परा विद्योक्ता यया तदक्षरं पुरुषाख्यं सत्यमधिगम्यते । यदधिगमे हृदयग्रन्थ्यादिसंसारकारणस्यात्यन्तिको विनाशः स्यात् , तद्दर्शनोपायश्च योगो धनुराद्युपादानकल्पनयोक्तः । अथेदानीं तत्सहकारीणि सत्यादिसाधनानि वक्तव्यानीति तदर्थ उत्तरग्रन्थारम्भः । प्राधान्येन तत्त्वनिर्धारणं च प्रकारान्तरेण क्रियते । अत्यन्तदुरवगाहत्वात्कृतमपि तत्र सूत्रभूतो मन्त्रः परमार्थवस्त्ववधारणार्थमुपन्यस्यते —
எந்த (வித்தையினால்) அக்ஷரம் எனப்பட்டதும், புருஷன் எனப்பட்டதும், சத்தியமானதுமான பரம்பொருள் அடையப்படுமோ அந்த பராவித்தையானது இதுவரை உபதேசிக்கப்பட்டது. எதை அறிந்தால் சம்சார காரணமாகிய ஹிருதயக்ரந்தியானது மீண்டும் எழாமல் முற்றிலும் நாசமடையுமோ அந்த ஞானத்தின் உபாயமாகிய யோகமானது வில் முதலான உபாதான கல்பனை மூலமாக கூறப்பட்டது. அதற்கு உதவக்கூடிய சத்திய முதலான சாதனங்களைக் கூறப்பட வேண்டும் என்பதற்காக வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது. தத்வஞானத்தை நிச்சயம் செய்யப்பட்ட போதும், அதை புரிந்துகொள்வதற்கு மிகக்கடினமாய் இருப்பதால் முக்கியமாக வேறு விதமாகக் கூறப்படுகிறது. அந்த பரமார்த்த சொரூபத்தை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக விளக்கப்படுகிறது.
द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति अनश्नन्नन्योऽभिचाकशीति ॥ १ ॥
द्वा द्वौ, सुपर्णा सुपर्णौ शोभनपतनौ सुपर्णौ, पक्षिसामान्याद्वा सुपर्णौ, सयुजा सयुजौ सहैव सर्वदा युक्तौ, सखाया सखायौ समानाख्यानौ समानाभिव्यक्तिकारणौ, एवंभूतौ सन्तौ समानम् अविशेषमुपलब्ध्यधिष्ठानतया, एकं वृक्षं वृक्षमिवोच्छेदसामान्याच्छरीरं वृक्षं परिषस्वजाते परिष्वक्तवन्तौ । सुपर्णाविवैकं वृक्षं फलोपभोगार्थम् ।
सयुजा (சயுஐா) எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்திருப்பவைகளாயும் सखाया (சகாய) சமானமாய் கூறப்படுகிற சமான உருவமுடையவையும் நண்பர்களாயும் உள்ள द्वौ सुपर्णौ (த்வெள சுபர்ணெள) இருபறவைகள். இங்கு सुपर्णौ என்பதற்கு அழகிய இரு சிறகுகளை உடையது அல்லது பக்ஷிகளுக்கு சமானமான ஐீவன், ஈஸ்வரனைக் கொள்ள வேண்டும். समानवृक्षं (சமானவிருக்ஷம்) ஒரே மாதிரி தோற்றமளிக்கக்கூடிய தங்களை வெளிப்படுத்துக் கொள்ள காரணமான அதிஷ்டானமாக உள்ள वृक्षं (வ்ருக்ஷம்) ஒரே மரத்தை அதாவது மரத்தைப்போன்று நஷ்டமடையும் தன்மை சமானமானதால் சரீரம் விருஷம் (மரம்) இரு பக்ஷிகளும் பலபோகத்தின் பொருட்டு ஒரே மரத்தைப் பற்றிக் கொள்வதுபோல் (ஐீவேச்வரர்களும் இந்தசரீரத்தைப்) परिषस्वजाते (பரிஷஸ்வஐாதே) பற்றிக் கொண்டனர்.
अयं हि वृक्ष ऊर्ध्वमूलोऽवाक्शाखोऽश्वत्थोऽव्यक्तमूलप्रभवः क्षेत्रसंज्ञकः सर्वप्राणिकर्मफलाश्रयः, तं परिष्वक्तवन्तौ सुपर्णाविव अविद्याकामकर्मवासनाश्रयलिङ्गोपाध्यात्मेश्वरौ । तयोः परिष्वक्तयोः अन्यः एकः क्षेत्रज्ञो लिङ्गोपाधिवृक्षमाश्रितः पिप्पलं कर्मनिष्पन्नं सुखदुःखलक्षणं फलं स्वादु अनेकविचित्रवेदनास्वादरूपं स्वादु अत्ति भक्षयत्युपभुङ्क्ते अविवेकतः । अनश्नन् अन्यः इतरः ईश्वरो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः सर्वज्ञः सत्त्वोपाधिरीश्वरो नाश्नाति । प्रेरयिता ह्यसावुभयोर्भोज्यभोक्त्रोर्नित्यसक्षित्वसत्तामात्रेण । स तु अनश्नन् अन्यः अभिचाकशीति पश्यत्येव केवलम् । दर्शनमात्रं हि तस्य प्रेरयितृत्वं राजवत् ॥
இந்த மரமோவெனில் மிக உத்கிருஷ்டமான பிரஹ்மத்தைத் தனக்கு அதிஷ்டானமாகக் (வேராகக்) கொண்டது. அதாவது ऊर्ध्वमूलः வேரை மேலே உடையதாகும். கீழ்நோக்கானவைகளான பிராணன் முதலானக் கிளைகளைப் போன்றதாகும். அதாவது अवाक् शखः கீழ் நோக்கிய கிளைகள் உடையதாகும். நாளை இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்தமுடியாததால் இது अश्चत्थं (அச்வத்தம்) எனப்படும். மேலும் இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் இது अश्चत्थं எனப்படும். மேலும் இம்மரம் அவ்யக்தம் எனப்படும் அவ்யாகிருதமாகிய மூலத்தினின்று தோன்றியது. அதாவது அவ்யாகிருதத்தை தனக்கு உபாதானமாகக் கொண்டதும், க்ஷதே்ரம் எனக்குறிப்பிடப்படுவதுமாகும். மேலும் சர்வ ப்ராணிகளுடைய கர்மபலனை ஆஸ்ரயித்ததுமாகும். இவர்களில் அவித்யா காமகர்மவாசனைகளுக்கு ஆஸ்ரயமான உபாதியைக் கொண்டவன் ஐீவன் என்றும், மாயையை உபாதியாகக்கொண்டவன் ஈஸ்வரன் எனவும் கூறப்பட்டனர். இத்தகைய ஐீவேஸ்வரர்கள் பக்ஷிகளைப் போல் ஒரே மரத்தைப்பற்றிக் கொண்டனர். तयोः (தயோ:) இவ்வாறு மரத்தைப் பற்றிக் கொண்ட இருவரில் अन्यः (அன்ய:) ஒருவன் அதாவது அவித்யா காமகர்மவாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கோ பாதியை உடைய க்ஷதே்ரக்ஞன் எனப்படும் ஆத்மா (ஐீவாத்மாவனவன்) पिप्पलं (பிப்பலம்) கர்மங்களினால் உண்டான சுக, துக்கரூபமான பலன்கள் स्वादु (ஸ்வாது) அநேகவித விசித்ர அனுபவத்திற்கு நன்மைத்தரக்கூடியது என்று கருதி அவிவேகத்தினால் अत्ति (அத்தி) உண்கிறான். अन्यः (அன்ய:) மற்றவனான நித்ய, சுத்த, புத்த, முக்த, ஸ்வபாவமுடையவனும், சர்வக்ஞனும், மாயையை உபாதியாகக் கொண்டவனுமான ஈஸ்வரன் अनश्नन् (அனச்நன்) முற்கூறப்பட்ட பழத்தை உண்ணாதவனாக அதாவது அந்த ஈஸ்வரன் போஐ்யம் எனப்படும் பழம் போக்தா எனப்படும் ஐீவன் என்ற இரண்டிற்கும் தன்னுடைய வித்தையினால் மாத்திரம் (ஸாக்ஷியாய் இருப்பதால் மாத்திரம்) ப்ரேரணை செய்பவனாகி अभिचाकशीति (அபிச்சாகசீதி) பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அரசன் போல் பார்ப்பதால் மாத்திரம் பிரேரணை செய்கிறான் என்பது பொருள். (சாக்ஷி மாத்திரமாய் இருக்கிறான்.
तत्रैवं सति
அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது
समाने वृक्षे पुरुषो निमग्नोऽनीशया शोचति मुह्यमानः ।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥ २ ॥
समाने वृक्षे यथोक्ते शरीरे पुरुषः भोक्ता जीवोऽविद्याकामकर्मफलरागादिगुरुभाराक्रान्तोऽलाबुरिव सामुद्रे जले निमग्नः निश्चयेन देहात्मभावमापन्नोऽयमेवाहममुष्य पुत्रोऽस्य नप्ता कृशः स्थूलो गुणवान्निर्गुणः सुखी दुःखीत्येवंप्रत्ययो नास्त्यन्योऽस्मादिति जायते म्रियते संयुज्यते वियुज्यते च सम्बन्धिबान्धवैः,
समाने वृक्षे (சமானே விருக்ஷே) முற்கூறப்பட்டதான சரீரம் எனப்படும் ஒரே மரத்தில் पुरुषः (புருஷொ) (கா்மபல) போக்தாவான ஐீவன் அவித்யா காமகர்ம பல ராகம் முதலியவைகளின் மிகுந்த பாரத்தால் சமுத்திரஐலத்தில் ले निमग्नो (நிமக்னோ) தேஹாத்ம பாவத்தை நிச்சயமாக அடைந்தமையால், நானே இவன் (இந்த சரீரமான நான்), நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய பேரன், நான் இளைத்தவன், நான் பருத்தவன், நான் குணவான், நான் குணமற்றவன், நான் சுகீ, நான் துக்கீ என்ற நம்பிக்கையில் வலிமைபெற்றவனாகி இந்த சரீரத்தைக் காட்டிலும் மற்றொன்று இல்லை என்று (எண்ணி)ப் பிறக்கிறான். மரணமடைகிறான். சம்பந்திகளுடனும், பந்துக்களுடனும் இணைகிறான். பிரியவும் செய்கிறான்.
अतः अनीशया, न कस्यचित्समर्थोऽहं पुत्रो मम विनष्टो मृता मे भार्या किं मे जीवितेनेत्येवं दीनभावोऽनीशा, तया शोचति सन्तप्यते मुह्यमानः अनेकैरनर्थप्रकारैरविवेकितया अन्तश्चिन्तामापद्यमानः
अनीशया (அநீசயா) ஆதலால் ஏதும் முடியாதவனாகி (அதாவது தேஹாத்ம பாவத்தை அடைந்ததால்) நான் எதற்கும் சாமர்த்தியம் அற்றவன், என்மகன் இறந்துவிட்டான், என் மனைவியுமிறந்து விட்டாள். இனி ஐீவித்து என்ன பயன் என்று இவ்வாறு தீன பாவத்தை அடைதல் அநீசா. मुह्यमानः(முஹ்யமான:) மோஹத்தை அடைந்தவனாகி, அதாவது இத்தகைய அவிவேகத்தால் பலவிதமான அனர்த்தங்களுக்குள்ளாகி மனக்கவலையுற்று शोचति (சோச்சதி) துக்கத்தினால் தவிக்கிறான்.
स एवं प्रेततिर्यङ्मनुष्यादियोनिष्वाजवञ्जवीभावमापन्नः कदाचिदनेकजन्मसु शुद्धधर्मसञ्चितनिमित्ततः केनचित्परमकारुणिकेन दर्शितयोगमार्गः अहिंसासत्यब्रह्मचर्यसर्वत्यागशमदमादिसम्पन्नः समाहितात्मा सन् जुष्टं सेवितमनेकैर्योगमार्गैः कर्मिभिश्च यदा यस्मिन्काले पश्यति ध्यायमानः अन्यं वृक्षोपाधिलक्षणाद्विलक्षणम् ईशम् असंसारिणमशनायापिपासाशोकमोहजरामृत्य्वतीतमीशं सर्वस्य जगतोऽयमहमस्म्यात्मा सर्वस्य समः सर्वभूतस्थो नेतरोऽविद्याजनितोपाधिपरिच्छिन्नो मायात्मेति महिमानं विभूतिं च जगद्रूपमस्यैव मम परमेश्वरस्य इति ईशम्यदैवं द्रष्टा, तदा वीतशोकः भवति सर्वस्माच्छोकसागराद्विप्रमुच्यते, कृतकृत्यो भवतीत्यर्थः ॥ २ ॥
இவ்வாறு பலவிதமான புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதம் போன்ற பிறவிகளை இடைவிடாது அடைந்தவனாகிக்களைப்புறும் வேளையில் ஏதோ ஒரு சமயம் முந்திய பல பிறவிகளில் சிறுகச் சிறுகச் சம்பாதிக்கப்பட்ட சுகிருதம் (புண்யம்) சித்திசுத்தி இவைகளின் காரணமாய், மிகுந்தகருணை உள்ளம் படைத்த குருவின் தரிசனம் பெற்று, அவரால் தயவுடன் காண்பிக்கப்பட்ட யோகமார்க்கத்தைப் பின்பற்றி, அஹிம்ஸை, ஸத்தியம், பிரம்மசரியம், ஸர்வஸங்க பரித்யாகம், சமம், தமம் போன்றவைகளைப் பெற்று, இவைகளால் ஆன்மாவை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட மனதினனாகி த்யானம் செய்தவர்களாய் यदा (யதா) எப்பொழுது जुष्टं (ஐுஷ்டம்) அநேக கர்மயோகத்தில் உள்ளவர்களான கர்மாக்களில் ஈடுபட்டவர்களால் சேவிக்கப்படும் अन्यं (அன்யம்) மற்றவனான, அதாவது சரீரமாகிய விருக்ஷத்தை உபாதியாகக் கொண்டவனைக் காட்டிலும் மாறுபட்டவனாகவும், பிறப்பற்றவனாகவும், பசிதாகம், சோகம், மோகம், முதுமை, மரணம், இவைகளைக் கடந்தவனான ईशम् (ஈசம்) ஈஸ்வரனை இந்த எல்லா ெஐகத்திற்கும், இந்த ஈஸ்வரனாகிய நானே ஆத்மாவாய் இருக்கிறேன். இத்தகைய நான் ஸர்வபூதங்களிலும் சமமாய் உள்ளேன். மற்ற அவித்தையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமடைந்த மாயா ஆத்மாவின் விபூதி என்று எண்ணுவதில்லை. अस्य महिमानम् (அஸ்ய மஹிமானம்) அந்த மஹிமானம் அந்த ஐகத்துரூபமானது என்னுடைய பரமேஸ்வரனுடையதே इति (இதி) என்று तदा (யதா) எப்பொழுது இவ்வாறு பார்க்கிறானோ அப்பொழுது த்ருஷ்ட்டா (அப்படிப்பார்த்தவன்) वीतशोको भवति (வீதசோகோ பவதி) எல்லாவித துக்கங்களிலிருந்தும் விடுபட்டவனாகவும், பிறவிப்பயனை அடைந்தவனாகவும் ஆகிறான்.
अन्योऽपि मन्त्र इममेवार्थमाह सविस्तरम् —
(அ.கை) இந்த மந்திரமும் முன்மந்திரத்தில் கூறியதையே தெளிவு படுத்துகிறது.
यदा पश्यः पश्यते रुक्मवर्णं कर्तारमीशं पुरुषं ब्रह्मयोनिम् ।
तदा विद्वान्पुण्यपापे विधूय निरञ्जनः परमं साम्यमुपैति ॥ ३ ॥
यदा यस्मिन्काले पश्यः पश्यतीति विद्वान् साधक इत्यर्थः । पश्यते पश्यति पूर्ववत् , रुक्मवर्णं स्वयञ्ज्योतिःस्वभावं रुक्मस्येव वा ज्योतिरस्याविनाशि ; कर्तारं सर्वस्य जगतः ईशं पुरुषं ब्रह्मयोनिं ब्रह्म च तद्योनिश्चासौ ब्रह्मयोनिस्तं ब्रह्मयोनिं ब्रह्मणो वा अपरस्य योनिं स यदा चैवं पश्यति, तदा स विद्वान्पश्यः पुण्यपापे बन्धनभूते कर्मणी समूले विधूय निरस्य दग्ध्वा निरञ्जनः निर्लेपो विगतक्लेशः परमं प्रकृष्टं निरतिशयं साम्यं समतामद्वयलक्षणाम् ; द्वैतविषयाणि साम्यान्यतः अर्वाञ्च्येव, अतोऽद्वयलक्षणमेतत् परमं साम्यमुपैति प्रतिपद्यते ॥ ३ ॥
यदा (யதா) எப்பொழுது पश्यः (பச்ய:) வித்வானானஸாதகன் रुक्मवर्णं (ருக்மவர்ணம்) ஸ்வயம்ஐ்யோதிஸ்வபாவம் அல்லது ஸ்வர்ணத்தின் ஐ்யோதி போன்ற ஐ்யோதி. அது விநாசமற்றது. कर्तारं (கர்தாரம்) எல்லா ஐகத்திற்கும் கர்த்தாவாயும் ईशं (ஈசம்) எல்லா திறமைகளுக்கும் நிலைக்களமாக உள்ள ஈசனாயும், ब्रह्मयोनिं (ப்ரஹ்மயோனிம்) பிரஹ்மமாயும், எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாயும் அல்லது ஹிரண்ய கர்பனுக்குப் பிறப்பிடமாயும் உள்ள पुरुषं (புருஷம்) பரமபுருஷனை எப்பொழுது இவ்வாறு पश्यति (பச்யதி) பார்க்கிறானோ यदा (ததா) அப்பொழுது அந்த विद्वान् (வித்வான்) ஸாதகனானவித்வான் पुण्यपापे (புண்யபாபே) பந்தகாரணங்களான புண்யபாப கர்மங்களைவேறுடன் विधूय (விதூய) களைந்துவிட்டு निरञ्जनो (நிரஞ்ஐனோ) எந்தப்பற்றும் அற்றவனாகி அல்லது எந்த லோபமும் அற்றவனாகி परमं (பரமம்) மிகவும் உயா்ந்ததான साम्यम् (சாம்யம்) இரண்டாவதற்ற அத்துவைத நிலையை उपैति (உபைதி) அடைகிறான். த்வைத விஷயத்தின் சாமான்யத்தன்மை இந்த அத்வைத ரூபசாமான்யத்தினால் மிகவும் மேலானதாகிறது. ஆகையால் அந்த அத்வைதரூப மேலான சாம்யத்தை அடைகிறான்.
किञ्च,
மேலும்
प्राणो ह्येष यः सर्वभूतैर्विभाति विजानन्विद्वान्भवते नातिवादी ।
आत्मक्रीड आत्मरतिः क्रियावानेष ब्रह्मविदां वरिष्ठः ॥ ४ ॥
योऽयं प्राणस्य प्राणः पर ईश्वरः हि एषः प्रकृतः सर्वभूतैः सर्वैर्भूतैः ब्रह्मादिस्तम्बपर्यन्तैः ; इत्थम्भूतलक्षणा तृतीया । सर्वभूतस्थः सर्वात्मा सन्नित्यर्थः । विभाति विविधं दीप्यते । एवं सर्वभूतस्थं यः साक्षादात्मभावेनायमहमस्मीति विजानन् विद्वान् वाक्यार्थज्ञानमात्रेण न भवते न भवतीत्येतत् । किम् ? अतिवादी अतीत्य सर्वानन्यान्वदितुं शीलमस्येत्यतिवादी ।
यः (ய:) எந்த ஒரு ஸாதகனானவன் பிராணனுக்குப் प्राणाः (ப்ராண:) ப்ராணனாய் உள்ள एषः हि (ஏஷ: ஹி) இங்கு விளக்கப்படும் இந்த ஈஸ்வரனே सर्वैर्भूतैः (சர்வபூதை:) நான்முகன் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லா பூதங்களிலும், சர்வாத் மஸ்வரூபமாய் இருந்து கொண்டு विभाति (விபாதி) பலவாராகப் பிரகாசிக்கிறான் என்று ஆத்ம சாக்ஷாத்கார பாவத்தால் இப்பரம் பொருளாகவே நானிருக்கிறேன் என்று विजानन् (விஐானன்) வாக்கியார்த்த மாத்திரத்தை அறிந்த विद्वान् (வித்வான்) வித்வானானவன் अतिवादी (அதிவாதீ) அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாக கூறுபவனாக (ஆத்மாவைத்தவிர மற்ற விஷயங்களை கூறுபவனாக) न भवते (ந பவதே) ஆகமாட்டான். மற்ற எல்லாவிஷயங்களையும் தாண்டி வாதிக்கும் சக்தி உடையவன் அதிவாதீ.
यस्त्वेवं साक्षादात्मानं प्राणस्य प्राणं विद्वान् , सोऽतिवादी न भवतीत्यर्थः । सर्वं यदा आत्मैव नान्यदस्तीति दृष्टम् , तदा किं ह्यसावतीत्य वदेत् । यस्य त्वपरमन्यद्दृष्टमस्ति, स तदतीत्य वदति । अयं तु विद्वान्नात्मनोऽन्यत्पश्यति ; नान्यच्छृणोति ; नान्यद्विजानाति । अतो नातिवदति ।
எவன் இவ்வாறு பிராணனுக்குப் பிராணன் சாக்ஷாத் ஆத்மாவே என்று அறிகிறானோ அவன் அதிவாதீ ஆகமாட்டான் என்பது பொருள். எப்பொழுதும் யாவும் ஆத்மாவான ப்ரஹ்மமே, அதைத்தவிர வேறு ஒன்று இல்லை என்று கண்டானோ அப்பொழுது அதைக் காட்டிலும் வேறாகக் எதைக் கூறுவான?். எவன் ஒருவன் அபரமான வேறு ஒன்றைப் பார்க்கிறானோ அவன் அதைக்காட்டிலும் வேறாகக்கூறுகிறான். ஆனால் ஸாக்ஷத்காரம் பெற்ற ஞானி ஆத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றைப் பார்ப்பதில்லை, வேறு ஒன்றைக் கேட்பதும் இல்லை. வேறு ஒன்றை அறிவதும் இல்லை. எனவே அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாகக் கூறுவதும் இல்லை.
किञ्च, आत्मक्रीडः आत्मन्येव क्रीडा क्रीडनं यस्य नान्यत्र पुत्रदारादिषु, स आत्मक्रीडः । तथा आत्मरतिः आत्मन्येव रती रमणं प्रीतिर्यस्य, स आत्मरतिः । क्रीडा बाह्यसाधनसापेक्षा ; रतिस्तु साधननिरपेक्षा बाह्यविषयप्रीतिमात्रमिति विशेषः । तथा क्रियावान् ज्ञानध्यानवैराग्यादिक्रिया यस्य सोऽयं क्रियावान् । समासपाठे आत्मरतिरेव क्रियास्य विद्यत इति बहुव्रीहिमतुबर्थयोरन्यतरोऽतिरिच्यते ।
மேலும் आत्मक्रीडः (ஆத்மக்ரீட:) தன்னிலேயே விளையாட்டை உடையவன். இத்தகையவன் மனைவி மக்களுடன் விளையாடுவது இல்லை, அவ்வாறே आत्मरतिः (ஆத்மரதி:) ஆத்மாவிலேயே (தன்னிலேயே) ப்ரீதி உடையவன், க்ரீடா என்பது வெளிசாதனங்களை அபேக்ஷிப்பது. ரதியோ சாதனங்களை அபேக்ஷிப்பது இல்லை. ஆனால் பாஹ்ய விஷயத்தில் ப்ரீதி மாத்திரம் இருத்தல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசமாகும். क्रियावान् (கிரியாவான்) ஞான, த்யான, வைராக்கிய முதலிய செயல்களோடு கூடியவனாயும் உள்ளவன். (आत्मरतिः क्रियावान्) ஆத்மரதி: க்ரியாவான் என்ற சமாசப்பாடப்படி ஆத்மரதி எவருடைய கிரியையோ என்ற அர்த்தப்படிப் பார்த்தால் பஹுவிரீஹி சமாசமாகும். மேலும் மதுப்பிரத்யயத்தின் அர்த்தம் அதிகமாகும் (தேவையற்றதாகும்.)
केचित्त्वग्निहोत्रादिकर्मब्रह्मविद्ययोः समुच्चयार्थमिच्छन्ति । तच्चैष ब्रह्मविदां वरिष्ठ इत्यनेन मुख्यार्थवचनेन विरुध्यते । न हि बाह्यक्रियावानात्मक्रीड आत्मरतिश्च भवितुं शक्तः । क्वचिद्बाह्यक्रियाविनिवृत्तो ह्यात्मक्रीडो भवति बाह्यक्रियात्मक्रीडयोर्विरोधात् । न हि तमःप्रकाशयोर्युगपदेकत्र स्थितिः सम्भवति ।
சிலர் அக்னிஹோத்திராதிகர்மம், பிரஹ்மவித்யா இவைகளின் சமுச்சயத்தை இச்சிக்கிறார்கள். ஆனால் एषः (ஏஷ) ब्रह्मविदां (ப்ரஹ்மவிதாம்) वरिष्ठः (வரிஷ்ட்ட) என்ற முக்யார்த்த வசனத்திற்கு விருத்தமாகிறது. பாஹ்யவிஷயங்களில் கிரியை உடையவன் ஆத்மக்கிரீட: ஆத்மரதி: ஆகியவைகளை அடையமுடியாது. வெளிகிரியை, ஆத்மகிரீடை இரண்டும் விநோதம் ஆவதால் வெளிக்கிரியைகளிலிருந்து விடுபட்டவனே ஆத்மகிரீடனாவான். இருளும் வெளிச்சமும் ஒரே சமயத்தில் இருப்பது என்பது சம்பவியாது.
ஆகையால் இந்த ஞானகர்ம சமுச்சயத்தை பிரதிபாதனம் செய்ததை முன்கூறிய வசனங்களின் வாயிலாக அது அஸத் (பொருந்தாது) என்று சித்தமாகிறது. ‘अन्या वाचो विमुञ्चथ’ (அன்யவாச்ச விமுஞ்ச்சத) ‘संन्यासयोगात्’ (சந்நியாச யோகாத்) என்ற சுருதிவாக்கியங்களினாலும் தெரிகிறது. ஆகையால் இங்கு கிரியாவான் எவனோ அவன் ஞானதியானாதி கிரியை உடையவன் ஆரிய மரியாதையை பங்கம் செய்யாத சந்நியாசி. எவன் இந்தலக்ஷணமுடைய சந்நியாசி அதிவாதி ஆகமாட்டானோ. அவனே ஆத்மக்கிரீடன், ஆத்மரதி, கிரியாவான், பிரஹ்மநிஷ்ட்டன். அவனே பிரஹ்மத்தை அறிந்தவர்கள் எல்லோருள்ளும் மேலானவன். அதாவது ப்ரதானமானவன்.
अधुना सत्यादीनि भिक्षोः सम्यग्ज्ञानसहकारीणि साधनानि विधीयन्ते निवृत्तिप्रधानानि —
இப்பொழுது ஸாதகா்களுக்குத் தேவையான சம்யக்ஞானத்திற்கு உதவக்கூடிய சத்தியம் முதலான நிவிர்த்தியைப் பிரதானமாக உடைய சாதனங்கள் விதிக்கப்படுகின்றன.
सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।
अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥
सत्येन अनृतत्यागेन मृषावदनत्यागेन लभ्यः प्राप्तव्यः । किञ्च, तपसा हीन्द्रियमनएकाग्रतया ।
‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (मो. ध. २५० । ४) इति स्मरणात् । तद्ध्यनुकूलमात्मदर्शनाभिमुखीभावात्परमं साधनं तपो नेतरच्चान्द्रायणादि । एष आत्मा लभ्य इत्यनुषङ्गः सर्वत्र । सम्यग्ज्ञानेन यथाभूतात्मदर्शनेन ब्रह्मचर्येण मैथुनासमाचारेण । नित्यं सर्वदा ; नित्यं सत्येन नित्यं तपसा नित्यं सम्यग्ज्ञानेनेति सर्वत्र नित्यशब्दोऽन्तर्दीपिकान्यायेनानुषक्तव्यः । वक्ष्यति च
‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति ।
सत्येन (சத்யேன) உண்மையால், பொய்யை ஒழிப்பதாலும், பொய்பேசுதலை விடுவதாலும், மேலும் तपसा (தபசா) இந்திரியமனம் இவைகளின் ஏகாக்கிர தன்மையாலும் (ஒருமுகப்படுத்துதலாலும்) ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (மன இந்திாிய ஏகாக்கிரம் மேலானதபஸ்) என்ற ஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம். அதாவது இந்தத்தவமே ஆன்மாவைக்குறித்து தன்னை உள்முகப்படுத்துக் கொள்ள வேண்டிய ஸாதனம் ஆகுமேயன்றி சாந்தி ராயணம் முதலான விரதங்கள் அத்தகைய தவமான ஸாதனம் ஆகாது. हि एष आत्मा (ஹி ஏஷ ஆத்மா) சத்தியம் தபஸ் முதலானவைகளாலேயே இந்த ஆத்மா लभ्यः அடையத்தக்கதாகும். அடையத்தக்கது என்பது மற்ற சாதனங்களுக்கும் பொருந்தும். सम्यग्ज्ञानेन (சம்யக்ஞானேன) ஆத்மாவை உள்ளபடியே அறியும் ஞானம் ब्रह्मचर्येण (ப்ரஹ்மச்சா்யேன) பிரஹ்மச்சரியம் அதாவது புலனடக்கம் எப்பொழுதும் கடைபிடிக்கவேண்டியது. அவ்வாறே சத்தியம், தபஸ், சம்யக்ஞானம் ஆகியவையும் எப்பொழுதும் (नित्यं) என்பதை அந்தர் தீபிகாநியாயத்தால் பொருத்திக்கொள்ள வேண்டும். ‘न येषु जिह्ममनृतं न माया च’ எந்த புருஷர்களிடத்தில் சிறுமை, பொய் மேலும் மாயை இல்லை என்று இனிக்கூறப்போகிறார
क्वासावात्मा य एतैः साधनैर्लभ्य इत्युच्यते — अन्तःशरीरेऽन्तर्मध्ये शरीरस्य पुण्डरीकाकाशे ज्योतिर्मयो हि रुक्मवर्णः शुभ्रः शुद्धो यमात्मानं पश्यन्ति उपलभन्ते यतयः यतनशीलाः संन्यासिनः क्षीणदोषाः क्षीणक्रोधादिचित्तमलाः, स आत्मा नित्यं सत्यादिसाधनैः संन्यासिभिर्लभ्यत इत्यर्थः । न कादाचित्कैः सत्यादिभिर्लभ्यते । सत्यादिसाधनस्तुत्यर्थोऽयमर्थवादः ॥ ५ ॥
இந்த ஆத்மா யார்? எவர் இந்த ஆத்மாவை இந்த ஸாதனங்களால் அடைவர் என்பதைக் கூறுகிறார். क्षीणदोषाः (க்ஷீணதோஷா:) க்ரோதம் முதலிய சித்தமலங்கள் நீங்கப்பெற்ற यतयः (யதய:) முயற்சி உள்ள ஸாதகர்களான சந்நியாசிகள் अन्तःशरीरे (அந்த: சரீரே) சரீரத்தின் ஹிருதயகமலத்தின் மத்தியில் உள்ள ஆகாசத்தில் ज्योतिर्मयो हि (ஐ்யோதிர்மயோ ஹி) ஐ்யோதிர்மயமாயும் ஸ்வர்ண வர்ணமானதாயும் शुभ्रः (சுப்ர:) பரிசுத்தமயமாயும் உள்ள (யம்) ஆத்மாவைப் पश्यन्ति (பச்யந்தி) பார்க்கிறார்கள் அதாவது அடைகின்றனர். அந்த ஆத்மாவானது எப்பொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களான சந்நியாசிகளால் அடையப்படுகிறது. ஒருபொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களால் அடையமுடியாது. சத்யாதி ஸாதனங்கள் ஸ்துதியின் பொருட்டேயாகும். இது அர்த்தவாதம்.
सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः ।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम् ॥ ६ ॥
सत्यमेव सत्यवानेव जयते जयति, नानृतं नानृतवादीत्यर्थः । न हि सत्यानृतयोः केवलयोः पुरुषानाश्रितयोः जयः पराजयो वा सम्भवति । प्रसिद्धं लोके सत्यवादिनानृतवाद्यभिभूयते न विपर्ययः ; अतः सिद्धं सत्यस्य बलवत्साधनत्वम् ।
सत्यमेव (சத்யமேவ) உண்மையை உடையவனே, அதாவது உண்மையைக்கைக் கொள்பவனே जयति (ஐயதி) வெற்றிபெறுவான். न अनृतं (ந அன்ருதம்) பொய்யை உடையவன் வெற்றிபெறுவது இல்லை. மனிதனை ஆஸ்ரயித்த வெறும் உண்மையோ, பொய்யோ இவைகளுக்கு வெற்றியோ, தோல்வியோ ஏற்படுவது இல்லை. உண்மை விளம்பியால் பொய்பேசுபவன் வெற்றிகொள்ளப்பட்டான் என்பதே உலகில் பிரசித்தமானது. இதில் வேறுபாடு இல்லை. இதனால் உண்மைக்கு வலுவான ஸாதனமாய் இருக்கும் தன்மை உறுதியாகிறது.
किञ्च, शास्त्रतोऽप्यवगम्यते सत्यस्य साधनातिशयत्वम् । कथम् ? सत्येन यथाभूतवादव्यवस्थया पन्थाः देवयानाख्यः विततो विस्तीर्णः सातत्येन प्रवृत्तः । येन पथा हि अक्रमन्ति आक्रमन्ते ऋषयः दर्शनवन्तः कुहकमायाशाठ्याहङ्कारदम्भानृतवर्जिता ह्याप्तकामाः विगततृष्णाः सर्वतो यत्र यस्मिन् , तत्परमार्थतत्त्वं सत्यस्य उत्तमसाधनस्य सम्बन्धि साध्यं परमं प्रकृष्टं निधानं पुरुषार्थरूपेण निधीयत इति निधानं वर्तते । तत्र च येन पथा आक्रमन्ति, स सत्येन वितत इति पूर्वेण सम्बन्धः ॥ ६ ॥
அவ்வாறே சாஸ்த்திரத்தாலும் ஸத்யத்தின் வலுவான ஸாதனத்தன்மை உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது. எவ்வாறு? எனில் येन पथा हि (யே பதா ஹி) எந்த மார்க்கத்தால் आप्तकामाः (ஆப்தகாமா:) பொய், மாயை, பிடிவாதம், அஹங்காரம், தம்பம், வஞ்சகம் முதலியவைகள் நீங்கப் பெற்றமையால் ஆசை அற்றவர்களான ऋषयः ஆத்மதர்சனம் பெற்ற முனிவர்கள் अक्रमन्ति (ஆக்ரமந்தி) அந்த ப்ரஹ்மத்தை அடைகின்றனரோ அந்த देवयानः (தேவயான:) தேவயானம் எனப்படும் पन्थाः (பந்தா) மார்க்கமானது सत्येन (சத்யேன) உள்ளதை உள்ளபடி உணரும் சத்தியத்தால் विततः (விதத:) விஸ்தரிக்கப்பட்டதாய் உள்ளது. यत्र (யத்ர) எங்கு பரமாா்த்தமான உண்மை உள்ளதோ அங்கு सत्यस्य (சத்யஸ்ய) உத்தம சாதனமான ஸத்தியத்தால் ஸாதிக்கத்தக்க परमं (பரமம்) உயர்ந்த சத்தியவஸ்துவான பரம்பொருள் புருஷார்த்தரூபமாய் निधानं (நிதானம்) வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சத்தியத்தால் விரிந்துள்ள மார்க்கத்தால் முனிவர்கள் அப்பரம்பொருளை அடைகின்றனர் என்பது கருத்து.
किं तत्किन्धर्मकं च तदित्युच्यते —
அது என்ன? அதனுடைய தர்மம் என்ன? என்பதை அந்தமந்திரத்தால் விளக்கப்படுகிறது.
बृहच्च तद्दिव्यमचिन्त्यरूपं सूक्ष्माच्च तत्सूक्ष्मतरं विभाति ।
दूरात्सुदूरे तदिहान्तिके च पश्यत्स्विहैव निहितं गुहायाम् ॥ ७ ॥
बृहत् महच्च तत् प्रकृतं ब्रह्म सत्यादिसाधनेन सर्वतो व्याप्तत्वात् । दिव्यं स्वयम्प्रभमनिन्द्रियगोचरम् अत एव न चिन्तयितुं शक्यतेऽस्य रूपमिति अचिन्त्यरूपम् । सूक्ष्मादाकाशादेरपि तत्सूक्ष्मतरम् , निरतिशयं हि सौक्ष्म्यमस्य सर्वकारणत्वात् ; विभाति विविधमादित्यचन्द्राद्याकारेण भाति दीप्यते ।
तत् (தத்) சத்தியாதி சாதனங்களால் அடையப்பட்ட அந்த பரப்பிரஹ்மமானது எங்கும் வியாபித்துள்ளதால் बृहत् च (ப்ரஹத்ச் ச) பெரியது. दिव्यं (திவ்யம்) ஸ்வயம் பிரகாசமானது. அது இந்திரியங்களுக்கு அதனுடையரூபம் விஷயமாகாது. ஆகையால் அது अचिन्त्यरूपम् (அசிந்த்தியரூபம்) ஆகாசாதிகளைக் காட்டிலும் சுக்ஷ்மமானதால் அது सूक्ष्मतरम् (சுக்ஷ்மதரம்) எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பதால் எல்லாவற்றைக் காட்டிலும் சுக்ஷ்மமானதாகும். विभाति (விபாதி) அநேகவிதமாக சுரிய சந்திரர்கள் முதலிய ஆகாரமாய் விளங்குகிறது.
किञ्च, दूरात् विप्रकृष्टाद्देशात्सुदूरे विप्रकृष्टतरे देशे वर्ततेऽविदुषामत्यन्तागम्यत्वात्तदब्रह्म । इह देहे अन्तिके समीपे च, विदुषामात्मत्वात् । सर्वान्तरत्वाच्चाकाशस्याप्यन्तरश्रुतेः । इह पश्यत्सु चेतनावत्स्वित्येतत् , निहितं स्थितं दर्शनादिक्रियावत्त्वेन योगिभिर्लक्ष्यमाणम् । क्व ? गुहायां बुद्धिलक्षणायाम् । तत्र हि निगूढं लक्ष्यते विद्वद्भिः । तथाप्यविद्यया संवृतं सन्न लक्ष्यते तत्रस्थमेवाविद्वद्भिः ॥ ७ ॥
மேலும் तत् (தத்) அந்த ப்ரஹ்மம் दूरात् (தூராத்) வெகுதூரத்தினின்றும் सुदुरे (சுதூரே) அவித்வான்களுக்கு முற்றிலும் அடையமுடியாததால், அவர்களால் நெருங்க முடியாத வெகுதூரத்தில் உள்ளது. அவ்வாறே इह (இஹ) இந்ததேஹத்தில் अन्तिके च (அந்திகேச்ச) மிகசமீபத்தில் உள்ளது. அதாவது விவேகிகளுக்கு ஆத்மாவானதால் சமீபத்தில் உள்ளது. ஆகாயத்தைக் காட்டிலும் மிகசமீபத்தில் இருக்கிறது என்று சுருதியிலும் உள்ளது. इह एव पश्यत्सु (இஹ ஏவ பச்யத்சு) இங்கு சேதனத்துடன் விளங்குபவைகளில் அப்பரம்பொருள் गुहायां निहितं (குஹாயாம் நிஹிதம்) பார்த்தல் போன்ற செயல்களுடன் கூடிய தன்மையால், புத்தியில் உறைத்ததாக வித்வான்களால் காணப்படுகிறது. அப்படி தன்னுள்ளேயேயிருப்பினும் அவிவேகிகளுக்கு அவித்தையால் மூடப்பட்டதாகக் கொண்டு காணப்படுவது இல்லை.
पुनरप्यसाधारणं तदुपलब्धिसाधनमुच्यते —
மேலும் அப்பரம்பொருளை அடைவதற்கான அசாதாரணமான ஸாதனம் இம்மந்திரத்தில் விளக்கப்படுகிறது.
न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मणा वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥
यस्मात् न चक्षुषा गृह्यते केनचिदप्यरूपत्वात् नापि गृह्यते वाचा अनभिधेयत्वात् न चान्यैर्देवैः इतरेन्द्रियैः । तपसः सर्वप्राप्तिसाधनत्वेऽपि न तपसा गृह्यते । तथा वैदिकेनाग्निहोत्रादिकर्मणा प्रसिद्धमहत्त्वेनापि न गृह्यते । किं पुनस्तस्य ग्रहणे साधनमित्याह —
(இந்தப்பரம்பொருள்) எதனால் அரூபமாய் இருக்கிறதோ அதனால் ஒருவராலும் चक्षुषा (சக்ஷுஷா) கண்ணால் न गृह्यते (ந க்ருஹ்யதே) பார்க்கப்படுவது இல்லை. அதாவது கிரஹிக்கப்படுவது இல்லை. இன்னதென்று குறிப்பிட முடியாததால் वाचा अपि (வாச்சா அபி) न (ந) வாக்கினாலும் கிரஹிக்கப்படுவது இல்லை. अन्यैः देवैः न च (அன்யை: தேவை: நச்ச) மற்ற இந்திரியங்களாலும் கிரஹிக்க முடியாது. कर्मणा பிரசித்தமான மேலான வைதிகமான அக்நிஹோத்திரம் முதலான கர்மாக்கள் மூலமாகவோ அப்பரம்பொருள் न गृहाते (ந க்ருஹ்யதே) கிரஹிக்கப்படுவது இல்லை. அவ்வாறெனில் அதைக்கிரஹிப்பதற்கான சாதனம் எது என்பதை கூறுகிறார்.
ज्ञानप्रसादेन आत्मावबोधनसमर्थमपि स्वभावेन सर्वप्राणिनां ज्ञानं बाह्यविषयरागादिदोषकलुषितमप्रसन्नमशुद्धं सन्नावबोधयति नित्यसंनिहितमप्यात्मतत्त्वं मलावनद्धमिवादर्शम् , विलुलितमिव सलिलम् । तद्यदेन्द्रियविषयसंसर्गजनितरागादिमलकालुष्यापनयनादादर्शसलिलादिवत्प्रसादितं स्वच्छं शान्तमवतिष्ठते, तदा ज्ञानस्य प्रसादः स्यात् ।
ज्ञानप्रसादेन (ஞானப்பிரசாதேன) அழுக்கடைந்த கண்ணாடி முகத்தைக் காட்டதது போலும், சலிக்கின்ற நீர் பிரதிபிம்பத்தைக் காட்டாதது போலும் எல்லாப் பிராணிகளுடைய புத்தியும், அப்பரம்பொருள் அறியும் சாமர்த்தியம் உடையதாய் இருப்பினும், அதுவெளி விஷயங்களில் உள்ள பற்று முதலான தோஷங்களால் கலக்கமுற்று தெளிவின்றி அசுத்தமாய் இருப்பதால் ஆன்மாவை அறிவதில்லை. அதேபுத்தி இந்திரிய விஷயங்களின் சேர்க்கையால் உண்டான ஆசை (பற்று) முதலான அழுக்கற்றதாக இருக்குமேயானால் சுத்தமான கண்ணாடி, சலனமற்ற தெளிந்தநீர் இவைகளில் பிரதிப்பிம் பிப்பது போல் புத்தியானது பரிசுத்தமாயும், சாந்தமாயும் இருக்கும். அந்த ஞானப்பிரசாதத்தால்
तेन ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वः विशुद्धान्तःकरणः योग्यो ब्रह्म द्रष्टुं यस्मात् , ततः तस्मात्तु तमात्मानं पश्यते पश्यति उपलभते निष्कलं सर्वावयवभेदवर्जितं ध्यायमानः सत्यादिसाधनवानुपसंहृतकरण एकाग्रेण मनसा ध्यायमानः चिन्तयन् ॥ ८ ॥
அந்த ஞானப்பிரகாசத்தால் ध्यायमानः (த்யாயமான:) சத்தியம் முதலான ஸாதனங்களுடனும், புலனடக்கத்துடனும், ஒருமுகப்பட்ட மனதுடன் தியானம் செய்பவன் विशुद्धसत्त्वः (விசுத்த சத்வ:) சுத்த அந்தக்கரணமுடையதால் பிரஹ்மத்தை அறிவதற்கு யோக்கியம் உடையவனாய் ततः (தத:) இருந்ததால் निष्कलं (நிஷ்களம்) எல்லா அவயவபேதம் அற்ற तम् (தம்) அந்த ஆத்மாவை पश्यते (பச்யதே) பார்க்கிறான் அல்லது அடைகிறான்.
यमात्मानमेवं पश्यति,
இந்த ஆத்மாவை இவ்வாறு அறிகிறான்.
एषोऽणुरात्मा चेतसा वेदितव्यो यस्मिन्प्राणः पञ्चधा संविवेश ।
प्राणैश्चित्तं सर्वमोतं प्रजानां यस्मिन्विशुद्धे विभवत्येष आत्मा ॥ ९ ॥
एषः अणुः सूक्ष्मः आत्मा चेतसा विशुद्धज्ञानेन केवलेन वेदितव्यः । क्वासौ ? यस्मिन् शरीरे प्राणः वायुः पञ्चधा प्राणापानादिभेदेन संविवेश सम्यक् प्रविष्टः, तस्मिन्नेव शरीरे हृदये चेतसा ज्ञेय इत्यर्थः ।
यस्मिन् (யஸ்மின்) எந்த சரீரத்தில் प्राणः (ப்ராண:) வாயுவானது पञ्चधा (பஞ்சதா) பிராண அபாரனாதிபஞ்ச பேதங்களுடன் संविवेश(சம்விவேச) நன்கு நுழைந்துள்ளதோ அந்த சரீரத்திலேயே ஹிருதய கமலத்தில் एषः अणुः आत्मा (ஏஷ அணு ஆத்மா) இந்த சுக்ஷ்மமான ஆத்மாவானது चेतसा (சேதஸா) விசுத்தமான ஞானத்தால் மாத்திரமே वेदितव्यः அறியத்தக்கது ஆகும். சுத்தாந்தக்கரணத்தினாலேயே அறியமுடியும் என்பது பொருள்.
कीदृशेन चेतसा वेदितव्य इत्याह — प्राणैः सहेन्द्रियैः चित्तं सर्वमन्तःकरणं प्रजानाम् ओतं व्याप्तं येन क्षीरमिव स्नेहेन, काष्ठमिव चाग्निना । सर्वं हि प्रजानामन्तःकरणं चेतनावत्प्रसिद्धं लोके । यस्मिंश्च चित्ते क्लेशादिमलवियुक्ते शुद्धे विभवति, एषः उक्त आत्मा विशेषेण स्वेनात्मना विभवति आत्मानं प्रकाशयतीत्यर्थः ॥
எத்தகைய விசுத்தஞானத்தால் எனில், प्रजानां (ப்ரஐானாம்) மக்களுடைய सर्वचित्ं (சர்வ சித்தம்) எல்லா அந்தக்கரணங்களும், प्राणैः (ப்ராணை:) இந்திரியங்களுடன் கூடிய ओतं (ஓதம்) பாலில் வெண்ணையும், கட்டையில் நெருப்பாலும், வ்யாபிக்கப்பட்டு இருப்பது போல் வியாபித்து உள்ளது. எல்லா ப்ரைஐகளுடைய அந்தக் கரணங்களும் சேதனம் போல் விளங்குவது உலகில் பிரசித்தம். यस्मिन् (யஸ்மின்) எந்த சித்தத்தில் विशुद्धे (விசுத்தே) க்லேசம் முதலான அழுக்குகள் நீக்கப்பெற்று தூய்மை அடைகிறதோ அப்பொழுது அந்த சித்தத்தில் एष आत्मा (ஏஷ ஆத்மா) முற்கூறப்பட்ட இந்த ஆத்மாவானவன் विभवति (விபவதி) தன்னுடைய உண்மை ஸ்வரூபத்துடன் விசேஷமாய் தன்னைப் பிரகாசப்படுத்துகிறான்.
य एवमुक्तलक्षणं सर्वात्मानमात्मत्वेन प्रतिपन्नस्तस्य सर्वात्मत्वादेव सर्वावाप्तिलक्षणं फलमाह —
எவன் முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன், ஸர்வாத்மாவாய் விளங்கும் ஆத்மாவை, ஆத்மாவாய்க் கொண்டுள்ளானோ, அவன் ஸர்வாத்மாவாய் விளங்குவதால், எல்லாவற்றையும் அடைகிறான் என்பதனை விளக்குவது இந்த மந்திரம்.
यं यं लोकं मनसा संविभाति विशुद्धसत्त्वः कामयते यांश्च कामान् ।
तं तं लोकं जयते तांश्च कामांस्तस्मादात्मज्ञं ह्यर्चयेद्भूतिकामः ॥ १० ॥
यं यं लोकं पित्रादिलक्षणं मनसा संविभाति सङ्कल्पयति मह्यमन्यस्मै वा भवेदिति, विशुद्धसत्त्वः क्षीणक्लेशः आत्मविन्निर्मलान्तःकरणः कामयते यांश्च कामान् प्रार्थयते भोगान् , तं तं लोकं जयते प्राप्नोति तांश्च कामान्सङ्कल्पितान्भोगान् । तस्माद्विदुषः सत्यसङ्कल्पत्वादात्मज्ञमात्मज्ञानेन विशुद्धान्तःकरणं ह्यर्चयेत्पूजयेत्पादप्रक्षालनशुश्रूषानमस्कारादिभिः भूतिकामः विभूतिमिच्छुः । ततः पूजार्ह एवासौ ॥ १० ॥
विशुद्धसत्त्वः (விசுத்தசத்வ:) க்லேசங்கள் நீங்கினவனாயும், தூய அந்தக்கரணமுடையனாகவும் உள்ள ஆத்மக்ஞானி मनसा (மனஸா) यं यं लोकं (யம்யம் லோகம்) பித்ரு முதலிய லக்ஷணங்களை உடைய லோகங்கள் संविभाति (சம்விபாதி) தனக்கோ மற்றவர்களுக்கோ இருக்கட்டும் என்று சங்கல்பிக்கின்றானோ यांश्च कामान् அந்தபோகங்களை कामयते (காமயதே) பிரார்த்திக்கின்றானோ तं तं लोकं (தம்தம் லோகம்) यांश्च लोकान् (தாம்ச்சலோகான்) ஸத்திய சங்கல்ப்பனானதால் அந்த அந்த லோகங்களையும் ஸங்கல்பிக்கப்பட்ட போகங்களையும் जयते (ஐயதே) அடைகிறான். तस्मात् (தஸ்மாத்) भूतिकामः (பூதிகாம:) செல்வச்செழிப்பையும் விபூதிகளையும் விரும்புபவன் आत्मज्ञं (ஆத்மக்ஞம்) ஆன்மஞானத்தால் தூய்மையடைந்த அந்தக் கரணத்தோடு கூடியவனாயும், ஸத்யசங்கல்பனாயும் உள்ள ஆத்ம ஞானியை अचेयेत् (அர்ச்சயேத்) காலை அலம்புதல், பணிவிடை புரிதல், வணங்குதல், முதலிய செயல்களால் பூஜித்தல் வேண்டும். ஆகையால் அந்த ஆத்மக்ஞானியே பூைஐக்கு அருகதையானவர்.
इति तृतीयमुण्डके प्रथमखण्डभाष्यम् ॥
स वेदैतत्परमं ब्रह्म धाम यत्र विश्वं निहितं भाति शुभ्रम् ।
उपासते पुरुषं ये ह्यकामास्ते शुक्रमेतदतिवर्तन्ति धीराः ॥ १ ॥
स वेद जानाति एतत् यथोक्तलक्षणं ब्रह्म परमं प्रकृष्टं धाम सर्वकामानामाश्रयमास्पदम् , यत्र यस्मिन्ब्रह्मणि धाम्नि विश्वं समस्तं जगत् निहितम् अर्पितम् , यच्च स्वेन ज्योतिषा भाति शुभ्रं शुद्धम् , तमप्येवंविधमात्मज्ञं पुरुषं ये हि अकामाः विभूतितृष्णावर्जिता मुमुक्षवः सन्तः उपासते परमिव देवम् , ते शुक्रं नृबीजं यदेतत्प्रसिद्धं शरीरोपादानकारणम् अतिवर्तन्ति अतिगच्छन्ति धीराः बुद्धिमन्तः, न पुनर्योनिं प्रसर्पन्ति । ‘न पुनः क्व रतिं करोति’ ( ? ) इति श्रुतेः । अतस्तं पूजयेदित्यभिप्रायः ॥
सः (ச:) அந்த ஆத்மஞானியானவன் एतत् परम् (ஏதத் பரம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய தாயும் மிகவும் உயர்ந்ததாயும் உள்ள ब्रुहा धाम (பிரஹ்மதாம) எல்லா விருப்பங்களுக்கும் ஆத்ம பூதமாய் ஆஸ்ரயமாய் உள்ள பிரஹ்மத்தில் यत्र (யத்ர) சர்வஅதிஷ்டானமாக உள்ள பிரஹ்மத்தில் विश्वं (விச்வம்) ஐகத்முழுவதும் निहितं (நிஹிதம்) வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ப்ரஹ்மமானது शुभ्रं (சுப்ரம்) பரிசுத்தமானதாக भाति (பாதி) தன்னுடைய சுவயம் பிரகாசஐ்யோதியினால் பிரகாசிக்கின்றது என்று वेद (வேத) அனுபவபூர்வமாய் அறிகின்றானோ அத்தகைய पुरुषं (புருஷம்) ஆத்மஞானியான புருஷனை ये हि अकामाः (யேஹி அகாமா:) முற்கூறப்பட்ட விபூதிகளில் ஆசையற்றவர்களான முமூக்ஷுக்கள் सेवन्ते (சேவந்தே) சேவிக்கின்றனரோ அல்லது பரம்பொருளைப்போல் உபாசிக்கிறார்களோ ते धीराः (தேதீரா:) அத்தகைய புத்திசாலிகள் एतत् शुक्रं (ஏதத் சுக்ரம்) சரீரம் உண்டாவதற்கு உபாதான காரணமான புருஷனிடமுள்ள சுக்ரனை अतिवर्तन्ते (அதிவர்தந்தே) கடந்தவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் மறுஐன்மம் எடுப்பதில்லை. ‘न पुनः क्वचिद्गतिं करोति’ (மறுபடியும் பிறப்பிடங்களில் ரமிப்பது இல்லை) என்று சுருதியாலும் அறிகிறோம். ஆகையால் அவர்களை (ஆத்மக்ஞானிகளை) பூஐிக்க வேண்டும் என்பது அபிப்பிராயம்.
मुमुक्षोः कामत्याग एव प्रधानं साधनमित्येतद्दर्शयति —
முமூக்ஷுகளுக்கு காமத்யாகமே முக்கிய சாதனம் என்று காண்பிக்கப்படுகிறது.
कामान्यः कामयते मन्यमानः स कामभिर्जायते तत्र तत्र ।
पर्याप्तकामस्य कृतात्मनस्तु इहैव सर्वे प्रविलीयन्ति कामाः ॥ २ ॥
कामान् यः दृष्टादृष्टेष्टविषयान् कामयते मन्यमानः तद्गुणांश्चिन्तयानः प्रार्थयते, सः तैः कामभिः कामैर्धर्माधर्मप्रवृत्तिहेतुभिर्विषयेच्छारूपैः सह जायते ; तत्र तत्र, यत्र यत्र विषयप्राप्तिनिमित्तं कामाः कर्मसु पुरुषं नियोजयन्ति, तत्र तत्र तेषु तेषु विषयेषु तैरेव कामैर्वेष्टितो जायते ।
यः (ய:) எவன் ஒருவன் कामान् (காமான்) பார்த்த, பார்க்கப்படாதவைகளான இஷ்டமான விஷயங்களில் मन्यमानः (மன்யமான:) உள்ள அந்த அந்த குணங்களை எண்ணியவனாய்க் கொண்டு कामयते (காமயதே) விரும்புகின்றானோ सः (ச:) அந்தகாமியானவன் तत्र तत्र (தத்ர தத்ர) அங்கு அங்கு விஷயங்களை அடைவதின் பொருட்டு விருப்பங்கள், செயலில் மனிதனைப் பிணைக்கின்றனவோ அந்த कामभिः (காமபி:) அந்த விஷயங்களில் உள்ள காமனைகளால் புண்ய, பாபவங்களின் பிரவிர்த்திக்கு ஹேதுவான விஷய இச்சைகளால் சுழப்பட்டவனாக जायते (ஐாயதே) பிறக்கிறான்.
यस्तु परमार्थतत्त्वविज्ञानात्पर्याप्तकामः आत्मकामत्वेन परि समन्ततः आप्ताः कामा यस्य, तस्य पर्याप्तकामस्य कृतात्मनः अविद्यालक्षणादपररूपादपनीय स्वेन परेण रूपेण कृत आत्मा विद्यया यस्य, तस्य कृतात्मनस्तु इहैव तिष्ठत्येव शरीरे सर्वे धर्माधर्मप्रवृत्तिहेतवः प्रविलीयन्ति प्रविलीयन्ते विलयमुपयान्ति, नश्यन्तीत्यर्थः । कामाः तज्जन्महेतुविनाशान्न जायन्त इत्यभिप्रायः ॥ २ ॥
பரமார்த்த தத்துவத்தை அறிந்தமையால் விஷயங்களில் காமனை அற்று ஆத்மாவிடத்திலேயே முழுமையான காமனை உடையவன் எவனோ அந்த पयोप्तकामस्य (பர்யாப்தகாமஸ்ய) பரியாப்தகாமனுடை யவனாயும் कृतात्मनः (க்ருதாத்மன:) அவித்யாவிஷயமான, அபரரூபமான விஷயங்களில் இருந்து புத்தியைத்திருப்பி ஆத்ம ஞானத்தால் தன் ஆ்த்ம ஸ்வரூபத்திலேயே செழுத்தியவன் सर्व कामाः (சா்வே காமா:) தர்மாதர்மப்ரவிருத்தி ஹேதுக்களான விருப்பங்கள் யாவும் इहैव (இஹைவ) இந்த சரீரம் இருக்கும் பொழுதே प्रविलीयन्ति (ப்ரவிலீயந்தி) நாசமடைகின்றன. அதாவது விருப்பங்கள் (காமங்கள்) அவைகள் உண்டாவதற்கான காரணங்களே நாசமடைவதால், அவைகள் உண்டாவது இல்லை என்பது பொருள்.
यद्येवं सर्वलाभात्परम आत्मलाभः, तल्लाभाय प्रवचनादय उपाया बाहुल्येन कर्तव्या इति प्राप्ते, इदमुच्यते —
இவ்வாறு எல்லா லாபத்தைக் காட்டிலும் ஆத்மலாபமே மேலானது. அந்த லாபத்திற்காக ப்ரவசனம் முதலிய அநேக உபாயங்கள் செய்ய வேண்டும் என்று வரும் பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.
नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।
यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूं स्वाम् ॥ ३ ॥
यः अयमात्मा व्याख्यातः, यस्य लाभः परः पुरुषार्थः, नासौ वेदशास्त्राध्ययनबाहुल्येन प्रवचनेन लभ्यः । तथा न मेधया ग्रन्थार्थधारणशक्त्या, न बहुना श्रुतेन नापि भूयसा श्रवणेनेत्यर्थः ।
अयम् आत्मा (அயம் ஆத்மா) இதுவரை எந்த ஆத்மா விளக்கப்பட்டதோ அதை அடைதல் மிக உயர்ந்த புருஷார்த்தமாகும். அந்த இந்த ஆத்மா प्रवचनेन (ப்ரவசனேன) வேத, சாஸ்திரங்களை அதிகமாகக் கற்றதினால் மாத்திரமோ न लभ्यः (நலப்ய:) அடையத்தக்கது அல்ல. मेधया (மேதயா) சாஸ்திரங்களின் பொருளை மனதில் தரிக்கும் சக்தியாலும் न (ந) அடையத்தக்கது அல்ல. அவ்வாறே बहुना श्रुतेन (பஹுனாச்ருதேன)அதிகமான சிரவனத்தாலும், அதாவது உபநிஷத் விசாரத்தைத் தவிர எந்தமற்ற சிரவணங்களாலும் (ந) அடையத்தக்கது அல்ல என்பது கருத்து.
केन तर्हि लभ्य इति, उच्यते — यमेव परमात्मानमेव एषः विद्वान् वृणुते प्राप्तुमिच्छति, तेन वरणेन एष पर आत्मा लभ्यः, नान्येन साधनान्तरेण, नित्यलब्धस्वभावत्वात् ।
அவ்வாறெனில் யாரால் அடையத்தக்கது எனில், एषः (ஏஷ:) இந்த வித்வானானவன் यं (யம்) எந்தப் பரமாத்மாவை वुणुते (வ்ருணுதே) அடைய விரும்புகின்றானோ तेन (தேன) அந்த உயர்ந்த சாதனத்தால் मभ्यः (லப்ய:) இந்த பரமாத்மா அடையத்தக்கது. அது எப்பொழுதும் அடையப்பட்ட சுவாபாவமானதால் மற்ற சாதாரண வெளிச்சாதனங்களால் அடையமுடியாது.
कीदृशोऽसौ विदुष आत्मलाभ इति, उच्यते — तस्य एष आत्मा अविद्यासञ्छन्नां स्वां परां तनूं स्वात्मतत्त्वं स्वरूपं विवृणुते प्रकाशयति, प्रकाश इव घटादिर्विद्यायां सत्यामाविर्भवतीत्यर्थः । तस्मादन्यत्यागेनात्मप्रार्थनैव आत्मलाभसाधनमित्यर्थः ॥ ३ ॥
இத்தகைய வித்வான்களின் ஆத்ம லாபம் எத்தகையது எனில்? (தஸ்ய) அந்த ஸாதகனுக்கு एषः आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மாவானது स्वाः (ஸ்வாம்) மேலான तनुं (தனும்) அவித்தையால் சுழப்பட்ட தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தை विवृणुते (விவ்ருணுதே) பிரகாசிக்கச் செய்கிறது. ஒளியானது குடம் முதலியவைகளைப் பிரகாசப்படுத்துவது போல் பிரஹ்மவித்தையால் ஆத்மா பிரகாசிக்கின்றது (வெளிப்படுத்துகின்றது) என்பது பொருள். எனவே அனாத்மாவான விஷயங்களைத் தியாகம் செய்வதாலும் ஆத்மா அனுஸந்தானத்தாலுமே ஆத்மா அடையத்தக்கது ஆகும். இவையே ஆத்ம லாபத்திற்குஸாதனமாகும்.
आत्मप्रार्थनासहायभूतान्येतानि च साधनानि बलाप्रमादतपांसि लिङ्गयुक्तानि संन्याससहितानि । यस्मात्-
லிங்கங்களுடன் கூடிய அதாவது ஸந்நியாசத்துடன் கூடிய பலம், மயக்கமற்று இருத்தல், தபஸ் இவைகள் ஆத்ம பிரார்த்தனைக்கு ஸகாயமான ஸாதனங்களாகும். ஏன்எனில்?
नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्म धाम ॥ ४ ॥
यस्मादयमात्मा बलहीनेन बलप्रहीणेनात्मनिष्ठाजनितवीर्यहीनेन लभ्यः ; नापि लौकिकपुत्रपश्वादिविषया-सङ्गनिमित्तात्प्रमादात्; तथा तपसो वापि अलिङ्गात् लिङ्गरहितात् । तपोऽत्र ज्ञानम् ; लिङ्गं संन्यासः ; संन्यासरहिताज्ज्ञानान्न लभ्यत इत्यर्थः । एतैः उपायैः बलाप्रमादसंन्यासज्ञानैः यतते तत्परः सन्प्रयतते यस्तु विद्वान्विवेकी आत्मवित् , तस्य विदुषः एष आत्मा विशते सम्प्रविशति ब्रह्म धाम ॥ ४ ॥
अयम् आत्मा (அயம் ஆத்மா) இந்த ஆத்மாவானது बलहीनेन (பலஹீனேன) ஆத்மநிஷ்ட்டையால் உண்டான வீரியமற்றவனால் न लभ्यः (நலப்ய:) அடையத்தக்கதல்ல. प्रमादात् (ப்ரமாதாத்) லெளகிகமான மகன், பசு போன்ற விஷயங்களுடைய ஸங்காதத்தால் உண்டானப் பிரமாதம் எனப்படும் கவனக்குறைவாலும், अलिङ्गात् (அலிங்காத்) ஸந்நியாஸமற்ற तपसः वा (தபச: வா) ஞானத்தாலும் இந்த ஆத்மாவானது न (ந) அடையத்தக்கது அல்ல. यस्तु विद्वान् (யஸ்து வித்வான்) எந்தஒரு வித்வானான ஸாதகன் एतैः उपायैः (ஏதை: உபாயை:) முற்கூறப்பட்ட உபாயங்களான பலம், அப்ரமாதம், ஸந்நியாசத்துடன் கூடியதபஸ் (ஞானம்) இவைகளுடன் यतते (யததே) ஆன்மாவிலேயே ஒன்றியவனாகக் கொண்டு முயற்சிக்கின்றானோ (தஸ்ய) அந்த விவேகியான ஸாதகனுடைய एष आत्मा (ஏஷ ஆத்மா) இந்த ஆத்மாவானது ब्रह्मधाम (பிரஹ்மதாம) பிரஹ்மஸ்தானத்தை विशते (விசதே) அடைகிறான். இங்கு तपसः என்பது ஞானம் लिङ्गंम् என்பது சந்நியாசம் இங்கு ஸந்நியாசம் என்பது ஸர்வஸங்க பரித்தியாகத்தைக் குறிக்குமேயன்றி வெறும் வெளிவேஷத்தைக் குறிக்காது.
कथं ब्रह्म विशत इति, उच्यते —
அந்த ப்ரஹ்மத்தில் எவ்வாறு நுழைகின்றனர் அதாவது எவ்வாறு ஒன்றுகின்றனர் என்பது விளக்கப்படுகிறது.
सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ताः ।
ते सर्वगं सर्वतः प्राप्य धीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति ॥ ५ ॥
सम्प्राप्य समवगम्य एनम् आत्मानम् ऋषयः दर्शनवन्तः तेनैव ज्ञानेन तृप्ताः, न बाह्येन तृप्तिसाधनेन शरीरोपचयकारणेन । कृतात्मानः परमात्मस्वरूपेणैव निष्पन्नात्मानः सन्तः । वीतरागाः विगतरागादिदोषाः । प्रशान्ताः उपरतेन्द्रियाः ।
ज्ञानतृप्ताः (ஞானதிருப்தா) சரீரத்தைப் போஷிப்பதற்கான வெளிவிஷயங்களால் திருப்திப்படாது அந்த ஆத்மஞானத்தால் மாத்திரம் திருப்தி அடைந்தவர்களாயும், कृतात्मानः (க்ருதாத்மான:) பரமார்த்தஸ்வரூபமாகவே ஆனவர்களாயும், वीतरागाः (வீதராகா:) பற்று (ராகம்) முதலிய தோஷங்கள் நீங்கியவர்களாயும், प्रशान्ताः (ப்ரசாந்தா:) இந்திரியங்களினின்று ஒழிவு பெற்றவர்களாயும் உள்ள ऋषयः (ரிஷய:) ஆன்மதர்சனம் பெற்ற முனிவர்கள் एनं (ஏனம்) இந்த ஆத்மாவை संप्राप्य (சம்ப்ராப்ய) அடைந்து, அதாவது அநுபவ பூர்வமாய் உணா்ந்ததால் ஸாக்ஷாத்காரம் பெற்று
ते एवंभूताः सर्वगं सर्वव्यापिनम् आकाशवत् सर्वतः सर्वत्र प्राप्य, नोपाधिपरिच्छिन्नेनैकदेशेन ; किं तर्हि, तद्ब्रह्मैवाद्वयमात्मत्वेन प्रतिपद्य धीराः अत्यन्तविवेकिनः युक्तात्मानो नित्यसमाहितस्वभावाः सर्वमेव समस्तं शरीरपातकालेऽपि आविशन्ति भिन्नघटाकाशवदविद्याकृतोपाधिपरिच्छेदं जहति । एवं ब्रह्मविदो ब्रह्म धाम प्रविशन्ति ॥
இவ்வாறான ते धीराः (தேதீரா:) அத்யந்த விவேகிகள் सर्वगं (சர்வகம்) ஆகாசம் போல் எங்கும் நிறைந்த ஆத்மாவை सर्वतः (சர்வத:) எங்கும் प्राप्य (ப்ராப்ய) உபாதி பரிச்சின்னம் இல்லாது அடைந்து (எங்கும் எவ்வாறு உள்ளனர் எனில்) அத்வைதமான ப்ரஹ்மத்திலேயே தானாகவே ஒன்றியவர்களாகி युक्तात्मानः (யுக்தாத்மான:) எப்பொழுதும் சாமாஹிதஸ்வ பாவமுடையவர்களாய் सर्वमेव (சர்வமேவ) சரீரம் விழும் காலத்திலும் எல்லாமாய் இருக்கும் தன்மையை आविशान्ति (ஆவிசந்தி) அடைகின்றனர். எவ்வாறு குடம் உடைந்தபொழுது கடாகாசம், மஹாகாசம் ஆவதுபோல் அவ்வான்ம ஞானிகள் அவித்தையால் உண்டான உபாதிபரிச்சேதங்கள் நீங்குகின்றன. இவ்வாறு பிரஹ்மத்தை அறிந்தோர் பிரஹ்மத்தை அடைகின்றனர்.
किञ्च
மேலும்
वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः ।
ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६ ॥
वेदान्तजनितं विज्ञानं वेदान्तविज्ञानं तस्यार्थः पर आत्मा विज्ञेयः, सोऽर्थः सुनिश्चितो येषां ते वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः । ते च संन्यासयोगात् सर्वकर्मपरित्यागलक्षणयोगात्केवलब्रह्मनिष्ठास्वरूपाद्योगात् यतयः यतनशीलाः शुद्धसत्त्वाः शुद्धं सत्त्वं येषां संन्यासयोगात् , ते शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु ; संसारिणां ये मरणकालास्ते अपरान्तकालाः ; तानपेक्ष्य मुमुक्षूणां संसारावसाने देहपरित्यागकालः परान्तकालः तस्मिन् परान्तकाले साधकानां बहुत्वाद्ब्रह्मैव लोको ब्रह्मलोकः एकोऽप्यनेकवद्दृश्यते प्राप्यते च । अतो बहुवचनं ब्रह्मलोकेष्विति, ब्रह्मणीत्यर्थः । परामृताः परम् अमृतम् अमरणधर्मकं ब्रह्म आत्मभूतं येषां ते परामृता जीवन्त एव ब्रह्मभूताः, परामृताः सन्तः परिमुच्यन्ति परि समन्तात्प्रदीपनिर्वाणवद्भिन्नघटाकाशवच्च निवृत्तिमुपयान्ति परिमुच्यन्ति परि समन्तान्मुच्यन्ते सर्वे, न देशान्तरं गन्तव्यमपेक्षन्ते ।
வேதங்களான உபநிஷத்துக்களால் உண்டான விக்ஞானம், வேதாந்தவிக்ஞானம் ஆகும். அதனுடைய அர்த்தம் பரமாத்மாவாகும். அந்த வேதங்களில் அறியத்தக்க பொருளான ஆத்மாவை நிச்சயமாய் தெரிந்தவர்களே அவர்கள் वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः (வேதாந்தவிக்ஞான சுநிச்சித்தார்த்தா:) शुद्धसत्त्वाः (சுத்தசத்வா:) சந்நியாச யோகத்தால் எவர்கள் சுத்தசித்தமுடையவர்களோ அவர்கள் यतयः (யதய:) உறுதியான முயற்சி உடையவர்களாயும் உள்ளவர்கள். संन्यासयोगात् (சந்நியாச யோகாத்) எல்லாகர்மங்களையும் பரித்தியாக லக்ஷணத்தோடு கூடிய யோகத்தால் கேவல பிஹ்மநிஷ்ட ஸ்வரூப யோகத்தால் ते (தே) அந்த முமூக்ஷுக்கள் परान्तकाले (பராந்தகாலே) சம்சாரிகளுடைய மரணகாலம் அபராந்த காலம் ஆகும். அதை அபேக்ஷித்து மும்மூக்ஷீக்களின் சம்சாரத்தின் முடிவான தேஹப்பரித்தியாக காலமானது பராந்த காலமாகும். அந்த பராந்தகாலத்தில் परामृताः (பராம்ருதா:) மேலான மரணதர்ம மற்ற பிரஹ்ம ஸ்வரூபமாகவே ஆகியவர்கள் எவர்களோ அவர்கள் பராம்ருதாவாக இருந்து கொண்டு ब्रह्मलोकेषु (ப்ரஹ்ம லோகேஷு) ஸாதகர்கள் அநேகமாய் இருப்பதால் பிரஹ்மலோகம் ஒன்றாய் இருந்தாலும் இங்கு பிரஹ்ம லோகங்களில் என்றும் பன்மையில் கூறப்பட்டுள்ளது. அந்த பரப்ரஹ்ம லோகத்தை सर्वे परिमुच्यन्ति (சர்வே பரிமுச் யந்தி) எல்லாவற்றிலிருந்தும் எரியும் விளக்கின் திரி போலும், கடாகாசம் போலும் விடுபடுகிறார்கள். அவர்கள் தேசாந்தரம் செல்லவேண்டும் என்பது இல்லை. இருந்த இடத்திலேயே பிரஹ்மத்துடன் ஒன்றி விடுகின்றனர்.
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य वा । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (मो. ध. १८१ । ९) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ ( ? ) इति श्रुतिस्मृतिभ्याम् ।
‘शकुनीनामिवाकाशे जले वारिचरस्य च । पदं यथा न दृश्येत तथा ज्ञानवतां गतिः’ (எவ்வாறு ஆகாயத்தில் பறக்கும் சகுனிப் பறவைகளின் பாதங்களும், நீரில் நீந்தும் மீன்களின் பாதங்களும் அறிய முடியாதோ அவ்வாறே ஞானியின் கதியும் ஆகும்) ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ (சம்சார மார்க்கத்திலிருந்து தாண்டுவதற்கு இச்சை உள்ளவர்கள் சம்சாரமார்க்கத்தை விசாரணை செய்யமாட்டார்கள்) என்பது முதலிய ச்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
देशपरिच्छिन्ना हि गतिः संसारविषयैव परिच्छिन्नसाधनसाध्यत्वात् । ब्रह्म तु समस्तत्वान्न देशपरिच्छेदेन गन्तव्यम् । यदि हि देशपरिच्छिन्नं ब्रह्म स्यात् , मूर्तद्रव्यवदाद्यन्तवदन्याश्रितं सावयवमनित्यं कृतकं च स्यात् । न त्वेवंविधं ब्रह्म भवितुमर्हति । अतस्तत्प्राप्तिश्च नैव देशपरिच्छिन्ना भवितुं युक्ता । अपि च, अविद्यादिसंसारबन्धापनयनमेव मोक्षमिच्छन्ति ब्रह्मविदः, न तु कार्यभूतम् ॥ ६ ॥
பரிச்சின்னமான சாதன சாத்யமாய் இருப்பதால் சம்சாரகதிதான் தேசப்பரிச்சின்னத்துடன் கூடியதாகும். ப்ரஹ்மமோ எங்கும் எல்லாமாய் இருப்பதால் தேசப்பரிச்சேதத்தால் அடையப்படுவது அல்ல. ப்ரஹ்மமானது தேசப்பரிச்சின்னமாய் இருந்தால் உருவம், அவயவம் போல் ஆதியும், அந்தமும், மற்றதை ஆசிரியத்ததாயும், அவயவத்துடன் அநித்தியமாய் உண்டாக்கப்பட்டதாகும். இவ்விதமாக ப்ரஹ்மம் இருக்கிறது என்பது பொருந்தாது. ஆகையால் அதனுடைய அடைவும் தேசப்பரிச்சின்னமுடையதாகாது. பிரஹ்மத்தை அறிந்தவர்களுக்கும் அவித்யா முதலிய சம்சாரபந்தம் நீங்கி மோக்ஷத்தையே விரும்புகிறார்கள். காரியத்துடன் கூடியவைகளை அல்ல.
किञ्च, मोक्षकाले-
மேலும் மோக்ஷகாலத்தில்
गताः कलाः पञ्चदश प्रतिष्ठा देवाश्च सर्वे प्रतिदेवतासु ।
कर्माणि विज्ञानमयश्च आत्मा परेऽव्यये सर्व एकीभवन्ति ॥ ७ ॥
या देहारम्भिकाः कलाः प्राणाद्याः, ताः स्वाः प्रतिष्ठाः गताः स्वं स्वं कारणं गता भवन्तीत्यर्थः । प्रतिष्ठा इति द्वितीयाबहुवचनम् । पञ्चदश पञ्चदशसङ्ख्याका या अन्त्यप्रश्नपरिपठिताः प्रसिद्धाः, देवाश्च देहाश्रयाश्चक्षुरादिकरणस्थाः सर्वे प्रतिदेवतास्वादित्यादिषु गता भवन्तीत्यर्थः ।
पञ्चदश कलाः (பஞ்சதசகலா:) தேஹாரம் பகமான பிராணன் முதலிய பதினைந்து கலைகளும் प्रतिष्ठां गताः (ப்ரதிஷ்ட்டாம் கதா:) அவைகள் தத்தம் பிரதிஷ்டையான மூல ஸ்தானத்திற்குச் சென்று விடுகின்றன, அதாவது காரணங்களை அடைந்தவைகளாகின்றன என்பது பொருள். இங்கு प्रतिष्ठां (ப்ரதிஷ்ட்டா) என்றது இரண்டாவது வேற்றுமை பன்மையாகும். पञ्चदश (பஞ்சதச:) என்றது பதினைந்து எண்ணிக்கை உள்ளதாக கடைசி பிரஸ்னத்தில் இருப்பது பிரசித்தம். देवाश्च தேஹத்தை ஆஸ்ரயித்த கண் முதலான கரணங்களில் இருக்கும் தேவதைகள் सर्वे प्रतिदेवतासु (சர்வேப்ரதி தேவதாசு) எல்லா ப்ரதி தேவதைகளான ஆதித்திய முதலான தேவதைகளைக் குறித்துச் சென்றவைகளாக ஆகின்றன.
यानि च मुमुक्षुणा कृतानि कर्माण्यप्रवृत्तफलानि, प्रवृत्तफलानामुपभोगेनैव क्षीणत्वात् । विज्ञानमयश्चात्मा अविद्याकृतबुद्ध्याद्युपाधिमात्मत्वेन गत्वा जलादिषु सूर्यादिप्रतिबिम्बवदिह प्रविष्टो देहभेदेषु कर्मणां तत्फलार्थत्वात्सह तेनैव विज्ञानमयेनात्मना ; अतो विज्ञानमयो विज्ञानप्रायः । त एते कर्माणि विज्ञानमयश्च आत्मा उपाध्यपनये सति परे अव्यये अनन्तेऽक्षये ब्रह्मणि आकाशकल्पेऽजेऽजरेऽमृतेऽभयेऽपूर्वेऽनपरेऽनन्तरेऽबाह्येऽद्वये शिवे शान्ते सर्वे एकीभवन्ति अविशेषतां गच्छन्ति एकत्वमापद्यन्ते जलाद्याधारापनय इव सूर्यादिप्रतिबिम्बाः सूर्ये, घटाद्यपनय इवाकाशे घटाद्याकाशाः ॥
कर्माणि (கர்மாணி) முமூக்ஷுவினால் செய்யப்பட்ட அப்ரவிருத்தமான பலன்களை உடைய கர்மாக்கள் யாவும், ப்ரவிா்த்தமான பலன்களை உடைய கர்மாக்களின் பலன்களை அநுபவிப்பதாலேயே நாசமுறும். ஆனால் அவ்வாறன்றி आत्मा विज्ञानमयः (ஆத்மா விக்ஞானமய:) அவித்யா தோஷத்தாலுண்டான புத்தி முதலிய உபாதிகளை ஆத்மாவாக எண்ணி, தண்ணீர் முதலானவைகளில் சுரியன் முதலானவைகளின் பிரிதிபிம்பங்கள் போல் இந்த சரீர பேதங்களில் நுழைந்தவனான ஆத்மாவிற்கே (ஐீவாத்மாவிற்கே) கர்மாக்களுடைய பலன்கள் ஆனதால், இந்தக்கர்மாக்களுடைய பலன்கள் முமூக்ஷுவைப் பற்றுவது இல்லை. பரமாத்மாவோ விக்ஞானப் பராயணானவன். எனவே விக்ஞானமயனான இந்த ஆத்மாவின் உபாதிகள் நீங்கப்பெற்ற பொழுது முற்கூறப்பட்ட கர்மாக்கள் யாவும் परे अव्यये (பரே அவ்யயே) முடிவற்றதாயும், நாசமற்றதாயும் ஆகாசம்போல் எங்கும் நிறைந்ததாயும் உள்ள பிரஹ்மத்தில் सर्वे (சர்வே) யாவும், एकीभवन्ति (ஏகீபவந்தி) ஒன்றாகி விடுகின்றன. பிரதி பிம்பங்களுக்கு ஆதாரமான ஐலம் முதலானவைகள் நீக்கப்பெற்றபொழுது அப்பிரதிபிம்பங்கள் சுரியனிலும், இடம் முதலான உபாதிகள் நீக்கப்பட்ட பொழுது கடாகாசம் முதலானவை மஹாகாசத்திலும் ஒன்றி இரண்டறக்கலந்து விடுவது போல் முற்கூறப்பட்டவைகள் யாவும் அப்பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து விடுகின்றன. परे अव्यये அநந்தமாயும், நாசமற்றதாயும், பிரஹ்மமாயும், ஆகாசத்திற்கு ஒப்பாயும், பிறப்பற்றதாயும். மரணதர்மமற்றதாயும், பயமற்றதாயும், ஆதியற்றதாயும் தன்னைக் காட்டிலும் மேலானது அற்றதாயும். தன்னைத்தவிர வேறு ஒன்று அற்றதாயும், பாஹ்யமற்றதாயும் (வெளிவிஷயங்கள் அற்றதாயும்) இரண்டற்றதாயும், மங்கலகரமானதாயும், சந்ததமாயும் உள்ள பரப்ரஹ்மத்திடத்தில் எல்லாம் இரண்டற்று ஒன்றிவிடுகின்றன.
किञ्च,
மேலும்
यथा नद्यः स्यन्दमानाः समुद्रेऽस्तं गच्छन्ति नामरूपे विहाय ।
तथा विद्वान्नामरूपाद्विमुक्तः परात्परं पुरुषमुपैति दिव्यम् ॥ ८ ॥
यथा नद्यः गङ्गाद्याः स्यन्दमानाः गच्छन्त्यः समुद्रे समुद्रं प्राप्य अस्तम् अदर्शनमविशेषात्मभावं गच्छन्ति प्राप्नुवन्ति नाम च रूपं च नामरूपे विहाय हित्वा, तथा अविद्याकृतनामरूपात् विमुक्तः सन् विद्वान् परात् अक्षरात्पूर्वोक्तात् परं दिव्यं पुरुषं यथोक्तलक्षणम् उपैति उपगच्छति ॥
यथा (யதா) எவ்வாறு स्यन्दमानाः (ஸ்யந்தமானா:) பெருகுகின்ற नद्यः (நத்ய:) கங்கை முதலிய நதிகள் नामरूपे (நாமரூபே) நாபரூபங்களை विहाय (விஹாய) விட்டு समुद्रे (சமுத்ரே) சமுத்திரத்தை அடைந்து अस्तं (அஸ்தம்) விசேஷத் தன்மை அற்று அதனுடன் கலந்து இல்லாமல் गच्छन्ति (கச்சந்தி) ஆகின்றதோ तथा (ததா) அவ்வாறே नामरूपाद्विमुक्तः (நாமரூபாத் விமுக்த:) அவித்தையினால் ஏற்பட்ட நாமரூபங்களிலிருந்து விடுபட்ட विद्वान् (வித்வான்) விவேகியான வித்வானனவன் पराम्परं (பராத்பரம்) முன்பு கூறப்பட்ட அக்ஷரத்தைக் காட்டிலும் திவ்யமான पुरुषं (புருஷம்) முற்கூறப்பட்ட லக்ஷணத்துடன் கூடிய பிரஹ்மத்தை அடைகிறான்.
ननु श्रेयस्यनेके विघ्नाः प्रसिद्धाः ; अतः क्लेशानामन्यतमेनान्येन वा देवादिना च विघ्नितो ब्रह्मविदप्यन्यां गतिं मृतो गच्छति न ब्रह्मैव ।
(சங்கை) ச்ரேயஸ் என்னும் மோக்ஷமடைவதில் அநேக விக்கினங்கள் (இடையூறுகள்) ஏற்படுவது என்பது பிரசித்தமானவை. ஆகையால் மற்றவர்களால் ஏற்படும் க்லேசங்களாலோ, அல்லது தேவர்களால் செய்யப்பட்ட இடையூறுகளின் காரணத்தாலோ பிரஹ்ம வித்தானவனும் மரணமடைந்து வேறு கதியை அடைவான். ப்ரஹ்மத்தை அடைவது இல்லை எனில்
न, विद्ययैव सर्वप्रतिबन्धस्यापनीतत्वात् । अविद्याप्रतिबन्धमात्रो हि मोक्षो नान्यप्रतिबन्धः, नित्यत्वादात्मभूतत्वाच्च । तस्मात्-
(சமாதானம்) அவ்வாறு அல்ல. பிரஹ்ம வித்தையாலேயே எல்லா பிரதி பந்தங்களும் நீக்கப்படுவதால், மோக்ஷத்திற்கு அவித்தியா பிரதிபந்த மாத்திரமேயன்றி வேறு பிரதிபந்தம் கிடையாது. ஏன்எனில் நித்தியமானவனாயும், ஆத்மபூதமாயும் இருப்பதாகும். ஆகையால்
स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति नास्याब्रह्मवित्कुले भवति ।
तरति शोकं तरति पाप्मानं गुहाग्रन्थिभ्यो विमुक्तोऽमृतो भवति ॥ ९ ॥
सः यः कश्चित् ह वै लोके तत् परमं ब्रह्म वेद साक्षादहमेवास्मीति जानाति, स नान्यां गतिं गच्छति । देवैरपि तस्य ब्रह्मप्राप्तिं प्रति विघ्नो न शक्यते कर्तुम् ; आत्मा ह्येषां स भवति । तस्माद्ब्रह्म विद्वान् ब्रह्मैव भवति ।
यः ह वै (ய: ஹ வை) எவன் ஒருவன் இவ்வுலகில் तत्परमं ब्रहा (தத் பரமம் ப்ரஹ்ம) அந்த பரப்பிரஹ்மத்தை वेद (வேத) அறிகின்றானோ, அதாவது நான் அந்தப் பரப்பிரஹ்மமாயிருக்கிறேன் என்று சாக்ஷாத்தாக அறிகின்றானோ सः (ச:) அவன் வேறுகதியை அடைவதில்லை. தேவர்களும் அவனுடைய பிரஹ்மப்பிராப்திக்கு இடையூறு செய்ய முடியாதவர்களாகிறார்கள். அவனே (அந்த பிரஹ்ம வேத்தாவே) அவர்களுடைய ஆத்மாவாக இருக்கிறான். ஆகையால் பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மமாகின்றான்.
किञ्च, न अस्य विदुषः अब्रह्मवित् कुले भवति ; किञ्च, तरति शोकम् अनेकेष्टवैकल्यनिमित्तं मानसं सन्तापं जीवन्नेवातिक्रान्तो भवति । तरति पाप्मानं धर्माधर्माख्यं गुहाग्रन्थिभ्यः हृदयाविद्याग्रन्थिभ्यः विमुक्तः सन् मृतः भवतीत्युक्तमेव
‘भिद्यते हृदयग्रन्थिः’ (मु. उ. २ । २ । ९) इत्यादि ॥ ९ ॥
மேலும் अस्य (அஸ்ய) இந்த பிரஹ்மத்தை அடைந்த வித்வானின் कुले (குலே) குலத்தில் अब्रह्मवित् பிரஹ்மத்தை அறியாதவன் न भवति (ந பவதி) உண்டாவதும் இல்லை. மேலும் शोकं (சோகம்) தனக்கு இஷ்டமானவைகளை இழப்பதால் உண்டாகும் மானஸீகமான சோகத்தை तरति (தரதி) ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே கடந்து விடுகிறான். पाप्मानं (பாப்மானம்) தர்மா தர்மம் எனப்படும் புண்யபாபங்களை तरति (தரதி) गुहाग्रन्थिभ्यः (குஹாக்ரந்திப்ய:) அவித்யாரூபான ஹிருதய க்ரந்திகளிலிருந்து (புத்தியை ஆஸ்ரயித்த அவித்யா வாசனைகளிலிருந்து) विमुक्तः (விமுக்த:) விடுபட்டவனாகி अमृतः (அம்ருத:) மரணதர்மமற்றவனாக भवति (பவதி) ஆகின்றான். ‘भिद्यते हृदयग्रन्थिः’ इत्यादि பித்யதே ஹ்ருதய க்ரந்தி இத்யாதி முதலியவகைளால் முன்பே கூறப்பட்டுள்ளது.
अथेदानीं ब्रह्मविद्यासम्प्रदानविध्युपप्रदर्शनेनोपसंहारः क्रियते —
இப்பொழுது பிரஹ்மவித்யா சம்பிரதான விதிமுறைகளை உபதேசிப்பதுடன் முடிவுறை கூறப்படுகிறது.
तदेतहचाभ्युक्तम्-
- அது இந்த ருக்கால் கூறப்படுகிறது.
तदेतदृचाभ्युक्तम् —
क्रियावन्तः श्रोत्रिया ब्रह्मनिष्ठाः स्वयं जुह्वत एकर्षिं श्रद्धयन्तः ।
तेषामेवैतां ब्रह्मविद्यां वदेत शिरोव्रतं विधिवद्यैस्तु चीर्णम् ॥ १० ॥
तदेतत् विद्यासम्प्रदानविधानम् ऋचा मन्त्रेण अभ्युक्तम् अभिप्रकाशितम् ।
அந்த இந்த வித்யா சம்ப்ரதான விதிமுறைகளை இந்த ரிக்மந்திரத்தால் கூறப்பட்டு பிரகாசப்படுத்தப்படுகிறது
क्रियावन्तः यथोक्तकर्मानुष्ठानयुक्ताः । श्रोत्रियाः ब्रह्मनिष्ठाः अपरस्मिन्ब्रह्मण्यभियुक्ताः परं ब्रह्म बुभुत्सवः स्वयम् एकर्षिम् एकर्षिनामानमग्निं जुह्वते जुह्वति श्रद्धयन्तः श्रद्दधानाः सन्तः ये, तेषामेव संस्कृतात्मनां पात्रभूतानाम् एतां ब्रह्मविद्यां वदेत ब्रूयात् शिरोव्रतं शिरस्यग्निधारणलक्षणम् । यथा आथर्वणानां वेदव्रतं प्रसिद्धम् । यैस्तु यैश्च तत् चीर्णं विधिवत् यथाविधानं तेषामेव वदेत ॥ १० ॥
क्रियावन्तः (க்ரியா வந்த:) வேதோக்தமான கர்மானுஷ்டானங்களில் ஈடுபட்டவர்களாயும் உள்ள श्रोत्रियाब्रह्मनिष्ठाः (ஸ்ரோத்திரிய பிரஹ்ம்மநிஷ்ட்டா:) சுரோத்திரியர்களாயும் பரப்ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்ற தீவிர இச்சை உள்ளவர்களாயும் உள்ள श्रद्धयन्तः (ச்ரத்தயந்த:) மிகவும் சிரத்தை உள்ளவர்கள் स्वयं (ஸ்வயம்) தாங்கள் एकर्षिं (ஏகர்ஷிம்) ஏகர்ஷிம் என்ற பெயருடைய அக்னியில் जुह्वते (ஐ்ஹ்வதே) ஹோமம் செய்கிறார்கள். तेषाम् एव (தேஷாம் ஏவ) அத்தகைய ஸம்ஸ்காரம் அடைந்த சத்பாத்திரர்கள் यैः तु (யை: து) எவர்களோ அவர்கள் शिरोव्रतं (சிரோவ்ரதம்) சிரசில் அக்னி தரிப்பது என்ற அதர்வண வேதத்தினரின் வேதவ்ரதமானது चीर्णं विधिवत् (ச்சீர்ணம் விதிவத்) விதிமுறைப்படி செய்யப்பட்டதோ அவர்களுக்குமே एतां ब्रह्मविद्यां (ஏதாம் பிரஹ்மவித்யாம்) இந்த ப்ரஹ்ம வித்தையை वदेत् (வதேத்) உபதேசிக்க வேண்டும். (அத்தகையவர்களே இப்பிரஹ்ம்ம வித்தையை ஏற்கப்பாத்திரமானவர்கள் என்பது பொருள்.
तदेतत्सत्यमृषिरङ्गिराः पुरोवाच नैतदचीर्णव्रतोऽधीते । नमः परमऋषिभ्यो नमः परमऋषिभ्यः ॥ ११ ॥
तदेतत् अक्षरं पुरुषं सत्यम् ऋषिः अङ्गिरा नाम पुरा पूर्वं शौनकाय विधिवदुपसन्नाय पृष्टवते उवाच । तद्वदन्योऽपि तथैव श्रेयोर्थिने मुमुक्षवे मोक्षार्थं विधिवदुपसन्नाय ब्रूयादित्यर्थः । न एतत् ग्रन्थरूपम् अचीर्णव्रतः अचरितव्रतोऽपि अधीते न पठति ; चीर्णव्रतस्य हि विद्या फलाय संस्कृता भवतीति ।
तत् एतत् सत्यम् (தத் ஏதத் சத்தியம்) அந்த இந்த அக்ஷரமாயும், ஸத்தியமாயும் உள்ள புருஷனைக் குறித்து पुरा (புரா) முன்பு अङ्गिराः (அங்கிரா) அங்கிரஸ் என்ற மஹரிஷியானவர் விதிப்படி அவரை அடைந்து பணிவுடன் கேட்ட செளணகரின் பொருட்டு उवाच (உவாச) கூறினார். அவ்வாறே மற்றவர்களும் இவரைப் போலவே விதிப்படி அடைந்தவர்களாகி ச்ரேயஸ்ஸில் விருப்பமுடையவரான முமூக்ஷீவிற்கு மோக்ஷத்தின் பொருட்டு உபதேசிக்க வேண்டும் என்பது பொருள். अचीर्णव्रतः (அசீர்ணவ்ரத:) முற்கூறப்பட்ட வ்ரதத்தை அனுஷ்டிக்காதவன் एतत् (ஏதத்) இந்த கிரந்தவடிவமான (நூல்வடிவமான) பிரஹ்ம வித்தையை न अपि अधीते (ந அபி அதீதே) படிப்பது இல்லை.அம்மாதிரி வ்ரதமுறைகளை மேற்கொண்டவர்களுக்கே ஸம்ஸ்காரமும் அதன் பலனும் ஏற்படும் என்பதேயாகும்.
समाप्ता ब्रह्मविद्या ; सा येभ्यो ब्रह्मादिभ्यः पारम्पर्यक्रमेण सम्प्राप्ता, तेभ्यो नमः परमऋषिभ्यः । परमं ब्रह्म साक्षाद्दृष्टवन्तो ये ब्रह्मादयोऽवगतवन्तश्च, ते परमर्षयः तेभ्यो भूयोऽपि नमः । द्विर्वचनमत्यादरार्थं मुण्डकसमाप्त्यर्थं च ॥
परमऋषिभ्यः (பரமரிஷிப்ய:) பிரஹ்மா முதல் வழிவழியாக இந்த பிரஹ்ம வித்தையை உபதேசித்த அல்லது பிரஹ்மா முதல் வழி, வழியாக இந்த பிரஹ்மவித்தையைக் கொணர்ந்த முனிவர்களின் பொருட்டு नमः (நம:) நமஸ்காரம். परमर्षिभ्यः (பரமரிஷிப்ய:) அப்பரப்பிரஹ்மத்தை ஸாக்ஷாத்தாகக்கண்ட பிரஹ்ம முதலான மற்ற ரிஷிகளுக்கும், எவர்கள் அப்பரப்பிரஹ்மத்தை உணர்ந்தார்களோ அத்தகைய மஹரிஷிகளுக்கும் नमः (நம:) மறுபடியும் நமஸ்காரம். இங்கு இருமுறை நமஸ்கரித்தது இதனுடைய முக்கியத்-தன்மையைக் குறிப்பதற்கும், இந்த முண்டகத்தை முடிப்பதற்கும் ஆகும்.
इति तृतीयमुण्डके द्वितीयखण्डभाष्यम् ॥