முன் அத்தியாயத்தில் பகவானுடைய விபூதிகள் கூறப்பட்டன. அப்பொழுது நான் இந்த ஜகத் முழுவதையும் என் ஒரு அம்சமாக வியாபித்து இருக்கிறேன் என்று பகவானால் கூறப்பட்ட வசனத்தைக் கேட்டு எந்த ஜகத் ஆத்மஸ்வரூபமாயும், ஆதியாயும், ஈஸ்வரத்தன் மையாயும் உள்ளதோ அதை சாக்ஷாத்காரம் செய்ய விரும்பிய அர்ஜுனன் கூறினார்.
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥ १ ॥
மதனுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் ।
யத் வயோக்தம் வசஸ்தேந மோஹோஅயம் விகதோ மம ॥ 1 ॥
मदनुग्रहाय ममानुग्रहार्थं परमं निरतिशयं गुह्यं गोप्यम् अध्यात्मसंज्ञितम् आत्मानात्मविवेकविषयं यत् त्वया उक्तं वचः वाक्यं तेन ते वचसा मोहः अयं विगतः मम, अविवेकबुद्धिः अपगता इत्यर्थः ॥ १ ॥
என்னை அனுக்கிரஹம் செய்வதற்காக எது மிகவும் சிரேஷ்ட்ட மானதும் (மேலானதும்), ரஹஸ்யமானதுமான ஆத்மாவை தெரிவிக் கின்ற எந்த ஆத்ம அநாத்ம விவேக ஞான விஷயமானது தங்களால் கூறப்பட்டதோ அந்த வார்த்தைகளால் என்னுடைய மோஹமானது அதாவது அவிவேக புத்தியானது நீங்கிவிட்டது என்பது பொருள்.
किञ्च —
மேலும்
भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥ २ ॥
பவாப்யயௌ ஹி பூதானாம் ச்ருதெள விஸ்தரசோ மயா ।
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ॥ 2 ॥
भवः उत्पत्तिः अप्ययः प्रलयः तौ भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशः मया, न सङ्क्षेपतः, त्वत्तः त्वत्सकाशात् , कमलपत्राक्ष कमलस्य पत्रं कमलपत्रं तद्वत् अक्षिणी यस्य तव स त्वं कमलपत्राक्षः हे कमलपत्राक्ष, महात्मनः भावः माहात्म्यमपि च अव्ययम् अक्षयम् ‘श्रुतम्’ इति अनुवर्तते ॥ २ ॥
நான் தங்களிடமிருந்து பிராணிகளின் (பூதங்களின்) உற்பத்தி, நாசம் என்றஇரண்டையும் சுருக்கமாக அல்ல விரிவாகக் கேட்கப் பட்டது. ஹே கமலபத்ராக்ஷ! என்றால் தாமரை இலை போன்ற கண்களை உடையவனே! மேலும் தங்களுடைய அழிவற்றமாஹத்மி யமும் என்னால் கேட்கப்பட்டது. கேட்கப்பட்டது என்ற வினைச்சொல் தொடர்கிறது.
एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥ ३ ॥
ஏவமேதத்யதாத்த த்வமாத்மானம் பரமேச்வர ।
த்ரஷ்டு-மிச்சாமி தே ரூப-மைச்வரம் புருஷோத்தம ॥ 3 ॥
एवमेतत् नान्यथा यथा येन प्रकारेण आत्थ कथयसि त्वम् आत्मानं परमेश्वर । तथापि द्रष्टुमिच्छामि ते तव ज्ञानैश्वर्यशक्तिबलवीर्यतेजोभिः सम्पन्नम् ऐश्वरं वैष्णवं रूपं पुरुषोत्तम ॥ ३ ॥
ஹே பரமேஸ்வர! தாங்கள் தங்களைக் குறித்து எவ்வாறு கூறினீரோ அதைத்தவிர வேறு இல்லை. இவ்வாறு இருந்தபோதிலும் ஹே புருஷோத்தம! தங்களுடைய ஞான ஐஸ்வர்ய, சக்தி, பலம், வீர் யம், தேஜஸ் இவைகளுடன் கூடிய தங்களுடைய ஈஸ்வரத்தன் மையை என்றால் வைஷ்ணவரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ ४ ॥
மன்யஸே யதிதச்-சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ ।
யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மான மவ்யயம் ॥ 4 ॥
मन्यसे चिन्तयसि यदि मया अर्जुनेन तत् शक्यं द्रष्टुम् इति प्रभो, स्वामिन् , योगेश्वर योगिनो योगाः, तेषां ईश्वरः योगेश्वरः, हे योगेश्वर । यस्मात् अहम् अतीव अर्थी द्रष्टुम् , ततः तस्मात् मे मदर्थं दर्शय त्वम् आत्मानम् अव्ययम् ॥ ४ ॥
ஹே பிரபோ! தாங்கள் தங்களுடைய அந்த ரூபத்தை அர்ஜுன னாகிய என்னால் பார்க்கமுடியும் என்று கருதினீர்களானால் ஹே யோகேஸ்வர! என்றால் யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரரே! எதனால் நான் தங்களுடைய அந்த ரூபத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த விருப்ப முள்ளவனாக இருக்கிறேனோ அதனால் என் பொருட்டு தாங்கள் தங் களுடைய நாசமற்றரூபத்தைக் காட்டி அருள்வீராக.
एवं चोदितः अर्जुनेन भगवान् उवाच —
இவ்வாறு அர்ஜுனனால் தூண்டப்பட்டதினால் பகவான் கூறுகிறார்
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவானுவாச
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
பச்ய மே பார்த்த ரூபாணி சதசோஅத ஸஹஸ்ரச: ।
நானாவிதானி திவ்யானி நானாவர்ணாக்ருதீனி ச ॥ 5 ॥
पश्य मे पार्थ, रूपाणि शतशः अथ सहस्रशः, अनेकशः इत्यर्थः । तानि च नानाविधानि अनेकप्रकाराणि दिवि भवानि दिव्यानि अप्राकृतानि नानावर्णाकृतीनि च नाना विलक्षणाः नीलपीतादिप्रकाराः वर्णाः तथा आकृतयश्च अवयवसंस्थानविशेषाः येषां रूपाणां तानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
ஹே பார்த்த! என்னுடைய நூற்றுக்கணக்காக, ஆயிரக் கணக்காக என்றால் அநேகவித ரூபங்களைப் பார் என்பது பொருள். அநேகவிதமான அலௌகிகமான தெய்வீகமான கருப்பு, மஞ்சள் முதலிய அநேகவிதமான வர்ணங்களுடனும் அவ்வாறே அவயவ விசேஷணங்களுடன் கூடிய வடிவங்கள்(ரூபங்கள்) ஆகும்.
पश्यादित्यान्वसून्रुद्रानश्विनौ मरुतस्तथा ।
बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥ ६ ॥
பச்யாதித்யான் வசூன் ருத்ரானச்வினெள மருதஸ்-ததா ।
பஹூன்-யத்ருஷ்ட-பூர்வாணி பச்யாச்சர்யாணி பாரத ॥ 6 ॥
पश्य आदित्यान् द्वादश, वसून् अष्टौ, रुद्रान् एकादश, अश्विनौ द्वौ, मरुतः सप्त सप्त गणाः ये तान् । तथा च बहूनि अन्यान्यपि अदृष्टपूर्वाणि मनुष्यलोके त्वया, त्वत्तः अन्येन वा केनचित् , पश्य आश्चर्याणि अद्भुतानि भारत ॥ ६ ॥
ஹே பாரத! பன்னிரெண்டு ஆதித்தியர்களையும், அஷ்ட்ட வசுக் களையும், பதினோரு ஆதித்யர்களையும், இரு அச்வினி குமாரர்க ளையும், ஏழு எண்ணிக்கை உள்ள ஏழு கூட்டங்களாகிய 49 மருத்துக் களையும் அவ்வாறே அநேகமற்ற மனித உலகத்தில் உன்னைத் தவிர யாராலும் பார்க்க முடியாத ஆச்சிரியமானவைகளைப் பார்.
न केवलम् एतावदेव —
இது மாத்திரமன்று —
इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद्द्रष्टुमिच्छसि ॥ ७ ॥
இஹைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் பச்யாத்ய ஸ-சராசரம் ।
மம தேஹே குடாகேச யச்சான்யத்த்ரடுமிச்சஸி ॥ 7 ॥
इह एकस्थम् एकस्मिन्नेव स्थितं जगत् कृत्स्नं समस्तं पश्य अद्य इदानीं सचराचरं सह चरेण अचरेण च वर्तते मम देहे गुडाकेश । यच्च अन्यत् जयपराजयादि, यत् शङ्कसे,
‘यद्वा जयेम यदि वा नो जयेयुः’ (भ. गी. २ । ६) इति यत् अवोचः, तदपि द्रष्टुं यदि इच्छसि ॥ ७ ॥
ஹே குடாகேச! இப்பொழுது இந்த என்னுடைய சரீரத்தில், ஒரு டத்தில் இருக்கும் இந்த அசையும் பொருள், அசையா பொருள்க ளுடன் கூடிய இந்த ஜகத்தைப் பார். மேலும் வெற்றி, தோல்வி முதலிய வைகளில் உனக்கு ஏற்பட்ட சந்தேஹத்தை "நாம் ஜெயிப்போமோ அல்லது ஜயிக்கப்படுவோமோ? என்று கூறினாயோ அதையும் பார்க்க விரும்புகிறாய்.
किं तु —
ஆனால்
न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥ ८ ॥
ந து மாம் சக்யஸே த்ரஷ்டு-மனேனைவ ஸ்வசக்ஷஷா ।
திவ்யம் ததாமி தே சக்ஷ: பச்ய மே யோகமைச்வரம் ॥ 8 ॥
न तु मां विश्वरूपधरं शक्यसे द्रष्टुम् अनेनैव प्राकृतेन स्वचक्षुषा स्वकीयेन चक्षुषा । येन तु शक्यसे द्रष्टुं दिव्येन, तत् दिव्यं ददामि ते तुभ्यं चक्षुः । तेन पश्य मे योगम् ऐश्वरम् ईश्वरस्य मम ऐश्वरं योगं योगशक्त्यतिशयम् इत्यर्थः ॥ ८ ॥
உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னுடைய விச்வரூபத்தை உன்னால் பார்க்க முடியாது. எதனால் உன்னால் பார்க்க முடியுமோ அந்த திவ்யமான கண்களை உனக்குத் தருகிறேன். அதனால் ஈச்வரனாகிய என்னுடைய ஐஸ்வர்யத்தையும், யோகத்தையும் பார் என்றால் அதிசயமான யோக சாமர்த்தியத்தைப் பார் என்று பொருள்.
सञ्जय उवाच —
ஸஞ்ஜய உவாச
एवमुक्त्वा ततो राजन्महायोगेश्वरो हरिः ।
दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम् ॥ ९ ॥
ஏவமுக்த்வா ததோ ராஜன் மஹாயோகேச்வரோ ஹரி: ।
தர்சயாமாஸ பார்த்தாய பரமம் ரூபமைச்வரம் ॥ 9 ॥
एवं यथोक्तप्रकारेण उक्त्वा ततः अनन्तरं राजन् धृतराष्ट्र, महायोगेश्वरः महांश्च असौ योगेश्वरश्च हरिः नारायणः दर्शयामास दर्शितवान् पार्थाय पृथासुताय परमं रूपं विश्वरूपम् ऐश्वरम् ॥ ९ ॥
ஹே ராஜன்! திருதராஷ்டரே! இவ்வாறு உரைத்தபின் மஹாயோ கேஷ்வரராகிய ஹரியானவர் (நாராயணன்) ப்ருதா புத்திரனுக்கு மேலான ரூபமாகிய விஷ்வரூபம் என்றஐஸ்வர்யத்தைக் காட்டினார்.
अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥ १० ॥
அநேகவக்த்ரநயனமநேகாத்புததர்சனம் ।
அநேக திவ் யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம் ॥ 10 ॥
अनेकवक्त्रनयनम् अनेकानि वक्त्राणि नयनानि च यस्मिन् रूपे तत् अनेकवक्त्रनयनम् , अनेकाद्भुतदर्शनम् अनेकानि अद्भुतानि विस्मापकानि दर्शनानि यस्मिन् रूपे तत् अनेकाद्भुतदर्शनं रूपम् , तथा अनेकदिव्याभरणम् अनेकानि दिव्यानि आभरणानि यस्मिन् तत् अनेकदिव्याभरणम् , तथा दिव्यानेकोद्यतायुधं दिव्यानि अनेकानि अस्यादीनि उद्यतानि आयुधानि यस्मिन् तत् दिव्यानेकोद्यतायुधम् , ‘दर्शयामास’ इति पूर्वेण सम्बन्धः ॥ १० ॥
அநேக முகங்களும், கண்களும் எவரிடத்திலிருக்கிறதோ அவர் அநேக முக கண்களுடையவராயும், அநேக அற்புத தர்சனங்களும், ஆச்சரியப்படக்கூடிய தர்சனம் எவருக்கோ அவர் அநேக அத்புதமு டையவராயும், அநேக திவ்ய ஆபரணங்கள் எவரிடமுள்ளதோ அவர் அநேக திவ்ய ஆபரணமுள்ளவராயும், அவ்வாறேதிவ்யமான ஆயுதம் எவருக்குள்ளதோ அவர் திவ்ய ஆயுதம் உடையவராயும் உள்ளதைக் காட்டினார் என்று முன் சுலோகத்துடன் சம்பந்தம்.
किञ्च —
மேலும்
दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् ।
सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥ ११ ॥
திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தானுலேபனம் ।
ஸர்வாச்சர்யமயம் தேவம் அனந்தம் விச்வதோ முகம் ॥ 11 ॥
दिव्यमाल्याम्बरधरं दिव्यानि माल्यानि पुष्पाणि अम्बराणि वस्त्राणि च ध्रियन्ते येन ईश्वरेण तं दिव्यमाल्याम्बरधरम् , दिव्यगन्धानुलेपनं दिव्यं गन्धानुलेपनं यस्य तं दिव्यगन्धानुलेपनम् , सर्वाश्चर्यमयं सर्वाश्चर्यप्रायं देवम् अनन्तं न अस्य अन्तः अस्ति इति अनन्तः तम् , विश्वतोमुखं सर्वतोमुखं सर्वभूतात्मभूतत्वात् , तं दर्शयामास । ‘अर्जुनः ददर्श’ इति वा अध्याह्रियते ॥ ११ ॥
பரமேச்வரனால் திவ்யமான புஷ்பமாலைகளும், திவ்யமான வஸ்த்ரங்களும் அணியப்பட்டதால் திவ்யாம்பரதரணாயும் திவ்யமான சந்தனத்தை பூசி உள்ளதால் திவ்ய கந்தானுலேபனனாயும், எவருக்கு முடிவு என்பது இல்லையோ அவர் அனந்தன் எனப்படுகிறார். அந்த அனந்தமாகியவனாயும், எல்லா பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் எங்கும் முகம் உள்ள அந்த விராட் ஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காண்பித்தார் என்று அத்யாஹாரம் செய்து (வருவித்துக்) கொள்ளவேண்டும்.
या पुनर्भगवतः विश्वरूपस्य भाः, तस्या उपमा उच्यते —
பகவானுடைய விராட் ரூபத்தின் எந்த பிரகாசம் உள்ளதோ அதற்கு உபமானம் கூறுகிறார்
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥ १२ ॥
திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா ।
யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன: ॥ 12 ॥
दिवि अन्तरिक्षे तृतीयस्यां वा दिवि सूर्याणां सहस्रं सूर्यसहस्रं तस्य युगपदुत्थितस्य सूर्यसहस्रस्य या युगपदुत्थिता भाः, सा यदि, सदृशी स्यात् तस्य महात्मनः विश्वरूपस्यैव भासः । यदि वा न स्यात् , ततः विश्वरूपस्यैव भाः अतिरिच्यते इत्यभिप्रायः ॥ १२ ॥
நடுவானிலாவது, மூன்றாவது உலகமாகிய ஸ்வர்க்கத்திலாவது ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் உதித்தால் எவ்வளவு பிரகாச முள்ளதோ அதற்கு, விஷ்வரூபத்தினுடைய பிரகாசம் ஒப்பாகாது என்றால் அந்த சூரியன்களுடைய பிரகாசத்தைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥ १३ ॥
தத்ரைகஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் ப்ரவிபக்தமனேகதா ।
அபச்யத்தேவதேவஸ்ய சரீரே பாண்டவஸ்ததா ॥ 13 ॥
तत्र तस्मिन् विश्वरूपे एकस्मिन् स्थितम् एकस्थं जगत् कृत्स्नं प्रविभक्तम् अनेकधा देवपितृमनुष्यादिभेदैः अपश्यत् दृष्टवान् देवदेवस्य हरेः शरीरे पाण्डवः अर्जुनः तदा ॥ १३ ॥
அந்த சமயத்தில் அர்ஜுனன் தேவ, பித்ரு, மனிதர்கள் முதலிய அநேக பேதங்களுடன் கூடிய இந்த ஜகத் முழுவதும் இந்த தேவர்க ளுக்கெல்லாம் தேவனாகிய ஹரியினுடைய விஷ்வரூப சரீரத்தில் ஒர் இடத்தில் இருப்பதை அர்ஜுனன் பார்த்தான்.
ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः ।
प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥ १४ ॥
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா தனஞ்ஜய: ।
ப்ரணம்ய சிரஸா தேவம் க்ருதாஞ்ஜலி ரபாஷத ॥ 14 ॥
ततः तं दृष्ट्वा सः विस्मयेन आविष्टः विस्मयाविष्टः हृष्टानि रोमाणि यस्य सः अयं हृष्टरोमा च अभवत् धनञ्जयः । प्रणम्य प्रकर्षेण नमनं कृत्वा प्रह्वीभूतः सन् शिरसा देवं विश्वरूपधरं कृताञ्जलिः नमस्कारार्थं सम्पुटीकृतहस्तः सन् अभाषत उक्तवान् ॥ १४ ॥
தனஞ்ஜயன் அந்த விச்வரூபத்தைப் பார்த்து ஆச்சரியத்தையும், மயிர்சிலிர்த்தலையும் அடைந்தான். விச்வரூபத்துடன் இருப்பவரை தாழ்மையுடன் நன்றாக தலைவணங்கி பின் வணங்குவதற்காக இரு கைகளையும் கூப்பிக்கொண்டு இவ்வாறு கூறினான்.
कथम् ? यत् त्वया दर्शितं विश्वरूपम् , तत् अहं पश्यामीति स्वानुभवमाविष्कुर्वन् —
உங்களால் காண்பிக்கப்பட்ட எந்த விச்வரூபமுள்ளதோ அதை நான் எவ்வாறு காண்கிறேன் என்று தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி-
अर्जुन उवाच —
அர்ஜுன உவாச —
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थमृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥ १५ ॥
பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவி சே ஷஸங்கான் ।
ப்ரஹ்மாணமீசம் கமலாஸநஸ்தம் ருஷீம்ச்ச ஸர்வானுர காம்ச்ச திவ்யான் ॥ 15 ॥
पश्यामि उपलभे हे देव, तव देहे देवान् सर्वान् , तथा भूतविशेषसङ्घान् भूतविशेषाणां स्थावरजङ्गमानां नानासंस्थानविशेषाणां सङ्घाः भूतविशेषसङ्घाः तान् , किञ्च — ब्रह्माणं चतुर्मुखम् ईशम् ईशितारं प्रजानां कमलासनस्थं पृथिवीपद्ममध्ये मेरुकर्णिकासनस्थमित्यर्थः, ऋषींश्च वसिष्ठादीन् सर्वान् , उरगांश्च वासुकिप्रभृतीन् दिव्यान् दिवि भवान् ॥ १५ ॥
ஹே தேவனே! நான் தங்களுடைய சரீரத்தில் எல்லா தேவர்க ளையும், அவ்வாறேஸ்தாவர ஜங்கமரூபமான அநேகவித வடிவங் களை உடைய எல்லா பூத விசேஷங்களில் சமூஹத்தையும், மேலும் பிருதிவி ரூபமான தாமரையில், தாமரைக்கனியாகிய சுமேருவில் வீற்றிருப்பவரும், பிரஜைகளை ஆளுபவருமாகிய நான்முகப் பிரஹ்ம் மாவையும், வஸிஷ்டர் முதலிய ரிஷிகளையும் தேவலோகத்தில் இருக்கும் வாசுகி முதல் எல்லா சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वा सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥ १६ ॥
அனேகபாஹூதரவக்த்ரநேத்ரம் பச்யாமி த்வா ஸர்வதோ அநந்தரூபம் ।
நாந்தம் ந மத்யம் ந புனஸ்தவாதிம் பச்யாமி விச்வேச்வர விச்வரூப ॥ 16 ॥
अनेकबाहूदरवक्त्रनेत्रम् अनेके बाहवः उदराणि वक्त्राणि नेत्राणि च यस्य तव सः त्वम् अनेकबाहूदरवक्त्रनेत्रः तम् अनेकबाहूदरवक्त्रनेत्रम् । पश्यामि त्वा त्वां सर्वतः सर्वत्र अनन्तरूपम् अनन्तानि रूपाणि अस्य इति अनन्तरूपः तम् अनन्तरूपम् । न अन्तम् , अन्तः अवसानम् , न मध्यम् , मध्यं नाम द्वयोः कोट्योः अन्तरम् , न पुनः तव आदिम् — न देवस्य अन्तं पश्यामि, न मध्यं पश्यामि, न पुनः आदिं पश्यामि, हे विश्वेश्वर विश्वरूप ॥ १६ ॥
அநேக கைகள், வயிறு, முகம் மற்றும் கண்கள் இவைகளை உடையவராக பார்க்கிறேன். முடிவற்றரூபங்களை உடைய தங்களை அநந்த ரூபமாகவும், பார்க்கிறேன். ஹே விச்வேச்வரனே! ஹே விச்வ ரூபனே! தங்களுக்கு முடிவு என்பதையும் அவ்வாறே மத்தியம் என்ப தையும் என்றால் இரு பக்கங்களின் மத்தியத்தையும், ஆதியையும் தேவராகிய தங்களிடத்தில் நான் காணவில்லை.
किञ्च —
மேலும்
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतोदीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ताद्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥ १७ ॥
கிரீடினம் கதினம் சக்ரிணம் ச தேஜோ ராசிம் ஸர்வதோ தீப்தி மந்தம் ।
பச்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்கத்யுதி மப்ரமேயம் ॥ 17 ॥
किरीटिनं किरीटं नाम शिरोभूषणविशेषः तत् यस्य अस्ति सः किरीटी तं किरीटिनम् , तथा गदिनं गदा अस्य विद्यते इति गदी तं गदिनम् , तथा चक्रिणं चक्रम् अस्य अस्तीति चक्री तं चक्रिणं च, तेजोराशिं तेजःपुञ्जं सर्वतोदीप्तिमन्तं सर्वतोदीप्तिः अस्य अस्तीति सर्वतोदीप्तिमान् , तं सर्वतोदीप्तिमन्तं पश्यामि त्वां दुर्निरीक्ष्यं दुःखेन निरीक्ष्यः दुर्निरीक्ष्यः तं दुर्निरीक्ष्यं समन्तात् समन्ततः सर्वत्र दीप्तानलार्कद्युतिम् अनलश्च अर्कश्च अनलार्कौ दीप्तौ अनलार्कौ दीप्तानलार्कौ तयोः दीप्तानलार्कयोः द्युतिरिव द्युतिः तेजः यस्य तव स त्वं दीप्तानलार्कद्युतिः तं त्वां दीप्तानलार्कद्युतिम् , अप्रमेयं न प्रमेयम् अशक्यपरिच्छेदम् इत्येतत् ॥ १७ ॥
தலையில் அணியும் ஆபரணத்தின் பெயர் கிரீடம், அதை தலை யில் அணிந்திருப்பவர் கிரீடீ. அவரையும் எவரிடத்தில் கதை இருக் கிறதோ அவர் கதி. அவரையும், சக்கிரத்தை உடையவராகவும், ஒளிக் கூட்டமாய் உள்ளவராயும், அவ்வாறே எங்கும் எப்பொழுதும் ஜொலிக்கின்றஅக்னி சூரியனுக்கு சமானமான பிரகாசமுடையவரையும் அறிவதற்கு மிகக் கடினமானவனாயும் புத்தி முதலிய பிரமாணங் களுக்கு எட்டாததினால் அப்ரமேயமாயும், பரிச்சேதம் அற்றவராயும் உள்ளவரை எவ்விடத்திலும் நான் பார்க்கிறேன்.
इत एव ते योगशक्तिदर्शनात् अनुमिनोमि —
இதனால் தங்களுடைய யோக சக்தியைப் பார்த்து நான் இவ்வாறு அனுமானம் செய்கிறேன்-
त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥ १८ ॥
த்வமக்ஷரம் பரம் வேதிதவ்யம் த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் ।
த்வமவ்யய: சாச்வததர்மகோப்தா ஸனாதனஸ்த்வம் புருஷோ மதோ மே ॥ 18 ॥
त्वम् अक्षरं न क्षरतीति, परमं ब्रह्म वेदितव्यं ज्ञातव्यं मुमुक्षुभिः । त्वम् अस्य विश्वस्य समस्तस्य जगतः परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन्निति निधानं परः आश्रयः इत्यर्थः ।
நீங்கள் முமூக்ஷக்களால் அறியப்படவேண்டிய அழிவற்றபரம் பொருள். இந்த எல்லா ஜகத்தும் எதில் நிலைபெற்றுள்ளதோ அது நிதானம். நிதானம் என்றால் மேலான ஆச்ரயம் என்பது பொருள் நீங்கள் அந்த நிதானம்.
किञ्च, त्वम् अव्ययः न तव व्ययो विद्यते इति अव्ययः, शाश्वतधर्मगोप्ता शश्वद्भवः शाश्वतः नित्यः धर्मः तस्य गोप्ता शाश्वतधर्मगोप्ता । सनातनः चिरन्तनः त्वं पुरुषः परमः मतः अभिप्रेतः मे मम ॥ १८ ॥
மேலும் தாங்கள் அழிவற்றவர், சாஸ்வதமான அதாவது நித்திய மான தர்மத்தை ரக்ஷிப்பவர். நீங்கள் என்றும் உள்ள பரமபுருஷர் என் பது என் அபிப்பிராயம்.
किञ्च —
மேலும்
अनादिमध्यान्तमनन्तवीर्यमनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥ १९ ॥
அனாதிமத்யாந்தமனந்தவீர்ய மநந்தபாஹும் சசிஸூர்ய நேத்ரம் ।
பச்யாமி த்வாம் தீப்தஹுதாச வக்த்ரம் ஸ்வதேஜஸா விச்வமி தம் தபந்தம் ॥ 19 ॥
अनादिमध्यान्तम् आदिश्च मध्यं च अन्तश्च न विद्यते यस्य सः अयम् अनादिमध्यान्तः तं त्वां अनादिमध्यान्तम् , अनन्तवीर्यं न तव वीर्यस्य अन्तः अस्ति इति अनन्तवीर्यः तं त्वाम् अनन्तवीर्यम् , तथा अनन्तबाहुम् अनन्ताः बाहवः यस्य तव सः त्वम् , अनन्तबाहुः तं त्वाम् अनन्तबाहुम् , शशिसूर्यनेत्रं शशिशूर्यौ नेत्रे यस्य तव सः त्वं शशिसूर्यनेत्रः तं त्वां शशिसूर्यनेत्रं चन्द्रादित्यनयनम् , पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं दीप्तश्च असौ हुताशश्च वक्त्रं यस्य तव सः त्वं दीप्तहुताशवक्त्रः तं त्वां दीप्तहुताशवक्त्रम् , स्वतेजसा विश्वम् इदं समस्तं तपन्तम् ॥ १९ ॥
எவருக்கு ஆதியும், மத்தியில் இருப்பதும், முடிவும் கிடையாதோ அவர் அநாதிமத்யாந்தர். அந்த அநாதி மத்யாந்தராகவும், தங்களுக்கு வீரத்தினுடைய முடிவு கிடையாது. ஆகையால் அநந்த வீர்யம். நீங்கள் அந்த அநந்தவீர்யராகவும், எவருக்கு முடிவில்லாத கைகள் இருக்கிறதோ அவர் அநந்த பாஹு, அந்த அநந்த பாஹுவா கவும் எவருக்கு சூரியனும் சந்திரனும் கண்களோ அவர் சசிசூர்ய நேத்ரன். அந்த சசிசூர்ய நேத்திரராகவும், ஜ்வலிக்கின்றஅக்னியை முகமாக உடையவராய் இந்த பிரபஞ்சத்தைத் தபிக்கச் செய்கிறவராய் தங்களைப் பார்க்கிறேன்.
द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमिदं तवोग्रं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥ २० ॥
த்யாவா-ப்ருதிவ்யோரிதமந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேன திசச்ச ஸர்வா: ।
த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன் ॥ 20 ॥
द्यावापृथिव्योः इदम् अन्तरं हि अन्तरिक्षं व्याप्तं त्वया एकेन विश्वरूपधरेण दिशश्च सर्वाः व्याप्ताः ।
விண் உலகிற்கும், இந்த பிருதிவி உலகத்திற்கும் இடையில் உள்ள இடமும் எல்லா திக்குகளும் ஆகிய எல்லாம் விச்வரூபராகிய தங்கள் ஒருவராலேயே வியாபிக்கப்பட்டுள்ளது.
दृष्ट्वा उपलभ्य अद्भुतं विस्मापकं रूपम् इदं तव उग्रं क्रूरं लोकानां त्रयं लोकत्रयं प्रव्यथितं भीतं प्रचलितं वा हे महात्मन् अक्षुद्रस्वभाव ॥ २० ॥
ஹே மஹாத்மன்! என்றால் ஈனத்தன்மை அற்றவனே! தங்களு டைய ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய தங்களது கோரரூபமானது இந்த மூவுலகத்தையும் பயமுறச் செய்கிறது.
இனி இப்பொழுது நாங்கள் அவர்களை வெற்றி கொள்வோமோ? அல்லது அவர்கள் எங்களை வெற்றி கொள்வார்களோ? என்றசந்தே ஹம் முன்பு அர்ஜுனனுக்கு இருந்தது. அதை தீர்த்து வைப்பதற்காக பாண்டவர்களுடைய வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறேன் என்று முற்பட்ட பொழுது அந்த பகவானைப் பார்த்து கூறினார்.
किञ्च —
மேலும்
अमी हि त्वा सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृणन्ति ।
स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः ॥ २१ ॥
அமீஹித்வா ஸுரஸுங்கா விசந்தி கேசித்பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி ।
ஸ்வஸ்தீத்-யுக்த்வா மஹர்ஷி ஸித்த ஸங்கா: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: ॥ 21 ॥
अमी हि युध्यमाना योद्धारः त्वा त्वां सुरसङ्घाः ये अत्र भूभारावताराय अवतीर्णाः वस्वादिदेवसङ्घाः मनुष्यसंस्थानाः त्वां विशन्ति प्रविशन्तः दृश्यन्ते । तत्र केचित् भीताः प्राञ्जलयः सन्तो गृणन्ति स्तुवन्ति त्वाम् अन्ये पलायनेऽपि अशक्ताः सन्तः ।
போர் செய்வோர் வீரர்களாய் பூமியின் பாரத்தை இறக்குவதற் காக வசுக்கள் முதலிய தேவர்கூட்டங்கள் மனிதர்களாய் அவதாரம் செய்தவர்கள் உன்னிடம் நுழைவதாய் காணப்படுகிறார்கள். அவர்க ளுள் மற்றசிலர் ஓட முடியாதவர்களாய் பயத்துடன் கை கூப்பியவர்க ளாய் தங்களை துதிசெய்கிறார்கள்.
युद्धे प्रत्युपस्थिते उत्पातादिनिमित्तानि उपलक्ष्य स्वस्ति अस्तु जगतः इति उक्त्वा महर्षिसिद्धसङ्घाः महर्षीणां सिद्धानां च सङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः सम्पूर्णाभिः ॥ २१ ॥
யுத்தத்தில் தோன்றின உத்பாதம் முதலிய கெட்ட சகுணங்களை பார்த்து பிரபஞ்சத்திற்கு மங்களம் உண்டாகட்டும் என்று மஹரிஷி கூட்டங்களும் சித்தர் கூட்டங்களும் ஸ்தோத்ரங்களினால் சம்பூர்ண மாக துதிசெய்கிறார்கள்.
किञ्चान्यत् —
மேலும் மற்றவை-
रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेऽश्विनौ मरुतश्चोष्मपाश्च ।
गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे ॥ २२ ॥
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா விச்வே அச்வினௌ மருதச்சோஷ்மபாச்ச ।
கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்சைவ ஸர்வே ॥ 22 ॥
रुद्रादित्याः वसवो ये च साध्याः रुद्रादयः गणाः विश्वेदेवाः अश्विनौ च देवौ मरुतश्च ऊष्मपाश्च पितरः, गन्धर्वयक्षासुरसिद्धसङ्घाः गन्धर्वाः हाहाहूहूप्रभृतयः यक्षाः कुबेरप्रभृतयः असुराः विरोचनप्रभृतयः सिद्धाः कपिलादयः तेषां सङ्घाः गन्धर्वयक्षासुरसिद्धसङ्घाः, ते वीक्षन्ते पश्यन्ति त्वां विस्मिताः विस्मयमापन्नाः सन्तः ते एव सर्वे ॥ २२ ॥
ருத்ர, ஆதித்ய, வசு, சாத்தியர் முதலிய தேவகணங்களும் அவ்வாறேவிச்வதேவர், இரு அச்வினிகுமாரர்கள், வாயுதேவன், ஊஷ்மா என்றபித்ருகணங்கள் அவ்வாறேகந்தர்வ யக்ஷ, அசுர, சித்தர் கூட்டங்கள் ஹா ஹா, ஹு, ஹூ முதலிய கந்தர்வர்கள், குபேர முதலிய யக்ஷர்கள், விரோச்சனன் முதலிய அசுரர்கள், கபிலர் முதலிய சித்தர்கள் இவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
यस्मात् —
௪ஞ்சயன் கூறுனார்
रूपं महत्ते बहुवक्त्रनेत्रं महाबाहो बहुबाहूरुपादम् ।
बहूदरं बहुदंष्ट्राकरालं दृष्ट्वा लोकाः प्रव्यथितास्तथाहम् ॥ २३ ॥
ரூபம் மஹத்தே பஹுவக்த்ர-நேத்ரம் மஹாபாஹோ பஹு பாஹூருபாதம் ।
பஹூதரம் பஹு-தம்ஷ்ட்ராகராலம் த்ருஷ்ட்வா லோகா:ப்ரவ்யதிதாஸ்-ததாஹம் ॥ 23 ॥
रूपं महत् अतिप्रमाणं ते तव बहुवक्त्रनेत्रं बहूनि वक्त्राणि मुखानि नेत्राणि चक्षूंषि च यस्मिन् तत् रूपं बहुवक्त्रनेत्रम् , हे महाबाहो, बहुबाहूरुपादं बहवो बाहवः ऊरवः पादाश्च यस्मिन् रूपे तत् बहुबाहूरुपादम् , किञ्च, बहूदरं बहूनि उदराणि यस्मिन्निति बहूदरम् , बहुदंष्ट्राकरालं बह्वीभिः दंष्ट्राभिः करालं विकृतं तत् बहुदंष्ट्राकरालम् , दृष्ट्वा रूपम् ईदृशं लोकाः लौकिकाः प्राणिनः प्रव्यथिताः प्रचलिताः भयेन ; तथा अहमपि ॥ २३ ॥
ஹே மஹாபாஹோ! உங்களுடைய உருவம் மிகப்பெரியது. அநேக முகங்களையும் அநேக கண்களையும் அநேக கைகளையும் துடைகளையும் அநேக பாதங்களையும் மேலும் பலவயிறுகளையும், பல விகாரமான பற்களை உடையவராய் இவ்வாறு பயங்கரமாக உள்ள உங்களது தோற்றத்தைப் பார்த்து உலகில் உள்ளவர்களும், நானும் பயத்தினால் நடுங்குகிறோம்.
तत्रेदं कारणम् —
அதில் இதுவே காரணமாய் இருக்கிறது-
नभःस्पृशं दीप्तमनेकवर्णं व्यात्ताननं दीप्तविशालनेत्रम् ।
दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो ॥ २४ ॥
நப: ஸ்ப்ருசம் தீப்தமனேகவர்ணம் வ்யாத்தனனம் தீப்தவிசாலநேத்ரம் ।
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தராத்மா த்ருதிம் ந விந்தாமி சமம் ச விஷ்ணோ ॥ 24 ॥
नभःस्पृशं द्युस्पर्शम् इत्यर्थः, दीप्तं प्रज्वलितम् , अनेकवर्णम् अनेके वर्णाः भयङ्कराः नानासंस्थानाः यस्मिन् त्वयि तं त्वाम् अनेकवर्णम् , व्यात्ताननं व्यात्तानि विवृतानि आननानि मुखानि यस्मिन् त्वयि तं त्वां व्यात्ताननम् , दीप्तविशालनेत्रं दीप्तानि प्रज्वलितानि विशालानि विस्तीर्णानि नेत्राणि यस्मिन् त्वयि तं त्वां दीप्तविशालनेत्रं दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा प्रव्यथितः प्रभीतः अन्तरात्मा मनः यस्य मम सः अहं प्रव्यथितान्तरात्मा सन् धृतिं धैर्यं न विन्दामि न लभे शमं च उपशमनं मनस्तुष्टिं हे विष्णो ॥ २४ ॥
தாங்கள் ஆகாசம் தொட்டீர்கள் என்றால் ஆகாசம் வரையிலும் வியாபித்துப் பிரகாசிக்கின்றீர்கள், அநேகவிதமான வர்ணங்களுடன் கூடிய பயங்கர தோற்றத்தை உடையவராகவும், அநேக முகங்கள் வியாபித்ததாயும், ஜ்வலிக்கின்றவிசாலமான அநேக கண்களுடையவ ராகவும், உள்ள ரூபத்தைப் பார்த்து ஹே விஷ்ணு! நான் மிகவும் பயத் தினால் வியாகூலமான மனத்தினனாய் இருந்துகொண்டு தைரியத் தையோ ஆனந்தமாகிய சாந்தியையோ அடையாதாவனாய் இருக்கிறேன்.
कस्मात् —
ஏன் எனில்-
दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्वैव कालानलसंनिभानि ।
दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास ॥ २५ ॥
தம்ஷ்ட்ராகராலானி ச தே முகானி த்ருஷ்ட்வைவ காலானல -ஸந்நிபானி ।
திசோ ந ஜானே ந லபே ச சர்ம ப்ரஸீத தேவேச ஜகந்நிவாஸ ॥ 25 ॥
दंष्ट्राकरालानि दंष्ट्राभिः करालानि विकृतानि ते तव मुखानि दृष्ट्वैव उपलभ्य कालानलसंनिभानि प्रलयकाले लोकानां दाहकः अग्निः कालानलः तत्सदृशानि कालानलसंनिभानि मुखानि दृष्ट्वेत्येतत् । दिशः पूर्वापरविवेकेन न जाने दिङ्मूढो जातः अस्मि । अतः न लभे च न उपलभे च शर्म सुखम् । अतः प्रसीद प्रसन्नो भव हे देवेश, जगन्निवास ॥ २५ ॥
வக்ரமான பற்களினால் விகாரமானதும் பிரளயகாலத்தில் உலகங்களை தஹிக்கும் காலாக்கினிக்கு ஒப்பானதுமான முகங்களைப் பார்த்ததும் எது கிழக்கு, மேற்கு என்றவிவேகமற்றதிசைகளை அறிவ தில் மூடனாக உள்ளேன். நான் சுகத்தையும் அடையவில்லை. ஹே! தேவேச! ஜகந்நிவாஸ! ஆகையால் என்னை ரக்ஷி த்து பிரசன்னமாக வேண்டுகிறேன்.
येभ्यो मम पराजयाशङ्का या आसीत् सा च अपगता । यतः —
எவர்களிடம் இருந்து எனக்கு தோல்வி வருமோ என்ற சந்தேகம் இருந்ததோ அது நீங்கிவிட்டது. ஆகையால் -
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः ।
भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः ॥ २६ ॥
அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வே ஸஹைவாவனிபாலஸங்கை: ।
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ்ததாஸௌ ஸஹாஸ்மதீயை ரபி யோதமுக்யை: ॥ 26 ॥
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः दुर्योधनप्रभृतयः — ‘त्वरमाणाः विशन्ति’ इति व्यवहितेन सम्बन्धः — सर्वे सहैव सहिताः अवनिपालसङ्घैः अवनिं पृथ्वीं पालयन्तीति अवनिपालाः तेषां सङ्घैः, किञ्च भीष्मो द्रोणः सूतपुत्रः कर्णः तथा असौ सह अस्मदीयैरपि धृष्टद्युम्नप्रभृतिभिः योधमुख्यैः योधानां मुख्यैः प्रधानैः सह ॥ २६ ॥
திருதராஷ்ட்ரரின் புத்திரர்களாகிய துரியோதனன் முதலியோர் கள் மற்றஉலகை ஆளுகின்றவர்கள் கூட்டத்துடன் வேகமாக உன் னுள் நுழைகிறார்கள் என்பது அடுத்து வரும் சுலோகத்துடன் சம்பந் தம் ஏற்படுகிறது. மேலும், பீஷ்மர், துரோணர், சூதபுத்திரராகிய கர் ணன், அவ்வாறேத்ருஷ்டத்யும்னன் முதலியோரும் யுத்தம் செய்பவர் களுள் முக்கியமானவர்களுடன் -26-
किञ्च —
மேலும்
वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि ।
केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः ॥ २७ ॥
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி தம்ஷ்ட்ராகராலானி பயானகாநி ।
கேசித் விலக்னா தசநாந்தரே ஷு ஸம்த்ருச்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: ॥ 27 ॥
वक्त्राणि मुखानि ते तव त्वरमाणाः त्वरायुक्ताः सन्तः विशन्ति, किंविशिष्टानि मुखानि ? दंष्ट्राकरालानि भयानकानि भयङ्कराणि ।
உம்முடைய வக்கிரமான மற்றும் பயங்கரமானதுமான வாய்களில் பயத்துடன் வேகமாக புகுகிறார்கள்.
किञ्च, केचित् मुखानि प्रविष्टानां मध्ये विलग्नाः दशनान्तरेषु मांसमिव भक्षितं सन्दृश्यन्ते उपलभ्यन्ते चूर्णितैः चूर्णीकृतैः उत्तमाङ्गैः शिरोभिः ॥ २७ ॥
மேலும் வாயினுள் நுழைந்தவர்களில் சிலர் பற்களின் இடைகளில் அகப்பட்டு நன்றாக மாமிசம் போல் மெல்லப்பட்டு பொடிப்பொடியாக தலைகளுடன் சிதைந்த உடல்களைப் பார்க்கிறேன். - 27
कथं प्रविशन्ति मुखानि इत्याह —
எவ்வாறு முகங்களில் பிரவேசிக்கின்றார்கள் என்பது கூறுகிறார் —
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति ।
तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति ॥ २८ ॥
யதா நதீனாம் பஹவோஅம்புவேகா: ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி ।
ததா தவாமீ நரலோக வீரா விசந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி ॥ 28 ॥
यथा नदीनां स्रवन्तीनां बहवः अनेके अम्बूनां वेगाः अम्बुवेगाः त्वराविशेषाः समुद्रमेव अभिमुखाः प्रतिमुखाः द्रवन्ति प्रविशन्ति, तथा तद्वत् तव अमी भीष्मादयः नरलोकवीराः मनुष्यलोके शूराः विशन्ति वक्त्राणि अभिविज्वलन्ति प्रकाशमानानि ॥ २८ ॥
எவ்வாறு ஓடுகின்றநதிகள் ஜலப்பிரவாஹத்துடன் வெகு வேகமாக சமுத்திரத்தையே நோக்கி ஓடுகின்றனவோ (செல்கின்றன வோ) அவ்வாறு இந்த மனிதகுலத்தின் வீரர்களாகிய பீஷ்மர் முதலி யோர் தங்களுடைய வாயினுள் பிரவேசிக்கின்றார்கள்.
ते किमर्थं प्रविशन्ति कथं च इत्याह —
எதன் பொருட்டு எவ்வாறு மேல் கூறினவர்கள் பிரவேசிக்கின் றார்கள் என்று கூறுகிறார்-
यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः ।
तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥
யதா ப்ரதீப்தம் ஜ்வலனம் பதங்கா விசந்தி நாசாய ஸம்ருத்தவேகா: ।
ததைவ நாசாய விசந்தி லோகாஸ் தவாபி வக்த்ராணி ஸம்ருத்த வேகா: ॥ 29 ॥
यथा प्रदीप्तं ज्वलनम् अग्निं पतङ्गाः पक्षिणः विशन्ति नाशाय विनाशाय समृद्धवेगाः समृद्धः उद्भूतः वेगः गतिः येषां ते समृद्धवेगाः, तथैव नाशाय विशन्ति लोकाः प्राणिनः तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥ २९ ॥
எவ்வாறு விட்டில் பூச்சிகள் தன் நாசத்தின் பொருட்டு ஜொலிக்கின்ற நெருப்பில் வேகமாக பிரவேசிக்கின்றனவோ அவ்வாறே பிராணிகள் தங்கள் நாசத்தின் பொருட்டு தங்களின் வாயினுள் நுழைகிறார்கள்.
त्वं पुनः —
மேலும் தாங்கள்
लेलिह्यसे ग्रसमानः समन्ताल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भिः ।
तेजोभिरापूर्य जगत्समग्रं भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो ॥ ३० ॥
லேலிஹ்யஸே க்ரஸமான: ஸமந்தால்லோகாந்ஸமக்ராந்வதனைர்ஜ்வலத்பி: ।
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் பாஸஸ்தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ ॥ 30 ॥
लेलिह्यसे आस्वादयसि ग्रसमानः अन्तः प्रवेशयन् समन्तात् समन्ततः लोकान् समग्रान् समस्तान् वदनैः वक्त्रैः ज्वलद्भिः दीप्यमानैः तेजोभिः आपूर्य संव्याप्य जगत् समग्रं सह अग्रेण समस्तम् इत्येतत् । किञ्च, भासः दीप्तयः तव उग्राः क्रूराः प्रतपन्ति प्रतापं कुर्वन्ति हे विष्णो व्यापनशील ॥ ३० ॥
ஒளிர்விட்டு எரிகின்றவாய்களால் இந்த உலகம் முழுவதையும் விழுங்கி ருசி பார்க்கின்றீர்கள். அந்த ஒளிர்கின்றநெருப்பால் உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறீர்கள். ஹே! விஷ்ணு! எங்கும் வியா பித்திருப்பவரே, மேலும் அந்த ஒளிக்கதிர் மிகவும் கொடுமையாக தபிக்கச் செய்கிறது.
यतः एवमुग्रस्वभावः, अतः —
ஏன் எனில் தாங்கள் கடுமையான சுபாவமுள்ளவராய் இருக்கிறீர் ஆகையால்-
आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥ ३१ ॥
ஆக்யாஹி-மே கோ பவானுக்ரரூபோ நமோஅஸ்து தே தேவவர ப்ரஸீத ।
விக்ஞாது மிச்சாமி பவந்த-மாத்யம் ந ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்ருத்திம் ॥ 31 ॥
आख्याहि कथय मे मह्यं कः भवान् उग्ररूपः क्रूराकारः, नमः अस्तु ते तुभ्यं हे देववर देवानां प्रधान, प्रसीद प्रसादं कुरु । विज्ञातुं विशेषेण ज्ञातुम् इच्छामि भवन्तम् आद्यम् आदौ भवम् आद्यम् , न हि यस्मात् प्रजानामि तव त्वदीयां प्रवृत्तिं चेष्टाम् ॥ ३१ ॥
உக்ரமான ரூபமாய் உள்ள தாங்கள் யார் என்பதை எனக்கு கூறுங்கள். ஹே! தேவர்களுள் சிறந்தவனே! தங்களுக்கு வணக்கம். தாங்கள் கிருபை செய்யுங்கள். சிருஷ்டிக்கு எல்லாம் ஆதியாய் இருக் கும் தங்களை விசேஷமாக அறிய விரும்புகிறேன். ஏனெனில் தங்களு டைய செயல்களை நான் அறியவில்லை.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்—
कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धो लोकान्समाहर्तुमिह प्रवृत्तः ।
ऋतेऽपि त्वा न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु योधाः ॥ ३२ ॥
காலோ அஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்தோ லோகான்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: ।
ருதேஅபி த்வா ந பவிஷ்யந்தி ஸர்வே யேஅவஸ்திதா: ப்ரத்யநீகேஷு யோதா: ॥ 32 ॥
कालः अस्मि लोकक्षयकृत् लोकानां क्षयं करोतीति लोकक्षयकृत् प्रवृद्धः वृद्धिं गतः । यदर्थं प्रवृद्धः तत् शृणु — लोकान् समाहर्तुं संहर्तुम् इह अस्मिन् काले प्रवृत्तः । ऋतेऽपि विनापि त्वा त्वां न भविष्यन्ति भीष्मद्रोणकर्णप्रभृतयः सर्वे, येभ्यः तव आशङ्का, ये अवस्थिताः प्रत्यनीकेषु अनीकमनीकं प्रति प्रत्यनीकेषु प्रतिपक्षभूतेषु अनीकेषु योधाः योद्धारः ॥ ३२ ॥
உலகங்களை அழிப்பதற்காக பெரிதாக விருத்தி அடைந்த கால னாக இருக்கிறேன். எதன் பொருட்டு நான் பெருகி விருத்தி அடைந்து உள்ளேன் என்பதைக் கேள். நான் இந்த சமயத்தில் உலகங்களை சம்ஹாரம் செய்வதற்காக ஈடுபட்டுள்ளேன். ஆகையால் எந்த பீஷ் மர், த்ரோணர், கர்ணன் முதலிய சூர வீரர்களாய் எவர்களிடத்தில் உனக்கு சந்தேஹமுள்ளதோ அந்த எதிரி சேனையில் உள்ளோர் அனைவரையும் உன் சகாயம் இல்லாமலே நாசம் செய்து விடுவேன்.
यस्मात् एवम् —
எதனால் இவ்வாறு
तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून्भुङ्क्ष्व राज्यं समृद्धम् ।
मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन् ॥ ३३ ॥
தஸ்மாத்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ ஜித்வா சத்ரூன்புங்க்ஷக்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம் ।
மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசின் ॥ 33 ॥
तस्मात् त्वम् उत्तिष्ठ ‘भीष्मप्रभृतयः अतिरथाः अजेयाः देवैरपि, अर्जुनेन जिताः’ इति यशः लभस्व ; केवलं पुण्यैः हि तत् प्राप्यते । जित्वा शत्रून् दुर्योधनप्रभृतीन् भुङ्क्ष्व राज्यं समृद्धम् असपत्नम् अकण्टकम् ।
ஆகையால் நீ எழுந்திருப்பாயாக. தேவர்களாலும் வெல்லமுடி யாத பீஷ்மர், த்ரோணர் முதலிய அதிரதர்களை அர்ஜுனன் வென் றான் என்றபுண்யங்களினால் மட்டுமே கிடைக்கும் புகழ் உனக்கு கிடைக்கும். துரியோதனன் முதலிய சத்ருக்களை வென்று எதிரிக ளற்றராஜ்ஜியம் முழுவதையும் அனுபவிப்பாயாக.
मया एव एते निहताः निश्चयेन हताः प्राणैः वियोजिताः पूर्वमेव । निमित्तमात्रं भव त्वं हे सव्यसाचिन् , सव्येन वामेनापि हस्तेन शराणां क्षेप्ता सव्यसाची इति उच्यते अर्जुनः ॥ ३३ ॥
என்னால் முன்பே அவர்களுடைய பிராணன்கள் நிச்சயமாக இல்லாமல் செய்யப்பட்டது. இடது கைகளாலும் பாணங்களை விடுவ தில் சாமர்த்தியம் உள்ளவனே! நீ நிமித்தமாத்திரமாய் இரு.
द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् ।
मया हतांस्त्वं जहि मा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान् ॥ ३४ ॥
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச கர்ணம் ததாந்யானபி யோதவீரான் ।
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்னான் ॥ 34 ॥
द्रोणं च, येषु येषु योधेषु अर्जुनस्य आशङ्का तांस्तान् व्यपदिशति भगवान् , मया हतानिति ।
த்ரோணர் முதலிய எந்த எந்த யுத்த வீரர்களிடத்தில் சந்தேஹம் இருந்ததோ அந்த அந்த வீரர்களுடைய பெயரைக் குறிப்பிட்டு பகவான் அவர்களை நான் கொன்றுவிட்டேன் என்று குறிப்பிடுகிறார்.
तत्र द्रोणभीष्मयोः तावत् प्रसिद्धम् आशङ्काकारणम् । द्रोणस्तु धनुर्वेदाचार्यः दिव्यास्त्रसम्पन्नः, आत्मनश्च विशेषतः गुरुः गरिष्ठः । भीष्मश्च स्वच्छन्दमृत्युः दिव्यास्त्रसम्पन्नश्च परशुरामेण द्वन्द्वयुद्धम् अगमत् , न च पराजितः ।
அங்கு பீஷ்மதுரோணாதிகளிடம் உள்ள விசேஷமான பயத்தின் காரணம் என்னவெனில், த்ரோணாச்சாரியார் திவ்யமான ஆயுதங் களை உடையவர். தன்னுடைய பிரியமான பிரதான குரு. பீஷ்மரோ வனில் மிகவும் பெரியவர். தன்னிச்சைப்படி தன்னுடைய மரணத்தை எதிர்கொள்பவர். திவ்யமான ஆயுதங்களை உடையவர். மேலும் பரசுராமருடன் துவந்துவ யுத்தம் செய்து அவரிடம் தோல்வி அடையாதவர்.
तथा जयद्रथः, यस्य पिता तपः चरति ‘मम पुत्रस्य शिरः भूमौ निपातयिष्यति यः, तस्यापि शिरः पतिष्यति’ इति ।
அவ்வாறேஜயத்ரதனுடைய தந்தையும் தன் மகனுடைய தலையை எவர் பூமியில் விழச் செய்பவரோ அவருடைய தலையும் கீழே விழவேண்டும் என்று தபஸ் செய்கிறார்.
कर्णोऽपि वासवदत्तया शक्त्या त्वमोघया सम्पन्नः सूर्यपुत्रः कानीनः यतः, अतः तन्नाम्नैव निर्देशः ।
கர்ணனும் இந்திரனிடமிருந்து பெற்றஅமோக (மிகுந்த) சக்தியுடையவனாய் இருக்கிறான். அவ்வாறேசூரியனுடைய மகன். இவன் கன்னிகைக்குப் பிறந்தவனாதலால் அந்தப் பெயராலேயே குறிப்பிடுகிறார்.
मया हतान् त्वं जहि निमित्तमात्रेण । मा व्यथिष्ठाः तेभ्यः भयं मा कार्षीः । युध्यस्व जेतासि दुर्योधनप्रभृतीन् रणे युद्धे सपत्नान् शत्रून् ॥ ३४ ॥
என்னால் கொல்லப்பட்டவர்களை நிமித்த மாத்திரமாகக் கொல். பயப்படாதே. யுத்தஞ்செய். யுத்தத்தில் துரியோதனன் முதலிய சத்ருக் களை வெல்வாய்.
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
एतच्छ्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी ।
नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य ॥ ३५ ॥
ஏதச்ச்ருத்வா வசனம் கேசவஸ்ய க்ருதாஞ்ஜலிர்வேபமான: கிரீடீ ।
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம் ஸகத்கதம் பீத பீத: ப்ரணம்ய ॥ 35 ॥
एतत् श्रुत्वा वचनं केशवस्य पूर्वोक्तं कृताञ्जलिः सन् वेपमानः कम्पमानः किरीटी नमस्कृत्वा, भूयः पुनः एव आह उक्तवान् कृष्णं सगद्गदं ।
கேசவனுடைய முன்பு கூறப்பட்ட இந்த வசனத்தைக் கேட்டு க்ரீ டத்தை அணிந்த அர்ஜுனன் நடுங்கினவனாய் கைகூப்பி வணங்கி மறுபடியும் கிருஷ்ணரைப் பார்த்து விக்கித்து விக்கித்து பேசலானான்.
भयाविष्टस्य दुःखाभिघातात् स्नेहाविष्टस्य च हर्षोद्भवात् , अश्रुपूर्णनेत्रत्वे सति श्लेष्मणा कण्ठावरोधः ; ततश्च वाचः अपाटवं मन्दशब्दत्वं यत् स गद्गदः तेन सह वर्तत इति सगद्गदं वचनम् आह इति वचनक्रियाविशेषणम् एतत् । भीतभीतः पुनः पुनः भयाविष्टचेताः सन् प्रणम्य प्रह्वः भूत्वा, ‘आह’ इति व्यवहितेन सम्बन्धः ।
பயத்துடன் கூடினவனும் துக்கத்தினால் தாக்கப்பட்டாலும், சிநேஹத்தினால் சந்தோஷம் உண்டாவதாலும் கண்களில் கண்ணீர் நிரம்பி தொண்டையில் கபம் அடைப்பதால் குரல் மந்தப்படும். அந்த மந்தக் குரலுடன் பேசுவது சகத்கதம் (விக்கித்து விக்கித்து பேசுவது) எனப்படும். பயத்தினால் வியாபிக்கப்பட்ட மனதினனாய் மறுபடியும் மறுபடியும் வணங்கிப் பேசலா னான். (आह--ஆஹ) என்பது பேசுத லென்னும் வினைக்கு விசேஷணம் என்க. (வணங்கி என்பதனோடு சம்பந்தம்)
अत्र अवसरे सञ्जयवचनं साभिप्रायम् । कथम् ? द्रोणादिषु अर्जुनेन निहतेषु अजेयेषु चतुर्षु, निराश्रयः दुर्योधनः निहतः एव इति मत्वा धृतराष्ट्रः जयं प्रति निराशः सन् सन्धिं करिष्यति, ततः शान्तिः उभयेषां भविष्यति इति । तदपि न अश्रौषीत् धृतराष्ट्रः भवितव्यवशात् ॥ ३५ ॥
இந்த சமயத்தில் சஞ்சயனுடைய கூற்றில் உள்கருத்து உள்ளது. எவ்வாறெனில், துரோணர் முதலிய நால்வரையும் அர்ஜுனனால் மர ணம் ஏற்பட்டு தோல்வி அடைந்ததால் துரியோதனன் ஆசிரயமற்று கொல்லப்படுவான் என்று திருதராஷ்ட்ரன் வெற்றி அடைவதில் ஆசையற்று சமாதானம் செய்துகொள்வான். அதனால் இருபக்கத்தா ருக்கும் சாந்தி ஏற்படும் என்று. ஆனால் விதிவசத்தால் திருதராஷ்ட் ரன் அதனையும் கேட்கவில்லை.
अर्जुन उवाच —
அர்ஜுனன் பே௪லானான்.
स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च ।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः ॥ ३६ ॥
ஸ்தானே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்யா ஜகத் ப்ரஹ்ருஷ்யத்யனுரஜ்யதே ச ।
ரக்ஷாம்ஸி பீதானி திசோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா: ॥ 36 ॥
स्थाने युक्तम् । किं तत् ? तव प्रकीर्त्या त्वन्माहात्म्यकीर्तनेन श्रुतेन, हे हृषीकेश, यत् जगत् प्रहृष्यति प्रहर्षम् उपैति, तत् स्थाने युक्तम् , इत्यर्थः ।
பொருத்தமானது? அது எது? ஹே! ஹ்ருஷீகேசனே! தங்களுடைய மஹிமைகளை கீர்த்தனம், சிரவணம் (கேட்டல்) செய்வ தால் ஜகத்தானது மகிழ்ச்சியை அடைகிறது. அது பொருத்தமானது என்பது பொருள்.
अथवा विषयविशेषणं स्थाने इति । युक्तः हर्षादिविषयः भगवान् , यतः ईश्वरः सर्वात्मा सर्वभूतसुहृच्च इति ।
இந்த இடத்தில் ஸ்தானம் (பொருத்தம்) என்றபதத்தை விஷயத் தினுடைய விசேஷணமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பகவான் மகிழ்ச்சி முதலிய விஷயங்களுக்கும் பொருத்தமானவர் என்று எடுத் துக்கொள்வதும் சரியே. ஏன் எனில் ஈஸ்வரன் எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாகவும் எல்லா பூதங்களுக்கும் சுஹிருதமாக இருக்கிறார்.
तथा अनुरज्यते अनुरागं च उपैति ; तच्च विषये इति व्याख्येयम् । किञ्च, रक्षांसि भीतानि भयाविष्टानि दिशः द्रवन्ति गच्छन्ति ; तच्च स्थाने विषये । सर्वे नमस्यन्ति नमस्कुर्वन्ति च सिद्धसङ्घाः सिद्धानां समुदायाः कपिलादीनाम् , तच्च स्थाने ॥ ३६ ॥
அவ்வாறே பகவானாகிய தங்களிடத்தில் உலகமானது பிரேமை யைச் செய்கிறது. அந்த பொருத்தமான விஷயத்திலேயே (தங்களை யே) அடைகிறது. மேலும் ராக்ஷசர்கள் பயத்தினால் வியாபிக்கப்பட்ட வர்களாகி திசைகளை நோக்கி ஓடுகிறார்கள். அதுவும் அந்த பொருத் தமான விஷயத்தை நோக்கியே. சித்தர்களாகிய கபிலர் முதலியோர் அடங்கிய கூட்டமெல்லாம் பொருத்தமான விஷயமாகிய தங்களை நோக்கியே வணங்குகிறார்கள்.
भगवतो हर्षादिविषयत्वे हेतुं दर्शयति —
பகவான் மகிழ்ச்சி முதலியவற்றிற்கு பொருத்தமான விஷயம் என்பதின் காரணத்தைக் கூறுகிறார்.
कस्माच्च ते न नमेरन्महात्मन्गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे ।
अनन्त देवेश जगन्निवास त्वमक्षरं सदसत्तत्परं यत् ॥ ३७ ॥
கஸ்மாச்ச தே ந நமேரன் மஹாத்மன் கரீயஸே ப்ரஹ்மணோ அப்யாதிகர்த்ரே ।
அநந்த தேவேச ஜகந்நிவாஸ த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத் ॥ 37 ॥
कस्माच्च हेतोः ते तुभ्यं न नमेरन् नमस्कुर्युः हे महात्मन् , गरीयसे गुरुतराय ; यतः ब्रह्मणः हिरण्यगर्भस्य अपि आदिकर्ता कारणम् अतः तस्मात् आदिकर्त्रे । कथम् एते न नमस्कुर्युः ? अतः हर्षादीनां नमस्कारस्य च स्थानं त्वं अर्हः विषयः इत्यर्थः ।
ஹே பகவானே! நீங்கள் மிகப்பெரியவர். ஏன் எனில் ஹிரண்யகர் பருக்கும் ஆதிகர்த்தாவாகிய காரணமாய் இருப்பதால் நீங்கள் ஆதி கர்த்தா. உங்களை எதனால் நமஸ்காரம் செய்யாமலிருப்பார்கள்? ஆகையால் மகிழ்ச்சி முதலியவைகளுக்கும், நமஸ்காரத்திற்கும் தாங்கள் உரியவரே (பொருத்தமானவரே) என்பது பொருள்.
हे अनन्त देवेश हे जगन्निवास त्वम् अक्षरं तत् परम् , यत् वेदान्तेषु श्रूयते ।
ஹே அனந்தனே! தேவர்களுக்கெல்லாம் ஈசனே! ஜகன்னிவா சனே! தாங்கள் அழியாதவர். வேதாந்தங்களில் எது கேட்கப்படுகி றதோ அந்தப் பரம்பொருள் நீரே.
किं तत् ? सदसत् इति । सत् विद्यमानम् , असत् च यत्र नास्ति इति बुद्धिः ; ते उपधानभूते सदसती यस्य अक्षरस्य, यद्द्वारेण सदसती इति उपचर्यते । परमार्थतस्तु सदसतोः परं तत् अक्षरं यत् अक्षरं वेदविदः वदन्ति । तत् त्वमेव, न अन्यत् इति अभिप्रायः ॥ ३७ ॥
அது என்ன? அது சத், அசத். எது இருக்கிறதோ அது சத். எதில் இல்லை என்றபுத்தி ஏற்படுகிறதோ அது அசத். இந்த சத்தும், அசத் தும் அக்ஷரத்தின் உபாதியான காரணத்தினால் அந்த பிரஹ்மம் உபசாரமாக சத் அசத் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த சத், அசத்திற்கும் மேலானது. எதை வேதத்தை அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்களோ அந்த அக்ஷரம் தாங்களே. மற்றவை அல்ல என்று கூறுகிறார்கள் என்பது அபிப்பிராயம்.
पुनरपि स्तौति —
மறுபடியும் துதிசெய்கிறார்.
त्वमादिदेवः पुरुषः पुराणस्त्वमस्य विश्वस्य परं निधानम् ।
वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप ॥ ३८ ॥
த்வமாதிதேவ: புருஷ: புராணஸ்-த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் ।
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம த்வயா ததம் விச்வமநந்தரூப ॥ 38 ॥
त्वम् आदिदेवः, जगतः स्रष्टृत्वात् । पुरुषः, पुरि शयनात् पुराणः चिरन्तनः त्वम् एव अस्य विश्वस्य परं प्रकृष्टं निधानं निधीयते अस्मिन् जगत् सर्वं महाप्रलयादौ इति ।
உலகை சிருஷ்டி செய்ததால் தாங்களே ஆதிதேவன். சரீரமாகிய புரத்தில் வசிப்பதால் புருஷன். தாங்கள் எப்பொழுதும் இருப்பதால் புராதனர். தாங்களே இந்த விச்வத்திற்கெல்லாம் (உலகிற்கெல்லாம்) உத்தம ஸ்தானம் ஆகும். எவ்வாறெனில் மஹா பிரளய காலத்தில் இந்த உலகம் முழுவதும் தங்குமிடம்.
किञ्च, वेत्ता असि, वेदिता असि सर्वस्यैव वेद्यजातस्य । यत् च वेद्यं वेदनार्हं तच्च असि परं च धाम परमं पदं वैष्णवम् । त्वया ततं व्याप्तं विश्वं समस्तम् , हे अनन्तरूप अन्तो न विद्यते तव रूपाणाम् ॥ ३८ ॥
மேலும் அவ்வாறே அறியப்பட வேண்டிய பொருள்களை யெல்லாம் தாங்கள் அறிபவராய் இருக்கிறீர். அறியப்படவேண்டிய பொருள் எதுவோ அதுவும் தாங்களாகவே இருக்கின்றீர். மேலான வைஷ்ணவ பதமாக இருக்கின்றீர். தங்களால் இந்த உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய ரூபங்களுக்கு முடிவே கிடையாது.
किञ्च —
மேலும்
वायुर्यमोऽग्निर्वरुणः शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च ।
नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते ॥ ३९ ॥
வாயுர்யமோஅக்னிர்வருண: சசாங்க: ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹச்ச ।
நமோ நமஸ்தேஅஸ்து ஸஹஸ்ரக்ருத்வ: புனச்ச பூயோ அபி நமோ நமஸ்தே ॥ 39 ॥
वायुः त्वं यमश्च अग्निः वरुणः अपां पतिः शशाङ्कः चन्द्रमाः प्रजापतिः त्वं कश्यपादिः प्रपितामहश्च पितामहस्यापि पिता प्रपितामहः, ब्रह्मणोऽपि पिता इत्यर्थः । नमो नमः ते तुभ्यम् अस्तु सहस्रकृत्वः । पुनश्च भूयोऽपि नमो नमः ते ।
தாங்கள் வாயு, யமன், அக்னி, ஜலத்திற்கெல்லாம் ஈசனாகிய வருணன், சந்திரன். தங்கள் கச்யபாதி பிரஜாபதி, பாட்டனுக்கும் தகப்பன் அதாவது பிரம்மாவிற்கும் தகப்பன். உங்களுக்கு ஆயிரம் தடவை நமஸ்காரம், மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
बहुशो नमस्कारक्रियाभ्यासावृत्तिगणनं कृत्वसुचा उच्यते । ‘पुनश्च’ ‘भूयोऽपि’ इति श्रद्धाभक्त्यतिशयात् अपरितोषम् आत्मनः दर्शयति ॥ ३९ ॥
ஆயிரம் தடவை நமஸ்காரம் என்பதை அநேக தடவை நமஸ்கா ரம் என்று கொள்ளவேண்டும். மீண்டும், மீண்டும் என்று கூறி தனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்பதைக் காண்பிக்கிறார்.
तथा —
அவ்வாறே-
नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व ।
अनन्तवीर्यामितविक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः ॥ ४० ॥
நம: புரஸ்தாதத ப்ருஷ்டதஸ்தே நமோஅஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ ।
அனந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி ததோஅஸி ஸர்வ: ॥ 40 ॥
नमः पुरस्तात् पूर्वस्यां दिशि तुभ्यम् , अथ पृष्ठतः ते पृष्ठतः अपि च ते नमोऽस्तु, ते सर्वत एव सर्वासु दिक्षु सर्वत्र स्थिताय हे सर्व । अनन्तवीर्यामितविक्रमः अनन्तं वीर्यम् अस्य, अमितः विक्रमः अस्य ।
தங்களுக்கு கிழக்கு திசை நோக்கி நமஸ்காரம். அவ்வாறே பின் னாலிருந்து நமஸ்காரம். எல்லா திக்குகளிலும் இருக்கின்றதங்க ளுக்கு நமஸ்காரம். அளவிடமுடியாத வல்லமையை உடையவராக வும், மிகுந்த பராக்கிரமசாலியாயும் தாங்கள் இருக்கிறீர்கள்.
वीर्यं सामर्थ्यं विक्रमः पराक्रमः । वीर्यवानपि कश्चित् शत्रुवधादिविषये न पराक्रमते, मन्दपराक्रमो वा । त्वं तु अनन्तवीर्यः अमितविक्रमश्च इति अनन्तवीर्यामितविक्रमः ।
வீர்யம் என்றால் வல்லமை, பராக்கிரமம் என்றால் துணிவு, ஒருவ னுக்கு வல்லமை இருந்தாலும் சஸ்திர முதலியவைகளில் மிகுந்த துணிவு இருக்காது. துணிவானது மந்தமாக இருக்கும். ஆனால் நீங் கள் அளவற்றவல்லமையுடனும், அளவற்ற துணிவுடனும் இருக்கிறீர்கள். ஆகையால் தாங்கள் அநந்தவீர்ய, அமிதவிக்ரமர் எனப்படுகிறீர்.
सर्वं समस्तं जगत् समाप्तोषि सम्यक् एकेन आत्मना व्याप्नोषि यतः, ततः तस्मात् असि भवसि सर्वः त्वम् , त्वया विनाभूतं न किञ्चित् अस्ति इति अभिप्रायः ॥ ४० ॥
எவ்வாறு ஆத்மாவாகிய ஒன்றினால் ஜகத்து முழுவதையும் வியாபித்துள்ளதனால் நீங்கள் ஸகலமுமாக இருக்கிறீர்கள் நீங்களில்லாத ஒன்றும் இல்லை என்பது கருத்து.
यतः अहं त्वन्माहात्म्यापरिज्ञानात् अपराद्धः, अतः —
எதனால் தங்களுடைய மஹிமையை அறியாததினால் குற்றமுள் ளவனாக இருக்கிறேனோ அதனால்
सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति ।
अजानता महिमानं तवेदं मया प्रमादात्प्रणयेन वापि ॥ ४१ ॥
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி ।
அஜாந்தா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத்ப்ரணயேன வாபி ॥ 41 ॥
सखा समानवयाः इति मत्वा ज्ञात्वा विपरीतबुद्ध्या प्रसभम् अभिभूय प्रसह्य यत् उक्तं हे कृष्ण हे यादव हे सखेति च अजानता अज्ञानिना मूढेन ; किम् अजानता इति आह — महिमानं महात्म्यं तव इदम् ईश्वरस्य विश्वरूपम् ।
தங்களுடைய இந்த ஈஸ்வரராகிய உங்களுடைய விச்வரூபத் தின் மஹிமையை அறியாமையால் சமான வயதுடைய நண்ப னாய் நினைத்து என்னுடைய மூடத்தன்மையினாலும், விபரீதபுத்தியி னாலும் அசட்டையாக ஹே கிருஷ்ணா! ஹே யாதவா! ஹே நண்பா! என்று கூறப்பட்டதோ
‘तव इदं महिमानम् अजानता’ इति वैयधिकरण्येन सम्बन्धः । ‘तवेमम्’ इति पाठः यदि अस्ति, तदा सामानाधिकरण्यमेव ।
(தவ இதம் மஹிமானம் அஜானதா) என்னுமிடத்தில் இதம் என்றபதம் நபும்ஸகலிங்கம் (அஃறிணை) ஆகையால் இதற்கு வியாக ரணத்தில் விசேஷ்ய, விசேஷண பாவ சம்பந்தமிருக்கிறது. (இதம்) என்றபதத்திற்கு பதிலாக (இமம்) என்றபாடம் இருந்தால் அது சமா னாதி கரண சம்மந்தம் ஆகும்.
मया प्रमादात् विक्षिप्तचित्ततया, प्रणयेन वापि, प्रणयो नाम स्नेहनिमित्तः विस्रम्भः तेनापि कारणेन यत् उक्तवान् अस्मि ॥ ४१ ॥
அல்லது அறியாமையினால் ஏற்பட்ட சித்தகலக்கத்தினாலும் சிநேகத்தினால் உண்டான அன்பின் (விச்வாசத்தின்) காரணத்தினா லும் நான் கூறினவனாக உள்ளேன்.
यच्चावहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासनभोजनेषु ।
एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् ॥ ४२ ॥
யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோ அஸி விஹாரசய்யாஸனபோஜனே ஷு ।
ஏகோஅதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹ மப்ரமேயம் ॥ 42 ॥
यच्च अवहासार्थं परिहासप्रयोजनाय असत्कृतः परिभूतः असि भवसि ; क्व ? विहारशय्यासनभोजनेषु, विहरणं विहारः पादव्यायामः, शयनं शय्या, आसनम् आस्थायिका, भोजनम् अदनम् , इति एतेषु विहारशय्यासनभोजनेषु, एकः परोक्षः सन् असत्कृतः असि परिभूतः असि ; अथवापि हे अच्युत, तत् समक्षम् , तच्छब्दः क्रियाविशेषणार्थः, प्रत्यक्षं वा असत्कृतः असि तत् सर्वम् अपराधजातं क्षामये क्षमां कारये त्वाम् अहम् अप्रमेयं प्रमाणातीतम् ॥ ४२ ॥
அவ்வாறேஎன்னால் நீங்கள் அநேகதடவை பரிகாசம் செய்யப் பட்டு அவமானப்படுத்தப் பட்டுள்ளீர்கள். எவ்வாறு எனில் விளையா டும் பொழுதும், படுக்கும்பொழுதும், உட்கார்ந்திருக்கும்பொழுதும், சாப்பிடும்பொழுதும், தனியாக இருக்கும்பொழுதும் மற்றவர்கள் முன்னிலையிலும் பரிஹாசத்தின் பொருட்டு என்னால் அவமானப்ப டுத்தப்பட்டுள்ளீர்கள். ஹே அச்சுதனே! அளவிடமுடியாத பிரமாணங் களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நீர் நான் செய்த எல்லா அபராதங்க ளையும் பொறுத்து மன்னிக்கும்படி வேண்டுகிறேன். தத் என்னும் சொல்வினையை விசேஷிக்கும் பொருளின் மேல் நிற்பது.
यतः त्वम् —
ஏன் எனில் தாங்கள்-
पितासि लोकस्य चराचरस्य त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।
न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥ ४३ ॥
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யச்ச குருர்கரீயான் ।
ந த்வத்-ஸமோஅஸ்த்யப்யதிக: குதோ அந்யோ லோகத்ரயேஅப்யப்ரதிமப்ரபாவ ॥ 43 ॥
पिता असि जनयिता असि लोकस्य प्राणिजातस्य चराचरस्य स्थावरजङ्गमस्य । न केवलं त्वम् अस्य जगतः पिता, पूज्यश्च पूजार्हः, यतः गुरुः गरीयान् गुरुतरः ।
நீ இந்த ஸ்தாவர ஜங்கமங்களாகிய பிராணிவர்க்கத்திற்கு பிதாவாக இருக்கிறீர். பிதா மட்டுமல்ல. பூஜிக்கத்தக்கவராய் இருக்கிறீர். ஏன் எனில் நீங்கள் மிகப்பெரிய குரு.
कस्मात् गुरुतरः त्वम् इति आह —
தாங்கள் எவ்வாறு மிகப்பெரிய குரு என்பதை (அர்ஜுனன்) கூறுகிறார்-
न त्वत्समः त्वत्तुल्यः अस्ति । न हि ईश्वरद्वयं सम्भवति, अनेकेश्वरत्वे व्यवहारानुपपत्तेः । त्वत्सम एव तावत् अन्यः न सम्भवति ; कुतः एव अन्यः अभ्यधिकः स्यात् लोकत्रयेऽपि सर्वस्मिन् ? अप्रतिमप्रभाव ।
ஹே ஒப்பற்றபிரபாவமுடையவரே! உங்களுக்கொப்பான வேறு ஒருவரில்லை. எங்கும் இரண்டு ஈஸ்வரர்கள் இல்லை. ஏன் எனில் அநேக ஈஸ்வரர்கள் இருந்தால் வியவஹாரம் நடக்காது. எப்பொழுது மூவுலகத்திலும் உங்களுக்கு சமானமாக வேறு ஒருவர் இல்லையோ அவ்வாறு இருக்கும்பொழுது உங்களைக் காட்டிலும் மேலானவர் எவ் வாறு இருக்கமுடியும்? என்பது பொருள்.
प्रतिमीयते यया सा प्रतिमा, न विद्यते प्रतिमा यस्य तव प्रभावस्य सः त्वम् अप्रतिमप्रभावः, हे अप्रतिमप्रभाव निरतिशयप्रभाव इत्यर्थः ॥ ४३ ॥
எதனால் அனுமானிக்கப்படுகிறதோ அது ப்ரதிமா. எதனால் பிர திமா இல்லையோ அதனால் அப்ரதிமாபாவம் எனப்படும். அப்பிரதி மாபாவம் என்றால் நிரதிசய பாவம்.
यतः एवम् —
எதனால் இவ்வாறு
तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीड्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियायार्हसि देव सोढुम् ॥ ४४ ॥
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் ப்ரஸாதயே த்வாமஹமீச மீட்யம் ।
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் ॥ 44 ॥
तस्मात् प्रणम्य नमस्कृत्य, प्रणिधाय प्रकर्षेण नीचैः धृत्वा कायं शरीरम् , प्रसादये प्रसादं कारये त्वाम् अहम् ईशम् ईशितारम् , ईड्यं स्तुत्यम् । त्वं पुनः पुत्रस्य अपराधं पिता यथा क्षमते, सर्वं सखा इव सख्युः अपराधम् , यथा वा प्रियः प्रियायाः अपराधं क्षमते, एवम् अर्हसि हे देव सोढुं प्रसहितुम् क्षन्तुम् इत्यर्थः ॥ ४४ ॥
ஆகையால் வணக்கத்திற்குரிய தங்களை என் சரீரத்தை கீழே கிடத்தி வணங்கி என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் பிதாவானவர் புத்திரனை மன்னிப்பது போலவும், சிநேகிதன் தன்னுடைய சிநேகிதனை மன்னிப்பது போலவும் அன்புடையவர் அன்புடையவரை மன்னிப்பது போலவும் ஹே தேவ! மன்னிக்க வேண் டுகிறேன் என்பது பொருள்.
अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे ।
तदेव मे दर्शय देव रूपं प्रसीद देवेश जगन्निवास ॥ ४५ ॥
அத்ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோ அஸ்மி த்ருஷ்ட்வா பயேன ச ப்ரவ்யதிதம் மனோ மே ।
ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸீத தேவேச ஜகந்நிவாச ॥ 45 ॥
अदृष्टपूर्वं न कदाचिदपि दृष्टपूर्वम् इदं विश्वरूपं तव मया अन्यैर्वा, तत् अहं दृष्ट्वा हृषितः अस्मि । भयेन च प्रव्यथितं मनः मे ।
இதற்கு முன் ஒருபொழுதும் உங்களுடைய இந்த விச்வரூபத்தை என்னாலோ, மற்றவர்களாலோ பார்க்கப்படவில்லை. அவ்வாறே பயத் தினால் என் மனது வியாகூலமடைகிறது.
अतः तदेव मे मम दर्शय हे देव रूपं यत् मत्सखम् । प्रसीद देवेश, जगन्निवास जगतो निवासो जगन्निवासः, हे जगन्निवास ॥ ४५ ॥
ஆகையால் ஹே தேவனே! ஹே தேவேசனே! ஹே ஜகந்நிவா சனே! என்னுடைய நண்பனாகிய எந்த வடிவமுள்ளதோ அந்த வடி வத்தை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்.
किरीटिनं गदिनं चक्रहस्तमिच्छामि त्वां द्रष्टुमहं तथैव ।
तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते ॥ ४६ ॥
கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தமிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் த்தைவ ।
தேனைவ ரூபேண சதுர்புஜேன ஸஹஸ்ரபாஹோ பவ விச்வமூர்தே ॥ 46 ॥
किरीटिनं किरीटवन्तं तथा गदिनं गदावन्तं चक्रहस्तम् इच्छामि त्वां प्रार्थये त्वां द्रष्टुम् अहं तथैव, पूर्ववत् इत्यर्थः ।
முன்பு போல் கிரீடத்தை உடையவராகவும், கதையை உடையவ ராகவும், சக்கிரத்தை உடையவராகவும் பார்க்க விரும்பி உங்களை பிரார்த்திக்கிறேன் என்பது பொருள்.
यतः एवम् , तस्मात् तेनैव रूपेण वसुदेवपुत्ररूपेण चतुर्भुजेन, सहस्रबाहो वार्तमानिकेन विश्वरूपेण, भव विश्वमूर्ते ; उपसंहृत्य विश्वरूपम् , तेनैव रूपेण भव इत्यर्थः ॥ ४६ ॥
எதனால் இவ்வாறோ அதனால் ஹே ஆயிரம் கைகளை உடை யவரே! விஷ்வமூர்த்தியே! தாங்கள் இப்பொழுது இருக்கும் விச்வரூப வடிவத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டு நான்கு கைகளையுடைய வசு தேவருடைய மகன் ரூபத்தில் இருப்பீராக. என்பது பொருள்.
अर्जुनं भीतम् उपलभ्य, उपसंहृत्य विश्वरूपम् , प्रियवचनेन आश्वासयन् —
பயந்த அர்ஜுனனைப் பார்த்து விஷ்வரூபத்தை திரும்ப பெற் றுக்கொண்டு பிரியமான வார்த்தைகளால் தேற்றுகிறவராய்-
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् ।
तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम् ॥ ४७ ॥
மயா ப்ரஸந்நேன தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்சிதமாத்மயோகாத் ।
தேஜோமயம் விச்வமனந்தமாத்யம் யன்மே த்வதந்ன்யேன ந த்ருஷ்டபூர்வம் ॥ 47 ॥
मया प्रसन्नेन, प्रसादो नाम त्वयि अनुग्रहबुद्धिः, तद्वता प्रसन्नेन मया तव हे अर्जुन, इदं परं रूपं विश्वरूपं दर्शितम् आत्मयोगात् आत्मनः ऐश्वर्यस्य सामर्थ्यात् । तेजोमयं तेजःप्रायं विश्वं समस्तम् अनन्तम् अन्तरहितं आदौ भवम् आद्यं यत् रूपं मे मम त्वदन्येन त्वत्तः अन्येन केनचित् न दृष्टपूर्वम् ॥ ४७ ॥
ஹே அர்ஜுனனே! உன்னிடம் எனக்கு உள்ள அனுக்கிரஹ புத் தியினால் பிரசன்னமடைந்த என்னால் என்னுடைய ஐஸ்வர்யத்தி னால் தேஜோமயமான விஷ்வமாயும், முடிவற்றதாயும், ஆதி அற்றதா யும் உள்ள எந்த ரூபம் உள்ளதோ அது என்னுடையது. உன்னைத் தவிர மற்றொருவராலும் பார்க்கப்படவில்லை.
आत्मनः मम रूपदर्शनेन कृतार्थ एव त्वं संवृत्तः इति तत् स्तौति —
என்னுடைய (விஷ்வ) ரூப தர்சனத்தால் நீ கிருதார்த்தனாகி விட்டாய் என்று அதை துதி செய்கிறார்.
न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रैः ।
एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥
ந வேத-யக்ஞாத்யயனைர் ந தானைர் ந ச க்ரியாபிர் ந தபோபிருக்ரை: ।
ஏவம்ரூப: சக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதன்யேன குருப்ரவீர ॥ 48 ॥
न वेदयज्ञाध्ययनैः चतुर्णामपि वेदानाम् अध्ययनैः यथावत् यज्ञाध्ययनैश्च ।
நான்கு வேதங்களைப் படிப்பதினாலேயோ யக்ஞங்களைப் படிப்ப தினாலேயோ தானங்களைச் செய்வதினாலோ
वेदाध्ययनैरेव यज्ञाध्ययनस्य सिद्धत्वात् पृथक् यज्ञाध्ययनग्रहणं यज्ञविज्ञानोपलक्षणार्थम् ।
வேதம் அத்யயனம் (படிப்பதினாலேயோ) யக்ஞத்தின் படிப்பும் படித்ததாகும். அப்படி இருக்கும்பொழுது தனியாக யக்ஞத்தின் படிப்பைக் கூறி இருப்பது யக்ஞங்களுடைய அர்த்தத்தை அறிதலாகும் என்பது யக்ஞ அறிவின் உபலக்ஷணமாகும்.
तथा न दानैः तुलापुरुषादिभिः, न च क्रियाभिः अग्निहोत्रादिभिः श्रौतादिभिः, न अपि तपोभिः उग्रैः चान्द्रायणादिभिः उग्रैः घोरैः, एवंरूपः यथादर्शितं विश्वरूपं यस्य सोऽहम् एवंरूपः न शक्यः अहं नृलोके मनुष्यलोके द्रष्टुं त्वदन्येन त्वत्तः अन्येन कुरुप्रवीर ॥ ४८ ॥
அவ்வாறேஒருவன் நிறைக்கு நிறைதங்கம் முதலியவைகளை தானம் கொடுத்தலாலோ சுருதிகளில் கூறப்பட்ட அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்களாலும் சாந்திராயனம் முதலிய கோர தபங்களாலும் முன்னால் உனக்கு காட்டப்பட்ட இவ்வாறான விச்வ ரூபமுடைய நான் காணமுடியாதவன். ஹே குருப்ரவீரனே! நான் இந்த மனித உல கத்தில் உன்னைத் தவிறவேறு யாராலும் காணமுடியாதவன்.
मा ते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीदृङ्ममेदम् ।
व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ॥ ४९ ॥
மா தே வ்யதா மா ச விமூடபாவோ த்ருஷ்ட்வா ரூபம் கோரமீத்ருங்மமேதம் ।
வ்யபேதபீ: ப்ரீதமனா: புனஸ்த்வம் ததேவ மே ரூபமிதம் ப்ரபச்ய ॥ 49 ॥
मा ते व्यथा मा भूत् ते भयम् , मा च विमूढभावः विमूढचित्तता, दृष्ट्वा उपलभ्य रूपं घोरम् ईदृक् यथादर्शितं मम इदम् । व्यपेतभीः विगतभयः, प्रीतमनाश्च सन् पुनः भूयः त्वं तदेव चतुर्भुजं रूपं शङ्खचक्रगदाधरं तव इष्टं रूपम् इदं प्रपश्य ॥ ४९ ॥
என்னால் காண்பிக்கப்பட்ட இந்த கோரரூபமான என் விச்வரூ பத்தைப் பார்த்து பயத்தை அடையாதே. அவ்வாறேமூடத்தன்மையையும் அடையாதே. மறுபடியும் உனக்குப்பிடித்த நான்கு கைகளும், சங் கு, சக்கிரம், கதையுடன் கூடிய என் இந்த ரூபத்தைப்பார்.
सञ्जय उवाच —
சஞ்சயன் கூறுகிறார்-
इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः ।
आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनःसौम्यवपुर्महात्मा ॥ ५० ॥
இத்யர்ஜுனம் வாஸுதேவஸ் ததோக்த்வா ஸ்வகம் ரூபம் தர்சயாமாஸ பூய: ।
ஆச்வாஸயாமாஸ ச பீதமேனம் பூத்வா புன: ஸௌம்யவபுர்மஹாத்மா ॥ 50 ॥
इति एवम् अर्जुनं वासुदेवः तथाभूतं वचनम् उक्त्वा, स्वकं वसुदेवस्य गृहे जातं रूपं दर्शयामास दर्शितवान् भूयः पुनः । आश्वासयामास च आश्वासितवान् भीतम् एनम् , भूत्वा पुनः सौम्यवपुः प्रसन्नदेहः महात्मा ॥ ५० ॥
வாசுதேவன் இவ்வாறு அர்ஜுனனுக்கு வார்த்தைகளைக் கூறி வசுதேவர் இல்லத்தில் பிறந்த தன்னுடைய ரூபத்தை காண்பித்தார். மஹாத்மாவானவர் மறுபடியும் தன்னுடைய சௌமியமான ரூபத்தை அடைந்து மறுபடியும் (அர்ஜுனனை) தேற்றினார்.
अर्जुन उवाच —
அர்ஜுனன் கூறினார்.
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन ।
इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः ॥ ५१ ॥
த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜனார்தன ।
இதானீ-மஸ்மி ஸம்வ்ருத்த: ஸ சேதா: ப்ரக்ருதிம் கத: ॥ 51 ॥
दृष्ट्वा इदं मानुषं रूपं मत्सखं प्रसन्नं तव सौम्यं जनार्दन, इदानीम् अधुना अस्मि संवृत्तः सञ्जातः । किम् ? सचेताः प्रसन्नचित्तः प्रकृतिं स्वभावं गतश्च अस्मि ॥ ५१ ॥
ஹே ஜனார்த்தனா! இப்பொழுது நான் தங்களுடைய பிரசன்ன மான முகத்தையும் இனிய நண்பனாகிய மனித வடிவத்தையும் பார்த்து தெளிந்த மனதை உடையவனாகவும், எனது இயற்கையான சுபாவத்தை உடையவனாகவும் இருக்கிறேன்.
श्रीभगवानुवाच —
ஸ்ரீபகவான் கூறினார்-
सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम ।
देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः ॥ ५२ ॥
ஸுதுர்தர்சமிதம் ரூபம் த்ருஷ்டவாநஸி யன்மம ।
தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்சனகாங்க்ஷிண: ॥ 52 ॥
सुदुर्दर्शं सुष्ठु दुःखेन दर्शनम् अस्य इति सुदुर्दर्शम् , इदं रूपं दृष्टवान् असि यत् मम, देवादयः अपि अस्य मम रूपस्य नित्यं सर्वदा दर्शनकाङ्क्षिणः ; दर्शनेप्सवोऽपि न त्वमिव दृष्टवन्तः, न द्रक्ष्यन्ति च इति अभिप्रायः ॥ ५२ ॥
எந்த என் ரூபத்தை பார்ப்பதற்கு மிகக்கடினமோ அதை நீ பார்த் திருக்கிறாய். தேவர்களும் கூட அதை என்னுடைய இந்த ரூபத்தை எப்பொழுதும் பார்ப்பதற்கு இச்சிக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு இச்சிப்பவர்களாய் இருந்தாலும் உன்னைப் போல் அவர்கள் பார்த்த தில்லை. இனி பார்க்கப் போவதும் இல்லை என்பது அபிப்பிராயம்.
कस्मात् ? —
எதனால்?
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥ ५३ ॥
நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா ।
சக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் த்ரஷ்டவானஸி மாம் யதா ॥ 53 ॥
न अहं वेदैः ऋग्यजुःसामाथर्ववेदैः चतुर्भिरपि, न तपसा उग्रेण चान्द्रायणादिना, न दानेन गोभूहिरण्यादिना, न च इज्यया यज्ञेन पूजया वा शक्यः एवंविधः यथादर्शितप्रकारः द्रष्टुं दृष्टावान् असि मां यथा त्वम् ॥ ५३ ॥
நீ எவ்வாறு என்னைப் பார்த்தாயோ அந்த என்னுடைய ரூபத்தை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாலும், சாந்திராயனம் முதலிய கடினமான தபசாலும், பசு, நிலம், தங்கம் இவைகளை தானம் செய்வதாலும் யக்ஞத்தினாலோ, (பூஜையாலோ) அறியமுடியாது. பார்க்கமுடியாது.
कथं पुनः शक्यः इति उच्यते —
மேலும் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-
भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ॥ ५४ ॥
பக்த்யா த்வநன்யயா சக்ய அஹ-மேவம் விதோஅர்ஜுன ।
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ॥ 54 ॥
भक्त्या तु किंविशिष्टया इति आह —
பக்தியினால் காணப்படுவீர்களெனில் எவ்வித பக்தியினால் காணத்தக்கவர் எனில்-
अनन्यया अपृथग्भूतया, भगवतः अन्यत्र पृथक् न कदाचिदपि या भवति सा त्वनन्या भक्तिः । सर्वैरपि करणैः वासुदेवादन्यत् न उपलभ्यते यया, सा अनन्या भक्तिः, तया भक्त्या शक्यः अहम् एवंविधः विश्वरूपप्रकारः हे अर्जुन, ज्ञातुं शास्त्रतः । न केवलं ज्ञातुं शास्त्रतः, द्रष्टुं च साक्षात्कर्तुं तत्त्वेन तत्त्वतः, प्रवेष्टुं च मोक्षं च गन्तुं परन्तप ॥ ५४ ॥
ஹே அர்ஜுன! பகவானைத் தவிர வேறு ஒரு வஸ்துவில் எப்பொ ழுதும் பக்தி ஏற்படாதோ அது அநந்ய பக்தி. அவ்வாறேஎந்த பக்தியி னால் இந்திரியங்கள் எல்லாம் வாசுதேவனைத் தவிர வேறு ஒன்றை யும் அறிவதில்லையோ அதுவே அனன்ய பக்தி. இந்த விதமான பக்தி விச்வரூபத்துடன் உள்ள நான் சாஸ்திர மூலமாகவே அறியப்படுகி றேன். ஹே பரந்தப! சாஸ்திரங்களால் என் விச்வரூபத்தை அறிவது மாத்திரமல்ல உள்ளபடி சாக்ஷாத்காரம் அடையவும் மோக்ஷத்தை அடையவும் முடியும்.
अधुना सर्वस्य गीताशास्त्रस्य सारभूतः अर्थः निःश्रेयसार्थः अनुष्ठेयत्वेन समुच्चित्य उच्यते —
இப்பொழுது கீதாசாஸ்திரத்தின் முழுவதின் சாரமான மோக்ஷத்தை அடைவதற்கான அனுஷ்ட்டிக்கப்படவேண்டியவை களை திரட்டிக் கூறுகிறார்-
मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः ।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥ ५५ ॥
மத்கர்மக்ருன் மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: ।
நிர்வைர: ஸர்வபூதே ஷு ய: ஸு மாமேதி பாண்டவ ॥ 55 ॥
मत्कर्मकृत् मदर्थं कर्म मत्कर्म, तत् करोतीति मत्कर्मकृत् । मत्परमः — करोति भृत्यः स्वामिकर्म, न तु आत्मनः परमा प्रेत्य गन्तव्या गतिरिति स्वामिनं प्रतिपद्यते ; अयं तु मत्कर्मकृत् मामेव परमां गतिं प्रतिपद्यते इति मत्परमः, अहं परमः परा गतिः यस्य सोऽयं मत्परमः ।
என் பொருட்டு கர்மம் செய்பவர் மத்கர்மக்ருத். வேலைக்காரன் தன் எஜமானுக்காகவே வேலை செய்கிறான். ஆனால் இறந்தபின் எஜமானனை அடைவதில்லை. ஆனால் என் பொருட்டு வேலை செய்பவன் மேலான கதியாகிய என்னையே அடைகிறான் என்பதால் (மத்பரம:) நான் மேலானவன், மேலான கதி ஆகையால்.
तथा मद्भक्तः मामेव सर्वप्रकारैः सर्वात्मना सर्वोत्साहेन भजते इति मद्भक्तः ।
அவ்வாறு என்னையே எல்லாவிதமாகவும், எல்லா இந்திரியமூல மாகவும் மிகவும் உற்காசமாக தொழுகிறான் என்பதால் மத்பக்த: (என் னுடைய பக்தன்)
सङ्गवर्जितः धनपुत्रमित्रकलत्रबन्धुवर्गेषु सङ्गवर्जितः सङ्गः प्रीतिः स्नेहः तद्वर्जितः ।
செல்வம் புத்திரன், நண்பன், மனைவி, பந்துக்கள் இவர்களிடத் தில் ஆசை (பற்று) அற்று இருத்தல் சங்கவர்ஜித: (பற்றில்லாதவன்)
निर्वैरः निर्गतवैरः सर्वभूतेषु शत्रुभावरहितः आत्मनः अत्यन्तापकारप्रवृत्तेष्वपि ।
எல்லாப் பிராணிகளிடத்தும் அவ்வாறேதன்னை மிகவும் கொடுமை செய்பவனாய் இருப்பினும் அவனிடத்தும் விரோதபாவம் இல்லாமல் இருப்பவன். நிர்வைர: (விரோதத்தன்மை இல்லாமல் இருப்பவன்)
यः ईदृशः मद्भक्तः सः माम् एति, अहमेव तस्य परा गतिः, न अन्या गतिः काचित् भवति । अयं तव उपदेशः इष्टः मया उपदिष्टः हे पाण्डव इति ॥ ५५ ॥
எவன் இவ்விதமான பக்தனோ அதனால் அவன் என்னையே அடைகிறான். நானே அவர்களுடைய மேலான கதி (அடையும் இடம்) வேறு ஒரு கதி கிடையாது. ஹே பாண்டவ! உன்பொருட்டு இந்த பிரியமான உபதேசமானது என்னால் உபதேசம் செய்யப்பட்டது.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ श्रीमद्भगवद्गीताभाष्ये एकादशोऽध्यायः ॥
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விச்வரூபதர் சனம் நாம ஏகாதசோத்யாய: