द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

केनोपनिषद्वाक्यभाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

கேநோபநிஷத்வாக்யபாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति ॥ १ ॥
तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २ ॥
तेऽग्निमब्रुवन् जातवेद एतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ३ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत् कोऽसीत्यग्निर्वा अहमस्मीत्यब्रवीज्जातवेदा वा अहमस्मीति ॥ ४ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वं दहेयं यदिदं पृथिव्यामिति ॥ ५ ॥
तस्मै तृणं निदधावेतद्दहेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६ ॥
अथ वायुमब्रुवन् वायवेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ७ ॥
तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीति वायुर्वा अहमस्मीत्यब्रवीन्मातरिश्वा वा अहमस्मीति ॥ ८ ॥
तस्मिंस्त्वयि किं वीर्यमित्यपीदं सर्वमाददीय यदिदं पृथिव्यामिति ॥ ९ ॥
तस्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १० ॥
अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति तदभ्यद्रवत्तस्मात्तिरोदधे ॥ ११ ॥
स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहु शोभमानामुमां हैमवतीं तां होवाच किमेतद्यक्षमिति ॥ १२ ॥
ब्रह्म ह देवेभ्य इति ब्रह्मणो दुर्विज्ञेयतोक्तिः यत्नाधिक्यार्था । समाप्ता ब्रह्मविद्या यदधीनः पुरुषार्थः । अत ऊर्ध्वमर्थवादेन ब्रह्मणो दुर्विज्ञेयतोच्यते । तद्विज्ञाने कथं नु नाम यत्नमधिकं कुर्यादिति ।
ब्रह्म ह देवेभ्य (பிரஹ்ம ஹ தேவேப்ய) என்றவாக்கியத்தினால் பிரஹ்மத்தை அறிவது மிகக் கடினம் என்று கூறியது பிரஹ்மத்தை அடைவதற்கு அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்பதற்காகவேயாகும். எதன் அதீனமாக புருஷார்த்தம் இருக்கிறதோ அந்த பிரஹ்மவித்யா (சமாப்தமாகிறது) முடிவுக்கு வருகிறது. ஆகையால் இனி அர்த்தவாதத்தால் பிரஹ்மத்தினுடைய துர்விக்ஞேயத்துவத்தை கூறப்படுகிறது. அதை அறிவதற்கு எவ்வாறு அதிக பிரயத்தனம் செய்ய வேண்டும்? என்று.
शमाद्यर्थो वाम्नायः अभिमानशातनात् । शमादि वा ब्रह्मविद्यासाधनं विधित्सितं तदर्थोऽयमर्थवादाम्नायः । न हि शमादिसाधनरहितस्य अभिमानरागद्वेषादियुक्तस्य ब्रह्मविज्ञाने सामर्थ्यमस्ति, व्यावृत्तबाह्यमिथ्याप्रत्ययग्राह्यत्वाद्ब्रह्मणः । यस्माच्चाग्न्यादीनां जयाभिमानं शातयति, ततश्च ब्रह्मविज्ञानं दर्शयत्यभिमानोपशमे, तस्माच्छमादिसाधनविधानार्थोऽयमर्थवाद इत्यवसीयते ।
அல்லது இந்த சுருதிபாகமானது அபிமானத்தை நாசம் செய்து சமம் முதலியவைகள் शमतमादि அடைவதற்காகும். சமம் முதலியவைகள் பிரஹ்ம வித்தையின் சாதனமாகும் என்று கூறுவதில் இஷ்ட்டமாகும். ஆகையால் அதன் பொருட்டு இது அர்த்தவாத சுருதியாகும். பிரஹ்மத்தைக் காட்டிலும் மாறான பாஹ்யமித்யா விருத்திகள் கிரஹிக்கப்படுவதால் சமாதி शमादि சாதனமில்லாத அபிமானம் ராகத்வேஷாதிகளுடன் கூடினவனுக்கு பிரஹ்ம ஞானத்தில் சாமர்த்தியம் ஏற்படுவது இல்லை. எதனால் அக்னி முதலிய தேவர்களின் ஐயஅபிமானம் நஷ்ட்டமானதினால் ப்ரஹ்ம ஞானம் அடைவதற்கு சமாதி (शमादि) சாதனம்  அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக இந்த அர்த்தவாதமானது கூறப்படுகிறது.
सगुणोपासनार्थो वा, अपोदितत्वात् । ‘नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) (के. उ. १ । ६) (के. उ. १ । ७) (के. उ. १ । ८) (के. उ. १ । ९) इत्युपास्यत्वं ब्रह्मणोऽपोदितम् । अपोदितत्वादनुपास्यत्वे प्राप्ते तस्यैव ब्रह्मणः सगुणत्वेनाधिदैवतमध्यात्मं चोपासनं विधातव्यमित्येवमर्थो वेति । अधिदैवतम् ‘तद्वनमित्युपासितव्यम्’ (के. उ. ४ । ६) इति हि वक्ष्यति ।
பிரஹ்மம் உபாசிக்கதக்கதல்ல என்பதால் சகுணஉபாசனையை விதிப்பதாகும் नेदं यदिदमुपासत என்று  அந்த உபாசனை பிரஹ்மத்தினிடத்தில் தள்ளப்பட்டதால் அந்த பிரஹ்மத்திற்கே சகுணஉபாசனையான அதிதெய்வம், அத்யாத்ம முதலிய உபாசனை அவசியம் விதிக்கப்படவேண்டும் என்பதால் ஆகும். எது அதிதெய்வமோ அது “வனம்” என்று உபாசிக்கவேண்டும் என்று கூறப்போகிறது.
ब्रह्मेति परः, लिङ्गात् । न ह्यन्यत्र परादीश्वरान्नित्यसर्वज्ञात्परिभूयाग्न्यादींस्तृणं वज्रीकर्तुं सामर्थ्यमस्ति । ‘तन्न शशाक दग्धुम्’ (के. उ. ३ । ६) इत्यादिलिङ्गाद्ब्रह्मशब्दवाच्य ईश्वर इत्यवसीयते । न ह्यन्यथा अग्निस्तृणं दग्धुं नोत्सहते वायुर्वा आदातुम् । ईश्वरेच्छया तु तृणमपि वज्रीभवतीत्युपपद्यते । तत्सिद्धिर्जगतो नियतप्रवृत्तेः ।
பிரஹ்மம் என்றசப்தம் ஈஸ்வரனைக் குறிக்கும் லிங்கமாகும். மேலான சர்வக்ஞ ஈஸ்வரனைக் காட்டிலும் தோல்வி அடைந்த அக்னி முதலிய தேவர்கள் துரும்பை வஜ்ஜிரமாக்கும் சாமர்த்தியம் அற்றவர்கள், எரித்தல் முதலியவை செய்ய முடியாது என்றலிங்கத்தால் ப்ரஹ்ம சப்தவாச்சியம் ஈஸ்வரன் என்பது நிச்சயிக்கப்படுகிறது. ப்ரஹ்மத்தைத் தவிர மற்றஅக்னியால் அந்த துரும்பைஎரிக்க முடியாது. வாயுவினால் அசைக்க முடியாது. ஆனால் ஈஸ்வர இச்சையினால் துரும்பும்  வஜ்ஜிர பாவத்தை அடைகிறது. ஜகத்தினுடைய நியமிக்கப்பட்ட பிரவிர்த்தியினால் அந்த ஈஸ்வரன் இருக்கிறான் என்பது சித்திக்கிறது.
श्रुतिस्मृतिप्रसिद्धिभिर्नित्यसर्वविज्ञाने ईश्वरे सर्वात्मनि सर्वशक्तौ सिद्धेऽपि शास्त्रार्थनिश्चयार्थमुच्यते । तस्येश्वरस्य सद्भावसिद्धिः कुतो भवतीति, उच्यते ।
சுருதி ஸ்மிருதிகளால் பிரசித்தமாக நித்ய சர்வ விக்ஞான சர்வாத்ம சக்தி சித்தித்திருந்தாலும் சாஸ்த்திரார்த்தத்தை நிச்சயம் செய்வதற்காக கூறப்பட்டது. அந்த ஈஸ்வரனுக்கு சத்பாவம் எவ்வாறு சித்திக்கிறது என்று கூறப்படுகிறது.
यदिदं जगद्देवगन्धर्वयक्षरक्षःपितृपिशाचादिलक्षणं द्युवियत्पृथिव्यादित्यचन्द्रग्रहनक्षत्रविचित्रं विविधप्राण्युपभोगयोग्यस्थानसाधनसम्बन्धि, तदत्यन्तकुशलशिल्पिभिरपि दुर्निर्माणं देशकालनिमित्तानुरूपनियतप्रवृत्तिनिवृत्तिक्रमम् एतद्भोक्तृकर्मविभागज्ञप्रयत्नपूर्वकं भवितुमर्हति, कार्यत्वे सति यथोक्तलक्षणत्वात् , गृहप्रासादरथशयनासनादिवत् , विपक्षे आत्मादिवत् ।
எந்த இந்த ஜகத் தேவகந்தர்வயக்ஷ ரக்ஷ பித்ரு பிசாசு முதலிய லக்ஷணமுடையதும் அவ்வாறேஆதித்யசந்திரக்ரஹநக்ஷத்திர முதலிய விசித்திரங்களும் பலவாறான ஜீவர்கள் அனுபவத்திற்கு யோகியமான ஸ்தானங்களும் அதற்கு சம்பந்தமான சாதனங்களும் மிகத்திறமைவாய்ந்த சிற்பிகளாலும் நிர்மாணிக்க முடியாதததும் தேசகால நிமித்தத்திற்கேற்றவாறு நியமிக்கப்பட்ட பிரவிர்த்தி நிவிர்த்தி கர்மத்தை உடைய ஜகத்தின் போக்தா மேலும் கர்மத்தின் விபாகத்தை அறிந்து பிரயத்ன பூர்வமாக (அது உண்மையான) காரியமாய் இருந்தால் முன்பு கூறப்பட்ட லக்ஷணங்கள்      உடையவனாவான். எவ்வாறு எனில் வீடு, மாளிகை, ரதம், சயனம், சாப்பிடுதல், முதலியவைகள் போல் காரியமாகும். கார்யத்வமற்ற ஆத்மா மட்டுமே  நித்யபதார்த்தமாகும்.
कर्मण एवेति चेत् , न ; परतन्त्रस्य निमित्तमात्रत्वात् । यदिदमुपभोगवैचित्र्यं प्राणिनां तत्साधनवैचित्र्यं च देशकालनिमित्तानुरूपनियतप्रवृत्तिनिवृत्तिक्रमं च, तन्न नित्यसर्वज्ञकर्तृकम् ; किं तर्हि, कर्मण एव ; तस्याचिन्त्यप्रभावत्वात् सर्वैश्च फलहेतुत्वाभ्युपगमाच्च । सति कर्मणः फलहेतुत्वे किमीश्वराधिककल्पनयेति न नित्यस्येश्वरस्य नित्यसर्वज्ञशक्तेः फलहेतुत्वं चेति चेत् ।
(பூர்வ) ஜகத்தின் உற்பத்திக்கு கர்மமே காரணம் என்று கூறுவது பொருந்தாது. ஏன் எனில் கர்மம்பரதந்திரமானது நிமித்தமாத்திரமேயாகும். ஜீவர்கள் அநுபவிப்பதற்கான அநேக போகப் பொருள்களும், அவைகளை அடைவதற்கான அநேக விதமான சாதனங்கள் தேச கால நிமித்தத்திற்கு தகுந்த நியமிக்கப்பட்ட பிரவிர்த்தி, நிவிர்த்திகிரமமானது நித்ய சர்வக்ஞனின் செயலாக ஆகாது பின்பு எது காரணம் எனில், கர்மத்தினால்தான். ஏன் எனில் அதற்கு சிந்திக்கமுடியாத பிரபாவமுள்ளது. எல்லா பலன்களுக்கும் அதுவே ஹேதுவாய் இருப்பதாக எல்லோராலும் ஏற்கப்பட்டது. கர்மம்தான் பலத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் நித்யஈஸ்வரனாயும், நித்ய சர்வக்ஞ சக்தியாயும் உள்ளவனுக்கு பலஹேதுத்துவம் இல்லை, ஏன் எனில், ஈஸ்வரனை அதிகமாக கல்பனை செய்வதில் என்ன பிரயோஜனம்?.
न कर्मण एवोपभोगवैचित्र्याद्युपपद्यते । कस्मात् ? कर्तृतन्त्रत्वात्कर्मणः । चितिमत्प्रयत्ननिर्वृत्तं हि कर्म तत्प्रयत्नोपरमादुपरतं सद्देशान्तरे कालान्तरे वा नियतनिमित्तविशेषापेक्षं कर्तुः फलं जनयिष्यतीति न युक्तमनपेक्ष्यान्यदात्मनः प्रयोक्तृ, कर्तैव फलकाले प्रयोक्तेति चेत् , मया निवर्तितोऽसि त्वां प्रयोक्ष्ये फलाय यदात्मानुरूपं फलमिति ।
(சித்தாந்தி) கர்மத்தினால் மட்டுமே நம்மால் அனுபவிக்கப்படும் விசித்திரங்களை அடையமுடியாது. ஏன்எனில் கர்மம் கர்த்துரு தந்திரமாகும். சேதன புருஷனுடைய பிரயத்தன பூர்வமாக செய்யப்படுவதே கர்மமாகும். பிரயத்தனம் செய்யாவிடில் கர்மமும் செய்யப்படாததாகும். தேசாந்தரத்திலோ, காலாந்தரத்திலோ நியதி நிமித்த விசேஷத்தை அபேக்ஷித்த கர்த்தாவிற்கு பலனை உண்டாக்குகிறது. ஒன்றைஅபேக்ஷிக்காமல் கர்த்தாவிற்கு பலத்தைக் கொடுக்கும் தன்மை பொருந்தாது. பலன் ஏற்படும் சமயத்தில் கர்த்தாவே பலனைக் கொடுப்பவனாய் இருந்தால் என்னால் கர்மா நன்றாக செய்யப்பட்டது ஆகையால் கர்மாவே இப்பொழுது பலன் கிடைப்பதற்காக என்னை பிரவிர்த்திக்கச் செய்கிறாய். ஆகையால் எனக்கு அனுகூலமான பலனை அளிப்பாயாக.
न , देशकालनिमित्तविशेषानभिज्ञत्वात् । यदि हि कर्ता देशादिविशेषाभिज्ञः सन्स्वातन्त्र्येण कर्म नियुञ्ज्यात् , ततोऽनिष्टफलस्याप्रयोक्ता स्यात् । न च निर्निमित्तं तदनिच्छयात्मसमवेतं तच्चर्मवद्विकरोति कर्म ।
அவ்வாறு சம்பவிக்காது. ஏன்எனில் தேசகால நிமித்தங்களின் தன்மைகளை (கர்த்தா) அறியாததினாலாகும். தேசம் முதலியவைகளின் விசேஷத்தை அதாவது தன்மைகளை அறிந்தவனாயின் அவன் ஸ்வதந்திரமாக கர்மங்களை செய்யமுடியுமாதலால் அவன் அநிஷ்ட்ட பலன்களை அளிக்கக்கூடிய கர்மாக்களில் ஈடுபடமாட்டான். மேலும் நிமித்தத்தை அபேக்ஷிக்காமல் கர்த்தாவினுடைய இச்சை இல்லாமலேயே தன்னிடத்தில் பந்தப்பட்டகர்மா சர்மம்போல் விகாரத்தை அடையாது.
न चात्मकृतमकर्तृसमवेतमयस्कान्तमणिवदाक्रष्टृ भवति, प्रधानकर्तृसमवेतत्वात्कर्मणः । भूताश्रयमिति चेत् , न ; साधनत्वात् । कर्तृक्रियायाः साधनभूतानि भूतानि क्रियाकालेऽनुभूतव्यापाराणि समाप्तौ च हलादिवत्कर्त्रा परित्यक्तानि न फलं कालान्तरे कर्तुमुत्सहन्ते । न हि हलं क्षेत्राद्व्रीहीन्गृहं प्रवेशयति । भूतकर्मणोश्चाचेतनत्वात्स्वतः प्रवृत्त्यनुपपत्तिः । वायुवदिति चेत् , न ; असिद्धत्वात् । न हि वायोरचितिमतः स्वतः प्रवृत्तिः सिद्धा, रथादिष्वदर्शनात् ।
(க்ஷணிகவிக்ஞானரூபம்)ஆத்மாவினால் செய்யப்பட்ட கர்மம் கர்த்தாவிடம் நித்திய சம்பந்தம் இல்லையெனில் காந்தம் இரும்பு போல் தனக்குத்தானாகவே பலனை ஆகர்ஷணம் செய்ய முடியாது ஏன் எனில் கர்மத்திற்கு பிரதான கர்த்தாவுடன் நித்திய சம்பந்தம் உள்ளது.  இவ்வாறு கூறினால் கர்மமானது பூதங்களை ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது என்று ஆகும். அவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன்எனில் அவைகள் அதனுடைய சாதனமேயாகும். கர்த்தாகிரியைகளின் சாதன பூதங்களாகிய பூதங்கள் கிரியாகாலத்தில் அனுபவிக்கும் வியாபாரங்கள் முடிந்த உடன் ஏர் முதலியவைகள் போல் கர்த்தாவானவன் விட்டுவிடுகிறான். ஏர் முதலியவைகள் காலாந்தரத்தில் பலனைத்தராது. மேலும் ஏர் ஆனது வயல்களிலிருந்து தானியங்களை கிருஹத்திற்கு கொண்டுசேர்க்காது. பூதகர்மங்கள் அசேதனமானதினால் அவைகளுக்கு பிரவிர்த்தியானது கிடையாது. அவ்வாறெனில் வாயுவானது அசேதனமாயினும் அதற்கு சுயமாக பிரவிர்த்தி காணப்படுகிறதே எனில், அது சரியல்ல. ஏன் எனில் அது அசித்தமாகும். அசேதனமான வாயுவிற்கு சுயமாகவே பிரவிர்த்தியானது ஏற்படாது. ஏன்எனில் ரதம் முதலிய மற்றஅசேதன பதார்த்தங்களில் காணப்படவில்லை.
शास्त्रात्कर्मण एवेति चेत् — शास्त्रं हि क्रियातः फलसिद्धिमाह नेश्वरादेः ‘स्वर्गकामो यजेत’ इत्यादि । न च प्रमाणाधिगतत्वादानर्थक्यं युक्तम् । न चेश्वरास्तित्वे प्रमाणान्तरमस्तीति चेत् ।
(மீமாம்ஸா) சாஸ்திரத்தை அனுசரித்த கர்மத்திற்கல்லவா பலன் ஏற்படுகிறது. என்பதால் “स्वर्गकामो यजेत” (ஸ்வர்ககாமோ யஜேத) என்பது முதலிய சாஸ்திரங்களால் கிரியையினாலேயே பலன் சித்திக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பிரமாணசித்திப்பதினால் அர்த்தமற்றதாக இருக்கமுடியாது. ஈஸ்வரன் இருக்கிறான் என்பதற்கு வேறு பிரமாணம் இல்லை என்று கூறினால்-
न , दृष्टन्यायहानानुपपत्तेः । क्रिया हि द्विविधा दृष्टफला अदृष्टफला च । दृष्टफलापि द्विविधा अनन्तरफला कालान्तरफला च । अनन्तरफला गतिभुजिलक्षणा । कालान्तरफला च कृषिसेवादिलक्षणा । तत्रानन्तरफला फलापवर्गिण्येव । कालान्तरफला तु उत्पन्नप्रध्वंसिनी ।
அவ்வாறு அல்ல. முன்பு பார்க்கப்பட்ட நியாயத்திற்கு பொருந்தாததால். கிரியையானது திருஷ்ட்டபலம், அதிருஷ்ட்டபலம் என்று இரண்டு விதமானதாகும். அதில் திருஷ்ட்டபலம் அநந்தரபலம், ஆகாமிபலம் என்று இரண்டு விதமாகும். அதில் அநந்தரபலமானது செல்லுதல் சாப்பிடுதல் முதலிய லக்ஷணமுடையதாகும். காலாந்தர பலமானது விவசாயம், சேவை முதலிய லக்ஷணங்களோடு கூடியதாகும். அதில் அநந்தர பலமானது பலனைக் கொடுக்கும் பொழுதே கிரியை நஷ்ட்டமாகிவிடும். காலாந்தர பலமானது பலத்தை உண்டுபண்ணி விட்டு பலன் கொடுப்பதற்கு முன்பே கிரியை நஷ்ட்டமாகிவிடும்.
आत्मसेव्याद्यधीनं हि कृषिसेवादेः फलं यतः । न चोभयन्यायव्यतिरेकेण स्वतन्त्रं कर्म ततो वा फलं दृष्टम् । तथा च कर्मफलप्राप्तौ न दृष्टन्यायहानमुपपद्यते । तस्माच्छान्ते यागादिकर्मणि नित्यः कर्तृकर्मफलविभागज्ञ ईश्वरः सेव्यादिवद्यागाद्यनुरूपफलदातोपपद्यते । स चात्मभूतः सर्वस्य सर्वक्रियाफलप्रत्ययसाक्षी नित्यविज्ञानस्वभावः संसारधर्मैरसंस्पृष्टः ।
ஏன் எனில் வியவசாயத்தின் பலன் வியவசாயம் செய்பவனுடைய அதீனமாகவும், சேவை முதலியவற்றின் சேவை செய்பவனுடைய அதீனமாய் இருக்கிறது. இவ்வித நியாயத்தைக் காட்டிலும் வேறான கர்மம், அதனால் ஸ்வதந்திரமான பலனோ பார்க்கப்படவில்லை. அவ்வாறேகர்ம பலனை அடைவதில் அறியப்பட்ட நியாயத்திற்கு நஷ்ட்டமானது பொருந்தாது. ஆகையால் யாகாதி கர்மாக்கள் செய்து முடிந்தபின் அந்தயாகாதிகளுக்கு தகுந்தவாறு பலத்தைக் கொடுப்பவனும் அவ்வாறேகர்த்தா, கர்ம, பலன் ஆகிய விபாகங்களை அறிந்த ஈஸ்வரன் சேவைசெய்தல் முதலியவற்றைப் போல் ஆகும். மேலும் அது எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாகும். அது எல்லா கர்ம பலன்களுக்கும் அவ்வாறேஎல்லா பிரத்தியங்களுக்கும் சாக்ஷி, நித்திய விக்ஞான ஸ்வரூபமாகும். அவ்வாறேசாம்சாரிகதர்மங்களால் ஸ்பரிஸிக்கப்படாததாகும்.
श्रुतेश्च । ‘न लिप्यते लोकदुःखेन बाह्यः’ (क. उ. २ । २ । ११) ‘जरां मृत्युमत्येति’ (बृ. उ. ३ । ५ । १) ‘विजरो विमृत्युः’ (छा. उ. ८ । ७ । १) ‘सत्यकामः सत्यसङ्कल्पः’ (छा. उ. ८ । ७ । १) ‘एष सर्वेश्वरः’ (बृ. उ. ४ । ४ । २२) ‘पुण्यं कर्म कारयति’ ‘अनश्नन्नन्यो अभिचाकशीति’ (मु. उ. ३ । १ । १) ‘एतस्य वा अक्षरस्य प्रशासने’ (बृ. उ. ३ । ८ । ९) इत्याद्या असंसारिण एकस्यात्मनो नित्यमुक्तस्य सिद्धौ श्रुतयः । स्मृतयश्च सहस्रशो विद्यन्ते । न चार्थवादाः शक्यन्ते कल्पयितुम् , अनन्ययोगित्वे सति विज्ञानोत्पादकत्वात् । न चोत्पन्नं विज्ञानं बाध्यते ।
சுருதிகளிலும் அறிகிறோம், “நலிப்யதே லோகதுக்கேன பாஹ்ய” (எல்லா உலகத்தைக் காட்டிலும் விலக்ஷணமான பரமாத்மாவை உலகத்தில் உள்ள துக்கமானது ஒட்டாது) “ஜராம்மிருத்யுமத்யேதி” அது மூப்பு, மரணம் இவைகளுக்கு அப்பாற்பட்டதாகும். “விஜரோவிமிர்த்யு:” (மூப்பு, மரணமற்றது), “சத்யகாம: சத்யசங்கல்ப:” (அது சத்யகாம, சத்யசங்கல்பம்) “ஏஷ சர்வேச்வர:” (அது சர்வேச்வரன்) “சாது கர்மகாரயதி” (அது சுபகர்மத்தைச் செய்விக்கிறது), அசனன் அன்யோ அபிச்சாகசீதி” வேறுபக்ஷியானது கர்மபலத்தை போகம் செய்யாமல் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. “ஏதஸ்யவா அக்ஷரஸ்ய ப்ரசாசனே” “இந்த அக்ஷரபிரஹ்மத்தின் ஆக்ஞையால்) என்பது முதலிய ஸ்ருதிகளினால் சம்சாரியல்லாத  ஏகமாகிய ஆத்மா நித்யமுக்தன் என்பது சித்திக்கிறது. (விளங்குகிறது) அர்த்தவாதத்தைக் கல்பிக்கமுடியாது. ஏன்எனில் வேறு எந்த ஒருவிதிக்கும் சேஷபூதமாகாத காரணத்தினால் ஸ்வதந்திர ஞானத்தை உண்டுபண்ணக் கூடியதாகும். மேலும் அதனால் உண்டான ஞானம் பாதிக்கமுடியாததாகும்.
अप्रतिषेधाच्च । न चेश्वरो नास्तीति निषेधोऽस्ति । प्राप्त्यभावादिति चेत् , न ; उक्तत्वात् । ‘न हिंस्यात्’ इतिवत्प्राप्त्यभावात्प्रतिषेधो नारभ्यत इति चेत् , न ; ईश्वरसद्भावे न्यायस्योक्तत्वात् । अथवा अप्रतिषेधादिति कर्मणः फलदाने ईश्वरकालादीनां न प्रतिषेधोऽस्ति । न च निमित्तान्तरनिरपेक्षं केवलेन कर्त्रैव प्रयुक्तं फलदं दृष्टम् । न च विनष्टोऽपि यागः कालान्तरे फलदो भवति ।
ஈஸ்வரனை நிஷேதம் செய்யமுடியாததின் காரணமாக ஈஸ்வரன் இல்லை என்று நிஷேதம் செய்யமுடியாது. ஈஸ்வரனே இல்லாததினால் நிஷேதம் பொருந்தவில்லை என்று கூறினால் அது பொருந்தாது. ஏன்எனில் சாஸ்த்திரத்தில் அவ்வாறு கூறப்படவில்லை ஆதலால், न हिंस्यादितिवत् (நஹிம்ஸ்யாதிதிவத்) ஹிம்சயை நிஷேதிப்பது போல் ஈஸ்வரனை நிஷேதித்தலை ஆரம்பிக்கவே இல்லை. அவ்வாறு கூறப்படவேயில்லை. ஏன்எனில் ஈஸ்வரனின் இருப்பை இதற்கு முன் அதற்கான நியாயம் கூறப்பட்டது. அல்லது अप्रतिषेधात् (அப்பிரதி ஷேதாத்) என்ற ஹேதுவின் தாத்பர்யமானது கர்மபலனை கொடுப்பதில் ஈஸ்வரனையோ, காலத்தையோ பிரதிஷேதம் செய்யவில்லை. (நீக்கவில்லை) கர்மத்திற்கு வேறு நிமித்தத்தை அபேக்ஷிக்காமல் கேவல கர்த்தாவினால் பிரேரிக்கப்பட்டு பலத்தைக் கொடுப்பதைப் பார்த்ததில்லை. நஷ்ட்டமானயாகத்தினால் காலந்தரத்தில் பலனைக் கொடுக்கமுடியாது.
सेव्यबुद्धिवत्सेवकेन सर्वज्ञेश्वरबुद्धौ तु संस्कृतायां यागादिकर्मणा विनष्टेऽपि कर्मणि सेव्यादिवेश्वरात्फलं कर्तुर्भवतीति युक्तम् । न तु पुनः पदार्था वाक्यशतेनापि देशान्तरे कालान्तरे वा स्वं स्वं स्वभावं जहति । न हि देशकालान्तरेषु चाग्निरनुष्णो भवति । एवं कर्मणोऽपि कालान्तरे फलं द्विप्रकारमेवोपलभ्यते ।
எவ்வாறு சேவை செய்பவனுடைய சேவையினால் எஜமானனுடைய புத்தியில் சம்ஸ்காரம் உண்டாகிறதோ அவ்வாறேயாகாதி கர்மங்களினால் சர்வக்ஞனாகிய ஈஸ்வரனின் புத்தியில் சமஸ்காரம் அடைந்து பின் அந்த யாகாதி கர்மம் நஷ்ட்டமடைந்தாலும் எவ்வாறு சேவகனுக்கு அவனுடைய எஜமானன் சன்மானம் செய்வாரோ அவ்வாறேஈஸ்வரனும் கர்மம் நஷ்ட்டமடைந்தாலும் அதற்கு தகுந்தவாறு பலனைக் கொடுக்கிறார் என்பது பொருந்தும். ஒரு பதார்த்தமானது நூ ற்றுக்கணக்கான வாக்கியங்களினாலோ, தேசாந்தரத்திலோ, காலந்தரத்திலோ தன் ஸ்வபாவத்தை விடாது. எவ்வாறெனில் தேசாந்தரத்திலோ, காலாந்தரத்திலோ அக்னியானது உஷ்ணமல்லாததாகாது. அவ்வாறு கர்மங்களுக்கும் காலாந்தரத்தில் இரு பிரகாரமான பலன்கள் கிடைக்கிறது.
बीजक्षेत्रसंस्कारपरिरक्षाविज्ञानवत्कर्त्रपेक्षफलं कृष्यादि, विज्ञानवत्सेव्यबुद्धिसंस्कारापेक्षफलं च सेवादि । यागादेः कर्मणस्तथाविज्ञानवत्कर्त्रपेक्षफलत्वानुपपत्तौ कालान्तरफलत्वात्कर्मदेशकालनिमित्तविपाकविभागज्ञबुद्धिसंस्कारापेक्षं फलं भवितुमर्हति, सेवादिकर्मानुरूपफलज्ञसेव्यबुद्धिसंस्कारापेक्षफलस्येव । तस्मात्सिद्धः सर्वज्ञ ईश्वरः सर्वजन्तुबुद्धिकर्मफलविभागसाक्षी सर्वभूतान्तरात्मा । ‘यत्साक्षादपरोक्षात्’ (बृ. उ. ३ । ४ । १) ‘य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इति श्रुतेः ।
விவசாயம் முதலியவை விதை, வயல் ஆகியவற்றின் ரக்ஷித்தலை அறிந்த கர்த்தாவை ஆசரித்ததே அதன்பலன். அவ்வாறேசேவை செய்வதை அறிந்ததைப் போல் சேவ்ய புத்தியின் சம்ஸ்காரத்தை அபேக்ஷித்தே அதன் பலன் ஆகும். யாகாதி கர்மங்களை அவ்வாறு கர்த்தாவால் அறியாமையால் அந்தபலன் கர்த்தாவை அபேக்ஷிக்கிறது என்பது பொருந்தாது. அது காலாந்தர பலனாய் இருப்பதால் கர்ம, தேச, கால, நிமித்த, கர்மத்தின் பரிபக்குவம், விபாகபுத்தி சம்ஸ்காரத்தை அபேக்ஷித்து பலன் ஏற்படுவதற்கு ஏற்றதாகும். எவ்வாறு சேவை முதலிய கர்மானுரூபபலத்தை அறிந்தவன் சேவ்ய புத்தியின் சம்ஸ்காரத்தை அபேக்ஷித்தே பலன் ஏற்படுகிறது. ஆகையால் சர்வக்ஞன் ஈஸ்வரன், எல்லா ஜீவராசிகளுடைய புத்தி கர்மபலன் இவைகளின் விபாகத்தின்சாக்ஷி சர்வபூத அந்த ராத்மா என்று சித்திக்கிறது. “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म य आत्मा सर्वान्तरः” (யத்சாக்ஷாதப ரோக்ஷாத் பிரஹ்ம் ய ஆத்மா சர்வாந்தர: ) எது சாக்ஷாத் அபரோக்ஷ பிரஹ்மமோ, எது சர்வ அந்தராத்மா என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
स एव चात्रात्मा जन्तूनाम् , ‘नान्योऽतोऽस्ति द्रष्टा श्रोता मन्ता विज्ञाता’ (बृ. उ. ३ । ७ । २३) ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्याद्यात्मान्तरप्रतिषेधश्रुतेः ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति चात्मत्वोपदेशात् । न हि मृत्पिण्डः काञ्चनात्मत्वेनोपदिश्यते ।
எல்லா ஜீவராசிகளுக்கும் அந்தசர்வசாக்ஷியாகிய ஈஸ்வரனே இங்கு ஆத்மாவாகும். ஆகையால் அதைத் தவிர வேறு த்ரஷ்ட்டாவோ, ஸ்ரோத்தாவோ, மந்தாவோ விக்ஞாதாவோ இல்லை. “नान्यदतोऽस्ति विज्ञातृ” (நான்யததோ அஸ்தி விக்ஞாத்ரு) என்பது முதலிய ஆத்மாவைத் தவிர மற்றதை விலக்கும் சுருதியின் வாயிலாய் அறிகிறோம். “तत्त्वमसि” (தத்துவமசி) என்று ஆத்மத்துவத்தை உபதேசிப்பதாலுமாகும். மண்கட்டியை தங்கரூபமானதாக ஒருபோதும் கூறப்படவில்லை.
ज्ञानशक्तिकर्मोपास्योपासकशुद्धाशुद्धमुक्तामुक्तभेदादात्मभेद एवेति चेत् , न । भेददृष्ट्यपवादात् ।
ஞானசக்தி கர்ம உபாஸ்ய, உபாஸக சுத்த, அசுத்த, முக்த, அமுக்த முதலிய பேதங்கள் ஆத்ம பேதங்களே எனில், அவ்வாறு அல்ல. ஏன்எனில் பேததிருஷ்ட்டி அபவாதம் செய்யப்படுவதாகும்.
यदुक्तं संसारिणः ईश्वारादनन्या इति ; तन्न ।
(பூர்வ) - நீங்கள் கூறும் சம்சாரியைக் காட்டிலும் ஈஸ்வரன் வேறு அல்ல என்பதோ அது அவ்வாறு அல்ல. (அதாவது ஈச்வரனைக் காட்டிலும் ஸம்ஸாரிகள் வேறுபட்டவர்கள் அன்று என யாதென்று சொல்லப்பட்டதோ, அது பொருந்தாது.)
किं तर्हि ?
(சி) - அதனால் என்ன?
भेद एव संसार्यात्मनाम् ।
(பூர்வ) - சம்சாரிக்கும் பரமாத்மாவிற்கும் பரஸ்பர பேதம் உள்ளது.
कस्मात् ?
(சி) - எதனால்?
लक्षणभेदात् , अश्वमहिषवत् । कथं लक्षणभेद इति, उच्यते — ईश्वरस्य तावन्नित्यं सर्वविषयं ज्ञानं सवितृप्रकाशवत् । तद्विपरीतं संसारिणां खद्योतस्येव । तथैव शक्तिभेदोऽपि । नित्या सर्वविषया चेश्वरशक्तिः ; विपरीतेतरस्य । कर्म च चित्स्वरूपात्मसत्तामात्रनिमित्तमीश्वरस्य । औष्ण्यस्वरूपद्रव्यसत्तामात्रनिमित्तदहनकर्मवत् राजायस्कान्तप्रकाशकर्मवच्च स्वात्मनोऽविक्रिया रूपम् ; विपरीतमितरस्य । ‘उपासीत’ इति वचनादुपास्य ईश्वरो गुरुराजवत् । उपासकश्चेतरः शिष्यभृत्यवत् । अपहतपाप्मादिश्रवणान्नित्यशुद्ध ईश्वरः । ‘पुण्यो वै पुण्येन’ (बृ. उ. ३ । २ । १३) इति वचनाद्विपरीत इतरः ।
(பூர்வ) குதிரை, எருமை இவைகளைப் போல் லக்ஷண பேதம் இருப்பதால் எவ்வாறு லக்ஷண பேதம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஈஸ்வரனுடைய ஞானம் சூரியப்பிரகாசம் போல் நித்யமான எல்லா விஷய ஞானமும் இருக்கிறது. (சர்வக் ஞத்துவம்) சம்சாரிகளுக்கு அதற்கு விபரீதமான மின்னல் பூச்சியின் பிரகாசம் போல் அநித்திய சிறிதுஞானம் இருக்கிறது. (கிஞ்சிக்ஞம்) அவ்வாறேசக்தியின் பேதமுமாகும். அவ்வாறேஈஸ்வரனுடைய சக்தி நித்தியமானதாயும் சர்வவிஷயமாயும் இருக்கிறது. ஆனால் சம்சாரியின் சக்தியும் விபரீதமாய் இருக்கிறது. ஈஸ்வரனுடைய கர்மமும் அதனுடைய சித்ஸ்வரூபியின் சத்தாமாத்திரமாய் இருக்கிறது. எவ்வாறு உஷ்ணமுடைய பதார்த்தங்களின் (சூரியன் முதலியவைகளின்) சத்தாமாத்திரத்தினால் சூடுபடுத்தும் காரியம் ஏற்படுகிறதோ அவ்வாறாகும். அல்லது எவ்வாறு ராஜா, அயஸ்காந்தம், பிரகாசம் முதலியவைகளின் சந்நிதானத்தின் முன் ஏற்படும் கர்மம்போல் விகாரரூபத்தை அடைகிறது. ஆனால் சம்சாரியினுடைய கர்மம் இதைவிட மாறுபட்டதாகும். उपासीत (உபாசீத) என்றசுருதியை அனுசரித்து ஈஸ்வரன், குரு அவ்வாறேராஜா இவர்களுக்கு சமமாக உபாசிக்கப்பட வேண்டியது அவ்வாறேசம்சாரீ சிஷ்யன் சேவகனுக்கு சமானமான உபாசகன் ஆகிறான். अपहतपाप्मा (அபஹத பாப்மா) முதலிய சுருதிகளை அனுசரித்து ஈஸ்வரன் நித்திய சுத்தன். पुण्यो वै पुण्येन முதலிய ஸ்ருதி வாக்கியங்களால் சம்சாரி ஜீவன் இதைக் காட்டிலும் விபரீதமானவன்.
अत एव नित्यमुक्त ईश्वरः । नित्याशुद्धियोगात्संसारीतरः । यत्र च ज्ञानादिलक्षणभेदोऽस्ति तत्र भेदो दृष्टः यथा अश्वमहिषयोः । तथा ज्ञानादिलक्षणभेदादीश्वरादात्मनां भेदोऽस्तीति चेत् ।
ஆகையால் ஈஸ்வரன் நித்யமுக்தனே. நித்ய அசுத்தத்துடன் கூடியவன் சம்சாரி மேலும் எவ்வாறு குதிரைக்கும் எருமைக்கும் பேதம் காணப்படுகிறதோ அங்கு ஞானமுதலியவைகளின் பேதம் இருக்கிறது. அவ்வாறேஞான முதலிய லக்ஷண பேதத்தால் ஈஸ்வரனுக்கும் ஜீவர்களுக்கும் பேதம் இருக்கிறது என்றால்.
न ।
(சி) இல்லை
कस्मात् ?
(பூர்வ) எதனால்
(சி) “अन्योेेऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யோ ऽசாவன்யோ அஹமஸ்மீதி = அது (பிரஹ்மம்) வேறு நான் வேறு என்று எவன் அறிகிறானோ அவன் அறியவில்லை.) “ते क्षय्यलोका भवन्ति” (தே க்ஷய்ய லோகா பவந்தி = அவர்கள் அழியக்கூடிய லோகத்தை அடைவார்கள்), “मृत्योः स मृत्युमाप्नोति” (ம்ருத்யோ : ஸ ம்ருத்யுமாப்னோதி) = மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள்) என்று பேததிருஷ்ட்டியை நிஷேதம் செய்திருக்கின்றார்கள். ஏகத்துவத்தைப் பிரதி பாதிக்கின்றஆயிரக்கணக்கான சுருதிகள் இருக்கின்றன.
यदुक्तं ज्ञानादिलक्षणभेदादिति अत्रोच्यते । न, अनभ्युपगमात् । बुद्ध्यादिभ्यो व्यतिरिक्ता विलक्षणाश्चेश्वराद्भिन्नलक्षणा आत्मानो न सन्ति । एक एवेश्वरश्चात्मा सर्वभूतानां नित्यमुक्तोऽभ्युपगम्यते । बाह्यश्च बुद्ध्यादिसमाहारसन्तानाहङ्कारममत्वादिविपरीतप्रत्ययप्रबन्धाविच्छेदलक्षणो नित्यशुद्धबुद्धमुक्तस्वरूपविज्ञानात्मेश्वरगर्भो नित्यविज्ञानावभासः चित्तचैत्त्यबीजबीजिस्वभावः कल्पितोऽनित्यविज्ञान ईश्वरलक्षणविपरीतोऽभ्युपगम्यते । यस्याविच्छेदे संसारव्यवहारः ; विच्छेदे च मोक्षव्यवहारः ।
ஞான முதலிய லக்ஷணங்களில் உள்ள பேதத்தின் காரணமாக ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பேதம் உள்ளது என்று எது உன்னால் கூறப்பட்டதோ அது பொருத்தமில்லாததால் பொருந்தாது. புத்தி முதலிய உபாதிகளைக் காட்டிலும் விலக்ஷணமாகவும் வேறானதாகவும் ஒரு ஜீவன் இல்லை. ஒரே நித்ய முக்த ஈஸ்வரன் எல்லா ஜீவர்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறான். ஏன்எனில் கண்கள் மேலும் புத்தி முதலியவைகளின் சங்காதத்தின் பரம்பரையால் உண்டான அஹங்காரமமகார ரூபவிபரீத ஞானத்தின் ஒழிவு ஏற்படாதது எதற்கு லக்ஷணமோ அதற்கு நித்ய, சுத்த புக்த, முக்த விக்ஞானரூப ஈஸ்வரனே அந்தர்யாமியாகும். அதற்கு ஸ்வயம் நித்ய விக்ஞானத்தின் அவபாச சித்த (பிரதிபிம்பம்), சைத்திய (சுக முதலிய விஷயங்கள்) பீஜம் (அவித்யா) மேலும் பீஜி (தேஹாதிகள்) இவைகளுடன் தாதாத்மியம் ஏற்பட்ட அந்த ரூபமாகவே ஆகிறது அவ்வாறு கல்பிக்கப்பட்ட அநித்திய விக்ஞானவான் மேலும் ஈஸ்வரனுடைய லக்ஷணங்களை காட்டிலும் விபரீதமானவன். அவனே பாஹ்ய ஜீவன் எனப்படுகிறான். எவனுக்கு இந்த உபாதி ஸ்வரூபம் நாசமாகவில்லையோ அவனுக்கு சம்சார வியவஹாரம் ஏற்படுகிறது அவ்வாறேஎவனுக்கு நீங்குகிறதோ அவனுக்கு மோக்ஷ வியவஹாரம் ஏற்படுகிறது.
अन्यश्च मृत्प्रलेपवत्प्रत्यक्षप्रध्वंसो देवपितृमनुष्यादिलक्षणो भूतविशेषसमाहारो न पुनश्चतुर्थोऽन्यो भिन्नलक्षण ईश्वरादभ्युपगम्यते ।
மேலும் மற்றவர் மரணமடைந்தவன் பிரத்யக்ஷமாக நாசமடைவதுபோல் தேவர், பித்ரு, மனுஷ்ய முதலிய லக்ஷணங்கள் கூடிய ஜீவர்கள் (ஆத்மாவைக் காட்டிலும்) எவ்வகையிலும் வேறானவர்களே. ஆனால் ஸ்தூல, சூக்ஷ்ம சுஷுப்தி ஆகிய மூன்று சரீரங்களை காட்டிலும்  வேறான நான்காவது அதாவது சதுர்த்த ஆத்மா அந்த ஈஸ்வரனைக் காட்டிலும் வேறான லக்ஷணங்கள் உடையது ஆகாது.
बुद्ध्यादिकल्पितात्मव्यतिरेकाभिप्रायेण तु लक्षणभेदादित्याश्रयासिद्धो हेतुः, ईश्वरादन्यस्यात्मनोऽसत्त्वात् ।
புத்தி முதலியவைகளால் கல்பிக்கப்பட்டவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறானது என்று லக்ஷண பேதம் முதலியவைகளை அபேக்ஷித்து கூறப்பட்ட காரணமானது இங்கு பொருந்தாது. ஏன் எனில் ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு கல்பித ஆத்மா அசத்தியமானதால்.
ईश्वरस्यैव विरुद्धलक्षणत्वमयुक्तमिति चेत् सुखदुःखादियोगश्च,
(பூர்வ) (ஈஸ்வரனைக் காட்டிலும் வேறான விருத்த லக்ஷணம் உடைய ஆத்மா ஒன்றும் இல்லையெனில்) ஈஸ்வரனிடமே விருத்த லக்ஷணமும், அவ்வாறே சுக துக்க முதலியவைகளும் உள்ளது எனில் அது பொருந்தாது.
न । निमित्तत्वे सति लोकविपर्ययाध्यारोपणात् , सवितृवत् । यथा हि सविता नित्यप्रकाशरूपत्वाल्लोकाभिव्यक्त्यनभिव्यक्तिनिमित्तत्वे सति लोकदृष्टिविपर्ययेणोदयास्तमयाहोरात्रादिकर्तृत्वाध्यारोपभाग्भवति, एवमीश्वरे नित्यविज्ञानशक्तिरूपे लोकज्ञानापोहसुखदुःखस्मृत्यादिनिमित्तत्वे सति लोकविपरीतबुद्ध्याध्यारोपितं विपरीतलक्षणत्वं सुखदुःखादयश्च न स्वतः ।
என்று கூறுவது சரியல்ல. சூரியன்போல் ஆத்மா லோக விபர்யயத்தின் அத்யாரோபத்திற்கு நிமித்தமாத்திரமாய் இருக்கிறது. எவ்வாறு சூரியன் நித்யபிரகாசரூபமாய் இருப்பதால் லோகத்தின் வெளிப்பாட்டிற்கும் (அபிவியக்தம்) அடங்குதலுக்கும் (அநபிவியக்தம்) நிமித்தமாய் இருக்கும்பொழுது லோகத்ருஷ்டியின் விபர்யயத்தால் உதயம், அஸ்தமனம், அஹோராத்திரி முதலிய கர்த்திருத்வங்களை அத்யாரோபம் செய்வதாய் ஆகிறது. அவ்வாறு நித்தியவிக்ஞான சக்தி ரூப ஈஸ்வரனிடத்தில் லோகஞானத்தின் நாசமும், அவ்வாறேசுக துக்க, ஸ்ம்ருதி முதலிய நிமித்தங்கள் இருக்கும் பொழுது லோக விபரீத புத்தி ஆரோபிக்கப்படுகிறது.  அவ்வாறேசுகதுக்கங்களுக்கு ஆஸ்ரயம் ஆரோபிக்கப்படுகிறது. அவற்றிற்கு சுயமானபாவம் இல்லை.
आत्मदृष्ट्यनुरूपाध्यारोपाच्च । यथा घनादिविप्रकीर्णेऽम्बरे येनैव सवितृप्रकाशो न दृश्यते, स आत्मदृष्ट्यनुरूपमेवाध्यस्यति सवितेदानीमिह न प्रकाशयतीति सत्येव प्रकाशेऽन्यत्र भ्रान्त्या । एवमिह बौद्धादिवृत्त्युद्भवाभिभवाकुलभ्रान्त्याध्यारोपितः सुखदुःखादियोग उपपद्यते ।
மேலும் எல்லா ஜீவர்களும் தங்களுடைய திருஷ்ட்டியை அனுசரித்து அதில் ஆரோபம் செய்கிறார்கள். எவ்வாறெனில் கருமேகங்களால் சூழப்பட்டதினால் ஆகாயத்தில் சூரியப் பிரகாசம் காணப்படவில்லை. ஆனால் மற்றஇடத்தில் பிரகாசிக்கிறது. பிராந்தியினால் தன்னுடைய திருஷ்ட்டியை அனுசரித்துத்தான் சூரியன் இப்பொழுது இங்கு பிரகாசிக்கவில்லை என்று அத்யாசம் செய்கின்றான். அவ்வாறு இங்கு புத்தி முதலியவைகளின் விருத்திகள் உண்டாவதும் மறைவதால் வியாகூலம் அடைந்ததால் ஏற்பட்ட பிராந்தியினால் ஆரோபிக்கப்பட்ட சுகதுக்கங்களின் அடைவு உண்டாகிறது.
तत्स्मरणाच्च । तस्यैव ईश्वरस्यैव हि स्मरणम् ‘मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च’ (भ. गी. १५ । १५) ‘नादत्ते कस्यचित्पापम्’ (भ. गी. ५ । १५) इत्यादि । अतो नित्यमुक्त एकस्मिन्सवितरीव लोकाविद्याध्यारोपितमीश्वरे संसारित्वम् ; शास्त्रादिप्रामाण्यादभ्युपगतमसंसारित्वमित्यविरोध इति ।
இந்த விஷயத்தில் ஸ்மிருதியும் இருக்கிறது. அந்த ஈஸ்வரனுடைய ஸ்மிருதிவாக்கியம் “मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च” (மத்த: ஸ்மிருதி ஞானமபோஹனம் ச = என்னிடமிருந்து ஸ்மிருதி, ஞானம், அக்ஞானம் உண்டாயிற்று. “नादत्ते कस्यचित्पापम्” ( ந ஆதத்தே கஸ்யசித்பாபம் = நான் ஒருவருடைய பாபத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்) என்பது முதலியன. ஆகையால் சூரியனைப் போல் ஒருவனாகிய நித்தமுக்த ஈஸ்வரனிடத்தில் உலகத்தோர் சம்சாரித்துவத்தை அத்யாரோபம் செய்கிறார்கள். சாஸ்திரம் முதலிய பிரமாணங்களால் ஈஸ்வரனிடத்தில் அசம்சாரித்துவத்தை அறிய முடிகிறது. அதனால் விரோதம் இல்லை என்பது தெளிவு ஆகிறது.
एतेन प्रत्येकं ज्ञानादिभेदः प्रत्युक्तः । सौक्ष्म्यचैतन्यसर्वगतत्वाद्यविशेषे च भेदहेत्वभावात् । विक्रियावत्त्वे चानित्यत्वात् । मोक्षे च विशेषानभ्युपगमात् अभ्युपगमे चानित्यत्वप्रसङ्गात् । अविद्यावदुपलभ्यत्वाच्च भेदस्य तत्क्षयेऽनुपपत्तिरिति सिद्धमेकत्वम् ।
இதனால் பிரத்யேக ஜீவனுக்கும் ஞானமுதலிய பேதங்கள் காணப்படுகின்றன. ஏன் எனில் சூக்ஷ்மத்தன்மை, சைதன்யம், சர்வகதம் முதலிய தர்மங்கள் சமானமாய் இருப்பதால் பேதத்திற்கு காரணம் இல்லாமையால் அதற்கு விகாரித் தன்மையை ஏற்றுக்கொண்டால் அநித்தியமாகும். இதைத் தவிர மோக்ஷ தசையில் ஆத்மாவிற்கு ஒரு விசேஷ பாவமும் கிடையாது. பாவம் இருக்கிறது என்றால் அதற்கு அநித்திய பிரசங்கம் ஏற்படும். அவ்வாறேபேதமானது அவித்தை உடையவனாலேயே அடையப்படுகிறது. அவித்யா க்ஷயமாகிவிட்டால் பேதம் இல்லாமல் போகும். ஆகையால் ஏகத்துவமே சித்திக்கிறது.
तस्माच्छरीरेन्द्रियमनोबुद्धिविषयवेदनासन्तानस्याहङ्कारसम्बन्धादज्ञानबीजस्य नित्यविज्ञानान्यनिमित्तस्यात्मतत्त्वयाथात्म्यविज्ञानाद्विनिवृत्तावज्ञानबीजस्य विच्छेद आत्मनो मोक्षसंज्ञा, विपर्यये च बन्धसंज्ञा ; स्वरूपापेक्षत्वादुभयोः ।
ஆகையால் சரீர இந்திரிய மனது புத்தி, விஷயம் அவ்வாறேஇந்திரிய ஞானப்பிரவாஹம் இவைகள் நித்திய விக்ஞான சொரூபமான ஆத்மாவைக் காட்டிலும் வேறான மற்றஒரு நிமித்தத்தால் விளங்குகிறது. ஆத்மாவின் யதார்த்த ஞானத்தினால் அந்த நிமித்தத்தின் நீக்கத்தால் அக்ஞானமாகிய பீஜமானது நசிக்கிறது. அது ஆத்மாவின் மோக்ஷம் எனப்படுகிறது. இதற்குமாறானது பந்தம் எனப்படுகிறது. ஏன்எனில் இவை இரண்டும் (புத்தி முதலியவைகளின் உபாதி உடைய) ஸ்வரூபத்தை அபேக்ஷிக்கின்றது.
ब्रह्म — ह इत्यैतिह्यार्थः — पुरा किल देवासुरसङ्ग्रामे जगत्स्थितिपरिपिपालयिषया आत्मानुशासनानुवर्तिभ्यो देवेभ्यः अर्थिभ्योऽर्थाय विजिग्ये अजैषीदसुरान् । ब्रह्मण इच्छानिमित्तो विजयो देवानां बभूवेत्यर्थः । तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त । यज्ञादिलोकस्थित्यपहारिष्वसुरेषु पराजितेषु देवा वृद्धिं पूजां वा प्राप्तवन्तः ।
(பிரஹ்ம ஹ) என்பது இதிகாச அர்த்தத்தைக் குறிக்கிறது. முன்பு தேவாசுரர்களுடைய யுத்தத்தில் உலகஸ்திதியின் ரக்ஷணையின் பொருட்டு தன்னுடைய பிரஹ்மத்தினுடைய கட்டளையை அனுசரிக்கின்றதேவர்களின் வேண்டுகோளாகிய ஜயத்தின் பொருட்டு அசுரர்களை ஜயித்தார். பிரஹ்மத்தினுடைய இச்சாமர்த்திரத்தினாலேயே தேவர்களுக்கு ஜயம் கிடைத்தது என்பது பொருள். ஆனால் அந்த ப்ரஹ்மத்தினுடைய ஜயத்தை தேவர்கள் தங்களால்தான் அடையப்பட்டது என்று அகந்தையை அடைந்தார்கள். யக்ஞம் முதலிய லோகஸ்திதியை அபகரித்த அசுரர்களை ஜெயித்து தேவர்கள் விருத்தியை அல்லது சத்காரத்தையும் அடைந்தார்கள்.
त ऐक्षन्तेति मिथ्याप्रत्ययत्वाद्धेयत्वख्यापनार्थ आम्नायः ।
(த ஐக்ஷந்த) என்பது முதலிய சாஸ்திர வாக்கியங்கள், மித்யாபிரத்தியயமாகிய அபிமானத்தின் நிவர்த்தியை கூறுவதின் பொருட்டாகும்.
ईश्वरनिमित्ते विजये स्वसामर्थ्यनिमित्तोऽस्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेत्यात्मनो जयादिश्रेयोनिमित्तं सर्वात्मानमात्मस्थं सर्वकल्याणास्पदमीश्वरमेवात्मत्वेनाबुद्ध्वा पिण्डमात्राभिमानाः सन्तो यं मिथ्याप्रत्ययं चक्रुः तस्य पिण्डमात्रविषयत्वेन मिथ्याप्रत्ययत्वात्सर्वात्मेश्वरयाथात्म्यावबोधेन हातव्यताख्यापनार्थः तद्धैषामित्याद्याख्यायिकाम्नायः ।
ஈஸ்வரனுடைய நிமித்தத்தால் ஏற்பட்ட ஜயத்தை தங்களுடைய சாமர்த்தியத்தால்தான் தங்களுக்கு இந்த ஜயம், அவ்வாறேதங்களுக்கு இந்த மஹிமை என்று தங்களுடைய ஜயம் முதலிய ஸ்ரேயஸ்ஸின் காரணம் சர்வாத்மாவாயும், எல்லா கல்யாணங்களின் ஆஸ்பதமாகிய ஆத்மாவில் உள்ள ஈஸ்வரனை ஆத்மா பாவமாக அறியாமல் பிண்டமாத்திரத்தில் அபிமானம் கொண்டு அவர்கள் மித்யா ஞானத்தை அடைந்தார்கள். கேவல பிண்டமாத்திரத்தில் சம்பந்தம் வைத்ததால் அதுமித்யா ஞானஸ்வரூபமாகும். ஆகையால் சர்வாத்மா ஈஸ்வரனுடைய யதார்த்த ஸ்வரூபத்தை போதித்து அவர்களின் மித்யாஞானத்தை நீக்குவதற்காக இந்த “तद्धैषाम्” (தத்ஹைஷாம்) என்பது முதலிய கதை ரூபமாக இந்த சாஸ்திரம் (ஆம்நாயம்) கூறுகிறது.
तद्ब्रह्म ह किल एषां देवानामभिप्रायं मिथ्याहङ्काररूपं विजज्ञौ विज्ञातवत् । ज्ञात्वा च मिथ्याभिमानशातनेन तदनुजिघृक्षया देवेभ्योऽर्थाय तेषामेवेन्द्रियगोचरे नातिदूरे प्रादुर्बभूव महेश्वरशक्तिमायोपात्तेनात्यन्ताद्भुतेन प्रादुर्भूतं किल केनचिद्रूपविशेषेण । तत्किलोपलभमाना अपि देवा न व्यजानत न विज्ञातवन्तः किमिदं यदेतद्यक्षं पूज्यमिति ।
அந்த பிரஹ்மானது தேவர்களுடைய மித்யா அஹங்கார ரூபமான அபிப்ராயத்தை அறிந்து மித்யா அபிமானத்தை நீக்கி அவர்களை அனுகிரஹித்து அவர்களின் நன்மையின் பொருட்டு அவர்களின் இந்திரியத்திற்கு கோசரம் ஆகும்படி அருகில் தோன்றினார். மஹேஷ்வரமாயசக்தியினால் எடுத்துக்கொண்ட ஏதோ ஒரு பெரிய விசித்திரமான ரூபவிசேஷத்தை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த தேவர்கள் இந்த பூஜைக்குரிய யக்ஷன் யார் என்று அறியாதவர்களாய் இருந்தார்கள்.
तद्विज्ञानायाग्निमब्रुवन् । तृणनिधानेऽयमभिप्रायः — अत्यन्तसम्भावितयोरग्निमारुतयोस्तृणदहनादानाशक्त्या आत्मसम्भावना शातिता भवेदिति ।
தேவர்கள் அதை அறிவதன் பொருட்டு அக்னியிடம் கூறினார்கள். திருணத்தை முன் வைத்ததின் அபிப்பிராயம் என்னவெனில் மிக்க அபிமானமுடைய அக்னி, மாருதம் இவைகளுக்கு திருணத்தை தஹிக்கவோ, அசைப்பதற்கோ சாமர்த்தியம் இல்லாமல் போவதால் அக்னி, வாயுவிடம் திடமாக உள்ள அபிமானத்தை நீக்குவதற்காகும்.
इन्द्र आदित्यो वज्रभृद्वा, अविरोधात् । इन्द्रोपसर्पणे ब्रह्म तिरोदध इत्यस्यायमभिप्रायः — इन्द्रोऽहमित्यधिकतमोऽभिमानोऽस्य ; सोऽहमग्न्यादिभिः प्राप्तं वाक्सम्भाषणमात्रमप्यनेन न प्राप्तोऽस्मीत्यभिमानं कथं न नाम जह्यादिति । तदनुग्रहायैवान्तर्हितं तद्ब्रह्म बभूव ।
இந்திரன், ஆதித்தியன் அல்லது வஜ்ரதாரி இவைகள் தேவராஜாவினுடைய பெயர்கள்.ஏனெனில் இந்த இரண்டு அர்த்தங்களிலும் அர்த்தம் விரோதமில்லை. பிரஹ்மம் இந்திரன் சமீபத்தில்  வந்த உடன் மறைந்து விட்டது. இதன் அபிப்ராயம் என்னவெனில் நான் இந்திரன் என்று எல்லோரைக்காட்டிலும் மிகுந்த அபிமானம் உள்ளதால் என்னால் அக்னி முதலியவைகளிடம் சம்பாஷனை செய்ய முடிந்தது போல், அதுவும் என்னால் முடியவில்லை என்று நினைத்து எவ்விதத்திலாவது இந்திரன் அபிமானத்தை விடவேண்டும் என்பதால் அதனிடத்தில் கிருபை கொண்டு பிரஹ்மம் மறைந்தது.
स शान्ताभिमान इन्द्रः अत्यर्थं ब्रह्म विजिज्ञासुः यस्मिन्नाकाशे ब्रह्मणः प्रादुर्भाव आसीत्तिरोधानं च, तस्मिन्नेव स्त्रियमतिरूपिणीं विद्यामाजगाम । अभिप्रायोद्बोधहेतुत्वाद्रुद्रपत्नी उमा हैमवतीव बहु शोभमाना विद्यैव । विरूपोऽपि विद्यावान्बहु शोभते ॥
இவ்வாறு அபிமானத்தை விட்டதை அறிந்த இந்திரன் பிரஹ்மத்தைப்பற்றி அறிய மிகுந்த இச்சை உள்ளவனானான். அதே ஆகாசப்பிரதேசத்தில் எங்கு பிரஹ்மம் தோன்றி மறைந்ததோ அங்கு ஒரு மிகுந்த அழகானபெண் வித்யா அவர் பக்கத்தில் வந்தாள். பிரஹ்மத்தின் ரகஸ்யத்தை அறிவிப்பதற்காக ருத்திரபத்னீ உமா ஹிமாலய புத்ரி பார்வதிக்கு சமானமான அழகுடைய அந்த பிரஹ்ம வித்யாஸ்வரூபிணி தோன்றினாள்.ஏன்எனில்  அழகற்றவனாய் இருந்தாலும்வித்தை உடையவன் சோபிக்கிறான்.
इति तृतीयखण्डभाष्यम् ॥