द्रविडभाषानुवादसहित

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्

मुण्डकोपनिषद्भाष्यम्

ஶ்ரீமச்சங்கரபகவத்பூஜ்யபாதவிரசிதம்

முண்டகோபநிஷத்பாஷ்யம்

தமிழ் அனுவாதம்: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

 

अपरविद्यायाः सर्वं कार्यमुक्तम् । स च संसारो यत्सारो यस्मान्मूलादक्षरात्सम्भवति यस्मिंश्च प्रलीयते, तदक्षरं पुरुषाख्यं सत्यम् । यस्मिन्विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति, तत्परस्या ब्रह्मविद्याया विषयः । स वक्तव्य इत्युत्तरो ग्रन्थ आरभ्यते —
அபரவித்தையின் எல்லா காரியங்களும் கூறப்பட்டது. எது சாரமோ அந்த சம்சாரமானது எந்த மூலமான அக்ஷரத்திலிருந்து உண்டாகிறதோ, எதில் மறுபடியும் லயத்தை அடைகிறதோ அது என்றும் நாசமற்ற புருஷன் எனப்படும் ஸத்தியமாகும். எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ அந்த பரவித்தையின் விஷயம் இனி கூறத்தக்கது என்று மேலே தொடங்கப்படுகிறது.
तदेतत्सत्यं यथा सुदीप्तात्पावकाद्विस्फुलिङ्गाः सहस्रशः प्रभवन्ते सरूपाः ।
तथाक्षराद्विविधाः सोम्य भावाः प्रजायन्ते तत्र चैवापियन्ति ॥ १ ॥
यदपरविद्याविषयं कर्मफललक्षणम् , सत्यं तदापेक्षिकम् । इदं तु परविद्याविषयम् , परमार्थसल्लक्षणत्वात् । तदेतत् सत्यं यथाभूतं विद्याविषयम् ; अविद्याविषयत्वाच्च अनृतमितरत् । अत्यन्तपरोक्षत्वात्कथं नाम प्रत्यक्षवत्सत्यमक्षरं प्रतिपद्येरन्निति दृष्टान्तमाह —
கர்மபல லக்ஷணமான அபரவித்தையின் சத்தியம் கர்மாதிகளை அபேக்ஷித்தபடியால் அது ஆபேக்ஷிகம். இந்தப் பரவித்தை விஷயமோ எதையும் அபேக்ஷிக்காமல் பரமார்த்த ஸ்வரூபமாய் விளங்குவதாகும். तत् एतत् सत्यम् (தத் ஏதத் சத்தியம்) அந்த இந்த வித்யாவிஷய சத்தியமோ அது யதார்த்த சத்தியம். இதைக்காட்டிலும் வேறானது அவித்யா விஷயமானதினால் இது பொய்யானது (அசத்தியமாகும்). அந்த சத்தியமாயும், அக்ஷரமாயும் உள்ளது மிகவும் பரோக்ஷமாய் இருப்பதால் எவ்வாறு பிரத்யக்ஷம் போல் (சாதகர்கள்) கண்டறிவர்? என்பதை திருஷ்டாந்தத்துடன் கூறுகிறார்.
यथा सुदीप्तात् सुष्ठु दीप्तादिद्धात् पावकात् अग्नेः विस्फुलिङ्गाः अग्न्यवयवाः सहस्रशः अनेकशः प्रभवन्ते निर्गच्छन्ति सरूपाः अग्निसलक्षणा एव, तथा उक्तलक्षणात् अक्षरात् विविधाः नानादेहोपाधिभेदमनुविधीयमानत्वाद्विविधाः हे सोम्य, भावाः जीवाः आकाशादिवद्घटादिपरिच्छिन्नाः सुषिरभेदा घटाद्युपाधिप्रभेदमनु भवन्ति ; एवं नानानामरूपकृतदेहोपाधिप्रभवमनु प्रजायन्ते, तत्र चैव तस्मिन्नेव चाक्षरे अपियन्ति देहोपाधिविलयमनु विलीयन्ते घटादिविलयमन्विव सुषिरभेदाः ।
थथा-(யதா) எவ்வாறு सुदिप्तात्-(சுதீப்தாத்) நன்கு விறகுகளில் பற்றி எரிகின்ற पावकात्- (பாவகாத்) அக்நியிலிருந்து सरूपाः (சரூபா:) அந்த அக்நிலக்ஷணமாகவே உள்ள विस्फुलिङ्गाः (விஸ்புலிங்கா:) அக்நி அவயங்களான தீப்பொறிகள் विस्फुलिङ्गाः (சகஸ்ரச:) ஆயிரக்கணக்காக प्रभवन्ते (ப்ரபவந்தே) வெளிவருகின்றவனோ तथा (ததா) அவ்வாறே (அக்ஷராத்) முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய அக்ஷரமான பரம்பொருளிலிருந்து विविधाः (விவிதா:) பலதரப்பட்ட தேஹ உபாதி பேதங்களை அனுசரிக்கக்கூடிய भावाः (பாவா:) ஜீவர்கள். குடம் முதலான பரிச்சின்னமான வஸ்துக்களால் பகுக்கப்பட்ட ஆகாசம் முதலானவை எவ்வாறு குடம் முதலான உபாதி பேதங்களை அனுபவிக்கின்றனவோ அவ்வாறே பல விதமான நாமரூபங்களால் உண்டான உபாதிகளை இயக்கும் தன்மையுடைய ஜீவர்கள் प्रजायन्ते - (ப்ரஐாயந்தே) உண்டாகின்றனர். तत्र च एव -(தத்ர ச்ச ஏவ) அந்த அக்ஷரத்திலேயே अपि यन्ति - (அபி யந்தி) எவ்வாறு கடம் முதலியவைகள் நஷ்டமடைந்த (கடாகாசம் முதலிய) துவாரபேதங்கள் மஹா ஆகாயத்தில் லீனமாகிறதோ அவ்வாறே தேஹ முதலிய உபாதிகள் நஷ்டமானதும் அவை எல்லாம் (ஐீவர்கள்) அக்ஷரத்தில்லீனமாகின்றன.
यथाऽऽकाशस्य सुषिरभेदोत्पत्तिप्रलयनिमित्तत्वं घटाद्युपाधिकृतमेव, तद्वदक्षरस्यापि नामरूपकृतदेहोपाधिनिमित्तमेव जीवोत्पत्तिप्रलयनिमित्तत्वम् ॥
எவ்வாறு ஆகாசத்திற்கு சில (ஸுஷிர) துவார பேதங்களின் உற்பத்தி நாசங்களின் காரணமாகவே, கடாதி உபாதிகள் உண்டாகின்றனவோ, அவ்வாறே இவ்வக்ஷரமான பரம்பொருளுக்கு நாமரூபங்களால் உண்டான தேஹோபாதி காரணங்களே ஐீவனின் உற்பத்தி லயங்களுக்கு நிமித்தமாகும்.
नामरूपबीजभूतादव्याकृताख्यात्स्वविकारापेक्षया परादक्षरात्परं यत्सर्वोपाधिभेदवर्जितमक्षरस्यैव स्वरूपमाकाशस्येव सर्वमूर्तिवर्जितं नेति नेतीत्यादिविशेषणं विवक्षन्नाह —
நாம பேதங்களுக்கு பீஐபூதமான அவ்யாகிருதத்தின்றும் தன்னுடைய விகாரங்களைக் குறித்தும் மேலான அக்ஷரத்தைக் காட்டிலும் (மூலப்பிரக்ருதியைக் காட்டிலும்) மேலானது எதுவோ அது எல்லாவிதமான உபாதிகளிலிருந்தும் விடுபட்ட அக்ஷரமாகிய பரமாத்மாவையே ஆகாசத்தைப்போல் எல்லா ரூபங்களும் (முர்த்தி ஸ்வரூபம்) அற்றதாய் இருப்பதை நேதி, நேதி முதலிய வாக்கியங்களால் விளக்குகிறார்.
दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः ।
अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः ॥ २ ॥
दिव्यः द्योतनवान् , स्वयञ्ज्योतिष्ट्वात् । दिवि वा स्वात्मनि भवः अलौकिको वा । हि यस्मात् अमूर्तः सर्वमूर्तिवर्जितः, पुरुषः पूर्णः पुरिशयो वा, सबाह्याभ्यन्तरः सह बाह्याभ्यन्तरेण वर्तत इति । अजः न जायते कुतश्चित् , स्वतोऽजस्य जन्मनिमित्तस्य चाभावात् ; यथा जलबुद्बुदादेर्वाय्वादिः, यथा नभःसुषिरभेदानां घटादिः । सर्वभावविकाराणां जनिमूलत्वात् तत्प्रतिषेधेन सर्वे प्रतिषिद्धा भवन्ति । सबाह्याभ्यन्तरो ह्यजः अतोऽजरोऽमृतोऽक्षरो ध्रुवोऽभय इत्यर्थः ।
दिव्यः (திவ்ய:) ஸ்வயம் ஐ்யோதி ஸ்வரூபனாய் இருப்பதால் எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவன் அல்லது, தேவலோகத்தில் அல்லது ஸ்வாத்மாவிடத்திலேயே நிலைத்திருப்பதால் அலெளகிகமானது. हि (ஹி) ஏன்எனில் अमूर्तः (அமூர்த்த:) எல்லா சரீரரூபங்கள் அற்றவன். पुरुषः - (என்றால்) பூர்ணமானவன் அல்லது சரீரரூபபுருஷனுள் சயனித்திருப்பவன் திவ்யமாயும் அமூா்த்தமாயும் உள்ள புருஷன் सबाह्याभ्यन्तरः (சபாஹ்யாப்யந்தர:) உள்ளும், புறமும் கூடியது அதாவது உள்ளும் புறமும் நிறைந்தது. अजः (அஐ:) எவ்வாறு ஐலத்தில் உண்டாகும் நுறை திவலை முதலியவைகளுக்கு வாயுவானது காரணமோ, எவ்வாறு கடாகாச முதலிய பேதங்களுக்கு கடம் முதலான பதார்த்தங்கள் காரணமோ அவ்வாறு எங்காவது எப்பொழுதாவது தானாகவோ மற்றொன்றாகவோ இது உண்டாவதற்கான காரணம் இல்லாததினால் அது பிறப்பற்றது. எல்லா பாவவிகாரங்களுக்கும் பிறப்பையே மூலமாகக் கொண்டவை. பிறப்பற்றது என்றதால் எல்லா பாவவிகாரங்களும் அற்றது ஆகிறது. மேலும் அப்பரம்பொருள் உள்ளும், புறமும் நிறைந்ததாயும், பிறப்பற்றதாயும் இருப்பதால் முதுமை அற்றது, மரணம் அற்றது, அம்ருத சொரூபமானது, நாசமற்றது, நிச்சயமானது, பயமற்றது என்று பொருள் படுவதாய் ஆயிற்று.
यद्यपि देहाद्युपाधिभेददृष्टिभेदेषु सप्राणः समनाः सेन्द्रियः सविषय इव प्रत्यवभासते तलमलादिमदिवाकाशम् , तथापि तु स्वतः परमार्थस्वरूपदृष्टीनाम् अप्राणः अविद्यमानः क्रियाशक्तिभेदवान् चलनात्मको वायुर्यस्मिन्नसौ अप्राणः । तथा अमनाः अनेकज्ञानशक्तिभेदवत्सङ्कल्पाद्यात्मकं मनोऽप्यविद्यमानं यस्मिन्सोऽयममनाः । अप्राणो ह्यमनाश्चेति प्राणादिवायुभेदाः कर्मेन्द्रियाणि तद्विषयाश्च तथा बुद्धिमनसी बुद्धीन्द्रियाणि तद्विषयाश्च प्रतिषिद्धा वेदितव्याः ; यथा श्रुत्यन्तरे — ध्यायतीव लेलायतीवेति ।
மேலும் அவித்யாவசத்தால் உபாதிகளில் பேததிருஷ்டி கொண்டவர்களுக்கு ஆகாசமானது தளமலாதிகள் (மலினம்) உடையதாய் தோன்றுவதுபோல் பிராணனுடன் கூடியது போன்றும், மனதுடன் கூடியது போன்றும், இந்திரியங்களுடன் கூடியது போன்றும், விஷயங்களுடன் கூடியது போன்றும் தோற்றமளிப்பினும், உண்மையானதத்துவதிருஷ்டி உடையவர்களுக்கு अप्राणः (அப்பிரானா:) - கிரியாசக்தி பேதங்களுடன் கூடிய சலனாத்மகமானவாயு எவனிடம் இல்லையோ अमनाः (அமனா:) அவ்வாறே அநேக ஞானசக்தி பேதங்களுடன் கூடியதாகும், ஸங்கல்பாத்மகமானதுமான மனது அற்றது. எனவே அப்பிராணன், அமனது எனப்பட்டது. அப்பிராணன், அமனது என்பதால் பிராணாதி வாயு பேதங்களும், கர்மேந்திரியங்களும், அவைகளின் விஷயங்கள் எல்லாம் விலக்கப்பட்டன என்பது அறியத்தக்கது. அவ்வாறே சுருதியிலும் ध्यायतीव लेलायतीव- (த்யாயதீவ லேலாயதீவ) என்று கூறப்பட்டுள்ளது.
यस्माच्चैवं प्रतिषिद्धोपाधिद्वयस्तस्मात् शुभ्रः शुद्धः । अतोऽक्षरान्नामरूपबीजोपाधिलक्षितस्वरूपात् , सर्वकार्यकरणबीजत्वेनोपलक्ष्यमाणत्वात्परं तत्त्वं तदुपाधिलक्षणमव्याकृताख्यमक्षरं सर्वविकारेभ्यतस्मात्परतोऽक्षरात्परः निरुपाधिकः पुरुष इत्यर्थः ।
எதனால் இந்த இரு உபாதிகளும் தடை செய்யப்பட்டதோ அதனால் शुभ्रः (சுப்ர:) பரிசுத்தமானவன். ஆகையால் अक्षरत् (அக்ஷராத்) அக்ஷரத்தைக் காட்டிலும் நாமரூப பீஐ உபாதி லக்ஷணிக்கப்பhட எல்லா காரிய காரண பீஐமானதினால் உப லக்ஷிக்கப்பட்ட அந்த உபாதிலக்ஷணம் அவ்யாகிருதம் எனப்படும். அக்ஷரம் எல்லா விகாரங்களைக் காட்டிலும் परम् (பரம்) மேலானது. परतः (பரத:) அந்த அக்ஷரமாகிய பரத்தைக் காட்டிலும் நிரூபாதிக புருஷன் மேலானவன் (அப்பாற்பட்டவன்) என்பது பொருள்.
यस्मिंस्तदाकाशाख्यमक्षरं संव्यवहारविषयमोतं च प्रोतं च । कथं पुनरप्राणादिमत्त्वं तस्येत्युच्यते । यदि हि प्राणादयः प्रागुत्पत्तेः पुरुष इव स्वेनात्मना सन्ति, तदा पुरुषस्य प्राणदिना विद्यमानेन प्राणादिमत्त्वं स्यात् ; न तु ते प्राणादयः प्रागुत्पत्तेः सन्ति । अतः प्राणादिमान्परः पुरुषः, यथाऽनुत्पन्ने पुत्रे अपुत्रो देवदत्तः ॥
எந்த ஆகாசம எனப்படும் அக்ஷரத்தில் ஓதம்,ப்ரோதம் ஆகிய வியவகார விஷயங்கள் இருக்கும்பொழுது அதை எவ்வாறு பிராணன் முதலியவைகள் அற்றது என்று கூறமுடியும்? பிராணன் முதலியவைகள் உத்பத்திக்கு முன் இருக்கும் பரம புருஷனைப்போல் தன் ஆத்மாவாய் இருக்கும்பொழுது புருஷனுக்கு பிராணன் முதலியவைகள் இருப்பதால் பிராணாதிமத்வம் உண்டாகலாம். ஆனால் அந்த பிராணன் முதலியவைகள் உத்பத்திக்கு முன் இருக்கும் புருஷனைப்போல் தானாகவே இருக்கின்றன எனில் அப்பொழுது எவ்வாறு புத்திரன் உண்டாகாத தேவதத்தன் அபுத்திரன் என்படுகிறானோ அவ்வாறு பரமபுருஷன் ஆகிறான்
कथं ते न सन्ति प्राणादय इति, उच्यते — यस्मात्
एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च ।
खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी ॥ ३ ॥
एतस्मादेव पुरुषान्नामरूपबीजोपाधिलक्षितात् जायते उत्पद्यतेऽविद्याविषयो विकारभूतो नामधेयोऽनृतात्मकः प्राणः, ‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘अनृतम्’ इति श्रुत्यन्तरात् । न हि तेनाविद्याविषयेणानृतेन प्राणेन सप्राणत्वं परस्य स्यादपुत्रस्य स्वप्नदृष्टेनेव पुत्रेण सपुत्रत्वम् ।
एतस्मात्-(ஏதஸ்மாத்) இந்த புருஷனிடம் இருந்தே நாமரூப பீஐ உபாதியாகக் கொண்ட பரம்பொருளிடமிருந்து அவித்யா விஷய விகாரமான நாமதேயமுடைய பொய்யான प्राणाः பிராணன் जायते உண்டாயிற்று. ‘‘வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம்’’ என்னும் ‘‘அனிருதம்’’ என்றும் மற்ற சுருதிகளில் காட்டப்பட்டுள்ளது. அந்த பரம்பொருளுக்கு அவித்யா விஷயமாகிய பொய்யான பிராணனால் பிராணன் உடையதாக ஆகமுடியாது. எவ்வாறு எனில் புத்திரன் இல்லாதவன் சுவப்னத்தில் கண்ட புத்திரனால் புத்திரன் உடையவனாக ஆகமாட்டான்.
एवं मनः सर्वाणि चेन्द्रियाणि विषयाश्चैतस्मादेव जायन्ते । तस्मात्सिद्धमस्य निरुपचरितमप्राणादिमत्त्वमित्यर्थः । यथा च प्रागुत्पत्तेः परमार्थतोऽसन्तस्तथा प्रलीनाश्चेति द्रष्टव्याः । यथा करणानि मनश्चेन्द्रियाणि च, तथा शरीरविषयकारणानि भूतानि खम् आकाशं, वायुः बाह्य आवहादिभेदः, ज्योतिः अग्निः, आपः उदकं, पृथिवी धरित्री विश्वस्य सर्वस्य धारिणी ; एतानि च शब्दस्पर्शरूपरसगन्धोत्तरोत्तरगुणानि पूर्वपूर्वगुणसहितान्येतस्मादेव जायन्ते ॥
एवं இவ்வாறு मनः மனம், सर्वाणि इन्द्रियाणि எல்லா இந்திரியங்கள், விஷயங்கள் எல்லாம் இதிலிருந்தே जायन्ते உண்டாயிற்று. ஆகையால் அதற்கு நிரூபிக்கப்பட்ட அப்ராணாதியாய் இருப்பது சித்தமாகிறது என்பது பொருள். எவ்வாறு (பிராணாதிகள்) உத்பத்திக்குமுன் அசத்தாய் இருந்ததோ அவ்வாறே லயம் அடைந்த பின்பும் இருக்கும் என்று அறியவேண்டும். எவ்வாறு கரணங்கள் மனம், இந்திரியங்கள் உண்டாயிற்றோ அவ்வாறே சரீர விஷய காரணங்களான பூதங்கள் खम् ஆகாயம், वायुः (வாயு:) உள்ளும் வெளியிலும் வீசும் பேதமுடையது. ज्योतिः - அக்னி, आपः தண்ணீர், पृथिवी விச்வத்தை (உலகை) தாங்குவதும், எல்லாவற்றையும் தாங்குவதாகும். இந்த சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த முதலியவைகள் பூர்வ பூர்வகுணங்களுடன் கூடியதாய் உத்தரோத்தர குணங்களுடன் கிரமமாக இதிலிருந்தே உண்டாகின்றன.
सङ्क्षेपतः परविद्याविषयमक्षरं निर्विशेषं पुरुषं सत्यम् ‘दिव्यो ह्यमूर्तः’ (मु. उ. २ । १ । २) इत्यादिना मन्त्रेणोक्त्वा, पुनस्तदेव सविशेषं विस्तरेण वक्तव्यमिति प्रववृते ; सङ्क्षेपविस्तरोक्तो हि पदार्थः सुखाधिगम्यो भवति सूत्रभाष्योक्तिवदिति । यो हि प्रथमजात्प्राणाद्धिरण्यगर्भाज्जायतेऽण्डस्यान्तर्विराट् , स तत्त्वान्तरितत्त्वेन लक्ष्यमाणोऽप्येतस्मादेव पुरुषाज्जायत एतन्मयश्चेत्येतदर्थमाह, तं च विशिनष्टि —
பரவித்யா விஷயமாகிய அக்ஷரம், நிர்விசேஷம், புருஷம், திவ்யம், அம்ருதம் முதலியவைகளால் மந்திரத்தை சுருக்கமாக கூறி மறுபடியும் அதையே விசேஷமாகவும், விஸ்தாரமாகவும் கூற வேண்டும் என்று ஏற்படுகிறது. சுத்திரத்திற்கு பாஷ்யம் போல் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டதால் அல்லவா பதார்த்தமானது நன்றாக புரிந்து கொள்ளமுடியும் என்பதால் (மந்திரத்தால் விளக்கப்படுகிறது). எவன் ஒருவன் முதலாவதாக உண்டான பிராணனாகிய ஹிரண்யகர்பனிடம் இருந்து அண்டத்தினுள் ஊடுறுவி விராட் புருஷன் உண்டாகிறான். அவன் வேறுதத்துவங்களுடன் கூடியவனாகக் கூறப்பட்ட போதிலும் அவனும் இப்பரம புருஷனிடமிருந்தே உண்டாகிறான். அப்பரம புருஷனானவனுங்கூட என்பதனை விளக்க விழைகிறார் இம்மந்திரத்தின் வாயிலாக:-
अग्निर्मूर्धा चक्षुषी चन्द्रसूर्यौ दिशः श्रोत्रे वाग्विवृताश्च वेदाः ।
वायुः प्राणो हृदयं विश्वमस्य पद्भ्यां पृथिवी ह्येष सर्वभूतान्तरात्मा ॥ ४ ॥
अग्निः द्युलोकः, ‘असौ वाव लोको गौतमाग्निः’ (छा. उ. ५ । ४ । १) इति श्रुतेः । मूर्धा यस्योत्तमाङ्गं शिरः, चक्षुषी चन्द्रश्च सूर्यश्चेति चन्द्रसूर्यौ ; यस्येति सर्वत्रानुषङ्गः कर्तव्यः अस्येत्यस्य पदस्य वक्ष्यमाणस्य यस्येति विपरिणामं कृत्वा । दिशः श्रोत्रे यस्य । वाक् विवृताश्च उद्घाटिताः प्रसिद्धा वेदाः यस्य । वायुः प्राणो यस्य । हृदयम् अन्तःकरणं विश्वं समस्तं जगत् अस्य यस्येत्येतत् । सर्वं ह्यन्तःकरणविकारमेव जगत् , मनस्येव सुषुप्ते प्रलयदर्शनात् ; जागरितेऽपि तत एवाग्निविस्फुलिङ्गवद्विप्रतिष्ठानात् । यस्य च पद्भ्यां जाता पृथिवी, एष देवो विष्णुरनन्तः प्रथमशरीरी त्रैलोक्यदेहोपाधिः सर्वेषां भूतानामन्तरात्मा ।
अग्निः அக்கினி தேவலோகம் ‘असौ वाव लोको गौतमाग्निः’ என்ற சுருதியின்படி எவருக்கு मूर्धा (மூர்த்தா) மேலான அவயவமாகிய சிரசோ, चक्षुषी (சக்ஷுஷீ) கண்கள் இரண்டும் चन्द्रसूर्यौ (சந்திர சுா்யெள) சந்திர சுரியர்களோ, अस्य (அஸ்ய) என்று மந்திரத்தில் வரப்போகும் பதத்தை यस्य (யஸ்ய) என்று மாற்றிக்கொண்டு அர்த்தம் செய்யவேண்டும். क्षेत्रे (ஸ்நோத்ரே) இருகாதுகளும் திக்குகளோ, विवृता (விவ்ருதா) வெளிப்பட்ட பிரசித்தமானவே தங்கள் वाक् (வாக்) வாக்கோ, प्राणाः (ப்ராண:) பிராணன் वायुः (வாயு:) வாயுவோ, ह्रुदयं (ஹ்ருதயம்) विक्षं (விச்வம்) அகில உலகங்களோ என்று கூறப்பட்டதின் காரணம் இந்த ஐகத்முழுவதும் அந்தக்கரணத்தின் விகாரமேயாகும். ஏன்எனில் ஸீஷுப்தியில் பிரளயத்தையும், விழித்தஉடன் அதனின்று தீப்பொறி போல் அகில உலகங்களும் தோன்றுவதால் அவ்வாறு கூறப்பட்டது. எவருக்கு पद् भ्यां (பத்பியாம்) பாதங்களில் இருந்து पृथिवी (ப்ருதிவீ) இந்த பூமி உண்டாயிற்றோ एषः (ஏஷ) இந்த தேவன் அநந்தன், விஷ்ணு, முதல் சரீரீயாவன், மூன்று உலகமாகிய சரீரத்தை உபாதியாகக் கொண்டவன். सर्वभूतान्तरात्मा (சர்வ-பூத அந்தராத்மா) எல்லா பூதங்களுடையவும் அந்த ராத்மாவாய் விளங்குகிறார்.
स हि सर्वभूतेषु द्रष्टा श्रोता मन्ता विज्ञाता सर्वकरणात्मा पञ्चाग्निद्वारेण च याः संसरन्ति प्रजाः, ता अपि तस्मादेव पुरुषात्प्रजायन्त इत्युच्यते —
அவனே எல்லா பூதங்களிலும் (ஐீவர்களிலும்) பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும், நினைப்பவனாகவும், நிச்சயிப்பவனாகவும் எல்லாவற்றிற்கும் காரணாத்மாவாக விளங்குகிறான். பஞ்சாக்னி (வான், மழை, பூமி, புருஷன், பெண்) மூலமாக எந்த பிரைஐகள் சம்சாரத்தை அடைகின்றனரோ அவர்களும் அந்த புருஷனிடமிருந்தே உண்டாகின்றனர்.
तस्मादग्निः समिधो यस्य सूर्यः सोमात्पर्जन्य ओषधयः पृथिव्याम् ।
पुमान्रेतः सिञ्चति योषितायां बह्वीः प्रजाः पुरुषात्सम्प्रसूताः ॥ ५ ॥
तस्मात् परस्मात्पुरुषात् प्रजावस्थानविशेषरूपः अग्निः । स विशेष्यते — समिधो यस्य सूर्यः, समिध इव समिधः ; सूर्येण हि द्युलोकः समिध्यते । ततो हि द्युलोकाग्नेर्निष्पन्नात् सोमात् पर्जन्यः द्वितीयोऽग्निः सम्भवति । तस्माच्च पर्जन्यात् ओषधयः पृथिव्यां सम्भवन्ति । ओषधिभ्यः पुरुषाग्नौ हुताभ्य उपादानभूताभ्यः पुमानग्निः रेतः सिञ्चति योषितायां योषिति योषाग्नौ स्त्रियामिति । एवं क्रमेण बह्वीः बह्व्यः प्रजाः ब्राह्मणाद्याः पुरुषात् परस्मात् सम्प्रसूताः समुत्पन्नाः ॥
तस्मात् (தஸ்மாத்) அந்த பரமபுருஷனிடமிருந்து பிரைஐகளின் அவஸ்தான ரூபமான अग्निः (அக்னி:) அக்னி (உண்டாகிறது). அதனுடைய விசேஷம் கூறப்படுகிறது. सूर्यः (சுரிய:) यस्य (யஸ்ய) எந்த லோகத்தை समिधः (சமித:) பிரகாசப்படுத்துபவனோ அக்னி ஹோத்திரத்தில் அக்னிபிரகாசப்படுத்துவதுபோல், சுரியனால் அல்லவா த்விலோகமானது பிரகாசப்படுத்தப்படுகிறது. அந்த த்விலோகமான அக்னியாகிய सोमात् (சோமாத்) சந்திரனிடத்திலிருந்து இரண்டாவது அக்னி पर्जन्यः (பர்ஐன்ய:) மேகமானது உண்டாகிறது. அந்த மேகத்தினால் உண்டான மழையினால் पृथिव्याम् (ப்ருத்திவ்யாம்) ओषधयः (ஓ ஷதய:) ஒ ஷதிகள் (தாவரங்கள்) सम्भवन्ति (சம்பவந்தி) தோன்றுகின்றன. (पुरुषाग्नौ) புருஷனாகிய அக்னியில் ஹவனம் செய்வதால் ஏற்படும் வீரியத்திற்கு உபாதானகாரணமான ஒஷாதிகளிலிருந்து (வீரியம் உண்டாகிறது). पुमान् (புமான்) புருஷரூப அக்னியான रेतः (ரேத:) வீரியமானது योषितायां (யோஷிதாயாம்) ஸ்திரீ எனப்படும் அக்னியில் ஹோமம் செய்கிறான். (நிறப்புகிறான்). இவ்வாறு கிரமமாக पुरुषात् (புருஷாத்) அப்பரம புருஷனிடமிருந்து बह्वीः प्रजाः (பஹ்வீி: ப்ரஐா:) ப்ராமணாதிரூப அநேக பிரைஐகள் सम्प्रसूताः (சம்ப்ரசுதா:) உண்டாயினர்.
किञ्च, कर्मसाधनानि फलानि च तस्मादेवेत्याह — कथम् ?
புருஷனிடமிருந்துதான் கா்மசாதனங்களும் பலன்களும் உண்டானதா? அது எவ்வாறு என்று கூறுகிறாா்-
तस्मादृचः साम यजूंषि दीक्षा यज्ञाश्च सर्वे क्रतवो दक्षिणाश्च ।
संवत्सरश्च यजमानश्च लोकाः सोमो यत्र पवते यत्र सूर्यः ॥ ६ ॥
तस्मात् पुरुषात् ऋचः नियताक्षरपादावसानाः गायत्र्यादिच्छन्दोविशिष्टा मन्त्राः ; साम पाञ्चभक्तिकं साप्तभक्तिकं च स्तोभादिगीतिविशिष्टम् ; यजूंषि अनियताक्षरपादावसानानि वाक्यरूपाणि ; एवं त्रिविधा मन्त्राः । दीक्षाः मौञ्ज्यादिलक्षणाः कर्तृनियमविशेषाः । यज्ञाश्च सर्वे अग्निहोत्रादयः । क्रतवः सयूपाः । दक्षिणाश्च एकगवाद्या अपरिमितसर्वस्वान्ताः । संवत्सरश्च कालः कर्माङ्गभूतः । यजमानश्च कर्ता । लोकाः तस्य कर्मफलभूताः ; ते विशेष्यन्ते — सोमः यत्र येषु लोकेषु पवते पुनाति लोकान् यत्र च येषु सूर्यस्तपति । ते च दक्षिणायनोत्तरायणमार्गद्वयगम्या विद्वदविद्वत्कर्तृफलभूताः ॥ ६ ॥
तस्मात् (தஸ்மாத்) அந்த புருஷனிடமிருந்தே ऋचः (ருச்சோ) குறிப்பிட்ட அக்ஷரம் பாதங்களுடன் கூடிய காயத்திரி முதலிய சந்தஸுடன் கூடிய மந்திரங்களும், साम (சாம) பஞ்ச பாக்திகம், ஸப்த பாக்திகம், ஸ்தோமம் முதலான கீதங்களுடன் கூடிய சாம வேதமும், यजूंषि (யஐும்ஷி) கணக்கில் அடங்காத அக்ஷரங்களுடன் கூடிய பாதங்கள் உடைய வாக்கிய ரூபமாய் உள்ள மந்திரங்களுடன் கூடிய தான யஐீர் வேதமும், ஆக இவ்வாறான மூவகை மந்திரங்களும், दीक्षाः (தீக்ஷா) மெளஞ்சீ முதலான கர்த்தாவின் விசேஷ நியமங்களும், यज्ञाश्च (யக்ஞாச்ச) எல்லா அக்னிஹோத்திரங்களும், सर्वे क्रतवः (சர்வேக்ரதவ:) யூ பங்களுடன் கூடிய எல்லா யாகங்களும் दक्षिणाः च (தக்ஷிணா:ச்ச) ஒரு பசு முதல் கணக்கிலடங்காத பசுக்கள் வரையிலும் உள்ள தக்ஷிணைகளையும், ஸர்வஸ்வத்தையும் அளிக்கும் தக்ஷிணைகளும், संवत्सरः च (சம்வத்சர: ச்ச) வர்ஷம் முதலான கர்மாங்கமான காலங்களும், यजमानश्च (யஐ மானஸ்ச்ச) யாக கர்த்தாவும், लोकाः (லோகா:) கர்மத்தின் பலன்களான லோகங்களும், यत्र सोमः पवते எந்த லோகங்களில் சந்திரன் பரிசுத்தப்படுத்துகிறானோ, यत्र सुर्यः तपति எந்த லோகங்களில் சுரியன் தபிக்கின்றானோ அந்த தக்ஷிண உத்தராயண மார்க்கத்தில் செல்லும் வித்வான் அவித்வான்களின் மார்க்கங்களும் உண்டாகின்றன.
तस्माच्च देवा बहुधा सम्प्रसूताः साध्या मनुष्याः पशवो वयांसि ।
प्राणापानौ व्रीहियवौ तपश्च श्रद्धा सत्यं ब्रह्मचर्यं विधिश्च ॥ ७ ॥
तस्माच्च पुरुषात्कर्माङ्गभूता देवाः बहुधा वस्वादिगणभेदेन सम्प्रसूताः सम्यक् प्रसूताः — साध्याः देवविशेषाः, मनुष्याः कर्माधिकृताः, पशवः ग्राम्यारण्याः, वयांसि पक्षिणः ; जीवनं च मनुष्यादीनां प्राणापानौ, व्रीहियवौ हविरर्थौ ; तपश्च कर्माङ्गं पुरुषसंस्कारलक्षणं स्वतन्त्रं च फलसाधनम् ; श्रद्धा यत्पूर्वकः सर्वपुरुषार्थसाधनप्रयोगश्चित्तप्रसाद आस्तिक्यबुद्धिः ; तथा सत्यम् अनृतवर्जनं यथाभूतार्थवचनं चापीडाकरम् ; ब्रह्मचर्यं मैथुनासमाचारः ; विधिश्च इतिकर्तव्यता ॥
तस्मात् च (தஸ்மாத் ச) அந்த பரம புருஷனிடமிருந்து बहुधा (பஹுதா) வசுவாதி கணபேதங்களுடன் கூடிய देवाः (தேவா:) கர்மங்களுக்கு அங்கபூதங்களான தேவர்கள் सम्प्रसूताः (ஸம்ப்ரஸுதா:) நன்கு உண்டாயினர். (அவ்வாறே) साध्याः (ஸாத்யா:) ஸாத்தியர்கள் என்ற தேவர்களும், मनुष्याः கர்மாக்களைக் செய்வதற்கு அதிகாரமுடைய மனிதர்களும், वयांसि (வயாம்ஸி) பக்ஷிகளும், प्राणापानौ (பிராணாபானெள) மனிதர்களுக்கு ஜீவனபூதமான பிராணாபானன்களும், व्रीहियवौ (வீரீஹியவெள) ஹவிஸ் ஆவதற்கான நெல், தினை முதலிய தானியங்களும், तपश्च (தபஸ்ச்ச) புருஷனுக்கு சமஸ்காரத்தை உண்டுபண்ணுவதும் அவ்வாறே ஸ்வதந்திரமாகவே பலத்தைக் கொடுக்கக்கூடிய கர்மத்தினுடைய அங்கபூதமான தபஸும், श्रद्धा (ச்ரத்தா) எதை முன்னிட்டுக்கொண்டு எல்லா புருஷார்த்த சாதனங்களைச் செய்வதற்கு மனதை ஈடுபடுத்துகிறதோ (आस्तिक्यबुद्धिः) அந்த சிரத்தையும், सत्यं (சத்தியம்) சத்தியமும், ब्रह्मचर्यं (ப்ரஹ்ம சர்யம்) புலனடக்கமும் विधिश्च (விதிச்ச) நெறிமுறைகளும், செயல்முறைகளும் உண்டாயின.
सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्सप्तार्चिषः समिधः सप्त होमाः ।
सप्तेमे लोका येषु चरन्ति प्राणा गुहाशया निहिताः सप्त सप्त ॥ ८ ॥
किञ्च, सप्त शीर्षण्याः प्राणाः तस्मादेव पुरुषात् प्रभवन्ति । तेषां सप्त अर्चिषः दीप्तयः स्वस्वविषयावद्योतनानि । तथा सप्त समिधः सप्तविषयाः ; विषयैर्हि समिध्यन्ते प्राणाः । सप्त होमा ; तद्विषयविज्ञानानि, ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (तै. ना. ८०) इति श्रुत्यन्तरात् । किञ्च, सप्त इमे लोकाः इन्द्रियस्थानानि, येषु चरन्ति सञ्चरन्ति प्राणाः इति विशेषणात् । प्राणा येषु चरन्तीति प्राणानां विशेषणमिदं प्राणापानादिनिवृत्त्यर्थम् । गुहायां शरीरे हृदये वा स्वापकाले शेरत इति गुहाशयाः । निहिताः स्थापिता धात्रा सप्त सप्त प्रतिप्राणिभेदम् । यानि च आत्मयाजिनां विदुषां कर्माणि कर्मफलानि चाविदुषां च कर्माणि तत्साधनानि कर्मफलानि च सर्वं चैतत्परस्मादेव पुरुषात्सर्वज्ञात्प्रसूतमिति प्रकरणार्थः ॥ ८ ॥
சிரஸ்ஸில் இருக்கும் सप्तप्राणाः (சபதப்ராணா:) ஏழு பிராணன்களும் (இந்திரியங்களும்), तस्मात् அந்த பரம புருஷனிடமிருந்தே உண்டாகின்றன. सप्तार्चिषः (சப்தார்ச்சி:) அந்தப்பிராணன்களை வெளிப்படுத்தும் பிரகாசங்களும், அவ்வாறே सप्तसमिधः (சப்தசமித:) அவைகளின் ஏழுவிஷயங்களும் ஏன்எனில் இந்திரியங்கள் தன்னுடைய விஷயங்களை பிரகாசப்படுத்துகின்றன. सप्तहोमाः (சப்தஹோமா:) அந்த விஷயங்களைப் பற்றிய அறிவும், ‘यदस्य विज्ञानं तज्जुहोति’ (யதஸ்ய விக்ஞானம் தத் ஜீஹோதி) என்று மற்றொரு சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. येषु (யே ஷு) அவைகளில் प्राणा (ப்ராணா:) चरन्ति (சரந்தி) ஏழு பிராணன்களும், சஞ்சரிக்கின்றன, இந்த இடத்தில் உள்ள விசேஷம் என்னவெனில் ப்ராணா: என்று கூறியதற்கு பிராண அபானன்களை நிவிர்த்திக்கின்றது. इमे सप्तलोकाः (இமேசப்தலோகா:) இந்த இந்திரியங்களின் ஸ்தானங்களான ஏழு லோகங்களும் (கோளகங்களும்) प्रभवन्ति (பிரபவந்தி) உண்டாகின்றன. குகையில் அதாவது சரீரத்தில் அல்லது ஹ்ருதயத்தில் சொப்பன காலத்தில் ஒடுங்குவதால் गुहाशयाः (குஹாசயா:) सप्तसप्त (சப்தசப்த) ஏழுப் பிராணன்களும் ஒவ்வொரு பிராண பேதத்தினிடமிருந்தும் பிரஹ்ம தேவனால் निहिताः (நிஹிதா:) வைக்கப்படுகின்றன. ஆத்மயாகம் செய்யக்கூடிய வித்வான்களின் கர்மாக்களும், கர்ம பலன்களும் உண்டோ அவைகளும், அவ்வாறே அக்ஞானிகளின் கர்மங்களும், அவைகளின் சாதனங்களும், அவைகளின் பலன்களுமுண்டோ அவைகளும் அந்தப் பரமபுருஷனிடமிருந்தே உண்டாயின என்பது கருத்து.
अतः समुद्रा गिरयश्च सर्वेऽस्मात्स्यन्दन्ते सिन्धवः सर्वरूपाः ।
अतश्च सर्वा ओषधयो रसश्च येनैष भूतैस्तिष्ठते ह्यन्तरात्मा ॥ ९ ॥
अतः पुरुषात् समुद्राः सर्वे क्षाराद्याः । गिरयश्च हिमवदादयः अस्मादेव पुरुषात् सर्वे । स्यन्दन्ते स्रवन्ति गङ्गाद्याः सिन्धवः नद्यः सर्वरूपाः बहुरूपाः । अस्मादेव पुरुषात् सर्वाः ओषधयः व्रीहियवाद्याः । रसश्च मधुरादिः षड्विधः, येन रसेन भूतैः पञ्चभिः स्थूलैः परिवेष्टितः तिष्ठते तिष्ठति हि अन्तरात्मा लिङ्गं सूक्ष्मं शरीरम् । तद्ध्यन्तराले शरीरस्यात्मनश्चात्मवद्वर्तत इत्यन्तरात्मा ॥
अथः (அத:) அந்த பரமபுருஷனிடமிருந்தே समुद्राः (சமுத்ரா:) உப்புக்கடல் முதல் எல்லாக் கடல்களும் (ஏழு கடல்களும்) அந்த புருஷனிடமிருந்தே இமயம் முதலான सर्वे गिरयः च (சர்வே கிரயச்ச) எல்லா மலைகளும் உண்டாகின்றன. अस्मात् (அஸ்மாத்) அந்தப் பரமபுருஷனிடமிருந்தே सर्वरूपाः (சர்வரூபா:) பலவிதமான सिन्धवः (சிந்தவ:) கங்கை முதலான நதிகளும் स्यन्दन्ते (ஸ்யந்தந்தே) பெருகுகின்றன. अतश्च (அதஸ்ச்ச) அந்த பரம புருஷனிடமிருந்தே (சர்வா ஓஷதய:) நெல், தினை, கோதுமை போன்ற பயிர்களும், रसश्च (ரசஸ்ச்ச) இனிப்பு முதலிய ஆறுவிதமான சுவைகளும் (உண்டாகின்றன). येन (யேன) எந்த ரஸத்தினால் भूतैः (பூதை:) உண்டான ஐந்து ஸ்தூல பூதங்களினால் சுழப்பட்டவனாக एष अन्तरात्मा हि (ஏ ஷ அந்தராத்மாஹி) சுக்ஷ்மசரீரமானது तिष्ठति (திஷ்டதி) நிற்கிறது. அதாவது இந்த சுக்ஷ்ம் சரீரமானது தூல சரீரத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையில் ஆன்மா போல் அத்யந்தமாய் இருப்பதால் அந்தராத்மா என்று கூறப்படுகிறது.
एवं पुरुषात्सर्वमिदं सम्प्रसूतम् । अतो वाचारम्भणं विकारो नामधेयमनृतं पुरुष इत्येव सत्यम् ; अतः
இவ்வாறு பரமபுருஷனிடமிருந்தே இவை எல்லாம் உண்டாயின. ஆகையால் இந்த விகாரங்கள் எல்லாம் வாக்கினால் ஆரம்பிக்கப்பட்டவைகளாய் இருப்பதால் பொய்யாகும். பரமபுருஷனே சத்தியம். ஆகையால் -
पुरुष एवेदं विश्वं कर्म तपो ब्रह्म परामृतम् ।
एतद्यो वेद निहितं गुहायां सोऽविद्याग्रन्थिं विकिरतीह सोम्य ॥ १० ॥
पुरुष एव इदं विश्वं सर्वम् । न विश्वं नाम पुरुषादन्यत्किञ्चिदस्ति । अतो यदुक्तं तदेवेदमभिहितम् ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ (मु. उ. १ । १ । ३) इति ; एतस्मिन्हि परस्मिन्नात्मनि सर्वकारणे पुरुषे विज्ञाते, पुरुष एवेदं विश्वं नान्यदस्तीति विज्ञातं भवतीति ।
पुरुष एव इदं विश्वं (புருஷ ஏவேதம் விச்வம்) இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. பரமபுருஷனைக் காட்டிலும் வேறாக உலகம் என்பது சிறிதும் கிடையாது. ஆகையால் எது கூறப்பட்டதோ அதுவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘कस्मिन्नु भगवो विज्ञाते सर्वमिदं विज्ञातं भवति’ इति (ஹே பகவன்! எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் என்று). எல்லாவற்றிற்கும் காரண புருஷனாகிய இந்த பரமாத்மாவை அறிந்தால் இந்த உலகமெல்லாம் பரமபுருஷனே. அவனைத் தவிற வேறு இல்லை என்ற ஞானம் ஏற்படுகிறது.
किं पुनरिदं विश्वमित्युच्यते — कर्म अग्निहोत्रादिलक्षणम् ; तपः ज्ञानं तत्कृतं फलमन्यदेव तावद्धीदं सर्वम् ; तच्च एतद्ब्रह्मणः कार्यम् ; तस्मात्सर्वं ब्रह्म परामृतं परममृतमहमेवेति यो वेद निहितं स्थितं गुहायां हृदि सर्वप्राणिनाम्, सः एवं विज्ञानात् अविद्याग्रन्थिं ग्रन्थिमिव दृढीभूतामविद्यावासनां विकिरति विक्षिपति विनाशयति इह जीवन्नेव, न मृतः सन् हे सोम्य प्रियदर्शन ॥
மேலும் இந்த விச்வம் (உலகம்) என்ன என்பதைக் கூறுகிறார். (கர்ம) அக்னிஹோத்திராதி கர்மங்கள். तपो (தபோ) ஞானம், அதனால் செய்யப்பட்ட பலன் அதேபோல் மற்றவை எல்லாம் (விச்வமே). அது பிரஹ்மத்தினுடைய காரியமாகும். ஆகையால் எல்லாம் परामृतः ब्रहा (பராம்ருதம் ப்ரஹ்ம) மேலான மரணமற்றப்ரஹ்மம் நானே என்று एतत् गुहायां (ஏதத்) (குஹாயாம்) எல்லாப் பிராணிகளுடைய இருதய குகைக்குள் निहितः (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது என்று यो (யோ) அறிகின்றானோ हे सोम्य! प्रियदर्शन! (ஹே ஸோம்ய! ப்ரியதா்சன!) स (ச) அவன் இவ்வாறு அறிந்ததால் अविद्याग्रन्थिं (அவித்யாகிரந்திம்) திடமான முடிச்சு போல் உள்ள அவித்யா வாசனையை (இஹ) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே विकिरति (விகிரதி) நாசம் செய்கின்றான்.
इति द्वितीयमुण्डके प्रथमखण्डशभाष्यम् ॥
आविः संनिहितं गुहाचरं नाम महत्पदमत्रैतत्समर्पितम् ।
एजत्प्राणन्निमिषच्च यदेतज्जानथ सदसद्वरेण्यं परं विज्ञानाद्यद्वरिष्ठं प्रजानाम् ॥ १ ॥
अरूपं सदक्षरं केन प्रकारेण विज्ञेयमित्युच्यते —
ரூபமற்றதாயும் சத்தாயும் உள்ள அக்ஷரத்தை எவ்வாறு அறிவது என்பது கூறப்படுகிறது.
आविः प्रकाशं, संनिहितम् , वागाद्युपाधिभिः — ज्वलति भ्राजतीति श्रुत्यन्तरात् — शब्दादीनुपलभमानवदवभासते ; दर्शनश्रवणमननविज्ञानाद्युपाधिधर्मैराविर्भूतं सल्लक्ष्यते हृदि सर्वप्राणिनाम् । यदेतदाविर्भूतं ब्रह्म संनिहितं सम्यक् स्थितं हृदि, तत् गुहाचरं नाम गुहायां चरतीति दर्शनश्रवणादिप्रकारैर्गुहाचरमिति प्रख्यातम् । महत् सर्वमहत्त्वात् , पदं पद्यते सर्वेणेति, सर्वपदार्थास्पदत्वात् ।
आविः (ஆவி:) எப்பொழுதும் பிரகாசிப்பதாயும், संनिहितः (சந்நிஹிதம்) - வாக்முதலிய உபாதிகளால் பிரகாசிப்பதாயும், மற்ற சுருதிவாயிலாக சப்தாதிகளால் அடையப்பட்டது போல் விளங்குகிறது. எல்லா ஜீவர்களுடைய இருதயத்தில் தர்சன சிரவண மனன விக்ஞான முதலிய உபாதி தர்மங்களால் ஆவிர்பாவமடைந்ததாய் உள்ளது. அந்த இந்த ஆவிர்பிரஹ்மானது ஹருதயத்தில் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது गुहाचरं नाम (குஹாசரம் நாம) குஹாசரம் என்றால் கேட்டால், பார்த்தல் போன்ற பிரகாசங்களால் ஹிருதயத்தில் சஞ்சரிப்பது என்று கூறப்பட்டதாகும். எல்லாவற்றையும் விட மிகப்பெரிய தாய் இருப்பதால் எல்லா பதார்த்தங்களுக்கும் ஆஸ்பதமாயும், எல்லோராலும் அடையப்பட வேண்டியதாய் இருப்பதால் (பதம்)
कथं तन्महत्पदमिति, उच्यते ? यतः अत्र अस्मिन्ब्रह्मणि एतत्सर्वं समर्पितं सम्प्रवेशितं रथनाभाविवाराः — एजत् चलत्पक्ष्यादि, प्राणत् प्राणितीति प्राणापानादिमन्मनुष्यपश्वादि, निमिषच्च यन्निमेषादिक्रियावत् , यच्चानिमिषत् ; च - शब्दात् समस्तमेतदत्रैव ब्रह्मणि समर्पितम् ।
அந்த மஹத்பதம் எவ்வாறு பொருந்தும் எனில் கூறப்படுகிறது. எதனால் ரதத்தின் சக்கரத்தின் நடுவில் உள் குடத்தில் ஆராக்கால்கள் இணைக்கப்பட்டது போல் अत्र (அத்ர) இந்த பிரஹ்மத்திடத்தில் एतत् (ஏதத்) இவையாவும் समर्पितं (சமர்ப்பிதம்) இணைக்கப்பட்டுள்து (ஏஐத்) சஞ்சரிக்கின்ற பக்ஷி முதலானவைகளும், प्राणत् (ப்ராணத்) பிராணாதிகளுடன் கூடிய மனிதன், பசு (மிருகங்கள்) முதலியவைகளும், निमिषच्च (நிமிஷச்ச) கண் இமைப்பவை கண் இமைக்காதவை போன்றயாவும் இந்த பிரஹ்மத்தினிடத்திலேயே இணைக்கப்பட்டுள்ளன.
एतत् यदास्पदं सर्वं जानथ हे शिष्याः, अवगच्छत तदात्मभूतं भवताम् ; सदसत् सदसत्स्वरूपं सदसतोर्मूर्तामूर्तयोः स्थूलसूक्ष्मयोः, तद्व्यतिरेकेणाभावात् । वरेण्यं वरणीयम् , तदेव हि सर्वस्य नित्यत्वात्प्रार्थनीयम् ; परं व्यतिरिक्तं विज्ञानात्प्रजानामिति व्यवहितेन सम्बन्धः ; यल्लौकिकविज्ञानागोचरमित्यर्थः । यत् वरिष्ठं वरतमं सर्वपदार्थेषु वरेषु ; तद्ध्येकं ब्रह्म अतिशयेन वरं सर्वदोषरहितत्वात् ॥
(ஹே சிஷ்யர்களே! ) சத் அசத்தைக் காட்டிலும், மூர்த்தா மூர்த்தங்களைக் காட்டிலும், ஸ்தூல சுக்ஷ்மங்களைக் காட்டிலும் அந்த பிரஹ்மம் வேறாக இல்லாததால் உங்களுடைய ஆத்ம பூதமான सदसत् (சதசத்) சதசத் ஸ்வரூபம், वरेण्यं (வரேண்யம்) அதுவே எல்லாவற்றைக்காட்டிலும் நித்தியமானதால் பிரார்த்திக்கத் தக்கதாயும், प्रजानां विज्ञानात् பிரஐானம் விக்ஞானம் பிரைஐகளுடைய லெளகிக விக்ஞானத்தைக் காட்டிலும் வேறானதால் அகோசரமாயும், எது वरिष्ठं (வரிஷ்டம்) ஒரு தோஷமும் அற்றதாய் எல்லா மேலான பதார்த்தங்களுள் மேலானதாயும் உள்ளதோ அதுவே ஏகமாய் உள்ளப்ரஹ்மம். அதுவே எல்லாவற்றிலும் அடைய வேண்டிய மேலான பதம் என்பதை जानथ (ஐானத) தெரிந்துகொள்.
यदर्चिमद्यदणुभ्योऽणु च यस्मिंल्लोका निहिता लोकिनश्च ।
तदेतदक्षरं ब्रह्म स प्राणस्तदु वाङ्मनः ।
तदेतत्सत्यं तदमृतं तद्वेद्धव्यं सोम्य विद्धि ॥ २ ॥
किञ्च, यत् अर्चिमत् दीप्तिमत् ; तद्दीप्त्या ह्यादित्यादि दीप्यत इति दीप्तिमद्ब्रह्म । किञ्च, यत् अणुभ्यः श्यामाकादिभ्योऽपि अणु च सूक्ष्मम् । च - शब्दात्स्थूलेभ्योऽप्यतिशयेन स्थूलं पृथिव्यादिभ्यः । यस्मिन् लोकाः भूरादयः निहिताः स्थिताः, ये च लोकिनः लोकनिवासिनः मनुष्यादयः ; चैतन्याश्रया हि सर्वे प्रसिद्धाः ; तदेतत् सर्वाश्रयं अक्षरम् ब्रह्म स प्राणः तदु वाङ्मनः वाक्च मनश्च सर्वाणि च करणानि तदु अन्तश्चैतन्यम् ; चैतन्याश्रयो हि प्राणेन्द्रियादिसर्वसङ्घातः, ‘प्राणस्य प्राणम्’ (बृ. उ. ४ । ४ । १०) इति श्रुत्यन्तरात् ।
यदर्चिमत् (யதர்ச்சிமத்) எந்தப் பரமார்த்தஸ்வரூபமானது பிரகாசஸ்வரூபமானதாகவும், அதாவது எதனுடைய பிரகாசத்தால் சுரியன் முதலான ப்ரகாசங்கள் பிரகாசிக்கின்றனவோ, மேலும் यदणुभ्यः (யதணுப்ய:) மிகவும் சுக்ஷ்மமான தினையின் நுனியைக் காட்டிலும் अणुः (அணு:) சுக்ஷ்மமானதும், च (ச்ச) என்ற சப்தத்தால் ப்ருதிவீ முதலியவைகளைக் காட்டிலும் மிகவும் ஸ்தூலமானது என்பதாலும், यस्मिंल्लोकाः (யஸ்மின்லோகா:) எந்த பிரஹ்மஸ்வரூபத்தில் பூலோகம் முதலான லோகங்களும் மேலும் लोकिनश्च (லோகினச்ச) அந்தந்த லோகங்களில் வசிக்கக்கூடிய சைதன்ய ஆஸ்ரயர்களான மனிதர்கள் முதலானவர்களும் : निहिताः (நிஹிதா:) நிலைபெற்றிருக்கின்றனரோ तदतत् (ததேதத்) அந்த சர்வ ஆஸ்ரயமான இதுவே अक्षरं ब्रहा (அக்ஷரம், பிரஹ்மம்) நாசமோ, மாறுபாடோ அடையாத ப்ரஹ்மமாகும். सः प्राणा (ச:ப்ராண:) அந்தப் பரம்பொருளே பிராணனாகும். तत् वाङ्मनः (தத் வாங்மன:) வாக்மன முதலிய எல்லா கரணங்களுக்கும் உள்ளே சைதன்யம் விளங்குவதால் பிராண இந்திரியங்கள் முதலிய சங்காதமானது சைதன்யத்தை ஆஸ்ரயித்தே இருக்கின்றன. ‘प्राणस्य प्राणम्’ (ப்ராணஸ்ய ப்ராணம்) என்று வேறு சுருதியில் கூறப்பட்டுள்ளது.
यत्प्राणादीनामन्तश्चैतन्यमक्षरं तदेतत् सत्यम् अवितथम् , अतः अमृतम् अविनाशि तत् वेद्धव्यं मनसा ताडयितव्यम् । तस्मिन्मनसः समाधानं कर्तव्यमित्यर्थः । यस्मादेवं हे सोम्य, विद्धि अक्षरे चेतः समाधत्स्व ॥
எதுபிராணாதிகளின் உள்ளே சைதன்ய ஸ்வரூபமாயும் அக்ஷரமாயும் உள்ளதோ तत् (தத்) அது एतत् (ஏதத்) இந்த सत्यम् (சத்தியம்) அதாவது பொய்யாகாது. तत् (தத்) அது अमृतं (அம்ருதம்) நாசமற்றது. सोम्य! (சோம்ய) ஹே செளம்ய! तत् वेदितव्यम् (தத் வேதித்தவ்யம்) அது மனதால் திடமாகப் பற்றத்தக்கதாய் உள்ளதால் विद्धि (வித்தி) அறிவாயாக. அதாவது அதில் மனதை வைத்து ஒருமுகப்படுத்துவாயாக.
कथं वेद्धव्यमिति, उच्यते —
அப்பரம்பொருள் எவ்வாறு அறியத்தக்கது என்பது இந்தமந்திரத்தில் கூறப்படுகிறது.
धनुर्गृहीत्वौपनिषदं महास्त्रं शरं ह्युपासानिशितं सन्दधीत ।
आयम्य तद्भावगतेन चेतसा लक्ष्यं तदेवाक्षरं सोम्य विद्धि ॥ ३ ॥
धनुः इष्वासनं गृहीत्वा आदाय औपनिषदम् उपनिषत्सु भवं प्रसिद्धं महास्त्रं महच्च तदस्त्रं च महास्त्रं धनुः, तस्मिन् शरम् ; किंविशिष्टमित्याह — उपासानिशितं सन्तताभिध्यानेन तनूकृतम् , संस्कृतमित्येतत् ; सन्दधीत सन्धानं कुर्यात् । सन्धाय च आयम्य आकृष्य सेन्द्रियमन्तःकरणं स्वविषयाद्विनिवर्त्य लक्ष्य एवावर्जितं कृत्वेत्यर्थः । न हि हस्तेनेव धनुष आयमनमिह सम्भवति । तद्भावगतेन तस्मिन्ब्रह्मण्यक्षरे लक्ष्ये भावना भावः तद्गतेन चेतसा, लक्ष्यं तदेव यथोक्तलक्षणम् अक्षरं सोम्य, विद्धि ॥
सोम्य! (சோம்ய) ஹே செளம்ய! औपनिषदम् (ஒளபநிஷதம்) உபநிஷத்துக்களில் பிரசித்தமான महास्त्रं (மஹாஸ்த்திரம்) பெரிய அஸ்திரமாகிய (ஓம்) धनुः (தனு:) அம்பின் ஸ்தானமாகிய வில்லை गृहीत्वा (க்ருஹீத்வா) எடுத்து उपासानिशितं (உபாஸாநிசிதம்) எப்பொழுதும் தியானம் செய்வதால் நன்கு கூர்மையாக்கப்பட்ட அதாவது நல்ல சமஸ்காரத்தை அடைந்த शरं (சரம்) பானத்தை (மனதை) सन्धयीत (சந்தயீத) பொருத்த வேண்டும். இவ்வாறு வில்லில் அம்பைப் பொருத்தி அதை आयम्या (ஆயம்ய) நன்கு வளைத்து இழுத்து அதாவது இந்திரியங்களுடன் கூடிய அந்தக்கரணத்தை, அதனுடைய விஷயங்களிலிருந்து திருப்பி, அதை குறியை நோக்கி ஒருமுகப்படுத்தி (என்பதில் கைகளினால் அல்ல என்று கொள்ளவேண்டும்) तद्भावगतेन (தத்பாவகதேன) அப்பரம்பொருளான பிரஹ்மமாகிய குறியில் ஈடுபட்ட चेतसा (சேதசா) மனதினால் तदेव (ததேவ) முற்கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய अक्षरं (அக்ஷரம்) மாறுபாடு அற்ற लक्ष्यं (லக்ஷ்யம்) குறியாகிய பிரஹ்மத்தை विद्धि (வித்தி) அறிவாயாக.
यदुक्तं धनुरादि, तदुच्यते —
முன்மந்திரத்தில் கூறப்பட்ட வில் முதலானவைகளை விளக்குவது இந்த மந்திரம்.
प्रणवो धनुः शरो ह्यात्मा ब्रह्म तल्लक्ष्यमुच्यते ।
अप्रमत्तेन वेद्धव्यं शरवत्तन्मयो भवेत् ॥ ४ ॥
प्रणवः ओङ्कारः धनुः । यथा इष्वासनं लक्ष्ये शरस्य प्रवेशकारणम् , तथा आत्मशरस्याक्षरे लक्ष्ये प्रवेशकारणमोङ्कारः । प्रणवेन ह्यभ्यस्यमानेन संस्क्रियमाणस्तदालम्बनोऽप्रतिबन्धेनाक्षरेऽवतिष्ठते । यथा धनुषा अस्त इषुर्लक्ष्ये । अतः प्रणवो धनुरिव धनुः । शरो ह्यात्मा उपाधिलक्षणः पर एव जले सूर्यादिवदिह प्रविष्टो देहे सर्वबौद्धप्रत्ययसाक्षितया ; स शर इव स्वात्मन्येवार्पितोऽक्षरे ब्रह्मणि ; अतः ब्रह्म तत् लक्ष्यमुच्यते लक्ष्य इव मनः समाधित्सुभिरात्मभावेन लक्ष्यमाणत्वात् ।
प्रणवः (ப்ரணவ:) ப்ரணவமாகிய ஓம்காரம் धनुः (தனு:) வில்லாகும். அதாவது எவ்வாறு குறியில் அம்பை நுழைவிப்பதற்கு வில் காரணமோ, அவ்வாறே ஆன்மாவாகிற அம்பிற்கு குறியாகிய பிரஹ்மத்தில் நுழைவதற்குக் காரணமானது பிரணவம் எனப்படும் ஓம்காரமாகும். இடைவிடாது அப்பியாசம் செய்யப்படும் பிரணவத்தால் அதைப் பற்றியவனாகி, எவ்வித இடையூறும் அற்றவனாகி வில்லினால் எய்யப்பட்ட அம்புக்குறியை அடைவது போல் பிரஹ்மத்தோடு ஒன்றி விடுகிறான். ஆகையால் பிரணவமானது அம்புபோல் அம்பாகும். ஐலத்தில் சுரியன் முதலிய பிரதிபிம்பம்போல் शरो हि आत्मा (சரோஹி ஆத்மா) உபாதிகளுடன் கூடிய ஆத்மாவாகிய அம்பு இங்கு தேஹத்தில் நுழைந்தவனாகி புத்தியில் பிரதிபலிக்கும் எல்லா விஷயங்களுக்கும் சாக்ஷியாக விளங்குகிறான். அவன் அம்புபோல் அக்ஷரபிரஹ்மமாகிய தன்னில் எய்யப்படுகிறான். லக்ஷியம் போல் (அதாவது குறியைப்போல்) மனதை ஒருமுகப்படுத்தியவர்கள் ஆத்மாவினிடத்திலேயே குறியாக ஒன்றிவிடுவதால் ब्रह्म तत् लक्ष्यमुच्यत (ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே) ப்ரஹ்மம் அதற்கு (ஓம்காரத்திற்கு) குறியாகக் கூறப்படுகிறது.
तत्रैवं सति अप्रमत्तेन बाह्यविषयोपलब्धितृष्णाप्रमादवर्जितेन सर्वतो विरक्तेन जितेन्द्रियेणैकाग्रचित्तेन वेद्धव्यं ब्रह्म लक्ष्यम् । ततस्तद्वेधनादूर्ध्वं शरवत् तन्मयः भवेत् ; यथा शरस्य लक्ष्यैकात्मत्वं फलं भवति, तथा देहाद्यात्मताप्रत्ययतिरस्करणेनाक्षरैकात्मत्वं फलमापादयेदित्यर्थः ॥
இவ்வாறு இருப்பதால் अप्रमत्तेन (அப்ரமத்தேன) வெளிவிஷயங்களை அடைவதில் ஆசையோ, அல்லது மயக்கமோ அற்றவனாயும், எல்லாவற்றிலும் ஒழிவு பெற்றவனாயும், ஒருமுகப்படுத்தப்பட்ட மனத்தினனாயும் உள்ள சாதகனால் லக்ஷியமான பிரஹ்மமானது वेद्धव्यं (வேத்தவ்யம்) பிரஹ்மமாகிய பிரஹ்மம் அறியத்தக்கது ஆகும். இவ்வாறு அறியப்பட்டபின் அந்த சாதகன் शरवत् (சரவத்) அம்புபோல் तन्मयः (தன்மய:) லக்ஷ்யத்துடன் ஒன்றியவனாக அதாவது பிரஹ்மத்தில் லயித்தவனாக भवेत् (பவேத்) ஆவான். எவ்வாறு அம்பிற்கு லக்ஷியம் ஒன்றே தனக்கு பலம்ஆகிறதோ அவ்வாறே தேஹ முதலியவகைளில் ஆத்மா என்கின்ற புத்தியை திரஸ்கரிப்பதால் அந்த அக்ஷரரூபபிரஹ்மமே ஏகாத்மரூபபலம் ஆகிறது என்பது பொருள்.
अक्षरस्यैव दुर्लक्ष्यत्वात्पुनः पुनर्वचनं सुलक्षणार्थम् ।
அக்ஷரத்தை லக்ஷியம் செய்வது மிகக்கடினமானதால் சுலபமாக லக்ஷியம் செய்வதற்காக மறுபடியும், மறுபடியும் கூறப்படுகிறது.
यस्मिन्द्यौः पृथिवी चान्तरिक्षमोतं मनः सह प्राणैश्च सर्वैः ।
तमेवैकं जानथ आत्मानमन्या वाचो विमुञ्चथामृतस्यैष सेतुः ॥ ५ ॥
यस्मिन् अक्षरे पुरुषे द्यौः पृथिवी च अन्तरिक्षं च ओतं समर्पितं मनश्च सह प्राणैः करणैः अन्यैः सर्वैः, तमेव सर्वाश्रयमेकमद्वितीयं जानथ जानीत हे शिष्याः । आत्मानं प्रत्यक्स्वरूपं युष्माकं सर्वप्राणिनां च । ज्ञात्वा च अन्याः वाचः अपरविद्यारूपाः विमुञ्चथ विमुञ्चत परित्यजत । तत्प्रकाश्यं च सर्वं कर्म ससाधनम् । यतः अमृतस्य एष सेतुः, एतदात्मज्ञानममृतस्यामृतत्वस्य मोक्षस्य प्राप्तये सेतुरिव सेतुः, संसारमहोदधेरुत्तरणहेतुत्वात् ; तथा च श्रुत्यन्तरम् — ‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) इति ॥
यस्मिन् (யஸ்மின்) எந்த அக்ஷரமாகிய பரமபுருஷனிடத்தில் द्यौः (த்யெள:) விண்ணுலகமும் पृथिवी (ப்ருதிவீ) பூமியும் अन्तरिक्षं च (அந்தரிக்ஷம்ச்ச) இடைவெளியும், सर्वैः प्राणैः सह (சர்வை: பிராணை: சஹ) எல்லாப்பிராணன்களும், மற்றகரணங்களுடனும் கூட मनश्च (மனச்ச) மனமும் ओतं (ஓதம்) வைக்கப்பட்டுள்ளது. तमेव (தமேவ) அதுவே எல்லாவற்றிற்கும் ஆஸ்ரயமாக உள்ள அந்த ஒன்றான அத்விதீயமான आत्मानं (ஆத்மானம்) ஆத்மாவை ஹே சிஷ்யர்களே ! அறிவீர்களாக. இவ்வாறு உங்களிடத்திலும், எல்லா பிராணிகளிடத்திலும் ப்ரத்யக் ஸ்வரூபமாய் உள்ள आत्मानं (ஆத்மானம்) ஆத்மாவை அறிந்து अन्याः वाचः (அன்யாவாச:) மற்ற அபரவித்யாரூபமான வாக்குகளையும், அவைகளால் பிரகாசப்படுத்தப்படும் எல்லா கர்ம சாதனங்களையும் विमुञ्चथ (விமுஞ்சத்த) விட்டொழிப்பீர்களாக. एषः (ஏஷ:) இதுவே अमृतस्य (அம்ருதஸ்ய) மோக்ஷத்தை அடைவதற்கான सेतुः (சேது:) பாலமாகும். அதாவது ஞானமாகும். அந்த ஞானமாகிய சேதுவானது சம்ஸாரம் என்கின்ற கடலைத் தாண்டுவதற்குக் காரணமாகும். இதுவே மற்ற சுருதியிலும் கூறப்பட்டுள்ளது. ‘तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेऽयनाय’। அதை அறிந்து மரணத்தை தாண்டுகிறான். இதைத் தவிர வேறுவழியில்லை.
किञ्च,
மேலும்
अरा इव रथनाभौ संहता यत्र नाड्यः स एषोऽन्तश्चरते बहुधा जायमानः ।
ओमित्येवं ध्यायथ आत्मानं स्वस्ति वः पाराय तमसः परस्तात् ॥ ६ ॥
अरा इव यथा रथनाभौ समर्पिता अराः, एवं संहताः सम्प्रविष्टाः यत्र यस्मिन्हृदये सर्वतो देहव्यापिन्यः नाड्यः, तस्मिन्हृदये बुद्धिप्रत्ययसाक्षिभूतः स एषः प्रकृत आत्मा अन्तः मध्ये चरते चरति वर्तते । पश्यन् शृण्वन्मन्वानो विजानन् बहुधा अनेकधा क्रोधहर्षादिप्रत्ययैर्जायमान इव जायमानः अन्तःकरणोपाध्यनुविधायित्वात् ; वदन्ति हि लौकिका हृष्टो जातः क्रुद्धो जात इति । तमात्मानम् ओमित्येवम् ओङ्कारालम्बनाः सन्तः यथोक्तकल्पनया ध्यायथ चिन्तयत ।
यत्र (யத்ர) எந்த ஹ்ருதயத்தில் எப்பொழுதும் தேஹம் முழுவதும் வியாபித்திருக்கின்ற नाड्यः (நாட்ய:) நாடிகள் रथनाभौ अराः इव (ரதநாபெள அரா இவ) தேர் குடத்தில் ஆராக்கள் போல் संहताः (சம் ஹதா:) நுழைந்தவைகளாக இருக்கின்றன. (तत्र) அந்த ஹ்ருதயத்தில் புத்தியில் கிரஹிக்கப்படும் (ப்ரதிபலிக்கும்) விஷயங்களுக்கு ஸாக்ஷிபூதமாய் விளங்கும் स एषः (ச ஏஷ) அந்த இந்த ப்ரக்ருத ஆத்மா अन्तः (அந்த:) மத்தியில் चरते (ச்சரதே) இருக்கிறான். बहुधा जायमानः (பஹீதா ஐாயமான:) பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும், அறிந்து கொண்டும், இவ்வாறான கோபம், மகிழ்ச்சி போன்ற பாவப்பிரத்யயங்களான அந்தக் கரண உபாதிகளைப் பின்பற்றி பலவாராக உண்டானவன் போல் இருப்பதால் உலகோர் மகிழ்வடைந்தவனாக ஆனான். கோபமுற்றவனாக ஆனான் என்று கூறுகின்றனர். तम् आत्मानं (தம் ஆத்மானம்) அத்தகைய இந்த ஆத்மாவை ओमित्येवम् (ஓமித்யேவம்) ஓம் என்ற பிரணவத்தைப் பற்றியவர்களாகக் கொண்டு முன்பு கூறிய கல்பனைப்படி (த்யாயத) சிந்திப்பீர்களாக.
उक्तं च वक्तव्यं शिष्येभ्य आचार्येण जानता । शिष्याश्च ब्रह्मविद्याविविदिषुत्वान्निवृत्तकर्माणो मोक्षपथे प्रवृत्ताः । तेषां निर्विघ्नतया ब्रह्मप्राप्तिमाशास्त्याचार्यः — स्वस्ति निर्विघ्नमस्तु वः युष्माकं पाराय परकूलाय ; कस्य ? अविद्यातमसः परस्तात् ; अविद्यारहितब्रह्मात्मस्वरूपगमनायेत्यर्थः ॥
என்று இவ்வாறாக ப்ரஹ்ம நிஷ்ட்டரான ஆச்சாா்யரால் முமூட்சுக்களான சீடர்களின் பொருட்டு கூறப்பட வேண்டியது கூறப்பட்டது. சிஷ்யர்கள் பிரஹ்ம வித்தையை அறிவதில் இச்சை உடையவர்களாய் கர்மாக்களில் இருந்து விடுபட்டு மோக்ஷமார்க்கத்தில் பிரவிர்த்திக்கலாயினர். மேலும் அவர்கள் இடையூரின்றி பிரஹ்மத்தை அடைய ஆச்சாரியர் ஆசி கூறுகிறார். அவித்யா ஆகிய तमसः (தமஸ:) தமஸைக் காட்டிலும் परस्तात् (பரஸ்தாத்) மேலானதை पाराय (பாராய) அறிவதற்கு அதாவது அவித்யா அற்றப்ரஹ்மாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு वः (வ:) உங்களுக்கு स्वस्ति (ஸ்வஸ்தி) இடையூறு அற்ற நன்மை உண்டாகுக.
योऽसौ तमसः परस्तात्संसारमहोदधिं तीर्त्वा गन्तव्यः परविद्याविषयः, स कस्मिन्वर्तत इत्याह —
எந்தப் பொருள் அவித்தை எனப்படும் இருளுக்கு அப்பாற்பட்டதும், பரவித்யா விஷயமானதும், பிறவிப்பெருங்கடலைக்கடந்து அடைய வேண்டியதும் ஆகுமோ அது எதில் உள்ளது என்பதனை விளக்குகிறது.
यः सर्वज्ञः सर्वविद्यस्यैष महिमा भुवि ।
दिव्ये ब्रह्मपुरे ह्येष व्योमन्यात्मा प्रतिष्ठितः
मनोमयः प्राणशरीरनेता प्रतिष्ठितोऽन्ने हृदयं संनिधाय ।
तद्विज्ञानेन परिपश्यन्ति धीरा आनन्दरूपममृतं यद्विभाति ॥ ७ ॥
यः सर्वज्ञः सर्ववित् व्याख्यातः । तं पुनर्विशिनष्टि — यस्यैष प्रसिद्धो महिमा विभूतिः । कोऽसौ महिमा ? यस्येमे द्यावापृथिव्यौ शासने विधृते तिष्ठतः ; सूर्याचन्द्रमसौ यस्य शासनेऽलातचक्रवदजस्रं भ्रमतः ; यस्य शासने सरितः सागराश्च स्वगोचरं नातिक्रामन्ति ; तथा स्थावरं जङ्गमं च यस्य शासने नियतम् ; तथा ऋतवोऽयने अब्दाश्च यस्य शासनं नातिक्रामन्ति ; तथा कर्तारः कर्माणि फलं च यच्छासनात्स्वं स्वं कालं नातिवर्तन्ते, स एष महिमा ; भुवि लोके यस्य स एष सर्वज्ञ एवंमहिमा देवः । दिव्ये द्योतनवति सर्वबौद्धप्रत्ययकृतद्योतने ब्रह्मपुरे । ब्रह्मणो ह्यत्र चैतन्यस्वरूपेण नित्याभिव्यक्तत्वात् ; ब्रह्मणः पुरं हृदयपुण्डरीकं तस्मिन्यद्व्योम, तस्मिन्व्योमनि आकाशे हृत्पुण्डरीकमध्यस्थे प्रतिष्ठित इवोपलभ्यते ; न ह्याकाशवत्सर्वगतस्य गतिरागतिः प्रतिष्ठा वान्यथा सम्भवति ॥
यः (ய:) எவர் सर्वज्ञः (சர்வக்ஞ:) சர்வக்ஞரோ सर्ववित् (சர்வவித்) சர்வவித்தோ அவரை மறுபடியும் यस्य (யஸ்ய) அவருடைய एषः (ஏஷ) இந்த பிரசித்தமான महिमा (மஹிமா) விபூதியை விளக்கமாகக் கூறுகிறார். அந்த மஹிமை யாது? இந்த விண், மண் முதலான லோகங்கள் யாவும் எவருடைய கட்டளையால் இயங்குகிறதோ, எவருடைய கட்டளையால் கொள்ளிக்கட்டையின் சுழற்ச்சியைப்போல் இடைவிடாது சுரிய சந்திரர்கள் சுழல்கின்றனரோ, எவருடைய கட்டளையால் ஆறுகளும், கடல்களும், தங்கள் நிலையைக் கடக்காதவைகளாய் இயங்குகின்றனவோ, அவ்வாறே எவருடைய கட்டளையால் ஸ்தாவரஐங்கமங்கள் தங்களுடைய கட்டுப்பாடுகளை மீறாமல் இருக்கின்றனவோ, மேலும் எவருடைய நியமத்தால் ருதுக்களும், அயனங்களும், வர்ஷங்களும், தங்களுடைய வரைமுறைகளைக் கடப்பதில்லையோ, அதேபோல் எவருடைய கட்டளையால் கர்த்தாக்களும், கர்மாக்களும், அவைகளின் பலன்களும் தங்கள் தங்களுடைய காலத்தைக்கடப்பது இல்லையோ அது இவ்விபூதி என்ற மஹிமையாகும். भुवि (புவி) உலகத்தில் இந்த மஹிமை உடைய சர்வக்ஞானாகியதேவன் दिव्ये (திவ்யே) எல்லாப்பிராணிகளுடைய புத்திகளிலும் அந்த அந்த விஷயமாய் பிரகாசப்படுத்துகின்றதாயும் ब्रह्मपुरे (ப்ரஹ்மபுரே) இங்கு பிரஹ்மமானது சைதன்ய ஸ்வரூபமாய் எப்பொழும் அபிவியக்தமாய் (விளங்குவதாய்) இருப்பதால் பிரஹ்மத்தின் புரமாகிய ஹிருதய தாமரையில் உள்ள व्योम्नि (வ்யோம்னி) ஆகாயத்தில் அதாவது ஹிருதய புண்டரீகத்தின் மத்தியில் एष आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மா प्रतिष्ठितः (ப்ரதிஷ்ட்டித:) நிலைபெற்றுள்ளது போல் காணப்படுகிறது. (நிலைபெற்றுள்ளது போல் ஏன் கூறப்பட்டது எனில்) ஆகாசம் போல் எங்கும் நிறைந்த ஆத்மாவிற்கு போதலோ, வருதலோ, நிலை பெறுதலோ சம்பவிக்காததால் அவ்வாறு கூறப்பட்டது.
स ह्यात्मा तत्रस्थो मनोवृत्तिभिरेव विभाव्यत इति मनोमयः, मनउपाधित्वात् । प्राणशरीरनेता प्राणश्च तच्छरीरं च तत्प्राणशरीरं तस्यायं नेता । अस्मात्स्थूलाच्छरीराच्छरीरान्तरं सूक्ष्मं प्रति प्रतिष्ठितः अवस्थितः अन्ने भुज्यमानान्नविपरिणामे प्रतिदिनमुपचीयमाने अपचीयमाने च पिण्डरूपेऽन्ने हृदयं बुद्धिं पुण्डरीकच्छिद्रे संनिधाय समवस्थाप्य ; हृदयावस्थानमेव ह्यात्मनः स्थितिः, न ह्यात्मनः स्थितिरन्ने ;
இந்த பரமாத்மாவானது मनोमयः (மனோமய:) மனதின் விருத்திகளால் பாவிக்கப்படுவதால் மனோமயனாயும், இவ்வாறு மனதை உபாதியாக்கிக் கொண்டமையால் प्राणशरीरः नेता (ப்ராணசரீர நேதா) பிராணணையும், சரீரத்தையும் நடத்திச் செல்பவனாயும், அதாவது பிராணனை ஸ்தூலசரீரத்தினின்றும், மற்றொரு ஸ்தூல சரீரத்திற்கு கொண்டுசெல்பவனாயும் अन्ते (அன்னே) சாப்பிட்ட அன்னத்தின் பரிணாமத்தால் தினமும் பெருகுவதும், குறைவதுமாய் உள்ள பிண்டரூபமான அன்னத்தில் (ஸ்தூலசரீரத்தில்) हृदयं (ஹ்ருதயம்) ஹிருதயகமலத்தின் மத்தியில் புத்தியை வைத்து அதில் ஆத்மாவை संनिधाय (சந்நிதாய) பாவிக்க வேண்டும். ஹ்ருதயத்தில் நிலைத்தலே ஆத்மாவின் ஸ்திதியாகும். அன்னத்தில் (ஸ்தூலசரீரத்தில்) ஆத்மாவின் ஸ்திதி இல்லை.
तत् आत्मतत्त्वं विज्ञानेन विशिष्टेन शास्त्राचार्योपदेशजनितेन ज्ञानेन शमदमध्यानसर्वत्यागवैराग्योद्भूतेन परिपश्यन्ति सर्वतः पूर्णं पश्यन्ति उपलभन्ते धीराः विवेकिनः । आनन्दरूपं सर्वानर्थदुःखायासप्रहीणं सुखरूपम् अमृतं यद्विभाति विशेषेण स्वात्मन्येव भाति सर्वदा ॥
तत् அந்த ஆத்மதத்துவத்தை विज्ञानेन (விக்ஞானேன) அறிந்ததாலும் சாஸ்திர ஆசார்ய உபதேஸத்தால் உண்டான விசேஷமான ஞானத்தால் சமம், தமம், த்யானம், எல்லாவற்றையும் தியாகம் செய்தல், வைராக்கியம் இவைகளால் உண்டானதாலும் धीराः (தீரா:) தீரர்கள் எனப்படும் விவேகிகள் எல்லா அநர்த்தங்களும், துக்கங்களும் ஆயாசங்களும் அற்று यद् (யத்) எந்த अमृतं (அம்ருதம்) அம்ருதம் विभाति (விபாதி) விளங்குகிறதோ அதாவது விசேஷமாக தன்னுடைய ஆத்மாவிலேயே எப்பொழுதும் பிரகாசிக்கின்றதோ तत् (தத்) அந்த ஆனந்த ஸ்வரூபத்தை परिपश्यन्ति (பரிபச்யந்தி) எங்கும் நிறைந்ததாக காண்கின்றார்கள்.
अस्य परमात्मज्ञानस्य फलमिदमभिधीयते —
இந்த பரமாத்மஞானத்தினுடைய இப்பலத்தை விளக்குகிறார்.
भिद्यते हृदयग्रन्थिश्छिद्यन्ते सर्वसंशयाः ।
क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे परावरे ॥ ८ ॥
भिद्यते हृदयग्रन्थिः अविद्यावासनामयो बुद्ध्याश्रयः कामः, ‘कामा येऽस्य हृदि श्रिताः’ (बृ. उ. ४ । ४ । ७), (का. उ. २ । ३ । १४) इति श्रुत्यन्तरात् । हृदयाश्रयोऽसौ, नात्माश्रयः । भिद्यते भेदं विनाशमुपयाति । छिद्यन्ते सर्वे ज्ञेयविषयाः संशयाः लौकिकानाम् आ मरणात् गङ्गास्रोतोवत्प्रवृत्ता विच्छेदमायान्ति । अस्य विच्छिन्नसंशयस्य निवृत्ताविद्यस्य यानि विज्ञानोत्पत्तेः प्राक्कृतानि जन्मान्तरे चाप्रवृत्तफलानि ज्ञानोत्पत्तिसहभावीनि च क्षीयन्ते कर्माणि, न त्वेतज्जन्मारम्भकाणि, प्रवृत्तफलत्वात् । तस्मिन् सर्वज्ञेऽसंसारिणि परावरे परं च कारणात्मना अवरं च कार्यात्मना तस्मिन्परावरे साक्षादहमस्मीति दृष्टे, संसारकारणोच्छेदान्मुच्यत इत्यर्थः ॥
हृदयग्रन्थिः (ஹ்ருதயக்ரந்தி:) அவித்யா வாசனையின் ஆதிக்கத்தால் புத்தியை ஆஸ்ரயித்துள்ள காமனைகள் (ஆசைகள்) யாவும் புத்தியை ஆஸ்ரியத்தவையே அன்றி ஆத்மாவை ஆஸ்ரியத்தவைகள் அல்ல. அந்த அவித்தையாகிற முடிச்சு भिद्यते (பித்யதே) நாசத்தை அடைகின்றன. ‘कामा येऽस्य हृदि श्रिताः’ என்று வேறு ஒரு ஸ்ருதியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. सर्व संशयाः (சர்வசம்சயா:) லெளகீகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணம் வரை கங்கையின் புனல்போல், இடைவிடாது பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் அறியத்தக்க எல்லாவிஷயங்களிலும் ஏற்படும் சந்தேஹங்கள் யாவும் छिद्यन्ते (சித்யந்தே) அறுக்கப்படுகின்றன அல்லது துண்டிக்கப்படுகின்றன. अस्य (அஸ்ய) இவ்வாறு சந்தேஹங்களற்றவனாயும், அவித்தை நீங்கியவனாயும் உள்ள ஸாதகனின் कर्माणि च (கர்மாணி ச்ச) ஆன்மஞானம் பெறுவதற்கு முன்பும், முற்பிறவிகளிலும், ஞானம் அடையும் காலத்தில் உண்டானவைகளாயும் உள்ள கர்மாக்கள் யாவும் क्षीयन्ते (க்ஷீயந்தே) நாசமடைகின்றன. ஆனால் ஐன்ம ஆரம்பத்திற்கான கர்மா பலத்தைக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதால் பலனைக் கொடுக்காமல் நாசமடைவதில்லை. तस्मिन् (தஸ்மின்) சர்வக்ஞனாயும், அசம்சாரியாயும், உள்ள परावरे பராவரே காரணாத்மகமாய் பரமாயும் காரியாத்மகமாய் அபரமாயும் உள்ள அந்த பராமார்த்த சொரூபத்தில் दृष्टे (த்ருஷ்டே்ட) (सति) அனுபவபூர்வமாய் நானே இருக்கிறேன் என்று அறிந்தபோது (தன்னில் தன்னை கண்டபோது) முற்கூறப்பட்டவைகள் யாவும் நாசமடைகின்றன என்பது பொருள்.
उक्तस्यैवार्थस्य सङ्क्षेपाभिधायका उत्तरे मन्त्रास्त्रयोऽपि —
இதுவரை கூறிய அர்த்தத்தையே வரும் மூன்று மந்திரங்களால் சுருக்கிக் கூறுகிறார்.
हिरण्मये परे कोशे विरजं ब्रह्म निष्कलम् ।
तच्छुभ्रं ज्योतिषां ज्योतिस्तद्यदात्मविदो विदुः ॥ ९ ॥
हिरण्मये ज्योतिर्मये बुद्धिविज्ञानप्रकाशे परे कोशे कोश इवासेः । आत्मस्वरूपोपलब्धिस्थानत्वात्परं तत्सर्वाभ्यन्तरत्वात् , तस्मिन् विरजम् अविद्याद्यशेषदोषरजोमलवर्जितं ब्रह्म सर्वमहत्त्वात्सर्वात्मत्वाच्च निष्कलं निर्गताः कला यस्मात्तन्निष्कलं निरवयवमित्यर्थः ।
हिरण्मये (ஹிரண்மயே) ஐ்யோதிர்மயமானதும், புத்திவிருத்திகளை பிரகாசிப்பதாயும் உள்ள परे (பரே) எல்லோர் உள்ளிலும் உறைந்திருப்பதுமான कोशे- கத்தியின் உரைபோன்ற தான பரமார்த்தஸ்வருபத்தை அடைவதற்கான ஸ்தானத்தில் (ஹ்ருதய புண்டரீகத்தில்) அவித்தை முதலிய எல்லா தோஷங்களற்றதாயும், ரஐஸ், அழுக்குகள் அற்றதாயும் உள்ள ब्रह्म (ப்ரம்ம) பிரஹ்மம் விளங்குகிறது. सर्वमहत्त्वात् (சர்வமஹத்வாத்) எல்லாவற்றையும் விடமிகப்பெரியதாயும் सर्वात्मत्वात् (சர்வாத்மத்வாத்) சர்வாத்மாவாயும் இருப்பதால் பிரஹ்மம். மேலும் निष्कलं (நிஷ்கலம்) கலை அற்றதால் நிஷ்கலமாயும், நிரவயவமாயும் பிரஹ்மம் இருக்கிறது.
यस्माद्विरजं निष्कलं च अतः तच्छुभ्रं शुद्धं ज्योतिषां सर्वप्रकाशात्मनामग्न्यादीनामपि तज्ज्योतिः अवभासकम् । अग्न्यादीनामपि ज्योतिष्ट्वमन्तर्गतब्रह्मात्मचैतन्यज्योतिर्निमित्तमित्यर्थः । तद्धि परं ज्योतिर्यदन्यानवभास्यमात्मज्योतिः, तत् यत् आत्मविदः आत्मानं स्वं शब्दादिविषयबुद्धिप्रत्ययसाक्षिणं ये विवेकिनो विदुः विजानन्ति, ते आत्मविदः तद्विदुः, आत्मप्रत्ययानुसारिणः । यस्मात्परं ज्योतिस्तस्मात्त एव तद्विदुः, नेतरे बाह्यार्थप्रत्ययानुसारिणः ॥
எதனால் பிரஹ்மம் பிரகாசமாயும், நிஷ்கலமாயும் இருக்கிறதோ அதனால் तच्छुभ्रं (தச்சுப்ரம்) அது சுத்தமானது. ज्योतिषां (ஐ்யோதிஷாம்) பிரகாசிக்கக் கூடிய அக்னி முதலியவைகளைக் காட்டிலும் तत् ज्योतिः (தத் ஐ்யோதி:) பிரகாசமானது, பிரகாசிக்கச் செய்கிறது. அக்னி முதலானவைகளை பிரகாசிக்கச் செய்யும் எல்லாவற்றிலும் ஊடுறுவி இருக்கும் ப்ரஹ்ம சைதன்யஐ்யோதியாகும் என்பதால் அதுவே நிமித்தமாகும் என்பது பொருள். அதுவே பரம்ஐ்யோதி. எது மற்றவகைளை பிரகாசிக்கச்செய்கிறதோ அது ஆத்மஐ்யோதியாகும். तघादात्मविदः (தத்யதாத்மவித:) அந்த எந்த ஆத்மாவை அறிந்தவர்கள் சப்தாதி விஷயங்களை அறியும் புத்திபிரத்தியயங்களுக்கு சாக்ஷியாக விளங்கும் தன்னை அறிந்த விவேகிகள் विदुः (விது:) அதை அறிவர். அவர்கள் ஆத்மாவை அறிந்தவர்கள். அதை அறிந்தவர்கள் ஆத்மபிரத்யயத்தை அனுசரிப்பவர்களாய் இருப்பர். ஏன்எனில் பரம்ஐ்யோதியாய் இருப்பதால் அவர்களே அறிந்தவர்கள். மற்ற வெளிபிரத்யயங்களுக்கு அனுசரணையாய் இருப்பவர்கள் அறிந்தவர்கள் அல்ல.
कथं तत् ‘ज्योतिषां ज्योतिः’ इति, उच्यते —
அது எவ்வாறு பிரகாசங்களுக்கு எல்லாம் பிரகாசம் என்பதைக் கூறுகிறார்.
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥ १० ॥
न तत्र तस्मिन्स्वात्मभूते ब्रह्मणि सर्वावभासकोऽपि सूर्यो भाति, तद्ब्रह्म न प्रकाशयतीत्यर्थः । स हि तस्यैव भासा सर्वमन्यदनात्मजातं प्रकाशयति ; न तु तस्य स्वतः प्रकाशनसामर्थ्यम् । तथा न चन्द्रतारकम् , न इमाः विद्युतः भान्ति, कुतोऽयमग्निः अस्मद्गोचरः ।
तत्र (தத்ர) அந்த ஆத்மபூதமான பிரஹ்மத்தில் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சுரியனும் न भाति (ந பாதி) பிரகாசிப்பது இல்லை. அதாவது எல்லாவற்றையும் ப்ரகாசப்படுத்தும் சுரியன் அந்தப் பரப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்துவது இல்லை. அந்த சுரியனானவன் அந்தப்பிரஹ்மத்தின் ப்ரகாசத்தைக் கொண்டே மற்ற எல்லா அநாத்ம பதார்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. அதற்கு சுயமாக ப்ரகாசப்படுத்தும் சாமர்த்தியம் இல்லை. அவ்வாறே न चन्द्रतारकम (ந சந்த்ரதாரகம்) சந்திர நக்ஷத்திரங்களுக்கும் அந்த ப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்தும் தன்மையில்லை. नेमा विद्युतः இந்த மின்னல்களும் न भाति (ந பாந்தி) பிரகாசப்படுத்துவது இல்லை. कृतः अयम् अग्निः? (குத : அயம் அக்னி:) எவ்வாறு நம் கண்களுக்கு புலப்படும் அக்னி (பிரஹ்மத்தைப்) பிரகாசப்படுத்தும்.
किं बहुना । यदिदं जगद्भाति, तत्तमेव परमेश्वरं स्वतो भारूपत्वात् भान्तं दीप्यमानम् अनुभाति अनुदीप्यते । यथा जलमुल्मुकादि वा अग्निसंयोगादग्निं दहन्तमनुदहति, न स्वतः ; तद्वत्तस्यैव भासा दीप्त्या सर्वमिदं सूर्यादि जगद्विभाति ।
அதிகம் கூறுவானேன். எதனால் இந்த ஐகத்தானது ப்ரகாசிக்கிறதோ அது ஸ்வயம் பிரகாசமாய் இருப்பதால் भान्तं (பாந்தம்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் तमेव (தமேவ) அந்த பரமேஸ்வரனை अनुभाति (அனுபாதி) ஆஸ்ரயித்து எல்லாம் பிரகாசிக்கின்றன. எவ்வாறு ஐலம், அங்காராகம் முதலியவைகள் அக்னியின் சம்யோகத்தால் அக்னி போல் சுடாகிறதோ மற்றும் அவைகளுக்கு சுயமாக தஹிக்கும் தன்மை இல்லையோ அவ்வாறே तस्य भासा (தஸ்ய பாசா) அதனுடைய ப்ரகாசத்தால் (அந்தபரமேஸ்வரனுடைய பிரகாசத்தால்) सर्वमिदं (சர்வமிதம்) சுரியன் முதலான ஐகத் विभाति (விபாதி) பிரகாசிக்கின்றது.
यत एवं तदेव ब्रह्म भाति च विभाति च कार्यगतेन विविधेन भासा ; अतस्तस्य ब्रह्मणो भारूपत्वं स्वतोऽवगम्यते । न हि स्वतोऽविद्यमानं भासनमन्यस्य कर्तुं शक्नोति । घटादीनामन्यावभासकत्वादर्शनात् भारूपाणां चादित्यादीनां तद्दर्शनात् ॥
எதனால் இவ்வாறோ அந்த ப்ரஹ்மமே தானே பிரகாசிக்கிறது. மற்றவற்றைப் பிரகாசிக்கவும் செய்கிறது. காரியரூபமாய் விதிவிதமாய் விசேஷரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதால் அந்த பிரஹ்மத்தினுடைய பிரகாசிக்கும் தன்மை ஸ்வயமாக பிரகாசிக்கும் தன்மை இல்லாமல் மற்றவற்றை பிரகாசிக்கச் செய்யமுடியாது என்பது கட முதலியவைகள் மற்றவைகளை பிரகாசிக்கச் செய்யமுடியாததையும், அவ்வாறே சுரியன் முதலியவைகளிடத்தில் ப்ரகாசிப்பதையும் பிரகாசிக்கச் செய்வதையும் பார்க்கிறோம்.
यत्तज्ज्योतिषां ज्योतिर्ब्रह्म, तदेव सत्यम् ; सर्वं तद्विकारः वाचारम्भणं विकारो नामधेयमात्रमनृतमितरदित्येतमर्थं विस्तरेण हेतुतः प्रतिपादितं निगमनस्थानीयेन मन्त्रेण पुनरुपसंहरति —
எந்த அந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது ஐ்யோதிகளுக்கெல்லாம் ஐ்யோதி. அதுவே சத்தியம். எல்லாம் அதனுடைய விகாரமே. வாக்கின் ஆரம்பமும் விகாரமும் நாமரூபமாத்திரம். விகாரத்தைக் காட்டிலும் வேறானது அம்ருதம். ஆகையால் விஸ்தாரமாக காரணத்துடன் விளக்குவதற்கு உறுதியாக நிச்சயம் செய்வதற்கு உரிய ஸ்தானத்தில் உள்ள இந்த மந்திரத்தால் மறுபடியும் முடிக்கிறார்.
ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥
ब्रह्मैव उक्तलक्षणम् , इदं यत् पुरस्तात् अग्रेऽब्रह्मेवाविद्यादृष्टीनां प्रत्यवभासमानं तथा पश्चाद्ब्रह्म तथा दक्षिणतश्च तथा उत्तरेण तथैवाधस्तात् ऊर्ध्वं च सर्वतोऽन्यदिव कार्याकारेण प्रसृतं प्रगतं नामरूपवदवभासमानम् । किं बहुना, ब्रह्मैवेदं विश्वं समस्तमिदं जगत् वरिष्ठं वरतमम् । अब्रह्मप्रत्ययः सर्वोऽविद्यामात्रो रज्ज्वामिव सर्पप्रत्ययः । ब्रह्मैवैकं परमार्थसत्यमिति वेदानुशासनम् ॥
கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய इदं (இதம்) இந்த अमृतं ब्रह्मैव (அம்ருதம் ப்ரஹ்மைவ) அழிவற்ற பிரஹ்மமே पुरस्तात् (புரஸ்தாத்) அவித்யா திருஷ்டி உடையவர்களுக்குப் பலவித நாமரூபங்களுடன் எதிரில் காட்சி அளிக்கிறது. அவ்வாறே पश्चात् ब्रुहा (பச்சாத் பிரஹ்ம) பின் புரத்திலும் பிரஹ்ம, दक्षिणतः उत्तरेण च (தக்ஷிணத: உத்தரேண ச்ச) தென்புறத்திலும் அல்லது வலப்புரத்திலும், வடபுறத்திலும் அல்லது இடது புறத்திலும் அவ்வாறே अधः ऊर्ध्वं (அத: ஊா்த்வம்:) கீழும், மேலும் இந்த பிரஹ்மமே. प्रसृतं (ப்ரச்ருதம்) எங்கும் (மற்றொன்றைப்போல்) காரிய ரூபமாய் நாமரூபங்களுடன் தோற்றமளிப்பதுபோல் விரிந்துள்ளது. அதிகம் கூறுவானேன் इदं विश्वं (இதம் விச்வம்) இந்த ஐகத் முழுவதும் वरिष्ठं ब्रह्मैव (வரிஷ்ட்ட ப்ரஹ்மைவ) இந்த சிறந்த ப்ரஹ்மமே அவைகளில் பிரஹ்ம பாவனையின்றி, நாமரூபங்களோடு கூடிய பேத பாவனை ஏற்படுவது கயிற்றில் பாம்பு தோன்றுவது போன்று அவித்தையால் ஏற்பட்டது ஆகும். பிரஹ்மம் ஒன்றே உண்மையான சத்தியம் என்பது வேதங்களின் முடிவான கட்டளை ஆகும்.
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ मुण्डकोपनिषद्भाष्ये द्वितीयं मुण्डकं समाप्तम् ॥