः, न मोक्षं प्रति केनचित् प्रतिबध्यते इत्यर्थः ॥ ३१ ॥
என்று இவ்வாறு முன் சுலோகார்த்தமாகிய சம்யக்தர்சனத்தை அனுவாதம் செய்து அதன் பலமாகிய மோக்ஷத்தைப் பற்றி விவரிக் கிறார். சம்யக் தர்சியாகிய யோகி எந்தப் பிரகாரமாக இருந்தாலும் எப்பொழுதும் வைஷ்ணவ பரம பதமாகிய என்னிடத்திலேயே இருப்பதால் அவர் நித்யமுக்தரே. மோக்ஷத்தைக் குறித்து எந்த ஒரு பிரதிபந்தமும் ஏற்படாது என்பது பொருள்.
किञ्च अन्यत् —
மேலும் வேறு கூற்று -
आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।
शुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः ॥ ३२ ॥
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோஅர்ஜுன ।
ஸுகம் வா யதி வா து: கம்ஸ யோகீ பரமோ மத: ॥ 32 ॥
आत्मौपम्येन आत्मा स्वयमेव उपमीयते अनया इत्युपमा तस्या उपमाया भावः औपम्यं ।
தனக்குத்தானே உபமானமாய் இருக்கிறார். உபமானத்தினுடைய பாவம் ஔபம்யம்.
तेन आत्मौपम्येन, सर्वत्र सर्वभूतेषु समं तुल्यं पश्यति यः अर्जुन ।
ஹே! அர்ஜுனா! தனக்குத்தானே ஒப்பாய் இருப்பதால் எங்கும் எல்லா பூதங்களிடத்தும் எவன் சமமாகப் பார்க்கிறானோ
स च किं समं पश्यति इत्युच्यते —
அவன் எவ்வாறு சமமாக பார்க்கிறான் என்று கூறுகிறார்-
यथा मम सुखम् इष्टं तथा सर्वप्राणिनां सुखम् अनुकूलम् । वाशब्दः चार्थे । यदि वा यच्च दुःखं मम प्रतिकूलम् अनिष्टं यथा तथा सर्वप्राणिनां दुःखम् अनिष्टं प्रतिकूलं इत्येवम् आत्मौपम्येन सुखदुःखे अनुकूलप्रतिकूले तुल्यतया सर्वभूतेषु समं पश्यति, न कस्यचित् प्रतिकूलमाचरति, अहिंसक इत्यर्थः ।
தனக்கு சுகம் இஷ்ட்டமோ அவ்வாறு மற்றஎல்லா பிராணிகளுக் கும் சுகத்தில் அநுகூலமாயிருத்தல். துக்கமானது தனக்கு இஷ்ட்ட மில்லையோ அவ்வாறேமற்றபிராணிகளுக்கும் இஷ்டமில்லை பிரதி கூலமாய் இருக்கிறது என்று இவ்வாறு தனக்கு ஒப்பாக சுக துக்கங்க ளில் உள்ள அனுகூல பிரதிகூலங்களை எல்லா பிராணிகளிடத்தும் சமமாகப் பார்க்கிறான். ஒருவருக்கும் பிரதிகூலத்தைச் செய்வ தில்லை. அதனால் அஹிம்சையுடன் கூடியவன் என்பது பொருள்.
यः एवमहिंसकः सम्यग्दर्शननिष्ठः स योगी परमः उत्कृष्टः मतः अभिप्रेतः सर्वयोगिनां मध्ये ॥ ३२ ॥
எவன் இவ்வாறு அஹிம்சையுடன் கூடினவனாயும், சம்யக் தர்சன நிஷ்ட்டனாகவும் இருக்கிறானோ அந்த யோகி எல்லா யோகிகளின் மத்தியில் மிகவும் மேலானவனாக கருதப்படுகிறான்.
एतस्य यथोक्तस्य सम्यग्दर्शनलक्षणस्य योगस्य दुःखसम्पाद्यतामालक्ष्य शुश्रूषुः ध्रुवं तत्प्राप्त्युपायमर्जुन उवाच —
இவ்வாறு கூறப்பட்ட சம்யக் தர்சன லக்ஷணமான யோகத்தை அடைவது மிகக்கடினமானது என்று அறிந்து, அந்த யோகத்தை நிச்சயமாக அடையவேண்டிய உபாயத்தை கேட்க விரும்பிய-
अर्जुन उवाच —
அர்ஜுனன் கேட்டான்.
योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन ।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ॥ ३३ ॥
யோஅயம் யோகஸ்-த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ।
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் ॥ 33 ॥
यः अयं योगः त्वया प्रोक्तः साम्येन समत्वेन हे मधुसूदन एतस्य योगस्य अहं न पश्यामि नोपलभे, चञ्चलत्वात् मनसः । किम् ? स्थिराम् अचलां स्थितिम् प्रसिद्धमेतत् ॥ ३३ ॥
ஹே மதுசூதனா! சமமாகப் பார்த்தலாகிய எந்த ஒரு யோகமானது உன்னால் கூறப்பட்டதோ மனம் சஞ்சலமாய் இருப்பதால் என்னால் சஞ்சலமற்றஸ்திதியை காணமுடியவில்லை.
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् ।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ ३४ ॥
சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம் ।
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் ॥ 34 ॥
चञ्चलं हि मनः । कृष्ण इति कृषतेः विलेखनार्थस्य रूपम् । भक्तजनपापादिदोषाकर्षणात् कृष्णः ।
கிருஷ்ண என்றபதம் க்ருஷ் தாதுவில் இருந்து தோன்றியது. க்ருஷ் என்றதாதுவிற்கு சுரண்டுதல் என்று பொருள். பக்தர்களுடைய பாபம் முதலிய தோஷங்களை நிவிர்த்தி செய்வதால் பகவானுடைய பெயர் கிருஷ்ண எனப்படுகிறது. இங்கு ஹே கிருஷ்ண! என்னுடைய மனமானது சஞ்சலமாயிருக்கிறது. (என்று அர்ஜுனன் கிருஷ்ண என்ற பதத்தை உபயோகிக்கிறார்)
न केवलमत्यर्थं चञ्चलम् , प्रमाथि च प्रमथनशीलम् , प्रमथ्नाति शरीरम् इन्द्रियाणि च विक्षिपत् सत् परवशीकरोति ।
என்னுடைய மனமானது அதிகமான சஞ்சலத்துடன் கூடியதாக மட்டுமல்ல சரீரத்தையும், இந்திரியங்களையும் தடுமாறச்செய்து கலக்குகின்றது. தடுமாற்றமடைந்த இந்திரியங்களைப் பிறவற்றின் வசமாக்குகிறது.
किञ्च बलवत् प्रबलम् , न केनचित् नियन्तुं शक्यम् , दुर्निवारत्वात् । किञ्च — दृढं तन्तुनागवत् अच्छेद्यम् ।
மேலும் அது மிகவும் பலத்துடன் கூடியது. அதை வசப்படுத்த முடியாது. மேலும் மிகத்திடமான தந்துநாகம் எனப்படும் ஜலத்தில் வாழும் ஜீவன்போல் இருக்கும் அதை வெட்டி வீழ்த்த முடியாது.
तस्य एवंभूतस्य मनसः अहं निग्रहं निरोधं मन्ये वायोरिव यथा वायोः दुष्करो निग्रहः ततोऽपि दुष्करं मन्ये इत्यभिप्रायः ॥ ३४ ॥
இவ்வாறுள்ள அந்த மனதை அடக்குதல் என்பது வாயுவை அடக்குதலுக்கு ஒப்பாகும் என்று கருதுகிறேன். எவ்வாறு வாயுவை அடக்குவது கடினமானதோ அதைவிட மனதை அடக்குவது மிகக் கடினமானது என்பது அபிப்பிராயம்.
श्रीभगवानुवाच, एवम् एतत् यथा ब्रवीषि —
எவ்வாறு நீ கூறினாயோ அது இவ்வாறே
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச - கிருஷ்ணபகவான் சொல்வது
असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् ।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ॥ ३५ ॥
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் ।
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே ॥ 35 ॥
असंशयं नास्ति संशयः ‘मनो दुर्निग्रहं चलम्’ इत्यत्र हे महाबाहो । किन्तु अभ्यासेन तु अभ्यासो नाम चित्तभूमौ कस्याञ्चित् समानप्रत्ययावृत्तिः चित्तस्य । वैराग्येण वैराग्यं नाम दृष्टादृष्टेष्टभोगेषु दोषदर्शनाभ्यासात् वैतृष्ण्यम् । तेन च वैराग्येण गृह्यते विक्षेपरूपः प्रचारः चित्तस्य । एवं तत् मनः गृह्यते निगृह्यते निरुध्यते इत्यर्थः ॥ ३५ ॥
ஹே மஹாபாஹோ! மனமானது சஞ்சலத்தன்மை உடையதும், அதை நீக்குவது மிக்க கடினமானது என்பதில் சந்தேஹமில்லை. ஆனால் அப்பியாசத்தினாலும், வைராக்கியத்தினாலும் வசப்படுத்த முடியும். அப்யாசம் என்றால் சித்தத்தில் (மனதில்) ஒரே விதமான எண்ணத்தை திருப்பி திருப்பி செய்து மனதை ஏகாக்ரப் படுத்துதல். வைராக்கியம் என்றால் இஹலோக பரலோக போகங்களில் தோஷதிருஷ்டியை பழகுவதால் அதில் ஆசை அற்று போதல். இவ்வாறு மனமானது வசப்படுத்தப்படுகிறது.
यः पुनः असंयतात्मा, तेन —
மேலும் எவன் மனதை வசப்படுத்தவில்லையோ அதனால்-
असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।
वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः ॥ ३६ ॥
அஸம்யதாத்மனா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: ।
வச்யாத்மனா து யததா சக்யோஅவாப்துமுபாயத: ॥ 36 ॥
असंयतात्मना अभ्यासवैराग्याभ्यामसंयतः आत्मा अन्तःकरणं यस्य सोऽयम् असंयतात्मा तेन असंयतात्मना योगो दुष्प्रापः दुःखेन प्राप्यत इति मे मतिः ।
அப்பியாசம், வைராக்கியம் இவைகளினால் வசப்படுத்தப்படாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அந்த (அசம்யதா ஆத்மா) அவன் மனம் வசப்படாததினால் மிகவும் கஷ்டப்பட்டு யோகத்தை அடைவான் என்பது என்னுடைய எண்ணம்.
यस्तु पुनः वश्यात्मा अभ्यासवैराग्याभ्यां वश्यत्वमापादितः आत्मा मनः यस्य सोऽयं वश्यात्मा तेन वश्यात्मना तु यतता भूयोऽपि प्रयत्नं कुर्वता शक्यः अवाप्तुं योगः उपायतः यथोक्तादुपायात् ॥ ३६ ॥
மேலும் எவன் அப்பியாச வைராக்கியத்தினால் வசம் செய்யப் பட்ட மனதை உடையவனோ அந்த வச்யாத்மா மறுபடியும் பிரயத்த னம் செய்து யோகத்தை முன்பு கூறப்பட்ட உபாயத்தின் மூலமாக அடையமுடியும்.
तत्र योगाभ्यासाङ्गीकरणेन इहलोकपरलोकप्राप्तिनिमित्तानि कर्माणि संन्यस्तानि, योगसिद्धिफलं च मोक्षसाधनं सम्यग्दर्शनं न प्राप्तमिति, योगी योगमार्गात् मरणकाले चलितचित्तः इति तस्य नाशमशङ्क्य ।
யோகமார்க்கத்தில் பிரவேசித்தவன் இஹலோக, பரலோக பிராப்திக்கு ஸாதனமான கர்மயோகத்தை த்யாகம் செய்துவிட்டான். மேலும் யோகசித்தியின் பலனும், மோக்ஷ பிராப்திக்கு ஏதுவான ஞானமும் பூர்ணமாக ஏற்படவில்லை, அந்த யோகியின் மனம் மரணகாலத்தில் யோகத்தினின்றும் நழுவி, நாசம் ஏற்படுமே என்ற சங்கை செய்து-
अर्जुन उवाच —
அர்ஜுனன் உவாச - அர்ஜுனன் சொல்வது
अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः ।
अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ॥ ३७ ॥
அயதி: ச்ரத்தயோபேதோ யோகாச்-சலிதமானஸ: ।
அப்ராப்ய யோக-ஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி॥ 37 ॥
अयतिः अप्रयत्नवान् योगमार्गे श्रद्धया आस्तिक्यबुद्ध्या च उपेतः योगात् अन्तकाले च चलितं मानसं मनो यस्य सः चलितमानसः भ्रष्टस्मृतिः सः अप्राप्य योगसंसिद्धिं योगफलं सम्यग्दर्शनं कां गतिं हे कृष्ण गच्छति ॥ ३७ ॥
ஹே! கிருஷ்ணா! எந்த சாதகன் யோகமார்க்கத்தில் பிரயத்தனம் செய்யவில்லையோ ஆனால் ஆஸ்திக புத்தியுடன் உள்ளானோ, மேலும் மரணகாலத்தில் எவனுடைய மனமானது யோகத்திலிருந்து நழுவிவிட்டதோ அந்த நழுவிய (சஞ்சல) சித்தமுடைய யோகி யோகசித்தியை அதாவது யோகபலமாகிய சம்யக்தர்சனத்தை அடையாமல் எந்த கதிக்கு செல்வான்.
कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति ।
अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि ॥ ३८ ॥
கச்சிந்நோபய-விப்ரஷ்டச் சிந்நாப்ரமிவ நச்யதி ।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி ॥ 38 ॥
कच्चित् किं न उभयविभ्रष्टः कर्ममार्गात् योगमार्गाच्च विभ्रष्टः सन् छिन्नाभ्रमिव नश्यति, किं वा न नश्यति अप्रतिष्ठो निराश्रयः हे महाबाहो विमूढः सन् ब्रह्मणः पथि ब्रह्मप्राप्तिमार्गे ॥ ३८ ॥
ஹே மஹாபாஹோ! அந்த ஆஸ்ரயமில்லாத - தங்கும் இடம் இல்லாமல் பிரஹ்ம்மத்தை அடையும் மார்க்கத்தில் மோஹமடைந்த புருஷன் கர்மமார்க்கம், யோகமார்க்கம் இவ்விரண்டினின்றும் நழுவி சிதறிய மேகம் போல் நஷ்ட்டமடைவானோ? அல்லது நஷ்ட்டம் அடைவதில்லையா?
एतन्मे संशयं कृष्ण च्छेत्तुमर्हस्यशेषतः ।
त्वदन्यः संशयस्यास्य च्छेत्ता न ह्युपपद्यते ॥ ३९ ॥
ஏதந்மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்து-மர்ஹஸ்ய சேஷத: ।
த்வதன்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே ॥ 39 ॥
एतत् मे मम संशयं कृष्ण च्छेत्तुम् अपनेतुम् अर्हसि अशेषतः । त्वदन्यः त्वत्तः अन्यः ऋषिः देवो वा च्छेत्ता नाशयिता संशयस्य अस्य न हि यस्मात् उपपद्यते न सम्भवति । अतः त्वमेव च्छेत्तुमर्हसि इत्यर्थः ॥ ३९ ॥
என்னுடைய சந்தேஹத்தை அடியோடு போக்குவதற்கு உமக்குத் தான் சாமர்த்தியம் இருக்கிறது. ஏன் எனில் உம்மைத் தவிர ஒரு ரிஷியாவது, தேவனாவது இந்த சந்தேஹத்தைப் போக்க இயலாது. ஆகையால் நீங்கள்தான் இந்த சந்தேஹத்தைப் போக்கவேண்டும் என்பது பொருள்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச - பகவான் சொல்வது
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ॥ ४० ॥
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்-தஸ்ய வித்யதே ।
ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி ॥ 40 ॥
हे पार्थ नैव इह लोके नामुत्र परस्मिन् वा लोके विनाशः तस्य विद्यते नास्ति । नाशो नाम पूर्वस्मात् हीनजन्मप्राप्तिः स योगभ्रष्टस्य नास्ति ।
ஹே! பார்த்த! இந்த யோகபிரஷ்டனுக்கு (யோகத்திலிருந்து நழுவியவனுக்கு) இந்த லோகத்திலோ, பரலோகத்திலோ நாசம் என்பது கிடையாது. முந்தின ஜன்மாவைக் காட்டிலும் கீழான ஜன்மத்தின் அடைவே நாசம் எனப்படுகிறது. அந்த நாசம் யோகபிரஷ்ட்டனுக்கு ஏற்படுவதில்லை.
न हि यस्मात् कल्याणकृत् शुभकृत् कश्चित् दुर्गतिं कुत्सितां गतिं हे तात, तनोति आत्मानं पुत्ररूपेणेति पिता तात उच्यते । पितैव पुत्र इति पुत्रोऽपि तात उच्यते । शिष्योऽपि पुत्र उच्यते । यतो न गच्छति ॥ ४० ॥
ஏன் எனில் ஹே! தாத! சுப காரியங்களை செய்பவன் ஒருநாளும் கீழான கதிக்குச் செல்லமாட்டான். தாத, என்று விழித்ததின் காரணம் என்னவெனில் பிதா ஆனவன் புத்திர ரூபமாக விருத்தி அடைகி றான். ஆகையால் பிதா தாத எனப்படுகிறார். அவ்வாறேபிதாவும் புத்திரரூபமாக தோன்றுகிறார். ஆகையால் புத்திரனையும் தாத என்கிறோம். சிஷ்யனும் புத்திரனுக்கு ஒப்பானவன். ஆகையால் அவனையும் தாத என்று கூறுகிறார்.
किं तु अस्य भवति ? —
ஆனால் இவனுக்கு என்ன ஏற்படுகிறது -
प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः ।
शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ॥ ४१ ॥
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகானுஷித்வா சாச்வதீ: ஸமா: ।
சுசீனாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோஅபிஜாயதே ॥ 41 ॥
योगमार्गे प्रवृत्तः संन्यासी सामर्थ्यात् प्राप्य गत्वा पुण्यकृताम् अश्वमेधादियाजिनां लोकान् , तत्र च उषित्वा वासमनुभूय शाश्वतीः नित्याः समाः संवत्सरान् , तद्भोगक्षये शुचीनां यथोक्तकारिणां श्रीमतां विभूतिमतां गेहे गृहे योगभ्रष्टः अभिजायते ॥ ४१ ॥
யோகமார்க்கத்தில் பிரவிர்த்தித்த யோகபிரஷ்ட்ட ஸந்நியாஸி அச்வமேதம் முதலிய யாகங்களைசச் செய்த புண்யவான்களுடைய லோகத்தை அடைந்து அவர்களுடன் வாசம் செய்து அங்கு வெகுகாலம் இருந்து அனுபவித்து பின் போகங்கள் நசித்ததும் சாஸ்திரத்தில் கூறி உள்ளபடி கர்மங்களைச் செய்யும் நன்னடத்தை உடையவர்களாயும், ஸ்ரீமானாயும் உள்ளவர்களுடைய வீட்டில் பிறப்பான். இந்த இடத்தில் யோகபிரஷ்ட்டனை சந்நியாசி என்று கூறப்பட்டுள்ளது.
अथवा योगिनामेव कुले भवति धीमताम् ।
एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ॥ ४२ ॥
அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம் ।
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜன்ம யதீத்ருசம் ॥ 42 ॥
अथवा श्रीमतां कुलात् अन्यस्मिन् योगिनामेव दरिद्राणां कुले भवति जायते धीमतां बुद्धिमताम् ।
ஸ்ரீமான்களுடைய குலத்தைத் தவிர வேறான புத்திமான்களாயும், தரித்திரர்களாயும் உள்ள யோகிகளின் குலத்தில் பிறப்பார்கள்.
एतत् हि जन्म, यत् दरिद्राणां योगिनां कुले, दुर्लभतरं दुःखलभ्यतरं पूर्वमपेक्ष्य लोके जन्म यत् ईदृशं यथोक्तविशेषणे कुले ॥ ४२ ॥
எப்பொழுது கூறப்பட்ட விசேஷணங்களுடன் கூடிய குலத்தில் பிறப்பது மிகவும் துர்லபம். முன்பு கூறப்பட்ட ஸ்ரீமான்களுடைய குலத்தில் பிறப்பதைக் காட்டிலும் இந்த தரித்திரர்களான யோகிகளின் குலத்தில் பிறப்பது மிக துர்லபம். (கிடைப்பது அரிது)
यस्मात् —
ஏனெனில்
तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् ।
यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन ॥ ४३ ॥
தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம் ।
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தன ॥ 43 ॥
तत्र योगिनां कुले तं बुद्धिसंयोगं बुद्ध्या संयोगं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं पूर्वस्मिन् देहे भवं पौर्वदेहिकम् । यतते च प्रयत्नं च करोति ततः तस्मात् पूर्वकृतात् संस्कारात् भूयः बहुतरं संसिद्धौ संसिद्धिनिमित्तं हे कुरुनन्दन ॥ ४३ ॥
யோகிகளுடைய குலத்தில் (பிறந்திருக்கும்பொழுது) பூர்வஜன்ம சரீரத்தில் இருந்த புத்தியின் சம்யோகம் (சேர்க்கை) ஏற்படுகிறது. அதனால் பூர்வ ஜன்மத்தில் செய்த ஸம்ஸ்கார பலத்தால் பூர்ணபலன் ஏற்படுவதற்கு மேலும் அதிகமாக பிரயத்னம் செய்வான்.
कथं पूर्वदेहबुद्धिसंयोग इति तदुच्यते —
முன் சரீரத்தின் புத்தியினுடைய ஸம்யோகம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதைக் கூறுகிறார்.
पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः ।
जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ॥ ४४ ॥
பூர்வாப்யாஸேன தேனைவ ஹ்ரியதே ஹ்யவசோஅபி ச: ।
ஜிக்ஞாஸுரபி யோகஸ்ய சப்தப்ரஹ்மாதிவர்ததே ॥ 44 ॥
यः पूर्वजन्मनि कृतः अभ्यासः सः पूर्वाभ्यासः, तेनैव बलवता ह्रियते संसिद्धौ हि यस्मात् अवशोऽपि सः योगभ्रष्टः ।
பூர்வஜன்மத்தில் செய்த அப்யாசம் பூர்வாப்யாசம். அந்த அப்யா சத்தின் பலத்தால் யோகப்ரஷ்ட்டனானவன் யோகத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் அதில் இழுக்கப்படுகின்றான்.
न कृतं चेत् योगाभ्यासजात् संस्कारात् बलवत्तरमधर्मादिलक्षणं कर्म, तदा योगाभ्यासजनितेन संस्कारेण ह्रियते ; अधर्मश्चेत् बलवत्तरः कृतः, तेन योगजोऽपि संस्कारः अभिभूयत एव ।
யோகாப்யாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தைக் காட்டிலும் பலமான அதர்மாதி லக்ஷணங்களுடன் கூடிய கர்மத்தைச் செய்யவில்லை எனில் யோகாப்பியாசத்தினால் உண்டான சம்ஸ்கா ரத்தால் இழுக்கப்படுகின்றான். ஆனால் அதர்மம் பலமாக இருந்தால் யோகத்தினாலுண்டான (சம்ஸ்காரம்) அப்பியாசமும் (குறைந்து) மறைந்து போகிறது.
तत्क्षये तु योगजः संस्कारः स्वयमेव कार्यमारभते, न दीर्घकालस्थस्यापि विनाशः तस्य अस्ति इत्यर्थः ।
ஆனால் யோகாப்பியாசத்தால் உண்டான சம்ஸ்காரத்தால் பாபகர் மமானது க்ஷயம் அடைந்தாலும் தன் கார்யத்தை ஆரம்பிக்கவே செய்கி றது. எவ்வளவு காலமானாலும் அதற்கு நாசம் என்பது கிடையாது.
अतः जिज्ञासुरपि योगस्य स्वरूपं ज्ञातुमिच्छन् अपि योगमार्गे प्रवृत्तः संन्यासी योगभ्रष्टः, सामर्थ्यात् सोऽपि शब्दब्रह्म वेदोक्तकर्मानुष्ठानफलम् अतिवर्तते अतिक्रामति अपाकरिष्यति ; किमुत बुद्ध्वा यः योगं तन्निष्ठः अभ्यासं कुर्यात् ॥ ४४ ॥
யோகத்தினுடைய ஜிக்ஞாசு என்றால் எவன் ஒருவன் யோகத்தி னுடைய ஸ்வரூபத்தை அறிவதற்காக யோகமார்க்கத்தில் இருக்கின்ற யோகப்ரஷ்ட்ட சந்நியாசி யோகபலத்தினுடைய சாமர்த்தியத்தால் சப்த பிரஹ்ம்மத்தையும் கடந்துவிடுகிறான். (சப்தப்ரஹ்மம் என்றால் வேதத்தில் கூறப்பட்ட கர்மானுஷ்ட்டானத்தினால் உண்டான பலனைக் கடந்துவிடுகிறான் என்றால் துறந்துவிடுகின்றான்) எவன் யோகத்தை அறிந்து அதில் நிலைத்து அப்பியாசம் செய்கிறானோ அவனைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
कुतश्च योगित्वं श्रेयः इति —
எந்தக்காரணத்தினால் யோகத்திற்கு மேலான தன்மை கூறப்பட்டுள்ளது.
प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः ।
अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ॥ ४५ ॥
ப்ரயத்நாத்யதமானஸ்து யோகீ ஸம்சுத்தகில்பிஷ: ।
அநேகஜன்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம்கதிம் ॥ 45 ॥
प्रयत्नात् यतमानः, अधिकं यतमान इत्यर्थः । तत्र योगी विद्वान् संशुद्धकिल्बिषः विशुद्धकिल्बिषः संशुद्धपापः अनेकजन्मसंसिद्धः अनेकेषु जन्मसु किञ्चित्किञ्चित् संस्कारजातम् उपचित्य तेन उपचितेन अनेकजन्मकृतेन संसिद्धः अनेकजन्मसंसिद्धः ततः लब्धसम्यग्दर्शनः सन् याति परां प्रकृष्टां गतिम् ॥ ४५ ॥
மிகவும் கடினமாக பிரயத்தனத்துடன் சாதனங்களை செய்த வித்வானாகிய யோகி அநேக ஜன்மங்களில் (யோக) சம்ஸ்காரத்தை சிறிது சிறிதாகச் சேர்த்து, அவ்வாறு அநேக ஜன்மங்களில் சேர்த்த யோகசம்ஸ்காரத்தால் பாபமற்று பக்குவமடைந்து சம்யக்தர்சனத்தை (மெய்யறிவை) அடைந்து மேலான கதியை அடைகிறான்.
यस्मादेवं तस्मात् —
எதனால் இவ்வாறோ அதனால்-
तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः ।
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन ॥ ४६ ॥
தபஸ்விப்யோஅதிகோ யோகீ ஜ்ஞானிப்யோஅபி மதோஅதிக: ।
கர்மிப்யச்-சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுன ॥ 46 ॥
तपस्विभ्यः अधिकः योगी, ज्ञानिभ्योऽपि ज्ञानमत्र शास्त्रार्थपाण्डित्यम् , तद्वद्भ्योऽपि मतः ज्ञातः अधिकः श्रेष्ठः इति । कर्मिभ्यः, अग्निहोत्रादि कर्म, तद्वद्भ्यः अधिकः योगी विशिष्टः यस्मात् तस्मात् योगी भव अर्जुन ॥ ४६ ॥
தபஸ்விகளைக் காட்டிலும் யோகி மேலானவன். சாஸ்திரத்தில் பாண்டித்யம் மட்டும் உள்ள ஞானிகளைக் காட்டிலும் மேலானவன். மேலும் அக்னிஹோத்திராதி கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும் யோகி மேலானவன். ஆகையால் நீ யோகியாகக்கடவாய்.
योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना ।
श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः ॥ ४७ ॥
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா ।
ச்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத: ॥ 47 ॥
योगिनामपि सर्वेषां रुद्रादित्यादिध्यानपराणां मध्ये मद्गतेन मयि वासुदेवे समाहितेन अन्तरात्मना अन्तःकरणेन श्रद्धावान् श्रद्दधानः सन् भजते सेवते यो माम् , स मे मम युक्ततमः अतिशयेन युक्तः मतः अभिप्रेतः इति ॥ ४७ ॥
ருத்ரன் ஆதித்யன் முதலிய தேவர்களிடத்தில் தியானத்தோடு இருக்கும் யோகிகளுள் வாசுதேவனாகிய என்னிடத்திலேயே அதிக சிரத்தையுடன் மனதை செலுத்தி என்னையே தொழுகின்றவனே உத் தமமானவன் என்பது என் அபிப்பிராயம்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये षष्ठोऽध्यायः ॥
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே த்யானயோகோ நாம ஷஷ்டோத்யாய: