प्रज्ञानांशुप्रतानैः स्थिरचरनिकरव्यापिभिर्व्याप्य लोका -
न्भुक्त्वा भोगान्स्थविष्ठान्पुनरपि धिषणोद्भासितान्कामजन्यान् ।
पीत्वा सर्वान्विशेषान्स्वपिति मधुरभुङ्मायया भोजयन्नो
मायासङ्ख्यातुरीयं परममृतमजं ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥
यो विश्वात्मा विधिजविषयान्प्राश्य भोगान्स्थविष्ठा -
न्पश्चाच्चान्यान्स्वमतिविभवाञ्ज्योतिषा स्वेन सूक्ष्मान् ।
सर्वानेतान्पुनरपि शनैः स्वात्मनि स्थापयित्वा
हित्वा सर्वान्विशेषान्विगतगुणगणः पात्वसौ नस्तुरीयः ॥ २ ॥
ओमित्येतदक्षरमिदं सर्वं तस्योपव्याख्यानम् । वेदान्तार्थसारसङ्ग्रहभूतमिदं प्रकरणचतुष्टयम् ओमित्येतदक्षरमित्यादि आरभ्यते । अत एव न पृथक् सम्बन्धाभिधेयप्रयोजनानि वक्तव्यानि । यान्येव तु वेदान्ते सम्बन्धाभिधेयप्रयोजनानि, तान्येवेहापि भवितुमर्हन्ति ; तथापि प्रकरणव्याचिख्यासुना सङ्क्षेपतो वक्तव्यानीति मन्यन्ते व्याख्यातारः ।
(ச.பா) இவை எல்லாம் ஓம் என்ற அக்ஷரமே, அதனுடைய உபாக்கியமான இந்த வேதாந்த அர்த்த சாரத்தின் சுருக்கமாகிய இந்த பிரகரண சதுஷ்டயம் (இந்த நான்கு பிரகரணங்கள்) “ओमित्येतदक्षरमिदम्” முதலிய மந்திரங்களால் ஆரம்பிக்கப்படுகிறது. ஆகையால் சம்பந்தம், விஷயம், பிரயோஜனம் இவைகளைத் தனியாகக் கூறவேண்டியதில்லை. வேதாந்த சாஸ்திரங்களில் எந்த சம்பந்தம். விஷயம், பிரயோஜனம் சொல்லப்பட்டதோ அதுவே இந்த கிரந்தத்திற்கும் பொருந்தும், அவ்வாறு இருந்தாலும் பிரகரண கிரந்தத்தின் வியாக்யானத்தை செய்ய விரும்புபவர்கள் அவைகளை சுருக்கமாக விளக்கவேண்டும்.
तत्र प्रयोजनवत्साधनाभिव्यञ्जकत्वेनाभिधेयसम्बद्धं शास्त्रं पारम्पर्येण विशिष्टसम्बन्धाभिधेयप्रयोजनवद्भवति । किं पुनस्तत्प्रयोजनमिति, उच्यते — रोगार्तस्येव रोगनिवृत्तौ स्वस्थता, तथा दुःखात्मकस्यात्मनो द्वैतप्रपञ्चोपशमे स्वस्थता ; अद्वैतभावः प्रयोजनम् ।
(ச.பா) அங்கு பிரயோஜனத்தின் சித்திக்கு அனுகூலமான சாதனத்தை தெரிவிப்பதற்காக தன்னால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட விஷயத்துடன் கூடிய சம்பந்தமுடைய சாஸ்திரம் பரம்பரையாக சம்பந்தம், விஷயம், பிரயோஜனமுடையதாகச் செய்கிறது. மறுபடியும் அதன் பிரயோஜனம் என்ன என்று கூறப்படுகிறது ரோகத்தால் பீடிக்கப்பட்டவன் ரோகம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான், அவ்வாறேதுக்க அபிமானி தன்னுடைய த்வைத பிரபஞ்சம் நிவிர்த்தியானவுடன் சௌகரியத்தை அடைகிறான் இதன் பிரயோஜனம் அத்வைத பாவமே யாகும்.
(ச.பா) த்வைத பிரபஞ்சம் அவித்தையினால் உண்டானதால் அது வித்தையினால் நீங்கும் என்பதால் பிரஹ்ம வித்தையை பிரகாசப்படுத்துவதற்காக (பிரஹ்ம வித்தையை தெரியப்படுத்துவதற்காக) ஆரம்பிக்கப்படுகிறது “यत्र हि द्वैतमिव भवति” (யத்ர ஹி த்வைதமிவபவதி எங்கு துவைதம் போல் இருக்கிறதோ) “यत्र वान्यदिव स्यात्तत्रान्योऽन्यत्पश्येदन्योऽन्यद्विजानीयात्” (யத்ர வான்ய திவஸ்யாத்தத்ரான்யோ அன்யத்பச்யேதன்யோ அன்யத் விஜானீயாத் = எங்கு வேறாய் இருப்பது போல் தோன்றுகிறதோ அங்கு வேறு ஒன்று மற்றொன்றைப் பார்க்க முடிகிறது அல்லது வேறு ஒன்று வேறு ஒன்றை அறிகிறது) “यत्र वास्य सर्वमात्मैवाभूत्तत्केनकंपश्येत्केनकंविजानीयात्” (யத்ர வாஸ்ய சர்வமாத்மைவா பூத்தத்கேன கம்பச்யேத்கேன கம் விஜானீயாத் = எங்கு அதற்கு எல்லாம் ஆத்மாவாகிறதோ அவனால் எதைக் கொண்டு யாரைப்பார்ப்பான், எதனால் யாரை அறிவான்) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் இதன் பொருள் சித்திக்கிறது.
तत्र तावदोङ्कारनिर्णयाय प्रथमं प्रकरणमागमप्रधानमात्मतत्त्वप्रतिपत्त्युपायभूतम् । यस्य द्वैतप्रपञ्चस्योपशमे अद्वैतप्रतिपत्तिः रज्ज्वामिव सर्पादिविकल्पोपशमे रज्जुतत्त्वप्रतिपत्तिः, तस्य द्वैतस्य हेतुतो वैतथ्यप्रतिपादनाय द्वितीयं प्रकरणम् । तथा अद्वैतस्यापि वैतथ्यप्रसङ्गप्राप्तौ, युक्तितस्तथात्वप्रतिपादनाय तृतीयं प्रकरणम् । अद्वैतस्य तथात्वप्रतिपत्तिविपक्षभूतानि यानि वादान्तराण्यवैदिकानि सन्ति, तेषामन्योन्यविरोधित्वादतथार्थत्वेन तदुपपत्तिभिरेव निराकरणाय चतुर्थं प्रकरणम् ।
(ச.பா) அங்கு ஓம்காரத்தை நிர்ணயம் செய்வதற்காக முதலாவதான ஆகமப்பிரதானமான பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. அது ஆத்ம தத்துவத்தை அடைவதற்கான உபாய ரூபமாய் இருக்கிறது. எவ்வாறு கயிற்றில் பாம்பு முதலிய விகல்பங்கள் நீங்கியவுடன் கயிற்றின் யதார்த்த ஸ்வரூபஞானம் ஏற்படுகிறதோ அவ்வாறு துவைத பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ஏற்பட்ட உடன் அத்வைத தத்துவத்தின் யதார்த்த ஞானம் உண்டாகிறது. அந்த துவைதத்தின் மித்தியாத்துவத்தை யுக்தி பூர்வமாய் விளக்குவதற்காக இந்த இரண்டாவது (வைதத்திய) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அத்வைதத்திலும் மித்யாத்துவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக யுக்தி மூலமாய் அதனுடைய சத்தியத்துவத்தை நிலைநாட்டுவதற்காக இந்த மூன்றாவது (அத்வைத) பிரகரணம் வந்துள்ளது. அவ்வாறே அத்வைத சத்தியத்துவ நிச்சயத்தின் விபக்ஷி (மாறுபட்ட கருத்துடைய பக்ஷம்) என்றவேறு அவைதிக மாற்று கருத்துடையவர்கள் அவர்களுக்குள் பரஸ்பர விரோதியாய் இருப்பதால் அது மித்தையாகும். ஆகையால் அவைகளை யுக்திகளால் கண்டனம் செய்வதற்காக நான்காவது (अलातशान्ति) (அலாதசாந்தி) பிரகரணம் ஆரம்பிக்கப்பட்டது.
(ச.பா) ஆத்ம தத்துவத்தின் நிர்ணயம், எவ்வாறு ஆத்மாவை அடைவதற்கு உபாயமாகிறது என்று கூறப்படுகிறது “ओमित्येतत्” (ஓமித்யேதத் = ஓம் என்பது ஆத்மா), “एतदालम्बनम्” (ஏததாலம்பனம் = அதுவே ஆலம்பனம்), “एतद्वै सत्यकाम” (ஏதத்வை சத்தியகாம = ஹே! சத்தியகாம! அதுவேயாகும்) “ओमित्यात्मानं युञ्जीत” (ஓமித்யாத்மானம் யுஞ்ஜீத = ஓம் என்று ஆத்மாவை த்யானம் செய் “ओमिति ब्रह्म” (ஓமிதி பிரஹ்ம = ஓம் பிரஹ்மமாகும்) “ओङ्कार एवेदं सर्वम्” (ஓம்காரஏவேதம் சர்வம் = இந்த எல்லாம் ஓம்காரமே என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
रज्ज्वादिरिव सर्पादिविकल्पस्यास्पदमद्वय आत्मा परमार्थतः सन्प्राणादिविकल्पस्यास्पदं यथा, तथा सर्वोऽपि वाक्प्रपञ्चः प्राणाद्यात्मविकल्पविषय ओङ्कार एव । स चात्मस्वरूपमेव, तदभिधायकत्वात् । ओङ्कारविकारशब्दाभिधेयश्च सर्वः प्राणादिरात्मविकल्पः अभिधानव्यतिरेकेण नास्ति ;
‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) ‘तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम् , सर्वं हीदं नामनि’ (ऐ. आ. २ । १ । ६) इत्यादिश्रुतिभ्यः ।
(ச.பா) சர்ப்பம் முதலிய விகல்பங்களுக்கு அதிஷ்டானமான ரஜ்ஜு முதலியவற்றிக்குச் சமமாக இவ்வாறு அத்விதீய ஆத்மா பரமார்த்த சத்தியமாய் இருப்பதால் பிராணன் முதலிய விகல்பங்களுக்கு ஆஸ்ரியமாய் இருக்கிறதோ, அவ்வாறு எல்லா வாக் பிரபஞ்சங்களான பிராணன் முதலிய ஆத்ம விகல்ப விஷயம் ஓம்காரமே. மேலும் அது (ஓம்காரம்) ஆத்மாவை பிரதிபாதனம் செய்வதால் அந்த ஆத்ம ஸ்வரூபமேயாகும். அவ்வாறே ஓம்காரத்தின் விகாரரூப சப்தங்களால் பிரதிபாத்தியம் செய்யப்பட்ட ஆத்மாவின் விகல்பரூபம் எல்லா பிராணன் முதலியவைகள் தன்னை பிரதிபாத்தியம் செய்யும் சப்தங்களைக் காட்டிலும் வேறு அல்ல, என்று “वाचारम्भणं विकारो नामधेयम्” (வாச்சாரம்பணம் விகாரோ நாமதேயம் - வாக்கினால் உண்டான விகாரமே நாமம் எனப்படுகிறது) “तदस्येदं वाचा तन्त्या नामभिर्दामभिः सर्वं सितम्” (ததஸ்யேதம் வாச்சா தன்த்யா நாமபிர்தாமமபி: சர்வம் ஸ்திதம் = இந்த பிரஹ்மமானது இந்த சம்பூரண ஜகத்தையும் வாக்கு ரூபமான கயிற்றினால் நாமங்களாய் வியாபித்திருக்கிறது), “सर्वं हीदं नामनि” (சர்வம் ஹீதம் நாமனி) = இது எல்லாம் நாமமயமே) என்று சுருதிகளினால் அறிகிறோம்.
अत आह
ஆகையால் கூறுகிறார்:-
ओमित्येतदक्षरमिदं सर्वं तस्योपव्याख्यानं भूतं भवद्भविष्यदिति सर्वमोङ्कार एव । यच्चान्यत्त्रिकालातीतं तदप्योङ्कार एव ॥ १ ॥
மந்திர அர்த்தம் - எது எல்லாம் இருக்கிறதோ அது ஓம்காரமே எது எல்லாம் இதற்கு முன் இருந்தது இப்பொழுது இருப்பது இனி இருக்கப்போவதும் எல்லாம் ஓம்காரமே. இதை தவிர மூன்று காலங்களையும் கடந்த வேறு வஸ்து எதுவோ அதுவும் ஓம்காரமே.
ओमित्येतदक्षरमिदं सर्वमिति । यदिदम् अर्थजातमभिधेयभूतम् , तस्य अभिधानाव्यतिरेकात् , अभिधानभेदस्य च ओङ्काराव्यतिरेकात् ओङ्कार एवेदं सर्वम् । परं च ब्रह्म अभिधानाभिधेयोपायपूर्वकमवगम्यत इत्योङ्कार एव ।
(ச.பா) எது எல்லாம் இருக்கிறதோ அது ஓம்காரமே. எந்த இந்த பதார்த்தங்கள் சொல்லப்பட்டதின் (பிரதிபாத்ய) (அபிதேய) சொல்லைக் (பிரதிபாதக) (அபிதான) காட்டிலும் வேறானது ஆகாததால் சொல்லிற்கு ஓம்காரத்தைக் காட்டிலும் வேறாகாத ஓம்காரமே இவையெல்லாம், பரப்ரஹ்மமும் அபிதான, அபிதேய (வாச்சிய வாசக) ரூப உபாயத்தால்தான் அறிய முடிகிறது. ஆகையால் அதுவும் ஓம்காரமே.
तस्य एतस्य परापरब्रह्मरूपस्याक्षरस्य ओमित्येतस्य उपव्याख्यानम् , ब्रह्मप्रतिपत्त्युपायत्वाद्ब्रह्मसमीपतया विस्पष्टं प्रकथनमुपव्याख्यानम् ; प्रस्तुतं वेदितव्यमिति वाक्यशेषः ।
(ச.பா) எந்த அந்த பராபர பிரஹ்மரூப அக்ஷர ஓம்காரமோ அதனுடைய உபவியாக்கியானம் - பிரஹ்மத்தை அடைவதற்கான உபாயமாய் இருப்பதால் அதனை மிக அருகில் உள்ளதாய் ஸ்பஷ்ட்டமாய் கூறுவது என்பது உபவியாக்கியானம் ஆகும். அதை இங்கு ப்ரஸ்துதியை (மேன்மையை) அறிந்துகொள்ள வேண்டும். “प्रस्तुतं वेदितव्यम्” என்பது வாக்கிய சேஷமாகும்.
भूतं भवत् भविष्यत् इति कालत्रयपरिच्छेद्यं यत् , तदपि ओङ्कार एव, उक्तन्यायतः । यच्च अन्यत् त्रिकालातीतं कार्याधिगम्यं कालापरिच्छेद्यमव्याकृतादि, तदपि ओङ्कार एव ।
(ச.பா) பூத, வர்த்தமான, பவிஷ்யத் (சென்ற, இருக்கின்ற, வரப்போகின்ற) ஆகிய முக்காலங்களினாலும் எந்த சிறிய பரிச்சேதம் இருந்தாலும் முற்கூறிய நியாயப்படி ஓம்காரமேயாகும். இதைத் தவிர இந்த மூன்று காலங்களுக்கும் மேலான (பரமான) தன்னுடைய காரியத்தால் அறியப்படுவதும், காலத்தால் அபரிச்சேத்திய (பிரிக்கமுடியாத) அவ்யாகிருத முதலியவைகளான அவையும் ஓம்காரமே ஆகும்.
अभिधानाभिधेययोरेकत्वेऽपि अभिधानप्राधान्येन निर्देशः कृतः ‘ओमित्येतदक्षरमिदं सर्वम्’ इत्यादि । अभिधानप्राधान्येन निर्दिष्टस्य पुनरभिधेयप्राधान्येन निर्देशः अभिधानाभिधेययोरेकत्वप्रतिपत्त्यर्थः । इतरथा हि अभिधानतन्त्राभिधेयप्रतिपत्तिरिति अभिधेयस्याभिधानत्वं गौणमित्याशङ्का स्यात् । एकत्वप्रतिपत्तेश्च प्रयोजनमभिधानाभिधेययोः — एकेनैव प्रयत्नेन युगपत्प्रविलापयंस्तद्विलक्षणं ब्रह्म प्रतिपद्येतेति । तथा च वक्ष्यति —
‘पादा मात्रा मात्राश्च पादाः’ (मा. उ. ८) इति । तदाह —
(ச.பா) அபிதானம், அபிதேயம் இரண்டும் ஒன்றேயானாலும் அபிதானத்தை பிரதானமாக நிர்தேசம் செய்யப்படுவது (விளக்கப்படுவது) ஏன்? ஓம் எனப்படும் இந்த அக்ஷரமே எல்லாம் என்பவை முதலியவைகளால். அபிதானத்தை பிரதானமாக விளக்கி மறுபடியும் அபிதேயத்தை பிரதானமாய் விளக்குவது அபிதானம் அபிதேயம் இவைகளின் ஏகத்துவத்தை புரிந்து கொள்வதற்காக ஆகும், மற்றதோ எனில் அபிதேயத்தின் பிரதிபத்தி அபிதானத்தின் அதீனமாய் இருப்பதால் அபிதேயத்தின் அபிதானத்துவமாய் கௌணமாகுமே என்ற சங்கை ஏற்படலாம். ஏகத்துவ பிரதிபத்தியின் (அடைவின்) பிரயோஜனம் அபிதான அபிதேயம் இவைகளின் ஏகத்துவமாகும் என்பது இவை இரண்டையும் (புருஷ) பிரயத்தனத்தினால் ஒன்றாய் லயமாக்கி அதைக்காட்டிலும் விலக்ஷணமான பிரஹ்மத்தை அடைகிறான். அவ்வாறே கூறப்போகிறார் “पादा मात्रा मात्राश्च पादाः” (பாதாமாத்ராமாத்ராச்ச பாதா = பாதமேமாத்திரை மேலும் மாத்ராவேபாதம்) என்று அதைக் கூறுகிறார்.
सर्वं ह्येतद्ब्रह्मायमात्मा ब्रह्म सोऽयमात्मा चतुष्पात् ॥ २ ॥
மந்தர அர்த்தம் - அது எல்லாம் பிரஹ்மமே. அந்த ஆத்மா பிரஹ்மம் அந்த இந்த ஆத்மா நான்கு பாதங்கள் உடையது.
सर्वं ह्येतद्ब्रह्मेति । सर्वं यदुक्तमोङ्कारमात्रमिति, तदेतत् ब्रह्म । तच्च ब्रह्म परोक्षाभिहितं प्रत्यक्षतो विशेषेण निर्दिशति — अयमात्मा ब्रह्मेति । अयम् इति चतुष्पात्त्वेन प्रविभज्यमानं प्रत्यगात्मतयाभिनयेन निर्दिशति अयमात्मेति । सोऽयमात्मा ओङ्काराभिधेयः परापरत्वेन व्यवस्थितः चतुष्पात् कार्षापणवत् , न गौरिव । त्रयाणां विश्वादीनां पूर्वपूर्वप्रविलापनेन तुरीयस्य प्रतिपत्तिरिति करणसाधनः पादशब्दः ; तुरीयस्य तु पद्यत इति कर्मसाधनः पादशब्दः ॥ २ ॥
(ச.பா) எல்லாம் இந்த பிரஹ்மமே. எது எல்லாம் என்று கூறப்பட்டதோ ஓம்காரமாத்திரம் அது இந்த பிரஹ்மம் இதுவரையிலும் பரோக்ஷரூபமாக கூறப்பட்ட அந்த பிரஹ்மம் விசேஷரூபத்தால் பிரத்யக்ஷமாய் இந்த ஆத்மா பிரஹ்மம் என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இங்கு அயம் (இந்த) என்ற சப்தம் நான்குபாதரூபமாய் பிரித்து பிரத்யக் ஆத்மாவாய் அபிநயம் (முத்திரைக்காட்டி ---- ஆள்காட்டி விரலால்காட்டி) செய்து நிர்தேசம் செய்கிறார் அயமாத்மா (இந்த ஆத்மா) பிரஹ்மம் என்று. அந்த இந்த ஆத்மா ஓம்காரம் எனப்படும் பராபரரூபமாய் கூறப்படும் அந்த இந்த ஆத்மா ரூபாயிற்கு சமானமாக நான்கு பாதங்கள் (கால், அரை, முக்கால், முழுவதும்) என்று உள்ளது. பசுவிற்கு உள்ள கால்கள்போல் அல்ல. விச்வம் முதலிய மூன்று பாதங்களிலும் கிரமமாகபூர்வ, பூர்வத்தில்லயம்செய்து முடிவில் துரீய பிரஹ்மத்தின் அடைவு உண்டாகிறது. “பாத” சப்தம் கரணசாதனம். ஆகையால் முதலில் மூன்று பாதங்களிலும் பாதசப்தம் கரணவாச்சியமாகும். மேலும் துரீயத்தில் அடையப்பட்டது என்ற வகையில் கர்மவாச்சியமாகும்.
कथं चतुष्पात्त्वमित्याह —
அந்த ஆத்மஸ்வரூபமானது எவ்வாறு நான்கு பாதங்களுடன் கூடியது என்பதனை விளக்குகிறார்.
जागरितस्थानो बहिःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः स्थूलभुग्वैश्वानरः प्रथमः पादः ॥ ३ ॥
மந்த்ர அர்த்தம் - ஜாக்கிரதத்தில் வெளிபிரக்ஞை உடையவன், மேலும் ஏழு அங்கங்கள் பத்தொன்பது முகங்கள், ஸ்தூலபுக், ஸ்தூல விஷயங்களை அனுபவிக்கின்ற வைஸ்வாநரன் முதல் பாதம்.
(ச.பா) ஜாக்ரத அவஸ்தா எதற்கு ஸ்தானமோ அது ஜாக்ரதஸ்தானம் எனப்படுகிறது. பஹிஷ் பிரக்ஞை என்றால் ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான விஷயத்தில் பிரக்ஞை எவனுக்கு இருக்கிறதோ அவன் பஹிஷ்பிரக்ஞன். வெளியில் (பாஹ்ய) உள்ள விஷயங்களில் இருக்கும் பிரக்ஞையானது அவித்தையினால் உண்டானதாய் அவபாசிக்கிறது (விளக்குகிறது) என்பது பொருள். அவ்வாறே சப்தாங்கம் அதாவது “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा संदेहो बहुलो वस्तिरेव रयिः पृथिव्येव पादौ” (தஸ்ய ஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ சுதேஜாச்சக்ஷுர்விச்வரூப. பிராண ப்ருதக்வர்மாத்மா சந்தேஹோ பஹுலோ வஸ்திரேவ ரயி. ப்ருதிவ்யேவ பாதௌ = இந்த வைச்வானர ஆத்மாவிற்கு த்யுலோகம் சிரஸ், சூரியன் கண், வாயு பிராணன், ஆகாசம் மத்தியபாகம் (தேஹம்), அன்னம் (அன்னத்தின்காரணரூப ஜலம்) மூத்திரஸ்தானம் மேலும் பிருதிவியானது. இரு பாதங்கள் என்ற சுருதியின்படி அக்னிஹோத்திர கல்பனையில் அங்க பூதமாய் இருப்பதால் ஆஹவநீய அக்னி அதன் முகரூபமாய் கூறப்படுகிறது. இவ்வாறு எதற்கு இந்த ஏழு அங்கங்களோ அது சப்தாங்கம் எனக் கூறப்படுகிறது.
तथा एकोनविंशतिर्मुखान्यस्य ; बुद्धीन्द्रियाणि कर्मेन्द्रियाणि च दश, वायवश्च प्राणादयः पञ्च, मनो बुद्धिरहङ्कारश्चित्तमिति, मुखानीव मुखानि तानि ; उपलब्धिद्वाराणीत्यर्थः । स एवंविशिष्टो वैश्वानरः यथोक्तैर्द्वारैः शब्दादीन्स्थूलान्विषयान्भुङ्क्त इति स्थूलभुक् । विश्वेषां नराणामनेकधा सुखादिनयनाद्विश्वानरः, यद्वा विश्वश्चासौ नरश्चेति विश्वानरः, विश्वानर एव वैश्वानरः, सर्वपिण्डात्मानन्यत्वात् ; स प्रथमः पादः । एतत्पूर्वकत्वादुत्तरपादाधिगमस्य प्राथम्यमस्य ।
(ச.பா) அவ்வாறே பத்தொன்பது முகங்கள் உடையது, அதாவது ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆக பத்து மேலும் பிராணவாயுக்கள். ஐந்து, மேலும் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் ஆகிய பத்தொன்பதும் முகங்கள் போல் முகங்கள், அவைகள் உபலப்தி (ஞானம்= அறிவு ஏற்படுவதற்கான) வாயில்களாகும் என்பது பொருள். இவ்வாறு இவைகளுடன் கூடிய வைச்வாநரன் முன் கூறப்பட்ட வாயில்களின் மூலமாய் சப்தம் முதலிய ஸ்தூல விஷயங்களைப் புஜிக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்தூலபுக் எனப்படுகிறான். சம்பூர்ண நரர்களையும் (எல்லா வகைப் பிராணிகளையும்) நடத்திச் செல்வதால் வைச்வாநரன் எனப்படுகிறான். அல்லது விச்வம் எல்லாம் நரரூபமாய் இருப்பதால் விச்வாநரன். விச்வாநரனே வைச்வாநரன். எல்லா தேஹங்களுக்கும் அநன்யமாய் (அபின்னமாய்) இருப்பதால் அதுவே முதல் பாதம். இது முதலில் இருப்பதால் இதற்குப் பின்வரும் பாதத்தின் ஞானத்திற்கு முன் இதனுடைய ஞானம் ஏற்படுவதால் இதுவே முதலாவது ஆகும்.
कथम् ‘अयमात्मा ब्रह्म’ इति प्रत्यगात्मनोऽस्य चतुष्पात्त्वे प्रकृते द्युलोकादीनां मूर्धाद्यङ्गत्वमिति ।
(ச.பா) (அயமாத்மா பிரஹ்ம) இந்த சுருதியின் படி இங்கு பிரத்யக் ஆத்மாவிற்கு நான்கு பாதங்களுடையதைக் கூறுவதற்கானதாகும். அதில் த்யுலோகம் முதலியவை இதன் சிரஸ் முதலிய அங்கரூபமாய் எவ்வாறு கூறலாம்?
नैष दोषः, सर्वस्य प्रपञ्चस्य साधिदैविकस्य अनेनात्मना चतुष्पात्त्वस्य विवक्षितत्वात् । एवं च सति सर्वप्रपञ्चोपशमे अद्वैतसिद्धिः । सर्वभूतस्थश्च आत्मा एको दृष्टः स्यात् ; सर्वभूतानि चात्मनि ।
‘यस्तु सर्वाणि भूतानि’ (ई. उ. ६) इत्यादिश्रुत्यर्थश्चैवमुपसंहृतः स्यात् ; अन्यथा हि स्वदेहपरिच्छिन्न एव प्रत्यगात्मा साङ्ख्यादिभिरिव दृष्टः स्यात् ; तथा च सति अद्वैतमिति श्रुतिकृतो विशेषो न स्यात् , साङ्ख्यादिदर्शनेनाविशेषात् । इष्यते च सर्वोपनिषदां सर्वात्मैक्यप्रतिपादकत्वम् ; ततो युक्तमेवास्य आध्यात्मिकस्य पिण्डात्मनो द्युलोकाद्यङ्गत्वेन विराडात्मनाधिदैविकेनैकत्वमित्यभिप्रेत्य सप्ताङ्गत्ववचनम् ।
‘मूर्धा ते व्यपतिष्यत्’ (छा. उ. ५ । १२ । २) इत्यादिलिङ्गदर्शनाच्च ।
(ச.பா) இது தோஷமில்லை. ஏனெனில் இந்த ஆத்மாவின் மூலமாகத்தான் அதிதைவதத்துடன் கூடிய சம்பூர்ண பிரபஞ்சத்தின் நான்கு பாதங்களையும் பிரதிபாதனம் செய்வதற்கு (விவரிப்பதற்கு) ஆகும். இவ்வாறு இருக்கும் பொழுது சம்பூர்ண பிரபஞ்சத்தின் உபசமனமே (நீக்கமே) அத்வைத சித்தியாகும். எல்லா பூதங்களிலும் (பிராணிகளிலும்) இருக்கின்றது ஒரே ஆத்மா, எல்லா பூதங்களிலும் ஆத்மாவிலும் (சாக்ஷாத்தாய்) பார்க்கபடுவதாய் விடும் “यस्तु सर्वाणि भूतानि” என்பது முதலிய சுருதியின் அர்த்தமும் இல்லாமல் போய் விடும் மேலும் அவ்வாறு இல்லையெனில் சாங்கிய தர்சன முதலியவைகளைப் போல் தன்னுடைய தேஹத்தில் பரிச்சின்னமாய் அந்தராத்மாவின் தர்சனமாகிவிடும், இவ்வாறானால் “अद्वैतं” என்ற சுருதிபிரதிபாதித விசேஷ பாவனையின் சித்தி உண்டாகாது. ஏனெனில் சாங்கியம் முதலிய தர்சனங்களின் அபேக்ஷை இதில் சிறிதும் விசேஷமுடையதாகாது. ஆனால் எல்லா உபநிஷத்துக்களுக்கும் ஆத்மாவின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதிலேயே இஷ்டம் ஆகையால் இந்த ஆத்யாத்மிக பிண்டாத்மாவின் த்யூலோகம் முதலியவைகளை அங்கரூபமாய் ஆதி தைவீக பிண்டாத்மாவுடன் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் அபிப்பிராயம் கொண்டு அந்த சப்தாங்கம் கூறப்பட்டது உசிதமேயாகும். இதைத் தவிர “मूर्धा ते व्यपतिष्यत्” (மூர்த்தா தே வ்யபதிஷ்யத்) உன்னுடைய தலை விழுந்துவிடும்) என்ற வாக்கியம் இதில் ஹேதுவாகும்.
(ச.பா) எந்த விராட்டுடன் ஏகத்துவம் கூறப்பட்டதோ அந்த ஹிரண்யகர்பன் அவ்யாகிருதன் இவைகளின் ஏகத்துவத்தை உபலக்ஷிப்பதாகும். மது பிராஹ்மணத்திலும் “यश्चायमस्यां पृथिव्यां तेजोमयोऽमृतमयः पुरुषो यश्चायमध्यात्मम्” (யச்சாயமஸ்யாம் பிருதிவ்யாம் தேஜோமயோஅம்ருதமய புருஷோயச்சாயமத்யாத்மம் = எந்த ஒருவன் இந்த பிருதிவியில் தேஜோமயமாயும் அம்ருதமாயும் உள்ள புருஷன். அவ்வாறே எந்த அந்த அவனே அத்தியாத்ம புருஷன்) என்பது முதலியவை. ஒரு விசேஷமும் இல்லாத காரணத்தால் தூங்கும் புருடனும் அவ்யாக்ருதத்துடன் ஏகத்துவம் சித்திக்கிறது. இவ்வாறு இருப்பதால் என்ன சித்திக்கிறது எனில் எல்லா துவைதங்களும் நீங்கின பின் அத்வைதமே சித்திக்கிறது என்பதாகும்.
स्वप्नस्थानोऽन्तःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः प्रविविक्तभुक्तैजसो द्वितीयः पादः ॥ ४ ॥
மந்தர அர்த்தம் - ஸ்வப்னத்தை ஸ்தானமாகவும், அந்தः பிரக்ஞனாயும், ஏழு அங்கங்களுடன் கூடியவனும் பத்தொன்பது முகமுடையவனும் சூக்ஷ்ம விஷயங்களின் போக்தாவாயும் உள்ள தைஜசன் இரண்டாவது பாதம்.
(ச.பா) ஸ்வப்பனத்தை ஸ்தானமாக உடையதால் ஸ்வப்னஸ்தானன் எனப்படுகிறான். அநேக சாதனங்களுடன் கூடிய ஜாக்கிரத்கால புத்தியானது மனதின் ஸ்புரண மாத்திரத்தாலேயே வெளி விஷயங்களில் சம்பந்தம் காணப்படுகிறது. அதனால் மனதில் சம்ஸ்காரம் ஏற்படுகிறது. சித்திரம் வரையப்பட்ட வஸ்திரம் போல் இவ்வாறு சம்ஸ்காரங்களால் அந்த மனது அவித்யை. காமனை மேலும் கர்மத்தின் காரணமாய் பாஹிய சாதனங்களின் அபேக்ஷை இல்லாமலேயே பிரேரிக்கப்பட்டு (ஸ்வப்னத்தில்) ஜாக்கிரம் போல் காணப்படுகிறது. இவ்வாறு சுருதிகளில் கூறப்பட்டுள்ளது - “இந்த எல்லா சாதனங்களுடன் கூடிய ஜகத்தின் சம்ஸ்காரத்தைக் கிரஹணம் செய்கிறது. அவ்வாறே அதர்வண சுருதியிலும் பரம (இந்திரியங்கள் முதலியவைகளால் உத்கிருஷ்ட்டமான) தேவதை (பிரகாசம் செய்யக்கூடிய) மனதில் ஒரே ரூபமாய் ஆகிறது”. என்று துதித்துக் கூறுகிறார் = “இங்கு ஸ்வப்பன ஸ்தானத்தில் எந்த தேவன் உள்ளானோ அவன் தன்னுடைய மஹிமையை அனுபவிக்கிறான் என்பதாகும்.
इन्द्रियापेक्षया अन्तःस्थत्वान्मनसः तद्वासनारूपा च स्वप्ने प्रज्ञा यस्येति अन्तःप्रज्ञः, विषयशून्यायां प्रज्ञायां केवलप्रकाशस्वरूपायां विषयित्वेन भवतीति तैजसः । विश्वस्य सविषयत्वेन प्रज्ञायाः स्थूलाया भोज्यत्वम् ; इह पुनः केवला वासनामात्रा प्रज्ञा भोज्येति प्रविविक्तो भोग इति । समानमन्यत् । द्वितीयः पादः तैजसः ॥ ४ ॥
(ச.பா) இந்திரியங்களைக் காட்டிலும் உள்ளிருப்பது மனம், அது வாசனை ரூபமாய் ஸ்வப்னத்தில் இருக்கிறது. அது அந்த: பிரக்ஞன் எனப்படுகிறது. விஷயங்கள் அற்றதில் கேவலம் பிரகாசரூபமான பிரக்ஞை விஷயீ (அனுபவிப்பது) ஆக இருப்பதால் “தைஜசன்” என்கிறோம், விச்வம் பாஹ்ய விஷயத்துடன் கூடியதாய் இருக்கிறது. ஆகையால் ஜாக்ராவஸ்தையில் ஸ்தூல பிரக்ஞை அதற்கு போஜ்ய மாகிறது. ஆனால் தைஜசனுக்கு கேவலம் வாசனா மாத்திர பிரக்ஞை புஜிக்கிறதாய் இருக்கிறது. ஆகையால் அதன் போகம் சூக்ஷ்மம் ஆகும். மற்றவைகளின் அர்த்தம் முன்போலாகும். இது தைஜசனின் இரண்டாவது பாதம் ஆகும்.
दर्शनादर्शनवृत्त्योः स्वापस्य तुल्यत्वात्सुषुप्तग्रहणार्थं यत्र सुप्त इत्यादिविशेषणम् । अथवा, त्रिष्वपि स्थानेषु तत्त्वाप्रतिबोधलक्षणः स्वापोऽविशिष्ट इति पूर्वाभ्यां सुषुप्तं विभजते ।
(ச.பா) (அ.கை) தர்சன (ஜாக்ரத ஸ்தானம்) அதர்சன (ஸ்வப்ன ஸ்தானம்) இவை இரண்டும் தத்துவஞானம் அற்ற லக்ஷணமான சுழுத்திக்கு ஒப்பாய் இருப்பதால் சுழுத்தி அவஸ்தையை கிரஹிப்பதற்காக இங்கு சுஷுப்தி முதலிய விசேஷணங்கள் ஆகும். அல்லது மூன்று ஸ்தானங்களிலும் தத்துவத்தின் அக்ஞானம் நித்திரைக்கு சமானமாகும். ஆகையால் முதலில் இரண்டு அவஸ்தைகளிலிருந்து சுஷுப்தியை பிரித்து காட்டுகிறார் (விபாகம் செய்கிறார்).
यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति तत्सुषुप्तम् । सुषुप्तस्थान एकीभूतः प्रज्ञानघन एवानन्दमयो ह्यानन्दभुक्चेतोमुखः प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥
மந்திர அர்த்தம் - எந்த அவஸ்தையில் தூங்குகின்ற புருடன் எந்த போகத்திலும் இச்சை கொள்வதில்லையோ, ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அது சுஷுப்தி எனப்படுகிறது. அந்த சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அவ்வாறேஏக பூதமாய் ப்ரகடனமாய் ஞானரூபமாய் ஆகிறது. அது ஆனந்தமயம். ஆனந்தத்தின் போக்தா. சேதனரூப முகமுடையது. அது பிராக்ஞன். அதுவே மூன்றாவது பாதமாகும்.
यत्र यस्मिन्स्थाने काले वा सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति । न हि सुषुप्ते पूर्वयोरिवान्यथाग्रहणलक्षणं स्वप्नदर्शनं कामो वा कश्चन विद्यते । तदेतत्सुषुप्तं स्थानमस्येति सुषुप्तस्थानः ।
(ச.பா) எந்த ஸ்தானத்திலோ, எந்த காலத்திலோ நன்றாக உறங்கினவன் सुप्तः ஒரு சுவப்னத்தையும் காண்பதில்லை. காமனைகளையும் காமனை (ஆசை) செய்வதில்லை. நல்ல உறக்கத்தில் முன்பு போல் வேறு ஓன்றை கிரஹிக்கும் லக்ஷணமாகிய ஸ்வப்ன தர்சனமோ காமமோ இல்லை. அந்த இந்த சுஷுப்தி ஸ்தானம் எதற்கோ அது சுஷுப்தி ஸ்தானம் எனப்படும்.
स्थानद्वयप्रविभक्तं मनःस्पन्दितं द्वैतजातं तथा रूपापरित्यागेनाविवेकापन्नं नैशतमोग्रस्तमिवाहः सप्रपञ्चमेकीभूतमित्युच्यते । अत एव स्वप्नजाग्रन्मनःस्पन्दनानि प्रज्ञानानि घनीभूतानीव ; सेयमवस्था अविवेकरूपत्वात्प्रज्ञानघन उच्यते । यथा रात्रौ नैशेन तमसा अविभज्यमानं सर्वं घनमिव, तद्वत्प्रज्ञानघन एव । एवशब्दान्न जात्यन्तरं प्रज्ञानव्यतिरेकेणास्तीत्यर्थः ।
(ச.பா) எவ்வாறு இரவில் தினமானது இருளால் மறைக்கப்படுகிறதோ அவ்வாறு முன்பு கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) வேறு வேறு விதமாய் தோன்றுகின்ற மனதின் வெளிப்பாட்டால் துவைத பிரபஞ்சத்துடன் தன்னுடைய ஸ்வரூபத்தை விட்டு விடாமல் அக்ஞானத்தால் மறைக்கப்படுகிறது. ஆகையால் பிரபஞ்சத்துடன் ஒன்றாகி (ஏகீபூதமாய்) விட்டது என்று கூறப்படுகிறது. ஆகையால் தான் ஸ்வப்ன ஜாக்ரத் ஆகிய மனதின் அசைவுகள் ஆகிய பிரக்ஞைகள் கனீபூதம், அதாவது மிகவும் கடினமாக அடர்த்தியானவை போல் இருக்கிறது. அந்த அவஸ்தை அவிவேகரூபமாய் இருப்பதால் பிரக்ஞானகனம் எனப்படுகிறது. எவ்வாறு இரவில். இரவின் இருளை தனியாகப் பிரிக்க முடியாததால் சம்பூர்ண ஜகத்தும் கனீபூதமாய் அறியப்படுகிறது. இவ்வாறு இது பிரக்ஞானகனமாகும். “एव” என்ற சப்தத்தால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த சமயத்தில் பிரக்ஞானத்தைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதில்லை என்பது பொருள்.
मनसो विषयविषय्याकारस्पन्दनायासदुःखाभावात् आनन्दमयः आनन्दप्रायः ; नानन्द एव, अनात्यन्तिकत्वात् । यथा लोके निरायासः स्थितः सुख्यानन्दभुगुच्यते । अत्यन्तानायासरूपा हीयं स्थितिरनेनात्मनानुभूयत इत्यानन्दभुक् ,
‘एषोऽस्य परम आनन्दः’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुतेः ।
(ச.பா) மனதிற்கு விஷயவிஷயீ ஆகார சலனம் இல்லாததால் ஆயாசமான துக்கத்தின் இன்மையே ஆனந்தமயம். அதாவது ஆனந்தம் போல் இருக்கிறதே தவிர ஆனந்தமல்ல. நிலையற்றதாய் இருப்பதால். உலகில் எவ்வாறு ஆசை அற்று இருக்கும்பொழுது சுகி என்றும் ஆனந்தபுக் என்றும் ஸ்திதியை அவனால் அனுபவிக்கப்படுவதால் ஆனந்தபுக் எனப்படுகிறான். இதுவே சுருதியிலும் “एषोऽस्य परम आनन्दः” என்று கூறப்பட்டுள்ளது.
स्वप्नादिप्रतिबोधं चेतः प्रति द्वारीभूतत्वात् चेतोमुखः ; बोधलक्षणं वा चेतो द्वारं मुखमस्य स्वप्नाद्यागमनं प्रतीति चेतोमुखः । भूतभविष्यज्ज्ञातृत्वं सर्वविषयज्ञातृत्वमस्यैवेति प्राज्ञः । सुषुप्तोऽपि हि भूतपूर्वगत्या प्राज्ञ उच्यते । अथवा, प्रज्ञप्तिमात्रमस्यैव असाधारणं रूपमिति प्राज्ञः ; इतरयोर्विशिष्टमपि विज्ञानमस्तीति । सोऽयं प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥
(ச.பா) ஸ்வப்னம் முதலிய ஞானரூப சேதனத்திற்கு துவார (வழி) ரூபமாய் இருப்பதால் சேதோமுகம் எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னம் முதலியவைகளை அடைவதற்கான ஞானரூப சித்தமே இதன் துவாரம் (வழி) எதுவோ அது முகம் எனப்படும். ஆகையால் அது சேதோமுகம் எனப்படுகிறது. இறந்தகாலம், (भूत) வரும்காலம், (भविष्यत्) அவ்வாறே எல்லா விஷயங்களை அறியும் ज्ञाता (ஞாதா) அதுவே, ஆகையால் அது प्राज्ञं (பிராக்ஞன்) எனப்படுகிறான். சுப்த்த (தூங்கும்) அவஸ்தை இருந்தாலும் இதற்குமுன் உள்ள பூத முந்திய கதியினால் பிராக்ஞன் எனப்படுகிறான். அல்லது கேவலம் ஞப்த்தி (ஞானம்) மாத்திரம் இதற்கு அசாதாரண ரூபம் ஆகையால் பிராக்ஞன் ஆகும். ஆகையால் விச்வன், தைஜசன் இவைகளுடன் கூடிய விக்ஞானமும் ஆகும். இந்த பிராக்ஞன் மூன்றாவது பாதமாகும்.
एष सर्वेश्वर एष सर्वज्ञ एषोऽन्तर्याम्येष योनिः सर्वस्य प्रभवाप्ययौ हि भूतानाम् ॥ ६ ॥
மந்தர அர்த்தம் - இது எல்லாவற்றிற்கும் ஈ.ஸ்வரனே. இது சர்வக்ஞன், இது அந்தர்யாமி மேலும் எல்லா ஜீவர்களின் உத்பத்தி லயம் இவற்றின் ஸ்தானமாவதால் இது எல்லாவற்றின் காரணமாகும்.
एष हि स्वरूपावस्थः सर्वेश्वरः साधिदैविकस्य भेदजातस्य सर्वस्य ईश्वरः ईशिता ; नैतस्माज्जात्यन्तरभूतोऽन्येषामिव,
‘प्राणबन्धनं हि सोम्य मनः’ (छा. उ. ६ । ८ । २) इति श्रुतेः । अयमेव हि सर्वस्य सर्वभेदावस्थो ज्ञातेति एषः सर्वज्ञः । अत एव एषः अन्तर्यामी, अन्तरनुप्रविश्य सर्वेषां भूतानां यमयिता नियन्ताप्येष एव । अत एव यथोक्तं सभेदं जगत्प्रसूयत इति एषः योनिः सर्वस्य । यत एवम् , प्रभवश्चाप्ययश्च प्रभवाप्ययौ हि भूतानामेष एव ॥ ६ ॥
(ச.பா) தன்னுடைய ஸ்வருபத்தில் இருக்கும் பிராக்ஞனே சர்வேஸ்வரன் அதாவது எல்லா அதிதைவத்துடன் கூடி எல்லா பேத சமூகங்களின் ஈ.ஸ்வரன் அதாவது சாசனம் செய்பவன் (நடத்துபவன்) “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சோம்யமனः = ஹே சோம்ய பிராணபந்தனமே மனம்) என்று சுருதியின் வாக்கியம். எல்லா பேதங்களிலும் இருப்பது எல்லாவற்றின் ஞாதாவாகும். ஆகையால் அது சர்வக்ஞன். அது அந்தர்யாமி. அதாவது எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து அவைகளை நியமனம் செய்வது (நடத்துவது) அதுவேயாகும். ஆகையால் முன் கூறப்பட்ட பேதத்துடன் எல்லா ஜகத்தும் இதிலிருந்து உண்டாவதால் அதுவே எல்லாவற்றிக்கும் காரணமாகும். ஆகையால் எல்லா பிராணிகளின் உற்பத்தி லயஸ்தானமும் அதுவே ஆகும்.
अत्रैते श्लोका भवन्ति —
இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.
(अव) अत्रैतस्मिन्यथोक्तेऽर्थ एते श्लोका भवन्ति ।
(அ.கை) இங்கு இந்த முன் கூறப்பட்ட அர்த்தத்தால் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.
बहिःप्रज्ञो विभुर्विश्वो ह्यन्तःप्रज्ञस्तु तैजसः ।
घनप्रज्ञस्तथा प्राज्ञ एक एव त्रिधा स्मृतः ॥ १ ॥
कारिका अन्वयः-विभुः विश्वः बहिष्प्रज्ञः तैजसः अन्तः-प्रज्ञः हि तथा प्राज्ञः घनप्रज्ञः एक एव त्रिधा स्मृतः।
காரிகா அர்த்தம் - விபு விச்வம் பஹிஷ்பிரக்ஞம், தைஜஸன் அந்தர் பிரக்ஞம். அவ்வாறே பிராக்ஞன் கனபிரக்ஞன் (பிரக்ஞானகனன்) இவ்வாறு ஒரே ஆத்மா மூன்று பிரகாரமாக கூறப்பட்டுள்ளது.
बहिःप्रज्ञ इति । पर्यायेण त्रिस्थानत्वात् सोऽहमिति स्मृत्या प्रतिसन्धानाच्च स्थानत्रयव्यतिरिक्तत्वमेकत्वं शुद्धत्वमसङ्गत्वं च सिद्धमित्यभिप्रायः, महामत्स्यादिदृष्टान्तश्रुतेः ॥ १ ॥
(ச.பா) “बहिष्प्रज्ञ” என்று இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம் என்னவெனில் கிரமமாய் மூன்று ஸ்தானங்கள் இருப்பதால் மேலும் நான் அதுவாய் இருக்கிறேன் என்று ஸ்மிருதியால் அனுசந்தானம் செய்வதின் காரணமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு மூன்று ஸ்தானங்களைக்காட்டிலும் வேறானதாயும், ஏகத்துவமானதாயும்.. சுத்தத்துவமாயும் மேலும் அசங்கத்துவமானதாயும் சித்திக்கிறது. எவ்வாறு மஹாமத்ஸ்யம் முதலிய திருஷ்ட்டாந்தங்கள் சுருதியில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாறாகும்
जागरितावस्थायामेव विश्वादीनां त्रयाणामनुभवप्रदर्शनार्थोऽयं श्लोकः
(ச.பா) (அ.கை) ஜாக்ரத அவஸ்தையில் விச்வன் முதலிய மூன்று அனுபவங்களைக் காட்டுவதற்காக இந்த ஸ்லோகம்-
दक्षिणाक्षिमुखे विश्वो मनस्यन्तस्तु तैजसः ।
आकाशे च हृदि प्राज्ञस्त्रिधा देहे व्यवस्थितः ॥ २ ॥
कारिका अन्वयः- विश्वः दक्षिणाक्षिमुखः मनस्यन्तस्तु तैजसः आकाशे ह्य्दि च प्राज्ञः(भवति) देहे त्रिधा व्यवस्थितः।
காரிகா அர்த்தம் - வலது கண்களின் உள்ளே விச்வன் வசிக்கிறான். தைஜசன் மனதினுள் இருக்கிறான் பிராக்ஞன் ஹ்ருதயாகாசத்தில் இருக்கிறான். இவ்வாறு இந்த சரீரத்தில் மூன்று பிரகாரமாய் வசிக்கிறான்.
(ச.பா) வலது கண்தான் அறியக்கூடிய ஸ்தானம். அதில் பிரதானமாய் ஸ்தூல பதார்த்தங்களின் சாக்ஷீயாகிய விச்வத்தின் அனுபவம் ஏற்படுகிறது. “इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन्पुरुषः” (இந்தோ ஹ வை நாமைஷ யோஅயம் தக்ஷிணேஅக்ஷன்புருஷः) = எந்த வலது கண்ணில் இருக்கும் புருஷன் “இந்த” (इन्ध) என்ற பெயரால் பிரசித்தம்) என்பது இந்த சுருதியினால் அறிகிறோம். “இந்த” (इन्ध) என்பது ஜொலிக்கும் குணமுடைய வைஸ்வானரன். ஆதித்தியனிடத்தில் அந்தர்கதமான வைராஜன் எனப்படும் ஆத்மா, மேலும் கண்களில் இருக்கும் ஸாக்ஷீ ஆகிய இரண்டும் ஒன்றே ஆகும்.
नन्वन्यो हिरण्यगर्भः क्षेत्रज्ञो दक्षिणेऽक्षिण्यक्ष्णोर्नियन्ता द्रष्टा चान्यो देहस्वामी ।
(ச.பா) சங்கை - ஹிரண்யகர்பன் வேறு. அவ்வாறே வலது கண்ணில் உள்ள நேத்திர இந்திரியத்தை இயக்கும் ஸாக்ஷீதேஹத்தின் ஸாக்ஷியாகிய க்ஷதே்திரக்ஞன் வேறாக இருக்கும்பொழுது இரண்டும் எவ்வாறு ஒன்றாகும்?
(ச.பா) சமாதானம் - அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு ஸ்வாபாவமாய் பேதம் இல்லை. ஏனெனில் “एकोदेवः सर्वभूतेषु गूढः” (ஏகோதேவः சர்வபூதேஷு கூட - ஒரே தேவன் எல்லா பிராணிகளிடத்தும் மறைந்து இருக்கிறார்) என்று சுருதியிலும், “क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत” (க்ஷதே்ரக்ஞம்சாபி மாம் வித்தி சர்வக்ஷதே்திரேஷு பாரத) = எல்லா க்ஷதே்ரங்களிலும் (சரீரங்களிலும்) என்னை க்ஷதே்ரக்ஞன் என்று அறி “अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्” (அவிபக்தம்ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் = பிரிவு அற்று இருந்தாலும்NO-CH பிரிவுற்றதுபோல் இருக்கிறது) என்று ஸ்மிருதியினாலும் அறியப்படுகிறது. எல்லா இந்திரியங்களிலும் சமமாய் இருந்தாலும் வலது கண்ணில் அதன் உபலப்தி (ஞானம்) ஸ்பஷ்ட்டமாய் தெரிவதால் அது விச்வத்தை விசேஷ ரூபமாய் நிர்தேசம் செய்கிறது.
दक्षिणाक्षिगतो रूपं दृष्ट्वा निमीलिताक्षस्तदेव स्मरन्मनस्यन्तः स्वप्न इव तदेव वासनारूपाभिव्यक्तं पश्यति । यथा तत्र तथा स्वप्ने ; अतः मनसि अन्तस्तु तैजसोऽपि विश्व एव ।
(ச.பா) வலது கண்ணில் உள்ள ஜீவாத்மா ரூபத்தைப்பார்த்து கண்ணை மூடியபின் மனதில் அந்த நினைவு வாசனாரூபமாய் வெளிப்பட்டு அந்த ரூபத்தை ஸ்வப்னத்தில் காண்கிறது. எவ்வாறு இந்த (ஜாக்ரத்) அவஸ்தையில் பார்க்கிறதோ அவ்வாறே ஸ்வப்ன அவஸ்தையிலும் உண்டாகிறது. இதுவே ஸ்வப்னா அவஸ்தையாகும். ஆகையால் மனதின் உள் இருக்கும் தைஜசனும் விச்வனே ஆகும்.
(ச.பா) அவ்வாறே ஸ்மரணரூப வியாபாரத்திலிருந்து நிவிர்த்தி ஆனவுடன் ஹிருதயாகாசத்தில் இருக்கும் பிராக்ஞன் மனதின் வியாபாரம் நீங்கியதால் பிராக்ஞன் ஏகமாய் பிரக்ஞானகனன் ஆகிறான். தர்சனமும் நினைக்கும் பொழுதும் (ஸ்மரணம் ஏற்பட்ட பொழுது) அல்லவா மனது சலிக்கிறது. அது இல்லாத பொழுது ஹிருதயத்தின் உள்ளே விசேஷமற்ற பிராணரூபமாய் இருக்கிறது. “प्राणो ह्येवैतान्सर्वान्सवृङ्क्ते”(ப்ராணோ ஹ்யேவைதான்சர்வான் சவ்ருங்க்த்தே = பிராணனே இந்த எல்லாவற்றையும் தன்னிடத்தில் லீனமடையச் செய்கிறது) என்ற சுருதி பிரமாணத்தால் அறியப்படுகிறது. மனம் இருப்பதால் தைஜசன் ஹிரண்யகர்ப்னே ஆவான். “लिङ्गं मनः” (லிங்கம் மனः = லிங்கரூபம் மனம்), “मनोमयोऽयं पुरुषः” (மனோமயோऽயம் புருஷ. அந்த புருஷன் மனோமயன்) என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
ननु व्याकृतः प्राणः सुषुप्ते । तदात्मकानि करणानि भवन्ति कथमव्याकृतता ?
(ச.பா) (சங்கை) - சுஷுப்தியிலும் பிராணன் (வியாகிருதம்) விசேஷ பாவத்தை அடைகிறான். அவ்வாறே இந்திரியங்களும் பிராணரூபமாக ஆகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது அது எவ்வாறு அவ்வியாக்ருதமாகும்?
नैष दोषः, अव्याकृतस्य देशकालविशेषाभावात् । यद्यपि प्राणाभिमाने सति व्याकृततैव प्राणस्य ; तथापि पिण्डपरिच्छिन्नविशेषाभिमाननिरोधः प्राणे भवतीत्यव्याकृत एव प्राणः सुषुप्ते परिच्छिन्नाभिमानवताम् ।
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. அவ்யாகிருதத்திற்கு தேசகால விசேஷம் கிடையாததால் என்பதாகும். ஆனாலும் பிராணனிடத்தில் அபிமானம் இருக்கும் பொழுது அதற்கு வ்யாக்ருததா இருப்பினும் சுஷுப்தி அவஸ்தையில் பிராணனிடத்தில் பிண்டபரிச்சின்ன விசேஷத்தின் அபிமானம் இல்லாததால் பரிச்சின்ன தேஹ அபிமானிகளுக்கும் அந்த சமயத்தில் அவ்யாக்ருதமேயாக இருக்கும்.
यथा प्राणलये परिच्छिन्नाभिमानिनां प्राणोऽव्याकृतः, तथा प्राणाभिमानिनोऽप्यविशेषापत्तावव्याकृतता समाना, प्रसवबीजात्मकत्वं च । तदध्यक्षश्चैकोऽव्याकृतावस्थः । परिच्छिन्नाभिमानिनामध्यक्षाणां च तेनैकत्वमिति पूर्वोक्तं विशेषणमेकीभूतः प्रज्ञानघन इत्याद्युपपन्नम् । तस्मिन्नेतस्मिन्नुक्तहेतुसत्त्वाच्च ।
(ச.பா) எவ்வாறு பிராணன் லயம் ஆனவுடன் பரிச்சின்ன தேஹ அபிமானிகளின் பிராணன் அவ்யாகிருத ரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே பிராண அபிமானிகளுக்கும் பிராணனின் அவிசேஷத்தை அடைந்து அதற்கு அவ்யாக்ருததாவாயும் அவ்வாறே பிரசவ பீஜரூபமாயும் ஆகிறது. ஆகையால் இந்த இரு அவஸ்தைகளின் சாக்ஷியும் அவ்யாகிருத அவஸ்தையில் இருப்பது ஒன்றேயாகும். பரிச்சின்ன தேஹத்தின் அபிமானியும் அதன் சாக்ஷியும் ஒன்றேயாகும். ஆகையால் முன்பு கூறப்பட்ட एकीभूतः (ஏகீபூத) प्रज्ञानघनः (பிரக்ஞானகன) விசேஷணங்கள் பொருத்தமானதேயாகும். அதில் முன்பு கூறப்பட்ட காரணம் இருப்பதாலும் ஆகும்.
कथं प्राणशब्दत्वमव्याकृतस्य ।
(ச.பா) (சங்கை) - ஆனால் அவ்யாக்ருதத்திற்கு பிராண சப்தவாச்சியம் எவ்வாறு உண்டாயிற்று?
(ச.பா) (சமாதானம்) - ஹே சௌம்ய! “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சௌம்ய மன) மனமானது பிராணனின் அதீனமாய் இருக்கிறது என்ற சுருதி வாக்கியத்தின்படி.
(ச.பா) (சங்கை) - ஆனால் இங்கு “सदेव सोम्य” (சதேவசௌம்ய) = ஹே சௌம்ய சத்தே என்ற சுருதியை அனுசரித்து இந்த சமயத்தில் (இடத்தில்) சத்பிரஹ்மம் பிராண சப்த வாச்சியம்.
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏனெனில் சத்பிரஹ்மத்தின் பீஜாத்மகம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு “प्राण” (பிராண) சப்தவாச்சியம் சத்பிரஹ்மமாகும். இவ்வாறு இருந்தாலும் ஜீவர்களின் உத்பத்திக்கு பீஜாத்மகத்துவத்தை தியாகம் செய்யாமலேயே அந்த சத்பிரஹ்மத்தில் பிராண சப்தத்துவமும், சத்சப்தத்தின் வாச்சியமும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சத்சப்தத்தால் நிர்பீஜ ஆத்மாவை சொல்லும் பொழுது “नेति नेति” (நேதி, நேதி- இது இல்லை, இது இல்லை) “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “अन्यदेव तद्विदितादथो अविदितात्” (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாத்) = அது அறிந்ததைக்காட்டிலும் வேறு அறியாததைக்காட்டிலும் வேறு என்று சுருதிகளாலும், “न सत्तन्नासदुच्यते” (ந சத்தந்நாசதுச்யதே) = அது சத் என்றும் சொல்ல முடியாது, அசத் என்று சொல்ல முடியாது என்ற ஸ்மிருதியினாலும் அறிகிறோம்.
निर्बीजतयैव चेत्सति प्रलीनानां सम्पन्नानां सुषुप्तिप्रलययोः पुनरुत्थानानुपपत्तिः स्यात् ; मुक्तानां च पुनरुत्पत्तिप्रसङ्गः, बीजाभावाविशेषात् , ज्ञानदाह्यबीजाभावे च ज्ञानानर्थक्यप्रसङ्गः ; तस्मात्सबीजत्वाभ्युपगमेनैव सतः प्राणत्वव्यपदेशः, सर्वश्रुतिषु च कारणत्वव्यपदेशः ।
(ச.பா) இங்கு சத் அதாவது பிரஹ்மத்தை நிர்பீஜரூபமாய் காண்பிப்பதற்கு இஷ்டமாய் இருந்தாலும் சுஷுப்தி, பிரளய (மரண) அவஸ்தைகளில் பிரஹ்மத்தில் (சத்தில்) லயமான புருஷர்கள் திரும்பவும் உத்பன்னமாவது சம்பவிக்காது. அவ்வாறே முக்தபுருஷர்களும் மறுபடியும் உத்பத்தி உடையவர்களாவார்கள் என்று ஏற்பட்டுவிடும். ஏனெனில் பீஜத்தின் அபாவம் இரண்டிற்கும் சமானமாவதால், ஞானத்தினால் தஹிக்கப்பட்ட பீஜம் அபாவமாவதால் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் சத்பிரஹ்மத்திற்கு பீஜம் உடையதாக எடுத்தக்கொண்டு அதன் பிராண ரூபமாய் எல்லா சுருதிகளிலும் காரணரூமாய் காட்டப்பட்டுள்ளது.
(ச.பா) ஆகையால் “अक्षरात्परतः परः” (அக்ஷராத்பரத பர = அது பர அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்),“सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யன்தரோ ஹ்யஜ = அது பாஹ்யம் (காரியம்) அப்யந்தரம் (காரண)மாய் (அவற்றிற்கு சாக்ஷியாய்) இருந்தும் ஜன்மம் அற்றது, “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “नेति नेति” (நேதி நேதி = இது அல்ல, இது அல்ல) என்பது முதலிய சுருதிகளால் சுத்த பிரஹ்மத்தின் நிர்தேசம், பீஜத்துவத்தை நிராகரணம் செய்வதின் வாயிலாய் செய்யப்பட்டது. அந்த பிராக்ஞ சப்தவாச்சியம், ஜீவனுடைய தேஹ முதலிய சம்பந்தம் அவ்வாறே ஜாக்ரத் முதலிய அவஸ்தைகள் அற்ற வாச்சியத்தின் அந்த பரமார்த்த பீஜ மற்ற அவஸ்தையை துரீய ரூபமாய் தனியாக வர்ணனை செய்யப்போகிறார். பீஜா அவஸ்தை ஜாக்ரத் ஆகும் பொழுது “நான் ஒன்றும் அறியவில்லை” என்ற பிரதீதியும் (ஞானமும்) சரீரத்தில் அனுபவிக்கப்படுகிறது. ஆகையால் அது தேஹத்தில் மூன்று விதமாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.
विश्वो हि स्थूलभुङ् नित्यं तैजसः प्रविविक्तभुक् ।
आनन्दभुक्तथा प्राज्ञस्त्रिधा भोगं निबोधत ॥ ३ ॥
कारिका अन्वयः - विश्वो हि नित्यं स्थूलभुक् तैजसः नित्यं प्रविविक्तभुक् तथा प्राज्ञः आनन्दभुक् भोगं त्रिधा निबोधत ।
காரிகா அர்த்தம் - விச்வன் எப்பொழுதும் ஸ்தூல பதார்த்தங்களை புஜிப்பவன். தைஜசன் சூக்ஷ்ம பதார்த்தங்களின் போக்தா. அவ்வாறே பிராக்ஞன் ஆனந்தத்தை புஜிப்பவன். இவ்வாறு மூன்று விதமாக போகம் அறியப்படுகிறது.
स्थूलं तर्पयते विश्वं प्रविविक्तं तु तैजसम् ।
आनन्दश्च तथा प्राज्ञं त्रिधा तृप्तिं निबोधत ॥ ४ ॥
कारिका अन्वयः - स्थूलं विश्वं तर्पयते प्रविविक्तं तु तैजसं तथा आनन्दश्च प्राज्ञं त्रिधा तृप्तिं निबोधत ।
காரிகா அர்த்தம் - ஸ்தூல பதார்த்தங்கள் விச்வனைத் திருப்தி செய்கிறது. சூக்ஷ்மம் தைஜசனை திருப்தி செய்கிறது. அவ்வாறே ஆனந்தம் பிராக்ஞனை திருப்தி செய்கிறது இவ்வாறு திருப்தி மூன்று விதமாகும்.
उक्तार्थौ श्लोकौ ॥ ३ ॥ ॥ ४ ॥
இவ்விரண்டு சுலோகங்களின் அர்த்தம் சொல்லப்பட்டுவிட்டது.
त्रिषु धामसु यद्भोज्यं भोक्ता यश्च प्रकीर्तितः ।
वेदैतदुभयं यस्तु स भुञ्जानो न लिप्यते ॥ ५ ॥
कारिका अन्वयः - त्रिषु धामसु यत् भोज्यं भोक्ता यः च प्रकीर्तितः यस्तु एतत् उभयं वेद भुञ्जानः सः न लिप्यते ।
காரிகா அர்த்தம் - இந்த மூன்று ஸ்தானங்களில் (ஜாக்ரத், ஸ்வப்ன, சுஷுப்தி இவைகளில்) எந்த போஜ்ய போக்தா என்று இவ்இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போகங்களை புஜித்தாலும் அவனை அது ஒட்டாது.
त्रिषु धामसु जाग्रदादिषु स्थूलप्रविविक्तानन्दाख्यं यद्भोज्यमेकं त्रिधाभूतम् ; यश्च विश्वतैजसप्राज्ञाख्यो भोक्तैकः ‘सोऽहम्’ इत्येकत्वेन प्रतिसन्धानात् द्रष्टृत्वाविशेषाच्च प्रकीर्तितः ; यो वेद एतदुभयं भोज्यभोक्तृतया अनेकधा भिन्नम् , सः भुञ्जानः न लिप्यते, भोज्यस्य सर्वस्यैकभोक्तृभोज्यत्वात् । न हि यस्य यो विषयः, स तेन हीयते वर्धते वा । न ह्यग्निः स्वविषयं दग्ध्वा काष्ठादि तद्वत् ॥ ५ ॥
(ச.பா) ஜாக்ரத் முதலிய மூன்று அவஸ்தைகளில் எந்த ஸ்தூல, சூக்ஷ்ம, ஆனந்தம் எனப்படும் மூன்று பேதங்களையும் அனுபவிப்பவன் (போஜ்யம்) ஒருவனே, “அவன்நான்” என்று இவ்வாறு ஒரே ரூபமாய் அனுசந்தானம் செய்பவனிடம் திருஷ்டாத்தன்மையில் ஒருவிசேஷமும் இல்லாததால் விச்வன், தைஜசன், பிராக்ஞன் எனப்படுவது எதுவோ அது ஒரே போக்தா எனப்படுகிறான். இவ்வாறு போஜ்ய, போக்தா ரூபமாய் அநேக விதபின்னமான இரண்டையும் எவன் அறிகிறானோ அவன் போக்தாவாய் இருந்தாலும் அவனை ஒட்டாது. ஏனெனில் எல்லா போஜ்யங்களும் ஒரே போக்தாவின் போகமாகும். எவ்வாறு அக்னி தன்னுடைய விஷயமான கட்டைகளை எரிப்பதால் நஷ்டமாவதோ, வளர்வதோ இல்லை. அவ்வாறு எதற்கு விஷயமாகிறதோ அந்த விஷயத்தின் காரணமாய் குறைவதோ வளர்வதோ இல்லை.
प्रभवः सर्वभावानां सतामिति विनिश्चयः ।
सर्वं जनयति प्राणश्चेतोंशून्पुरुषः पृथक् ॥ ६ ॥
कारिका अन्वयः - सतां सर्वभावानां प्रभवः विनिश्चयः प्राणः पुरुषः चेतोंशून् सर्वं पृथक् जनयति ।
காரிகா அர்த்தம் - நிச்சயமான விஷயம் என்னவெனில் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அவை எல்லாம் உத்பத்தியானதே. பீஜாத்மகமான பிராணனே எல்லாவற்றையும் உத்பத்தி செய்கிறான். மேலும் சேதனாத்மகமான புருஷன் சேதனத்தின் ஆபாச பூதமான ஜீவர்களை தனித்தனியாக உண்டாக்குகிறான்.
(ச.பா) சத் அதாவது தன்னுடைய அவித்யையினால் உண்டான நாம ரூப ஆத்மகமான மாயையின் ஸ்வரூபத்தால் உண்டான விச்வன், தைஜசன், பிராக்ஞன் ஆகிய பேதங்களால் எல்லா பதார்த்தங்களும் உத்பத்தியாகிறது. இனி கூறப்போகிறார் - “वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वाऽपि जायते” इति (வந்தியா புத்ரோ ந தத்வேன மாயயா வாऽபிஜாயதே = வந்தியா புத்திரன் உன்மையாகவே, மாயையாலோ உண்டாவது இல்லை. அசத் பதார்த்தங்களுக்கு உத்பத்தி இருந்தால் வியவஹாரமற்ற பிரஹ்மத்தை கிரஹிப்பதற்கு (அறிவதற்கு) ஒரு வழியும் இல்லாததால் அசத் என்று ஆகிவிடும். அவித்தையினால் உண்டான மாயாமயமான பீஜத்திலிருந்து உத்பன்னமான ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளும், ரஜ்ஜு முதலிய ரூபத்தால் சத்தாகத் தோன்றுகிறது. ஒரு புருஷனும் நிராஸ்ரயமான ரஜ்ஜு சர்ப்பத்தையோ மிருக திருஷ்ணா முதலியவைகளை ஒருபொழுதும் பார்க்க முடியாது. எவ்வாறு சர்ப்பத்தின் உற்பத்திக்கு முன் அது ரஜ்ஜுவில் ரஜ்ஜு ரூபமாய் சத்தாகவே இருந்தது. அவ்வாறே எல்லா பதார்த்தங்களும் தன்னுடைய உற்பத்திக்கு முன் பிராணாத்மகமான பீஜரூப சத்தாகவே இருந்தது. ஆகையால் சுருதி கூறுகிறது. “ब्रह्मैवेदम्” (பிரஹ்மைவஇதம் - இது பிரஹ்மமே) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவஇதமக்ர ஆசீத் = முன் இது ஆத்மாவாகவே இருந்தது என்று.
सर्वं जनयति प्राणः चेतोंशून् अंशव इव रवेश्चिदात्मकस्य पुरुषस्य चेतोरूपा जलार्कसमाः प्राज्ञतैजसविश्वभेदेन देवमनुष्यतिर्यगादिदेहभेदेषु विभाव्यमानाश्चेतोंशवो ये, तान् पुरुषः पृथक् सृजति विषयभावविलक्षणानग्निविस्फुलिङ्गवत्सलक्षणान् जलार्कवच्च जीवलक्षणांस्त्वितरान्सर्वभावान् प्राणो बीजात्मा जनयति,
‘यथोर्णनाभिः. . . यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गाः’ (बृ. उ. २ । १ । २०) इत्यादिश्रुतेः ॥ ६ ॥
(ச.பா) எல்லா பதார்த்தங்களையும் பீஜரூபமான பிராணன் உற்பத்தியாகச் செய்கிறது. அவ்வாறேஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியனைப்போல் மனுஷ்ய, திரியக் முதலிய விதவிதமான சரீரங்களில் பிராக்ஞன். தைஜசன், விச்வன் ஆகிய ரூபங்களாய் விளங்குகின்ற சிதாத்மக புருஷனின் கிரணரூப சிதாபாசம் ஆகும். அந்த விஷய பாவத்தால் விலக்ஷணமாயும் அவ்வாறு அக்னி பொறிபோலும், ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன்போலும் சஜாதீய ஜீவர்களை புருஷன் தனியாகவே உற்பத்தி செய்கிறார். இதைத்தவிர மற்ற எல்லா பதார்த்தங்களையும் பீஜாத்மகமான பிராணன் உத்பத்தி செய்கிறது. “यथोर्णनाभिः” (யதோர்ணனாபிः எவ்வாறு சிலந்தி) “यथाग्नेःक्षुद्राविस्फुलिङ्गाः” (யதாக்நே: க்ஷுத்ரவிஸ்புலிங்கா = எவ்வாறு அக்னியிலிருந்து பொறிகள் வெளிக்கிளம்புகிறதோ) முதலிய சுருதிகளால் அறியப்படுகிறது.
विभूतिं प्रसवं त्वन्ये मन्यन्ते सृष्टिचिन्तकाः ।
स्वप्नमायासरूपेति सृष्टिरन्यैर्विकल्पिता ॥ ७ ॥
कारिका अन्वयः - अन्ये सृष्टिचिन्तकाः तु विभूतिं प्रसवं मन्यन्ते अन्यै सृष्टिः स्वप्नमायासरूपा इति विकल्पिता ॥
காரிகா அர்த்தம் - சிருஷ்டி விஷயத்தில் விசாரம்செய்யும் மற்றவர்கள் பகவானுடைய விபூதியே ஜகத்தின் சிருஷ்ட்டி என்று எண்ணுகிறார்கள். அவ்வாறே மற்றவர்கள் இந்த சிருஷ்டியை ஸ்வப்னம் மற்றும் மாயையையினால் கல்பிக்கப்பட்டது என்று நினைக்கிறார்கள்
विभूतिर्विस्तार ईश्वरस्य सृष्टिरिति सृष्टिचिन्तका मन्यन्ते ; न तु परमार्थचिन्तकानां सृष्टावादर इत्यर्थः,
‘इन्द्रो मायाभिः पुरुरूप ईयते’ (बृ. उ. २ । ५ । १९) इति श्रुतेः । न हि मायाविनं सूत्रमाकाशे निःक्षिप्य तेन सायुधमारुह्य चक्षुर्गोचरतामतीत्य युद्धेन खण्डशश्छिन्नं पतितं पुनरुत्थितं च पश्यतां तत्कृतमायादिसतत्त्वचिन्तायामादरो भवति । तथैवायं मायाविनः सूत्रप्रसारणसमः सुषुप्तस्वप्नादिविकासः ; तदारूढमायाविसमश्च तत्स्थप्राज्ञतैजसादिः ; सूत्रतदारूढाभ्यामन्यः परमार्थमायावी । स एव भूमिष्ठो मायाच्छन्नः अदृश्यमान एव स्थितो यथा, तथा तुरीयाख्यं परमार्थतत्त्वम् । अतस्तच्चिन्तायामेवादरो मुमुक्षूणामार्याणाम् , न निष्प्रयोजनायां सृष्टावादर इत्यतः सृष्टिचिन्तकानामेवैते विकल्पा इत्याह — स्वप्नमायासरूपेति । स्वप्नसरूपा मायासरूपा चेति ॥ ७ ॥
(ச.பா) சிருஷ்டி ஈஸ்வரனின் விபூதி என்று சிருஷ்டியைக்குறித்து விசாரம் செய்பவர்கள் கருதுகிறார்கள், பரமார்த்த சிந்தனை உடையவர்கள் சிருஷ்ட்டி விஷயத்தில் ஆதரிப்பதில்லை. “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்தரோமாயாபி புரு ரூப ஈ.யதே = இந்திர (பரமாத்மா) மாயையினால் அநேக ரூபமாகிறது) என்று சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு மாயாவியானவன் ஆகாயத்தில் கயிற்றை எறிந்து அதில் ஆயுதங்களுடன் ஏறி கண்ணுக்கு எட்டாத வரையில் சென்று யுத்தத்தின் மூலமாய் கண்டதுண்டமாய் வெட்டி விழுந்து மறுபடியும் எழுந்துள்ளதைப் பார்க்கும் புருஷர்கள் அவனால் உண்டாக்கிய மாயை முதலிய ஸ்வரூபத்தின் சிந்தனையை ஆதரிப்பது இல்லை. அந்த மாயாவியின் கயிற்றை வீசுதல் சமானமே சுஷுப்தி ஸ்வப்னம் முதலியவைகளின் விகாசமாகும். அவ்வாறே அந்த கயிற்றில் செல்லும் மாயாவிக்கு சமானமாய் அந்த சுஷப்தி முதலிய அவஸ்தைகளில் இருக்கும் பிராக்ஞன். அவ்வாறே தைஜசன் முதலியவைகளும் ஆகும். ஆனால் உண்மையான மாயாவி கயிறு அதன்மேல் இருக்கும் மாயாவியைக் காட்டிலும் வேறு. மேலும் அது எவ்வாறு மாயையால் மறைக்கப்பட்டதால் காணப்படாவிட்டாலும் பூமியில் இருக்கிறான். அவ்வாறே துரீயம் எனப்படும் பரமார்த்த தத்துவமும் ஆகும், ஆகையால மோக்ஷத்தில் இச்சையுள்ள ஆரிய புருஷர்களுக்கு அதனை சிந்திப்பதில் ஆதரவு உடையவர்களாய் இருக்கின்றனர். பிரயோஜனமற்ற சிருஷ்டியில் அவர்களுக்கு ஆதரவு உண்டாகாது. ஆகையால் எல்லா விகல்பமான சிருஷ்டியும் சிந்திப்பவர்களுக்கே ஆகும். ஆகையால் கூறப்படுகிறது - “स्वप्नमायासरूपा इति” (ஸ்வப்னம் மாயா சொரூபம் என்று) அதாவது ஸ்வப்னரூபம். மாயாரூபம் என்றும்.
इच्छामात्रं प्रभोः सृष्टिरिति सृष्टौ विनिश्चिताः ।
कालात्प्रसूतिं भूतानां मन्यन्ते कालचिन्तकाः ॥ ८ ॥
कारिका अन्वयः - सृष्टौ प्रभोः इच्छामात्रं सृष्टिः विनिश्चिताः कालचिन्तकाः कालात् भूतानां प्रसूतिं मन्यन्ते ॥
காரிகா அர்த்தம் - சிலர் பிரபுவின் இச்சையே சிருஷ்ட்டி என்று நிச்சயம் செய்கிறார்கள். அவ்வாறே காலத்தைக் குறித்து விசாரம் செய்பவர்கள் காலத்தினாலேயே ஜீவர்களின் உத்பத்தி என்று கருதுகிறார்கள்.
इच्छामात्रं प्रभोः सत्यसङ्कल्पत्वात् सृष्टिः घटादीनां सङ्कल्पनामात्रम् , न सङ्कल्पनातिरिक्तम् । कालादेव सृष्टिरिति केचित् ॥ ८ ॥
(ச.பா) - பகவான் சத்திய சங்கல்பன், ஆகையால் கடம் முதலியவைகளின் சிருஷ்டி பிரபுவின் சங்கல்ப மாத்திரமேயாகும். சங்கல்பத்தைக் காட்டிலும் வேறானது அல்ல, அவ்வாறே சிலர் சிருஷ்டி காலத்தினால் உண்டாகிறது என்று கூறுகிறார்கள்.
भोगार्थं सृष्टिरित्यन्ये क्रीडार्थमिति चापरे ।
देवस्यैष स्वभावोऽयमाप्तकामस्य का स्पृहा ॥ ९ ॥
कारिका अन्वयः - अन्ये भोगार्थं सृष्टिरिति अपरे क्रीडार्थ-मिति च देवस्य एषः स्वभावः अयं आप्तकामस्य का स्पृहा ॥
காரிகா அர்த்தம் - சிலர் போகத்தின் பொருட்டு சிருஷ்டி என்கிறார்கள். சிலர் விளையாட்டிற்காக என்கிறார்கள். பகவான் ஸ்வபாவமாகவே பூர்ண ஆப்தகாமராய் இருப்பவருக்கு இச்சை எவ்வாறு உண்டாகும்.
भोगार्थम् क्रीडार्थमिति च अन्ये सृष्टिं मन्यन्ते । अनयोः पक्षयोर्दूषणं देवस्यैष स्वभावोऽयमिति देवस्य स्वभावपक्षमाश्रित्य, सर्वेषां वा पक्षाणाम् — आप्तकामस्य का स्पृहेति । न हि रज्ज्वादीनामविद्यास्वभावव्यतिरेकेण सर्पाद्याभासत्वे कारणं शक्यं वक्तुम् ॥ ९ ॥
(ச.பா) சிலர் போகார்த்தம் என்றும், சிலர் விளையாட்டிற்காக என்று சிருஷ்டியை கருதுகிறார்கள். “देवस्यैष स्वभावोऽयम्” (தேவஸ்யைஷ ஸ்வபாவோऽயம் = தேவனுடைய ஸ்வபாவமே இது) இந்த வாக்கியத்தால் தேவனின் ஸ்வபாவபக்ஷத்தை ஆஸ்ரயித்து இந்த இரண்டு பக்ஷங்களும் தோஷம் உடையது என்றாகிறது. அல்லது “आप्तकामस्य का स्पृहा” (ஆப்தகாமஸ்ய கா ஸ்புருஹா = ஆப்தகாமனுக்கு எவ்வாறு இச்சையுண்டாகும்). இந்த நான்காவது பாதம் எல்லா பக்ஷங்களையும் தோஷம் உடையதாகச் செய்கிறது. ஏனெனில் அவித்யா ரூபம் தன்னுடைய ஸ்வபாவமில்லாமல் ரஜ்ஜு முதலியவைகளை சர்ப்பம் முதலியவைகளின் அபிவியக்திக்கு காரணத்துவத்தை கூறமுடியாது.
चतुर्थः पादः क्रमप्राप्तो वक्तव्य इत्याह — नान्तःप्रज्ञमित्यादिना । सर्वशब्दप्रवृत्तिनिमित्तशून्यत्वात्तस्य शब्दानभिधेयत्वमिति विशेषप्रतिषेधेनैव तुरीयं निर्दिदिक्षति ।
(ச.பா) (அ.கை) இப்பொழுது கிரமமாய் அடைந்த நான்காவது பாதத்தைக் கூறவேண்டும். ஆகையால் “नान्तःप्रज्ञम्” முதலிய மந்திரங்களால் கூறப்படுகிறது. இந்த நான்காவது பாதம் எல்லா சப்த பிரவிர்த்திக்கும் நிமித்தமற்றது. ஆகையால் அதை சப்தங்களால் வர்ணிக்க முடியாது. ஆகையால் சுருதியானது விசேஷ பாவத்தை (அதாவது “अन्तःप्रज्ञम्” முதலிய விசேஷ பாவத்தை நிஷேதம் செய்து அந்த துரீயபாவத்தை நிர்தேசம் செய்வதற்குப் பிரவிர்த்திக்கிறது.
शून्यमेव तर्हि तत् ।
(ச.பா) (சங்கை) - ஆகையால் அது சூன்யம் அல்லவா?
न, मिथ्याविकल्पस्य निर्निमित्तत्वानुपपत्तेः ; न हि रजतसर्पपुरुषमृगतृष्णिकादिविकल्पाः शुक्तिकारज्जुस्थाणूषरादिव्यतिरेकेण अवस्त्वास्पदाः शक्याः कल्पयितुम् ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. மித்யா விகல்பத்தைத் தவிர வேறு நிமித்தத்தால் சம்பவிக்காது. வெள்ளி, சர்ப்பம், புருஷன், கானல்நீர் முதலிய விகல்பங்கள் சிப்பி, கயிறு, ஸ்தாணு, ஊஷரபூமி முதலியவைகளின் ஆஸ்ரயம் இல்லாமல் வெள்ளி முதலியவற்றை கல்பிக்க முடியாது.
एवं तर्हि प्राणादिसर्वविकल्पास्पदत्वात्तुरीयस्य शब्दवाच्यत्वमिति न प्रतिषेधैः प्रत्याय्यत्वमुदकाधारादेरिव घटादेः ।
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இருக்கும் பொழுது பிராணன் முதலிய எல்லா விகல்பங்களுக்கும் ஆஸ்ரியமாய் இருப்பதால் துரீய சப்தத்தின் வாச்சியம் சித்திக்கிறது. ஜலத்திற்கு ஆதாரமான கடம் முதலியவைகளைப் போல் (அந்த ப்ரக்ஞாதிகளை) நீக்கி அதன் ப்ரதீதி (தோற்றம் உண்டாவதில்லை.)
न, प्राणादिविकल्पस्यावस्तुत्वाच्छुक्तिकादिष्विव रजतादेः ; न हि सदसतोः सम्बन्धः शब्दप्रवृत्तिनिमित्तभाक् , अवस्तुत्वात् ; नापि प्रमाणान्तरविषयत्वं स्वरूपेण गवादिवत् , आत्मनो निरुपाधिकत्वात् ; गवादिवन्नापि जातिमत्त्वम् , अद्वितीयत्वेन सामान्यविशेषाभावात् ; नापि क्रियावत्त्वं पाचकादिवत् , अविक्रियत्वात् ; नापि गुणवत्त्वं नीलादिवत् , निर्गुणत्वात् ; अतो नाभिधानेन निर्देशमर्हति ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல ஏனெனில் சுக்தி முதலியவைகளில் தோன்றும் வெள்ளி முதலியவைகளைப் போல் பிராணன் முதலிய விகல்பங்கள் அசத் ரூபமாகும். அவ்வாறு சத், அசத்தின் சம்பந்தம் அசத்ரூபமாய் ஆவதால் சப்தத்தின் பிரவிர்த்திக்கு ஹேது ஆகமுடியாது. மேலும் பசு முதலியவைகளைப் போல் அந்த ஸ்வஸ்வரூபத்துடன் வேறு ஒரு அன்ய பிரமாணத்திற்கு விஷயமாகாது. ஏனெனில் ஆத்மா உபாதி அற்றது. இவ்வாறு அத்விதீய ரூபமாய் இருப்பதால் சாமான்ய அல்லது விசேஷபாவம் ஆகாததால் அதில் பசு முதலியவைகளைப் போல் அதற்கு ஜாதித்தன்மை இல்லை. மேலும் சமையல் செய்வது முதலியவை போல் கிரியாவத்துவம் கிடையாது. அவ்வாறே நீலம் முதலிய குணத்துவம் போல் குணத்துவமும் கிடையாது ஆகையால் ஒரு நாமத்தாலும் குறிப்பிட முடியாது.
शशविषाणादिसमत्वान्निरर्थकत्वं तर्हि ।
(ச.பா) (பூர்வ) அவ்வாறானால் முயல்கொம்பு போல் அது அர்த்தமற்றதாகிவிடுமே.
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் சுத்தி ஞானம் ஏற்பட்டவுடன் எவ்வாறு (அந்த ஆரோபித) வெள்ளியில் உள்ள ஆசை நீங்குகிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அநாத்மாவைக் குறித்த ஆசை நீங்குவதற்குக் காரணமாகிறது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறிவதால் அவித்தியா அவ்வாறே திருஷ்ணை (ஆசை) முதலிய தோஷங்கள் சம்பவிக்காது. துரீயத்தை தன் ஆத்மா என்று அறியாததற்கு காரணம் ஒன்றும் இல்லை ஏனெனில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அது நீயாய் இருக்கிறாய்), “अयमात्मा ब्रह्म” (அயமாத்மா பிரஹ்ம = இந்த ஆத்மா பிரஹ்ம), “तत्सत्यं स आत्मा” (தத்சத்தியம் ச ஆத்மா = அது சத்தியம் அது ஆத்மா), “यत्साक्षादपरोक्षाद्ब्रह्म” (யத்சாக்ஷாத்அபரோக்ஷாத் பிரஹ்ம = எது சாக்ஷாத் அபரோக்ஷ பிரஹ்மம்) “स बाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யப்யந்தரோஹ்யஜः = அது வெளியிலும், உள்ளும் இருப்பது பிறப்பற்றது, “आत्मैवेदं ँँ्सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம்) = ஆத்மாவே இவை எல்லாம்).
सोऽयमात्मा परमार्थापरमार्थरूपश्चतुष्पादित्युक्तः । तस्यापरमार्थरूपमविद्याकृतं रज्जुसर्पादिसममुक्तं पादत्रयलक्षणं बीजाङ्कुरस्थानीयम् । अथेदानीमबीजात्मकं परमार्थस्वरूपं रज्जुस्थानीयं सर्पादिस्थानीयोक्तस्थानत्रयनिराकरणेनाह — नान्तःप्रज्ञमित्यादि ।
(ச.பா) அந்த இந்த ஆத்மா பரமார்த்த ரூபமாயும் அபரமார்த்த ரூபமாயும் நான்கு பாதம் உடையது ஆகும். பீஜாங்குரம் போன்று மூன்று பாத ரூபமான அபரமார்த்த ரூப ரஜ்ஜு சர்ப்பம் போன்ற அவித்தையினால் உண்டானது. சர்ப்பம் முதலியவைப் போன்று கூறப்பட்ட மூன்று பாதங்களை நிராகரணம் செய்து “नान्तःप्रज्ञम्” முதலிய ரூபத்தால் அதன் ரஜ்ஜுவைப் போன்ற பீஜமற்ற பரமார்த்த ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது.
इति ।
नान्तःप्रज्ञं नबहिःप्रज्ञं नोभयतःप्रज्ञं नप्रज्ञानघनं नप्रज्ञं नाप्रज्ञम् । अदृश्यमव्यवहार्यमग्राह्यमलक्षणमचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥ ७ ॥
(मन्त्र अन्वयः) - अन्तः प्रज्ञं न बहिः प्रज्ञं न उभयतःप्रज्ञं न प्रज्ञान घनं न प्रज्ञं न अप्रज्ञं न अदृष्टं अव्यवहार्यं अग्राह्यं अलक्षणं अचिन्त्यं अव्यपदेश्यं एकात्मप्रत्ययसारं प्रपञ्चोपशमं शान्तं शिवं अद्वैतं सः चतुर्थं मन्यन्ते सःआत्मा विज्ञेयः।
(மந்திர அர்த்தம்) - (விவேக ஜனங்கள்) துரீயத்தை இவ்வாறு கருதுகிறார்கள். எவ்வாறு எனில் அந்தப்பிரக்ஞனல்ல, பஹிர்பிரக்ஞன் அல்ல, அந்த இரண்டு பிரக்ஞனுமல்ல. பிரக்ஞானகனன் இல்லை. பிரக்ஞன் இல்லை, அப்ரக்ஞன் அல்ல, ஆனால் அதிருஷ்ட்டமாயும். வியவஹாரியம் அற்றதாயும், அக்கிராஹ்யமாயும், லக்ஷணமற்றதாயும் அசிந்தயமாயும், இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாததாயும், ஏகாத்ம பிரத்தியசாரமாயும், பிரபஞ்சம் அற்றதாயும், சாந்தமாயும், சிவமாயும் அத்வைத ரூபமாயும் நான்காவது (பாதத்தைப்போல்) கருதப்படுகிறது. அது ஆத்மா. அது சாக்ஷாத் அறிவதற்கு யோக்கியமானது.
नन्वात्मनश्चतुष्पात्त्वं प्रतिज्ञाय पादत्रयकथनेनैव चतुर्थस्यान्तःप्रज्ञादिभ्योऽन्यत्वे सिद्धे ‘नान्तःप्रज्ञम्’ इत्यादिप्रतिषेधोऽनर्थकः ।
(ச.பா) ஆத்மா நான்கு பாதங்கள் உடையது என்று கூறி அதில் மூன்று பாதங்களை கூறியதாலேயே நான்காவது பாதத்தின் அந்தப் பிரக்ஞம் முதலிய விசேஷணங்களைக் காட்டிலும் வேறானது என்று சித்திக்கிறது. ஆகையால் “नान्तःप्रज्ञं” என்பது முதலியவை கூறுவது வியர்த்தமாகுமே எனில்-
न, सर्पादिविकल्पप्रतिषेधेनैव रज्जुस्वरूपप्रतिपत्तिवत्त्र्यवस्थस्यैवात्मनस्तुरीयत्वेन प्रतिपिपादयिषितत्वात् , ‘तत्त्वमसि’ इतिवत् । यदि हि त्र्यवस्थात्मविलक्षणं तुरीयमन्यत् , तत्प्रतिपत्तिद्वाराभावात् शास्त्रोपदेशानर्थक्यं शून्यतापत्तिर्वा । रज्जुरिव सर्पादिभिर्विकल्प्यमाना स्थानत्रयेऽप्यात्मैक एव अन्तःप्रज्ञादित्वेन विकल्प्यते यदा, तदा अन्तःप्रज्ञादित्वप्रतिषेधविज्ञानप्रमाणसमकालमेव आत्मन्यनर्थप्रपञ्चनिवृत्तिलक्षणं फलं परिसमाप्तमिति तुरीयाधिगमे प्रमाणान्तरं साधनान्तरं वा न मृग्यम् ; रज्जुसर्पविवेकसमकाल इव रज्ज्वां सर्पनिवृत्तिफले सति रज्ज्वधिगमस्य ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் எவ்வாறு சர்ப்பம் முதலிய விகல்பங்களை நீக்கியதால் ரஜ்ஜுவின் ஞானம் ஏற்படுகிறது. அது போல் மூன்று அவஸ்தைகளைக் காட்டிலும் வேறாக துரீயா அவஸ்தையை “तत्त्वमसि” (தத்துவமஸி) முதலிய வாக்கியங்கள் எடுத்துக்காட்டுகிறது. துரீய ஆத்மா மூன்று அவஸ்தைகளுடன் சம்பந்தப்பட்ட ஆத்மாவைக்காட்டிலும் எல்லாவகையிலும் பின்னமாய் (வேறாய்) இருந்தால் அதை அடைவதற்கான ஒரு உபாயமும் இல்லாததால் சாஸ்த்திர உபதேசம் வீணாகிவிடும், அவ்வாறே சூன்யவாதமாகிவிடும். சர்ப்பம், மாலை, ஜலதாரை முதலிய ரூபமாய் விகல்பமடைந்த ரஜ்ஜுவைப் போல் மூன்று ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) ஒரே ஆத்மாவே அந்த:பிரக்ஞம் முதலிய ரூபமாய் விகல்பமடைந்திருக்கிறது. அப்பொழுது அந்த:பிரக்ஞம் முதலியவைகளை நீக்கும் விக்ஞான ரூப பிரமாணத்தின் உத்பத்தி காலத்திலேயே ஆத்மாவிடத்தில் அநர்த்த பிரபஞ்சத்தின் நிவிர்த்தி ரூப பலன் அடையப்படுகிறது. ஆகையால் துரீயத்தின் சாக்ஷாத்காரம் செய்வதற்கு இதைத் தவிர வேறு பிரமாணமோ வேறு சாதனத்தை மேற்கொள்ளவோ வேண்டியதில்லை. எவ்வாறு ரஜ்ஜு சர்ப்பத்தின் விவேகம் ஏற்பட்ட சமகாலத்திலேயே ரஜ்ஜுவில் சர்ப்பநிவிர்த்திரூபபலப் பிராப்த்தி ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவின் ஞானம் உண்டாகிறது (அது போல் என்று இங்கு அறிந்து கொள்ளவேண்டும்)
येषां पुनस्तमोपनयनव्यतिरेकेण घटाधिगमे प्रमाणं व्याप्रियते, तेषां छेद्यावयवसम्बन्धवियोगव्यतिरेकेण अन्यतरावयवेऽपि च्छिदिर्व्याप्रियत इत्युक्तं स्यात् ।
(ச.பா) எவர்களுடைய மதத்தில் கட ஞானத்தில் அந்தகார நிவிர்த்தியைத் தவிர ஏதோ ஒரு காரியத்தில் பிரமாணத்தின் பிரவிர்த்தி உண்டாகிறது. அவ்வாறு நினைப்பவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். வெட்டவேண்டிய பதார்த்தத்தில் அவயவங்களின் சம்பந்தத்தை சேதம் செய்வதைக் காட்டிலும் வேறானதான (வெட்டும்) சேதனக் கிரியையின் வஸ்துவில் ஏதோ ஒரு அவயவத்தில் ஏதோ ஒரு வியாபாரம் இருக்கிறது.
यदा पुनर्घटतमसोर्विवेककरणे प्रवृत्तं प्रमाणमनुपादित्सिततमोनिवृत्तिफलावसानं छिदिरिव च्छेद्यावयवसम्बन्धविवेककरणे प्रवृत्ता तदवयवद्वैधीभावफलावसाना, तदा नान्तरीयकं घटविज्ञानं न प्रमाणफलम् ।
(ச.பா) சேதிக்கவேண்டிய அவயவத்தின் சம்பந்தத்தை சேதம் செய்யும் சேதனக் கிரியா எவ்வாறு அந்த அவயவத்தை பிரித்தபின் முடிவு அடைகிறதோ, அவ்வாறு கடம் மேலும் அந்தகாரத்தை பிரிப்பதற்க்கு பிரவிர்த்தித்த பிரமாணம் அநிஷ்ட அந்தகாரத்தின் நிவர்த்தி ரூப பலத்தில் முடிவு அடைதலை அறிந்தபொழுது கட ஞானம் அவசியம் உண்டாகிறது. அது பிரமாணபலன் அல்ல.
न च तद्वदप्यात्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वादिविवेककरणे प्रवृत्तस्य प्रतिषेधविज्ञानप्रमाणस्य अनुपादित्सितान्तःप्रज्ञत्वादिनिवृत्तिव्यतिरेकेण तुरीये व्यापारोपपत्तिः, अन्तःप्रज्ञत्वादि निवृत्तिसमकालमेव प्रमातृत्वादिभेदनिवृत्तेः । तथा च वक्ष्यति —
‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति । ज्ञानस्य द्वैतनिवृत्तिक्षणव्यतिरेकेण क्षणान्तरानवस्थानात् , अवस्थाने वा अनवस्थाप्रसङ्गाद्द्वैतानिवृत्तिः ; तस्मात्प्रतिषेधविज्ञानप्रमाणव्यापारसमकालैव आत्मन्यध्यारोपितान्तःप्रज्ञत्वाद्यनर्थनिवृत्तिरिति सिद्धम् ।
(ச.பா) அதைப்போல் ஆத்மாவில் ஆரோபம் செய்யப்பட்ட அந்த பிரக்ஞ முதலியவைகளை விவேகம் செய்ய பிரவிர்த்தித்த பிரதிசேதம் (நீக்கும்) விக்ஞானரூப பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளுவதில் இஷ்டமில்லாத அந்த:பிரக்ஞம் முதலியவைகளின் நிவர்த்தியைத் தவிர வேறு வியாபரம் சம்பவிக்காது. ஏனெனில் அந்தः பிரக்ஞத்துவம் முதலிய பேதங்கள் நிவிர்த்தியின் சம காலத்திலேயே பிரமாத்திரு முதலிய பேதங்கள் நிவர்த்தி ஆகிறது. அவ்வாறே காரிகையில் கூறப்பட இருக்கிறது- “ज्ञाते द्वैतं न विद्यते” (ஞாதேத்வைதம் ந வித்யதே) = ஞானம் ஏற்பட்ட உடன் துவைதம் இருக்காது) என்று ஏனெனில் விருத்திக் ஞானமும் துவைதவிருத்தி இருக்கும் க்ஷணத்தைத் தவிர அடுத்த க்ஷணத்தில் இருக்காது. மேலும் அதன் இருப்பு இருக்கும் எனில் அநவஸ்தாதோஷம் ஏற்படும். அதனால் துவைதத்தின் நிவிர்த்தியும் உண்டாகாது. ஆகையால் பிரதிஷேத விக்ஞானரூப பிரமாணத்தின் பிரவிர்த்தியின் சமகாலத்திலேயே ஆத்மாவில் ஆரோபிக்கப்பட்ட “அந்தःபிரக்ஞம்” முதலிய அநர்த்தங்கள் நிவிர்த்தி ஆகிறது.
नान्तःप्रज्ञमिति तैजसप्रतिषेधः ; नबहिःप्रज्ञमिति विश्वप्रतिषेधः ; नोभयतःप्रज्ञमिति जागरितस्वप्नयोरन्तरालावस्थाप्रतिषेधः ; नप्रज्ञानघनमिति सुषुप्तावस्थाप्रतिषेधः, बीजभावाविवेकस्वरूपत्वात् ; नप्रज्ञमिति युगपत्सर्वविषयज्ञातृत्वप्रतिषेधः ; नाप्रज्ञमित्यचैतन्यप्रतिषेधः ।
(ச.பா) அந்த: பிரக்ஞம் அல்ல என்று தைஜசனை விலக்குகிறது. பஹிஷ்பிரக்ஞம் அல்ல என்று விச்வத்தை நீக்குகிறது. இரண்டு விதபிரக்ஞம் இல்லை என்று ஜாக்ரத், ஸ்வப்னத்தின் நடுவில் உள்ள அவஸ்தையை நீக்குகிறது. பிரக்ஞானகனம் அல்ல என்று சுஷுப்தி அவஸ்தையை விலக்குகிறது. பீஜபாவமானது அவிவேகரூபம். பிரக்ஞம் இல்லை என்பதால் ஒரே சமயத்தில் எல்லா விஷயங்களின் ஞாத்துருத்துவத்தை நீக்குகிறது. அவ்வாறே பிரக்ஞை இல்லை என்பதால் அசேதனம் நீக்கப்படுவதாகிறது.
कथं पुनरन्तःप्रज्ञत्वादीनामात्मनि गम्यमानानां रज्ज्वादौ सर्पादिवत्प्रतिषेधादसत्त्वं गम्यत इति, उच्यते ; ज्ञस्वरूपाविशेषेऽपि इतरेतरव्यभिचारादसत्यत्वं रज्ज्वादाविव सर्पधारादिविकल्पभेदवत् ; सर्वत्राव्यभिचाराज्ज्ञस्वरूपस्य सत्यत्वम् ।
(ச.பா) அந்த: பிரக்ஞாதி தர்மங்கள் ஆத்மாவில் பிரத்யக்ஷமாய் அறியப்படும் பொழுது கேவலம் அதன் நீக்கத்தால் மாத்திரம் எவ்வாறு ரஜ்ஜுவில் தோன்றும் சர்ப்பாதிகள் போல் அசத்தியமாய் ஆகும். இதற்குக் கூறுகிறார் - ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம், ஜலதாரை முதலிய விகல்பபேதங்கள் போல் அவைகளின் சித் ஸ்வரூபத்தில் பேதம் இல்லாததால் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் மாறுபட்டு இருப்பதால் அசத் ரூபமாகும். ஆனால் சித்ஸ்வரூபமோ ஒரு நாளும் மாறுபாடு அடையாது. ஆகையால் அது சத்தியம்.
(ச.பா) சுஷுப்தி அவஸ்தையில் அதற்கு (சைதன்யத்திற்கு) வியபிசாரம் (மாறுபாடு) இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் சுஷுப்தி அவஸ்தையில் அனுபவம் உண்டாகிறது. “न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपोविद्यते” ந ஹி விக்ஞாதுர்விக்ஞாதேர்விபரிலோபோவித்யதே = விக்ஞாத்தாவின் விக்ஞாத்தத்தின் லோபம் ஏற்படாது” என்பது சுருதி சித்தமாகும்.
अत एव अदृश्यम् । यस्माददृश्यम् , तस्मादव्यवहार्यम् । अग्राह्यं कर्मेन्द्रियैः । अलक्षणम् अलिङ्गमित्येतत् , अननुमेयमित्यर्थः । अत एव अचिन्त्यम् । अत एव अव्यपदेश्यं शब्दैः । एकात्मप्रत्ययसारं जाग्रदादिस्थानेषु एक एवायमात्मा इत्यव्यभिचारी यः प्रत्ययः, तेनानुसरणीयम् ; अथवा, एक आत्मप्रत्ययः सारः प्रमाणं यस्य तुरीयस्याधिगमे, तत्तुरीयमेकात्मप्रत्ययसारम् ,
‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इति श्रुतेः ।
(ச.பா) ஆகையால் அது அதிருஷ்டம் அதிருஷ்டமாய் இருப்பதால் வ்யவஹாரம் அற்றது. அவ்வாறே கர்மேந்திரியங்களால் கிரஹிக்கமுடியாது, லக்ஷணமற்றது அவ்வாறே லிங்கமற்றது. ஆகையால் அனுமானம் செய்யமுடியாது. ஆகையால் சிந்திக்கவும் முடியாது. சப்தமூலமாய் அதைக்கூறவும் முடியாது. அது ஏகாத்ம பிரத்யயசாரமாகும். ஜாக்கிரத் முதலிய ஸ்தானங்களில் ஒரே ஆத்மா வியபிசாரமற்ற பிரத்யயமாய் இருக்கிறது. அதை அனுசரிக்க வேண்டியதாகும். அல்லது “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யேவோபாசீத = ஆத்மா என்று உபாசிப்பாயாக) சுருதியின்படி துரீயத்தின் ஞானம் அடைவதற்காக ஒரே ஆத்ம பிரத்யயமே முழுப்பிரமாணமாகும். அந்த துரீயம் ஏகாத்ம பிரத்தியயசாரமாகும்.
अन्तःप्रज्ञत्वादिस्थानिधर्मप्रतिषेधः कृतः । प्रपञ्चोपशममिति जाग्रदादिस्थानधर्माभाव उच्यते । अत एव शान्तम् अविक्रियम् , शिवं यतः अद्वैतं भेदविकल्परहितं चतुर्थं तुरीयं मन्यन्ते, प्रतीयमानपादत्रयरूपवैलक्षण्यात् । स आत्मा स विज्ञेयः इति । प्रतीयमानसर्पदण्डभूच्छिद्रादिव्यतिरिक्ता यथा रज्जुः, तथा ‘तत्त्वमसि’ इत्यादिवाक्यार्थः आत्मा
‘अदृष्टो द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) ‘न हि द्रष्टुदृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इत्यादिभिरुक्तो यः, स विज्ञेय इति भूतपूर्वगत्या । ज्ञाते द्वैताभावः ॥ ७ ॥
(ச.பா) அந்த:பிரக்ஞம் முதலிய ஸ்தானத்தை உடையவைகளின் தர்மங்களின் நீக்கம் செய்யப்பட்டது. பிரபஞ்சத்தின் உபசமனம் கூறியதால் ஜாக்ரத் ஸ்தான தர்ம அபாவம் கூறப்பட்டது. ஆகையால் சாந்தம், கிரியையற்றது, சிவம், அத்வைதமானதால் பேத விகல்பமற்றது. மூன்று பாதங்களைக் காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதால் துரீயம் (சதுர்த்தம் = நான்காவது) என்று கருதப்படுகிறுது. அந்த ஆத்மா அது அறியப்பட வேண்டியது. எவ்வாறு கயிறு தன்னிடத்தில் தோன்றும் சர்ப்பம், தண்டம், பூமியின் பிளவு இவைகளைக் காட்டிலும் எவ்வகையிலும் வேறானதோ அவ்வாறு “தத்துவமஸி” முதலிய வாக்கியங்களின் அர்த்த ஸ்வரூபமான ஆத்மா “अदृष्टो द्रष्टा” (அதிருஷ்டோ திருஷ்டா = அதிருஷ்டமாய் இருந்தாலும் அறியமுடியும்) “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (நஹி த்ருஷ்டுர்த்ருஷ்டேர் விபரிலோபே வித்யதே = திருஷ்டாவின் திருஷ்டிக்கு லோபம் உண்டாகாது) என்பது சுருதிகளால் பிரதிபாதனம் செய்யப்பட்டுள்ளது. அது அறியப்பட வேண்டியது என்று பூத பூர்வகதியினால் கூறப்பட்டது ஏனெனில் அதன் ஞானம் ஏற்பட்டவுடன் துவைதத்தின் அபாவம் ஏற்படுகிறது. (துவைதம் நீங்குகிறது)
अत्रैते श्लोका भवन्ति —
இந்த அர்த்தத்தில் இந்த சுலோகங்கள் இருக்கின்றன.
निवृत्तेः सर्वदुःखानामीशानः प्रभुरव्ययः ।
अद्वैतः सर्वभावानां देवस्तुर्यो विभुः स्मृतः ॥ १० ॥
कारिका अन्वयः - सर्व दुःखानां निवृत्तेः ईशानः प्रभुः अव्ययः अद्वैतः देवः तुर्यः सर्वभावानां विभुः स्मृतः।
(காரிகா அர்த்தம்) - துரீய ஆத்மா எல்லாவிதமான துக்கங்களையும் நீக்குகின்ற ஈ.சானன் பிரபு = (சாமர்த்தியம் உடையவன்) அது அவிகாரி, எல்லா பதார்த்தங்களின் அத்வைத ரூபம், தேவன் அவனே துரீயன். வியாபகன் எனப்படுகிறான்.
प्राज्ञतैजसविश्वलक्षणानां सर्वदुःखानां निवृत्तेः ईशानः तुरीय आत्मा । ईशान इत्यस्य पदस्य व्याख्यानं प्रभुरिति ; दुःखनिवृत्तिं प्रति प्रभुर्भवतीत्यर्थः, तद्विज्ञाननिमित्तत्वाद्दुःखनिवृत्तेः ।
(ச.பா) - துரீய ஆத்மா பிராக்ஞன், தைஜசன், விச்வரூப எல்லா துக்கங்களின் நிவிர்த்திசெய்யும் ஈ.சானன். இந்த “ईशान” (ஈ,சான) என்ற பதத்தின் வியாக்யானம் பிரபு என்பதாகும். துக்கநிவிர்த்தி செய்வதில் பிரபு என்பது பொருள். துக்க நிவிர்த்திக்குக் காரணம் விக்ஞானம் ஆகும்.
अव्ययः न व्येति, स्वरूपान्न व्यभिचरति न च्यवत इत्येतत् । कुतः ? यस्मात् अद्वैतः, सर्वभावानाम् — सर्पादीनां रज्जुरद्वया सत्या च ; एवं तुरीयः,
‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः — अतो रज्जुसर्पवन्मृषात्वात् । स एष देवः द्योतनात् तुर्यः चतुर्थः विभुः व्यापी स्मृतः ॥ १० ॥
(ச.பா) अव्ययः (அவ்யயம்) என்பது வியயம் (விகாரம்) அற்றது என்பதாகும். அது அத்வைதமாய் இருப்பதால் அதற்கு விகாரம் ஏற்படுவது இல்லை. மற்றஎல்லா பதார்த்தங்களும் ரஜ்ஜுவில் அத்யஸ்தமான சர்ப்பத்திற்கு சமானமாக மித்யையாகும். ஆகையால் அது பிரகாச சொரூபமாய் இருப்பதால் அது தேவ, துரீய, சதுர்த்த, விபு, வியாபகம் எனப்படுகிறது.
विश्वादीनां सामान्यविशेषभावो निरूप्यते तुर्ययाथात्म्यावधारणार्थम् ।
(ச.பா) அ.கை) துரீயத்தின் யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்துகொள்வதற்காக விச்வம் முதலியவைகள் சாமான்ய ரூபமாகவும், விசேஷ ரூபமாகவும் நிரூபணம் செய்யப்படுகிறது.
कार्यकारणबद्धौ ताविष्येते विश्वतैजसौ ।
प्राज्ञः कारणबद्धस्तु द्वौ तौ तुर्ये न सिध्यतः ॥ ११ ॥
कारिका अन्वयः - तौ विश्वतैजसौ कार्यकारणबद्धौ इष्येते कारणबद्धः तौ द्वौ तुर्ये न सिध्यतः ॥
காரிகா அர்த்தம் - விஷ்வன், தைஜசன் இரண்டும் காரிய காரணத்தால் பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால் பிராக்ஞன் கேவல காரண அவஸ்தாவாகவே பந்தப்பட்டுள்ளது. அவ்வாறே அவை இரண்டும் துரிய அவஸ்தையில் இல்லை.
कार्यं क्रियत इति फलभावः, कारणं करोतीति बीजभावः । तत्त्वाग्रहणान्यथाग्रहणाभ्यां बीजफलभावाभ्यां तौ यथोक्तौ विश्वतैजसौ बद्धौ सङ्गृहीतौ इष्येते । प्राज्ञस्तु बीजभावेनैव बद्धः । तत्त्वाप्रतिबोधमात्रमेव हि बीजं प्राज्ञत्वे निमित्तम् । ततः द्वौ तौ बीजफलभावौ तत्त्वाग्रहणान्यथाग्रहणे तुरीये न सिध्यतः न विद्येते, न सम्भवत इत्यर्थः ।
(ச.பா) - கிரியை செய்வதை காரியம் என்கிறோம். அது பல பாவமாகும். எது செய்விக்கிறதோ அது காரணம். அது பீஜ பாவம் ஆகும். முன்பு கூறப்பட்ட விச்வ, தைஜச தத்துவத்தை கிரஹிக்காமலும் வேறு விதமாய் கிரஹிக்கும் ரூபமான பீஜ பாவத்தாலும், பல பாவத்தாலும் நன்றாக பந்தப்பட்டதாகிறது. ஆனால் பிராக்ஞனோ கேவலம் பீஜ பாவத்தால் பந்தப்பட்டுள்ளது. தத்துவத்தை அறியாத ரூபமான பீஜமே அந்த பிராக்ஞத்துவத்திற்குக் காரணமாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் பீஜ ரூப, பல பாவ ரூப தத்துவத்தை கிரஹிக்காததும், வேறு விதமாய் கிரஹித்தலுமாகிய இரண்டும் துரீயத்தில் சம்பவிக்காது.
कथं पुनः कारणबद्धत्वं प्राज्ञस्य तुरीये वा तत्त्वाग्रहणान्यथाग्रहणलक्षणौ बन्धौ न सिध्यत इति । यस्मात् ॥ ११ ॥
(ச.பா) (அ,கை) பிராக்ஞனுக்கு காரண பந்தத்துவம் எவ்வாறு உண்டானது. அவ்வாறே துரீயத்தில் தத்துவத்தை கிரஹித்தல்; வேறு விதமாய் கிரஹித்தல் ரூபமான பந்தம் எவ்வாறு சித்திக்கிறது. இதைக்குறித்து விளக்குகிறார்.-
नात्मानं न परं चैव न सत्यं नापि चानृतम् ।
प्राज्ञः किञ्चन संवेत्ति तुर्यं तत्सर्वदृक्सदा ॥ १२ ॥
कारिका अन्वयः - प्राज्ञःआत्मानं परांश्चेैव न सत्यं अनृतं चापि किञ्चन न संवेत्ति तुर्यं सत् सदा सर्वदृक् ।
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் தனக்கோ, மற்றவர்கோ அல்லது சத்தியத்திற்கோ, பொய்யானதற்கோ அறிய முடியாததாய் இருக்கிறது. ஆனால் அது துரியமாய் எப்பொழுதும் சர்வத்ருக்காய் (எல்லாவற்றையும் அறிவதாக) இருக்கிறது.
आत्मानम् , विलक्षणम् , अविद्याबीजप्रसूतं वेद्यं बाह्यं द्वैतम् — प्राज्ञो न किञ्चन संवेत्ति, यथा विश्वतैजसौ ; ततश्चासौ तत्त्वाग्रहणेन तमसा अन्यथाग्रहणबीजभूतेन बद्धो भवति । यस्मात् तुर्यं तत्सर्वदृक्सदा तुरीयादन्यस्याभावात् सर्वदा सदैव भवति, सर्वं च तद्दृक्चेति सर्वदृक् ; तस्मान्न तत्त्वाग्रहणलक्षणं बीजम् । तत्र तत्प्रसूतस्यान्यथाग्रहणस्याप्यत एवाभावः । न हि सवितरि सदाप्रकाशात्मके तद्विरुद्धमप्रकाशनमन्यथाप्रकाशनं वा सम्भवति,
‘न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । २३) इति श्रुतेः ।
(ச.பா) பிராக்ஞன் ஆத்மாவை விட வேறான அவித்தியா ரூப பீஜத்திலிருந்து உண்டானது. வெளியில் உள்ள அறியப்படும் பதார்த்த ரூப துவைதத்தை விஸ்வன், தைஜசன் அறிவது போல் அறியாது. ஆகையால் அன்னியத்தை கிரஹிக்கும் பீஜ பூதமான தத்துவத்தை கிரஹிக்காத அந்தகாரத்தால் பந்திக்கப்படுகிறது. துரீயத்தைக் காட்டிலும் அந்நிய வஸ்து எவ்வகையிலும் அபாவமாய் இருப்பதால் அது எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாகும். அது சர்வரூபமாயும் அதற்கு சாக்ஷியாயும் இருப்பதால் அது சர்வதிருக் எனப்படுகிறது ஆகையால் அதைக் கிரஹிக்க முடியாத பீஜ ரூபம் அதற்கு இல்லை. மேலும் அதில் உத்பன்னமாகும் வேறாய் கிரஹிப்பதும் அபாவமாய் இருக்கிறது. ஏனெனில் எப்பொழுதும் ஸ்வபிரகாசமாய் இருக்கும் சூரியனிடத்தில் விபரீதமான பிரகாசமற்ற தன்மை அல்லது வேறு விதமாய் பிரகாசிக்கும் தன்மையோ சம்பவிப்பதில்லை. அவ்வாறு “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந ஹி திரஷ்டு திருஷ்டேர்விபரிலோபோ வித்யதே =திரஷ்டாவின் திருஷ்டிக்கு விபரிலோபம் ஏற்படுவதில்லை) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
(ச.பா) அல்லது ஜாக்ரத் அவ்வாறே ஸ்வப்னாவஸ்தையின் சம்பூர்ண பூதங்களில் இருக்கின்ற, மேலும் எல்லா பதார்த்தங்களில் சாக்ஷீரூபமாய் துரீயம் விளங்குகிறது. ஆகையால் அது எப்பொழுதும் சர்வசாக்ஷீயாய் இருக்கிறது. “नान्यदतोऽस्ति द्रष्टृ” (நான்யததோஅஸ்தி திரஷ்ட்ரு = அதைக் காட்டிலும் வேறான ஒரு திரஷ்டா இல்லை) என்பது சுருதி வாக்கியம்.
द्वैतस्याग्रहणं तुल्यमुभयोः प्राज्ञतुर्ययोः ।
बीजनिद्रायुतः प्राज्ञः सा च तुर्ये न विद्यते ॥ १३ ॥
कारिका अन्वयः - प्राज्ञतुर्ययोः उभयोः द्वैतस्य अग्रहणं तुल्यं बीजनिद्रायुतः सा च तुर्ये न विद्यते ।
காரிகா அர்த்தம் - துவைதத்தைக் கிரஹிக்காததால் பிராக்ஞனும் துரீயமும் சமானமாகும். ஆனால் பிராக்ஞன் பீஜரூப நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நித்திரை இல்லை.
निमित्तान्तरप्राप्ताशङ्कानिवृत्त्यर्थोऽयं श्लोकः। कथं द्वैताग्रहणस्य तुल्यत्वे कारणबद्धत्वं प्राज्ञस्यैव, न तुरीयस्येति प्राप्ता आशङ्का निवर्त्यते ।
(ச.பா) இந்த ஸ்லோகம் வேறு நிமித்தத்தால் உண்டாகும் ஆசங்கையின் நிவிர்த்திக்கு ஆகும். துவைத கிரஹணமற்றதன்மை சமானமாய் இருந்தாலும் எவ்வாறு பிராக்ஞனுக்கு காரணத்துடன் பந்தம் இருக்கிறது? ஏன் துரீயத்திற்கு இல்லை? இவ்வாறு உண்டான சங்கையை நிவிர்த்தி செய்கிறது.
यस्मात् बीजनिद्रायुतः, तत्त्वाप्रतिबोधो निद्रा ; सैव च विशेषप्रतिबोधप्रसवस्य बीजम् ; सा बीजनिद्रा ; तया युतः प्राज्ञः । सदासर्वदृक्स्वभावत्वात्तत्त्वाप्रतिबोधलक्षणा बीजनिद्रा तुर्ये न विद्यते ; अतो न कारणबन्धस्तस्मिन्नित्यभिप्रायः ॥ १३ ॥
(ச.பா) ஏனெனில் பிராக்ஞன் பீஜ நித்திரையுடன் கூடினவன். அது விசேஷ விக்ஞானத்தின் உத்பத்திக்கு பீஜ (காரண)மாகிறது. ஆகையால் அதை பீஜ நித்திரை என்கிறோம். பிராக்ஞன் அதோடு கூடினவன். ஆனால் எப்பொழுதும் சர்வதிருக் ஸ்வரூபமாய் இருப்பதால் துரீயத்தில் பீஜ நித்திரை இல்லை, ஆகையால் அதில் காரணத்தில் பத்த (கட்டுபட்டதாக) முடையதாக ஆகாது. இதுவே இதன் தாத்பர்யம்.
स्वप्ननिद्रायुतावाद्यौ प्राज्ञस्त्वस्वप्ननिद्रया ।
न निद्रां नैव च स्वप्नं तुर्ये पश्यन्ति निश्चिताः ॥ १४ ॥
कारिका अन्वयः - आद्यौ स्वप्ननिद्रायुतौ प्राज्ञस्तु अस्वप्न निद्रया युक्तः निश्चिताः तुर्ये निद्रां स्वप्नं च न पश्यन्ति ।
காரிகா அர்த்தம் - விச்வனும் தைஜசனும் ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவைகள். அவ்வாறே ப்ராக்ஞன் ஸ்வப்ன மற்ற நித்திரையுடன் கூடியவன். ஆனால் துரீயத்தில் நிச்சயமுடையவன் நித்திரையைப் பார்ப்பதில்லை ஸ்வப்னத்தையும் காண்பதில்லை.
स्वप्नोಽन्यथाग्रहणं सर्प इव रज्ज्वाम् , निद्रोक्ता तत्त्वाप्रतिबोधलक्षणं तम इति ; ताभ्यां स्वप्ननिद्राभ्यां युतौ विश्वतैजसौ ; अतस्तौ कार्यकारणबद्धावित्युक्तौ । प्राज्ञस्तु स्वप्नवर्जितया केवलयैव निद्रया युत इति कारणबद्ध इत्युक्तम् । नोभयं पश्यन्ति तुरीये निश्चिताः ब्रह्मविद इत्यर्थः, विरुद्धत्वात्सवितरीव तमः । अतो न कार्यकारणबद्ध इत्युक्तस्तुरीयः ॥ १४ ॥
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிப்பது போல் வேறாய் கிரஹிப்பது என்பது ஸ்வப்னம். தத்துவத்தை அறியாத தமஸ்ஸை நித்திரை என்கிறோம். அந்த ஸ்வப்னம், நித்திரையுடன் கூடியவர்கள் விச்வ தைஜசர்கள். ஆகையால் அவர்கள் காரியகாரண பத்தர்கள். ஆனால் பிராக்ஞனோ ஸ்வப்னமற்ற கேவல நித்திரை உடையவனாய் இருப்பதால் காரணபத்தன் எனப்படுகிறான். இவ்வாறு நிச்சயம் செய்த பிரஹ்ம வேத்தாக்கள் துரீயத்தில் இவை இரண்டையும் பார்ப்பதில்லை. எவ்வாறு சூரியனிடத்தில் இருள் இருக்க முடியாதது போல் ஆகும். ஆகையால் துரீயம் காரியத்துடனோ, காரணத்துடனோ பந்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
कदा तुरीये निश्चितो भवतीत्युच्यते
(ச.பா) (அ.கை) எப்பொழுது துரீயத்தில் நிச்சயம் அடைந்தவனாக ஆவான் என்பதனை விளக்குவது இந்த காரிகை.
अन्यथा गृह्णतः स्वप्नो निद्रा तत्त्वमजानतः ।
विपर्यासे तयोः क्षीणे तुरीयं पदमश्नुते ॥ १५ ॥
कारिका अन्वयः - अन्यथा गृणतः स्वप्नः तत्त्वम् अजानतः निद्रा भवति तयोः विपर्यासे क्षीणे तुरीयं पदम् अश्नुते ॥
காரிகா அர்த்தம் - வேறு ஒன்றை கிரஹிப்பதால் ஸ்வப்னம் ஏற்படுகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாமையால் நித்திரை உண்டாகிறது. இந்த இரண்டின் விபரீத ஞானம் நாசம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகும்.
स्वप्नजागरितयोः अन्यथा रज्ज्वां सर्पवत् गृह्णतः तत्त्वं स्वप्नो भवति ; निद्रा तत्त्वमजानतः तिसृष्ववस्थासु तुल्या । स्वप्ननिद्रयोस्तुल्यत्वाद्विश्वतैजसयोरेकराशित्वम् । अन्यथाग्रहणप्राधान्याच्च गुणभूता निद्रेति तस्मिन्विपर्यासः स्वप्नः । तृतीये तु स्थाने तत्त्वाग्रहणलक्षणा निद्रैव केवला विपर्यासः ।
(ச.பா) - ரஜ்ஜுவில் சர்ப்பத்தை கிரஹிக்கப்படுவது போல் ஸ்வப்ன, ஜாக்ர அவஸ்தைகளில் தத்துவத்தை வேறு விதமாய் கிரஹிக்கும்பொழுது ஸ்வப்னம் உண்டாகிறது. அவ்வாறே தத்துவத்தை அறியாத பொழுது நித்திரை ஏற்படுகிறது. இவ்வாறு மூன்று அவஸ்தைகளிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இவ்வாறு ஸ்வப்னமும், நித்திரையும் ஒரே மாதிரியாய் இருப்பதால் விச்வனும் தைஜசனும் ஒரே ராசிதான், அவைகளில் வேறாய் கிரஹிப்பது பிராதானமாய் இருப்பதால் நித்திரை கௌணமாகும். ஆகையால் அவஸ்தைகளில் ஸ்வப்னரூப விபரீத ஞானம் இருக்கிறது. ஆனால் மூன்றாவது ஸ்தானமாகிய சுஷுப்தியில் கேவலம் தத்துவத்தைக் கிரஹிக்காத நித்திரையாய் மாறிற்று.
अतस्तयोः कार्यकारणस्थानयोः अन्यथाग्रहणतत्त्वाग्रहणलक्षणविपर्यासे कार्यकारणबन्धरूपे परमार्थतत्त्वप्रतिबोधतः क्षीणे तुरीयं पदमश्नुते ; तदा उभयलक्षणं बन्धनं तत्रापश्यंस्तुरीये निश्चितो भवतीत्यर्थः ॥ १५ ॥
ஆகையால் அந்த காரியகாரண ரூப ஸ்தானங்களை ஒன்றை மற்றொன்றாய் கிரஹித்தல் மேலும் தத்துவத்தை கிரஹிக்காத மாறுபாட்டை பரமார்த்த போதத்தால் க்ஷயம் அடைந்த உடன் துரீய பதத்தின் பிராப்தி உண்டாகிறது. அந்த அவஸ்தையில் இரண்டு பிரகாரமான பந்தம் காணப்படாததால் புருஷன் துரீயத்தில் நிச்சயமடைந்தவனாக ஆகிறான்.
अनादिमायया सुप्तो यदा जीवः प्रबुध्यते ।
अजमनिद्रमस्वप्नमद्वैतं बुध्यते तदा ॥ १६ ॥
कारिका अन्वयः - यदा अनादिमायया सुप्तः जीवः प्रबुध्यते तदा अजम् अनिद्रम् अस्वप्नम् अद्वैतं बुध्यते ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது அநாதிமாயையால் தூங்கிக்கொண்டிருக்கும் ஜீவன் விழிப்பை (தத்துவ ஞானத்தை) அடைகிறானோ அப்பொழுது அஜம், நித்திரை அற்ற, ஸ்வப்னமற்ற, அத்வைத ஆத்ம தத்வ ஞானத்தை அடைகிறான்.
योऽयं संसारी जीवः, सः उभयलक्षणेन तत्त्वाप्रतिबोधरूपेण बीजात्मना, अन्यथाग्रहणलक्षणेन चानादिकालप्रवृत्तेन मायालक्षणेन स्वापेन, ममायं पिता पुत्रोऽयं नप्ता क्षेत्रं गृहं पशवः, अहमेषां स्वामी सुखी दुःखी क्षयितोऽहमनेन वर्धितश्चानेन इत्येवंप्रकारान्स्वप्नान् स्थानद्वयेऽपि पश्यन्सुप्तः ।
(ச.பா) - தத்துவத்தை அறியாததாலும், அனாதிகாலமாய் பிரவிர்த்தித்த மாயையாலும் தூங்கினவனான சம்சாரி ஜீவனானவன் விழிப்பு அடைகிறானோ அதாவது ஜீவனானவன் தத்துவத்தை அறியாத ரூபமான பீஜாத்மாவினால் தொன்றுதொட்டு பிரவிருத்தித்ததான மாயை எனப்படும் ஸ்வப்னத்தாலும், இது என்னுடையது, இவர் என்னுடைய தந்தை இவன் என்னுடைய மகன், இவன் என் பேரன், இது என்னுடைய நிலம், இவை என் பசுக்கள், இவைகளுக்கெல்லாம் நானே எஜமான், நான் சுகீ நான் துக்கீ, நான் இவைகளால் இணைந்தவனாய் உள்ளேன், நான் இவைகளால் வளர்ந்து புஷ்டியுடையவனாய் இருக்கிறேன் என்பவை போன்றகனவுகளை முற்கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களில் ஸ்வப்னத்தைப் பார்ப்பவனாய் இருக்கிறான்.
यदा वेदान्तार्थतत्त्वाभिज्ञेन परमकारुणिकेन गुरुणा ‘नास्येवं त्वं हेतुफलात्मकः, किन्तु तत्त्वमसि’ इति प्रतिबोध्यमानः, तदैवं प्रतिबुध्यते ।
(ச.பா) எப்பொழுது வேதாந்த அர்த்தத்தின் தத்துவத்தை அறிந்த பரமகருணையுடைய குரு மூலம் இவ்வாறு நீ ஹேது பல ரூபமும் அல்ல, ஆனால் அதுவாகவே இருக்கிறாய் என்று அறிந்தபொழுது போதம் (ஞானம்) ஏற்படுகிறது.
कथम् ? नास्मिन्बाह्यमाभ्यन्तरं वा जन्मादिभावविकारोऽस्ति, अतः अजम्
‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः, सर्वभावविकारवर्जितमित्यर्थः । यस्माज्जन्मादिकारणभूतम् , नास्मिन्नविद्यातमोबीजं निद्रा विद्यत इति अनिद्रम् ; अनिद्रं हि तत्तुरीयम् ; अत एव अस्वप्नम् , तन्निमित्तत्वादन्यथाग्रहणस्य । यस्माच्च अनिद्रमस्वप्नम् , तस्मादजम् अद्वैतं तुरीयमात्मानं बुध्यते तदा ॥ १६ ॥
(ச.பா) எவ்வாறு போதம் உண்டாகும்? இதில் பாஹ்ய அல்லது ஆப்யந்தர ஜன்மம் முதலிய விகாரங்கள் இல்லை, ஆகையால் இது ஜன்மமற்றது எல்லா பாவ விகாரங்கள் அற்றது. மேலும் இதில் ஜன்மம் முதலியவைகளின் காரணபூத அவ்வறே அவித்தியாரூப அந்தகாரத்தின் பீஜ பூத அவித்யை இல்லாததால் அது நித்திரை அற்றதாகும். துரீயம் அநித்திரையாகும் ஆகையால் ஸ்வப்னமும் இல்லை. ஏனெனில் வேறு ஒன்றை கிரஹிக்காதது (தத்துவத்தை அறியாதது) நித்திரைக்குக் காரணம் ஆகும். இவ்வாறு நித்திரை அற்றதாயும். ஸ்வப்னமற்றதாயும் இருக்கும்பொழுது ஜன்மம் அற்றதாயும், அத்வைதமாயும், துரீய ஆத்மாவின் போதம் உண்டாகிறது.
प्रपञ्चनिवृत्त्या चेत्प्रतिबुध्यते, अनिवृत्ते प्रपञ्चे कथमद्वैतमित्युच्यते ।
(ச.பா) (அ,கை) (துரீய) போதமானது பிரபஞ்ச நிவிர்த்தியினால் உண்டாகிறது, என்றாலும் எதுவரை பிரபஞ்சத்தின் நிவிர்த்தி இல்லையோ அதுவரை அத்வைதம் எவ்வாறு ஏற்படும் என்பது கூறப்படுகிறது-
प्रपञ्चो यदि विद्येत निवर्तेत न संशयः ।
मायामात्रमिदं द्वैतमद्वैतं परमार्थतः ॥ १७ ॥
कारिका अन्वयः - प्रपञ्चः यदि विद्येत निवर्तेत न संशयः। इदं द्वैतं मायामात्रं परमार्थतः अद्वैतम् ।
காரிகா அர்த்தம் - பிரபஞ்சமானது இருக்குமேயானால் நிவர்த்திக்கப்படும் என்பதில் ஒரு சந்தேஹமுமில்லை. ஆனால் அந்த த்வைதம் மாயா மாத்திரமே, உண்மையில் அது அத்வைதமே.
सत्यमेवं स्यात्प्रपञ्चो यदि विद्येत ; रज्ज्वां सर्प इव कल्पितत्वान्न तु स विद्यते । विद्यमानश्चेत् निवर्तेत, न संशयः । न हि रज्ज्वां भ्रान्तिबुद्ध्या कल्पितः सर्पो विद्यमानः सन्विवेकतो निवृत्तः ; न च माया मायाविना प्रयुक्ता तद्दर्शिनां चक्षुर्बन्धापगमे विद्यमाना सती निवृत्ता ; तथेदं प्रपञ्चाख्यं मायामात्रं द्वैतम् ; रज्जुवन्मायाविवच्च अद्वैतं परमार्थतः ; तस्मान्न कश्चित्प्रपञ्चः प्रवृत्तो निवृत्तो वास्तीत्यभिप्रायः ॥ १७ ॥
(ச.பா) பிரபஞ்சம் இருக்குமேயானால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பிதமாய் இருப்பதால் உண்மையில் இல்லை என்பதாகும். இவ்வாறு இருப்பதால் இதில் ஒரு சந்தேஹம் இல்லை நிவிர்த்தியாகிவிடும். ரஜ்ஜுவில் பிரமபுத்தியினால் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் உண்மையாய் இருந்தால் விவேகத்தால் நாசமாகாது. மாயாவியால் ப்ரயோகம் செய்யப்பட்ட மாயை பார்வையாளர்களின் கண் நீக்கப்பட்டவுடன், அதற்கு முன்நிலையில் உண்மையில் இருப்பதாயிருந்து நீங்குவது இல்லை. அது போல் இந்த பிரபஞ்சமும் ஆகும். உண்மையில் கயிறு போலும், மாயாவிபோலும் இரண்டாவது அற்றதே. முதலில் பிரவிர்த்ததான பிரபஞ்சமோ பின்பு நீக்கப்பட்ட பிரபஞ்சமோ இல்லை என்பது கருத்து.
ननु शास्ता शास्त्रं शिष्य इत्ययं विकल्पः कथं निवृत्त इत्युच्यते ।
(ச.பா) (அ.கை) மேலும் சாஸ்தா, சாஸ்திரம், சிஷ்யன் என்ற விகல்பமானது எவ்வாறு நீக்கப்பட்டது என்பதை விளக்குவதாகும்.
विकल्पो विनिवर्तेत कल्पितो यदि केनचित् ।
उपदेशादयं वादो ज्ञाते द्वैतं न विद्यते ॥ १८ ॥
कारिका अन्वयः - विकल्पः केनचित् यदिकल्पितः स्यात् तर्हि विनिवर्तेत उपदेशात्। अयं वादः ज्ञाते द्वैतं न विद्यते ।
காரிகா அர்த்தம் - இந்த (குரு சிஷ்ய) ஆகிய விகல்பங்கள் எவராவது கல்பனை செய்தால் அது நிவிர்த்தியாகிறது. இந்த (குரு சிஷ்ய) வாதம் உபதேசத்திற்காகவாகும். ஆத்மஞானம் அடைந்த உடன் துவைதம் நிவிர்த்தியாகிவிடும்.
विकल्पो विनिवर्तेत यदि केनचित्कल्पितः स्यात् । यथा अयं प्रपञ्चो मायारज्जुसर्पवत् , तथा अयं शिष्यादिभेदविकल्पोऽपि प्राक्प्रतिबोधादेवोपदेशनिमित्तः ; अत उपदेशादयं वादः — शिष्यः शास्ता शास्त्रमिति । उपदेशकार्ये तु ज्ञाने निर्वृत्ते ज्ञाते परमार्थतत्त्वे, द्वैतं न विद्यते ॥ १८ ॥
(ச.பா) ஏதோ ஒருவன் கல்பனை செய்திருந்தால் அந்த விகல்பம் நிவிர்த்தியாகும். எவ்வாறு பிரபஞ்சம் மாயை மேலும் ரஜ்ஜு சர்ப்பம் போல் இந்த சிஷ்யன் முதலிய விகல்பங்களும் ஆத்மஞான உபதேசத்திற்கு முன் உள்ள நிமித்தத்தாலாகும். ஆகையால் சிஷ்யன், குரு, சாஸ்திரம் இவை உபதேசத்திற்காக ஆகும். உபதேசத்தின் காரிய ஸ்வரூபஞானம் அடைந்தபின் அதாவது பரமார்த்த தத்துவத்தின் ஞானம் அடைந்த உடன் துவைதம் இல்லாமல் போய்விடுகிறது.
अभिधेयप्राधान्येन ओङ्कारश्चतुष्पादात्मेति व्याख्यातो यः-
(ச.பா) (அ.கை) இது வரையிலும் கூறப்பட்ட அந்த அபிதேய பிரதான ஓம்கார ரூப சதுஷ்பாத் (நான்காவது பாதம்) ஆத்மாவை பிரதானமாய் வர்ணிக்கப்படுகிறது.
इति ।
सोऽयमात्माध्यक्षरमोङ्कारोऽधिमात्रं पादा मात्रा मात्राश्च पादा अकार उकारो मकार इति ॥ ८ ॥
(मन्त्र अन्वयः) - सोऽयमात्माध्यक्षरमोङ्कारः अधिमात्रं पादाः मात्राः मात्राः च पादाः अकार उकार मकार इति ।
(மந்திர அர்த்தம்) - அந்த ஆத்மா அக்ஷர திருஷ்டியில் ஓம்காரம் ஆகும். அது மாத்திரைகளை விஷயம் செய்து கொண்டிருக்கிறது. பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். அந்த மாத்திரைகள். அகார, உகார மகாரங்களாகும்.
सोऽयम् आत्मा अध्यक्षरम् अक्षरमधिकृत्य अभिधानप्राधान्येन वर्ण्यमानोऽध्यक्षरम् । किं पुनस्तदक्षरमित्याह — ओङ्कारः । सोऽयमोङ्कारः पादशः प्रविभज्यमानः, अधिमात्रं मात्रामधिकृत्य वर्तत इत्यधिमात्रम् । कथम् ? आत्मनो ये पादाः, ते ओङ्कारस्य मात्राः । कास्ताः ? अकार उकारो मकार इति ॥ ८ ॥
(ச.பா) - அந்த இந்த ஆத்மா அத்யக்ஷரம், அக்ஷரத்தை ஆஸ்ரயித்து எதனுடைய அபிதானத்தை பிரதானமாய் வர்ணனை செய்யப்பட்டதோ அது அத்யக்ஷரம் எனப்படும். அந்த அக்ஷரம் எது? அது அந்த ஓம்காரத்தைப் பாதரூபமாய் பிரிவினை அடைந்த பின்னர் அதிமாத்திரமாய் தனது மாத்திரையை ஆஸ்ரயித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் அதை (அதிமாத்திர) என்று கூறப்படுகிறது. எவ்வாறு? ஓம்காரத்தின் பாதம் எதுவோ அது ஓம்காரத்தின் மாத்திரை அவையாவை? அகார, உகார, மகாரம் என்பதாகும்.
तत्र विशेषनियमः क्रियते ।
(ச.பா) (அ.கை) அதில் விசேஷ நியமனங்கள் செய்யப்படுகின்றன.
जागरितस्थानो वैश्वानरोऽकारः प्रथमा मात्राप्तेरादिमत्त्वाद्वाप्नोति ह वै सर्वान्कामानादिश्च भवति य एवं वेद ॥ ९ ॥
(मन्त्र अन्वयः) - जागरितस्थानः वैश्वानरः अकारः प्रथमा मात्रा आप्तेः आदिमत्त्वात् वा यः एवं वेद सः ह वै सर्वान् कामान् आप्नोति आदि च भवति ।
(மந்திர அர்த்தம்) - ஜாக்ரத் ஸ்தானம் வைச்வானர வ்யாப்தி மேலும் (ஓம்காரத்தின்) முதலாவதாய் இருப்பதால் முதல் மாத்திரை அகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்து முதலாவதாக அதாவது பிரதானமாக ஆகிறான்.
(ச.பா) ஜாக்கிரத் ஸ்தானத்தில் உள்ள எந்த வைச்வானரனோ அவன் ஓம்காரத்தின் முதல் மாத்திரை எதன் சமானத்தின் காரணம் முதல் மாத்திரை என்பதற்குக் கூறப்படுகிறது. எல்லாச் சொற்களிலும் வியாபித்திருக்கும் தன்மையால் அதாவது “अकारो वै सर्वा वाक्” (அகாரோ வை சர்வாவாக்- = அகாரமே எல்லா வாக்கிலும் (வியாபித்து இருக்கிறது) என்ற இந்த சுருதியை அனுசரித்து அகாரத்தால் எல்லா வாக்கும் வியாபித்திருக்கிறது. அவ்வாறே. “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः” (தஸ்யஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ ஸுதேஜா) என்ற இந்த சுருதியை அனுஸரித்து வைச்வானரால் எல்லா ஜகத்தும் வியாபித்திருக்கிறது.
अभिधानाभिधेययोरेकत्वं चावोचाम । आदिरस्य विद्यत इत्यादिमत् ; यथैव आदिमदकाराख्यमक्षरम् , तथा वैश्वानरः ; तस्माद्वा सामान्यादकारत्वं वैश्वानरस्य । तदेकत्वविदः फलमाह — आप्नोति ह वै सर्वान्कामान् , आदिः प्रथमश्च भवति महताम् , य एवं वेद, यथोक्तमेकत्वं वेदेत्यर्थः ॥ ९ ॥
(ச.பா) அபிதானமும் (வாசகமும்) அபிதேயமும் (வாச்சியமும்) ஒன்றே என்று கூறி இருக்கிறோம். எது முதலாவதோ (आदि ஆதியோ) அதை ஆதியுடன் கூடியது (आदिमत् ஆதிமத்) என்கிறோம். எவ்வாறு அகாரம் என்ற அக்ஷரம் முதலாவதோ அவ்வாறே வைச்வாநரனும் ஆகும். இரண்டும் சமானமாய் இருப்பதால் வைச்வாநரன் அகார ரூபமுடையவனாகிறான். அந்த இரண்டும் ஒன்றே என்று அறிந்தவனுடைய பலன் கூறப்படுகிறது - எந்த புருஷன் முற்கூறியவாறு ஏகத்துவத்தைக் காண்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்தவனாகின்றான். மஹாபுருஷர்கள் மத்தியில் முதன்மையானவன் ஆகிறான்.
स्वप्नस्थानस्तैजस उकारो द्वितीया मात्रोत्कर्षादुभयत्वाद्वोत्कर्षति ह वै ज्ञानसन्ततिं समानश्च भवति नास्याब्रह्मवित्कुले भवति य एवं वेद ॥ १० ॥
(मन्त्र अन्वयः) - यः स्वप्नस्थानः तैजसः सः उकारः द्वितीयामात्रा उत्कर्षात् उभयत्वात् वा ज्ञानसन्ततिं उत्कर्षति ह वै यः एवं वेद सः समानः च भवति अस्य कुले अब्रह्मवित् न भवति ।
(மந்திர அர்த்தம்) - ஸ்வப்னம் எதற்கு ஸ்தானமோ அது தைஜசன். அவ்வாறே உத்கர்ஷமானதும் மத்தியில் இருப்பதாலும் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரமாகும். இதை எந்த உபாசகன் அறிகிறானோ அவன் விக்ஞான சந்ததியை (விக்ஞான தொடரை) உத்கிருஷ்டமாய் செய்கிறான். எல்லாவற்றையும் சமானமாகப் பார்ப்பவனாகிறான். அவனுடைய வம்சத்தில் பிரஹ்ம ஞானமில்லாவதன் உண்டாகமாட்டன்.
स्वप्नस्थानः तैजसः यः, स ओङ्कारस्य उकारः द्वितीया मात्रा । केन सामान्येनेत्याह — उत्कर्षात् ; अकारादुत्कृष्ट इव ह्युकारः ; तथा तैजसो विश्वात् । उभयत्वाद्वा ; अकारमकारयोर्मध्यस्थ उकारः ; तथा विश्वप्राज्ञयोर्मध्ये तैजसः ; अत उभयभाक्त्वसामान्यात् ।
(ச.பா) ஸ்வப்ன ஸ்தானத்தை உடையவன் தைஜசன். அவன் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரம் ஆகும். எதை வைத்து அவன் இரண்டாவது மாத்திரை எனில் கூறுகிறார் உத்கிருஷ்டமாய் இருப்பதால். எவ்வாறு அகாரத்தைக் காட்டிலும். உகாரம் (उत्कृष्टम्) (உத்கிருஷ்டம் - உயர்வு.) உத்கிருஷ்டமானதோ அவ்வாறு விச்வனைக்காட்டிலும் தைஜசன் உத்கிருஷ்டமானது. நடுவில் இருப்பதால் அதாவது அகாரத்திற்கும், மகாரத்திற்கும் நடுவில் இருப்பது போல் விச்வனுக்கும், பிராக்ஞனுக்கும் நடுவில் தைஜசன் இருக்கிறான். ஆகையால் இவ்விருவகையிலும் சமானமான தர்மம் உள்ளது என்பது விளக்கப்படுகிறது.
विद्वत्फलमुच्यते — उत्कर्षति ह वै ज्ञानसन्ततिं विज्ञानसन्ततिं वर्धयतीत्यर्थः ; समानः तुल्यश्च, मित्रपक्षस्येव शत्रुपक्षाणामप्यप्रद्वेष्यो भवति ; अब्रह्मविच्च अस्य कुले न भवति, य एवं वेद ॥ १० ॥
(ச.பா) இவ்வாறு அறிந்த பிரஹ்மவித்திற்கு என்ன பலன் என்பதைக் கூறுகிறார். அவர்களுக்கு உத்கிருஷ்டமான (உயர்ந்ததான) ஞான சந்ததி விருத்தி அடையும். மித்திரனும் சத்துருவும் ஒரே சமானமாய் துவேஷம் அற்றவர்களாய் இருப்பர். அவ்வாறே அவர்களுடைய குலத்தில் பிரஹ்ம ஞானம் இல்லாதவர்கள் தோன்றமாட்டார்கள்.
सुषुप्तस्थानः प्राज्ञो मकारस्तृतीया मात्रा मितेरपीतेर्वा मिनोति ह वा इदं सर्वमपीतिश्च भवति य एवं वेद ॥ ११ ॥
सुषुप्तस्थानः प्राज्ञः मकारः तृतीयामात्रा मितेः अपीतेर्वा यः एवं वेद सः इदं सर्वं मिनोति ह वा अपीतिश्च भवति ।
(மந்திர அர்த்தம்) - சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அது பிராக்ஞன். பிரமாண லயத்திற்குக் காரணம் மூன்றாவது மாத்திரை மகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் அளப்பவனாகவும் கிரஹிப்பவனாகவும் ஆகிறான்.
सुषुप्तस्थानः प्राज्ञः यः, स ओङ्कारस्य मकारः तृतीया मात्रा । केन सामान्येनेत्याह — सामान्यमिदमत्र — मितेः ; मितिर्मानम् ; मीयेते इव हि विश्वतैजसौ प्राज्ञेन प्रलयोत्पत्त्योः प्रवेशनिर्गमाभ्यां प्रस्थेनेव यवाः ; तथा ओङ्कारसमाप्तौ पुनः प्रयोगे च प्रविश्य निर्गच्छत इव अकारोकारौ मकारे ।
(ச.பா) சுஷுப்திஸ்தானத்தை உடைய பிராக்ஞன் ஓம்காரத்தின் மூன்றாவது மாத்திரை மகாரம் ஆகும். எந்த சாமான்யத்திற்குக் காரணமாக எனில் இதில் என்ன சாமான்யம் என்றால் எவ்வாறு தானியத்தை அளக்கும் பொழுது அளவையின் உள்ளே சென்று வெளியேறுகிறதோ அவ்வாறு பிரளய உற்பத்தி காலங்களில் பிரவேசித்து வெளியில் வருதல் மூலமாய் பிராக்ஞனால் விச்வ தைஜசர்கள் வெளிப்படுவதால் அளக்கப்படுவது போல் மகாரத்தில் அகாரங்கள் உகாரங்கள் புகுந்து புறப்படுவது போல் இருக்கிறது.
अपीतेर्वा ; अपीतिरप्यय एकीभावः ; ओङ्कारोच्चारणे हि अन्त्येऽक्षरे एकीभूताविव अकारोकारौ ; तथा विश्वतैजसौ सुषुप्तकाले प्राज्ञे । अतो वा सामान्यादेकत्वं प्राज्ञमकारयोः ।
(ச.பா) ஒன்று படுவதாலும், அதாவது ஓம்கார உச்சாரண காலத்தில் கடைசி எழுத்தாகிய மகாரத்தில் அகார உகாரங்கள் ஒன்று பட்டது போல் ஓலிப்பதாலும், இவ்வாறு அகார உகாரங்கள் எவ்வாறு மகாரத்தில் ஒன்றி ஒடுங்குகின்றனவோ அவ்வாறே சுஷுப்தி காலத்தில் விச்வ, தைஜசர்கள் பிராக்ஞனில் ஒன்றி ஒடுங்குகின்றனர். ஆகையால் பிராக்ஞ மகாரங்களுக்கு ஏகத்துவம் என்று ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
विद्वत्फलमाह — मिनोति ह वै इदं सर्वम् , जगद्याथात्म्यं जानातीत्यर्थः ; अपीतिश्च जगत्कारणात्मा च भवतीत्यर्थः । अत्रावान्तरफलवचनं प्रधानसाधनस्तुत्यर्थम् ॥ ११ ॥
(ச.பா) இதை அறிந்த தத்துவவித்தின் பலனைக் கூறுகின்றார் எந்த ஒரு சாதகன் முற்கூறப்பட்டவாறு இவைகளை ஒன்றாய் அறிகின்றானோ அவன் இந்த ஜகத்தின் ஸம்பூர்ண உண்மை ஸ்வரூபத்தை அறிந்தவனாகிறான். ஜகத்காரணாத்மாமாகவும் ஆகிறான். இங்கு எந்த அவாந்தர பலம் சொல்லப்படுகிறதோ, அவை ப்ரதான ஸாதனத்தில் ஸ்துதிக்காக உண்டாகிறது.
अत्रैते श्लोका भवन्ति —
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.
विश्वस्यात्वविवक्षायामादिसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ स्यादाप्तिसामान्यमेव च ॥ १९ ॥
कारिका अन्वयः - विश्वस्य अत्वविवक्षायाम् आदिसामान्यम् उत्कटं मात्रासंप्रतिपत्तौ आप्तिसामान्यमेव च स्यात् ।
(காரிகா அர்த்தம்) - விச்வனுக்கு அகார மாத்திரையாய் இருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாய் இருக்கக்கூடிய சாமான்ய தர்மமானது அதிகமாய் காணப்படுகிறது. (விச்வனுக்கு) மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வியாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் சர்வவியாபகமாயுள்ள சாமான்ய தர்மமும் அதிகமாய் காணப்படுகிறது
विश्वस्य अत्वम् अकारमात्रत्वं यदा विवक्ष्यते, तदा आदित्वसामान्यम् उक्तन्यायेन उत्कटम् उद्भूतं दृश्यत इत्यर्थः । अत्वविवक्षायामित्यस्य व्याख्यानम् — मात्रासम्प्रतिपत्तौ इति । विश्वस्य अकारमात्रत्वं यदा सम्प्रतिपद्यते इत्यर्थः । आप्तिसामान्यमेव च, उत्कटमित्यनुवर्तते, च शब्दात् ॥ १९ ॥
(ச.பா) - விச்வனுக்கு அகார மாத்திரையாயிருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாயிருக்ககூடிய ஸாமான்ய தர்மமானது அதிகமாகக் காணப்படுகிறது. இங்கு “अत्वविवक्षायां” என்பதற்கு மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அதாவது விச்வனுக்கு அகாரமாத்திரைத் தன்மை எப்பொழுது அடையப்பட்டதோ அப்பொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வ்யாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் ஸர்வ வியாபகமாயுள்ள ஸாமான்ய தர்மமும் அதிகமாய்க் காணப்படுகிறது.
तैजसस्योत्वविज्ञान उत्कर्षो दृश्यते स्फुटम् ।
मात्रासम्प्रतिपत्तौ स्यादुभयत्वं तथाविधम् ॥ २० ॥
कारिका अन्वयः - तैजसस्य अत्वविज्ञान उत्कर्षः स्फुटं दृश्यते मात्रासम्प्रतिपत्तौ तथाविधम् उभयत्वं स्यात् ।
(காரிகா அர்த்தம்) - தைஜசன் உகாரரூப மாத்திரை என்று அறிவதால் அதன் உத்கர்ஷம் (உயர்வு) ஸ்பஷ்ட்டமாய் காணப்படுகிறது. அதனுடைய உபயத்துவம் ஸ்பஷ்ட்டமாய் இருக்கிறது.
तैजसस्य उत्वविज्ञाने उकारत्वविवक्षायाम् उत्कर्षो दृश्यते स्फुटं स्पष्टमित्यर्थः । उभयत्वं च स्फुटमेवेति । पूर्ववत्सर्वम् ॥ २० ॥
(ச.பா) தைஜசனின் உத்வ (उत्व) விக்ஞானத்தால் அதாவது அதன் உகாரரூபமாய் பிரதிபாதனம் செய்வதில் அதனுடைய உத்கர்ஷம் ஸ்பஷ்டமாய் காணப்படுகிறது. இவ்வாறு உபயத்துவமும் ஸ்பஷ்டமாய் விளங்குகிறது, மற்றவை முன்பு போல் ஆகும்.
मकारभावे प्राज्ञस्य मानसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥ २१ ॥
कारिका अन्वयः- प्राज्ञस्य मकारभावे मानसामान्यम् उत्कटं मात्रा संप्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் மகாரமாத்திரா ரூபம். அவ்வாறு அறிவதால் முற்கூறப்பட்ட அளக்கும் தர்மமானது இரண்டிற்கும் சமான தர்மமாகும். இவ்வாறு அவைகளில் ஸாமான்ய தர்மமானது லயத்தை அடையும் தன்மை ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.
मकारत्वे प्राज्ञस्य मितिलयावुत्कृष्टे सामान्ये इत्यर्थः ॥ २१ ॥
(ச.பா) பிராக்ஞன் மகாரரூபம் என்பதால் அளக்கும் தன்மையும் லயமடையும் தன்மையும் சமானமாய் இருத்தல் ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.
त्रिषु धामसु यस्तुल्यं सामान्यं वेत्ति निश्चितः ।
स पूज्यः सर्वभूतानां वन्द्यश्चैव महामुनिः ॥ २२ ॥
कारिका अन्वयः - यः त्रिषु धामसु तुल्यं सामान्यं निश्चितः वेत्ति सः सर्व भूतानां पूज्यः वन्द्यश्चैव महामुनिः।
(காரிகா அர்த்தம்) - எந்த ஒரு புருஷன் மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பானவைகளாயும், சமானமானதாயும் நிச்சயமாய் அறிகிறானோ அந்த மாமுனி எல்லா ஜீவர்களாலும் பூஜிக்கவும் வணங்கத்தக்கவனாகவுமாகிறான்.
यथोक्तस्थानत्रये यः तुल्यमुक्तं सामान्यं वेत्ति, एवमेवैतदिति निश्चितः सन् सः पूज्यः वन्द्यश्च ब्रह्मवित् लोके भवति ।
(ச.பா) - முன்பு கூறப்பட்ட மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பான ரூபத்தில் கூறப்பட்ட சமானமான தன்மையை அது இவ்வாறு இருக்கிறது என்று அறிந்த பிரஹ்மவித் உலகில் பூஜைக்கும், வந்தனத்திற்கும் உரியவனாகிறான்.
यथोक्तैः सामान्यैः आत्मपादानां मात्राभिः सह एकत्वं कृत्वा यथोक्तोङ्कारं प्रतिपद्यते यो ध्यायति तम् — ॥ २२ ॥
(ச.பா) (அ.கை) முன்பு கூறியவாறு சமானத்தன்மை உடையதாய் ஆத்மாவின் பாதங்களின் மாத்திரைகளுடன் ஏகத்துவமாய் முற்கூறப்பட்ட ஓம்காரத்தை எவன் த்யானம் செய்கின்றானோ அந்த ஜீவனை-
अकारो नयते विश्वमुकारश्चापि तैजसम् ।
मकारश्च पुनः प्राज्ञं नामात्रे विद्यते गतिः ॥ २३ ॥
कारिका अन्वयः - अकारः विश्वं नयते उकारश्चापि तैजसं पुनः मकारः प्राज्ञं नयते अमात्रे गतिः न विद्यते ।
(காரிகா அர்த்தம்) - அகாரமானது விச்வனை அடைவிக்கிறது அவ்வாறே உகாரம் தைஜசனை அடைவிக்கிறது. மேலும் மகாரம் பிராக்ஞனை அடைவிக்கிறது ஆனால் அமாத்திரைக்கு எந்த கதியும் கிடையாது.
अकारो नयते विश्वं प्रापयति । अकारालम्बनमोङ्कारं विद्वान्वैश्वानरो भवतीत्यर्थः । तथा उकारः तैजसम् ; मकारश्चापि पुनः प्राज्ञम् , च - शब्दान्नयत इत्यनुवर्तते । क्षीणे तु मकारे बीजभावक्षयात् अमात्रे ओङ्कारे गतिः न विद्यते क्वचिदित्यर्थः ॥ २३ ॥
(ச.பா) அகாரம் விச்வனை அடைவிக்கச் செய்கிறது. அகாரத்தை ஆஸ்ரயித்த ஓம்காரத்தை அறிந்தவன் வைச்வானரனாகிறான். அவ்வாறே உகாரம் தைஜசனையும், மகாரம் பிராக்ஞனையும் அடைவிக்கச் செய்கிறது. மகாரம் க்ஷயம் அடைந்தபின் பீஜ பாவத்தின் க்ஷயம் அடைவதை அறிந்ததால் மாத்திரை அற்ற ஓம்காரத்தில் வேறு கதி ஒன்றும் இல்லை என்பது இதன் தாத்பரியம்.
इति ।
अमात्रश्चतुर्थोऽव्यवहार्यः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत एवमोङ्कार आत्मैव संविशत्यात्मनात्मानं य एवं वेद ॥ १२ ॥
(मन्त्र अन्वयः) - अमात्रः चतुर्थः अव्यवहार्यः प्रपञ्चो-पशमः शिवः अद्वैतः एवम् ओङ्कारः आत्मैव यः एवं वेद सः आत्मना आत्मानं संविशति ।
(மந்திர அர்த்தம்) - மாத்திரை அற்ற ஓம்காரம் துரீய ஆத்மா. அது வியவஹாரம் அற்றது, பிரபஞ்சம் நீங்கியது, சிவம், அத்வைதம் அவ்வாறே ஓம்காரம் ஆத்மாவே என்று எவன் ஒருவன் அறிகிறானோ அவன் தானே ஆத்மாவில் பிரவேசிக்கிறான்.
अमात्रः मात्रा यस्य न सन्ति, सः अमात्रः ओङ्कारः चतुर्थः तुरीयः आत्मैव केवलः अभिधानाभिधेयरूपयोर्वाङ्मनसयोः क्षीणत्वात् अव्यवहार्यः ; प्रपञ्चोपशमः शिवः अद्वैतः संवृत्तः एवं यथोक्तविज्ञानवता प्रयुक्त ओङ्कारस्त्रिमात्रस्त्रिपाद आत्मैव ; संविशति आत्मना स्वेनैव स्वं पारमार्थिकमात्मानम् , य एवं वेद ; परमार्थदर्शनात् ब्रह्मवित् तृतीयं बीजभावं दग्ध्वा आत्मानं प्रविष्ट इति न पुनर्जायते, तुरीयस्याबीजत्वात् ।
(ச.பா) - அமாத்திரை என்பது மாத்திரை எதற்கு இல்லையோ அது அமாத்திரை ஓம்காரத்தின் நான்காவது அதாவது அது துரீயம். கேவலம் ஆத்மாவே. அபிதானரூபவாக், அபிதேய ரூபமனம் இவற்றின் க்ஷயத்தை அறிவதால் அவ்வியவகாரி. அவ்வாறே பிரபஞ்சத்தை நீக்கி இருப்பதால் நிஷ்பிரபஞ்சம், சிவம், அத்வைதம். இவ்வாறு கூறப்பட்ட விக்ஞானவான் உபாசனை மூலமாக பிரயோகம் செய்யப்பட்ட மூன்று மாத்திரைகளை உடைய ஆத்மாவாகும். எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் தானாகவே தன்னுடைய பாரமார்த்திக ஆத்மாவில் பிரவேசம் செய்கிறான். பரமார்த்ததர்சீ பிரஹ்மவித் மூன்றாவது பீஜ பாவத்தை தஹித்து ஆத்மாவில் பிரவேசிக்கின்றான். ஆகையால் அவனுக்கு மறுபடியும் பிறத்தல் என்பதில்லை. ஏனெனில் துரீய ஆத்மா பீஜமற்றதாய் இருப்பதால்.
न हि रज्जुसर्पयोर्विवेके रज्ज्वां प्रविष्टः सर्पः बुद्धिसंस्कारात्पुनः पूर्ववत्तद्विवेकिनामुत्थास्यति । मन्दमध्यमधियां तु प्रतिपन्नसाधकभावानां सन्मार्गगामिनां संन्यासिनां मात्राणां पादानां च क्लृप्तसामान्यविदां यथावदुपास्यमान ओङ्कारो ब्रह्मप्रतिपत्तये आलम्बनीभवति । तथा च वक्ष्यति —
‘आश्रमास्त्रिविधाः’ (मा. का. ३ । १६) इत्यादि ॥ १२ ॥
(ச.பா) ரஜ்ஜு, சர்ப்பத்தின் விவேகத்தை அறிந்தபின் ரஜ்ஜுவில் லீனமான சர்ப்ப சம்ஸ்காரத்திலிருந்து மறுபடியும் முன்பு போல் விவேகிகளுக்கு உண்டாவது இல்லை. மந்தமத்யம புத்தியுள்ளவர்களான சாதகர்களும் சன்மார்க்கத்தில் செல்லும் சந்நியாசிகளும் முன்பு கூறப்பட்ட மாத்திரை பாதங்களின் நிச்சயம் செய்யப்பட்ட சாமான்ய பாவனையை அறிந்தவர்களுக்கு விதிப்படி உபாசனை செய்வதற்கான ஓம்காரம் பிரஹ்மத்தை அடைவதற்கு ஆஸ்ரயமாகிறது. இவ்வாறு “आश्रमास्रिविधाः” “மூன்று விதமான ஆஸ்ரமம்” என்பது முதலியவைகளால் கூறப்போகிறார்.
पुर्ववत् —
முன்புபோல
इति माण्डूक्योपनिषत्समाप्ता ॥
अत्रैते श्लोका भवन्ति —
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.
ओङ्कारं पादशो विद्यात्पादा मात्रा न संशयः ।
ओङ्कारं पादशो ज्ञात्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २४ ॥
कारिका अन्वयः - पादशः ओङ्कारं विद्यात् पादाः मात्राः न संशयः ओङ्कारं पादशः ज्ञात्वा किञ्चिदपि न चिन्तयेत् ।
காரிகா அர்த்தம் - ஓம்காரம் ஒவ்வொரு பாதமாக அறியப்படும் பொழுது பாதமே மாத்திரை. இதில் சந்தேஹமில்லை. இவ்வாறு ஓம்காரத்தை பாதக்கிரமமாய் அறிந்தபின் ஒன்றும் சிந்திக்கக்கூடாது (எண்ணுதல் கூடாது).
यथोक्तैः सामान्यैः पादा एव मात्राः, मात्राश्च पादाः ; तस्मात् ओङ्कारं पादशः विद्यात् इत्यर्थः । एवमोङ्कारे ज्ञाते दृष्टार्थमदृष्टार्थं वा न किञ्चिदपि प्रयोजनं चिन्तयेत्कृतार्थत्वादित्यर्थः ॥ २४ ॥
(ச.பா) முன்பு கூறப்பட்ட சமானத்தன்மை காரணத்தால் பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். ஆகையால் ஓம்காரத்தை பாதக்கிரமத்தால் அறிய வேண்டும். இவ்வாறு ஓம்காரத்தின் ஞானம் உண்டானதால் கிருதார்த்தன் ஆனதால் எந்த ஒரு திருஷ்ட்டார்த்தத்தையோ (இந்த லோகத்தின்) அல்லது அதிருஷ்ட்டார்த்த (பரலோகத்தின்) பிரயோஜனத்தைக் குறித்து சிந்திக்க மாட்டான் என்பது பொருள்.
युञ्जीत प्रणवे चेतः प्रणवो ब्रह्म निर्भयम् ।
प्रणवे नित्ययुक्तस्य न भयं विद्यतेक्वचित् ॥ २५ ॥
कारिका अन्वयः - चेतः प्रणवे युञ्जीत प्रणवः निर्भयं ब्रह्म प्रणवे नित्ययुक्तस्य क्वचित् भयं न विद्यते ।
காரிகா அர்த்தம் - சித்தத்தை ஓம்காரத்தில் சேர்த்து விடு. ஓம்காரமே நிர்பய பிரஹ்மபதம். ஓம்காரத்தில் எப்பொழுதும் நிலைத்திருப்பவனுக்கு பயம் என்பது ஒருநாளும் உண்டாகாது.
(ச.பா) முன்பு வியாக்கியானம் செய்யப்பட்ட பரமார்த்த ஸ்வரூபமான ஓம்காரத்தில் சித்தத்தை நிலை நிறுத்து. ஏனெனில் ஓம்காரம் நிர்பயபிரஹ்மம். அதிலேயே சித்தத்தை நிலைநிறுத்தியவனுக்கு ஒரு நாளும் பயம் என்பது உண்டாகாது. “विद्वान्नबिभेतिकुतश्चन” (வித்வான்நபிபே திகுதஸ்ச்சன) வித்வான் ஒன்றினாலும் பயத்தை அடையமாட்டான்) என்ற சுருதியினாலும் அறிகிறோம்.
प्रणवो ह्यपरं ब्रह्म प्रणवश्च परं स्मृतः ।
अपूर्वोऽनन्तरोऽबाह्योऽनपरः प्रणवोऽव्ययः ॥ २६ ॥
कारिका अन्वयः - प्रणवो हि अपरं ब्रह्म प्रणवः परः स्मृतः प्रणवः अपूर्वः अनन्तरः अबाह्यः अनपरः अव्ययः ।
காரிகா அர்த்தம் - ஓம் காரமே அபர பிரஹ்மமும், பரப்பிரஹ்மமும் ஆகும். அந்த ஓம்காரம் அபூர்வம் (அகாரணம்) உள்வெளி அற்றது, காரியமற்றது அவ்வாறேஅவ்யயம்.
परापरे ब्रह्मणी प्रणवः ; परमार्थतः क्षीणेषु मात्रापादेषु पर एवात्मा ब्रह्म इति ; न पूर्वं कारणमस्य विद्यत इत्यपूर्वः ; नास्य अन्तरं भिन्नजातीयं किञ्चिद्विद्यत इति अनन्तरः, तथा बाह्यमन्यत् न विद्यत इत्यबाह्यः ; अपरं कार्यमस्य न विद्यत इत्यनपरः, सबाह्याभ्यन्तरो ह्यजः सैन्धवघनवत्प्रज्ञानघन इत्यर्थः ॥ २६ ॥
(ச.பா) பரம் மற்றும் அபர பிரஹ்மம் பிரணவம். உண்மையில் மாத்திராரூபமான பாதங்கள் நீங்கிய உடன் ஆத்மா பிரஹ்மமே. ஆகையால் இதற்கு காரணம் ஒன்றும் இல்லாதால் அபூர்வம், அதைக்காட்டிலும் வேறானது இல்லாததால் அனந்தரம், அவ்வாறே இதற்கு பாஹ்யம் இல்லாதால் அபாஹ்யம். இதைத் தவிர வேறு காரியம் இல்லாததால் அநபரம். தன் நிலையிலிருந்து மாறுபடாததால் அவ்யயம். அப்பிரணவமான பரம்பொருள் சைந்தவம் (உப்புப்) போல் உள்ளும், புறமும் எங்கும் ஏகமாய் கனரூபமாய் நிறைந்தது ஆகும்.
सर्वस्य प्रणवो ह्यादिर्मध्यमन्तस्तथैव च ।
एवं हि प्रणवं ज्ञात्वा व्यश्नुते तदनन्तरम् ॥ २७ ॥
कारिका अन्वयः - सर्वस्य आदिः मध्यं तथैव च अन्तः प्रणवः हि एवं हि प्रणवं ज्ञात्वा तदनन्तरं व्यश्नुते ।
காரிகா அர்த்தம் - பிரணவமே எல்லாவற்றிற்கும் ஆதி, மத்யம், முடிவு ஆகும். பிரணவத்தை இவ்வாறு அறிந்தபின் அந்த ரூபத்தை அடைகிறான்.
आदिमध्यान्ता उत्पत्तिस्थितिप्रलयाः सर्वस्य प्रणव एव । मायाहस्तिरज्जुसर्पमृगतृष्णिकास्वप्नादिवदुत्पद्यमानस्य वियदादिप्रपञ्चस्य यथा मायाव्यादयः, एवं हि प्रणवमात्मानं मायाव्यादिस्थानीयं ज्ञात्वा तत्क्षणादेव तदात्मभावं व्यश्नुत इत्यर्थः ॥ २७ ॥
(ச.பா) - எல்லாவற்றின் ஆதி, மத்யம், முடிவு அதாவது உத்பத்தி, ஸ்திதி பிரளயம் இவை பிரணவமேயாகும். எவ்வாறு மாயாமயமான யானை, ரஜ்ஜுவில் சர்ப்பம், கானல் நீர். ஸ்வப்னம், இவைகளைப் போல் உத்பத்தியான ஆகாச முதலிய ரூப பிரபஞ்சத்தின் காரணம் மாயாவி, இவ்விதமாக மாயாவிக்கு ஒப்பாக பிரணவ ரூப ஆத்மாவை அறிந்த வித்வான் அந்த க்ஷணத்திலேயே அந்த ரூபத்தை அடைகிறான் என்பது பொருள்.
प्रणवं हीश्वरं विद्यात्सर्वस्य हृदये स्थितम् ।
सर्वव्यापिनमोङ्कारं मत्वा धीरो न शोचति ॥ २८ ॥
कारिका अन्वयः- सर्वस्य ह्य्दि संस्थितं प्रणवं हि ईश्वर विद्यात् धीरः ओङ्कारं सर्वव्यापिनं मत्वा न शोचति ।
காரிகா அர்த்தம் - எல்லோருடைய ஹிருதயத்தில் இருக்கும் பிரணவமே ஈஸ்வரன் என்று அறிவாய், இவ்வாறு சர்வ வியாபியான ஓம்காரத்தை அறிந்த தீரன் சோகத்தை அடையமாட்டான்.
सर्वप्राणिजातस्य स्मृतिप्रत्ययास्पदे हृदये स्थितमीश्वरं प्रणवं विद्यात् सर्वव्यापिनं व्योमवत् ओङ्कारमात्मानमसंसारिणं धीरः धीमान्बुद्धिमान् आत्मतत्त्वं मत्वा ज्ञात्वा न शोचति, शोकनिमित्तानुपपत्तेः,
‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इत्यादि श्रुतिभ्यः ॥ २८ ॥
(ச.பா) - ஸமஸ்த பிராணி ஜாதங்களான ஜீவர்களுடைய ஹிருதயத்தில் அதாவது ஸ்மிருதி பிரத்தியயம் இவைகளுக்கு ஆஸ்பதமான ஹிருதயத்தில் நிலைபெற்றதான பிரணவத்தை ஈஸ்வரனாக அறிய வேண்டும். புத்திசாலியான விவேகமுடைய ஸாதகன் அசம்சாரியான,. ஆத்ம ஸ்வரூபமான ஓம்கார ஸ்வரூபத்தை ஆகாசம் போல் எங்கும் வியாபித்ததாக எண்ணி (தியானித்து) சோக மோஹங்களை அடைவது இல்லை. இதையே “तरति शोकमात्मवित्” (தரதி சோகமாத்மவித் ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான்) என்று சுருதி வாக்கியம் கூறுகிறது.
अमात्रोऽनन्तमात्रश्च द्वैतस्योपशमः शिवः ।
ओङ्कारो विदितो येन स मुनिर्नेतरो जनः ॥ २९ ॥
कारिका अन्वयः - येन अमात्रः अनन्तमात्रः च द्वेैतस्य उपशमः शिवः ओंकारः विदितः सः मुनिः इतरः जनः न ॥
காரிகா அர்த்தம் - எதில் மாத்திரை இல்லையோ அது அநந்தமாத்திரை, துவைதம் நீங்கிய இடம் மேலும் சிவ (மங்கள) மயமானது ஓம்காரம் என்று அறிந்தவன் முனி. வேறு புருஷன் அல்ல.
अमात्रस्तुरीय ओङ्कारः । मीयते अनयेति मात्रा परिच्छित्तिः, सा अनन्ता यस्य सः अनन्तमात्रः ; नैतावत्त्वमस्य परिच्छेत्तुं शक्यत इत्यर्थः । सर्वद्वैतोपशमत्वादेव शिवः । ओङ्कारो यथाव्याख्यातो विदितो येन, स एव परमार्थतत्त्वस्य मननान्मुनिः ; नेतरो जनः शास्त्रविदपीत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) - அமாத்திரை துரீய ஓம்காரம் ஆகும். எதனால் அளக்கிறோமோ அதை மாத்திரை அதாவது “परिच्छित्ति” எனப்படுகிறது. மாத்திரை எதற்கு அனந்தமாய் இருக்கிறதோ அது அனந்த மாத்திரை எனப்படுகிறது அதை இவ்வளவு தான் என்று பரிச்சேதம் செய்ய முடியாது. எல்லா துவைதங்களும் ஒடுங்குவதால் சிவம் (மங்கலமயம்) என்கிறோம். இவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்ட ஓம்காரத்தை எவன் அறிகிறானோ அவன் பரமார்த்த தத்துவத்தை மனனம் செய்வதால் முனி எனப்படுகிறான் மற்ற புருஷர்கள் சாஸ்திரம் படித்தவர்களானாலும் முனி அல்ல.
इति प्रथममागमप्रकरणं सम्पूर्णम् ॥
‘ज्ञाते द्वैतं न विद्यते’ इत्युक्तम्
‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) इत्यादिश्रुतिभ्यः । आगममात्रं तत् । तत्र उपपत्त्यापि द्वैतस्य वैतथ्यं शक्यतेऽवधारयितुमिति द्वितीयं प्रकरणमारभ्यते —
(ச.பா) (அ.கை) ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இருக்காது “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் - ஒன்றே அத்வைதம்) என்று சுருதியிலும் கூறப்பட்டுள்ளது, அது கேவலம் சாஸ்திர வாக்கிய மாத்திரம் அல்ல யுக்தியினாலும் மித்தியாத்துவம் நிச்சயம் செய்ய முடியும் என்பதை இரண்டாவது பிரகரணத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.
वैतथ्यं सर्वभावानां स्वप्न आहुर्मनीषिणः ।
अन्तःस्थानात्तु भावानां संवृतत्वेन हेतुना ॥ १ ॥
कारिका अन्वयः - स्वप्ने सर्वभावानां वैतथ्यं मनीषिणः आहुः भावानां अन्तःस्थानात् संवृतत्वेन हेतुना ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் எல்லா பதார்த்தங்களும் சரீரத்தினுள் இருக்கிறது. ஆகையால் இடம் குறுகியதாய் இருப்பதால் பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் ஸ்வப்னத்தில் உள்ள எல்லா பதார்த்தங்களும் மித்தியாதன்மை உடையதாய் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
वितथस्य भावो वैतथ्यम् ; असत्यत्वमित्यर्थः । कस्य ? सर्वेषां बाह्याध्यात्मिकानां भावानां पदार्थानां स्वप्ने उपलभ्यमानानाम् , आहुः कथयन्ति मनीषिणः प्रमाणकुशलाः । वैतथ्ये हेतुमाह — अन्तःस्थानात् , अन्तः शरीरस्य मध्ये स्थानं येषाम् ; तत्र हि भावा उपलभ्यन्ते पर्वतहस्त्यादयः, न बहिः शरीरात् ; तस्मात् ते वितथा भवितुमर्हन्ति । ननु अपवरकाद्यन्तरुपलभ्यमानैर्घटादिभिरनैकान्तिको हेतुरित्याशङ्क्याह — संवृतत्वेन हेतुनेति । अन्तः संवृतस्थानादित्यर्थः । न ह्यन्तः संवृते देहान्तर्नाडीषु पर्वतहस्त्यादीनां सम्भवोऽस्ति ; न हि देहे पर्वतोऽस्ति ॥ १ ॥
(ச.பா) वितथं பொய், वितथस्य भावो वैतथ्यम् இந்த பிரபஞ்சத்தின் பொய்மையை விளக்குவது இந்த பிரகரணம்- ஸ்வப்னத்தில் காணப்படுகின்ற (காக்ஷி அளிக்கின்ற) பாஹ்யமாயும், ஆத்யாத்மிகமாயும் உள்ள எல்லா பாவங்களுக்கும், அதாவது குடம் முதலானவை பாஹ்ய பாவங்களாகும். சுகம், துக்கம் முதலியவை ஆத்யாத்மிக பாவங்களாகும் இத்தகைய எல்லா பாவங்களும் பொய்யானவை என்று பிரமாணத்தில் வல்லுனர்களான சான்றோர் கூறுவர். அவர்கள் அவைகள் பொய்யானவை என்று கூறுவதற்கான காரணத்தை மேலே விளக்குகிறார். முற்கூறப்பட்ட அந்த பாவங்களுக்கு சரீரத்திற்குள்ளே இடம் பெற்றமையாலும் அவைகள் பொய்யானவை என்று கூறுகின்றனர். ஆனால் ஸ்வப்னத்தில் காணப்படும் மலை, யானை போன்ற பாவங்கள் சரீரத்தின் உள்ளேயே காணப்படுகின்றன. அவை சரீரத்திற்கு வெளியே காணப்படுவதில்லை ஓர் இடத்தினுள்ளேக் காணப்பட்டன என்பதால் அவைகள் பொய்யானவைகள் என்று கூறுவதற்கில்லை, ஏனெனில் குடம் முதலானவை பொய்யானவைகளாக ஆகிவிடுவதில்லை என்ற ஒரு சந்தேஹத்தை நீக்குவதற்காகவே “संवृतत्त्वेन हेतुना” உள்ளே மூடப்பட்டதான இடத்தில் என்று இரண்டாவது விசேஷணம் கூறப்பட்டது. அதாவது இந்த பாவங்கள் உடலின் மூடப்பட்டதான பகுதிக்குள் இருக்கும் நாடி முதலானவைகளுக்குள் மலை, யானை முதலியவைகள் உண்டாவது இல்லை. உடலில் மலை என்பது இல்லை என்று கூறப்பட்டது. எனவே காணப்படும் ஸ்வப்ன பாவங்கள் உண்மையாகாது. அவைகள் தோன்றுவதற்கு உகந்த இடம் இல்லாமையால் வெள்ளி, பாம்பு போல் பொய்யானவையாகும்.
स्वप्नदृश्यानां भावानामन्तः संवृतस्थानमित्येतदसिद्धम् , यस्मात्प्राच्येषु सुप्त उदक्षु स्वप्नान्पश्यन्निव दृश्यत इत्येतदाशङ्क्याह —
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்தில் காக்ஷி அளிக்கும் பதார்த்தங்கள் சரீரத்தின் உள் குறுகிய ஸ்தானத்தில் இருக்கிறது என்பது பொருந்தாது. ஏனெனில் கிழக்குதிசையில் தூங்கினவன் வடக்கு திசையில் ஸ்வப்னம் காண்கிறான் என்ற சங்கைக்குக் கூறுகிறார்.
अदीर्घत्वाच्च कालस्य गत्वा देहान्न पश्यति ।
प्रतिबुद्धश्च वै सर्वस्तस्मिन्देशे न विद्यते ॥ २ ॥
कारिका अन्वयः - कालस्य अदीर्घत्वात् च देशेन गत्वा न पश्यति प्रतिबुद्धः सर्वस्वै तस्मिन् देशे न विद्यते ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன காலத்திற்கு நீண்டதன்மை இல்லாததால்தான் கனவு காணும் தேசத்தை அடைந்து ஸ்வப்னங்களைக் காண்பதில்லை விழித்து எழுந்தபின் கனவு கண்டயாவரும் தான் கனவு கண்ட இடத்தில் இருப்பது இல்லை.
न देहाद्बहिर्देशान्तरं गत्वा स्वप्नान्पश्यति ; यस्मात्सुप्तमात्र एव देहदेशाद्योजनशतान्तरिते मासमात्रप्राप्ये देशे स्वप्नान्पश्यन्निव दृश्यते ; न च तद्देशप्राप्तेरागमनस्य च दीर्घः कालोऽस्ति ; अतः अदीर्घत्वाच्च कालस्य न स्वप्नदृग्देशान्तरं गच्छति ।
(ச.பா) தேஹத்தைக் காட்டிலும் வேறு இடத்திற்குச் சென்று கனவு காண்பது இல்லை. ஏனெனில் தூங்கின மாத்திரத்திலேயே தேகத்தின் இடத்திலிருந்து ஒரு மாசத்தில் சென்று அடையயோக்கியமுள்ள நூ று யோஜனை தூரம் வரையிலும் கனவில் காண்கிறான். (அந்த சமயத்தில்) அங்கு அடைவதற்கும், திரும்புவதற்கும் ஏற்ற நீண்டகாலம் இல்லை. ஆகையால் கனவிற்கு நீண்டகாலம் இல்லாததால் கனவு காண்பவன் வேறு தேசத்திற்கு செல்லுவது இல்லை.
किञ्च, प्रतिबुद्धश्च वै सर्वः स्वप्नदृक् स्वप्नदर्शनदेशे न विद्यते । यदि च स्वप्ने देशान्तरं गच्छेत् , यस्मिन्देशे स्वप्नान्पश्येत् , तत्रैव प्रतिबुध्येत । न चैतदस्ति । रात्रौ सुप्तः अहनीव भावान्पश्यति ; बहुभिः सङ्गतो भवति ; यैश्च सङ्गतः स तैर्गृह्येत, न च गृह्यते ; गृहीतश्चेत्त्वामद्य तत्रोपलब्धवन्तो वयमिति ब्रूयुः ; न चैतदस्ति । तस्मान्न देशान्तरं गच्छति स्वप्ने ॥ २ ॥
(ச.பா) மேலும் விழித்தவுடன் எந்த ஒரு கனவு காண்பவனும் கனவு காணும் இடத்தில் இல்லை. கனவில் தேசாந்தரம் சென்றிருந்தால் எங்கு கனவு கண்டானோ அங்கேயே விழித்து எழவேண்டும். அவ்வாறு உண்டாவதில்லை. இரவில் தூங்குபவன் பகல்போல் பதார்த்தங்களை காண்கிறான். அநேகம் அவனை அடைகிறது. அவைகளைக் கிரஹிக்கிறான். ஆனால் கிரஹிப்பதில்லை. அவ்வாறு கிரஹித்திருந்தால் நாங்கள் உன்னை அங்கு கண்டோம் என்று கூறுவர். அவ்வாறு நிகழாததால் கனவுகாணும் காலத்தில் வேறு எங்கும் செல்வதில்லை என்பதாகும்.
इतश्च स्वप्नदृश्या भावा वितथाः यतः
(ச.பா) (அ.கை) ஆகையால் ஸ்வப்னத்தில் காணும் விஷயங்கள் (பதார்த்தங்கள்) மித்யா (பொய்) ஏனெனில் -
अभावश्च रथादीनां श्रूयते न्यायपूर्वकम् ।
वैतथ्यं तेन वै प्राप्तं स्वप्न आहुः प्रकाशितम् ॥ ३ ॥
कारिका अन्वयः - रथादीनाम् अभावश्च न्यायपूर्वकं श्रूयते तेन वै स्वप्ने वैतथ्यं प्राप्तं प्रकाशितम् आहुः ।
காரிகா அர்த்தம் - சுருதியில் (கனவில் பார்த்த) ரதம் முதலியவைகளின் இன்மையை யுக்தி பூர்வமாய் கேட்டோம், ஆகையால் (முன்பு கூறப்பட்ட யுக்தியினால்) சித்தித்த மித்தியாத் தன்மையை ஸ்வப்னத்தில் ஸ்பஷ்ட்டமாய் கூறுகிறார்.
अभावश्च रथादीनां स्वप्नदृश्यानां श्रूयते, न्यायपूर्वकं युक्तितः श्रुतौ
‘न तत्र रथाः’ (बृ. उ. ४ । ३ । १०) इत्यत्र । तेन अन्तःस्थानसंवृतत्वादिहेतुना प्राप्तं वैतथ्यं तदनुवादिन्या श्रुत्या स्वप्ने स्वयञ्ज्योतिष्ट्वप्रतिपादनपरया प्रकाशितमाहुर्ब्रह्मविदः ॥ ३ ॥
(ச.பா) “न तत्र रथा” (ந தத்ர ரதா அந்த அவஸ்தையில் ரதங்கள் இல்லை) என்பது முதலிய சுருதிகளிலும் கனவில் கண்ட ரதம் முதலியவைகளின் அபாவம் யுக்தி பூர்வமாய் கேட்கப்பட்டது. ஆகையால் அந்த ஸ்தானம் அதாவது நாடியின் உள்ளே அவ்வாறே குறுகிய முதலிய ஹேதுக்களால் சித்திக்கும் மித்தியாதன்மை, அதனை அனுவாதம் செய்யும் அவ்வாறே கனவில் ஆத்மாவின் ஸ்வயம் பிரகாசத்தை பிரதிபாதனம் (கூறும்) சுருதி வாயிலாய் பிரஹ்ம வேத்தா ஸ்பஷ்டமாய் கூறுகிறார்.
अन्तःस्थानात्तु भेदानां तस्माज्जागरिते स्मृतम् ।
यथा तत्र तथा स्वप्ने संवृतत्वेन भिद्यते ॥ ४ ॥
कारिका अन्वयः - भेदानाम् अन्तःस्थानात् तु (वैतथ्यं) स्मृतं तस्मात् यथा तत्र स्वप्ने तथा जागरिते स्मृतं संवृतत्वेन भिद्यते ।
காரிகா அர்த்தம் - இதனால் ஜாக்ரத் அவஸ்தையிலும் பதார்த்தங்கள் மித்தையாகும் ஏனெனில் எவ்வாறு ஸ்வப்ன அவஸ்தையில் மித்தையாகிறதோ அவ்வாறே ஜாக்ரதத்திலும் ஆகிறது. கேவலம் சரீரத்தின் உள்ளே இருப்பதும் குறுகிய இடமாய் இருப்பதும் ஸ்வப்ன திருஷ்ட பதார்த்தத்திற்கு உள்ள பேதமாகும்.
जाग्रद्दृश्यानां भावानां वैतथ्यमिति प्रतिज्ञा । दृश्यत्वादिति हेतुः । स्वप्नदृश्यभाववदिति दृष्टान्तः । यथा तत्र स्वप्ने दृश्यानां भावानां वैतथ्यम् , तथा जागरितेऽपि दृश्यत्वमविशिष्टमिति हेतूपनयः । तस्माज्जागरितेऽपि वैतथ्यं स्मृतमिति निगमनम् । अन्तःस्थानात्संवृतत्वेन च स्वप्नदृश्यानां भावानां जाग्रद्दृश्येभ्यो भेदः । दृश्यत्वमसत्यत्वं चाविशिष्टमुभयत्र ॥ ४ ॥
(ச.பா) ஜாக்ரதத்தில் உள்ள திருஷ்ய பதார்த்தங்கள் மித்யை என்பது பிரதிக்ஞா. அதற்கு ஹேது திருஷ்யமாய் இருப்பதால். ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தம் போல் என்பது திருஷ்டாந்தம். எவ்வாறு ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்கள் மித்தையோ அவ்வாறு ஜாக்ரதத்திலும் திருஷ்ய பதார்த்தங்களும் இருக்கின்றன என்பதனால் ஹேது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகையால் ஜாக்ரதத்திலும் மித்தியா என்பது நிகமனம். அந்த: ஸ்தானமாய் இருப்பதாலும், குறுகிய இடமாய் இருப்பதாலும் ஸ்வப்னத்தில் பார்த்த பதார்த்தங்களுக்கும் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் பதார்த்தங்களுக்கும் உள்ள வித்தியாசம் திருஷ்யத்துவமும், அதிருஷ்யத்துவமும் ஆகிய இரண்டும் அவஸ்தையில் சமானமே.
स्वप्नजागरिते स्थाने ह्येकमाहुर्मनीषिणः ।
भेदानां हि समत्वेन प्रसिद्धेनैव हेतुना ॥ ५ ॥
कारिका अन्वयः - प्रसिद्धेन हेतुना एव भेदानां समत्वेन हि स्वप्नजागरितस्थाने एकत्वं मनीषिणः आहुः ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு பிரசித்தமான ஹேதுக்களால் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷர்கள் ஸ்வப்ன, ஜாக்கிரத் அவஸ்தைகள் ஒன்றே என்று கூறுகிறார்கள்.
प्रसिद्धेनैव भेदानां ग्राह्यत्वेन हेतुना समत्वेन स्वप्नजागरितस्थानयोरेकत्वमाहुर्विवेकिन इति पूर्वप्रमाणसिद्धस्यैव फलम् ॥ ५ ॥
(ச.பா) பதார்த்தங்களின் கிராஹ்ய, கிராஹகத்தன்மை ரூபம் பிரசித்தமாய் இருப்பதன் காரணமாய் சமானமாய் இருப்பதால் விவேகி புருஷன் ஸ்வப்ன, ஜாக்ரத் அவஸ்தைகளின் ஏகத்துவத்தைக் கூறுகிறார்கள். இவ்வாறு முன்பு பிரமாணத்தால் சித்தித்த ஹேதுவின் பலனாகும்.
इतश्च वैतथ्यं जाग्रद्दृश्यानां भेदानामाद्यन्तयोरभावात् ।
(ச.பா) (அ.கை) ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பதார்த்தங்கள் மித்தையாகும். ஏனெனில் ஆதியும் அந்தமும் அவைகளுக்கு இல்லை.
आदावन्ते च यन्नास्ति वर्तमानेऽपि तत्तथा ।
वितथैः सदृशाः सन्तोऽवितथा इव लक्षिताः ॥ ६ ॥
कारिका अन्वयः - यत् आदौ अन्ते च नास्ति तत् वर्तमानेऽपि तथा वितथै सदृशाः सन्तः अवितथा इव लक्षिताः ॥
காரிகா அர்த்தம் - எதற்கு ஆரம்பமும், முடிவும் இல்லையோ அது நிகழ் காலத்திலும் (நடுவிலும்) இல்லை. பதார்த்த கூட்டமானது அசத்திற்கு சமானமாய் இருந்து கொண்டு சத் போல் (உண்மையானது போல்) தோன்றிக் கொண்டிருக்கிறது.
यदादावन्ते च नास्ति वस्तु मृगतृष्णिकादि, तन्मध्येऽपि नास्तीति निश्चितं लोके ; तथेमे जाग्रद्दृश्या भेदाः आद्यन्तयोरभावात् वितथैरेव मृगतृष्णिकादिभिः सदृशत्वाद्वितथा एव ; तथापि अवितथा इव लक्षिता मूढैरनात्मविद्भिः ॥ ६ ॥
(ச.பா) கானல்நீர் முதலியவை ஆதியிலும், முடிவிலும் இல்லை. அவ்வாறே நடுவிலும் (மத்தியிலும்) இல்லை என்பது உலகில் நிச்சயம் செய்யப்பட்டது. இவ்வாறு ஜாக்ரதவஸ்தையில் காணப்படும் பின்ன பின்ன பதார்த்தங்களும் ஆதியிலும், முடிவிலும் இல்லாததால் கானல் நீர் முதலிய அசத்வஸ்துவிற்கு சமானமாய் இருப்பதால் அசத்தாகும். அவ்வாறு இருந்தாலும் மூடர்கள் ஆத்மாவை அறியாதவர்கள் சத்ரூபமாய் அறிகிறார்கள்.
स्वप्नदृश्यवज्जागरितदृश्यानामप्यसत्त्वमिति यदुक्तम् तदयुक्तम् ; यस्माज्जाग्रद्दृश्या अन्नपानवाहनादयः क्षुत्पिपासादिनिवृत्तिं कुर्वन्तो गमनागमनादि कार्यं च सप्रयोजना दृष्टाः । न तु स्वप्नदृश्यानां तदस्ति । तस्मात्स्वप्नदृश्यवज्जाग्रद्दृश्यानामसत्त्वं मनोरथमात्रमिति ।
(ச.பா) (அ.கை) சங்கை ஸ்வப்ன திருஷ்ய பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் திருஷ்ய பதார்த்தங்களும் அசத்தியம் (பொய்) என்று கூறப்பட்டது சரியல்ல. ஏனெனில் ஜாக்ரதத்தில் பார்க்கப்படும் (திருஷ்யங்களான) அன்னம், பானம் வாஹனம் முதலிய பதார்த்தங்கள் சாப்பிடுதல், குடித்தல் இவைகளால் பசி, தாகம் நிவர்த்தியாகிறது, அவ்வாறேசெல்லுதல், வருதல் முதலிய காரியங்களை செய்வதன் பிரயோஜனத்தைப் பார்க்கிறோம். ஆனால் ஸ்வப்ன திருஷ்ய விஷயங்களில் அவ்வாறு காணப்படவில்லை. ஆகையால் ஸ்வப்ன திருஷ்யத்திற்கு சமானமாய் ஜாக்ரத் திருஷ்யங்களின் அசத்தியம் (பொய்) என்பது கேவலம் மனோரத மாத்திரமே.
तन्न । कस्मात् ? यस्मात् ।
(ச.பா) (சமாதானம்) - அவ்வாறு அல்ல. எதனால்? அதனால்-
सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥
कारिका अन्वयः - तेषां सप्रयोजनता स्वप्ने विप्रतिपद्यते तस्मात् आद्यन्तवत्त्वेन ते मिथ्यैव खलु स्मृताः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் அந்த (ஜாக்ரத் அவஸ்தையின்) பிரயோஜனத்துடன் கூடியிருக்கும் தன்மை காணப்பட்டதோ அந்த த்ருஷ்யங்கள் ஸ்வப்னத்தில் மாறுபட்டவைகளாகக் காணப்படுகின்ற காரணத்தால் அவைகள் நிச்சயமாக மித்யாவே (பொய்யே) ஆகும்.
सप्रयोजनता दृष्टा अन्नपानादीनाम् , सा स्वप्ने विप्रतिपद्यते । जागरिते हि भुक्त्वा पीत्वा च तृप्तो विनिवर्तिततृट् सुप्तमात्र एव क्षुत्पिपासाद्यार्तमहोरात्रोपोषितमभुक्तवन्तमात्मानं मन्यते, यथा स्वप्ने भुक्त्वा पीत्वा च अतृप्तोत्थितः, तथा । तस्माज्जाग्रद्दृश्यानां स्वप्ने विप्रतिपत्तिर्दृष्टा । अतो मन्यामहे तेषामप्यसत्त्वं स्वप्नदृश्यवदनाशङ्कनीयमिति । तस्मादाद्यन्तवत्त्वमुभयत्र समानमिति मिथ्यैव खलु ते स्मृताः ॥ ७ ॥
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் எந்த அன்னபானாதிகள் பிரயோஜன முடையவைகளாய் இருந்ததோ அவைகள் ஸ்வப்னத்தில் இருப்பதில்லை. ஜாக்கிரத அவஸ்தையில் சாப்பிட்டு குடித்து திருப்தி அடைந்திருந்தாலும் திருப்தி அற்றவனாய் தூங்கும்பொழுது ஸ்வப்னத்தில் அவனுக்கு பசிதாகம் முதலிய கஷ்டங்களால் பகல் இரவு உபவாசம் இருந்து சாப்பிடாதது போல் நினைக்கிறான். இவ்வாறே ஸ்வப்னத்தில் சாப்பிட்டு, குடித்து எழுந்த உடன் அவன் திருப்தி அற்றவனாய் இருக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்வப்ன அவஸ்தையில் ஜாக்ரத் திருஷ்யங்களை விபரீதமாய் பார்க்கிறான். ஆகையால் ஸ்வப்ன திருஷ்யங்கள் போல் சமானமாய் அவைகளின் அசத்தியத்தைக் குறித்து சங்கை செய்வது பொருந்தாது ஆகையால் நிச்சயம் மித்தியா என்று அறிய வேண்டும்.
स्वप्नजाग्रद्भेदयोः समत्वाज्जाग्रद्भेदानामसत्त्वमिति यदुक्तम् , तदसत् । कस्मात् ? दृष्टान्तस्यासिद्धत्वात् । कथम् ? न हि जाग्रद्दृश्या ये, ते भेदाः स्वप्ने दृश्यन्ते । किं तर्हि ?
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் சமானமாய் இருப்பதால் ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத் என்று சொல்லப்பட்டது அது சரியல்ல. ஏனெனில் திருஷ்டாந்தம் பொருந்தாது. எவ்வாறு எனில் பதார்த்தங்கள் ஜாக்ரத அவஸ்தையில் காணப்படுகிறது. ஸ்வப்ன அவஸ்தையில் அவ்வாறு காணப்படவில்லை. அந்த சமயத்தில் எது தான் காணப்படும்?
अपूर्वं स्वप्ने पश्यति चतुर्दन्तगजमारूढोऽष्टभुजमात्मानम् । अन्यदप्येवंप्रकारमपूर्वं पश्यति स्वप्ने । तन्नान्येनासता सममिति सदेव । अतो दृष्टान्तोऽसिद्धः । तस्मात्स्वप्नवज्जागरितस्यासत्त्वमित्ययुक्तम् ।
(ச.பா) ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைப் பார்க்கிறோம். தன்னை நான்கு தந்தமுள்ள யானையின் மேல் இருப்பதாகவும், எட்டு கைகள் உடையவனாகவும் நினைக்கிறோம் இவ்வாறு ஸ்வப்னத்தில் அபூர்வ வஸ்துக்களைக் காண்கிறோம் சமானமாய் இல்லை. ஆகையால் அது சத்தே. அவைகள் மற்ற இல்லாத (அசத்) வஸ்துக்களுக்கு அதனால் திருஷ்டாந்தம் பொருந்தாது. ஆகையால் ஸ்வப்னத்தில் உள்ளது போல் ஜாக்ரதத்திலும் அசத்தே. ஆகையால் அவ்வாறு கூறுவது பொருந்தாது.
तन्न । स्वप्ने दृष्टमपूर्वं यन्मन्यसे, न तत्स्वतः सिद्धम् । किं तर्हि ?
(ச.பா) (அ.கை) அவ்வாறு அல்ல. ஸ்வப்னத்தில் பார்த்த அபூர்வம் என்று எதை நினைத்தாயோ அது உண்மையில் இல்லை. அவ்வாறு ஆனால் அது என்ன?
अपूर्वं स्थानिधर्मो हि यथा स्वर्गनिवासिनाम् ।
तानयं प्रेक्षते गत्वा यथैवेह सुशिक्षितः ॥ ८ ॥
कारिका अन्वयः - यथा स्वर्गनिवासिनां तथा अपूर्वं स्थानिधर्मः यथा इहैव सुशिक्षितः अयं तान् गत्वा प्रेक्षते ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு (இந்திரன் முதலிய) ஸ்வர்க்கவாசிகளின் அலௌகிக அவஸ்தைகளைக் கேட்கிறோமோ அவ்வாறு அந்த ஸ்வப்னத்தில் உள்ள ஸ்வப்ன திருஷ்ட்டாவின் அபூர்வம் தர்மமாகும். அந்த ஸ்வப்ன பதார்த்தங்களை எவ்வாறு விழித்த பின் பார்க்கிறானோ அவ்வாறே இந்த லோகத்தில் நன்றாக சிக்ஷை பெற்ற புருஷன் அந்த மார்க்கத்தை அறிந்து தன் லக்ஷியத்தை அடைகிறான்.
अपूर्वं स्थानिधर्मो हि, स्थानिनो द्रष्टुरेव हि स्वप्नस्थानवतो धर्मः ; यथा स्वर्गनिवासिनामिन्द्रादीनां सहस्राक्षत्वादि, तथा स्वप्नदृशोऽपूर्वोऽयं धर्मः, न स्वतःसिद्धो द्रष्टुः स्वरूपवत् । तान् एवंप्रकारानपूर्वान्स्वचित्तविकल्पान् अयं स्थानी यः स्वप्नदृक्स्वप्नस्थानं गत्वा प्रेक्षते । यथैव इह लोके सुशिक्षितदेशान्तरमार्गस्तेन मार्गेण देशान्तरं गत्वा पदार्थान्पश्यति, तद्वत् । तस्माद्यथा स्थानिधर्माणां रज्जुसर्पमृगतृष्णिकादीनामसत्त्वम् , तथा स्वप्नदृश्यानामप्यपूर्वाणां स्थानिधर्मत्वमेवेत्यसत्त्वम् ; अतो न स्वप्नदृष्टान्तस्यासिद्धत्वम् ॥ ८ ॥
(ச.பா) அவைகள் ஸ்தானீயத்தின் அபூர்வதர்மம். ஸ்தானி என்றால் ஸ்வப்னத்தை உடைய திருஷ்டாவின் தர்மமாகும். எவ்வாறு ஸ்வர்க்காதிவாசி இந்திரன் முதலியோருக்கு ஆயிரம் கண் முதலிய தர்மமோ அவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் அபூர்வதர்மமாகும். அதற்கு திருஷ்டாவின் ஸ்வஸ்வரூபத்தைப் போல் அது சுவதஸித்தமல்ல. இவ்வாறு தன்னுடைய சித்தத்தின் மூலம் கல்பனை செய்த அந்ததர்மத்தை அந்த ஸ்வப்னத்தைக் காண்பவன் ஸ்தானீயாவான். ஸ்வப்ன ஸ்தானத்திற்கு சென்று பார்க்கிறான். எவ்வாறு இந்த உலகில் வேறு தேசம் செல்வதற்கான மார்க்கத்தை நன்றாக அறிவுறுத்தப்பட்ட புருஷன் அந்த மார்க்கத்தில் வேறு தேசத்திற்கு சென்று அங்குள்ள பதார்த்தங்களைக் காண்கிறானோ அவ்வாறு பார்க்கிறான். ஆகையால் எவ்வாறு ஸ்தானீயத்தின் தர்மம் ரஜ்ஜு சர்ப்பம், கானல் நீர் முதலியவைகளுக்கு சத்தியத்தன்மை இல்லையோ அவ்வாறு ஸ்வப்னத்தில் கண்டு அறியப்பட்ட அபூர்வ பதார்த்தங்களுக்கும் ஸ்தானீதர்மத்துவம் ஆகும். ஆகையால் அவைகளும் சத்தல்ல ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாந்தம் பொருந்தாது என்பது இல்லை.
अपूर्वत्वाशङ्कां निराकृत्य स्वप्नदृष्टान्तस्य पुनः स्वप्नतुल्यतां जाग्रद्भेदानां प्रपञ्चयन्नाह —
(ச.பா) (அ.கை) ஸ்வப்ன திருஷ்டாந்தத்தின் அபூர்வத்தின் சங்கை நிராகரிக்கப்பட்டது இப்பொழுது மறுபடியும் ஜாக்ரத் பதார்த்தங்களின் ஸ்வப்னத்திற்கு ஒப்பான ஜாக்ரத் பேதங்களை விவரித்து கூறுகிறார்
स्वप्नवृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतो गृहीतं सद्दृष्टं वैतथ्यमेतयोः ॥ ९ ॥
कारिका अन्वयः - स्वप्नवृत्तावपि तु अन्तःश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा सत् एतयोः वैतथ्यं दृष्टम् ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத் (பொய்) ஆகும். மேலும் சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்படும் பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது ஆனால் இந்த இரண்டும் மித்தையாகவே பார்க்கப்படுகிறது.
स्वप्नवृत्तावपि स्वप्नस्थानेऽपि अन्तश्चेतसा मनोरथसङ्कल्पितमसत् ; सङ्कल्पानन्तरसमकालमेवादर्शनात् । तत्रैव स्वप्ने बहिश्चेतसा गृहीतं चक्षुरादिद्वारेणोपलब्धं घटादि सदित्येवमसत्यमिति निश्चितेऽपि सदसद्विभागो दृष्टः । उभयोरप्यन्तर्बहिश्चेतः कल्पितयोर्वैतथ्यमेव दृष्टम् ॥ ९ ॥
(ச.பா) - ஸ்வப்ன விருத்தியில் அதாவது ஸ்வப்ன அவஸ்தையில் அந்த: சேதஸில் (உள்ளே உள்ள சேதஸில்) மனோரதத்தால் சங்கல்பிக்கப்பட்டவை அசத். சங்கல்பத்திற்குப்பின் சமகாலத்திலேயே ஸ்வப்னத்தில் காணப்படாததால் பஹிர்(வெளி)சேதஸ்ஸால் கிரஹிக்கப்பட்டு கண் முதலிய இந்திரியங்களின் வாயிலாய் அடைந்த கடம் முதலியவைகளை சத் என்கிறோம். இவ்வாறு அசத்தியம் என்று நிச்சயிக்கப்பட்டாலும் சத், அசத் என்ற விபாகம் தோன்றுகிறது. இரண்டும் அதாவது உள்ளிலும், வெளியிலும் சேத^ால் கல்பிக்கப்பட்டவை மித்தையாகவே காணப்படுகிறது.
जाग्रद्वृत्तावपि त्वन्तश्चेतसा कल्पितं त्वसत् ।
बहिश्चेतोगृहीतं सद्युक्तं वैतथ्यमेतयोः ॥ १० ॥
कारिका अन्वयः - जाग्रत् वृत्तावपि तु अन्तश्चेतसा कल्पितं तु असत् बहिश्चेतसा गृहितं सत् एतयोः वैतथ्यं युक्तम् ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு ஜாக்ரத் அவஸ்தையில் சித்தத்தின் உள்ளே கல்பனை செய்யப்பட்ட பதார்த்தங்கள் அசத், அவ்வாறே சித்தத்திற்கு வெளியில் கிரஹிக்கப்பட்ட பதார்த்தங்கள் சத் என்று அறியப்படுகிறது, ஆனால் இரண்டும் மித்தையே என்று கொள்வதே சரியானதாகும்.
सदसतोर्वैतथ्यं युक्तम् , अन्तर्बहिश्चेतःकल्पितत्वाविशेषादिति । व्याख्यातमन्यत् ॥ १० ॥
(ச.பா) இந்த சத், அசத் பதார்த்தங்கள் மித்தையே, ஏனெனில் ஹிருதயத்திற்கு உள்ளும், வெளியிலும் கல்பனை செய்யப்படுவதால் அவைகளுள் விசேஷம் ஒன்றும் இல்லை. இதனால் எல்லாம் வியாக்கியானம் செய்யப்பட்டதாகிறது.
चोदक आह —
(ச.பா) (அ.கை) பூர்வ பக்ஷீ கூறுகிறான்.
उभयोरपि वैतथ्यं भेदानां स्थानयोर्यदि ।
क एतान्बुध्यते भेदान्को वै तेषां विकल्पकः ॥ ११ ॥
कारिका अन्वयः - उभयोरपि स्थानयोः भेदानां वैतथ्यं यदि कः एतान् भेदान् बुध्यते को वै तेषां विकल्पकः ।
காரிகா அர்த்தம் - (ஜாக்ரத், ஸ்வப்ன ஆகிய) இரண்டு ஸ்தானங்களின் பதார்த்தங்கள் மித்தியாத்துவமானால் அந்த பதார்த்தங்களை யார் அறிகிறார்? மேலும் யார் இந்த கல்பனைகளை செய்கிறார்?
स्वप्नजाग्रत्स्थानयोर्भेदानां यदि वैतथ्यम् , क एतानन्तर्बहिश्चेतःकल्पितान्बुध्यते । को वै तेषां विकल्पकः ; स्मृतिज्ञानयोः क आलम्बनमित्यभिप्रायः ; न चेन्निरात्मवाद इष्टः ॥ ११ ॥
(ச.பா) ஸ்வப்ன ஜாக்ரத் பதார்த்தங்கள் மித்தை என்றால் சித்தத்தின் உள்ளும், வெளியிலும் கல்பிக்கப்படும் பதார்த்தங்களை யார் அறிகிறார். யார் அவைகளை கல்பனை செய்கிறார்கள்? தாத்பர்யம் என்ன வென்றால் நிராத்மவாதமும் இஷ்டம் என்றால் கூறப்பட்ட ஸ்மரணம் (ஸ்வப்னம்) ஞானம் (ஜாக்கிரம்) இவைகளின் ஆலம்பனம் யார்?
कल्पयत्यात्मनात्मानमात्मा देवः स्वमायया ।
स एव बुध्यते भेदानिति वेदान्तनिश्चयः ॥ १२ ॥
कारिका अन्वयः - देवः आत्मा स्वमायया आत्मानम् आत्मना कल्पयति स एव भेदान् बुध्यते इति वेदान्त निश्चयः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வயம்பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் தானே கல்பனை செய்கிறது. மேலும் அதுவே எல்லா பேதங்களையும் அறிகிறது. இது வேதாந்த நிச்சயமாகும்.
स्वयं स्वमायया स्वमात्मानमात्मादेव आत्मन्येव वक्ष्यमाणं भेदाकारं कल्पयति रज्ज्वादाविव सर्पादीन् , स्वयमेव च तान्बुध्यते भेदान् , तद्वदेवेत्येवं वेदान्तनिश्चयः । नान्योऽस्ति ज्ञानस्मृत्याश्रयः । न च निरास्पदे एव ज्ञानस्मृती वैनाशिकानामिवेत्यभिप्रायः ॥ १२ ॥
(ச.பா) ஸ்வயம் பிரகாச ஆத்மா தன்னுடைய மாயையால் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் தன்னிடத்தில் தன்னையே இனிக் கூறப்போகிற அறியக் கூடிய பேதரூபமாய் கல்பனை செய்கிறது, மேலும் தானே அந்த பேதங்களை அறிகிறது. இவ்வாறு இது வேதாந்த நிச்சயமாகும். இதன் தாத்பரியம் என்னவெனில் வைநாசிகர்கள் (பௌத்தர்கள்) கூறுவது போல் ஞானமும், ஸ்மிருதியும் ஆதாரம் அற்றது அல்ல.
सङ्कल्पयन्केन प्रकारेण कल्पयतीत्युच्यते ।
(ச.பா) (அ.கை) இந்த சங்கல்பிக்கப்பட்டது எந்தப் பிரகாரம் கல்பனை செய்யப்படுகிறது? அதைக் குறித்து கூறப்போகிறார்-
विकरोत्यपरान्भावानन्तश्चित्ते व्यवस्थितान् ।
नियतांश्च बहिश्चित्त एवं कल्पयते प्रभुः ॥ १३ ॥
कारिका अन्वयः - प्रभुः अपरान् भावान् अन्तश्चित्ते व्यवस्थितान् नियतान् बहिश्चित्तः एवं विकरोति ।
காரிகா அர்த்தம் - பிரபு ஆத்மா, தன்னுடைய அந்தக்கரணத்தில் (வாசனாரூபமாய்) இருக்கும் மற்ற(லௌகிக) பாவங்களை நாநா ரூபமாகச் செய்கிறது. அவ்வாறே பஹிர்சித்தமாகி (வெளிச்சித்தமாகி) பிருதிவீ முதலிய நியத, அநியத பதார்த்தங்களையும் இவ்வாறு கல்பனை செய்கிறது.
विकरोति नाना करोति अपरान् लौकिकान् भावान् पदार्थाञ्शब्दादीनन्यांश्च अन्तश्चित्ते वासनारूपेण व्यवस्थितानव्याकृतान् नियतांश्च पृथिव्यादीननियतांश्च कल्पनाकालान् बहिश्चित्तः सन् , तथा अन्तश्चित्तो मनोरथादिलक्षणानित्येवं कल्पयति, प्रभुः ईश्वरः, आत्मेत्यर्थः ॥ १३ ॥
(ச.பா) அது சித்தத்திற்கு உள்ளே வாசனாரூபமாய் இருக்கும் அவ்யாகிருத லௌகிக பாவங்களான சப்த முதலிய பதார்த்தங்களை அவ்வாறே மற்ற பிருதிவீ முதலிய நியத கல்பனா காலங்களில் உண்டாகும் அநியத பதார்த்தங்களை பஹிர் சித்தமாகி, அவ்வாறே முதலிய ரூப பதார்த்தங்களை உள்சித்தத்தில் நாநாவாக்குகிறது. இவ்வாறு பிரபு-ஈஸ்வரன் என்று ஆத்மா கல்பனை செய்கிறது.
स्वप्नवच्चित्तपरिकल्पितं सर्वमित्येतदाशङ्क्यते — यस्माच्चित्तपरिकल्पितैर्मनोरथादिलक्षणैश्चित्तपरिच्छेद्यैर्वैलक्षण्यं बाह्यानामन्योन्यपरिच्छेद्यत्वमिति ।
(ச.பா) (அ.கை) ஸ்வப்னத்திற்கு சமானமாக எல்லாம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதாகிறது. இந்த விஷயத்தில் சந்தேஹம் எழுகிறது. ஏனெனில் கேவலம் சித்தத்தால் கல்பிக்கப்பட்டதும், சித்தத்தால் மனோரதம் முதலிய பாஹ்ய பதார்த்தங்களை பரிச்சேதம் செய்வது அந்நோன்ய பரிச்சேதரூப விலக்ஷணம் உடையதாகிறது (ஆகையால் ஸ்வப்னம் போல் மித்தியாவாக ஆகாது).
सा न युक्ताशङ्का ।
(ச.பா) (சமாதானம்) இந்த சங்கை சரியல்ல.
चित्तकाला हि येऽन्तस्तु द्वयकालाश्च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषो नान्यहेतुकः ॥ १४ ॥
कारिका अन्वयः - ये अन्तस्तु चित्तकालाः ये बहिः द्वयकालाः ते सर्वे कल्पिता एव न विशेषो अन्यहेतुकः ।
காரிகா அர்த்தம் - எந்த ஆந்தரிக பதார்த்தம் கேவலம் கல்பனா காலம் வரையிலேயே உள்ளதாகும். எந்த பாஹ்ய பதார்த்தங்கள், (இரண்டு காலமுடையது) ஒன்றுக் கொன்று பரிச்சேதம் செய்யும் அவையாவும் கல்பிதமாகும், அவைகளுக்குள் விசேஷத்தன்மைக்கு வேறு ஏதும் காரணம் இல்லை.
चित्तकाला हि येऽन्तस्तु चित्तपरिच्छेद्याः, नान्यश्चित्तकालव्यतिरेकेण परिच्छेदकः कालो येषाम् , ते चित्तकालाः ; कल्पनाकाल एवोपलभ्यन्त इत्यर्थः । द्वयकालाश्च भेदकाला अन्योन्यपरिच्छेद्याः, यथा आगोदोहनमास्ते ; यावदास्ते तावद्गां दोग्धि ; यावद्गां दोग्धि तावदास्ते, तावानयमेतावान्स इति परस्परपरिच्छेद्यपरिच्छेदकत्वं बाह्यानां भेदानाम् , ते द्वयकालाः । अन्तश्चित्तकाला बाह्याश्च द्वयकालाः कल्पिता एव ते सर्वे । न बाह्यो द्वयकालत्वविशेषः कल्पितत्वव्यतिरेकेणान्यहेतुकः । अत्रापि हि स्वप्नदृष्टान्तो भवत्येव ॥ १४ ॥
(ச.பா) - எந்த கல்பனா த்ருஷ்யங்கள் சித்தத்தால் தன்னிலேயே படைக்கப்பட்டு, மனோரத ரூபமாய் உள்ளதோ அவை அந்த சிந்திக்கும் காலத்தைத் தவிர வேறு காலத்தில் இல்லாதவையாகும் (கல்பனாகாலத்தில் மட்டும் உள்ளவையாகும். எந்த திருஷ்யங்கள் மனதிற்கு வெளியில் காணப்படுகின்றனவோ அவை இரண்டு காலங்களிலும் நிலைபெற்றவை ஆகும். அதாவது அவ்விரு காலங்களும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டதாகும். மேலும் அஃது முந்தையதான மற்றொரு காலத்துடனும், பிந்தையதான மற்றொரு காலத்துடனும் வரையறுக்கப்பட்டுள்ளதால் (இணைக்கப்பட்டுள்ளதால்) அவை வேறுவேறு காலத்தில் நிலைபெற்றவை போல் எண்ணப்படுகின்றன. எவ்வாறு எனில் மாடு கறக்கும் வரை தேவதத்தன் இருப்பான் என்ற இடத்தில் எவ்வளவு காலம் வரை தேவதத்தன் இருக்கிறானோ அதற்குள் மாடுகறத்தலை முடிக்கின்றான் என்று பல காலம்வரை உள்ள பிரத்தியபிக்ஞையை இதனால் வெளியிடுகிறார். மேலும் இக்குடமானது எந்தக் காலம்வரைத் தன்னுடைய செயலை நிறைவேற்றுவதற்கு சக்தி படைத்ததாய் உள்ளதோ அந்தக் காலம்வரை இருக்கும் நிலைபெற்றதாக உள்ளது என்றும் கூறப்படுவதாலும், குடம் நிலைபெற்றலும், தேவதத்தன் உள்ளதும், மாடுகறத்தலும் ஒன்றைஒன்று வரையருக்கும் வகையில் பிணைக்கப்பட்டுள்ளதால் மனதிற்கு வெளியில் உள்ள பேதங்கள் இரண்டு காலங்களைக் கொண்டவைகள் என்று கூறப்பட்டன அந்த இரண்டு திருஷ்யங்களும் கல்பிக்கப்பட்டவையேயாகும் முற்கூறப்பட்ட கல்பனையைத் தவிர வேறுகாரணத்தால் உண்டானவை அல்ல. எனவே இங்கும் ஸ்வப்ன திருஷ்ட்டாந்தம் பொருந்தும்.
अव्यक्ता एव येऽन्तस्तु स्फुटा एव च ये बहिः ।
कल्पिता एव ते सर्वे विशेषस्त्विन्द्रियान्तरे ॥ १५ ॥
कारिका अन्वयः - ये अन्तस्तु अव्यक्ता एव च ये बहिः स्फुटा एव ते सर्वे कल्पिता एव विशेषस्तु इन्द्रियान्तरे ।
காரிகா அர்த்தம் - ஆந்தரிக (உள்ளே உள்ள) பதார்த்தம் அவ்யக்தமாகும். வெளியில் உள்ளவை ஸ்பஷ்ட்டமாய் விளங்கக்கூடியவை, ஆனால் எல்லாம் கல்பிதமேயாகும். அதன் விசேஷத்தன்மை கேவல இந்திரிய பேதங்களினால் ஆனதாகும்.
यदपि अन्तरव्यक्तत्वं भावानां मनोवासनामात्राभिव्यक्तानां स्फुटत्वं वा बहिश्चक्षुरादीन्द्रियान्तरे विशेषः, नासौ भेदानामस्तित्वकृतः, स्वप्नेऽपि तथा दर्शनात् । किं तर्हि ? इन्द्रियान्तरकृत एव । अतः कल्पिता एव जाग्रद्भावा अपि स्वप्नभाववदिति सिद्धम् ॥ १५ ॥
(ச.பா) - சித்தத்தின் வாசனை மாத்திரத்தாலே அபிவியக்தமாகும் (வெளிப்படும்) பதார்த்தங்கள் அந்தக்கரணத்தில் அவ்யக்தமாய் மேலும் வெளியில் உள்ள கண்முதலிய மற்ற இந்திரியங்களுக்கு அவை தெளிவானவைகளே. அந்த விசேஷமானது பதார்த்தங்களின் சத்தையின் காரணத்தால் அல்ல. ஏனெனில் அவ்வாறு ஸ்வப்னத்திலும் காணப்படுகிறது ஆனால் இதற்குக் காரணம் என்ன? இந்திரியங்களின் பேதமே காரணம். இதனால் சித்திக்கிறது என்னவெனில் ஸ்வப்ன பதார்த்தத்திற்கு ஒப்பானதே ஜாக்ரத் பதார்த்தமும் ஆகும்.
बाह्याध्यात्मिकानां भावानामितरेतरनिमित्तनैमित्तिकतया कल्पनायाः किं मूलमित्युच्यते ।
(ச.பா) அ.கை) பாஹ்ய ஆந்தரிக பதார்த்தங்கள் பரஸ்பரம் நிமித்தமாயும், நைமித்திகமாயும் கல்பனை செய்யப்படுவதற்கு என்ன காரணம் எனில், கூறப்படுகிறது.
जीवं कल्पयते पूर्वं ततो भावान्पृथग्विधान् ।
बाह्यानाध्यात्मिकांश्चैव यथाविद्यस्तथास्मृतिः ॥ १६ ॥
कारिका अन्वयः - पूर्वं जीवं कल्पयते ततः पृथग्विधान् बाह्यान् आध्यात्मिकांश्चैव भावान् कल्पयते यथाविद्यः तथा स्मृतिः ॥
காரிகா அர்த்தம் - எல்லாவற்றிற்கும் முதலில் ஜீவனை கல்பிக்கிறது. அதன்பின் பலதரப்பட்ட பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களை கல்பனை செய்கிறது. அந்த ஜீவனுக்கு எவ்வாறு விக்ஞானம் உண்டானதோ அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது.
जीवं हेतुफलात्मकम् ‘अहं करोमि, मम सुखदुःखे’ इत्येवंलक्षणम् । अनेवंलक्षण एव शुद्ध आत्मनि रज्ज्वामिव सर्पं कल्पयते पूर्वम् । ततस्तादर्थ्येन क्रियाकारकफलभेदेन प्राणादीन्नानाविधान्भावान्बाह्यानाध्यात्मिकांश्चैव कल्पयते ।
(ச.பா) - முதலில் நான் செய்கிறேன், என்னுடைய சுகதுக்கங்கள் என்பன போன்ற லக்ஷணத்துடன் கூடிய ஹேது பாலாத்மகமான ஜீவனை ரஜ்ஜுவில் சர்ப்பத்தைக் கல்பிப்பதுபோல் விபரீத லக்ஷணமுடைய சுத்த ஆத்மாவில் கல்பிக்கப்படுகிறது. பிறகு ஜீவபாவத்தை அடைந்ததால் அதில் கிரியா. காரக பலபேதங்களுடன் பிராணன் முதலானவைகளையும் பலதரப்பட்ட பாஹ்யங்களாயும், ஆத்யாத்மிகங்களாயும் பதார்த்தங்களை கல்பனை செய்கிறது.
तत्र कल्पनायां को हेतुरित्युच्यते — योऽसौ स्वयं कल्पितो जीवः सर्वकल्पनायामधिकृतः, सः यथाविद्यः यादृशी विद्या विज्ञानमस्येति यथाविद्यः, तथाविधैव स्मृतिस्तस्येति तथास्मृतिर्भवति स इति । अतो हेतुकल्पनाविज्ञानात्फलविज्ञानम् , ततो हेतुफलस्मृतिः, ततस्तद्विज्ञानम् , ततः तदर्थक्रियाकारकतत्फलभेदविज्ञानानि, तेभ्यस्तत्स्मृतिः, तत्स्मृतेश्च पुनस्तद्विज्ञानानि इत्येवं बाह्यानाध्यात्मिकांश्च इतरेतरनिमित्तनैमित्तिकभावेनानेकधा कल्पयते ॥ १६ ॥
(ச.பா) இந்த கல்பனைகளுக்கு ஹேது என்ன என்பது கூறப்படுகிறது. எந்த ஒரு ஸ்வயம்கல்பனை செய்கிற ஜீவன் எல்லா வகையான கல்பனைகளுக்கும் அதிகாரியாவான். அவ்வாறே வித்யா உடையவனாகிறான். அதாவது எவ்வாறு வித்யையோ அவ்வாறு விக்ஞானத்தை அடைகிறான். அவ்வாறே ஸ்மிருதியும் உண்டாகிறது. ஆகையால் அவனே ஸ்மிருதியையும் உடையவனாகிறான். இவ்வாறு (அன்னம் முதலியவை) ஹேதுவின் கல்பனையின் விக்ஞானத்தால் திருப்தி முதலியவை) பலத்தின் விக்ஞானமாகிறது. அதுவே (மறுநாள்) அந்த ஹேது பலன் இவைகளின் ஸ்மிருதி உண்டாகிறது. மேலும் அந்த ஸ்மிருதியினால் அதன் ஞானம் அவைகளுக்கு ஆகவேண்டிய (சமையல் முதலியவை) கர்ம, (அரிசி முதலியவை) காரகம் மேலும் அதன் (திருப்தி முதலிய) பலபேதங்களின் ஞானம் உண்டாகிறது. அதிலிருந்து அதற்கு ஸ்மிருதி ஏற்படுகிறது. அவ்வாறே அந்த ஸ்மிருதியிலிருந்து (ஹேது முதலிய) விக்ஞானம் உண்டாகிறது இவ்வாறு அந்த ஜீவன்பாஹ்ய, ஆத்யாத்மிக பதார்த்தங்களின் பரஸ்பர நிமித்த, நைமித்திக பாவத்தால் அநேக விதமாய் கல்பனை செய்கிறான்.
तत्र जीवकल्पना सर्वकल्पनामूलमित्युक्तम् ; सैव जीवकल्पना किंनिमित्तेति दृष्टान्तेन प्रतिपादयति —
(ச.பா) (அ.கை) இதுவரை ஜீவ கல்பனைதான் எல்லா கல்பனைகளுக்கும் மூலம் என்று கூறப்பட்டது. அந்த ஜீவ கல்பனைக்கு எது நிமித்தம் என்பதை திருஷ்டாந்தத்தால் விளக்குகிறார்.
अनिश्चिता यथा रज्जुरन्धकारे विकल्पिता ।
सर्पधारादिभिर्भावैस्तद्वदात्मा विकल्पितः ॥ १७ ॥
कारिका अन्वयः - यथा अन्धकारे रज्जुः अनिश्चिताः सर्पधारादिभिः भावैः विकल्पिताः तद्वत् आत्मा विकल्पितः ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு தனது ஸ்வரூபம் நிச்சயம் ஆகாதபொழுது ரஜ்ஜுவில் அந்தகாரத்தால் (இருளினால்) சர்ப்பம், தாரை முதலியவை கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறே ஆத்மாவிடத்திலும் விகல்பிக்கப்படுகின்றன.
यथा लोके स्वेन रूपेण अनिश्चिता अनवधारिता एवमेवेति रज्जुः मन्दान्धकारे किं सर्प उदकधारा दण्ड इति वा अनेकधा विकल्पिता भवति पूर्वं स्वरूपानिश्चयनिमित्तम् । यदि हि पूर्वमेव रज्जुः स्वरूपेण निश्चिता स्यात् , न सर्पादिविकल्पोऽभविष्यत् , यथा स्वहस्ताङ्गुल्यादिषु ; एष दृष्टान्तः । तद्वद्धेतुफलादिसंसारधर्मानर्थविलक्षणतया स्वेन विशुद्धविज्ञप्तिमात्रसत्ताद्वयरूपेणानिश्चितत्वाज्जीवप्राणाद्यनन्तभावभेदैरात्मा विकल्पित इत्येष सर्वोपनिषदां सिद्धान्तः ॥ १७ ॥
(ச.பா) - எவ்வாறு தன்னுடைய ஸ்வஸ்வரூபம் நிச்சயம் ஆகாததால் அதாவது எவ்வாறு தனது ஸ்வரூபத்தை இன்னது என்று மந்தாந்தகாரத்தில் ரஜ்ஜுவானது சர்ப்பமா? ஜலதாரையா? கம்பா? என்று நிச்சயம் செய்ய முடியவில்லையோ அவ்வாறு முதலிலேயே ஸ்வஸ்வரூபத்தை நிச்சம் செய்யாததின் காரணத்தால் அநேகவிதமான கல்பனைகள் உண்டாகிறது. முதலிலேயே ரஜ்ஜு என்ற நிச்சயம் இருந்தால் சர்ப்பம் முதலிய விகல்பங்கள் தோன்றாது. எவ்வாறு எனில் கைகளில் உள்ள விரல்கள் போலாகும், இது ஒரு திருஷ்ட்டாந்தம். இவ்வாறு ஹேது, பலம் முதலிய சம்சார தர்ம ரூப அனர்த்தத்தை விட வேறான தன்னுடைய விசுத்த, விக்ஞப்தி மாத்திர, அத்விதீய சத்தா ஸ்வரூபத்தால் நிச்சயம் ஆகாததின் காரணத்தால் ஆத்மா, ஜீவன் அவ்வாறே பிராணன் முதலிய அனந்த விபின்ன பாவனைகளால் விகல்பிக்கப்படுகிறது. இது எல்லா உபநிஷத்துக்களின் சித்தாந்தமாகும்.
निश्चितायां यथा रज्ज्वां विकल्पो विनिवर्तते ।
रज्जुरेवेति चाद्वैतं तद्वदात्मविनिश्चयः ॥ १८ ॥
कारिका अन्वयः - यथा निश्चितायां रज्ज्वां विकल्पः विनिवर्तते रज्जुरेवेति अद्वैतं च तद्वत् आत्मविनिश्चयः ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ரஜ்ஜு நிச்சயம் ஏற்பட்ட உடன் அதில் உள்ள (சர்ப்பாதி) விகல்பங்கள் நிவிர்த்தி உண்டாகிறதோ அப்பொழுது இது ரஜ்ஜு என்ற அத்வைத நிச்சயம் உண்டாகிறது. அவ்வாறே ஆத்மாவின் நிச்சயம் உண்டாகிறது.
रज्जुरेवेति निश्चये सर्पादिविकल्पनिवृत्तौ रज्जुरेवेति चाद्वैतं यथा, तथा नेति नेतीति सर्वसंसारधर्मशून्यप्रतिपादकशास्त्रजनितविज्ञानसूर्यालोककृतात्मविनिश्चयः ‘आत्मैवेदं सर्वमपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः सबाह्याभ्यन्तरो ह्यजोऽजरोऽमृतोऽभय एक एवाद्वयः’ इति ॥ १८ ॥
(ச.பா) - ரஜ்ஜுதான் என்ற நிச்சயம் ஏற்பட்டவுடன் எல்லா விகல்பங்களும் நிவிர்த்தி ஆகும்பொழுது ரஜ்ஜு தான் என்ற அத்வைத பாவம் அறியப்படுவது எவ்வாறோ அவ்வாறு “नेति नेति” (நேதி, நேதி = இது இல்லை, இது இல்லை) என்ற சர்வசம்சாரதர்ம இல்லாததை பிரதிபாதிக்கின்ற சாஸ்த்திரத்தினால் உண்டான விக்ஞான ரூபசூரிய பிரகாசத்தால் ஆத்மாவின் நிச்சயம் இவ்வாறு உண்டாகிறது. “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேஇதம் சர்வம் = ஆத்மாவே இவை எல்லாம்) “अपूर्वमनपरमनन्तरमबाह्यम्” (அபூர்வமனபரமனந்தரமபாஹ்யம் = காரணமற்றவர், காரியமற்றவர், உள்ளில்லாதவர் வெளியில்லாாதவர்) “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ: = வெளியிலும், உள்ளிலும் அஜன்) अजरोऽमरोऽमृतोऽभय (அஜரோ அமரோ அம்ருதே அபய: = மூப்பற்றவர் இறவாதவர், அழியாதவர் பயமில்லாதவர்) “एकएवाद्वयः” ஏக ஏவாத்வய: = ஒன்றே அத்விதீயம் என்று.
यदि आत्मैक एवेति निश्चयः, कथं प्राणादिभिरनन्तैर्भावैरेतैः संसारलक्षणैर्विकल्पित इति ? उच्यते शृणु —
(ச.பா) (அ.கை) இந்த விஷயம் இவ்வாறு ஆத்மா ஒன்றே என்று நிச்சயிக்கப்பட்டபொழுது அந்த இந்த சம்சாரரூப பிராணன் முதலிய முடிவில்லாத பாவங்களால் எவ்வாறு விகல்பிக்கப்படுகிறது. இந்த விஷயத்தைக் குறித்துக் கூறப்போகிறார். கேள்-
प्राणादिभिरनन्तैस्तु भावैरेतैर्विकल्पितः ।
मायैषा तस्य देवस्य ययायं मोहितः स्वयम् ॥ १९ ॥
कारिका अन्वयः - एतैः अनन्तैः प्राणादिभिः भावैः च विकल्पितः तस्य देवस्य एषा माया ।
காரிகா அர்த்தம் - எது இந்த பிராணன் முதலிய முடிவற்றபாவங்களால் விகல்பிக்கப்பட்டு இருக்கிறதோ அது அந்த பிரகாசமயமான ஆத்மதேவனுடைய மாயையாகும். அதனால் அது தானே மோஹமடைந்துள்ளதாய் இருக்கிறது.
मायैषा तस्यात्मनो देवस्य । यथा मायाविना विहिता माया गगनमतिविमलं कुसुमितैः सपलाशैस्तरुभिराकीर्णमिव करोति, तथा इयमपि देवस्य माया, यया अयं स्वयमपि मोहित इव मोहितो भवति ।
‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्युक्तम् ॥ १९ ॥
(ச.பா) - அந்த ஆத்ம தேவனுடையது இந்தமாயை. எவ்வாறு மாயாவியினால் ஏவப்பட்ட மாயை, மிகபரிசுத்தமான ஆகாசத்தை மலர்களுடன் நிறைந்த பலாச மரத்தால் நிரம்பியது போல் செய்கிறதோ அவ்வாறு ஸ்வயமாகவே மோஹிக்கச் செய்யப்பட்டது போல் மோஹத்தால் பீடிக்கப்பட்டதாய் இருக்கிறது. “मम माया दुरत्यया” (மம மாயாதுரத்யயா = என்னுடைய மாயை எளிதில் கடக்க முடியாது) என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
प्राण इति प्राणविदो भूतानीति च तद्विदः ।
गुणा इति गुणविदस्तत्त्वानीति च तद्विदः ॥ २० ॥
कारिका अन्वयः - प्राणः इति प्राणविदः भूतानि इति च तद्विदः गुणाः इति गुणविदः तत्वानि इति च तद्विदः ।
காரிகா அர்த்தம் - (பிராண உபாசகர்கள்) பிராணனே ஜகத்திறகுக் காரணம் என்கிறார்கள் (பூதங்கள் அறிந்தவர்கள்) நான்கு பூதங்களே பரமார்த்தம் என்கிறார்கள் (சாங்கியவாதிகள்) குணம்தான் சிருஷ்டிக்கு ஹேது என்று கூறுகிறார்கள், அவ்வாறே தத்துவக்ஞர்கள் (சைவர்கள்) ஆன்மா, அவித்தை, சிவன் என்ற இந்த தத்துவங்களே ஜகத்திற்குக் காரணம் என்று கூறுவர்.
पादा इति पादविदो विषया इति तद्विदः ।
लोका इति लोकविदो देवा इति च तद्विदः ॥ २१ ॥
कारिका अन्वयः - पादाः इति पादविदः विषयाः इति तद्विदः लोकाः इति लोकविदः देवाः इति च तद्विदः ॥
காரிகா அர்த்தம் - பாதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள் - விச்வம் முதலிய பாதங்கள் எல்லா வியவஹாரத்திற்கும் காரணம் என்கிறார்கள். விஷயத்தை அறிந்த வாத்சயனாயனார் முதலியவர்கள் சப்த முதலிய ஐந்து விஷயங்களை சத்தியம் என்கிறார்கள். லோகவேதாக்கள் அதாவது பௌராணிகர்கள் லோகமே சத்தியம் என்கிறார்கள். அவ்வாறேதேவ உபாசகர்கள் இந்திரன் முதலியோரே சிருஷ்ட்டியை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
वेदा इति वेदविदो यज्ञा इति च तद्विदः ।
भोक्तेति च भोक्तृविदो भोज्यमिति च तद्विदः ॥ २२ ॥
कारिका अन्वयः - वेदाः इति वेदविदः यज्ञा इति च तद्विदः भोक्ता इति भोक्तृविदः भोज्यम् इति च तद्विदः ।
காரிகா அர்த்தம் - வேதவித்துக்கள் கூறுகிறார்கள் ரிக் முதலிய நான்கு வேதங்களே பரமார்த்தமென்று. யக்ஞத்தை அறிந்தவர்கள் யக்ஞமே சம்சாரத்திற்கு ஆதிகாரணம் என்கிறார்கள். போக்தாவை அறிந்தவர்கள் போக்தாதான் முக்கியமானது என்கிறார்கள். போஜ்யத்தின மர்மத்தை அறிந்தவர்கள் போஜ்ஜிய பதார்த்தங்களின் சாரத்தன்மையைக் கூறுகிறார்கள்.
सूक्ष्म इति सूक्ष्मविदः स्थूल इति च तद्विदः ।
मूर्त इति मूर्तविदोऽमूर्त इति च तद्विदः ॥ २३ ॥
कारिका अन्वयः - सूक्ष्मः इति सूक्ष्मविदः स्थूलः इति च तद्विदः मूर्त इति मूर्तविदः अमूर्त इति तद्विदः ।
காரிகா அர்த்தம் - சூக்ஷ்மத்தை அறிந்தவர்கள் ஆத்மா சூக்ஷ்மம் அதாவது அணுபரிமாணமுள்ளது என்பார்கள். ஸ்தூலவாதிகள் அதாவது சாருவாகர்கள் அதுஸ்தூலம் என்கிறார்கள். மூர்த்தவாதி அதாவது சாகார உபாசகர்கள் பரமார்த்த வஸ்து மூர்த்தி ரூபமாகும் என்பார்கள். அவ்வாறே அமூர்த்தவாதிகள் அதாவது சூன்ய வாதிகள் அது மூர்த்தி அற்றது என்பார்கள்.
काल इति कालविदो दिश इति च तद्विदः ।
वादा इति वादविदो भुवनानीति तद्विदः ॥ २४ ॥
कारिका अन्वयः - कालः इति कालविदः दिश इति च तद्विदः वादा इति वाद विदः भुवनानि इति तद्विदः ॥
காரிகா அர்த்தம் - காலத்தை அறிந்தவர்கள் அதாவது ஜ்யோதிடர்கள் காலமே பரமார்த்தம் என்கிறார்கள். திசைகளை அறிந்தவர்கள் அதாவது ஸ்வரோதயம் முதலிய நூ ல்களை எழுதியவர்கள் திசைகளை சத்திய வஸ்து என்கின்றனர். வாதிகள் அதாவது தாதுவாதம், மந்திரவாதம் அறிந்தோார் வாதமே சத்திய வஸ்து என்பர். அவ்வாறே பூகோளாதி விக்ஞானத்தை அறிந்தோர் (பதிநான்கு) புவனங்களே பரமார்த்த வஸ்து என்று.
मन इति मनोविदो बुद्धिरिति च तद्विदः ।
चित्तमिति चित्तविदो धर्माधर्मौ च तद्विदः ॥ २५ ॥
कारिका अन्वयः - मनः इति मनोविदः बुद्धिरिति च तद्विदः चित्तमिति चित्तविदः धर्माधर्मौ च तद्विदः ॥
காரிகா அர்த்தம் - மனதை அறிந்தவர்கள் மனமே ஆத்மா என்று, பௌத்தர்கள் புத்தி ஆத்மா என்கிறார்கள், சித்தத்தை அறிந்தவர்கள் சித்தம் சத்திய வஸ்து என்று கூறுகிறார்கள். அவ்வாறே தர்மத்தை அறிந்தவர்கள் அதாவது மீமாம்சர்கள் தர்மாதர்மங்களை பரமார்த்தமென்று கருதுகிறார்கள்.
पञ्चविंशक इत्येके षड्विंश इति चापरे ।
एकत्रिंशक इत्याहुरनन्त इति चापरे ॥ २६ ॥
कारिका अन्वयः - पञ्चविंशकः इति एके षड्विंश अपरे एकत्रिंशकः इति आहुः अनन्त इति च अपरे ॥
காரிகா அர்த்தம் - சாங்கியவாதிகள் இருபத்தி ஐந்து தத்துவங்களையும், பாதஞ்சலியை அனுசரிப்பவர்கள் இருபத்தி ஆறு தத்துவங்களையும். பாசுபதர்கள் முத்தி ஓர் தத்துவங்களையும் சத்தியம் என்று கருதுகிறார்கள் அவ்வாறே வேறு மதவாதி முடிவற்ற பேதங்களை பரமார்த்தம் என்று நினைக்கிறார்கள்.
लोकांल्लोकविदः प्राहुराश्रमा इति तद्विदः ।
स्त्रीपुंनपुंसकं लैङ्गाः परापरमथापरे ॥ २७ ॥
कारिका अन्वयः - लोकान् लोकविदः प्राहुः आश्रमाः इति तद्विदः स्रीपुंनपुंसकं लैङ्गाः अथ अपरे परापरे ॥
காரிகா அர்த்தம் - லௌகிகர்கள் உலகத்தில் ரமித்தலை சத்தியம் என கருதுகிறார்கள். ஆஸ்ரமவாதிகள் ஆஸ்ரமத்தை பிரதானமாக கருதுகிறார்கள். லிங்கவாதிகள், ஸ்த்ரீலிங்கம், புல்லிங்கம், நபும்சகலிங்கம் இவைகளை பிரதானமாக கொள்கின்றனர். மற்றவர்கள் பர, அபர பிரஹ்மத்தை பரமார்த்தம் என்று கருதுகிறார்கள்.
सृष्टिरिति सृष्टिविदो लय इति च तद्विदः ।
स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥ २८ ॥
कारिका अन्वयः - सृष्टिरिति सृष्टिविदः लय इति च तद्विदः स्थितिरिति स्थितिविदः सर्वे चेह तु सर्वदा ॥
காரிகா அர்த்தம் - ஸ்ருஷ்டியை அறிந்தவர்கள் ஸ்ருஷ்டி சத்தியம் என்கிறார்கள் லயவாதிகள் லயம் சத்தியம் என்று கூறுகிறார்கள். அவ்வாறே ஸ்திதிவேதாக்கள் ஸ்திதியை சத்தியம் எனக் கூறுகிறார்கள். இவ்வாறு எல்லா விதமான வாதங்களையும் இந்த ஆத்மதத்துவத்தில் எப்பொழுதும் கல்பிக்கிறார்கள்.
प्राणः प्राज्ञो बीजात्मा, तत्कार्यभेदा हीतरे स्थित्यन्ताः । अन्ये च सर्वे लौकिकाः सर्वप्राणिपरिकल्पिता भेदा रज्ज्वामिव सर्पादयः । तच्छून्ये आत्मन्यात्मस्वरूपानिश्चयहेतोरविद्यया कल्पिता इति पिण्डितोऽर्थः । प्राणादिश्लोकानां प्रत्येकं पदार्थव्याख्याने फल्गुप्रयोजनत्वात्सिद्धपदार्थत्वाच्च यत्नो न कृतः ।
(ச.பா) பிராணன் பிராக்ஞனுக்கு பீஜாத்மா ஆவான். முன்பு கூறப்பட்ட ஸ்திதி வரையிலும் உள்ள எல்லா விகல்பங்களும் அதன் காரிய பேதங்களாகும். எல்லா பிராணிகளினால் பரிகல்பிக்கப்பட்ட மற்றஎல்லாலௌகிக தர்மங்கள் ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாய் அந்த விகல்பங்கள் அற்ற ஆத்மாவிடத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயம் செய்யாததின் காரணமாய் அவித்தையினால் கல்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்லோகத்தின் பொது அர்த்தமாகும். பிராணாதி ஸ்லோகத்தின் ஒவ்வொரு பதத்தின் அர்த்தத்தை வியாக்கியானம் செய்வது அல்ப பிரயோஜனமாய் இருப்பதாலும், சித்த பதார்த்தமாய் இருப்பதாலும் அதில் பிரயத்தனம் செய்யவில்லை.
किं बहुना — ॥ २८ ॥
(ச.பா) (அ.கை) அதிகம் கூறவேண்டியது என்ன?
यं भावं दर्शयेद्यस्य तं भावं स तु पश्यति ।
तं चावति स भूत्वासौ तद्ग्रहः समुपैति तम् ॥ २९ ॥
कारिका अन्वयः - यस्य यं भावं दर्शयेत् सः तं भावं तु पश्यति सः तं च असौ भूत्वा अवति तद्ग्रहः तं समुपैति ।
காரிகா அர்த்தம் - (குருவால்) எந்த பாவனை காட்டப்பட்டதோ அது ஆத்மஸ்வரூபமாய் பார்க்கப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் அந்த சாதகன் அந்த பாவரூபமாகி ரக்ஷிக்கப்படுகிறான், பின் அந்த பாவத்திலேயே ஈடுபாடு உடையவன் அந்த ஆத்ம பாவத்தை அடைகிறான்.
प्राणादीनामन्यतममुक्तमनुक्तं वा अन्यं यं भावं पदार्थं दर्शयेद्यस्याचार्योऽन्यो वा आप्तः इदमेव तत्त्वमिति, स तं भावमात्मभूतं पश्यत्ययमहमिति वा ममेति वा, तं च द्रष्टारं स भावोऽवति, यो दर्शितो भावः, असौ स भूत्वा रक्षति ; स्वेनात्मना सर्वतो निरुणद्धि । तस्मिन्ग्रहस्तद्ग्रहस्तदभिनिवेशः इदमेव तत्त्वमिति स तं ग्रहीतारमुपैति, तस्यात्मभावं निगच्छतीत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) எந்த ஒரு சாதகனுக்கு எந்த ஒரு பாவத்தை அதாவது முற்கூறப்பட்ட பிராணன் முதலான பாவங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது இங்கு உதாரணத்துடன் கூறப்படாத ஏதாவது ஒரு பாவத்தையோ (பதார்த்தத்தையோ) அவனுடைய ஆசாரியனோ அல்லது மிகவும் ஆப்தனான ஒருவனோ இதுவே தத்துவம் என்று காட்டுகிறானோ அப்படிக் காட்டப்பட்ட சாதகன் பரமார்த்த ஆன்மதத்துவம் என்று காட்டப்பட்ட பாவத்தை இதுவே நான் என்றோ அல்லது எனது என்றோ பார்க்கிறானோ அந்த பாவமானது திருஷ்டாவான சாதகனையும், காப்பாற்றுகிறது. அவனை இதிலேயே ஈடுபாடு கொள்ளச்செய்கிறது. இதுவே தத்துவம் என்ற முறையில் அவன் ஆத்மபாவத்தை அடைகிறான்.
एतैरेषोऽपृथग्भावैः पृथगेवेति लक्षितः ।
एवं यो वेद तत्त्वेन कल्पयेत्सोऽविशङ्कितः ॥ ३० ॥
कारिका अन्वयः - एतैः अपृथक् भावैः एषः पृथगेवेति लक्षितः यः एवं तत्त्वेन वेद सः अविशङ्कितः कल्पयेत् ।
காரிகா அர்த்தம் - (இவ்வாறு எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமானதால்) இந்த பிராணன் முதலியவைகள் ஆத்மாவைக் காட்டிலும் வேறாக இல்லாவிடினும் அக்ஞானத்தால் ஆத்மாவைவிட வேறானதாய் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தின் உண்மை ரூபத்தை அறிந்து சங்கையற்றவனாய் (வேதார்த்தத்தை) கல்பனை செய்கிறான்.
एतैः प्राणादिभिः आत्मनोऽपृथग्भूतैरपृथग्भावैः एषः आत्मा रज्जुरिव सर्पादिविकल्पनारूपैः पृथगेवेति लक्षितः अभिलक्षितः निश्चितः मूढैरित्यर्थः । विवेकिनां तु रज्ज्वामिव कल्पिताः सर्पादयो नात्मव्यतिरेकेण प्राणादयः सन्तीत्यभिप्रायः ;
‘इदं सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६) इति श्रुतेः ।
(ச.பா) இந்த பிராணன் முதலான ஆத்மாவைக் காட்டிலும் வேறுபடாத பாவங்களால் இந்த ஆத்மாவானவன், ஸர்ப்பம் முதலான கல்பனா ரூபங்களால் கயிறு போல் வேறானதே என்று மூடர்களால் நிச்சயிக்கப்பட்டதாகும். விவேகிகளுக்கோவெனில் இந்த பாவங்கள் கயிற்றில் கற்பிக்கப்பட்ட பாம்பு முதலானவைகள் போன்றது ஆகும். எனவே ஆத்மாவைத் தவிர வேறானதாக பிராணன் முதலியவைகள் இல்லை என்பது கருத்து. “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம் யதயமாத்மா இது எல்லாம் இந்த ஆத்மா) என்பது சுருதி வாக்கியம்.
एवमात्मव्यतिरेकेणासत्त्वं रज्जुसर्पवदात्मनि कल्पितानामात्मानं च केवलं निर्विकल्पं यो वेद तत्त्वेन श्रुतितो युक्तितश्च, सः अविशङ्कितो वेदार्थं विभागतः कल्पयेत् कल्पयतीत्यर्थः — इदमेवंपरं वाक्यम् अदोऽन्यपरम् इति । न ह्यनध्यात्मविद्वेदान्ज्ञातुं शक्नोति तत्त्वतः, ‘न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते’ (मनु. ६ । ८२) इति हि मानवं वचनम् ।
(ச.பா) எவன் ஒருவன் இம்மாதிரி அதாவது ஆத்மாவைக் காட்டிலும் வேறாக, ரஜ்ஜு சர்ப்பம் போல், ஆத்மாவில் கல்பிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் பொய்மையையும் அவ்வாறே சுத்தமான நிர்விகல்பமான ஆத்மாவையும் உண்மையாக, அனுபவபூர்வமாய் வேதத்தின் வாயிலாகவும். யுக்தியின் மூலமாகவும் அறிகிறானோ. அந்த அநுபவஞானி சந்தேக மற்றவனாகி வேதார்த்தத்தை அதாவது வேதத்தின் உண்மை பொருளை அறிந்தவனாகிறான் என்று இது விளக்குகிறது. மேலும் இது வேறு அர்த்த முடையது என்று இவ்வாறு விபாகம் செய்து கல்பனை செய்ய முடிகிறது, என்பது இதன் தாத்பர்யம் எவன் அத்யாத்ம தத்துவத்தை அறியவில்லையோ அவன் வேதத்தையும் நன்கு அறிந்தவனாகமாட்டான் “न ह्यनध्यात्मवित्कश्चित्क्रियाफलमुपाश्नुते” (ந ஹ்யனத்யாத்ம வித்கச்சித் கிரியாபலமுபாச்னுதே = அத்தியாத்ம தத்துவத்தை அறியாதவன் எந்த ஒரு கர்ம பலத்தையும் அடையமாட்டான்) என்பது மனுஸ்மிருதி, (இங்கு கர்மபலத்தை அடையமாட்டான் என்றது சித்த சுத்திவாயிலாய் அடையப்படும் ஞானபலன் ஆகும்)
यदेतद्द्वैतस्यासत्त्वमुक्तं युक्तितः, तदेतद्वेदान्तप्रमाणावगतमित्याह ।
(ச.பா) (அ.கை) எது யுக்தி பூர்வமாய் த்வைதத்தின் அசத்தியத்தைக் கூறுகிறதோ அது வேதாந்த பிரமாணத்தாலும் அறியப்பட்டது என்பதைக் கூறுகிறார்.
स्वप्नमाये यथा दृष्टे गन्धर्वनगरं यथा ।
तथा विश्वमिदं दृष्टं वेदान्तेषु विचक्षणैः ॥ ३१ ॥
कारिका अन्वयः - यथा स्वप्नमाये दृष्टे यथा गन्धर्वनगरं तथा विचक्षणैः इदं विश्वंं वेदान्तेषु दृष्टम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்னமும் மாயையும் பார்க்கப்படுகிறதோ அவ்வாறு கந்தர்வ நகரமும் காணப்படுகிறது. இவ்வாறு நிபுணர்களான பண்டிதர்கள் வேதாந்திகள் இந்த விச்வத்தைப் (ஜகத்தைப்) பார்க்கிறார்கள்.
स्वप्नश्च माया च स्वप्नमाये असद्वस्त्वात्मिके सत्यौ सद्वस्त्वात्मिके इव लक्ष्येते अविवेकिभिः । यथा च प्रसारितपण्यापणगृहप्रासादस्त्रीपुञ्जनपदव्यवहाराकीर्णमिव गन्धर्वनगरं दृश्यमानमेव सत् अकस्मादभावतां गतं दृष्टम् , यथा च स्वप्नमाये दृष्टे असद्रूपे, तथा विश्वमिदं द्वैतं समस्तमसद्दृष्टम् ।
(ச.பா) எவ்வாறு அவிவேகிகளால் ஸ்வப்னம். மாயை இவைகள் அசத்வஸ்து ரூபமாய் அசத்தாய் இருந்தாலும் சத்வஸ்து போல் காணப்படுகிறது. எவ்வாறு விரிவாக்கப்பட்ட பொருள்களாடு கூடிய கடைகள், கடைத்தெரு, வீடு, மாளிகை இவைகளில் இருக்கும் நகரவாசிகளான ஸ்த்ரீ புருஷர்களின் செயல்களையும் கொண்டு காணப்பட்ட கந்தர்வ நகரமானது பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்பாராமல் இல்லாமல் போவதும் காணப்படுகிறதோ அவ்வாறே இந்த விச்வம் அதாவது இந்த எல்லா துவைதங்களும் அசத்தாக காணப்படுகின்றன.
(ச.பா) எங்கு காணப்படுகிறது? ருவதாந்தங்களில் “नेह नानाऽस्तिकिंचन” (நேஹநாநாஸ்தி கிஞ்ச்சன = இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः” இந்திரோ மாயாபி = இந்திரன் மாயையினால்) “आत्मैवेदमग्र आसीत्” (ஆத்மைவேதமக்ர ஆசீத்) இதற்கு முன் ஆத்மாவே இருந்தது) “ब्रह्म वा इदमग्र आसीत्” (பிரஹ்மவா இதமக்ர ஆசீத் = இதற்கு முன் பிரஹ்மம் இருந்தது) “द्वितीयाद्वै भयं भवति” (த்விதீயாத்வை பயம் பவதி = த்விதீயத்தால் பயம் உண்டாகிறது) “नतुतद्द्वितीयमस्ति” (நது தத்த்விதீயம்ஸ்தி =அதைக் காட்டிலும் இரண்டாவது இல்லை) “यत्रत्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ரத்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எங்கு இதற்காக எல்லாம் ஆத்மாவாக ஆயிற்றோ) இவை முதலியவைகள் வேதாந்தங்களில் மிகுந்த நிபுணர்களான தத்வதர்சிகளாகிய பண்டிதர்கள் கண்டிருக்கின்றார்கள் என்பது இதன் தாத்பர்யம்.
‘तमः श्वभ्रनिभं दृष्टं वर्षबुद्बुदसंनिभम् । नाशप्रायं सुखाद्धीनं नाशोत्तरमभावगम्’ (मो. ध. ३०१ । ६०) इति ॥ व्यासस्मृतेः ।
(ச.பா) (பிரபஞ்சமானது) மந்தாந்தகாரத்தில் எவ்வாறு அதிஷ்ட்டானமான கயிறு பூமியில் தோண்டப்பட்டவளை போல் தோன்றுகிறதோ, அவ்வாறே மழைகாலத்தில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் நீர்குமிழி போல் நிலையற்றதாயும், சுகமற்றதாயும், நாசத்திற்குப் பின் இல்லாமையையும் (அபாவத்தையும்) அறிகிறான் என்பது வியாச ஸ்மிருதிப் பிரமாணமாகும்.
प्रकरणार्थोपसंहारार्थोऽयं श्लोकः । यदा वितथं द्वैतम् आत्मैवैकः परमार्थतः सन् , तदा इदं निष्पन्नं भवति — सर्वोऽयं लौकिको वैदिकश्च व्यवहारोऽविद्याविषय एवेति तदा —
(ச.பா) (அ.கை) அடுத்த ஸ்லோகம் இந்த பிரகரணத்தை முடிப்பதற்காக ஆகும். எப்பொழுது த்வைதம் அசத், ஆத்மா ஒன்றே பரமார்த்த சத்தியம் என்ற நிச்சயம் ஏற்பட்ட பொழுது எல்லா லௌகிக, வைதிக வியவஹாரங்கள் அவித்யா விஷயமாகும். அப்பொழுது.
न निरोधो न चोत्पत्तिर्न बद्धो न च साधकः ।
न मुमुक्षुर्न वै मुक्त इत्येषा परमार्थता ॥ ३२ ॥
कारिका अन्वयः - न निरोधः न च उत्पत्तिः न बद्धः न च साधकः न मुमुक्षुः न वै मुक्तः इत्येषा परमार्थता ।
காரிகா அர்த்தம் - பிரளயம் இல்லை, உத்பத்தி இல்லை, பந்தமில்லை, சாதகன் இல்லை, முமூக்ஷு இல்லை, முக்தனும் இல்லை அது பரமார்த்தமான உண்மையாகும்.
न विरोधः, निरोधनं निरोधः प्रलयः, उत्पत्तिः जननम् , बद्धः संसारी जीवः, साधकः साधनवान्मोक्षस्य, मुमुक्षुः मोचनार्थी, मुक्तः विमुक्तबन्धः । उत्पत्तिप्रलययोरभावाद्बद्धादयो न सन्तीत्येषा परमार्थता ।
(ச.பா) நிரோதம் இல்லை என்பது பிரளயம் இல்லை, உத்பத்தி அதாவது ஜனனம், பத்தः என்றால் சம்சாரி ஜீவன், சாதகன், அதாவது மோக்ஷத்தின் பொருட்டு சாதனை செய்பவன். முமூக்ஷு அதாவது மோக்ஷத்தில் இச்சை உள்ளவன், முக்தன் அதாவது பந்தத்திலிருந்து விடுபட்டவன் என்ற இவையாவையும் இல்லை, உத்பத்தி பிரளயங்கள் இல்லாததால் பந்தம் முதலானவைகள் இல்லை என்பது பரமார்த்தமான உண்மை,
>(ச.பா) எவ்வாறு உத்பத்தி பிரளயங்கள் அபாவம் என்று கூறப்படுகிறது எனில் துவைதம் அசத்துவமாய் இருப்பதால். “यत्र हि द्वैतमिव भवति” (யத்ரஹிதுவைதமிவ பவதி = எங்கு துவைதம் போல் பலவாறாக இருக்கிறதோ) “य इह नानेव पश्यति” (ய இஹ நாநேவபச்யதி = எவன் ஒருவன் இந்த ஆத்ம ஸ்வரூபத்தை நாநாவாய் பார்க்கிறானோ) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = ஆத்மாவே இந்த காணப்படும் பிரபஞ்சமெல்லாம்) “ब्रह्मैैवेदं सर्वम्” (பிரஹ்மைவேஇதம் சர்வம் = இவை எல்லாம் பிரஹ்மமே) “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = இரண்டாவது அற்ற பிரஹ்மம் ஒன்றே) “इदं सर्वं यदयमात्मा” (இதம் சர்வம்யதயமாத்மா = இவையாவும் இந்த ஆத்மாவே) என்பன போன்ற அநேக ஸ்ருதி வாக்கியங்களால் துவைதத்தின் அசத்துவம் சித்தித்ததாக ஆகிறது.
सतो ह्युत्पत्तिः प्रलयो वा स्यात् , नासतः शशविषाणादेः । नाप्यद्वैतमुत्पद्यते प्रलीयते वा । अद्वैतं च, उत्पत्तिप्रलयवच्चेति विप्रतिषिद्धम् ।
(ச.பா) உத்பத்தியோ, பிரளயமோ சத்வஸ்துவிற்கே உண்டாகும், முயல் கொம்பு முதலிய அசத் வஸ்துக்களுக்கு உண்டாகாது, இவ்வாறு அத்வைத வஸ்துவும் உத்பன்னமோ லீனமோ ஆகாது. அத்வைத வஸ்து உத்பத்தி பிரளயம் இருக்கிறது என்பது விருத்தமாகும்.
यस्तु पुनर्द्वैतसंव्यवहारः, स रज्जुसर्पवदात्मनि प्राणादिलक्षणः कल्पित इत्युक्तम् ; न हि मनोविकल्पनाया रज्जुसर्पादिलक्षणाया रज्ज्वां प्रलय उत्पत्तिर्वा ; न च मनसि रज्जुसर्पस्योत्पत्तिः प्रलयो वा, न चोभयतो वा । तथा मानसत्वाविशेषाद्द्वैतस्य । न हि नियते मनसि सुषुप्ते वा द्वैतं गृह्यते ।
(ச.பா) எந்த ஒரு பிராணன் முதலிய ரூபமான த்வைத வியவஹாரம் உள்ளதோ அது ரஜ்ஜுவில் சர்ப்பம்போல் ஆத்மாவில் கல்பிக்கப்பட்டது என்று முன்பே கூறப்பட்டது. ரஜ்ஜு சர்ப்பம் முதலிய ரூப விகல்பமும் ரஜ்ஜுவில் உத்பத்தி, பிரளயம் ஏற்படாது, ரஜ்ஜு சர்ப்பத்தின் உத்பத்தி பிரளயம் மனதில் உண்டாகாது. அவ்வாறே மனதிலோ ரஜ்ஜுவிலோ உண்டாகாது. இவ்வாறு துவைதத்தின் மனோமயத்துவம் சமானமே, ஏனெனில் மனம் சமாஹிதமாய் (சமமாய்) இருக்கும் பொழுதோ அல்லது சுஷுப்தியிலோ த்வைதத்தின் க்ரஹணம் ஏற்படாது.
अतो मनोविकल्पनामात्रं द्वैतमिति सिद्धम् । तस्मात्सूक्तम् — द्वैतस्यासत्त्वान्निरोधाद्यभावः परमार्थतेति ।
(ச.பா) ஆகையால் த்வைதம் மனதின் கல்பனா மாத்திரமே என்று சித்திக்கிறது ஆகவே துவைதம் அசத்தியமாய் இருப்பதால் நிரோதம் முதலியவைகளின் அபாவமே (இன்மையே) பரமார்த்தம்) என்று கூறியது சரியானதே ஆகும்.
(भाष्यम्) (पूर्व) - यद्येवं द्वैताभावे शास्त्रव्यापारः, नाद्वैते, विरोधात् ; तथा च सत्यद्वैतस्य वस्तुत्वे प्रमाणाभावाच्छून्यवादप्रसङ्गः, द्वैतस्य चाभावात् ।
(ச.பா) (பூர்வ) சாஸ்திர வியாபரம் த்வைதத்தின் அபாவத்தை பிரதிபாதனம் (கூறுகிறது) என்றால் அது அத்வைத போதமாகாது. ஏனெனில் இதில் விரோதம் வரும். இந்த அவஸ்தையில் அத்வைத வஸ்துவில் ஒரு பிரமாணமும் இல்லாததால் சூன்ய வாதத்தின் பிரசங்கம் உண்டாகும். ஏனெனில் துவைதம் அபாவமாய் இருப்பதால் ஆகும்.
(भाष्यम्) (सिद्धान्ति) - न, रज्जुवत्सर्पादिकल्पनाया निरास्पदत्वेऽनुपपत्तिरिति प्रत्युक्तमेतत्कथमुज्जीवयसीति, आह — रज्जुरपि सर्पविकल्पस्यास्पदभूता कल्पितैवेति दृष्टान्तानुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலிய விகல்பங்கள் ஆதாரம் அற்று இருப்பது சம்பவிக்காது. முதலிலேயே நிராகரணம் செய்யப்பட்டதை அறிந்தும் மறுபடியும் சங்கை ஏன் எழுகிறது என்பதற்குக் கூறப்படுகிறது - சர்ப்ப பிராந்திக்கு அதிஷ்டானம் ரஜ்ஜுவும் கல்பிக்கப்பட்டதே, (என்பது சூன்யவாதியின் அபிப்பிராயம்) ஆகையால் இந்த திருஷ்டாந்தம் பொருந்தாது.
(भाष्यम्) (सिद्धान्ति) - न, विकल्पनाक्षये अविकल्पितस्याविकल्पितत्वादेव सत्त्वोपपत्तेः ; रज्जुसर्पवदसत्त्वमिति चेत् , न एकान्तेनाविकल्पितत्वात् अविकल्पितरज्ज्वंशवत्प्राक्सर्पाभावविज्ञानात् , विकल्पयितुश्च प्राग्विकल्पनोत्पत्तेः सिद्धत्वाभ्युपगमादेवासत्त्वानुपपत्तिः ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, கல்பனை க்ஷயம் ஆனவுடன் கல்பிக்கப்படாத ஆத்மாவின் சத்தை அதன் கல்பிதம் அற்றதின் காரணமாகும். ரஜ்ஜு சர்ப்பம்போல் அது அசத்என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் கல்பிதமற்ற ரஜ்ஜு அம்சத்திற்கு சமமாய் சர்ப்ப அபாவ ஞானத்திற்கு முன்பே கல்பிதமற்ற ரூபமாய் இருக்கிறது. இதைத்தவிர எது கல்பிக்கப்படுகிறதோ அது அதன் விகல்பத்தின் உத்பத்தியின் முன்பே இருப்பதால் அதற்கு அசத்தா என்பது இல்லை.
(भाष्यम्) (पूर्व) कथं पुनः स्वरूपे व्यापाराभावे शास्त्रस्य द्वैतविज्ञाननिवर्तकत्वम् ?
(ச.பா) (பூர்வ) - ஆனால் எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தில் பிரமாணத்தின் கதி இல்லாத பொழுது சாஸ்திரம் த்வைத விக்ஞானத்தை நிவர்த்தி செய்யும்?
(भाष्यम्) सिद्धान्ति - नैष दोषः, रज्ज्वां सर्पादिवदात्मनि द्वैतस्याविद्याध्यस्तत्वात् कथं सुख्यहं दुःखी मूढो जातो मृतो जीर्णो देहवान् पश्यामि व्यक्ताव्यक्तः कर्ता फली संयुक्तो वियुक्तः क्षीणो वृद्धोऽहं ममैते इत्येवमादयः सर्वे आत्मन्यध्यारोप्यन्ते । आत्मा एतेष्वनुगतः, सर्वत्राव्यभिचारात् , यथा सर्पधारादिभेदेषु रज्जुः ।
(ச.பா) சித்தாந்தி - இது தோஷமில்லை ரஜ்ஜுவில் சர்ப்பம் முதலியவைகள் போல் ஆத்மாவிடத்தில் த்வைதம் அத்தியாசம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு? நான் சுகி, துக்கி, மூடன், பிறந்தேன், இறந்தேன், வயதானவன் ஆனேன், தேஹத்தை உடையவன், பார்க்கிறேன், நான் வியக்தன், அவ்யக்தன், கர்த்தா, பலனை உடையவன், கூடினவன், விடுபட்டவன், க்ஷீணமானவன், கிழவன், நான், எனது என்பது முதலியவைகள் எல்லாம் ஆத்மாவில் அத்தியாரோபம் செய்யப்பட்டுள்ளன. ஆத்மா அவைகளில் அனுகதமாய் (ஊடுருவி) எங்கும் மாறுபடாமல் இருக்கிறது. சர்ப்பம், தாரை முதலிய பேதங்களில் ரஜ்ஜு எவ்வாறோ அவ்வாறாகும்.
(भाष्यम्) यदा चैवं विशेष्यस्वरूपप्रत्ययस्य सिद्धत्वान्न कर्तव्यत्वं शास्त्रेण । अकृतकर्तृ च शास्त्रं कृतानुकारित्वे अप्रमाणम् । यतः अविद्याध्यारोपितसुखित्वादिविशेषप्रतिबन्धादेवात्मनः स्वरूपेणानवस्थानम् , स्वरूपावस्थानं च श्रेयः इति सुखित्वादिनिवर्तकं शास्त्रमात्मन्यसुखित्वादिप्रत्ययकरणेन नेति नेत्यस्थूलादिवाक्यैः ; आत्मस्वरूपवदसुखित्वादिरपि सुखित्वादिभेदेषु नानुवृत्तोऽस्ति धर्मः । यद्यनुवृत्तः स्यात् , नाध्यारोप्येत सुखित्वादिलक्षणो विशेषः, यथोष्णत्वगुणविशेषवत्यग्नौ शीतता ; तस्मान्निर्विशेष एवात्मनि सुखित्वादयो विशेषाः कल्पिताः । यत्त्वसुखित्वादिशास्त्रमात्मनः, तत्सुखित्वादिविशेषनिवृत्त्यर्थमेवेति सिद्धम् । ‘सिद्धं तु निवर्तकत्वात्’ इत्यागमविदां सूत्रम् ॥ ३२ ॥
(ச.பா) இவ்வாறு இருப்பதால் விசேஷ்ய ரூப பிரஹ்ம ஸ்வரூபத்தின் பிரதீதி (இருப்பு) சித்தமாவதால் அதன் சம்பந்தமாய் சாஸ்திரத்திற்கு கர்த்தவ்வியம் ஒரு சிறிதும் கிடையாது. சாஸ்திரமோ அசித்த வஸ்துவை அசித்தம் என்று சித்திக்கச்செய்கிறது அது சித்த வஸ்துவை அனுவாதம் செய்வதில் பிரமாணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சுகித்துவம் முதலியவைகள் விசேஷ பிரதிபந்தங்களுக்கு காரணமேயன்றி ஆத்மாவின் ஸ்வரூப ஸ்திதி அன்று. மேலும் ஸ்வரூப ஸ்திதியே ஸ்ரேயஸ் (மேலானது) ஆகும். ஆகையால் “नेतिनेति” (நேதி நேதி இது அல்ல இது அல்ல), அவ்வாறே“अस्थूलम्” (அஸ்தூலம் - ஸ்தூலமல்ல) முதலிய வாக்கியங்கள் ஆத்மாவில் சுகித்துவம் முதலியவை இல்லை என்பதை விளக்குவதின் வாயிலாய் சாஸ்திரம் சுகித்துவம் முதலியவைகளை நிவிர்த்தி செய்கிறது. ஆத்ம ஸ்வரூபம் போல் அசுகித்துவம் முதலியவை சுகித்துவாதி பேதங்களில் அனுவிருத்த தர்மம் அல்ல. அனுவிருத்தியானால் அத்தியாரோபமான சுகித்துவாதி லக்ஷணங்கள் விசேஷமாகும். எவ்வாறு உஷ்ணகுணமுள்ள அக்னியில் குளிர்ச்சியை ஆரோபம் செய்யமுடியாதோ அவ்வாறு. ஆகையால் நிர்விசேஷ ஆத்மாவிடத்தில் சுகித்துவாதி விசேஷங்கள் கல்பிக்கப்பட்டது. எந்த அசுகித்துவாதி சாஸ்திரம் உள்ளதோ அது ஆத்மா விஷயத்தில் சுகித்துவாதி விசேஷத்தை நிவர்த்திப்பதற்காக என்று சித்தமாகிறது. “सिद्धं तु निवर्तकत्वात्” (சித்தம் து நிவர்தகத்வாத்) முதலிய ஆகமவாக்கிய சூத்திரத்தால் அறிகிறோம்.
(भाष्यम्) (अव) पूर्वश्लोकार्थस्य हेतुमाह
(ச.பா) (அ.கை) முந்திய ஸ்லோக அர்த்தத்தின் காரணத்தைக் கூறுகிறார்-
भावैरसद्भिरेवायमद्वयेन च कल्पितः ।
भावा अप्यद्वयेनैव तस्मादद्वयता शिवा ॥ ३३ ॥
कारिका अन्वयः - यथा असद्भिः अद्वयेन च भावै अयं कल्पितः भावा अपि अद्वयेनैव तस्मात् अद्वयता शिवा ॥
காரிகா அர்த்தம் - இந்த (ஆத்ம தத்துவம்) பிராணன் முதலிய அசத் பாவங்களினால் அத்வைத ரூபத்தில் கல்பிக்கப்பட்டுள்ள்து. அந்த அசத் பாவமும் அத்வைதத்திலேயே கல்பனை செய்யப்பட்டது. ஆகையால் அத்வைத பாவம் மங்கள ரூபம்.
(भाष्यम्) - पूर्वश्लोकार्थस्य हेतुमाह — यथा रज्ज्वामसद्भिः सर्पधारादिभिः अद्वयेन च रज्जुद्रव्येण सता अयं सर्प इति धारेयं दण्डोऽयमिति वा रज्जुद्रव्यमेव कल्प्यते, एवं प्राणादिभिरनन्तैः असद्भिरेव अविद्यमानैः, न परमार्थतः । न ह्यप्रचलिते मनसि कश्चिद्भाव उपलक्षयितुं शक्यते केनचित् ; न चात्मनः प्रचलनमस्ति । प्रचलितस्यैवोपलभ्यमाना भावा न परमार्थतः सन्तः कल्पयितुं शक्याः । अतः असद्भिरेव प्राणादिभिर्भावैरद्वयेन च परमार्थसता आत्मना रज्जुवत्सर्वविकल्पास्पदभूतेन अयं स्वयमेवात्मा कल्पितः सदैकस्वभावोऽपि सन् ।
(ச.பா) எவ்வாறு ரஜ்ஜுவில் இல்லாத சர்ப்பம். தாரை முதலிய பாவங்கள் இருக்கின்ற அத்வதீய ரஜ்ஜு திரவ்யத்தில் இது சர்ப்பம், இது தாரை, இது தண்டம் இவ்வாறு ரஜ்ஜு திரவியம் கல்பிக்கப்படுகிறதோ அவ்வாறு பிராணன் முதலிய அநந்த அசத் = இல்லாவிட்டாலும் அதாவது உண்மையில் இல்லை. ஏனெனில் சித்தம் சலிக்கவில்லையெனில் எதனாலும் எந்த ஒரு பாவமும் உபலக்ஷிதமாகாது. மேலும் ஆத்மாவிடத்தில் சலனம் இல்லை. அவ்வாறே கேவலம் சலிக்கச் செய்யும் தன்மை உடைய சித்தத்தில் உண்டாகும் பாவம் பரமார்த்த சத்தியம் என்ற கல்பனை பொருந்தாது. ஆகையால் இந்த ஆத்மா ஸ்வயம் ஏகமாத்திர சத் சுவபாவமாக இருந்தாலும் அசத்துவரூப பிராணன் முதலிய பாவங்கள். அவ்வாறே ரஜ்ஜுவைப் போல் எல்லா பிரகார விகல்பங்களுக்கும் ஆஸ்ரய பூதமான பரமார்த்த சத் ஆத்ம ஸ்வரூபத்தால் கல்பிக்கப்பட்டதாகும்.
(भाष्यम्) ते चापि प्राणादिभावाः अद्वयेनैव सता आत्मना विकल्पिताः ; न हि निरास्पदा काचित्कल्पना उपपद्यते ; अतः सर्वकल्पनास्पदत्वात्स्वेनात्मना अद्वयस्य अव्यभिचारात् कल्पनावस्थायामपि अद्वयता शिवा ; कल्पना एव त्वशिवाः, रज्जुसर्पादिवत्त्रासादिकारिण्यो हि ताः । अद्वयता अभया ; अतः सैव शिवा ॥ ३३ ॥
(ச.பா) அந்த பிராணன் முதலிய பாவமும் அத்வயசத்ஸ்வரூப ஆத்மாவிலேயே கல்பனை செய்யப்பட்டதாகும். ஏனெனில் எந்த ஒரு கல்பனையும் ஆதார மற்றதாய் இருக்க முடியாது. ஆகையால் எல்லா கல்பனைகளுக்கும் ஆஸ்ரய பூதமாய் இருப்பதால் தன்னுடைய ஸ்வஸ்வரூப அத்வைதம் ஒருகாலும் மாறுபாடு அடையாததால் கல்பனா அவஸ்தையிலும் அத்வைதமாய் சிவ (மங்கள) மயமாய் இருக்கிறது. கேவலம் கல்பனை அசிவமாய் (மங்கலமற்றதாய்) இருக்கிறது. ஏனெனில் ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளைப் போல் பயம் முதலியவைகளை உண்டுபண்ணக் கூடியதாய் இருக்கிறது. அத்வைதம் அபய ரூபம் ஆகையால் அது மங்கலமயமானது.
कुतश्चाद्वयता शिवा ? नानाभूतं प्रथक्त्वम् अन्यस्य अन्यस्मात् यत्र दृष्टम् , तत्राशिवं भवेत् ।
(ச.பா) (அ.கை) எதனால் அத்வைதம் சிவம்? எங்கு ஒரு வஸ்துவிலிருந்து இரண்டாவது வஸ்துவின் நாநாவாயும் பிருதக்காயும் எதைக் காண்கிறோமோ அது அமங்களமாகிறது அசிவமாகிறது-
नात्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन ।
न पृथङ् नापृथक्किञ्चिदिति तत्त्वविदो विदुः ॥ ३४ ॥
कारिका अन्वयः - आत्मभावेन नानेदं न स्वेनापि कथञ्चन न पृथक् न अपृथक् न किञ्चित् इति तत्वविदःविदुः।
காரிகா அர்த்தம் - நாநாத்துவம் ஆத்மஸ்வரூபத்தில் இல்லை. தன்னுடைய ஸ்வரூபத்தாலேயே அவ்வாறு பலவாராகப் ஒரு போதும் உண்டாவது இல்லை ஒரு வஸ்துவும் பிரஹ்மத்தைக் காட்டிலும் பிருதக்காகவோ (வேறாகவோ) அபிருதக்காகவோ இல்லை. என்று தத்துவவேத்தா அறிகின்றான்
(भाष्यम्) - न ह्यत्राद्वये परमार्थसत्यात्मनि प्राणादिसंसारजातमिदं जगत् आत्मभावेन परमार्थस्वरूपेण निरूप्यमाणं नाना वस्त्वन्तरभूतं भवति ; यथा रज्जुस्वरूपेण प्रकाशेन निरूप्यमाणो न नानाभूतः कल्पितः सर्पोऽस्ति, तद्वत् । नापि स्वेन प्राणाद्यात्मना इदं विद्यते कदाचिदपि, रज्जुसर्पवत्कल्पितत्वादेव ।
(ச.பா) இந்த அத்விதீய பரமார்த்தசத்ய ஆத்மாவில் இந்த பிராணன் முதலியவை சம்சாரரூபமாகி ஜகத் ஆத்ம பாவத்தால் அதாவது பரமார்த்த சத்திய ரூபத்தால் நிரூபணம் செய்யப்பட்ட பின் நாநா அதாவது பிருதக்வஸ்துவில் அந்தர்பூதம் ஆகாது. இவ்வாறு பிரகாசமூலமாய் ரஜ்ஜு ஸ்வரூபமாய் நிரூபணம் ஆனபொழுது கல்பித சர்ப்பம் என்பது தனியாக இல்லை. அவ்வாறு (பரமார்த்த ரூபமாய் நிரூபணம் செய்யப்பட்டபொழுது ஜகத் ஆத்மாவைக் காட்டிலும் தனியான வஸ்து இல்லை). ரஜ்ஜு சர்ப்பத்திற்கு சமானமாக கல்பிக்கபட்டதின் காரணமாய் தன்னுடைய பிராணன் முதலிய ஸ்வரூபமாய் சிறிதும் ஒருபொழுதும் இல்லை.
(भाष्यम्) तथा अन्योन्यं न पृथक् प्राणादि वस्तु, यथा अश्वान्महिषः पृथग्विद्यते, एवम् । अतः असत्त्वात् नापि अपृथक् विद्यतेऽन्योन्यं परेण वा किञ्चिदिति । एवं परमार्थतत्त्वविदो ब्राह्मणा विदुः । अतः अशिवहेतुत्वाभावादद्वयतैव शिवेत्यभिप्रायः ॥
(ச.பா) இந்த துவைத வஸ்துக்கள் குதிரையைக்காட்டிலும் எருமை வேறுபட்டது என்பதைப்போல் அவைகளுள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளும் அல்ல. எனவே அவைகள் அஸத்தானவைகளாகும். எனவே அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாகவோ, அல்லது ஒன்றோடு மற்றொன்று இணைந்ததாகவோ இல்லை. இவ்வாறு ஆத்மா அநாத்மாவின் தாதாத்மியமாகவோ, சுதந்திரமாகவோ உண்டான எந்த வஸ்துவும் இல்லை என்று பரமார்த்ததத்துவமான ஆன்மதத்துவத்தை அறிந்த பிரஹ்ம வித்துக்கள் அறிவர். எனவே அமங்கள ஹேதுவாய் இல்லாமையால் அத்வைத தன்மையே மங்களமானது ஆகும்.
(भाष्यम्) (अव) तदेतत्सम्यग्दर्शनं स्तूयते ।
(ச.பா) (அ.கை) அந்த இந்த சம்யக்தர்சனத்தை ஸ்துதி செய்கிறார்-
वीतरागभयक्रोधैर्मुनिभिर्वेदपारगैः ।
निर्विकल्पो ह्ययं दृष्टः प्रपञ्चोपशमोऽद्वयः ॥ ३५ ॥
कारिका अन्वयः - वीतरागभयक्रोधैः वेदपारगैः मुनिभिः हि अयं निर्विकल्पः प्रपञ्चोपशमः अद्वयः अयं दृष्टः ॥
காரிகா அர்த்தம் - ஆசை. க்ரோதம், பயம் இவைகள் அறவே அற்றவர்களாயும் வேதார்த்தத்தை நன்கு அறிந்தவர்களாயும் உள்ள மனனசீலர்களால் எந்த கல்பனைகளும் அற்றதும், பிரபஞ்சமற்றதுமான அத்வைத தத்துவம் காணப்பட்டது.
तदेतत्सम्यग्दर्शनं स्तूयते — विगतरागभयक्रोधादिसर्वदोषैः सर्वदा मुनिभिः मननशीलैर्विवेकिभिः वेदपारगैः अवगतवेदान्तार्थतत्त्वैर्ज्ञानिभिः निर्विकल्पः सर्वविकल्पशून्यः अयम् आत्मा दृष्टः उपलब्धो वेदान्तार्थतत्परैः, प्रपञ्चोपशमः, प्रपञ्चो द्वैतभेदविस्तारः, तस्योपशमोऽभावो यस्मिन् , स आत्मा प्रपञ्चोपशमः, अत एव अद्वयः विगतदोषैरेव पण्डितैर्वेदान्तार्थतत्परैः संन्यासिभिः अयमात्मा द्रष्टुं शक्यः, नान्यैः रागादिकलुषितचेतोभिः स्वपक्षपातिदर्शनैस्तार्किकादिभिरित्यभिप्रायः ॥ ३५ ॥
(ச.பா) ராகம். பயம், க்ரோதம் முதலிய எல்லா தோஷங்களில் இருந்தும் நிவிர்த்தி அடைந்த அந்த மனனசீலர்களாயும். வேத பாராங்கதர்களாயும், வேத அர்த்தத்தின் மர்மத்தை அறிந்தவர்களுமான தத்துவஞானிகளின் வாயிலாய் எல்லா விதமான விகல்பங்கள் அற்ற, நிர்விகல்பமாயும். த்வைதரூபபேதத்தின் விஸ்தாரமான பிரபஞ்சத்தின் நிவிர்த்தியாகிய பிரபஞ்ச உபசமமாகியதாய் ஆத்மா உள்ளது என்று அறியப்படுகிறது. ஆகையால் அத்வைதமான ஆத்மாவை பண்டிதர்களான வேதாந்த அர்த்தத்தில் தத்பரர்கள். தோஷ மற்றசந்நியாசிகள் வாயிலாய் காணமுடிகிறது. எவர்களுடைய சித்தம் ராகம் முதலிய தோஷங்களால் கலங்க முற்றதாயும். எவர்களுடைய தர்சனம் தங்களுடைய பக்ஷத்தில் மிகுந்த ஆக்கிரஹமுடையதாயும் உள்ள அந்த வேறு தார்க்கிகர்கள் இந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைய முடியாது என்பது தாத்பரியம்.
(भाष्यम्) (अव) - यस्मात्सर्वानर्थोपशमरूपत्वादद्वयं शिवमभयम् ।
(ச.பா) (அ.கை) ஏனெனில் எல்லா அநர்த்தங்களுக்கும் நிவிர்த்தி ஸ்தானம் ஆவதால் அத்வைதமே மங்களமயமும் அபயரூபமும் ஆகும்.
तस्मादेवं विदित्वैनमद्वैते योजयेत्स्मृतिम् ।
अद्वैतं समनुप्राप्य जडवल्लोकमाचरेत् ॥ ३६ ॥
कारिका अन्वयं - तस्मात् एवं विदित्वा अद्वैते स्मृतिं योजयेत् एनम् अद्वैतं समनुप्राप्य लोकं जडवत् आचरेत् ।
காரிகா அர்த்தம் - ஆகையால் இதை (ஆத்மதத்துவத்தை) இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதைச் செழுத்தி அத்வைத தத்துவத்தை அடைந்து உலகில் ஜடம் போல் வியவஹாரம் செய்.
(भाष्यम्) - अतः एवं विदित्वैनम् अद्वैते स्मृतिं योजयेत् ; अद्वैतावगमायैव स्मृतिं कुर्यादित्यर्थः । तच्च अद्वैतम् अवगम्य ‘अहमस्मि परं ब्रह्म’ इति विदित्वा अशनायाद्यतीतं साक्षादपरोक्षादजमात्मानं सर्वलोकव्यवहारातीतं जडवत् लोकमाचरेत् ; अप्रख्यापयन्नात्मानमहमेवंविध इत्यभिप्रायः ॥ ३६ ॥
(ச.பா) ஆகையால் இதை இவ்வாறு அறிந்து அத்வைதத்தில் மனதை செழுத்தி அத்வைத போதத்திலேயே சிந்தனை செய், அத்வைதத்தை அறிந்து அதாவது நான் பரப்ரஹ்மமாய் இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்து எல்லா லோக வியவஹாரங்களையும் நீக்கி போஜன முதலியவற்றில் உள்ள இச்சையை கடந்து சாக்ஷாத் அபரோக்ஷ பிறப்பற்ற ஆத்மாவை அனுபவித்துக் கொண்டு உலகில் ஜடம் போல் செயல்படு. தாத்பரியம் என்னவெனில் நான் இப்படிப்பட்டவன் என்று தன்னை பிரகடனப் படுத்தாமல் வியவஹாரம் செய்ய வேண்டும் என்பதாகும்.
(भाष्यम्) (अव) कया चर्यया लोकमाचरेदिति, आह-
(ச.பா) (அ.கை) உலகில் எவ்வாறு வியவஹாரம் செய்யவேண்டும்? என்பது கூறப்படுகிறது.
निःस्तुतिर्निर्नमस्कारो निःस्वधाकार एव च ।
चलाचलनिकेतश्च यतिर्यादृच्छिको भवेत् ॥ ३७ ॥
कारिका अन्वयः - निस्तुतिः निर्नमस्कारः निस्वधाकारः एव च चलाचलनिकेतश्च यतिः यादृच्छिकः भवेत् ॥ ३७ ॥
காரிகா அர்த்தம்- (தேவர்களை) ஸ்துதித்தல், நமஸ்காரம் செய்தல் போன்ற கர்மாக்களை செய்யாமலும், (சிரார்த்தம் போன்ற) ஸ்வதாகார கர்மாக்களை செய்யாமலும், சல (சரீரம்), அசல (ஆத்மா) இவைகளில் விஸ்ராமத்தை அடைந்து எது கிடைத்ததோ அதில் சந்துஷ்டனாக இருப்பான்.
(भाष्यम्) — स्तुतिनमस्कारादिसर्वकर्मविवर्जितः त्यक्तसर्वबाह्यैषणः प्रतिपन्नपरमहंसपारिव्राज्य इत्यभिप्रायः,
‘एतं वै तमात्मानं विदित्वा’ (बृ. उ. ३ । ५ । १) इत्यादिश्रुतेः,
‘तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः’ (भ. गी. ५ । १७) इत्यादिस्मृतेश्च । चलं शरीरम् , प्रतिक्षणमन्यथाभावात् ; अचलम् आत्मतत्त्वम् । यदा कदाचिद्भोजनादिसंव्यवहारनिमित्तमाकाशवदचलं स्वरूपमात्मतत्त्वम् आत्मनो निकेतमाश्रयमात्मस्थितिं विस्मृत्य अहमिति मन्यते यदा, तदा चलो देहो निकेतो यस्य सोऽयमेवं चलाचलनिकेतो विद्वान्न पुनर्बाह्यविषयाश्रयः । स च यादृच्छिको भवेत् , यदृच्छाप्राप्तकौपीनाच्छादनग्रासमात्रदेहस्थितिरित्यर्थः ॥ ३७ ॥
(ச.பா) -ஸ்துதி, நமஸ்காரம் முதலிய எல்லா கர்மங்களும் அற்ற, சர்வ ஏஷணைகளையும் விட்ட பரமஹம்ச பாரிவிராஜ்யம் என்பது அபிப்பிராயம், அது “एतं वै तमात्मानं विदित्वा” (ஏதம் வை தம் ஆத்மானம் விதித்துவா = அந்த ஆத்மாவை அறிந்து) முதலிய ச்ருதிகளாலும் “तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्द्भास्तत्परायणाः” (தத் புத்தய ஸ்ததாத்மானஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா = எவருடைய புத்தி, ஆத்மா நிஷ்டையிலேயே நிலைத்திருக்கிறதோ அவ்வாறே அதில் சரணடைந்ததோ) என்ற கீதாஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம், சலம் என்பது சரீரம். அசலம் என்பது ஆத்மதத்துவம், அசலமான ஆத்மாவிற்கு, பிரதிக்ஷணமும் மாறுவதால் சலமான சரீரத்தை இருப்பிடமாகக் கொண்டு, அதாவது பிரதிக்ஷணமும் மாறுபடுவது சரீரம், எம்மாற்றமும் அற்றது ஆத்மா, எப்பொழுதும் ஆத்மஸ்வரூபத்திலேயே ஈடுபட்டிருக்கும் பிரஹ்ம ஞானிகள் ஏதாவது ஒரு சமயம் உணவு போன்ற வியவஹாரங்களின் பொருட்டு, ஆகாயம் போல் எங்கும் நிறைந்திருக்கும் ஆத்மஸ்வரூபத்தை நினைக்காது அந்த சமயத்தில் நான் என்று அந்த ஆத்மஸ்வரூபத்திற்கு உடலை இருப்பிடமாக எண்ணுகிறார்களோ, அப்பொழுது அவர்களுக்கு இந்த பூத உடல் இருப்பிடமாகிறது என்பது பொருள். வேறு சமயங்களில் அந்த ஆத்ம ஞானி வெளிவிஷயங்களில் ஈடுபடுவதில்லை என்றும் அறியத்தக்கது. இத்தகைய பிரஹ்ம ஞானியான சந்நியாசி எதிரிச்சையாய் கிடைத்த கோவணம் முதலானவைகளைக் கொண்டு உடலைப் போர்த்தியவனாயும், ஏதோ, எப்பொழுதோ இட்ட சில கவள அன்னத்தை உடையவனாக் கொண்டு உடலைத் தாங்குபவனாகவும் இருப்பான்.
तत्त्वमाध्यात्मिकं दृष्ट्वा तत्त्वं दृष्ट्वा तु बाह्यतः ।
तत्त्वीभूतस्तदारामस्तत्त्वादप्रच्युतो भवेत् ॥ ३८ ॥
कारिका अन्वयः - आध्यात्मिकं तत्त्वं दृष्ट्वा बाह्यतः तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतः तदारामः तत्त्वात् अप्रच्युतः भवेत् ॥ ३८ ॥
காரிகா அர்த்தம் - (விவேகி புருஷன்) அத்யாத்ம தத்துவத்தை அறிந்து (கண்டு) பாஹ்யதத்துவத்தையும் அனுபவித்து தத்துவமாய் ஆகி அதில் ரமிக்கின்றவனாய் தத்துவத்தில் இருந்து நழுவாமல் இருக்க வேண்டும்.
(भाष्यम्) - बाह्यं पृथिव्यादि तत्त्वमाध्यात्मिकं च देहादिलक्षणं रज्जुसर्पादिवत्स्वप्नमायादिवच्च असत् ,
‘वाचारम्भणं विकारो नामधेयम्’ (छा. उ. ६ । १ । ४) इत्यादिश्रुतेः । आत्मा च सबाह्याभ्यन्तरो ह्यजोऽपूर्वोऽनपरोऽनन्तरोऽबाह्यः कृत्स्नः तथा आकाशवत्सर्वगतः सूक्ष्मोऽचलो निर्गुणो निष्कलो निष्क्रियः
‘तत्सत्यं स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति श्रुतेः, इत्येवं तत्त्वं दृष्ट्वा तत्त्वीभूतस्तदारामो न बाह्यरमणः ; यथा अतत्त्वदर्शी कश्चित्तमात्मत्वेन प्रतिपन्नश्चित्तचलनमनु चलितमात्मानं मन्यमानः तत्त्वाच्चलितं देहादिभूतमात्मानं कदाचिन्मन्यते प्रच्युतोऽहमात्मतत्त्वादिदानीमिति, समाहिते तु मनसि कदाचित्तत्त्वभूतं प्रसन्नमात्मानं मन्यते इदानीमस्मि तत्त्वीभूत इति ; न तथा आत्मविद्भवेत् , आत्मन एकरूपत्वात् , स्वरूपप्रच्यवनासम्भवाच्च । सदैव ब्रह्मास्मीत्यप्रच्युतो भवेत्तत्त्वात् , सदा अप्रच्युतात्मतत्त्वदर्शनो भवेदित्यभिप्रायः ;
‘शुनि चैव श्वपाके च’ (भ. गी. ५ । १८) ‘समं सर्वेषु भूतेषु’ (भ. गी. १३ । २७) इत्यादिस्मृतेः ॥ ३८ ॥
(ச.பா) பிருதிவீ முதலிய பாஹ்யதத்துவம், தேஹம் முதலிய ஆத்யாத்மிகதத்துவம். “वाचारम्भणंविकारोनामधेयम्” (வாச்சாரம்பணம்விகாரோநாமதேயம் என்ற சுருதியை அனுசரித்து ரஜ்ஜு சர்ப்பம் முதலியவைகளுக்கு சமானமானதாய் அவ்வாறே, ஸ்வப்னம், மாயைக்கு சமானமாய் மித்தையாகும், “तत्सत्यं स आत्मातत्त्वमसि” (தத்சத்யம் ச ஆத்மாதத்துவமஸி = அது சத்தியம், அது ஆத்மா அது நீயாய் இருக்கும் என்ற சுருதியின்படி ஆத்மா வெளியிலும், உள்ளும் இருக்கிறது. ஜன்மமற்றது. காரணமற்றது, காரியமற்றது, உள்ளும் புறமும்சூன்யம், பரிபூர்ணம், ஆகாசத்திற்கு சமமாய் சர்வகதம், சூக்ஷ்மம், அசலம், நிர்குணம், நிஷ்களம் அவ்வாறே நிஷ்கிரியையாகும். இவ்வாறு தத்துவ சாக்ஷாத்காரம் அடைந்து தத்துவ பூதர்களாகி அதில் ரமிக்கின்றவர்களாய் வெளியில் உள்ளவற்றில் ஆசை (பிரியம்) அற்றவர்களாய் இருந்து கொண்டு எவ்வாறு மனதை ஆத்மாவாய் கருதி ஏதோ ஒரு அதத்துவதர்சீ புருஷன் ஒரு சமயத்தில் ஆத்மாவையும் சலிக்கும் என்று நினைத்து தன்னை தத்துவத்திலிருந்து சலிக்க செய்து தேஹாதிரூபமாய் அறிந்து அந்த சமயத்தில் தத்துவத்திலிருந்து நழுவிவிட்டேன் என்று நினைக்கின்றான், அவ்வாறே சித்தம் சமாஹிதம் அடைந்த பொழுது தன்னை தத்வீபூதனாயும், மேலும் பிரசன்னம் அடைந்ததாய் இப்பொழுது நான் தத்துவத்தில் நிலைபெற்றிருக்கிறேன். அவ்வாறே ஆத்ம வேத்தாவை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஆத்மா எப்பொழுதும் ஒரே ரூபமாய் இருக்கிறது. அதனுடைய நிலையிலிருந்து நழுவுதல் சம்பவிக்காது. ஆகையால் அது எப்பொழுதும் “பிரஹ்மமாய் இருக்கிறேன்” என்று நிச்சயம் செய்து தத்துவத்திலிருந்து நழுவாது. தாத்பரியம் என்னவெனில் ஆத்ம தர்சி ஒரு நாளும் நழுவமாட்டான். “शुनिचैव श्वपाके च पण्डिताः समदर्शिनः” (சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா சமதர்சினः = நாயினிடத்திலும். சண்டாளனிடத்திலும் பண்டிதர்கள் சமதிருஷ்டி உடையவர்கள்) “समं सर्वेषु भूतेषु” (சமம்சர்வேஷு பூதேஷு = எல்லா பூதங்களிடமும் சமம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
इति द्वितीयं वैतथ्यप्रकरणं सम्पूर्णम् ॥
उपासनाश्रितो धर्मो जाते ब्रह्मणि वर्तते ।
प्रागुत्पत्तेरजं सर्वं तेनासौ कृपणः स्मृतः ॥ १ ॥
कारिका अन्वयः - उपासनाश्रितो धर्मः जाते ब्रह्मणी वर्तते प्रागुत्पत्तेः अजं सर्वं प्रपत्स्ये तेन असौ कृपणः स्मृतः ॥
காரிகா அர்த்தம் - உபாசனையை ஆஸ்ரியிக்கின்ற ஜீவன் காரிய பிரஹ்மத்தில் நிலைக்கிறான். உத்பத்திக்கு முன் எல்லாம் அஜமாய் இருந்து அதாவது அஜனாவாகிய பிரஹ்ம ஸ்வரூபமாய் இருந்தது. ஆகையால் அல்ப ஞானியாகவும் (தீனனாகவும்) கருதப்படுகிறான்.
(भाष्यम्) (अव) - ओङ्कारनिर्णये उक्तः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत आत्मेति प्रतिज्ञामात्रेण,
‘ज्ञाते द्वैतं न विद्यते’ (मा. का. १ । १८) इति च । तत्र द्वैताभावस्तु वैतथ्यप्रकरणेन स्वप्नमायागन्धर्वनगरादिदृष्टान्तैर्दृश्यत्वाद्यन्तवत्त्वादिहेतुभिस्तर्केण च प्रतिपादितः । अद्वैतं किमागममात्रेण प्रतिपत्तव्यम् , आहोस्वित्तर्केणापीत्यत आह — शक्यते तर्केणापि ज्ञातुम् ; तत्कथमित्यद्वैतप्रकरणमारभ्यते । उपास्योपासनादिभेदजातं सर्वं वितथम् , केवलश्चात्मा अद्वयः परमार्थ इति स्थितमतीते प्रकरणे ; यतः
(ச.பா) (அ.கை) பிரபஞ்சத்தின் உபசமனம், சிவம், அத்வைதம் ஆத்மா என்ற பிரதிக்ஞா மாத்திரத்தாலேயே ஓம்காரம் நிர்ணயம் செய்யப்பட்டதாகிறது. ஞானம் ஏற்பட்டவுடன் த்வைதம் இல்லாமல் போய்விடும். (ज्ञाते द्वैतं न विद्यतः) அங்கு துவைத அபாவமானது வைதத்திய பிரகரணத்தில் ஸ்வப்னமாயை, கந்தர்வ நகரம் முதலிய திருஷ்ட்டாந்தங்களால் த்ருஷ்யத்துவம், அவ்வாறே ஆதி அந்தத்துவம் முதலிய ஹேதுவாயிலாய் தர்க்கத்தால் பிரதிபாதனம் செய்யப்பட்டது. அத்வைதம் ஆகம மாத்திரத்தாலேயே அறிந்து கொள்ள முடியும் அல்லது தர்க்கத்தாலுமா என்பதற்குக் கூறுகிறார் - தர்க்கத்தாலும் அறிய முடியும். அது எவ்வாறு என்று அத்வைத பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது. உபாசிக்கப்பட வேண்டியது, உபாசனை முதலிய பேதத்தால் உண்டான எல்லாம் பொய், கேவலம் ஆத்மா அத்வயம் பரமார்த்தம் என்று இதற்கு முந்திய பிரகரணத்தில் நிச்சயிக்கப்பட்டது ஏனெனில் -
उपासनाश्रितः उपासनामात्मनो मोक्षसाधनत्वेन गतः उपासकोऽहं ममोपास्यं ब्रह्म । तदुपासनं कृत्वा जाते ब्रह्मणीदानीं वर्तमानः अजं ब्रह्म शरीरपातादूर्ध्वं प्रतिपत्स्ये प्रागुत्पत्तेश्चाजमिदं सर्वमहं च । यदात्मकोऽहं प्रागुत्पत्तेरिदानीं जातो जाते ब्रह्मणि च वर्तमान उपासनया पुनस्तदेव प्रतिपत्स्ये इत्येवमुपासनाश्रितो धर्मः साधकः येनैवं क्षुद्रब्रह्मवित् , तेनासौ कारणेन कृपणो दीनोऽल्पकः स्मृतो नित्याजब्रह्मदर्शिभिर्महात्मभिरित्यभिप्रायः,
‘यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते’ (के. उ. १ । ५) इत्यादिश्रुतेस्तलवकाराणाम् ॥ १ ॥
(ச.பா) उपासनाश्रित (உபாசனாச்ரித:) என்றால் உபாசனையை தன்னுடைய மோக்ஷத்திற்கு சாதன ரூபமாய் கருதுபவன் அதாவது நான் உபாசகன். பிரஹ்மம் உபாசிக்க வேண்டியது என்பதாகும். அதனை உபாசனை செய்து கொண்டு காரிய பிரஹ்மத்தில் இருக்கின்றேன். இந்த சரீரம் வீழ்ந்த பின் பிறப்பற்ற பிரஹ்மத்தை அடைந்து அவ்வாறு உத்பத்திக்கு முன் எல்லாம் அஜ ரூபமாய் (ஜன்மற்றதாய்) இருந்தது. உத்பத்திக்கு முன் அவ்வாறு இருந்து இப்பொழுது உத்பன்னமாகி உண்டான பிரஹ்மத்தில் இருந்து கொண்டு முடிவில் உபாசனாவாயிலாய் மறுபடியும் அந்த ரூபத்தை அடைவேன் என்று இவ்வாறு உபாசனையை ஆஸ்ரயிக்கும் சாதக ஜீவன் க்ஷுத்ர (கீழான) பிரஹ்மத்தை அறிந்தவனாவான். ஆகையால் எப்பொழுதும் அஜன்ம பிரஹ்மத்தை தர்சிக்கும் மஹாத்மாக்கள் அவர்களை தீனன் அதாவது க்ஷுத்திரன் என்று கருதுகிறார்கள் என்பது இதன் அபிப்பிராயம், “यद्वाचाऽनभ्युदितं येन वागभ्युद्यते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யத்வாச்சானப்யுதிதம் யேன வாக்அப்யுத்யதே. ததேவ பிரஹ்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாசதே) = எது வாக்கினால் அறிய முடியாதோ. எதனால்வாக் அறிய முடிகிறதோ அது பிரஹ்மம் என்று அறி, உபாசனை செய்யப்படுவது பிரஹ்மம் அல்ல. என்பது முதலிய தலவகார சுருதி பிரமாணம் ஆகும்.
अतो वक्ष्याम्यकार्पण्यमजाति समतां गतम् ।
यथा न जायते किञ्चिज्जायमानं समन्ततः ॥ २ ॥
सबाह्याभ्यन्तरमजमात्मानं प्रतिपत्तुमशक्नुवन् अविद्यया दीनमात्मानं मन्यमानः जातोऽहं जाते ब्रह्मणि वर्ते तदुपासनाश्रितः सन्ब्रह्म प्रतिपत्स्ये इत्येवं प्रतिपन्नः कृपणो भवति यस्मात् -
(ச.பா) (அ.கை) வெளியிலும் உள்ளும் நிறைந்திருக்கும் அஜன்ம ஆத்மாவை அடையும் சாமர்த்தியம் அற்றதின் காரணமாய் அவித்தியா வசத்தால் தன்னை தீனன் எனக் கருதும் புருஷன் நான் உத்பன்னமாய் இருக்கிறேன். உத்பன்னமான பிரஹ்மத்தில் இருக்கிறேன். மேலும் அதை உபாசனைக்கு ஆஸ்ரயமாய் எடுத்துக்கொண்டு பிரஹ்மத்தை அடைவேன் என்று நினைப்பதால் அவன் தீனன்-
कारिका अन्वयः - अतः अकार्पण्यम् अजाति समतामगतं समन्ततः यथा जायमानं किञ्चित् न जायते ।
காரிகா அர்த்தம் - ஆகையால் இப்பொழுது நான் எங்கும் சமபாவனை அடைந்து ஜன்மமற்ற தீனத்தன்மை அற்றதின் (அஜன்மா பிரஹ்மத்தின்) வர்ணனை செய்கிறேன். எவ்வாறு எனில் எல்லாம் உத்பன்னமானாலும் சிறிதும் உத்பன்னமாகவில்லை என்பதைக் கூறப்போகிறேன்.
(ச.பா) ஆகையால் அகார்பண்ய அக்ருபண பாவமான பிரஹ்மத்தை வர்ணிக்கப்போகிறேன். அந்த கார்பண்ய ஆஸ்பதம் என்பது “यत्रान्योऽन्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं मर्त्यमसत्” “वाचारम्भणं विकारो नामधेयम्” (யத்ரான்யோன் யத்பச்யத்யன்யச்ச்ருணோத்யன்யத்விஜானாதி ததல்பம் மர்த்யமசத், வாசாரம்பணம் விகாரோநாமதேயம் = எங்கு மற்றொன்றைப் பார்க்கிறானோ கேட்கிறானோ, அறிகின்றானோ அது அல்பமானது மரண தர்மத்துடன் கூடியது, அது அசத், வாக்கினால் ஆரம்பமாகும் விகாரமெல்லாம் நாம மாத்திரமே) முதலிய சுருதிகளால் அறிகிறோம். அதற்கு விபரீதமானது புறமும், உள்ளும் எங்கும் நீக்கமறநிறைந்ததாயும். பிறப்பற்றதாயும், கார்பண்ய மற்றதாயும் பூமா எனப்படும் பிரஹ்மமாகும். எதை அடைந்தால் அவித்தையால் உண்டான எல்லா கிருபணத் தன்மையும் நிவர்த்தியாகிறதோ அது அகார்ப்பண்யம் அதைக் கூறுகிறேன் என்பது பொருள்.
(भाष्यम्) - तत् अजाति अविद्यमाना जातिरस्य । समतां गतं सर्वसाम्यं गतम् ; कस्मात् ? अवयववैषम्याभावात् । यद्धि सावयवं वस्तु, तदवयववैषम्यं गच्छज्जायत इत्युच्यते ; इदं तु निरवयवत्वात्समतां गतमिति न कैश्चिदवयवैः स्फुटति ; अतः अजाति अकार्पण्यं समन्ततः समन्तात् , यथा न जायते किञ्चित् अल्पमपि न स्फुटति रज्जुसर्पवदविद्याकृतदृष्ट्या जायमानं येन प्रकारेण न जायते सर्वतः अजमेव ब्रह्म भवति, तथा तं प्रकारं शृण्वित्यर्थः ॥ २ ॥
(ச.பா) அது பிறப்பற்றதாயும், எல்லாவற்றிலும் ஒரே ஸமமாய் உள்ளதாயும், எவ்வாறெனில், அவயவங்களுடன் கூடியவைகளுக்கே வைஷம்யம் ஏற்படும், இது அவவய மற்றதால் எவ்வித வைஷம்யமும் அற்றது. எல்லாவற்றிலும் சமமானது. தன்னைச் சுற்றிலும் அல்லது தன்னைச் சார்ந்ததாக எவ்வாறு ரஜ்ஜுவில் ஸர்ப்பம் தோன்றுவது போல் அவித்தியா தோஷத்தால் உண்டாகும். எந்த சிறு தோஷமும் (பேதகல்பனையும்) சிறிது அளவு கூட உண்டாவது இல்லையோ, எது எப்பொழுதும் எவ்வித மாறுபாடுமின்றி உள்ளதோ அத்தகைய பிரஹ்மத்தைக் (கூறுகிறேன்) கேள் என்பது பொருள்.
आत्मा ह्याकाशवज्जीवैर्घटाकाशैरिवोदितः ।
घटादिवच्च सङ्घातैर्जातावेतन्निदर्शनम् ॥ ३ ॥
(भाष्यम्) (अव) - अजाति ब्रह्माकार्पण्यं वक्ष्यामीति प्रतिज्ञातम् ; तत्सिद्ध्यर्थं हेतुं दृष्टान्तं च वक्ष्यामीत्याह —
(ச.பா) (அ.கை) பிறப்பற்ற அகார்பண்ய பிரஹ்மத்தைப் பற்றி கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்யப்பட்டது . அது சித்திக்கும் பொருட்டு ஹேதுவையும், திருஷ்டாந்தத்தையும் சொல்லுகிறேன் என்று கூறுகிறார்-
कारिका अन्वयः - आत्मा हि आकाशवत् (यथा) घटाकाशैरिव (तथा) जीवैः उदितः घटादिवत् च संघातैः जातौ एतत् निदर्शनम् ।
காரிகா அர்த்தம் - ஆத்மா ஆகாசத்திற்கு ஒப்பானதாகும். கடாகாசம்போல் ஜீவரூபமாய் உத்பன்னமாயிற்று. அவ்வாறே கடாதிகளுக்கு சமானமாய் தேஹ சங்காத ரூபமாய் உத்பன்னமாயிருக்கிறது. ஆத்மாவின் உத்பத்தி விஷயத்தில் திருஷ்டாந்தம் கூறப்பட்டுள்ளது.
आत्मा परः हि यस्मात् आकाशवत् सूक्ष्मो निरवयवः सर्वगत आकाशवदुक्तः जीवैः क्षेत्रज्ञैः घटाकाशैरिव घटाकाशतुल्यैः उदितः उक्तः ; स एव आकाशसमः पर आत्मा ।
(ச.பா) ஏனெனில் பரமாத்மா ஆகாசம் போல் சூக்ஷ்ம. நிரவயவ, சர்வகதம் எனப்படுகிறது. மேலும் அது கடாகாசம் போல் க்ஷதே்ரக்ஞ ஜீவ ரூபமாய் உத்பன்னமானது என்று கூறப்படுகிறது. ஆகையால் பரமாத்மா ஆகாசத்திற்குச் சமானமாகும்.
अथवा घटाकाशैर्यथा आकाश उदितः उत्पन्नः, तथा परो जीवात्मभिरुत्पन्नः ; जीवात्मनां परस्मादात्मन उत्पत्तिर्या श्रूयते वेदान्तेषु, सा महाकाशाद्घटाकाशोत्पत्तिसमा, न परमार्थत इत्यभिप्रायः ।
(ச.பா) அல்லது எவ்வாறு கடாகாச ரூபத்தில் ஆகாயம் உத்பன்னமானதோ அவ்வாறு பரமாத்மா ஜீவாத்ம ரூபமாய் உத்பன்னமாயிற்று. தாத்பர்யம் என்னவெனில் வேதாந்தத்தில் எந்த பரமாத்மாவிலிருந்து. ஜீவாத்மாக்களின் உத்பத்தியானது கேட்கப்படுகின்றதோ அது மஹா ஆகாசத்திலிருந்து கடாகாச உத்பத்தி போல் சமானமாகும். உண்மையில் (பரமார்த்தமாக) அல்ல என்பது அபிப்பிராயம்.
तस्मादेवाकाशाद्घटादयः सङ्घाता यथा उत्पद्यन्ते, एवमाकाशस्थानीयात्परमात्मनः पृथिव्यादिभूतसङ्घाता आध्यात्मिकाश्च कार्यकरणलक्षणा रज्जुसर्पवद्विकल्पिता जायन्ते ; अत उच्यते — घटादिवच्च सङ्घातैरुदित इति । यदा मन्दबुद्धिप्रतिपिपादयिषया श्रुत्या आत्मनो जातिरुच्यते जीवादीनाम् , तदा जातावुपगम्यमानायाम् एतत् निदर्शनं दृष्टान्तः यथोदिताकाशवदित्यादिः ॥ ३ ॥
(ச.பா) எவ்வாறு கடம் முதலிய சங்காதம் உத்பன்ன மாகிறதோ அவ்வாறு ஆகாச ஸ்தானீயமாய் இருக்கும் பரமாத்மாவிடத்தில் ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பிக்கப்பட்ட பிருதிவீ முதலிய பூதசங்காதங்களும், சரீரம் அவ்வாறே இந்திரிய ரூப ஆத்யாத்மிக பாவம் உத்பன்னமாகிறது. இதனால் கூறப்படுவது என்னவெனில் கடாதிகளைப் போல் தேஹ சங்காத ரூபமாய் உத்பன்னமாகிறது. எப்பொழுது மந்தபுத்தி உடையவர்களுக்கு பிரதிபாதனம் செய்வதற்கான இச்சையால் சுருதியானது ஆத்மாவிலிருந்து ஜீவாதிகளின் உத்பத்தியானது வர்ணிக்கப்பட்டது. அப்பொழுது அதன் உத்பத்தியை ஏற்பதில் முன்பு கூறப்பட்ட ஆகாசம் முதலானவைகள் போல் என்று நிதர்சனம் செய்யப்பட்டது (திருஷ்டாந்தம் காட்டப்பட்டது).
घटादिषु प्रलीनेषु घटाकाशादयो यथा ।
आकाशे सम्प्रलीयन्ते तद्वज्जीवा इहात्मनि ॥ ४ ॥
कारिका अन्वयः - यथा घटादिषु प्रलीनेषु घटाकाशादयः आकाशे संप्रलीयन्ते तद्वत् इह जीवाः संप्रलीयन्ते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடம் முதலியவைகள் லீனமான உடன் கடாகாசம் முதலியவை மஹா ஆகாசத்தில் லீனமாகிறதோ அவ்வாறு ஜீவன் இந்த ஆத்மாவில் லீனம் அடைகிறது.
यथा घटाद्युत्पत्त्या घटाकाशाद्युत्पत्तिः, यथा च घटादिप्रलयेन घटाकाशादिप्रलयः, तद्वद्देहादिसङ्घातोत्पत्त्या जीवोत्पत्तिः तत्प्रलयेन च जीवानाम् इह आत्मनि प्रलयः, न स्वत इत्यर्थः ॥
(ச.பா) எவ்வாறு கட முதலியவைகளின் உத்பத்தியினால் கடாகாசம் முதலியவைகள் உத்பத்தியாகிறதோ, மேலும் எவ்வாறு கடம் முதலியவைகள் நாசம் அடையும்பொழுது கடாகாசம் முதலிவைகளின் நாசம் உண்டாகிறதோ அவ்வாறே தேஹம் முதலிய சங்காதத்தின் உத்பத்தியால் ஜீவனின் உத்பத்தி உண்டாகிறது. அது லயம் ஆகும்பொழுது ஜீவனும் இந்த ஆத்மாவில் லயமாகிறது. அவை இயற்கையாய் உண்டாவதில்லை என்பது கருத்து.
(भाष्यम्) (अव) - सर्वदेहेष्वात्मैकत्वे एकस्मिन् जननमरणसुखदुःखादिमत्यात्मनि सर्वात्मनां तत्सम्बन्धः क्रियाफलसाङ्कर्यं च स्यादिति ये त्वाहुर्द्वैतिनः, तान्प्रतीदमुच्यते ।
(ச.பா) (அ.கை) (முன் காரிகையில் கூறப்பட்ட திருஷ்டாந்தத்தால் ஒரு ஜீவன் சுகம் முதலானவைகளைப் பெற்றிருக்க. மற்ற ஜீவன்கள் அந்த சுகத்தைப் பெறுவதில்லையே? அது ஏன்?) மேலும் எல்லா தேஹங்களிலும் ஒரே ஆன்மாதான் இருக்கிறது என்றால் ஒரு தேஹத்தில் உள்ள ஆத்மா ஜனன, மரண சுகாதிகளை அனுபவிக்கையில் அதனுடன் சம்பந்தப்பட்ட அகில உலகிலுமுள்ள ஆத்மாக்களுக்கும் இதற்கு உண்டாகும் சுகதுக்காதிகள் ஏற்பட்டே ஆகவேண்டும். அது அனுபவத்திற்கு ஒத்துவராததால் துவைதக்கொள்கையே சரியானது என்று கூறும் துவைதிகளுக்கு பதிலாக அமைவது இந்த காரிகை-
यथैकस्मिन्घटाकाशे रजोधूमादिभिर्युते ।
न सर्वे सम्प्रयुज्यन्ते तद्वज्जीवाः सुखादिभिः ॥ ५ ॥
कारिका अन्वयः - यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिर्युते सति तथा सर्वे न संप्रयुज्यन्ते तद्वत् जीवाः सुखादिभिः न संप्रयुज्यन्ते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஒரு கடாகாசமானது புழுதி, புகைமுதலானவைகளுடன் கூடி இருக்கும் பொழுது அந்த முன் கூறப்பட்ட கடாகாசம் போலவே மற்றஎல்லா கடாகாசங்களும் அப்புழுதி, புகை இவைகளுடன் கூடியிருப்பதில்லையோ அது போல் ஜீவாத்மாக்கள் சுகம். துக்கம் இவைகளுடன் ஒரு ஜீவாத்மா பெற்றிருப்பதைப் போன்று, மற்ற ஜீவாத்மாக்கள் சுக துக்கங்களைப் பெற்றிருப்பதில்லை.
(भाष्यम्) — यथा एकस्मिन् घटाकाशे रजोधूमादिभिः युते संयुक्ते, न सर्वे घटाकाशादयः तद्रजोधूमादिभिः संयुज्यन्ते, तद्वत् जीवाः सुखादिभिः ।
(ச.பா) எவ்வாறு ஒரு கடாகாசத்தில் புழுதி, புகை முதலியவை கூடி இருக்கும்பொழுது மற்றஎல்லா கடாகாசங்களும் புழுதி, புகை இவைகளுடன் கூடி இருப்பதில்லையோ அவ்வாறு ஜீவர்களும் சுகம் முதலியவைகளுடன் கூடி இருப்பதில்லை.
(पूर्व) ननु, एक एवात्मा ?
(பூர்வ) ஆனால் ஆத்மா ஒன்றேயா?
बाढम् ; ननु न श्रुतं त्वया आकाशवत्सर्वसङ्घातेष्वेक एवात्मेति ?
(ச.பா) (சித்தாந்தி) ஆம், என்ன நீ கேட்டதில்லையா? எல்லா சங்காதங்களிலும் ஆகாசத்திற்கு ஓப்பாய் வியாபித்திருப்பது ஒரே ஆத்மா அல்லவா?
यद्येक एवात्मा, तर्हि सर्वत्र सुखी दुःखी च स्यात् ।
(ச.பா) (பூர்வ) ஆத்மா ஒன்றே என்றால் எங்கும் சுகம் துக்கம் இருக்குமே.
न चेदं साङ्ख्यस्य चोद्यं सम्भवति ; न हि साङ्ख्य आत्मनः सुखदुःखादिमत्त्वमिच्छति, बुद्धिसमवायाभ्युपगमात्सुखदुःखादीनाम् ; न चोपलब्धिस्वरूपस्यात्मनो भेदकल्पनायां प्रमाणमस्ति ।
(ச.பா) (சித்தாந்தி) சாங்கிய மதஸ்தர்களுடைய கொள்கை இங்கு பொருந்தாது. சாங்கியர்கள் ஆத்மாவிற்கு சுக துக்காதிகளை ஒப்புக்கொள்வதில்லை. அல்லது அவர்கள் ஆத்மா சுகத்துடனோ, துக்கத்துடனோ கூடியிருத்தலை ஒப்புக்கொள்வதில்லை. புத்தியுடன் சேர்ந்தபொழுதே சுகதுக்கங்கள் நுகரப்படுவதால் ஆத்மாவிற்கு சுகமோ, துக்கமோ இல்லை என்று கூறப்படுகிறது. புத்தியுடன் சம்பந்தப்பட்டு சுக துக்கங்களை நுகரும் ஆத்மாவிற்கு பேதத்தைக் கல்பிப்பதற்கான எந்தவிதப் பிரமாணமும் உங்களிடம் இல்லை. யாரிடமும் இல்லை.
भेदाभावे प्रधानस्य पारार्थ्यानुपपत्तिरिति चेत् , न ; प्रधानकृतस्यार्थस्यात्मन्यसमवायात् ; यदि हि प्रधानकृतो बन्धो मोक्षो वा अर्थः पुरुषेषु भेदेन समवैति, ततः प्रधानस्य पारार्थ्यमात्मैकत्वे नोपपद्यत इति युक्ता पुरुषभेदकल्पना ; न च साङ्ख्यैर्बन्धो मोक्षो वार्थः पुरुषसमवेतोऽभ्युपगम्यते, निर्विशेषाश्च चेतनमात्रा आत्मानोऽभ्युपगम्यन्ते ; अतः पुरुषसत्तामात्रप्रयुक्तमेव प्रधानस्य पारार्थ्यं सिद्धम् , न तु पुरुषभेदप्रयुक्तमिति ; अतः पुरुषभेदकल्पनायां न प्रधानस्य पारार्थ्यं हेतुः ।
(ச.பா) மேலும் பேதங்கள் இல்லாது போனால் பிரதானத்திற்கு பரமார்த்தமான தன்மை இல்லாது போய்விடுமே என்பாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பிரதானத்தால். சம்பாதிக்கப்பட்ட காரியத்திற்கு ஆத்மாவுடன் சம்பந்தமில்லை. பிரதானத்தால் ஏற்பட்ட பந்தம் மோக்ஷம் புருஷர்களுடைய பேதத்தைக் காட்டுவதால் ஆத்மாவின் ஏகத்துவத்தை கொள்ளும்பொழுது பிரதானத்திற்கு பாரமார்த்திகம் சம்பவிக்காது. அப்பொழுது புருஷர்களின் பேதத்தை கல்பனை செய்வதே சரியானதாகும். ஆனால் சாங்கியவாதிகள் பந்தத்தையோ. மோக்ஷத்தையோ புருஷ சம்பந்தமுடையதாக கொள்வதில்லை. அவர்கள் ஆத்மாக்களை நிர்விசேஷமாயும், சேதன மாத்திரமாய் கருதுகிறார்கள். ஆகையால் பிரதானத்தின் பரார்த்ததா கேவலம் புருஷனின் சத்தா மாத்திரத்தாலேயே சித்திக்கின்றது. புருஷ பேதத்தின் காரணமாக அல்ல. ஆகையால் புருஷர்களின் பேத கல்பனையில் பிரதானத்தின் பரார்த்ததா (உண்மை) காரணம் அல்ல.
न चान्यत्पुरुषभेदकल्पनायां प्रमाणमस्ति साङ्ख्यानाम् । परसत्तामात्रमेव चैतन्निमित्तीकृत्य स्वयं बध्यते मुच्यते च प्रधानम् ; परश्चोपलब्धिमात्रसत्तास्वरूपेण प्रधानप्रवृत्तौ हेतुः, न केनचिद्विशेषेणेति, केवलमूढतयैव पुरुषभेदकल्पना वेदार्थपरित्यागश्च ।
(ச.பா) இதைத் தவிர சாங்கியவாதிகளிடத்தில் புருஷபேத கல்பனையில் பிரமாணம் இல்லை. “पर” (பர) ஆத்மாவின் சத்தா மாத்திரத்தை நிமித்தமாக்கி பிரதானம் தானே பந்தம், மோக்ஷத்தை அடைகிறது. மேலும் அந்த பர (ஆத்மா) கேவலம் உபலப்தி (அறிவது) மாத்திரம் சத்தா ஸ்வரூபத்தால் பிரதானத்தின் பிரவிர்த்தியில் ஹேது ஆகிறது. வேறு விசேஷ காரணம் இல்லை. ஆகையால் கேவலம் மூடத்தன்மையினாலேயே புருஷர்களுக்கு பேத கல்பனையும், வேதார்த்தத்தின் பரித்தியாகமும் ஏற்படுகிறது.
ये त्वाहुर्वैशेषिकादयः इच्छादय आत्मसमवायिन इति ; तदप्यसत् , स्मृतिहेतूनां संस्काराणामप्रदेशवत्यात्मन्यसमवायात्, आत्ममनःसंयोगाच्च स्मृत्युत्पत्तेः स्मृतिनियमानुपपत्तिः, युगपद्वा सर्वस्मृत्युत्पत्तिप्रसङ्गः ।
(ச.பா) இதைத் தவிர வைசேஷிக மதத்தைத் தழுவுகின்றவர்கள் இச்சை முதலியவை ஆத்மாவின் தர்மம் என்று கூறுகிறார்கள் அதுவும் சரியல்லை. ஏனெனில் ஸ்மிருதிக்குக் காரணமான சமஸ்காரங்களுக்கு நிரவயவ ஆத்மாவிடத்தில் சமவாய சம்பந்தம் ஏற்படாது. ஆத்மா, மனதின் சம்யோகத்தால் ஸ்மிருதியின் உத்பத்தி என்றால் ஸ்மிருதிக்கு ஒரு நியமமும் சம்பவிக்காது. அல்லது ஒரே சமயத்தில் எல்லா ஸ்மிருதிகளின் உத்பத்தியின் உபஸ்திதி சம்பவிக்கும்.
न च भिन्नजातीयानां स्पर्शादिहीनानामात्मनां मनआदिभिः सम्बन्धो युक्तः । न च द्रव्याद्रूपादयो गुणाः कर्मसामान्यविशेषसमवाया वा भिन्नाः सन्ति । परेषां यदि ह्यत्यन्तभिन्ना एव द्रव्यात्स्युः इच्छादयश्चात्मनः, तथा सति द्रव्येण तेषां सम्बन्धानुपपत्तिः ।
(ச.பா) மேலும் ஸ்பர்சாதிகள் இல்லாத பின்ன ஜாதியான ஆத்மாவிற்கு மன முதலியவையுடன் சம்பந்தம் என்பது சரியல்ல. அவ்வாறே வேறு மதத்தில் திரவியத்தை விட ரூபம் முதலியவை அதனுடைய குணம், அவ்வாறே கர்ம, சாமான்ய, விசேஷ, சமவாயபின்னம் ஆகியவை இல்லை. வேறு மதத்தில் இச்சை முதலியவை திரவ்யத்தைக் காட்டிலும் இச்சை முதலியவை ஆத்மாவைக் காட்டிலும் அத்யந்தம் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் திரவியத்துடன் அதன் சம்பந்தம் சித்திக்காது.
अयुतसिद्धानां समवायलक्षणः सम्बन्धो न विरुध्यत इति चेत् , न ; इच्छादिभ्योऽनित्येभ्य आत्मनो नित्यस्य पूर्वसिद्धत्वान्नायुतसिद्धत्वोपपत्तिः । आत्मना अयुतसिद्धत्वे च इच्छादीनामात्मगतमहत्त्ववन्नित्यत्वप्रसङ्गः । स चानिष्टः, आत्मनोऽनिर्मोक्षप्रसङ्गात् ।
(ச.பா) அயுத (ஓர்வகை சித்தாந்தம்) சித்தத்தின் படி பதார்த்தத்திற்கு சமவாய சம்பந்தம் ஏற்றுக்கொள்வதில் விரோதம் இல்லை என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் இச்சை முதலிய அநித்திய தர்மத்திற்கு முன்பே நித்ய ஆத்மா சித்தித்திருப்பதால் அவைகளுக்கு பரஸ்பரம் அயுத சித்தத்துவம் சம்பவிக்காது. இச்சை முதலியவை ஆத்மாவுடன் அயுத சித்தியாய் இருந்தால் ஆத்மாவில் உள்ள மஹத்துவத்திற்கு சமமாய் அதற்கும் நித்தியத் தன்மை உடையதாகும். மேலும் இந்த விஷயத்தில் இஷ்டமில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு மோக்ஷமற்றது (அநிர்மோக்ஷம்) என்றாகிவிடும்.
समवायस्य च द्रव्यादन्यत्वे सति द्रव्येण सम्बन्धान्तरं वाच्यम् , यथा द्रव्यगुणयोः । समवायो नित्यसम्बन्ध एवेति न वाच्यमिति चेत् , तथा सति समवायसम्बन्धवतां नित्यसम्बन्धप्रसङ्गात्पृथक्त्वानुपपत्तिः । अत्यन्तपृथक्त्वे च द्रव्यादीनां स्पर्शवदस्पर्शद्रव्ययोरिव षष्ठ्यर्थानुपपत्तिः ।
(ச.பா) எது சமவாய திரவ்யத்தைக் காட்டிலும் பின்னமோ அதற்கு திரவ்யத்துடன் வேறு எதாவது சம்பந்தம் கூறவேண்டும், எவ்வாறு திரவ்யம் குணமோ அவ்வாறு. சமவாயம் நித்திய சம்பந்தம் என்றால் அதனுடன் எதாவது சம்பந்தம் கூறுவதற்கு அவசியம் இல்லை எனில் அந்த அவஸ்தையில் சமவாய சம்பந்தம் உடையவற்றிற்கு நித்தியசம்பந்தம் ஏற்படுவதால் அதற்கு என்று தனி சம்பந்தம் தேவையில்லை. திரவியம் முதலியவைகள் பரஸ்பரம் முற்றிலும் பின்னம் என்று எடுத்துக் கொண்டால் எவ்வாறு ஸ்பரிசத்தை உடையதற்கும் ஸ்பரிசமற்ற திரவியத்திற்கும் பரஸ்பர சம்பந்தம் சம்பவிக்காது. அவ்வாறே இதற்கும் சம்பந்தம் கிடையாது.
इच्छाद्युपजनापायवद्गुणवत्त्वे च आत्मनोऽनित्यत्वप्रसङ्गः । देहफलादिवत्सावयवत्वं विक्रियावत्त्वं च देहादिवदेवेति दोषावपरिहार्यौ । यथा त्वाकाशस्य अविद्याध्यारोपितघटाद्युपाधिकृतरजोधूममलवत्त्वादिदोषवत्त्वम् , तथा आत्मनः अविद्याध्यारोपितबुद्ध्याद्युपाधिकृतसुखदुःखादिदोषवत्त्वे बन्धमोक्षादयो व्यावहारिका न विरुध्यन्ते ; सर्ववादिभिरविद्याकृतव्यवहाराभ्युपगमात् परमार्थानभ्युपगमाच्च । तस्मादात्मभेदपरिकल्पना वृथैव तार्किकैः क्रियत इति ॥ ५ ॥
(ச.பா) ஆத்மாவை இச்சை முதலியவைகளின் உத்பத்தி விநாசம் ஆகிய குணம் உடையவைகளாய் கருதினால் அதற்கு அநித்யத்துவம் ஏற்படும். அவ்வாறே அதற்கு தேஹம் பலம் முதலியவைகளுக்கு சமானமாய் சாவயவத்துவமும் அவ்வாறே தேஹ முதலியவைகளுக்கு சமமாய் கிரியாத்துவம் ஆகிய இரண்டு தோஷங்கள் நீக்க முடியாததாய் ஆகிவிடும். எவ்வாறு எனில் ஆகாசத்தின் அவித்யா ஆரோபத்தால் கடம் முதலிய உபாதிகளின் காரணமாய் தூசி. புகை, மலம் இவைகளுடன் கூடி இருக்கிறதோ அவ்வாறே அவித்தையால் ஆரோபிக்கப்பட்ட புத்தி முதலியவைகளின் உபாதியின் காரணமாய் சுகதுக்கம் முதலிய தோஷங்களின் சேர்க்கையால் வியாவஹாரிக பந்தம், மோக்ஷம் முதலியவை ஏற்படுவதில் எந்த விரோதமும் இல்லை. ஏனெனில் எல்லாவாதிகளும் வியவஹாரத்தை அவித்யையினால் உண்டானதே என்று கருதுகிறார்கள், உண்மை ரூபமாய்(பரமார்த்தரூபமாய்) கருதவில்லை. ஆகையால் தார்க்கிகர்களின் ஜீவபேத கல்பனை பிரயோஜனமற்றதாகும்.
कथं पुनरात्मभेदनिमित्त इव व्यवहार एकस्मिन्नात्मन्यविद्याकृत उपपद्यत इति, उच्यते ।
(ச.பா) (அ.கை) ஆத்மா ஒன்றே ஆத்மாவில் பேதம் இருப்பது போல் அவித்தையினால் உண்டாகும் வியவஹாரம் எவ்வாறு சம்பவிக்கும். இதைக்குறித்து கூறுகிறார்.
रूपकार्यसमाख्याश्च भिद्यन्ते तत्र तत्र वै ।
आकाशस्य न भेदोऽस्ति तद्वज्जीवेषु निर्णयः ॥ ६ ॥
कारिका अन्वयः - तत्र तत्र वै रूपकार्य समाख्याश्च भिद्यन्ते आकाशस्य भेदः न अस्ति तद्वत् जीवेषु निर्णयः ।
காரிகா அர்த்தம் - (குடம் முதலிய உபாதியின் காரணமாய் தோன்றும்) பின்ன பின்ன ஆகாசத்தின் ரூபம், காரியம், பெயர் இவைகளால் பேதம் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆகாசத்தில் எந்தபேதமும் இல்லை அவ்வாறே ஜீவ விஷயத்திலும் அறிந்துகொள்ள வேண்டும்.
यथा इहाकाशे एकस्मिन्घटकरकापवरकाद्याकाशानामल्पत्वमहत्त्वादिरूपाणि भिद्यन्ते, तथा कार्यमुदकाहरणधारणशयनादि, समाख्याश्च घटाकाशः करकाकाश इत्याद्याः तत्कृताश्च भिन्ना दृश्यन्ते, तत्र तत्र वै व्यवहारविषये इत्यर्थः । सर्वोऽयमाकाशे रूपादिभेदकृतो व्यवहारः अपरमार्थ एव । परमार्थतस्त्वाकाशस्य न भेदोऽस्ति । न चाकाशभेदनिमित्तो व्यवहारोऽस्ति अन्तरेण परोपाधिकृतं द्वारम् । यथैतत् , तद्वद्देहोपाधिभेदकृतेषु जीवेषु घटाकाशस्थानीयेष्वात्मसु निरूपणात्कृतः बुद्धिमद्भिः निर्णयः निश्चय इत्यर्थः ॥ ६ ॥
(ச.பா) எவ்வாறு ஒரே ஆகாசத்தில் கடம், கமண்டலம், மடம் ஆகிய ஆகாசங்களாய் சிறிது, பெறிதுமாய் ரூபத்தில் பேதம் உடையதாயும். அவ்வாறே வியவஹாரத்தில் ஜலத்தை கொண்டு வருதல், ஜலத்தைத் தாங்குதல், படுத்தல் முதலிய காரியமாயும், அவ்வாறே கடாகாசம் கரகாகாசம் என்பது முதலிய பெயர்களால் வேறு வேறாய் (பின்னமாய்) காணப்படுகிறது. ஆனால் ஆகாசத்தில் ரூபம் முதலியவைகளுக்கு காரணமாகும் எல்லா வியவஹாரங்களும் பாரமார்த்திகமல்ல உண்மையில் ஆகாசத்திற்கு ஒரு பேதமும் இல்லை. உண்மையில் உபாதி உண்டான நிமித்தத்தை தவிர ஆகாசத்தின் பேதத்திற்கு வேறு காரணமான எந்த வியவஹாரமும் இல்லை. எவ்வாறு கடாதிகளுக்கோ அவ்வாறே தேஹம் முதலிய உபாதியின் பேதத்தால் உண்டாகும் கடாகாசத்திற்கு ஒப்பான ஜீவர்களின் பேதம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அதை புத்திமான்கள் நிச்சயம் செய்கிறார்கள் என்பது தாத்பர்யம்.
ननु तत्र परमार्थकृत एव घटाकाशादिषु रूपकार्यादिभेदव्यवहार इति ; नैतदस्ति, यस्मात्
(ச.பா) அ.கை) கடாகாசம் முதலியவைகளில் ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரம் வாஸ்தவமா? என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் -
नाकाशस्य घटाकाशो विकारावयवौ यथा ।
नैवात्मनः सदा जीवो विकारावयवौ तथा ॥ ७ ॥
कारिका अन्वयः - यथा घटाकाशः आकाशस्य विकारावययौ न, तथा जीवः आत्मनः सदा विकारावयवौ नैव ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு கடாகாசம் ஆகாச விகாரத்தின் அவயவமாகாதோ அவ்வாறே ஜீவனும் ஆத்மாவின் விகாரம் ஒரு போதும் அவயவமாகாது.
परमार्थाकाशस्य घटाकाशो न विकारः, यथा सुवर्णस्य रुचकादिः, यथा वा अपां फेनबुद्बुदहिमादिः ; नाप्यवयवः, यथा वृक्षस्य शाखादिः । न तथा आकाशस्य घटाकाशो विकारावयवौ यथा, तथा नैवात्मनः परस्य परमार्थसतो महाकाशस्थानीयस्य घटाकाशस्थानीयो जीवः सदा सर्वदा यथोक्तदृष्टान्तवन्न विकारः, नाप्यवयवः । अत आत्मभेदकृतो व्यवहारो मृषैवेत्यर्थः ॥ ७ ॥
(ச.பா) பரமார்த்த ஆகாசத்திற்கு கடாகாசம் விகாரம் அல்ல. எவ்வாறு தங்கத்திற்கு கழுத்து மாலை முதலியவையோ, எவ்வாறு நீரில் நுரை, குமுழி, பனி இவை முதலியவைகளோ அவைகளைப்போல் ஆகும். மரத்தின் கிளைகள் போல் அவயவம் ஆகாது. எவ்வாறு மஹாகாசத்திற்கு கடாகாச விகாரமோ, அவயவமோ ஆகாதோ அவ்வாறு முற்கூறிய திருஷ்டாந்தப்படி மஹாகாச ஸ்தானத்தில் இருக்கும் பரமார்த்த சத் பரமார்த்தாவின் கடாகாச ஸ்தானீய ஜீவன், எந்த ஒரு அவஸ்தையிலும் விகாரமோ அவயவமோ ஆகாது. ஆகையால் இதன் தாத்பரியம் என்னவெனில் ஆத்ம பேதத்தால் உண்டாகிற வியவஹாரம் மித்தையேயாகும்.
यस्माद्यथा घटाकाशादिभेदबुद्धिनिबन्धनो रूपकार्यादिभेदव्यवहारः, तथा देहोपाधिजीवभेदकृतो जन्ममरणादिव्यवहारः, तस्मात्तत्कृतमेव क्लेशकर्मफलमलवत्त्वमात्मनः, न परमार्थत इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपिपादयिषन्नाह —
(ச.பா) (அ.கை) ஏனெனில் எவ்வாறு கடாகாசம் முதலிய புத்தி பேதத்தின் காரணமாய் அதற்கு ரூபம், காரியம் முதலிய பேத வியவஹாரமோ அவ்வாறே தேஹ உபாதியுடன் ஜீவபேதத்தின் காரணத்தால் ஜன்ம, மரண முதலிய வியவஹாரங்கள். ஆகையால் அது ஆத்மக்லேசம், கர்மபலம், மலம் ஆகியவைகளை உடையதாகிறது. உண்மையில் (பரமார்த்தமாய்) அதற்கு இல்லை, இதைக்குறித்து திருஷ்டாந்த மூலமாய் விளக்குவதற்கு இச்சை உடையவராகி கூறுகிறார்.
यथा भवति बालानां गगनं मलिनं मलैः ।
तथा भवत्यबुद्धानामात्मापि मलिनो मलैः ॥ ८ ॥
कारिका अन्वयः - यथा बालानां गगनं मलैः मलिनं भवति तथा अबुद्धानां आत्माऽपि मलैः मलिनः इव भवति ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு மூடர்கள் தூசி முதலிய மலங்களால் ஆகாசம் மலினமடைந்ததாய் எண்ணுகிறார்களோ, அவ்வாறே அவிவேக புருஷர்களின் திருஷ்டியிலும் ஆத்மா (ராகதுவேஷ முதலிய) மலத்துடன் கூடியதாய் மலினமடைந்ததாய் காணப்படுகிறது.
यथा भवति लोके बालानाम् अविवेकिनां गगनम् आकाशं घनरजोधूमादिमलैः मलिनं मलवत् , न गगनयाथात्म्यविवेकवताम् , तथा भवति आत्मा परोऽपि — यो विज्ञाता प्रत्यक् — क्लेशकर्मफलमलैर्मलिनः अबुद्धानां प्रत्यगात्मविवेकरहितानाम् , नात्मविवेकवताम् ।
(ச.பா) உலகில் எவ்வாறு அவிவேக புருஷர்களின் திருஷ்ட்டியில் ஆகாசத்தில் மேகம், தூசி. புகை முதலிய மலங்களின் காரணமாய் ஆகாயம் மலமுடையதாய் இருக்கிறது. ஆனால் ஆகாசத்தின் உண்மையான யதார்த்த ஸ்வரூபத்தை அறிந்தவர்களின் திருஷ்டியில் அவ்வாறு அல்ல. இவ்வாறே உண்மையை அறியாத பிரத்யக் ஆத்ம ஸ்வரூபத்தில் விவேகமற்ற புருஷர்களின் திருஷ்டியில் எது பிரத்யக்காயும் எல்லாவற்றிற்கும் சாக்ஷியாய் இருக்கிறதோ அந்த பரமாத்மாக்லேசம், கர்ம, பலரூப மலினத்தோடு கூடி மலினமாகிறது. ஆனால் விவேகிகளாகிய ஆன்ம ஞானிகளின் திருஷ்டியில் அவ்வாறு உண்டாகாது.
न ह्यूषरदेशः तृड्वत्प्राण्यध्यारोपितोदकफेनतरङ्गादिमान् , तथा नात्मा अबुधारोपितक्लेशादिमलैः मलिनो भवतीत्यर्थः ॥ ८ ॥
(ச.பா) தாத்பர்யம் என்னவெனில் ஊஷரபூமியில் தாகம் உடைய ஜீவனுக்கு ஆரோபிக்கப்பட்ட ஜலத்தில் நுரை, அலைகள் இவைகளை உடையதாக காணமாட்டானோ அவ்வாறு ஆத்மாவும் அக்ஞானிகளினால் ஆரோபிக்கப்பட்ட க்லேசங்கள் முதலிய மலங்களால் மலினமாவதில்லை.
पुनरप्युक्तमेवार्थं प्रपञ्चयति —
(ச.பா) (அ.கை) மறுபடியும் முன்பு கூறப்பட்ட அர்த்தத்தையே விளக்குகிறார்.
मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि ।
स्थितौ सर्वशरीरेषु चाकाशेनाविलक्षणः ॥ ९ ॥
कारिका अन्वयः - मरणे सम्भवे चैव गत्यागमनयोरपि सर्वशरीषु स्थितौ आकाशेन अविलक्षणः ।
காரிகா அர்த்தம் - இந்த ஆத்மா மரணம், ஜன்மம், வேறு லோகங்களுக்கு சென்றுவருதல் மேலும் இருத்தல் முதலிய வியவஹாரங்கள் உடன் கூடிய எல்லா சரீரங்களில் இருந்தாலும் ஆகாசத்தைக் காட்டிலும் நிர்விகாரமாய் இருக்கிறது.
घटाकाशजन्मनाशगमनागमनस्थितिवत्सर्वशरीरेष्वात्मनो जन्ममरणादिराकाशेनाविलक्षणः प्रत्येतव्य इत्यर्थः ॥ ९ ॥
(ச.பா) கடாகாசத்தின் ஜன்மம், நாசம், வருதல், செல்லுதல் இருத்தல் இவற்றிற்கு சமானமாக எல்லா சரீரங்களிலும் உள்ள ஆத்மாவின் ஜன்ம, மரண முதலியவைகள் ஆகாசத்தைக் காட்டிலும் விலக்ஷணமற்று அதாவது பேதமற்றது என்று அனுபவிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
सङ्घाताः स्वप्नवत्सर्व आत्ममायाविसर्जिताः ।
आधिक्ये सर्वसाम्ये वा नोपपत्तिर्हि विद्यते ॥ १० ॥
कारिका अन्वयः- सर्व संघाताः स्वप्नवत् आत्म माया विसर्जिताः हि आधिक्ये सर्व साम्ये वा उपपत्ति न विद्यते ।
காரிகா அர்த்தம் - தேஹ முதலிய எல்லா சங்காதங்களும் ஸ்வப்ன துல்யமாய் ஆத்மாவின் மாயையால் உண்டாக்கப்பட்டது. அதை அபேக்ஷித்து அதைக்காட்டிலும் உத்கிருஷ்டமானதோ அல்லது எல்லாவற்றிகும் சமானமாகவோ அதற்கு ஹேது ஒன்றும் இல்லை.
घटादिस्थानीयास्तु देहादिसङ्घाताः स्वप्नदृश्यदेहादिवन्मायाविकृतदेहादिवच्च आत्ममायाविसर्जिताः, आत्मनो माया अविद्या, तया प्रत्युपस्थापिताः, न परमार्थतः सन्तीत्यर्थः । यदि आधिक्यमधिकभावः तिर्यग्देहाद्यपेक्षया देवादिकार्यकरणसङ्घातानाम् , यदि वा सर्वेषां समतैव, तेषां न ह्युपपत्तिसम्भवः, सम्भवप्रतिपादको हेतुः न विद्यते नास्ति ; हि यस्मात् , तस्मादविद्याकृता एव, न परमार्थतः सन्तीत्यर्थः ॥ १० ॥
(ச.பா) (அ.கை) கடம் முதலியவை போன்ற தேஹ முதலிய சங்காதங்கள் ஸ்வப்னத்தில் பார்க்கும் தேஹம் முதலியவைகளுக்கு சமானமானதாகும். அவ்வாறே மாயாவியினால் உண்டாக்கப்பட்ட தேஹம் முதலியவைப் போன்று ஆத்மாவின் மாயையால் உண்டானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்மாவின் மாயையாகிய எந்த அவித்தை உண்டோ அதை ஸ்துதிப்பதின் பொருட்டாகும். உண்மையில் இல்லை. திரியக் முதலிய தேஹங்களை அபேக்ஷித்து தேவதை முதலியவைகளின் சரீரம், மேலும் (இந்திரியங்களின் உத்கிருஷ்ட்டத்தன்மை அல்லது (தத்துவ திருஷ்ட்டியினால்) எல்லாம் சமானமானாலும் அதற்கு சத்பாவத்தை விளக்குவதற்கு ஒரு ஹேதுவும் இல்லை. ஆகையால் அவை அவித்தையினால் ஏற்பட்டது. உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை என்பதாகும்.
उत्पत्त्यादिवर्जितस्याद्वयस्यास्यात्मतत्त्वस्य श्रुतिप्रमाणकत्वप्रदर्शनार्थं वाक्यान्युपन्यस्यन्ते —
(ச.பா) (அ.கை) உத்பத்தி முதலியவை அற்ற அத்வைத ஆத்ம தத்துவத்தின் சுருதி பிரமாணத்தை எடுத்துக் காட்டுவதற்காக இந்த வாக்கியங்கள் கூறப்படுகிறது.
रसादयो हि ये कोशा व्याख्यातास्तैत्तिरीयके ।
तेषामात्मा परो जीवः खं यथा सम्प्रकाशितः ॥ ११ ॥
कारिका अन्वयः - हि रसादयः ये कोशाः तैत्तिरीयके व्याख्याताः तेषां जीवः परः आत्मा यथा खं तथा संप्रकाशितः ।
காரிகா அர்த்தம் - தைத்திரீய சுருதியில் எந்த ரசம் முதலியவை அதாவது அன்னமய முதலிய கோசங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டதோ அவை ஆகாசம் போல் பரமாத்மாவே. அவைகளின் ஆத்மா ஜீவ ரூபமாய் பிரகாசிக்கிறது.
रसादयः अन्नरसमयः प्राणमय इत्येवमादयः कोशा इव कोशाः अस्यादेः, उत्तरोत्तरापेक्षया बहिर्भावात्पूर्वपूर्वस्य व्याख्याताः विस्पष्टमाख्याताः तैत्तिरीयके तैत्तिरीयकशाखोपनिषद्वल्ल्याम् , तेषां कोशानामात्मा येनात्मना पञ्चापि कोशा आत्मवन्तोऽन्तरतमेन । स हि सर्वेषां जीवननिमित्तत्वाज्जीवः ।
(ச.பா) தைத்திரீயக சாகா உபநிஷத் வல்லியில் எந்த ரசாதி அதாவது அன்னரச மய அவ்வாறே பிராணமய முதலிய கோசங்கள் ஸ்பஷ்டமாய் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உத்தரோத்தரத்தை அபேக்ஷித்து பூர்வபூர்வ கோசங்கள் பாஹ்யமாய் இருப்பதின் காரணமாய் கத்தியின் கோசத்திற்கு (உறைக்கு) சமானமாய் இருப்பதால் கோசம் எனப்படுகிறது. அந்த கோசங்களின் ஆத்மா, எந்த மிகவும் உள்ளே இருக்கும் ஆத்மாவின் காரணத்தால் பஞ்சகோச ஆத்மாவானாய் இருக்கிறானோ அது எல்லா ஜீவனத்திற்கும் நிமித்தமாய் இருப்பதன் காரணமாய் ஜீவன் எனக்கூறப்படுகிறான்.
(ச.பா) அது யார் என்பதைக் கூறுகிறார் - அது பரமாத்மா. இதற்குமுன்னால் “सत्यंज्ञानमनन्तं ब्रह्म” (சத்தியம், ஞானம், அனந்தம்) என்ற வாக்கியங்களால் கூறப்பட்டது. எந்த ஆத்மா ஸ்வப்னம், மாயை முதலியவைகளுக்கு சமமாக ஆகாச முதலிய கிரமமாக கோசரூப சங்காதங்கள் ஆத்மாவினுடைய மாயையால் உண்டாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த ஆத்மாவை நாம் “आत्माह्याकाशवत्” முதலிய ஸ்லோகங்களில் எவ்வாறு ஆகாசம் கூறப்பட்டதோ அதைப்போல் பிரகாசப்படுத்தப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் தார்க்கிகர்களால் கல்பனை செய்யப்பட்ட ஆத்மாவிற்கு சமமாய் மனுஷ்ய புத்தியினால் அது பிரமாணம் செய்யமுடியாது.
द्वयोर्द्वयोर्मधुज्ञाने परं ब्रह्म प्रकाशितम् ।
पृथिव्यामुदरे चैव यथाकाशः प्रकाशितः ॥ १२ ॥
कारिका अन्वयः - यथा पृथिव्याम् उदरेचैव अकाशः प्रकाशितः तथा मधुज्ञाने द्वयोः द्वयोः परं ब्रह्म प्रकाशितः ।
காரிகா அர்த்தம் - உலகில் எவ்வாறு பிருதிவியிலும் உதரத்திலும் ஒரே ஆகாசம் பிரகாசிக்கிறதோ அவ்வாறே மது பிராஹ்மணத்திலும் (அத்யாத்ம, அதிதைவதம் ஆகிய) இரண்டு ஸ்தானத்திலும் ஒரே பிரஹ்மமே நிரூபிக்கப்பட்டுள்ளது.
किञ्च, अधिदैवतमध्यात्मं च तेजोमयोऽमृतमयः पुरुषः पृथिव्याद्यन्तर्गतो यो विज्ञाता पर एवात्मा ब्रह्म सर्वमिति द्वयोर्द्वयोः आ द्वैतक्षयात् परं ब्रह्म प्रकाशितम् ; क्वेत्याह — ब्रह्मविद्याख्यं मधु अमृतम् , अमृतत्वं मोदनहेतुत्वात् , तद्विज्ञायते यस्मिन्निति मधुज्ञानं मधुब्राह्मणम् , तस्मिन्नित्यर्थः । किमिवेत्याह — पृथिव्याम् उदरे चैव यथा एक आकाशः अनुमानेन प्रकाशितः लोके, तद्वदित्यर्थः ॥ १२ ॥
(ச.பா) அதிதைவதமான பிருதிவியிலும் (தேஜோமயமாயும்) வயிற்றிலும் அதாவது அத்யாத்மமான சரீரத்திலும் (அம்ருதமயமாயும்) இழையோடுடிருப்பது ஒரே ஆகாசமே யென்று அனுமானத்தால் உலகில் எவ்வாறு விளக்கப்பட்டதோ அவ்வாறே மதுப்பிராஹ்மணத்தில் அதாவது மிகவும் மகிழ்ச்சியளிக்ககூடிய பிரஹ்மஞானமாகிறதேன் ஈண்டு விளக்கப்பட்டுள்ளதால் பிருஹதாரண்யகத்தின் இப்பகுதி மதுஞானம் என்று கூறப்பட்டது. பலபர்யாயங்களில், அதாவது அத்யாத்மம், அதிதைவதம் எனப் பிரிக்கப்பட்ட பலஸ்தானங்களில் இங்கு தேஜோமயனாயும் அங்கு அம்ருதமயனாயும் விளங்குபவன் அவன் ஒருவனே என்று “अयमेव स इति” என்பதால் இங்கு தேஜோமயனாய் விளங்குபவனே அம்ருத மயமாய் விளங்குகிறான் என்று இரண்டு பர்யாயங்களாய் பிரித்துக்கொண்டு ஒன்றோடு ஒன்றாய் இணைத்து அந்தந்தஸ்தான பேதங்களில் விக்ஞாதாவாய் விளங்குவது பரப்பிரஹ்மமே என்று விளக்கப்பட்டது.
जीवात्मनोरनन्यत्वमभेदेन प्रशस्यते ।
नानात्वं निन्द्यते यच्च तदेवं हि समञ्जसम् ॥ १३ ॥
कारिका अन्वयः - यत् जीवात्मनोः अनन्यत्वम् अभेदेन प्रशस्यते नानात्वं तत् निन्द्यते एवं हि समञ्जसम् ।
காரிகா அர்த்தம் - ஜீவனும் ஆத்மாவும் அபேத ரூபமாய் ஒன்றாகவே விளங்குகிறது மேலும் அதன் நாநாத்துவம் நிந்திக்கப்படுகிறது. ஆகையால் அதனுடைய ஏகத்துவமே சரியானது.
(ச.பா) யுக்தியினாலும், ஸ்ருதியினாலும் நிச்சயிக்கப்பட்ட ஜீவ, பரமாத்மாவின் அநந்யத்துவ அபேதமானது சாஸ்திரங்களினாலும், வியாசர் முதலியவர்களாலும் ஸ்துதிக்கப்பட்டதாகும். சாஸ்திரத்திற்கு பஹிர்முகமாய் உள்ள குதார்க்கிகர்களால் கல்பிக்கப்பட்ட எல்லா பிராணிகளுக்கும் சாதாரணமாய் ஸ்வபாவமாய் உள்ள நாநா தர்சனமானது நிந்திக்கப்படுகிறது. “न तु तद्द्वितीयमस्ति” நது தத்த்விதீயமஸ்தி = அதைக்காட்டிலும் த்விதீயம் இரண்டாவது இல்லை “द्वितीयाद्वै भयं भवति” (த்விதீயாத்வை பயம் பவதி = இரண்டாவதினின்றே பயம் உண்டாகிறது) “उदरमन्तरं कुरुते, अथ तस्य भयं भवति” உதரமந்தரம் குருதே. அத தஸ்யபயம் பவதி = சிறிதளவு பேதம் செய்தாலும் அவனுக்கு பயம் உண்டாகிறது) “इदं सर्वं यदयमात्मा” (இதம்சர்வம் யதயமாத்மா) = எது இருக்கிறதோ அது எல்லாம் ஆத்மா) “मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति” (ம்ருத்யோ; ச ம்ருத்யுமாப்னோதி ய இஹ நாநேவபச்யதி = இங்கு எவன் நாநாவாகவே பார்க்கிறானோ அவன் ம்ருத்யுவிலிருந்து ம்ருத்யுவையே அடைகின்றான். என்பது முதலிய வாக்கியங்களாலும் வேறு பிரஹ்ம வேதாக்கள் மூலமாய் (நாநாத்துவம்) நிந்தை செய்யப்படுகிறது. இது இவ்வாறு சுலபமாக அறியமுடியும். அதாவது நியாயத்துடன் கூடியது. தார்க்கிகர்களின் குதிருஷ்ட்டியானது சுலபமானதல்ல அதை நிரூபிக்க முற்பட்டால் அது பொருந்தக்கூடியதாகாது என்பது அபிப்பிராயம்.
जीवात्मनोः पृथक्त्वं यत्प्रागुत्पत्तेः प्रकीर्तितम् ।
भविष्यद्वृत्त्या गौणं तन्मुख्यत्वं हि न युज्यते ॥ १४ ॥
कारिका अन्वयः - यत् जीवात्मनोः पृथक्त्वं तत् उत्पत्तेः प्राक् प्रकीर्तितम् तत् मुख्यत्वं न युज्यते हि भविष्यत् वृत्त्या गौणम् ॥ १४ ॥
காரிகா அர்த்தம் - முன்பு உபநிஷத்துக்களில் உள்ள கர்மகாண்டத்தில் உத்பத்தியைக் கூறும் வாக்கியங்களால் எந்த ஜீவனும் பரமாத்மாவும் தனியாக கூறப்பட்டதோ அது இனிவரும் விருத்திகளால் கௌணமாகும். அதை முக்கிய அர்த்தமாகக் கொள்ளுவது சரியல்ல.
ननु श्रुत्यापि जीवपरमात्मनोः पृथक्त्वं यत् प्रागुत्पत्तेः उत्पत्त्यर्थोपनिषद्वाक्येभ्यः पूर्वं प्रकीर्तितं कर्मकाण्डे अनेकशः कामभेदतः इदङ्कामः अदःकाम इति, परश्च ‘स दाधार पृथिवीं द्याम्’ (ऋ. १० । १२१ । १) इत्यादिमन्त्रवर्णैः ; तत्र कथं कर्मज्ञानकाण्डवाक्यविरोधे ज्ञानकाण्डवाक्यार्थस्यैवैकत्वस्य सामञ्जस्यमवधार्यत इति ।
(ச.பா) (சங்கை) - ஸ்ருதியில் முதலில் கர்மகாண்டத்தில் உபநிஷத்துக்களினால் இதம் காம: அத: காம: என்று இவ்வாறு அநேககாமனைகளின் பேதங்களால் ஜீவன், பரமாத்மா இவைகளின் பேதத்தை விளக்கி இருக்கிறார்கள். “स दाधारपृथिवीं द्याम्” (ச தாதார பிருதிவீம்த்யாம் = அந்த பரமாத்மாவே மண்ணையும், விண்ணையும் தாங்குகிறான்) என்று மந்திரங்களால் தனித்தன்மையாய் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு கர்மகாண்ட. ஞானகாண்ட வாக்கியங்களுக்கு விரோதம் இருக்கும்பொழுது ஞானகாண்டத்திற்கு எவ்வாறு ஏகத்துவம் நிச்சயிக்கப்படுகிறது?
(ச.பா) (சமாதானம்) - இங்கு கூறப்படுகிறது - “यतो वा इमानि भूतानि जायन्ते” (யதோ வா இமானி பூதானி ஜாயந்தே = எதிலிருந்து இந்த பூதங்கள் எல்லாம் உண்டாகிறதோ) “यथाऽग्नेः क्षुद्राः विस्फुलिङ्गाः” (யதாக்னே: க்ஷுத்ரா விஸ்புலிங்கா: = எவ்வாறு அக்னியிலிருந்து தீப்பொறிகள் கிளம்புகின்றனவோ) “तस्माद्वा एतस्मादात्मन आकाशः संभूतः” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:= அந்த இந்த ஆத்மாவில் இருந்து ஆகாசம் உண்டாயிற்று) “तदैक्षत” (ததைக்ஷத = அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அதிலிருந்து தேஜஸ் உண்டாக்கப்பட்டது) என்பது முதலிய உத்பத்தியைக் குறிக்கும் உபநிஷத் வாக்கியங்களுக்கு முன்பே கர்மகாண்டத்தில் எது தனியாக பிரதிபாதனம் செய்யப்பட்டதோ அது உண்மையில் இல்லை. அது எவ்வாறு? மஹாகாச கடாகாச பேதம் போல் கௌணமாகும். ஓதனம் பசதி (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல் பவிஷ்யத் விருத்தி) (இனி வரும் விருத்தி) போல் ஆகும். பேதவாக்கியங்கள் ஒரு நாளும் முக்கிய பேதத்தை உடையதாக ஆகாது. ஏனெனில் பேதவாக்கியமோ எனில் அக்ஞானிகளின் ஸ்வபாவமான பேத திருஷ்ட்டியைக் குறிப்பதாக ஆகிறது.
(ச.பா) உபநிஷத்களில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அதுவாய் நீ இருக்கிறாய்) “अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மீதி ந ச வேத = அதுவேறு நான்வேறு என்று அறிவதில்லை) என்றசுருதிகளின் படி உத்பத்தி பிரளயங்களை போதிக்கும் வாக்கியங்களுக்கு ஜீவன், பரமாத்மா இவைகளின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகும், ஆகையால் உபநிஷத்துக்களில் சுருதியின் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகிறது. இந்த பவிஷ்யத் விருத்தியை ஆஸ்ரயித்து உலகில் பேத திருஷ்டியை அனுவாதம் செய்தல் கௌணம் ஆகும் என்பது அபிப்பிராயம்.
(ச.பா) அல்லது “तदैक्षत” (ததைக்ஷத -= அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அது தேஜஸை உண்டாக்கியது) இவைகள் முதலிய சுருதிகள் வாயிலாய் உத்பத்திக்கு முன் “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே இரண்டற்றது) முதலிய பிரகாரமாய் ஏகத்துவம் நிரூபணம் செய்யப்பட்டது. அதுவே. “तत्सत्यं स आत्मातत्त्वमसि” என்று, இனி ஏகத்துவம் உண்டாகும் என்று பவிஷ்யத் விருத்தியை அபேக்ஷித்து எந்த ஜீவ ஆத்மாக்களுக்கு பிருதக்துவம் (வேறாக இருக்கும் தன்மை) எந்த வாக்கியத்தால் அறிகிறோமோ அது கௌண வாக்கியம் ஆகும். (ஓதனம் பசதி) (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல்.
मृल्लोहविस्फुलिङ्गाद्यैः सृष्टिर्या चोदितान्यथा ।
उपायः सोऽवताराय नास्ति भेदः कथञ्चन ॥ १५ ॥
कारिका अन्वयः - मृल्लोहविस्फुलिङ्गाद्यैः या सृष्टिः अन्यथा चोदिता सः अवताराय उपायः भेदः कथञ्चन नास्ति ।
காரிகா அர்த்தம்- மண், லோஹபிண்டம், விஸ்புலிங்கம் (நெருப்பு பொறி) முதலிய திருஷ்டாந்தங்களால் வெவ்வேறு விதமாய் சிருஷ்டி நிரூபணம் செய்யப்பட்டது. அது புத்தியை செழுத்துவதற்கான உபாயமாகும் உண்மையில் அதில் சிறிதும் பேதம் இல்லை.
ननु यद्युत्पत्तेः प्रागजं सर्वमेकमेवाद्वितीयम् , तथापि उत्पत्तेरूर्ध्वं जातमिदं सर्वं जीवाश्च भिन्ना इति । मैवम् , अन्यार्थत्वादुत्पत्तिश्रुतीनाम् । पूर्वमपि परिहृत एवायं दोषः — स्वप्नवदात्ममायाविसर्जिताः सङ्घाताः, घटाकाशोत्पत्तिभेदादिवज्जीवानामुत्पत्तिभेदादिरिति । इत एव उत्पत्तिभेदादिश्रुतिभ्य आकृष्य इह पुनरुत्पत्तिश्रुतीनामैदम्पर्यप्रतिपिपादयिषयोपन्यासः ।
(ச.பா) (அ.கை) உத்பத்திக்கு முன்பே எல்லாம் பிறப்பற்றதாயும் அத்விதீயமாய் இருந்தாலும் அதன் பின் எல்லாம் உண்டாயிற்று. மேலும் அப்பொழுது ஜீவன் பின்னமாய் இருக்கிறது என்று கூறுதல் சரியாகாது. ஏனெனில் உத்பத்தியை கூறும் சுருதிகளுக்கு வேறு அபிப்பிராயமாகும். தேஹ முதலிய சங்காதம் ஸ்வப்னத்தைப் போல் ஆத்மாவின் மாயையால் உண்டானது. எவ்வாறு எனில் கடாகாசத்தின் உத்பத்தியினால் தோன்றும் பேதம் போல் ஜீவர்களின் உத்பத்தியின் பேதம் என்று வாக்கியங்கள் மூலமாய் முன்பே இந்த தோஷங்கள் பரிகாரம் செய்யப்பட்டதாகிறது ஆகையால் முன்பு கூறிய உத்பத்தி, பேதங்களைக் கூறும் சுருதிகளால் அந்த பேத முதலியவைகளின் நிஷ்கர்ஷ (நீக்கத்தை)க் கொண்டு அந்த உத்பத்தி சுருதிகளின் பிரஹ்மாத்மைக்கிய பரத்துவத்தை பிரதிபாதனம் செய்வதற்கு இச்சையினால் உபந்நியாசம் செய்யப்படுகிறது.
मृल्लोहविस्फुलिङ्गादिदृष्टान्तोपन्यासैः सृष्टिः या च उदिता प्रकाशिता कल्पिता अन्यथान्यथा च, स सर्वः सृष्टिप्रकारो जीवपरमात्मैकत्वबुद्ध्यवतारायोपायोऽस्माकम् , यथा प्राणसंवादे वागाद्यासुरपाप्मवेधाद्याख्यायिका कल्पिता प्राणवैशिष्ट्यबोधावताराय ।
(ச.பா) - மண், லோகபிண்டம். தீப்பொறி முதலிய திருஷ்ட்டாந்தங்களால் உபந்நியாசம் செய்து வேறு வேறு விதமாய் ஸ்ருஷ்ட்டியானது கல்பிக்கப்பட்டது. சிருஷ்ட்டியின் எல்லா விதமாகவும் நாம் ஜீவன் பரமார்த்மாவின் ஏகத்துவத்தின் நிச்சயத்தை செய்யும் புத்தியை அடைவதற்காக ஆகும். அது எவ்வாறு எனில் பிராண சம்வாதத்தில் பிராணனின் மேன்மையைக் காட்டுவதற்காக வாக் முதலிய இந்திரியங்களுக்கு அசுரர் மூலமாக பாபங்கள் இருப்பதாக இந்த கதை கல்பிக்கப்பட்டதாகும்.
तदप्यसिद्धमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) - ஆனாலும் இது பொருந்தாது எனில்.
न, शाखाभेदेष्वन्यथान्यथा च प्राणादिसंवादश्रवणात् । यदि हि वादः परमार्थ एवाभूत् , एकरूप एव संवादः सर्वशाखास्वश्रोष्यत, विरुद्धानेकप्रकारेण नाश्रोष्यत ; श्रूयते तु ; तस्मान्न तादर्थ्यं संवादश्रुतीनाम् । तथोत्पत्तिवाक्यानि प्रत्येतव्यानि ।
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல. வெவ்வேறு சாஸ்திரங்களில் வெவ்வேறு பிரகாரமாய் பிராண சம்வாதத்தைக் கேட்டதினால் அந்த சம்வாதம் உண்மையில் எல்லா சாகைகளிலும் ஒரே சம்வாதம் தான் கேட்கப்படுகிறது. பரஸ்பரம் விருத்தமாக வெவ்வேறு பிரகாரமாக அல்ல. ஆகையால் சம்வாத சுருதிகளின் தாத்பர்யம் கேட்டவாறு (यथाश्रुत) அர்த்தத்தில் இல்லை. இவ்வாறு உத்பத்தி வாக்கியத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
कल्पसर्गभेदात्संवादश्रुतीनामुत्पत्तिश्रुतीनां च प्रतिसर्गमन्यथात्वमिति चेत् ।
(ச.பா) (பூர்வ) - கல்பத்தின் சிருஷ்டி பேதத்தால் ஒவ்வொரு சர்க்கத்திற்கு தக்கவாறு பேதம் இருக்கிறது என்றால்?
न, निष्प्रयोजनत्वाद्यथोक्तबुद्ध्यवतारप्रयोजनव्यतिरेकेण । न ह्यन्यप्रयोजनवत्त्वं संवादोत्पत्तिश्रुतीनां शक्यं कल्पयितुम् । तथात्वप्रत्तिपत्तये ध्यानार्थमिति चेत् ; न, कलहोत्पत्तिप्रलयानां प्रतिपत्तेरनिष्टत्वात् । तस्मादुत्पत्त्यादिश्रुतय आत्मैकत्वबुद्ध्यवतारायैव, नान्यार्थाः कल्पयितुं युक्ताः । अतो नास्त्युत्पत्त्यादिकृतो भेदः कथञ्चन ॥
(ச.பா) (சித்தாந்தி) - அவ்வாறு அல்ல, ஏனெனில் சுருதிக்கு முன்பு கூறப்பட்ட (பிரஹ்மாத்மா ஏகத்துவத்தில்) புத்தியை பிரவேசிக்கச் செய்வதாகிய பிரயோஜனத்தைத் தவிர வேறு பிரயோஜனம் இல்லை. பிராணசம்வாதம், உத்பத்தி சுருதிகளுக்கு இதைத் தவிரவேறு பிரயோஜனத்தைக் கல்பிக்க முடியாது. ருமலும் அந்த ரூபத்தை அடைவதற்கான தியானத்தின் பொருட்டாகும் என்று கூறினாலும் அதுவும் பொருந்தாது. ஏனெனில் கலகம், உத்பத்தி, பிரளயம் இவைகளில் ஒருவருக்கும் இஷ்டம் கிடையாது. ஆகையால் உத்பத்தி முதலியவைகளை பிரதிபாதனம் செய்யும் சுருதிகள் ஆத்ம ஏகத்துவ ரூபத்தை புத்தி அடைவதற்காகவே ஆகும். அதைத்தவிர வேறு பிரயோஜனத்தைக் கொள்வது உசிதமல்ல. ஆகையால் உத்பத்தி முதலியவைகளுக்குக் காரணமான பேதம் சிறிதும் இல்லை என்பதாகும்.
(ச.பா) (அ.கை) (சங்கை)- “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம்= ஒன்றே அத்விதியம்) என்ற இந்த சுருதி வாக்கியத்தை அனுசரித்து பரமார்த்தமாய் (உண்மையில்) ஒன்றாய், நித்திய, சுத்த, புத்த, முக்தஸ்வபாவ பரமார்த்மாவே சத்தியம், மற்றவை எல்லாம் மித்தை என்று இவ்வாறு இருக்கும்பொழுது “आत्मा वा अरे द्रष्टव्यः” (ஆத்மாவா அரே திரஷ்ட்டவ்ய-: = ஆத்மா பார்க்கப்பட வேண்டியது) “य आत्माऽपहतपाप्मा” (ய ஆத்மா அபஹதபாப்மா (அந்த ஆத்மா பாபமற்றது) “स क्रतुं कुर्वीत” (ச க்ரதும்குர்வீத = அவன் (உபாசனாசம்பந்தி) கிரதுவை செய்யட்டும்) “आत्मेत्येवोपासीत” (ஆத்மேத்யே வோபாசீத) ஆத்மாவை இவ்வாறு உபாசனை செய்) என்று இவ்வாறு உபாசனை எதற்காக சுருதிகளில் உபதேசிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அக்னிஹோத்திராதி கர்மங்களும் ஏன் கூறப்பட்டுள்ளது.?
शृणु तत्र कारणम् ।
(ச.பா) (சமாதானம்) - அதற்கான காரணத்தைக்கேள்-
आश्रमास्त्रिविधा हीनमध्यमोत्कृष्टदृष्टयः ।
उपासनोपदिष्टेयं तदर्थमनुकम्पया ॥ १६ ॥
कारिका अन्वयः - हीनमध्यमोत्कृष्टदृष्टयः आश्रमाः त्रिविधाः तदर्थम् अनुकम्पया इयम् उपासना उपदिष्टा ।
காரிகா அர்த்தம் - ஆஸ்ரமம் மூன்று விதமாய் உள்ளது. அதாவது அதம, மத்யம, உத்கிருஷ்ட (உத்தம) என்று. அவர்களிடத்தில் உள்ள கருணையினால்
आश्रमाः आश्रमिणोऽधिकृताः, वर्णिनश्च मार्गगाः, आश्रमशब्दस्य प्रदर्शनार्थत्वात् , त्रिविधाः । कथम् ? हीनमध्यमोत्कृष्टदृष्टयः हीना निकृष्टा मध्यमा उत्कृष्टा च दृष्टिः दर्शनसामर्थ्यं येषां ते, मन्दमध्यमोत्तमबुद्धिसामर्थ्योपेता इत्यर्थः ।
(ச.பா) ஆஸ்ரமங்கள் அதாவது கர்மாதிகாரி ஆஸ்ரமி, அவ்வாறே சன்மார்கத்தில் உள்ள பிரஹ்மச்சாரி. “ஆஸ்ரமம்” என்ற சப்தம் அவற்றிற்கு உபலக்ஷணம் ஆகும். அவை மூன்று பிரகாரங்களாய் உள்ளன. எவ்வாறு எனில் ஹீன மத்தியம், உத்க்ருஷ்ட என்ற திருஷ்டி உடையதாய் உள்ளது. எவருடைய தர்சன சாமர்த்தியம் ஹீன மத்தியம், உத்கிருஷ்டமோ அதுவே மந்த, மத்தியம், உத்தம புத்தியின் சாமர்த்தியம் உடையதாய் இருக்கிறது.
(ச.பா) அந்த மந்த, மத்யம திருஷ்டி உடைய ஆஸ்ரமிகளுக்காக இந்த உபாசனையும், கர்மத்தின் உபதேசமும் செய்யப்பட்டது, ஆத்மா ஒன்றே, அத்விதீயம் என்று நிச்சயம் உடைய உத்தம திருஷ்டி உடையவனுக்கு இந்த உபதேசம். தயாலுவான வேதமானது அந்த உத்தம சன்மார்க்கத்தில் செல்பவனுக்காக இவ்வாறு உபதேசம் செய்கிறது. “यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम्। तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते” (யன்மனசா ந மனுதே யேனாஹுர்மனோ மதம். ததேவ பிரஹ்ம துவம் வித்தி நேதம் யதிதமுபாசதே = எது மனதால் நினைக்க முடியாதோ, எதனால் மனது செயல்படுகிறதோ அதுவே பிரஹ்மம் என்று நீ அறி, உம்மால் உபசிக்கக்கூடியது பிரஹ்மமாகாது) “तत्त्वमसि” (தத்துவமஸி = நீ அதுவாய் இருக்கிறாய்) “आत्मैवेदं सर्वम्” (ஆத்மைவேதம் சர்வம் = இது எல்லாம் ஆத்மாவே) முதலிய சுருதிகளால் அறிகிறோம்.
शास्त्रोपपत्तिभ्यामवधारितत्वादद्वयात्मदर्शनं सम्यग्दर्शनम् , तद्बाह्यत्वान्मिथ्यादर्शनमन्यत् । इतश्च मिथ्यादर्शनं द्वैतिनां रागद्वेषादिदोषास्पदत्वात् । कथम् ?
(ச.பா) (அ.கை) சாஸ்த்ர யுக்தியுடன் நிச்சயிக்கப்பட்ட காரணத்தால் அத்வய ஆத்மதர்சனமே சம்யக் தர்சனமாகிறது. அதனின்று வெளிவந்த காரணத்தினால் எல்லா தர்சனங்களும் மித்யாவாகின்றன. ஏனெனில் த்வைதிகளின் மித்யாதர்சனம் ராகத்வேஷங்களுக்கு ஆஸ்ரயமாயிருக்கின்றன. எவ்வாறு? (எனில் கூறுகிறார்).
स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनो निश्चिता दृढम् ।
परस्परं विरुध्यन्ते तैरयं न विरुध्यते ॥ १७ ॥
कारिका अन्वयः - स्वसिद्धान्तव्यवस्थासु द्वैतिनः दृढम् निश्चिताः परस्परं विरुध्यन्ते तै अयं न विरुध्यते ।
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் தங்கள் தங்கள் சித்தாந்தங்களில் திடமான ஆக்கிரஹத்துடன் இருப்பதால் தங்களுக்கு விரோதம் உண்டாகிறது. ஆனால் இவர்களுக்கு
स्वसिद्धान्तव्यवस्थासु स्वसिद्धान्तरचनानियमेषु कपिलकणादबुद्धार्हतादिदृष्ट्यनुसारिणो द्वैतिनो निश्चिताः, एवमेवैष परमार्थो नान्यथेति, तत्र तत्रानुरक्ताः प्रतिपक्षं चात्मनः पश्यन्तस्तं द्विषन्त इत्येवं रागद्वेषोपेताः स्वसिद्धान्तदर्शननिमित्तमेव परस्परम् अन्योन्यं विरुध्यन्ते ।
(ச.பா) சுவ சித்தாந்த அதாவது தங்கள் தங்கள் கொள்கைகளை வரையறுப்பதிலும், கபில, கணாத, புத்த, ஜைமினி மதக்கொள்கைகளையும் உடைய த்வைதிகள் வலுவான தீர்மானமும். அசைக்க முடியாத நம்பிக்கையும் உடையவர்கள், எனவே தங்கள், தங்கள் கொள்கையில் இதுவே உண்மை, இதற்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை என்ற ஈடுபாடும் அதற்கு முரண்பாடானவைகளில் த்வேஷமும் கொண்டவர்கள்.
तैरन्योन्यविरोधिभिरस्मदीयोऽयं वैदिकः सर्वानन्यत्वादात्मैकत्वदर्शनपक्षो न विरुध्यते, यथा स्वहस्तपादादिभिः । एवं रागद्वेषादिदोषानास्पदत्वादात्मैकत्वबुद्धिरेव सम्यग्दर्शनमित्यभिप्रायः ॥
(ச.பா) அவர்கள் ஒருவருக்கு ஒருவர்கொள்கை முரண்பாடு காரணமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த பரஸ்பர விரோதிகளுடன் நமது வைதிக சித்தாந்தத்தம் விரோதமல்ல. எவ்வாறு எனில் தன்னுடைய கை. கால்களுக்குள் விரோதம் இல்லாதது போல் ஆகும். இவ்வாறு ராகதுவேஷங்களை ஆஸ்ரியக்காததினால் ஆத்ம ஏகத்துவ புத்தியே சம்யக் திருஷ்டி என்பது இதன் தாத்பர்யம்.
केन हेतुना तैर्न विरुध्यत इत्युच्यते —
(ச.பா) (அ.கை) எந்தக் காரணத்தால் அவர்கள் இடத்தில் விரோதம் இல்லை என்பதைக் குறித்துக் கூறுகிறார்-
अद्वैतं परमार्थो हि द्वैतं तद्भेद उच्यते ।
तेषामुभयथा द्वैतं तेनायं न विरुध्यते ॥ १८ ॥
कारिका अन्वयः - अद्वैतं परमार्थः हि द्वैतं तत् भेदः उच्यते तेषाम् उभयता द्वैतं तेन अयं न विरुध्यते ।
காரிகா அர்த்தம் - அத்வைதம் பரமார்த்தம் துவைதம் அதன் பேதம் (காரியம்) என்று சொல்லப்படுகிறது. அவ்வாறே அந்த (துவைதவாதி) மதத்தில் (பரமார்த்தம், அபரமார்த்தம்) இரண்டு விதமாய் துவைதம். ஆகையால் அவர்களுக்கு விரோதம் இல்லை
(ச.பா) அத்வைதக் கொள்கை வாஸ்தவமான உண்மை, ஏனெனில் த்வைதவாதமான நானாத்வவாதம் அந்த அத்வைதத்தின் பேதம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அத்வைதத்தின் காரியம் என்பது பொருள். அது “एकमेवाद्वितीयम्” (அந்த ஒன்றே இரண்டாவது போல் காக்ஷி அளிக்கிறது) “तत्तेजोऽसृजत” (அது தேஜசைப் படைத்தது) என்ற வேத வாக்கியங்களின் உபபத்தியால் அவ்வாறு கூறப்பட்டது. மேலும் தன்னுடைய சித்தத்தின் ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத போதும் சுஷுப்தியிலும், அந்த த்வைதரூபமான நாநாத்துவம் ஏற்படாமையால் த்வைதம் அத்வைதத்தின் பேதம் எனக்கூறப்பட்டது.
(ச.பா) அந்த நானாத்துவவாதிகளான த்வைதிகளுக்கு இரண்டு வழியிலும் அதாவது உண்மையிலும். பொய்யிலும் இரண்டே. அம்மாதிரி பிராந்தர்களுக்கு எப்பொழுதும், எதுவுமே இரண்டுதான். ஆனால் நமக்கோ எப்பொழுதும் ஒன்றே. அதாவது நமக்கு பிராந்தி இல்லாததினால் இந்த அத்வைத தர்சனம் (அவர்களுடன்) விரோதம் இருப்பது இல்லை. மேலும் “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரோ மாயாபி: புருரூப ஈயதே = இந்திரன் மாயையால் அநேக ரூபத்தை தரிக்கிறான்) “न तु तद्द्वितीयमस्ति” (ந து தத்த்விதீயமஸ்தி= அதைக் காட்டிலும் வேறான இரண்டாவது இல்லை) என்ற சுருதி வாக்கியங்கள் தெரிவிக்கின்றன.
यथा मत्तगजारूढः उन्मत्तं भूमिष्ठम् ‘प्रतिगजारूढोऽहं गजं वाहय मां प्रति’ इति ब्रुवाणमपि तं प्रति न वाहयत्यविरोधबुद्ध्या, तद्वत् । ततः परमार्थतो ब्रह्मविदात्मैव द्वैतिनाम् । तेनायं हेतुना अस्मत्पक्षो न विरुध्यते तैः ॥
(ச.பா) எவ்வாறு மதயானையில் ஏறிக்கொண்ட பைத்தியக்காரன், நான் யானை மேல் ஏறிக்கொண்டிருக்கிறேன் எங்கே என் மேல் யானையை யேற்று என்று மற்றொரு யானைப் பாகனைப் பார்த்துச் சொன்னால் அந்தப் பைத்தியக்காரனின் சொல்லை மற்றவன் எப்படி பொருள்படுத்த மாட்டானோ நாம் அது போல் இந்த உன்மத்தர்கள் என த்வைதிகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆதலால் பரமார்த்தமான பிரஹ்ம ஸ்வரூபத்தை அறிந்த நமக்கு அந்த த்வைதிகளும் ஆத்ம ஸ்வரூபமே. ஆதலால் நாம் அவர்களை துவேஷிப்பதில்லை.
द्वैतमद्वैतभेद इत्युक्ते द्वैतमप्यद्वैतवत्परमार्थसदिति स्यात्कस्यचिदाशङ्केत्यत आह —
(ச.பா) (அ.கை) துவைதம் அத்வைதத்தின் பேதம் என்று கூறும் பொழுது சிலருக்கு இவ்வாறு சந்தேஹம் ஏற்படலாம். அது என்ன வெனில் அத்வைதம் போல் துவைதமும் பரமார்த்த சத் என்று ஏற்படும் பொழுது இவ்வாறு கூறப்படுகிறது.
मायया भिद्यते ह्येतन्नान्यथाजं कथञ्चन ।
तत्त्वतो भिद्यमाने हि मर्त्यताममृतं व्रजेत् ॥ १९ ॥
कारिका अन्वयः - हि एतत् मायया भिद्यते अजं कथञ्चन न अन्यथा तत्वतः भिद्यमाने हि अमृतं मर्त्यतां व्रजेत्।
காரிகா அர்த்தம் - இந்த அஜன்மா அத்வைதத்தில் மாயையின் காரணமாய் பேதம் இருக்கிறது, வேறு எந்த வகையாலும் இல்லை. உண்மையில் பேதம் இருந்தால் அம்ருதம் மரண தர்மத்தை அடையும்.
यत्परमार्थसदद्वैतम् , मायया भिद्यते ह्येतत् तैमिरिकानेकचन्द्रवत् रज्जुः सर्पधारादिभिर्भेदैरिव ; न परमार्थतः, निरवयवत्वादात्मनः । सावयवं ह्यवयवान्यथात्वेन भिद्यते, यथा मृत् घटादिभेदैः । तस्मान्निरवयवमजं नान्यथा कथञ्चन, केनचिदपि प्रकारेण न भिद्यत इत्यभिप्रायः ।
(ச.பா) ஏனெனில் எந்த பரமார்த்த சத்தாயுள்ள அத்வைத ஸ்வரூபமே மாயையால் கண் நோய் வந்தவனுக்கு ஒரே சந்திரன் பல சந்திரன்களாகவும் காட்சி அளிப்பது போலவும், இருட்டில் ரஜ்ஜுவில் சர்ப்பம், ஜல தாரையைப் பார்ப்பது போலவும் இந்த பேதமானது மாயையால் தோன்றுகிறது. இந்தபேதம் பிரமரூபமானது. உண்மையானது அல்ல. அவயவத்துடன் கூடிய வஸ்துவே மண்ணில் குடம் போல் வேறுபடும். பிரஹ்மமோ நிரவயவமானது. எனவே அது ஒரு போதும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை.
तत्त्वतो भिद्यमानं हि अमृतमजमद्वयं स्वभावतः सत् मर्त्यतां व्रजेत् , यथा अग्निः शीतताम् । तच्चानिष्टं स्वभाववैपरीत्यगमनम् , सर्वप्रमाणविरोधात् । अजमद्वयमात्मतत्त्वं माययैव भिद्यते, न परमार्थतः । तस्मान्न परमार्थसद्द्वैतम् ॥
(ச.பா) ஜன்மரகிதமான ஆத்மா எந்த விதத்திலும் வேறுபடுவதோ, மாறுபடுவதோ இல்லை. உண்மையாக அந்தப் பரம்பொருள் மாறுபடுமேயானால் அக்னி குளிர்ச்சி பாவத்தைப் பெறுவதுபோல ஆத்மா தன் ஸ்வபாவத்திலிருந்து விபரீத நிலையை அடைவது எல்லா ப்ரமாணங்களுக்கும் விரோதம் ஏற்படும் காரணத்தினால் ஒருவருக்கும் அது இஷ்டமானதல்ல. ஆகவே அம்ருதமாயும், அஜன்மமாயும், அத்வீதயமாயுமுள்ள ஆத்மா மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும். அந்த ஆத்மா மாயையாலேயே பேதத்தை அடைகிறது உண்மையில் அல்ல. ஆகையால் த்வைதம் பரமார்த்த சத் அல்ல.
अजातस्यैव भावस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो भावो मर्त्यतां कथमेष्यति ॥ २० ॥
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव भावस्य जातिम् इच्छन्ति हि अजातः अमृतो भावः कथं मर्त्यतां एष्यति ।
காரிகா அர்த்தம் - த்வைதவாதிகள் ஜன்மம் அற்ற ஆத்மாவிற்கு ஜன்மத்தை விரும்புகிறார்கள். எந்த பதார்த்தமானது நிச்சயமாக பிறப்பற்றதும், மரணமற்றதுமாய் உள்ளதோ அது மரண தர்மத்தை எவ்வாறு அடையும்?
ये तु पुनः केचिदुपनिषद्व्याख्यातारो ब्रह्मवादिनो वावदूकाः अजातस्यैव आत्मतत्त्वस्यामृतस्य स्वभावतो जातिम् उत्पत्तिम् इच्छन्ति परमार्थत एव, तेषां जातं चेत् , तदेव मर्त्यतामेष्यत्यवश्यम् । स च अजातो ह्यमृतो भावः स्वभावतः सन्नात्मा कथं मर्त्यतामेष्यति ? न कथञ्चन मर्त्यत्वं स्वभाववैपरीत्यमेष्यतीत्यर्थः ॥
(ச.பா) பிரஹ்மவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதும், பிறப்பு இல்லாததாலேயே இறப்பற்றதுமான ஆத்மபாவத்திற்கு உத்பத்தியை விரும்புகிறார்கள் உண்மையில் உண்டானவையே மரணத்தை அடையும், உண்டாகாதது எவ்வாறு மரணத்தை அடையும்? ஏனெனில் பிறப்பற்ற ஸ்வபாவ, நித்தியமாய் உள்ள ஆத்ம ஸ்வரூபம் எவ்வாறு மரண தர்மத்தை உடைய மனிதத்தன்மையை அடையும் ஆதலால் அந்த வாதிகளின் வாதம் சரியானது அல்ல.
यस्मान्न
(ச.பா) (அ.கை) ஏனெனில் -
न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २१ ॥
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - மரணமற்ற வஸ்து ஒருபொழுதும் மரணமுடையதாக ஆகாது மரண முடைய வஸ்து ஒருநாளும் மரணமற்றதாக ஆகாது எவ்விதமாகவும் ஸ்வபாவமானது மாறுபாடு உடையதாக ஆகாது.
न भवति अमृतं मर्त्यं लोके नापि मर्त्यममृतं तथा, ततः प्रकृतेः स्वभावस्य अन्यथाभावः स्वतः प्रच्युतिः न कथञ्चिद्भविष्यति, अग्नेरिवौष्ण्यस्य ॥ २१ ॥
(ச.பா) எவ்வாறு அம்ருத ஸ்வரூபமான ஆத்மா மரண தர்மத்தோடு கூடியதாக இருக்காதோ அவ்வாறே மரண ஸ்வபாவமுள்ளது மரணமற்ற ஸ்வபாவமுடையதாக ஆகாது. அதனதன் இயற்கைத்தன்மைக்கு மாறுபாடான தன்மை எப்படியும், ஒரு போதும் உண்டாகப் போவது இல்லை, அக்னியின் உஷ்ண ஸ்வபாவம் போல் அதனதன் இயற்கை ஸ்வபாவம் ஒரு போதும், எக்காரணத்தாலும் எப்படியும் மாறுபாட்டை அடையாது. அது போல் ஆத்மாவும் ஒருபோதும் மாறுபடுவது இல்லை.
स्वभावेनामृतो यस्य भावो गच्छति मर्त्यताम् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ २२ ॥
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति तस्य कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ॥ २२ ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் மரணமற்ற பதார்த்தம் மரணத்தை அடைகிறதோ அவர்களுடைய சித்தாந்தத்தின்படி ஜன்மம் எடுத்ததன் காரணமாய் அம்ருத (மரணமற்ற) பதார்த்தம் எவ்வாறு ஸ்திரமானதாய் இருக்கும்?
यस्य पुनर्वादिनः स्वभावेन अमृतो भावः मर्त्यतां गच्छति परमार्थतो जायते, तस्य प्रागुत्पत्तेः स भावः स्वभावतोऽमृत इति प्रतिज्ञा मृषैव । कथं तर्हि ? कृतकेनामृतः तस्य स्वभावः । कृतकेनामृतः स कथं स्थास्यति निश्चलः ? अमृतस्वभावतया न कथञ्चित्स्थास्यति । आत्मजातिवादिनः सर्वथा अजं नाम नास्त्येव । सर्वमेतन्मर्त्यम् ; अतः अनिर्मोक्षप्रसङ्ग इत्यभिप्रायः ॥ २२ ॥
(ச.பா) எந்த வாதியினுடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரணமற்ற பதார்த்தம் மரண தர்மத்தை அடைகிறதோ அதாவது உண்மையில் (பரமார்த்தமாய்) ஜன்மத்தை எடுக்கிறது. அதன் பிரதிக்ஞையின் உத்பத்திக்கு முன்பே அந்த பதார்த்தம் ஸ்வபாவமாகவே அமரணதர்மமுடையது. அது மித்தியா. ஆனால் ஜன்மம் உண்டாவதின் காரணமாய் அதன் ஸ்வபாவமாக அமரத்துவம் எவ்வாறு பொருந்தும். மேலும் இவ்வாறு ஜன்மம் உண்டாவதால் அந்த அம்ருதத்துவ பதார்த்தம் நிச்சலமானதாயும், அம்ருதத்துவ பாவம் உடையதாயும் எவ்வாறு ஆக முடியும்? அதாவது ஒரு நாளும் ஆக முடியாது என்பதாகும். ஆகையால் ஆத்மாவிற்கு ஜன்மத்தைக் கூறும் மதத்தில் அஜன்ம வஸ்து என்பது இல்லை. ஆகையால் எல்லாம் மரண தர்மத்தை உடையதாகும். இதன் அபிப்பிராயம் என்னவெனில் அந்த மதத்தில் மோக்ஷம் என்பதே இல்லை என்பதாகும்.
नन्वजातिवादिनः सृष्टिप्रतिपादिका श्रुतिर्न सङ्गच्छते प्रामाण्यम् ।
(ச.பா) (அ.கை) (சங்கை) ஆனால் அஜாதிவாதிகளின் மதத்தில் சிருஷ்ட்டியை கூறும் சுருதியின் பிரமாணம் சித்திக்காது அல்லவா?
बाढम् ; विद्यते सृष्टिप्रतिपादिका श्रुतिः ; सा त्वन्यपरा,
‘उपायः सोऽवतारय’ (मा. का. ३ । १५) इत्यवोचाम । इदानीमुक्तेऽपि परिहारे पुनश्चोद्यपरिहारौ विवक्षितार्थं प्रति सृष्टिश्रुत्यक्षराणामानुलोम्यविरोधशङ्कामात्रपरिहारार्थौ ।
(ச.பா) (சமாதானம்) ஆம் சரிதான். சிருஷ்டியை பிரதி பாதனம் செய்யும் சுருதியும் உள்ளது. ஆனால் அதன் உத்தேசம் வேறு. அதை தாண்டுவதற்கான உபாயம் என்று முன்பே அதன் உத்தேசம் கூறப்பட்டுவிட்டது. இவ்வாறு முன்பே இந்த சங்கைக்கு சமாதானம் கூறப்பட்டாலும் “சிருஷ்டி சுருதியின் அக்ஷரங்களின் அனுகூலமானது, நாம் விளக்கப்போகும் அர்த்தத்திற்கு விரோதமானது” என்ற இந்த சங்கையை நீக்குவதற்காக இப்பொழுது அதன் சம்பந்தமான சங்கை மேலும் சமாதானமும் மறுபடியும் காண்பிக்கப்படுகிறது.
भूततोऽभूततो वापि सृज्यमाने समा श्रुतिः ।
निश्चितं युक्तियुक्तं च यत्तद्भवति नेतरत् ॥ २३ ॥
कारिका अन्वयः - भूततः अभूततः सृज्यमाने (वस्तुनि) श्रुतिः समा यत् युक्तियुक्तं तत् निश्चितं भवति इतरत् न ।
காரிகா அர்த்தம் - சிருஷ்டி பரமார்த்தமாகவோ, அபரமார்த்தமாகவோ எந்த விதமாய் இருந்தாலும் சுருதி சமானமாகவே இருக்கிறது. ஆகையால் அவைகளில் நிச்சயமானதும் யுக்தியுடன் கூடியதும் சுருதியின் அபிப்ராயம் ஆகும். வேறு விதமாக அல்ல.
भूततः परमार्थतः सृज्यमाने वस्तुनि, अभूततः मायया वा मायाविनेव सृज्यमाने वस्तुनि समा तुल्या सृष्टिश्रुतिः । ननु गौणमुख्ययोर्मुख्ये शब्दार्थप्रतिपत्तिर्युक्ता ; न, अन्यथासृष्टेरप्रसिद्धत्वान्निष्प्रयोजनत्वाच्च इत्यवोचाम । अविद्यासृष्टिविषयैव सर्वा गौणी मुख्या च सृष्टिः, न परमार्थतः,
‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति श्रुतेः ।
(ச.பா) உண்மையாகவோ, பொய்யாகவோ, மாயையாகவோ அல்லது மாயாவி படைப்பது போலோ படைக்கப்படும் பொருள்களில் வேதம் (வேத வாக்கியங்கள்) படைப்பு விஷயத்தில் ஒரே சமமானது. அந்த வேதவாக்கியங்கள் அன்யபரமானவை. கௌணம் முக்கியங்கள் இரண்டும் வருமிடத்து முக்கியமே ஏற்கத்தக்கதாகும். எனவேதான் முன்பே இவ்விஷயத்தில் “उपायः सोवताराय” என்ற இடத்தில் இவைகளின் படைப்பை விளக்குவதற்காக கூறினோம். (அது போதாது என்று மேலும் சந்தேஹத்தைக் கிளப்பினால் இந்நிலையில் எது (எந்த வாதம்) யுக்தியுடன் கூடியதோ அந்த வாதம் நிச்சயிக்கப்பட்டதாக, கொள்ளப்பட்டதாக ஆகிறது. மற்றையது அதாவது யுக்தியினால் சாதிக்க முடியாதது கொள்ளப்பட்டதாக ஆவது இல்லை. படைப்பை பற்றிய வேத வாக்கியங்கள் பரிணாம வாதத்திற்கும் விவர்த்தவாதத்திற்கும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. அவைகளில் யுக்தி காரணமாய் (யுக்தியின் பலத்தால்) அத்வைத பரமான விவர்த்தவாதமே ஏற்கத்தக்கது. அதாவது சிருஷ்டி பரமான வேதவாக்கியங்களைப் பொருள்படுத்துவதில் விவர்த்த வாதமே யுக்தி பலத்துடனிருப்பதால் (அதனால் கிடைக்கும்) அத்வைதக் கொள்கையே ஏற்கதக்கது. மேலும் ஆத்மாதான் காரிய ரூபமான பிரபஞ்சமாகவும் ஆயிற்று என்று பொருள் கொள்ளக்கூடிய வேத வாக்கியங்களும் இருக்கின்றன என்பதை ஏற்றேகூறுகிறார்). அவைகள் பொய்யான ஸ்ருஷ்ட்டியைப் பற்றி கூறுகின்றனவேயன்றி அந்தக் காரிய ரூபமான சிருஷ்ட்டிகள் உண்மையானவை அல்ல என்பது கருத்து. “सबाह्याभ्यन्तरो हि ह्यजः” உள்ளும் புறமும் அந்தப் பிறப்பற்றவனே உள்ளான் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன.
तस्मात् श्रुत्या निश्चितं यत् एकमेवाद्वितीयमजममृतमिति, युक्तियुक्तं च युक्त्या च सम्पन्नम् , तदेवेत्यवोचाम पूर्वैर्ग्रन्थैः ; तदेव श्रुत्यर्थो भवति, नेतरत्कदाचिदपि क्वचिदपि ॥ २३ ॥
(ச.பா) அதனாலேயே வேதங்களால், தனக்கிரண்டாவதற்றதாயும் பிறப்பற்றதாயும், என்றும் உள்ளதாயும், உள்ள ஒன்றே உள்ளது என்று யுக்தியால் நிச்சயிக்கப்பட்டது. அதுவே வேதார்த்தமாகும்.
कथं श्रुतिनिश्चय इत्याह —
(ச.பா) (அ.கை) அந்த சுருதி நிச்சயம் எவ்வாறு? என்பதைக் கூறுகிறார்-
नेह नानेति चाम्नायादिन्द्रो मायाभिरित्यपि ।
अजायमानो बहुधा जायते मायया तु सः ॥ २४ ॥
कारिका अन्वयः - नेह नानेति च इन्द्रो मायाभिः इत्यपि अजायमानो बहुधा विजायते आम्नायात् मायया तु सः ।
காரிகா அர்த்தம் - “नेह नानेति किञ्चन” (இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை) “इन्द्रो मायाभिः पुरुरूप ईयते” (இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனாகிறான்) “अजायमानो बहुधाविजायते” (பிறப்பற்றவனாய் இருந்தாலும். அநேகமாய் உண்டாகிறான்) என்ற சுருதி வாக்கியங்களை அனுசரித்து பரமாத்மா மாயையால் அநேக ரூபங்களை எடுக்கிறான்.
(ச.பா) - உண்மையில் சிருஷ்டி ஏற்பட்டு நாநா வஸ்துக்களும் சத்தியம் என்ற நிலை இருக்கும் பொழுது அவைகளின் அபாவத்தை தெரிவிப்பதற்காக ஒரு சாஸ்திர வசனமும் தேவையில்லை. ஆனால் த்வைத பாவத்தை நிஷேதம் செய்வதற்காக இங்கு நாநா என்பது சிறிதும் இல்லை முதலிய சாஸ்திர வசனங்கள் உள்ளன. ஆகையால் பிராண சம்வாதனையைப் போல் ஆத்ம ஏகத்துவத்தின் அடைவின் பொருட்டு கல்பிக்கப்பட்ட சிருஷ்டி பொய்யானதாகும். ஏனெனில் இந்திரன் மாயையால் அநேக ரூபம் உடையவனான் என்றசுருதியினால் சிருஷ்டியினை பொய் என்பதைக் பிரதிபாதனம் செய்வதற்காக “மாயா” சப்தம் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது.
ननु प्रज्ञावचनो मायाशब्दः ।
(ச.பா) (சங்கை) - ஆனால் மாயா சப்தமானது பிரக்ஞா வசனமாகும்-
सत्यम् , इन्द्रियप्रज्ञाया अविद्यामयत्वेन मायात्वाभ्युपगमाददोषः । मायाभिः इन्द्रियप्रज्ञाभिरविद्यारूपाभिरित्यर्थः । ‘अजायमानो बहुधा विजायते’ (तै. आ. ३ । १३) इति श्रुतेः । तस्मात् जायते मायया तु सः ; तु —शब्दोऽवधारणार्थः माययैवेति । न ह्यजायमानत्वं बहुधाजन्म च एकत्र सम्भवति, अग्नाविव शैत्यमौष्ण्यं च ।
(ச.பா) (சமாதானம்) - நீ கூறுவது சரியே. இருப்பு இன்மையின் காரணமாய் இந்திரிய பிரக்ஞையானது மாயாத்துவம் என கருதப்படுகிறது. அதனால் தோஷம் ஒன்றும் இல்லை. ஆகையால் மாயையினால் அதாவது அவித்தியா ரூபமான இந்திரிய பிரக்ஞையினால் எவ்வாறு “अजायमानो बहुधाविजायते” (அஜாயமானோ பஹுதா விஜாயதே = பிறப்பற்றவன் பலவாறாக ஆகிறான்) என்ற சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது. ஆகையால் மாயையால் உத்பன்னமாகிறது. तु (து) சப்தமானது நிச்சயார்த்தமாகும். அதாவது அக்கினியில் சீதளமும் உஷ்ணமும் சேர்ந்து அமையாது. அது போல் பிறப்பின்மையும் பலவாராய் பிறத்தலும் ஓர் இடத்தில் அமையாது.
(ச.பா) ஏகாத்ம தர்சனத்திற்கு பலரூபமாய் (பிரயோஜனமாய்) “तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ க சோக ஏகத்துவம் அனுபச்யத: = ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு மோஹமேது? சோகம் ஏது?) என்பன போன்ற சுருதி வாக்கியங்கள் அமைந்துள்ளன. நானாத்துவ தர்சனமோ “मृत्योः स मृत्युमाप्नोति” (ம்ருத்யோ ச ம்ருத்யுமாப்னோதி = அவன் மிருத்யுவிலிருந்து ம்ருத்யுவை அடைகின்றான்) என்பது போன்ற பல வேதவாக்கியங்களால் நிந்திக்கப்பட்டுள்ளதும் உணரத்தக்கதாகும். எனவே யுக்தியுக்தமான விவர்த்தவாதத்தின் பலனான அத்வைதக் கொள்கையே வேதார்த்தமாகும்.
सम्भूतेरपवादाच्च सम्भवः प्रतिषिध्यते ।
को न्वेनं जनयेदिति कारणं प्रतिषिध्यते ॥ २५ ॥
कारिका अन्वयः - सम्भूूूतेः अपवादात् सम्भव प्रतिषिध्यते एवं कोनु एनं जनयेत् इति कारणं प्रतिषिध्यते ।
காரிகா அர்த்தம் - சுருதியில் சம்பூதியை (ஹிரண்ய கர்பனை) நிந்தை செய்வதின் வாயிலாய் காரிய வர்க்கம் நிந்திக்கப்பட்டதாகிறது. எவன் உண்டாக்குவான் என்ற வாக்கியத்தால் காரணம் நிஷேதிக்கப்படுகிறது.
‘अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते’ (ई. मा. ९) इति सम्भूतेरुपास्यत्वापवादात्सम्भवः प्रतिषिध्यते ; न हि परमार्थसद्भूतायां सम्भूतौ तदपवाद उपपद्यते ।
(ச.பா) “अन्धं तमः प्रविशन्ति ये सम्भूतिमुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே சம்பூதிமுபாசதே = எவர்கள் சம்பூதியை (ஹிரண்யகர்பனை) உபாசிக்கிறார்களோ அவர்கள் கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) இவ்வாறு சுருதி சம்பூதி உபாசனையை நிந்தையின் காரணமாய் காரிய வர்க்கங்கள் தள்ளப்பட்டது. சம்பூதியானது பரமார்த்த ஸ்வரூபமாய் இருந்தால் இவ்வாறு அதன் நிந்தை சம்பவிக்காது.
ननु विनाशेन सम्भूतेः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः, यथा ‘अन्धं तमः प्रविशन्ति येऽविद्यामुपासते’ (ई. मा. १२) इति ।
(ச.பா) சங்கை - எது சம்பூதி உபாசனையின் நிந்தை செய்யப்பட்டதோ அது விநாசத்துடன் அதாவது கர்மத்துடன் சேர்ந்து சம்பூதியின் சமுச்சய விதானத்தின் பொருட்டாகும். எவ்வாறு “अन्धं तमः प्रविशन्ति येऽविद्या-मुपासते” (அந்தம் தம: பிரவிசந்தி யே அவித்யாமுபாசதே = அவித்யையை உபாசனை செய்து கோரமான இருளில் பிரவேசிக்கிறார்கள்) என்ற வாக்கியத்தால் சித்திக்கிறது.
सत्यमेव, देवतादर्शनस्य सम्भूतिविषयस्य विनाशशब्दवाच्यस्य च कर्मणः समुच्चयविधानार्थः सम्भूत्यपवादः ; तथापि विनाशाख्यस्य कर्मणः स्वाभाविकाज्ञानप्रवृत्तिरूपस्य मृत्योरतितरणार्थत्ववत् देवतादर्शनकर्मसमुच्चयस्य पुरुषसंस्कारार्थस्य कर्मफलरागप्रवृत्तिरूपस्य साध्यसाधनैषणाद्वयलक्षणस्य मृत्योरतितरणार्थत्वम् । एवं ह्येषणाद्वयरूपान्मृत्योरशुद्धेर्वियुक्तः पुरुषः संस्कृतः स्यात् । अतो मृत्योरतितरणार्था देवतादर्शनकर्मसमुच्चयलक्षणा ह्यविद्या ।
(ச.பா) சமாதானம் - எது சமுச்சயமே ஆகும். சம்பூதி விஷயமான தேவதாதர்சனமும். வினாச (विनाश) சப்த வாச்சியமாகிய கர்மத்தின் சமுச்சய விதானம் செய்வதற்காக சம்பூதியின் அபவாதம் செய்யப்பட்டது. அப்படி இருந்தபோதிலும் எவ்வாறு விநாசம் (विनाशम्) எனப்படும். கர்மம் ஸ்வபாவமாய் அக்ஞானத்தால் உண்டான பிரவிர்த்தி ரூப மிருத்யுவை தாண்டுவதற்காகவே. அவ்வாறு புருஷனுடைய சம்ஸ்காரத்திற்காக விதிக்கப்பட்ட தேவதா தர்சனமும், கர்ம இவைகளின் சமுச்சய பலத்தின் ராகம் உண்டாகக் கூடிய பிரவிர்த்தி ரூப எந்த சாத்திய சாதன லக்ஷணமாகிய இரண்டு பிரகார வாசனாமயமான மிருத்தியு இருக்கிறதோ அதைத்தாண்டுவதற்கு ஆகும். இவ்வாறு ஏஷணாத்துவய ரூப மிருத்யுவின் அசுத்தியிலிருந்து விடுப்பட்ட புருஷனே சம்ஸ்கார சம்பன்னனாகிறான். ஆகையால் தேவதா தர்சனமும் கர்ம சமுச்சய லக்ஷணமான அவித்தியா மிருத்யுவிலிருந்து தாண்டுவதற்காக ஆகும்.
एवमेव एषणाद्वयलक्षणाविद्याया मृत्योरतितीर्णस्य विरक्तस्योपनिषच्छास्त्रार्थालोचनपरस्य नान्तरीयिका परमात्मैकत्वविद्योत्पत्तिरिति पूर्वभाविनीमविद्यामपेक्ष्य पश्चाद्भाविनी ब्रह्मविद्या अमृतत्वसाधना एकेन पुरुषेण सम्बध्यमाना अविद्यया समुच्चीयत इत्युच्यते । अतः अन्यार्थत्वादमृतत्वसाधनं ब्रह्मविद्यामपेक्ष्य, निन्दार्थ एव भवति सम्भूत्यपवादः यद्यप्यशुद्धिवियोगहेतुः अतन्निष्ठत्वात् । अत एव सम्भूतेरपवादात्सम्भूतेरापेक्षिकमेव सत्त्वमिति परमार्थसदात्मैकत्वमपेक्ष्य अमृताख्यः सम्भवः प्रतिषिध्यते ।
(ச.பா) இவ்வாறு ஏஷணாத்வய லக்ஷணமான அவித்தியாரூப மிருத்யுவை கடந்து அவ்வாறே உபநிஷத் சாஸ்த்திரத்தில் விசாரமுடைய விரக்த புருஷர்களுக்கு பிரஹ்மாத்மைக்கிய ரூபவித்தையின் உற்பத்தி தூரமாக இல்லை. ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது முதலில் இருக்கும் அவித்தையை அபேக்ஷித்து பின்னால் அடையப்படும் பிரஹ்ம வித்தியா அது அம்ருதத்துவ சாதனமாகும். ஒரே புருஷனிடத்தில் சம்பந்தம் உள்ளதால் அவித்தையுடன் சமுச்சயம் உண்டாகிறது. ஆகையால் அம்ருதத்திற்கு சாக்ஷாத் சாதனமான பிரஹ்ம வித்தையின் அபேக்ஷை வேறு பிரயோஜன முடையதாய் இருப்பதால் சம்பூதியின் அபவாதமானது நிந்தையின் பொருட்டு செய்யப்பட்டது. அது அசுத்தத்தை நீக்குவதாய் இருப்பினும் மோக்ஷத்திற்கு சாக்ஷாத் ஹேது ஆகாததினால் சம்பூதி நிந்திக்கப்படுகிறது. சம்பூதிக்கு அபவாதம் ஏற்படுவதால் அதனுடைய சத்துவம் அபேக்ஷிகமாகும். ஆகையால் பரமார்த்த சத் ஆத்ம ஏகத்துவத்தை அபேக்ஷித்து அம்ருதம் எனப்படும் சம்பூதியானது நீக்கப்படுகிறது. (தள்ளப்படுகிறது)
एवं मायानिर्मितस्यैव जीवस्य अविद्यया प्रत्युपस्थापितस्य अविद्यानाशे स्वभावरूपत्वात्परमार्थतः को न्वेनं जनयेत् ? न हि रज्ज्वामविद्याध्यारोपितं सर्पं पुनर्विवेकतो नष्टं जनयेत्कश्चित् ; तथा न कश्चिदेनं जनयेदिति । को न्वित्याक्षेपार्थत्वात्कारणं प्रतिषिध्यते । अविद्योद्भूतस्य नष्टस्य जनयितृ कारणं न किञ्चिदस्तीत्यभिप्रायः ;
‘नायं कुतश्चिन्न बभूव कश्चित्’ (क. उ. १ । २ । १८) इति श्रुतेः ॥ २५ ॥
(ச.பா) அவித்தையினால் வசப்பட்ட மாயையினால் உண்டாக்கப்பட்ட ஜீவன் அவித்யைநாசம் அடைந்தவுடன் தன் ஸ்வரூபத்தில் நிலைத்திருக்கும் பொழுது பரமார்த்தமாய் அவனிடத்தில் என்ன உண்டுபண்ண முடியும்? ரஜ்ஜுவில் அவித்தையினால் ஆரோபிக்கப்பட்ட சர்ப்பமானது விவேகத்தால் நஷ்டமான பின் அதை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது. அவ்வாறே இங்கும் ஒன்றையும் உற்பத்தி செய்ய முடியாது. “को न्वेनम्” முதலியவை சுருதியின் ஆக்ஷபே அர்த்தத்துடன் கூடியது. கேள்வி அர்த்தத்தில் அல்ல. ஆகையால் இதனால் காரணமானது நிஷேதிக்கப்படுகிறது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அவித்தையினால் உண்டானவை ஜீவனுடைய வித்யையினால் நாசம் அடைந்தபின் மறுபடியும் உண்டாக்குவது வேறு ஒரு காரணமும் இல்லை. “नायं कुतश्चिन्न बभूव कश्चित्” (நாயம் குதச்சித்ந பபூவ கச்சித் = அது ஒரு காரணத்தாலும் உண்டாகவில்லை) என்பது சுருதி வாக்கியம்.
स एष नेति नेतीति व्याख्यातं निह्नुते यतः ।
सर्वमग्राह्यभावेन हेतुनाजं प्रकाशते ॥ २६ ॥
कारिका अन्वयः - यतः व्याख्यातं सर्वं नेति नेतीति निह्नुते ततः अग्राह्यभावेन हेतुना सः एष अजं प्रकाशते ।
காரிகா அர்த்தம் - ஏனெனில் “स एष नेति नेति” என்பது முதலிய சுருதி ஆத்மாவை கிரஹிக்க முடியாத காரணத்தால் முன்பு கூறப்பட்ட எல்லா பாவங்களையும் நிஷேதம் செய்கிறது. ஆகையால் இந்த நிஷேத ரூப ஹேதுவினால் பிறப்பற்ற ஆத்மாவானது பிரகாசிக்கிறது.
सर्वविशेषप्रतिषेधेन
‘अथात आदेशो नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इति प्रतिपादितस्यात्मनो दुर्बोधत्वं मन्यमाना श्रुतिः पुनः पुनरुपायान्तरत्वेन तस्यैव प्रतिपिपादयिषया यद्यद्व्याख्यातं तत्सर्वं निह्नुते । ग्राह्यं जनिमद्बुद्धिविषयमपलपत्यर्थात्
‘स एष नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६), (बृ. उ. ४ । २ । ४),
(बृ. उ. ४ । ४ । २२),
(बृ. उ. ४ । ५ । १५) इत्यात्मनोऽदृश्यतां दर्शयन्ती श्रुतिः । उपायस्योपेयनिष्ठतामजानत उपायत्वेन व्याख्यातस्य उपेयवद्ग्राह्यता मा भूदिति अग्राह्यभावेन हेतुना कारणेन निह्नुत इत्यर्थः । ततश्चैवमुपायस्योपेयनिष्ठतामेव जानत उपेयस्य च नित्यैकरूपत्वमिति तस्य सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वं प्रकाशते स्वयमेव ॥ २६ ॥
(ச.பா) “अथात आदेशो नेति नेति” என்று இவ்வாறு எல்லா விசேஷணங்களையும் நீக்கி பிரதிபாதனம் செய்யப்பட்ட ஆத்மாவை அறிவதில் உள்ள மிகுந்த கடினத்தன்மையை சுருதியானது அடிக்கடி வேறு உபாயம் வாயிலாகவும் விளக்க இச்சை உடையதாய் முதலில் எந்த வியாக்கியானம் உள்ளதோ அதில் (ஆத்மாவைத் தவிர மற்ற) எல்லாவற்றின் அசத்தியத் துவத்தை விளக்குகிறது. கிரஹிக்கப்படும் புத்தியில் தோன்றும் விஷயங்களை நீக்குகிறது. அதாவது “स एष नेति नेति” (அது இது இல்லை இல்லை) என்று இவ்வாறு ஆத்மாவின் அதிருச்யத் தன்மையைக் காட்டும் சுருதி உபாயத்தின் உபேயநிஷ்டையை அறியாத லெளகிகர்களுக்கு உபாய ரூபமாய் கூறுவதற்கான விஷயம் உபேயத்தைப் போல் கிரஹிக்க முடியாது. ஆகையால் கிரஹிக்க முடியாத ஹேதுவினால் அதை நிஷேதம் செய்கிறது என்பது இதன் அபிப்பிராயம். அதன்பின் இவ்வாறு உபாயத்தின் உபேயநிஷ்ட்டாவை அறிந்தவனும், உபேயத்தின் நித்திய ஏக ஸ்வரூபத்தையும் அறிந்தவர்களாகிய புருஷர்களுக்கு வெளியிலும், உள்ளும் இருக்கும் அஜன்மாவாகிய ஆத்மதத்துவம் சுயமாகவே பிரகாசிக்கிறது.
एवं हि श्रुतिवाक्यशतैः सबाह्याभ्यन्तरमजमात्मतत्त्वमद्वयं न ततोऽन्यदस्तीति निश्चितमेतत् । युक्त्या चाधुनैतदेव पुनर्निर्धार्यत इत्याह ।
(ச.பா) (அ.கை) இவ்வாறு நூ ற்றுக்கணக்கான வேத வாக்கியங்களால் வெளியிலும், உள்ளும் நிறைந்து இருக்கும் அஜன்மா ஆத்மதத்துவம் அத்விதீயமானது, அதைத் தவிர வேறு சிறிதும் இல்லை. இந்த விஷயத்தைக் குறித்து யுக்தியினால் நிச்சயம் செய்யப்படுகிறது. அதை கூறுகிறார்-
सतो हि मायया जन्म युज्यते न तु तत्त्वतः ।
तत्त्वतो जायते यस्य जातं तस्य हि जायते ॥ २७ ॥
कारिका अन्वयः - सतः मायया हि जन्म युज्यते तत्त्वतः तु न यस्य तत्त्वतः जायते तस्य जातं हि जायते ।
காரிகா அர்த்தம் - சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. எவர்களுடைய மதத்தில் ஜன்மமானது உண்மையில் ஏற்படுகிறதோ அவர்களின் சித்தாந்தப்படி உத்பத்தி ஆகும் தன்மை உள்ள வஸ்துவிற்கே ஜன்மம் ஏற்பட முடியும்.
तत्रैतत्स्यात् सदा अग्राह्यमेव चेदसदेवात्मतत्त्वमिति ; तन्न, कार्यग्रहणात् । यथा सतो मायाविनः मायया जन्म कार्यम् , एवं जगतो जन्म कार्यं गृह्यमाणं मायाविनमिव परमार्थसन्तमात्मानं जगज्जन्म मायास्पदमेव गमयति । यस्मात् सतो हि विद्यमानात्कारणात् मायानिर्मितस्य हस्त्यादिकार्यस्येव जगज्जन्म युज्यते, नासतः कारणात् । न तु तत्त्वत एव आत्मनो जन्म युज्यते ।
(ச.பா) - இந்த ஆத்மதத்துவ விஷயத்தில் இந்த சங்கை உண்டாகிறது. என்னவெனில் ஆத்மதத்துவம் எப்பொழுதும் கிரஹிக்க முடியாமையால் அது அசத் ஆகுமே. ஆனால் அவ்வாறு கூறுவது சரியல்லை. ஏனெனில் அதன் காரியம் காணப்படுகிறது. எவ்வாறு சத் ஸ்வரூப மாயாவியின் மாயையால் ஜன்மம் எடுத்தல் காரியமோ அவ்வாறு காணப்படும் ஜகத்தின் ஜன்மரூபகாரியம் ஜகத்ஜன்ம ரூபமாயையின் ஆஸ்ரிய பூதமான பரமார்த்த சத் மாயாவிக்கு சமமாய் ஆத்மாவின் போதத்தை செய்கிறது. ஏனெனில் மாயையினால் செய்யப்பட்ட யானை முதலிய காரியத்திற்கு சமானமான சத் அதாவது இருக்கின்ற காரணத்திலிருந்தே ஜகத்தின் ஜன்மம் சம்பவிக்கிறது. இல்லாத காரணத்திலிருந்து அல்ல. அவ்வாறு உண்மையில் ஆத்மாவிற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது.
अथवा, सतः विद्यमानस्य वस्तुनो रज्ज्वादेः सर्पादिवत् मायया जन्म युज्यते न तु तत्त्वतो यथा, तथा अग्राह्यस्यापि सत एवात्मनो रज्जुसर्पवज्जगद्रूपेण मायया जन्म युज्यते । न तु तत्त्वत एवाजस्यात्मनो जन्म ।
(ச.பா) அல்லது எவ்வாறு ரஜ்ஜு முதலியவைகளில் தோன்றும் சர்ப்பம் முதலியவைகள் போன்று சத், அதாவது இருக்கின்ற வஸ்துவின் ஜன்மம் மாயையினால் உண்டாகிறது. உண்மையில் அல்ல. அவ்வாறு அக்ராஹ்யமாய் (கிரஹிக்க முடியாததாய்) இருந்தாலும் சத் ஸ்வரூப ஆத்மா ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜகத்ரூபமாய் ஜன்மம் ஏற்படுவது மாயையினால் சம்பவிக்கிறது. அந்த அஜன்மாவான ஆத்மாவிற்கு உண்மையில் ஜன்மம் என்பது கிடையாது.
यस्य पुनः परमार्थसदजमात्मतत्त्वं जगद्रूपेण जायते वादिनः, न हि तस्य अजं जायत इति शक्यं वक्तुम् , विरोधात् । ततः तस्यार्थाज्जातं जायत इत्यापन्नम् । ततश्चानवस्थापाताज्जायमानत्वं न । तस्मादजमेकमेवात्मतत्त्वमिति सिद्धम् ॥
(ச.பா) எந்த வாதியின் மதத்தின்படி பரமார்த்த சத்தாகிய ஆத்ம தத்துவமே ஜகத்ரூபமாய் உத்பன்னமாகின்றது என்ற சித்தாந்தத்தை அனுசரித்து அஜன்ம வஸ்துவிற்கு ஜன்மம் உண்டாகிறது என்று கூறமுடியாது. ஏனெனில் இதனால் விரோதம் உண்டாகும். ஆகையால் அது சுவத சித்தமானது என்ற மதத்தின்படி ஜன்மசீலம் உடையதற்கே ஜன்மம் உண்டாகும். இவ்வாறு ஜன்மசீலத்தினாலேயே ஜன்மம் என்று எடுத்துக்கொண்டால் அநவஸ்தாதோஷம் ஏற்படும் ஆகையால் சித்தமாய் இருக்கின்ற ஆத்மதத்துவம் அஜன்மாவாயும் ஏகமாயும் இருக்கிறது.
असतो मायया जन्म तत्त्वतो नैव युज्यते ।
वन्ध्यापुत्रो न तत्त्वेन मायया वापि जायते ॥ २८ ॥
कारिका अन्वयः - असतः मायया तत्वतः जन्म नैव युज्यते वन्ध्यापुत्रः तत्त्वेन मायायावापि न जायते ।
காரிகா அர்த்தம் - அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் எவ்விதமாகவும் சம்பவிக்காது, வந்தியாபுத்திரன் (மலடிமகன்) உண்மையாகவோ, மாயையினாலோ தோன்றுவது இல்லை.
असद्वादिनाम् असतो भावस्य मायया तत्त्वतो वा न कथञ्चन जन्म युज्यते, अदृष्टत्वात् । न हि वन्ध्यापुत्रो मायया तत्त्वतो वा जायते । तस्मादत्रासद्वादो दूरत एवानुपपन्न इत्यर्थः ॥ २८ ॥
(ச.பா) - அசத்வாதி பக்ஷத்தில் அசத் வஸ்துவின் ஜன்மம் மாயையினாலோ அல்லது உண்மையில் வேறு எதனாலும் சம்பவிக்காது. வந்தியா புத்திரன் மாயையினாலோ, உண்மையிலோ பிறப்பதில்லை. ஆகையால் அசத்வாதம் எவ்விதத்தாலும் பொருந்தாது.
कथं पुनः सतो माययैव जन्मेत्युच्यते —
(ச.பா) (அ.கை) சத்வஸ்துவின் ஜன்மம் மாயையினால் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-
यथा स्वप्ने द्वयाभासं स्पन्दते मायया मनः ।
तथा जाग्रद्द्वयाभासं स्पन्दते मायया मनः ॥ २९ ॥
कारिका अन्वयः - यथा स्वप्ने मनः मायया द्वयाभासं स्पन्दते तथा जाग्रत् मायया मनः द्वयाभासं स्पन्दते ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்ன காலத்தில் மனமானது மாயையால் த்வைத ஆபாசரூபமாய் விளங்குகிறது அவ்வாறு ஜாக்ரத் காலத்திலுமானது அந்த மாயையினால் த்வைத ஆபாச ரூபத்துடன் விளங்குகிறது.
यथा रज्ज्वां विकल्पितः सर्पो रज्जुरूपेणावेक्ष्यमाणः सन् , एवं मनः परमात्मविज्ञप्त्यात्मरूपेणावेक्ष्यमाणं सत् ग्राह्यग्राहकरूपेण द्वयाभासं स्पन्दते स्वप्ने मायया, रज्ज्वामिव सर्पः ; तथा तद्वदेव जाग्रत् जागरिते स्पन्दते मायया मनः, स्पन्दत इवेत्यर्थः ॥ २९ ॥
(ச.பா) - எவ்வாறு ரஜ்ஜுவில் கல்பிக்கப்பட்ட சர்ப்பம் ரஜ்ஜுரூபமாய் அறியப்பட்ட பின் சத்தாய் இருக்கிறதோ அவ்வாறு மனமானது பரமார்த்த ஞானரூபமான ஆத்ம ஸ்வரூபமாய் அறியப்பட்டபின் அது சத்தேயாகும். அது ரஜ்ஜு சர்ப்பத்திற்குச் சமமாய் ஸ்வப்னாவஸ்த்தையில் மாயையினால் க்ராஹ்ய, க்ராஹக ரூப த்வைதத்தின் ஆபாச ரூபத்தால் விளங்குகிறது. இவ்வாறு மனம்தான் ஜாக்ரத் அவஸ்தையில் மாயையினால் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது விளங்குகிறது அல்லது அறியப்படுகிறது என்பது பொருள்.
अद्वयं च द्वयाभासं मनः स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ३० ॥
कारिका अन्वयः - अद्वयं मनः स्वप्ने च द्वयाभासं न संशयः तथा जाग्रत् अद्वयं द्वयाभासं न संशयः ।
காரிகா அர்த்தம் - இதில் சந்தேஹம் சிறிதும் இல்லை. ஸ்வப்ன அவஸ்தையில் அத்வைதமே மனதால் துவைத ரூபமாய் விளங்குகிறது. அவ்வாறே ஜாக்ராவஸ்தையிலும் சந்தேஹம் இல்லாமல் அத்வைதமே மனதினால் துவைதமாய் விளங்குகிறது.
रज्जुरूपेण सर्प इव परमार्थत आत्मरूपेण अद्वयं सत् द्वयाभासं मनः स्वप्ने, न संशयः । न हि स्वप्ने हस्त्यादि ग्राह्यं तद्ग्राहकं वा चक्षुरादि, द्वयं विज्ञानव्यतिरेकेणास्ति ; जाग्रदपि तथैवेत्यर्थः ; परमार्थसद्विज्ञानमात्राविशेषात् ॥ ३० ॥
(ச.பா) ரஜ்ஜு ரூபத்தால் சத் சர்ப்பத்திற்கு சமமாய் பரமார்த்தமாக அத்வைத ஆத்மரூப சத் அத்வைத ஆத்மரூபமான சத்தாகிய மனமானது ஸ்வப்னத்தில் த்வைத ரூபமாய் விளங்குகிறது. இதில் சந்தேஹமில்லை. ஸ்வப்னத்தில் அறியப்படும் யானை முதலியவைகளை கிரஹிக்கப்படும் பதார்த்தம், அவ்வாறே கிரஹிக்கும் கண் முதலிய இந்திரியங்கள் ஆகியவை விக்ஞானத்தை தவிர சிறிதும் இல்லை. அவ்வாறே ஜாக்கிரத்திலும் என்பது இதன் தாத்பரியம். ஏனெனில் இந்த இரண்டு அவஸ்தைகளிலும் பரமார்த்த சத்தான விக்ஞானமே சமானரூபமாய் இருக்கிறது.
रज्जुसर्पवद्विकल्पनारूपं द्वैतरूपेण मन एवेत्युक्तम् । तत्र किं प्रमाणमिति, अन्वयव्यतिरेकलक्षणमनुमानमाह । कथम् ?
(ச.பா) (அ.கை) ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனா ரூபமான த்வைதரூபமானது மனம் எனப்படுகிறது. அங்கு இதற்கு பிரமாணம் என்ன? இதன் பொருட்டு அந்வய வியதிரேக அனுமான பிரமாணத்தால் விளக்கப்பட்டுள்ளது அது எவ்வாறு?
मनोदृश्यमिदं द्वैतं यत्किञ्चित्सचराचरम् ।
मनसो ह्यमनीभावे द्वैतं नैवोपलभ्यते ॥ ३१ ॥
कारिका अन्वयः - इदं सचराचम् यत् किञ्चित् द्वैतं दृश्यम् (तत् सर्वं) मनः मनसः अमनीभावे हि द्वैतं नैव उपलभ्यते ।
காரிகா அர்த்தம் - எது எல்லாம் சராசர துவைதம் உள்ளதோ அவை எல்லாம் திருச்யமே, ஏனெனில் அமநீயபாவத்தை அறிந்ததும் த்வைதத்தின் அறிவானது ஏற்படாது.
तेन हि मनसा विकल्प्यमानेन दृश्यं मनोदृश्यम् इदं द्वैतं सर्वं मन इति प्रतिज्ञा, तद्भावे भावात् तदभावे चाभावात् । मनसो हि अमनीभावे निरुद्धे विवेकदर्शनाभ्यासवैराग्याभ्यां रज्ज्वामिव सर्पे लयं गते वा सुषुप्ते द्वैतं नैवोपलभ्यत इति अभावात्सिद्धं द्वैतस्यासत्त्वमित्यर्थः ॥ ३१ ॥
(ச.பா) அந்த மனதால் விகல்பிக்கப்பட்ட இந்த சம்பூர்ண த்வைதமான த்ருச்யம்யாவும் மனதை என்பது ப்ரதிக்ஞை. அந்த மனது இருந்தால் வஸ்து பாவனை ஏற்படுகிறது. அது இல்லையேல் வஸ்து பாவனை ஏற்படுவதில்லை. மனத்தினுடைய அமனீபாவம் நிரோதமானபொழுது (அதாவது மனதின் சிந்திக்கும் தன்மை கட்டுப்பட்டபொழுது) விவேக தர்சனத்தாலும், அப்யாசத்தாலும், வைராக்யத்தாலும், ரஜ்ஜுவில் ஸர்ப்பம் லயத்தை அடைந்தது போலும், அல்லது சுஷுப்தியிலும் த்வைத பாவனை அடையப்படுவதில்லை. இவ்வாறு மனதானது கட்டுப்படுத்தப்பட்டபொழுது த்வைத தரிசனம் ஏற்படாததால் அது உண்மையானதல்ல என்று நிலைநாட்டப்படுகிறது.
कथं पुनरयममनीभाव इत्युच्यते —
(ச.பா) (அ,கை) அது எவ்வாறு அமனீபாவமாகிறது - அது கூறப்படுகிறது.
आत्मसत्यानुबोधेन न सङ्कल्पयते यदा ।
अमनस्तां तदा याति ग्राह्याभावे तदग्रहम् ॥ ३२ ॥
कारिका अन्वयः - आत्मसत्यानुबोधेन यदा मनः न सङ्कल्पयते तदा अमनस्तां याति ग्राह्याभावे तत् अग्रहं भवति ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது ஆத்மாவின் சத்தின் ஞானத்தை அடைந்த உடன் மனம் சங்கல்பிக்காதோ அந்த சமயத்தில் அமனீயபாவம் அடையப்பட்டதாகிறது. அந்த அவஸ்தயில் கிராஹகமானது அபாவத்தை அறிந்ததின் காரணத்தால் கிரஹிப்பதற்கு வேண்டியதற்கான விகல்பம் இல்லாமல் நீங்கிவிடுகிறது.
आत्मैव सत्यमात्मसत्यम् , मृत्तिकावत् ,
‘वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४) इति श्रुतेः । तस्य शास्त्राचार्योपदेशमन्ववबोध आत्मसत्यानुबोधः । तेन सङ्कल्प्याभावात्तन्न सङ्कल्पयते दाह्याभावे ज्वलनमिवाग्नेः यदा यस्मिन्काले, तदा तस्मिन्काले अमनस्ताम् अमनोभावं याति ; ग्राह्याभावे तत् मनः अग्रहं ग्रहणविकल्पनावर्जितमित्यर्थः ॥ ३२ ॥
(ச.பா) - “वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव ” (வாச்சாரம்பனம் விகாரோ நாமதேயம் மிருதிகேத்யேவ) வாக்கினால் ஆரம்பமாகும் விகாரம் நாமமாத்திரமே மிருதிகையைப் போல் சத்யம் என்பது சுருதி வாக்கியம். அதை சாஸ்திரம் மேலும் ஆச்சாரியரின் உபதேசங்களால் உண்டாகும் ஆத்மானுபோதம். ஆகையால் சங்கல்பத்திற்கு யோக்யமான வஸ்துவின் அபாவம் அறிந்தபின், எரிக்கப்படும் வஸ்துவின் அபாவம் அடைந்ததை அறிந்த பின்னர், தாஹ்ய வஸ்துவின் அபாவத்தை அறிந்ததால் அக்னியின் தஹிக்கும் தன்மை அபாவத்திற்கு சமானம் இருக்கும். எந்த சமயத்தில் சித்தமானது சங்கல்பிக்கவில்லையோ அந்த சமயத்தில் அந்த அமனஸ்த்தமானது அதாவது அமனீபாவத்தை அடைகிறது. கிராஹ்ய வஸ்துவிற்கு அபாவத்தை அறிந்தபொழுது மனமானது கிரஹிக்கப்படவில்லை. அதாவது கிரஹிக்கும் விகல்பங்கள் அற்றதாகிவிடும்.
यद्यसदिदं द्वैतम् , केन समञ्जसमात्मतत्त्वं विबुध्यत इति, उच्यते —
(ச.பா) (அ.கை) இந்த எல்லா த்வைதமும் அசத்தியமாகும் என்றால் சத்திய ஆத்ம தத்துவத்தின் ஞானம் எவ்வாறு ஏற்படும்? இதைக் குறித்து கூறுகிறார்-
अकल्पकमजं ज्ञानं ज्ञेयाभिन्नं प्रचक्षते ।
ब्रह्म ज्ञेयमजं नित्यमजेनाजं विबुध्यते ॥ ३३ ॥
कारिका अन्वयः - अकल्पकम् अजं ज्ञानं ज्ञेय अभिन्नं (ब्रह्मविदः) प्रचक्षते ब्रह्म ज्ञेयम् अजं नित्यम् अजेन अजं विबुध्यते।।
காரிகா அர்த்தம் - இந்த கல்பனா சூன்யமான அஜன்மா ஞானமுடைய விவேகிகள் ஞேய பிரஹ்மத்துடன் அபின்னம், பிரஹ்மம் எதற்கு விஷயமோ அந்த ஞானம் அஜன்மா, நித்தியமானது. இந்த அஜன்மா ஞானத்தால் அஜன்மா ஆத்மதத்துவம் ஸ்வயமாகவே அறியப்படுகிறது.
(ச.பா) - எல்லா கல்பனைகளும் அற்றது. ஆகையால் தான் ஞப்திமாத்திரமாகும். அதாவது ஞப்திமாத்திர ஞானத்தை பிரஹ்ம வித்துக்கள் ஞேயம் என்று பரமார்த்த ஸ்வரூப பிரஹ்மத்தை அபின்னமாக கூறுகிறார்கள். அக்னியில் உள்ள சூடுபோல் உள்ளது. அக்னியில் உள்ள உஷ்ணத்திற்கு சமானமாய் விக்ஞாதாவின் ஞானம் ஒருபோதும் லோபத்தை அடைவதில்லை. “விக்ஞானமானந்தம் ப்ரஹ்ம” “ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம” என்பது முதலிய சுருதிகளிளால் கருதப்படுகிறது.
तस्यैव विशेषणम् — ब्रह्म ज्ञेयं यस्य, स्वस्थं तदिदं ब्रह्म ज्ञेयम् औष्ण्यस्येवाग्निवदभिन्नम् , तेन आत्मस्वरूपेण अजेन ज्ञानेन अजं ज्ञेयमात्मतत्त्वं स्वयमेव विबुध्यते अवगच्छति । नित्यप्रकाशस्वरूप इव सविता नित्यविज्ञानैकरसघनत्वान्न ज्ञानान्तरमपेक्षत इत्यर्थः ॥ ३३ ॥
(ச.பா) அந்த (ஞானத்திற்கு) விசேஷணம் கூறப்படுகிறது. ब्रह्मज्ञेयम् (பிரஹ்மஞேயம்) என்று அதாவது பிரஹ்மம் எதற்கு ஞேயமோ அந்த ஞானம் அக்னி உஷ்ணத்தைப் போல் பிரஹ்மத்துடன் அபின்னமாகும். அந்த ஆத்ம ஸ்வரூப அஜன்மாஞானத்தால் அஜன்மா ஞேயரூப ஆத்மதத்துவத்தை தானே அறிகிறது. தாத்பர்யம் என்னவெனில் நித்திய பிரகாச ரூப சூரியனைப்போல் நித்தியவிக்ஞான ஏகரச கனரூபமாய் இருத்தலால் அதற்கு வேறு ஞானத்தின் அபேக்ஷை இல்லை.
आत्मसत्यानुबोधेन सङ्कल्पमकुर्वत् बाह्यविषयाभावे निरिन्धनाग्निवत्प्रशान्तं सत् निगृहीतं निरुद्धं मनो भवतीत्युक्तम् । एवं च मनसो ह्यमनीभावे द्वैताभावश्चोक्तः । तस्यैवं
(ச.பா) (அ.கை) ஆத்ம சத்தியத்தை அடைந்ததால் சங்கல்பத்தைச் செய்யாத சித்தம் பாஹ்ய விஷயங்களை அபாவம் என்று அறிந்ததால் இந்தனம் (கட்டை) அற்ற அக்னிபோல் சாந்தமடைந்து நிருத்தம் ஆகிறது என்று கூறப்பட்டது. இவ்வாறு மனமானது அமனீபாவம் அடைந்து துவைதமும் அபாவம் என்று கூறப்படுகிறது. அது இவ்வாறாக ஆகும்.
निगृहीतस्य मनसो निर्विकल्पस्य धीमतः ।
प्रचारः स तु विज्ञेयः सुषुप्तेऽन्यो न तत्समः ॥ ३४ ॥
कारिका अन्वयः - निगृहीतस्य मनसः निर्विकल्पस्य धीमतः यः प्रचारः सः तु योगिभिः विज्ञेयः सुषुप्ते अन्यः तत्समः न ।
காரிகா அர்த்தம் - ஒடுக்கப்பட்ட மனதை உடையவனும் (மனோநாசம் உற்றவனும்) அதனால் எந்த விதமான சங்கல்ப விகல்பங்கள் அற்றவனுமான விவேகியின் (ஆத்மாராமனின்) எந்த ஒரு ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டு அதிலேயே சஞ்சரிக்கும் தன்மை உண்டோ அந்தப் பிரச்சாரமானது யோகிகளால் உணரத்தக்கதாகும். சுஷுப்தி நிலையில் (மனதின் சேஷ்டையற்ற தன்மை) வேறானது. முன்சொன்ன நிலைக்கு சமமானது இல்லை.
निगृहीतस्य निरुद्धस्य मनसः निर्विकल्पस्य सर्वकल्पनावर्जितस्य धीमतः विवेकवतः प्रचरणं प्रचारो यः, स तु प्रचारः विशेषेण ज्ञेयो विज्ञेयो योगिभिः ।
(ச.பா) ஒடுக்கப்பட்ட மனது உடையவனும் எல்லா கல்பனைகளும் அற்றவிவேகமுடையவனின் சித்தத்தின் பிரசாரமாகும் (வியாபாரமாகும்). அது யோகிகளால் விசேஷமாய் உணரத்தக்கதாகும்.
ननु सर्वप्रत्ययाभावे यादृशः सुषुप्तिस्थस्य मनसः प्रचारः, तादृश एव निरुद्धस्यापि, प्रत्ययाभावाविशेषात् ; किं तत्र विज्ञेयमिति ।
(ச.பா) (சங்கை) - எல்லாவிதமான பிரத்தியயங்களும் அபாவம் அடைந்தபின் சுஷுப்தியில் இருப்பவனுடைய மனதின் பிரச்சாரம் (வியாபாரம்) போல் ஒடுங்கிய மனதை உடையவனும் ஆகிறான். ஏனெனில் இரண்டிலும் சமானமாகும். இதில் விசேஷமாக அறியவேண்டியது என்ன?
अत्रोच्यते — नैवम् , यस्मात्सुषुप्ते अन्यः प्रचारोऽविद्यामोहतमोग्रस्तस्य अन्तर्लीनानेकानर्थप्रवृत्तिबीजवासनावतो मनसः आत्मसत्यानुबोधहुताशविप्लुष्टाविद्याद्यनर्थप्रवृत्तिबीजस्य निरुद्धस्य अन्य एव प्रशान्तसर्वक्लेशरजसः स्वतन्त्रः प्रचारः । अतो न तत्समः । तस्माद्युक्तः स विज्ञातुमित्यभिप्रायः ॥
(ச.பா) (சமாதானம்) அந்த விஷயத்தில் கூறப்படுகிறது அவ்வாறு அல்ல, ஏனெனில் சுஷுப்தியில் அவித்யா மோஹ ரூப அந்தகாரத்தால் விழுங்கப்பட்டு (மறைக்கப்பட்டு) அவ்வாறே உள்ளே அநேக அனர்த்த பிரவிர்த்தியின் பீஜபூதமான வாசனைகளும் லீனமடைந்த அந்த மனதின் வியாபாரம் மற்றொரு வகையானது. மேலும் ஆத்ம சத்தியரூபத்தின் ஞானாக்னியினால் எந்த அவித்தியாரூப அநர்த்த பிரவிர்த்தி எரிக்கப்பட்டதாகிறதோ அவ்வாறே எதனுடைய எல்லா வகையான க்லேச ரூபதோஷம் சாந்தமாகி விட்டதோ அந்த நிருத்த (அடங்கிய) சித்தத்தின் சுவதந்திர பிரசாரம் வேறு வகையாகும். ஆகையால் இரண்டும் சமமாகாது ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் அதன் ஞானத்தை அடையவேண்டும் என்பதாகும்.
प्रचारभेदे हेतुमाह —
(ச.பா) (அ.கை)- இவை இரண்டின் பிரசாரபேதம் கூறப்படுகிறது-
लीयते हि सुषुप्तौ तन्निगृहीतं न लीयते ।
तदेव निर्भयं ब्रह्म ज्ञानालोकं समन्ततः ॥ ३५ ॥
कारिका अन्वयः - सुषुप्ते तत् लीयते हि निगृहीतं तत् एव निर्भयं ब्रह्म ज्ञानालोकं (ज्ञप्तिः प्रकाशः यस्य तत्) समन्ततः प्रकाशते ।
காரிகா அர்த்தம் - சுஷுப்தி அவஸ்தையில் மனமானது (அவித்தையில்) லீனமாகிறது. நிருத்தமான பொழுது அதில் லீனமாவதில்லை. அந்த சமயத்தில் சித்பிரகாசமய நிர்பய பிரஹ்மமாய் இருக்கிறது.
लीयते सुषुप्तौ हि यस्मात्सर्वाभिरविद्यादिप्रत्ययबीजवासनाभिः सह तमोरूपम् अविशेषरूपं बीजभावमापद्यते तद्विवेकविज्ञानपूर्वकं निगृहीतं निरुद्धं सत् न लीयते तमोबीजभावं नापद्यते । तस्माद्युक्तः प्रचारभेदः सुषुप्तस्य समाहितस्य मनसः ।
(ச.பா) ஏனெனில் சுஷுப்தியில் மனமானது அவித்யா முதலிய எல்லா பிரத்யயங்களின் பீஜ பூதமான வாசனைகளுடன் கூடி தமஸ்வபாவ அவிசேஷ ரூப பீஜபாவத்தை அடைகிறது. விசேஷ ஞானத்துடன் நிருத்தம் ஆனபின் (ஒடுக்கப்பட்டபின்) லீனமாகாது. அதாவது அக்ஞானரூப பீஜ பாவத்தை அடையாது. ஆகையால் சுஷுப்திக்கும், சமாஹித சித்தத்திற்கும் பிரசாரபேதம் உள்ளது சரியானதே.
यदा ग्राह्यग्राहकाविद्याकृतमलद्वयवर्जितम् , तदा परमद्वयं ब्रह्मैव तत्संवृत्तमित्यतः तदेव निर्भयम् , द्वैतग्रहणस्य भयनिमित्तस्याभावात् । शान्तमभयं ब्रह्म यद्विद्वान्न बिभेति कुतश्चन ।
(ச.பா) எப்பொழுது சித்தமானது க்ராஹ்யக்ராஹக ரூப அவித்தையினால் உண்டாகும் இரண்டு விதமான மலம் அற்றதாகிறதோ அப்பொழுது அது பரம அத்விதீய ப்ரஹ்மமாகிறது. ஆகையால் த்வைதக்ரஹண ரூப பயத்திற்குக் காரணம் அபாவமான பொழுது அது நிர்பயமாகிறது. பிரஹ்மம் சாந்தமும் அபயபதமும் ஆகும். அதை அறிந்தவன் எதற்கும் பயப்படமாட்டான்.
तदेव विशेष्यते — ज्ञप्तिर्ज्ञानम् आत्मस्वभावचैतन्यम् , तदेव ज्ञानमालोकः प्रकाशो यस्य, तद्ब्रह्म ज्ञानालोकं विज्ञानैकरसघनमित्यर्थः । समन्ततः समन्तात् ; सर्वतो व्योमवन्नैरन्तर्येण व्यापकमित्यर्थः ॥
(ச.பா) அதன் விசேஷணம் கூறப்படுகிறது. ஞானத்தின் அர்த்தம் ஞப்தி அதாவது ஆத்ம ஸ்வரூப சைதன்யம். அந்த ஞானம் எதன் ஆலோகமான பிரகாசமோ அது பிரஹ்ம ஞானாலோகம் அதாவது விக்ஞான ஏக ரச ரூபமாகும். எங்கும் ஆகாசம்போல் நிரந்தரமாய் வியாபித்து இருக்கிறது.
अजमनिद्रमस्वप्नमनामकमरूपकम् ।
सकृद्विभातं सर्वज्ञं नोपचारः कथञ्चन ॥ ३६ ॥
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नम् अनामकम-रूपकम् सकृद्विभातम् सर्वज्ञम् उपचारः न कथञ्चन ।
காரிகா அர்த்தம் - அந்த பிரஹ்மம் ஜன்மமற்றது, நித்திரை அற்றது, ஸ்வப்னம் இல்லாதது, நாமரூபமற்றது, நித்திய பிரகாசரூபம், சர்வக்ஞனம் ஆகும். அதில் ஒருவிதமான கர்த்தவ்யம் இல்லாதது.
जन्मनिमित्ताभावात्सबाह्याभ्यन्तरम् अजम् ; अविद्यानिमित्तं हि जन्म रज्जुसर्पवदित्यवोचाम । सा चाविद्या आत्मसत्यानुबोधेन निरुद्धा यतः, अतः अजम् , अत एव अनिद्रम् अविद्यालक्षणानादिर्मायानिद्रास्वापात्प्रबुद्धम् अद्वयस्वरूपेणात्मना ; अतः अस्वप्नम् । अप्रबोधकृते ह्यस्य नामरूपे ; प्रबोधाच्च ते रज्जुसर्पवद्विनष्टे । न नाम्नाभिधीयते ब्रह्म, रूप्यते वा न केनचित्प्रकारेण इति अनामकम् अरूपकं च तत् ,
‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ४ । १) इत्यादिश्रुतेः ।
(ச.பா) - ஜன்மத்திற்கான காரணம் அபாவமாய் இருத்தலால் பிரஹ்மம் வெளியிலும், உள்ளும் ஊடுருவியும் ஜன்மம் அற்றதாயும் இருக்கிறது. ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் ஜீவனுடைய ஜன்மா அவித்தையினால் உண்டானது என்று நாம் முதலிலேயே கூறி இருக்கிறோம். ஏனெனில் ஆத்மா சத்தியம் என்றஅனுபவம் ஏற்பட்டதும் அந்த அவித்யா நீங்கிவிடுகிறது. ஆகையால் பிரஹ்மம் அஜன்மா, இதனால் நித்திரை அற்றதும் ஆகும். இங்கு அவித்யாரூப அநாதி மாயைதான் நித்திரை. தன்னுடைய அத்வைத ஸ்வரூபத்தால் அந்த ஸ்வப்னத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அஸ்வப்னம் (ஸ்வப்னம் நீங்கியது) ஞானம் ஏற்பட்ட உடன் ரஜ்ஜுவில் தோன்றிய சர்ப்பம்போல் நஷ்டமாய் விடும். ஆகையால் பிரஹ்மத்தை எந்த நாம ரூபத்தாலும் கூறமுடியாது ஆகையால் அது அநாமம், அரூபம் ஆகும். “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ) என்பது முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
किञ्च, सकृद्विभातं सदैव विभातं सदा भारूपम् , अग्रहणान्यथाग्रहणाविर्भावतिरोभाववर्जितत्वात् । ग्रहणाग्रहणे हि रात्र्यहनी ; तमश्चाविद्यालक्षणं सदा अप्रभातत्वे कारणम् ; तदभावान्नित्यचैतन्यभारूपत्वाच्च युक्तं सकृद्विभातमिति । अत एव सर्वं च तत् ज्ञप्तिस्वरूपं चेति सर्वज्ञम् । नेह ब्रह्मण्येवंविधे उपचरणमुपचारः कर्तव्यः, यथा अन्येषामात्मस्वरूपव्यतिरेकेण समाधानाद्युपचारः । नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वाद्ब्रह्मणः कथञ्चन न कथञ्चिदपि कर्तव्यसम्भवः अविद्यानाशे इत्यर्थः ॥ ३६ ॥
(ச.பா) அது அக்ரஹனம், அன்யதாக்ரஹனம் (வேறாய் கிரஹிப்பது) ஆவிர்பாவம், திரோபாவம் இவைகள் இல்லாததால் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதாவது நித்திய பிரகாசரூபமாய் இருக்கிறது. கிரஹித்தலும் கிரஹிக்காமல் இருப்பது இரவு, பகல்போல் ஆகும். அவித்யா ரூப அந்தகாரத்தால் (இருட்டால்) பிரஹ்மம் பிரகாசியாமல் இருப்பதற்கு காரணமாகும். அந்த அவித்தை அபாவம் அடைந்து நித்திய சைதன்ய ஸ்வரூபம் ஆகும்பொழுது பிரஹ்மத்திற்கு நித்தியப்ரகாச ரூபம் ஆதல் சரியே. ஆகையால் எல்லாமாயும் ஞப்தி ரூபமாயும் ஆவதால் அது சர்வக்ஞம். இவ்வாறு பிரஹ்மத்தினிடத்தில் எந்த ஒரு உபசாரமோ, கர்த்தவ்யமோ இல்லை. எவ்வாறு ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான சமாதி முதலிய கர்த்தவ்யமோ அவ்வாறு இல்லை. தாத்பர்யம் என்னவெனில் பிரஹ்மம் நித்ய, சுத்த, புத்த, முக்த ஸ்வபாவமாகும். ஆகையால் அவித்தை நாசம் அடைந்தபின் வித்வானுக்கு எந்த ஒரு கர்த்தவ்யமும் கிடையாது.
अनामकत्वाद्युक्तार्थसिद्धये हेतुमाह —
(ச.பா) (அ.கை) அநாமம் முதலியவையின் அர்த்த சித்திக்கான காரணத்தைக் கூறுகிறார்.
सर्वाभिलापविगतः सर्वचिन्तासमुत्थितः ।
सुप्रशान्तः सकृज्ज्योतिः समाधिरचलोऽभयः ॥ ३७ ॥
कारिका अन्वयः - सर्व अभिलाप विगतः सर्वचिन्ता समुत्थितः सुप्रशान्तः सकृत् ज्योतिः समाधिः अचलः अभयः ॥ ३७ ॥
காரிகா அர்த்தம் - எல்லா விதமாகவும் வாக் வியாபரம் அற்றது, எல்லா சிந்தனைகளையும் தாண்டியது, முற்றிலும் சாந்தமானது, நித்திய பிரகாசமானது, சமாதி ஸ்வரூபமானது, அசலமானது, நிர்பயமானதும் ஆகும்.
अभिलप्यते अनेनेति अभिलापः वाक्करणं सर्वप्रकारस्याभिधानस्य, तस्माद्विगतः ; वागत्रोपलक्षणार्था, सर्वबाह्यकरणवर्जित इत्येतत् ।
(ச.பா) எதனால் சப்தத்தை உச்சரிக்கின்றோமோ அது வாக் அது எல்லா சப்த உச்சரிப்பிற்கும் சாதனமாகும். அது அற்றது இந்த வாக் இந்திரியம் உப லக்ஷணமாக கூறப்பட்டது. இது எல்லா பாஹ்ய இந்திரியங்களையும் குறிப்பதாகும். அதாவது அவைகள் இல்லை என்பதாகும்.
(ச.பா) அது எல்லா சிந்தனைகளையும் தாண்டியது. எதனால் சிந்திக்கிறோமோ அந்த புத்தி சிந்தா எனப்படுகிறது. அதைத் தாண்டியது என்றால் அந்தக்கரணம் அற்றது என்பது பொருள். “अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः” (அப்ராணோ ஹ்யமனா சுப்ரோ, அக்ஷராத்பரத: பர = பிராணன் அற்றது, மனது அற்றது, சுத்தம் அவ்வாறே அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்) என்ற சுருதி இதற்குப் பிரமாணமாகும்.
यस्मात्सर्वविषयवर्जितः, अतः सुप्रशान्तः । सकृज्ज्योतिः सदैव ज्योतिः आत्मचैतन्यस्वरूपेण । समाधिः समाधिनिमित्तप्रज्ञावगम्यत्वात् ; समाधीयते अस्मिन्निति वा समाधिः । अचलः अविक्रियः । अत एव अभयः विक्रियाभावात् ॥
(ச.பா) ஏனெனில் அது எல்லா விஷயங்களும் அற்றது. ஆகையால் முற்றிலும் சாந்தமானது. நித்யஜ்யோதி ஸ்வரூபமானது, அதாவது ஆத்ம சைதன்ய ஸ்வரூபமாய் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டு இருப்பது. சமாதியினால் உண்டான பிரக்ஞையினை அடைவதால் சமாதி எனப்படுகிறது. அல்லது அதில் சித்தமானது ஒரு நிலைப்பட்டதால் சமாதி எனப்படுகிறது. அசலம் அதாவது விகாரமற்றது (அவிகாரி). விகாரம் அற்றதால் அபயம் எனப்படுகிறது.
यस्माद्ब्रह्मैव ‘समाधिरचलोऽभयः’ इत्युक्तम् ।
(ச.பா) (அ.கை)- எதனால் பிரஹ்மம் சமாதி ஸ்வரூபம், அசலம், அபயம் என்று சொல்லப்பட்டதோ அதனால்-
ग्रहो न तत्र नोत्सर्गश्चिन्ता यत्र न विद्यते ।
आत्मसंस्थं तदा ज्ञानमजाति समतां गतम् ॥ ३८ ॥
कारिका अन्वयः - तत्र न ग्रहः न उत्सर्गः यत्र चिन्ता न विद्यते तदा आत्मसंस्थं ज्ञानम् अजाति समतां गतं (भवति) ।
காரிகா அர்த்தம் - எங்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லையோ அங்கு எடுத்துக் கொள்ளுதலோ விடலோ இல்லை அந்த அவஸ்தையில் ஆத்மநிஷ்ட ஞானமும், ஜன்மமற்ற நிலையும் சமபாவனையும் அடைவான்.
अतः न तत्र तस्मिन्ब्रह्मणि ग्रहः ग्रहणमुपादानम् , न उत्सर्गः उत्सर्जनं हानं वा विद्यते । यत्र हि विक्रिया तद्विषयत्वं वा, तत्र हानोपादाने स्याताम् ; न तद्द्वयमिह ब्रह्मणि सम्भवति, विकारहेतोरन्यस्याभावान्निरवयवत्वाच्च ; अतो न तत्र हानोपादाने सम्भवतः । चिन्ता यत्र न विद्यते, सर्वप्रकारैव चिन्ता न सम्भवति यत्र अमनस्त्वात् , कुतस्तत्र हानोपादाने इत्यर्थः ।
(ச.பா) அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலும், துறத்தலும் இல்லை. எங்கு விகாரமோ, விகாரத்திற்கான விஷயம் இருக்கிறதோ அங்கு ஏற்றலும், துறத்தலும் சம்பவிக்கும். ஆனால் இங்கு ப்ரஹ்மத்தினிடத்தில் இவ்விரண்டும் இல்லை. ஏனெனில் விகாரத்திற்கு ஹேது பூதமான அன்ய பதார்த்தம் இல்லை. மேலும் அது ஸ்வயமாகவே நிர அவயவம் ஆகும். ஆகையால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த பிரஹ்மத்தினிடத்தில் ஏற்றலோ, துறத்தலோ சம்பவிக்காது. அங்கு சிந்தனையும் இல்லை. அதாவது மனம் இல்லாததினால் எந்த ஒரு சிந்தனையும் சம்பவிக்காததால் அங்கு தியாகமும் (துறத்தலும், க்ரஹணம் (ஏற்றலும் எவ்வாறு சம்பவிக்கும் என்பது பொருள்.
यदैव आत्मसत्यानुबोधो जातः, तदैव आत्मसंस्थं विषयाभावादग्न्युष्णवदात्मन्येव स्थितं ज्ञानम् , अजाति जातिवर्जितम् , समतां गतम् परं साम्यमापन्नं भवति ।
(ச.பா) எப்பொழுது ஆத்மசத்தியத்தின் போதம் உண்டாகிறதோ அப்பொழுது விஷயம் அபாவமானதால் அக்னியின் சூடுபோல ஆத்மாவில் இருக்கும் ஞானம் ஜன்மற்றதாயும் சமத்துவமாயும் ஆகிறது.
(ச.பா) இதற்கு முன் பிரதிக்ஞை செய்யப்பட்டது, சமான பாவனை அடைந்து அஜன்மா கிருபணத் தன்மை அற்றது என்பதை வர்ணிக்கிறேன் என்று முன்பு கூறியதை இங்கு “अजाति समतां गतम्” (அஜாதி சமதாம் கதம் = பிறப்பற்றது, சமபாவனையை அடைந்தது) என்று கூறி யுக்தி மூலமாயும் சாஸ்த்திர மூலமாயும் முடிவுக்கு வருகிறார். “यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः” (யோ வா ஏததக்ஷரம் கார்க்ய விதித்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ச க்ருபண: = ஹே! கார்க்கீ! எந்த புருஷன் இந்த அக்ஷர பிரஹ்மத்தை அறியவில்லையோ இந்த உலகத்தை விட்டு மரண மடைகிறானோ அவனே க்ருபணன்) என்ற சுருதியினால் கார்பண்ய விஷயத்தில் இந்த ஆத்ம ஸத்யானு போதத்தினால் வேறாக உள்ளது என்று அறிகிறோம். இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாத்ம தத்துவத்தை அடைந்தவன் க்ருதக்ருத்யனாகவும் வேண்டிய பேற்றைப் பெற்றவனாகவும்) ப்ராஹ்மணனாகவும் ஆகிறான் என்பது அபிப்பிராயம்.
यद्यपीदमित्थं परमार्थतत्त्वम् ।
(ச.பா) (அ.கை) - பரமார்த்ததத்துவம் எவ்வாறாய் இருந்தாலும்-
अस्पर्शयोगो वै नाम दुर्दर्शः सर्वयोगिणाम् ।
योगिनो बिभ्यति ह्यस्मादभये भयदर्शिनः ॥ ३९ ॥
कारिका अन्वयः - सर्वयोगिभिः अस्पर्श योगो नाम वै (अयं योगः) दुर्दर्शः हि अभये अस्मात् भयदर्शिनः योगिनः बिभ्यति ।
காரிகா அர்த்தம் - இந்த அஸ்பர்சயோகம் நிச்சயம் யோகிகளுக்கு மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அபய பதத்தில் பயத்தைக் காணும் யோகிகள் இதை பயமுடையதாக கருதுகிறார்கள்.
अस्पर्शयोगो नाम अयं सर्वसम्बन्धाख्यस्पर्शवर्जितत्वात् अस्पर्शयोगो नाम वै स्मर्यते प्रसिद्ध उपनिषत्सु । दुःखेन दृश्यत इति दुर्दर्शः सर्वयोगिणाम् वेदान्तविज्ञानरहितानाम् ; आत्मसत्यानुबोधायासलभ्य एवेत्यर्थः ।
(ச.பா) அஸ்பர்சயோகம் என்ற பெயர் உடையது. அதாவது எல்லா சம்பந்த ரூப ஸ்பர்சங்களும் அற்றது. அதனால் அது உபநிஷத்துக்களில் அஸ்பர்சயோகம் என்ற நாமத்தால் பிரசித்தமாய் இருக்கிறது. வேதாந்த விக்ஞானம் அற்றயோகிகளுக்கு அது மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்களுக்கு மிகக் கடினமானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்ம சத்யானுபோதத்தை அநுபவித்தர்களுக்கே ஆகும். மேலும் மிகுந்த ஆயாசத்தோடு அடையப்படுவதாகும்.
योगिनः बिभ्यति हि अस्मात्सर्वभयवर्जितादपि आत्मनाशरूपमिमं योगं मन्यमाना भयं कुर्वन्ति, अभये अस्मिन् भयदर्शिनः भयनिमित्तात्मनाशदर्शनशीलाः अविवेकिनः इत्यर्थः ॥
(ச.பா) ஏனெனில் பயமற்றதான இந்த ஆத்ம தத்துவத்தினின்று ஆத்ம சத்யானுபவ மில்லாமையால் இதை ஆத்ம நாசமோ என்று நினைத்து பயப்படுகின்றகேவல கர்ம நிஷ்டர்கள் ஆத்மாவே நசித்து விடுவதாகப் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் அபயரூபத்தில் தங்கள் அனுபவக்குறைவால் பயத்தைக் கற்பிக்கிறார்கள். இவர்கள் அவிவேகிகளாவார்கள்.
येषां पुनर्ब्रह्मस्वरूपव्यतिरेकेण रज्जुसर्पवत्कल्पितमेव मन इन्द्रियादि च न परमार्थतो विद्यते, तेषां ब्रह्मस्वरूपाणामभयं मोक्षाख्या च अक्षया शान्तिः स्वभावत एव सिद्धा, नान्यायत्ता,
‘नोपचारः कथञ्चन’ (मा. का. ३ । ३६) इत्युक्तेः ; ये त्वतोऽन्ये योगिनो मार्गगा हीनमध्यमदृष्टयो मनोऽन्यदात्मव्यतिरिक्तमात्मसम्बन्धि पश्यन्ति, तेषामात्मसत्यानुबोधरहितानां
(ச.பா) (அ.கை) எவர்களுடைய திருஷ்டியில் பிரஹ்ம ஸ்வரூபத்தைக்காட்டிலும் வேறான மனம், இந்திரியம் முதலியவைகள் ரஜ்ஜு சர்ப்பம் போல் கல்பிக்கப்பட்டவை, உண்மையில் அவற்றிக்கு இருப்பு இல்லை. அப்படிப்பட்ட பிரஹ்ம ஸ்வரூபமானவர்களுக்கு பயமற்றதன்மையும் மோக்ஷம் எனப்படும் குறைவற்ற சாந்தியும் ஸ்வபாவமாகவே சித்திக்கிறது. எந்த ஒன்றின் அதீனமும் அல்ல. அதற்கு கர்த்தவ்யம் இல்லை என்பது முன்பே கூறப்பட்டது. ஆனால் இதைத்தவிர வேறான அதம, மத்யம பாதையில் செல்லும் யோகிகள் மனதை ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆத்மாவின் சம்பந்தி என்று கருதுகிறார்கள். அவர்கள் ஆத்ம சத்ய போதம் அற்றவர்கள்-
मनसो निग्रहायत्तमभयं सर्वयोगिणाम् ।
दुःखक्षयः प्रबोधश्चाप्यक्षया शान्तिरेव च ॥ ४० ॥
कारिका अन्वयः - सर्वयोगिनां मनसः निग्रहायत्तम् अभयं (भवति) किं च दुःख क्षयः अपि प्रबोधः च अक्षया शान्तिरेव च ।
காரிகா அர்த்தம் - எல்லா யோகிகளுக்கும் பயமற்றதன்மை, (அபயம்), துக்கக்ஷயம், பிரபோதம், குறைவற்ற சாந்தி இவைகள் மனோ நிக்கிரஹத்தின் அதீனமாகும்
मनसो निग्रहायत्तमभयं सर्वेषां योगिनाम् । किञ्च, दुःखक्षयोऽपि । न ह्यात्मसम्बन्धिनि मनसि प्रचलिते दुःखक्षयोऽस्त्यविवेकिनाम् । किञ्च, आत्मप्रबोधोऽपि मनोनिग्रहायत्त एव । तथा, अक्षयापि मोक्षाख्या शान्तिस्तेषां मनोनिग्रहायत्तैव ॥ ४० ॥
(ச.பா) எல்லா யோகிகளின் அபயமானது மனோ நிக்ரஹத்தின் அதீனமாகும். துக்கக்ஷயமும் அவ்வாறே. ஏனெனில் ஆத்மா சம்பந்தமுடைய மனத்தில் சலனம் உடைய அவிவேகி புருஷனுக்கு துக்கம் க்ஷயமாவதில்லை. இதைத் தவிர ஆத்மஞானமும் மனதின் நிக்ரஹத்திற்கு அதீனமாகவே உள்ளது. அவ்வாறே மோக்ஷம் எனப்படும் குறைவற்ற (அக்ஷய) சாந்தியும் மனோநிக்ரஹத்தின் அதீனமாகவே உள்ளது.
उत्सेक उदधेर्यद्वत्कुशाग्रेणैकबिन्दुना ।
मनसो निग्रहस्तद्वद्भवेदपरिखेदतः ॥ ४१ ॥
कारिका अन्वयः - यद्वत् कुशाग्रेण एकबिन्दुना उदधेः उत्सेकः तद्वत् अपरिखेदतः मनसः निग्रहः भवेत् ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு (ஒரு குருவி) தர்பையின் நுனியால் (விழும்) ஒருதுளியால் கடலின் (தண்ணீரை) வற்றும்படி செய்ய இரைத்ததோ அவ்வாறே தளர்ச்சி அடையாத முயற்சியால் மனதின் நிக்ரஹம் ஏற்படும்.
मनोनिग्रहोऽपि तेषाम् उदधेः कुशाग्रेण एकबिन्दुना उत्सेचनेन शोषणव्यवसायवत् व्यवसायवतामनवसन्नान्तःकरणानामनिर्वेदात् अपरिखेदतः भवतीत्यर्थः ॥
(ச.பா) மனோ நிக்ரஹமும் தர்பையின் நுனியால் துளிதுளியாய் தெளித்து சமுத்திரத்தை வற்றச்செய்யும் முயற்சி போல் தைரியத்துடன் முயற்சி செய்யும் யோகிகளின் மனோநிக்ரஹம் கஷ்டமின்றி உண்டாகும்.
किमपरिखिन्नव्यवसायमात्रमेव मनोनिग्रहे उपायः ? नेत्युच्यते ;
(ச.பா) (அ.கை) என்ன தளர்ச்சியடையாத முயற்சி மாத்திரமே மனோநிக்கிரஹத்தின் உபாயமா? என்றால் இல்லை என்று கூறப்படுகிறது.
उपायेन निगृह्णीयाद्विक्षिप्तं कामभोगयोः ।
सुप्रसन्नं लये चैव यथा कामो लयस्तथा ॥ ४२ ॥
कारिका अन्वयः - कामभोगयोः विक्षिप्तम् उपायेन निगृणीयात् लये सुप्रसन्नम् अपि यथा कामः तथा लयः निगृहीतव्यः ।
காரிகா அர்த்தம் - காமிய விஷயங்களிலும், போகங்களிலும் பாய்ந்து ஓடும் சித்தத்தை உபாய மூலமாய் ஒடுக்க வேண்டும். அவ்வாறே லய அவஸ்தையிலும் மிகுந்த பிரசன்னமடைந்த சித்தத்தையும் தடைசெய். எவ்வாறு காமம் அனர்த்தத்தை உண்டு பண்ணுமோ அவ்வாறே லயமும் ஆகும்.
अपरिखिन्नव्यवसायवान्सन् , वक्ष्यमाणेनोपायेन कामभोगविषयेषु विक्षिप्तं मनो निगृह्णीयात् निरुन्ध्यादात्मन्येवेत्यर्थः । किञ्च, लीयतेऽस्मिन्निति सुषुप्तो लयः ; तस्मिन् लये च सुप्रसन्नम् आयासवर्जितमपीत्येतत् , निगृह्णीयादित्यनुवर्तते ।
(ச.பா) தளர்ச்சி அற்றமுயற்சி உடையவனால் மேலே கூறப்போகும் உபாயத்தால் காமபோகங்களில் பாய்ந்தோடும் சித்தத்தை நிக்கிரஹம் செய்து (அடக்கி) அதை ஆத்மாவிலேயே நிரோதம் செய்யவேண்டும். எந்த அவஸ்தையில் சித்தம் லீனமாகிறதோ அது சுஷுப்தி லயம் எனப்படும். அந்த லய அவஸ்த்தையில் மிகுந்த பிரசன்ன மடைந்த அதாவது ஆயாச மற்றஸ்திதியை அடையும் சித்தத்தையும் நிக்கிரஹம் செய்யவேண்டும் “निगृणीयात्” என்றபதம் அனுவிருத்தி ஆகிறது.
सुप्रसन्नं चेत्कस्मान्निगृह्यत इति, उच्यते ; यस्मात् यथा कामः अनर्थहेतुः, तथा लयोऽपि ; अतः कामविषयस्य मनसो निग्रहवल्लयादपि निरोद्धव्यत्वमित्यर्थः ॥
(ச.பா) அந்த அவஸ்தையில் மிகுந்த பிரசன்னமாய் இருக்கும் பொழுது அதை ஏன் நிக்ரஹம் செய்யவேண்டும்? இதற்குக் கூறுகிறார்- ஏனெனில் எவ்வாறு காமம் அநர்த்தத்திற்குக் காரணமாகிறதோ அவ்வாறே இந்த லயமும் ஆகும். ஆகையால் காம விஷய மனதை நிக்கிரஹம் செய்வது போல் லயத்தையும் நிரோதம் செய்ய வேண்டும்.
कः स उपाय इति, उच्यते —
(ச.பா) (அ.கை) அந்த உபாயம் என்ன? என்பதைக் கூறுகிறார்-
दुःखं सर्वमनुस्मृत्य कामभोगान्निवर्तयेत् ।
अजं सर्वमनुस्मृत्य जातं नैव तु पश्यति ॥ ४३ ॥
कारिका अन्वयः - सर्वं दुःखम् अनुस्मृत्य कामभोगात् निवर्तयेत् सर्वम् अजम् अनुस्मृत्य जातं तु नैव पश्यति ॥ ४३ ॥
காரிகா அர்த்தம் - எல்லா துவைதமும் துக்கரூபமே என்று எப்பொழுதும் ஸ்மரித்து சித்தத்தை காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அடக்கவேண்டும். இவ்வாறு நிரந்தரம் (எப்பொழுதும்) எல்லா வஸ்துக்களையும் பிறப்பற்ற பிரஹ்ம ரூபமாய் நினைத்து எந்த ஒரு உண்டான பதார்த்தங்களைக் காணமாட்டான்.
सर्वं द्वैतमविद्याविजृम्भितं दुःखमेव इत्यनुस्मृत्य कामभोगात् कामनिमित्तो भोगः इच्छाविषयः तस्मात् विप्रसृतं मनो निवर्तयेत् वैराग्यभावनयेत्यर्थः । अजं ब्रह्म सर्वम् इत्येतच्छास्त्राचार्योपदेशतः अनुस्मृत्य तद्विपरीतं द्वैतजातं नैव तु पश्यति अभावात् ॥
(ச.பா) - அவித்தையினால் தோன்றும் எல்லா துவைதமும் துக்க ரூபமானதே என்று அடிக்கடி நினைத்து காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அதாவது இச்சையினால் உண்டாகும் விஷயங்களில் செல்லும் சித்தத்தை வைராக்கிய பாவனையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். அதன்பின் இவை எல்லாம் பிறப்பற்ற பிரஹ்மமே என்று சாஸ்திரம், ஆச்சாரியரின் உபதேசம் இவற்றை அனுசரித்து எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்த இந்த விபரீதமான த்வைத ஜாதத்தை அபாவம் என்று அறிந்ததால் அது காணமுடியாது.
लये सम्बोधयेच्चित्तं विक्षिप्तं शमयेत्पुनः ।
सकषायं विजानीयात्समप्राप्तं न चालयेत् ॥ ४४ ॥
कारिका अन्वयः - लये चित्तं संबोधयेत् पुनः विक्षिप्तं शमयेत् सकषायं विजानीयात् समप्राप्तं न चालयेत् ।
காரிகா அர்த்தம் - சித்தமானது (சுஷுப்தி அவஸ்தையில்) லீனமான பொழுது அதை ஆத்ம விவேகத்தில் சேர்க்க வேண்டும் சித்தமானது வெளியில் அலைபாயும் பொழுது அதை சாந்தபடுத்த வேண்டும். இல்லாவிடில் ராகத்துடன் கூடியதாகும். அவ்வாறேசாம்யா அவஸ்தையை அடைந்த பொழுது சித்தத்தை சலனமுடையதாக செய்யாதே.
एवमनेन ज्ञानाभ्यासवैराग्यद्वयोपायेन लये सुषुप्ते लीनं सम्बोधयेत् मनः आत्मविवेकदर्शनेन योजयेत् । चित्तं मन इत्यनर्थान्तरम् । विक्षिप्तं च कामभोगेषु शमयेत्पुनः । एवं पुनः पुनरभ्यासतो लयात्सम्बोधितं विषयेभ्यश्च व्यावर्तितम् , नापि साम्यापन्नमन्तरालावस्थं सकषायं सरागं बीजसंयुक्तं मन इति विजानीयात् । ततोऽपि यत्नतः साम्यमापादयेत् । यदा तु समप्राप्तं भवति, समप्राप्त्यभिमुखीभवतीत्यर्थः ; ततः तत् न चालयेत् , विषयाभिमुखं न कुर्यादित्यर्थः ॥
(ச.பா) - முற்கூறப்பட்ட ஞானாப்யாசம், வைராக்கியம் என்றஇரு உபாயங்களால் சுஷுப்தியில் லயமடைந்திருக்கக் கூடிய மனதை இங்கு சித்தசப்தமும் மனதையே குறிக்கும், தட்டி எழுப்பி விழிப்படையச் செய்யவேண்டும். மேலும் (இவ்வாறு விழிப்படைந்த மனது) காமபோகாதிகளில் விக்ஷபேம் அடைந்திருந்தால் இவ்விடைநிலையை அது கஷாயம் போன்றராகவாசனை உள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து மேலும் இடைவிடாது முயற்சி செய்து சமநிலையை அடையச் செய்யவேண்டும். சமநிலையை (பிரஹ்ம ஸ்வரூபத்தை) அடைந்திருக்கும் மனதை சலனமடையச் செய்யக்கூடாது. அப்படியே விட்டுவிட வேண்டும் விஷயங்களில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
नास्वादयेत्सुखं तत्र निःसङ्गः प्रज्ञया भवेत् ।
निश्चलं निश्चरच्चित्तमेकीकुर्यात्प्रयत्नतः ॥ ४५ ॥
कारिका अन्वयः - तत्र सुखं न आस्वादयेत् प्रज्ञया निःसङ्गः भवेत् निश्चलं भवति पुनः निश्चरत् चित्तं प्रयत्नतः एकीकुर्यात् ।
காரிகா அர்த்தம் -அந்த சாம்யாவஸ்தையில் சுகத்தை சுவைக்காதே. விவேக புத்தியினால் சங்க மற்று இரு, மேலும் சித்தமானது வெளியில் அலை பாய்ந்தால் அதை நிச்சல மற்றதாய் ஏகாக்கிரமாக்கு (ஒருநிலைப்படுத்து)
समाधित्सतो योगिनो यत्सुखं जायते, तत् नास्वादयेत् तत्र न रज्येतेत्यर्थः । कथं तर्हि ? निःसङ्गः निःस्पृहः प्रज्ञया विवेकबुद्ध्या यदुपलभ्यते सुखम् , तदविद्यापरिकल्पितं मृषैवेति विभावयेत् ; ततोऽपि सुखरागान्निगृह्णीयादित्यर्थः । यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सत् निश्चरत् बहिर्निर्गच्छद्भवति चित्तम् , ततस्ततो नियम्य उक्तोपायेन आत्मन्येव एकीकुर्यात् प्रयत्नतः । चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ॥
(ச.பா) சமாதியில் உள்ள யோகி சுகத்தை அடைவான். அதை சுவைக்கக்கூடாது. அதாவது அதில் ராகம் இருக்கக்கூடாது. மேலும் என்ன செய்யவேண்டும் எனில் விவேக புத்தியினால் எந்த இந்த சுகமுள்ளதோ அது அவித்தையினால் கல்பிக்கப்பட்டது மேலும் மித்தை என்று பாவனை செய்ய வேன்டும். சுகத்தில் உள்ள ராகத்தையுடைய சித்தத்தை நிக்கிரஹம் செய் என்பது பொருள்.
यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सन्निश्चरद्बहिर्निर्गच्छद्भवति चित्तं ततस्ततो नियम्योक्तोपायेना-त्मन्येवैकीकुर्यात्प्रयत्नतः। चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ।
(ச.பா) எப்பொழுது சுகராகத்திலிருந்து நிவிர்த்தியாகி நிச்சல ஸ்வபாவம் அடைந்த சித்தம் மறுபடியும் வெளியில் செல்லுமோ அப்பொழுது முன்பு கூறிய உபாயத்தால் பிரயத்தின பூர்வமாய் ஆத்மாவில் ஏகாக்ரம் செய்ய வேண்டும். சித்த ஸ்வரூப சத்தாமாத்திரத்தை சம்பாதிக்க வேண்டும்.
यदा न लीयते चित्तं न च विक्षिप्यते पुनः ।
अनिङ्गनमनाभासं निष्पन्नं ब्रह्म तत्तदा ॥ ४६ ॥
कारिका अन्वयः - यदा चित्तं न लीयते पुनः न च विक्षिप्यते तदा तत् अनिङ्गनम् अनाभासं ब्रह्म निष्पन्नं भवति ।
காரிகா அர்த்தம் - எப்பொழுது மனம் லய மடையவில்லையோ, மேலும் விஷயங்களில் விக்ஷபேம் அடையவில்லையோ அப்பொழுது அந்த சித்தமானது காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் போல் அசைவற்றதாயும் எந்த கல்பிதமான விஷய பாவனையும் அற்றதாகி பிரஹ்மமே ஆனதாக இருக்கிறது.
यथोक्तेनोपायेन निगृहीतं चित्तं यदा सुषुप्ते न लीयते, न च पुनर्विषयेषु विक्षिप्यते ; अनिङ्गनम् अचलं निवातप्रदीपकल्पम् , अनाभासं न केनचित्कल्पितेन विषयभावेनावभासते इति ; यदा एवंलक्षणं चित्तम् , तदा निष्पन्नं ब्रह्म ; ब्रह्मस्वरूपेण निष्पन्नं चित्तं भवतीत्यर्थः ॥ ४६ ॥
(ச.பா) மேலே கூறப்பட்ட உபாயத்தால் நிக்ரஹம் செய்யப்பட்ட சித்தம் சுஷுப்தியில் லீனமாகாமலும் விஷயங்களில் செல்லாமலும் இருக்கிறதோ அப்பொழுது காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் நிச்சலமாயும் விஷயங்களை விளக்காமலும் இருக்கும் சித்தம் பிரஹ்மமாகவே ஆகிறது.
स्वस्थं शान्तं सनिर्वाणमकथ्यं सुखमुत्तमम् ।
अजमजेन ज्ञेयेन सर्वज्ञं परिचक्षते ॥ ४७ ॥
कारिका अन्वयः - स्वस्थं शान्तं सनिर्वाणम् अकथ्यम् उत्तमं सुखं ज्ञेयेन अजेन अजं सर्वज्ञं (ब्रह्मविदः) परिचक्षते ।
காரிகா அர்த்தம் - (பிரஹ்மக்ஞர்கள்) தன்னில் நிலை பெற்றதாயும், சாந்தமாயும், நிர்வாண முடையவராயும், இவ்வாறு என்று கூறமுடியாதவராயும், நிரதிசய சுக ஸ்வரூபமாயும், ஜன்மமற்றவராயும், அஜன்மாவாகிய ஞேயத்தைக் (பிரஹ்மத்தை) காட்டிலும் அபின்னமாயும், சர்வக்ஞராயும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
यथोक्तं परमार्थसुखमात्मसत्यानुबोधलक्षणं स्वस्थं स्वात्मनि स्थितम् ; शान्तं सर्वानर्थोपशमरूपम् ; सनिर्वाणम् , निर्वृतिर्निर्वाणं कैवल्यम् , सह निर्वाणेन वर्तते ; तच्च अकथ्यं न शक्यते कथयितुम् , अत्यन्तासाधारणविषयत्वात् ; सुखमुत्तमं निरतिशयं हि तद्योगिप्रत्यक्षमेव ; न जातमिति अजम् , यथा विषयविषयम् ; अजेन अनुत्पन्नेन ज्ञेयेन अव्यतिरिक्तं सत् स्वेन सर्वज्ञरूपेण सर्वज्ञं ब्रह्मैव सुखं परिचक्षते कथयन्ति ब्रह्मविदः ॥ ४७ ॥
(ச.பா) கூறப்பட்ட ஆத்ம சத்தியானுபோத பரமார்த்த சுகம் ஸ்வஸ்தம் அதாவது தன் ஆத்மாவில் நிலை பெற்றிருத்தல் சாந்தம் - எல்லா வகையிலும் அநர்த்தத்தின் நிவர்த்திரூபம். (सनिर्वाणम्) சநிர்வாணம் அதாவது கைவல்யம் என்று கூறப்படுகிறது. இந்த நிர்வாணத்துடன் கூடியதை இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாது. ஏனெனில் அதன் விஷயம் முற்றிலும் அசாதாரணமானது. சுகம் உத்தமம் - யோகிகளுக்கு பிரத்யக்ஷமாகும் நிரதிசய சுகமாகும். அவ்வாறே எதற்கு உத்பத்தி இல்லையோ அது அஜம். அதாவது விஷய சம்பந்தி சுகம் போல உற்பத்தி ஆகாதது. ஞேயத்தைக் காட்டிலும் அபின்னமானது. ஆகையால் தன்னுடைய சர்வக்ஞ ரூபத்தால் ஸ்வயம் பிரஹ்மம் அதுவே சுகம் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
सर्वोऽप्ययं मनोनिग्रहादिः मृल्लोहादिवत्सृष्टिरुपासना च उक्ता परमार्थस्वरूपप्रतिपत्त्युपायत्वेन, न परमार्थसत्येति । परमार्थसत्यं तु
(ச.பா) (அ.கை) மண், உலோகத்திற்கு சமமாய் மனோநிக்ரஹம் முதலியவை, சம்பூர்ண சிருஷ்ட்டி அவ்வாறே உபாசனா இவைகள் பரமார்த்த சொரூபத்தின் அடைவிற்காக உபாய ரூபமாய் கூறப்பட்டது. அவை பரமார்த்த சத்தியமல்ல. பரமார்த்த சத்தியமோ-
न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ४८ ॥
कारिका अन्वयः - जीवः न कश्चित् जायते अतः अस्य सम्भवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ।
காரிகா அர்த்தம் - எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எந்த அஜன்மா (பிறப்பற்ற) பிரஹ்மத்திற்கு உத்பத்தி கிடையாது அதுவே சர்வ உத்தமமான சத்தியமாகும்.
न कश्चिज्जायते जीवः कर्ता भोक्ता च नोत्पद्यते केनचिदपि प्रकारेण । अतः स्वभावतः अजस्य अस्य एकस्यात्मनः सम्भवः कारणं न विद्यते नास्ति । यस्मान्न विद्यतेऽस्य कारणम् , तस्मान्न कश्चिज्जायते जीव इत्येतत् । पूर्वेषूपायत्वेनोक्तानां सत्यानाम् एतत् उत्तमं सत्यं यस्मिन्सत्यस्वरूपे ब्रह्मणि अणुमात्रमपि किञ्चिन्न जायते इति ॥ ४८ ॥
(ச.பா) எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதாவது கர்த்தா போக்தா இவைகள் உத்பத்தியாவதில்லை. ஆகையால் ஸ்வபாவமாகவே இந்த ஏகமாகிய அஜன்மா ஆத்மா சம்பவிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. ஆகையால் எந்த ஒரு ஜீவனும் உத்பத்தியாவதில்லை என்பது இதன் தாத்பர்யம். முன்பு கூறிய உபாய ரூபமாய் கூறப்பட்ட சத்தியத்தைக் காட்டிலும் உத்தம சத்தியம். இந்த சத்திய ஸ்வரூப பிரஹ்மத்தில் எந்த ஒரு வஸ்துவும் அணு மாத்திரமும் உத்பத்தியாகாது.
इति तृतीयमद्वैतप्रकरणं सम्पूर्णम् ॥
ओङ्कारनिर्णयद्वारेण आगमतः प्रतिज्ञातस्याद्वैतस्य बाह्यविषयभेदवैतथ्याच्च सिद्धस्य पुनरद्वैते शास्त्रयुक्तिभ्यां साक्षान्निर्धारितस्य एतदुत्तमं सत्यमित्युपसंहारः कृतोऽन्ते । तस्यैतस्यागमार्थस्य अद्वैतदर्शनस्य प्रतिपक्षभूता द्वैतिनो वैनाशिकाश्च । तेषां चान्योन्यविरोधाद्रागद्वेषादिक्लेशस्पदं दर्शनमिति मिथ्यादर्शनत्वं सूचितम् , क्लेशानास्पदत्वात्सम्यग्दर्शनमित्यद्वैतदर्शनस्तुतये । तदिह विस्तरेणान्योन्यविरुद्धतया असम्यग्दर्शनत्वं प्रदर्श्य तत्प्रतिषेधेनाद्वैतदर्शनसिद्धिरुपसंहर्तव्या आवीतन्यायेनेत्यलातशान्तिप्रकरणमारभ्यते ।
(ச.பா) (அ.கை) ஓம்காரத்தின் நிர்ணயவாயிலாய் ஆகம பிரகரணத்தில் அத்வைதம் பிரதிக்ஞை செய்யப்பட்டது. (வைதத்ய பிரகரணத்தில்) பாஹ்ய விஷயபேதங்கள் மித்யாத்வ வாயிலாய் சித்தம் செய்யப்பட்டது. அதன் பின் அத்வைத பிரகரணத்தில் சாஸ்த்திர யுக்திகளால் சாக்ஷாத்தாய் நிச்சயம் செய்யப்பட்டது. முடிவில் “இது உத்தம சத்தியம்” என்று கூறி உபசம்ஹாரம் செய்யப்பட்டது. வேத தாத்பர்ய பூதமான இந்த அத்வைத தர்சனத்தின் விரோதியாகிய துவைதவாதம் அவ்வாறே வைநாசிகம் முதலிய வாதங்கள் இருக்கின்றன. அவைகளின் தர்சனம் பரஸ்பரம் விரோதி ஆவதால் ராகதுவேஷங்கள் முதலிய க்லேசங்களை ஆஸ்ரயிக்கின்றன. ஆகையால் அவைகள் மித்திய தர்சனத்துவம் காண்பிக்கப்பட்டது. ராகதுவேஷ முதலிய க்லேசங்களை ஆசரியிக்காததால் அத்வைததர்சனம் சம்யக் தர்சனமாகும் இவ்வாறு அது போற்றப்படுகிறது. இப்பொழுது துவைதவாதி முதலிய தர்சனங்கள் பரஸ்பரம் விரோதியாய் இருத்தலால் அதை விஸ்தாரமாய் அதன் மித்யாத்துவத்தை காட்டி அதை நீக்குவதின் வாயிலாய் ஆவீதநியாயத்தால் (அன்வய, வியதிரேகபூர்வகமாய்) அத்வைத தர்சனத்தின் சித்தியை உபசம்ஹாரம் செய்ய வேண்டியதற்காக அலாதசாந்தி பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.
तत्राद्वैतदर्शनसम्प्रदायकर्तुरद्वैतस्वरूपेणैव नमस्कारार्थोऽयमाद्यश्लोकः । आचार्यपूजा हि अभिप्रेतार्थसिद्ध्यर्थेष्यते शास्त्रारम्भे ।
(ச.பா) இதில் அத்வைததர்சன கர்த்தாவை அத்வைத ரூபமாய் நமஸ்காரம் செய்வதற்காக முதல் ஸ்லோகம். ஏனெனில் சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ஆச்சாரியரின் பூஜையானது அதில் அடங்கிய அர்த்தத்தின் சித்தியின் பொருட்டாகும்.
ज्ञानेनाकाशकल्पेन धर्मान्यो गगनोपमान् ।
ज्ञेयाभिन्नेन सम्बुद्धस्तं वन्दे द्विपदां वरम् ॥ १ ॥
कारिका अन्वयः - यः आकाशकल्पेन ज्ञानेन गगनोपमान धर्मान् ज्ञेय अभिन्नेन सम्बद्धः तं द्विपदांवरं वन्दे ।
காரிகா அர்த்தம் - எந்த ஞேயத்தைக்காட்டிலும் (ஆத்மாவைக் காட்டிலும்) அபின்னமான ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் ஆகாசம் போன்று தர்மங்களை (ஜீவன்களை) அறிகிறானோ அந்த புருஷோத்தமனை நமஸ்காரம் செய்கிறேன்.
आकाशेन ईषदसमाप्तमाकाशकल्पमाकाशतुल्यमित्येतत् । तेन आकाशकल्पेन ज्ञानेन । किम् ? धर्मानात्मनः । किंविशिष्टान् ? गगनोपमान् गगनमुपमा येषां ते गगनोपमाः, तानात्मनो धर्मान् । ज्ञानस्यैव पुनर्विशेषणम् — ज्ञेयैर्धर्मैरात्मभिरभिन्नम् अग्न्युष्णवत् सवितृप्रकाशवच्च यत् ज्ञानम् , तेन ज्ञेयाभिन्नेन ज्ञानेन आकाशकल्पेन ज्ञेयात्मस्वरूपाव्यतिरिक्तेन, गगनोपमान्धर्मान्यः सम्बुद्धः सम्बुद्धवान्नित्यमेव ईश्वरो यो नारायणाख्यः, तं वन्दे अभिवादये । द्विपदां वरं द्विपदोपलक्षितानां पुरुषाणां वरं प्रधानम् , पुरुषोत्तममित्यभिप्रायः ।
(ச.பா) எது ஆகாசத்தை அபேக்ஷித்து சிறிது அசம்பூர்ணமாய் இருக்கிறதோ அதை ஆகாசத்திற்கு ஒப்பானது எனப்படுகிறது. அந்த ஆகாச கல்ப ஞானத்தினால் என்ன? ஆத்மாவின் தர்மங்கள் எவ்விதமானது? ககனம் ஆதாவது ஆகாசம் எதற்கு உபமானமாகிறதோ அதை ககன உபமா என்கிறோம். அவ்வாறே ஆத்மதர்மங்களும். ஞானத்திற்கு விசேஷணம் தரப்படுகிறது. அதாவது அக்னியில் சூடுபோலும். சூரியனில் பிரகாசம்போலும் எந்த ஞானஞேய தர்மம் அதாவது ஆத்மாவைக்காட்டிலும் அபின்னமானது. அந்த ஞேய அபின்ன அதாவது ஞேய ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறாகாத ஆகாசம் போன்ற ஞானத்தால் எவன் ஆகாச உபமகர்மத்தை எப்பொழுதும் நன்றாக அறிகின்றானோ அப்படிப்பட்ட நாராயணன் எனப்படும் ஈஸ்வரனாகும். அந்த த்விபதாம்வர இரண்டு பதங்களால் உபலக்ஷித புருஷர்களில் மிக ஸ்ரேஷ்ட அதாவது பிரதான புருஷோத்தமனை வந்தனம் செய்கின்றேன்.
उपदेष्टृनमस्कारमुखेन ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वदर्शनमिह प्रकरणे प्रतिपिपादयिषितं प्रतिपक्षप्रतिषेधद्वारेण प्रतिज्ञातं भवति ॥ १ ॥
(ச.பா) உபதேசம் செய்தவரை நமஸ்காரம் செய்வதால் ஞானஞேய, ஞாத்ரு பேதமற்ற பரமார்த்த தத்துவதர்சனம் இந்த பிரகரணத்தில் பிரதிபாதிக்கப்பட்டது பிரதிபக்ஷத்தை நிஷேதம் செய்வதின் வாயிலாய் பிரதிபாதனம் செய்யப்பட்டதாகிறது. (அறியப்பட வேண்டியதாகிறது.)
अधुना अद्वैतदर्शनयोगस्य नमस्कारः तत्स्तुतये —
(ச.பா) (அ.கை) இப்பொழுது அத்வைத தர்சனயோகத்தை ஸ்துதிப்பதின் பொருட்டு நமஸ்காரம் செய்யப்படுகிறது.
अस्पर्शयोगो वै नाम सर्वसत्त्वसुखो हितः ।
अविवादोऽविरुद्धश्च देशितस्तं नमाम्यहम् ॥ २ ॥
कारिका अन्वयः - अस्पर्श योगो नाम वै सर्वसत्त्व सुखः हितः अविवादः अविरुद्धः च देशितः तम् अहं नमामि ।
காரிகா அர்த்தம் - எல்லா பிராணிகளுக்கும் (ஜீவர்களுக்கும்) சுகத்தை, அளிப்பதும் ஹிதத்தை உண்டுபண்ணுவதும், விவாதத்திற்கு உரியதற்றதும், விரோதம் அற்றதான அஸ்பர்சயோகம் உபதேசம் செய்யப்பட்டது. அதை நமஸ்கரிக்கின்றேன்.
स्पर्शनं स्पर्शः सम्बन्धो न विद्यते यस्य योगस्य केनचित्कदाचिदपि, सः अस्पर्शयोगः ब्रह्मस्वभाव एव वै नामेति ; ब्रह्मविदामस्पर्शयोग इत्येवं प्रसिद्ध इत्यर्थः । स च सर्वसत्त्वसुखो भवति । कश्चिदत्यन्तसुखसाधनविशिष्टोऽपि दुःखस्वरूपः, यथा तपः । अयं तु न तथा । किं तर्हि ? सर्वसत्त्वानां सुखः ।
(ச.பா) எந்த யோகத்திற்கு எதனுடனும் எப்பொழுதும் ஸ்பர்சம் அதாவது சம்பந்தம் இல்லையோ அதை அஸ்பர்சயோகம் என்கிறோம். அது பிரஹ்ம ஸ்வபாவம், वै (வை) नाम (நாம) இந்த பதங்களின் தாத்பர்யம் என்னவெனில் “பிரஹ்ம வேத்தாக்களின் அஸ்பர்சயோகம்” என்ற நாமம் மிகப்பிரசித்தமானது. மேலும் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பது. மற்ற விஷயங்கள் மிகவும் சுக சாதனத்தோடு கூடியதாய் இருந்தாலும் துக்கரூபமே ஆகிறது எவ்வாறு தவமோ அவ்வாறு இது அவ்வாறு அல்ல. ஆனால் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பதாகும்.
तथा इह भवति कश्चिद्विषयोपभोगः सुखो न हितः ; अयं तु सुखो हितश्च, नित्यमप्रचलितस्वभावत्वात् । किं च अविवादः, विरुद्धं वदनं विवादः पक्षप्रतिपक्षपरिग्रहेण यस्मिन्न विद्यते सः अविवादः । कस्मात् ? यतः अविरुद्धश्च ; य ईदृशो योगः देशितः उपदिष्टः शास्त्रेण, तं नमाम्यहं प्रणमामीत्यर्थः ॥ २ ॥
(ச.பா) அவ்வாறே இங்கு எந்த ஒரு விஷயபோகமும் சுகத்தைத் தருவதாய் இருந்தாலும் ஹிதத்தைத்தராது. ஆனால் இந்த சுக ஹிதமோ நித்தியமானது. மாறுபடும் சுவபாவம் அற்றது. இது விவாதமற்றது. இங்கு பக்ஷம், பிரதிபக்ஷம் இவைகளால் விருத்தமாக கூறி விவாதம் செய்யமுடியாது. ஆகையால் இது விவாதமற்றது. எதனால் இவ்வாறு இருக்கிறது? எனில் எல்லாவற்றையும் விட அவிருத்தமானது. எந்த யோகசாஸ்திரத்தில் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளதோ அதை நமஸ்கரிக்கிறேன்.
कथं द्वैतिनः परस्परं विरुध्यन्त इति, उच्यते —
(ச.பா) (அ.கை) எவ்வாறு துவைதவாதிகளுக்குள் பரஸ்பரம் விரோதம் இருக்கிறது? எனில் கூறுகிறார்.
भूतस्य जातिमिच्छन्ति वादिनः केचिदेव हि ।
अभूतस्यापरे धीरा विवदन्तः परस्परम् ॥ ३ ॥
कारिका अन्वयः - केचिदेव वादिनः हि भूतस्य जातिम् इच्छन्ति अपरेधीराः अभूतस्य जातिमिच्छन्ति परस्परं विवदन्तः (वर्तन्ते)।
காரிகா அர்த்தம் - இதில் சில வாதிகள் உற்பத்தி அற்றசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள். வேறு சிலவாதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் வாதித்துக் கொண்டு அசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள்.
भूतस्य विद्यमानस्य वस्तुनः जातिम् उत्पत्तिम् इच्छन्ति वादिनः केचिदेव हि साङ्ख्याः ; न सर्व एव द्वैतिनः । यस्मात् अभूतस्य अविद्यमानस्य अपरे वैशेषिका नैयायिकाश्च धीराः धीमन्तः, प्राज्ञाभिमानिन इत्यर्थः । विवदन्तः विरुद्धं वदन्तो हि अन्योन्यमिच्छन्ति जेतुमित्यभिप्रायः ॥ ३ ॥
(ச.பா) சில வாதிகளோ எனில் இங்கு சாங்கியர்கள் மாத்திரமே. மற்றவாதிகள் அல்ல என்பது “ஏவ” காரத்தில் கூறப்பட்டது. இருக்கக்கூடிய வஸ்துவிற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். மற்றவைசேஷிக, நையாயிகர்களான புத்திசாலிகள், இவர்கள் புத்திதிறனிலேயே பற்றுடையவர்கள். இல்லாததான (வஸ்துவிற்கு) உற்பத்தியை விரும்புகின்றனர். இவ்வாறு ஒருவருக்கொருவர் ஜயிக்க விரும்பிவாதம் புரிபவர்களாய் உள்ளனர்.
तैरेवं विरुद्धवदनेन अन्योन्यपक्षप्रतिषेधं कुर्वद्भिः किं ख्यापितं भवतीति, उच्यते —
(ச.பா) (அ.கை) பரஸ்பரம் விவாதம் செய்து கொண்டு ஒருவர் மற்றொருவருடைய பக்ஷத்தை கண்டனம் செய்துகொண்டிருக்கும் அந்தவாதிகளின் மூலமாய் எந்த சித்தாந்தம் பிரகாசப்படுத்த முடியும். அதைக் கூறுகிறார்.
भूतं न जायते किञ्चिदभूतं नैव जायते ।
विवदन्तोऽद्वया ह्येवमजातिं ख्यापयन्ति ते ॥ ४ ॥
कारिका अन्वयः - भूतं किञ्चित् न जायते, अभूतं नैव जायते एवं विवदन्तः ते द्वयाः अजातिं ख्यापयन्ति ।
காரிகா அர்த்தம் - சில மதத்தவர்கள் “ஒரு வஸ்துவும் உத்பத்தி யாவதில்லை” மேலும் சிலர் அத்வைத வஸ்துவிற்கு ஜன்மமில்லை என்று இவ்வாறு பரஸ்பரம் விவாதம் செய்யும் வாதிகள் அஜாதி அதாவது அஜாதவாதத்தையே விளக்குகிறார்கள்.
भूतं विद्यमानं वस्तु न जायते किञ्चिद्विद्यमानत्वादेव आत्मवत् इत्येवं वदन् असद्वादी साङ्ख्यपक्षं प्रतिषेधति सज्जन्म । तथा अभूतम् अविद्यमानम् अविद्यमानत्वान्नैव जायते शशविषाणवत् इत्येवं वदन्साङ्ख्योऽपि असद्वादिपक्षमसज्जन्म प्रतिषेधति । विवदन्तः विरुद्धं वदन्तः अद्वयाः अद्वैतिनो ह्येते अन्योन्यस्य पक्षौ सदसतोर्जन्मनी प्रतिषेधन्तः अजातिम् अनुत्पत्तिमर्थात्ख्यापयन्ति प्रकाशयन्ति ते ॥ ४ ॥
(ச.பா) இருக்கும் வஸ்து எப்பொழுதும் சிறிதும் உண்டாவதில்லை. இது ஆன்மா போல் இருக்கும் வஸ்து, ஆதலால் அது மறுபடியும் உண்டாவதில்லை என்று அசத்வாதிகள் சாங்கியர்களின் கொள்கையை கண்டிக்கிறார்கள். அவ்வாறே இல்லாத வஸ்து ஒருபோதும் உண்டாவது இல்லை. முயல்கொம்பு போல் இல்லாத வஸ்து ஒரு நாளும் எந்நிலையிலும் உண்டாவது இல்லை என சாங்கியர்கள், அஸத்வாதியின் கொள்கையை நிராகரிக்கின்றனர். இம்மாதிரி ஸத்தாகவும் அஸத்தாகவும் உள்ள வஸ்துவைக்காட்டிலும் வேறு ஒரு வஸ்து இன்மையால் உண்மையில் உத்பத்தி இல்லை என்று வாதிட்டுக் கொள்கின்றனர். அந்த த்வைதிகள் (பிரஹ்மத்தின்) உத்பத்தி இன்மையை வெளிப்படுத்தி தெளிவு கொள்கின்றனர்.
ख्याप्यमानामजातिं तैरनुमोदामहे वयम् ।
विवदामो न तैः सार्धमविवादं निबोधत ॥ ५ ॥
कारिका अन्वयः - तै ख्याप्यमानाम् अजातिं वयम् अनुमोदामहे तैः सार्धं न विवदामः (हे शिष्याः) अविवादं निबोधत
காரிகா அர்த்தம் - அவர்கள் மூலமாய் வெளிப்பட்ட அஜாதியை நாமும் ஒப்புக்கொள்கிறோம். நாம் அவர்களுடன் விவாதம் செய்வதில்லை. ஆகையால் அந்த விவாதமற்றதை (பரமார்த்த தரிசனத்தை) நன்றாக அறிந்துகொள்.
तैरेवं ख्यप्यमानामजातिम् एवमस्तु इति अनुमोदामहे केवलम् , न तैः सार्धं विवदामः पक्षप्रतिपक्षपरिग्रहेण ; यथा ते अन्योन्यमित्यभिप्रायः । अतः तम् अविवादं विवादरहितं परमार्थदर्शनमनुज्ञातमस्माभिः निबोधत हे शिष्याः ॥ ५ ॥
(ச.பா) அந்த வாதிகளால் இம்மாதிரி தங்கள் வாதத்தால் நிலை நிறுத்தப்படும் (பிரஹ்மத்தின்) உற்பத்தியின்மையை அல்லது பிறப்பின்மையை அத்வைத வாதிகளான நாம் அது அவ்வாறே இருக்கட்டும் என்று அங்கீகாரம் செய்கின்றோம். அவர்களுடன் பிரதி பக்ஷியான வாதி சொன்னான் என்பதற்காக, நாம் வீண்வாதம் செய்வதில்லை என்பதனை ஹே சீடர்களே விவாதமற்றதாக, விவாதமற்ற பரமார்த்த தர்சனமாக அறிவீர்களாக.
अजातस्यैव धर्मस्य जातिमिच्छन्ति वादिनः ।
अजातो ह्यमृतो धर्मो मर्त्यतां कथमेष्यति ॥ ६ ॥
कारिका अन्वयः - वादिनः अजातस्यैव धर्मस्य जातिम् इच्छन्ति अजातः अमृतः कथं मर्त्यताम् एष्यति ।
காரிகா அர்த்தம் - சில வாதிகள் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதான ஆத்ம தத்துவத்திற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். உண்மையாகவே அவர்கள் முறைப்படி உண்டாகுமேயானால் அது மரண தர்மத்தை அடைந்தே தீரும் ஸ்வபாவமாகவே பிறப்பற்றதாயும், மரணமற்றதாயும் உள்ள ஆத்ம ஸ்வரூபமானது எவ்வாறு மரண ஸ்வபாவ முடையதாக ஆகும்.
सदसद्वादिनः सर्वे । अयं तु पुरस्तात्कृतभाष्यः श्लोकः ॥
(ச.பா) (அ.கை) இங்குவாதிகள் என்றால் சத்வாதி, அசத்வாதி இருவரையும் குறிக்கும் என்பது அபிப்பிராயம். இந்த ஸ்லோகத்தின் பாஷ்யம் முன்பே செய்யப்பட்டதாகும்.
न भवत्यमृतं मर्त्यं न मर्त्यममृतं तथा ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ ७ ॥
कारिका अन्वयः - यथा अमृतं मर्त्यं न भवति तथा मर्त्यम् अमृतं न भवति प्रकृतेः अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - மரணதர்மமற்ற வஸ்து ஒருநாளும் மரணமுடையதாகாது. மரணமுடையது ஒருநாளும் மரண தர்மமற்றதாக ஆகாது. ஏன்எனில் ஒன்றின் சுவபாவம்மாறி ஒன்றின் தர்மமாகாது என்பதாகும்.
स्वभावेनामृतो यस्य धर्मो गच्छति मर्त्यतात् ।
कृतकेनामृतस्तस्य कथं स्थास्यति निश्चलः ॥ ८ ॥
कारिका अन्वयः - यस्य स्वभावेन अमृतः भावः मर्त्यतां गच्छति कृतकेन अमृतस्य निश्चलः कथं स्थास्यति ।
காரிகா அர்த்தம் - எவருடைய மதத்தில் ஸ்வபாவமாகவே மரண தர்மமற்றது மரணமுடையதாக ஆகும் என்ற அவர்களுடைய சித்தாந்தப்படி ஜன்மம் உடையதாய் இருப்பதால் அந்த அம்ருத பதார்த்தம் எப்படி நிச்சலமானதாக ஆகும்.
उक्तार्थानां श्लोकानामिहोपन्यासः परवादिपक्षाणामन्योन्यविरोधख्यापितानुत्पत्त्यामोदनप्रदर्शनार्थः ॥
(ச.பா) - எதனுடைய அர்த்தம் முன்பே கூறப்பட்டதோ அவ்வாறு இப்பொழுது கூறப்பட்ட முன்று ஸ்லோகங்களின் தாத்பர்யம் என்னவெனில் இங்கு விபக்ஷிவாதிகளின் பக்ஷங்களில் பரஸ்பரம் விரோதத்தை தெரியப்படுத்தி அஜாத வாதத்தை ஒப்புக்கொள்வதின் பொருட்டு ஆகும்.
यस्माल्लौकिक्यपि प्रकृतिर्न विपर्येति, कासावित्याह —
(ச.பா) (அ.கை) - பிரக்ருதிக்கு எந்நிலையிலும் மாறுபாடு கிடையாது என்று கூறப்பட்டது இக்காரிகையில் பிரகிருதி சப்தத்திற்கு பொருள் கூறுகிறார்.
सांसिद्धिकी स्वाभाविकी सहजा अकृता च या ।
प्रकृतिः सेति विज्ञेया स्वभावं न जहाति या ॥ ९ ॥
कारिका अन्वयः - सांसिद्धिकी स्वाभाविकी सहजा च अकृता च या स्वभावं न जहाति सा प्रकृतिः विज्ञेया ।
காரிகா அர்த்தம் - எந்த உத்தம சித்திவாயிலாய் அடைந்ததும் ஸ்வபாவ சித்தமானதும், சஹஜமானதும் மேலும் அக்ருதா (செய்யப்படாதது) வானதுமாய் இருக்கிறதும், அவ்வாறே தன்னுடைய ஸ்வபாவத்தை பரித்தியாகம் செய்யாமலும் இருக்கிறதோ அது பிரகிருதி என்று அறியவேண்டும்.
सम्यक्सिद्धिः संसिद्धिः, तत्र भवा सांसिद्धिकी ; यथा योगिनां सिद्धानामणिमाद्यैश्वर्यप्राप्तिः प्रकृतिः, सा भूतभविष्यत्कालयोरपि योगिनां न विपर्येति । तथैव सा । स्वाभाविकी द्रव्यस्वभावत एव सिद्धा, यथा अग्न्यादीनामुष्णप्रकाशादिलक्षणा । सापि न कालान्तरे व्यभिचरति देशान्तरे वा, तथा सहजा आत्मना सहैव जाता, यथा पक्ष्यादीनामाकाशगमनादिलक्षणा ।
(ச.பா) - உத்தம சித்தி என்பது சம்சித்தி (संसिद्धि) யாகும், அதை உடையவன் “सांसिद्धिकी” (சாம்சித்திகி) எனப்படுகிறான். இவ்வாறு சித்தி அடைந்த யோகிகளுக்கு அணிமாதி ஐஸ்வர்யங்களின் அடைவு அவர்களுக்கு ஸ்வபாவமாகும். (பிரக்ருதியாகும்). அந்த யோகிகளுக்கு பூத (இறந்த) பவிஷ்யத் (இனிவரும்) காலங்களிலும் மாறுபாடு (விபர்யயம்) ஆகாது. எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே இருக்கும். அவ்வாறே ஸ்வபாவ வஸ்துவிற்கு ஸ்வபாவமாகவே சித்திக்கிறது, எவ்வாறு அக்னி முதலியவைகளுக்கு உஷ்ணத்தன்மையும், பிரகாசமும் பிரகிருதி (ஸ்வபாவம்) ஆகிறதோ அவ்வாறு. அதற்கு காலாந்தரத்திலோ, தேசாந்தரத்திலோ மாறுபாடு (வியபிசாரம்) உண்டாகாது. அவ்வாறே “सहजा” (சஹஜா) தன்னுடனேயே உத்பத்தி ஆகிறது எவ்வாறு பறவை முதலியவைகளுக்கு ஆகாசத்தில் செல்லுதல் முதலியவை ஸ்வபாவமாகிறதோ அவ்வாறு.
अन्यापि या काचित् अकृता केनचिन्न कृता, यथा अपां निम्नदेशगमनादिलक्षणा । अन्यापि या काचित्स्वभावं न जहाति, सा सर्वा प्रकृतिरिति विज्ञेया लोके । मिथ्याकल्पितेषु लौकिकेष्वपि वस्तुषु प्रकृतिर्नान्यथा भवति ; किमुत अजस्वभावेषु परमार्थवस्तुषु ? अमृतत्वलक्षणा प्रकृतिर्नान्यथा भवेदित्यभिप्रायः ॥ ९ ॥
(ச.பா) மற்றவர்களால் செய்யப்படாத (अकृता) அதாவது எவ்வாறு தண்ணீருக்கு பள்ளத்தை நோக்கிச் செல்லல் என்பது அதன் இயற்கையோ, அது போன்றதும் மேலும் தம்தம் ஸ்வபாவத்தை விடுவதில்லையோ அவையாவும் அந்த ஸ்வபாவமானது பிரகிருதி என்று உலகில் அறியத்தக்கதாகும் பொய்யாகக் கல்பிக்கப்பட்ட லௌகிகமான வஸ்துக்களின் பிரகிருதியே (இயற்கையே) மாறுபடுவதில்லை. அவ்வாறு இருக்க பிறப்பற்றபரமார்த்த உண்மையின் அம்ருதத் தன்மை எவ்வாறு மாறுபடும்? என்பது அபிப்பிராயம். மாறுபடாது என்பது கருத்து.
किंविषया पुनः सा प्रकृतिः, यस्या अन्यथाभावो वादिभिः कल्प्यते ? कल्पनायां वा को दोष इत्याह-
(ச.பா) (அ.கை) வாதிகள் எந்த அன்யதா (வேறு) பாவத்தைக் கல்பனை செய்கிறார்களோ அந்த பிரகிருதியின் விஷயம் என்ன? மேலும் அந்த வாதிகளின் கல்பனையில் என்ன தோஷம்? என்பதைக் கூறுகிறார்-
जरामरणनिर्मुक्ताः सर्वे धर्माः स्वभावतः ।
जरामरणमिच्छन्तश्च्यवन्ते तन्मनीषया ॥ १० ॥
कारिका अन्वयः - (आत्मनः) सर्वे धर्माः स्वभावतः जरामरणनिर्मुक्ताः तन्मनीषया जरामरणमिच्छन्तश्च्यवन्ते ।
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவகமாகவே ஜராமரணம் அற்றவர்கள். அவர்களின் ஜரா, மரணம் இவற்றைஎடுத்துக் கொள்ளுபவர்கள் இவ்வாறு விசாரம் செய்வதால் ஸ்வபாவத்திலிருந்து நழுவுகிறார்கள்.
जरामरणनिर्मुक्ताः जरामरणादिसर्वविक्रियावर्जिता इत्यर्थः । के ? सर्वे धर्माः सर्वे आत्मान इत्येतत् । स्वभावतः प्रकृतित एव । अत एवंस्वभावाः सन्तो धर्मा जरामरणमिच्छन्त इवेच्छन्तः रज्ज्वामिव सर्पमात्मनि कल्पयन्तः च्यवन्ते, स्वभावतश्चलन्तीत्यर्थः । तन्मनीषया जरामरणचिन्तया तद्भावभावितत्वदोषेणेत्यर्थः ॥ १० ॥
(ச.பா) “जरामरणनिर्मुक्ताः” (ஜராமரண நிர்முக்தா: ) என்றால் ஜரை, மரணம் முதலிய எல்லா விகாரங்களும் அற்றது. யார்? “सर्वेधर्माः” (சர்வேதர்மா:) அதாவது எல்லா ஜீவாத்மாவும் ஸ்வபாவமாக பிரகிருதியிலிருந்தே ஆகும். அந்தப்ரகிருதி எந்த மாற்றமும் அற்றது அந்த ஜராமரண சிந்தையால், அந்த ஜராமரணாதி பாவங்களை பாவித்ததினால் உண்டான தோஷத்தால் ஜராமரணங்களை விரும்புபவர்களாகி ரஜ்ஜு சர்ப்பம் போல் ஆன்மாவில் ஜராமரணங்களைக் கற்பித்து நழுவி விடுகிறார்கள். அதாவது தங்களுடைய இயற்கையான தன்மையிலிருந்து நழுவி விடுகிறார்கள்.
कथं सज्जातिवादिभिः साङ्ख्यैरनुपपन्नमुच्यते इति, आह वैशेषिकः —
(ச.பா) (அ.கை) சஜாதியவாதிகளாகிய சாங்கியர்களால் சொல்லப்பட்டது எவ்வாறு அசங்கதமாகும்? என்பதை வைசேஷிக மதவாதிகள் கூறுகின்றனர்-
कारणं यस्य वै कार्यं कारणं तस्य जायते ।
जायमानं कथमजं भिन्नं नित्यं कथं च तत् ॥ ११ ॥
कारिका अन्वयः - यस्य वै कारणं कार्यं तस्य कारणं कार्यं जायते जायमानं कथम् अजं तत् भिन्नं कथं नित्यं भवेत् ।
காரிகா அர்த்தம் - சாங்கியர்கள் மதத்தில் காரணமே காரியம். அவர்களுடைய சித்தாந்தப்படி காரணம் உத்பத்தியாகிறது. ஆனால் எப்பொழுது ஜன்மம் எடுத்ததோ அப்பொழுது அது எவ்வாறு அஜன்மாவாகும். மேலும் பின்னமானதாய் இருப்பதாலும் எவ்வாறு நித்தியமாகும்.
कारणं मृद्वदुपादानलक्षणं यस्य वादिनः वै कार्यम् , कारणमेव कार्याकारेण परिणमते यस्य वादिन इत्यर्थः । तस्य अजमेव सत् प्रधानादि कारणं महदादिकार्यरूपेण जायत इत्यर्थः । महदाद्याकारेण चेज्जायमानं प्रधानम् , कथमजमुच्यते तैः ? विप्रतिषिद्धं चेदम् — जायते अजं चेति ।
(ச.பா) - சில வாதிகளின் மதத்தில் ம்ருத் (மண்) போல் உபாதான காரணமே காரியமாகும். அதாவது அவர்கள் மதப்படி காரணமே காரியரூபமாய் மாறுகிறது (பரிணமிக்கிறது). அந்த சித்தாந்தப்படி பிரதானம் முதலிய காரணங்கள் அஜன்மாவாக இருந்தாலும் மஹத் முதலிய காரியரூபமாய் உண்டாகிறது என்பது இதன் தாத்பர்யம். இவ்வாறு பிரதானம் மஹதாதி ரூபமாய் உண்டாவதால் அதை எவ்வாறு அஜன்மா என்று கூறமுடியும். உத்பன்னமாகிறது என்றும், அஜன்மா என்றும் கூறுவது பரஸ்பரம் விருத்தமாகும்.
नित्यं च तैरुच्यते । प्रधानं भिन्नं विदीर्णम् ; स्फुटितमेकदेशेन सत् कथं नित्यं भवेदित्यर्थः । न हि सावयवं घटादि एकदेशेन स्फुटनधर्मि नित्यं दृष्टं लोके इत्यर्थः । विदीर्णं च स्यादेकदेशेनाजं नित्यं चेत्येतत् विप्रतिषिद्धं तैरभिधीयत इत्यभिप्रायः ॥ ११ ॥
(ச.பா) இதைத் தவிர பிரதானத்தை நித்தியம் என்று கூறுகிறார்கள் ஆனால் அது பின்னமானதும், ஒரு சமயத்தில் தோன்றுவதாயும் இருந்து கொண்டு அது எவ்வாறு நித்தியமாகும்? தாத்பர்யம் என்னவெனில் கடம் முதலியவைகள் அவயவங்களோடு கூடிய பதார்த்தங்கள் ஏக தேசமாய் இருந்து கொண்டு நித்தியமாய் இருப்பதாய் உலகில் எங்கும் காணப்படவில்லை. அது ஒரு சமயம் தோன்றிக்கொண்டு அஜமாயும் நித்தியமாயும் இருக்கிறது என்று கூறுவது விருத்தமாகும் என்பது அபிப்பிராயம்.
उक्तस्यैवार्थस्य स्पष्टीकरणार्थमाह —
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட அபிப்பிராயத்தை ஸ்பஷ்ட்டமாக்குவதற்காகக் கூறுகிறார்-
कारणाद्यद्यनन्यत्वमतः कार्यमजं तव ।
जायमानाद्धि वै कार्यात्कारणं ते कथं ध्रुवम् ॥ १२ ॥
कारिका अन्वयः - कारणात् यदि यत् अनन्यत्वं ततः कार्यं अजम् (इति प्राप्तम्) यदि जायमानात् हि कार्यात् कारणं ध्रुवं ते कथं भवति ।
காரிகா அர்த்தம் - காரணத்தைக்காட்டிலும் காரியம் அபின்னம் என்றால் உன் மதத்தில் காரியமும் அஜன்மாவாகும். அவ்வாறு ஆனால் உத்பன்னமாகும் காரியத்துடன் அபின்னம் என்றால் காரணம் எவ்வாறு நிச்சலமாகும்?
कारणात् अजात् कार्यस्य यदि अनन्यत्वमिष्टं त्वया, ततः कार्यमप्यजमिति प्राप्तम् । इदं चान्यद्विप्रतिषिद्धं कार्यमजं चेति तव । किञ्चान्यत् , कार्यकारणयोरनन्यत्वे जायमानाद्धि वै कार्यात् कारणम् अनन्यन्नित्यं ध्रुवं च ते कथं भवेत् ? न हि कुक्कुट्या एकदेशः पच्यते, एकदेशः प्रसवाय कल्प्यते ॥ १२ ॥
(ச.பா) அஜன்மா காரணத்திற்கு காரியம் அனன்யத் தன்மை உனக்கு இஷ்டம் என்றால் காரியமும் அஜன்மா என்று சித்திக்கிறது. நீ காரியம் என்றும் அஜன்மா என்றும் கூறுவது ஒன்றுக்கொன்று முரண்படுகிறது (விரோதமாகிறது). மேலும் காரியமும், காரணமும் அனன்யமாய் இருந்தால் உத்பத்தி தன்மை உடைய காரியத்திற்கு அபின்னமான அதன் காரணம் நித்யமானதாயும், நிச்சலமற்றதாயும் எவ்வாறு ஆக முடியும்? அவ்வாறு ஒரு நாளும் ஏற்பட முடியாது. எவ்வாறு எனில் ஒரு கோழியின் பாதிபாகம் சமைப்பதற்கும், பாதிபாகம் முட்டை இடுவதற்கும் என்று கல்பிக்க முடியாது.
किञ्चान्यत्-
(ச.பா) (அ.கை) இதைத்தவிர மேலும் -
अजाद्वै जायते यस्य दृष्टान्तस्तस्य नास्ति वै ।
जाताच्च जायमानस्य न व्यवस्था प्रसज्यते ॥ १३ ॥
कारिका अन्वयः - यस्य अजाद्वै जायते तस्य दृष्टान्तः नास्ति वै जातात् जायमानस्य व्यवस्था न प्रसज्यते ।
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் அஜன்ம வஸ்துவிலிருந்து எதாவது காரியம் உத்பத்தியானால் அதனிடம் நிச்சயமாக அதற்கு ஒரு திருஷ்டாந்தமும் இல்லை. மேலும் உத்பத்தியாகும் பதார்த்தங்களில் இருந்தே காரியத்தின் உத்பத்தி என்று எடுத்துக் கொண்டால் அநவஸ்தா தோஷம் ஏறப்டும்.
यत् अजात् अनुत्पन्नाद्वस्तुनः जायते यस्य वादिनः कार्यम् , दृष्टान्तः तस्य नास्ति वै ; दृष्टान्ताभावे अर्थादजान्न किञ्चिज्जायते इति सिद्धं भवतीत्यर्थः । यदा पुनः जातात् जायमानस्य वस्तुनः अभ्युपगमः, तदपि अन्यस्माज्जातात्तदप्यन्यस्मादिति न व्यवस्था प्रसज्यते । अनवस्था स्यादित्यर्थः ॥ १३ ॥
(ச.பா) எந்த வாதிக்கு உத்பத்தி ஆகாத வஸ்துவினின்று காரியம் உண்டாகிறதோ அந்தவாதியின் அவ்வாறு உண்டான காரியத்திற்கு சுட்டிக்காட்டத்தக்க திருஷ்ட்டாந்தம் இல்லையன்றோ! இவ்வாறு திருஷ்டாந்தம் இல்லாததால் அஜம் எனப்படும் பிரதானத்தினின்று ஏதும் உண்டாகவில்லை என்று சித்திக்கிறது. ஏனெனில்? அது பிறப்பற்றது என்பதால் அவ்வாறு சித்திக்கிறது. அதனால் பிறந்ததினின்றே மற்றொரு காரியம் பிறக்கிறது என்று கூறுவாயேயானால் அதுவும் அபத்தமாகும். உண்டான காரியத்தினின்று மற்றொரு (உண்டாகின்ற) காரியத்திற்குத் தோற்றம் எனில் அது ஒரு காரியத்தின்று மற்றொரு காரியத்திற்குத் தோற்றம், அக்காரியத்தினின்று பிரிதொன்று என்றுக் கூறிக்கொண்டே போனால் முடிவு என்பதே ஏற்படாது. இதற்கு முடிவு இல்லாததால் இது அநவஸ்தா தோஷமாகும் என்று சாங்கியர்களை நிராகரித்தார்.
(ச.பா) (அ.கை) “यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्” (யத்ர த்வஸ்ய சர்வமாத்மைவாபூத் = எந்த அவஸ்தையில் இந்த திருஷ்டியில் எல்லாமே ஆத்மாவாகிறது) இந்த சுருதியானது உண்மையில் துவைதத்தின் அபாவத்தைக் கூறியதோ அதை ஆஸ்ரயித்துக் கூறுகிறார்-
हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते ॥ १४ ॥
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य आदिः हेतुः तैः हेतोः फलस्य च अनादिः कथम् उपवर्ण्यते ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்கு காரணம் பலமோ அவ்வாறே பலத்திற்குக் காரணம் ஹேதுவோ அவர்கள் எவ்வாறு ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதித்துவத்தைக் கூறமுடியும்.
हेतोः धर्मादेः आदिः कारणं देहादिसङ्घातः फलं येषां वादिनाम् ; तथा आदिः कारणं हेतुर्धर्मादिः फलस्य च देहादिसङ्घातस्य ; एवं हेतुफलयोरितरेतरकार्यकारणत्वेन आदिमत्त्वं ब्रुवद्भिः एवं हेतोः फलस्य च अनादित्वं कथं तैरुपवर्ण्यते विप्रतिषिद्धमित्यर्थः । न हि नित्यस्य कूटस्थस्यात्मनो हेतुफलात्मकता सम्भवति ॥
(ச.பா) எந்த த்வைதவாதிகளுக்கு தர்ம அதர்மங்களுக்குக் காரணம் பஞ்சபூதங்களின் சேர்க்கைகளான சரீரம் முதலானவைகளாகும். அவ்வாறே சரீரம் முதலான பஞ்ச பூதங்களுக்கு (அவைகளைப் பெற) காரணம் தர்மா தர்மங்களே. இதன்படி மனுஷ்யாதி சரீரங்களை அடைவதற்குக் காரணம் தர்மாதர்மங்கள், அந்த தர்மாதர்மங்களை ஈட்டுவதற்குக் காரணம் சரீரம் முதலானவை, எனவே இவ்விரண்டும் ஒன்றே என்று காரணமாயும், காரியமாயும் கொண்டுள்ளது என்று, ஓன்றை மற்றொன்றிற்கு ஆரம்பமாகக் கூறும் வாதிகளால், அந்தக்காரண, காரியங்களுக்கு ஆரம்பம் இன்மை (अनादिमत्वम्) எவ்வாறு நிரூபிக்கமுடியும். ஆகவே அது முரண்பாடாகும். எனவே அவர்களால் காரணத்திற்கும், பலத்திற்கும் ஆரம்பம் இன்மை எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது. நித்தியமான கூடஸ்தனுக்கு ஹேது பலாத்மக பாவம் ஒரு போதும் சம்பவிப்பது இல்லை.
कथं तैर्विरुद्धमभ्युपगम्यत इति, उच्यते —
(ச.பா) (அ.கை) அவர்கள் எவ்வாறு விருத்தகொள்கையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறார்-
हेतोरादिः फलं येषामादिर्हेतुः फलस्य च ।
तथा जन्म भवेत्तेषां पुत्राज्जन्म पितुर्यथा ॥ १५ ॥
कारिका अन्वयः - येषां हेतोः आदिः फलं फलस्य च आदिः हेतुः तेषां यथा पुत्रात् पितुः जन्म तथा जन्म भवेत् ॥
காரிகா அர்த்தம் - எவர்களுடைய மதத்தில் ஹேதுவிற்குக் காரணம் பலமும். பலத்திற்குக் காரணம் ஹேதுவாகிறதோ, அவற்றின் உத்பத்தி எவ்வாறு புத்திரனிடமிருந்து பிதாவின் ஜன்மம் உண்டாகுமோ அவ்வாறு ஆகும்.
हेतुजन्यादेव फलात् हेतोर्जन्माभ्युपगच्छतां तेषामीदृशो विरोध उक्तो भवति, यथा पुत्राज्जन्म पितुः ॥
(ச.பா) ஹேதுவிலிருந்து உத்பத்தியாகும் பலத்திலிருந்து ஹேது உத்பத்தி (ஜன்மம்) என்றகொள்கை உடையவர்கள் மதத்தில் உள்ள விரோதமானது புத்திரனிடத்திலிருந்து பிதாவிற்கு ஜன்மம் என்பது போல் ஆகும்.
यथोक्तो विरोधो न युक्तोऽभ्युपगन्तुमिति चेन्मन्यसे
(ச.பா) (அ.கை) பூர்வபக்ஷியான நீ ஸித்தாந்தியாகிய என்னால் உன்வாதத்தில் எடுத்துக் காட்டப்பட்ட முறைகேடு ஒப்புக்கொள்ள கூடியது அல்ல என்று கூறுவாயேயானால், மேலும் அதில் உள்ள முறைக் கேட்டைக் கூறுகிறேன் கேள் என்பதாகும்.
सम्भवे हेतुफलयोरेषितव्यः क्रमस्त्वया ।
युगपत्सम्भवे यस्मादसम्बन्धो विषाणवत् ॥ १६ ॥
कारिका अन्वयः - त्वया हेतुफलयोः सम्भवे क्रमः एषितव्यः यस्मात् युगपत्संभवे विषाणवत् असम्बन्धः भवेत् ।
காரிகா அர்த்தம் - வாதியாகிய நீ ஹேது, பலம் இவைகளின் உற்பத்தியில் கிரமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் இரண்டும் ஒன்றாய் உத்பத்தியாவதை ஒப்புக்கொண்டால் (பசுவினுடைய இடது, வலது) கொம்பு போல் சம்பந்த மற்றதாகிவிடும்.
सम्भवे उत्पत्तौ हेतुफलयोः क्रमः एषितव्यः अन्वेष्टव्यः त्वया — हेतुः पूर्वं पश्चात्फलं चेति । इतश्च युगपत्सम्भवे यस्माद्धेतुफलयोः कार्यकारणत्वेन असम्बन्धः, यथा युगपत्सम्भवतोः सव्येतरगोविषाणयोः ॥
(ச.பா) உன்னால் ஹேது, பலன் இவைகளுடைய அல்லது காரியகாரணங்களுடைய தோற்றத்தில் ஒரு முறையானது தேடத்தக்கது ஆகும். அதாவது ஹேது என்பது பலத்திற்கு முன்நிலையில் நிச்சயம் இருக்க வேண்டியது என்பது ஹேதுவின் பின் நிலையில் நிச்சயம் உண்டாக வேண்டியது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறு ஏற்காவிடில் ஹேது பலன்கள் ஒரே சமயத்தில் தோன்றுமேயானால் அவைபசுவின் கொம்பைப்போல் அதாவது இடது வலது பாகங்களில் தோன்றும் பசுவின் கொம்பைப்போல் காரண, காரிய சம்பந்த மற்றவைகளாகும். எனவே ஒரேசமயத்தில் தோன்றும் இரண்டிற்கும் காரியகாரணத்துவம் என்பது இல்லை. பசுவின் கொம்பு போல் என்றவ்யாப்தி ஏற்பட்டதால் காரிய, காரணங்களுக்குள் ஓர் கிரமம் வேண்டும் என்பது உறுதிப்பட்டதாயிற்று.
कथमसम्बन्ध इत्याह —
(ச.பா) (அ.கை) எவ்வாறு சமபந்தம் அற்றதாகிறது? என்பதைக் கூறுகிறார்-
फलादुत्पद्यमानः सन्न ते हेतुः प्रसिध्यति ।
अप्रसिद्धः कथं हेतुः फलमुत्पादयिष्यति ॥ १७ ॥
कारिका अन्वयः - ते हेतुः फलात् उत्पद्यमानः सत् न प्रसिध्यति अप्रसिद्धः फलं कथम् उत्पादयिष्यति ।
காரிகா அர்த்தம் - உன்னுடைய மதத்தில் ஹேதுவானது பலத்திலிருந்து உண்டானது என்றால் அது சித்தமாகாது. மேலும் சித்தமாகாத ஹேதுவிலிருந்து எவ்வாறு பலம் உத்பத்தியாகும்?
जन्यात्स्वतोऽलब्धात्मकात् फलात् उत्पद्यमानः सन् शशविषाणादेरिवासतो न हेतुः प्रसिध्यति जन्म न लभते । अलब्धात्मकः अप्रसिद्धः सन् शशविषाणादिकल्पः तव स कथं फलमुत्पादयिष्यति ? न हि इतरेतरापेक्षसिद्ध्योः शशविषाणकल्पयोः कार्यकारणभावेन सम्बन्धः क्वचिद्दृष्टः अन्यथा वेत्यभिप्रायः ॥ १७ ॥
(ச.பா) ஜன்யம் அதாவது எது ஸ்வத சித்தமில்லையோ அது சசவிஷாணம் (முயல்கொம்பு) போல் அசத் பலத்திலிருந்து உண்டாவதால் அதற்கு ஹேதுவே இல்லை அதாவது அதற்கு ஜன்மமே இல்லை. இவ்வாறு முயற்கொம்பிற்கு சமமாய் எதற்கு ஸ்வதः அடையப்பட வில்லையோ அது அப்பிரசித்த ஹேதுவாகும். ஆகையால் உம்முடைய மதத்தில் எவ்வாறு பலன் உண்டாகும்? ஒன்று மற்றொன்றின் அபேக்ஷயைால் சித்திப்பதும், அவ்வாறே முயற்கொம்பு போல் எப்பொழுதும் அசத்தாய் இருப்பதுமான பதார்த்தத்திற்கு காரியகாரண பாவத்தாலோ அல்லது வேறுவகையாகவோ சம்பந்தம் காணப்படவில்லை என்பது இதன் அபிப்பிராயம்.
यदि हेतोः फलात्सिद्धिः फलसिद्धिश्च हेतुतः ।
कतरत्पूर्वनिष्पन्नं यस्य सिद्धिरपेक्षया ॥ १८ ॥
कारिका अन्वयः- हेतोः फलात् सिद्धिः फलसिद्धिः च हेतु-तः (इति) यदि कतरत् पूर्व निष्पन्नम् यस्य अपेक्षया सिद्धिः स्यात् ।
காரிகா அர்த்தம் - உங்களுடைய மதத்தில் முதலில் ஹேது சித்திக்கிறது மேலும் ஹேதுவிலிருந்து பலம் சித்திக்கிறது என்றால் முதலில் உண்டானது யார்? எதை அபேக்ஷித்து மற்றொன்று ஆவிர்பவித்தது (உண்டானது).
असम्बन्धतादोषेणापाकृतेऽपि हेतुफलयोः कार्यकारणभावे, यदि हेतुफलयोरन्योन्यसिद्धिरभ्युपगम्यत एव त्वया, कतरत्पूर्वनिष्पन्नं हेतुफलयोः ? यस्य पश्चाद्भाविनः सिद्धिः स्यात्पूर्वसिद्धापेक्षया, तद्ब्रूहीत्यर्थः ॥
(ச.பா) ஹேது, பலம் இவைகளின் காரியகாரண பாவத்தின் அசம்பந்த தோஷத்தை நிராகரணம் செய்ததை அறிந்தும் நீ ஹேது, பலன் இவை ஒன்று மற்றொன்றினால் சித்திக்கிறது என்று கருதுவாயாகில் ஹேது, பலன் இவைகளில் எது முதலில் உண்டாயிற்று என்பதைக்கூறு. எதனுடைய பூர்வ சித்தியின் அபேக்ஷயைால் பின்னால் தோன்றுவதின் சித்தி எவ்வாறு கொள்ளப்பட்டது? என்பதைக்கூறு. என்பது இதன் தாத்பர்யம்.
अथ एतन्न शक्यते वक्तुमिति मन्यस
(ச.பா) (அ.கை) நீ அவ்வாறு கருதுவாயானால் அதை கூறுவதற்கு முடியாததாகும்.
अशक्तिरपरिज्ञानं क्रमकोपोऽथ वा पुनः ।
एवं हि सर्वथा बुद्धैरजातिः परिदीपिता ॥ १९ ॥
कारिका अन्वयः - अशक्तिः पुनः अपरिज्ञानम् अथवा क्रम कोपः एवं हि बुद्धैःअजातिः सर्वथा परिदीपिता ।
காரிகா அர்த்தம் - அது அசக்தி அக்ஞானமாகும். மேலும் அதனால் முன்பு கூறப்பட்ட க்ரமமும் விபர்யயமாகும். இவ்வாறு அந்த புத்திமான்கள் எப்பொழுதும் அஜாதி (பரமார்த்த தத்துவம்)யையே விளக்குகின்றார்கள் (பிரகாசம் செய்கின்றார்கள்)
सेयमशक्तिः अपरिज्ञानं तत्त्वाविवेकः, मूढतेत्यर्थः । अथ वा, योऽयं त्वयोक्तः क्रमः हेतोः फलस्य सिद्धिः फलाच्च हेतोः सिद्धिरिति इतरेतरानन्तर्यलक्षणः, तस्य कोपः विपर्यासोऽन्यथाभावः स्यादित्यभिप्रायः । एवं हेतुफलयोः कार्यकारणभावानुपपत्तेः अजातिः सर्वस्यानुत्पत्तिः परिदीपिता प्रकाशिता अन्योन्यपक्षदोषं ब्रुवद्भिर्वादिभिः बुद्धैः पण्डितैरित्यर्थः ॥ १९ ॥
(ச.பா) இந்த அசக்தி - அபரிக்ஞானம் - தத்தவத்தின் அவிவேகம் அதாவது மூடத்தன்மை. அல்லது எது மற்றொன்றின் முன்பின் ரூப கிரமம் உன்னால் கூறப்பட்டதோ, அதாவது ஹேதுவினால் பலசித்தி உண்டாகிறது. பலத்திலிருந்து ஹேது என்பது அதன்கோபம் அதாவது விபர்யாசம் - அன்யதாபாவம் (வேறுபாவம்) உண்டாகும் என்பது இதன் அபிப்பிராயம். இவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் காரியகாரண பாவம் அசம்பவமாதலால் ஒன்று மற்றொன்றின் பக்ஷத்தின் தோஷத்தைக் கூறுகின்ற பிரதிபக்ஷ புத்திமான்கள் எல்லாவற்றின் அஜாதி அதாவது உத்பத்தி இன்மையை தெளிவுபடுத்துகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)
(ச.பா) (பூர்வ) - நாங்கள் கூறியது ஹேது, பலத்தை பரஸ்பரம் காரியகாரண பாவமாகும். நீங்கள் அதன் சப்தமாத்திரத்தைப் பற்றிக்கொண்டு நீர்கூறும் ஏமாற்று வாக்கியங்கள் புத்திரனிடமிருந்து ஜன்மம், பசுவின்கொம்புகள் இவை முதலியவைகள் போல் சம்பந்தம் அற்றதாய் இருக்கிறது. நாங்கள் அசித்தமான ஹேதுவினால் பலத்தின் சித்தியையோ அல்லது அசித்தமான பலத்திலிருந்து ஹேதுவின் சித்தியையோ ஏற்றுக் கொள்வதில்லை. நாங்கள் பீஜாங்குரம் போல் கேவல அதனுடைய காரியகாரணத்தை ஒப்புக்கொள்கிறோம்.
अत्रोच्यते —
(ச.பா) (சித்தாந்தி) - இதைக் குறித்து நாங்கள் கூறுகிறோம்.
बीजाङ्कुराख्यो दृष्टान्तः सदा साध्यसमो हि सः ।
न हि साध्यसमो हेतुः सिद्धौ साध्यस्य युज्यते ॥ २० ॥
कारिका अन्वयः - यः बीजाङ्कुराख्य दृष्टान्तः सः सदा साध्यसमः हि साध्यसमः हेतुः साध्यस्य सिद्धौ न हि युज्यते ॥ २० ॥
காரிகா அர்த்தம் - பீஜாங்குரம் என்னும் திருஷ்டாந்தம் எப்பொழுதும் சாத்தியத்திற்கு சமானமாகும். எந்த ஒரு ஹேது சாத்யம் போல் ஆகிறதோ அப்பொழுது சாத்தியத்தின் சித்திக்கு உபயோகம் அற்றதாகிறது.
बीजाङ्कुराख्यो दृष्टान्तो यः, स साध्येन समः तुल्यो ममेत्यभिप्रायः । ननु प्रत्यक्षः कार्यकारणभावो बीजाङ्कुरयोरनादिः ; न, पूर्वस्य पूर्वस्य अपरभावादादिमत्त्वाभ्युपगमात् । यथा इदानीमुत्पन्नोऽपरोऽङ्कुरो बीजादादिमान् बीजं चापरमन्यस्मादङ्कुरादिति क्रमेणोत्पन्नत्वादादिमत् । एवं पूर्वः पूर्वोऽङ्कुरो बीजं च पूर्वं पूर्वमादिमदेवेति प्रत्येकं सर्वस्य बीजाङ्कुरजातस्यादिमत्त्वात्कस्यचिदप्यनादित्वानुपपत्तिः । एवं हेतुफलयोः ।
(ச.பா) பீஜாங்குர திருஷ்டாந்தமானது சாத்யத்திற்கு சமானமாகும் என்பது என்னுடைய அபிப்பிராயம். பீஜம், அங்குரம் இவைகளின் காரியகாரண பாவம் பிரத்யக்ஷ அநாதி என்றால் அவ்வாறு அல்ல. ஏனெனில் அதில் பூர்வபூர்வ (அங்குரம், பலம்)த்தின் அபரத்துவம் ஆதிமத்துவம் ஒப்புக்கொள்வதால் ஆகும். எவ்வாறு இந்த சமயத்தில் பீஜத்திலிருந்து உத்பன்னமான வேறு அங்குரம் ஆதியாகிறதோ அவ்வாறு கிரமமாய் வேறு அங்குரத்திலிருந்து உண்டான வேறு பீஜமும் ஆதிமான் ஆகிறது. இவ்வாறு பூர்வபூர்வ அங்குரம் பூர்வபூர்வ பீஜமும் ஆதிமான் ஆகிறது. ஆகையால் எல்லா பீஜாங்குரவர்கத்தின் பீஜமும், அங்குரமும் ஆதிமான் ஆவதால் எதற்கும் அநாதி ஆவது சம்பவிக்காது. இந்த நியாயத்தை ஹேது பலம் ஆகிறவிஷயத்திலும் அறிந்து கொள்ளவேண்டும்.
अथ बीजाङ्कुरसन्ततेरनादिमत्त्वमिति चेत् ; न, एकत्वानुपपत्तेः ; न हि बीजाङ्कुरव्यतिरेकेण बीजाङ्कुरसन्ततिर्नामैका अभ्युपगम्यते हेतुफलसन्ततिर्वा तदनादित्ववादिभिः । तस्मात्सूक्तम् ‘हेतोः फलस्य चानादिः कथं तैरुपवर्ण्यते’ इति । तथा च अन्यदप्यनुपपत्तेर्न च्छलमित्यभिप्रायः । न च लोके साध्यसमो हेतुः साध्यस्य सिद्धौ सिद्धिनिमित्तं युज्यते प्रयुज्यते प्रमाणकुशलैरित्यर्थः । हेतुरिति दृष्टान्तोऽत्रभिप्रेतः, गमकत्वात् ; प्रकृतो हि दृष्टान्तः, न हेतुरिति ॥
(ச.பா) பீஜாங்குர பரம்பரையை அநாதி என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் அதற்கு ஏகத்துவம் கிடையாது. ஹேது பலத்தின் அநாதித்துவத்தை கூறும் பீஜாங்குரத்தைக் காட்டிலும் வேறு பரம்பரையோ அல்லது ஹேது பரம்பரா என்று எந்த ஒரு ஸ்வதந்திர பதார்த்தமும் இல்லை. ஆகையால் அவர்கள் எவ்வாறு ஹேது மற்றும் பலத்தின் அநாதித்துவத்தை பிரதிபாதனம் செய்கிறார்கள் என்று கூறுவது மிகவும் சரியானது. இதைத் தவிர பொருந்தாததின் காரணத்தால் நாங்கள் கூறுவது சிறிது மாறுபட்டது (ஏமாற்றுவார்த்தை) அல்ல. என்பது இதன் தாத்பர்யம். இதன் அபிப்பிராயம் என்னவெனில் உலகில் பிரமாண குசலர்களால் சாத்யத்தின் சித்திக்காக சாத்யத்தைப் போன்றஹேதுவின் பிரயோகம் செய்யப்படவில்லை. இங்கு (ஹேது) சப்தமானது திருஷ்டாந்த அபிப்பிராயத்தில் வந்தது. ஏனெனில் அது அதன் ஞாபகப்படுத்துதல் ஆகும். இங்கு திருஷ்டாந்தத்தின் பிரகரணம் ஹேதுவிற்கு அல்ல.
कथं बुद्धैरजातिः परिदीपितेति, आह —
(ச.பா) (அ.கை) பண்டிதர்கள் அஜாதியை எவ்வாறு விளக்குகிறார்கள் (பிரகாசிக்கச் செய்கிறார்கள்)? என்பதை குறித்து கூறுகிறார்கள்.
पूर्वापरापरिज्ञानमजातेः परिदीपकम् ।
जायमानाद्धि वै धर्मात्कथं पूर्वं न गृह्यते ॥ २१ ॥
कारिका अन्वयः - पूर्वापर अपरिज्ञानम् अजाते परिदीपकम् जायमानात् हि धर्मात् वै पूर्वं कथं न गृह्यते ॥ २१ ॥
காரிகா அர்த்தம் - (ஹேதுவா, பலமா) இவைகளுள் எது முன்னையது, எது பிந்தியது என்பதின் அறியாமை பிறப்பின்மைக்கு விளக்கமாகும், ஏனெனில் காரியம் உத்பத்தி ஆனபின் அதன்காரணம் ஏன் கிரஹிக்கப்படவில்லை?
यदेतत् हेतुफलयोः पूर्वापरापरिज्ञानम् , तच्चैतत् अजातेः परिदीपकम् अवबोधकमित्यर्थः । जायमानो हि चेद्धर्मो गृह्यते, कथं तस्मात्पूर्वं कारणं न गृह्यते ? अवश्यं हि जायमानस्य ग्रहीत्रा तज्जनकं ग्रहीतव्यम् , जन्यजनकयोः सम्बन्धस्यानपेतत्वात् ; तस्मादजातिपरिदीपकं तदित्यर्थः ॥
(ச.பா) - ஹேதுவா, பலமா இவைகளுள் எது முன்னையது. எது பிந்தியது என்பதை அறியாதது பிறப்பின்மைக்கு விளக்கமாகும். காரிய உத்பன்னமாவதைக் கிரஹிக்கும் பொழுது அதனால் அதன் முந்தியதாகிய காரணம் ஏன் கிரஹிக்கப்படுவதில்லை? உத்பன்னமான வஸ்துவை கிரஹணம்செய்யும் புருஷன் அதன் உத்பத்திக்கு காரணமானதும் அவசியம் கிரஹிக்கப்பட வேண்டும் ஏனெனில் ஜன்ய, ஜனக பதார்த்தங்களின் சம்பந்தம் நீக்க முடியாதது ஆகும். ஆகையால் தாத்பரியம் என்னவெனில் அஜாதியைதான் பிரகாசிக்கச் செய்கிறது.
इतश्च न जायते किञ्चित् यज्जायमानं वस्तु
(அ.கை) ஆகையால் ஒருவஸ்துவும் உத்பன்னமாகாது ஏனெனில் உத்பத்தியாகும் வஸ்து-
स्वतो वा परतो वापि न किञ्चिद्वस्तु जायते ।
सदसत्सदसद्वापि न किञ्चिद्वस्तु जायते ॥ २२ ॥
कारिका अन्वयः - किञ्चिद्वस्तु स्वतोवा परतो वाऽपि सत् असत् सदसद्वा अपि न जायते ।
காரிகா அர்த்தம் - எந்த ஒரு வஸ்துவும் தானாகவோ பிறவற்றாலோ உத்பத்தியாவதில்லை. ஏனெனில் சத்தாகவோ, அசத்தாகவோ, சதசத்தாகவோ ஒரு வஸ்துவும் உத்பன்னமாவது இல்லை.
स्वतः परतः उभयतो वा सत् असत् सदसद्वा न जायते, न तस्य केनचिदपि प्रकारेण जन्म सम्भवति । न तावत्स्वयमेवापरिनिष्पन्नात्स्वतः स्वरूपात्स्वयमेव जायते, यथा घटस्तस्मादेव घटात् । नापि परतः अन्यस्मादन्यः, यथा घटात्पटः । तथा नोभयतः, विरोधात् , यथा घटपटाभ्यां घटः पटो वा न जायते ।
(ச.பா) தன்னாலோ, மற்றவராலோ அல்லது இந்த இருவராலோ சத், அசத் அல்லது சதசத்ரூபமாக உத்பத்தியாவதில்லை. எந்த விதமாகவும் அதன் ஜன்மம் சம்பவிக்காது. எவ்வாறு கடமானது அந்த கடத்திலிருந்து உத்பத்தி ஆகாதோ அவ்வாறே எந்த வஸ்துவும் தானாகவே பூர்ணமாய் தயாராகாத ஸ்வரூபத்தால் தானாகவே உத்பத்தி ஆக முடியாது வேறு ஒரு அந்ய பதார்த்தத்தால் வேறு பதார்த்தம் (அந்யபதார்த்தம்) உத்பன்னம் ஆக முடியாது. எவ்வாறு கடத்திலிருந்த படம் (துணி) உண்டாகாது மேலும் படத்திலிருந்து வேறுபடம் உண்டாகாது. இவ்வாறு விரோதம் உள்ளதால் இருவகையாலும் எந்த ஒன்றின் உத்பத்தியும் உண்டாகாது. எவ்வாறு கடம், படம் இவ்விரண்டிலிருந்தும் கடமோ படமோ எந்த ஒன்றும் உண்டாகமுடியாது.
ननु मृदो घटो जायते पितुश्च पुत्रः ; सत्यम् , अस्ति जायत इति प्रत्ययः शब्दश्च मूढानाम् । तावेव तु शब्दप्रत्ययौ विवेकिभिः परीक्ष्येते — किं सत्यमेव तौ, उत मृषा इति ; यावता परीक्ष्यमाणे शब्दप्रत्ययविषयं वस्तु घटपुत्रादिलक्षणं शब्दमात्रमेव तत् ,
‘वाचारम्भणम्’ (छा. उ. ६ । ४ । ४) इति श्रुतेः ।
(ச.பா) மண்ணிலிருந்து கடம் உத்பன்னமானது தந்தையிடமிருந்து மகன் உத்பன்னமானான் என்பது உண்மையே. ஆனால் “உத்பன்னம் ஆகிறது” என்ற பிரத்யயமும் சப்தமும் மூடர்களுக்கே ஏற்படுகிறது. ஆனால் விவேகிகளோ பிரதீதியையும் (தோன்றுவதையும்) சப்தத்தையும் உண்மையானதா? அல்லது மித்தையா? என்று பரீக்ஷை செய்கின்றனர். பரீக்ஷை செய்து அறிந்த பின் சப்தம், அந்த பிரதீதியின் விஷயமான கடம் அல்லது மகன் முதலிய வஸ்து கேவலம் சப்தமாத்திரமே என்பதை சுருதியில் கூறிய “वाचारम्भणम्” முதலிய பிரமாணங்களால் அறிகிறார்கள்.
सच्चेत् न जायते, सत्त्वात् , मृत्पित्रादिवत् । यद्यसत् , तथापि न जायते, असत्त्वादेव, शशविषाणादिवत् । अथ सदसत् , तथापि न जायते विरुद्धस्यैकस्यासम्भवात् । अतो न किञ्चिद्वस्तु जायत इति सिद्धम् ।
(ச.பா) வஸ்து சத்தாய் இருந்தால் மண், பிதா முதலியவைகளைப் போல் சத்தாய் இருப்பதால் உத்பன்னமாக முடியாது. அசத்தாய் இருந்தாலும் முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் உத்பன்னமாகாது. மேலும் சதசத்தாய் இருந்தாலும் உத்பன்னமாகாது. ஏனெனில் ஒரே வஸ்து விருத்த சுவபாவமுடையதாக இருப்பது சம்பவியாது. ஆகையால் ஒரு வஸ்துவும் உத்பன்னமாகவில்லை என்று சித்திக்கிறது.
येषां पुनर्जनिरेव जायत इति क्रियाकारकफलैकत्वमभ्युपगम्यते क्षणिकत्वं च वस्तुनः, ते दूरत एव न्यायापेताः । इदमित्थमित्यवधारणक्षणान्तरानवस्थानात् , अननुभूतस्य स्मृत्यनुपपत्तेश्च ॥
(ச.பா) எவர்களுடைய விபரீத மதத்தில் (பௌத்தமதத்தில்) ஜன்ம கிரியையினால் தான் ஜன்மம் உண்டாகிறது என்று இவ்வாறு கிரியா, காரகபலத்தை ஒன்றானதாயும் வஸ்துவிற்கு க்ஷணிகத் தன்மையையும் கற்பிக்கிறார்கள். அவர்கள் சரியான யுக்தியற்றவர்கள் ஏனெனில் அவர்கள் இவ்வாறு இருக்கிறது என்று நிச்சயம் செய்யும் க்ஷணத்தின் அடுத்த க்ஷணத்தில் அதன் ஸ்திதி இல்லாததாலும் அநுபவிக்கப்படாத பதார்த்தத்தின் ஸ்மிருதி உண்டாவது அசம்பவமாகும்.
किञ्च, हेतुफलयोरनादित्वमभ्युपगच्छता त्वया बलाद्धेतुफलयोरजन्मैवाभ्युपगतं स्यात् । कथम् ?
(ச.பா) (அ.கை) மேலும் ஹேது, பலத்தின் அநாதித்தன்மையை ஒப்புக்கொள்ளும் உன்மூலமாய் பலாத்காரமாய் ஹேது, பலத்தின் அனுத்பத்தி (உத்பத்தி இல்லாதது)யை ஒப்புக் கொண்டதாகும் அது எவ்வாறு?
हेतुर्न जायतेऽनादेः फलं चापि स्वभावतः ।
आदिर्न विद्यते यस्य तस्य ह्यादिर्न विद्यते ॥ २३ ॥
कारिका अन्वयः - अनादेः हेतुः न जायते फलं च स्वभा-वतः न जायते यस्य आदिः न विद्यते तस्य आदि न विद्यते हि ॥ २३ ॥
காரிகா அர்த்தம் - அநாதியான பலத்திலிருந்து எந்த ஒரு ஹேதுவும் உத்பன்னமாகாது. அவ்வாறே ஸ்வபாவத்திலிருந்து (அநாதி ஹேதுவிலிருந்து) பலமானது உத்பத்தி ஆகமுடியாது, ஏனெனில் எந்த ஒரு வஸ்துவிற்கு ஆதி (காரணம்) இல்லையோ அதற்கு ஆதி (ஜன்மமும்)யும் உண்டாகாது.
अनादेः आदिरहितात्फलात् हेतुः न जायते । न ह्यनुत्पन्नादनादेः फलाद्धेतोर्जन्मेष्यते त्वया, फलं चापि आदिरहितादनादेर्हेतोरजात्स्वभावत एव निर्निमित्तं जायत इति नाभ्युपगम्यते ।
(ச.பா) அநாதி (ஆதியற்ற) பலத்திலிருந்து ஹேது உத்பன்னமாகாது. எப்பொழுதும் உத்பத்தி இல்லாத அநாதி பலத்திலிருந்து நீ ஹேதுவின் உத்பத்தியை (ஜன்மத்தை) ஒப்புக்கொள்வதில்லை. அவ்வாறு ஒப்புக்கொள்ளாததால் அநாதி அதாவது அஜன்ம ஹேது இல்லாமல் எந்த ஒரு நிமித்தத்தாலும் ஸ்வபாவத்திலிருந்து (காரணத்திலிருந்து) பலத்தின் உத்பத்தி உண்டாகவே செய்யும்.
तस्मादनादित्वमभ्युपगच्छता त्वया हेतुफलयोरजन्मैवाभ्युपगम्यते । यस्मात् आदिः कारणं न विद्यते यस्य लोके, तस्य ह्यादिः पूर्वोक्ता जातिर्न विद्यते । कारणवत एव ह्यादिरभ्युपगम्यते, न अकारणवतः ॥ २३ ॥
(ச.பா) ஆகையால் ஹேதுவிற்கும் பலத்திற்கும் அநாதியை ஒப்புக்கொள்ளும் உங்கள் மூலமாய் அதன் அநுத்பத்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனெனில் உலகில் எந்த வஸ்துவிற்கு ஆதி அதாவது காரணம் இல்லையோ அதற்கு ஆதி அதாவது ஜன்மமும் இல்லை. எதற்கு காரணம் இருக்கிறதோ அதற்கு ஜன்மத்தை ஒப்புக்கொள்கிறார்கள். காரணமற்ற பதார்த்தத்திற்கு அல்ல.
उक्तस्यैवार्थस्य दृढीकरणचिकीर्षया पुनराक्षिपति —
(ச.பா) (அ.கை) கூறிய அர்த்தத்தை திடப்படுத்துவதற்காக மறுபடியும் எடுத்துக்கூறுகிறார்-
प्रज्ञप्तेः सनिमित्तत्वमन्यथा द्वयनाशतः ।
सङ्क्लेशस्योपलब्धेश्च परतन्त्रास्तिता मता ॥ २४ ॥
कारिका अन्वयः - प्रज्ञप्तेः सनिमित्तत्वम् अन्यथा द्वय नाशतः संक्लेशस्य उपलब्धेः च परतन्त्रास्तिता मता ।
காரிகா அர்த்தம் - பிரக்ஞப்தி அதாவது சப்தஸ்பரிச முதலிய ஞானத்தை பாஹ்ய விஷயத்தோடு கூடியது என்று கொள்ள வேண்டும். இல்லையெனில் சப்தஸ்பர்சாதி துவைதத்திற்கு நாசம் உண்டாகும். இதைத்தவிர அக்னி தஹித்தல் முதலிய க்லேசங்களின் உபலப்தியால் மற்றமதவாதிகள் ஏற்றுக்கொள்ளும் சாஸ்திரத்தில் கூறப்பட்ட துவைதத்தின் சத்தையை (இருப்பை) ஏற்றுக்கொண்டதாகும்.
प्रज्ञानं प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः, तस्याः सनिमित्तत्वम् , निमित्तं कारणं विषय इत्येतत् ; सनिमित्तत्वं सविषयत्वं स्वात्मव्यतिरिक्तविषयतेत्येतत् , प्रतिजानीमहे । न हि निर्विषया प्रज्ञप्तिः शब्दादिप्रतीतिः स्यात् , तस्याः सनिमित्तत्वात् । अन्यथा निर्विषयत्वे शब्दस्पर्शनीलपीतलोहितादिप्रत्ययवैचित्र्यस्य द्वयस्य नाशतः नाशोऽभावः प्रसज्येतेत्यर्थः । न च प्रत्ययवैचित्र्यस्य द्वयस्याभावोऽस्ति, प्रत्यक्षत्वात् । अतः प्रत्ययवैचित्र्यस्य द्वयस्य दर्शनात् , परेषां तन्त्रं परतन्त्रमित्यन्यशास्त्रम् , तस्य परतन्त्रस्य परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य प्रज्ञानव्यतिरिक्तस्य अस्तिता मता अभिप्रेता ।
(ச.பா) பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு, அதாவது சப்தாதி விஷயங்களை பிரதிபலிக்கும் தன்மைக்கு ज्ञानं - அறிவு, ज्ञप्तिः -அறியும் தன்மை, அல்லது அறிபவன் இங்கு प्रज्ञानम् என்றசொல் प्रज्ञप्तिः என்ற பொருளில் வந்துள்ளது. நிமித்தத்துடன் கூடி இருப்பதால் (காரணமாகும்). அதாவது निमित्तं - कारणम् - விஷயமாகும். सनिमित्तत्वम्- விஷயத்துடன் கூடியிருப்பதாகும். அதாவது தன்னிலும் வேறுபட்ட விஷயத்தின் தன்மையை (ஏற்றிருத்தல்) என்பதாயிற்று. எனவே प्रज्ञप्तिः என்ற அறியும்தன்மைக்கு தன்னிலும் வேறான விஷயத்தின் தன்மையுடன் கூடியிருத்தலை ஏற்கிறோம். அவ்வாறு ஏற்காவிடில் (நிர் விஷயமான) அவ்வறிவும், தன்மையான प्रज्ञप्ति யும் விஷயமற்றதாக ஆகும். அவ்வாறு ஆனால் சப்தம் முதலிய விஷயங்களின் அறிவே ஏற்படாது. உலகில் அனுபவம் அவ்வாறு இல்லாததால் அவ்வறியும் தன்மையை விஷயத்துடன் கூடியதாக ஏற்கிறோம் அவ்வாறு ஏற்காமல் போனால், அதாவது सनिमित्तप्रज्ञप्तिः (சன்நிமித்த பிரஞப்தி) என்று ஏற்காமல் போனால் அல்லது அவ்வறியும் தன்மை நிர்விஷயமானது என்று சொல்லுவேமேயானால் சப்தம், ஸ்பர்சம், நீலம், மஞ்சள், சிகப்புப் போன்ற பிரத்யயங்கள் எனப்படும் விஷய ஸ்புரணங்களான இரண்டாவதற்கு நாசம் ஏற்படும். மேலும் பிரத்யக்ஷம் சித்தியாவதால் பிரத்யய வைச்சித்திரியத்தின் துவைததிற்கு அபாவம் ஏற்படும். ஆகையால் பிரத்யய வைசித்திரிய ரூப துவைதத்தின் உபலப்தியினால் பரதந்திரமாகிய மற்றசாஸ்திரங்கள் அதாவது பரதந்திரத்தை ஆஸ்ரயித்த பிரக்ஞானத்தைக் காட்டிலும் வேறான பாஹ்ய பதார்த்தங்கள் இருக்கின்றனவோ அவைகளின் இருப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
न हि प्रज्ञप्तेः प्रकाशमात्रस्वरूपाया नीलपीतादिबाह्यालम्बनवैचित्र्यमन्तरेण स्वभावभेदेनैतद्वैचित्र्यं सम्भवति । स्फटिकस्येव नीलाद्युपाध्याश्रयैर्विना वैचित्र्यं न घटत इत्यभिप्रायः ।
(ச.பா) கேவல பிரகாசமாத்திர ஸ்வரூபமான பிரக்ஞப்திக்கு இந்த விசித்திரமான நீலம், மஞ்சள் முதலிய பாஹ்யங்களை ஆலம்பனத்தின் விசித்திரத்தைக் காட்டிலும் கேவல ஸ்வபாவ பேதத்தால் விசித்திரமானது சம்பவிக்காது என்பது அபிப்பிராயம்.
इतश्च परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य ज्ञानव्यतिरिक्तस्यास्तिता । सङ्क्लेशनं सङ्क्लेशः, दुःखमित्यर्थः । उपलभ्यते हि अग्निदाहादिनिमित्तं दुःखम् । यद्यग्न्यादिबाह्यं दाहादिनिमित्तं विज्ञानव्यतिरिक्तं न स्यात् , ततो दाहादिदुःखं नोपलभ्येत । उपलभ्यते तु । अतः तेन मन्यामहे अस्ति बाह्योऽर्थ इति । न हि विज्ञानमात्रे सङ्क्लेशो युक्तः, अन्यत्रादर्शनादित्यभिप्रायः ॥ २४ ॥
(ச.பா) (மேலும் பிறசாஸ்திரங்களை அனுசரித்து ஞானத்தைக் காட்டிலும் வெளியில் இருக்ககூடிய இரண்டாவது பொருளின் இருக்கையை (तन्त्रं = शास्त्रं, परेषां तन्त्रं = परतन्त्रं) तस्य परतन्त्रस्य, तेन (அதனால்) परतन्त्राश्रयस्य बाह्यार्थस्य பரதந்திரத்தை ஆஸ்ரயிக்கும் பாஹ்ய பதார்த்தங்களின் (வெளிப்பொருள்களின்) கொள்கையளவில் ஏற்பட்டது. ஏனெனில் கேவல பிரகாச மாத்திர ஸ்வரூபமான प्रज्ञप्ति க்கு வெளி விஷயங்களின் ஆஸ்ரயம் இன்றி தன்னுடைய ரூபத்தால் நீலம், சிகப்பு, மஞ்சள் போன்ற விசித்திரங்கள் ஏற்படாது. எவ்வாறு கேவல சுத்தமான ஸ்படிகத்திற்கு நீல வஸ்திரம், செம்பரத்திப்பூ போன்ற உபாதிகளின்றி எவ்வாறு தன் சொரூபத்தில் வர்ண விசித்திரங்கள் ஏற்படாதோ, அது போல் வெளிவிஷயமான உபாதிகளின்றி प्रज्ञप्तिः யில் விஷய ஸ்புரணம் ஏற்படாது என்பது கருத்து). ஆகையால் பரதந்திரத்தை (பிற சாஸ்திரங்களை) ஆஸ்ரயித்த ஞானத்தைக் காட்டிலும் வேறான வெளிப் பதார்த்தங்களின் இருப்பை ஒப்புக் கொள்கிறோம். எவ்வாறு அக்னியின் சூடு முதலியவைகளால் துக்கம் உண்டாகிறது. விக்ஞானத்தைக் காட்டிலும் சூடு முதலியவைகளுக்குக் காரணமான அக்னி முதலிய பாஹ்ய (வெளி) பதார்த்தங்கள் இல்லை எனில் எரிக்கும் சூட்டினால் உண்டாகும் துக்கமானது ஏற்படமுடியாது. ஆனால் நம்மால் அடையப்படுகிறது. ஆகையால் நாம் நினைக்கிறோம் வெளிப் பதார்த்தங்கள் அவசியம் வேண்டும் என்று. கேவலம் விக்ஞான மாத்திரத்தால் க்லேசம் (துக்கம்) சம்பவிக்காது. ஏனெனில் வேறு இடத்தில் அவ்வாறு பார்க்கப்படவில்லை.
अत्रोच्यते —
(ச.பா) (அ.கை) இந்த விஷயத்தில் நாம் கூறுவது-
प्रज्ञप्तेः सनिमित्तत्वमिष्यते युक्तिदर्शनात् ।
निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात् ॥ २५ ॥
कारिका अन्वयः - प्रज्ञप्तेः युक्तिदर्शनात् सनिमित्तत्वं त्वया इष्यते भूतदर्शनात् निमित्तस्य अनिमित्तत्वं इष्यते ।
காரிகா அர்த்தம் - முன்பு கூறி யுக்தியை அனுசரித்து நீ பிரக்ஞ்ப்திக்கு (प्रज्ञप्ति) விஷயத்துடன் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாய், ஆனால் தத்துவ திருஷ்ட்டியினால் நாங்கள் அந்த விஷயத்தை அவிஷயமாய் கருதுகிறோம்.
बाढमेवं प्रज्ञप्तेः सनिमित्तत्वं द्वयसङ्क्लेशोपलब्धियुक्तिदर्शनादिष्यते त्वया । स्थिरीभव तावत्त्वं युक्तिदर्शनं वस्तुनस्तथात्वाभ्युपगमे कारणमित्यत्र ।
(ச.பா) சரியானதே, இவ்வாறு துக்கமயமான துவைதத்தின் அடைவு ரூபமான யுக்தியை அனுசரித்து நீ (பிரக்ஞப்தி)யை விஷயமாய் எடுத்துக் கொள்கிறாய். ஆனால் யுக்தி தர்சனமானது வஸ்துவின் யதார்த்த ஞானத்திற்குக் காரணமாகும் என்ற உன்னுடைய சித்தாந்தத்தில் ஸ்திரமாய் இரு.
ब्रूहि किं तत इति ।
(ச.பா) (பாஹ்யார்த்தவாதி) - அது என்ன என்று கூறு-
उच्यते — निमित्तस्य प्रज्ञप्त्यालम्बनाभिमतस्य तव घटादेरनिमित्तत्वमनालम्बनत्वं वैचित्र्याहेतुत्वमिष्यतेऽस्माभिः । कथम् ? भूतदर्शनात् परमार्थदर्शनादित्येतत् । न हि घटो यथाभूतमृद्रूपदर्शने सति तद्व्यतिरेकेणास्ति, यथा अश्वान्महिषः, पटो वा तन्तुव्यतिरेकेण तन्तवश्चांशुव्यतिरेकेण इत्येवमुत्तरोत्तरभूतदर्शन आ शब्दप्रत्ययनिरोधान्नैव निमित्तमुपलभामहे इत्यर्थः ।
(ச.பா) விக்ஞானவாதி - நாங்கள் கூறுவதாவது பிரக்ஞப்தியின் ஆஸ்ரிய ரூபத்தால் ஸ்வீகாரம் செய்யப்பட்ட (எடுத்துக் கொள்ளப்பட்ட) கடம் முதலிய விஷயங்களை நாங்கள் அவிஷயத்துவமாய் அதாவது பிரதீதியை ஆஸ்ரயிக்காததாய் அதாவது விசித்திரத்திற்கு ஹேது அற்றதன்மையாய் கருதுகிறோம். எவ்வாறு? பரமார்த்த திருஷ்டியினால். எவ்வாறு குதிரையும், எருமையும் வேறோ. அவ்வாறு மண்ணின் யதார்த்த ஸ்வரூபத்தின் ஞானம் உண்டான பின் கடம் அதைத் தவிர வேறாய் சித்திப்பதில்லை, அவ்வாறே நூ லிலிருந்து படமானது (துணி) வேறாக சித்திப்பதில்லை. இதன் தாத்பர்யம் என்னவெனில் இவ்வாறு உத்தரோத்தர யதார்த்த தத்துவத்தைப் பார்க்கப்பார்க்க சப்தப்பிரதீதியின் நிரோதம் எற்பட்டபின் ஒரு விஷயத்தையும் காணமுடியாது.
अथ वा, अभूतदर्शनाद्बाह्यार्थस्य अनिमित्तत्वमिष्यते रज्ज्वादाविव सर्पादेरित्यर्थः । भ्रान्तिदर्शनविषयत्वाच्च निमित्तस्यानिमित्तत्वं भवेत् ; तदभावे अभानात् । न हि सुषुप्तसमाहितमुक्तानां भ्रान्तिदर्शनाभावे आत्मव्यतिरिक्तो बाह्योऽर्थ उपलभ्यते । न ह्युन्मत्तावगतं वस्त्वनुन्मत्तैरपि तथाभूतं गम्यते । एतेन द्वयदर्शनं सङ्क्लेशोपलब्धिश्च प्रत्युक्ता ॥ २५ ॥
(ச.பா) அல்லது முற்கூறப்பட்ட அபூத தர்சனத்தால் பாஹ்ய விஷயங்களுக்கு நிமித்தமின்மையே விரும்பப்படுகிறது. ரஜ்ஜு முதலானவைகளில் ஸர்ப்பம் போல் அதாவது கயிறு முதலானவைகளில் பாம்பு முதலிய காக்ஷிகளுடைய நிமித்தங்களின் அதன் முன்நிலையைக் காணும்கால் அவை நிமித்தமாக இல்லாதவை என்பதும், அவை விஷயங்களே அல்ல என்பதும், அவை பிராந்திதர்சனத்திற்கு விஷயமாய் இருப்பதால், அந்நிமித்தங்களுக்கு அநிமித்தத்துவம் ஏற்படுகிறது. அது இல்லாவிடில் அவையும் உண்டாவது இல்லை, ஸுஷுப்தியில் உள்ளவர்க்கும், சமாதியில் இருப்பவருக்கும் ஜீவன் முத்தர்களுக்கும் பிராந்தி ஞானம் ஏற்படுவது இல்லை. அவர்களுக்கு ஆத்மாவைத் தவிர வேறு வெளிவிஷயம் புலனாவதோ, அடையப்படுவதோ இல்லை. மேலும் பைத்தியகாரனால் உணரப்பட்ட வஸ்து, பைத்திய மற்றவர்களால், பைத்தியக்காரனால் உணரப்பட்டது போல் உணரப்படுவதில்லை. இம்மாதிரி द्वयदर्शनं (இரண்டாகப் பார்த்தல்) மற்றும் க்லேசம் (துக்கம்) ஆகியவையின் அடைவு நிராகரணம் செய்யப்பட்டது.
यस्मान्नास्ति बाह्यं निमित्तम्:-
(ச.பா) (அ.கை) ஏனெனில் பாஹ்ய விஷயமே இல்லை. ஆகையால்-
चित्तं न संस्पृशत्यर्थं नार्थाभासं तथैव च ।
अभूतो हि यतश्चार्थो नार्थाभासस्ततः पृथक् ॥ २६ ॥
कारिका अन्वयः - चित्तम् अर्थं न स्पृशति तथैव अर्थाभासं न स्पृशति यतः अर्थः अभूतो हि ततः न पृथक् अर्थाभासःन ॥
காரிகா அர்த்தம் - சித்தம் எந்த பதார்த்தத்தையும் ஸ்பர்சிக்காது. மேலும் எந்த ஒரு அர்த்தாபாசத்தையும் கிரஹிக்காது. ஏனெனில் அது பதார்த்தமே அல்ல. ஆகையால் அந்த பதார்த்த ஆபாசமும் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல.
अतः चित्तं न स्पृशत्यर्थं बाह्यालम्बनविषयम् , नाप्यर्थाभासम् , चित्तत्वात् , स्वप्नचित्तवत् । अभूतो हि जागरितेऽपि स्वप्नार्थवदेव बाह्यः शब्दाद्यर्थो यतः उक्तहेतुत्वाच्च । नाप्यर्थाभासश्चित्तात्पृथक् । चित्तमेव हि घटाद्यर्थवदवभासते यथा स्वप्ने ॥ २६ ॥
(ச.பா) சித்தம், சித்தமாய் இருப்பதால் ஸ்வப்ன சித்தம் போல் பாஹ்ய ஆலம்பனத்தின் விஷயமானது எந்த பதார்த்தத்தையும் ஸ்பரிசிப்பதில்லை, மேலும் அர்த்தாபாசத்தையை கிரஹிக்கிறது. ஏனெனில் முற்கூறிய காரணத்தினால் ஸ்வப்ன பதார்த்தங்களுக்கு சமமாய் ஜாக்ரத் அவஸ்தையிலும் சப்தம் முதலிய பாஹ்ய பதார்த்தங்கள் இல்லை. மேலும் சித்தத்தைக்காட்டிலும் வேறாக அர்த்தாபாசம் இல்லை. கடம் முதலிய பதார்த்தங்கள் போல் சித்தமும் தோன்றுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் தோற்றுகிறதோ அவ்வாறு
ननु विपर्यासस्तर्हि असति घटादौ घटाद्याभासता चित्तस्य ; तथा च सति अविपर्यासः क्वचिद्वक्तव्य इति ; अत्रोच्यते —
(ச.பா) (அ.கை) கடம் முதலியவைகள் இல்லாவிட்டாலும் சித்தத்திற்கு கட முதலியவைகள் தோன்றுவது விபரீத ஞானமாகும். அவ்வாறு இருக்கும் பொழுது விபரீத மற்ற(சம்யக்) ஞானம் எப்பொழுது உண்டாகும்? என்று கூறவேண்டியதால் அதைக்குறித்துக் கூறப்படுகிறது-
निमित्तं न सदा चित्तं संस्पृशत्यध्वसु त्रिषु ।
अनिमित्तो विपर्यासः कथं तस्य भविष्यति ॥ २७ ॥
कारिका अन्वयः - निमित्तम् अध्वसु त्रिषु चित्तं सदा न स्पृशति (खलु) तस्य अनिमित्तः विपर्यासः कथं भविष्यति ।
காரிகா அர்த்தம் - மூன்று அவஸ்தைகளிலும் சித்தம் எந்த ஒரு விஷயத்தையும் பற்றுவதில்லை (ஸ்பரிசிப்பது இல்லை). அவ்வாறு இருக்கும் பொழுது அது நிமித்தமில்லாமல் அதற்கு எவ்வாறு விபரீதஞானம் உண்டாகும்
निमित्तं विषयम् अतीतानागतवर्तमानाध्वसु त्रिष्वपि सदा चित्तं न संस्पृशेदेव हि । यदि हि क्वचित्संस्पृशेत् , सः अविपर्यासः परमार्थ इत्यतस्तदपेक्षया असति घटे घटाभासता विपर्यासः स्यात् ; न तु तदस्ति कदाचिदपि चित्तस्यार्थसंस्पर्शनम् । तस्मात् अनिमित्तः विपर्यासः कथं तस्य चित्तस्य भविष्यति ? न कथञ्चिद्विपर्यासोऽस्तीत्यभिप्रायः । अयमेव हि स्वभावश्चित्तस्य, यदुत असति निमित्ते घटादौ तद्वदवभासनम् ॥ २७ ॥
(ச.பா) விஷயமானது மூன்று வழிகளிலும், அதாவது கழிந்தது, வரப்போவது, நடைபெறுவது என்றமூன்று வழிகளிலும், சித்தத்தை எப்பொழுதும் பற்றுவதில்லை, அதை எப்பொழுதாவது ஸ்பரிசித்தால் அது பரமார்த்தமாகும் என்று கருதப்படும். ஆகையால் விஷயம் (நிமித்தம்) இல்லாவிடினும் அந்த சித்தத்திற்கு விபரீதஞானம் எவ்வாறு ஏற்படும்? இதன் தாத்பரியம் என்னவெனில் அதனால் எவ்விதமாகவும் விபரீத ஞானம் ஆகாது. சித்தத்தின் ஸ்வபாவம் கடம் முதலிய நிமித்தம் (விஷயம்) இல்லாவிடிலும் அதன் பிரதீதி (தோற்றம்) உண்டாகிறது.
(ச.பா) (அ.கை) இவ்வாறு வெளிப்பொருள் உண்டு என்று கூறும் வாதியை விக்ஞான வாதியான பௌத்தனின் வாயிலாக கண்டித்து, அந்த விக்ஞான வாதமும் தப்பானதே என்று இக்காரிகையால் விளக்குகிறார். सनिमित्त प्रज्ञप्तिः என்றவரை விக்ஞானவாதியின் வாதம் பாஹ்யார்த்தவாதியை நிராகரிப்பதற்காக ஏற்கப்பட்டது இப்போது அந்த விக்ஞானவாதி கூறிய வாதத்தைக் கொண்டே, அவன் கூற்று தவறு என்று ஆச்சாரியர் நிரூபிக்கிறார்.
तस्मान्न जायते चित्तं चित्तदृश्यं न जायते ।
तस्य पश्यन्ति ये जातिं खे वै पश्यन्ति ते पदम् ॥ २८ ॥
कारिका अन्वयः - तस्मात् चित्तं न जायते चित्त दृश्यं न जायते तस्य ये जातिं पश्यन्ति खे पदं पश्यन्ति वै ।
காரிகா அர்த்தம் - ஆகையால் சித்தம் உத்பத்தியாவதில்லை. சித்தத்தின் திருஷ்யமும் உத்பத்தியாவதில்லை. அதற்கு எவர்கள் உத்பத்தியை காண்கின்றனரோ அவர்கள் பறக்கும் பக்ஷியின் கால்தடத்தைக் காண்கின்றார்கள்.
तस्मादित्यादि । यस्मादसत्येव घटादौ घटाद्याभासता चित्तस्य विज्ञानवादिना अभ्युपगता, तदनुमोदितमस्माभिरपि भूतदर्शनात् ; तस्मात्तस्यापि चित्तस्य जायमानावभासता असत्येव जन्मनि युक्ता भवितुमिति अतो न जायते चित्तम् । यथा चित्तदृश्यं न जायते
(ச.பா) ஏனெனில் விக்ஞானவாதிகள் கடம் முதலியவைகள் இல்லாவிடினும் சித்தத்திற்கு கடம் முதலியவைகளின் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் யதார்த்த திருஷ்டி ஏற்பட்டதால் நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம். ஆகையால் அந்த சித்தத்திற்கு உண்டான தோற்றமாத்திர (அவபாசம்) மாகவே உத்பத்தியில் பொருந்தும். ஆகையால் சித்தம் உத்பத்தியாகவில்லை அவ்வாறே சித்த திருஷ்யமும் ஆகும்.
अतस्तस्य चित्तस्य ये जातिं पश्यन्ति विज्ञानवादिनः क्षणिकत्वदुःखित्वशून्यत्वानात्मत्वादि च ; तेनैव चित्तेन चित्तस्वरूपं द्रष्टुमशक्यं पश्यन्तः खे वै पश्यन्ति ते पदं पक्ष्यादीनाम् । अत इतरेभ्योऽपि द्वैतिभ्योऽत्यन्तसाहसिका इत्यर्थः । येऽपि शून्यवादिनः पश्यन्त एव सर्वशून्यतां स्वदर्शनस्यापि शून्यतां प्रतिजानते, ते ततोऽपि साहसिकतराः खं मुष्टिनापि जिघृक्षन्ति ॥ २८ ॥
(ச.பா) ஆகையால் அந்த விக்ஞானவாதி அந்த சித்தத்தின் உத்பத்தி அவ்வாறே க்ஷணிகத்துவம், துக்கித்துவம், சூன்யத்துவம், அநாத்மத்துவம், முதலியவைகளைக் காண்கிறான். அந்த சித்தத்தினால் பார்க்கப்படுவது என்பது எப்பொழுதும் அசம்பவமே, அவ்வாறேசித்தத்தின் சொரூபத்தைப் பார்ப்பதும். எவ்வாறு ஆகாசத்தில் பறக்கும் பறவையின் கால்தடம் தெரியாதோ அவ்வாறு ஆகும். ஆகையால் தாத்பர்யம் என்னவெனில் வேறு துவைதவாதிகளைக் காட்டிலும் மிகவும் கொடியது. மேலும் சூன்யவாதி எல்லாவற்றையும் சூன்யமாய் பார்க்கிறான், அதேபோல் தன்னுடைய தரிசனத்தையும் சூன்யம் என்று பிரதிக்ஞை செய்கின்றனர். ஆகையால் அவர்களைக் காட்டிலும் மிககொடூரமானது. இவர்கள் விண்ணை முஷ்டியால் குத்தும் தைரியசாலிகள்.
उक्तैर्हेतुभिरजमेकं ब्रह्मेति सिद्धम् , यत्पुनरादौ प्रतिज्ञातम् , तत्फलोपसंहारार्थोऽयं श्लोकः —
(ச.பா) (அ.கை) முன்பு கூறிய ஹேதுக்களினால் பிரஹ்மம் அஜன்மா என்று சித்திக்கிறது. இப்பொழுது முன்பு எது பிரதிக்ஞை செய்யப்பட்டதோ அதன் பலத்தை முடிப்பதற்காக இந்த ஸ்லோகம்-
अजातं जायते यस्मादजातिः प्रकृतिस्ततः ।
प्रकृतेरन्यथाभावो न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥
कारिका अन्वयः - यस्मात् तस्य अजातिः प्रकृतिः ततः अजातं जायते प्रकृते अन्यथाभावः कथञ्चित् न भविष्यति ।
காரிகா அர்த்தம் - ஏனெனில் அஜன்மா (சித்தம்)விற்கு உத்பத்தி ஏற்படுகிறது ஆகையால் அஜாதி (உத்பன்னமற்றது)யே அதன் ஸ்வபாவம், மேலும் ஸ்வபாவமானது எவ்வகையிலும் விபரீதமாகாது.
अजातं यच्चित्तं ब्रह्मैव जायत इति वादिभिः परिकल्प्यते, तत् अजातं जायते यस्मात् अजातिः प्रकृतिः तस्य ; ततः तस्मात् अजातरूपायाः प्रकृतेरन्यथाभावो जन्म न कथञ्चिद्भविष्यति ॥ २९ ॥
(ச.பா) அஜாதம் என்று எந்த பிரஹ்மரூப சித்தம் உத்பன்னமாகிறது என்று வாதிகள் கல்பனை செய்கிறார்கள். ஏனெனில் அந்த அஜாதிக்குத் தான் ஜன்மம் ஏற்படுகிறது ஆகையால் அஜாதி அதன் ஸ்வபாவம் என்றால் அந்த அஜாத ரூபஸ்வபாவத்திற்கு ஜன்மரூப விபரீதபாவனை எவ்வகையிலும் கிடையாது.
अयं चापर आत्मनः संसारमोक्षयोः परमार्थसद्भाववादिनां दोष उच्यते —
(ச.பா) (அ.கை) ஆத்மாவிற்கு சம்சாரம், மோக்ஷம் ஆகிய இரண்டிற்கும் பாரமார்த்திக இருப்பு இருப்பதாய் ஏற்றுக்கொள்ளும் வாதிகளின் பக்ஷத்தை ஒன்று மற்றொன்றின் தோஷத்தை கூறுகிறார்-
अनादेरन्तवत्त्वं च संसारस्य न सेत्स्यति ।
अनन्तता चादिमतो मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥
कारिका अन्वयः - अनादेः संसारस्य न अन्तवत्त्वं च सेत्स्यति (नसिद्धिं उपयास्यति) तथा अनन्तता च आदिमतः मोक्षस्य न भविष्यति ॥ ३० ॥
காரிகா அர்த்தம் - அநாதி சம்சாரத்திற்கு ஒருநாளும் அந்தத்துவம் (முடிவு) சித்திக்காது. அவ்வாறே ஆதியை உடைய மோக்ஷத்திற்கும் முடிவு அற்ற தன்மை சித்திக்காது.
अनादेः अतीतकोटिरहितस्य संसारस्य अन्तवत्त्वं समाप्तिः न सेत्स्यति युक्तितः सिद्धिं नोपयास्यति । न ह्यनादिः सन् अन्तवान्कश्चित्पदार्थो दृष्टो लोके । बीजाङ्कुरसम्बन्धनैरन्तर्यविच्छेदो दृष्ट इति चेत् ; न, एकवस्त्वभावेनापोदितत्वात् ।
(ச.பா) ஆரம்பத்தை அறிய முடியாததால் ஆரம்பமற்ற சம்சாரத்திற்கு முடிவு என்பது யுக்தியினால் சித்திக்காது. உலகில் எந்த பொருளும் அநாதியாய் இருந்துகொண்டு முடிவு உடையதாய் காணப்படவில்லை. பீஜாங்குர சம்பந்த தொடர்ச்சி எங்கும் தடைப்பட்டதாக கண்டதில்லை. அது போல் ஸம்சாரமும் முடிவு அற்றது என்று கூறுவாயேயானால் அதுவும் தவறானதாகும். ஏனெனில் பீஜாங்குரசந்ததி ஒரு பதார்த்தமாகாத காரணத்தால் அதற்கு அநாதித்துவம் நிராகரணம் செய்யப்பட்டது.
तथा अनन्ततापि विज्ञानप्राप्तिकालप्रभवस्य मोक्षस्य आदिमतो न भविष्यति, घटादिष्वदर्शनात् । घटादिविनाशवदवस्तुत्वाददोष इति चेत् , तथा च मोक्षस्य परमार्थसद्भावप्रतिज्ञाहानिः ; असत्त्वादेव शशविषाणस्येव आदिमत्त्वाभावश्च ॥
(ச.பா) இவ்வாறு விக்ஞானப் பிராப்தி காலத்தில் ஆதி உடைய மோக்ஷத்திற்கு அந்தத்துவம் இல்லை. ஏனெனில் கடம் முதலிய (ஜன்ம பதார்த்தத்தில்) இவ்வாறு காணப்படவில்லை. கடம் முதலியவைகள் போல் விநாசமுடையது போல் அவஸ்து ஆனதால் தோஷம் அற்றது என்றால் மோக்ஷத்திற்கு பரமார்த்த சத்பாவ பிரதிக்ஞைக்கு ஹானிவரும். முயற்கொம்பு போல் அசத்தாய் இருப்பதால் அதற்கு ஆதிமத்வ பாவத்திற்கு (ஆரம்பம் உடையது என்றபாவத்திற்கு) அபாவம் ஏற்படும்.
आदावन्ते च यन्नास्ति वर्तमानेऽपि तत्तथा ।
वितथैः सदृशाः सन्तोऽवितथा इव लक्षिताः ॥ ३१ ॥
காரிகா அர்த்தம் - ஆதியிலும் முடிவிலும் எது இல்லையோ அது வர்த்தமானத்திலும் இல்லை. எந்த பதார்த்த சமூகம் அசத்திற்கு சமானமாய் இருந்து கொண்டு சத்போல் காணப்படுகிறது.
सप्रयोजनता तेषां स्वप्ने विप्रतिपद्यते ।
तस्मादाद्यन्तवत्त्वेन मिथ्यैव खलु ते स्मृताः ॥ ३२ ॥
कारिका अन्वयः - तेषां स्वप्ने सप्रयोजनता विप्रतिपद्यते. तस्मात् आदि अन्तवत्त्वेनमिथ्या एव खलु ते स्मृताः ॥ ३२ ॥
காரிகா அர்த்தம் - அந்த ஜாக்ரத் பதார்த்தங்களுக்கு ஸ்வப்னாவஸ்தையில் பிரயோஜனம் சித்திக்கிறதில்லை. ஆகையால் ஆதி அந்தத்துடன் கூடி இருப்பதால் அவைகள் நிச்சயமாக மித்தையே ஆகும்.
वैतथ्ये कृतव्याख्यानौ श्लोकाविह संसारमोक्षाभावप्रसङ्गेन पठितौ ॥ ३२ ॥
(ச.பா) வைதத்திய பிரகரணத்தில் இந்த இரண்டு ஸ்லோகங்கள் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. இங்கு சம்சாரம், மோக்ஷம் இவைகளில் அபாவபிரஸங்கமானது கூறப்பட்டுள்ளது.
सर्वे धर्मा मृषा स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् ।
संवृतेऽस्मिन्प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ॥ ३३ ॥
कारिका अन्वयः - स्वप्ने कायस्यान्तर्निदर्शनात् सर्वे धर्माः मृषा संवृतेऽस्मिन् प्रदेशे वै भूतानां दर्शनं कुतः ।
காரிகா அர்த்தம் - சரீரத்தின் உள்ள காக்ஷிகளைக் காண்பதால் ஸ்வப்னகாலத்துக் காக்ஷிகள் பொய்யானவை. இவ்வளவு சுருங்கிய இடத்தில (நிரவகாச பிரஹ்மத்தில்) பூதங்களின் தர்சனம் எவ்வாறு உண்டாகும்?
(ச.பா) இந்த ஸ்லோகத்தின் மூலமாய் “निमित्तस्यानिमित्तत्वमिष्यते भूतदर्शनात्” என்ற ஸ்லோகத்தின் அர்த்தம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
न युक्तं दर्शनं गत्वा कालस्यानियमाद्गतौ ।
प्रतिबुद्धश्च वै सर्वस्तस्मिन्देशे न विद्यते ॥ ३४ ॥
कारिका अन्वयः - गतौ कालस्य अनियमात् गत्वा दर्शनं न युक्तं सर्वः वै यस्मिन्देशे तस्मिन्देशे प्रबुद्धः च न विद्यते ।
காரிகா அர்த்தம்- (ஸ்வப்னத்தில்) சென்று வருதலில் காலத்தினுடைய நியமம் இன்மையால் தூரத்தில் உள்ள அவ்விடத்தை அடைந்து பார்த்தல் பொருந்தாது. அவன் ஸ்வப்னத்தில் அவ்வேறு இடத்தையே அடைகிறான் என்றால் ஸ்வப்னம் காணும் எல்லோரும் எவ்விடத்திலிருந்து ஸ்வப்னம் காண்கிறானோ அவ்விடத்தில் விழித்தவனாக இருக்கமாட்டான்.
जागरिते गत्यागमनकालौ नियतौ, देशः प्रमाणतो यः, तस्य अनियमात् नियमस्याभावात् स्वप्ने न देशान्तरगमनमित्यर्थः ॥
(ச.பா) சென்று வருதலில் ஜாக்ரத் அவஸ்தையில் அவைகளின் இடையில் உள்ள தூரத்தைப் பொருத்து ஏற்படும் காலத்திற்கு ஒரு நியதி உள்ளது. அந்த நியன்ம் ஸ்வப்நாவஸ்தையில் இல்லாததால் வேறு தேசத்திற்கு செல்லுதல் கிடையாது என்பது இதன் அபிப்பிராயம்.
मित्राद्यैः सह संमन्त्र्य सम्बुद्धो न प्रपद्यते ।
गृहीतं चापि यत्किञ्चित्प्रतिबुद्धो न पश्यति ॥ ३५ ॥
कारिका अन्वयः - मित्राद्यैः सह संमन्त्र्य संबद्धः न प्रपद्यते गृहीतं यकिञ्चित् अपि प्रबुद्धः न पश्यति ॥ ३५ ॥
காரிகா அர்த்தம்- (ஸ்வப்ன அவஸ்தையில்) நண்பர்கள் முதலியோருடன் செய்த ஆலோசனை விழித்தபின் அந்த ஆலோசனை அடைவதில்லை. அவ்வாறே அந்த அவஸ்தையில் கிரஹிக்கபட்ட வஸ்து ஒன்றும் விழித்த பின் காண்பதில்லை
मित्राद्यैः सह संमन्त्र्य तदेव मन्त्रणं प्रतिबुद्धो न प्रपद्यते, गृहीतं च यत्किञ्चिद्धिरण्यादि न प्राप्नोति ; ततश्च न देशान्तरं गच्छति स्वप्ने ॥ ३५ ॥
(ச.பா) ஸ்வப்னத்தில் நண்பர்கள் முதலியவர்களுடன் ஆலோசனை செய்தது விழித்த உடன் அந்த ஆலோசனைகளை அடைவதில்லை. அவ்வாறே தங்கம் போன்ற எந்த ஒரு சிறு வஸ்துவையும் கூட விழிப்பு ஏற்பட்டவுடன் அடைவதில்லை. ஆகையால் ஸ்வப்னாவஸ்தையில் எந்த தேசாந்தரமும் இல்லை.
स्वप्ने चावस्तुकः कायः पृथगन्यस्य दर्शनात् ।
यथा कायस्तथा सर्वं चित्तदृश्यमवस्तुकम् ॥ ३६ ॥
कारिका अन्वयः - स्वप्ने कायः च पृथक् अन्यस्य दर्शनात् यथा अवस्तुकः तथा चित्तदृश्यं सर्वं अवस्तुकम् ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்னத்தில் எந்த சரீரம் உள்ளதோ அதுவும் அவஸ்து. ஏனெனில் அதை விட வேறான சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு அந்த சரீரமோ அவ்வாறே சித்த திருஷ்ய வஸ்துக்கள் எல்லாம் அவஸ்து ரூபமாய் இருக்கின்றன.
स्वप्ने च अटन्दृश्यते यः कायः, सः अवस्तुकः ततोऽन्यस्य स्वापदेशस्थस्य पृथक्कायान्तरस्य दर्शनात् । यथा स्वप्नदृश्यः कायः असन् , तथा सर्वं चित्तदृश्यम् अवस्तुकं जागरितेऽपि चित्तदृश्यत्वादित्यर्थः । स्वप्नसमत्वादसज्जागरितमपीति प्रकरणार्थः ॥ ३६ ॥
(ச.பா) ஸ்வப்னத்தில் நடமாடுவதாய் எந்த சரீரம் பார்க்கப்படுகிறதோ அது அவஸ்து (வஸ்து அல்ல) என்பதாகும். ஏனெனில் அந்த ஸ்வப்ன பிரதேசத்தில் இருக்கும் சரீரத்தை விட வேறு ஒரு சரீரம் (படுக்கையில்) பார்க்கப்படுகிறது. எவ்வாறு ஸ்வப்னத்தில் காணப்படும் சரீரம் அசத்தோ அவ்வாறே ஜாக்கிரத்தில் எல்லா சித்த திருஷ்யங்களும். சித்தத்தின் திருஷ்யங்களாய் இருப்பதால் அசத் என்பது தாத்பரியம். இந்தப் பிரகரணத்தின் அர்த்தம் என்னவெனில் ஸ்வப்னத்திற்கு சமமாய் இருப்பதால் ஜாக்ரத் அவஸ்தையும் அசத் ஆகும்.
इतश्च असत्त्वं जाग्रद्वस्तुनः जागरितवत
(ச.பா) (அ.கை) ஆகவே ஜாக்ரத் பதார்த்தங்கள் அசத்துவமே ஆகிறது.
ग्रहणाज्जागरितवत्तद्धेतुः स्वप्न इष्यते ।
तद्धेतुत्वात्तु तस्यैव सज्जागरितमिष्यते ॥ ३७ ॥
कारिका अन्वयः - स्वप्ने जागरितवत् ग्रहणात् तद्धेतुः इष्यते तद्धेतुत्वात् तु तस्यैव जागरितं सत् इष्यते ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத்திற்கு சமானமாய் ஸ்வப்னத்தை கிரஹித்ததினால் அதற்கு (ஜாக்ரதிற்கு) காரியம் என்று கருதப்படுகிறது. ஆனால் ஜாக்ரதத்தின் காரியமாவதால் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்யமாய் காணப்படுகிறது.
जागरितस्येव ग्रहणात् ग्राह्यग्राहकरूपेण स्वप्नस्य, तज्जागरितं हेतुः अस्य स्वप्नस्य स स्वप्नः तद्धेतुः जागरितकार्यम् इष्यते । तद्धेतुत्वात् जागरितकार्यत्वात् तस्यैव स्वप्नदृश एव सज्जागरितम् , न त्वन्येषाम् ; यथा स्वप्न इत्यभिप्रायः ।
(ச.பா) ஜாக்கிரதத்திற்கு சமானமாய் கிராஹ்ய கிராஹக ரூபமாய் ஸ்வப்னம் கிரஹிக்கப்படுவதால் இந்த ஸ்வப்ன அவஸ்தைக்கு ஜாக்ரம் காரணமாகிறது. ஆகையால் ஸ்வப்னம் அதன் ஹேதுவாகிய ஜாக்ரதத்தின் காரியமாகும். அந்த ஹேதுவாகிய ஜாக்ரத்திற்கு காரியமாய் இருப்பதால் அந்த ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு ஜாக்ரத் அவஸ்தை சத்தியமாகும் மற்றவர்களுக்கு அல்ல. ஸ்வப்னம் இவ்வாறு இருக்கிறது என்று அபிப்பிராயம்.
यथा स्वप्नः स्वप्नदृश एव सन् साधारणविद्यमानवस्तुवदवभासते, तथा तत्कारणत्वात्साधारणविद्यमानवस्तुवदवभासनम् , न तु साधारणं विद्यमानवस्तु स्वप्नवदेवेत्यभिप्रायः ॥ ३७ ॥
(ச.பா) எவ்வாறு ஸ்வப்னம் ஸ்வப்ன திருஷ்ட்டாவிற்கு சத் அதாவது சாதாரணமாய் இருக்கும் வஸ்துவிற்கு சமானமாய் விளங்குகிறதோ. அவ்வாறு அதற்கு காரணமாய் இருப்பதால் ஜாக்ரத்தும் சாதாரணமாய் இருக்கும் (விளங்கும்) வஸ்துவிற்கு சமானமாய் பிரதீதி ஆகிறது. ஆனால் உண்மையில் ஸ்வப்னத்திற்கு சமானமே அந்த சாதாரணமாய் விளங்கும் வஸ்து அல்ல என்பது இதன் அபிப்பிராயமாகும்.
ननु स्वप्नकारणत्वेऽपि जागरितवस्तुनो न स्वप्नवदवस्तुत्वम् । अत्यन्तचलो हि स्वप्नः जागरितं तु स्थिरं लक्ष्यते ।
(அ.கை) சங்கை - ஸ்வப்னத்தின் காரணமாய் இருந்தாலும். ஜாக்ரத் பதார்த்தங்கள் ஸ்வப்னத்தைப் போல் அவஸ்துவல்ல. ஏனெனில் ஸ்வப்னம் மிகவும் சஞ்சலமாய் இருக்கிறது. ஆனால் ஜாக்ரத் அவஸ்தா ஸ்திரமாய் காணப்படுகிறது.
सत्यमेवमविवेकिनां स्यात् । विवेकिनां तु न कस्यचिद्वस्तुन उत्पादः प्रसिद्धः । अतः
(ச.பா) (சமாதானம்) - சரியே, அவிவேகிகளுக்கு இவ்வாறு இருக்கலாம் ஆனால் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் உத்பத்தி சித்திக்கவில்லை.
उत्पादस्याप्रसिद्धत्वादजं सर्वमुदाहृतम् ।
न च भूतादभूतस्य सम्भवोऽस्ति कथञ्चन ॥ ३८ ॥
कारिका अन्वयः - उत्पादस्य अप्रसिद्धत्वात् सर्वं अजं उदाह्य्तम् भूतात् अभूतस्य सम्भवः कथञ्चन न अस्ति ।
காரிகா அர்த்தம் - உத்பத்தி பிரசித்தமாய் இல்லாததால் எல்லாம் அஜம் என்று கூறப்படுகிறது. இதைத் தவிர சத் வஸ்துவிலிருந்து அசத் வஸ்துவிற்கு உத்பத்தி எந்த வகையிலும் கிடையாது.
अप्रसिद्धत्वात् उत्पादस्य आत्मैव सर्वमिति अजं सर्वम् उदाहृतं वेदान्तेषु
‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) इति । यदपि मन्यसे जागरितात्सतः असन्स्वप्नो जायत इति, तदसत् । न भूतात् विद्यमानात् अभूतस्य असतः सम्भवोऽस्ति लोके । न ह्यसतः शशविषाणादेः सम्भवो दृष्टः कथञ्चिदपि ॥ ३८ ॥
(ச.பா) உத்பத்தியே இல்லாததால் எல்லாம் ஆத்மாவே ஆகையால் வேதாந்தங்களில் “सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யந்தரோ ஹ்யஜ:) எல்லாம் அஜம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சத் ஜாக்ரதத்திலிருந்து அசத் ஸ்வப்னத்தின் உத்பத்தி என்று நீ கருதினால் அது சரியானது அல்ல. ஏனெனில் உலகில் இருக்கும் வஸ்துவிலிருந்து இல்லாத வஸ்து (அசத்) உண்டாவது இல்லை. முயற்கொம்பு முதலிய அசத் பதார்த்தங்களின் உத்பத்தி எவ்வகையிலும் காணப்படவில்லை.
ननु उक्तं त्वयैव स्वप्नो जागरितकार्यमिति ; तत्कथमुत्पादोऽप्रसिद्ध इति उच्यते ?
(ச.பா) (அ.கை) உன்னால் ஸ்வப்னம் ஜாகிரத் காரியம் என்று கூறப்பட்டது இவ்வாறு இருக்கும்பொழுது உத்பத்தியே இல்லை என்று எவ்வாறு சித்திக்கும்?
शृणु तत्र यथा कार्यकारणभावोऽस्माभिरभिप्रेत इति ।
(ச.பா) (சமாதானம்) - கேள் எவ்வாறு நாங்கள் காரியகாரண பாவத்தை எந்த அபிப்ராயத்தில் கொள்கிறோமென்று-
असज्जागरिते दृष्ट्वा स्वप्ने पश्यति तन्मयः ।
असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति ॥ ३९ ॥
कारिका अन्वयः - जागरिते असत् दृष्ट्वा तन्मयः स्वप्ने पश्यति तथा स्वप्नेऽपि असत् दृष्ट्वा च प्रतिबुद्धः न पश्यति ॥ ३९ ॥
காரிகா அர்த்தம் - ஜாக்ரதவஸ்தையில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து அதன் சம்ஸ்காரத்தால் அதை ஸ்வப்னத்தில் காண்கிறான். ஆனால் ஸ்வப்னாவஸ்தையில் அசத் பதார்த்தங்களைக் பார்த்தும் ஜாக்ரதத்தில் அதைப் பார்ப்பதில்லை.
असत् अविद्यमानं रज्जुसर्पवद्विकल्पितं वस्तु जागरिते दृष्ट्वा तद्भावभावितस्तन्मयः स्वप्नेऽपि जागरितवत् ग्राह्यग्राहकरूपेण विकल्पयन्पश्यति, तथा असत्स्वप्नेऽपि दृष्ट्वा च प्रतिबुद्धो न पश्यति अविकल्पयन् , च - शब्दात् । तथा जागरितेऽपि दृष्ट्वा स्वप्ने न पश्यति कदाचिदित्यर्थः । तस्माज्जागरितं स्वप्नहेतुरित्युच्यते, न तु परमार्थसदिति कृत्वा ॥ ३९ ॥
(ச.பா) ஜாக்ரத் அவஸ்தையில் அசத் அதாவது ரஜ்ஜுவில் சர்ப்பம் போல் கல்பனை செய்யப்பட்ட இல்லாத பதார்த்தங்களைப் பார்த்து அதன் பாவத்தால் பாவிக்கப்பட்ட ஸ்வப்னத்திலும் அத்தன்மைபாவத்தல் ஜாக்ரதத்திற்கு சமானமாய் கிராஹ்யகிராஹக ரூபமாய் விகல்பிக்கப்பட்டது காணப்படுகிறது. அவ்வாறே ஸ்வப்னத்தில் அசத் பதார்த்தங்களைப் பார்த்து விழித்தவுடன் விகல்பம் செய்யப்படாததால் அவைகள் காணப்படவில்லை “च” சப்தத்தின் அபிப்பிராயம் இவ்வாறு எப்பொழுதும் ஜாக்ரதத்தில் பார்த்தும் அந்த பதார்த்தங்களை ஸ்வப்னத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் ஜாக்ரத் அவஸ்தை ஸ்வப்னத்தின் காரணம் என்பதால் அதை பரமார்த்த சத் என்று கூறமுடியாது.
परमार्थतस्तु न कस्यचित्केनचिदपि प्रकारेण कार्यकारणभाव उपपद्यते । कथम् ?
(ச.பா) (அ.கை) உண்மையில் எதனுடையதும் எதனாலும், எவ்வகையாலும் காரண காரிய பாவம் சம்பவியாது. எவ்வாறு?-
नास्त्यसद्धेतुकमसत्सदसद्धेतुकं तथा ।
सच्च सद्धेतुकं नास्ति सद्धेतुकमसत्कुतः ॥ ४० ॥
कारिका अन्वयः - असद्धेतुकम्असत् नास्ति तथा सद्धेतुकम् असत् नास्ति तथा सद्धेतुकम् सच्च नास्ति सद्धेतुकम् असत् कुतः ॥ ४० ॥
காரிகா அர்த்தம் - அசத்பதார்த்தம் அசத்திற்கு காரணமாகாது. சத் பதார்த்தமும் அசத்திற்குக் காரணமாகாது. இவ்வாறு சத் பதார்த்தமும் சத் காரணமாகாது. இவ்வாறு இருக்கும் பொழுது அசத் பதார்த்தம் சத்திற்கு எவ்வாறு காரணமாக முடியும்.
नास्ति असद्धेतुकम् असत् शशविषाणादि हेतुः कारणं यस्य असत एव खपुष्पादेः, तत् असद्धेतुकम् असत् न विद्यते । तथा सदपि घटादिवस्तु असद्धेतुकम् शशविषाणादिकार्यं नास्ति । तथा सच्च विद्यमानं घटादि वस्त्वन्तरकार्यं नास्ति । सत्कार्यम् असत् कुत एव सम्भवति ? न चान्यः कार्यकारणभावः सम्भवति शक्यो वा कल्पयितुम् । अतो विवेकिनामसिद्ध एव कार्यकारणभावः कस्यचिदित्यभिप्रायः ॥
(ச.பா) அசத்தை காரணமாக உடையது அசத் பதார்த்தமும் அல்ல. ஆகாச புஷ்பம் முதலிய அசத் பதார்த்தங்கள் எந்த ஒரு முயற்கொம்பு முதலிய அசத்திற்கு காரணம் என்றால் அசத்தை காரணமாக உடைய அசத் பதார்த்தம் இருப்பது இல்லை. அவ்வாறே கடம் முதலிய சத் வஸ்துவும் முயற்கொம்பு போன்ற அசத் பதார்த்தத்திற்குக் காரியமாகாது. இவ்வாறு சத் அதாவது விளங்குகின்ற கடம் முதலியவை எந்த வேறு சத் வஸ்துவிற்கும் காரியமாகாது. இவ்வாறானால் சத்தினுடைய காரியமும் எவ்வாறு அசத்தாக முடியும்? இதைத் தவிர எந்த ஒரு அந்நிய காரியகாரண பாவமானது சம்பவிக்காது. கல்பனையும் செய்ய முடியாது. ஆகையால் தாத்பரியம் என்னவெனில் விவேகிகளுக்கு எந்த வஸ்துவிற்கும் காரியகாரண பாவம் சித்திக்காது.
पुनरपि जाग्रत्स्वप्नयोरसतोरपि कार्यकारणभावाशङ्कामपनयन्नाह —
(ச.பா) ஜாக்ரத்தும் ஸ்வப்னமும் அசத்தாக இருந்தாலும் அதன் கார்ய காரண பாவ சம்பந்தத்தில் எந்த சங்கை உண்டாகிறதோ அதை நிவிருத்தி செய்யவே மீண்டும் கூறுகிறார்.
विपर्यासाद्यथा जाग्रदचिन्त्यान्भूतवत्स्पृशेत् ।
तथा स्वप्ने विपर्यासाद्धर्मांस्तत्रैव पश्यति ॥ ४१ ॥
कारिका अन्वयः - यथा विपर्यासात् जाग्रदि अचिन्त्यान् भूतवत् स्पृशेत् तथा स्वप्ने विपर्यासात् धर्मान् तत्रैव पश्यति ॥ ४१ ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு அவிவேகத்தால் ஜாக்ரதாவஸ்தையில் சிந்திக்க முடியாத பதார்த்தங்களை உண்மையானதாக க்ரஹிக்கிறானோ (கல்பனை செய்கிறானோ) அவ்வாறே ஸ்வப்னத்திலும் அவிவேகத்தால் (யானைமுதலிய) அசத்ய பதார்த்தங்களை அவ்வவஸ்தையிலேயே பார்க்கிறான்.
विपर्यासात् अविवेकतः यथा जाग्रत् जागरिते अचिन्त्यान्भावान् अशक्यचिन्तनान् रज्जुसर्पादीन् भूतवत् परमार्थवत् स्पृशेत् ; स्पृशन्निव विकल्पयेदित्यर्थः, कश्चिद्यथा, तथा स्वप्ने विपर्यासात् हस्त्यादीन्पश्यन्निव विकल्पयति । तत्रैव पश्यति, न तु जागरितादुत्पद्यमानानित्यर्थः ॥ ४१ ॥
(ச.பா) எவ்வாறு ஜாக்ரத அவஸ்தையில் அவிவேகி புருஷன் அவிவேகத்தால் ரஜ்ஜு சர்ப்பமுதலிய சிந்திக்க முடியாத பதார்த்தங்களை பரமார்த்தமாய் ஸ்பரிசித்து (பார்த்து) கல்பனை செய்கிறானோ அவ்வாறு ஸ்வப்னத்தில் அவிவேகத்தின் காரணமாய் யானை முதலியவைகளைப் பார்த்து கல்பனை செய்கிறான். அதாவது அவன் அந்த அவஸ்தையில் பார்க்கின்றான் அது ஜாக்ரத்தில் உத்பன்னமாவதில்லை.
उपलम्भात्समाचारादस्तिवस्तुत्ववादिनाम् ।
जातिस्तु देशिता बुद्धैरजातेस्त्रसतां सदा ॥ ४२ ॥
कारिका अन्वयः - उपलम्भात् समाचारात् अस्ति वस्तुत्व वादिनां सदा अजाते स्त्रसतां बुद्धैः जाति देशिता तु ॥ ४२ ॥
காரிகா அர்த்தம் - (வஸ்துக்களின்) உபலப்தி (ஞானம்). (வர்ணாஸ்ரம முதலியவைகளின்) ஆசாரம் இவைகளின் காரணமாய் எந்த பதார்த்தங்கள் சத்தாகக் கொள்ளப்படுகிறதோ அவ்வாறே அஜாதியினிடம் பயத்தை அடைகிறார்கள். வித்வான்கள் அவர்களின் பொருட்டு எப்பொழுதும் ஜாதியை உபதேசிக்கின்றார்கள்.
यापि बुद्धैः अद्वैतवादिभिः जातिः देशिता उपदिष्टा, उपलम्भनमुपलम्भः, तस्मात् उपलब्धेरित्यर्थः । समाचारात् वर्णाश्रमादिधर्मसमाचरणाच्च ताभ्यां हेतुभ्याम् अस्तिवस्तुत्ववादिनाम् अस्ति वस्तुभाव इत्येवंवदनशीलानां दृढाग्रहवतां श्रद्दधानां मन्दविवेकिनामर्थोपायत्वेन सा देशिता जातिः तां गृह्णन्तु तावत् । वेदान्ताभ्यासिनां तु स्वयमेव अजाद्वयात्मविषयो विवेको भविष्यतीति ; न तु परमार्थबुद्ध्या । ते हि श्रोत्रियाः स्थूलबुद्धित्वात् अजातेः अजातिवस्तुनः सदा त्रस्यन्ति आत्मनाशं मन्यमाना अविवेकिन इत्यर्थः ।
‘उपायः सोऽवताराय’ (मा. का. ३ । १५) इत्युक्तम् ॥ ४२ ॥
(ச.பா) அவ்வாறே அறிந்த அத்வைத வாதிகளாகிய வித்வான்கள் (ஜகத்தின்) உத்பத்தியை உபதேசம் செய்திருக்கின்றார்கள் (அதற்கு காரணம் என்னவெனில்). உபலம்பம் அதாவது ஞானத்தாலும், வர்ணாஸ்ரம முதலிய தர்மங்களை நன்கு கடைபிடித்தலும் ஆகிய காரணங்களால் வஸ்துக்களின் அஸ்தித்துவத்தை (இருப்பை) ஒப்புக்கொள்பவன் அதாவது துவைத பதார்த்தங்கள் வஸ்து என்று கூறுபவர்களுக்கும், திரமான அக்ரஹம் உடையவர்களுக்கும், சிரத்தை உள்ளவர்களுக்கும், மந்த விவேகமுடையவர்களுக்கும் (பிரஹ்மாத்மைக்ய ஞானத்தை அடைவதற்கான) உபாயமாய் அந்த ஜாதியின் (உத்பத்தியின்) உபதேசம் செய்யப்பட்டது. (இதன் தாத்பரியம் என்னவெனில்) இப்பொழுது இதை ஏற்றுக்கொண்டால் வேதாந்த அப்பியாசம் செய்யச்செய்ய அவர்களுக்கு தானாகவே அஜமாயும், அத்வைதமாயும் உள்ள ஆத்மசம்பந்தி விவேகம் உண்டாகும், என்பதால் அவர்களுக்கு பரமார்த்த புத்தியினால் அவர்களுக்கு உபதேசிக்கவில்லை. ஏனெனில் கேவலம் சுருதி பராயணர்களான அவிவேகிகளுக்கு ஸ்தூல புத்தி உடையதின் காரணமாய் தனக்கு நாசம் உண்டாகும் என்று அஜாதியைக் குறித்து (ஜன்மற்றதைக் குறித்து) எப்பொழுதும் பயத்தை அடைகிறார்கள் “उपायः सोऽवतारायेत्” (अद्वैतप्रकरणम्) என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டுள்ளது.
अजातेस्त्रसतां तेषामुपलम्भाद्वियन्ति ये ।
जातिदोषा न सेत्स्यन्ति दोषोऽप्यल्पो भविष्यति ॥ ४३ ॥
कारिका अन्वयः - ये अजातेः उपलम्भात् स्रसतां वियन्ति तेषां जातिदोषाः न सेत्स्यन्ति दोषोऽपि अल्पः भविष्यति ॥ ४३ ॥
காரிகா அர்த்தம் - துவைத ஞானத்தின் காரணமாய் விபரீத மார்க்கத்தில் பிரவிர்த்திக்கின்றான். அஜாதியினிடத்தில் பஸ்ம் உள்ளவன் (நல்மார்கத்தில் செல்வதால்) சிறிதுதோஷமே உள்ளது.
ये च एवमुपलम्भात्समाचाराच्च अजातेः अजातिवस्तुनः त्रसन्तः अस्ति वस्त्विति अद्वयादात्मनः, वियन्ति विरुद्धं यन्ति द्वैतं प्रतिपद्यन्त इत्यर्थः । तेषाम् अजातेः त्रसतां श्रद्दधानानां सन्मार्गावलम्बिनां जातिदोषाः जात्युपलम्भकृता दोषाः न सेत्स्यन्ति सिद्धिं नोपयास्यन्ति, विवेकमार्गप्रवृत्तत्वात् । यद्यपि कश्चिद्दोषः स्यात् , सोऽप्यल्प एव भविष्यति, सम्यग्दर्शनाप्रतिपत्तिहेतुक इत्यर्थः ॥ ४३ ॥
(ச.பா) எவர்கள் இவ்வாறு (பதார்த்தங்களை) அறிவதும் (உபலப்தி) வர்ணாச்ரமங்களின் படி ஆசாரங்களாகிய காரணங்களால் அஜன்ம வஸ்துவைக் குறித்து பயப்படுதலும், துவைத பதார்த்தம் இருக்கிறது என்று நினைத்து அத்வைத ஆத்மாவைக் காட்டிலும் விருத்தமான துவைதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அஜாதிக்குப் பயமுடைய சிரத்தை உடையவனும் சன்மார்க்கத்தை அனுசரிக்கும் புருஷர்களுக்கு ஜாதிதோஷம் அதாவது ஜாதியின் உபலப்தி காரணமாய் ஏற்படும் தோஷம் சித்திக்காது. ஏனெனில் அவர்கள் சந்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்களாய் இருக்கின்றனர். ஏதாவது ஒரு தோஷம் ஏற்பட்டாலும் அது அல்பமேயாகும். அதாவது சம்யக் தர்சனம் கிடைக்காததின் காரணமாய் ஏற்படும் தோஷமே சித்திக்கும்.
ननु उपलम्भसमाचारयोः प्रमाणत्वादस्त्येव द्वैतं वस्त्विति ; न, उपलम्भसमाचारयोर्व्यभिचारात् । कथं व्यभिचार इति, उच्यते —
(ச.பா) (அ,கை) உபலப்தியும், ஆசரணமும் (நல்மார்க்கத்தைக் கடைப்பிடித்தல்) பிரமாணம் ஆகையால் துவைத வஸ்துவே இருக்கிறது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் உபலப்தியும், ஆசரணமும் மாறுபாடு (வியபசாரம்) ஏற்படும். எவ்வாறு வியபிசாரம் ஏற்படுகிறது என்பது கூறப்படுகிறது-
उपलम्भात्समाचारान्मायाहस्ती यथोच्यते ।
उपलम्भात्समाचारादस्ति वस्तु तथोच्यते ॥ ४४ ॥
कारिका अन्वयः - यथा मायाहस्ती उपलम्भात् समाचारात् उच्यते तथा उपलम्भात् समाचारात् अस्ति वस्तु (इति) उच्यते ।
காரிகா அர்த்தம் - உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் எவ்வாறு மாயையால் உண்டான யானை (இருக்கிறது) என்று கூறுகிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரணத்தின் காரணத்தால் வஸ்து இருக்கிறது என்கிறோம்.
उपलभ्यते हि मायाहस्ती हस्तीव, हस्तिनमिवात्र समाचरन्ति बन्धनारोहणादिहस्तिसम्बन्धिभिर्धर्मैः, हस्तीति चोच्यते असन्नपि यथा, तथैव उपलम्भात्समाचारात् द्वैतं भेदरूपं अस्ति वस्तु इत्युच्यते । तस्मान्नोपलम्भसमाचारौ द्वैतवस्तुसद्भावे हेतू भवत इत्यभिप्रायः ॥ ४४ ॥
(ச.பா) யானைக்கு சமானமாய் மாயையினால் உண்டான யானையும் காணப்படுகிறது. யானையைப் போலவே (மாயா யானையிலும்) கட்டுதல், ஏறுதல் முதலியயானைக்கு சம்பந்தப்பட்ட தர்மங்கள் மூலமாய் வியவஹாரங்கள் நடக்கின்றன. எவ்வாறு அசத்தாய் இருந்தாலும் யானை என்கிறோமோ அவ்வாறே உபலப்தி, ஆசரண காரணத்தால் பேத ரூப துவைத வஸ்து என்று கூறப்படுகிறது. ஆகையால் உபலப்தி, ஆசரணம், த்வைத வஸ்துவின் சத்பாவத்திற்குக் காரணமாகாது என்பது அபிப்ராயம்.
किं पुनः परमार्थसद्वस्तु, यदास्पदा जात्याद्यसद्बुद्धय इत्याह —
(ச.பா) (அ.கை) மேலும் எதன் ஆஸ்ரயத்தால் ஜாதி முதலிய அசத் புத்தி ஏற்படுகிறதே அது பரமார்த்த வஸ்துவா? என்ன என்பதைக் குறித்து கூறுகிறார்-
जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव च ।
अजाचलमवस्तुत्वं विज्ञानं शान्तमद्वयम् ॥ ४५ ॥
कारिका अन्वयः - यथा जात्याभासं चलाभासं वस्त्वाभासं तथैव अजम् अचलम् अवस्तुत्वं विज्ञानं शान्तं अद्वयम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஜாதிக்கு (உத்பத்திக்கு) சமானமாய் தோற்றமளிப்பதாயும் சலிப்பது போல் தோன்றுவதாயும் வஸ்துவைப் போல் தோன்றுவதாயும் இருப்பது அந்த அஜமாயும், அசலமாயும், அவஸ்து ரூபமாயும், சாந்தமாயும், அத்வதீய விக்ஞானமாயும் இருக்கிறது.
अजाति सत् जातिवदवभासत इति जात्याभासम् , तद्यथा देवदत्तो जायत इति । चलाभासं चलमिवाभासत इति, यथा स एव देवदत्तो गच्छतीति । वस्त्वाभासं वस्तु द्रव्यं धर्मि, तद्वदवभासत इति वस्त्वाभासम् , यथा स एव देवदत्तो गौरो दीर्घ इति । जायते देवदत्तः स्पन्दते दीर्घो गौर इत्येवमवभासते । परमार्थतस्तु अजमचलमवस्तुत्वमद्रव्यं च । किं तदेवंप्रकारम् ? विज्ञानं विज्ञप्तिः, जात्यादिरहितत्वाच्छान्तम् अत एव अद्वयं च तदित्यर्थः ॥ ४५ ॥
(ச.பா) - எது அஜாதியாய் இருந்து கொண்டு ஜாதி போல் தோன்றுகிறதோ அதை ஜாதி ஆபாசம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு தேவதத்தன் உத்பன்னமானானோ அவ்வாறு ஆகும். அசைவற்றிருப்பினும் அசைவது போல் தோன்றுவது சலாபாசம். அது தேவதத்தன் செல்கிறான் என்பது. (वस्तु आभासम्) வஸ்து ஆபாசம் = வஸ்து தர்மமுடைய திரவ்யம் என்று கூறுகிறோம். அது போன்று தோன்றுவதை வஸ்து ஆபாசம் என்கிறோம். எவ்வாறு எனில் தேவதத்தன் வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்பதுபோல் ஆகும். தேவதத்தன் உத்பன்னமாகின்றான், நடக்கின்றான், அவ்வாறே வெள்ளையாயும், உயரமாயும் இருக்கிறான் என்று இவ்வாறு தோன்றுகின்றான். ஆனால் உண்மையில் (பரமார்த்தமாக) அவன் அஜன் (பிறப்பற்றவன்), சலனமற்றவன், அவஸ்து, அதிரவ்யம் ஆக இருக்கின்றான். விக்ஞானம் அதாவது விக்ஞப்தி (विज्ञप्ति) க்கு ஜாதி (உத்பன்னம்) முதலியவைகள் இல்லாததால் சாந்தம். ஆகையால் அத்வயம் (இரண்டற்றது) என்பது தாத்பர்யம்.
एवं न जायते चित्तमेवं धर्मा अजाः स्मृताः ।
एवमेव विजानन्तो न पतन्ति विपर्यये ॥ ४६ ॥
कारिका अन्वयः - एवं चित्तं न जायते एवं धर्माः अजाः स्मृताः एवमेव विजानन्तः विपर्यये न पतन्ति ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தம் உற்பத்தியாவதில்லை. ஆகையால் ஆத்மா அஜன்மா (உத்பத்தி அற்றது). இவ்வாறு அறிந்தவன் பிரமத்தை (भ्रमम्) அடைவதில்லை.
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः न जायते चित्तम् । एवं धर्माः आत्मानः अजाः स्मृताः ब्रह्मविद्भिः । धर्मा इति बहुवचनं देहभेदानुविधायित्वादद्वयस्यैव उपचारतः ।
(ச.பா) - இவ்வாறு முற்கூறப்பட்டக் காரணங்களால் சித்தத்திற்கு ஜன்மம் (உத்பத்தி) ஏற்படாது. மேலும் இதனால் பிரஹ்மவேத்தாக்கள் தர்மங்களுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு அஜன்மம் (உத்பத்தி அற்றது) என்று நினைக்கிறார்கள். வேறுவேறு தேஹங்களைத் தொடர்ந்து ஊடுருவி இருப்பதால் ஒரே அத்விதீய ஆத்மாவை உபசாரமாக தர்மா: (धर्माः) என்று பஹுவசனம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட விக்ஞானத்தை அதாவது ஜாதி (பிறப்பு) முதலியவை அற்றஅத்விதீய ஆத்மதத்வத்தை அறிந்தவர் பாஹ்ய ஏஷணைகளிலிருந்து விடுபட்டவர்கள் மறுபடியும் அவித்யா ரூப அந்த காரமாகிய சமுத்திரத்தில் விழமாட்டார்கள், “तत्रको मोहः कः शोकएकत्वमनुपश्यतः” (தத்ரகோமோஹ: க: சோகஏகத் வமனுபச்யத: = அங்கு மோஹமேது, சோகமேது ஏகத்துவத்தைப் பார்ப்பவனுக்கு) என்பது முதலிய மந்திர வர்ணங்களால் அறிகிறோம்.
यथोक्तं परमार्थदर्शनं प्रपञ्चयिष्यन्नाह —
(ச.பா) (அ.கை) முன்பு கூறப்பட்ட பரமார்த்த ஞானத்தை விஸ்தாரமாய் நிரூபிப்பதற்காகக் கூறுகிறார்-
ऋजुवक्रादिकाभासमलातस्पन्दितं यथा ।
ग्रहणग्राहकाभासं विज्ञानस्पन्दितं तथा ॥ ४७ ॥
कारिका अन्वयः - यथा अलातस्पन्दितं ऋजुवक्रादिका-भासं तथा विज्ञान स्पन्दितं ग्रहणग्राहाकाभासम् ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு கொள்ளிக்கட்டையின் சுழற்சி நேராகவும், கோணலாகவும், இன்னும் பல வாறாக ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறே விக்ஞான ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தின் ஸ்புரணமும் விஷயத்தை கிரஹிப்பதாயும் கிரஹிக்கப்பட்டதாயும் தோற்றமளிக்கிறது.
यथा हि लोके ऋजुवक्रादिप्रकाराभासम् अलातस्पन्दितम् उल्काचलनम् , तथा ग्रहणग्राहकाभासं विषयिविषयाभासमित्यर्थः । किं तत् ? विज्ञानस्पन्दितं स्पन्दितमिव स्पन्दितमविद्यया । न ह्यचलस्य विज्ञानस्य स्पन्दनमस्ति,
‘अजाचलम्’ (मा. का. ४ । ४५) इति ह्युक्तम् ॥ ४७ ॥
(ச.பா) - எவ்வாறு உலகில் கொள்ளிக் கட்டையின் சுழற்சி நேராகவும் கோணலாகவும் இன்னும் பலவாறாகவும் ஆபாசமாய் (பொய்யாய்) காக்ஷி அளிக்கிறதோ அவ்வாறு கிரஹிப்பது, கிரஹிக்கப்பட்டது ஆகிய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கும், அதாவது இந்திரிய விஷய ரூபமாய் ஆபாசமாய் தோற்றமளிக்கிறது. அது யார்? விக்ஞானத்தின் ஸ்பந்தனம் அதாவது அவித்தையின் காரணமாய் ஸ்பந்தனமாவது போல் ஸ்பந்தனம் தோற்றமளிக்கிறது. உண்மையில் அசலமான விக்ஞானத்திற்கு ஸ்பந்தனம் ஏற்பட முடியாது. ஏனெனில் அது அஜம், அசலமானதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
अस्पन्दमानमलातमनाभासमजं यथा ।
अस्पन्दमानं विज्ञानमनाभासमजं तथा ॥ ४८ ॥
कारिका अन्वयः - यथा अस्पन्दमानम् अलातम् अनाभासम् अजम् तथा अस्पन्दमानं अनाभासं विज्ञानं अजं भविष्यति ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு சுழற்சி அற்ற அதே கொள்ளிக்கட்டையானது நேர், வளைவு போன்ற ஆபாசத் தோற்றம் அற்றதாயும், அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே சுழற்ச்சி (ஸ்பந்தனம்) அற்றவிக்ஞானமும் ஆபாசமற்றதாயும் அஜமாயும் இருக்கிறது.
अस्पन्दमानं स्पन्दनवर्जितं तदेव अलातम् ऋज्वाद्याकारेणाजायमानम् अनाभासम् अजं यथा, तथा अविद्यया स्पन्दमानम् अविद्योपरमे अस्पन्दमानं जात्याद्याकारेण अनाभासम् अजम् अचलं भविष्यतीत्यर्थः ॥
(ச.பா) - எவ்வாறு கொள்ளிக்கட்டை ஸ்பந்தனம் (அசைவு) இல்லாத பொழுது நேர் முதலிய ஆகாரங்களாய் தோன்றுவது இல்லாததால் அநாபாசமாயும் (தோன்றுதல் அற்றது) அஜமாயும் இருக்கிறதோ அவ்வாறே அவித்தையினால் ஸ்பந்திக்கும் விக்ஞானம் அவித்தை நிவிர்த்தியான பின் ஜாதி (உத்பத்தி) முதலிய ரூபத்தால் ஸ்பந்தனம் இல்லாததால் அநாபாசம், அஜம், அசலம் ஆகும் என்பது இதன் தாத்பர்யம்.
किं च-
(ச.பா) (அ,கை) மேலும்-
अलाते स्पन्दमाने वै नाभासा अन्यतोभुवः ।
न ततोऽन्यत्र निःस्पन्दान्नालातं प्रविशन्ति ते ॥ ४९ ॥
कारिका अन्वयः - स्पन्दमाने अलाते वै आभासाः अन्यतोभुवः न ते निस्पन्दात् ततः अन्यत्र न निर्गताः अलातं न प्रविशन्ति ॥
காரிகா அர்த்தம் - கொள்ளிக்கட்டைக்கு ஸ்பந்தனம் (அசைவு) இருந்தாலும் அந்த ஆபாசம் வேறு எந்த காரணத்தினாலும் அல்ல. அவ்வாறே அதற்கு ஸ்பந்தனம் இல்லாத போதும் வேறு எங்கும் செல்வதில்லை. மேலும் அந்த கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதில்லை.
तस्मिन्नेव अलाते स्पन्दमाने ऋजुवक्राद्याभासाः अलातादन्यतः कुतश्चिदागत्यालाते नैव भवन्तीति नान्यतोभुवः । न च तस्मान्निःस्पन्दादलातादन्यत्र निर्गताः । न च निःस्पन्दमलातमेव प्रविशन्ति ते ॥
(ச.பா) - சுழல்கின்ற கொள்ளிக்கட்டையில் தோன்றும் நேர், கோணல், வட்டம் போன்ற ஆபாசத்தோற்றங்கள் அந்தக் கொள்ளிக்கட்டையைக்காட்டிலும் வேறான இடத்திலிருந்து தோன்றியவைகளோ உண்மையானவைகளோ அல்ல. அந்த ஆபாசத் தோற்றங்கள். சுழற்சி அற்ற அந்தக் கொள்ளிக்கட்டையினைக் காட்டிலும் வேறு இடத்திற்கு செல்வதுமில்லை, மேலும் அந்த ஆபாசத்தோற்றங்கள் அதே கொள்ளிக்கட்டையில் பிரவேசிப்பதும் இல்லை.
किं च-
(ச.பா) (அ,கை) மேலும்-
न निर्गता अलातात्ते द्रव्यत्वाभावयोगतः ।
विज्ञानेऽपि तथैव स्युराभासस्याविशेषतः ॥ ५० ॥
कारिका अन्वयः - ते द्रव्यत्वाभावयोगतः अलातात् न निर्गताः आभासस्य अविशेषतः विज्ञानेऽपि तथैव स्युः ॥
காரிகா அர்த்தம் - திரவ்யத்துவம் அபாவமாய் இருப்பதால் கொள்ளிக்கட்டையிலிருந்து வெளியில் வருவது இல்லை மறுபடியும் நுழைவதும் இல்லை. இவ்வாறு ஆபாசத்தில் சமானத்தன்மை இருத்தலால் விக்ஞான ரூபமான ஆத்ம ஸ்வரூபத்திலும் ஆபாசங்கள் அவ்வாறே இருக்கின்றது. என்று அறிய வேண்டும்.
न निर्गता अलातात् ते आभासाः गृहादिव, द्रव्यत्वाभावयोगतः, द्रव्यस्य भावो द्रव्यत्वम् , तदभावः द्रव्यत्वाभावः, द्रव्यत्वाभावयोगतः द्रव्यत्वाभावयुक्तेः वस्तुत्वाभावादित्यर्थः । वस्तुनो हि प्रवेशादि सम्भवति, नावस्तुनः । विज्ञानेऽपि जात्याद्याभासाः तथैव स्युः, आभासस्य अविशेषतः तुल्यत्वात् ॥ ५० ॥
(ச.பா) - திரவ்யத்தின் பாவம் என்பது திரவ்யத்துவம். அதன் அபாவம் திரவ்யத்துவ அபாவம் எனக் கூறப்படுகிறது. திரவ்யத்துவ அபாவ ரூப யுக்தியினால் வஸ்துத்துவத்தின் அபாவம் ஆவதால் அது ஆபாசம் ஆகும். ஆபாச வீடு முதலியவைகளில் உள்ள பிரவேசம் போல் கொள்ளிக்கட்டையிலும் நிகழாது. ஏனெனில் பிரவேசம் முதலியவைகள் வஸ்துவிற்கே சம்பவிக்கும் அவஸ்துவிற்கு சம்பவிக்காது. அவ்வாறே விக்ஞானத்திலும் ஜாதி (உத்பன்னம்) முதலிய ஆபாசமும் அவ்வாறே என்று அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆபாச விஷயத்தில் சமானமாய் இருப்பதால் ஆகும்.
कथं तुल्यत्वमित्याह —
(ச.பா) (அ.கை) - அதன் ஒற்றுமை எவ்வாறு என்பதைக் கூறுகிறார்-
विज्ञाने स्पन्दमाने वै नाभासा अन्यतोभुवः ।
न ततोऽन्यत्र निःस्पन्दान्न विज्ञानं विशन्ति ते ॥ ५१ ॥
कारिका अन्वयः - विज्ञाने स्पन्दमाने वै अन्यतोभुवः आभासाः न निस्पन्दात् ततः अन्यत्र न ते विज्ञानं न विशन्ति ।
காரிகா அர்த்தம் - விக்ஞானத்திற்கு ஸ்பந்தனம் இருந்தாலும் அதன் ஆபாசம் வேறு காரணத்தால் உண்டாகாது. அவ்வாறே அதற்கு ஸ்பந்தனம் இல்லாவிட்டாலும் வேறு எங்கும் செல்லாது மேலும் விக்ஞானத்தில் பிரவேசிக்காது.
न निर्गतास्ते विज्ञानाद्द्रव्यत्वाभावयोगतः ।
कार्यकारणताभावाद्यतोऽचिन्त्याः सदैव ते ॥ ५२ ॥
कारिका अन्वयः - ते द्रव्यत्व अभाव योगतः विज्ञानात् न निर्गता, यतः कार्यकारणता अभावात् ते सदैव अचिन्त्याः ।
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்கு அபாவம் இருப்பதால் அது விக்ஞானத்திலும் பிரவேசிக்காது. ஏனெனில் காரியகாரணம் அபாவமாய் இருப்பதால் அவை எப்பொழுதும் அசிந்தியமாய் இருக்கிறது.
अलातेन समानं सर्वं विज्ञानस्य ; सदा अचलत्वं तु विज्ञानस्य विशेषः । जात्याद्याभासा विज्ञाने अचले किङ्कृता इत्याह — कार्यकारणताभावात् जन्यजनकत्वानुपपत्तेरभावरूपत्वात् अचिन्त्याः ते यतः सदैव ।
(ச.பா) கொள்ளிக்கட்டைக்கு சமானம் விக்ஞான விஷயம். எப்பொழுதும் அசலமாய் இருப்பது விக்ஞானத்தின் விசேஷம். ஜாதி (உத்பத்தி) முதலிய ஆபாசம் அசலமான விக்ஞானத்தில் எவ்வாறு தோன்றியது? என்பதைக் கூறுகிறார். காரியகாரணத்தின் அபாவத்தால் ஜன்ய ஜனகத்துவம் இல்லாததால் அபாவமாய் இருப்பதால் அசிந்தியமாய் எப்பொழுதும் இருக்கிறது.
यथा असत्सु ऋज्वाद्याभासेषु ऋज्वादिबुद्धिर्दृष्टा अलातमात्रे, तथा असत्स्वेव जात्यादिषु विज्ञानमात्रे जात्यादिबुद्धिर्मृषैवेति समुदायार्थः ॥
(ச.பா) எவ்வாறு நேர் முதலிய ஆபாசங்கள் இல்லாவிடினும் கொள்ளிக்கட்டையில் நேர் முதலிய புத்தி உண்டாகிறதோ அவ்வாறே ஜாதி (உத்பத்தி) முதலியவை இல்லாவிடினும் கேவல விக்ஞானத்தில் ஜாதி முதலிய புத்தி தோன்றுவது மித்தையாகும்.
अजमेकमात्मतत्त्वमिति स्थितम् । तत्र यैरपि कार्यकारणभावः कल्प्यते, तेषां
(ச.பா) (அ.கை) அஜமாயும், ஏகமாயும் இருக்கும். ஆத்ம தத்துவத்தில் எவர்களால் காரியகாரணபாவம் கல்பிக்கப்படுகிறது அவர்களுடைய மதத்திலும்-
द्रव्यं द्रव्यस्य हेतुः स्यादन्यदन्यस्य चैव हि ।
द्रव्यत्वमन्यभावो वा धर्माणां नोपपद्यते ॥ ५३ ॥
कारिका अन्वयः - अन्यस्य द्रव्यस्य अन्यत् द्रव्यं चैव हेतुः स्यात् हि धर्माणां द्रव्यत्वं अन्यभावो वा न उपपद्यते ॥ ५३ ॥
காரிகா அர்த்தம் - திரவ்யத்திற்குக் காரணம் திரவ்யமாகும். மேலும் வேறு திரவ்யத்திற்கு வேறு திரவியம் காரணமாக வேண்டும். ஆனால் ஆத்மாவிடத்தில் திரவியத்துவமும் அதிரவியத்துவமும் சம்பவிக்கவில்லை.
द्रव्यं द्रव्यस्यान्यस्यान्यत् हेतुः कारणं स्यात् , न तु तस्यैव तत् । नाप्यद्रव्यं कस्यचित्कारणं स्वतन्त्रं दृष्टं लोके । न च द्रव्यत्वं धर्माणाम् आत्मनाम् उपपद्यते अन्यत्वं वा कुतश्चित् , येन अन्यस्य कारणत्वं कार्यत्वं वा प्रतिपद्येत । अतः अद्रव्यत्वादनन्यत्वाच्च न कस्यचित्कार्यं कारणं वा आत्मेत्यर्थः ॥ ५३ ॥
(ச.பா) வேறு திரவியம்வேறு திரவியத்திற்குக் காரணமாகலாம். ஆனால் அந்த திரவியமே அதற்குக் காரணமாகாது. திரவியம் அல்லாததை உலகில் எதற்கும் ஸ்வதந்திரமாய் காரணம் என காணப்படவில்லை அவ்வாறு தர்மங்களாகிய ஆத்மாக்களிடத்தில் திரவியத்துவமோ, அன்யத்துவமோ எவ்வகையிலும் சம்பவிக்கவில்லை. இதிலிருந்து. எந்த ஒரு வேறு திரவியத்தின் காரணத்துவம், அல்லது காரியத்துவம் அடையலாம். ஆகையால் அதிரவ்யமாயும், அனன்யத்துவமாயும் இருப்பதால் ஆத்மா எதற்கும் காரியமாகவோ காரணமாகவோ ஆக முடியாது.
एवं न चित्तजा धर्माश्चित्तं वापि न धर्मजम् ।
एवं हेतुफलाजातिं प्रविशन्ति मनीषिणः ॥ ५४ ॥
कारिका अन्वयः - एवं धर्माः चित्तजाः न चित्तं वाऽपि धर्मजं एवं मनीषिणः न हेतु फलाजातिं प्रविशन्ति ॥
காரிகா அர்த்தம் - இவ்வாறு பாஹ்ய பதார்த்தம் சித்தத்திலிருந்து உண்டாகவில்லை. சித்தமும் பாஹ்ய பதார்த்தங்களிலிருந்து உத்பன்னமாகவில்லை. ஆகையால் ஆத்ம ஞானிகள் (மநீஷிகள்) காரிய, காரணத்திற்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள்.
एवं यथोक्तेभ्यो हेतुभ्यः आत्मविज्ञानस्वरूपमेव चित्तमिति, न चित्तजाः बाह्यधर्माः, नापि बाह्यधर्मजं चित्तम् , विज्ञानस्वरूपाभासमात्रत्वात्सर्वधर्माणाम् । एवं न हेतोः फलं जायते, नापि फलाद्धेतुरिति हेतुफलयोरजातिं हेतुफलाजातिं प्रविशन्ति अध्यवस्यन्ति । आत्मनि हेतुफलयोरभावमेव प्रतिपद्यन्ते ब्रह्मविद इत्यर्थः ॥
(ச.பா) இவ்வாறு முன் கூறப்பட்டக் காரணங்களால் சித்தம் ஆத்ம விக்ஞான ரூபமேயாகும். சித்தத்திலிருந்து பாஹ்ய பதார்த்தங்கள் உத்பன்னமாகவில்லை. ஏனெனில் எல்லா தர்மங்களும் விக்ஞான ஸ்வரூப ஆபாசங்களே. இவ்வாறு ஹேதுவிலிருந்து பலத்தின் உத்பத்தியும், பலத்திலிருந்து ஹேதுவின் உத்பத்தியும் இல்லை. ஆகையால் பிரஹ்ம ஞானிகள் ஹேது, பலம் இவைகளுக்கு உத்பத்தி இல்லை என்று நிச்சயம் செய்கிறார்கள். இதன் தாத்பரியம் என்னவெனில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் ஹேது, பலன் இவைகளின் அபாவத்தையே காண்கின்றனர் என்பதாகும்.
ये पुनर्हेतुफलयोरभिनिविष्टाः, तेषां किं स्यादिति, उच्यते — धर्माधर्माख्यस्य हेतोः अहं कर्ता मम धर्माधर्मौ तत्फलं कालान्तरे क्वचित्प्राणिनिकाये जातो भोक्ष्ये इति
(ச.பா) (அ.கை) எவர்களுக்கு ஹேது, பலன்களில் அபிநிவேசம் இருக்கிறதோ அவர்களுக்கு என்ன நேரும் - தர்மாதர்மங்கள் எனப்படும் ஹேதுவிற்கு நான் கர்த்தாவாய் இருக்கிறேன். தர்மம், அதர்மங்கள் என்னுடையது. காலாந்தரத்தில் எந்த பிராணி சரீரத்திலாவது உத்பன்னமாகி அதன்பலனை அனுபவிப்பேன் என்று இவ்வாறு கூறுகிறார்.
यावद्धेतुफलावेशस्तावद्धेतुफलोद्भवः ।
क्षीणे हेतुफलावेशे नास्ति हेतुफलोद्भवः ॥ ५५ ॥
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् हेतुफलोद्भवः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலத்தில் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையில் ஹேது, பலன்களின் உத்பத்தி இருக்கிறது. ஹேது, பலன்களின் ஆக்ரஹம் நீங்கியபின் ஹேது, பலரூப சம்சாரத்தின் உத்பத்தி இல்லை.
यावद्धेतुफलयोरावेशः हेतुफलाग्रह आत्मन्यध्यारोपणम् , तच्चित्ततेत्यर्थः ; तावद्धेतुफलयोरुद्भवः धर्माधर्मयोस्तत्फलस्य चानुच्छेदेन प्रवृत्तिरित्यर्थः । यदा पुनर्मन्त्रौषधिवीर्येणेव ग्रहावेशो यथोक्ताद्वैतदर्शनेन अविद्योद्भूतहेतुफलावेशोपनीतो भवति, तदा तस्मिन्क्षीणे नास्ति हेतुफलोद्भवः ॥
(ச.பா) எது வரையிலும் ஹேது, பலம் இவைகளில் ஆக்ரஹம் இருக்கிறதோ அவை ஆத்மாவில் ஆரோபம் செய்தல் அது சித்தததன்மையாகும். அது வரையிலும் ஹேது, பலன் இவைகளின் உத்பத்தி இருக்கும். அதாவது அது வரையில் தர்மாதர்மம், அவைகளின் பலன்களும் அவிச்சின்னமாய் பிரவிர்த்திக்கும். ஆனால் எப்பொழுது மந்திரம், மருந்து இவைகளின் சாமர்த்தியத்தால் பீடையானது நீங்குகிறதோ அதைப் போல் முன்பு கூறப்பட்ட அத்வைத போதத்தால் அவித்தையினால் உண்டான ஹேது, பலன்கள் நிவர்த்தியாகிறது. அது க்ஷீணமானவுடன் ஹேது பலன்களின் உத்பத்தி உண்டாகாது.
यदि हेतुफलोद्भवः, तदा को दोष इति, उच्यते —
(ச.பா) (அ.கை) ஹேது, பலன்களின் உத்பத்தியினால் என்ன தோஷம்? அதைக் கூறுகிறார்.
यावद्धेतुफलावेशः संसारस्तावदायतः ।
क्षीणे हेतुफलावेशे संसारं न प्रपद्यते ॥ ५६ ॥
कारिका अन्वयः - यावत् हेतुफलावेशः तावत् संसारः आयतः हेतुफलावेशे क्षीणेसति संसारं न प्रपद्यते ।
காரிகா அர்த்தம் - எது வரையிலும் ஹேது, பலன்களின் ஆக்ரஹம் இருக்கிறதோ அது வரையிலும் சம்சாரம் பெறுகுகிறது. எப்பொழுது ஹேது, பலன்களின் ஆவேசம் நஷ்டமாகின்றதோ அப்பொழுது வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
यावत् सम्यग्दर्शनेन हेतुफलावेशः न निवर्तते, अक्षीणः संसारः तावत् आयातः दीर्घो भवतीत्यर्थः । क्षीणे पुनः हेतुफलावेशे संसारं न प्रपद्यते, कारणाभावात् ॥ ५६ ॥
(ச.பா) எது வரையிலும் சம்யக்ஞானத்தால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் நீங்கவில்லையோ அது வரையிலும் சம்சாரம் க்ஷீணமாகாததால் பெறுகுகிறது. ஆனால் ஹேது பலன்களின் ஆக்ரஹம் க்ஷீணமடைந்ததும் காரணம் ஒன்றும் இல்லாததால் வித்வான் சம்சாரத்தை அடைவதில்லை.
ननु अजादात्मनोऽन्यन्नास्त्येव ; तत्कथं हेतुफलयोः संसारस्य च उत्पत्तिविनाशावुच्येते त्वया ?
(ச.பா) (அ.கை) அஜன்மா ஆத்மாவைக் காட்டிலும் வேறாக ஒன்றும் இல்லை. பின் எவ்வாறு ஹேது, பலம் அவ்வாறே சம்சாரத்தின் விநாசம், உத்பத்தியை வர்ணிக்கின்றீர்கள்?
शृणु -
(ச.பா) (சமாதானம்) - கேள் -
संवृत्या जायते सर्वं शाश्वतं नास्ति तेन वै ।
सद्भावेन ह्यजं सर्वमुच्छेदस्तेन नास्ति वै ॥ ५७ ॥
कारिका अन्वयः - संवृत्या सर्वं जायते तेन शाश्वतं नास्ति वै सद्भावेन सर्वं अजं तेन उच्छेदः नास्ति वै ।
காரிகா அர்த்தம் - எல்லா பதார்த்தங்களும் வியவஹார திருஷ்டியினால் உண்டானவை. ஆகையால் நித்தியமல்ல. பரமார்த்த திருஷ்டியில் எவை எல்லாம் உண்டோ அவை அஜம். ஆகையால் எதற்கும் விநாசம் இல்லை.
संवृत्या संवरणं संवृतिः अविद्याविषयो लौकिकव्यवहारः ; तया संवृत्या जायते सर्वम् । तेन अविद्याविषये शाश्वतं नित्यं नास्ति वै । अतः उत्पत्तिविनाशलक्षणः संसारः आयत इत्युच्यते । परमार्थसद्भावेन तु अजं सर्वम् आत्मैव यस्मात् ; अतो जात्यभावात् उच्छेदः तेन नास्ति वै कस्यचिद्धेतुफलादेरित्यर्थः ॥ ५७ ॥
(ச.பா) அவித்யா விஷயமான லௌகிக வியவஹாரத்தின் பெயர் சம்விருத்தி (संवृति). அந்த சம்விருத்தியிலிருந்து எல்லாவற்றின் உத்பத்தியும் உண்டாகிறது, ஆகையால் அந்த அவித்யா விஷயத்தில் எந்த ஒரு வஸ்துவும் சாஸ்வதம் அதாவது நித்யம் இல்லை. ஆகையால் உத்பத்தி விநாசமுடைய சம்சாரம் விஸ்தாரம் அடைகிறது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பரமார்த்த சத்தையில் எல்லாம் அஜன்மா ஆத்மாவே. ஆகையால் ஜன்மத்தின் அபாவம் இருப்பதால் எந்த ஒரு ஹேது, பலனும் உச்சேதம் (சேதம்) அடைவதில்லை என்பது தாத்பர்யம்.
धर्मा य इति जायन्ते जायन्ते ते न तत्त्वतः ।
जन्म मायोपमं तेषां सा च माया न विद्यते ॥ ५८ ॥
कारिका अन्वयः - ये धर्माः इति जायन्ते ते तत्त्वतः न जायन्ते तेषां जन्म मायोपमं सा च माया न विद्यते ।
காரிகா அர்த்தம் - தர்மம் (ஜீவன்) உத்பன்னம் ஆகிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் அவை உத்பன்னமாவதில்லை. அதன் ஜன்மம் மாயைக்கு ஒப்பானது. மேலும் அந்தமாயை (உண்மையில்) இல்லை.
येऽप्यात्मानोऽन्ये च धर्मा जायन्त इति कल्प्यन्ते, ते इति एवंप्रकारा यथोक्ता संवृतिर्निर्दिश्यत इति संवृत्यैव धर्मा जायन्ते । न ते तत्त्वतः परमार्थतः जायन्ते । यत्पुनस्तत्संवृत्या जन्म तेषां धर्माणां यथोक्तानां यथा मायया जन्म तथा तत् मायोपमं प्रत्येतव्यम् ।
(ச.பா) எவர்கள் ஆத்மா அவ்வாறே, (धर्मा) ஜீவன்கள் வேறு இவ்வாறு கல்பனை செய்கிறார்களோ அவர்கள் இவ்வாறு எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) சம்விருத்தியினால் உத்பன்னமாகிறது. இங்கு इति என்ற சப்தத்தினால் இதற்கு முன் ஸ்லோகத்தில் சம்விருத்தி நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது. அவைகள் பரமார்த்தமாக (உண்மையாக) உத்பன்னமாகவில்லை. ஏனெனில் அந்த முன்கூறப்பட்ட தர்மங்களுக்கு எந்த சம்விருத்தியினால் உண்டானது ஜன்மம், அது எவ்வாறோ அவ்வாறு மாயையினால் ஜன்மம் உண்டாகிறது. ஆகையால் அதை மாயைக்கு ஒப்பாக அறியப்பட வேண்டும்.
माया नाम वस्तु तर्हि ; नैवम् , सा च माया न विद्यते । मायेत्यविद्यमानस्याख्येत्यभिप्रायः ॥ ५८ ॥
(ச.பா) அவ்வாறானால் மாயை சத் வஸ்துவா? அவ்வாறு அல்ல, அந்த மாயை இல்லை. மாயை என்பது இல்லாத வஸ்துவின் பெயர் என்றது அபிப்பிராயம்.
कथं मायोपमं तेषां धर्माणां जन्मेति, आह —
(ச.பா) (அ.கை) எவ்வாறு அந்த தர்மங்களின் ஜன்மம் மாயைக்கு சமானமாகும்? அது கூறப்படுகிறது-
यथा मायामयाद्बीजाज्जायते तन्मयोऽङ्कुरः ।
नासौ नित्यो न चोच्छेदी तद्वद्धर्मेषु योजना ॥ ५९ ॥
कारिका अन्वयः - यथा मायामयात् बीजात् तन्मयः अङ्कुरः जायते असौ न नित्यः न उच्छेदी च तद्वत् धर्मेषु योजना ।
காரிகா அர்த்தம் - எவ்வாறு மாயாமய பீஜத்திலிருந்து அங்குரம் உத்பத்தியாகிறது. மேலும் அது நித்யமும் ஆகாது நாசமுடையதும் ஆகாது. அவ்வாறே தர்ம விஷயத்திலும் இந்த யுக்தியை அறியவேண்டும்.
यथा मायामयात् आम्रादिबीजात् जायते तन्मयः मायामयः अङ्कुरः, नासावङ्कुरो नित्यः, न च उच्छेदी विनाशी वा । अभूतत्वादेव धर्मेषु जन्मनाशादियोजना युक्तिः, न तु परमार्थतो धर्माणां जन्म नाशो वा युज्यत इत्यर्थः ॥ ५९ ॥
(ச.பா) எவ்வாறு மாயாமயமான மாம்பழம் முதலியவை பீஜத்திலிருந்து உத்பன்னமாகிறது. அந்த அங்குரம் நித்யமானதோ, நாசமுடையதோ ஆகாது. அவ்வாறு தர்மங்கள் அசத்தியமாய் இருப்பதால் ஜன்ம, நாசம் முதலியவைகளின் யோஜனையானது யுக்தியுடன் கூடியதாகும். இதன் தாத்பர்யம் என்னவெனில் உண்மையில் தர்மங்களுக்கு ஜன்மமோ நாசமோ சம்பவிக்காது.
नाजेषु सर्वधर्मेषु शाश्वताशाश्वताभिधा ।
यत्र वर्णा न वर्तन्ते विवेकस्तत्र नोच्यते ॥ ६० ॥
कारिका अन्वयः - अजेषु सर्व धर्मेषु शाश्वत अशाश्वत अभिधा न यत्र वर्णाः न वर्तन्ते तत्र विवेकः नोच्यते ॥
காரிகா அர்த்தம் - இந்த சம்பூர்ண அஜன்ம ஆத்மா தர்மங்களில் நித்திய அநித்திய என்பதில் பிரவிர்த்தி இல்லை. எங்கு சப்தம் இல்லை. அந்த ஆத்ம தத்வத்தில் (நித்ய அநித்திய) விவேகத்தையும் சொல்ல முடியாது.
परमार्थतस्त्वात्मस्वजेषु नित्यैकरसविज्ञप्तिमात्रसत्ताकेषु शाश्वतः अशाश्वतः इति वा न अभिधा, नाभिधानं प्रवर्तत इत्यर्थः । यत्र येषु वर्ण्यन्ते यैरर्थाः, ते वर्णाः शब्दा न वर्तन्ते अभिधातुं प्रकाशयितुं न प्रवर्तन्त इत्यर्थः । इदमेवमिति विवेकः विविक्तता तत्र नित्योऽनित्य इति नोच्यते,
‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इति श्रुतेः ॥
(ச.பா) உண்மையில் நித்திய ஏகரச விக்ஞானமாத்திர சத் ஸ்வரூப அஜன்மா ஆத்மாவிடத்தில் நித்திய அநித்திய என்ற பெயர் பிரவிர்த்திக்காது. எந்த பதார்த்தங்கள் வர்ணனை செய்யப்பட்டனவோ அந்த வர்ணம் சப்தமும் ஆகாது. அதாவது அதை வர்ணனை செய்வதற்கு பிரவிர்த்திப்பதில்லை. அதில் நித்யம் அல்லது அநித்தியம் என்ற பிரகாரமாகவும் விவேகமானது சொல்லப்படவில்லை. எவ்வாறு “வாக்கானது எங்கு நிவர்த்திக்கிறதோ” என்றசுருதி வாக்கியத்தினாலும் அறியப்படுகிறது.
यथा स्वप्ने द्वयाभासं चित्तं चलति मायया ।
तथा जाग्रद्द्वयाभासं चित्तं चलति मायया ॥ ६१ ॥
कारिका अन्वयः - यथा स्वप्ने द्वयाभासं चित्तं मायया चलति तथा-जाग्रद्द्वयाभासं चित्तं मायया चलति ॥
कகாரிகா அர்த்தம் - எவ்வாறு சித்தமானது ஸ்வப்னத்தில் மாயையினால் துவைத ஆபாசரூபமாய் விளங்குகிறதோ அவ்வாறு ஜாக்ரத்காலத்திலும் சித்தம் மாயையினால் துவைத ஆபாசரூபமாய் விளங்குகிறது.
अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्ने न संशयः ।
अद्वयं च द्वयाभासं तथा जाग्रन्न संशयः ॥ ६२ ॥
कारिका अन्वयः - अद्वयं च द्वयाभासं चित्तं स्वप्नेन संशयः तथा अद्वयं च द्वयाभासं जाग्रत न संशयः ॥
காரிகா அர்த்தம் - ஸ்வப்னாவஸ்தையில் அத்வைத சித்தமே துவைத ரூபமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை. அவ்வாறே ஜாக்ரத் அவஸ்தையிலும் அத்வைத சித்தம் துவைதமாய் தோன்றுகிறது என்பதில் சந்தேஹமில்லை.
यत्पुनर्वाग्गोचरत्वं परमार्थतः अद्वयस्य विज्ञानमात्रस्य, तन्मनसः स्पन्दनमात्रम् , न परमार्थतः इत्युक्तार्थौ श्लोकौ ॥ ६१-६२ ॥
(ச.பா) உண்மையில் அத்வய விக்ஞான மாத்திரம் வாணிக்கு (வார்த்தைகளுக்கு) விஷயமாதல் மனதின் ஸ்புரண மாத்திரமே. அது பரமார்த்தமாக இல்லை. இவ்வாறு இந்த ஸ்லோகங்களின் வியாக்கியானம் ஆகும்.
इतश्च वाग्गोचरस्याभावो द्वैतस्य —
(ச.பா) (அ.கை) வாக்கின் விஷய பூதமானதாய் துவைதம் இருப்பதாலும் அது அபாவமாகும்-
स्वप्नदृक्प्रचरन्स्वप्ने दिक्षु वै दशसु स्थितान् ।
अण्डजान्स्वेदजान्वापि जीवान्पश्यति यान्सदा ॥ ६३ ॥
कारिका अन्वयः - स्वप्नदृक् स्वप्ने दशसु दिक्षु प्रचरन् सन् तत्र स्थितान् अण्डजान् स्वेदजान् वापि यान् जीवान् सदा पश्यति ।
காரிகா அர்த்தம் - ஸ்வப்ன திருஷ்டா பத்து திக்குகளிலும் அலைந்து அலைந்து அங்கு இருக்கின்ற அண்டஜ (முட்டையிலிருந்து உண்டாகும் (ஸ்வேதஜ) வேர்வையிலிருந்து உண்டாகும் ஜீவன்களை எப்பொழுதும் பார்கின்றான்.
स्वप्नान्पश्यतीति स्वप्नदृक् प्रचरन् पर्यटन्स्वप्ने स्वप्नस्थाने दिक्षु वै दशसु स्थितान् वर्तमानान् जीवान्प्राणिनः अण्डजान्स्वेदजान्वा यान् सदा पश्यतीति ॥ ६३ ॥
(ச.பா) ஸ்வப்னங்களைக் காண்கிறான் என்பதால் ஸ்வப்னதிருக். ஸ்வப்ன ஸ்தானத்தில் அலைந்து பத்து திக்குகளிலும் இருக்கும் அண்டஜம், ஸ்வேதஜம் ஆகிய பிராணிகளை எப்பொழுதும் பார்க்கிறான். (உண்மையில் அதைக்காட்டிலும் வேறு அல்ல).
यद्येवम् , ततः किम् ? उच्यते —
(ச.பா) (அ.கை) இவ்வாறு இருப்பதால் அதனால் என்ன சித்திக்கிறது - என்பது கூறப்படுகிறது.
स्वप्नदृक्चित्तदृश्यास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं स्वप्नदृक्चित्तमिष्यते ॥ ६४ ॥
कारिका अन्वयः - स्वप्नदृक् चित्त दृश्याः ते ततः पृथक् न विद्यन्ते तथा इदं स्वप्नदृक् चित्तं तत् दृश्यमेव इष्यते ।
காரிகா அர்த்தம் - எந்த எல்லா ஸ்வப்ன திருக்கின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாக இல்லை. இவ்வாறு ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமாகும்.
स्वप्नदृशश्चित्तं स्वप्नदृक्चित्तम् , तेन दृश्याः ते जीवाः ; ततः तस्मात् स्वप्नदृक्चित्तात् पृथक् न विद्यन्ते न सन्तीत्यर्थः । चित्तमेव ह्यनेकजीवादिभेदाकारेण विकल्प्यते । तथा तदपि स्वप्नदृक्चित्तमिदं तद्दृश्यमेव, तेन स्वप्नदृशा दृश्यं तद्दृश्यम् । अतः स्वप्नदृग्व्यतिरेकेण चित्तं नाम नास्तीत्यर्थः ॥
(ச.பா) ஸ்வப்ன திருஷ்டாவின் “சித்தம் ஸ்வப்ன திருக் சித்தம்” எனப்படுகிறது. அதனால் பார்க்கப்படும் ஜீவன் அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்பது தாத்பரியம். சித்தத்தாலேயே அநேக ஜீவாதி பேத ரூபமாய் கல்பிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தமும் அதன் திருஷ்யமே. அந்த ஸ்வப்ன திருஷ்டாவால் பார்க்கப்படுவதால் அதன் திருஷ்யமாகும். ஆகையால் ஸ்வப்ன திருஷ்டாவைக் காட்டிலும் வேறாய் சித்தம் இல்லை என்பது தாத்பரியம்.
चरञ्जागरिते जाग्रद्दिक्षु वै दशसु स्थितान् ।
अण्डजान्स्वेदजान्वापि जीवान्पश्यति यान्सदा ॥ ६५ ॥
कारिका अन्वयः - जागरिते जाग्रत् दशसु दिक्षु चरन् सन् तत्र स्थितान् अण्डजान् स्वेदजान् यान् जीवान् सदा पश्यति ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத் அவஸ்தையில் அலைந்து அலைந்து ஜாக்ரத் அவஸ்தையின் சாக்ஷியாய் இருந்து கொண்டு பத்து திக்குகளிலும் இருக்கும் அண்டஜ, ஸ்வேதஜ ஜீவர்களை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கும்.
जाग्रच्चित्तेक्षणीयास्ते न विद्यन्ते ततः पृथक् ।
तथा तद्दृश्यमेवेदं जाग्रतश्चित्तमिष्यते ॥ ६६ ॥
कारिका अन्वयः - ते जाग्रत् चित्तेक्षणीयाः ततः पृथक् न विद्यन्ते तत् दृश्यमेव इदं जाग्रतः चित्तं इष्यते ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரத் சித்தத்தின் திருஷ்யம் அதைக்காட்டிலும் வேறாய் இல்லை. அதேபோல் ஜாக்ரத் சித்தமும் அதன் திருஷ்யமாகக் கொள்ளப்படுகிறது.
जाग्रतो दृश्या जीवाः तच्चित्ताव्यतिरिक्ताः, चित्तेक्षणीयत्वात् , स्वप्नदृक्चित्तेक्षणीयजीववत् । तच्च जीवेक्षणात्मकं चित्तं द्रष्टुरव्यतिरिक्तं द्रष्टृदृश्यत्वात् स्वप्नचित्तवत् । उक्तार्थमन्यत् ॥
(ச.பா) - விழித்துக் கொண்டிருப்பவனால் காணப்படும் திருஷ்யங்களான ஜீவர்கள் அந்த சித்தத்தை விட வேறானவைகள் அல்ல. ஏனெனில் ஸ்வப்ன திருஷ்டாவின் சித்தத்தினால் பார்க்கப்படும் ஜீவர்களுக்கு சமானமாய் அவர்கள் அந்த சித்தத்தால் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறே ஜீவன்களைப் பார்க்கும் அந்த சித்தமும் திருஷ்டாவைக் காட்டிலும் அபின்னம் ஏனெனில் ஸ்வப்ன சித்தத்திற்குச் சமானமாய் அந்த ஜாக்ரத் திருஷ்டாவின் திருஷ்யமும் இருக்கிறது. சேஷ(மீதி) அர்த்தம் முன்பே கூறப்பட்டிருக்கிறது.
उभे ह्यन्योन्यदृश्ये ते किं तदस्तीति चोच्यते ।
लक्षणाशून्यमुभयं तन्मते नैव गृह्यते ॥ ६७ ॥
कारिका अन्वयः - ते उभे अन्योन्य दृश्ये हि किं तत् अस्तीति नोच्यते उभयं लक्षणाशून्यं तन्मतेनैव गृह्यते ।
காரிகா அர்த்தம் - அவை (ஜீவ. சித்தம்) இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாய் இருக்கின்றன. அவைகள் வஸ்துவா? அதைக் கூறமுடியாது. அவை இரண்டும் பிரமாண சூன்யம் மேலும் அவைகள் சித்தத்தின் காரணத்தால் கிரஹிக்கப்படுகிறது.
जीवचित्ते उभे चित्तचैत्त्ये ते अन्योन्यदृश्ये इतरेतरगम्ये । जीवादिविषयापेक्षं हि चित्तं नाम भवति । चित्तापेक्षं हि जीवादि दृश्यम् । अतस्ते अन्योन्यदृश्ये । तस्मान्न किञ्चिदस्तीति चोच्यते चित्तं वा चित्तेक्षणीयं वा । किं तदस्तीति विवेकिनोच्यते । न हि स्वप्ने हस्ती हस्तिचित्तं वा विद्यते ; तथा इहापि विवेकिनामित्यभिप्रायः ।
(ச.பா) அவ்விரண்டும் அதாவது சித்தமும், சித்த திருஷ்யம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. ஜீவன் முதலிய விஷயங்களின் அபேக்ஷயைினால் சித்தம். மேலும் சித்தத்தின் அபேக்ஷயைால் ஜீவன் முதலிய திருஷ்யங்கள். ஆகையால் ஒன்றுக்கொன்று திருஷ்யமாகிறது. விவேகிகள் சித்தம், சித்தத்தின் திருஷ்யம் ஆகிய இவைகளில் ஒரு வஸ்துவும் இல்லை. இதிலிருந்து விவேகிகளின் அபிப்பிராயம் என்னவெனில் எவ்வாறு ஸ்வப்னத்தில் யானை அதனை கிரஹிக்கும் சித்தம் இல்லையோ அவ்வாறே (ஜாக்ரத் அவஸ்தையிலும்) அவைகள் இல்லை
कथम् ? लक्षणाशून्यं लक्ष्यते अनयेति लक्षणा प्रमाणम् ; प्रमाणशून्यमुभयं चित्तं चैत्त्यं द्वयं यतः, तन्मतेनैव तच्चित्ततयैव तत् गृह्यते । न हि घटमतिं प्रत्याख्याय घटो गृह्यते, नापि घटं प्रत्याख्याय घटमतिः । न हि तत्र प्रमाणप्रमेयभेदः शक्यते कल्पयितुमित्यभिप्रायः ॥
(ச.பா) எவ்வாறு இல்லை? ஏனெனில் சித்தமும், சைத்தியமும் (திருஷ்யமும்) லக்ஷண சூன்யம் அதாவது பிரமாணம் அற்றது. எதனால் ஒரு பதார்த்தம் லக்ஷியம் செய்யப்படுகிறதோ லக்ஷணா அதாவது பிரமாணம் என்கிறோம். மேலும் அவை அதன் சித்ததின் வாயிலாகவே அறியப்படுகிறது. ஏனெனில் கடத்தை நிராகரித்து விட்டுகடத்தை கிரஹிக்க முடியாது. அது போல் கடத்தை நிராகரித்து கட புத்தி ஏற்படாது. குடத்தைப் பற்றிய அறிவு இல்லையெனில் குடத்தை அறியமுடியாது. (குடத்தை அறியாமல் குடத்தைப் பற்றிய அறிவு ஏற்பட முடியாது.) எனவே இவைகளில் எது பிரமாணம், எது பிரமாணத்தால் அறியத்தக்க பிரமேயம் என்று கல்பிக்க முடியாது. அது போன்றே இதுவும் என்பது அபிப்பிராயம்.
यथा स्वप्नमयो जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ६८ ॥
कारिका अन्वयः - यथा स्वप्नमयः जीवः जायते म्रियतेऽपि च तथा अमी सर्वे जीवाः भवन्ति न भवन्ति ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு ஸ்வப்ன மய ஜீவன் உத்பன்னமாகிறான் மேலும் மரிக்கிறானோ அவ்வாறே எல்லா ஜீவர்களும் உத்பன்னமாகிறார்கள் மரிக்கின்றார்கள்.
यथा मायामयो जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ६९ ॥
कारिका अन्वयः - यथा मायामयः जीवः जायते म्रियतेऽपि च तथा अमीसर्वे जीवाः भवन्ति न भवन्ति च ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மாயாமயமான ஜீவன் உத்பன்னமாகி மரிக்கிறதோ அவ்வாறே இந்த எல்லா ஜீவர்களும் உத்பன்னமாகிறார்கள் மரிக்கின்றனர்.
यथा निर्मितको जीवो जायते म्रियतेऽपि च ।
तथा जीवा अमी सर्वे भवन्ति न भवन्ति च ॥ ७० ॥
कारिका अन्वयः - यथा निर्मितकः जीवः जायते म्रियतेऽपिच तथा अमी सर्वे जीवाः भवन्ति न भवन्ति च ॥
காரிகா அர்த்தம் - எவ்வாறு மணிமந்திர ஒளஷதங்களால் உண்டான ஜீவன் உத்பன்னமாகிறது மரிக்கிறது. அதுபோல் இந்த ஜீவன்களும் உண்டாகின்றன மரிக்கின்றன.
मायामयः मायाविना यः कृतो निर्मितकः मन्त्रौषध्यादिभिर्निष्पादितः । स्वप्नमायानिर्मितका अण्डजादयो जीवा यथा जायन्ते म्रियन्ते च, तथा मनुष्यादिलक्षणा अविद्यमाना एव चित्तविकल्पनामात्रा इत्यर्थः ॥
(ச.பா) மாயாவியினால் மந்தர ஒளஷதங்களால் உண்டாக்கப்பட்டது மாயாமயம். ஸ்வப்னம், மாயா, மந்திரம் முதலியவைகளால் உண்டான அண்டஜம் (முட்டையிலிருந்து உண்டாவது) முதலிய ஜீவன்கள் எவ்வாறு உத்பன்ன மாகின்றனவோ, மரிக்கின்றனவோ அவ்வாறே மனுஷ்ய முதலிய ஜீவன்கள் சித்தத்தின் விகல்பமாத்திரமே என்பதுபொருள்.
न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ७१ ॥
कारिका अन्वयः - कश्चित् जीवः न जायते अस्य संभवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ॥ ७१ ॥
காரிகா அர்த்தம் - (உண்மையில்) ஒரு ஜீவனும் உத்பன்னமாகவில்லை. அதற்கு ஜன்மம் என்பது சம்பவிக்காது. இது உத்தம சத்தியம். இதில் எந்த ஒரு வஸ்துவின் உத்பத்தியும் உண்டாகாது.
व्यवहारसत्यविषये जीवानां जन्ममरणादिः स्वप्नादिजीववदित्युक्तम् । उत्तमं तु परमार्थसत्यं न कश्चिज्जायते जीव इति । उक्तार्थमन्यत् ॥
(ச.பா) வ்யவஹாரிக சத்தையில் ஜீவனுக்குள்ள ஜன்ம மரண முதலியவை ஸ்வப்ன ஜீவனுக்குச் சமானமாகும் என்று முதலிலேயே கூறப்பட்டது. எந்த ஜீவனும் உத்பத்தியாகவில்லை என்பதே உத்தம சத்தியம், மீதி அம்சம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டு விட்டது.
चित्तस्पन्दितमेवेदं ग्राह्यग्राहकवद्द्वयम् ।
चित्तं निर्विषयं नित्यमसङ्गं तेन कीर्तितम् ॥ ७२ ॥
कारिका अन्वयः - ग्राह ग्राहकवत् इदं द्वयं चित्त स्पन्दितमेव चित्तं निर्विषयं तेन नित्यं असङ्गं कीर्तितम् ।
காரிகா அர்த்தம் - விஷயம், இந்திரியங்களுடன் கூடிய எல்லா துவைதமும் சித்தத்தின் விளக்கமே, ஆனால் சித்தம் விஷய மற்றது. ஆகையால் அதை நித்தியம், அசங்கம் என்று கூறப்படுகிறது.
सर्वं ग्राह्यग्राहकवच्चित्तस्पन्दितमेव द्वयम् । चित्तं परमार्थत आत्मैवेति निर्विषयम् । तेन निर्विषयत्वेन नित्यम् असङ्गं कीर्तितम् ।
‘असङ्गो ह्ययं पुरुषः’ (बृ. उ. ४ । ३ । १५) इति श्रुतेः । सविषयस्य हि विषये सङ्गः । निर्विषयत्वाच्चित्तमसङ्गमित्यर्थः ॥ ७२ ॥
(ச.பா) விஷயம், இந்திரியங்களுடன் கூடிய சம்பூர்ண த்வைதம் சித்தத்தின் விளக்கமே. ஆனால் உண்மையில் ஆத்மாவே, ஆகையால் நிர்விஷயம் அது நிர்விஷயமாய் இருப்பதால் அதை எப்பொழுதும் அசங்கம் எனப்படுகிறது. “असङ्गो ह्ययं पुरुषः” (அசங்கோஹ்யம் புருஷ: - இந்த புருஷன் அசங்கன்) என்ற சுருதி வாக்கியம் பிரமாணமாகும். எது விஷயத்துடன் இருக்கிறதோ அதற்கு சங்கம் ஏற்படும் ஆகையால் நிர்விஷயமாய் இருப்பதால் சித்தம் அசங்கம் என்பது தாத்பர்யமாகும்.
ननु निर्विषयत्वेन चेदसङ्गत्वम् , चित्तस्य न निःसङ्गता भवति, यस्मात् शास्ता शास्त्रं शिष्यश्चेत्येवमादेर्विषयस्य विद्यमानत्वात् ;
(ச.பா) (அ.கை) (சங்கை) நிர்விஷயத்தினால் அசங்கம் என்றால் சித்தத்திற்கு அசங்கம் என்பது பொருந்தாது. ஏனெனில் அதற்கு சாஸ்தா (குரு) சாஸ்திரம், சிஷ்யன் முதலிய விஷயங்கள் இருப்பதால்.
नैष दोषः । कस्मात् ?
(ச.பா) (சமாதானம்) - இது தோஷம் இல்லை. ஏனெனில் -
योऽस्ति कल्पितसंवृत्या परमार्थेन नास्त्यसौ ।
परतन्त्राभिसंवृत्या स्यान्नास्ति परमार्थतः ॥ ७३ ॥
कारिका अन्वयः - यः अस्ति सः संवृत्या कल्पितः परमार्थेन असौ नास्ति यत् परतन्त्रभि संवृत्या स्यात् परमार्थतः नास्ति ॥ ७३ ॥
காரிகா அர்த்தம் - எந்த பதார்த்தம் கல்பித வியவஹாரத்தால் உண்டாகிறதோ அது உண்மையில் (பரமார்த்தமாக) இல்லை, மேலும் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திரங்களின் பரிபாஷையை அனுசரித்து உண்டாகிறதோ அதுவும் உண்மையில் இல்லை.
(ச.பா) எந்த சாஸ்திரம் முதலிய பதார்த்தங்கள் உண்டோ அவை கல்பித வியவஹாரங்களால் தோன்றியவை. அந்த வியவஹாரம் பரமார்த்த தத்துவத்தை அறிவதற்கான உபாய ரூபமாய் கல்பனை செய்யப்பட்டவைகளாகும். அதனால் எந்த பதார்த்தம் இருக்கின்றதோ அது உண்மையில் இல்லை. ஞானம் உண்டானபின் துவைதம் இருக்காது என்று கூறப்பட்டது.
(ச.பா) இதைத்தவிர எந்த பதார்த்தம் பரதந்திர முதலிய சம்விருத்தியினால் வேறு மதத்தை அனுசரித்த சாஸ்திர வியவஹாரத்தால் உண்மையாக நிரூபணம் செய்யப்பட்டதை அறிந்தபின் இல்லை என்பது சித்திக்கிறது. ஆகவே ஆன்மஸ்வரூபம் அஸங்கமானது என்று கூறப்பட்டது முற்றிலும் பொருத்தமானதே.
ननु शास्त्रादीनां संवृतित्वे अज इतीयमपि कल्पना संवृतिः स्यात् ।
(ச.பா) (அ.கை) சங்கை - சாஸ்திரம் முதலியவைகளை வியவஹாரிகமாய் ஏற்றுக்கொண்டால் “இது அஜம்” என்று கல்பனையும் வியவஹாரிகம் ஆகுமே?
सत्यमेवम् ।
(ச.பா) (சாமதானம்) - அவ்வாறு சத்யமே.
अजः कल्पितसंवृत्या परमार्थेन नाप्यजः ।
परतन्त्राभिनिष्पत्त्या संवृत्या जायते तु सः ॥ ७४ ॥
कारिका अन्वयः - कल्पित संवृत्या अजः परमार्थेन अजः अपि न (यः) परतन्त्राभिनिष्पत्त्या सः संवृत्यातु जायते ।
காரிகா அர்த்தம் - ஆத்மா “அஜம்” என்பதும் வியவஹாரத்தின் காரணமாகவே சொல்லப்படுகிறது. உண்மையில் “அஜம்” என்பது இல்லை. மற்றமதங்களை அனுசரிக்கும் சாஸ்திரங்களில் இருக்கும் சம்விருத்தி (பிரமத்தினால் உண்டாகும் வியவஹாரம்) யை அனுசரித்து அதற்கு ஜன்மம் உண்டாகிறது. - (அதை நிஷேதம் செய்வதற்காக அஜம் என்கிறோம்)
शास्त्रादिकल्पितसंवृत्यैव अज इत्युच्यते । परमार्थेन नाप्यजः, यस्मात् परतन्त्राभिनिष्पत्त्या परशास्त्रसिद्धिमपेक्ष्य यः अज इत्युक्तः, स संवृत्या जायते । अतः अज इतीयमपि कल्पना परमार्थविषये नैव क्रमत इत्यर्थः ॥
(ச.பா) சாஸ்திரம் முதலியவைகளால் கல்பிக்கப்பட்ட காரணத்தால் அதை (ஆத்மாவை) “அஜம்” என்கின்றோம், உண்மையில் அது அஜமும் அல்ல. ஏனெனில் மற்ற சாஸ்திரங்களின் சித்திப்பதை அபேக்ஷித்து “அஜம்” என்கிறோம். அது சம்விருத்தியினால் ஜன்மத்தை அடைகிறது. ஆகையால் “அது அஜம்” என்ற கல்பனையும் பரமார்த்த விஷயத்தில் பிரவேசிக்காது.
यस्मादसद्विषयः, तस्मात्-
(ச.பா) (அ.கை) - ஏனெனில் விஷயம் அசத், அதனால்-
अभूताभिनिवेशोऽस्ति द्वयं तत्र न विद्यते ।
द्वयाभावं स बुद्ध्वैव निर्निमित्तो न जायते ॥ ७५ ॥
कारिका अन्वयः - अभूतः अभिनिवेश अस्ति द्वयं न विद्यते यः बुद्ध्वैव द्वयाभावं निर्मिमितः सः न जायते ॥ ७५ ॥
காரிகா அர்த்தம் - உலகில் அசத்திய (த்வைத) விஷயத்தில் கேவலம் ஆக்ரஹம் இருக்கின்றது. அங்கு (பரமார்த்த தத்துவத்தில்) துவைதமே இல்லை. ஜீவன் துவைத அபாவத்தின் ஞானம் அடைந்து காரணம் ஏதும் இல்லாததால் ஜன்மம் எடுப்பதில்லை.
असत्यभूते द्वैते अभिनिवेशोऽस्ति केवलम् । अभिनिवेशः आग्रहमात्रम् । द्वयं तत्र न विद्यते मिथ्याभिनिवेशमात्रं च जन्मनः कारणं यस्मात् , तस्मात् द्वयाभावं बुद्ध्वा निर्निमित्तः निवृत्तमिथ्याद्वयाभिनिवेशः यः, सः न जायते ॥
(ச.பா) உலகோருக்கு அசத்தியமான த்வைதத்தில் ஆக்ரஹம் இருக்கிறது. ஆக்ரஹம் என்பது அபிநிவேஷம். உண்மையில் துவைதமே இல்லை. ஏனெனில் மித்தையான அபிநிவேஷமே ஜன்மத்திற்கு காரணமாகிறது. ஆகையால் துவைத அபாவத்தை அறிந்து நிமித்தம் அற்றதாகிறதோ அதாவது எவருக்கு மித்தையான துவைத விஷயத்தில் ஆக்ரஹம் நிவிர்த்தி ஆகிறதோ அந்த அதிகாரி மறுபடியும் ஜன்மத்தை அடைவதில்லை.
यदा न लभते हेतूनुत्तमाधममध्यमान् ।
तदा न जायते चित्तं हेत्वभावे फलं कुतः ॥ ७६ ॥
कारिका अन्वयः - उत्तमाधममध्यमान् यदा न लभते तदा चित्तं न जायते हेत्वभावे फलं कुतः ॥
காரிகா அர்த்தம் - எப்பொழுது சித்தம் உத்தம, மத்யம அதம ஹேதுக்களை அடையவில்லையோ அப்பொழுது அதற்கு ஜன்மம் இல்லை. ஏனெனில் ஹேதுவின் அபாவம் ஏற்படும் பொழுது பலம் எங்கு இருந்து உண்டாகும்?
जात्याश्रमविहिता आशीर्वर्जितैरनुष्ठीयमाना धर्मा देवत्वादिप्राप्तिहेतव उत्तमाः केवलाश्च । धर्माः अधर्मव्यामिश्रामनुष्यत्वादिप्राप्त्यर्था मध्यमाः । तिर्यगादिप्राप्तिनिमित्ता अधर्मलक्षणाः प्रवृत्तिविशेषाश्चाधमाः । तानुत्तममध्यमाधमानविद्यापरिकल्पितान् यदा एकमेवाद्वितीयमात्मतत्त्वं सर्वकल्पनावर्जितं जानन् न लभते न पश्यति, यथा बालैर्दृश्यमानं गगने मलं विवेकी न पश्यति, तद्वत् , तदा न जायते नोत्पद्यते चित्तं देवाद्याकारैः उत्तमाधममध्यमफलरूपेण । न ह्यसति हेतौ फलमुत्पद्यते बीजाद्यभाव इव सस्यादि ॥ ७६ ॥
(ச.பா) நிஷ்காம மனிதர்களால் அனுஷ்டிக்கப்படும் தேவத்துவத்தை அடைவதற்கு ஹேதுவாய் இருக்கும் வர்ணாஸ்ரம விஹித தர்மம் உத்தம ஹேதுவாகும். மனுஷ்யத்துவம் முதலியவை அடைவதற்கு ஹேதுவான அதர்மம் கலந்த தர்மம் மத்தியமஹேதுவாகும். அவ்வாறே திர்யக் முதலிய யோனிகளின் பிராப்திக்கு ஹேதுவான அதர்மமானதில் பிரவிர்த்திப்பது அதம ஹேதுவாகும். எப்பொழுது எல்லா கல்பனைகளும் அற்ற ஏகமாத்திர அத்விதீய ஆத்ம தத்துவத்தின் ஞானம் ஏற்பட்டவுடன் அந்த உத்தம, மத்யம, அதம ஹேதுக்களை இவ்வாறு மனிதன் அடைவதில்லை. எவ்வாறு எனில் விவேகி புருஷன் ஆகாயத்தில் மூடர்களால் பார்க்கப்படும் மலினம் முதலியவைகளைப் பார்ப்பது இல்லையோ அவ்வாறு அந்தசமயம் சித்தம் உத்தம, மத்யம, அதம பல ரூபமாய் தேவதாதி சரீரங்களில் உத்பன்னமாவதில்லை. எவ்வாறு பீஜம் முதலியவைகள் இல்லாமல் அன்னம் முதலியவைகள் உத்பன்னமாகாதோ அவ்வாறு ஹேது இல்லாததினால் பலத்தின் உத்பத்தி இல்லை.
हेत्वभावे चित्तं नोत्पद्यत इति हि उक्तम् । सा पुनरनुत्पत्तिश्चित्तस्य कीदृशीत्युच्यते —
(ச.பா) (அகை) - ஹேதுவின் அபாவத்தால் சித்தம் உத்பன்னமாவதில்லை என்பது கூறப்பட்டது. ஆனால் அந்த சித்தத்தின் உத்பத்தியின்மை எவ்வாறு சித்திக்கிறது? என்பது கூறப்படுகிறது.
अनिमित्तस्य चित्तस्य यानुत्पत्तिः समाद्वया ।
अजातस्यैव सर्वस्य चित्तदृश्यं हि तद्यतः ॥ ७७ ॥
कारिका अन्वयः - अनिमित्तस्य चित्तस्य या अनुत्पत्तिः समा अद्वया च यतः तत् चित्तदृश्यं हि अजातस्यैव सर्वस्य ।
காரிகா அர்த்தம் - (இவ்வாறு) நிமித்தமின்றிய சித்தத்திற்கு உத்பத்தி இல்லை. அது எவ்வகையிலும் விசேஷமும், அத்விதீயமாய் இருக்கிறது. (ஏனெனில்) அது எப்பொழுதும் அஜாத சித்தமாய் இருக்கிறது. ஏனெனில் தோன்றுகின்ற வஸ்து எல்லாம் சித்தத்தின் திருஷ்யமே.
परमार्थदर्शनेन निरस्तधर्माधर्माख्योत्पत्तिनिमित्तस्य अनिमित्तस्य चित्तस्येति या मोक्षाख्या अनुत्पत्तिः, सा सर्वदा सर्वावस्थासु समा निर्विशेषा अद्वया च ; पूर्वमपि अजातस्यैव अनुत्पन्नस्य चित्तस्य सर्वस्याद्वयस्येत्यर्थः । यस्मात्प्रागपि विज्ञानात् चित्तं दृश्यं तद्द्वयं जन्म च, तस्मादजातस्य सर्वस्य सर्वदा चित्तस्य समा अद्वयैव अनुत्पत्तिः न पुनः कदाचिद्भवति, कदाचिद्वा न भवति । सर्वदा एकरूपैवेत्यर्थः ॥ ७७ ॥
(ச.பா) பரமார்த்த ஞானத்தால் எதற்கு தர்மாதர்ம ரூபமான உத்பத்தியின் ஹேது நிவிர்த்தியாகிறதோ அந்த ஹேது அற்ற சித்தத்திற்கு மோக்ஷம் எனப்படும் அனுத்பத்தி (உத்பத்தி அற்றது) இருக்கிறதோ அது எப்பொழுதும் எல்லா அவஸ்தைகளிலும் சமானமாய் அதாவது நிர்விசேஷமாயும் அத்விதீயமாயும் இருக்கிறது. அது முன்பே (பூர்வமே) அஜமாயும், அதாவது உத்பன்னமற்றதாயும், அத்வயமாயும் அந்த சித்தம் இருக்கிறது. ஏனெனில் ஞானம் உண்டாவதற்கு முன்பே துவைதமும், ஜன்மும் சித்தத்தின் திருஷ்யமே. ஆகையால் அஜாத சித்தத்தின் உத்பத்தி இன்மை எப்பொழுதும் எவ்விதமாகவும் சமானமாகவும் அத்வயமாகவும். இருக்கிறது. அது எப்பொழுதும் உத்பன்னமாவதும் இல்லை, இல்லாமலும் இல்லை. அது எப்பொழுதும் ஒரே ரூபமாகவே இருக்கிறது.
यथोक्तेन न्यायेन जन्मनिमित्तस्य द्वयस्यभावाद-
(ச.பா) (அகை) - கூறப்பட்ட நியாயத்தால் ஹேது பூதமான துவைத்தின் அபாவம் ஆவதின் காரணம்-
बुद्ध्वानिमित्ततां सत्यां हेतुं पृथगनाप्नुवन् ।
वीतशोकं तथा काममभयं पदमश्नुते ॥ ७८ ॥
कारिका अन्वयः - अनिमित्तताम् सत्यां बुध्वा हेतुं पृथक् अनाप्नुवन् वीतशोकं तथा वीतकामम् अभयं पदं अश्नुते ॥
காரிகா அர்த்தம் - அநிமித்தத்தை சத்தியம் என்று அறிந்து வேறு எந்த ஹேதுவையும் எடுத்துக்கொள்ளாமல் வித்வான் சோகமும், காமமும் அற்றஅபயபதத்தை அடைகிறான்.
अनिमित्ततां च सत्यां परमार्थरूपां बुद्ध्वा हेतुं धर्मादिकारणं देवादियोनिप्राप्तये पृथगनाप्नुवन् अनुपाददानः त्यक्तबाह्यैषणः सन् कामशोकादिवर्जितम् अविद्यादिरहितम् अभयं पदम् अश्नुते, पुनर्न जायत इत्यर्थः ॥ ७८ ॥
(ச.பா) அநிமித்தத்வத்தையும் சத்ய பரமார்த்த ரூபத்தை அறிந்து அவ்வாறே தேவாதி யோநிகளின் பிராப்திக்காக வேறு தர்மாதி ஹேதுக்களை எடுத்துக் கொள்ளாமல் பாஹ்ய ஈஷணைகளிலிருந்து விட்டொழிந்தவனாகி காமனை அவ்வாறே சோக முதலியவைகள் அற்ற அவித்யா சூன்ய அபய பதத்தை அடைகிறான். மறு ஜன்மம் எடுப்பதில்லை என்பது பொருள்.
अभूताभिनिवेशाद्धि सदृशे तत्प्रवर्तते ।
वस्त्वभावं स बुद्ध्वैव निःसङ्गं विनिवर्तते ॥ ७९ ॥
कारिका अन्वयः - तत् अभूताभिनिवेशाद्धि सदृशे प्रवर्तते वस्त्वभावं यदा बुद्ध्वैव सः निःसङ्गं विनिवर्तते ॥
காரிகா அர்த்தம் - சித்தம் அசத்யத்தின் (துவைதத்தின்) அபிநிவேசத்தால் அதன் அனு ரூபவிஷயத்தில் பிரவிர்த்திக்கிறது. அவ்வாறே வஸ்துவின் அபாவ ஞானம் ஏற்பட்டவுடன் அது அதில் நிஸ்சங்கத்தை அடைந்து அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.
यस्मात् अभूताभिनिवेशात् असति द्वये द्वयास्तित्वनिश्चयः अभूताभिनिवेशः, तस्मात् अविद्याव्यामोहरूपाद्धि सदृशे तदनुरूपे तत् चित्तं प्रवर्तते । तस्य द्वयस्य वस्तुनः अभावं यदा बुद्धवान् , तदा तस्मात् निःसङ्गं निरपेक्षं सत् विनिवर्तते अभूताभिनिवेशविषयात् ॥ ७९ ॥
(ச.பா) ஏன்எனில் அபூதாபிநிவேசத்தால் எந்த துவைதமானது உண்மையில் அசத்தோ அதற்கு அஸ்தித்துவத்தின் (இருப்பின்) நிச்சயம் செய்தல் अभूताभिनिवेश (அபூதாபிநிவேஷ) அவித்தையினால் உண்டான மோஹ ரூப அசத்திய அபிநிவேஷத்தின் காரணத்தால் சித்தம் அதற்கு அனுரூபமாய் விஷயங்களில் பிரவிர்த்திக்கிறது. எப்பொழுது அந்த துவைத வஸ்துவின் அபாவம் அறியப்படுகிறதோ அப்பொழுது அந்த மித்யா அபிநிவேசத்தால் உண்டான விஷயத்தில் சங்கமற்று அதாவது நிரபேக்ஷை ஆகி அதிலிருந்து நிவிர்த்தியாகிறது.
निवृत्तस्याप्रवृत्तस्य निश्चला हि तदा स्थितिः ।
विषयः स हि बुद्धानां तत्साम्यमजमद्वयम् ॥ ८० ॥
कारिका अन्वयः - निवृत्तस्य अप्रवृत्तस्य निश्चला तदा स्थितिः स हि यस्मात् बुद्धानां विषयः (तस्मात्)तत् साम्यम् अजम् अद्वयम् ।
காரிகா அர்த்தம் - இவ்வாறு சித்தமானது (துவைதத்திலிருந்து) நிவிர்த்தியாகி (வேறு விஷயங்களில்) பிரவிர்த்திக்காமல் இருக்கிறதோ, அந்த சமயத்தில் நிச்சல ஸ்திதியில் இருக்கிறது. அது பரமார்த்த தர்சிகளின் விஷயமாகும். மேலும் அது பரமசாம்யம், அஜம் அத்வயமாகும்.
निवृत्तस्य द्वैतविषयात् , विषयान्तरे च अप्रवृत्तस्य अभावदर्शनेन चित्तस्य निश्चला चलनवर्जिता ब्रह्मस्वरूपैव तदा स्थितिः, यैषा ब्रह्मस्वरूपा स्थितिः चित्तस्य अद्वयविज्ञानैकरसघनलक्षणा । स हि यस्मात् विषयः गोचरः परमार्थदर्शिनां बुद्धानाम् , तस्मात् तत्साम्यं परं निर्विशेषमजमद्वयं च ॥
(ச.பா) அந்த சமயத்தில் துவைத விஷயத்தில் நிவிர்த்தியாகி வேறு விஷயத்தில் பிரவிர்த்திக்காத சித்தம் அபாவ தர்சனத்தின் காரணமாய் சலனமற்ற அதாவது பிரஹ்ம ஸ்வரூபஸ்திதியில் இருக்கிறது. சித்தத்தின் அந்த அத்வய விக்ஞான ஏகரச கனஸ்வரூபமான பிரஹ்மமயமான ஸ்திதி ஆகும். ஏனெனில் அது பரமார்த்த தர்சிகளாகிய ஞானிகளின் விஷயம் அதாவது கோசரம். ஆகையால் பரமசாம்யம் அதாவது நிர்விசேஷம், அஜம், அத்வயமாகும்.
पुनरपि कीदृशश्चासौ बुद्धानां विषय इत्याह —
(ச.பா) (அகை) - மறுபடியும் அந்த ஞானிகளின் விஷயம் எவ்வாறு உள்ளது? என்பதற்கு மறுபடியும் கூறுகிறார்-
अजमनिद्रमस्वप्नं प्रभातं भवति स्वयम् ।
सकृद्विभातो ह्येवैष धर्मो धातुस्वभावतः ॥ ८१ ॥
कारिका अन्वयः - अजम् अनिद्रम् अस्वप्नं स्वयं प्रभातं भवति एषः धर्मः धातुस्वभावतः सकृद्विभातः हि ।
காரிகா அர்த்தம் - அது அஜம், அநித்ரம், அஸ்வப்னம் மேலும் ஸ்வயம் பிரகாசம். அது (ஆத்மா எனப்படும்) தர்மம் தன்னுடைய வஸ்து ஸ்வபாவத்தால் நித்யம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
स्वयमेव तत् प्रभातं भवति न आदित्याद्यपेक्षम् ; स्वयं ज्योतिःस्वभावमित्यर्थः । सकृद्विभातः सदैव विभात इत्येतत् । एषः एवंलक्षणः आत्माख्यो धर्मः धातुस्वभावतः वस्तुस्वभावत इत्यर्थः ॥
(ச.பா) அது ஸ்வயமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் முதலியவைகளை அபேக்ஷித்து அல்ல. அது ஸ்வயம்பிரகாச ஸ்வபாவம். இந்த லக்ஷணமுடைய ஆத்மா எனப்படும் தர்மம் வஸ்துஸ்வபாவத்தால் அது எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
एवं बहुश उच्यमानमपि परमार्थतत्त्वं कस्माल्लौकिकैर्न गृह्यत इत्युच्यते —
(ச.பா) (அகை) - இவ்வாறு கூறப்பட்ட பின்பும் லௌகிகர்கள் இந்த பரமார்த்ததத்வத்தின் போதத்தை (ஞானத்தை) ஏன் அடையவில்லை? இதைக் குறித்து கூறுகிறார்-
सुखमाव्रियते नित्यं दुःखं विव्रियते सदा ।
यस्य कस्य च धर्मस्य ग्रहेण भगवानसौ ॥ ८२ ॥
कारिका अन्वयः - असौ भगवान् यस्य कस्य च धर्मस्य ग्रहेण नित्यं सुखम् आव्रियते सदा दुःखं विव्रियते ॥
காரிகா அர்த்தம் - இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவை பற்றும் பொய்யான அபிநிவேசத்தால் சாஸ்வதமான சுகத்தை மறைத்து எப்பொழுதும் துக்கத்தை பிரகடனம் செய்கிறான்.
यस्मात् यस्य कस्यचित् द्वयवस्तुनो धर्मस्य ग्रहेण ग्रहणावेशेन मिथ्याभिनिविष्टतया सुखमाव्रियते अनायासेन आच्छाद्यत इत्यर्थः । द्वयोपलब्धिनिमित्तं हि तत्रावरणं न यत्नान्तरमपेक्षते । दुःखं च विव्रियते प्रकटीक्रियते, परमार्थज्ञानस्य दुर्लभत्वात् । भगवानसौ आत्माद्वयो देव इत्यर्थः । अतो वेदान्तैराचार्यैश्च बहुश उच्यमानोऽपि नैव ज्ञातुं शक्य इत्यर्थः,
‘आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा’ (क. उ. १ । २ । ७) इति श्रुतेः ॥
(ச.பா) இந்த ஆத்ம தேவன் எனப்படும் பகவான் (தன்னைத்தவிர) ஏதோ ஒரு இரண்டாவது வஸ்துவைப் பற்றும் ஆவேசத்தால். இத்தகைய பொய்யான அபினிவேசத்தால் சுகமானது மூடப்படுகிறது. அதாவது அநாயாசமாக மூடப்படுகிறது என்பது பொருள். துவைத உபலப்தியின் பொருட்டு அங்கு ஆவரணம் வேறு யத்தனத்தை ஆபேக்ஷிப்பது இல்லை. பரமார்த்த ஞானம் துர்லபமாய் இருப்பதால் துக்கரூபமாய் பிரகடனம் செய்கிறது. ஆகையால் வேதாந்த ஆசாரியர்களால் அநேக விதமாக நிருபணம் செய்தும் அதை அறிய முடியாது என்பது பொருள் “आश्चर्यो वक्ताकुशलोेस्य लब्धा” (ஆச்சர்யோ வக்தா குசலோஅஸ்ய லப்தா = இதை வர்ணிக்கும் ஆசாரியர் ஆச்சரியரூபம், அவ்வாறே அதை கிரஹணம் செய்பவன் நிபுணபுருஷன்) என்று சுருதி வாக்கியத்தால் சித்திக்கிறது.
अस्ति नास्तीत्यादि सूक्ष्मविषया अपि पण्डितानां ग्रहाः भगवतः परमात्मन आवरणा एव ; किमुत मूढजनानां बुद्धिलक्षणा इत्येवमर्थं प्रदर्शयन्नाह —
(ச.பா) (அை.க) - ஆத்மா என்று ஒன்று இருக்கிறது அல்லது இல்லை என்று மிக சூக்ஷ்ம விஷயங்களை விவாதித்து பரீக்ஷித்து வாதிடும் பண்டிதர்களின் ஆக்ரஹம் கூட அந்த பகவானான பரமாத்மாவை மறைக்கும் ஆவரணமாகும். பண்டிதர்களின் நிலையே இவ்வாறானால், சாமான்ய லௌகிக புத்தியை உடைய பாமரர்களைப்பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது என்று காண்பித்துக் கூறுகிறார்.
अस्ति नास्त्यस्ति नास्तीति नास्ति नास्तीति वा पुनः ।
चलस्थिरोभयाभावैरावृणोत्येव बालिशः ॥ ८३ ॥
कारिका अन्वयः - बालिशः अस्ति नास्ति अस्ति नास्तीति पुनः नास्ति नास्तीति वा चलः स्थिरः उभयाभावै आवृणोत्येव ॥
காரிகா அர்த்தம் - ஆத்மா இருக்கிறது, இல்லை, இருக்கிறது இல்லை, இல்லை இல்லை என்று இவ்வாறு கிரமமாக சலம், ஸ்திரம், இரண்டு ரூபமும், அபாவரூபம் என்ற (நான்கு) கோடிகளால் (அபிப்ராயத்தால்) மூடர்கள் பரமாத்மாவை மறைக்கிறார்கள்.
अस्तीति । अस्त्यात्मेति कश्चिद्वादी प्रतिपद्यते । नास्तीत्यपरो वैनाशिकः । अस्ति नास्तीत्यपरोऽर्धवैनाशिकः सदसद्वादी दिग्वासाः । नास्ति नास्तीत्यत्यन्तशून्यवादी । तत्रास्तिभावश्चलः, घटाद्यनित्यविलक्षणत्वात् । नास्तिभावः स्थिरः, सदाविशेषत्वात् । उभयं चलस्थिरविषयत्वात् सदसद्भावः । अभावोऽत्यन्ताभावः ।
(ச.பா) ஒரு வாதி ஆத்மா இருக்கிறது என்கிறான். வேறு வைநாசிகவாதி இல்லை என்கிறான். மூன்றாவதாக அர்த்த வைநாசிக சதசத்வாதி திகம்பரர் கூறுகிறார்கள் இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது என்று. அவ்வாறே அத்யந்த சூன்யவாதிகள் இல்லவே இல்லை என்கிறார்கள். இதில் அஸ்தி(இருக்கிறது) என்ற பாவம் சலமானது. ஏனெனில் கடம் முதலிய அநித்திய பதார்த்தத்தைக் காட்டிலும் வேறானது. எப்பொழுதும் அவிசேஷ ரூபமாய் இருப்பதால் “ஸ்திரம்” ஆகும். சலம், ஸ்திரம் விஷயமாக இருப்பதால் சதசத்பாவம் உபயரூபமாகும், அவ்வாறே அபாவமானது அத்யந்த அபாவரூபமாகும்.
प्रकारचतुष्टयस्यापि तैरेतैश्चलस्थिरोभयाभावैः सदसदादिवादी सर्वोऽपि भगवन्तमावृणोत्येव बालिशोऽविवेकी । यद्यपि पण्डितो बालिश एव परमार्थतत्त्वानवबोधात् , किमु स्वभावमूढो जन इत्यभिप्रायः ॥ ८३ ॥
(ச.பா) இந்த சலம், ஸ்திரம், சலஸ்திரம், அபாவரூபம் ஆகிய இந்த நான்கு வகையான பாவங்களால் எல்லா விவேகமற்ற சதசத் முதலிய வாதிகணங்களாகிய மூடர்கள் பகவானை மறைக்கின்றார்கள், அவர்கள் பண்டிதர்களாய் இருந்தாலும் பரமார்த்த தத்துவத்தின் ஞானம் இன்மையால் மூடர்களே, ஆகையால் இவ்வாறு இருக்கும் பொழுது மூடர்களுடைய ஸ்வபாவத்தைப்பற்றி என்ன கூறுவது? என்பது அபிப்பிராயம்.
कीदृक्पुनः परमार्थतत्त्वम् , यदवबोधादबालिशः पण्डितो भवतीत्याह —
(ச.பா) (அகை) - மேலும் அந்த பரமார்த்த தத்துவம் எத்தகையது? என்றும் எதை அறிவதால் பண்டிதன் மூடனாய் இருந்தாலும், உண்மையான பண்டிதன் ஆவான் என்பதைக் கூறுகிறார்-
कोट्यश्चतस्र एतास्तु ग्रहैर्यासां सदावृतः ।
भगवानाभिरस्पृष्टो येन दृष्टः स सर्वदृक् ॥ ८४ ॥
कारिका अन्वयः - एताः चतस्रः कोटः यासां ग्रहैः सदा आवृतः येन आभिः अस्पृष्टः भगवान् दृष्टः सः सर्वदृक् ॥
காரிகா அர்த்தம் - எவைகளின் அபினிவேசத்தால் ஆத்மா எப்பொழுதும் மறைக்கப்பட்டுள்ளதோ அவைகள் இந்த நான்கு கோடிகள் (வாத முடிவுகள்). அவைகளால் தீண்டப்படாத ஆத்மாவை எவன் பார்க்கிறானோ அவன் சர்வக்ஞன்.
कोट्यः प्रावादुकशास्त्रनिर्णयान्ताः एताः उक्ता अस्ति नास्तीत्याद्याः चतस्रः, यासां कोटीनां ग्रहैः ग्रहणैः उपलब्धिनिश्चयैः सदा सर्वदा आवृतः आच्छादितः तेषामेव प्रावादुकानां यः, स भगवान् आभिः अस्ति नास्तीत्यादिकोटिभिः चतसृभिरपि अस्पृष्टः अस्त्यादिविकल्पनावर्जित इत्येतत् । येन मुनिना दृष्टो ज्ञातः वेदान्तेष्वौपनिषदः पुरुषः, स सर्वदृक् सर्वज्ञः ; परमार्थपण्डित इत्यर्थः ॥
(ச.பா) வாதத்திறம் படைத்த பேச்சில் வல்லுணர்களான இந்த சாஸ்திரக்காரர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்தி நாஸ்தி முதலிய நான்கு கோடிகள் உள்ளன. இந்தக் கோடிகளைக் கிரஹித்து அதாவது பிரதிவாதிகள் இந்த உபலப்தியால் கிடைத்த நிச்சயத்தால் அந்த பகவான் (ஆத்மா) எப்பொழுதும் மறைக்கிறது. எந்த மனனசீலனானவன் அஸ்தி, நாஸ்தி முதலிய நான்கு கோடிகளால் தீண்டப்படாமல் இருக்கும் ஆத்மாவைக் காண்கின்றானோ அஹ்ன் வேதாந்தங்களாகிய உபநிஷத்துக்களில் விளக்கப்படும் பரம புருஷனைப் பார்க்கிறானோ அவன் பரமார்த்த பண்டிதன்(சர்வக்ஞன் ஆவான்)
प्राप्य सर्वज्ञतां कृत्स्नां ब्राह्मण्यं पदमद्वयम् ।
अनापन्नादिमध्यान्तं किमतः परमीहते ॥ ८५ ॥
कारिका अन्वयः - कृत्स्नां, सर्वज्ञतां प्राप्य अनापन्नादिमध्यान्तम् अद्वयं ब्राह्मण्यं पदम् अतः परं किम् ईहते?
காரிகா அர்த்தம் - இவ்வாறு பூர்ண சர்வக்ஞத்வமாயும், ஆதி மத்தியம அந்தமில்லாத அத்விதீய பிராஹ்மண்ய பதத்தை அடைந்தபின் எதைச் செய்ய விரும்புவான்.
(ச.பா) இவ்வாறு முற்கூறப்பட்ட முழுமையான பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதாவது “स ब्राह्मणः” (அவன் பிராஹ்மணன்), “एष नित्यो महिमा ब्राह्मणस्य” (ஏஷ நித்யோ மஹிமா ப்ராஹ்மணஸ்ய = அந்த பிராஹ்மணத்தின் நித்யமஹிமை) என்பது முதலிய ஸ்ருதி வாக்கியங்களை அனுசரித்து பிராஹ்மண்ய பதத்தை அடைந்து ஆதிமத்யம, அந்தா அதாவது உத்பத்தி ஸ்திதி லயமற்ற பிராஹ்மண்ய பதத்தை அடைந்து, அதன்பின் அதாவது ஆத்ம லாபத்தைக் காட்டிலும், வேறு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது எதைச் செய்வான்? பிரயோஜனம் அற்றது என்பது பொருள். “नैव तस्य कृतेनार्थः” (நைவ தஸ்ய கிருதேனார்த்த:) = அவனுக்கு எந்த காரியத்தினாலும் பிரயோஜனமில்லை) முதலிய ஸ்மிருதி வாக்கியங்களால் அறிகிறோம்.
विप्राणां विनयो ह्येष शमः प्राकृत उच्यते ।
दमः प्रकृतिदान्तत्वादेवं विद्वाञ्शमं व्रजेत् ॥ ८६ ॥
कारिका अन्वयः - विप्राणाम् एषविनयः शमः प्राकृतः उच्यते प्रकृतिदान्तत्वात् दमः एवं विद्वान् शमं व्रजेत् ।
காரிகா அர்த்தம் - (ஆத்ம ஸ்வரூபத்தில் நிலைத்திருப்பது) அந்த பிராஹ்மணர்களின் வினயம் (பணிவு). அது அவனுடைய ஸ்வாபாவிக சமம்(மன அடக்கம்) எனக்கூறப்படுகிறது. அவ்வாறே இயற்கையாக (இந்திரிய அடக்கமும்) உண்டாவதால் தமம் அவருக்கு இருக்கிறது. இவ்வாறு வித்வான் சாந்தியை அடைகிறான்.
विप्राणां ब्राह्मणानां विनयः विनीतत्वं स्वाभाविकं यदेतदात्मस्वरूपेणावस्थानम् । एष विनयः शमोऽप्येष एव प्राकृतः स्वाभाविकः अकृतकः उच्यते । दमोऽप्येष एव प्रकृतिदान्तत्वात् स्वभावत एव चोपशान्तरूपत्वाद्ब्रह्मणः । एवं यथोक्तं स्वभावोपशान्तं ब्रह्म विद्वान् शमम् उपशान्तिं स्वाभाविकीं ब्रह्मस्वरूपां व्रजेत् ब्रह्मस्वरूपेणावतिष्ठत इत्यर्थः ॥ ८६ ॥
(ச.பா) இந்த பிரஹ்ம நிஷ்டர்களான பிராஹ்மணர்களுக்கு வினயம் (பணிவு) இயற்கையானது. இந்த வினயத்தால் சமம் (மன அடக்கம்) ஸ்வபாவமானவன் என்று கூறப்படுகிறது. இயற்கையாகவே சாந்தமானவன் ஆனதால் தமம் (புலன் அடக்கமும்) இயற்கையே. இவ்வாறு பிரஹ்மமாய் இருக்கும் பிரஹ்ம ஞானி இயற்கையாகவே உபசாந்தியை அடைகிறான் என்பது பொருள்.
एवमन्योन्यविरुद्धत्वात् संसारकारणरागद्वेषदोषास्पदानि प्रावादुकानां दर्शनानि । अतो मिथ्यादर्शनानि तानीति तद्युक्तिभिरेव दर्शयित्वा चतुष्कोटिवर्जितत्वात् रागादिदोषानास्पदं स्वभावशान्तमद्वैतदर्शनमेव सम्यग्दर्शनमित्युपसंहृतम् । अथेदानीं स्वप्रक्रियाप्रदर्शनार्थ आरम्भः —
(ச.பா) (அ-கை) - இவ்வாறு ஒன்று மற்றொன்றிற்கு விருத்தமாய் இருப்பதால் வாதிகளின் தர்சனமானது சம்சாரத்திற்குக் காரணரூபமான ராக துவேஷாதிகளுக்கு ஆஸ்ரயம் ஆகும். ஆகையால் அவைகள் மித்யா தர்சனங்கள். இதை யுக்தியினால் காட்டி நான்கு கோடிகளும் அற்றதால் ராகமுதலிய தோஷங்களால் ஆஸ்ரியக்கப்படாத இயற்கையாய் சாந்த அத்வைத தர்சனமே சம்யக் தர்சனம் என்று உபசம்ஹாரம் செய்கிறார். இப்பொழுது தன்னுடைய பிரக்கிரியையை காண்பிப்பதற்கு ஆரம்பிக்கின்றார்-
सवस्तु सोपलम्भं च द्वयं लौकिकमिष्यते ।
अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकमिष्यते ॥ ८७ ॥
कारिका अन्वयः - सवस्तु सोपालम्भं च द्वयं लौकिकम् इष्यते अवस्तु सोपलम्भं च शुद्धं लौकिकम् इष्यते ॥
காரிகா அர்த்தம் - வஸ்து, உபலப்தி இரண்டுடன் கூடிய எந்த துவைதம் இருக்கிறதோ அதை லௌகிகம்(ஜாக்ரத்) எனப்படுகிறது. வஸ்து இல்லாமல் கேவலம் உபலப்தியுடன் கூடியதை சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) எனப்படுகிறது.
सवस्तु संवृतिसता वस्तुना सह वर्तत इति सवस्तु, तथा च उपलब्धिरुपलम्भः, तेन सह वर्तत इति सोपलम्भं च शास्त्रादिसर्वव्यवहारास्पदं ग्राह्यग्रहणलक्षणं द्वयं लोकादनपेतं लौकिकं जागरितमित्येतत् । एवंलक्षणं जागरितमिष्यते वेदान्तेषु ।
(ச.பா) சவஸ்து (सवस्तु) என்பது அத்தியாசத்தால் தோன்றும் வியவஹாரிக வஸ்துவுடன் இருப்பது. சோபலம்பம் (सोपलम्भम्) என்பது உபலப்தியுடன் இருப்பது. அவ்வாறு சாஸ்திர முதலிய எல்லா வியவஹாரங்களின் ஆஸ்ரியமான க்ராஹ்ய க்ராஹகரூபமாய் எந்த த்வைத வஸ்து இருக்கிறதோ அது “लौकिक” அதாவது லோகத்தை விட தூரமானது அல்ல அதாவது ஜாக்ரத் எனப்படுகிறது. வேதாந்தத்தில் ஜாக்ரதத்திற்கு இவ்வாறு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.
अवस्तु संवृतेरप्यभावात् । सोपलम्भं वस्तुवदुपलम्भनमुपलम्भः असत्यपि वस्तुनि, तेन सह वर्तत इति सोपलम्भं च । शुद्धं केवलं प्रविभक्तं जागरितात्स्थूलाल्लौकिकं सर्वप्राणिसाधारणत्वात् इष्यते स्वप्न इत्यर्थः ॥
(ச.பா) அவஸ்து (अवस्तु) சம்விருத்தி (வியவஹாரிக வஸ்து) இல்லாததால் அவஸ்து. ஆனால் (सोपलम्भ) (உபலப்தி உடையது) எனப்படுகிறது. வஸ்து இல்லாவிடினும் வஸ்துவைப் போல் உபலப்தி ஏற்படுவது உபலம்பம் எனப்படுகிறது. அதனுடன் இருப்பதின் காரணத்தால் உபலம்பமாய் இருக்கிறது. அது எல்லா பிராணிகளிடத்தும் சாதாரணமாய் விளங்குவதால் சுத்த அதாவது ஜாகரிதரூபமான ஸ்தூல லௌகிகத்திலிருந்து வேறான லௌகிகம் எனக் கருதப்படுகிறது. அதாவது அது ஸ்வப்னாவஸ்தை ஆகும்.
अवस्त्वनुपलम्भं च लोकोत्तरमिति स्मृतम् ।
ज्ञानं ज्ञेयं च विज्ञेयं सदा बुद्धैः प्रकीर्तितम् ॥ ८८ ॥
कारिका अन्वयः - अवस्तु अनुपलम्भं च लोकोत्तरं इति स्मृतम् बुद्धैः ज्ञानं ज्ञेयंं सदा विज्ञेयं प्रकीर्तितम् ।
காரிகா அர்த்தம் - எது வஸ்து, உபலப்தி இரண்டும் அற்றிருக்கிறதோ அந்த அவஸ்தா லோகோத்தரம் (சுஷுப்தி) எனப்படுகிறது. இவ்வாறு வித்வான்கள் எப்பொழுதும் ஞான, ஞேய அவ்வாறே விக்ஞானம் இவைகளை நிரூபணம் செய்திருக்கிறார்கள்.
अवस्त्वनुपलम्भं च ग्राह्यग्रहणवर्जितमित्येतत् ; लोकोत्तरम् , अत एव लोकातीतम् । ग्राह्यग्रहणविषयो हि लोकः, तदभावात् सर्वप्रवृत्तिबीजं सुषुप्तमित्येतत् । एवं स्मृतं ।
(ச.பா) அவஸ்து, அனுபலம்பம் அதாவது க்ராஹ்ய மற்றும் கிரஹணமற்ற அவஸ்தை. அது “லோகோத்தர” (लोकोत्तर) அதனால் லோகாதீதம் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் கிராஹ்ய, கிரஹண விஷயமே லோகம் அதன் அபாவத்தின் காரணத்தால் அந்த சுஷுப்தி அவஸ்தை எல்லா பிரவிர்த்திகளுக்கு பீஜபூதமாய் இருக்கிறது என்பதாகும்.
सोपायं परमार्थतत्त्वं लौकिकं शुद्धलौकिकं लोकोत्तरं च क्रमेण येन ज्ञानेन ज्ञायते, तत् ज्ञानं ज्ञेयम् एतान्येव त्रीणि, एतद्व्यतिरेकेण ज्ञेयानुपपत्तेः । सर्वप्रावादुककल्पितवस्तुनोऽत्रैवान्तर्भावात् ; विज्ञेयं यत्परमार्थसत्यं तुर्याख्यमद्वयमजमात्मतत्त्वमित्यरथः ; सदा सर्वदैव, तल्लौकिकादि विज्ञेयान्तं बुद्धैः परमार्थदर्शिभिर्ब्रह्मविद्भिः प्रकीर्तितम् ॥
(ச.பா) உபாயத்துடன் கூடிய பரமார்த்த தத்துவம் அவ்வாறே லௌகிகம் (ஜாக்ரத்) சுத்த லௌகிகம் (ஸ்வப்னம்) லோகோத்தரம் (சுஷுப்தி) ஆகிய அவஸ்தைகளின் எந்த ஞானத்தினால் கிரமமாய் அறியப்படுகிறதோ அதை ஞானம் என்று கூறுகிறார்கள். அவ்வாறேஅந்த மூன்று அவஸ்தைகளுக்கும் ஞேயம், ஏனெனில் எல்லா வாதிகளாலும் கல்பனை செய்யப்பட்ட வஸ்துக்கள் இவைகளில் அந்தர்பாவமாகிறது. ஆகையால் இதைத்தவிர வேறு ஞேய வஸ்து சம்பவிக்காது. எந்த பரமார்த்த சத்யம், துரீயம் எனப்படும் அத்வய, அஜன்மா, ஆத்மதத்துவமோ அதுவே விக்ஞேயம் (विज्ञेयं) என்பது பொருள், எப்பொழுதும் பரமார்த்த தர்சிகளான பிரஹ்ம வித்துக்களால் இந்த லௌகிகம் ஆரம்பித்து விக்ஞேயம் முடிய நிரூபணம் செய்யப்பட்டது.
ज्ञाने च त्रिविधे ज्ञेये क्रमेण विदिते स्वयम् ।
सर्वज्ञता हि सर्वत्र भवतीह महाधियः ॥ ८९ ॥
कारिका अन्वयः - ज्ञाने क्रमेण त्रिविधे ज्ञेये च स्वयं विदिते महाधियः इह सर्वज्ञता भवति सर्वत्र भवति ।
காரிகா அர்த்தம் - ஞானம் மேலும் மூன்று பிரகாரமான ஞேயத்தை கிரமமாக அறிந்தால் இந்த உலகில் அந்த மஹாபுத்திமானுக்கு ஸ்வயமாகவே எங்கும் சர்வக்ஞத்தாவாக ஆகிறான்.
ज्ञाने च लौकिकादिविषये ज्ञेये च लौकिकादौ त्रिविधे, पूर्वं लौकिकं स्थूलम् ; तदभावेन पश्चाच्छुद्धं लौकिकम् , तदभावेन लोकोत्तरमित्येवं क्रमेण स्थानत्रयाभावेन परमार्थसत्ये तुर्ये अद्वये अजे अभये विदिते, स्वयमेव आत्मस्वरूपमेव सर्वज्ञता सर्वश्चासौ ज्ञश्च सर्वज्ञः, तद्भावः सर्वज्ञता इह अस्मिन् लोके भवति महाधियः महाबुद्धेः । सर्वलोकातिशयवस्तुविषयबुद्धित्वादेवंविदः सर्वत्र सर्वदा भवति । सकृद्विदिते स्वरूपे व्यभिचाराभावादित्यर्थः । न हि परमार्थविदो ज्ञानिनः ज्ञानोद्भवाभिभवौ स्तः, यथा अन्येषां प्रावादुकानाम् ॥
(ச.பா) லௌகிக விஷய ஞானத்தையும், லௌகிக முதலிய மூன்று விதமான ஞேயத்தையும் அறிந்தபின் அதாவது முதலில் ஸ்தூல லௌகிகம், அதன் பின் அதன் அபாவமாத்திரத்தில் சுத்த லௌகிகம், அதனுடைய அபாவத்தின் பின் லோகோத்தரம் என்று இவ்வாறு கிரமமாய் மூன்று அவஸ்தைகளில் அபாவத்தால் பரமார்த்த சத்ய அத்வயம், அஜன்மா மேலும் அபயரூப துரியத்தை அறிந்த பின் இந்த உலகில் அந்த மஹாபுத்திமான் எங்கும் எப்பொழுதும் ஸ்வயம் ஆத்மஸ்வருபம் அதாவது ஸர்வக்ஞதா இந்த ஸ்வரூபமுடையவனே சர்வக்ஞன் எனப்படுகிறான். ஏனெனில் இவ்வாறு அறிந்தவனின் புத்தி எல்லா லோகத்தைக் காட்டிலும் மேலான வஸ்துவை விஷயம் செய்கிறான். ஒரு தடவை ஸ்வரூப ஞானத்தை அடைந்த பின் எப்பொழுதும் மாறுபடாது. ஏனெனில் எவ்வாறு மற்ற வாதிகளுடைய ஞானம் உண்டாகி, மறைகிறதோ அவ்வாறு இந்த பரமார்த்த வேதாவாகிய ஞானியின் ஞானம் உதயமோ, அஸ்தமனமோ ஆகாது என்பது தாத்பரியம்.
लौकिकादीनां क्रमेण ज्ञेयत्वेन निर्देशादस्तित्वाशङ्का परमार्थतो मा भूदित्याह —
(அ-கை) - லௌகிகாதிகளை கிரமமாக ஞேயத் துவமாய் நிர்தேசம் செய்யப்பட்டதால் அதற்கு அஸ்தித்துவம் பரமார்த்தமானது என்று சங்கை வரக்கூடாது என்பதற்காகக் கூறுகிறார்-
हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयान्यग्रयाणतः ।
तेषामन्यत्र विज्ञेयादुपलम्भस्त्रिषु स्मृतः ॥ ९० ॥
कारिका अन्वयः - तेषाम् अग्रयाणतः हेय ज्ञेय आप्य पाक्यानि विज्ञेयानि विज्ञेयात् अन्यत्र त्रिषु उपलम्भः स्मृतः ।
காரிகா அர்த்தம் - ஜாக்ரம் முதலியவை) ஹேயம், (சத்யபிரஹ்மஸ்வரூபம்) ஞேயம், (பாண்டித்யம் முதலியவை) அடையப்பட வேண்டிய சாதனம், (ராகதுவேஷங்கள் முதலியவை) நீக்கப்படவேண்டிய தோஷங்கள் இவைகள் எல்லாம் எல்லாவற்றிற்கும் முன்பே அறியப்பட வேண்டியவை. இவைகளில் ஞேயத்தைத் (பிரஹ்மத்தைத்) தவிர மற்ற மூன்றும் கேவலம் உபலம்பம் (அவித்தியா கல்பிததத்துவம்) ஆகும்.
हेयानि च लौकिकादीनि त्रीणि जागरितस्वप्नसुषुप्तानि आत्मन्यसत्त्वेन रज्ज्वां सर्पवद्धातव्यानीत्यर्थः । ज्ञेयमिह चतुष्कोटिवर्जितं परमार्थतत्त्वम् । आप्यानि आप्तव्यानि त्यक्तबाह्यैषणात्रयेण भिक्षुणा पाण्डित्यबाल्यमौनाख्यानि साधनानि । पाक्यानि रागद्वेषमोहादयो दोषाः कषायाख्यानि पक्तव्यानि । सर्वाण्येतानि हेयज्ञेयाप्यपाक्यानि विज्ञेयानि भिक्षुणा उपायत्वेनेत्यर्थः । अग्रयाणतः प्रथमतः ।
(ச.பா) हेयानि (தள்ளத்தக்க) லௌகிகம் முதலிய மூன்றும் அதாவது ஜாக்ரஸ்வப்ன சுஷுப்தி இவைகள் ஆத்மாவில் அசத்தியமாய் ரஜ்ஜுவில் பாம்பைப்போல் தள்ளத்தக்கவை. என்பது பொருள். ஞேயம் என்பது நான்கு கோடிகள் அற்ற பரமார்த்த தத்துவம், பாஹ்ய மூன்று ஏஷணைகளையும் தியாகம் செய்த முமூக்ஷுவிற்கு பாண்டித்தியம், பாஹ்ய மௌணம் எனப்படும் மூன்று சாதனங்கள் அடையப்பட வேண்டியவை. அவ்வாறே ராகம், த்வேஷம், மோஹம், முதலிய கஷாயங்களாகிய தோஷங்களை ஜீரணிக்க வேண்டும். தாத்பர்யம் என்னவெனில் முமூக்ஷுவால் ஹேய, ஞேய, ஆப்ய, பாக்கிய (ஜீரணித்தல்) ஆகிய இவைகளுக்கு எல்லாம் முன்னதாக இவைகள் தனக்கு சாதன ரூபமாய் அறிய வேண்டும்.
तेषां हेयादीनामन्यत्र विज्ञेयात्परमार्थसत्यं विज्ञेयं ब्रह्मैकं वर्जयित्वा । उपलम्भनमुपलम्भः अविद्याकल्पनामात्रम् । हेयाप्यपाक्येषु त्रिष्वपि स्मृतो ब्रह्मविद्भिः न परमार्थसत्यता त्रयाणामित्यर्थः ॥
(ச.பா) அந்த ஹேயாதிகளில் கேவல ஏக பரமார்த்த சத்ய ஞேய பிரஹ்மத்தைத்தவிர மற்ற ஹேய, ஆப்ய, பாக்கிய மூன்றையும் பிரஹ்ம வேத்தாக்கள் கேவல உபலம்பனம் அதாவது அவித்யாமய கல்பனா மாத்திரம் என்று அறிகிறார்கள்.
परमार्थतस्तु-
(ச.பா) (அ.கை) - உண்மையில்
प्रकृत्याकाशवज्ज्ञेयाः सर्वे धर्मा अनादयः ।
विद्यते न हि नानात्वं तेषां क्वचन किञ्चन ॥ ९१ ॥
कारिका अन्वयः - (मुमुक्षुभिः) सर्वेधर्माः प्रकृत्या आकाशवत् अनादयः ज्ञेयाः तेषां क्वचन किञ्चन नानात्वं न विद्यते हि ।
காரிகா அர்த்தம் - எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு சமானமானம் என்றும், அநாதி என்றும் அறியவேண்டும் அதற்கு நாநாத்துவம் சிறிதும் இல்லை.
प्रकृत्या स्वभावतः आकाशवत् आकाशतुल्याः सूक्ष्मनिरञ्जनसर्वगतत्वैः सर्वे धर्मा आत्मानो ज्ञेया मुमुक्षुभिः अनादयः नित्याः । बहुवचनकृतभेदाशङ्कां निराकुर्वन्नाह —क्वचन क्वचिदपि किञ्चन किञ्चित् अणुमात्रमपि तेषां न विद्यते नानात्वमिति ॥
(ச.பா) முமூக்ஷுக்கள், சூக்ஷ்மத்துவ, நிரஞ்சனத்துவ, சர்வகதத்துவ முதலியவைகளின் காரணத்தால் எல்லா ஜீவர்களும் ஸ்வபாவமாகவே ஆகாசத்திற்கு ஒப்பாயும், அநாதியாயும் இருப்பதை நித்தியம் அறிகின்றார்கள். இங்கு பஹு வசனத்தில் கூறியது ஜீவாத்மாக்களின் பேதத்தில் உள்ள சந்தேஹத்தை நீக்குவதற்காகக் கூறப்பட்டது. எந்த வகையிலும், சிறிதும் அதாவது அணு மாத்திரமும் அவைகளுக்கு நாநாத்துவம் என்பது கிடையாது.
ज्ञेयतापि धर्माणां संवृत्यैव, न परमार्थत इत्याह —
(ச.பா) (அ.கை) ஆத்மாக்களின் ஞேயதாவும் வியாவஹாரிகமே உண்மையில் இல்லை. இந்த அபிப்பிராயத்தில் கூறுகிறார்-
आदिबुद्धाः प्रकृत्यैव सर्वे धर्माः सुनिश्चिताः ।
यस्यैवं भवति क्षान्तिः सोऽमृतत्वाय कल्पते ॥ ९२ ॥
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिबुद्धाः सुनिश्चिताः एवं यस्य क्षान्तिः भवति सः अमृतत्वाय कल्पते ।
காரிகா அர்த்தம் - சம்பூர்ண ஆத்மா ஸ்வபாவமாகவே நித்திய போத ஸ்வரூபம், ஸுநிச்சிதம் ஆகும். எதனால் இவ்வாறு சமாதானம் ஏற்படுகிறது எனில் அது அம்ருதத்தை (மோக்ஷத்தை) அடைவதற்கான சாமர்த்தியம் உள்ளது.
यस्मात् आदौ बुद्धाः आदिबुद्धाः प्रकृत्यैव स्वभावत एव यथा नित्यप्रकाशस्वरूपः सविता, एवं नित्यबोधस्वरूपा इत्यर्थः । सर्वे धर्माः सर्व आत्मानः । न च तेषां निश्चयः कर्तव्यः नित्यनिश्चितस्वरूपा इत्यर्थः । न सन्दिह्यमानस्वरूपा एवं नैवं वेति
(ச.பா) ஏனெனில் எவ்வாறு சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே எல்லா தர்மங்களும் (ஜீவர்களும்) அதாவது ஆத்மா ஸ்வபாவமாகவே ஆரம்பம் முதலே அறியப்பட்டது. அதாவது நித்திய போதஸ்வரூபம். அதை நிச்சயம் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் நித்திய நிச்சயம் செய்யப்பட்ட ஸ்வரூபமாய் இருக்கிறது. இவ்வாறு இருக்கிறது அல்லது இல்லை என்ற சந்தேக ஸ்வரூபமாய் இல்லை. (सन्दिग्धस्वरूपः न)
यस्य मुमुक्षोः एवं यथोक्तप्रकारेण सर्वदा बोधनिश्चयनिरपेक्षता आत्मार्थं परार्थं वा । यथा सविता नित्यं प्रकाशान्तरनिरपेक्षः स्वार्थं परार्थं वेत्येवं भवति क्षान्तिः बोधकर्तव्यतानिरपेक्षता सर्वदा स्वात्मनि, सः अमृतत्वाय अमृतभावाय कल्पते, मोक्षाय समर्थो भवतीत्यर्थः ॥
(ச.பா) எவ்வாறு முமூக்ஷுவிற்கு இவ்வாறு முன்பு கூறப்பட்டவாறு தான் பிரகாசிப்பதற்கோ மற்றவை பிரகாசப்படுத்துவதற்கோ எப்பொழுதும் போத நிச்சய சம்பந்தத்தை அபேக்ஷிப்பது இல்லை. எவ்வாறு சூரியன் தன் பொருட்டோ பிறவற்றின் பொருட்டோ எப்பொழுதும் வேறு பிரகாசத்தை அபேக்ஷிப்பது இல்லையோ அவ்வாறு எப்பொழுதும் தன்னுடைய ஆத்மாவிடத்தில் க்ஷாந்தி அதாவது போத கர்த்தவ்யம் அபேக்ஷிக்கிறதில்லை. அது அம்ருதத்துவம் அம்ருத பாவம் அதாவது மோக்ஷத்திற்கான சாமர்த்தியம் உள்ளதாய் இருக்கின்றது.
तथा नापि शान्तिकर्तव्यता आत्मनीत्याह —
(ச.பா) (அ.கை) அவ்வாறு ஆத்மாவில் சாந்தி கர்த்தவ்யமும் இல்லை என்பதைக் கூறுகிறார்-
आदिशान्ता ह्यनुत्पन्नाः प्रकृत्यैव सुनिर्वृताः ।
सर्वे धर्माः समाभिन्ना अजं साम्यं विशारदम् ॥ ९३ ॥
कारिका अन्वयः - सर्वे धर्माः प्रकृत्यैव आदिशान्ताः अनुत्पन्नाः सुनिर्वृताः समाः अभिन्नाः अजं साम्यं विशारदम् ।
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாவும் நித்திய சாந்தம், அஜன்மா, ஸ்வபாவமாகவே அத்தியந்தம் உபரதம், அவ்வாறே சமம், அபின்னம், ஆத்ம தத்துவம் அஜம், சமதாரூபம், விசுத்தம், “सोमृतत्वाय कल्पते” என்று சென்ற காரிகையில் கூறப்பட்ட அம்ருதத்வத்தை விளக்கு வது இக்காரிகை:- இத்தகைய ஆத்மாவில் சாந்தி என்ற மோக்ஷமும் கூட செய்யத்தக்கதல்ல; ஏனெனில்
यस्मात् आदिशान्ताः नित्यमेव शान्ताः अनुत्पन्ना अजाश्च प्रकृत्यैव सुनिर्वृताः सुष्ठूपरतस्वभावाः नित्यमुक्तस्वभावा इत्यर्थः । सर्वे धर्माः समाश्च अभिन्नाश्च समाभिन्नाः अजं साम्यं विशारदं विशुद्धमात्मतत्त्वं यस्मात् , तस्मात् शान्तिर्मोक्षो वा नास्ति कर्तव्य इत्यर्थः । न हि नित्यैकस्वभावस्य कृतं किञ्चिदर्थवत्स्यात् ॥
(ச.பா) எதனால் சர்வாத்மகமாக உள்ள ஆத்மாவின் தர்மங்கள்யாவும் ஸ்வயமாகவே நித்திய சாந்தமானவை, உண்டாகாதவை (அஜன்மா), ஸ்வபாவமாகவே எல்லாவற்றிலிருந்தும் நிவிர்த்தி அதாவது உபரதி, அவ்வாறே எங்கும் சமம், அபின்னம், ஆக இருக்கிறது. இவ்வாறு ஆத்ம தத்துவம் அஜமாயும், சமதா ரூபமாயும் விசுத்தமாயும் இருப்பதால் அதற்கு சாந்தியோ அல்லது மோக்ஷமோ கர்த்தவ்யம் அல்ல என்பது பொருள். ஏனெனில் நித்ய ஏக ஸ்வபாவத்திற்கு எந்த செய்கையும் பொருள்தருவதாகவோ, பயனுடையதாகவோ ஆகாது.
ये यथोक्तं परमार्थतत्त्वं प्रतिपन्नाः, ते एव अकृपणा लोके ; कृपणास्त्वन्ये इत्याह —
(ச.பா) (அ.கை) உலகில் எவர்கள் பரமார்த்த தத்துவத்தை அறிந்தவர்களோ அவர்கள் அக்ருபணர்கள் அதாவது கீழ்த் தன்மை அற்றவர்கள். மற்றவர்கள் எல்லாரும் கிருபணர்கள்.(தீனர்கள்)
वैशारद्यं तु वै नास्ति भेदे विचरतां सदा ।
भेदनिम्नाः पृथग्वादास्तस्मात्ते कृपणाः स्मृताः ॥ ९४ ॥
कारिका अन्वयः - सदा भेदे विचारतां वैशारद्यं नास्ति वै तस्मात् पृथग्वादाः भेदनिम्नाः ते कृपणाः स्मृताः ।
காரிகா அர்த்தம் - எவர்கள் எப்பொழுதும் பேதத்திலேயே உழல்கிறார்களோ அவர்களுக்கு விசுத்தி (சித்த சுத்தியானது) ஏற்படாது. த்வைதவாதிகள் பேதத்திலேயே இருந்து பிரவிர்த்தி உடையவர்களாய் இருக்கின்றார்கள் ஆகையால் அவர்கள் கிருபணர்கள் (தீனர்கள்) என்று கூறப்பட்டனர்.
यस्मात् भेदनिम्नाः भेदानुयायिनः संसारानुगा इत्यर्थः । के ? पृथग्वादाः पृथक् नाना वस्तु इत्येवं वदनं येषां ते पृथग्वादाः द्वैतिन इत्यर्थः । तस्मात्ते कृपणाः क्षुद्राः स्मृताः, यस्मात् वैशारद्यं विशुद्धिः तन्नास्ति तेषां भेदे विचरतां द्वैतमार्गे अविद्यापरिकल्पिते सर्वदा वर्तमानानामित्यर्थः । अतो युक्तमेव तेषां कार्पण्यमित्यभिप्रायः ॥
(ச.பா) எதனால் பேதநிம்னா என்றால் பேதத்தைப் பின்பற்றி சம்சாரத்தில் அமிழ்ந்துள்ளவர்கள். எவர்கள்? பிருதக்வாதிகள் (पृथक्वादि) அதாவது த்வைதிகள், ஆகையால் அவர்கள் க்ருபணர்கள் அதாவது தீனர்கள், கீழானவர்கள் எனப்படுகிறார்கள், ஏனெனில் பேத அதாவது அவித்தையினால் கல்பிக்கப்பட்ட த்வைதமார்க்கத்தில் எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டு இருப்பவர்கள், விசுத்தியை அடைவதில்லை. ஆகையால் அவர்கள் கிருபணர்கள் என்று கூறுவது சரியே என்பது இதன் அபிப்பிராயம்.
यदिदं परमार्थतत्त्वम् , अमहात्मभिरपण्डितैर्वेदान्तबहिःष्ठैः क्षुद्रैरल्पप्रज्ञैरनवगाह्यमित्याह —
(ச.பா) (அ.கை) இந்த பரமார்த்தத்துவம்- மஹாத்மாக்கள் அல்லாத பண்டிதர்கள் வேதாந்தத்தில் அநதிகாரி, அவ்வாறே கிருபணமும் மந்தபுத்தியும் உடைய புருஷர்களால் கிரஹிக்க (அறிய) முடியாது என்பதைக் கூறுகிறார்.
अजे साम्ये तु ये केचिद्भविष्यन्ति सुनिश्चिताः ।
ते हि लोके महाज्ञानास्तच्च लोको न गाहते ॥ ९५ ॥
कारिका अन्वयः - ये केचित् अजे साम्ये तु सुनिश्चिताः ते हि महाज्ञानाः भविष्यन्ति तत् लोकाः न गाहते ।
காரிகா அர்த்தம் - எவர் இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்ததத்துவத்தை நன்றாக, திடமாக நிச்சயம் செய்தார்களோ அவர்களே இந்த உலகில் பரம ஞானிகள், அந்த தத்துவத்தை சாமான்ய ஜனங்களால் புரிந்து கொள்ளமுடியாது.
अजे साम्ये परमार्थतत्त्वे एवमेवेति ये केचित् स्त्र्यादयोऽपि सुनिश्चिता भविष्यन्ति चेत् , त एव हि लोके महाज्ञानाः निरतिशयतत्त्वविषयज्ञाना इत्यर्थः ।
(ச.பா) இந்த அஜமாயும், சாம்யரூபமாயும் உள்ள பரமார்த்த தத்துவத்தை எந்த ஸ்திரீ முதலியோரும் இவ்வாறு தான் இருக்கிறது. என்று பூரணமாய் நிச்சயம் செய்கின்றார்களோ, அவர்களும் உலகத்தில் மஹாஞானி, அதாவது நிரதிசய தத்துவத்தை அறிந்தவர்கள் ஆகிறார்கள்.
तच्च तेषां वर्त्म तेषां विदितं परमार्थतत्त्वं सामान्यबुद्धिरन्यो लोको न गाहते नावतरति न विषयीकरोतीत्यर्थः । ‘सर्वभूतात्मभूतस्य समैकार्थं प्रपश्यतः । देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः । शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते’ इत्यादिस्मरणात् ॥
(ச.பா) அவர்களுடைய மார்க்கம் அதாவது அவர்கள் அறிந்த பரமார்த்த தத்துவத்தை மற்றசாதாரண புத்தி உடைய மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாது. விஷயம் செய்யமுடியாது என்பது பொருள். “सर्वभूतात्मभूतस्य सर्वभूतहितस्य च। देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः। शकुनीनामिवाकाशे गतिर्नैवोपलभ्यते” (சர்வபூதாத்ம பூதஸ்ய சர்வ பூதஹிதஸ்யச! தேவா அபிமார்க்கே முஹ்யன்த்யபதஸ்ய பதைஷிண:! சகுனீனாமிவாகாசே கதிர்நைவஉபலப்யதே = எல்லா பூதங்களுக்கும் ஆத்ம பூதமாயும், எல்லா பிராணிகளுக்கும் ஹிதம் செய்யும் பதம் அற்ற(அடையவேண்டிய புருஷார்த்தமற்ற) மஹாத்ம பதத்தை அறிய விரும்பும் தேவதையும் அந்த மார்க்கத்தில் மோஹத்தை அடைகிறார்கள். எவ்வாறு எனில், எவ்வாறு ஆகாசத்தில் பக்ஷிகளின் மார்க்கம் அறிய முடியதோ அவ்வாறு அந்த கதியை அடையமுடியாது முதலிய ஸ்மிருதிகள் பிரமாணமாகின்றன.
कथं महाज्ञानत्वमित्याह —
(ச.பா) (அ.கை) - அவர்களுடைய மஹாக்ஞானத்துவம் எவ்வாறு? அதைக் கூறுகிறார்-
अजेष्वजमसङ्क्रान्तं धर्मेषु ज्ञानमिष्यते ।
यतो न क्रमते ज्ञानमसङ्गं तेन कीर्तितम् ॥ ९६ ॥
कारिका अन्वयः - अजेषु धर्मेषु अजम् असंक्रान्तं ज्ञानम् इष्यते ततः ज्ञानं न क्रमते तेन असङगं कीर्तितम् ।
காரிகா அர்த்தம் - அஜன்ம ஆத்மாக்களில் இருக்கும் அஜம்(நித்தியம்) எக்கலப்பும் அற்றதுமான ஞானம் ஏற்கப்படுகிறது ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் கலப்பதில்லை. ஆகையால் அசங்கம் எனப்படுகிறது.
अजेषु अनुत्पन्नेषु अचलेषु धर्मेषु आत्मसु अजमचलं च ज्ञानमिष्यते सवितरीव औष्ण्यं प्रकाशश्च यतः, तस्मात् असङ्क्रान्तम् अर्थान्तरे ज्ञानमजमिष्यते । यस्मान्न क्रमते अर्थान्तरे ज्ञानम् , तेन कारणेन असङ्गं तत् कीर्तितम् आकाशकल्पमित्युक्तम् ॥
(ச.பா) ஏனெனில் அஜமாயும், அசலமாயும் உள்ள ஆத்மாக்களில் (ஜீவன்களில்) சூரியனிடத்தில் உள்ள உஷ்ணமும், பிரகாசம் போல் அஜமும், சலனமற்ற ஞானமும் உள்ளது. ஆகையால் வேறு விஷயங்களில் கலப்படமற்ற ஞானத்தை அஜன்மா அதாவது நித்தியம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் அந்த ஞானம் வேறு விஷயங்களில் செல்லாது. ஆகையால் அதை அசங்கம் என்று கூறப்படுகிறது. அது ஆகாசம் போல் அசங்கமாய் இருக்கிறது.
अणुमात्रेऽपि वैधर्म्ये जायमानेऽविपश्चितः ।
असङ्गता सदा नास्ति किमुतावरणच्युतिः ॥ ९७ ॥
कारिका अन्वयः - अविपश्चितः अणुमात्रेऽपि वैधर्म्यै जायमाने असङ्गता सदा नास्ति आवरणच्युतिः किमुत ।
காரிகா அர்த்தம் - அவிவேகிகளுக்கு (நம் கொள்கைக்கு மாறுபட்ட கொள்கை உடையவர்களுக்கு). அணு அளவாவது (வஸ்துவில்) வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அசங்கத்துவம் அதாவது பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. இவ்வாறு இருக்கும் பொழுது அவர்களுக்கு ஆவரண நாசம் ஏது? அசங்கத்துவ மேற்படாதவர்களுக்கு பந்தநாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
इतोऽन्येषां वादिनाम् अणुमात्रे अल्पेऽपि वैधर्म्ये वस्तुनि बहिरन्तर्वा जायमाने उत्पद्यमाने अविपश्चितः अविवेकिनः असङ्गता असङ्गत्वं सदा नास्ति ; किमुत वक्तव्यम् आवरणच्युतिः बन्धनाशो नास्तीति ॥
(ச.பா) இதைத் தவிர வேறு வாதிகளின் கொள்கை உடையவர்களுக்கு அணுமாத்திரமானது. வஸ்துவின் உள்ளோ, புறமோ வைதர்மியம் (மாறுபாடு) ஏற்படுமேயானால் அவர்களுக்கு அஸங்கத்துவம் என்ற பற்றற்றதன்மை ஒரு போதும் ஏற்படுவதில்லை. அஸங்கதம் ஏற்படாத போது அவர்களுக்கு பந்த நாசம் ஏது? அசங்கத்துவம் ஏற்படாதவர்களுக்கு பந்த நாசமில்லையென்று கூறவும் வேண்டுமா?
तेषामावरणच्युतिर्नास्तीति ब्रुवतां स्वसिद्धान्ते अभ्युपगतं तर्हि धर्माणामावरणम् । नेत्युच्यते —
(ச.பா) (அ-கை) - சென்றகாரிகையில் அவர்களுக்கு ஆவரணம் நீங்குவதில்லை என்று கூறியதால் ஆத்ம தர்மங்களுக்கு ஆவரணம் உண்டு என்று அங்கீகரிக்கப்பட்டதாகிறதே என்றால் அவ்வாறு அல்ல என்று கூறுகிறார்-
अलब्धावरणाः सर्वे धर्माः प्रकृतिनिर्मलाः ।
आदौ बुद्धास्तथा मुक्ता बुध्यन्त इति नायकाः ॥ ९८ ॥
कारिका अन्वयः - सर्वेधर्माः अलब्धावरणाः प्रकृतिनिर्मलाः आदौ बुद्धाः तथा मुक्ताः नायकाः इति बुध्यन्ते ।
காரிகா அர்த்தம் - எல்லா ஆத்மாக்களும் ஆவரண சூன்யம், ஸ்வபாவமாகவே நிர்மலம் அவ்வாறே நித்த புத்த முக்தமாய் இருக்கிறது. யவபாவமாகவே அறியும் சக்தி உடையவர்கள் நாயகர்கள் என்று அறியப்படுகின்றன.
अलब्धावरणाः अलब्धमप्राप्तमावरणम् अविद्यादिबन्धनं येषां ते धर्माः अलब्धावरणाः बन्धनरहिता इत्यर्थः । प्रकृतिनिर्मलाः स्वभावशुद्धाः आदौ बुद्धाः तथा मुक्ताः, यस्मात् नित्यशुद्धबुद्धमुक्तस्वभावाः ।
(ச.பா) अलब्धावरणाः (அலப்த ஆவரணா:) ஆவரணம் அதாவது எவர்கள் அவித்யா ரூப பந்தம் அடையவில்லையோ அந்த தர்மங்கள் (ஜீவாத்மாக்கள்) பந்தமற்றவர்களாயும், இயற்கையாகவே சுத்தமானவர்களும் ஆதியிலேயே போதத்தை அடைந்தவர்களும், முக்த ஸ்வரூபராகவும் ஆவர். ஏனெனில் அவர்கள் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவ முடையவர்கள்.
यद्येवं कथं तर्हि बुध्यन्त इत्युच्यते —
(ச.பா) (சங்கை) - இவ்வாறு இருக்கும் பொழுதும் அவர்கள் அறிகிறார்கள் என்று எவ்வாறு கூறப்படுகிறது.
नायकाः स्वामिनः समर्थाः बोद्धुं बोधशक्तिमत्स्वभावा इत्यर्थः । यथा नित्यप्रकाशस्वरूपोऽपि सन् सविता प्रकाशत इत्युच्यते, यथा वा नित्यनिवृत्तगतयोऽपि नित्यमेव शैलास्तिष्ठन्तीत्युच्यते, तद्वत् ॥
(ச.பா) (சமாதானம்) - ஸ்வாமிகளின் (நாயகர்களின்) அறியும் சக்தி ஸ்வபாவமானவை என்று அறியப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது ஏன் அறிகின்றனர் என்று கூறப்படுகின்றனர். எனில் சூரியன் நித்திய பிரகாச ஸ்வரூபனாய் இருப்பினும் சூரியன் பிரகாசிக்கின்றான் என்றும், மலையானது இயற்கையாகவே என்றும் தான் இருக்குமிடத்திலிருந்து அசைவற்றதாய் இருப்பினும். மலை இருக்கிறது என்று கூறப்படுகிறதோ, அது போல் ஆன்மா நித்ய போத ஸ்வரூபமாய் இருப்பினும் ஆத்மா அறிகிறான் என்று கூறப்படுகிறான்.
क्रमते न हि बुद्धस्य ज्ञानं धर्मेषु तायिनः ।
सर्वे धर्मास्तथा ज्ञानं नैतद्बुद्धेन भाषितम् ॥ ९९ ॥
कारिका अन्वयः - तायिनः बुद्धस्य ज्ञानं धर्मेषु न क्रमते हि (ज्ञानेन आकाशकल्पेन) यथा ज्ञानं तथा सर्वे धर्माः एतत् बुद्धेन न भाषितम् ।
காரிகா அர்த்தம் - அகண்ட பிரக்ஞானவானாய் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. ஆனால் பௌத்த தர்சனத்தில் புத்தரால் இவ்வாறு கூறப்படவில்லை. அதாவது இது பௌத்த சித்தாந்த மல்ல உபநிஷத்தர்சன மாகும்.
“ज्ञानेन आकाशकल्पेन” “ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால்” என்று ஞானம் முதலில் கூறப்பட்டதோ, அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால், அது அவனைக்கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. அறிவு ஸ்வரூபமான பரமார்த்ததர்சி எங்கும் எதிலும் எப்பொழுதும் நிறைந்தவனாய் இருக்கிறான் என்பது கருத்து. (இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானவானாயும். உள்ள ஆத்மக் ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்ததால் வேறு எதிலுல் செல்லாததாய் உள்ளது)
यस्मात् न हि क्रमते बुद्धस्य परमार्थदर्शिनो ज्ञानं विषयान्तरेषु धर्मेषु धर्मसंस्थं सवितरीव प्रभा । तायिनः तायोऽस्यास्तीति तायी, सन्तानवतो निरन्तरस्य आकाशकल्पस्येत्यर्थः ; पूजावतो वा प्रज्ञावतो वा सर्वे धर्मा आत्मानोऽपि तथा ज्ञानवदेव आकाशकल्पत्वान्न क्रमन्ते क्वचिदप्यर्थान्तर इत्यर्थः ।
(ச.பா) தாயி (तायी) என்றால் விஸ்தாரம். तायिनः (தாயின:) எங்கும் நிரந்தரமாக இடைவெளியின்றி, ஆகாசம் போல் நிறைந்தவனாயும், பிரக்ஞானகனனாயும் தபஸ்வியாயும் உள்ள பரமார்த்த தரிசியின் ஞானமானது வேறு விஷயங்களில் செல்வதில்லை. “ज्ञानेन आकाशकल्पेन” ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் என்று எந்த ஞானம் முதலில் கூறப்பட்டதோ அந்த ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்தவனாய் இருப்பதால் இது அவனைக் கடந்து வேறு விஷயங்களுக்குச் செல்வதில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு பூஜைக்கு உரியவராயும், பிரக்ஞானகனவானாயும் உள்ள ஆத்மக்ஞானியின் தர்மங்கள் போல் ஆத்மாவின் எல்லா தர்மங்களும் எங்கும் நிறைந்து இருப்பதால் வேறு எங்கும் செல்லாததாய் இருக்கிறது.
(ச.பா) இந்த பிரகரணத்தின் ஆரம்பத்தில் “ज्ञानेन आकाशकल्पेन” முதலிய ஸ்லோகங்களால் விளக்கப்பட்டது. ஆகாசம் போல் நிரந்தர போதம் உடையவனுக்கு அந்த போதம் அபின்னமாய் இருப்பதால் அந்த ஆகாசத்திற்கு ஒப்பான ஞானம் ஒரு நாளும் வேறு அர்த்தத்திற்கு செல்வதில்லை. அவ்வாறேதர்மமும் ஆகும். அதாவது அந்த தர்மங்களும் ஆகாசம் போல் அசலம், அவிக்கிரியம், நிரவயவம், நித்தியம், அத்விதீயம், அசங்கம், அதிருஷ்யம், அக்ராஹ்யம், பசி, தாகம் அற்றபிரஹ்மாத்ம தத்துவமாகும். “न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यते” (ந, ஹி த்ருஷ்ட்டுர் த்ருஷ்ட்டேர் விபரிலோபோ வித்யதே = திருஷ்ட்டாவின் திருஷ்ட்டிக்கு லோபம் வராது) என்று சுருதியினால் சித்திக்கிறது.
ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वमद्वयमेतन्न बुद्धेन भाषितम् । यद्यपि बाह्यार्थनिराकरणं ज्ञानमात्रकल्पना च अद्वयवस्तुसामीप्यमुक्तम् । इदं तु परमार्थतत्त्वमद्वैतं वेदान्तेष्वेव विज्ञेयमित्यर्थः ॥
(ச.பா) ஞான, ஞேய, ஞாதா ஆகிய பேதங்கள் அற்றஇந்த அத்வய பரமார்த்த தத்துவத்தை புத்தர் நிரூபணம் செய்யவில்லை. அவ்வாறானாலும் அவர் பாஹ்ய வஸ்துக்களை நிராகரணம் செய்து கேவல ஞானத்தின் கல்பனையானது அத்வய வஸ்துவை நெருங்கி இருக்கிறதே அன்றி அதைப்பற்றிக் கூறவில்லை. இந்த பரமார்த்த அத்வைத தத்துவத்தை வேதாந்தங்களான உபநிஷத்துக்களிலேயே அறியத்தகுந்ததாகும்.
शास्त्रसमाप्तौ परमार्थतत्त्वस्तुत्यर्थं नमस्कार उच्यते —
(ச.பா) (அ.கை) சாஸ்த்திரத்தின் முடிவில் பரமார்த்ததத்துவத்தை ஸ்துதிப்பதற்காக நமஸ்காரம் கூறப்படுகிறது-
दुर्दर्शमतिगम्भीरमजं साम्यं विशारदम् ।
बुद्ध्वा पदमनानात्वं नमस्कुर्मो यथाबलम् ॥ १०० ॥
कारिका अन्वयः - दुर्दर्शम् अतिगंभीरम् अजं साम्यं विशारदम् अनानात्वं पदं बुद्ध्वा यथा बलम् नमस्कुर्मः।
காரிகா அர்த்தம் - மிகுந்த முயற்சியுடன் தர்சிக்கத்தக்கது, மிகுந்த கம்பீரமானது அஜம், நிர்விசேஷம், விசுத்தம் ஆன பதத்தை பேத மற்றதாய் அறிந்து நாம் நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
दुर्दर्शं दुःखेन दर्शनमस्येति दुर्दर्शम् । अस्ति नास्तीति चतुष्कोटिवर्जितत्वाद्दुर्विज्ञेयमत्यर्थः । अत एव अतिगम्भीरं दुष्प्रवेशं महासमुद्रवदकृतप्रज्ञैः । अजं साम्यं विशारदम् । ईदृक् पदम् अनानात्वं नानात्ववर्जितं बुद्ध्वा अवगम्य तद्भूताः सन्तः नमस्कुर्मः तस्मै पदाय । अव्यवहार्यमपि व्यवहारगोचरतामापाद्य यथाबलं यथाशक्तीत्यर्थः ॥
(ச.பா) மிகுந்த முயற்சியால் தர்சிக்கத்தக்கதாயும், அதாவது முற்கூறப்பட்டு இருக்கிறது, இல்லை என்பன போன்ற நான்கு கோடிகளும் அற்றதானதால் சிரமத்துடன் தர்சிக்கத்தக்கதாயும் அதனாலேயே மஹா சமுத்திரம் போல் மிகுந்த கம்பீரமானதாயும், அதாவது முற்கூறிய காரணத்தாலேயே நல்ல புத்தி சாமர்த்தியமும், சாஸ்திரப்பயிற்சியும் அற்றவர்களுக்கு ஆழ்கடல் போல் நுழைய முடியாததாயும், பிறப்பற்றதாயும், சாஸ்வதமானதாயும் எங்கும் நிறைந்ததாயும், எந்த பந்தமும் அற்றதாயும் நாநாத்துவமான ஸ்தானத்தை அறிந்து, அந்த நிலையிலேயே நிலைத்தவராகி அது இவ்வாறு இருக்கிறதென்று வியவகரிக்க முடியாததாயினும் வியவஹார கோசரமாக்கிக் கொண்டு சக்திக்கு ஏற்றவாறு நமஸ்காரம் செய்கிறோம்.
अजमपि जनियोगं प्रापदैश्वर्ययोगा -
दगति च गतिमत्तां प्रापदेकं ह्यनेकम् ।
विविधविषयधर्मग्राहि मुग्धेक्षणानां
प्रणतभयविहन्तृ ब्रह्म यत्तन्नतोऽस्मि ॥ १ ॥
அஜமாய் இருப்பினும் தன்னுடைய அறியாமை ஆகிய மாயா சக்தி வசத்தால் ஜன்ம பந்தத்தை அடைந்ததோ அவ்வாறே கதி சூன்யமாய் இருந்தாலும் கதி உள்ளதாயும் அவ்வாறே நாநாவித விஷயங்களின் தர்மங்களை விஷயம் செய்யும் மூட திருஷ்டி உள்ள அவிவேகிகளின் விசாரத்தால் ஒன்றாய் இருப்பினும் அநேகமாக ஆயிற்று. சரணாகதி அடைந்தவர்களின் பயத்தைப்போக்கும் அந்த பிரஹ்மத்தை நமஸ்கரிக்கிறேன்.
प्रज्ञावैशाखवेधक्षुभितजलनिधेर्वेदनाम्नोऽन्तरस्थं
भूतान्यालोक्य मग्नान्यविरतजननग्राहघोरे समुद्रे ।
कारुण्यादुद्दधारामृतमिदममरैर्दुर्लभं भूतहेतो -
र्यस्तं पूज्याभिपूज्यं परमगुरुममुं पादपातैर्नतोऽस्मि ॥ २ ॥
எந்த பரம குருவானவர் நிரந்தரம் ஜன்மஜன்மாந்தரம் எனப்படும் முதலைகள் நிறைந்த பெரிய சமுத்திரத்தில் மூழ்கிய ஜீவன்களைப்பார்த்து கருணையினால் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து சநாதனமாய் வந்த வேதங்கள் எனப்படும் சமுத்திரத்தின் உள்ளே அமிழ்ந்து இருக்கக்கூடியதும் தேவர்களாலும் அடையமுடியாத மரணதர்மத்தைப் போக்கி அம்ருதமெனப்படும் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிக்கவல்ல இந்த அத்வைதம் என்னும் அம்ருதத்தை பிறருக்கில்லாத தன்னுடைய மேதையுடன் கூடிய பிரக்ஞையின் திறமையால் கடைந்து ஜீவர்களின் பொருட்டு அவர்களுக்கு உபயோகமாக திரட்டி மேலே கொண்டு வந்தாரோ அந்த பூஜ்யர்களுக்கெல்லாம் பூஜ்யரான இந்த என் எதிர் உள்ள கௌடபாதாச்சாரியரை வணங்கியவனாய் உள்ளேன்.
यत्प्रज्ञालोकभासा प्रतिहतिमगमत्स्वान्तमोहान्धकारो
मज्जोन्मज्जच्च घोरे ह्यसकृदुपजनोदन्वति त्रासने मे ।
यत्पादावाश्रितानां श्रुतिशमविनयप्राप्तिरग्न्या ह्यमोघा
तत्पादौ पावनीयौ भवभयविनुदौ सर्वभावैर्नमस्ये ॥ ३ ॥
எந்த குரு சரணர்களுடைய ஞான ஒளியால் அடிக்கடி தேவ, மனுஷ்ய, திரியக்யோனிகளில் அந்த அந்த பிறவிகளைத்தருவதாயும் அதனாலேயே மிகவும் பயங்கரமாயும் கோரமாயும் உள்ள பிறவிப் பெருங்கடலில் மூழ்கி மூழ்கி தத்தளிக்கும் என்னுடைய உள்ளே இருக்கும் மோஹாந்தகாரமானது (அக்ஞான இருளானது) ஆச்சாரிய பிரசாதத்தால் நாசத்தை அடைந்ததோ அவ்வாறே எந்த குருசரணர்களின் திருவடிகளைப்பற்றிய மற்ற சிஷ்யர்களுக்கும் மிகவும் சிரேஷ்டமானவைகளும் வீண்போகாதவைகளான மனன நிதித்யாசனத்துடன் கூடிய சிரவணஞானமும், இந்திரிய நிக்ரஹமும் அதனால் ஏற்படும் சாந்தியும், அதனால் ஏற்படும் விநயமும் அதனால் மோக்ஷமும் அடையப்படுகிறது. அவ்வாறு சம்சாரபயத்தை ஒழிப்பதாயும் மிகப் புனிதமானவைகளுமான குரு சரணர்களின் திருவடிகளை மனோவாக்காதி சர்வ பாவங்களாலும் மிகுந்த வணக்கத்துடன் வணங்குகிறேன்.
इति अलातशान्तिप्रकरणम् सम्पूर्णम् ॥
इति श्रीमत्परमहंसपरिव्राजकाचार्यस्य श्रीगोविन्दभगवत्पूज्यपादशिष्यस्य श्रीमच्छङ्करभगवतः कृतौ माण्डूक्योपनिषत्कारिकाभाष्यं सम्पूर्णम् ॥